Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. மைக்கேல் கிளார்க்கின் டாப்-5 வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் தன்னுடன் ஆடிய 5 மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் பெயரை சேர்த்துள்ளார் மைக்கேல் கிளார்க், ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடல் நடத்திய ஆஸி. டெஸ்ட் கேப்டன் மைக்கேல் கிளார்க் தன் காலத்திய மிகச்சிறந்த வீரர்களாக 5 வீரர்களின் பெயர்களை வெளியிட்டார். இதில் சச்சின் டெண்டுல்கரை அவர் குறிப்பிட்டுள்ளார். ஷேன் வார்ன், கிளென் மெக்ரா, தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ், மற்றும் மே.இ.தீவுகளின் பிரையன் லாரா ஆகியோர் கிளார்க்கின் டாப்-5-ல் இடம்பெற்ற மற்ற வீரர்களாவர். தான் எதிர்கொண்ட அதிவேகப்பந்து வீச்சாளர் யார் என்ற கேள்விக்கு பாகிஸ்தானின் 'ர…

  2. சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்தார் அலிஸ்டர் குக் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை குறைந்த வயதில் எடுத்ததற்கான சச்சின் டெண்டுல்கர் சாதனையை அலிஸ்டர் குக் முறியடித்தார். ஹெடிங்லீயில் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். அதாவது சச்சின் டெண்டுல்கரை விட 94 நாட்கள் முன்னதாகவே அலிஸ்டர் குக் 9,000 ரன்களை எடுத்து சாதனை புரிந்துள்ளார். 30 வயது, 159 நாட்களில் அலிஸ்டர் குக் 9,000 ரன்களை எட்ட, சச்சின் டெண்டுல்கர் தனது 9,000 டெஸ்ட் ரன்களை 30 வயது, 253 நாட்களில் எடுத்தார். ஆனால் 31 வயதுக்கு முன்பாகவே டெஸ்டில் 9,000 ரன்களை எடுத்த வீரர்கள் சச்சின் மற்றும் குக் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 204 இன்னிங்ஸ்களில் 9,000 ரன்…

  3. மூன்றாமிடத்தில் ஸ்மித் அவுஸ்திரேலியா அணியின் உப தலைவர் ஸ்டீபன் ஸ்மித் இன்று ஆரம்பிக்கவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டியில் மூன்றாமிடத்தில் துடுப்பாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா அணித் தலைவர் இதனை உறுதி செய்துள்ளார். இந்திய அணியுடனான தொடரிலும், உலகக்கிண்ணத் தொடரிலும் ஸ்மித் மூன்றாமிடத்தில் களமிறங்கி அதிக ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். ஷோன் மார்ஸ் மூன்றாமிலக்க வீரராக களமிறங்க திட்டம் இருந்த போதும் க்றிஸ் ரொஜர்ஸ் உபாதையடைந்ததை தொடர்ந்து மார்ஸ் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளார். தான் ஏற்கனவே இது தொடர்பாக ஸ்மித் உடன் பேசியுள்ளதாகவும் நீண்ட நாட்களாக அவரை மூன்றாமிலக்கத்தில் களமிறக்கும் திட்டம் இருந்ததாகவும் அணித் தலைவர் ஸ்மித் மே…

  4. நடுவர் ஸ்டீவ் டேவிஸ் ஓய்வு அவுஸ்திரேலியா நடுவரான ஸ்டீவ் டேவிஸ் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 63 வயதான டேவிஸ் 25 வருடங்களாக நடுவராக கடமையாற்றியுள்ளார். நடைபெறவுள்ள, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருடன் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். 1992ஆம் ஆண்டு முதல் சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இவர் நடுவராக அறிமுகமானார். 1997ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டார். இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளிலும், 135 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், 26 டுவென்டி டுவென்டி போட்டிகளிலும் ஸ்டீவ் டேவிஸ் கடமையாற்றியுள்ளா…

