Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கோடிகளில் கொழிக்கும் கிரிக்கெட் வீரர்கள்... கிறுகிறுத்துக்கிடக்கும் ஹாக்கி வீரர்கள்! விளையாட்டு என்பது ஒன்றுதான். ஆனால் கிரிக்கெட்டுக்கு ஒரு சம்பளம், ஹாக்கி, கால்பந்து விளையாட்டுக்கு ஒரு சம்பளம் என ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன் கொந்தளிக்கிறார்கள் கிரிக்கெட் அல்லாத விளையாட்டு வீரர்கள். ஏற்கனவே அழிவின் விளிம்பில் இருக்கும் ஹாக்கி விளையாட்டுக்கு எப்போதுதான் விமோசனம் கிடைக்கப்போகிறதோ என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. கிரிக்கெட் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு, ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு முக்கியதுவம் கொடுப்பதில்லை. கிரிக்கெட், ஹாக்கி, டென்னிஸ் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா ? …

  2. குத்துச்சண்டை ஜாம்பவானான முஹம்மட் அலி காலமானார் குத்துச்சண்டை ஜாம்பவானான முஹம்மட் அலி, தனது 74ஆவது வயதில் காலமானதாக அவரின் குடும்பப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். உலகின் முன்னாள் அதிபாரக் குத்துச்சண்டை சம்பியனும், உலகின் நன்கு அறியப்பட்டுள்ள விளையாட்டு வீரரான அலி, ஐக்கிய அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்திலுள்ள ஃபோனிக்ஸ் நகரத்திலுள்ள வைத்தியசாலையில், இவ்வார ஆரம்பத்தில், அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார். சுவாசம் தொடர்பான நோய்களோடு போராடிக் கொண்டிருந்த அலியின் நிலைமை, பார்க்கின்ஸன் நோயால் மேலும் மோசமாகியிருந்தது. இந்நிலையில், அலியின் இறுதிக் கிரியைகள், அவரது சொந்த நகரமான, கென்டக்கி மாநிலத்திலுள்ள லூய்வ…

  3. கிரிக்கெட் மட்டையின் அளவில் புதிய கட்டுபாடு வருமா? கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்தப்படும் மட்டையின் அளவில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வருவது தொடர்பாக பல முன்னணி விளையாட்டு வீரர்களின் கோரிக்கைக்கு கிரிக்கெட் நிர்வாக அமைப்பான சர்வதேச கிரிகெட் சங்கம் ஆதரவு அளித்துள்ளது. இலண்டனிலுள்ள லார்ட்ஸில் இரண்டு நாட்கள் நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து, இந்த விளையாட்டின் விதிகள் பற்றிய ஒட்டு மொத்த பொறுப்பையும் கொண்டிருக்கும் மார்லிபோன் கிரிக்கெட் கிளப் இந்த கட்டுப்பாடுகளை கொண்டுவரவேண்டுமென தான் விரும்புவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் மட்டையின் நீளம் மற்றும் அகலம் பற்றிய கட்டுபாடுகள் இருந்தாலும், அதனுடைய ஆழம் (…

  4. இந்தியாவின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான ஏழு வாரத் தொடர் ஜூலை 6இல் ஆரம்பம் மேற்கிந்தியத் தீவுகளுக்கான, நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் இரண்டு பயிற்சிப் போட்டிகள் உள்ளடங்கிய ஏழு வாரத் தொடருக்காக, எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி இந்திய அணி செல்லவுள்ளது. அன்டிகுவா, ஜமைக்கா, சென். லூசியா, ட்ரினிடாட்டில் நான்கு டெஸ்ட் போட்டிகளும் இடம்பெறவுள்ளன. சென்ட்.கிட்ஸில், ஜூலை 9ஆம் திகதி, இரண்டு நாள் பயிற்சிப் போட்டியுடன் ஆரம்பிக்கும் தொடரானது, அதேயிடத்தில் ஜூலை 14ஆம் திகதி ஆரம்பிக்கும் மூன்று நாள் பயிற்சிப் போட்டியுடன் தொடருகின்றதோடு, ஜூலை 21ஆம் திகதி முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதோடு, ஜூலை 30ஆம் திகதி இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதோடு, ஓகஸ்ட் 9ஆம…

