விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
கத்தார் கழகத்தில் இணைந்தார் ஸாவி ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் ஒன்றிய சம்பியன்ஸ் லீக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் சம்பியனான பார்சிலோனா கழகத்திற்காக 17 வருடங்களாக விளையாடிய ஸ்பெய்ன் வீரர் ஸாவி ஹேர்னெண்டெஸ் அங்கிருந்து விடைபெற்று புதிய கழகத்தில் இணைந்துள்ளார். 11 வயதில் பார்சிலோனா கழகத்தின் கனிஷ்ட பிரிவில் இணைந்த ஸாவி, அதன் பின்னர் தனது 35ஆவது வயதுவரை அதாவது 24 வருடங்களாக அதே கழகத்திற்காகவே விளையாடிவந்துள்ளார். 17 வருடங்களாக பார்சிலோனாவின் சிரேஷ்ட அணியில் இடம்பெற்ற அவர் பல வெற்றிக் கிண்ணங்களை அக்கழகத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். இவ்வாறாக 24 வருடங்கள் பார்ஸிலோன கழக ஜேர்சியை மாத்திரம் அணி…
-
- 0 replies
- 402 views
-
-
அட மிஸ்டர். கூல் கூட சண்டைக்கு போயிருக்காருப்பா...! ( வீடியோ) இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் தோனிக்கு 'கூல் கேப்ட' என்ற செல்லப் பெயர் உண்டு.ஆனால் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் உண்மையிலேயே மிக கூலான மனிதர். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஜென்டிலாக பல விஷயங்களில் நடந்து கொண்ட நிஜ கிரிக்கெட்டர். ஆனால் இவர் கூட ஒரு முறை உணர்ச்சிவசப்பட்டு எதிரணி வீரரருடன் சண்டைக்கு போன வரலாறும் உண்டு. கடந்த 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தின் போது பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சோகைப் அக்தருடன் ராகுல் டிராவிட் கோபத்தில் சண்டைக்கு போன வீடியோ காட்சி இது. இருவருக்கும் வாக்குவாதம் நடந…
-
- 0 replies
- 321 views
-
-
குமார் சங்கக்காரவின் ஓய்வு நெருங்குகிறது இந்தியாவுக்கு எதிராக காலியில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டி நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் விளையாட்டிலிருந்து விடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியாக அமையும் என கருதப்படுகின்றது. எவ்வாறாயினும் தேசிய தெரிவுக் குழுவினர் மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன இடைக்கால சபை உறுப்பினர்களுடன் நாளை நடைபெறவுள்ள சந்திப்புக்குப் பின்னரே குமார் சங்கக்காரவின் ஓய்வு குறித்த திட்டவட்டமான முடிவு அறிவிக்கப்படவுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி ஆகியவற்றில் மாத்திரமே தான் விளையாடவுள்ளதாக ஏற்கனவே குமா…
-
- 2 replies
- 480 views
-
-
இது ஆரம்பம் தான் *மனம் திறக்கிறார் மோகித் சர்மா புதுடில்லி: ‘‘சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இன்னும் ஆரம்ப நிலையில் தான் உள்ளேன். மற்றபடி சமீபத்திய வெற்றிகள் சென்னை அணி கேப்டன் தோனி கொடுத்த வாய்ப்புகளால் கிடைத்தவை,’’ என மோகித் சர்மா தெரிவித்தார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா, 26. பிரிமியர் தொடரில் சென்னை அணிக்காக விளையாடுபவர். கடந்த 2013 ஆக., 1ல் அறிமுகமான இவர், இதுவரை இந்திய அணிக்காக 20 ஒருநாள், 4 ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்றுள்ளார். வரும் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ள இவர் தனது திறமை குறித்து கூறியது: சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆகி 2 ஆண்டுகள் ஆகவுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் எனது பவுலிங் மற்றும் உடற்தகு…
-
- 0 replies
- 332 views
-
-