  5. இங்கிலாந்து மண்ணை கௌவ்வும் இங்­கி­லாந்து - அவுஸ்­தி­ரே­லியா அணிகள் மோதப் போகும் ஆஷஸ் தொடரில் இங்­கி­லாந்து 5-–0 என வெள்ளையடிப்பு செய்யப்படும் என ஆஸியின் முன்னாள் பந்­து­வீச்­சாளர் கிளென் மெக்ராத் கூறி­யுள்ளார். கடந்த ஆஷஸ் தொடரில் இங்­கி­லாந்து 5–-0 என்ற கணக்கில் அவுஸ்­தி­ரே­லி­யா­விடம் தொடரை பறி­கொ­டுத்­தது. இதைத் தொடர்ந்து நடை­பெ­ற­வுள்ள தொட­ரிலும் இங்­கி­லாந்து அதே மாதிரி தோல்­வியைத் தழுவும் என மெக்ராத் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார். அவுஸ்­தி­ரே­லியா -– இங்­கி­லாந்து இடையே நடக்கும் இந்த டெஸ்ட் தொடர் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் நடை­பெ­ற­வுள்­ளது. இது தொடர்­பாக அவுஸ்­தி­ரே­லிய வேகப்­பந்து வீச்­சாளர் கிளன் மெக்ராத் கூறு­கையில்இ அவுஸ்­தி­ரே­லி­யா­வுடன் மோத விரும…

  6. இந்தியா - வங்கதேச தொடரில் டிஆர்எஸ் கிடையாது! டாக்கா: இந்தியா, வங்கதேசம் இடையே, வங்கதேசத்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரில் டிஆர்எஸ் முறை அமல்படுத்தப்படாது என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார். ஜூன் 10ம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான தொடர் தொடங்கவுல்ளது. இதில் ஒரு டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகள் இடம் பெறுகின்றன. ஜூன் 10ம் தேதி டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஜூன் 18, 21, 24 ஆகிய தேதிகளில் ஒரு நாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தத் தொடரின்போது நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய உதவும் டிஆர்எஸ் முறை பயன்படுத்தப்பட மாட்டாது என்று வங்கதேச கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. Read more at: http://tamil.one…

  7. இன்று உதயமாகிறது மாஸ்டர்ஸ் டி20 கிரிக்கெட் தொடர்! களம் காணப்போகும் லாரா, கில்கிறிஸ்ட் துபாய்: கில்கிறிஸ்ட், லாரா உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் என்ற பெயரிலான டி20 கிரிக்கெட் தொடர் அதிகாரப்பூர்வமாக இன்று ஆரம்பமாக உள்ளது. ஆஸ்திரேலிய மாஜி கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் நிறுவனமான ஜிஎம் ஸ்போர்ட்ஸ், இந்த விளையாட்டு தொடருக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஐபிஎல் டி20 போட்டிகளில் இளம் வீரர்கள் ஆடுவதற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. சச்சின், பாண்டிங், டிராவிட் போன்ற மாஜி ஜாம்பவான்கள் ஆலோசகர்களாகவும், பயிற்சியாளர்களாகவும்தான் செயல்படுகின்றனர். ஆனால், அந்த பிரபலங்களின் ஆட்டத்தை மீண்டும் பார்க்க ரசிகர்களுக்கு வழி செய்து கொடுக்கிறது மாஸ்டர…

  8. பிபா' காலை வாரிவிட்ட கால்பந்தாட்ட ஊழல்! பரபரப்பு தகவல்கள்!! லண்டன்: சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிபாவின் தலைமை அலுவலகம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் நகரில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு 111 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டு தற்போது 209 உறுப்பினர் நாடுகளுடன் செயல்பட்டு வருகிறது. உலகிலேயே மிகப் பெரிய விளையாட்டு அமைப்பு இதுதான். ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் இந்த அமைப்பின் தலைவராக கடந்த 17 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பிளாட்டர் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே பிபா அதிகாரிகள் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது தலைவரும் ராஜினாமா செய்துள்ளதால் இந்த விவகாரம் பூதாகரமாக தெரிகிறத…

