Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இவரும் ஒரு கிரிக்கெட் அணியின் கேப்டன்தான்...! கென்யாவில் ஒரு கிரிக்கெட் அணி உள்ளது. இந்த அணிக்கு பெயர் மசாய் கிரிக்கெட் வாரியர். கென்யாவில் கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டு வரும் பழங்குடி இளைஞர்கள் இணைந்து தோற்றுவித்த அணி, அவர்கள் அணிந்த ஆடைகளால் அகில உலக பாப்புலரானது. கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடும் சமயத்தில் இவர்களது கிரிக்கெட் பயிற்சி ஆரம்பமாகும். பயிற்சினா சும்மாலாம் கிடையாது. தொலைவில் உள்ள சிங்கம், சிறுத்தைகளை குறிவைத்து கல்கொண்டு அடித்து விரட்டுவதுதான் இவர்களது பயிற்சி. பின்னர் இதே பகுதியில் தொடங்கப்பட்ட இந்த கிரிக்கெட் அணியால், பழங்குடி மக்களிடையே எச்.ஐ.வி பாதிப்பு குறைந்ததுதான் இந்த செய்தியின் ஹைலைட். இந்த அணியின் கேப்டனாக இருப்பவர்தான் நிசான் ஜோனதான் ஒலி மெசாமி. …

    • 1 reply
    • 482 views
  2. சிறந்த வீரர் டிவிலியர்ஸ் ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர் விருதை, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வென்றார் டிவிலியர்ஸ். தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டு (சி.எஸ்.ஏ.,) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் 2014ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருது, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக டிவிலியர்சிற்கு, 27, கிடைத்தது. தவிர, நிடினிக்குப் (2005, 2006) பின், அடுத்தடுத்த ஆண்டுகளில் சிறந்த வீரர் விருது பெற்ற இரண்டாவது வீரர் ஆனார் டிவிலியர்ஸ். இதற்கு முன் காலிஸ் (2004, 2011), ஆம்லா (2010, 2013) தலா 2 முறை இவ்விருது வென்றனர். இத்துடன், சிறந்த ஒருநாள் போட்டி வீரர், தென் ஆப்ரிக்க ரசிகர்களின் மனம் கவர்ந்தவர், மிகவும் சிறந்த வீரர…

  3. விபத்தில் தப்பிய வங்கதேச கேப்டன் தாகா: மிர்புரில் ஏற்பட்ட விபத்தில், வங்கதேச ஒருநாள் அணி கேப்டன் மொர்டசா அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார், வங்கதேச அணியின் ‘சீனியர்’ வீரர் மொர்டசா, 30. ஒருநாள் அணிக்கு கேப்டனாக உள்ளார். வரும் 18ம் தேதி துவங்கும் இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடருக்காக தயாராகி வருகிறார். இதற்கான பயிற்சிக்காக சைக்கிள் ரிக் ஷாவில், தனது வீட்டில் இருந்து மிர்புர் மைதானத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பஸ்சின் டயர் வெடித்து, ரிக் ஷா மீது பலமாக மோதியது. கீழே குதித்தார்: இதற்குள் சுதாரித்துக் கொண்ட மொர்டசா, ரிக் ஷாவில் இருந்து குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அப்போது, இவரத…

  4. ஐசிசி நடுவர்கள் குழுவில் தமிழர் ஐசிசி உயர்மட்ட நடுவர்கள் (எலைட் பேனல்) குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.ரவி இடம்பெற்றுள்ளார். எஸ்.வெங்கட்ராகவனுக்குப் பிறகு ஐசிசி நடுவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள 2-வது இந்தியர் ரவி என்பது குறிப்பிடத்தக்கது. நியூஸிலாந்தைச் சேர்ந்த மூத்த நடுவர் பில்லி பவுடன், ஓய்வு பெற்ற நடுவர் ஸ்டீவ் டேவிஸ் ஆகியோருக்குப் பதிலாக எஸ்.ரவி, நியூஸிலாந்தைச் சேர்ந்த கிறிஸ் கெஃபானி ஆகியோர் நடுவர் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. 2015-16-க்கான நடுவர் குழுவில் ரவி, கெஃபானி தவிர அலீம் தார், குமார் தர்மசேனா, மராய்ஸ் எராஸ்மஸ், இயான் குட், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்போரா, நிகெல் லாங், பால் ரீபிள், ரோட் டக்கர், புரூஸ் …

