Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. நடுவர் அலிம்தாரின் மகன்மார் வேறு பெயர்களுடன் விளையாடியதால் ஸ்கொட்லாந்து கிரிக்கெட் கழகம் தரமிறக்கப்பட்டுள்ளது பாகிஸ்தான் மத்­தி­யஸ்தர் அலிம் தாரின் மகன்மார் இருவர் லீக் போட்­டி­களில் விளை­யா­டு­வ­தற்­காக ஸ்கொட்­லாந்து பிர­ஜைகள் எனப் பொய் கூறி­யுள்­ளதை தான் அறிந்­தி­ருக்­க­வில்லை என அலிம் தார் தெரி­வித்­துள்ளார். அலிம் தாரின் மகன்­மா­ரான 18 வய­து­டைய அலி என்­ப­வரும் 16 வய­து­டைய ஹசன் என்­ப­வரும் தாங்கள் ஸ்கொட்­லாந்தின் கிளாஸ்கோ நகரில் பிறந்­த­வர்கள் என பொய் கூறி கில்­மானொக் கிரிக்கெட் கழ­கத்­திற்­காக விளை­யா­டி­யமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதை அடுத்து முதலாம் பிரி­வி­லி­ருந்து அக் கழ­கத்தை மேற்கு மாவட்ட கிரிக்…

  2. பார்முலா 1 கார் பந்தயம் ராஸ்பெர்க் சாம்பியன் சோச்சி: ரஷ்யன் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில், மெர்சிடிஸ் அணி வீரர் நிகோ ராஸ்பெர்க் சாம்பியன் பட்டம் வென்றார். சோச்சி நகரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், ராஸ்பெர்க் 1 மணி, 32 நிமிடம், 41.997 விநாடிகளில் முதலாவதாக வந்து கோப்பையை கைப்பற்றினார். 10வது இடத்தில் இருந்து தொடங்கினாலும் அபாரமாக செயல்பட்ட சக மெர்சிடிஸ் வீரர் லூயிஸ் ஹாமில்டன் (+25.022 விநாடி) 2வது இடம் பிடித்தார். செபாஸ்டியன் வெட்டல் (பெராரி) ஓட்டிய கார் மீது டானில் க்வியாட் ஓட்டிய கார் பின்புறம் இருந்து இடித்ததால், வெட்டல் பந்தயத்தில் இருந்து துரதிர்ஷ்டவசமாக விலக நேரிட்டது. போர்ஸ் இந்தியா வீரர் நிகோ ஹல்கன்பெர்க், வில்லியம்ஸ் வீரர் வா…

  3. லா லிகா தொடர்: மீண்டும் முதலிடத்தில் பார்சிலோனா ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் லா லிகா தொடரில், கடந்த சனிக்கிழமை (30) இடம்பெற்ற போட்டிகளின்போது வெவ்வேறு நேரங்களில் மூன்று அணிகள் முன்னிலையில் இருந்தபோதும் இறுதியாக பார்சிலோனா அணி தனது முதலிடத்தைப் பெற்றுள்ளது. றியல் மட்ரிட், றியல் சொஸைடட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியின் இறுதி நேரங்களில் றியல் மட்ரிட்டின் கரித் பேல் பெற்ற கோலின் காரணமாக அவ்வணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று, லா லிகா புள்ளிகள் தரவரிசையில் 84 புள்ளிகளைப் பெற்று ஒரு கட்டத்தில் முன்னிலைக்கு வந்திருந்தது. இப்போட்டியில் காயம் காரணமாக, அவ்வணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரிம் பென்ஸீமா ஆகியோர் விளையாடவில்லை …

  4. அடங்காத மலிங்கா! மருத்துவர் காரசார குற்றச்சாட்டு! இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா தனது ஆலோசனைகளை மதிக்கவே இல்லை என்று இலங்கை அணியின் மருத்துவர் சிறி கண்ணன்கார குற்றஞ்சாட்டியுள்ளார். தற்போது அவுஸ்திரேலிய அணிக்கு மருத்துவராக இருக்கும் அவர், மலிங்கா தனது ஆலோசனைகளுக்கு எதிராகவே செயல்பட்டதாகவும், அதனாலே அவர் தற்போது அவதிப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், நான் இந்த ஆண்டு ஜனவரி மாதம் மலிங்காவின் உடற்தகுதியை சோதனை செய்தேன். அவருக்கு கண்டிப்பாக 6 மாதம் ஓய்வு வேண்டும் என்று அறிவுறுத்தினேன். அப்படி இருந்து அவர் ஏன் ஆசியக்கிண்ண தொடரில் ஆடினார் எ…

