விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
பிளட்டருக்கு 90 நாட்களுக்கு இடைக்காலத் தடை? சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக விவகாரத்தால், அச்சம்மேளனத்தின் தலைவர் செப் பிளட்டருக்கும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சம்மேளனங்களின் சங்கத் தலைவர் மைக்கல் பிளட்டினி இருவருக்கும் 90 நாள் இடைக்காலத் தடை விதிக்கப்படுமெனத் தெரியவருகிறது. இவ்வாறானதொரு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டால், பெப்ரவரியில் இடம்பெறவுள்ள பீபா தேர்தலுடன் பதவி விலகவுள்ள பிளட்டர், தனது 17 வருடகாலப் பதவியின் இறுதிப் பகுதியை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டவராகவே நிறைவு செய்ய வேண்டியேற்படும். மறுபுறத்தில், பிளட்டரின் இடத்துப் போட்டியிட எதிர்பார்க்கும் பிளட்டினியின் வாய்ப்புகளுக்கும் இது எதிரானதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. …
-
- 1 reply
- 551 views
-
-
‘வீழ்வேனென்று நினைத்தாயோ?’ தோனி புதுடில்லி: இரண்டு உலக கோப்பை வென்ற பெருமையுடன் தலைநிமிர்ந்து நின்ற தோனி, சமீபத்திய தோல்விகளால் தலைகுனிந்து நிற்கிறார். இந்த அளவுக்கு ஒரு வீழ்ச்சியை சந்திப்போம் என அவரே நினைத்து பார்த்திருக்க மாட்டார். இந்திய கிரிக்கெட்டில் தனி ராஜ்யம் நடத்திக் கொண்டிருந்தவர் கேப்டன் தோனி, 34. அப்போதைய பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் ஆதரவு தொடர, களத்திற்கு உள்ளேயும் சரி, வெளியிலும் சரி இவர் வைத்தது தான் சட்டம். இவரது தலைமையில் தொடர்ந்து 8 டெஸ்டில் தோற்ற போதும், கேப்டன் நாற்காலி மட்டும் ஆட்டம் காணாமல் இருந்தது. இம்மென்றால் ‘சிறை வாசம், ஏனென்றால் வனவாசம்,’ என்ற வார்த்தைக்கு ஏற்ப, தோனியை எதிர்த்தால், அது சேவக், லட்சுமண், ஹர்பஜன், காம்பிர் என, எவ்வளவு ப…
-
- 0 replies
- 421 views
-
-
டெஸ்ட் தொடரே எமது முதல் இலக்கு: மெத்தியூஸ் நாங்கள் இருபது-20 போட்டி குறித்து முதலில் கவனம் செலுத்த மாட்டோம். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக முதலில் டெஸ்ட் தொடரே ஆரம்பமாகின்றது. எனவே இப்போட்டியை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே எங்களது முக்கியமாக கவனமாக இருக்கும். இதனையடுத்தே இருபது-20 போட்டி மீதான கவனம் செலுத்தப்படும் என இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்தார். மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் எதிர்வரும் 14ஆம் திகதி தொடங்குகிறது. இந்நிலையில் இப்போட்டி தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்ற போதே மெ…
-
- 37 replies
- 2k views
-
-
படமாக வெளியாகவிருக்கிறது உலகப் புகழ் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வாழ்க்கை. உலக புகழ் பெற்ற போர்த்துகீச கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு, மிக விரைவில் ரசிகர்களுக்கு விருந்தாக பெரிய திரையில் வெளிவரவுள்ளது. இதற்கு முன்பு இதே போல் ட்மைக்கேல் ஜாக்சன் மற்றும் ஜஸ்டின் பீபர் உள்ளிட்டோருக்கு சினிமாப் படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்போது முன்று FIFA விருதுகளை வென்ற ஒரே போர்த்துகீச கால்பந்து விளையாட்டு வீரர் என்ற பெருமைக்குரிய ரொனால்டோவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் வீடியோக்கள் என முழுமையான படமாக வெளியாகவிருக்கிறது,அவரது படத்திற்கான 2 நிமிட ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இதில் ரொனால்டோ தனது வெற்றியின் பின்னணியில் உள்ள தன…
