விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
எம்.சி.சி தலைவராக மத்தியூ பிளெமிங் தெரிவு கிரிக்கெட் விதிகளை உருவாக்கும் பொறுப்பை வகிக்கும் மரில்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் (எம்.சி.சி) தலைவராக, இங்கிலாந்து அணியினதும் கென்ற் அணியினதும் முன்னாள் சகலதுறை வீரரான மத்தியூ பிளெமிங் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 51 வயதான பிளெமிங், இவ்வாண்டு ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து, தனது தனது பொறுப்பை ஏற்கவுள்ளார். லோர்ட்ஸில் இடம்பெற்ற கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தின்போது, தற்போதைய தலைவரான றொஜர் நைட்டினால் பிரேரிக்கப்பட்டதையடுத்தே, தலைவர் பதவியை மத்தியூ பிளெமிங் ஏற்கவுள்ளார். எம்.சி.சியின் கிரிக்கெட்டுக்கான தலைவராகத் தற்போது பதவி வகிக்கும் மத்தியூ பிளெமிங், கடந்த 36 ஆண்டுகளில், அக்கழக…
-
- 0 replies
- 396 views
-
-
ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்க நிறைவேற்றுக் குழுவில் முதலாவது பெண் உறுப்பினராக ஃபுளொரென்ஸ் தெரிவு ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தில் முதலாவது பெண் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த ஃப்ளொரென்ஸ் ஹார்டுய்ன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தின் பொதுச் சபை மாநாட்டில் நடத்தப்பட்ட வாக்களிப்பு மூலம் ஃப்ளொரென்ஸ் தெரிவு செய்யப்பட்டார். இப்பதவிக்கான வாக்கெடுப்பில் 33 – 21 என்ற வாக்குகள் அடிப்படை யில் நோர்வேயின் முன்னாள் சர்வதேச வீரர் கரென் எஸ்பெலண்டை ஃப்ளொரென்ஸ் வெற்றி கொண்டார். …
-
- 0 replies
- 305 views
-
-
‘‘துணிச்சலான அணுகுமுறையுடன் இங்கிலாந்தை எதிர்கொள்வோம்’’– ஏஞ்சலோ மெத்யூஸ் (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிரான தொடர்கள் அனைத்திலும் துணிச்சல் மிக்க அணுகுமுறைகளுடன் விளையாட சகல வீரர்களும் தயாராக இருப்பதாகவும் அவர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் தொடரை எதிர்கொள்ளவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் கூறினார். இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யவுள்ள அணி எந்தளவு நம்பிக்கையுடன் இருக்கின்றது என அவரிடம் கேட்டபோதே அவர் இந்தப் பதிலை வெளியிட்டார். இங்கிலாந்துக்கான கிரிக்கெட் பயணத்தை ஆ…
-
- 0 replies
- 361 views
-
-
இங்கிலாந்து சென்றது இலங்கை இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான முழுமையான கிரிக்கெட் தொடரொன்றுக்காக, இங்கிலாந்து நோக்கி இலங்கை அணி, இன்று புறப்பட்டுச் சென்றது. இங்கிலாந்து அணிக்கெதிரான 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகியனவற்றிலும், அயர்லாந்துக்கெதிரான இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது. இந்தத் தொடருக்காக விளையாடுவதற்கு முன்னர், இலங்கை அணியின் வீரர்கள், சுற்றுலா ஒப்பந்தமொன்றில் இலங்கை கிரிக்கெட் சபையுடன் கைச்சாத்திட்டனர். இலங்கை வீரர்களின் வருடாந்த ஒப்பந்தம், இவ்வாண்டு பெப்ரவரியிலேயே நிறைவடைந்த போதிலும், ஏப்ரல் வரை அது நீடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையி…
-
- 1 reply
- 644 views
-
-
சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் அத்லெட்டிகோ மட்ரிட் ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் சம்பியன்ஸ் லீக் தொடரின், ஜெர்மனியின் கால்பந்தாட்டக் கழகமான பெயார்ண் முனிச்சின் மைதானத்தில் ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகமான அத்லெட்டிகோ மட்ரிட், பெயார்ண் முனிச் ஆகிய அணிகளுக்கிடையிலான இரண்டாம் சுற்று அரையிறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் பெயார்ண் முனிச் அணி வெற்றி பெற்று 2-2 என்ற ரீதியில் கோல் எண்ணிக்கையை சமப்படுத்தியபோதும் பெயார்ண் முனிச் மைதானத்தில் அத்லெட்டிகோ மட்ரிட் அணி பெற்ற கோலின் காரணமாக அவ்வணி இறுதிப் போட்டிக்குள் நுழையவுள்ளது. இப்போட்டியின் 31ஆவது நிமிடத்தில் ஸ்கெபி அலோன்ஸோ பெற்ற கோலின் மூலம் அத்லெட்டிகோ ம…
-
- 0 replies
- 445 views
-
-
சிம்பாப்வே செல்கிறது இந்தியா மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், மூன்று இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடருக்காக எதிர்வரும் ஜூன் மாதம் சிம்பாப்வேக்கு இந்தியா செல்கிறது. இது, கடந்த ஆறு ஆண்டுகளில் நான்காவது முறையாக இந்தியா, சிம்பாப்வேக்கு செல்லும் தருணமாகும். மேற்படி போட்டிகள் யாவும் ஹராரே விளையாட்டுக் கழக மைதானத்தில் 12 நாட்களுக்குள் இடம்பெறவுள்ளன. முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி, ஜூன் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் இறுதி இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஜூன் 22ஆம் இடம்பெறவுள்ளது. எதிர்கால சுற்றுப்பயணங்களுக்கான திட்டத்தின்படி இரண்டு அணிகளும் ஒரு டெஸ்ட் போட்டியொன்றை விளையாட வேண்டுமென்ற நிலையில், மூன்று இருபதுக்கு-2…
-
- 0 replies
- 456 views
-
-
ஐ.சி.சி டெஸ்ட் தரப்படுத்தல்: முதலிடத்தில் அவுஸ்திரேலியா; 7ஆம் இடத்தில் இலங்கை சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ஐ.சி.சி) டெஸ்ட் தரப்படுத்தலில், ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் இற்றைப்படுத்தலைத் தொடர்ந்து, புதிய தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் மேற்கொள்ளப்படும் இற்றைப்படுத்தலைத் தொடர்ந்தே, இந்தத் தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தனது முதலிடத்தில் தொடர்ந்தும் காணப்படும் அவுஸ்திரேலிய அணி, இரண்டாமிடத்திலுள்ள அணியுடனான தனது இடைவெளியை, ஆறாக அதிகரித்துக் கொண்டது. இரண்டாவது இடத்தில் இந்திய அணி தொடர்ந்தும் காணப்படும் நிலையில், மூன்றாமிடத்தில் காணப்பட்ட தென்னாபிரிக்க அணி, 3 இடங்கள் பின்தங்கி, ஆறாவது இடத்துக்குப்…
-
- 0 replies
- 306 views
-
-
இந்திய ஒலிம்பிக் அணியின் நல்லெண்ண தூதராக சச்சின் நியமனம் சச்சின் டெண்டுல்கர். | படம்: பிடிஐ. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ண தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலில் நியமிக்கப்பட்டார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இந்த முடிவை முன்னாள் தடகள வீரர் மில்கா சிங், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் உள்ளிட்ட பலரும் எதிர்த்தனர். இந்நிலையில் மேலும் பலரை இந்திய அணியின் நல்லெண்ண தூதர்களாக நியமிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் திட்டமிட்டது. இந்திய அணியின் நல்லெண்ண…
-
- 0 replies
- 299 views
-
-
