விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
10 ஆயிரமாவது கோலை போட்டார் மெஸ்ஸி லா லிகா தொடரில் மெஸ்ஸி அடித்த கோல் கழக கால்பந்து வரலாற்றின் 10 ஆயிரமாவது கோலாக பதிவானது. கழக கால்பந்தாட்ட தொடர்களில் ஒட்டுமொத்த வரலாற்றில் 10 000 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதன் 10 ஆயிரமாவது கோலை போட்ட பெருமையை பெற்றார் மெஸ்ஸி. சமீபத்தல் நடைபெற்ற லா லிகா தொடரில் பார்சிலோனா அணியின் மெஸ்ஸி 300 கோல்களை அடித்து அசத்தினார். தொடர்ந்து இவர் அடித்த அடுத்த கோலானது கழக கால்பந்தாட்ட வரலாற்றின் 10 ஆயிரமாவது கோலா அமைந்தது. லாலிகா கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த மெஸ்ஸி, கழக வரலாற்றில் இன்னும் பின் தங்கியே இருக்கிறார். இதில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் வரிசையில் ஜேர்…
-
- 0 replies
- 460 views
-
-
வீரர்களின் போர் கிரிக்கெட் போட்டி தெல்லிப்பழையில் இன்று ஆரம்பம் 2016-02-19 10:58:10 (ஹம்சப்பிரியா) “வீரர்களின் போர்” என வர்ணிக்கப்படும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரிக்கும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அணியினர் கே.பிரசாந் தலைமையிலும் மகாஜனாக் கல்லூரி அணியினர் கே.பிரணவன் தலைமையிலும் களமிறங்குகின்றனர். 16 ஆவது தடவையாக இப்போட்டி நடைபெறவுள்ள…
-
- 1 reply
- 428 views
-
-
ஒரே கேள்வி என் பதிலை மாற்றாது: ஓய்வு குறித்த கேள்வியால் தோனி எரிச்சல் கொல்கத்தாவில் வங்கதேசம் புறப்படும் முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி. | படம்: பிடிஐ. தோனி செய்தியாளர்கள் சந்திப்புக்கு வந்தாலே அவரிடம் உடனே ஓய்வு பற்றி கேட்கப்படுவது வழக்கமாகி வருகிறது. இந்த முறை கேட்டதற்கு தோனி, ஒரே கேள்வி எனது பதிலை மாற்றாது என்று பதிலடி கொடுத்தார். ஆசியக் கோப்பைத் தொடருக்காக வங்கதேசத்துக்கு அணி புறப்படும் முன்னர் நிருபர்கள் சந்திப்பில் தோனி கூறியதாவது: “நான் ஒரு மாதம் அல்லது 15 நாட்களுக்கு முன்பு ஏதாவது கூறியிருந்தேன் என்றால் எனது பதில் ஒரு போதும் மாறாது. கேள்வி கேட்பவர் எந்த இடத்திலிருந்து இக்கேள்வியைக் கேட்டாலும் என் பதிலில் மாற்றமிரு…
-
- 0 replies
- 386 views
-
-
டிவில்லியர்ஸ், அம்லா அதிரடி, 9 விக்கெட்களால் இங்கிலாந்தை வென்றது தென் ஆபிரிக்கா இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது இருபது 20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 9 விக்கெட்களால் வென்றது. தென் ஆபிரிக்காவின் ஜொஹான்னஸ்பேர்க் நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 171 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 14.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஏ.பி. டிவில்லியர்ஸ் 29 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பெற்றார். ஹஷிம் அ…
-
- 0 replies
- 303 views
-
-
