Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 'சுழல் தமிழன்' அஸ்வின் சாதனை: உலக டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடம் நம்பர் 1 பவுலர், ஆல்ரவுண்டர்: அஸ்வின் சாதனை. | படம்: பிடிஐ. ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு மற்றும் ஆல்ரவுண்டர் தரவரிசைகளில் அஸ்வின் முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். 1973-ம் ஆண்டு பிஷன் பேடி நம்பர் 1 இடத்தைப் பிடித்த பிறகு தற்போது அஸ்வின் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 2015-ம் ஆண்டு 9 டெஸ்ட் போட்டிகளில் 62 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் அஸ்வின். இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளில் 31 விக்கெட்டுகள் அடங்கும். 1973-ம் ஆண்டில் பிஷன் சிங் பேடி நம்பர் 1 இடம் பிடித்த பிறகு இந்திய பவுலர் ஒருவர் நம்பர் 1 இடத்தைப் பிடிப்பது இ…

  2. ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி: பிசிசிஐ விருதுக்கு தேர்வு சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி தேர்வு: படம்: ஏ.பி. மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ், சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக தேர்வு. | படம்: வி.வி.சுப்பிரமணியம். டெஸ்ட் கேப்டன்சியில் புதிய சாதனைகளை நோக்கி முன்னேறி வரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. மகளிர் கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதால…

  3. மீண்டும் சிக்கலில் பிளட்டினி சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தினால் (பீபா) 8 வருடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள மைக்கல் பிளட்டினி, மேலும் சிக்கல்களுக்கு உள்ளாகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத் தலைவரான பிளட்டினி, அனைத்து வகையான கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்தும், டிசெம்பர் 21ஆம் திகதியிலிருந்து தடை செய்யப்பட்டிருந்தார். ஆனால், டுபாய் விளையாட்டுச் சபையினால் டுபாயினால் ஏற்பாடு செய்யப்பட்ட பூகோள கால்பந்தாட்ட விருதுகளில், கடந்த 27ஆம் திகதி, பிளட்டினி கலந்துகொண்டுள்ளார். இந்நிகழ்வில், லியனொல் மெஸ்ஸி, அன்ட்ரியா பிர்லோ ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அங்கு வைத்து, தனது தடை தொடர்பாகவும் …

  4. 2015 ல் அதிக சதம் அடித்து சங்கா சாதனை December 31, 2015 2015 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் குவித்த வீரர்கள் பட்டியலில் இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்ககார முதலிடத்திலுள்ளார். இந்த வருடத்தில் 14 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள சங்ககார 5 சதங்களை அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார். இவருடன் இணந்து வில்லியர்ஸூம் 5 சதங்களை அடித்து முதலிடத்திலுள்ளார். இவர்களுக்கு அடுத்ததாக அம்லா, டில்சான், டெய்லர், குப்தில், ஆகியோர் நான்கு சதங்களை அடித்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர். குமார் சங்ககாரவில் 5 சதங்களுள் 2015 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டியில் அவர் பெற்ற 4 சதங்களும் உள்ளடக்கம். ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 4 சதங்களை பெற்ற சாதன…

  5. பார்சிலோனாவுக்காக 500 போட்டிகளில் பங்கேற்று லயனல் மெஸ்சி சாதனை! பார்சிலோனா அணிக்காக நேற்று தனது 500வது போட்டியில் களமிறங்கினார் லயனல் மெஸ்சி. ஸ்பானீஷ் லீக்கில், ரியல் பெடிஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணிக்காக 425 கோல் அடித்தும் அவர் சாதனை புரிந்தார். பார்சிலோனாவின் கேம்ப்நியூ மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தின் 29வது நிமிடத்தில், ரியல் பெடிஸ் அணி ஒரு சேம்சைட் கோல் அடித்தது. தொடர்ந்து 33-வது நிமிடத்தில் லயனல் மெஸ்சி அட்டகாசமாக ஒரு கோல் அடித்தார். பார்சிலோனா அணிக்காக மெஸ்சி அடிக்கும் 425 -வது கோல் இதுவாகும். தொடர்ந்து சவுரஸ் 46 மற்றும் 83- வது நிமிடத்தில் இரு கோல்கள் அடித்தார். இறுதியில் பார்சிலோனா அணி, 4-0 என்ற கோல் கணக்கில…

