Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 50 ஆண்டுகளின் மிகச் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் பட்டியல்: லஷ்மணின் 281 ரன்களுக்கு முதலிடம் 50 ஆண்டுகளின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் பட்டியலில் லஷ்மணின் 281-க்கு முதலிடம்.| கோப்புப் படம். கடந்த 50 ஆண்டுகளின் மிகச்சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லஷ்மண் எடுத்த 281 ரன்கள் முதலிடம் வகித்துள்ளது. 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் ஃபாலோ ஆன் ஆடிய இந்திய அணிக்காக 281 ரன்கள் எடுத்த லஷ்மணின் இந்த இன்னிங்ஸ் கடந்த 50 ஆண்டுகளின் மிகச்சிறந்த இன்னிங்ஸாக ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போவின் கிரிக்கெட் மன்த்லி இதழ் தேர்ந்தெடுத்துள்ளது. கிரிக்கெட் மன்த்லி இதழுக்காக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் எழுத்தாளர்க…

  2. சல்யூட் சார்... பதான்கோட் மோதலில் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வீரர் வீர மரணம் ! பதான்கோட் விமானப்படைத் தளத்தில் ஜெய்ஸ்- இ - முகமது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் பதிலடியில் விமானப்படைத் தளத்துக்குள் நுழைந்த 5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் , 7 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். அதில் காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற பதேக் சிங்கும் ஒருவர். கடந்த 1995ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றவர். அந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடும் அணியில் மூத்த வீ…

  3. தெற்காசிய கால்பந்து : ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்! தெற்காசிய கால்பந்து போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. திருவனந்தபுரத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நடப்பு சாம்பியன் ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதியது. முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. பிற்பாதியில் 70வது நிமிடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் சுபையர் அமிரி முதல் கோல் அடித்தார். இந்த கோலுக்கு அடுத்த 2வது நிமிடத்தில் இந்தியா பதிலடி கொடுத்தது. ஜெஜே லால்பெகுலா இந்த கோலை அடித்தார். நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்ததால் வெற்றியை தீர்மானிக்க கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் இ…

  4. அதிகாரப் போட்டியால் அவதியுறுகிறது கிரிக்கெட் இலங்கை கிரிக்கெட் சபைக்குள் காணப்படும் அதிகாரப் போட்டியின் காரணமாக,, இலங்கையின் கிரிக்கெட், அவதியுறுவதாக, இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் முன்னாள் வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநருமான சமிந்த வாஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் தோன்றிய மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராகக் கருதப்படும் சமிந்த வாஸ், கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், 2012ஆம் ஆண்டில், நியூசிலாந்து அணியின் இலங்கைக்கான சுற்றுலாவுக்கான வேகப்பந்து வீச்சுப் பயிற்றுநராகச் செயற்பட்டார். அந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள், மிகச்சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்த, 2013ஆம் ஆண்டில், இலங்கையின் வேகப்…

  5. ஆஸியின் சார்பாக 1000 சதங்கள் December 27, 2015 ஆஸ்திரேலியா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் நேற்று மெல்பேர்ணில் ஆரம்பமாகியது. முதலில் துடுப்பெடுத்தாடிவரும் ஆஸ்திரேலியா சார்பாக பேர்ண்ஸ், கவாயா இருவரும் சதம் அடித்தனர். இதன்மூலம் பல்வேறு சாதனைகளை இவர்கள் படைத்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் முதல் மூன்று வீரர்கள் இந்த ஆண்டில் மட்டும் 14 சதங்களை விளாசியுள்ளனர். இதற்கு முன் 2003ஆம் ஆண்டு இதேபோல் 14 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த வருடம் இல்லாத அளவிற்கு இந்த வருடம் 4020 ஓட்டங்களைக் குவித்துள்ளனர். கவாஜா கடைசி நான்கு இன்னிங்சில் 448 ஓட்டங்களைக் குவித்துள்ளார். சராசரி 149.33 ஆகும். அதற்கு முன்னர் 17 இன்னிங்சில் 377 ஓட்டங்கள…

  6. இங்கிலாந்து ஹவுண்டி அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ திடீர் மரணம்! இங்கிலாந்து சசெக்ஸ் கவுண்டி அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேத்யூவின் திடீர் மரணம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சகெக்ஸ் அணியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல்தர போட்டியில் அறிமுகமான மேத்யூ ஹாப்டன், அந்த அணிக்காக நடைபெற்ற 3 வகை போட்டிகளில் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள…

