Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஆப்கானிஸ்தான்- ஹாங்காங் மீது சந்தேகம்: மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டனவா கத்துக்குட்டிகள்? அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான 2வது தகுதி சுற்றில் விளையாட, ஹாங்காங் அணி தகுதி பெற்றுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கடைசி ஓவரில் 16 ரன்கள் அடித்து ஹாங்காங் அணி வெற்றி பெற்றதுதான் மேட்ச் பிக்சிங்காக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, 161 ரன்கள் அடித்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஹாங்காங் அணிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. 5 விக்கெட்டுகள் கையில் இருந்த நிலையில், ஹாங்காங் வீரர் பாபர் ஹயாத் 4 பந்துகளில் 15 ரன்களை அடித்து விட்டார்…

  2. வடகொரியாவில் உலகக் கோப்பை கால்பந்து நடத்த லஞ்சம் கொடுத்த காமெடி நடிகர்! சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவில் ஊழலில் ஈடுபட்டதாக 7 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டார். ஊழலைத் சர்ச்சை வெடித்த நிலையில் நடந்த தலைவருக்கான தேர்தலிலும் ஜோசப் பிளேட்டர் போட்டியிட்டு 5வது முறையாக வெற்றி பெற்றார். எனினும் ஜோசப் பிளேட்டர் தொடர்ந்து பதவி வகிக்க விரும்பாமல் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை விதிமுறைகள் படி, ஜோசப் பிளேட்டர் ஃபிஃபா தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித…

  3. ஆஸி. கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் முதல் இந்தியர்... அதுவும் தமிழர்! ஆஸ்திரேலிய பயிற்சியாளர்கள்தான் இந்திய கிரிக்கெட் அணிக்கு இதுவரை பயிற்சியாளர்களாக இருந்துள்ளனர். கிரேக் சேப்பல், வாட்மோர், ஜோ டேவ்ஸ் இந்திய அணி மற்றும் ஐ.பி.எல். அணிகளுக்கு பயிற்சியாளர்களாக பணியாற்றியுள்ளனர். இதுவரை ஒரு இந்தியர் கூட ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்றது இல்லை. தற்போது முதல் முறையாக ஒரு இந்தியர் அதுவும் தமிழர் ஆஸ்திரேலிய 'ஏ' அணிக்கு பேட்டிங் பயிற்சி அளிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீராம்தான் ஆஸ்திரேலிய பேட்டிங் கன்சல்டிங்காக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டில் தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான சர்வதேச போட்டியில் இந்திய அணிக்க…

  4. 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடங்களை அறிவித்தது பிசிசிஐ- கொல்கத்தாவில் பைனல்! மும்பை: இந்தியாவில் அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்த 20 ஓவர் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் 11-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக இன்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில், பெங்களூரு, சென்னை, தர்மசாலா, மொஹாலி, மும்பை, நாக்பூர், டெல்லியில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 3-ந் தேதியன்ற…

  5. கடற்கரையில் படுத்துக் கிடக்கிறேன்: கெவின் பீட்டர்சன் கடும் சோகம் கெவின் பீட்டர்சன். | கோப்புப் படம்: ஏ.பி. இங்கிலாந்தினால் புறக்கணிக்கப்பட்ட கெவின் பீட்டர்சன், மியாமி கடற்கரையிலிருந்து சோகத்துடன் ட்வீட் செய்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அணி தத்தளிக்கும் போதும் தன்னை புறக்கணிப்பது குறித்து கோபாவேசத்துடனும், சோகத்துடனும், ட்வீட்களைச் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எப்போதையும் விட சிறப்பாக பேட் செய்து வருகிறேன். இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பெரும் சிக்கலில் இருக்கிறது. என்ன ஒரு விரயம்?! கடற்கரையில் படுத்துக் கிடக்கிறேன். நான் இங்கிலாந்து அணிக்கு உதவ முடியும், உதவ விரும்புகிறேன் என்று ஒரு ட்வீட் பதிவும், இப்போது ஆழ்சிந்தனையில் இருக்கிறேன்..…

