Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கட்டலான் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து : பார்சிலோனாவில் இணைந்த சில மணி நேரத்தில் நீக்கப்பட்ட வீரர்! கட்டலான் மாகாணம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தினை ட்விட்டரில் வெளியிட்ட காரணத்தினால், பார்சிலோனா அணியில் இணைந்த சில மணி நேரத்தில் செர்ஜி கார்டியாலா என்ற கால்பந்து வீரர் அந்த அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ரியல்மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகளுக்கிடையேயான எல்கிளாசிகோ மோதலின் போது, 'ஹாலா மாட்ரிட் 'என்று கடந்த இரு விண்டுகளுக்கு முன் செர்ஜி ட்விட் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் பார்சிலோனா' பி 'அணிக்காக செர்ஜியோ கார்டியாலா ஒப்பந்தம் செய்யப்பட்டர். இதற்கிடையே கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு செர்ஜி கார்டியாலா மாட்ரிட் அணிக்கு ஆதரவாக வெளியிட்ட ட…

  2. கண்ணீருடன் மொகமது ஆமீர் மன்னிப்பு: மனமிளகி ஏற்றுக் கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் மொகமது ஆமீர். | கோப்புப் படம். பாகிஸ்தானுக்கு தான் ஆட தகுதியற்றவன் என்று மற்ற வீர்ர்கள் நினைத்தால் நான் அணியை விட்டு விலகுகிறேன் என்று பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆமீர் உருக்கமாகக் கூறியதையடுத்து அவருக்கு எதிர்ப்பு காட்டிய வீரர்கள் மனமிளகி அவரை ஏற்றுக் கொண்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு களங்கம் கற்பித்தவர் என்ற வகையில் ஆமீர் மீண்டும் ஆட கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறைத் தண்டனையும், தடை உத்தரவையும் பெற்று கடந்து வந்துள்ள திறமை வாய்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் மொகமத…

    • 1 reply
    • 504 views
  3. கிரிக்கெட் வீரர் ஷஹாதத் ஹுசைனுக்கு எதிராக சித்ரவதை குற்றப் பத்திரிகை தயார் வங்கதேசத்தின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷஹாதத் ஹுசைன் மற்றும் அவர் மனைவி ஜாஸ்மின் ஜஹான் ஆகியோர் தமது வீட்டில் வேலை செய்த பதினொரு வயது சிறுமியை சித்ரவதை செய்ததாக அவர்களுக்கு எதிராக முறைப்படி குற்றப் பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது. இக்குற்றம் உறுதிசெய்யப்படுமானால், இருவருக்கும் ஏழு முதல் பதினான்கு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மஹ்ஃபூஸா அக்தர் என்ற அச்சிறுமி கடந்த செப்டம்பரில், உடலில் பல காயங்களுடனும் கால் உடைந்த நிலையிலும் வீதியில் கைவிடப்பட்டிருந்தார். குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இருவரும் சிறையிலிருந்து இம்மாதத்தின் முற்பகுதியில் பிணையில…

  4. ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றார் மெஸ்ஸி நட்­சத்­திர வீரர் லியனல் மெஸ்ஸி ஆண்டின் சிறந்த கால்­பந்து வீரர் விருதை தன­தாக்­கி­யுள்ளார். குளோப் கால்­பந்து விருது வழங்கும் நிகழ்வு நேற்று துபாயில் நடை­பெற்­றது. இதன்­போது கால்­பந்து வீரர்கள், பயிற்­சி­யா­ளர்கள், துறைசார் சாத­னை­யா­ளர்கள் மற்றும் கழ­கங்கள், ஆகிய பிரி­வு­களில் பிர­கா­சித்­த­வர்­க­ளுக்கு விரு­துகள் வழங்கி கௌர­விக்­கப்­பட்­டி­ருந்­தன. அத­ன­டிப்­ப­டையில் பார்­சி­லோனா கழக அணிக்­காக விளை­யாடி வரும் ஆர்­ஜென்­டீ­னாவைச் சேர்ந்த 28வய­தான நட்­சத்­தி­ர­வீரர் லியனல் மெஸ்ஸி ஆண்டின் சிறந்த கால்­பந்து வீர­ருக்­கான விருதை சுவீ­க­ரித்­துக்­கொண்டார். ஆண்டின் சிறந்த கழ­க­மாக …