  7.  இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக திலங்க தெரிவு இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக, நாடாளுன்ற உறுப்பினரும் பிரதி சபாநாயகருமான திலங்க சுமதிபால தெரிவுசெய்யப்பட்டுள்ளார். திலங்க சுமதிபால 88 வாக்குகளை பெற்றுள்ளதுடன் நிஷாந்த ரணதுங்க 56 வாக்குகளைப் பெற்றுள்ளார். உதவித் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட்டவர்களில், 102 வாக்குகளைப் பெற்ற ஜயந்த தர்மதாசவும் 90 வாக்குகளைப் பெற்ற கே. மதிவாணனும் வெற்றிபெற்றனர். துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரும், 1996ஆம் ஆண்டு இலங்கைக்கு உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்த தலைவருமான அர்ஜுன ரணதுங்க, 80 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். செயலாளராக மொ…

  8. தமிழக பெண்ணுக்கு அங்கீகாரம் : சர்வதேச கால்பந்து நடுவராக ரூபாவை தேர்வு செய்த பிஃபா! தமிழகத்தின் சங்கருக்கு பிறகு சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராக பணியாற்ற ரூபாதேவி என்ற கால்பந்து வீராங்கனைக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிஃபா லைசென்ஸ் வழங்கியுள்ளது. தமிழகத்தில் கால்பந்து விளையாட்டில் திண்டுக்கல் வீராங்கனைகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ருபாதேவி தற்போது பிஃபா நடுவராக தேர்வாகியுள்ளார். தற்போது 25 வயதான ரூபாதேவி , பிஎஸ்சி வேதியியல் மற்றும் உடற்கல்வி ஆசிரியருக்கான படிப்புகளை படித்துள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணி மற்றும் திண்டுக்கல் கால்பந்துக் கழக அணிக்காக விளையாடியவர். தமிழக மற்றும் இ…

  9. சனத்தின் சாதனையை முறியடித்தார் டில்ஷான் January 02, 2016 நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் அதிரடி தொடக்க வீரர் டில்ஷான் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். நெல்சனில் இன்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இதில் டில்ஷான் 91 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் மூலம் இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் கடந்த 2001ம் ஆண்டு சனத் ஜெயசூரியா எடுத்த 1202 ஓட்டங்களே சாதனையாக இருந்தது. இவர் 33 இன்னிங்சில் இந்த ஓட்டங்களை எடுத்தார். ஆனால் டில்ஷான் 24 இன்னிங்சிலே 1207 ஓட்டங்கள் எடுத்து அவ…

  10. கிரிக்கெட் உலகில் பந்து பறித்த முதல் இந்திய உயிர்: ராமன் லம்பா பற்றிய சில தகவல்கள்! இந்திய கிரிக்கெட் உலகை அதிர வைத்த இந்த துர் சம்பவம் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி நிகழ்ந்தது. மிகச்சிறந்த பீல்டரான ராமன் லம்பாவிடம் ஒரு கெட்ட பழக்கமும் இருந்தது. அதாவது பேட்ஸ்மேனுக்கு வெகு அருகில், ஹெல்மெட் போடாமல் பீல்டிங் செய்யும் அந்த பழக்கம்தான் அவரது உயிரையும் பறித்தது. டாக்காவில், அபாகானி கிரிரா சக்ரா அணிக்காக ராமன் லம்பா விளையாடி வந்தார். வங்க தேச பிரீமியர் டிவிஷன் இறுதி ஆட்டத்தில், முகமதன் ஸ்போர்ட்டிங் அணியுடன் ராமன் லம்பாவின் அணி மோதியது. முகமதன் ஸ்போர்ட்டிங் பேட்ஸ்மேன், மெக்ராப் ஹொசைன் அடித்த பந்து, ஃபார்வட் லெக் திசையில் நின்றிருந்த ராமன் …

  11. ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக வருவாய் ஈட்டும் வீரர் கோலி விராட் கோலி. | கோப்புப் படம்: கே.ஆர்.தீபக். ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக வருவாய் ஈட்டும் வீரர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக திகழும் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி ஆவார். இதனை ஐபிஎல் லீக் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. ரூ.12.5 கோடிக்குத்தான் விராட் கோலியின் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் ராயல் சாலஞ்சர்ஸ் அணி உரிமைதாரர் கோலிக்கு கொடுக்கும் தொகையோ ரூ.15 கோடி. அதே போல் கிறிஸ் கெய்லுக்காக செலவிடப்பட்ட ரூ.7 கோடியே 50 லட்சத்தைக் காட்டிலும் கூடுதலான தொகையாக அவருக்கு ரூ.8 கோடியே 40 லட்சம் கொடுக்கிறது. தோனிதான் ஐபிஎல் கிரிக்கெட்டில் செலவு மிக்க வீரர் என்று ந…