  6. கிரிக்கெட் என்ற விளையாட்டுக்கு மூத்த மகன் பிறந்த தினம் இன்று! கிரிக்கெட் என்ற விளையாட்டுக்கு டெஸ்ட் கிரிக்கெட்தான் மூத்த மகன்... இவருக்குதான் ஒருநாள், டி20 என இரு சகோதரர்கள். கடந்த 1884ஆம் ஆண்டு இதே நாளில்தான் முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் இடையே நடந்த போட்டியில், இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த1983ஆம் ஆண்டு இந்திய அணி, இந்த மைதானத்தில்தான் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்றது. அதற்கு பின் லார்ட்ஸ் என்ற வார்த்தை இந்தியர்களுக்கு மிகவும் பிடித்துப் போன, பழகிப் போன வார்த்தையாகி விட்டது. வாழ்நாளில் ஒரு முறையாவது லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடிவிட வேண்டுமென்பதுத…

  7. இலங்கையில் சானியா மிர்ஸா உலகப் புகழ்­பெற்ற இந்­திய டென்னிஸ் வீராங்­கனை சானியா மிர்ஸா தற்­போது இலங்­கைக்கு பிரத்­தி­யேக விஜயம் மேற்­கொண்­டுள்ளார். இலங்கை அணி­யு­ட­னான சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களில் பங்­கு­பற்றும் பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட வீரர்­களில் ஒரு­வ­ரான ஷொய்ப் மாலிக் சானியா மிர்­ஸாவின் கணவர் என்­பது தெரிந்­ததே. இந்­நிலையில், தனது கண­வ­ருக்கு உற்­சா­க­ம­ளிப்­ப­தற்­காக சானி­யாவும் இலங்­கைக்கு வந்­துள்ளார். நேற்­று­ முன்­தினம் கொழும்பு ஆர். பிரே­ம­தாஸ அரங்கில் நடை­பெற்ற இலங்கை - பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான 3 ஆவது ஒருநாள் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­யின்­போது சானியா மிர்ஸா அரங்கில் காணப்­பட்டார். 33 வய­தான ஷொய்ப் மாலிக் 2 வரு­டங்­களின் ப…

  8. 151 கால கவுண்டி கிரிக்கெட் வரலாற்றில் 501 ரன்கள் குவித்து புதிய சாதனை! கவுண்டி கிரிக்கெட் போட்டியில் ஒரு ஜோடி 501 ரன்கள் குவித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில், லாங்ஷயர் கிரிக்கெட் அணியும் கிளமார்கன் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய லாங்ஷயர் அணி 698 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தென்ஆப்ரிக்க வீரர்கள் பீட்டர்சன் 286 ரன்களையும் ஆஷ்வெல் பிரின்ஸ் 261 ரன்களையும் எடுத்தனர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 501 ரன்கள் சேர்த்தது. இது கவுண்டி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஜோடி அடித்த அதிகபட்ச ரன்கள் ஆகும். 151 கால வரலாற்றில் ஒரு ஜோடி 500 ரன்களை கடப்பதும் இதுவே முதல் …

  9. 20 விக்கெட்டுகளை வீழ்த்த உங்கள் உதவி அவசியம்: ஹர்பஜனிடம் விராட் கோலி ஹர்பஜன் சிங். | கோப்புப் படம். இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்குள் மீண்டும் நுழைந்துள்ள ஹர்பஜன் சிங், தான் அணிக்குள் வர ரவி சாஸ்திரி, விராட் கோலி ஆகியோர் மிகவும் விரும்பினர் என்று கூறியுள்ளார். பிசிசிஐ.டிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறும்போது, “நான் ஓய்வறைக்குள் நுழைந்த போது முற்றிலும் புதுமுகங்கள் காணப்பட்டன. இவ்வளவு புதிய வீரர்களுடன் நானும் இருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியளித்தது. ஓய்வறையில் விராட் கோலி பேசும்போது, என்னைக் குறிப்பிட்டு, 'நீங்கள் இந்திய அணி வெற்றி பெறுவதற்குத் தேவையான 20 விக்கெட்டுகளை வீழ்த்த உதவி புரிவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த சீசனில் நீங்கள் எங்களில் ஒரு…

