விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
உலக சாம்பியனுக்கு உதை: ஜெர்மனியை வீழ்த்தியது அமெரிக்கா கொலாக்னே: ‘நட்பு’ கால்பந்து போட்டியில் உலக சாம்பியன் ஜெர்மனியை, 2–1 என்ற கணக்கில் வீழ்த்தியது அமெரிக்க அணி. உலக கோப்பை சாம்பியன் ஜெர்மனி, அமெரிக்க அணிகள் மோதிய ‘நட்பு’ கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடந்தது. கடந்த வாரம் ஆம்ஸ்டர்டாமில் நடந்த ‘நட்பு’ போட்டியில் நெதர்லாந்தை 4–3 என, வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்கியது அமெரிக்கா. போட்டியின் 13வது நிமிடத்தில் மரியா கோட்சா, ஜெர்மனி அணிக்கு முதல் கோல் அடித்தார். 41வது நிமிடத்தில் அமெரிக்காவின் மிக்ஸ் டிஸ்கிரட் ஒரு கோல் அடிக்க, முதல் பாதி 1–1 என சமன் ஆனது. இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் முன்னிலை பெற எடுத்த முயற்சிகள் வீணாகின. போட்டி முடிய 3 நிமிடம் இருந்த …
-
- 0 replies
- 439 views
-
-
ஜோஸ் பட்லரை, தோனி, டிவில்லியர்ஸ், கில்கிறிஸ்ட்டுடன் ஒப்பிடும் இங்கிலாந்து ஊடகம் டெஸ்ட், ஒருநாள், டி20 என்று சமீபத்தில் அசத்தி வரும் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் / பேட்ஸ்மென் ஜோஸ் பட்லரை மற்ற அதிரடி விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மென்களான டிவில்லியர்ஸ், கில்கிறிஸ்ட், தோனி ஆகியோருடன் ஒப்பிட்டுள்ளது இங்கிலாந்து ஊடகம். நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த வாரம் முடிந்த டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் 3 மணி நேரங்களில் 73 ரன்கள் எடுத்தார் ஜோஸ் பட்லர். டி20 போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக 35 பந்துகளில் 71 ரன்கள் விளாசித் தள்ளினார். பிறகு அன்று நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 77 பந்துகளில் 129 ரன்களை விளாசி அந்தத் தருணத்தில் சரிவிலிருந்த இங்கிலாந்தை மீட்டு நிய…
-
- 0 replies
- 742 views
-
-
வருத்தத்துடன் ஓய்வு பெற்றார் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மேட் பிரையர் ஜூலை 23, 2007-ம் ஆண்டு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோனி விளாசுவதை பார்க்கிறார் தற்போது ஓய்வு அறிவித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மேட் பிரையர். | கோப்புப் படம். குதிகால் தசைநார் காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாத நிலையில் இங்கிலாந்து மற்றும் சசெக்ஸ் அணி விக்கெட் கீப்பர் மேட் பிரையர் கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இஷாந்த் சர்மா அபாரமாக வீச் இந்தியாவை வெற்றி பெறச் செய்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்துகொண்டார் பிரையர். இதனையடுத்து 2014 சீசன் முழுதும ஆட முடியாத நிலை ஏற்பட்டது. 2015-இல் மீண்டும் கிரிக்கெட்டுக்குள் நுழையல…
-
- 0 replies
- 309 views
-
-
வரி ஏய்ப்பு விவகாரம் : தந்தையால் நீதிமன்ற படிகட்டு ஏறும் லயனல் மெஸ்சி! பார்சிலோனா :வரி ஏய்ப்பு விவகாரத்தில் பார்சிலோனா அணி வீரர் லயனல் மெஸ்சி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயனல் மெஸ்சி, உலகப் புகழ்பெற்ற கால்பந்து அணியான ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனா அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வருகிறார். கடந்த 2007 முதல் 2009 ஆம் ஆண்டு காலத்தில் லயனல் மெஸ்சி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. விளம்பர வருவாயை குறைத்துக் காட்டி, சுமார் 4.1 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.60 கோடி) வரி ஏய்ப்பு செய்ததாக மெஸ்சி அவரது தந்தை ஜார்ஜ் ஹார்சியோ ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. அத…