தோனியை ‘மிஸ்’ பண்ணுகிறேன் * கோஹ்லி உருக்கம் தாகா: ‘‘வீரர்களுக்கான ‘டிரஸ்சிங் ரூமில்’ தோனி இல்லாதது புதுமையான உணர்வை தந்தது. இவரது குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது,’’ என, விராத் கோஹ்லி தெரிவித்தார். கடந்த ஆஸ்திரேலிய தொடரின் போது டெஸ்ட் அரங்கில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். இதையடுத்து, இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக விராத் கோஹ்லி நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான அணி வங்கதேசத்துக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் போட்டியை ‘டிரா’ செய்தது. இப்போட்டியில் கோஹ்லியின் துணிச்சலான முடிவுகளை முன்னாள் கேப்டன் கங்குலி உள்ளிட்டோர் பாராட்டினர். கோஹ்லியை பொறுத்தவரை தோனி மீதான தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாதவராக உள்ளார். இது குறித்து கோஹ்லி கூறியது: வங்கதேசத்துக்கு எத…
-
- 0 replies
- 290 views
-
-
அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை *விராத் கோஹ்லி ஆதரவு புதுடில்லி: அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை (‘டி.ஆர்.எஸ்.,’) முறைக்கு இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராத் கோஹ்லி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதை துவக்கத்தில் இருந்தே எதிர்த்து வரும் பி.சி.சி.ஐ., என்ன செய்ய போகிறது என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் கொண்டு வரப்பட்டது அம்பயர் தீர்ப்பு மறுபரிசீலனை முறை. இதில் நம்பகத்தன்மை இல்லை என்பதால், துவக்கத்தில் இருந்தே இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பி.சி.சி.ஐ.,யின் அப்போதைய தலைவர் சீனிவாசன், இந்திய அணி கேப்டன் தோனியும் இதை கடுமையாக குறை கூறினர். இதனால் இந்தியா பங்கேற்கும் இரு நாடுகள் கொண்ட தொடர்களில் டி.ஆர்.எஸ்., பயன்படுத்தப்…
-
- 0 replies
- 375 views
-
-
உசைன் போல்ட்டின் வேகம் குறைகிறது? உசைன் போல்ட் 200 மீ ஓட்டத்தில் 20.29 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்த பிறகு. | படம்: ராய்ட்டர்ஸ். 200 மீ ஓட்டத்தில் 20.29 விநாடிகள் எடுத்துக் கொண்டது தன் வாழ்நாளின் மோசமான ஓட்டமே என்று கூறுகிறார் உசைன் போல்ட் 100 மீ, 200 மீ உலக சாதனைகளை தன் வசம் வைத்துள்ள ஜமைக்க அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், ராண்டல் தீவில் நடைபெற்ற கிராண்ட் ப்ரீ 200 மீ ஓட்டத்தில் 20.29 விநாடிகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றார். 6 முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற அதிவேக வீரரான உசைன் போல்ட்டின் 200 மீ உலக சாதனை 19.19 விநாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அடிடாஸ் கிராண்ட் ப்ரீ 200 மீ ஓட்டத்தில் உசைன் போல்ட் 20.29 விநாடிகள் எடுத்துக் கொண்டுள்ளார்.…
-
- 0 replies
- 345 views
-
-
கால்பந்து மைதானத்தில் ஸ்வஸ்திகா சின்னம்: மன்னிப்பு கோரியது குரேஷியா குரேஷியாவின் ஸ்பிளிட் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற குரேஷியா-இத்தாலி அணிகள் இடையிலான ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் ஷிப் தகுதிச் சுற்றின்போது மைதானத்தில் ஹிட்லருடைய நாஜிப் படைகளின் சின்னமான ஸ்வஸ்திகா வரையப்பட்டி ருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேற்கத்திய நாடுகளில் இனவெறி தொடர்புடைய ஸ்வஸ்திகா சின்னத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் பாதி ஆட்டத்தின் போது இத்தாலி அணியினரின் தாக்குதல் ஆட்ட பகுதியில் (அட்டாக்கிங் சைடு) அந்த சின்னம் வரையப்பட்டு இருந்தது. ஸ்வஸ்திகா சின்னம் பெயின்ட்டால் வரையப்பட்டிருந்ததா அல்லது மைதானத்தில் இருந்த புற்களை வெட்டி அதுபோன்று வடிவமைத்திருந்தார்களா எ…
