Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ரிச்சர்ட்ஸ், சச்சின், லாரா வரிசையில் விராட் கோலியை வைக்கும் மைக்கேல் ஹோல்டிங் இந்திய முன்னாள் பயிற்சியாளர் ஜான் ரைட்டுடன் சிரித்துப் பேசும் மைக்கேல் ஹோல்டிங். | கோப்புப் படம்: பிடிஐ. மேற்கிந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங், சில பேட்ஸ்மென்களுக்கு பந்து வீசுவது குறித்து கூறும் போது ரிச்சர்ட்ஸ், சச்சின், லாரா, வரிசையில் விராட் கோலியை வைத்து பேசினார். ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்ஃபோ இணையதளத்துக்கு ஹோல்டிங் அளித்த பேட்டியில் இது குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறினார். அதாவது ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ உலகின் தலை சிறந்த ஒருநாள் வீரராக விவ் ரிச்சர்ட்ஸை கூறியுள்ளது, அவருக்கு பவுலிங் வீசுவது பற்றிய கேள்விக்கு ஹோல்டிங் கூறும் போது, “வெவ்வேறு பவ…

  2. விமான டிக்கெட் எடுத்து வரலாம்... ஜாமீனில் வந்து உலக கோப்பையில் விளையாடும் வீரரை தெரியுமா? டாக்கா: உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான அணியில் தேர்வு செய்யப்பட்ட வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ருபேல் ஹொசைன், நடிகை ஒருவர் கொடுத்த பலாத்கார புகாரின்பேரில் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் அந்த வழக்கில் ஜாமீன் பெற்று வந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். 19 வயதான, வங்கதேச சினிமா நடிகையான நஸ்னின் அக்தர் ஹேப்பிக்கும், அந்நாட்டின் வேகப்பந்து வீச்சாளர் ருபேல் ஹொசைனுக்கும் இடையே காதல் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நஸ்னின், பரபரப்பு புகார் ஒன்றை காவல் நிலையத்தில் அளித்தார். அந்த புகாரில், ருபேல் தன்னை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்வதாக வாக்குறுதி…

  3. இந்திய அணியின் அட்டவணை மும்பை: வங்கதேச தொடருக்குப் பின், அடுத்த ஆண்டு ‘டுவென்டி–20’ உலக கோப்பை வரை இந்திய அணி தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. எட்டாவது ஐ.பி.எல்., தொடர் முடிந்ததும் இந்திய அணி வங்கதசம் செல்கிறது. பின் ஜூலை மாதம் ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி 3 ஒருநாள், 2 ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. அடுத்து ஆகஸ்ட் மாதம் இலங்கை செல்லும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இத்தொடருக்குப் பின் இந்திய அணி சொந்தமண்ணில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 4 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் (செப்., 2015) மோதுகிறது. இதன் பின் பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்படும் இந்த…

  4. 20 ஓவர் போட்டிக்காக டெஸ்டில் இருந்து ஓய்வு பெறும் வீரர்கள்: முன்னாள் வீரர் கேரி சோபர்ஸ் ஆதங்கம் 20 ஓவர் போட்டியில் விளையாட வேண்டும் என்பதற்காக பல வீரர்கள் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவதாக மேற்கிந்தியத்தீவுகளை சேர்ந்த முன்னாள் வீரர் சர் கேரி சோபர்ஸ் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். சோபர்ஸ், உலகின் தலைசிறந்த ஆல் ரவுண்டரில் ஒருவர், கிரிக்கெட் உலகில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை தொடர்ந்து விளாசி முதல் வீரரும் கேரி சோபர்ஸ் தான். இப்போது 78 வயதாகும் அவர் 20 ஓவர் கிரிக்கெட் தொடர்பாக இணையதளத்தில் மேலும் கூறியுள்ளது: இப்போதைய சூழ்நிலையில் டெஸ்ட் போட்டி என்பது கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது. அதுவும் 20 ஓவர் போட்டிகள் வந்த பிறகு, பல வீரர்கள் விரைவாகவே …

