விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
விம்பிள் டன் போட்டியை கண்டுகளித்த சங்கா லண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் போட்டியை கண்டுகளிப்பதற்கு குமார் சங்கக்கார சென்றுள்ளார். ரோஜர் பெடரர் மற்றும் சாமு வேல் ஆகியோர் மோதிய போட்டியிலேயே சங்கக்கார கலந்துகொண்டுள்ளார். சங்கா அரச குடும்பம் அமரும் பகுதியில் அமர்ந்து தனது மனைவியோடு போட்டியை கண்டுகளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/07/06/விம்பிள்-டன்-போட்டியை-கண்டுகளித்த-சங்கா விம்பிள்டன் அரச குடும்ப ஆசனப் பகுதியில் சங்கா விம்பிள்டன் அகில இங்கிலாந்து டென்னிஸ் கழக அரங்கில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளைக் கண்டுகளிக்க சென்ற இலங்கையின் நட்சத்திர கிரிக…
-
- 4 replies
- 558 views
-
-
றயன் ஹரிஸ் அதிர்ச்சி ஓய்வு சர்வதேசப்போட்டிகளிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஓய்வுபெறுவதாக, அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் றயன் ஹரிஸ் அறிவித்துள்ளார். இங்கிலாந்தில் ஆரம்பிக்கவுள்ள ஆஷஸ் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாமில் சேர்க்கப்பட்டிருந்த 35 வயதான றயன் ஹரிஸ், அத்தொடரின் முதலாவது பயிற்சிப் போட்டியில் பங்குபற்றியிருந்ததோடு, இரண்டாவது பயிற்சிப் போட்டிக்கு முன்னதாக உபாதைக்குள்ளானார். அவருக்கு நீண்ட காலமாக வலது முழங்காலில் காணப்பட்ட உபாதையில், புதிதாக உபாதை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனைகள் வெளிப்படுத்தியிருந்தன. இதன் காரணமாக அவர் ஆஷஸ் தொடர் முழுவதிலும் பங்குபற்றமுடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையிலேயே, சர்வதேசப் போட்டிகளிலிருந்து உடனடியாக அமுலுக்கு வருமா…
-
- 2 replies
- 330 views
-
-
தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டி20: வங்கதேச நம்பிக்கைக்கு பலத்த அடி தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. மிர்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்க அணி முதலில் பேட் செய்தது. டி வில்லியர்ஸ் 2 ரன்னிலும் குயின்டன் டி காக் 12 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து டுப்லெசிசும் டுமினியும் வங்க தேச பந்துவீச்சை எதிர்கொண்டனர். டுப்லெசிஸ் அதிரடியாக விளையாடி 61 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். டுமினி 18 ரன்களில் வெளியேறினார். கடைசிக்கட்டத்தில் ரூசவ் 21 பந்துகளில் 31 ரன்களை எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் தென்ஆப்ரிக்க அணி 149 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்தியாவுக்கு எதிராக கலக்கிய முஸ்தாபீசூர் ரஹ்மா…
-
- 1 reply
- 317 views
-
-
'எனது கட்டுப்பாட்டில் இருக்காத விடயங்களுக்காக பழியை ஏற்று களைப்படைந்துள்ளேன்': பிளாட்டர் ரஷ்யாவுக்கும் கத்தாருக்கும் 2018 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு வாய்ப்பளிப்பதற்கு ஆதரவாக பிரான்ஸும் ஜெர்மனியும் அரசியல் அழுத்தங்களை கொடுத்திருந்ததாக ஃபிஃபா தலைவர் செப் பிளாட்டர் குற்றம்சாட்டியுள்ளார். போட்டியை நடத்தும் நாடுகளை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்புக்கு முன்னதாக, பிரான்ஸ் அதிபர் நிக்கோலா சார்க்கோஸி-உம் ஜெர்மனிய அதிபர் கிறிஸ்டியன் வூல்ஃப்-உம் தங்கள் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அழுத்தம் கொடுத்திருந்ததாக ஜெர்மனிய நாளிதழ் ஒன்றுக்கு பிளாட்டர் கூறியுள்ளார். அமெரிக்காவின் புலனாய்வுத் துறையினர் ஊழல்குற்றச்சாட்டில் விசாரித்துவரும் செப் பிளாட்…
-
- 0 replies
- 275 views
-
-