-
- 0 replies
- 410 views
-
-
பேட்டிங் ஸ்டைல் மாற்றம்.. ஹெலிகாப்டர் ஷாட்.. பழைய பன்னீர்செல்வமாக திரும்பும் டோணி! டெல்லி: வங்கதேசத்தில் நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டோணி பழைய ஹெலிகாப்டர் டோணியாக திரும்ப போகிறாராம். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள டோணி, தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முழு அளவில் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் மற்றும் முத்தரப்பு கிரிக்கெட்டில் விளையாடியது. டெஸ்டில் ஓய்வு டெஸ்ட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, கேப்டன் டோணி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதன்பிறகு உலக கோப்பை முடிந்து தற்போது இந்தியா வங்கதேசத்தில் சுற்றுப் பயணம…
-
- 0 replies
- 320 views
-
-
யூ டியூப்பில் புதிய சாதனை: 415 அடி உயரத்தில் இருந்து வீசப்பட்டு வலைக்குள் விழுந்த கூடைப்பந்து ( வீடியோ) ஆஸ்திரேலியாவின் கோர்டன் அணைக்கட்டில் இருந்து ஒரு புதிய சாதனை புறப்பட்டு வந்துள்ளது. சுமார் 460 அடி உயரமுள்ள இந்த அணைக்கட்டின் 415வது அடி உயரத்தில் இருந்து போடப்பட்ட கூடைப்பந்து மிகச்சரியாக வலைக்குள் சென்று விழுந்தது. இது ஒரு புதிய கின்னஸ் சாதனையும் கூட. இதற்கு முன் ராட்டர்டாம் நகரில் உள்ள 299 அடி உயரமுள்ள யூரேமாஸ்ட் கோபுரத்தில் இருந்து வீசப்பட்டதுதான் இதுவரை சாதனையாக இருந்தது. இணையங்களில் மிக வேகமாக இந்த வீடியோ பரவி வருகிறது. யூடியூப்பில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் இந்த வீடியோ காட்சி புதிய சாதனை படைத்துள்ளது. http://www.vikatan.com/n…
-
- 0 replies
- 329 views
-
-
இந்தியாவுக்கு விருப்பம் இல்லை... எமிரேட்ஸில் 2016 ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி? கராச்சி: 2016ம் ஆண்டு ஆசிய கோப்பைக் கிரிக்கெட் போட்டித் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறலாம் என்று தெரிகிறது. மார்ச் மாதம் முதல் வாரத்தில் இந்தப் போட்டித் தொடர் இடம் பெறலாம் என்றும் தெரிகிறது. இருப்பினும் இதுதொடர்பான இறுதி முடிவு, சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. என்றாலும், எமிரேட்ஸில் இப்போட்டிகள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 வருடத்திற்கு ஒருமுறை ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டித் தொடரை 2016ம் ஆண்டு நடத்த எந்த ஆசிய நாடும் இதுவரை விருப்பம் தெரிவிக்கவில்லை. இந்…
-
- 0 replies
- 388 views
-
-
டெஸ்ட் தரவரிசை பேட்டிங், பந்துவீச்சு :முதல் பத்தில் ஒரு இந்தியர் கூட இல்லை...! மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், ஒரு ரன்னில் இரட்டை சதத்தை கோட்டை விட்ட ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். ஐ.சி.சி. லேட்டஸ்ட் டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித், 913 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். கடந்த 2012ஆம் ஆண்டு முதலிடம் பிடித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு பிறகு இப்போதுதான் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அடுத்த இடத்தில் இலங்கை வீரர் சங்கக்காரா 909 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். தென்ஆப்ரிக்க அணியின் கேப…
-
- 0 replies
- 366 views
-
-