  5. விளையாட்டு செய்தித்துளிகள் $ விஜய் ஹஸாரே கோப்பைக்கான இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் 50 ஓவரில் 273 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. பார்த்தீவ் படேல் 105, ருஜூல் பாத் 60 ரன் எடுத்தனர். 274 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி பேட் செய்தது. $ ரியோ ஒலிம்பிக் துப்பாக்கி சூடுதல் போட்டியில் பங்கேற்க ஆசிய அளவிலான தகுதி சுற்றுப்போட்டி ஜனவரி 25ம் தேதி முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பாக். வீரர்கள் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. $ பிரிமியர் பாட்மிண்டன் லீக் தொடர் ஜனவரி 2ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இதன் தொடக்க விழாவில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் நடனமும், சலீம்-சுலைமான் ஆகியோர் இசை நிகழ்ச்ச…

  6. நாட்டை கிரிமினல்கள் வழிநடத்தலாம், ஆமீர் மீண்டும் ஆடக்கூடாதா?: இம்ரான் கேள்வி இம்ரான் கான். | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டு, தண்டனையும் அனுபவித்து திருந்தி வந்த மொகமது ஆமீர் மீண்டும் அணியில் இடம்பெறுவதை எதிர்ப்பது தவறு என்று இம்ரான் கான் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நாட்டின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியவர் அணியில் இடம்பெறுவது கூடாது என்று பாகிஸ்தான் அணியின் மொகமது ஹபீஸ் மற்றும் அசார் அலி எதிர்ப்பு தெரிவித்தனர், பின்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர்களை எச்சரித்தது. இந்நிலையில் இம்ரான் கான் தெரிவிக்கும் போது, “19-வயது வீரர் தவறிழைத்தார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால்…

  7. குப்தில் மனைவியிடம் தவறாக நடந்து கொண்ட ரசிகரால் நேரலை நிகழ்ச்சியில் பரபரப்பு December 28, 2015 இலங்கை- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் மைதானத்தில் ரசிகர் ஒருவரின் செயல் சலசலப்பை ஏற்படுத்தியது. இலங்கை அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் குப்தில், மெக்கல்லம் அதிரடியால் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்கு குப்திலின் மனைவி லாயுராவும் வந்திருந்தார். அவர் நியூசிலாந்தில் ‘ஸ்கை கிரிக்கெட்’ தொலைக்காட்சியில் செய்தியாளராக உள்ளார். அவர் போட்டி தொடர்பாக தொலைக்காட்சிக்கு நேரலையில் பேசிக் கொண்டிருந…

  8. முதல் பத்து இடங்களுக்குள் ஆப்கானிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதற்தடவையாக முதற் பத்து இடங்களுக்குள் ஆப்கானிஸ்தான் அணி நுழைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (25), சிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்தே, பத்தாவது இடத்திலுள்ள சிம்பாப்வேயை ஆப்கானிஸ்தான் பிரதீயீடு செய்துள்ளது. எனினும் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிம்பாப்வேக்கு எதிரான ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆப்கானிஸ்தான் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தரவரிசையில் பத்தாவது இடத்தில் நீடிக்க முடியும். இந்தத் தொடரில் தோல்வியடையும் சந்தர்ப்பத்தில்…