  5. மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் நாளை ஆரம்பம் நடப்பு சம்­பியன் ஜப்பான், தலா இரண்டு தட­வைகள் சம்பியன்­க­ளான ஐக்­கிய அமெ­ரிக்கா மற்றும் ஜேர்மனி, ஒரு தடவை சம்­பி­ய­னான நோர்வே உட்பட 24 நாடுகள் பங்­கு­பற்றும் ஏழா­வது மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் கனடாவில் நாளை ஆரம்பமாக­வுள்­ளன. வென்­கூவர், எட்­மொன்டன், வின்னிபெக், ஒட்டாவா, மொன்ட்றியல், மொன்க்டொன் ஆகிய நக­ரங்­களில் மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகள் நடை­பெ­ற­வுள்­ளன. ஆசி­யா­வி­லி­ருந்து நடப்பு உலக சம்பியன் ஜப்பான், சீனா, அவுஸ்திரேலியா, தென் கொரியா, தாய்­லாந்து ஆகிய ஐந்து நாடுகள் பங்குபற்றுகின்றமை விசேட அம்சமாகும். தாய்­லாந்து தீர்­மா­ன­மிக்க போட்­டியில் வியட்நாமை வெற்­றி­ கொண்டே இறுதிச் சுற்றில் விளை…

  6. இந்தியாவின் உண்மையான முதல் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்: ஆன்டி ராபர்ட்ஸ் பாராட்டு இந்தியாவின் உண்மையான முதல் வேகப்பந்து விச்சாளர் உமேஷ் யாதவ்தான் என்று மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் அச்சுறுத்தல் வேகப்பந்து விச்சாளர் ஆன்டி ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார். டிசம்பர் 1975-76-ல் ஆஸ்திரேலியா-மே.இ.தீவுகளுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆன்டி ராபர்ட்ஸ். | கோப்புப் படம். பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ராபர்ட்ஸ் கூறும்போது, "உமேஷ் யாதவ் என்னை மிகவும் கவர்கிறார். இந்தியாவின் முதல் உண்மையான வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்தான். இவருக்கு முன்பாக இந்தியாவில் உண்மையான வேகம் வீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததாக நான் கருதவில்லை. மொகமது ஷமியும் நன்றாக வீ…

  7. தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி வெற்றி இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தால் சிங்கர் வெற்றிக் கிண்ணத்துக்காக பாடசாலைகளின் 15 வயது பிரிவு 3 அணிகளுக்கிடையில் நடத்தி வரும் 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி, ஒரு ஓட்டத்தால் வெற்றியீட்டியது. தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (03) நடைபெற்ற இப்போட்டியில் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணியை எதிர்த்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி மோதியது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மகாஜனக் கல்லூரி அணி, 39.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது. எஸ்.சதுர்சன் 29, எம்.பகீரதன் 20 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில…

  8. என் கேப்டன் ஸ்டைலை நான் யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்: கோஹ்லி டெல்லி: அணியை வழிநடத்தும் தனது தலைமை குணத்தை மாற்றிக் கொள்ளுமாறு யாரும் கேட்டாலும் மாற்ற மாட்டேன் என இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். கேப்டன் டோணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கோஹ்லியை டோணி போன்று விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் இருக்குமாறு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாவ் கேட்டுக் கொண்டார். இது குறித்து கோஹ்லி கூறுகையில், மாட்டேன் நான் யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன். யா…