  12. ஐபிஎல் 2016: அணிகளிலிருந்து யுவராஜ், மேத்யூஸ், கார்த்திக், சேவாக் விடுவிப்பு கோப்புப் படம். யுவராஜ் சிங், ஆஞ்சேலோ மேத்யூஸ், தினேஷ் கார்த்திக், டேல் ஸ்டெய்ன், கெவின் பீட்டர்சன், இசாந்த் சர்மா, சேவாக் உள்ளிட்ட வீரர்களை சம்பந்தப்பட்ட ஐபிஎல் உரிமையாளர்கள் தங்கள் அணியிலிருந்து விடுவித்துள்ளனர். இதனால் இந்த வீரர்கள் வரும் ஏலத்தில் திரும்பவும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளனர். ஐபில் கிரிக்கெட்டின் 6 அணிகள் மொத்தம் 101 வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டு 61 வீரர்களை தங்கள் அணியிலிருந்து விடுவித்துள்ளது. அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்கள் முழு விவரம்: டெல்லி டேர் டெவில்ஸ் தக்கவைக்கபட்ட வீரர்கள்: அமித் மிஸ்ரா, ஜெ…

  13. நாடு நாடாக போய் வதம் செய்தவர்கள் வதம் செய்யப்படுகிறார்கள்! டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணியும் உள்நாட்டிலேயே உதை வாங்கி¢க் கொண்டிருக்க, தொடர்ந்து 9 ஆண்டுகளாக அனைத்து அணிகளையும் அந்தந்த நாடுகளின் சொந்த மண்ணிலேயே சென்று வதம் செய்வது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வழக்கம். அப்படிப்பட்ட அணிக்கு கடந்த ஆண்டு மிகப்பெரிய பின்னடைவாய் அமைந்துவிட்டது. ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் தென்ஆப்ரிக்க அணிக்கு கடந்த ஆண்டில் செம அடி£தான். இந்த ஆண்டு, தென்ஆப்ரிக்க அணி விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. நான்கு போட்டுகளில் அந்த அணி படுதோல்வி கண்டுள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் மேற்கிந்திய…

  14. பதிவுகள் 2015: திறமையால் தெறிக்கவிட்டு தேசத்துக்குப் பெருமை சேர்த்த சானியா சானியா- ஹிங்கிஸ் பெண்கள் இரட்டையர் போட்டியில் மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து பெற்ற விம்பிள்டன் கோப்பை, அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்; விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது; இந்திய கிரிக்கெட் கிளப்பில் (சிசிஐ) வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்து; சர்வதேச டென்னிஸ் சங்கத்தின் 2015-ம் ஆண்டின் சிறந்த ஜோடியாக சானியா மிர்சா- மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி தேர்வு. இவை அனைத்தும் 2015-ம் ஆண்டில் டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சா வசமாகி இருக்கிறது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் கலப்பு இரட்டையர், மகளிர் …

    • 3 replies
    • 690 views
  15. 2015 அரச அதிபர் வெற்றிக்கிண்ணம்: யாழ். மாவட்ட செயலக அணியினர் வசம் யாழ். மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்வருடத்திற்கான அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்தினை யாழ். மாவட்ட செயலக அணியினர் தனதாக்கிக் கொண்டனர். நேற்று முன்தினம் வேலணை மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இறுதி நிகழ்வுகளும், வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றதுடன் புலமைப்பரிசிலில் சிறப்பு சித்தியை பெற்ற தீவக மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் உரையாற்றுகையில், பதினைந்து பிரதேச செயலக மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களிடையே நடாத்தப்படும் இவ்வெற்றிக் கிண்ண நிகழ்வு ஆறாவது வருட…