  6. டோனியின் வாழ்க்கை செப்ரெம்பரில் ரிலீஸ் December 30, 2015 டோனியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை தலைவரான டோனி, அணிக்கு 2 உலகக்கிண்ணங்களை வென்று கொடுத்தவர். கடந்த ஆண்டு அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டநிலையில், தற்போது ரி-20 மற்றும் ஒருநாள் ஆட்டங்களின் தலைவராக உள்ளார். அவரது வாழ்க்கை வரலாறு பற்றி ‘சொல்ல மறந்த கதை’ என்ற பெயரில் திரைப்படம் ஒன்று தயாராகிறது. நீரஜ் பாண்டே இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த படத்தில் சுவாந்த் சிங் ராஜ்புத் (டோனி), கயாரா அத்வானி (சாக்சி), அனுபம் கெர் (டோனியின் தந்தை) ஆகியோர் நடிக்கின்றனர். ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியு…

  7. கைகுலுக்கல் விவகாரம் கௌதம் கம்பீர் காட்டம் December 30, 2015 இந்தியாவின் உள்ளூர் ஆட்டத்தில் (விஜய் ஹசாரே கிண்ணம்) டெல்லி அணியின் தலைவர் கம்பீர், ஜார்கன்ட் அணியின் வீரரான டோனிக்கு கைகுலுக்க மறுத்ததாக வீடியோ ஒன்று பரவியது. இந்த வீடியோவில் டோனி அனைவருக்கும் கைகுலுக்கும் போது கம்பீர் மட்டும் கைகுலுக்காமல் போவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இதற்கு கம்பீர், டோனியுடன் கைலுக்குவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு முகப்புத்தகத்தில் விளக்கம் அளித்துள்ளார். ‘விஜய் ஹசாரே தொடரின் காலிறுதி ஆட்டத்தில் நானும், டோனியும் கைகுலுக்கி கொண்ட புகைப்படம் இது தான். இந்த கைகுலுக்கல் விவகாரம் மோடி, பாகிஸ்தான் பிரதமர் நாவஸ் செரிப் பேச்சுவார்த்தையை விட பெ…

  8. எனக்கு எதிரான பாரபட்சம்; வெளியிட்டே தீருவேன்: சையத் கிர்மானி பரபரப்பு சையத் கிர்மானி. | படம்: தி இந்து ஆர்கைவ்ஸ். சி.கே.நாயுடு வாழ்நாள் கிரிக்கெட் சாதனை விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி தன் விளையாடிய காலத்தில் தனக்கு எதிராக பாரபட்சம் காட்டப்பட்டதை தனது சுயசரிதை நூலில் வெளிப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார். அதாவது சக வீரர்கள் தனக்கு எதிராக நடந்து கொண்டது பற்றி வெளிப்படுத்தியே தீருவேன், எத்தனை காலம்தான் வாயைத் திறக்காமல் இருப்பது என்று அவர் கேட்டுள்ளார். 2011 உலகக் கோப்பை போட்டிகளின் போது இந்த சுயசரிதை நூலை அவர் வெளியிட இருந்ததாகவும் ஆனால் வெளியிட வேண்டாம் என்று தன்னிடம் கேட்டுக் கொள்ளப…

  9. 2015: 'தி கார்டியன்' சிறந்த டெஸ்ட் அணியில் அஸ்வின் அஸ்வின். | கோப்புப் படம். 2015-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை 'தி கார்டியன்' ஊடகத்தின் கிரிக்கெட் எழுத்தாளர்களான மைக் செல்வே, விக் மார்க்ஸ், ராப் ஸ்மித் உள்ளிட்டோர் தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் ஒரே இந்திய வீரராக அஸ்வின் இடம்பெற்றுள்ளார். இந்த அணிக்கு அலிஸ்டர் குக் கேப்டன். அவர் 2015-ல் 1364 ரன்களை 54.56 என்ற சராசரியில் எடுத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 263 ரன்களை இவர் ஒரு இன்னிங்சில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இவருடன் தொடக்க வீரராக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த ஆண்டு 1,517 ரன்களை 54.87 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இதில் நியூஸிலாந்துக்கு எத…