பப்புவா நியுகினியில் பசிபிக் விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன சர்வதேச கால்பந்து விளையாட்டில் நிலைநாட்டப்பட்டிருந்த 'மிகப்பெரிய வெற்றி' என்ற சாதனையை ஃபிஜி முறியடித்துள்ளதாக பசிபிக் விளையாட்டு போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். மைக்ரோனீசிய (சமஷ்டி அரசுகள்)அணிக்கு எதிராக 38-0 என்ற வெற்றியைப் பெற்றதன் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் ஃபிஜி அணி வீரர் அட்டோனியோ துய்வுனா தனியாக 10 கோல்களை அடித்துள்ளார். 2001-ம் ஆண்டில், அமெரிக்க சமோவா அணிக்கு எதிராக, ஆஸ்திரேலியா 31-0 என்ற வெற்றியை பெற்று படைத்திருந்த உலக சாதனையே இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது. http://www.bbc.com/tamil/sport/2015/07/150705_fiji_football
-
- 0 replies
- 295 views
-
-
டிவில்லியர்ஸ் விரைவில் ஆட்டமிழக்க வேண்டிக்கொள்வதுதான் ஒரே வழி: வங்கதேச பயிற்சியாளர் ஏ.பி. டிவில்லியர்ஸை கண்டு நடுங்கும் வங்கதேச அணி. | கோப்புப் படம். வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பலம் குறித்து வங்கதேச கிரிக்கெட் பயிற்சியாளர் ஹதுரசிங்கே அச்சம் கலந்த குரலில் பேசியுள்ளார். வங்கதேச அணியின் மிகப்பெரிய பலமே அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள்தான், தன் நாட்டு பேட்ஸ்மென்கள் ஒரு ரன் எடுத்தால் காட்டுக்கூச்சல் போடுவதும், எதிரணி வீரர் புரட்டி எடுத்தால் கூட வாயைத் திறக்காமல் மைதானமே மவுனத்திலும் நிச்சலனத்திலும் மூழ்கிவிடுவதை அனைவரும் பார்த்திருக்கலாம். இந்நிலையில், அந்த உற்சாகமான ரசிகர்களின் வாயை தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் அ…
-
- 0 replies
- 298 views
-
-
தோனி பந்து வீசுவதை பார்த்திருக்கீறீர்களா? முதல் முறையாக வரும் நவம்பர் மாதம் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் பெருமையை நியூசிலாந்து- ஆஸ்திரேலிய அணிகள் பெறுகின்றன. போட்டியை அடிலெய்ட் மைதானம் நடத்துகிறது. இந்த போட்டிக்காக பிரத்தியேகமான 'பிங்க்' வர்ண பந்து பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் கோகும்பரா நிறுவனம் இந்த 'பிங்க்' வர்ண பந்துகளை தயாரித்துள்ளது. பலவிதமான சோதனைகளுக்கு பிறகு 'பிங்க்' வர்ண பந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த உலகக் கோப்பை போட்டிக்கு முன், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுபபயணம் செய்தது. அப்போது மெல்பர்ன் மைதானத்தில் சேனல் 9 'பிங்க்' வர்ண பந்தை வீசி பரிசாத்திய தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்து பார்த்…
-
- 0 replies
- 269 views
-
-
கோபா அமெரிக்காவை வெல்ல 99 ஆண்டுகள் காத்திருந்த சிலி : மெஸ்சி குடும்பத்தினர் மீது தாக்குதல் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் 99 ஆண்டு கால வரலாற்றில் சிலி அணி முதல் முறையாக சாம்பியன் ஆகியுள்ளது. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் அந்த அணி அர்ஜென்டினாவை 4-1 என்ற கோல் கணக்கில் டைபிரேக்கரில் வீழ்த்தியது. அதே வேளையில் மைதானத்தில் போட்டியை பார்க்க வந்த லயனல் மெஸ்சி குடும்பத்தினர் மீது சிலி ரசிகர்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்பட்டது. சான்டியாகோ நகரில் நடந்த இந்த போட்டியில் 120 நிமிட நேர ஆட்டமும் கோல் எதுவும் விழாமல் சமனில் முடிந்தது. இதையடுத்து வெற்றி தோல்வியை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் சிலி அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்…
-
- 0 replies
- 288 views
-
-