  9. பிபா தலைவர் பதவியிலிருந்து விலகினார் செப் பிளாட்டர் ஜூரிச்: ஊழல் மற்றும் முறைகேடு புகார் காரணமாக பிபா தலைவர் பதவியிலிருந்து செப் பிளாட்டர் ராஜினாமா செய்தார். இவர் சமீபத்தில் நடந்த தேர்தலில் தான் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தான் பிபா தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகவும், புதிய தலைவரை தேர்வு செய்ய மீண்டும் தேர்தல் நடக்கும் எனவும் பிளாட்டர் கூறியுள்ளார் http://www.dinamalar.com/news_detail.asp?id=1266245

  10. என் காலத்து வீரர்களை பிசிசிஐ மறந்தது ஏன்? - சையத் கிர்மானி வருத்தம் சமீபத்தில் ஓய்வு பெற்ற சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோரை பிசிசிஐ ஆலோசனைக் குழுவில் இணைத்ததை பல முன்னாள் வீரர்களும் வரவேற்றாலும் முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானிக்கு ஓரளவுக்கு இது குறித்து வருத்தம் எழுந்துள்ளது. "ஆலோசனைக் குழுவில் சச்சின், கங்குலி, லஷ்மண் சேர்க்கப்பட்டது குறித்த முடிவை நான் மிகவும் வரவேற்கிறேன், சரியான திசையை நோக்கிய முதல் அடி இதுவே என்றும் கருதுகிறேன். பிசிசிஐ ஒரு சிறந்த விளையாட்டுத்துறை அமைப்பு என்பதிலும் முன்னாள் வீரர்களை வேறு எந்த வாரியங்களும் இவ்வளவு சிறப்பாக கவனித்துக் கொண்டதில்லை என்பதில் எனக்கு எந்த வித ஐயமும் இல்லை. இதில் இருவேறு கருத்துகளுக்கு இடமும் இல்லை. …

  11. ராகுல் திராவிடுக்கு அண்டர்-19, இந்தியா-ஏ அணி பயிற்சியாளர் பொறுப்பு? பிசிசிஐ அமைத்த ஆலோசனைக் குழுவில் சச்சின், கங்குலி, லஷ்மண் நியமிக்கப்பட்ட பிறகு ராகுல் திராவிடையும் பிசிசிஐ தனது செயல் திட்டத்துக்குள் கொண்டு வர முடிவெடுக்கலாம் என்று தெரிகிறது. அனுராக் தாக்கூர் ஏற்கெனவே இது பற்றி கூறும்போது, “ராகுல் திராவிட் போன்ற ஒரு கிரிக்கெட் வீரரை பிசிசிஐ சரியான இடத்தில் பயன்படுத்திக் கொள்ளூம். காலம் வரும்போது இதற்கான அறிவிப்பு வரும். ஒரே குழுவில் அனைவரையும் கொண்டு வர முடியாது” என்று கூறியதும் ராகுல் திராவிடுக்கு அளிக்கப்படும் புதிய பொறுப்பு பற்றிய செய்தியுடன் இணைத்து நோக்கத்தக்கது. ராகுல் திராவிட் மேற்பார்வையின் கீழ் சஞ்சு சாம்சன், கருண் நாயர், தீபக் ஹூடா போன்றோர் சிறப…

  12. குறைந்தது 5 ஆண்டுகளுக்கு இந்திய அணி ஆதிக்கம் செலுத்துவதை விரும்புகிறேன்: விராட் கோலி உலகின் தலைசிறந்த அணியாக திகழ இந்திய கிரிக்கெட் அணியிடத்தில் திறமை இருக்கிறது என்று இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் மன்த்லிக்காக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "குறைந்தது 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் உலகில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று நான் வலுவாக விரும்புகிறேன். நம்மிடம் திறமை நிறைய இருக்கிறது. இந்தத் திறமையை ஒருங்கிணைத்து எப்படி சிறப்பாக மேலாண்மை செய்வது என்பதைப் பொறுத்து இந்திய அணி ஆதிக்கம் செய்வது அமையும். நான் அணி வீரர்களிடத்தில் வலுவான பிணைப்பையும் நட்புறுதியையும் ஏற்படுத்த விரும்புகிறேன். ஆண்டில் 250 முதல் …