  10. ஸ்டீவ் ஸ்மித் ஆடும் புதிய ஷாட்டுக்குப் பெயர் ‘ட்வீனர்’ ஸ்டிவ் ஸ்மித் மோர்னி மோர்கெலுக்கு எதிராக ஆடிய ‘ட்வீனர்’ ஷாட். படம்: ஏ.எஃப்.பி. ஆஷஸ் தொடர் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 215 ரன்களையும் 2-வது இன்னிங்சில் 58 ரன்களையும் விளாசி இங்கிலாந்தை படுத்தி எடுத்த ஸ்டீவ் ஸ்மித் புதிய ஷாட் ஒன்றை பயன்படுத்தினார். ஆஃப் திசையில் முற்றிலும் ஒதுங்கிக் கொண்டு தனது இருகால்களுக்கும் இடையே பந்தை லெக் திசையில் அடிக்கும் கடினமான ஒரு ஷாட்டை ஸ்மித் பயன்படுத்தி வருகிறார். இந்த ஷாட் ‘ட்வீனர்’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது in-between என்பதை குறிக்க ட்வீனர் (tweener) என்று அழைக்கின்றனர். அதாவது இந்த ஷாட் கிரிக்கெட்டுக்குப் புதிது ஆனால் டென்னிஸ், கூடைப்பந்து ஆகியவற்றில் இந்த வ…

  11. 50 ஆண்டுகால பாரம்பரிய பெருமை மிக்க துலீப் கோப்பை கிரிக்கெட்டை ரத்து செய்த பிசிசிஐ 2012-ம் ஆண்டு துலீப் கோப்பையை வென்ற கிழக்கு மண்டல வீரர்கள் கொண்டாடும் காட்சி. | கோப்புப் படம்: கே.பிச்சுமணி. வரும் கிரிக்கெட் சீசனில் இந்திய கிரிக்கெட்டின் 50 ஆண்டு கால பெருமை மிக்க துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் இடம் பெறவில்லை. இது குறித்து பிசிசிஐ மவுனம் சாதித்து வருகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டின் நெரிசல் காரணமாக, ரஞ்சி டிராபிக்குப் பிறகு பழம்பெருமை வாய்ந்த மண்டலங்களுக்கு இடையேயான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் சீசனில் இடம்பெறவில்லை என்று தெரிகிறது. அக்டோபர் 1-ம் தேதி தொடங்கும் இந்த புதிய கிரிக்கெட் சீசனில் 6 மாத காலக்கட்டத்தில் 900 கிரிக்கெட் போட்டிகளை நடத்…

  12. பிரிமியர் கிரிக்கெட்: முக்கிய முடிவு எடுக்கப்படவில்லை மும்பை: பிரிமியர் கிரிக்கெட் தொடரின் அவசர கூட்டத்தில் சென்னை, ராஜஸ்தான் அணிகளின் தடை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவில்லை எனத்தெரிகிறது. ஆறாவது (2013) பிரிமியர் தொடர் சூதாட்டம் காரணமாக சென்னை அணியை வைத்திருந்த பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் பதவி பறிபோனது. இதன் பின், உச்சநீதிமன்றம் அமைத்த லோதா குழு தீர்ப்பு காரணமாக சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டுக்கு தடை விதிக்கப்பட்டது. உரிமையாளர்கள் குருநாத் (சென்னை), ராஜ் குந்த்ராவுக்கு (ராஜஸ்தான்) வாழ்நாள் தடை விதிக்கப்பட்டன. இதனிடையே பிரிமியர் தொடரின் நிர்வாக கவுன்சிலின் அவசர கூட்டம் ராஜிவ் சுக்லா தலைமையில் மும்பையில் நடக்கிறது. இதில் இரு அணிகளின் தடை குறித்து ம…