  9. லூயி வன் கால் பதவி விலக எண்ணுகின்றார் ஆங்­கி­லேய ப்றீமியர் லீக் கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் மென்­செஸ்டர் யுனைட்டட் நான்­கா­வது தொடர்ச்­சி­யான தோல்­வியை அடுத்து அவ்­வணி பயிற்­றுநர் லூயி வன் காலின் பதவி கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. தன்னைப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கு முன்னர் தானாக வில­கிக்­கொள்­வது மேல் என வன் கால் தெரி­வித்­துள்ளார். 1989-– 90 கால்­பந்­தாட்டப் பரு­வ­கா­லத்­திற்குப் பின்னர் முதல் தட­வை­யாக மென்­செஸ்டர் யுனைட்டட் மிக மோச­மான பெறு­பே­று­களை சந்­தித்த வரு­கின்­றது. கடந்த ஏழு போட்­டி­களில் அக் கழ­கத்­தினால் ஒரு வெற்­றி­யைத்­தானும் பதிவு…

  10. தொடர்ந்து சுட்டுக் கொல்லப்படும் கால்பந்து வீரர்கள்! எல்சல்வாடார் அணிக்காக 83 சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடியுள்ள அல்ஃபிரடோ பாச்சிகோ அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். தலைநகர் சான் சல்வாடர் பகுதியில் இருந்து 76 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, சாந்தா அனா என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அல்ஃபிரேடோவுடன் இந்த சம்பவம் நடந்த போது இரு நண்பர்களும் இருந்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை. எல்சல்வாடார் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் வரை 6 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாச்சிகோ எல்சல்வாடார் அணிக்காக 83 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த நாட்டு அணிக்க…

  11. இலங்கையணி கடந்த சில நாட்களாக நியுசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவருவது அறிந்ததே. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கள் ஆகியவற்றில் விளையாடும் இலங்கையணி எதிர்பார்க்கப்பட்டதுபோலவே டெஸ்ட் போட்டிகளில் அவமானகரமான தோல்விகளைச் சந்தித்து இருந்தது குறிப்பிடத் தக்கது. அணியின் தலைவர் ஆஞ்சலோ மத்தியூஸ், சண்டிமால், ஆரம்பத் துடுப்பாட்டக் காரர் கருணாரட்ண ஆகியோரைத் தவிர சிறிது கூட அனுபவம் இல்லாத துடுப்பட்டக்ல் காரர்களையும், வழமைபோல சொதப்பும் பந்துவீச்சாளர்களையும் அள்ளிக் கட்டிக் கொண்டு இலங்கையணி நியுசிலாந்துக்குப் புறப்படும்போதே சர்வதேச கிரிக்கெட் வர்ணணையாளர்கள், இவர்களுக்கு ஏன் இந்த வேலை, பேசாமல் வீட்டில் இருக்கலமே என்று கேட்காத குறையாக விமர்சித்திருந்…

    • 5 replies
    • 792 views
  12. அமீர் ஒரு தேச துரோகி... பயிற்சியிலிருந்து வெளியேறிய பாக் வீரர்கள்! சூதாட்டப் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் இளம் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் ஒரு தேசத் துரோகி என்று கூறி அவரோடு சேர்ந்து பயிற்சி செய்ய அவ்வணியின் கேப்டன் அசார் அலியும், ஆல் ரவுண்டர் முகமது ஹபீசும் பயிற்சியிலிருந்து வெளியேறினர். பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவர் சகாரியார் கான் இவ்விஷயத்தில் தலையிட்டு இரு வீரர்களையும் சமாதானம் செய்துள்ளதையடுத்து இரண்டு வீரர்களும் மீண்டும் பயிற்சிக்கு திரும்ப உள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் முகமது அமீர். 2009-ம் ஆண்டு, தனது 17 வயதிலேயே பாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடினார். தனது அதிவேக பந்துவீச்…