-
- 0 replies
- 310 views
-
-
கிளிநொச்சியில் முரளி கிண்ணம் கிரிகெட் 2015 இன்று ஆரம்பம்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி வருந்தோறும் நடைப்பெற்று வருகின்ற முரளி கிண்ணம் கிரிகெட் சுற்றுப் போட்டி 2015 இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. இன்று 07 காலை ஒன்பது மணிக்க இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் குமார் சங்ககார விசேட அதிதியாக கலந்துகொண்டு முதலாவது போட்டியை ஆரம்பித்து வைத்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம்,போன்ற இடங்களில் இடம்பெறுகின்ற இப்போட்டியில் 23 அணிகள் பங்குப்பற்றுகின்றன. மாங்குளம் மைதானத்தில் முரளி கிண்ணம் கிரிகெட்டின் பெண்களுக்கான போட்டி இடம்பெற்று வருகிறது. கிளிநொச்சி இன்றைய முதலாவது போட்டி கிளிநொச்சி அணியினருக்கும், …
-
- 11 replies
- 1.4k views
-
-
அணிக்கு மீண்டும் திரும்பியதை ஒருபோதும் மறக்க முடியாது: ஆட்டநாயகன் விருது வென்ற அல்பி மோர்கல் நெகிழ்ச்சி இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய அல்பி மோர்கலைப் (வலது) பாராட்டும் தென் ஆப்பிரிக்க கேப்டன் டூ பிளெஸ்ஸி. படம்: கே.ஆர்.தீபக். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு மீண்டும் திரும்பியிருப்ப தோடு, ஆட்டநாயகன் விருதை யும் வென்றிருக்கிறேன். இது எப்போதுமே என்னுடைய நினைவில் இருக்கும் என தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் அல்பி மோர்கல் தெரிவித்துள்ளார். கட்டாக்கில் நேற்று நடைபெற்ற 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரைக் கைப்பற்றி யது. இந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 12 ரன்களை ம…
-
- 0 replies
- 325 views
-
-
5 ஆண்டுகளுக்குப் பிறகு பாக். டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார் ஷோயிப் மாலிக் ஷோயப் மாலிக். | கோப்புப் படம். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்ரவுண்டருமான ஷோயிப் மாலிக் 5 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 13-ம் தேதி அபுதாபியில் தொடங்குகிறது. அதில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணியில் 16-வது வீரராக மாலிக் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து தொடருக்காக கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் மாலிக் இடம்பெறவில்லை. ஆனால் ஷோயிப் மாலிக் நல்ல பார்மில் இருப்பதோடு, அனுபவம் வாய்ந்த வீரரும்கூட. அதனால் அவரை அணியில் சேர்க்குமாறு அணி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்ததைத் தொட…
-
- 0 replies
- 197 views
-
-
கட்டாக்கில் சர்வதேச போட்டி நடத்த 2 ஆண்டு தடை விதிக்க வேண்டும்: ரசிகர்களின் ரகளையால் கவாஸ்கர் காட்டம் கோப்புப் படம். கட்டாக் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த 2 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று முன்தினம் நடந்த இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்தபோது கோபமடைந்த ரசிகர்கள், தண்ணீர் பாட்டில்களை மைதானத்துக்குள் எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் ஆட்டம் பாதிப்புக்குள்ளானது. ரசிகர்களின் இந்த செயலால் கோபமடைந்த கவாஸ்கர் மேலும் கூறியிருப்பதாவது: ரசிகர்கள் பாட்டிலை தூக்கி எறிந்தபோது போலீஸார் அதை வேடிக்…
-
- 0 replies
- 204 views
-
-