  5. கெய்லின் சாதனை முறியடிப்பு இரு­ப­துக்கு 20 கிரிக்­கெட்டில் டொபாகோ வீரர் ஈராக் தோமஸ் 21 பந்­து­களில் அதி­வேக சதம் அடித்து, மேற்கிந்­தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெய்லின் சாத­னையை முறிய­டித்­துள்ளார். கரீ­பியன் தீவு நாடு­களில் ஒன்­றான டிரி­னிடாட் டொபாகோவில் அந்­நாட்டு கிரிக் கெட் நிறு­வகம் சார்பில் உள்ளூர் அணி­க­ளுக்கு இடை­யே­யான இ–20 போட்டி நடத்­தப்­ப­டு­கி­றது. இதில்,நடந்த போட்­டியில் ஸ்கார் ­போரோக் மேசன் ஹால் அணியும், ஸ்பைசைட் அணியும் மோதின. முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய ஸ்பைசைட் அணி 152 ஓட்­டங்­களை இலக்­காக நிர்­ண­யித்­தது. அடுத்து துடுப்­பெ­டுத்­தா­டிய ஸ்கார்­போரோக் அணியின் 23 வய­தான தோமஸ், தான் சந்­தித்த அனைத்து பந்­து­க­ளையும் விளாசித் தள்­ள…

  6. இங்கிலாந்துக்கான டெஸ்ட் குழாமில் தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா இங்கிலாந்து செல்லவுள்ள இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், புதுமுக வீரர்களான தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அஞ்சலோ மத்தியூஸ் தலைமையில் 17 பேர் கொண்ட குழாமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் குழாம், அனுபவம் குறைவான ஓர் அணியாக இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளது. தனஞ்சய டி சில்வா, உள்ளூர்ப் போட்டிகளில் தமிழ் யூனியன் கழகம் சார்பாகச் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். தசுன் ஷானக, இப்பருவகாலத்தில் 3 போட்டிகளில் மாத்திரமே பங்குபற்றியிருந்தார். எனவே, அவரது உள்ளடக்கம், சிறிது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தவிர, விக்க…

  7. விம்பிள்டன் பணப்பரிசு அதிகரிப்பு விம்­பிள்டன் டென்னிஸ் போட்­டி­களில் சம்­பியன் பட்டம் வெல்­ப­வர்­க­ளுக்­கான பணப்­ப­ரிசு இவ் வருடம் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. வரு­டாந்தம் நடத்­தப்­படும் நான்கு மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) போட்­டி­களில் தூய்­மையின் அடை­யா­ள­மாக விளங்­கு­வது விம்­பிள்டன் டென்னிஸ் போட்­டி­க­ளாகும். இப் போட்­டி­களில் பங்­கு­பற்றும் அனை­வரும் வெள்ளை அங்­கி­க­ளையே அணி­ய­ வேண்டும் என்­பது விம்­பிள்டன் ஏற்­பாட்டுக் குழுவின் நிய­தி­யாகும். இதன் மூலம் தூய்­மையின் முக்­கி­யத்­துவம் எடுத்­துக்­காட்­டப்­ப­டு­கின்­றது. இப்போட்­டி­களில் பங்­கு­பற்­று­ப­வர்கள் …

  8. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுநராக டொனல்ட் 2016-04-28 12:16:04 அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணியின் பந்­து­வீச்சு பயிற்­று­ந­ராக தென் ஆபி­ரிக்­காவின் முன்னாள் வேகப்­பந்­து­வீச்­சாளர் அலன் டொனல்ட் நிய­மிக்­கப்­ப­ட­வுள்ளார். இலங்­கைக்­கான அவுஸ்­திரே ­லிய கிரிக்கெட் விஜ­யத்தை முன்­ னிட்டு குறு­கி­ய­கால அடிப்­ப­டையில் அலன் டொனல்டை பந்­து­வீச்சுப் பயிற்­று­ந­ராக நிய­மிக்க கிரிக்கெட் ஒஸ்ட்­ரே­லியா எண்­ணி­யுள்­ளது. தென் ஆபி­ரிக்­கா­வு­ட­னான ஒப்­பந்தம் நீடிக்­கப்­ப­டா­தது எவ்­வ­ளவு தவ­றா­னது என்­பதை அவுஸ்­தி­ரே­லி­யாவின் பயிற்­று­ந­ராக நிய­ மிக்­கப்­பட்ட பின்னர்…