-
- 0 replies
- 282 views
-
-
கொழும்பு தியகம விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில், 800 மீற்றர் தூர ஓட்டப்போட்டியில் முதலிடத்தை பெற்றுக்கொண்ட கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவி தேவதாஸ் டென்சிகா மற்றும் 20 வயதுப்பிரிவு உயரம் பாய்தலில் மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்ட கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி மாணவி யோகநாதன் சுகிர்தா ஆகியோரை, கிளிநொச்சி மாவட்டச்செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் புதன்கிழமை (10) கௌரவித்தார். கிளிநொச்சி மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில், இருவருக்கும் மாவட்டச்செயலகத்தால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில், வடமாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் ராஜா ரணசிங்க, மாவட்டச் செயலக உத்தியோகஸ்தர்கள், வீராங்கனைகளின் பெற்றோர…
-
- 0 replies
- 262 views
-
-
கார்கில்ஸ் ஃபுட் சிட்டி எவ். ஏ. கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின் முன்னோடி கால் இறுதிகளில் விளையாடுவதற்கு யாழ்ப்பாணம் சிங்கிங் ஃபிஷ் கழகமும் மன்னார் புனித சூசையப்பர் கழகமும் தகுதிபெற்றுள்ளன. எவ். ஏ. கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் இந்த மாவட்டங்களிலிருந்து இரண்டு கழகங்கள் முன்னோடி கால் இறுதிக்கு முன்னேறியிருப்பது இதுவே முதல் தடவையாகும். ப்றீமியர் லீக் முதலாம் பிரிவு போட்டிகளில் விளையாடிவரும் நியூ ஸ்டார் கழகத்தை சிங்கிங் ஃபிஷ் கழகமும் பலம்வாய்ந்ததும் கடந்த வருடம் கால் இறுதிவரை முன்னேறிய இலங்கை போக்குவரத்துச் சபை விளையாட்டுக் கழகத்தை பிரபல்யம் குன்றிய மன்னார் புனித சூசையப்பர் கழகமும் வெற்றிகொண்டன. களனி மைதா…
-
- 0 replies
- 266 views
-
-
ஆண்டுக்கு ரூ. 7 கோடி சம்பளம்: உலகின் பணக்கார பயிற்சியாளராகிறார் ரவி சாஸ்திரி! வங்கதேச சுற்றுப்பயணம் முடிந்த பின் இந்திய அணிக்கு ரவிசாஸ்திரி நிரந்தர பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும், இதற்காக ஆண்டுக்கு ரூ.7 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் ஃபிளட்சரின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. அதற்கு பின், இன்று வரை இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை. தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணிக்கு தற்காலிக பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பொறுப்பேற்றுள்ளார். வங்கதேசத் தொடர் முடிந்ததும் இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள…
-
- 0 replies
- 274 views
-
-
2ஆவது தடவையாகவும் சம்பியனாகிய மகாஜன பெண்கள் கால்பந்தாட்ட அணி வடமாகாண கல்வி, விளையாட்டு மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண பாடசாலைகளின் அணிகள் மற்றும் வீர, வீராங்கனைகளுக்கிடையில் நடைபெற்று வரும் விளையாட்டுப் போட்டியின், 19 வயதுப்பிரிவு பெண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியில், தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி சம்பியனாகியது. பெண்கள் கால்பந்தாட்டப் போட்டிகள் 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளில், வவுனியா சிறுவர் பூங்கா மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் மாதகல் சென்.ஜோசப் றோமன் கத்தோலிக்க வித்தியாலயமும் மகாஜனக் கல்லூரியும் மோதின. முதற் பாதியாட்டத்தில் மகாஜனக் கல்லூரி வீராங்கனை என்.சானு தனது அணிக்கான முதலாவது கோலைப் பெற்றுக்கொடுத்தார். இரண்டாவ…