  13. இந்திய அணி இடைக்கால பயற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் வங்கதேசம் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில், அணியின் துணைப் பயிற்சியாளர்களாக சஞ்சய் பாங்கர், பரத் அருண் மற்றும் ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் தொடருவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாம்ப்வே தொடர் தொடங்கவுள்ள ஜூலை மாதத்துக்குள்ளாகவே இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சிக் குழு நிர்வாகம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் எனத் தெரிகிறது. முன்னதாக, இங்கிலாந்து தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் எதிரொலியாக, இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். அப்போதே பாங்கர், அருண், ஸ்ரீதர் ஆகியோர் துணைப் பயிற்ச…

  14. அதிருப்தியில் பாக்., கிரிக்கெட் லாகூர்: தற்கொலைப்படை தாக்குதலை வெளிப்படையாக கூறிய பாகிஸ்தான் அரசு மீது, அந்நாட்டு கிரிக்கெட் போர்டு அதிருப்தியில் உள்ளது. கடந்த 2009ல் லாகூரில், இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கராவாதிகள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் கழித்து, முதல் அணியாக ஜிம்பாப்வே, பாகிஸ்தான் சென்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி லாகூரின் கார்டிப் மைதானத்தில் நடந்தது. இப்போட்டி நடந்து கொண்டிருந்த போது, மைதானத்திற்குள் பயங்கராவாதி ஒருவர் நுழைய முற்பட்டார். ஆனால், இந்த தற்கொலைப்படை தாக்குதலை போலீசார் முறியடித்தனார். இதில் சப்– இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் இறந்தனர். இதை பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பர்வேஸ் ரஷித் உறுதிபடு…

  15. பிசிசிஐ ஆலோசனை குழுவில் சச்சின், சவுரவ் கங்குலி, லஷ்மண் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆலோசனைக் குழுவில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லஷ்மண் ஆகிய முன்னாள் வீர்ர்கள் சேர்க்கப்பட்டனர். கிரிக்கெட் தொடர்பான அனைத்து முடிவு எடுக்கும் தீர்மானங்களிலும் இனி இந்த மூவர் கூட்டணியின் ஆலோசனையும், வழிகாட்டுதலும் இருக்கும் என்று பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா, செயலர் அனுராக் தாக்கூர் ஆகியோர் கிரிக்கெட் குறித்த மிக முக்கியமான முடிவுகள் அனைத்திலும் இவர்களை ஆலோசித்தே முடிவு எடுப்பார்கள் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%…

  16. 10 நாட்களில் என்னை மறந்து விடுவார்கள்: ஐபிஎல் ‘சக்சஸ்’ குறித்து ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல் கிரிக்கெட் 8-வது தொடரில் சிறப்பாக வீசி அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஆஷிஷ் நெஹ்ரா, இந்தியத் தேர்வுக்குழுவினர் தனது திறமையைக் கண்டு கொள்ளாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நெஹ்ரா 22 விக்கெட்டுகளுடன் 4-ம் இடம் பிடித்தார். இந்நிலையில் இந்திய அணியில் தனக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ-வுக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியில் நிறைய பவுலர்களை முயற்சி செய்கின்றனர். நானும் இந்த வடிவங்களில்தான் அதிகமா…