  10. அனுஷ்காவுடன் கோஹ்லியா??? காதலி அனுஷ்காவுடன் புத்தாண்டு கொண்டாட சுற்றுலா சென்ற கோஹ்லியினால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் மனக்கவலையில் உள்ளனர். அவுஸ்திரேலிய தொடருக்கு தயாராகாமல் தன்னுடைய காதலியுடன் நேரத்தை செலவிட சென்ற விராட் கோஹ்லியினால் இந்திய ரசிகர்கள் கவலைக்கடலில் ஆழ்ந்துள்ளனர். இந்திய அணி அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள், 3 இருபதுக்கு20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவிருக்கிறது. இந்நிலையில் தற்போது டெஸ்ட் அணித்தலைவராக உள்ள கோஹ்லி, ஒருநாள் போட்டிக்கும் விரைவில் தலைவராகும் நிலையில் அவரின் துடுப்பாட்டத்தில் ஓட்ட மழை பொழிய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் விராட் கோஹ்…

  11. 11 ஆண்டுகளில் டிசம்பர் மாதம் மட்டும் ஏன் தோனிக்கு ஸ்பெஷல்? இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் மகேந்திர சிங் தோனிக்கும் டிசம்பர் மாதத்துக்கும் நிறைய நெருக்கம் உண்டு. இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி, டி-20 ஆகிய மூன்றிலும் மகேந்திர சிங் தோனி களமிறங்கியது டிசம்பர் மாதத்தில்தான். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், டிசம்பர் மாதத்தில் இதே 30-ம் தேதியில்தான் ஓய்வை அறிவித்து, கோடிக்கணக்கான தனது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இந்தியா மட்டுமல்ல, உலகின் எல்லா நாடுகளிலும் 30 வயதை கடந்த சீனியர் ஸ்டார் வீரர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர். பிரெண்டன் மெக்கல்லம் தடாலடியாக ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். தற்போதைய நம்ப…

  12. 'கே ' நடுவருக்கு லைசென்ஸ் ரத்து : துருக்கு கால்பந்து சங்கத்துக்கு அபராதம் தன்னை ஹோமோசெக்சுவல் என்று அறிவித்த, கால்பந்து நடுவரின் லைசென்சை ரத்து செய்த துருக்கி கால்பந்து சங்கத்துக்கு 5.32 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. துருக்கி கால்பந்து நடுவரான ஹலிப் இப்ராஹிம் கடந்த 2009ஆம் ஆண்டு தன்னை' ஹோமோசெக்சுவல்' என்று பகிரங்கமாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து துருக்கி கால்பந்து சங்கம் அவரது நடுவர் லைசென்சை ரத்து செய்தது. இதனை எதிர்த்து ஹலில் இப்ராஹிம் இஸ்தான்புல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தனக்கு இழப்பீடாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் துருக்கி லிரா தர வேண்டுமெனவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.நீதிமன்ற விவாதத்தின் போது, துருக்கியில்…

  13. தாவூத் இப்ராஹிமை டிரெஸ்சிங் அறையை விட்டு வெளியேற சொன்ன கபில்தேவ்! கடந்த 1986ஆம் ஆண்டு ஷார்ஜாவில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தியா - பாகிஸ்தான் மோதல் அது. இறுதி ஆட்டத்திற்கு முன்னதாக மும்பை நிழலுக தாதா தாவூத் இப்ராஹிம் இந்திய வீரர்களின் டிரெஸ்சிங் அறைக்குள் வந்தார். அப்போது இவர்தான் தாவூத் இப்ராஹிம் என்று இந்திய அணியின் கேப்டன் கபில்தேவுக்கு தெரியவில்லை. அந்த சமயத்தில் டிரெஸ்சிங் அறைக்குள் தாவூத்தை பார்த்த கபில்தேவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வர, உடனடியாக வீரர்கள் அறையை விட்டு வெளியேறுங்கள் என்று கூறியுள்ளார். கபில்தேவை பார்த்து சிரித்துக் கொண்டே தாவூத் வீரர்கள் அறையை விட்டு வெளியேறி விட்டார். இந்த சம்பவம் குறித்து பின்…