  9. நியூசிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக வில்லியம்ஸன் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மூன்று வகைப் போட்டிகளின் தலைவராக உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கேன் வில்லியம்ஸன், இவ்வருட பிற்பகுதியில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளுக்கான 29ஆவது தலைவராக மாறவுள்ளார். இவ்வருட ஆரம்பத்தில் இந்தியாவில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20-இல் நியூசிலாந்துக்கு தலைவராக இருந்த வில்லியம்ஸன், இதுவரையில், 36, ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் நியூசிலாந்து அணியின் தலைவராக இருந்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் பிரென்டன் மக்குலம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வில்லியம்ஸனே நியூசிலாந்து அணியின் டெஸ்ட் தலைவராக நியமிக்கப்படுவா…

  10. செய்தித் துளிகள்... ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தற்காலிக பந்து வீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஆலன் டொனால்டு நியமிக்கப் பட்டுள்ளார். --------------------------------- ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் காயம் காரணமாக விலகிய மலிங்காவுக்கு பதிலாக மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஜெரோம் டெய்லர் சேர்க்கப்பட்டுள்ளார். --------------------------------- ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிக்கு இம்முறை வைல்டுகார்டு கிடையாது என இந்திய டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் இந்திய வீரர்கள் தங்களது தரவரிசை அடிப்படையில் தான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமை உருவாகி உள்ளது. --------------------------------- …

  11. மலிங்கவிற்கு ஓய்வு இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கவிற்கு ஓய்வு வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. அந்த வகையில் மலிங்கவுக்கு 3 மாதகால ஓய்வு வழங்க கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/5676

  12. நானே முதல்வன் : சச்சின் மூன்றாவது நடுவர் முறை மூலம் கிரிக்கெட் வரலாற்றில் ஆட்டமிழந்த முதல் வீரர் நானே என இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார். மும்பையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கிரிக்கெட்டில் தொழில்நுட்பமானது அதிமுக்கியத்துவம் பெற்றுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது நடுவர் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதன் மூலம் ஆட்டமிழந்த முதல் நபர் நான்தான் என அவர் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/5677

  13. ‘‘ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு இடைக்கால சபை அவசியமில்லை’’ – அமைச்சர் தயாசிறி ஜயசேகர (நெவில் அன்­தனி) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிரு­வாக சபையைக் கலைத்து இடைக்­கால நிரு­வாக சபையை நிய­மிக்க வேண்­டிய அவ­சி­யமே இல்லை என விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பா­லவை சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை ஏற்­றுக்­கொண்டு அவரை நிரு­வாக சபைக்குள் அனு­ம­தித்­துள்­ள­தா­கவும் அவர் கூறினார். சர்­வ­தேச அரங்கில் பிர­கா­சித்த ஆடவர் ஹொக்கி அணி­யி­ன­ரையும் .மகளிர் கூடைப்­பந்­தாட்ட அணி­யி­ன­ரையும் பாராட்டிக் கௌர­விக்கும் நிகழ்வில் கலந்து­ கொண்ட …

  14. ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்? ஒலிம்பிக் அல்­லது பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாக்­களில் கிரிக்கெட் போட்­டி­களை இணைப்­பதா? இல்­லையா? என்­பது குறித்­தான முகா­மைத்­துவக் குழுவின் பரிந்­த­ரை­களை சர்­வ­தேச கிரிக்கட் பேரவை திங்­க­ளன்று ஆராய்ந்­தது. இதன் போது இந்த விடயம் குறித்து இறுதித் தீர்­மானம் எடுப்­ப­தற்கு முன்னர், உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­திகள், சர்­வ­தேச ஒலிம்பிக் குழு­வினர், பொது­ந­ல­வாய விளை­யாட்­டுத்­துறை சமமேளன உறுப்­பி­னர்கள் ஆகி­யோ­ருடன் கலந்­து­ரை­யாட வேண்டும் எனவும் பேர­வையின் நிரு­வாக சபை தீர்­மா­னித்­தது. சீனாவில் கிரிக்கெட் விளை­யாட்­டுத்­துறை வியா­பித்து வரு­வது தொடர்­பான அறிக்கை ஒன்று …