வாக்னர் பவுன்சரில் தலையில் அடிவாங்கி கீழே சரிந்த ஸ்மித் சதமடித்தார்: முன்னிலையை நோக்கி ஆஸி. வாக்னர் பவுன்சரில் பின் தலையில் அடி வாங்கி கீழே சரியும் ஸ்மித். | படம்: ஏ.பி. கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 363 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் பர்ன்ஸ் 170 ரன்களையும், ஸ்மித் 138 ரன்களையும் எடுத்தனர். இருவரும் இணைந்து 289 ரன்களை 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். பவுன்சரில் சாய்ந்த ஸ்மித்: இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் 78 ரன்களில் இருந்த பொது நியூஸிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் பவுன்சரில் பின் தலையில் அடி வாங்கி…
-
- 0 replies
- 326 views
-
-
ஒவ்வொரு பந்தையுமே பவுண்டரிக்கோ சிக்சருக்கோ விரட்ட விரும்பினேன்: பிரெண்டன் மெக்கல்லம் உலகசாதனை அதிரடி சதம். பிரெண்டன் மெக்கல்லம். | படம்: ஏ.பி. விவ் ரிச்சர்ட்ஸ், மிஸ்பா உல் ஹக் ஆகியோரின் அதிவேக டெஸ்ட் சத சாதனையை முறியடித்த மெக்கல்லம், நேற்று ஒவ்வொரு பந்தையுமே 4 ரன்களுக்கோ அல்லது சிக்சருக்கோ அடித்து விரட்டும் ‘மூடில்’ இருந்ததாகத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பசுந்தரை ஆடுகளத்தில் மெக்கல்லம் நேற்று விளாசித்தள்ளினார். ஜோஷ் ஹேசில்வுட் பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசைக்கு மேல் விளாசி சதம் அடித்த மெக்கல்லத்திற்கு சாதனை பற்றி தெரியவில்லை. மைதான ஒலிபெருக்கியில் அறிவித்த பிறகுதான் அவருக்கே தெரிந்துள்ளது. “சாதனை பற்றி …
-
- 0 replies
- 281 views
-
-
இந்துக்களின் சமர் இன்று ஆரம்பம் இந்துக்களின் சமர் என்றழைக்கப்படும் யாழ்.இந்துக்கல்லூரிக்கும், கொழும்பு இந்துக்கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட யாழ். இந்துவின் வீரர்கள். http://www.onlineuthayan.com/sports/?p=9532&cat=3
-
- 12 replies
- 1.4k views
-
-
54 பந்துகளில் சதம்: கடைசி டெஸ்டில் மெக்கல்லம் உலக சாதனை! வெலிங்டன்: வெலிங்டனில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து கேப்டன் மெக்கல்லம் 54 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார். நியூஸிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் தொடங்கியது. வெலிங்டனில் நடந்த முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலிய அணி. அதனால் இந்தப் போட்டியில் டிரா செய்தாலே தொடரை வெல்வதோடு, தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடித்துவிட முடியும். இந்நிலையில் இன்றைய போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தை பேட்டிங் ச…
-
- 0 replies
- 465 views
-
-
முதலாவது இருபதுக்கு20 கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து தோல்வி தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. நேற்று கேப்டவுனில் இடம்பெற்ற இந்த போட்டியில், இங்கிலாந்து முதலில் துடுப்பாடி 134 ஓட்டங்களைப் பெற்றது.இங்கிலாந்து அணிக்காக புட்லேர் 32 ஓட்டங்களை பெற்றார்.தென்னாப்பிரிக்கா சார்பாக இம்ரான் தாஹீர் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார். 135 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய தென்னாப்பிரிக்கா, 20 ஓவர் நிறைவடையும் போது 7 விக்கட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா முன்னிலை…
-
- 0 replies
- 346 views
-
-