மூன்றாமிடத்தில் ஸ்மித் அவுஸ்திரேலியா அணியின் உப தலைவர் ஸ்டீபன் ஸ்மித் இன்று ஆரம்பிக்கவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டியில் மூன்றாமிடத்தில் துடுப்பாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா அணித் தலைவர் இதனை உறுதி செய்துள்ளார். இந்திய அணியுடனான தொடரிலும், உலகக்கிண்ணத் தொடரிலும் ஸ்மித் மூன்றாமிடத்தில் களமிறங்கி அதிக ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். ஷோன் மார்ஸ் மூன்றாமிலக்க வீரராக களமிறங்க திட்டம் இருந்த போதும் க்றிஸ் ரொஜர்ஸ் உபாதையடைந்ததை தொடர்ந்து மார்ஸ் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளார். தான் ஏற்கனவே இது தொடர்பாக ஸ்மித் உடன் பேசியுள்ளதாகவும் நீண்ட நாட்களாக அவரை மூன்றாமிலக்கத்தில் களமிறக்கும் திட்டம் இருந்ததாகவும் அணித் தலைவர் ஸ்மித் மே…
-
- 13 replies
- 1.2k views
-
-
வெஸ்லி ஹாலுக்கு ‘ஐ.சி.சி. பிரபலம்’ அந்தஸ்து வழங்கி கௌரவிப்பு அவுஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளிடையே கிங்ஸ்டன் சபினா பார்க் மைதானத்தில் நடக்கும் 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளன்று மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் வெஸ்லி ஹால் ‘ஐ.சி.சி. பிரபலம்’ அந்தஸ்து வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்த ஆண்டில் ஐ.சி.சி. பிரபலமாக அங்கீகரிக்கப்படும் 4ஆவது வீரர் ஹால் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பெட்டி வில்சன்இ அனில் கும்ளேஇ மார்டின் குரோவ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக மொத்தம் 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஹால் 192 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். 81…
-
- 0 replies
- 367 views
-
-
திருநெல்வேலி விளையாட்டுக்கழக அணி ஜே.பி.எல்.க்கு தகுதி யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் எனப்படும் ஜே.பி.எல் டுவெண்டி 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் தகுதிகாண் போட்டியில் திருநெல்வேலி விளையாட்டுக்கழக அணி வெற்றிபெற்று ஜே.பி.எல் சுற்றில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. யாழ்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் சுழிபுரம் விக்டோரியன்ஸ் அணியும் திருநெல்வேலி விளையாட்டுக்கழக அணியும் மோதின. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய திருநெல்வேலி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றது. என்.லவகாந் அதிரடியாக ஆடி 120 ஓட்டங்களையும், எஸ்.சுரேந்திரன் 36, என்.சிவராஜ் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்த…
-
- 0 replies
- 278 views
-
-
அன்டேர்சனுக்கு ராணியின் கௌரவம் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் அன்டர்சன், இங்கிலாந்து மகாராணியின் கௌரவத்தை அவரின் பிறந்த நாள் அன்று பெற்றுக்கொள்ளவுள்ளார். அண்மையின் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரில் இங்கிலாந்து அணி சார்பாக கூடுதலான டெஸ்ட் விக்கெட்களைக் கைப்பற்றியவர் என்ற சாதனையைக் கைப்பற்றிக்கொண்டார். அண்மையில் நியூசிலாந்து தொடரில் 400 டெஸ்ட் விக்கெட்களைக் கைப்பற்றியவர் என்ற மைல்க்கல்லை தாண்டினார். இங்கிலாந்து அணி சார்பாக 400 விக்கெட்களைக் கைப்பற்றியவர் என்ற முதலாவது வீரர் ஆக இவர் மாறியுள்ளார். இங்கிலாந்தில் சாதனை படைத்தவர்களை மகாராணியின் பிறந்த நாள் அன்று கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில் அன்டர்சன் இந்த கௌரவத்தைப் பெறவுள்ளார். 2002ஆம் ஆண்டு தனது சர்வதேச …
-
- 0 replies
- 355 views
-