  13. இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பவுலிங்! ஹராரே: ரஹானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் இரு டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று டாசில் வென்ற ஜிம்பாப்வே முதலில் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. டோணி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வங்காளதேசத்துக்கு எதிராக ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதனால் ஜிம்பாப்வே தொடரில் அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இந்திய அணிக்கு உள்ளது. அவ்வாறு வெற்றி பெற்றால்தான் ஒருநாள் தரவரிசையில் இந்தியாவால் 2வது இடத்தில் நீடிக்க முடியும். ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணியில், வழக்கமான கேப்டன் ட…

  14. ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வீரர் எழுதிய 'இனவெறி' குறித்த கடிதத்தால் சர்ச்சை! ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய இயக்குநருமான அலெஸ்டர் கேம்பெல் என்னிடம் இனவெறியுடன் நடந்து கொள்வதாக ஜிம்பாப்வே அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிராஸ்பர் உத்சயா புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத் தலைவர் தலைவர் வில்சன் மனசேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் '' ஜிம்பாப்வே அணி வீரர்களில் என்னிடம் மட்டும் கேம்பெல் பாரபட்சமாக நடக்கிறார். தனிப்பட்ட பகைமை பாராட்டுகிறார். அண்மையில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் நான் அணியின் முதல் 11 வீரர்களில் ஒருவராக தேர்வு செய்யப்படாமல் போனதற்கு கேம்பெல்தான் காரணம். கடந்த 2010முதல் 2012 ஆம் ஆண்டு வரை அ…

  15. சச்சின் மகனை வைத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிரெய்னிங் எடுத்த இங்கிலாந்து லண்டன்: சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரை தங்களது குழு பயிற்சியின்போது ஈடுபடுத்தியுள்ளனர் இங்கிலாந்து வீரர்கள். இங்கிலாந்து வீரர்களுக்கு அர்ஜூன் டெண்டுல்கர் பந்து வீசி அவர்களுக்கு பேட்டிங் பயிற்சி கொடுத்தார். முதலில் பந்து வீசிய சிறுவன் யார் என்று இங்கிலாந்து வீரர்களுக்குத் தெரியவில்லையாம். பின்னர்தான் அது சச்சின் மகன் அர்ஜூன் என்று தெரிய வந்து ஆச்சரியப்பட்டனராம். 2வது ஆஷஸ் டெஸ்ட் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி இன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக இங்கிலாந்து வீரர்கள் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். நெட் பவுலராக மாறிய அர்ஜூன் லார்ட்…

  16. தாக்கிய சுறாவை பந்தாடிய தில்லான உலக சாம்பியன் வீரர்! (வீடியோ) கடலில் அலை சறுக்குப் போட்டியில் ஆஸ்திரேலியா வீரரும், உலக சாம்பியனுமான மிக் ஃபானிங் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென சுறா தாக்கியதால் சுதாரித்துக் கொண்ட அவர், எதிர் தாக்குதல் நடத்தி அதனை விரட்டி அடித்துள்ளார். இந்த தில்லான சம்பவம் தென் ஆப்பிரிக்காவில் நடந்துள்ளது. https://youtu.be/iJchroxUM0Q ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல நீர்சறுக்கு வீரர் மிக் ஃபானிங். இவர் நீர் சறுக்கு விளையாட்டில் மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்நிலையில் போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஃபானிங், தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். போர்ட் எலிசபெத் நகரில் ஜெஃப்ரி பே ஓபன் அலை சறுக்குப் போட்டியில் அவர் ஈடுபட்டு…