  9. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டோணி ஓய்வு பெற்றதும் குமுறிக் குமுறி அழுத கோஹ்லி டெல்லி: டோணி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதும் தான் அழுததாக கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டோணி டிசம்பர் மாதம் 30ம் தேதி அறிவித்தார். அதன் பிறகு நடந்தவை குறித்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், ஆச்சரியம் டோணி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை கேட்டு நாங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டோம். அவர் தலைமையில் தான் இத்தனை நாட்கள் விளையாடினோம். அவர் இளம் வீரர்களை வளர்த்…

  10. விளாசித் தள்ளிய ஷாரூக்கான்: பதிலடி கொடுத்த விஜய் மல்லையா (வீடியோ இணைப்பு) [ வியாழக்கிழமை, 04 யூன் 2015, 07:30.41 மு.ப GMT ] ஐபிஎல் 8வது தொடரில் கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாரூக்கானும், பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவும் மோதிய போட்டி ஒன்று வெளியாகியுள்ளது. இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவில்லை. இதில் கொல்கத்தா அணியின் நிர்வாகிகள் மற்றும் பெங்களூர் அணியின் நிர்வாகிகள் மோதினர். இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஷாரூக்கான் அசத்தலாக சில ஷாட்டுகளை ஆடினார். 10 ஓவர்களை கொண்ட இந்தப் போட்டியில் ஷாரூக்கான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 67 ஓட்டங்களை எடுத்தது. இதைத் தொடர்ந்து பெங்களூர் அணி களமிறங்கியது. ஷாரூக்கானுக்கு…

  11. உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளுக்கான இலங்கை குழாம் அறிவிப்பு அவுஸ்­தி­ரே­லி­யாவில் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் நடை­பெ­ற­வி­ருக்கும் உலகக் கிண்ண வலைப்­பந்­தாட்டப் போட்­டிக்­கான இலங்கை வலைப்பந்தாட்ட குழாம் வீராங்­க­னைகள் விபரம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இலங்கை வலைப்­பந்­தாட்டத் தெரிவுக் குழு­வினரினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட 12 வீராங்­க­னைகள் கொண்ட இலங்கை வலைப்­பந்­தாட்ட குழா­மிற்கு விளையாட்­டுத்­துறை அமைச்சர் அங்­கீ­காரம் வழங்­கி­யுள்ளார். நான்கு அனு­பவம் வாய்ந்த வீரர்கள் மாத்­தி­ரமே இந்தக் குழாமில் இடம் பெ­று­கின்­றனர். ஏனைய அனை­வரும் அதிக அனு­ப­வ­மற்­ற­வர்­க­ளாவர். தெரி­வா­ளர்­க­ளினால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட வீராங்­க­னை­களைக் கொண்டு உலகக் கிண்ண வலைப…

  12. வங்கதேச அணி அறிவிப்பு தாகா: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணியில் காயத்தால் பாதிக்கப்பட்ட ஷகாதத் ஹொசைனுக்கு பதிலாக ருபெல் ஹொசைன் தேர்வானார். வங்கதேசம் செல்லவுள்ள இந்திய அணி, ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. பதுல்லாவில் வரும் ஜூன் 10ல் நடக்கவுள்ள இப்போட்டிக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்டில், 2 பந்து மட்டுமே வீசிய நிலையில் வலது முழங்காலில் காயமடைந்த ஷகாதத் ஹொசைன் 6 மாத காலம் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து இவர், இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்க முடியாமல் போனது. இவருக்கு பதிலாக ருபெல் ஹொசைன் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தானுக்கு …