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் : அக்ரத்தை முந்திய ஹர்பஜன் கபில்தேவை நோக்கி...! ஃபாதுல்லாவில் நடைபெற்ற இந்திய- வங்கதேச அணிகளுக்கிடையேயான டெஸ்ட் ஆட்டம் சமனில் முடிந்தது. ஆட்டத்தின் பெரும்பகுதியில் மழை விளையாடி விட்டதால் எந்த முடிவும் கிடைக்காத போட்டியாக இது அமைந்து விட்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 462 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர்கள் ஷிகர்தவான் 173 ரன்களும் முரளி விஜய் 150 ரன்களும் அடித்தனர். இந்திய அணியை சேர்ந்த தொடக்க வீரர்கள் இருவரும் 150 ரன்கள் அடிப்பது இது மூன்றாவது முறை ஆகும். வங்கதேச அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 256 ரன்கள் எடுத்தது. தமிம் இக்பால் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 35 ரன்கள்…
-
- 0 replies
- 325 views
-
-
ராஜினாமா முடிவை வாபஸ் பெறும் முடிவில் ஜோசப் பிளேட்டர்? -சுவிஸ் பத்திரிகை தகவல் ஃபிஃபாவில் ஏற்பட்ட ஊழல் புகார் காரணமாக 5வது முறையாக தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த ஜோசப் பிளேட்டர் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். அடுத்த தலைவர் பதவியில் அமரும் வரை அவர் தற்போது பதவியில் தொடருகிறார். வருகிற ஜுலை 20ஆம் தேதி தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தும் தேதி குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது. எப்படியும் வரும் டிசம்பர் 16ஆம் தேதிக்குள் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் இருந்து வெளி வரும் 'சுவிஸ் ஐயம் சான்டாக்' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், '' ஜோசப் பிளேட்டருக்கு ஆசிய மற்றும் ஆ…
-
- 0 replies
- 244 views
-
-
மெஸ்சியதாம்பா இப்படி ஆக்கி வச்சிருக்காங்க பக்கத்து ஸ்டேட்காரங்க..! பிரிக்க முடியாதது எது... கால்பந்தும் கேரளாவும்.. அந்தளவுக்கு இந்த குட்டி மாநிலத்தில் கால்பந்து ரசிகர்கள் என்ற பெயரில் வெறியர்களே இருக்கிறார்கள். உலகக் கோப்பை கால்பந்து போட்டி, ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியின் போது கேரளாவில் உள்ள அனைத்து நகரங்களும் இரவில் கூட விழித்துதான் இருக்கும். நள்ளிரவு நடைபெறும் போட்டிகளை பார்த்து விட்டு தங்களுக்கு பிடித்த அணிகள் வெற்றி பெற்று விட்டால் இரவிலேயே வெற்றி ஊளையிடுவது கொடி பிடித்துக் கொண்டு ஊர்வலமாக கேரள ரசிகர்களுடன் பிறந்தது. கடந்த இரு நாட்களுக்கு முன் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி சிலி நாட்டில் தொடங்கியது. உலகிலேயே 3வது மிகப் பெரிய கால்பந்து திருவிழா இத…
-
- 0 replies
- 257 views
-
-
சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு இலஞ்சம் வழங்கியதா பாகிஸ்தான்? தங்கள் நாட்டில் வந்து விளையாடியதற்காக சிம்பாப்வே கிரிக்கெட் வீரர்களுக்கு தலா 8 இலட்சம் ரூபாவை ஊக்கத்தொகையாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. சிம்பாப்வே கிரிக்கெட் அணி கடந்த மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடியது. இரு தொடரையும் பாகிஸ்தான் கைப்பற்றியது. 2009-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நேரடி தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து, அங்கு முன்னணி அணிகள் செல்வதை தவிர்த்து வருகின்றன. பாதுகாப்பு அச…
-
- 1 reply
- 259 views
-
-
ஐ.பி.எல். போல பாகிஸ்தான் சூப்பர் லீக் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி 20 கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு யு.ஏ.ஈ நாட்டில் நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். போல பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பெயரில் டி20 போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த 2 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. இருந்தும் பல்வேறு காரணங்களினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இந்நிலையில் லாகூரில் நேற்று நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷயார்கான் கூறுகையில், வரும் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை யு.ஏ.ஈ நாட்டில் பாகிஸ்தான் சூ…