  13. ஊக்கமருந்து: பாக். கிரிக்கெட் வீரர் யாஸிர் ஷா இடைநீக்கம் யாஸிர் ஷா ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யாஸிர் ஷாவை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது. பந்துவீச்சாளர் யாஸிர் ஷாவின் உடலில் தடைசெய்யப்பட்ட குளோர்தாலிடோன் (chlorthalidone) எனப்படும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து இருந்துள்ளது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊடக அறிக்கை கூறுகின்றது. முழுமையான விசாரணைகள் முடியும் வரை வேறு தகவல்கள் எதுவும் வெளியாகாது என்று கூறப்பட்டுள்ளது. யாஸிர் ஷாவிடமிருந்து இது தொடர்பில் விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. 29 வயதான யாஸிர் ஷா கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்…

  14. FIFA முன்னாள் துணைத்தலைவர் யூஜினியோ சிறையில் December 27, 2015 சுவிஸர்லாந்திலிருந்து உருகுவேக்கு நாடுகடத்தப்பட்ட முன்னாள் துணைத்தலைவர் யூஜினியோ ஃபெகரெய்டோ உருகுவேயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பிபா ஊழல் குற்றச்சாட்டில் கடந்த மே மாதம் சுவிஸர்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் துணைத்தலைவர் யூஜினியோ விசாரணைகளுக்காக நேற்று (வியாழக்கிழமை) உருகுவேக்கு நாடு கடத்தப்பட்டார். இந்நிலையில் உருகுவேயை வந்திறங்கிய யூஜினியோ நேரடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்தும் காவலில் வைப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. யூஜினியோ ஃபெகரெய்டோ கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2006 ஆ…

  15. $100 மில்லியன் பரிசு பெறப்போகும் முதல் வீரர் யார் December 27, 2015 டென்னிஸ் போட்டிகளில் அதிக அளவு பணம் பரிசாக பெறும் வீரர்களில் முதல் இரண்டு இடங்களுக்கு சுவிஸ்ட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெடரர் மற்றும் செர்பியாவின் ஜோகோவிக் ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவி வருகின்றது. 17 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள பெடரர் இதுவரை பரிசு மூலம் 97.3 மில்லியன் டொலர் பணம் சம்பாதித்துள்ளார். அதே போல், கடந்த ஆண்டு மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் செர்பியாவின் ஜோகோவிக், 94 மில்லியன் டொலர்கள் சம்பாதித்துள்ளார். இந் நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள கிராண்ட் ஸ்லாம் போட்டியின் வெற்றிய…

  16. கின்னஸ் சாதனை படைத்த கிரிக்கெட் வீரர் December 27, 2015 இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் வீரரான விராக் மேர் தொடர்ந்து 50 மணி நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிரா லத்துரை சேர்ந்த விராக் மேர், கர்வே நகரில் உள்ள மகாலட்சுமி மைதானத்தில் கடந்த 22ம் திகதி காலை 9.30 மணிக்கு தனது பயிற்சியை ஆரம்பித்தார். இடைவிடாமல் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட அவர் டிசம்பர் 24ம் திகதி காலை 9.30 மணி வரை துடுப்பெடுத்தாடினார். 48 மணி நேரம் பயிற்சி செய்த அவர் கூடுதலாக 2 மணி நேரம் பயிற்சி செய்து பயிற்சிக்காலத்தை 50 மணி நேரமாக நீட்டித்துள்ளார். ஐந்து மணி நேரம் இடைவிடா பயிற்சிக்கிடையில் 25 நிமிடங்கள் ஓய்வு எடுத்துள்ளார். மொத்தாக அவர் 50 மணி நேரம், …

  17. இந்த வருடத்தில் 1700 கோடிகள் சம்பாதித்த பெக்காம் December 27, 2015 இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் தலைவரான டேவிட் பெக்காமும் அவரது மனைவியும் இணைந்து இந்த வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1700 கோடிகளை சம்பாதித்துள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது. பெக்காம் இங்கிலாந்து அணிக்காக விளையாடும் போது உலக அளவில் புகழ் பெற்றவர். குறிப்பாக தனது சிகை அலங்காரத்தின் மூலம் உலகின் கால்பந்து ரசிகர்களை கவர்ந்தவர். ஓய்வுபெற்ற பின்னரும் பெக்காமுக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள ஆதரவு நீங்கவில்லை. கால்பந்தாட்டத்தில் சம்பாதித்த பணத்தின் மூலம் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். அத்துடன் விளம்பரம் மூலமும் சம்பாதித்து வருகிறார். அவரது மனைவி விக்டோரியா பெஷன் டிசைனராக உள்ளார்…