  13. தோனியுடன் ஒப்பிடலாமா: மனம் திறக்கிறார் கோஹ்லி புதுடில்லி: ‘‘என்னை தோனியுடன் ஒப்பிட வேண்டாம். எனது குணம் மாறுபட்டது. கேப்டனாக தொடர்ந்து ஆக்ரோஷமாக செயல்படுவேன்,’’ என, விராத் கோஹ்லி தெரிவித்தார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோஹ்லி, 26. இதுவரை 33 டெஸ்ட் (2547 ரன்கள்), 158 ஒரு நாள் (6537), 28 ‘டுவென்டி–20’ (972) போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் தோனி டெஸ்டிலிருந்து திடீரென ஓய்வை அறிவித்தார். இதனையடுத்து டெஸ்ட் அணி கேப்டனாக கோஹ்லி அறிவிக்கப்பட்டார். தனிப்பட்ட முறையில் இவரின் ஆட்டம் சிறப்பாக இருந்தாலும் தோனியை போல கேப்டன் பதவியில் ‘கூலாக’ செயல்படுவாரா என தெரியவில்லை. இது குறித்து கோஹ்லி கூறியது: இந்திய கிரிக்கெட்டிற்கு தோனி அதிகம் செ…

  14. சயீத் அஜ்மல் ‘அவுட்’ கராச்சி: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மலுக்கு இடம் கிடைக்கவில்லை. இலங்கை செல்லும் பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் ஜூன் 17ல் காலேயில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் கொழும்பு (ஜூன் 25–29), பல்லேகெலே (ஜூலை 3–7) நகரில் நடக்கவுள்ளன. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் தேர்வு செய்யப்படவில்லை. சமீபத்திய வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட போதும், பவுலிங் சர்ச்சை தொடர்பாக லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. இவர், வங்கதேசத்துக்கு எதிரான பய…

  15. ஆண்டர்சன், பிராட் நீக்கம் லண்டன்: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் ஜூன் 9ல் பர்மிங்காமில் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் லண்டன் (ஜூன் 12), சவுத்தாம்ப்டன் (ஜூன் 14), நாட்டிங்காம் (ஜூன் 17), செஸ்டர்–லி–ஸ்டிரீட் (ஜூன் 20) நகரில் நடக்கவுள்ளன. இத்தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இதில் வேகப்பந்துவீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் நீக்கப்பட்டனர். இயான் பெல், சுழற்பந்துவீச்சாளர் மொயீன் அலி ஆகியோருக்கும் இடம் கிடைக்கவில்லை. அடுத்த மாதம்…

  16. மைக்கேல் கிளார்க்கின் டாப்-5 வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் தன்னுடன் ஆடிய 5 மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் பெயரை சேர்த்துள்ளார் மைக்கேல் கிளார்க், ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடல் நடத்திய ஆஸி. டெஸ்ட் கேப்டன் மைக்கேல் கிளார்க் தன் காலத்திய மிகச்சிறந்த வீரர்களாக 5 வீரர்களின் பெயர்களை வெளியிட்டார். இதில் சச்சின் டெண்டுல்கரை அவர் குறிப்பிட்டுள்ளார். ஷேன் வார்ன், கிளென் மெக்ரா, தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ், மற்றும் மே.இ.தீவுகளின் பிரையன் லாரா ஆகியோர் கிளார்க்கின் டாப்-5-ல் இடம்பெற்ற மற்ற வீரர்களாவர். தான் எதிர்கொண்ட அதிவேகப்பந்து வீச்சாளர் யார் என்ற கேள்விக்கு பாகிஸ்தானின் 'ர…

  17. சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்தார் அலிஸ்டர் குக் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை குறைந்த வயதில் எடுத்ததற்கான சச்சின் டெண்டுல்கர் சாதனையை அலிஸ்டர் குக் முறியடித்தார். ஹெடிங்லீயில் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். அதாவது சச்சின் டெண்டுல்கரை விட 94 நாட்கள் முன்னதாகவே அலிஸ்டர் குக் 9,000 ரன்களை எடுத்து சாதனை புரிந்துள்ளார். 30 வயது, 159 நாட்களில் அலிஸ்டர் குக் 9,000 ரன்களை எட்ட, சச்சின் டெண்டுல்கர் தனது 9,000 டெஸ்ட் ரன்களை 30 வயது, 253 நாட்களில் எடுத்தார். ஆனால் 31 வயதுக்கு முன்பாகவே டெஸ்டில் 9,000 ரன்களை எடுத்த வீரர்கள் சச்சின் மற்றும் குக் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 204 இன்னிங்ஸ்களில் 9,000 ரன்…