  16. இந்தமுறை இலங்கையணி நியூசிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்தபோது பெரிதாக எனக்குள் எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. ஏனென்றால் சங்கா, மஹேல போன்ற இலங்கையின் தூண்கள் இருந்தபோது இலங்கையணி கடந்த வருடம் அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது கூட, நியூசிலாந்து அணியிடன் அடிவாங்குவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. சங்கா தனித்துப் போராடித்தான் பார்த்தார், ஆனால் அணியில் மற்றவர்கள் கைகொடுக்காததால், அவரால் கூட இலங்கையணியை காப்பாற்ற முடியவில்லை. இலங்கையணியின் தேவைக்கும் அதிகமான நிதான விளையாட்டும், வேணுமென்றே தடுத்து ஆடியதும்தான் அவர்கள் டெஸ்ட் தொடரில் தோற்றதற்கான காரணம் என்று அப்போது பேசிக்கொண்டார்கள். ஆனால் ஒருநாள்ப் போட்டித் தொடரில் சிறிது வித்தியாசமாக விளையாடி, தொடரில் தோற்றாலும், ஒரு சில…

  17. புத்தாண்டிலும் பல வெற்றிக் கிண்ணங்களை சுவீகரிக்க பார்சிலோனா தாகத்துடன் உள்ளது – மெஸி பிறந்துள்ள புத்தாண்டிலும் பல வெற்றிக் கிண்ணங்களை சுவீகரிக்க வேண்டும் என்ற தாகத்துடன் பார்சிலோனா கழகம் இருப்பதாக அக் கழகத்தின் முன்கள வீரரும் நான்கு தடவைகள் உலகின் அதிசிறந்த வீரருமாகத் தெரிவான லயனல் மெஸி தெரிவித்துள்ளார். 2015இல் போன்றே புதிய ஆண்டிலும் ஐந்து வெற்றிக் கிண்ணங்களை வென்றெடுக்க பார்சிலோனா கழகம் உறுதிபூண்டுள்ளதை எதிரணிகளுக்கு கூற விரும்புவதாக லயனல் மெஸி குறிப்பிட்டுள்ளார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற ரியல் பேட்டிஸ் அணிக்கு எதிரான போட்டி மூலம் தனது 500ஆவது கால்பந்தாட்டப் போட்டியில் விளையாடிய …

  18. வென்றால் பீபாவைப் பிளவுபடுத்துவேன் இவ்வருடம் பெப்ரவரியில் இடம்பெறவுள்ள சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத் (பீபா) தேர்தலில் வெற்றிபெற்றால், அச்சம்மேளனத்தை இரண்டாகப் பிளவுபடுத்தவுள்ளதாக, ஷேக் சல்மான் பின் இப்ராஹிம் அல்-காலிபா தெரிவித்துள்ளார். ஊழல், மோசடிகள் காரணமாக, பலத்த எதிர்ப்புகளையும் சவால்களையும் எதிர்கொள்ளும் பீபா, தனது புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை, பெப்ரவரியில் நடாத்தவுள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான அதிக வாய்ப்புகளைக் கொண்டவராக, ஷேக் சல்மானே கருதப்படுகிறார். இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், நெருக்கடி நிலையைத் தீர்ப்பதற்காக, பீபாவை இரண்டாகப் பிளவுபடுத்துவதே தனது நோக்கம் எனத் தெரிவித்தார். …

  19. 2015 விளையாட்டு உலகம்! 2015-ம் ஆண்டு, உலகில் நடந்த முக்கிய விளையாட்டு நிகழ்வுகள், விறுவிறுப்பான போட்டிகளின் தொகுப்புகள் இங்கே... கிரிக்கெட் 2015 கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான வருடம்தான். இந்த வருடத்தின் தொடக்கத்திலே ஒருநாள் உலககோப்பை, அதனை தொடர்ந்து ஐ.பி.எல், முதல் முறையாக நடைபெற்ற பகல் இரவு டெஸ்ட் போட்டி, அதிவேக சதம் என பல சுவாரஸ்யங்களை கொண்டது. > ஜனவரி மாதத்தில் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கு இந்திய தீவுகள் அணி, அங்கு ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடியது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் டிவில்லிர்ஸ் 31 பந்துகளில் சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்தார…

  20. 'சுழல் தமிழன்' அஸ்வின் சாதனை: உலக டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடம் நம்பர் 1 பவுலர், ஆல்ரவுண்டர்: அஸ்வின் சாதனை. | படம்: பிடிஐ. ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு மற்றும் ஆல்ரவுண்டர் தரவரிசைகளில் அஸ்வின் முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். 1973-ம் ஆண்டு பிஷன் பேடி நம்பர் 1 இடத்தைப் பிடித்த பிறகு தற்போது அஸ்வின் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 2015-ம் ஆண்டு 9 டெஸ்ட் போட்டிகளில் 62 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் அஸ்வின். இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளில் 31 விக்கெட்டுகள் அடங்கும். 1973-ம் ஆண்டில் பிஷன் சிங் பேடி நம்பர் 1 இடம் பிடித்த பிறகு இந்திய பவுலர் ஒருவர் நம்பர் 1 இடத்தைப் பிடிப்பது இ…