  17. களமிறங்கிய சஞ்சு சாம்சன்... உற்சாகத்தில் மிதந்த கடற்கரை கிராமம்! பொதுவாக கால்பந்து வீரர்களை இந்தியாவுக்கு அள்ளித்தருவதுதான் கேரளத்தின் வழக்கம். இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் ஐ.எம்.விஜயன், சத்யன் போன்றவர்கள் கேரளத்தில் இருந்து புறப்பட்டு வந்து இந்திய கால்பந்து களத்தை ஆண்டவர்கள், ரசிகர்கள் மனதை ஆக்கிரமித்தவர்கள். தற்போது கேரளா, கொஞ்சம் கொஞ்சமாக கால்பந்து போல கிரிக்கெட் வீரர்களையும் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. 100 ஆண்டு கால இந்திய கிரிக்கெட் வரலாற்றில், கடந்த 1990களில்தான் முதன் முதலாக கேரளத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் இடம் பிடித்தார். வேகப்பந்துவீச்சாளரான அபே குருவில்லாதான் அவர். பின்னர் டினு யோகனன், சோபிக்கவில்லை. ஸ்ரீசாந்த் அறிமுகமாகி வளர்ந்து வரும் கட்டத்…

  18. கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்துபசாரம் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­க­ளுக்­காக இலங்­கைக்கு வந்­துள்ள பாகிஸ்தான் அணி­யினர் மற்றும் இலங்கை அணி­யி­ன­ருக்­கான விருந்­து­பசார நிகழ்வொன்று, இலங்­கைக்­கான பாகிஸ்தான் தூது­வ­ரா­ல­யத்தின் தூதுவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஷெய்யித் ஸக்கீல் தலை­மையில் கொழும்பு தாஜ் சமுத்­திரா ஹோட்­டலில் உள்ள போல் ரூமில் நேற்று முன்­தினம் இரவு நடைபெற்­றது. இந்­நி­கழ்வில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரி­க்கெட் வீரர்கள், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வன அதி­கா­ரிகள், வெளி­நாட்டு தூது­வர்கள், அவற்றின் பிரதிநிதிகள், அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, முன்னாள் நாடா­ளு­மன்ற உறுப்பினர் பைஸர் முஸ்­தபா, பாகிஸ்தான் தூது­வ­ரா­லய அதி­கா­ரிகள், கிரிக்கெட…

  19. சூதாட்டத்தால் ஆட்டம் கண்ட ஐ.பி.எல். ஏழு வரு­டங்­க­ளுக்கு முன்னர் இண்­டியன் ப்றீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்­டிகள் ஆரம்­ப­மா­ன­போது இர­சி­கர்கள் மத்­தியில் அதற்கு இருந்த மவுசே வேறு. விறு­வி­றுப்­பையும் பர­ப­ரப்­பையும் இர­சி­கர்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்தி ஆட்டம் கொண்­டாட்­டங்­களில் மிதக்­க­வைத்த இண்­டியன் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்­டிகள் வரு­டத்­திற்கு வருடம் வளர்ச்சி அடைந்து முழு உல­கையும் தன் பால் ஈர்த்து நின்­றது. இதன் பல­னாக அவுஸ்­தி­ரே­லியா, தென் ஆபி­ரிக்கா, மேற்­கிந்­தியத் தீவுகள், நியூஸிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், ஸிம்­பாப்வே ஆகிய நாடு­க­ளிலும் பல்­வேறு பெயர்­களில் ப்றீமியர் லீக் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிகள் ஆரம்­ப­மாகி பிர­பல்யம் அடைந்­துள்…

  20. ராகுல் டிராவிட் குழந்தை முதல் கேப்டன் வரை...அவரே வெளியிட்ட வீடியோ! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தனது கிரிக்கெட் வாழ்க்கையை பற்றி ஒரு வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குழந்தையாக தவழ்வத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டாக உயர்ந்தது வரை, அவரை பற்றிய சுவாரஸ்யங்கள் நிறைந்த வீடியோ இது. https://youtu.be/bbYxfBwMSUw My mother's scrapbook- என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவை ஃபேஸ்புக் பக்கத்தில் பார்க்க அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். http://www.vikatan.com/news/article.php?aid=49701