  18. மூன்றாமிடத்தில் ஸ்மித் அவுஸ்திரேலியா அணியின் உப தலைவர் ஸ்டீபன் ஸ்மித் இன்று ஆரம்பிக்கவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டியில் மூன்றாமிடத்தில் துடுப்பாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா அணித் தலைவர் இதனை உறுதி செய்துள்ளார். இந்திய அணியுடனான தொடரிலும், உலகக்கிண்ணத் தொடரிலும் ஸ்மித் மூன்றாமிடத்தில் களமிறங்கி அதிக ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். ஷோன் மார்ஸ் மூன்றாமிலக்க வீரராக களமிறங்க திட்டம் இருந்த போதும் க்றிஸ் ரொஜர்ஸ் உபாதையடைந்ததை தொடர்ந்து மார்ஸ் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளார். தான் ஏற்கனவே இது தொடர்பாக ஸ்மித் உடன் பேசியுள்ளதாகவும் நீண்ட நாட்களாக அவரை மூன்றாமிலக்கத்தில் களமிறக்கும் திட்டம் இருந்ததாகவும் அணித் தலைவர் ஸ்மித் மே…

  19. நடுவர் ஸ்டீவ் டேவிஸ் ஓய்வு அவுஸ்திரேலியா நடுவரான ஸ்டீவ் டேவிஸ் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 63 வயதான டேவிஸ் 25 வருடங்களாக நடுவராக கடமையாற்றியுள்ளார். நடைபெறவுள்ள, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருடன் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். 1992ஆம் ஆண்டு முதல் சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இவர் நடுவராக அறிமுகமானார். 1997ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டார். இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளிலும், 135 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், 26 டுவென்டி டுவென்டி போட்டிகளிலும் ஸ்டீவ் டேவிஸ் கடமையாற்றியுள்ளா…

  20. இங்கிலாந்து மண்ணை கௌவ்வும் இங்­கி­லாந்து - அவுஸ்­தி­ரே­லியா அணிகள் மோதப் போகும் ஆஷஸ் தொடரில் இங்­கி­லாந்து 5-–0 என வெள்ளையடிப்பு செய்யப்படும் என ஆஸியின் முன்னாள் பந்­து­வீச்­சாளர் கிளென் மெக்ராத் கூறி­யுள்ளார். கடந்த ஆஷஸ் தொடரில் இங்­கி­லாந்து 5–-0 என்ற கணக்கில் அவுஸ்­தி­ரே­லி­யா­விடம் தொடரை பறி­கொ­டுத்­தது. இதைத் தொடர்ந்து நடை­பெ­ற­வுள்ள தொட­ரிலும் இங்­கி­லாந்து அதே மாதிரி தோல்­வியைத் தழுவும் என மெக்ராத் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார். அவுஸ்­தி­ரே­லியா -– இங்­கி­லாந்து இடையே நடக்கும் இந்த டெஸ்ட் தொடர் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் நடை­பெ­ற­வுள்­ளது. இது தொடர்­பாக அவுஸ்­தி­ரே­லிய வேகப்­பந்து வீச்­சாளர் கிளன் மெக்ராத் கூறு­கையில்இ அவுஸ்­தி­ரே­லி­யா­வுடன் மோத விரும…

  21. இந்தியா - வங்கதேச தொடரில் டிஆர்எஸ் கிடையாது! டாக்கா: இந்தியா, வங்கதேசம் இடையே, வங்கதேசத்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரில் டிஆர்எஸ் முறை அமல்படுத்தப்படாது என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார். ஜூன் 10ம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான தொடர் தொடங்கவுல்ளது. இதில் ஒரு டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகள் இடம் பெறுகின்றன. ஜூன் 10ம் தேதி டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஜூன் 18, 21, 24 ஆகிய தேதிகளில் ஒரு நாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தத் தொடரின்போது நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய உதவும் டிஆர்எஸ் முறை பயன்படுத்தப்பட மாட்டாது என்று வங்கதேச கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. Read more at: http://tamil.one…