  15. சொந்த நாட்டில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தென் ஆபிரிக்காவுக்கு அந்நாட்டு அரசு தடை! 2016-04-27 10:55:28 இன ஒடுக்கல் கார­ண­மாக பல்­லாண்­டு­க­ளுக்கு முன்னர் 21 வருடத் தடைக்கு உட்­பட்­டி­ருந்த தென் ஆபி­ரிக்­கா­வுக்கு இப்­போது மீண்டும் ஒரு சிக்கல் உரு­வா­கி­யுள்­ளது. கிரிக்கெட் நிரு­வா­கத்தில் பின்­பற்­ற­வேண்­டிய வழி­மு­றை­க­ளுக்கு அமைய மாற்­றங்­களை செய்யத் தவ­றி­யதால் கிரிக்கெட் தென் ஆபி­ரிக்­கா­வுக்கு (தென் ஆபி­ரிக்க கிரிக்கெட் நிறு­வனம்) சொந்த மண்ணில் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களை நடத்­து­வ­தற்கு அந் நாட்டு அரசு தடை விதித்­துள்­ளது. உயர்­மட்டக் குழு­வி­னரால் அமைச்சர் மட்ட சுயா­தீனக் …

  16. மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு ஐ.சீ.சீ எச்சரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கட் பேரவை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியின் பின்னர், வீரர்கள் நடந்து கொண்ட விதம் அதிருப்தி அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கிண்ண இறுதிப் போட்டியொன்றின் பின்னர் அணியின் முக்கிய வீரர்கள் வெளியிட்ட கருத்துக்கள் , நடந்து கொண்ட விதம் ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை டுபாயில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கட் பேரவையின் கூட்டத்தில் இந்த விடயங்கள் பற்றி பேசப்பட்டுள்ளத…

  17. கையில் 'பணமின்றி' வீடு திரும்ப தவித்த தருணம்: சச்சின் ருசிகரம் டிஜிபேங்க் அறிமுக நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர். | படம்: பிடிஐ. கையிலிருந்த காசையெல்லாம் செலவு செய்து விட்டு ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்கு நடந்து சென்றிருக்கிறேன் என்று சச்சின் கடந்த காலத்தை நினைவுகூர்ந்தார். பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர், ஒரு காலத்தில் ரயில் நிலையத்திலிருந்த வீட்டுக்கு வாகனத்தில் செல்ல காசில்லாமல் இருந்ததுண்டு என்று கடந்த காலத்தை நினைவுகூர்ந்தார். அதாவது அன்று, இப்போது போல் செல்போன் வசதியிருந்திருந்தால் சவுகரியமாக இருந்திருக்கும் என்பதற்காக இதனைக் குறிப்பிட்டார் சச்சின் டெண்டுல்கர். மும்பையில் ‘டிஜிபேங்க…

  18. விவ் ரிச்சர்ட்சை ஒத்திருக்கிறது விராட் கோலியின் மனநிலை: ரவி சாஸ்திரி விராட் கோலி. | படம்: ஜி.பி.சம்பத் குமார். இந்திய அணியின் இயக்குநரான ரவிசாஸ்திரி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட போது விராட் கோலியின் மனநிலையை விவ் ரிச்சர்ட்ஸின் மனநிலைக்குச் சமமானது என்று புகழாரம் சூட்டினார். விஸ்டன் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என்னுடைய ஆளுமை எப்படியெனில் எந்த ஒரு சவாலையும் நான் விட்டு விட மாட்டேன். நான் அனைத்துத் தடைகளையும் கடந்து நேராக பணிக்கு வருபவன். அதாவது தகவல் தொடர்பு மற்றும் நம்பிக்கை என்ற புள்ளிக்கு நேராக வருவதுதான் என்னுடைய அணுகுமுறை. இதுதான் எனது முதல் பதிவாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்திய அணி …

  19. விராட் கோலி, டிவில்லியர்ஸை யார் என்று கேட்ட ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் ஆடம் ஸம்பா. | படம்: அகிலேஷ் குமார். விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸை ‘யார் இவர்கள்’ என்று ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஆடம் ஸம்பா கேட்டிருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு அணியும், புனே அணியும் ஐபிஎல் கிரிக்கெட்டில் மோதின. இதில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது, இதனையடுத்து பெங்களூரு அணியின் ஆஸ்திரேலிய பவுலர் கேன் ரிச்சர்ட்ஸன் புனே அணியின் தன் சக ஆஸி.வீரரான லெக் ஸ்பின்னர் ஆடம் ஸம்பாவுக்கு ட்வீட் செய்யும் போது, விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோர் படத்தை வெளியிட்டு அதற்குக் கீழே, “ஒவ்வொரு போட்டியிலும் இவர்கள் இருவரும் பேட் செய்வதைப் பார்…