  5. உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான மே.இ.தீவுகள் லெஜண்ட் கேரி சோபர்ஸ். கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டரான கேரி சோபர்ஸ், நவீன கிரிக்கெட்டில் ஆடப்படும் சில ஷாட்கள் பற்றி கூறும்போது, கவசங்கள் இல்லாமல் ஆடுவார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இது குறித்து ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறும் போது, “நவீன கிரிக்கெட்டில் ஆடப்படும் பல ஷாட்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. ஆனால் ஹெல்மெட், முகக்கவசம் இன்னபிற கவசங்களை கழற்றி விட்டு அத்தகைய ஷாட்களை ஆடச் சொல்லுங்கள் பார்ப்போம். அவர்கள் ஆடுகிறார்களா என்பதையும் பார்ப்போம். கடந்த கால வீரர்களுக்கு எந்த வித பாதுகாப்பு கவசங்களும் இல்லை. அதனால்தான் அவர்கள் இன்று ஆடும் சில ஷாட்களை …

  6. வங்கதேச டூருக்கான இந்திய அணி அறிவிப்பு.. ஹர்பஜன்சிங்கிற்கு வாய்ப்பு, யுவராஜ் புறக்கணிப்பு! மும்பை: வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ தேர்வு குழு அறிவித்துள்ளது. 2 வருடங்களுக்கு பிறகு சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், டெஸ்ட் போட்டிக்கான அணியில் மட்டும் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. யுவராஜ் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இதிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வங்கதேசம் செல்கிறது. டெஸ்ட் போட்டி ஜூன் 10ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள், அம்மாதம், 18ம் தேதி, 21 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தொடர்க…

  7. ‘பீல்டிங்’ விதிமுறையில் மாற்றம்: ஐ.சி.சி., புது முடிவு பெங்களூரு: ஒருநாள் போட்டிக்கான ‘பீல்டிங்’ கட்டுப்பாடு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. பெங்களூருவில், கும்ளே தலைமையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) கிரிக்கெட் கமிட்டி கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இதில், ஒருநாள் போட்டிகளில் ‘பீல்டிங்’ கட்டுப்பாடு விதிமுறையில் மாற்றம் கொண்டு வர விவாதிக்கப்பட்டது. கடந்த 2012ல் ஒருநாள் போட்டிகளில் ‘பீல்டிங்’ கட்டுப்பாடு விதிமுறை அறிமுகமானது. இதன்படி முதல் 10 ஓவரில் உள்வட்டத்துக்கு வெளியே 2 பீல்டர்கள் தான் நிற்க வேண்டும், ‘பேட்டிங் பவர் பிளே’ ஓவரில் உள்வட்டத்துக்கு வெளியே 3 ‘பீல்டர்கள்’ நிறுத்தலாம். ‘பவர் பிளே’ இல்லாத நேரங்க…

  8. 326 ரன்கள் விளாசியும் கெவின் பீட்டர்சனுக்கு இங்கிலாந்து வாய்ப்பு மறுப்பு ஓவல் மைதானத்தில் லீசெஸ்டர் அணிக்கு எதிராக சர்ரே அணிக்கு ஆடிய பீட்டர்சன் 326 ரன்கள் குவித்தார். ஆனால் இங்கிலாந்து அணியில் மீண்டும் வாய்ப்பு தரப்படமாட்டாது என்று அவரிடம் அறிவுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய இயக்குநராக முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, நீக்கப்பட்ட கெவின் பீட்டர்சன் மீண்டும் இங்கிலாந்து அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கெவின் பீட்டர்சனும், தனது ஐபிஎல் வாய்ப்பை விடுத்து இங்கிலாந்து சர்ரே அணிக்காக விளையாடி நேற்று 2-ம் நாள் ஆட்ட முடிவில் 326 ரன்கள் குவித்து நாட் அ…