  21. ஜப்பான் கிராண்ட் பிரியில் விபத்தில் சிக்கிய வீரர் 9 மாதங்களுக்கு பிறகு மரணம்! ஜப்பான் கிராண்ட் பிரி பந்தயத்தின் போது விபத்தில் சிக்கிய பார்முலா ஒன் கார்பந்தய வீரர் ஜுல்ஸ் பியான்ச்சி, 9 மாதங்கள் சிகிச்சைக்கு பின்,நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 25. பிரான்சை சேர்ந்த பார்முலா ஒன் கார்பந்தய வீரர் ஜுல்ஸ் பியான்ச்சி, கடந்த 2013ஆம் ஆண்டு முதல் பார்முலா ஒன் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி ஜப்பான் கிராண்ட் பிரி போட்டியின்போது மெர்சியா குழுவுக்காக பங்கேற்ற பியான்ச்சியின் பந்தய கார், விபத்தில் சிக்கியது. பலத்த மழை காரணமாக பியான்ச்சியின் கார் பந்தய பாதையில் இருந்து வழுக்கி சென்று, அருகில் நின்று கொண்டிருந்த ஆபத்துதவி வாகனத்தின் மீது ம…

  22. ஐ.பி.எல். லில் பங்கேற்க சென்னை அணிக்கு 2 ஆண்டு தடை! சூதாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க சென்னை அணிக்கு 2 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை அணியின் முன்னாள் நிர்வாகி குருநாத் மெய்யப்பனுக்கும் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் 6-ஆவது கிரிக்கெட் தொடரில் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சென்னை அணியின் நிர்வாகியாக இருந்த குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது புகார் எழுந்தது. கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத…

  23. எங்க 'தல' தோனிக்கு பெரிய விசில் போடு... முற்றுப்புள்ளியா? தொடருமா? சூதாட்டத்தில் அணி நிர்வாகிகள் ஈடுபட்டதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டதையடுத்து, முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக ஐ.பி.எல். நிர்வாகக்குழு கூட்டம் நாளை கூடுகிறது. ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா தலைமையில் மும்பையில் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் நீதிபதி லோதா கமிட்டியின் தீர்ப்பு குறித்து ஆழமாக விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும். ஐ.பி.எல்.லின் சட்ட ஆலோசகர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்று, சட்டரீதியான தெளிவுகளை அளிக்கின்றனர். இதற்கிடையே, ஐ.பி.எல். தொடரை 6 அணிகளுடன் நடத்துவது சாத்தியமில்லை. 8 அணிகள் நிச்சயமாக பங்கேற்கும். அடுத்த ஐ.பி.எ…

  24. மைக்கேல் கிளார்க் 66666... அது என்ன? டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 66 ஆயிரத்து 666வது விக்கெட்டாக ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் அவுட் ஆகியுள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஷஸ் தொடருக்கான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 566 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க், 7 ரன்கள் எடுத்த நிலையில் வுட் பந்துவீச்சில் பல்லான்சிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 66 ஆயிரத்து 666வது விக்கெட்டாக மைக்கேல் கிளார்க் அவுட் ஆனதுதான் சிறப்பம்சம். இந்த போட்டியில் 2வது முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 85 ரன்களை இழந்து தடுமாறி வருகிறது. http://…

    • 1 reply
    • 316 views
  25. பந்துவீச்சுக்கு பதிலாக 'த்ரோ ' : பாகிஸ்தான் பந்து வீச்சாளருக்கு மீண்டும் தடை! விதிகளுக்கு புறம்பாக பந்துவீசுவதாக பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஹபீசுக்கு மீண்டும் பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுன் 21ஆம் தேதி காலே நகரில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், முகமது ஹபீசின் பந்துவீச்சு சந்தேகத்துக்கிடமான முறையில் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து சென்னை ராமச்சந்திரா பல்கலைக்கழக வளாகத்தில், ஐ.சி.சி. அங்கீகரித்த பரிசோதனை மையத்தில் ஹபீசின் பந்துவீச்சு குறித்து சோதனை நடத்தப்பட்டது. இதில் முகமது ஹபீசின் எல்போ 31 டிகிரி வரை வளைந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஹபீசுக்கு 12 மாதங்கள் பந்துவீச ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. மு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.