-
- 2 replies
- 446 views
-
-
வங்கதேசத்தைத் தொடர்ந்து ஜிம்பாவேவுக்கு அடுத்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி சுற்று பயணம் டெல்லி: வங்கதேச தொடரைத் தொடர்ந்து ஜிம்பாப்வேவில் அடுத்த மாதம் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. வங்கதேசத்தில் ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி இன்று பதுலாவில் தொடங்கியுள்ளது. இந்த சுற்றுப் பயணம் வரும் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து ஜூலை 7-ந் தேதி இந்திய அணி, ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. இது தொடர்பாக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும் அணியின் தற்போதைய இயக்…
-
- 0 replies
- 271 views
-
-
தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி வெற்றி இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் சிங்கர் வெற்றிக்கிண்ணத்துக்காக பாடசாலைகளில் 15 வயது பிரிவு 3 அணிகளுக்கிடையில் நடத்தி வரும் 50 ஓவர் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் போட்டியொன்றில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி 89 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. மகாஜனக் கல்லூரி மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை (08) நடைபெற்ற போட்டியில் மகாஜனக் கல்லூரி அணியை எதிர்த்து நெல்லியடி மத்திய கல்லூரி அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மகாஜனக் கல்லூரி அணி என்.சர்மிலன் பெற்ற 105 ஓட்டங்களின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 265 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் என்.சர்மிளன் 105, எஸ்.ரிசாந்த் 56 ஓட்டங…
-
- 0 replies
- 621 views
-
-
கடனில் இயங்கிய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை சேமிக்கும் நிறுவனமாக இடைக்கால சபை மாற்றியுள்ளது - சிதத் வெத்தமுனி 285 மில்லியன் ரூபா மேலதிகப் பற்றுடன் இருந்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை இடைக்கால நிருவாக சபை பொறுப்பேற்ற இரண்டு மாதகாலத்தில் நிதியை சேமிக்கும் உறுதியான நிறுவனமாக மாற்றியுள்ளதாக இடைக்கால நிருவாக சபைத் தலைவர் சிதத் வெத்தமுனி கூறினார். இடைக்கால நிருவாக சபையின் மாதாந்த முன்னேற்றகர நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் செய்தியாளர்களுட னான சந்திப்பு நேற்றுமுன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அநாவசிய செலவினங்களைக் குறைத்து அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் நிதி ஒதுக்கப…
-
- 0 replies
- 320 views
-
-
டிரினிடாட் டொபாக்கோ அணியை வாங்கினார் நடிகர் ஷாருக்கான்! பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான் ஹாலிவுட் நடிகர்கள் மார்க் வால்பெக், ஜெரார்ட் பட்லர் ஆகியோருடன் இணைந்து கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடி வரும் டிரினாட் டொபாக்கோ அணியை வாங்கினார். ஐ.பி.எல். கிரிக்கெட் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமானது. பிரபல நடிகை ஜுகி சாவ்லா அவரது கணவர் ஜெய் மேத்தா ஆகியோர் கொல்கத்தா அணியில் பங்குதாரர்களாக உள்ளனர். 86 மில்லியன் யு.எஸ். டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.500 கோடி ) மதிப்புடன் உள்ள கொல்கத்தா அணிதான் அதிக விலை மதிப்பு வாய்ந்த ஐ.பி.எல். அணி ஆகும்.இந்நிலையில் கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடி வரும் டிரினிடாட் டொபாக்கோ அணியை வாங்கவும் ஷாருக்கான் ம…
-
- 0 replies
- 368 views
-
-