  9. 6 வருடத்திற்குப் பின் பாக்.கில் கிரிக்கெட்... அன்று தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானவரே இன்றும் நடுவர்! இஸ்லாமாபாத்: ஆறு வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் ஆடும் அணி ஒன்று பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்யப்போகிறது. ஆம்.. ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தானில் 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஜிம்பாப்வே அணி பங்கேற்கிறது. 2009ம் ஆண்டு மார்ச் மாதம், பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்த இலங்கை கிரிக்கெட அணியினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். அதுவும், பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாகூரில் இந்த துப்பாக்கி சூடு நடந்தது. அதிருஷ்டவசமாக இந்த தாக்குதலில் இலங்கை வீரர்கள் காயமின்றி தப்பினர். தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின…

  10. பார்சிலோனா அணி சாம்பியன்: ‘லா லிகா’ கால்பந்தில் அசத்தல் மாட்ரிட்: ‘லா லிகா’ கால்பந்து தொடரில் மெஸ்சி, நெய்மர் உள்ளிட்டோர் அடங்கிய பார்சிலோனா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடைசி லீக் போட்டியில் பார்சிலோனா அணி 1–0 என அத்லெடிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தியது. ஸ்பெயினில் உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்ற ‘லா லிகா’ கால்பந்து தொடர் நடந்தது. மாட்ரிட் நகரில் நடந்த கடைசி லீக் போட்டியில் பார்சிலோனா, அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலை வகித்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட பார்சிலோனா அணிக்கு 65வது நிமிடத்தில் லியோனல் மெஸ்சி ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய அத்லெடிகோ மாட்ரிட் அணியினரால் ஒரு கோல் க…

  11. ஸிம்பாப்வே அணியின் பாக். கிரிக்கெட் விஜயம் உறுதி ஆனால், அதிகாரிகளை அனுப்ப ஐ.சி.சி மறுப்பு பாகிஸ்­தா­னுக்­காக கிரிக்கெட் விஜயம் இடம்­பெறும் என ஸிம்­பாப்வே உறுதி வழங்­கி­யுள்­ள­தாக பாகிஸ்தான் கிரிக்கெட் கட்­டுப்­பாட்­டுச்­சபை அறி­வித்­துள்­ளது. ஆனால், இப்­போட்­டி­க­ளுக்கு தனது நடு­வர்கள், மத்­தி­யஸ்­தரை நிய­மிக் ­கப்­போ­வ­தில்லை என சர்­வ­தேச கிரிக் கெட் பேரவை (ஐ.சி.சி.) தெரி­வித்­துள்­ளது. பாகிஸ்­தா­னுக்கு ஸிம்­பாப்வே அணி விஜயம் மேற்­கொள்ளும் என்ற உறு­திப்­பாட்டை எழுத்து மூல­மாக ஸிம்­பாப்வே தங்­க­ளுக்கு கடந்த வெள்­ளி­யன்று வழங்­கி­ய­தாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பேச்­சாளர் அகா அக்பர் தெரி­வித்தார்.ஸிம்­பாப்வே அணி­யினர் லாகூரை நாளை சென்­ற­டைவர் என அந்தப் பேச்­சாளர…

  12. பிராட் ஹாட்டின் ஒரு நாள் போட்­டி­களி­லி­ருந்து ஓய்வு உலகக் கிண்­ணத்தை வென்ற அவுஸ்­தி­ரே­லிய அணியின் விக்கெட் காப்­பாளர் பிராட் ஹாட்டின் ஒரு நாள் போட்­டி­களி­லி­ருந்து ஓய்வு பெறு­கிறார். பி.ஜே. என்ற பட்­டப்­பெ­யரால் அழைக்­கப்­படும் ஹாட்டின் இடது கை துடுப்­பாட்ட வீர­ராவார். இது­வரை 126 போட்­டி­களில் பங்­கேற்­றுள்ள இவர், 115 இன்­னிங்ஸ்களில் விளை­யா­டி­யுள்ளார். 2 சதங்­க­ளையும், 16 அரை சதங்­க­ளையும் அடித்­துள்ள இவர், இது­வரை 3122 ஓட்­டங்­களை குவித்­துள்ளார். அதே போல் விக்கெட் காப்­பாளர் பொறுப்பில் 170 பிடி­களை எடுத்­துள்­ள­துடன் 11 ஸ்டம்­பிங்­க­ளையும் செய்­துள்ளார். இந்­நி­லையில் ஒரு நாள் போட்­டி­களில் இருந்து இவர் ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார். htt…