-
- 0 replies
- 226 views
-
-
இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி ஒரு கோடி வரை மோசடி: கிரிக்கெட் வீரருக்கு சிறை! இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிப்ப்பதாக கூறி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணமோசடி செய்த இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் வீரருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இங்கிலாந்தை சேர்ந்த சோமர்செட்,லாங்ஷயர், டெர்பிஷயர் ஆகிய அணிகளுக்காக விளையாடி வந்தவர் ஆன்டி ஹேஹர்ஸ்ட். தற்போது 52 வயதான இவர் கிரிக்கெட்டில் பல்வேறு நிதிமோசடிகளில் சிக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் லாங்ஷயர் கிரிக்கெட் போர்டு இயக்குனராக இருந்த போது 77 ஆயிரத்து 800 அமெரிக்க டாலர்களை வரை மோசடி செய்த புகாரில் சிக்கினார். அதுபோல் வோர்ஸ்லி கிரிக்கெட் அணிக்காக விளையாடிய போது இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதா…
-
- 0 replies
- 270 views
-
-
நானே ராஜா: கிறிஸ் கெய்ல் டி20 கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் நானே ராஜா என மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, மக்கள், என்னை டி20 கிரிக்கெட்டின் ராஜா என்று புகழ்கிறார்கள். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டின் ராஜாவும் நானே. நான் இரண்டு முச்சதங்கள் அடித்துள்ளேன். 21 ஒருநாள் போட்டிச் சதங்களும்கூட அடித்துள்ளேன். அதனால், சகல வகை கிரிக்கெட்டுக்கும் நானே ராஜா. டெஸ்ட் போட்டி என்பது அற்புதமானது. உங்களுடைய மனநிலையைப் பரிசோதிக்கும். டி20 கிரிக்கெட்டால் பல புதிய ரசிகர்கள் இந்த விளையாட்டுக்குக் கிடைத்திருக்கிறார்கள். ஆகவே டி…
-
- 0 replies
- 402 views
-
-
ஃபோர்ப்ஸ் பட்டியலில் தோனி: பணக்கட்டுகள் மேல் உறங்கும் விளையாட்டு வீரர்! கடந்த 12மாதங்களில் விளையாட்டு முலம் அதிகம் சம்பாத்துள்ள 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மேனி பேக்கியோ300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானத்துடன் முதலிடம் பிடித்தார். அண்மையில் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் மேனி பேக்கியோவை வீழ்த்தியதால் மட்டும் 1200 கோடி ரூபாயை மேவெதர் சம்பாதித்திருந்தது. குறிப்பிடத்தக்கது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மேவெதர் தற்போது படுக்கையில் பணக்கட்டுகளை போட்டு அதன் மேல் படுத்து உறங்குவதை வாடிக்கையாக கொண்டவர். ஒரு விமானம் மற்றும் 8 விலை உயர்ந்த கார்களை மேவெதர் வைத்துள்ளார்.…
-
- 2 replies
- 346 views
-
-
சமையல்காரருக்கு மகனாக பிறந்த ரொனால்டோ உலகின் பணக்கார வீரர் ஆனது எப்படி? பிரிட்டிஷ் அகாடமி விருது பெற்ற இயக்குனர் பிரைட்டன் அண்டோனி வோன்க் இயக்கத்தில், பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. ரியல்மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்ச்சுகல் நாட்டில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சாதாரண சமையல்காரர். இவரது தாய் நகராட்சி ஒன்றில் பூங்காக்களை பராமரிக்கும் வேலையில் இருந்தார். ஏழை குடும்பத்தில் பிறந்தாலும், தனது கால்பந்து திறமையால் உலகிலேயே கால்பந்து மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரராக உருவெடுத்துள்ளார். இவரது ஆண்டு வருமானம் சுமார் 600 கோடிக்கும் மேல். ஏழ்மை நிலையில் இருந்து …
-
- 4 replies
- 509 views
-