  14. பாக். கிரிக்கெட் அணியின் கேப்டன் ராஜினாமா ஷஹார்யர் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அசார் அலி ராஜினாமா செய்துள்ளார். இருப்பினும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷஹார்யர் கான் கேட்டுக் கொண்டதால் அப்பதவியில் நீடிக்க அவர் ஒப்புக்கொண்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் ஆடவுள்ளது. இதற்காக அந்த அணியினர் தற்போது பயிற்சி பெற்று வருகிறார்கள். சூதாட்ட புகார் காரணமாக 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்த வேகப் பந்து வீச்சாளர் முகமது ஆமிர் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்கிறார். இதற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நில…

  15. விடைபெற்ற சங்கக்காரா.. கதறி அழுத தென்ஆப்பிரிக்கா: 2015ம் ஆண்டின் மறக்க முடியாத 10 கிரிக்கெட் புகைப்படங்கள் கிரிக்கெட்டின் முக்கிய ஆண்டான இந்த 2015ம் ஆண்டு இன்னும் 2 நாட்களுடன் முடிவடைகிறது. இந்த வருடம் கிரிக்கெட்டில் உலகக்கிண்ணம், ஆஷஸ் தொடர், தென் ஆப்பிரிக்காவின் நீண்ட நாள் (72 நாட்கள்) இந்திய சுற்றுப்பயணம், இந்தியாவின் இலங்கை சுற்றுப்பயணம், பகல்- இரவு டெஸ்ட் என பல நிகழ்வுகள் அரங்கேறின. இவற்றில் சில புகைப்படங்கள் மறக்க முடியாதவையாக இருக்கும். அவற்றை பற்றி பார்க்கலாம். 2015ம் ஆண்டின் மறக்க முடியாத 10 புகைப்படங்கள்:- 1) மைக்கேல் கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி உலகக்கிண்ணத்தை வென்றது. …

  16. சந்தேகத்தில் வில்லியர்ஸின் எதிர்காலம் தென்னாபிரிக்க ஒருநாள் சர்வதேசப் போட்டி அணித்தலைவரும், முக்கியமான துடுப்பாட்ட வீரருமான ஏபி டி வில்லியர்ஸ், தனது எதிர்காலம் குறித்த முரண்பாடான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளார். ஏபி டி வில்லியர்ஸூம் டேல் ஸ்டெய்னும் வேர்ணன் பிலாந்தரும், சர்வதேசப் போட்டிகளிலிருந்து விலகவுள்ளதாக, சில செய்திகள் வெளியாகியிருந்தன. தென்னாபிரிக்காவின் நிறக் கொள்கைகளுக்கு எதிராகவே, வில்லியர்ஸூம் ஸ்டெய்னும் விலகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அது தொடர்பில் கேட்கப்பட்டபோது, அதிகளவிலான போட்டிகளில் பங்குபற்றுவதால், அவற்றைக் குறைப்பது பற்றிக் கவனஞ்செலுத்துவதாக, வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ஆனால், ஓய்வுபெறுவத…