  17. கட்டுக்கடங்காத கிறிஸ் கெயில்: 62 பந்துகளில் 151 ரன்கள் டாண்டன் மைதானத்தில் ஞாயிறன்று நடைபெற்ற நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கெண்ட் அணிக்கு எதிராக கிறிஸ் கெயில் 62 பந்துகளில் 151 ரன்கள் விளாசித் தள்ளினார். இதில் வேடிக்கை என்னவெனில் கெண்ட் அணியின் 227 ரன்கள் இலக்கை துரத்திய போது சோமர்செட் அணிக்காக கெயில் இந்த இன்னிங்சை ஆடி கடைசி வரை நாட் அவுட்டாக இருந்தும் 3 ரன்கள் வித்தியாசத்தில் சோமர்செட் அணி தோல்வி தழுவியது. கெயில் 10 பவுண்டரிகள் 15 சிக்சர்களை விளாசினார். இப்படி அடித்தும் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. கெயிலிடம் ஸ்ட்ரைக் வரவில்லை. 2 பந்துகள் கழித்தே கெயிலுக்கு ஸ்ட்ரைக் கிடைத்தது. முன்பாக சொஹைல் தன்வீர் ஆட்டமிழந்தார். கெயில் ஸ்ட்ரைக்கு வ…

  18. யாழ் இந்து எதிர் கொழும்பு இந்து கிரிகெட் போட்டி அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. இதில் கொழும்பு இந்து வெற்றியீட்டியுளது.

    • 4 replies
    • 552 views
  19. பார்சிலோனா அணி சாம்பியன்: ‘கோபா டெல் ரே’ கால்பந்தில் அசத்தல் பார்சிலோனா: ‘கோபா டெல் ரே’ கோப்பை கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில், அத்லெடிகோ பில்பாவோ அணியை தோற்கடித்தது. ஸ்பெயினில், உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் ‘கோபா டெல் ரே’ கோப்பை கால்பந்து தொடர் ஆண்டு தோரும் நடத்தப்படும். பார்சிலோனாவில் நடந்த 2014–15 சீசனுக்கான பைனலில், பார்சிலோனா, அத்லெடிகோ பில்பாவோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி முதல் கோல் அடித்தார். பின், 36வது நிமிடத்தில் பார்சிலோனாவின் நெய்மர் தன்பங்கிற்கு ஒரு கோலடித்தார். முதல் பாதி முடிவில் பார்சிலோனா அணி 2–0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பா…

  20. இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் டி20-யில் விளாசித்தள்ளிய கிறிஸ் கெயில் இங்கிலாந்தில் நடைபெறும் நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் தொடரில் சோமர்செட் அணிக்காக எஸ்ஸெக்ஸ் அணிக்கு எதிராக கிறிஸ் கெய்ல் 92 ரன்களை விரைவு கதியில் விளாசி அசத்தினார். நேற்று இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் சோமர்செட் அணி கெயிலின் அதிரடியினால் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த டென் டஸ்சாதே தலைமை எஸ்ஸெக்ஸ் அணி நியூஸிலாந்து வீரர் ஜெஸி ரைடர் (54 ரன்கள், 28 பந்துகள், 8 பவுண்டரி 1 சிக்சர்) மற்றும் வெஸ்ட்லி (56 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 68) ஆகியோரது அரைசதங்களுடன் 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தனர், சோமர்செட் அணியில் பாக் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சொஹைல் தன்வீர் 2 விக்கெட்டுகளையும், ஏ.சி.தாமஸ் 4 விக்கெட்டு…

  21. அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரரானார் அலிஸ்டர் குக்: கூச் சாதனை முறியடிப்பு அதிக டெஸ்ட் ரன்களை எடுத்த இங்கிலாந்து வீரரானார் கேப்டன் அலிஸ்டர் குக். கிரகாம் கூச் வைத்திருந்த சாதனையை முறியடித்தார் அலிஸ்டர் குக். நியூஸிலாந்துக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 350 ரன்கள்க்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து சற்று முன் வரை விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கேப்டன் அலிஸ்டர் குக் 53 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் 29 ரன்களிலிருந்த போது இன்னிங்ஸின் 28-வது ஓவரை டிம் சவுதீ விச, 3-வது பந்தை அருமையான ஸ்கொயர் டிரைவ் அடித்து பவுண்…