  5. இங்கிலாந்தின் தலைவியாக ஹீதர் நைட் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் மூன்று வகையான போட்டிகளுக்குமான தலைவியாக ஹீதர் நைட்டை, இங்கிலாந்து கிரிக்கெட் சபை நியமித்துள்ளது. கடந்த மே மாதம், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த சார்லோட் எட்வேர்ட்ஸையே நைட் பிறையீடு செய்யவுள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி, பாகிஸ்தான் அணிக்கெதிராக ஆரம்பிக்கவுள்ள ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரே, இங்கிலாந்து அணியின் தலைவியாக, நைட்டின் முதலாவது தொடராக அமையவுள்ளது. 2010ஆம் ஆண்டு சர்வதேச அறிமுகத்தை மேற்கொண்ட வலதுகைத் துடுப்பாட்டவீரரான நைட், சுழற்பந்துவீச்சையும் மேற்கொள்ளக் கூடியவருமாவார். இதுவரையில், ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் 55…

  6. கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம் நடப்பு சாம்பியன் சிலி, அர்ஜென்டினா, பிரேசில் உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்ளும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் கொலம்பியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. உலகக் கோப்பை, ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு அடுத்து புகழ்பெற்றது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி. தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள அணிகள் இதில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வெல்ல மோதும். இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 45-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி தொடர் அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. போட்டிகள் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்…

  7. <p>Your browser does not support iframes.</p> உலகின் 100 விளையாட்டு பிரபலங்கள் பட்டியல் இதோ! இந்திய கிரிக்கெட் அணிக்கு டி20 உலக கிண்ண, 50 ஓவர் உலக கிண்ண, சாம்பியன்ஸ் கிண்ணம் ஆகியவற்றை வென்று கொடுத்த மிகச்சிறந்த தலைவர் டோனி. இவர் தனது கீப்பிங்காலும், ஹெலிகாப்டர் ஷாட்டாலும் ரசிகர்களை கவர்ந்தவர். அதேபோல் டி20 போட்டியில் தலைசிறந்த துடுப்பாட்ட வீரராக திகழ்ந்து வருபவர் விராட் கோலி. அவுஸ்திரேலியா, ஆசிய கிண்ணம், உலக கிண்ணம் மற்றும் ஐ.பி.எல். தொடரில் ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள் இரண்டு பேரும் ஈ.எஸ்.பி.என். வெளியிட்டுள்ள உலகின் புகழ்மிக்க 100 வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். விராட் கோலி 8-வது இடத்தையும், …

  8. நாளை ஆரம்பிக்கிறது முக்கோணத் தொடர் மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகள் பங்குபற்றும் முக்கோணச் சுற்றுத் தொடர் நாளை வெள்ளிக்கிழமை (03) ஆரம்பிக்கிறது. இலங்கை நேரப்படி இரவு 10.30மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியில், தொடரை நடாத்தும் நாடான மேற்கிந்தியத் தீவுகளை தென்னாபிரிக்கா கயானாவில் எதிர்கொள்கின்றது. இத்தொடரின் அனைத்துப் போட்டிகளும் பகலிரவுப் போட்டிகளாகவே இடம்பெறவுள்ளதுடன், இறுதிப் போட்டியானது பார்படோஸில், ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெறவுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் குழாமில், அவ்வணியின் நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெயில், டுவைன் பிராவோ, அன்றே ரஸல், டரன் சமி ஆகியோர் இடம்பெறாத நிலையில், சுனில் நரைன், பொல…

  9. அடுத்த முறை இங்கிலாந்து பந்துவீச்சை கோலி நிச்சயம் பதம் பார்ப்பார்: பயிற்சியாளர் நம்பிக்கை விராட் கோலி. | படம்: கே.பாக்யபிரகாஷ். விராட் கோலியின் பேட்டிங் ‘அடுத்த கட்டத்திற்கு’ முன்னேறியுள்ளதாகக் கூறும் அவரது ஆரம்பகால பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா சச்சின் சாதனைகளை கோலியால் முறியடிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன், விராட் கோலியை தனது செல்லப்பிள்ளையாக்கி சொல்லி, சொல்லி வீழ்த்திக் கொண்டேயிருந்தார், இதனால் ஒரு அரைசதம் கூட 5 டெஸ்ட் போட்டிகளில் கோலியால் எடுக்க முடியவில்லை, இது பற்றி அவரது பயிற்சியாளர் கூறும்போது, அடுத்த முறை இங்கிலாந்தில் நிச்சயம் பந்து வீச்சை…

  10. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல சீரான முறையில் ஆட வேண்டும்: தோனி இந்திய ஒருநாள் அணி கேப்டன் தோனி. | கோப்புப் படம்: விவேல் பெந்த்ரே. 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல சீரான முறையில் ஆடுவது அவசியம் என்று இந்திய ஒருநாள், டி20 அணி கேப்டன் தோனி கூறியுள்ளார். ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 18-ம் தேதி வரை 8 நாடுகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா-பாகிஸ்தான் ஒரே பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை தோனி தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் தோனி 2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி குறித்து ஐசிசி இண…