கொத்மலை கிண்ண கால்பந்தாட்டத்தில் யாழ் ஹென்றியரசர் சம்பியன்; இறுதிப்போட்டியில் கொழும்பு ஸாஹிராவை வென்றது 2016-02-19 19:04:45 (நெவில் அன்தனி) 19 வயதுக்குட்பட்ட பாடசாலைகள் அணிகளுக்களுக்கிடையிலான கொத்மலை கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் யாழ். இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி சம்பியனாகியுள்ளது. யாழ். இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணிக்கும் கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணிக்கும் இடையிலான கொத்மலை கிண்ண இறுதிப் போட்டி கொழும்பு, குதிரைப் பந்தயத் திடலில் இன்று மாலை நடைபெற்றது. இப்போட்டியில் புனித ஹென்றியரசர் அணி 3:1 கோல்களால் வென்றது. …
-
- 1 reply
- 438 views
-
-
புடினின் படத்துடனான ரி-சர்ட்டால் வெடித்தது சர்ச்சை February 19, 2016 துருக்கியின் இஸ்தான்புல் துருக்கிய கால்பந்து அணிக்கெதிரான போட்டியின்போது, ரஷ்ய கால்பந்து அணி வீரர் ஒருவர் முறையற்ற விதத்தில் நடந்துகொண்டதாக ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போட்டியின் பின்னர் ரஷ்ய வீரர் டிமிட்ரி டாராஸோவ், தனது அணியைக் குறிக்கும் ரி-சர்ட்டை கழற்றி, உள்ளே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் படத்துடன் தான் அணிந்திருந்த ரி-சர்ட்டை காண்பித்துள்ளார். ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையில் பனிப்போர் நடைப்பெற்று வருகின்ற நிலையில், படத்துடன் கூடிய ரி-சர்ட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, ஜ.எஸ் தீவிரவாதிகளுக…
-
- 0 replies
- 461 views
-
-
’’ஓய்வு குறித்து டோனியே முடிவெடுக்க வேண்டும்’’ ரவி சாஸ்திரி February 19, 2016 இந்திய அணித் தலைவர் டோனியின் ஓய்வு குறித்து முடிவெடுக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு என பயிற்சியாளரும் இயக்குனருமான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆசியக் கிண்ணம் மற்றும் 20 ஓவர் உலகக்கிண்ணத்திற்காக இந்திய அணி சிறப்பாக தம்மை தயார்படுத்தி வருவதாக தெரிவித்த ரவி சாஸ்திரி, 6-வது இடத்தில் இருந்து நிலைத்து நின்று ஆடுவது மிக சிரமமான ஒன்று என்றார், ஆனால் அதை சவாலாக ஏற்றுக்கொண்டு திறம்பட ஒருவர் செய்துவருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். சாதனையாளர்களையும் வெற்றிபெற்றவர்களையும் விமர்சிப்பதை விட்டுவிட வேண்டும் என தெரிவித்த அவர், பல ஆண்டுகளாக இந்திய அணியில் 6-வது இடத்தில் நிலைத்த…
-
- 0 replies
- 313 views
-
-
மக்கலத்தின் இறுதிப் போட்டி நாளை நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, நாளை ஆரம்பிக்கவுள்ளது. கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இலங்கை நேரப்படி அதிகாலை 3 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. இந்தப் போட்டி, நியூசிலாந்து அணியின் பிரென்டன் மக்கலத்தின் இறுதி சர்வதேசப் போட்டியாக அமையவுள்ளதால், உணர்வுகள் கலந்த போட்டியாக அமையவுள்ளது. அத்தோடு, இந்தப் போட்டியை வென்றாலோ அல்லது வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்டாலோ, டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாவது இடத்தை, அவுஸ்திரேலிய அணி கைப்பற்றுமென்ற நிலையில், முக்கிய போட்டியாகவும் அமைந்துள்ளது. முதலாவது போட்டியில் வெ…
-
- 0 replies
- 421 views
-
-