பிறீமியர் லீக் பட்டத்தை வென்றது லெய்செஸ்டர் சிற்றி இங்கிலாந்து கால்பந்தாட்ட கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் போட்டிகளில், டொட்டென்ஹாம் ஸ்பர்ஸ், செல்சி ஆகிய அணிகளுக்கிடையில் கடந்த திங்கட்கிழமை (02) இடம்பெற்ற போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில், பிறீமியர் லீக் பட்டத்தை லெய்செஸ்டர் சிற்றி கைப்பற்றியுள்ளது. கடந்த பருவகாலத்தில் பிறீமியர் லீக்கிலிருந்து ஏறத்தாள வெளியேறும் நிலையிலிருந்த லெய்செஸ்டர் சிற்றி, இந்தப் பருவகாலத்தின் ஆரம்பத்தில், பிறீமியர் லீக் பட்டத்தை அவ்வணி கைப்பற்றுவதற்கான வாய்ப்பு, 5,000-1 என்ற நிலையிலிருந்து தற்போது பிறீமியர் லீக் பட்டத்தை வென்றமையானது விளையாட்டு வரலாற்றின் சிறந்ததோறு தருணமாகக் கருதப்படுகி…
-
- 2 replies
- 524 views
-
-
ஐபிஎல்: பந்துவீச்சில் மாயாஜாலம் காட்டும் குஜராத் வீரர்! (வீடியோ) ஐபில் கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணியில் இடம்பெற்றிருக்கும் ஷிவில் கவ்ஷிக்கின் பந்து வீச்சு அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்புரில் பிறந்த ஷிவில் கவ்ஷிக்கின் வயது 20. இதுவரை முதல் தர கிரிக்கெட் போட்டியில் கூட விளையாடாத இவர், ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியில் இடம் பெற்றுள்ளார். இடக்கை சுழற்பந்து வீச்சாளரான இவர், தனது உடலை வளைத்து, தலையை குனிந்தபடி பந்தினை வீசுகிறார். இது தென் ஆப்பிரிக்க முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பால் ஆடம்சின் பந்துவீச்சு போன்று இருப்பதாக அனைவரும் தெரிவிக்கின்றனர். இவரின் இந்த வித்தியாசமான பந்துவீச்சு முறை அனைவரையும் கவர்ந்துள்ளது. ஐபிஎல் ப…
-
- 0 replies
- 353 views
-
-
8 கேப்டன்களை உருவாக்கிய தோனி! - #TheRealKingmaker சிலர் கிங்காக இருப்பார்கள், இன்னும் சிலர் கிங் மேக்கர்களாக இருக்கார்கள். கிங்காகவும், கிங் மேக்கராகவும் இருக்க முடியும் என்றால், அவர் இரண்டு உலகக் கோப்பையை வென்றிருக்க வேண்டும். இக்கட்டான சூழலில் அணியை கூலாக வெற்றிக்கு அழைத்து செல்பவராக அவர் இருக்க வேண்டும். அதற்கு அவரது பெயர் மஹேந்திர சிங் தோனியாகவும் இருக்க வேண்டும். கிரிக்கெட் என்ற விளையாட்டு இருக்கும் காலம் வரை அதில் சிறந்த கேப்டன் பட்டியலில் தோனி முதல் வரிசையில் இருப்பார். ஹெலிகாப்டர் ஷாட் கிங், கடைசி பந்தில் சிக்ஸர் என எத்தனையோ சாதனைகளை அடுக்கினாலும் கோப்பையை வாங்கி இளம் வீரர்களிடம் கொடுத்து விட்டு, ஒரு ஓரமாக நின்று அவர்களின் சந்தோசத்தை கண்டு மகிழ்வதை பார…
-
- 0 replies
- 385 views
-
-
இலங்கை தேசிய அணியில் தமிழ் வீரர் மட்டக்களப்பு மாவட்டத்தின் சிரேஷ்ட கபடி வீரரும் முன்னணி கபடி பயிற்றுவிப்பாளருமான துரைசாமி மதன்சிங் இலங்கைக்கான தேசிய கபடி அணியில் தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளார். 3 ஆவது ஆசிய கபடி (Circle Kabbadi) போட்டிகளில் பங்குபற்றும் இலங்கைக்கான தேசிய கபடி அணியிலேயே துரைசாமி மதன்சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டுக்கான ஆசிய circle கபடி சுற்றுப் போட்டியானது இம்மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கோலாகலமாக ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த சுற்றுப்போட்டியில் பங்குகொள்ளும் இலங்கை அணி அண்மையில் பாகிஸ்தான் நோக்கி பு…
-
- 0 replies
- 512 views
-
-