  18. சிக்ஸர் சிங்கம்! ஆபிரகாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ்... உலகம் முழுக்க கிரிக்கெட் மைதானங்களில் சிக்ஸர், பௌண்டரிகளால் அதிர்வேட்டுகள் நிகழ்த்தும் அதிரடி நாயகன். ஒருநாள் கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து உலகம் முழுக்க ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் என எல்லோரது லைக்ஸையும் அள்ளியிருக்கிறார் டி வில்லியர்ஸ். 16 பந்து களில் 50 ரன், 31 பந்துகளில் சதம், 64 பந்துகளில் 150 ரன் என அனைத்து வேகமான சாதனைச் சதங்களும் இவர் வசம். 2004-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 21 வயது இளைஞனாக தென்ஆப்பிரிக்க அணிக்குள் நுழைந்தார் ஏ.பி.டி வில்லியர்ஸ். எல்லா சாதனை மன்னர்களையும்போல இவரும் தோல்வியுடன் தொடங…

  19. தர­வ­ரி­சையில் முன்­னே­று­வ­தற்­கான தொடரில் இலங்­கையும் நியூஸிலாந்தும் மோது­கின்­றன 2015-12-25 12:42:12 சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் முன்னேறும் நோக்குடன் நியூஸிலாந்தும் இலங்கையும் ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோத தயாராகின்றன. இந்தத் தொடரின் முதலாவது போட்டி கிறைஸ்ட்சேர்ச் விளையாட்டரங்கில் நாளை நடைபெறவுள்ளது. மெல்பர்னில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதி ஆட்டம்வரை முன்னேறி உலக சம்பியன் அவுஸ்திரேலியாவிடம் சரணடைந்த நியூஸிலாந்து, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நான்காம் இடத்தில் இருக்கின்றது. இந்தத் தொடரில் 4 :…

  20.  பொக்ஸிங் டே கொண்டாட்டம்: நாளை நான்கு போட்டிகள் கிறிஸ்மஸ் தினத்துக்கு மறுநாளான 'பொக்ஸிங் டே"இல், கிரிக்கெட் போட்டிகளும் களைகட்டவுள்ளன. நான்கு போட்டிகள், நாளை ஆரம்பிக்கவுள்ளன. இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டி, இலங்கை நேரப்படி அதிகாலை 3.30க்கு ஆரம்பிக்கவுள்ளது. இப்போட்டி, கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெறவுள்ளது. டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த இலங்கை அணி, உலகக் கிண்ணப் போட்டிகளில் இரண்டாமிடத்தைப் பெற்ற நியூசிலாந்தை, அந்நாட்டில் வைத்துச் சந்திப்பதால், வெற்றிபெறுவதற்கு, அதிகமாகப் போராடி வேண்டியிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால…

  21. குசாலுக்கு நான்கு வருடத் தடை: அமைச்சர் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான குசால் ஜனித் பெரேராவுக்கு, சர்வதேச கிரிக்கெட் சபையால் நான்கு வருடத் தடை விதிக்கப்பட்டுள்ள, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எனினும், சர்வதேச கிரிக்கெட் சபையால் இதுவரை, இது உறுதிப்படுத்தப்படவில்லை. தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தியிருந்தார் என, முதலாவது பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த அவர், நியூசிலாந்துத் தொடரிலிருந்து மீள அழைக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, இரண்டாவது மாதிரிப் (பி மாதிரி) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையிலேயே கருத்துத் தெரிவித்துள…