  13.  சம்பியன் லீக் தொடர்பில் விரைவில் பேச்சுவார்த்தை சம்பியன் லீக் 20-20 தொடர் நிறுத்தப்படும் வாய்ப்புகள் இருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையுடன் இணைந்து குறித்த தொடரை நடாத்திவரும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா மற்றும் கிரிக்கெட் தென் ஆபிரிக்கா ஆகிய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டிக்கு இரண்டு சபைகளினதும் தலைவர்களும், பிரதம நிறைவேற்று அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். அந்த நேரத்தில் குறித்த தொடர் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. போதியளவு பார்வையாளர்கள் இல்லை. தொலைக்காட்சி நிறுவனத்…

  14. ஐ.பி.எல். தொடரின் நேற்று முன்­தினம் நடை­பெற்ற போட்­டியில் பெங்­களூர் அணித்­த­லைவர் விராட் கோஹ்லி, போட்­டி­யின்­போது நடு­வ­ராக கட­மை­யாற்­றிய குமார் தர்­ம­சே­ன­வுடன் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்டதையடுத்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலிருந்து விராட் கோஹ்லி ஓய்வு பெறுவார் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இறுதிக் கட்­டத்தை நெருங்­கி­யுள்ள ஐ.பி.எல். தொடரின் நேற்று முன்­தினம் நடை­பெற்ற போட்­டியில் சன் ரைசர்ஸ் ஐத­ராபாத் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்­களூர் அணிகள் மோதின. இப்­போட்டி மழையால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டது. இந்­நி­லையில் இந்தப் போட்டி 11 ஓவர்­க­ளாக குறைக்­கப்­பட்­டது. முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய ஐத­ராபாத் அணி டேவிட் வோர்னர், ஹென்றிக்ஸ் ஆகி­யோரின் அரை­ச­தத்தால் 3 …

    • 4 replies
    • 594 views
  15. வங்கதேச அணி எழுச்சியில் இருப்பதால் விராட் கோலி விளையாட வேண்டும்: சுனில் கவாஸ்கர் வங்கதேச கிரிக்கெட் தொடரிலிருந்து விராட் கோலி விலக்கு கோரியதாக செய்திகள் எழுந்ததையடுத்து அவர் விளையாடுவது அவசியம் என்று சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். "விராட் கோலி விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டு ஒருநாள் போட்டிகளின் போது விலகிக் கொள்ளலாம். உண்மையில் விராட் கோலி, அஸ்வின், உமேஷ் யாதவ் போன்ற வீரர்களுக்கு ஓய்வு தேவையே. கடந்த 4 மாதங்களாக சில வீரர்களுக்கு பணிச்சுமை கடுமையாகவே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. வங்கதேசத்துக்கு வலுவான இந்திய அணி செல்வது மிக முக்கியம். பாகிஸ்தானை அவர்கள் ஒருநாள் தொடரில் மிகவும் எளிதான வீழ்த்தியதைப் ப…

  16. நாட்டிங்காம்: உள்ளூர் ‘டுவென்டி–20’ போட்டியில் அசத்திய இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், தொடர்ந்து 6 சிக்சர் விளாசி சாதனை படைத்தார். இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் ‘டுவென்டி–20’ தொடர் நடத்தப்படுகிறது. இதன் லீக் போட்டியில் நாட்டிங்காம்ஷயர், வார்விக் ஷயர் அணிகள் மோதின. வருண் சோப்ரா 80 ரன்கள் விளாச, வார்விக் ஷயர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது. ஹேல்ஸ் அபாரம்: பின் களமிறங்கிய நாட்டிங்காம்ஷயர் அணிக்கு வெசல்ஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய ஹேல்ஸ், ரான்கின் வீசிய 11வது ஓவரின் கடைசி 3 பந்தில் சிக்சர் விளாசினார். பின் ஜாவித் வீசிய அடுத்த ஓவரில் தான் சந்தித்த 3 பந்திலும் வரிசையாக சிக்சர் அடித்தார்…