  11. இணையங்களில் வெளிவருவது பொய்யான செய்திகள் : டில்சான் கவலை விளையாட்டுத்துறை அமைச்சருடன் நான் எவ்விதமான பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. இணையங்களில் வெளிவருவது பொய்யான செய்திகள் என இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான டி.எம். டில்ஷான் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தரவேற்றப்பட்டுள்ள காணொளியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், விளையாட்டுத்துறை அமைச்சருடன் நான்பேசியவிடயம் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். உண்மையில் நான் அமைச்சர் தயாசிறியை சந்திக்கவில்லை. கிட்டத்தட்ட 3 அல்லது 4 மாதங்களுக்கு முன்ன…

  12. மெஸ்ஸி காயத்தால் அர்ஜென்டினா கவலை தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கிடையேயான கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி தொடர் வரும் 3-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான சிலி, 14 முறை பட்டம் வென்ற அர்ஜென்டினா, பிரேசில் உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டி தொடங்க இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸியின் காயத்தால் அர் ஜென்டினா அணி நிர்வாகம் மிகுந்த கவலையடைந்துள்ளது. முதல் முறையாக மெஸ்ஸி இந்த தொடரில் கேப்டனாக செயல்பட இருந்தார். கடந்த இருதினங்களுக்கு முன்பு நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்ற மெஸ்ஸி எதிரணி வீரர் மீது மோதியதில் கா…

  13. 70 வயதிலும் இத்தனை பதக்கங்கள்... ஆசிய தடகளப் போட்டியில் அசத்திய கோவை வீராங்கனை! கடந்த மே மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற 19 வது ஆசிய தடகளப் போட்டியில், இந்தியாவுக்காக 2 தங்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கங்களை வென்று பெருமிதத்துடன் திரும்பியிருக்கிறார் கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்த லட்சுமி லோகநாதன். இவருக்கு வயது 70 என்பதுதான் இதில் ஹைலைட். ஆம், இவர் பங்குபெற்றது முதியோருக்கான தடகளப் போட்டிகள்! ''சாதிக்க முயற்சி மட்டும் இருந்தால்போதும், வயது என்பது ஒரு பொருட்டே இல்லை'' என உற்சாகம் பொங்கப் பேசுகிறார், லட்சுமி லோகநாதன். ''நான் என் வீட்டுக்கு ஒரே பெண். ஒவ்வொரு முறை விளையாட்டு போட்டிக்கு போகும்போதும் வீட்டில் போராட்டம்தான். பெண் என்பதைக் காரணம…

    • 1 reply
    • 606 views
  14. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை 2017 அடுத்த ஆண்டு ஜூன் 17 துவக்கம் ! அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பையின், அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து, இங்கிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகள் ஏ பிரிவிலும்; இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும் பி பிரிவிலும் சேர்க்கப்பட்டு உள்ளது. vikatan

  15. ஆடிப் பார்ப்போமா ஆடு புலி ஆட்டம்.... பழகிப் பார்ப்போமா பல்லாங்குழி ஆட்டம்! பல்லாங்குழி தமிழகத்தின் பாரம்பர்ய விளையாட்டுகளில் ஒன்று. தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகவும் திகழும் இவ்விளையாட்டு, முப்பது - நாற்பது வருடங்களுக்கு முன்பு வரையிலும், நம் தமிழ்ப்பெண்களின் இன்டோர் கேமாகவும் விளங்கியது. தற்போது வாட்ஸ் அப், ஃபேஸ்புக், கேண்டி கிரஷ் (candy crush ) என்று நவீன யுகதிகளாக மாறிவிட்ட இன்றைய தலைமுறை இளம் பெண்களுக்கு, பல்லாங்குழி பற்றிய அறிமுகமாவது உண்டா என்றால், சந்தேகம்தான். அவர்களுக்காக... பல்லாங்குழி எப்படி ஆடுறதுன்னு பார்க்கலாமா....? பல்லாங்குழி - மரம் அல்லது உலோகத்தால் ஆன ஒரு விளையாட்டுச் சாதனம். ஏழேழு குழிகளாக இரண்டு வரிசைகள், இ…