லிவர்பூல் பயிற்றுநர் நீக்கம் லிவர்பூல் அணியின் முகாமையாளர் பிரென்டன் றொட்ஜர்ஸ், அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக, அண்மைக்காலமாக வெற்றிகளைப் பெறாத நிலையிலேயே அவர் பதவி விலக்கப்பட்டுள்ளார். எவேர்ட்டன் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் 1-1 என்ற சமநிலையான முடிவையே பெற்று, சில மணி நேரங்களல் அவரது பதவி நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியானது. றொட்ஜர்ஸின் ஒப்பந்தம் முறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உடனடியாக விலக்கப்படுவதாகவும் லிவர்பூலின் உத்தியோகபூர்வ அறிக்கை தெரிவித்தது. அத்தோடு, றொட்ஜர்ஸூக்குப் பதிலாக இன்னொருவரைத் தெரிவுசெய்யும் பணி ஏற்கெனவே தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதேவேளை, செல்சி அணியின் மோசமான பெறுபேறுகள் காரணமாக அழுத்தத்துக்குள்ளாகியுள்ள …
-
- 0 replies
- 249 views
-
-
துன்புறுத்தல் வழக்கில் ஷகாதத் ஹொசைன் கைது வீட்டுப் பணிப்பெண்ணை துன்புறுத்தியது தொடர்பான வழக்கில் டாக்கா நீதிமன்றில் இன்று சரணடைந்து பிணை கோரிய பங்களாதேஷின் வேகப்பந்துவீச்சாளர் ஷகாதத் ஹொசைன், சிறைக்கு அனுப்பப்ட்டுள்ளார். டாக்காவில் உள்ள ஷகாதத் ஹொசைனின் மனைவியினது உறவினர்களின் வீடொன்றில் இருந்து அவரது மனைவி கைது செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கழித்தே இவரது கைது இடம்பெற்றிருக்கிறது. மாநகர நீதவான் நீதிமன்ற நீதவான் மொஹமட் யூசுஃப் ஹொசைனிடம் இன்று காலை ஷகாதத் ஹொசைன் பிணை மனுவை கையளித்திருந்தார். நீதிமன்றம் பொலிஸாரை எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி அறிக்கையளிக்குமாறு நீதிமன்றம் கோரியுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர்கள் அடக்குமுறை தடுப்புச் சட்டத்தின் கீழேயே ஷகாதத் ஹொசைன் மற்றும்…
-
- 0 replies
- 251 views
-
-
அலெக்சிஸ் சாஞ்செஸ் மாயஜாலம் : ஆர்சனலிடம் மான்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி ( வீடியோ) இங்கிலீஸ் பிரீமியர் லீக் தொடரில் நேற்று பலத்த எதிர்பார்ப்புக்கிடையே நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சனல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை தோற்கடித்தது. லண்டன் எமிரேட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆர்சனல் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்தில் மெசூத் ஓசில் கொடுத்த பாசை மிக அழகாக வளைக்குள் தள்ளி ஆர்சனல் அணிக்கு முன்னிலை தேடி கொடுத்தார் அலெக்சிஸ் சாஞ்செஸ். அடுத்த நிமிடம் தியாகோ வால்காட் கொடுத்த கிராசை மிக நேர்த்தியாக கோலுக்குள் அடித்தார் ஓசில். ஆட்டம் தொடங்கிய 7 நிமிடங்களுக்குள் ஆர்சனல் அணி 2 கோல்கள் முன்னிலை பெற்றது. பின…
-
- 0 replies
- 391 views
-
-
யாழ். இந்துவிடம் வீழ்ந்தது கொக்குவில் இந்து யாழ். மாவட்ட பாடசாலைகளின் துடுப்பாட்டச் சங்கத்தால் 19வயதுக்குட்டபட்ட அணிகளுக்கிடையே நடத்தப்பட்டு வரும் ரி-20 தொடரில் கொக்குவில் இந்துக்கல்லூரியை 6 இலக்குகளால் வீழ்த்தியது யாழ். இந்துக்கல்லூரி. நேற்று முன்தினம் சனிக்கிழமை யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் இந்துக் கல்லூரி 20 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 7 இலக்குகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றது. அதிக பட்சமாக தனுசன் 36 ஓட்டங்களையும், கீர்தனன் 19 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் யாழ். இந்துக் கல்லூரி அணி சார்பில் எஸ்.துவாரகன், சந்துரு இருவரும் தலா 2 இலக்குகளையும் எம்.துவாரகன், சிவலக்சன், பிரகலாதன் மூவரும் தல…
-
- 0 replies
- 353 views
-