  20. அபாரமாக வென்றது பார்சிலோனா அணி லா லிகா கால்பந்து போட்டிகள் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பார்சிலோனா அணி 6-0 என்ற கோல் கணக்கில் ஸ்போர்டிங் கிஜோன் அணியை வீழ்த்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு நடந்த இந்த லீக் போட்டியில் பார்சிலோனா - ஸ்போர்டிங் கிஜோன் அணிகள் மோதின. இதில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி 12வது நிமிடத்தில் கோல் அடித்தார். முதல் பாதி ஆட்ட முடிவில் பார்சிலோனா 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் பார்சிலோனா அணியின் ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டது. அந்த அணியின் லூயிஸ் சுவாரஸ் (63, 74, 77, 88வது நிமிடம்) 4 கோல் அடித்து அசத்தினார். நெய்மர் தன் பங்கிற்கு (85வது நிமிடம்) ஒரு கோல் அட…

  21. குமார் சங்கக்கார இங்கிலாந்து கழக போட்டியில் சதம்: இலங்கை அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் குமார் சங்கக்கார இங்கிலாந்து கழக மட்டப் போட்டியில் சதமடித்து சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தின் சர்ரே கழகத்தின் சார்பில் குமார் சங்கக்கார விளையாடி வருகின்றார். ஓவல் மைதானத்தில் சமர்செட் கழகத்திற்கு எதிரான போட்டியில் சங்கக்கார 171 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார். இதுவரை சங்கக்கார சரே அணிக்காக 22 இன்னிங்ஸ்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131438/language/ta-IN/article.aspx

  22. சாதனையை சமன் செய்தார் நடால் நடால். | படம்: ஏ.எஃப்.பி. பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் அவர் நடப்பு சாம்பியனான ஜப்பானின் நிஷிகோரியை 6-4, 7-5 என்ற நேர்செட்டில் வீழ்த்தினார். வெற்றி குறித்து நடால் கூறும்போது, "இந்த ஆட்டத்தில் நான் சிறப்பாக சர்வீஸ் செய்தேன். இது தான் முக்கியமாக அமைந்தது. ஆரம்பத்திலேயே சர்வீஸ்கள் நல்ல முறையில் அமைந்தால் சிறந்த ஆட்டத்தை கொடுக்க முடிந்தது. இரண்டாவது செட்டில் அதிக வாய்ப்புகள் நழுவிய போதிலும் மனதளவில் போராடி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார். பார்சிலோனா போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் களிமண் தரையில் …

  23. கௌஷால் சில்வாவின் தலையில் பந்து தாக்கியது! பள்ளேகலயிலிருந்து வான் வழியாக கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார் 2016-04-24 19:30:23 இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னிலை வீரர்களில் ஒருவரான கௌஷால் சில்வாவின் தலையில் பந்தொன்று தாக்கியமையால் அவர் பள்ளேகலயிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார். பள்ளேகலயில் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கௌஷால் சில்வாவின் தலையில் பந்து தாக்கியதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் ஆபத்தான நிலையில் இல்லையென்பது ஆரம்ப சோதனைகள் மூலம் தெரியவந்ததாகவும் ஸ்ரீலங்கா கி…

  24. ஒலிம்பிக் சுடர் எப்படி ஏற்றப்படுகிறது? உலகின் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழா எனக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டியின் மிக முக்கியமான ஒரு அம்சம், போட்டி காலம் முழுவதும் எரியும் ஒலிம்பிக் ஜோதி. கிரேக்கத்தில் பாரம்பரிய முறையில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் அந்தச் சுடர் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் பழமையான பாரம்பரிய முறையில் கிரேக்கத்தில் ஏற்றப்படும். ஒலிம்பிக் சுடர் விளையாட்டு வீரர்களால் புனிதமானதாகக் கருதப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைகால ஒலிம்பிக் போட்டிகளின்போது அச்சுடர் எப்படி ஏற்றப்பட்டதோ அதே முறையே இப்போதும் பின்பற்றப்படுகிறது. பாரம்பரிய முறையில் ஏற்றப்பட…

  25. கிரிக்கெட் துறை வளர்ச்சி சார்ந்த கேள்விகளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பதில் அளிக்க வேண்டும் – குமார் சங்கக்கார 2016-04-25 08:30:33 இலங்கை கிரிக்கெட் துறை வளர்ச்சி சார்ந்த விட­யங்­களில் எழும் பல கேள்­வி­க­ளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் பதில் அளித்­தாக வேண்டும் என இலங்கை கிரிக் கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்­கக்­கார தெரிவித்­துள்ளார். இங்­கி­லாந்தில் முதல்­தர பிராந்­திய கிரிக்கெட் போட்­டி­களில் சரே அணிக்­காக விளை­யா­டி­வரும் குமார் சங்­கக்­கார, பி.பி.சி உலக சேவையின் “ஸ்டம்ப்ட்” சேவையில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற நேர்­கா­ண­லி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்ளார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.