''தேவையற்ற கட்டுப்பாடுகள்... பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பள்ளி மாணவர்களா?''- வாசிம் அக்ரம் ஒழுக்கம் என்ற பெயரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களை பள்ளி மாணவர்களைப் போல அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நடத்தி வருவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் குற்றச்சாட்டியுள்ளார். வாசிம் அக்ரம் உருவாக்கியுள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கான அறக்கட்டளை தொடக்க விழா நேற்று கராச்சி நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய வாசிம் அக்ரம்'' கடந்த 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தான் வீரர்களில் சிலர் 'மேட்ச் பிக்சிங்' ஈடுபட்டதாக சிறைத்தண்டனை விதிக்கப்ப்ட்டது துரதிருஷ்டவசமானது. ஆனால் அதற்கு பின், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்களின் சுதந்திரத்தை பாதிக்கும்…
-
- 0 replies
- 459 views
-
-
இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுநராக ஜொன்டி றோட்ஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்றுநராக தென் ஆபிரிக்காவின் முன்னாள் வீரர் ஜொன்டி றோட்ஸ் குறுகிய காலத்திற்கு பதவி வகிக்கவுள்ளார். இவர் நேற்று இரவு இலங்கையை வந்தடையத் திட்டமிடப்பட்டிருந்தது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிருவாக சபைத் தலைவர் சிதத் வெத்தமுனியின் முயற்சியின் பயனாகவே ஜொன்டி றோட்ஸின் வருகை அமைந்துள்ளது. அவுஸ்திரேலியாவிலும் நியூஸிலாந்திலும் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின்போது இலங்கை அணியினரின் களத்தடுப்பு தரம் குன்றியிருந்ததை அடுத்தே ஜொன்டி றோட்ஸ் அழைக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த எட்டாவது இண்டியன் …
-
- 3 replies
- 541 views
-
-
டெஸ்ட் தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் சங்கக்காரா, மேத்யூஸ், ஹேராத் சர்வதேச கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் போட்டிகள் அடிப்படையிலான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர்கள்:- சங்கக்காரா (இலங்கை) 909 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். டிவில்லியர்ஸ், ஹசிம் அம்லா 2வது, 3வது இடங்களில் உள்ளனர். சுமித் (அவுஸ்திரேலியா), மேத்யூஸ் (இலங்கை), யூனுஸ்கான் (பாகிஸ்தான்), ஜோரூட் (இங்கிலாந்து), வில்லியம்சன் (நியூசிலாந்து), வார்னர் (அவுஸ்திரேலியா), விராட் கோஹ்லி ஆகியோர் முறையே 4 முதல் 10 இடங்களில் உள்ளனர். பந்துவீச்சாளர்கள்:- ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா), ஆண்டர்சன் (இங்கிலாந்து), ஹாரீஸ் (அவுஸ்திரேலியா) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர். பவுல்ட் …
-
- 7 replies
- 662 views
-
-
உலக கோப்பை கிரிக்கெட் 'நாயகன்' 6 வருடத்துக்கு பிறகு சிறையில் இருந்து ரிலீஸ்! லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் உலக கோப்பை நாயகன் கிறிஸ் லீவிஸ், 6 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு இன்று விடுதலையடைந்தார். 1992ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அந்த உலக கோப்பையின் அரையிறுதியில், தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதின. 13 பந்துகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 22 ரன்கள் தேவை என்ற நிலையில் மழை பெய்தது. எனவே டக்வொர்த் லீவிஸ் விதிமுறை அமலுக்கு வந்து ஒரு பந்தில் 22 ரன்கள் எடுக்க வேண்டும் என்று விதிமுறை மாற்றப்பட்டது. பெரும் சர்ச்சைக்குறிய இந்த விதிமுறையால், தென் ஆப்பிரிக்கா தோற்றது. ஆனால், இங்கிலாந்துக்கோ அது கொண்டாட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