  22. 2002ஆம் ஆண்டில் பிளட்டரை விசாரிக்க மறுத்த சுவிஸ் அதிகாரிகள் கால்பந்தாட்டத்திலிருந்து 8 வருடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (பீபா) முன்னாள் தலைவர் செப் பிளட்டருக்கு எதிராக, ஆதாரங்களுடன் கூடிய முறைப்பாடு, 2002ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட போதிலும், அதை விசாரிப்பதற்கு, சுவிற்ஸர்லாந்தின் அரச வழக்குரைஞர் மறுத்துவிட்டதாக, வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பீபா-வின் அப்போதைய பொதுச் செயலாளரான மைக்கல் ஸென் றுபினென், ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பாக, செப் பிளட்டருக்கெதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அத்தோடு, பீபா-வின் நிறைவேற்றுச் செயற்குழுவின் 24 பேரில் 11 பேர், பிளட்டருக்கெதிராகக் குற்றவ…

  23. சையத் கிர்மானிக்கு கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருது சையத் கிர்மானி. | 1991-ம் ஆண்டு இந்து ஆர்கைவ்ஸ் படம். 2015-ம் ஆண்டுக்கான சிகே.நாயுடு கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சையத் கிர்மானி ரூ.25 லட்சம் பெறுவார். 88 டெஸ்ட் போட்டிகளை ஆடியுள்ள சையத் கிர்மானி 198 விக்கெட்டுகளுக்குக் காரணமாகியுள்ளார். இதில் 160 கேட்ச்கள் 38 ஸ்டம்பிங்குகள். உலக கிரிக்கெட்டின் பெரிய பேட்ஸ்மென்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த பிரசன்னா, பேடி, சந்திரசேகர், வெங்கட்ராகவன் ஆகிய 4 ஸ்பின்னர்கள் கோலோச்சிய காலத்தில் சையத் கிர்மானி அபா…

  24. சர்­வ­தேச டென்னிஸ் சம்­மே­ளன சம்­பி­யன்­க­ளாக இவ்­வ­ருடம் ஜோகோவிச், செரீனா தெரிவு இவ் வருடம் தலா மூன்று மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) சம்­பியன் பட்­டங்­களை வென்­றெ­டுத்த நொவாக் ஜோகோவிச், செரீனா வில்­லியம்ஸ் ஆகிய இரு­வரும் வரு­டத்தின் டென்னிஸ் சம்­பி­யன்­க­ளாக சர்­வ­தேச டென்னிஸ் சம்­மே­ள­னத்­தினால் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர். இவ்­வி­ரு­வரும் இரண்­டா­வது தொடர்ச்­சி­யான வரு­ட­மாக இவ் விருதை வென்­றுள்­ளனர். ஜோகோவிச் இவ் வருடம் அவுஸ்­தி­ரே­லிய பகி­ரங்க டென்னிஸ், விம்­பிள்டன், ஐக்­கிய அமெ­ரிக்க டென்னிஸ் ஆகிய மாபெரும் டென்னிஸ் சம்­பியன் பட்­டங்­க­ளுடன் மொத்­த­மாக 11 சம்­பியன் பட்­டங்­கள…

  25. ஆசிய கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஸ்டெம்பிங் செய்த டோனி December 24, 2015 விஜய் ஹசாரே டிராபி போட்டியில் விளையாடி வந்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். நேற்று பெங்களூரில் விஜய் ஹசாரே டிராபியின் 2வது காலிறுதிப் போட்டியில் டெல்லி- ஜார்க்கண்ட் அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் டோனி 70 ஓட்டங்கள் எடுத்தும் ஜார்க்கண்ட் அணி தோல்வியைத் தழுவியது. இருப்பினும் இந்தப் போட்டியில் டோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டெல்லி அணியின் ஷிகர் தவானை விக்கெட் கீப்பரான டோனி 27 ஓட்டங்களில் ஸ்டெம்பிங் செய்து ஆட்டமிழக்க செய்தார். இதன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.