64 பந்துகளில் 158 ரன்கள் குவித்து சொந்த சாதனையை சமன் செய்த மெக்கல்லம்! நாட்வெஸ்ட் தொடரில் நியூசிலாந்தின் பிரன்டென் மெக்கல்லம் 11 சிக்சர்கள் 11 பவுண்டரிகளுடன் 158 ரன்கள் விளாசி தனது சொந்த சாதனையை சமன் செய்துள்ளார். நாட்வெஸ்ட் டி20 போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் டெர்பிஷயர் ஃபால்கன்ஸ் அணி பிர்மிங்ஹாம் பியர்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் பிர்மிங்ஹாம் அணி வீரர் பிரன்டென் மெக்கல்லம் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். 64 பந்துகளை மட்டுமே சந்தித்த மெக்கல்லம் 158 ரன்களை அடித்தார். இதில் 42 பந்துகளில் மெக்கல்லம் சதத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது. இதில் 11 சிக்சர்களும் 13 பவுண்டரிகளும் அடங்கும். மெக்கல்லமின் அதிரடியால் பிர்மிங்ஹாம் அணி 20 ஓவர்களில் 242 ரன்களை குவ…
-
- 1 reply
- 344 views
-
-
பெர்த்தில் ஜஸ்டின் லாங்கர், ஜெஃப் மார்ஷிடம் கவுதம் கம்பீர் தீவிர பயிற்சி ஜெப் மார்ஷ், ஜஸ்டின் லாங்கர், கவுதம் கம்பீர். இந்திய அணியில் மீண்டும் நுழைய தீவிரமாக முயற்சி எடுத்துவரும் கவுதம் கம்பீர், இதற்காக, ஆஸ்திரேலியா சென்று ஜஸ்டின் லாங்கர், மற்றும் ஜெஃப் மார்ஷ் மேற்பார்வையில் பயிற்சியில் ஈடுபட்டார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் இட்டுள்ள பதிவில், “பெர்த்தில் ஜெஃப் மார்ஷ், மற்றும் லாங்கருடன். மிகச்சிறந்த மனிதர்கள், என்னை வரவேற்றனர். பயிற்சிக்காக நான் இங்கு இருக்கக் காரணமான இருவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது ஜஸ்டின் லாங்கர், ஜெஃப் மார்ஷ் மேற்பார்வையில் அவர் தனது பயிற்சி முறைகளில் ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் கலப்பு போர்க்கலைகள…
-
- 0 replies
- 371 views
-
-
நீதிமன்றில் ஜேம்ஸ் ஃபோக்னர் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் ஜேம்ஸ் ஃபோக்னர், எதிர்வரும் 21ஆம் திகதி இங்கிலாந்திலுள்ள நீதிமன்றில் ஆஜராகவுள்ளார். குடித்துவிட்டு வாகனமோட்டியதன் காரணமாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லங்காஷையர் பிராந்திய அணிக்காக விளையாடிவரும் ஜேம்ஸ் ஃபோக்னர், நேற்றைய தினம் இரவு பொலிஸாரால் குற்றஞ்சாட்டப்பட்டார். பொலிஸார் அவரை அணுகி சோதனையிட்ட போது, அவரது குருதியில் 100 மைக்ரோகிராம்கள் அல்ககோல் காணப்பட்டிருந்தது. இது ஐக்கிய இராச்சியத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்காகும். இதனையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட அவர், பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்…
-
- 1 reply
- 341 views
-
-
அமெரிக்கா மீது ஐசிசி விமர்சனம் ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் சபையின் தேர்வுக் கொள்கைகளையும் வீரர்களை நடாத்தும் விதத்தையும் சர்வதேச கிரிக்கெட் சபை விமர்சித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழலுக்கெதிரான பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் பின்னரே இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பார்படோஸில் இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் வருடாந்த மாநாட்டில் ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் சபையினை தடை செய்த நிலையிலேயே, தற்போது புதிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 19 வயதுக்குட்பட்ட தேசிய அணியின் தெரிவில் 7 வீரர்கள் முறைகேடான முறையில் தெரிவு செய்யப்பட்டதாகவும், அவர்களுக்குப் பதிலாக, தெரிவுக்கான தகுதிகளையுடைய வீரர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும் எனக் கோரி, தெரிவு…
-
- 0 replies
- 328 views
-
-