  17. கட்டலான் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து : பார்சிலோனாவில் இணைந்த சில மணி நேரத்தில் நீக்கப்பட்ட வீரர்! கட்டலான் மாகாணம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தினை ட்விட்டரில் வெளியிட்ட காரணத்தினால், பார்சிலோனா அணியில் இணைந்த சில மணி நேரத்தில் செர்ஜி கார்டியாலா என்ற கால்பந்து வீரர் அந்த அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ரியல்மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகளுக்கிடையேயான எல்கிளாசிகோ மோதலின் போது, 'ஹாலா மாட்ரிட் 'என்று கடந்த இரு விண்டுகளுக்கு முன் செர்ஜி ட்விட் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் பார்சிலோனா' பி 'அணிக்காக செர்ஜியோ கார்டியாலா ஒப்பந்தம் செய்யப்பட்டர். இதற்கிடையே கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு செர்ஜி கார்டியாலா மாட்ரிட் அணிக்கு ஆதரவாக வெளியிட்ட ட…

  18. கண்ணீருடன் மொகமது ஆமீர் மன்னிப்பு: மனமிளகி ஏற்றுக் கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் மொகமது ஆமீர். | கோப்புப் படம். பாகிஸ்தானுக்கு தான் ஆட தகுதியற்றவன் என்று மற்ற வீர்ர்கள் நினைத்தால் நான் அணியை விட்டு விலகுகிறேன் என்று பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆமீர் உருக்கமாகக் கூறியதையடுத்து அவருக்கு எதிர்ப்பு காட்டிய வீரர்கள் மனமிளகி அவரை ஏற்றுக் கொண்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு களங்கம் கற்பித்தவர் என்ற வகையில் ஆமீர் மீண்டும் ஆட கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறைத் தண்டனையும், தடை உத்தரவையும் பெற்று கடந்து வந்துள்ள திறமை வாய்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொகமத…

    • 1 reply
    • 506 views
  19. கிரிக்கெட் வீரர் ஷஹாதத் ஹுசைனுக்கு எதிராக சித்ரவதை குற்றப் பத்திரிகை தயார் வங்கதேசத்தின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷஹாதத் ஹுசைன் மற்றும் அவர் மனைவி ஜாஸ்மின் ஜஹான் ஆகியோர் தமது வீட்டில் வேலை செய்த பதினொரு வயது சிறுமியை சித்ரவதை செய்ததாக அவர்களுக்கு எதிராக முறைப்படி குற்றப் பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது. இக்குற்றம் உறுதிசெய்யப்படுமானால், இருவருக்கும் ஏழு முதல் பதினான்கு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மஹ்ஃபூஸா அக்தர் என்ற அச்சிறுமி கடந்த செப்டம்பரில், உடலில் பல காயங்களுடனும் கால் உடைந்த நிலையிலும் வீதியில் கைவிடப்பட்டிருந்தார். குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இருவரும் சிறையிலிருந்து இம்மாதத்தின் முற்பகுதியில் பிணையில…

  20. ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றார் மெஸ்ஸி நட்­சத்­திர வீரர் லியனல் மெஸ்ஸி ஆண்டின் சிறந்த கால்­பந்து வீரர் விருதை தன­தாக்­கி­யுள்ளார். குளோப் கால்­பந்து விருது வழங்கும் நிகழ்வு நேற்று துபாயில் நடை­பெற்­றது. இதன்­போது கால்­பந்து வீரர்கள், பயிற்­சி­யா­ளர்கள், துறைசார் சாத­னை­யா­ளர்கள் மற்றும் கழ­கங்கள், ஆகிய பிரி­வு­களில் பிர­கா­சித்­த­வர்­க­ளுக்கு விரு­துகள் வழங்கி கௌர­விக்­கப்­பட்­டி­ருந்­தன. அத­ன­டிப்­ப­டையில் பார்­சி­லோனா கழக அணிக்­காக விளை­யாடி வரும் ஆர்­ஜென்­டீ­னாவைச் சேர்ந்த 28வய­தான நட்­சத்­தி­ர­வீரர் லியனல் மெஸ்ஸி ஆண்டின் சிறந்த கால்­பந்து வீர­ருக்­கான விருதை சுவீ­க­ரித்­துக்­கொண்டார். ஆண்டின் சிறந்த கழ­க­மாக …