  16. குலசேகர ஓய்வு இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர சர்வதேச டெஸ்ட் போட்டித் தொடர்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது ஓய்வு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள குலசேகர, உடனடி அமுலுக்கு வரும் வகையில் டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இதுவே சரியான நேரம். டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதால் ஒருநாள் மற்றும் இருபது-20 தொடர்களில் பிரகாசமாக விளையாட முடியும் என நினைக்கின்றேன். 33 வயதுடை நுவான் குலசேகர இதுவரை 21 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பந்து வீச்சில் 48 விக்கெட்டுகளையும் துடுப்பாட்டத்தில் ஒரு அரைசதம் அடங்கலாக 391 ஓட்டங்களை பெற்றுள்ளார். http://www.virakesari.lk/article/7024

  17. 'கபடி...கபடி' ன்னா தெரியும்... 'சர்ஜீவ்னி' ன்னா என்னான்னு தெரியுமா...? 1 . சர்ஜீவ்னி : தென்னிந்தியாவில் , குறிப்பாக தமிழ் நாட்டில் கிரிக்கெட் விளையாட்டுபிரபலமாவதற்கு முன்பிருந்தே விளையாடும் விளையாட்டு இது கபடி அல்லது சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும். இதன் விதிமுறைகள் யாவும் இந்திய கபடி வாரியத்தால் வகுக்கப்பட்டவை. பாடிச்செல்லும்போது 'கபடிக்கபடிக்கபடி......' என்று ஒரே மூச்சில பாடணும்னு அவசியம் இல்லை. 'கபடி ..கபடி...கபடி...' என்று ஒரே சீரான இடைவெளியில் மூச்சுவிட்டும் பாடலாம். எதிரணியினர் பிடித்தால் மட்டுமே ஒரே மூச்சில் தப்பித்து வரவேண்டும். ஒவ்வோர் அணியிலும் அதிகபட்சம் 12 பேர் இருப்பார்கள். ஆனால் களத்தினுள் இருப்பவர்கள் 7 பேர் மட்டுமே.…

  18. ஐவரிகோஸ்ட் கால்பந்தாட்ட வீரர் கைது பரிஸில் இடம்பெற்ற சம்பவமொன்றில் பங்கெடுத்தமையையடுத்து ஐவரிகோஸ்ட் சர்வதேச அணியின் வீரரான சேரிஜ் ஓரியே திங்கட்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சம்ப் எலைய்ஸஸ் பகுதியிலிலுள்ள இரவு விடுதியொன்றிலிருந்து திங்கட்கிழமை (30) அதிகாலை வெளியேறியபோதே மேற்கூறப்பட்ட சம்பவம் இடம்பெற்றதாகவும், பொலிஸாருடன் ஒரியே வாக்குவாதப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 23 வயதான மேற்படி நபர் பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகமான பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் அணிக்காகவும் விளையாடுகின்ற நிலையில், எந்தவொரு கருத்தையும் வெளியிடுவதற்கு முதல் மேலதிக தகவல்களுக்காக காத்திருப்பதாக பரிஸ் செய்ண்ட் ஜெர்மைன் கழ…

  19. நினைவுப் பொருட்களை ஏலமிடுகிறார் பீலே பிரேஸில் கால்பந்தாட்ட ஜாம்பவனான பீலே, தனது விளையாட்டுக் காலத்தில் கிடைக்கப்பெற்ற நினைவுப் பொருட்களை ஏலத்தில் விடுவதற்கு முடிவுசெய்துள்ளார். இந்த ஏலம், இலண்டனில் இம்மாதம் இடம்பெறவுள்ளதோடு, மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளது. 15 வயதில் சான்டோஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டதிலிருந்து, தற்போது வரை அவருக்குக் கிடைத்த பொருட்களையே அவர் ஏலமிடவுள்ளார். இதன்படி, 6 தசாப்தங்களாக அவரிடம் சேர்ந்த பொருட்களே, ஏலமிடப்படவுள்ளன. மூன்று தடவைகள் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை வென்ற ஒரேயொரு வீரரான பீலே, தனக்குக் கிடைத்தவற்றைப் பேணிப் பாதுகாப்பது கடினமானது எனவும், அதை விட அவற்றை உலகத்துடன் பகிர்வதுடன், தன…

  20. கோலி தலைவராக செயற்பட டோணி சாதாரண வீரராக ஆட்டத்தை ரசித்து ஆடலாம் : ரவி சாஸ்திரி அனைத்து வகை போட்டிகளுக்கும் விராட் கோலி செயற்பட, சாதாரண வீரராக டோணி தனது ஆட்டத்தை ரசித்து ஆட வாய்ப்பு கொடுக்கலாமென இந்திய அணியின் முன்னாள் இயக்குநரும் சகலதுறை ஆட்டக்காரருமான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய போட்டியிலேயே ரவி சாஸ்திரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், டோணி கிரிக்கெட்டை அனுபவித்து ஆடும் நேரம் வந்து விட்டது. தலைமைப் பொறுப்பை கோலியிடம் கொடுக்கும் நேரமும் வந்து விட்டது. நான் தேர்வுக் குழுத் தலைவராக இருந்திருந்தால் இருபதுக்கு - 20, டெஸ்…