அருமை அற்புதம் புங்குடுதீவு தமிழன் கொரியாவில் உலக ஆணழகன் போட்டியில் அங்கம் தர்சன் தியாகராசா என்னும் இலங்கை தமிழன் மிஸ்டர் ஸ்ரீலங்கா தெரிவில் வெற்றி பெற்று தற்போது கொரியாவில் நடைபெற உள்ள உலக ஆணழகன் போட்டியில்பங்கு பற்றவுள்ளார் இவர். புங்குடுதீவு மண்ணின் பரம்பரை சொத்து . யாழ் வெலிங்கடன் திரையரங்கின் முன்னே உள்ள பிரபலமான சைவ உணவகம் முனீஸ்வரகபேயின் உரிமையாளரும் பிரபல சங்கீத வித்துவானும் புங்குடடுதீவு மடத்துவெளியை பிறப்பிடமாகக் கொண்டவருமான கே.வி தம்பு மற்றும் மடத்துவெளி நல்லையா லட்சுமி தம்பதியின் பேரனும் ஆவார் . தியாகராசா தம்பு ,நல்லையா சியாமளா (கனடா ந.தர்மபாலனின் சகோதரி ) ஆகியோர் இந்த திறமை மிக்க இளைஞனின் பெற்றோர் ஆவார் . ஆகியோர் இந்த தி…
-
- 0 replies
- 604 views
-
-
சின்னச் சின்னதாய் செய்திகள்: ‘2024 ஒலிம்பிக்’ 4 நகரம் விருப்பம் பாரிஸ், ரோம், லாஸ் ஏஞ்சல்ஸ், புதாபெஸ்ட் என நான்கு நகரங்கள் 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த ஆர்வம் காட்டியுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. 2024ம் ஆண்டு போட்டியை நடத்தும் நகரத்தை தீர்மானிப்பதற்கான வாக்கெடுப்பு 2017ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி பெருநாட்டின் லிமா நகரில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் விஜேந்தர் போட்டி உலக குத்துச்சண்டை அமைப்பு சார்பில் ஆசிய பட்டத்துக்கான போட்டி இந்தியாவில் வரும் ஜூன் மாதம் நடத்தப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரரான விஜேந்தர் சிங் கலந்துகொள்கிறார். …
-
- 0 replies
- 314 views
-
-
நீச்சல் வீராங்கனைக்கு புற்றுநோய் நெதர்லாந்தை சேர்ந்த பிரபல நீச்சல் வீராங்கனை இக்னே டெக்கர். 30 வயதான இக்னே டெக்கர் ஒலிம்பிக்கில் 4 x 100 மீட்டர் பிரிஸ்டைல் தொடர் நீச்சலில் தங்கம் உள்பட மூன்று பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பிரேசிலில் ஆகஸ்டு மாதம் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தன்னை தயார்படுத்தி வந்த நிலையில், திடீரென கர்ப்பப்பைவாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது ‘இந்த தகவலை அறிந்ததும் அதிர்ந்து போனேன். கடந்த 3 ஆண்டுகளாக பிரேசில் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதில் மட்டுமே எனது சிந்தனை இருந்தது. ஒலிம்பிக்கில் இருந்து விலகுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை’ என்று டெக்கர் கூறியுள்ளார். http://tamil.adaderana.l…
-
- 0 replies
- 361 views
-
-
இலங்கை அணியின் T 20 பாடல் February 18, 2016 இந்தியாவில் டி20 உலகக்கிண்ணத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை வீரர்களை வைத்து டி20 உலகக்கிண்ணப் பாடல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிங்கள பாடலில் சந்திமால், கபுகெடரா, சிறிவர்த்தனே, துஷ்மந்த சமீரா, சனாய்க, டிக்வெல்ல உள்ளிட்ட பல இலங்கை வீரர்கள் நடித்துள்ளனர். http://www.onlineuthayan.com/sports/?p=9475
-
- 0 replies
- 487 views
-
-