  21. விளையாட்டு செய்தித்துளிகள் $ விஜய் ஹஸாரே கோப்பைக்கான இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் 50 ஓவரில் 273 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. பார்த்தீவ் படேல் 105, ருஜூல் பாத் 60 ரன் எடுத்தனர். 274 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி பேட் செய்தது. $ ரியோ ஒலிம்பிக் துப்பாக்கி சூடுதல் போட்டியில் பங்கேற்க ஆசிய அளவிலான தகுதி சுற்றுப்போட்டி ஜனவரி 25ம் தேதி முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பாக். வீரர்கள் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. $ பிரிமியர் பாட்மிண்டன் லீக் தொடர் ஜனவரி 2ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இதன் தொடக்க விழாவில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் நடனமும், சலீம்-சுலைமான் ஆகியோர் இசை நிகழ்ச்ச…

  22. நாட்டை கிரிமினல்கள் வழிநடத்தலாம், ஆமீர் மீண்டும் ஆடக்கூடாதா?: இம்ரான் கேள்வி இம்ரான் கான். | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டு, தண்டனையும் அனுபவித்து திருந்தி வந்த மொகமது ஆமீர் மீண்டும் அணியில் இடம்பெறுவதை எதிர்ப்பது தவறு என்று இம்ரான் கான் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நாட்டின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியவர் அணியில் இடம்பெறுவது கூடாது என்று பாகிஸ்தான் அணியின் மொகமது ஹபீஸ் மற்றும் அசார் அலி எதிர்ப்பு தெரிவித்தனர், பின்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர்களை எச்சரித்தது. இந்நிலையில் இம்ரான் கான் தெரிவிக்கும் போது, “19-வயது வீரர் தவறிழைத்தார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால்…

  23. குப்தில் மனைவியிடம் தவறாக நடந்து கொண்ட ரசிகரால் நேரலை நிகழ்ச்சியில் பரபரப்பு December 28, 2015 இலங்கை- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் மைதானத்தில் ரசிகர் ஒருவரின் செயல் சலசலப்பை ஏற்படுத்தியது. இலங்கை அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் குப்தில், மெக்கல்லம் அதிரடியால் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்கு குப்திலின் மனைவி லாயுராவும் வந்திருந்தார். அவர் நியூசிலாந்தில் ‘ஸ்கை கிரிக்கெட்’ தொலைக்காட்சியில் செய்தியாளராக உள்ளார். அவர் போட்டி தொடர்பாக தொலைக்காட்சிக்கு நேரலையில் பேசிக் கொண்டிருந…

  24. முதல் பத்து இடங்களுக்குள் ஆப்கானிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதற்தடவையாக முதற் பத்து இடங்களுக்குள் ஆப்கானிஸ்தான் அணி நுழைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (25), சிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்தே, பத்தாவது இடத்திலுள்ள சிம்பாப்வேயை ஆப்கானிஸ்தான் பிரதீயீடு செய்துள்ளது. எனினும் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிம்பாப்வேக்கு எதிரான ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆப்கானிஸ்தான் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தரவரிசையில் பத்தாவது இடத்தில் நீடிக்க முடியும். இந்தத் தொடரில் தோல்வியடையும் சந்தர்ப்பத்தில்…

  25. லூயி வன் கால் பதவி விலக எண்ணுகின்றார் ஆங்­கி­லேய ப்றீமியர் லீக் கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் மென்­செஸ்டர் யுனைட்டட் நான்­கா­வது தொடர்ச்­சி­யான தோல்­வியை அடுத்து அவ்­வணி பயிற்­றுநர் லூயி வன் காலின் பதவி கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. தன்னைப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கு முன்னர் தானாக வில­கிக்­கொள்­வது மேல் என வன் கால் தெரி­வித்­துள்ளார். 1989-– 90 கால்­பந்­தாட்டப் பரு­வ­கா­லத்­திற்குப் பின்னர் முதல் தட­வை­யாக மென்­செஸ்டர் யுனைட்டட் மிக மோச­மான பெறு­பே­று­களை சந்­தித்த வரு­கின்­றது. கடந்த ஏழு போட்­டி­களில் அக் கழ­கத்­தினால் ஒரு வெற்­றி­யைத்­தானும் பதிவு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.