  21. ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டேன் : டில்ஷான் இங்கிலாந்து அணிக்கெதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் தொடரில் விளையாடவில்லையென திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான டில்சான் காயம் காரணமாக விளையாடபோவதில்லை என தெரிவித்துள்ளார். அயர்லாந்து அணியுடனான ஒரு நாள் சர்வதேச போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின், முதலாவது போட்டி ஜூன் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/7007

  22. இங்கிலாந்தின் சுழல்பந்துவீச்சு ஆலோசகராக பாகிஸ்தானின் சக்லெய்ன் முஷ்தாக் நியமனம் பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக தனது சொந்த மண்ணில் நடை­பெ­ற­வுள்ள கிரிக்கெட் தொட­ரின்­போது இங்­கி­லாந்து கிரிக்கெட் சபை­யினால் சுழல்­பந்­து­வீச்சு ஆலோ­ச­க­ராக சக்லெய் முஷ்தாக் நிய­மிக்­கப்­ப­ட­வுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்­வரும் ஜூன் மாதம் இங்­கி­லாந்து பய­ண­மா­கின்­றது. பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக ஓல்ட் ட்ரஃபோர்டில் நடை­பெ­ற­வுள்ள இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரை குறு­கிய காலத்­திற்கு இங்­கி­லாந்தின் சுழல்­பந்­து­வீச்சு ஆலோ­ச­க­ராக சக்லெய்ன் பணி­யாற்­ற­வுள்ளார். பாகிஸ்தான் தொலைக்­காட்சி நிறு­வ­னத்­துடன் 2017வரை சிறப…

  23. மிக இளவயதில் 10,000 ஓட்டங்கள்: அலெஸ்டர் குக் சாதனை உலகளவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், மிக இளவயதில் 10,000 ஓட்டங்களை எடுத்தவர் எனும் பெருமையை இங்கிலாந்து அணியின் தலைவர் அலெஸ்டர் குக் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டியில் சாதனை படைத்துள்ள இங்கிலாந்து அணியின் தலைவர் குக் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாம் டெஸ்ட் போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெற்ற போது இந்த சாதனையை அவர் படைத்தார். அப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் 31ஆண்டுகள், ஐந்து மாதங்கள் மற்றும் ஐந்து நாட்கள் ஆன குக், இதுவரை சச்சின் டெண்டூல்கரின் பெயரில் இருந்த சாதனையை முறியடித்துள்ளார். டெண்டூல்கர் 31 ஆண்டுகள், 10 மாதம், 20 நாட்கள் எனும் வயதில் இருந்த ந…

  24. ஜேர்மனியில் அகதிகளுக்கெதிரான கட்சியின் உப தலைவரின் கறுப்பின வீரருக்கெதிரான கருத்தால் சர்ச்சை ஜேர்மனி தேசிய அணியினதும் பயேர்ண் மியூனிச் அணியினதும் வீரரான ஜெரோம் போடெங் தொடர்பாக, ஜேர்மனியின் அகதிகளுக்கெதிரான கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியின் உப தலைவர் தெரிவித்த கருத்தால், கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கானாவைச் சேர்ந்த அப்பாவுக்கும் ஜேர்மனியைச் சேர்ந்த அம்மாவுக்கும் ஜேர்மனியின் பேர்ளினில் பிறந்த போடெங், ஜேர்மனி கால்பந்தாட்ட அணியின் முக்கிய வீரராக உள்ளதோடு, அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடரில், ஜேர்மனுக்காக விளையாடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கருத்துத் தெரிவித்த ஜேர்மனிக்கான மாற்றீடு க…

  25. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: 11-வது பட்டம் வெல்லும் முனைப்பில் ரியல் மாட்ரிட் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த ரியல் மாட்ரிட்-அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதுகின்றன. அரையிறுதியில் அட்லெடிகோ மாட்ரிட், பேயர்ன் முனிச் அணியையும், ரியல் மாட்ரிட் அணி, மான்செஸ்ட் சிட்டி அணியையும் தோற்கடித்திருந்தன. ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்ஸ் லீக் தொடரில் 14-வது முறையாக இறுதிப்போட்டியை சந்திக்கிறது. 10 முறை சாம்பியன்ஸ் அந்த அணி 10 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. தற்போது 11-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.