-
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையே நடைபெறும் சைக்கிள் ஓட்டப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி வீராங்கனை வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான 36 கிலோ மீற்றர் தூர சைக்களிள் ஓட்டப்போட்டியில் நிர்மலேஸ்வரன் விதுசனா கலந்து கொண்டு தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொண்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=141633&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 229 views
-
-
பிசிசிஐ தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றி தேர்வு சஷாங்க் மனோகர் | படம்: ஏபி பிசிசிஐ என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சஷாங்க் மனோகர் ஒருமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பிசிசிஐ தலைவராக அவர் தேர்தெடுக்கப்பட்டுள்ளது இது இரண்டாவது முறையாகும். மும்பையில் இன்று நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரை மணிநேரத்துக்கும் குறைவாக நடந்த இந்த சிறப்பு பொதுக்குழுவில் சஷாங்க் மனோகர், பிசிசிஐ தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். டால்மியாவின் மகன் அவிஷேக், மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவர் சவுரவ் கங்குலி, திரிபுரா கிரிக்கெட் சங்கத்தின் சவுரவ் தாஸ் குப்தா, அசாம் கிரிக்கெட் சங்கத்தின் கவுதம் ராய், ஒட…
-
- 0 replies
- 315 views
-
-
மஹேலவைப் போற்றும் இங்கிலாந்து பாகிஸ்தானுக்கும் இங்கிலாந்துக்குமிடையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்துக் குழாம், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சென்றுள்ள நிலையில், அவ்வணியின் வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், இத்தொடருக்கான இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக, இலங்கையின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன செயலாற்றுகிறார். 'ஜெயவர்தன மிகவும் சிறப்பானவர். இலகுவாக அணுகக்கூடியவர். அவருக்கெதிராக விளையாடிய அதிர்ஷ்டத்தையும் கொண்டிருக்கிறேன், ஆகவே என்னைப் பற்றி அவருக்குச் சிறிது தெரிந்திருந்தது. அவரது அனுபவம் மிகவும் பெறுமதியானது. எல்லா வீரர்களும் அவருடன் இணைந்து நிறை நேரத்தைச் செலவிடுகின்றனர்" என, இங்கிலாந்து அணியின் இளம் துடுப்பாட்ட…
-
- 0 replies
- 471 views
-
-
கால்பந்து சண்டைகள் : லிவர்பூல் - எவர்ட்டன் மோதல் (வீடியோ) இங்கிலீஸ் பிரீமியர் லீக் தொடரில் இன்று ஆக்ரோஷமன மோதல்கள் நடைபெறுகின்றன. மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள ஆட்டத்தில் 'மெர்சி சைட் டெர்பி' என்று அழைக்கப்படும் லிவர்பூல்- எவர்ட்டன் அணிகள் களம் காண்கின்றன. இரவு 8.30 மணிக்கு இதே லீக்கில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி ஆர்சனல் அணியை எதிர்கொள்கிறது. ஜெர்மன் பந்தஸ்லீகாவில் பலம் வாய்ந்த பேயர்ன்மியூனிச் அணியுடன் போர்சியா டோர்ட்மண்ட் அணி மோதுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஸ்பானீஷ் லீக்கின் வலிமை வாய்ந்த ரியல்மாட்ரிட் - அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதுகின்றன. இத்தாலி சீரி 'ஏ' தொடரில் 12.15 மணிக்கு ஏ.சி.மிலனுடன் நேபோலி அணி…
-
- 0 replies
- 617 views
-
-