  21. ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி: பிசிசிஐ விருதுக்கு தேர்வு சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி தேர்வு: படம்: ஏ.பி. மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ், சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக தேர்வு. | படம்: வி.வி.சுப்பிரமணியம். டெஸ்ட் கேப்டன்சியில் புதிய சாதனைகளை நோக்கி முன்னேறி வரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. மகளிர் கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதால…

  22. மீண்டும் சிக்கலில் பிளட்டினி சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தினால் (பீபா) 8 வருடங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள மைக்கல் பிளட்டினி, மேலும் சிக்கல்களுக்கு உள்ளாகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத் தலைவரான பிளட்டினி, அனைத்து வகையான கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்தும், டிசெம்பர் 21ஆம் திகதியிலிருந்து தடை செய்யப்பட்டிருந்தார். ஆனால், டுபாய் விளையாட்டுச் சபையினால் டுபாயினால் ஏற்பாடு செய்யப்பட்ட பூகோள கால்பந்தாட்ட விருதுகளில், கடந்த 27ஆம் திகதி, பிளட்டினி கலந்துகொண்டுள்ளார். இந்நிகழ்வில், லியனொல் மெஸ்ஸி, அன்ட்ரியா பிர்லோ ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். அங்கு வைத்து, தனது தடை தொடர்பாகவும் …

  23. 2015 ல் அதிக சதம் அடித்து சங்கா சாதனை December 31, 2015 2015 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் குவித்த வீரர்கள் பட்டியலில் இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்ககார முதலிடத்திலுள்ளார். இந்த வருடத்தில் 14 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள சங்ககார 5 சதங்களை அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார். இவருடன் இணந்து வில்லியர்ஸூம் 5 சதங்களை அடித்து முதலிடத்திலுள்ளார். இவர்களுக்கு அடுத்ததாக அம்லா, டில்சான், டெய்லர், குப்தில், ஆகியோர் நான்கு சதங்களை அடித்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர். குமார் சங்ககாரவில் 5 சதங்களுள் 2015 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டியில் அவர் பெற்ற 4 சதங்களும் உள்ளடக்கம். ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 4 சதங்களை பெற்ற சாதன…

  24. பார்சிலோனாவுக்காக 500 போட்டிகளில் பங்கேற்று லயனல் மெஸ்சி சாதனை! பார்சிலோனா அணிக்காக நேற்று தனது 500வது போட்டியில் களமிறங்கினார் லயனல் மெஸ்சி. ஸ்பானீஷ் லீக்கில், ரியல் பெடிஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணிக்காக 425 கோல் அடித்தும் அவர் சாதனை புரிந்தார். பார்சிலோனாவின் கேம்ப்நியூ மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தின் 29வது நிமிடத்தில், ரியல் பெடிஸ் அணி ஒரு சேம்சைட் கோல் அடித்தது. தொடர்ந்து 33-வது நிமிடத்தில் லயனல் மெஸ்சி அட்டகாசமாக ஒரு கோல் அடித்தார். பார்சிலோனா அணிக்காக மெஸ்சி அடிக்கும் 425 -வது கோல் இதுவாகும். தொடர்ந்து சவுரஸ் 46 மற்றும் 83- வது நிமிடத்தில் இரு கோல்கள் அடித்தார். இறுதியில் பார்சிலோனா அணி, 4-0 என்ற கோல் கணக்கில…

  25. டோனியின் வாழ்க்கை செப்ரெம்பரில் ரிலீஸ் December 30, 2015 டோனியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை தலைவரான டோனி, அணிக்கு 2 உலகக்கிண்ணங்களை வென்று கொடுத்தவர். கடந்த ஆண்டு அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டநிலையில், தற்போது ரி-20 மற்றும் ஒருநாள் ஆட்டங்களின் தலைவராக உள்ளார். அவரது வாழ்க்கை வரலாறு பற்றி ‘சொல்ல மறந்த கதை’ என்ற பெயரில் திரைப்படம் ஒன்று தயாராகிறது. நீரஜ் பாண்டே இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த படத்தில் சுவாந்த் சிங் ராஜ்புத் (டோனி), கயாரா அத்வானி (சாக்சி), அனுபம் கெர் (டோனியின் தந்தை) ஆகியோர் நடிக்கின்றனர். ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.