தோனி அணி சொதப்ப யார் காரணம்? இந்திய அணியின் கேப்டன், தென்னாபிரிக்க அணியின் கேப்டன், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன், உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர், ஐ.பி.எல்லின் சிறந்த துவக்க ஆட்டக்காரர்கள் என நட்சத்திர அந்தஸ்துடன், இந்த முறை கண்டிப்பாக கோப்பையை வெல்லும் அணிகளில் முக்கியமான அணி என எல்லோராலும் கருதப்பட்ட ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதற்கிடையில் வரிசையாக பல வீரர்கள், காயத்தால் தொடரில் இருந்து விலகும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். 2008 முதல் 2015 வரை எட்டு சீசனிலும் சென்னை அணிக்கு கேப்டனாக இருந்து அரையிறுதிக்கு வழிநடத்திய தோனிதான் புனே அணிக்கும் கேப்டன் என அறிவிக்கப்பட்ட போது ரசிகர்கள் உற்சாகமானார்கள்.…
-
- 0 replies
- 540 views
-
-
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நான்காம் திகதி இங்கிலாந்து பயணமாகவுள்ளது. அடுத்த மாதம் 19 ஆம் திகதி மூன்று போட்டிகள் அடங்கிய தொடர் ஆரம்பிக்கவுள்ளது. பயிற்சிப் போட்டிகள் எட்டாம் திகதியும், 13 ஆம் திகதியும் ஆரம்பிக்கவுள்ளன. இந்த தொடருக்கான இலங்கை அணி ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இலங்கை அணியின் அண்மைக்கால வீழ்ச்சி மற்றும் இலங்கை கிரிக்கெட் நிர்வாக மாற்றம் என்பன இந்த எதிர்பார்ப்புக்கு காரணங்கள். சரி அவை எவ்வாறு அமைந்தாலும் இந்த அணி பற்றி வீரர்கள் பற்றி அவர்களின் தெரிவுகள் பற்றி இந்தக் கட்டுரை அலசப்போகின்றது. இங்கிலாந்து ஆடுகளங்களுக்கு ஏற்றாற்போல் இந்த அணி தெரிவு …
-
- 0 replies
- 409 views
-
-
400மீ. ஓட்டத்தில் சாதனை அமெரிக்காவில் உள்ள லேவா நகரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஓட்டப்பந்தயத்தில் கிரெனடாவை சேர்ந்த கிரானி ஜேம்ஸ் 400 மீட்டர் ஓட்டத்தில் சாதனை படைத்தார். அவர் பந்தயத் தூரத்தை 44.08 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இதன்மூலம் அவர் அதிவேகத்தில் 400 மீட்டர் ஓட்டத் தூரத்தை கடந்தவர் என்ற சாதனையை படைத்தார். http://www.virakesari.lk/article/5839
-
- 0 replies
- 540 views
-
-
இந்தியாவுக்கு சார்பாக செயற்படுவதாக ஐ.சி.சி. மீது விவியன் றிச்சர்ட்ஸ் குற்றச்சாட்டு இந்தியாவில் நடைபெற்ற உலக இருபது கிரிக்கெட் போட்டியில் சம்பியனானதைத் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை கடிந்துரைத்துள்ளதை மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் மேதைகளில் ஒருவரான சேர் விவியன் றிச்சர்ட்ஸ் கண்டித்துள்ளார். அத்துடன் இந்தியாவுக்கு பகுதியளவில் அல்லது பக்கசார்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவை செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அணித் தலைவர் டரன் சமி, மார்லன் சமுவேல்ஸ் ஆகியோர் உலக இருபது 20 வெற்றிக்குப் பின்னர் நடந்துகொண்ட விதம் குறித்து துபாயில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தின்போது சர்வதேச கிர…
-
- 0 replies
- 343 views
-
-
நடுவர் அலிம்தாரின் மகன்மார் வேறு பெயர்களுடன் விளையாடியதால் ஸ்கொட்லாந்து கிரிக்கெட் கழகம் தரமிறக்கப்பட்டுள்ளது பாகிஸ்தான் மத்தியஸ்தர் அலிம் தாரின் மகன்மார் இருவர் லீக் போட்டிகளில் விளையாடுவதற்காக ஸ்கொட்லாந்து பிரஜைகள் எனப் பொய் கூறியுள்ளதை தான் அறிந்திருக்கவில்லை என அலிம் தார் தெரிவித்துள்ளார். அலிம் தாரின் மகன்மாரான 18 வயதுடைய அலி என்பவரும் 16 வயதுடைய ஹசன் என்பவரும் தாங்கள் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பிறந்தவர்கள் என பொய் கூறி கில்மானொக் கிரிக்கெட் கழகத்திற்காக விளையாடியமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து முதலாம் பிரிவிலிருந்து அக் கழகத்தை மேற்கு மாவட்ட கிரிக்…