வருங்காலத்துக்கான வேகப்பந்து வீச்சு திறமைகள் இந்தியாவில் உள்ளன: கிளென் மெக்ரா எம்.ஆர்.எஃப். வேகப்பந்து அகாடமியின் இயக்குநராக இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆஸ்திரேலிய கிரேட் கிளென் மெக்ரா, இந்திய வேகப்பந்துவீச்சு திறமைகள் பற்றி நம்பிக்கை தெரிவித்துள்ளார். எம்.ஆர்.எஃப். அகாடமியிலிருந்து அடுத்து வரும் வேகப்பந்து வீச்சாளர்கள் பற்றி கிளென் மெக்ரா கூறும் போது, “வருண் ஆரோன், ஈஷ்வர் பாண்டே ஆகியோர் சிறப்பாக வீசி வருகின்றனர். மேலும் பல்தேஜ் சிங் இருக்கிறார், இவரிடம் நல்ல ஆக்ஷன் உள்ளது. சந்தீப் வாரியர் என்பவரும் நம்பிக்கை அளிக்கிறார். அஸ்வின் கிரிஸ்ட் என்பவரும் நெடுந்தூரம் முன்னேறி வந்துள்ளார். இவர் சரியான இடங்களில் பந்தை பிட்ச் செய்கிறார், தான் என்ன …
-
- 0 replies
- 466 views
-
-
டிவில்லியர்ஸ் சாதனையை குறிவைக்கும் வங்கதேச பேட்ஸ்மென் மொமினுல் ஹக் புதன்கிழமை இந்தியா-வங்கதேசம் இடையே ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஃபாதுல்லாவில் தொடங்குவதை அடுத்து வங்கதேச பேட்ஸ்மென் மொமினுல் ஹக், டிவில்லியர்ஸ் சாதனை ஒன்றை குறிவைத்துள்ளார். 12 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து டிவில்லியர்ஸ் அரைசதம் அடித்து ஒரு சாதனை புரிந்துள்ளார். டிவில்லியர்ஸ் இதனை நவம்பர் 2012 முதல் பிப்ரவரி 2014 வரை நடைபெற்ற 12 தொடர் டெஸ்ட் போட்டிகளில் அரைசதங்கள் எடுத்துள்ளார். வங்கதேசத்தின் மொமினுல் ஹக் இன்னும் ஒரு அரைசதம் எடுத்தால் டிவில்லியர்ஸ் சாதனையை சமன் செய்வார். வங்கதேச அணியின் இடது கை பேட்ஸ்மென் மொமினுல் ஹக் (வயது 23) அந்த சாதனையை சமன் செய்வாரா என்ற ஆவல் வங்கதேச அணியினரிடத்தில் ஏற்பட்டுள்ளத…
-
- 0 replies
- 379 views
-
-
சோகங்களை கடந்து வாசிம் அக்ரம் முகத்தில் மீண்டும் சிரிப்பு...! கராச்சியில் நடைபெற்ற ஃபேஷன் பேரேடில் வாசிம் அக்ரம் அவரது மனைவி ஷெனிரா ஆகியோர் பங்கேற்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் சொந்த வாழ்க்கையில் பல சோகங்களை சந்தித்தவர். கிரிக்கெட்டில் உச்சத்தில் இருக்கும் போது, அதாவது அக்ரமின் 30வது வயதில் அவருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் முறையான உடற்பயிற்சி மூலம் சர்க்கரை நோயையும் வென்று கிரிக்கெட்டில் சாதித்தார். இத்தனைக்கும் அவரது குடும்பத்தில் யாருக்கும் சர்க்கரை நோய் இருந்தது கிடையாது. கடந்த 1995ஆம் ஆண்டு ஹீயூமா என்பவரை வாசிம் அக்ரம் திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தைகள் உண்டு. இந்ந…
-
- 0 replies
- 459 views
-
-
4000 ஓட்டங்களைப் பெற்றார் திலகரத்ன டில்ஷான் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான டில்ஷான், இருபது ஓவர்கள் போட்டிகளில் 4000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இங்கிலாந்தில் நாட் வெஸ்ட் இருபது ஓவர் தொடரில் நேற்று முன் தினம் நடந்த ஆட்டத்தில் டெர்பைஷயர்- துர்ஹாம் அணிகள் மோதின. முதலில் விளையாடிய துர்ஹாம் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்ட எண்ணிக்கையை எடுத்தது. மஸ்டார்ட் (20), ஸ்டோன் மென் (28), கோலிங்வுட் (41) சிறப்பாக விளையாடி அணியின் ஓட்டங்களை உயர்த்தினர். இதைத் தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய டெர்பைஷயர் அணிக்கு டில்ஷான், டுர்ஸ்டன் ஆகி யோர் சிறப்பான ஆரம்பத்தைக் கொடுத்தனர். டுர்ஸ்டன் 21 ஓட்டங்கள…
-
- 0 replies
- 296 views
-
-