ஆஷஸ் டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் அடில் ரஷித், ஸ்டீவன் பின் வாய்ப்பு பெற்றனர். இங்கிலாந்து வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, வரலாற்று சிறப்புமிக்க 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் ஜூலை 8ல் கார்டிப் நகரில் துவங்குகிறது. இப்போட்டிக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் அறிமுக சுழற்பந்துவீச்சாளராக அடில் ரஷித், 27, சேர்க்கப்பட்டார். இவர், இதுவரை 11 ஒருநாள், 6 சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் விளையாடி உள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பின், வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீவன் பின், 26, மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். …
-
- 82 replies
- 5.9k views
-
-
மிட்செல் ஜான்சன் வேகத்தில் நிலைகுலைந்த ஸ்டீவ் ஸ்மித், அடிபட்ட ஷான் மார்ஷ் மிட்செல் ஜான்சன். | கோப்புப் படம். ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடருக்காக முழு மூச்சில் பயிற்சி பெற்று வருகிறது. இந்நிலையில் வலைப்பயிற்சியின் போது ஜான்சனின் ஆக்ரோஷத்துக்கு ஸ்டீவ் ஸ்மித் நிலைகுலைய, ஷான் மார்ஷ் விரலைப் பெயர்த்தது மற்றொரு பந்து. எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், ஜான்சன் ஆகியோர் விளையாடவில்லை. இந்நிலையில் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடுபிட்சில் மார்ஷ், ஸ்மித், ஜான்சன் பயிற்சியில் ஈடுபட்டனர். இங்கிலாந்து அணி தன்னிடமிருந்து ஆஷஸ் தொடரில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை காட்டும் விதமாக ஜான்சன் கடும் வேகமும் ஆக்ரோஷமும் காட்டினார். அதில்தான் உலகின…
-
- 0 replies
- 488 views
-
-
இங்கிலாந்தில் கலக்கும் சங்கக்காரா: ‘திரில்’ வெற்றி பெற்ற சர்ரே அணி இங்கிலாந்தில் நடக்கும் நாட்வெஸ்ட் டி20 போட்டியில் சங்கக்காரா விளையாடி வரும் சர்ரே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.ஒருநாள், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட சங்கக்காரா, இந்தியாவுடனான 2வது டெஸ்ட் போட்டியோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய சங்கக்காரா, நாட்வெஸ்ட் டி20 தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் சர்ரே- குளோசஸ்சியர் அணிகள் மோதிய போட்டியில் சர்ரே அணி 4 விக்கெட் விக்கெட்டுகளால் 'திரில்' வெற்றியை பெற்றது. முதலில் விளையாடிய குளோசஸ்சியர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்…
-
- 0 replies
- 358 views
-
-
சுனாமியால் அனாதையான சிறுவனை கால்பந்து வீரனாக்கிய ரொனால்டோ! கடந்த 2004ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட 14 நாடுகளில் சுனாமி தாக்கியது. சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்தனர். சுனாமியில் சின்னாபின்னமான இந்தோனேஷியாவின் ஏக் கடற்கரை பகுதியில் 21 நாட்களுக்கு பிறகு மட்டுனிஸ் என்ற 3 வயது சிறுவன் அதிருஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டான். மட்டுனிசின் பெற்றோரும் 2 சகோதரரிகளும் சுனாமியில் சிக்கி உயிரை இழந்திருந்தனர். சிறுவன் மட்டுனிஸ் மட்டும் எப்படியோ உயிர் பிழைத்திருந்தான். சிறுவனை மீட்க அவன் அணிந்திருந்த போர்ச்சுகல் அணியின் ஜெர்சிதான் காரணமாக இருந்தது. போர்ச்சுகல் அணி வீரர் மனுவேல் ரய் கோஸ்ட்டாவின் ஜெர்ச…
-
- 0 replies
- 354 views
-
-