  22. இன்று உதயமாகிறது மாஸ்டர்ஸ் டி20 கிரிக்கெட் தொடர்! களம் காணப்போகும் லாரா, கில்கிறிஸ்ட் துபாய்: கில்கிறிஸ்ட், லாரா உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் என்ற பெயரிலான டி20 கிரிக்கெட் தொடர் அதிகாரப்பூர்வமாக இன்று ஆரம்பமாக உள்ளது. ஆஸ்திரேலிய மாஜி கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் நிறுவனமான ஜிஎம் ஸ்போர்ட்ஸ், இந்த விளையாட்டு தொடருக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஐபிஎல் டி20 போட்டிகளில் இளம் வீரர்கள் ஆடுவதற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. சச்சின், பாண்டிங், டிராவிட் போன்ற மாஜி ஜாம்பவான்கள் ஆலோசகர்களாகவும், பயிற்சியாளர்களாகவும்தான் செயல்படுகின்றனர். ஆனால், அந்த பிரபலங்களின் ஆட்டத்தை மீண்டும் பார்க்க ரசிகர்களுக்கு வழி செய்து கொடுக்கிறது மாஸ்டர…

  23. பிபா' காலை வாரிவிட்ட கால்பந்தாட்ட ஊழல்! பரபரப்பு தகவல்கள்!! லண்டன்: சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிபாவின் தலைமை அலுவலகம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் நகரில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு 111 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டு தற்போது 209 உறுப்பினர் நாடுகளுடன் செயல்பட்டு வருகிறது. உலகிலேயே மிகப் பெரிய விளையாட்டு அமைப்பு இதுதான். ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் இந்த அமைப்பின் தலைவராக கடந்த 17 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பிளாட்டர் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே பிபா அதிகாரிகள் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தலைவரும் ராஜினாமா செய்துள்ளதால் இந்த விவகாரம் பூதாகரமாக தெரிகிறத…

  24. பிபா தலைவர் பதவியிலிருந்து விலகினார் செப் பிளாட்டர் ஜூரிச்: ஊழல் மற்றும் முறைகேடு புகார் காரணமாக பிபா தலைவர் பதவியிலிருந்து செப் பிளாட்டர் ராஜினாமா செய்தார். இவர் சமீபத்தில் நடந்த தேர்தலில் தான் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தான் பிபா தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகவும், புதிய தலைவரை தேர்வு செய்ய மீண்டும் தேர்தல் நடக்கும் எனவும் பிளாட்டர் கூறியுள்ளார் http://www.dinamalar.com/news_detail.asp?id=1266245

  25. என் காலத்து வீரர்களை பிசிசிஐ மறந்தது ஏன்? - சையத் கிர்மானி வருத்தம் சமீபத்தில் ஓய்வு பெற்ற சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோரை பிசிசிஐ ஆலோசனைக் குழுவில் இணைத்ததை பல முன்னாள் வீரர்களும் வரவேற்றாலும் முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானிக்கு ஓரளவுக்கு இது குறித்து வருத்தம் எழுந்துள்ளது. "ஆலோசனைக் குழுவில் சச்சின், கங்குலி, லஷ்மண் சேர்க்கப்பட்டது குறித்த முடிவை நான் மிகவும் வரவேற்கிறேன், சரியான திசையை நோக்கிய முதல் அடி இதுவே என்றும் கருதுகிறேன். பிசிசிஐ ஒரு சிறந்த விளையாட்டுத்துறை அமைப்பு என்பதிலும் முன்னாள் வீரர்களை வேறு எந்த வாரியங்களும் இவ்வளவு சிறப்பாக கவனித்துக் கொண்டதில்லை என்பதில் எனக்கு எந்த வித ஐயமும் இல்லை. இதில் இருவேறு கருத்துகளுக்கு இடமும் இல்லை. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.