ஸ்பானிய கால்பந்து லீகில் 300 கோல்கள்: மெஸ்ஸி சாதனை லயோனல் மெஸ்ஸி. | படம்: கெட்டி இமேஜஸ். ஸ்பானிய கால்பந்து லீகில் முதன் முதலாக 300 கோல்கள் அடித்த சாதனையை அர்ஜெண்டீன நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி நிகழ்த்தியுள்ளார். இதனை தனது 334-வது லா லீகா போட்டியில் நிகழ்த்தினார் மெஸ்ஸி. ஸ்போர்ட்டிங் கிஜோன் அணிக்கு எதிராக பார்சிலோனா அணி பெற்ற 3-1 என்ற கோல் கணக்கிலான வெற்றியில் லயோனல் மெஸ்ஸி இரண்டு கோல்களை திணித்தார். இந்த வெற்றி மூலம் பார்சிலோனா அணி தற்போது 24 போட்டிகளில் 60 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. 2-வது இடத்தில் அத்லெடிகோ மேட்ரிட் அணியும் 3-வது இடத்தில் ரியால் மேட்ரிட் அணியும் உள்ளன. மெஸ்ஸியின் 300-வது கோல்: ஆட்டத்தின் …
-
- 0 replies
- 354 views
-
-
மெஸ்சியை சந்திக்க முடியாமல் ஏமாற்றம் : நேரத்தின் அருமையை பற்றி இந்த சிறுமியிடம் கேளுங்கள்! ஓரிரு வாரங்களுக்கு முன்பு, கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயர் எழுதப்பட்ட ஒரு உடையை அணிந்துகொண்டு ஆப்கானிஸ்தானில் ஒரு சிறுவன் கால்பந்து விளையாடினான். அதைத் தொடர்ந்து, மெஸ்ஸியின் ரசிகனான அச்சிறுவனுக்கு, அவரது பெயர் பதித்த உண்மையான பார்சிலோனா அணியின் உடையும், அவ்வணியிடமிருந்தும், மெஸ்ஸியிடமிருந்தும் இ-மெயில்களும் பறந்தன. அதுமட்டுமின்றி அச்சிறுவனை நேரில் காணப்போவதாக மெஸ்ஸி தெரிவிக்க உலகமே அவரை மெச்சியது. ஆனால் சமீபத்தில், ஒரு 11 வயது ரசிகையை, மெஸ்ஸியை சந்திக்க வைக்க ஒப்புதல் அளித்து, பின்னர் மறுத்து மனமுடைய வைத்துள்ளது பார்சிலோனா கால்பந்து அணி. இங்கிலாந்தின் ஸ்…
-
- 0 replies
- 376 views
-
-
உலகின் அதிவேக யுவதி 17 வயதுடைய கண்டேஸ் 2016-02-18 11:22:08 அமெரிக்கப் பாடசாலை ஒன்றில் கடந்த வருடம் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் அப்போது 16 வயதாக இருந்த கண்டேஸ் ஹில் என்ற யுவதி 100 ஓட்டப் போட்டியை 10.98 செக்கன்களில் ஓடி கனிஷ்ட மட்ட சாதனையை நிலைநாட்டினார். 16 வயது யுவதி ஒருவர் 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 11 செக்கன்களுக்குள் ஓடி முடிப்பதென்பது பெரிய விடயமாகும். அத்துடன் உலகின் அப்போதைய அதிவேக யுவதி (கனிஷ்ட பிரிவு) என்ற உத்தியோகபூர்வ பெருமையையும் கண்டேஸ் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து இவ்வருடம் தொழில்சார் மெய்வல்லுநர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்துள…
-
- 1 reply
- 438 views
-
-
பிரபல கிரிக்கெட் வீரருக்குத் தடை சிம்பாபே கிரிக்கெட் அணியின் 25 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் பிரையன் விடோரி, கடந்த மாதம் பங்களாதேஷூக்கு எதிரான 20க்கு இருபது கிரிக்கெட் போட்டியின் போது பந்தை எறிவதாக சர்ச்சையில் சிக்கினார். இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பந்துவீச்சு பரிசோதனை மையத்தில் அவரது பந்து வீச்சு பரிசோதிக்கப்பட்டது. இதில் விதிமுறைக்கு புறம்பாக, பந்து வீசும் போது அவரது முழங்கை 15 டிகிரி கோணத்திற்கு மேல் வளைவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவருக்கு பந்து வீச தடை விதிக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடோரி, தனது பந்து வீச்சு குறைபாடுகளை சரி செய்த …
-
- 0 replies
- 433 views
-
-