-
- 0 replies
- 246 views
-
-
பார்முலா 1 கார் பந்தயம் ராஸ்பெர்க் சாம்பியன் சோச்சி: ரஷ்யன் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில், மெர்சிடிஸ் அணி வீரர் நிகோ ராஸ்பெர்க் சாம்பியன் பட்டம் வென்றார். சோச்சி நகரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், ராஸ்பெர்க் 1 மணி, 32 நிமிடம், 41.997 விநாடிகளில் முதலாவதாக வந்து கோப்பையை கைப்பற்றினார். 10வது இடத்தில் இருந்து தொடங்கினாலும் அபாரமாக செயல்பட்ட சக மெர்சிடிஸ் வீரர் லூயிஸ் ஹாமில்டன் (+25.022 விநாடி) 2வது இடம் பிடித்தார். செபாஸ்டியன் வெட்டல் (பெராரி) ஓட்டிய கார் மீது டானில் க்வியாட் ஓட்டிய கார் பின்புறம் இருந்து இடித்ததால், வெட்டல் பந்தயத்தில் இருந்து துரதிர்ஷ்டவசமாக விலக நேரிட்டது. போர்ஸ் இந்தியா வீரர் நிகோ ஹல்கன்பெர்க், வில்லியம்ஸ் வீரர் வா…
-
- 0 replies
- 290 views
-
-
லா லிகா தொடர்: மீண்டும் முதலிடத்தில் பார்சிலோனா ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் லா லிகா தொடரில், கடந்த சனிக்கிழமை (30) இடம்பெற்ற போட்டிகளின்போது வெவ்வேறு நேரங்களில் மூன்று அணிகள் முன்னிலையில் இருந்தபோதும் இறுதியாக பார்சிலோனா அணி தனது முதலிடத்தைப் பெற்றுள்ளது. றியல் மட்ரிட், றியல் சொஸைடட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியின் இறுதி நேரங்களில் றியல் மட்ரிட்டின் கரித் பேல் பெற்ற கோலின் காரணமாக அவ்வணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று, லா லிகா புள்ளிகள் தரவரிசையில் 84 புள்ளிகளைப் பெற்று ஒரு கட்டத்தில் முன்னிலைக்கு வந்திருந்தது. இப்போட்டியில் காயம் காரணமாக, அவ்வணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரிம் பென்ஸீமா ஆகியோர் விளையாடவில்லை …
-
- 0 replies
- 299 views
-
-
அடங்காத மலிங்கா! மருத்துவர் காரசார குற்றச்சாட்டு! இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா தனது ஆலோசனைகளை மதிக்கவே இல்லை என்று இலங்கை அணியின் மருத்துவர் சிறி கண்ணன்கார குற்றஞ்சாட்டியுள்ளார். தற்போது அவுஸ்திரேலிய அணிக்கு மருத்துவராக இருக்கும் அவர், மலிங்கா தனது ஆலோசனைகளுக்கு எதிராகவே செயல்பட்டதாகவும், அதனாலே அவர் தற்போது அவதிப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், நான் இந்த ஆண்டு ஜனவரி மாதம் மலிங்காவின் உடற்தகுதியை சோதனை செய்தேன். அவருக்கு கண்டிப்பாக 6 மாதம் ஓய்வு வேண்டும் என்று அறிவுறுத்தினேன். அப்படி இருந்து அவர் ஏன் ஆசியக்கிண்ண தொடரில் ஆடினார் எ…
-
- 0 replies
- 396 views
-
-
கெய்லின் சாதனை முறியடிப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் டொபாகோ வீரர் ஈராக் தோமஸ் 21 பந்துகளில் அதிவேக சதம் அடித்து, மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்துள்ளார். கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான டிரினிடாட் டொபாகோவில் அந்நாட்டு கிரிக் கெட் நிறுவகம் சார்பில் உள்ளூர் அணிகளுக்கு இடையேயான இ–20 போட்டி நடத்தப்படுகிறது. இதில்,நடந்த போட்டியில் ஸ்கார் போரோக் மேசன் ஹால் அணியும், ஸ்பைசைட் அணியும் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்பைசைட் அணி 152 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது. அடுத்து துடுப்பெடுத்தாடிய ஸ்கார்போரோக் அணியின் 23 வயதான தோமஸ், தான் சந்தித்த அனைத்து பந்துகளையும் விளாசித் தள்ள…
-
- 0 replies