ஒரு 'சேம்சைட்' கோலும் 6 தோட்டாக்களும்...! கடந்த 1994ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. கொலம்பியா அணிதான் கோப்பையை வெல்லும் என்று கால்பந்து ஜாம்பவான் பீலே கணித்திருந்தார். அதற்கேற்றார் போல் உலகக் கோப்பை போட்டி தொடங்கும் முன், அந்த அணி விளையாடிய 26 போட்டிகளில் 25 போட்டிகளில் வெற்றி கண்டிருந்தது. கார்லெஸ் வால்டராமா,ஃபாஸ்டினோ அஸ்பெரிலா,லூயீஸ் ஹெரைரா என உலகின் நட்சத்திர வீரர்கள் கொலம்பிய அணியில் இடம் பெற்றிருந்தனர். இந்த முறை கொலம்பிய அணி கோப்பையை வெல்லவில்லையென்றால் இனிமேல் எப்போதும் வெல்லாது என்றும் பத்திரிகைகள் கூறின. கொலம்பிய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்திருந்தது. இதே பிரிவில் போட்டியை நடத்திய அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ருமேனியா என அவ்வளவா…
-
- 0 replies
- 572 views
-
-
வங்கதேசத்தில் ஆளில்லாத விமானத்தை பறக்க விட்ட தென்ஆப்ரிக்க வீரர்கள்! வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது டாக்காவில் முகாமிட்டுள்ளது. பயிற்சியில் ஈடுபட்டு வரும் தென்ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திற்கு மேலே 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லாத விமானத்தை பறக்கவிட்டு, கேமரா மூலம், பயிற்சிமுறைகளை படம் பிடித்தனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் வங்க தேசத்தில் அனுமதியில்லாமல் இது போன்று ட்ரோன் பறக்க விட தடையிருக்கும் நிலையில், இதுகுறித்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் போனது. உடனடியாக அவர்கள் ட்ரோனை தரையிறக்க உத்தரவிட்டனர். இதையடுத்து ட்ரோன் இறக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக வங்கதேச ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்பிடம், தென் ஆப்ப…
-
- 0 replies
- 399 views
-
-
111 ஓவர்களில் 562 ரன்கள் விளாசித் தள்ளிய ஆஸ்திரேலியா எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிராக பந்தை வெளுத்து வாங்கும் மிட்செல் மார்ஷ். | படம்: ராய்ட்டர்ஸ். செம்ஸ்போர்டில் நடைபெறும் எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 111 ஓவர்களில் 562 ரன்களை விளாசி தள்ளியது. நேற்று தொடங்கிய இந்த 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற எஸ்ஸெக்ஸ் அணியின் கேப்டன் ரவி பொபாரா முதலில் ஆஸ்திரேலியாவை தெரியாமல் களமிறக்கி விட்டார். ஆனால் எஸ்ஸெக்ஸ் பந்து வீச்சு அவ்வளவு பலமானது அல்ல என்பதையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும், ஜே.ஏ.போர்ட்டரை விட்டால் அடுத்த முனையில் நியூஸிலாந்தின் ஜெஸ்ஸி ரைடர் பந்து வீசினார். சாலிஸ்பரி, வெஸ்ட்லி, ரியான் டென் டஸ்சாதே, நிஜ்ஜர், பிரவுன் என்று 8 பவுலர்கள் …
-
- 0 replies
- 325 views
-
-
ஒரு கையில் ஐஸ்கிரீம், இன்னொரு கையில் கேட்ச்: கிளென் மேக்ஸ்வெல் அசத்தல் கிளென் மேக்ஸ்வெல். | ட்விட்டர் படம். இங்கிலாந்தில் நடைபெற்ற காட்சிப் போட்டி ஒன்றில் ஒரு கையில் ஐஸ்கீரீமை வைத்துக் கொண்டே மற்றொரு கையில் கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு: இங்கிலிஷ் கிளப் அணியான யார்க் ஷயர் அணிக்கும், பார்ட்ஸே என்ற கிராமப்புற கிளப் அணிக்கும் இடையே நடைபெற்ற காட்சிப் போட்டி ஒன்றில் யார்க்ஷயர் அணிக்கு ஆடிய கிளென் மேக்ஸ்வெல், எல்லைக்கோட்டருகே 'கார்னெட்டோ' ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது பார்ட்ஸே அணி பேட்ஸ்மென் எட் கிளேய்ட்டன் ஒரு பந்தை எல்லைக்…
-
- 1 reply
- 236 views
-
-
கைமாறுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் கிங் பிஷர் நிறுவனத்தின் விஜய் மல்லையா வசம் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்ஸ் நிறுவனம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிந்தால் கூறும்போது, “இந்தியாவில் கிரிக்கெட் அதிகம் பேரால் விரும்பக்கூடிய விளை யாட்டாக உள்ளது. எனவே, ஐபிஎல் அணியை வாங்க முடிவெடுத் துள்ளோம். ஆனால், எந்த அணி என்பதைச் சொல்ல மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். அந்த அணி பெங்களூரு அணியா எனக் கேட்டதற்கு, அதை மறுக் கவோ, ஆமோதிக்கவோ இல்லை. “அது அவர்களைப் (ஆர்சிபி) பொறுத்தது” என்றார். http://tamil.thehindu.com/sports/கைமாறுகிறது-ராயல்-சேலஞ்சர்ஸ்/article7382133.ece