ஓய்வு பற்றி மனம் திறக்கும் மிஸ்பா உல் ஹக் இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று டெஸ்ட், நான்கு ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் வரும் 13-ம் திகதி தொடங்குகிறது. இந்தத் தொடர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு, 41 வயதான மிஸ்பா உல் ஹக் தலைவராக இருந்து வருகிறார். இவர் இந்தியாவுடன் ஒரு தொடர் விளையாடிய பிறகு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக தெரிவித்திருந்தார். ஆனால், இநதியாவுடன் போட்டிகள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கும் தன்னுடைய தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடிய பின் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற விரும்ப…
-
- 0 replies
- 382 views
-
-
முரளி கிண்ணத் தொடர் புதனன்று ஆரம்பம் ; 24 அணிகள் பங்கேற்பு 2015ஆம் ஆண்டுக்கான முரளி ஹார்மனி கிண்ணத் தொடர் எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பிக்கிறது. 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொடர், தொடர்ந்து 4ஆவது முறையாக நடைபெறும் முரளி ஹார்மனி கிண்ணத் தொடரில் மொத்தம் 16 ஆண்கள் அணிகளும், 8 பெண்கள் அணிகளும் பங்குபற்றுகின்றன. இந்தப் போட்டிகள் அனைத்தும் வடக்குப் பகுதியிலுள்ள மைதானங்களில் நடைபெறுகின்றமை விசேட அம்சமாகும். யாழ்ப்பாணம், ஒட்டுச்சுட்டான், மாங்குளம், கிளிநொச்சி ஆகிய பிரதேச மைதானங்களில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் குழு 'ஏ' இல் யாழ். கல்லூரி கூட்டு அணி, டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி, மலியதேவ கல்லூரி, மொனராகலை ஆகிய அணிகள…
-
- 1 reply
- 280 views
-
-
டேல் ஸ்டெயினின் 'பேபிஸ் டே அவுட்'! (வீடியோ) தென்ஆப்ரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினிடம், ஒரு குழந்தையை கொடுத்து 24 மணி நேரம் பார்த்துக்க சொன்னால் என்ன செய்வார்? இதற்காக நியூ பேலன்ஸ் தென்ஆப்ரிக்கா என்ற காலணி நிறுவனம் ஒரு ஏற்பாடு செய்தது. டேல் ஸ்டெயினை ஒன்றரை வயது குழந்தையுடன் ஒருநாள் பொழுதை கழிக்க வைத்தது. ஆனால் அந்த குழந்தையை டேல் ஸ்டெயினால் சரிவர கவனிக்க முடியவில்லை. குழந்தையுடன் ஸ்டெயின் போராடும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. http://www.vikatan.com/news/article.php?aid=53208
-
- 0 replies
- 224 views
-
-
முன்னதாக ஆரம்பிக்கும் போர்மியுலா வன் 2016 பருவகாலம் ஏற்கனவே திட்டமிடப்பட்டது போன்று இல்லாமல், அடுத்த 2016ஆம் ஆண்டு பருவகாலம் இரண்டு வாரங்கள் முன்பதாக அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. மெல்போர்ன் ஓட்டப்பந்தயம் முன்னர் எதிர்வரும் ஏப்ரல் மூன்றாம் திகதி ஆரம்பிப்பதாய் இருந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில், எதிர்வரும் வருடமே முன்னதாய் ஆரம்பிக்கவுள்ளது. எனினும் ஒரு வருட காலத்தில் சாதனை ரீதியாக 21 பந்தயங்களை நடாத்தும் பொருட்டு, நெருக்கடியான அட்டவணையைத் தயாரித்ததாக அணிகள் முறைப்பாடு செய்ததையடுத்தே, பருவகாலத்தின் ஆரம்பம் முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து பஹ்ரெயின், சீனா, ரஷ்யாவில் இரு வார இடைவெளிகளில் பந்தயங்கள் இ…
-
- 0 replies
- 222 views
-
-
சென்றல் டிஸ்றிக்கில் ஜெயவர்த்தன Commentsநியூசிலாந்தின் உள்ளூர் இருபது-20 போட்டித்தொடரான ஜோர்ஜி பை சுப்பர் ஸ்மாஷில் இலங்கையணியில் இருந்து ஓய்வுபெற்றுள்ள முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்த்தன சென்றல் டிஸ்றிக்ஸ் அணிக்காக பங்கேற்கவுள்ளார். http://tamil.wisdensrilanka.lk/article/2061
-
- 0 replies
- 336 views
-
-