- 646 views
-
-
இங்கிலாந்துக்கான டெஸ்ட் குழாமில் தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா இங்கிலாந்து செல்லவுள்ள இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், புதுமுக வீரர்களான தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அஞ்சலோ மத்தியூஸ் தலைமையில் 17 பேர் கொண்ட குழாமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் குழாம், அனுபவம் குறைவான ஓர் அணியாக இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளது. தனஞ்சய டி சில்வா, உள்ளூர்ப் போட்டிகளில் தமிழ் யூனியன் கழகம் சார்பாகச் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். தசுன் ஷானக, இப்பருவகாலத்தில் 3 போட்டிகளில் மாத்திரமே பங்குபற்றியிருந்தார். எனவே, அவரது உள்ளடக்கம், சிறிது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தவிர, விக்க…
-
- 1 reply
- 449 views
-
-
விம்பிள்டன் பணப்பரிசு அதிகரிப்பு விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் சம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கான பணப்பரிசு இவ் வருடம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் நடத்தப்படும் நான்கு மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) போட்டிகளில் தூய்மையின் அடையாளமாக விளங்குவது விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளாகும். இப் போட்டிகளில் பங்குபற்றும் அனைவரும் வெள்ளை அங்கிகளையே அணிய வேண்டும் என்பது விம்பிள்டன் ஏற்பாட்டுக் குழுவின் நியதியாகும். இதன் மூலம் தூய்மையின் முக்கியத்துவம் எடுத்துக்காட்டப்படுகின்றது. இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்கள் …
-
- 0 replies
- 658 views
-
-
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுநராக டொனல்ட் 2016-04-28 12:16:04 அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுநராக தென் ஆபிரிக்காவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அலன் டொனல்ட் நியமிக்கப்படவுள்ளார். இலங்கைக்கான அவுஸ்திரே லிய கிரிக்கெட் விஜயத்தை முன் னிட்டு குறுகியகால அடிப்படையில் அலன் டொனல்டை பந்துவீச்சுப் பயிற்றுநராக நியமிக்க கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா எண்ணியுள்ளது. தென் ஆபிரிக்காவுடனான ஒப்பந்தம் நீடிக்கப்படாதது எவ்வளவு தவறானது என்பதை அவுஸ்திரேலியாவின் பயிற்றுநராக நிய மிக்கப்பட்ட பின்னர்…
-
- 1 reply
- 547 views
-
-
நியூசிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக வில்லியம்ஸன் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மூன்று வகைப் போட்டிகளின் தலைவராக உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கேன் வில்லியம்ஸன், இவ்வருட பிற்பகுதியில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான 29ஆவது தலைவராக மாறவுள்ளார். இவ்வருட ஆரம்பத்தில் இந்தியாவில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20-இல் நியூசிலாந்துக்கு தலைவராக இருந்த வில்லியம்ஸன், இதுவரையில், 36, ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் நியூசிலாந்து அணியின் தலைவராக இருந்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் பிரென்டன் மக்குலம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வில்லியம்ஸனே நியூசிலாந்து அணியின் டெஸ்ட் தலைவராக நியமிக்கப்படுவா…
-
- 0 replies
- 473 views
-