-
- 1 reply
- 388 views
-
-
குதிரை பந்தயங்களில் கலக்கிய 'குயிட்டோ ஸ்டார்' மரணம்! சர்வதேச அளவில் குதிரை பந்தயங்களில் வெற்றி பெற்ற, புகழ்பெற்ற 'குயிட்டோ ஸ்டார்' குதிரை, இடுப்பு எலும்பு முறிவு காரணமாக நேற்று மரணமடைந்தது. இங்கிலாந்தில் நடைபெறும் பல்வேறு குதிரை பந்தயங்களில் கலந்து கொண்டு கோப்பைகளை வென்ற குதிரை குயிட்டோ ஸ்டார். தற்போது 15 வயதான குயிட்டோ ஸ்டார், கடந்த 2012ஆம் ஆண்டு குதிரை பந்தயங்களில் இருந்து ஓய்வு பெற்றது. ஓய்வுக்கு பின், இந்த குதிரை அதன் உரிமையாளர் ஸ்மித்தின் பராமரிப்பில் இருந்து வந்தது. இந்தநிலையில் மேய்ச்சலுக்கு போன குயிட்டோ ஸ்டார், கீழே விழுந்ததில் எலும்புமுறிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த குதிரைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று குயிட்டோ ஸ்டார் பர…
-
- 0 replies
- 295 views
-
-
முதல் பந்திலிருந்தே அடிக்க வேண்டும் என்றாலும் தயார்: முரளி விஜய் முரளி விஜய். | கோப்புப் படம். டெஸ்ட் போட்டிகளில் வேறொரு தளத்துக்கு உயர்ந்துள்ள முரளி விஜய், தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது தேர்வு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த முரளி விஜய், ஈ.எஸ்.பி.என்.-கிரிக் இன்போ இணையதள பேட்டியில் கூறும் போது, “அந்தந்த கிரிக்கெட் வடிவத்துக்குத் தக்கவாறு என்னை வெளிப்படுத்திக் கொள்ள போகிறேன், டெஸ்ட் போட்டிகளில் இயல்பான ஆட்டத்தை கட்டுப்படுத்திக் கொள்வேன் என்று ஏன் கூறினேன் என்றால், அங்கு எதிரணியினருக்கு நிரூபிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. சீரான முறையில் ரன்களை எடுக்க வேண்டும் என்பதே டெஸ்டில் குறிக்கோள். அதற்காக எனது இயல்பான ஆட்டத…
-
- 0 replies
- 331 views
-
-
அடிலெய்ட் மைதானத்தில் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி கிரிக்கெட் வரலாற்றில் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் நவம்பர் 27-ம் தேதி ஆஸி.-நியூஸி. அணிகள் மோதுகின்றன. | படம்: ராய்ட்டர்ஸ். கிரிக்கெட் ஆட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் மீது ரசிகர்களின் ஆர்வத்தை ஈர்க்கும் விதமாக பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்ட பரிசோதனை முயற்சியாக, இந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி, ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே முதன் முதலாக பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காகவென்றே ‘பிங்க்’ நிறப் பந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளன. நியூஸிலாந்து அணி ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் 3-வது…
-
- 0 replies
- 570 views
-
-
கேப்டன் தோனி உள்ளிட்ட வீரர்களுக்கு பாதி மொட்டையடித்து வங்கதேசத்தில் விளம்பரம்! டாக்கா : இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அரை மொட்டையடித்து விட்டது போல, வங்கதேச பத்திரிகை சார்பில் விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. முதன் முறையாக வங்கதேசம் அணி இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்நிலையில் இந்திய அணி சந்தித்த இந்த தோல்வியை குறிக்கும் வகையில் ‘புரோதோம் ஆலோ’ என்ற வங்கதேசத்தை சேர்ந்த வாரப்பத்திரிகை, இந்திய வீரர்களை அவமானப்படுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த பத்திரிகை வைத்துள்ள பேனரில், இந்த…
-
- 0 replies
- 346 views
-