19 வயதின்கீழ் கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் இளவாளை ஹென்றியரசர், கொழும்பு ஸாஹிரா (நெவில் அன்தனி) பாடசாலைகளின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான கொத்மலை கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாடுதற்கு யாழ். இளவாழை புனித ஹென்றியரசர் அணியும் கொழும்பு ஸாஹிரா அணியும் தகுதிபெற்றுள்ளன. இந்த இறுதிப் போட்டி கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் நாளை மறுதினம்வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது. இதற்கு முன்னோடியாக நேற்று நடைபெற்ற அரை இறுதிப் போட்டி ஒன்றில் களுத்துறை, திருச்சிலுவை அணியை சந்தித்த யாழ். ஹென்றியரசர் 8 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் மிக இலகுவாக வெற்றிகொண்டது. போட்டியின் முதலாவது பகுதியில் மிகுந்த சாதுரியத்துடன் வ…
-
- 1 reply
- 523 views
-
-
சிவப்பு அட்டை காட்டிய நடுவர் சுட்டுக்கொலை அர்ஜென்டினாவில் கால்பந்து போட்டி ஒன்றில் சிவப்பு அட்டை காட்டியதால் நடுவரை கால்பந்து வீரர் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜென்டினாவில் உள்ள கோர்டோபா மாகாணத்தில் உள்ளூர் அணிகள் மோதிய கால்பந்து போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் ஒரு வீரர் எதிர் அணி வீரரரிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டதால் அவருக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டி அவரை மைதானத்தை விட்டு வெளியேற்றினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வீரர், தனது காரில் இருந்த பையில் இருந்து துப்பாக்கியை எடுத்துக் கொண்டு மைதானத்தில் இருந்த நடுவரை சரமாரியாக சுட்டுள்ளார். இதில் நடுவரின் தலை, கழுத்து, மார்பு பகுதியில் குண்டு பாய்ந்தது. மேலும்…
-
- 0 replies
- 494 views
-
-
’’முரளிதரன் போல் ஹேரத் ஊக்குவிக்கப்படவில்லை’’ சங்கா February 17, 2016 சுழற்பந்து வீச்சாளராக முரளிதரனுக்கு கிடைத்த அங்கீகாரம் ரங்கன ஹேரத்துக்கு கிடைக்கவில்லை என்று சங்கக்காரா வருத்தம் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் எதிரணியை தனது மாயாஜால சுழற்பந்து வீச்சால் திணறடித்தவர். இதே போன்ற திறமையை தற்போது அணியில் இருக்கும் ரங்கன ஹேரத் கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு கிடைத்த அங்கீகாரம் ஹேரத்துக்கு கிடைக்கவில்லையே என்று சங்கக்காரா கூறியுள்ளார். அவர் கூறுகையில், “எனக்கு 15 வயது இருக்கும் போதில் இருந்தே ஹேரத்தை தெரியும். ஆனால் திறமை இருந்தும் அவரது கிரிக்கெட் பயணம் சற்று கடினமாகவே இருந்தது. 2009ம் ஆண்டு கா…
-
- 0 replies
- 436 views
-
-
வரி ஏய்ப்பு விவகாரம்: பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மரின் சொத்துக்கள் முடக்கம் ஸ்பெயின், மேட்ரிட் கோர்ட்டுக்கு பிப்ரவரி 2-ம் தேதி விசாரணைக்காக வந்த நெய்மர். | படம்: கெட்டி இமேஜஸ். வரி ஏய்ப்பு விவகாரம் தொடர்பாக பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மரின் 50 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய சொத்துக்களை பிரேசில் கோர்ட் முடக்கி உத்தரவிட்டது. அதாவது 2011-2013-ம் ஆண்டிற்கிடையே நெய்மர் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்ந்த வர்த்தகம் தொடர்பாக 63 மில்லியன் ரியால்கள் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து பிரேசில் கோர்ட் ரூ.192 மில்லியன் ரியால்கள் அதாவது சுமார் 50 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துகளை முடக்கி உத்தரவிட்டுள்ள…
-
- 1 reply
- 315 views
-