எவ்வளவு செலவானாலும் உள்ளக கிரிக்கெட் பயிற்சிக்கூடம் அமைக்கப்படவேண்டும் : சிதத் வெத்தமுனி கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக உள்ளக கிரிக்கெட் பயிற்சிக்கூடத்தை நிச்சயமாக அமைத்துக்கொடுப்போம் என்றும், இதற்கு 50 மில்லியன் ரூபா செலவாகும் என்று கணக்கிட்டுள்ளதாகவும் அதற்கு மேல் சென்றாலும் பரவாயில்லை எவ்வளவு செலவானாலும் அதை செய்துகொடுப்போம் என இலங்கைக் கிரிக்கெட்டின் தலைவர் சிதத் வெத்தமுனி தெரிவித்தார். இலங்கைக் கிரிக்கெட் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் பேசிய சிதத் வெத்தமுனி, உள்ளக பயிற்சிக்கூடங்களை அமைப்பதன் மூலம் வீரர்களின் த…
-
- 0 replies
- 257 views
-
-
அழகிய ஆலப்புழையில் கிரிக்கெட் மைதானம்... கேரளாவும் தமிழகத்தை முந்தியது....! தென் மாநிலங்களில் தெலுங்கானா பிரிவதற்கு முன்னரே ஆந்திராவில் ஹைதரபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது உண்டு. கர்நாடகாவில் பெங்களூருவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. தற்போது மங்களூவில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கேரளாவை பொறுத்தவரை கொச்சியில் மட்டும்தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்தன. தற்போது அங்கேயும் 2வது சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. கீழை நாடுகளின் வெனிஸ் என்று அழைக்கப்படும் ஆழப்புலை நகரில்தண்ணீரால் சூழ்ந்த இடத்தில் அழகிய கிரிக்கெட் மைதானம் உருவ…
-
- 0 replies
- 734 views
-
-
கோப்பை வென்றது பார்சிலோனா: சாம்பியன்ஸ் லீக்கில் அசத்தல் பெர்லின்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி கோப்பை வென்றது. பைனலில் ஜூவான்டஸ் அணியை வீழ்த்தியது. ஐரோப்பாவில் உள்ள கால்பந்து கிளப் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் ஆண்டுதோறும் நடக்கும். பெர்லினில் நடந்த 2014–15 சீசனுக்கான பைனலில் பார்சிலோனா, ஜூவான்டஸ் அணிகள் மோதின. போட்டியின் 4வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் ரேக்டிக் ஒரு கோல் அடித்தார். முதல் பாதியில் எதிரணியால் இதற்கு பதிலடி தர முடியவில்லை. இரண்டாவது பாதியில் ஜூவான்டஸ் அணிக்கு மொராட்டா (55வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். சாரஸ் (68) ஒரு கோல் அடித்து பார்சிலோனா அணியை வலுப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய பார்சிலோனா அணிக்கு ந…
-
- 4 replies
- 793 views
-
-
பிபா தலைவர் பதவியிலிருந்து விலகினார் செப் பிளாட்டர் ஜூரிச்: ஊழல் மற்றும் முறைகேடு புகார் காரணமாக பிபா தலைவர் பதவியிலிருந்து செப் பிளாட்டர் ராஜினாமா செய்தார். இவர் சமீபத்தில் நடந்த தேர்தலில் தான் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தான் பிபா தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகவும், புதிய தலைவரை தேர்வு செய்ய மீண்டும் தேர்தல் நடக்கும் எனவும் பிளாட்டர் கூறியுள்ளார் http://www.dinamalar.com/news_detail.asp?id=1266245
-
- 11 replies
- 929 views
-
-
கனேடிய குரோன் ப்றீயிலும் லூயிஸ் ஹமில்டன் வெற்றி 19 கட்டங்களைக் கொண்ட ஃபோர்மியூலா 1 குரோன் ப்றீ காரோட்டப் பந்தயத்தின் ஏழாவது கட்டமான கனேடிய குரோன் ப்றீ போட்டியில் லூயிஸ் ஹமில்டன் வெற்றிபெற்று, ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்திற்கான தனது வாய்ப்பை அதிகரித்த வண்ணம் உள்ளார். மேர்சிடெஸ் அணி சார்பாக போட்டியிடும் லூயிஸ் ஹமில்டன் தனது சக அணி வீரர் நிக்கோ ரொஸ்பேர்கிடம் எதிர்கொண்ட சவாலை முறியடித்து வெற்றியீட்டினார். 305.775 கிலோ மீற்றர் மொத்த தூரம் கொண்ட விலேநோவ் ஓடுபாதையில் நடைபெற்ற 7ஆவது கட்ட க்ரோன் ப்றீ போட்டி 70 சுற்றுகளைக் கொண்டதாகும். இந்தப் போட்டித் தூரத்தை ஒரு மணித்தியாலம் 31நாடிகளில் நிறைவு செய்த லூயிஸ் ஹமில்டன் முதலாம் இ…
-
- 0 replies
- 361 views
-