  22. பாகிஸ்தான் செல்லுமா இலங்கை அணி இலங்கை கிரிக்கெட் அணியை அழைத்து பாகிஸ்­தானில் கிரிக்கெட் தொடர் ஒன்றை நடத்த அந்த நாட்டின் கிரிக்கட் சபை முயற்­சித்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தக­வல்­களை மேற்கோள்­காட்டி, இந்­திய ஊடகம் ஒன்று இந்த செய்­தியை வெளி­யிட்­டுள்­ளது. 2009ஆம் ஆண்டு அங்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டி­ருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் மீது தீவி­ர­வா­திகள் தாக்­குதல் நடத்தி இருந்­தனர். இதனை அடுத்து பாகிஸ்தானில் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டிகள் எவையும் இடம் ­பெற்­றி­ருக்­க­வில் லை. தற்­போது சிம்­பாப்வே அணி பாகிஸ்­தானில் சென்று விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/05/30/%E0…

  23. வெடிமருந்து கடத்திய கிரிக்கெட் வீரர் கைது வெடி­ மருந்து கடத்­தி­ய­தாக மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆன்ட்ரூ ஃபிளெட்ச்சர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். மேற்­கிந்­தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் ஆன்ட்ரூ பிளெட்ச்சர், தற்­போது டொமி­னிக்கா தீவில் உள்ள வின்ட்வேர்ட் ஐலேண்ட் அணிக்­காக விளை­யாடி வரு­கிறார். இந்­நி­லையில் டொமி­னிக்­காவில் இருந்து மேற்­கிந்­தி­யத் ­தீ­வு­க­ளுக்கு செல்ல அவர், அங்­குள்ள டக்ளஸ் விமா­ன­நி­லை­யத்­துக்கு சென்றார். அப்­போது அவரை சோத­னை­யிட்ட அதி­கா­ரிகள் ஃபிளெட்­சரின் பைகளில் வெடி­ம­ருந்து இருப்­பதை கண்­டு­பி­டித்­தனர். உட­ன­டி­யாக அவற்றை பறி­முதல் செய்த அதி­கா­ரிகள் ஃபிளெட்­சரை கைது செய்து நீதி­மன்­றத்தில் ஆஜர்…

    • 2 replies
    • 542 views
  24. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் தலைவராக செப் பிளாட்டர் மீண்டும் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மீண்டும் தலைவராக பிளாட்டர் தேர்வு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோர்டான் நாட்டு இளவரசர் அலி பின் அல் ஹுசைன் இரண்டாம் சுற்றின்போது போட்டியிலிருந்து விலகியதால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மிகவும் பரபரப்புக்கு இடையே இந்தத் தேர்தல் ஜூரிக் நகரில் நடைபெற்றது. முதல் சுற்று வாக்கெடுப்பில் இரு வேட்பாளர்களுக்கும் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்காததால், போட்டி இரண்டாம் சுற்றுக்குச் சென்றது. எனினும் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பின் போது, அலி பின் அல் ஹுசைன் விலகுவதாக தெரிவித்த பின்னர், பிளாட்டர் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டத…

  25. ஐ.எஸ்.எல்., கால்பந்து அட்டவணை வெளியீடு புதுடில்லி: இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் முதல் போட்டியில், ‘நடப்பு சாம்பியன்’ கோல்கட்டா அணி, சென்னை அணியை எதிர்கொள்கிறது. பிரிமியர் கிரிக்கெட் தொடர் போல கடந்த ஆண்டு முதன்முறையாக இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் வெற்றிகரமாக நடந்தது. இதில் சென்னை, மும்பை, கோல்கட்டா, கொச்சி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. இதன் பைனலில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலியின் கோல்கட்டா அணி, இந்திய ஜாம்பவான் சச்சினின் கொச்சி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நடப்பு ஆண்டுக்கான 2வது ஐ.எஸ்.எல்., தொடர் வரும் அக்., 3ல் சென்னையில் துவங்குகிறது. இத்தொடரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.