ஆப்கான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரானார் இன்சமாம் உல் ஹக் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக். | கோப்புப் படம்: பிடிஐ. முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். முதலில் வரவிருக்கும் ஜிம்பாப்வே தொடருக்கு மட்டும் இன்சமாம் நியமிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் ஆப்கான் கிரிக்கெட் சங்க தலைமைச் செயலதிகாரி ஷபிக் ஸ்டானிக்சாய் தெரிவிக்கும் போது, “இன்சமாம் ஒப்பந்தம் 2 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்” என்று கூறினார். கடந்த 3 ஆண்டுகளாக பாகிஸ்தான் பேட்டிங் பயிற்சியாளராக இன்சமாம் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இன்று வரை அது குறித்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் எடுக்க…
-
- 4 replies
- 388 views
-
-
மட்டையிலும் பந்திலும் மனிதத்தை இழக்கக்கூடாது -கப்டன் கூல் அட்வைஸ் October 03, 2015 ஆக்ரோசமாக விளையாடலாம். ஆனால், அந்த ஆக்ரோசம் தவறான நடத்தைக்குக் கொண்டு சென்று விடக்கூடாது என்று கருத்துத் தெரிவித்துள்ளார் டோனி. இந்திய டெஸ்ட் அணித்தலைவர் கோக்லி, இயக்குநர் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் வீரர்கள் எனப்பலரும் ஆக்ரோசம் தொடர்பாக எதிர்மாறான கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், தென்னாபிரிக்காவுக்கு எதிரான ரி-20 தொடர் ஆரம்ப மாகும் முன்னதாக ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து டோனி ஆக்ரோசம் தொடர்பாக தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார். டோனி மேலும் தெரிவித்ததாவது – ஆக்ரோசம் என்பதற்கு சூடான வார்த்தைகளை பரிமாறிக் கொள்வதும், உடலளவில் இடித்துத்தள்ளுவதும் என்று அர்த்தம் கிடையாது. மிகச் சிறந்த வ…
-
- 0 replies
- 438 views
-
-
செய்தித் துளிகள் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் எனது கடைசி கிரிக்கெட் தொடராக இருக்கலாம். எனினும் ஓய்வு பெறுவது குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். ------------------------------------------- முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி யின் பயிற்சியாளராக நியமிக்கப் பட்டுள்ளார். ஜிம்பாப்வேக்கு எதி ரான தொடருக்காக அவர் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட் டிருக்கிறார். ------------------------------------------- ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விதர்பா அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், ஒடிசா அணிக்கு எதிராக 128 ரன்கள் குவித்தார். இதன்மூலம் முதல் தர கிரிக்கெட…
-
- 0 replies
- 322 views
-
-
இந்தியா, தென் ஆபிரிக்க தொடர் முன்னோட்டம் இந்தியா, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கவுள்ளது. பலமான இரண்டு அணிகள் மோதும் தொடர் என்பதினால் இந்த தொடர் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. 3 டுவென்டி டுவென்டி போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடர் இரு அணிகளுக்குமிடையில் நடைபெறவுள்ளது. சகலவித கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரு நல்ல பலப் பரீட்சைக்கான தொடராக இது அமையவுள்ளது. இந்தியா அணி நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது சொந்த நாட்டில் தொடர் ஒன்றில் விளையாடவுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களின் பின்னர் சொந்த நாட்டில் இந்த தொடர் ஆரம்பிக்கவுள்ளது. சொந்த நாட்டில் புலிகளாகவும், வெளிநாடுகளில் எலிகலாகவும் திகழும் இந்திய அணிக்கு க…
-
- 0 replies
- 421 views
-