  17. டிவில்லியர்ஸ் ஆடும் சில ஷாட்களை என்னால் கனவிலும் ஆட முடியாது: ராகுல் திராவிட் தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியின் கேப்டன் ஏ.பி.டிவில்லியர்ஸின் நூதனமான அதிரடி பேட்டிங் பற்றி ராகுல் திராவிட் புகழ்ந்து பேசியுள்ளார். அவர் விளையாடும் சில நூதன ஷாட்கள் பற்றி ராகுல் திராவிட் கூறும் போது, “அவர் விளையாடுவதைப் பார்க்கும் போது, என்னால் அவர் விளையாடுவது போன்ற ஷாட்களை எனது கனவிலும் நான் ஆட முடியாது, அப்படிப் பட்ட ஷாட்களை ஆடுவது போல கனவு கூட கண்டது கிடையாது என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன், அப்படிப்பட்ட ஷாட்களை ஆடும் தைரியம் என்னிடம் இல்லை” என்றார். இளம் வீரர்கள், டிவில்லியர்ஸ், பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது பேட்டிங்கைப் பார்த்து பழகுவது சரியாக இருக்குமா என்ற கேள்விக்கு பதில் …

  18. மெத்யூஸ், மலிங்கவிடம் மீண்டும் தலைமைப் பொறுப்புகள் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தலை­வ­ராக ஏஞ்­சலோ மெத்யூஸ் மீண்டும் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். பாகிஸ்­தானின் இலங்­கைக்­கான கிரிக்கெட் விஜயம் முதல் அடுத்த வருடம் இங்­கி­லாந்­துக்­கான இலங்கை கிரிக்கெட் விஜயம் வரை ஏஞ்­சலோ மெத்யூஸ் அணித் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக இலங்கை கிரிக்கெட் நிறு­வனம் அறி­வித்­தது. இதே­வேளை, இலங்­கையின் சர்­வ­தேச இரு­பது 20 கிரிக் கெட் அணித் தலைவர் பதவி மீண்டும் லசித் மாலிங்­க­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் பங்­க­ளா­தேஷில் நடை ­பெற்ற உலக இருபது 20 கிரிக்கெட் போட்­டி­களில் இலங்­கையை சம்­பி­ய­னாக்­கிய …

  19. சாம்பியன்ஸ் லீக்: ரியல் மாட்ரிட் ‘அவுட்’ மாட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை ‘நடப்பு சாம்பியன்’ ரியல் மாட்ரிட் அணி இழந்தது. ஜுவென்டஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில் தோல்வி அடைந்தது. ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கிளப் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் அரையிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’ ரியல் மாட்ரிட், ஜுவென்டஸ் அணிகள் மோதின. இத்தாலியில் நடந்த அரையிறுதியின் முதல் போட்டியில் ஜுவென்டஸ் அணி 2–1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது. ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடந்த 2வது போட்டி, ஆட்டநேர முடிவில் 1–1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது. ரியல் மாட்ரிட் சார்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (23வது நிமிடம…

  20. இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக ஜொன்டி ரோட்ஸை நியமிப்பதற்கான பேச்சுக்களில் இலங்கை கிரிக்கெட் சபை இறங்கியுள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரரான ஜொன்டி ரோட்ஸ் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்றுநராக பணியாற்றுகிறார். இலங்கை அணியின் பயிற்றுநர்கள் விலகிய நிலையில் வரும் ஜுன் 8 ஆம் திகதி 3 டெஸ்ட், 5 ஒருநாள், 2 ருவென்ரி-20 போடடிகளில் விளையாட பாகிஸ்தான் அணி இலங்கை வருகிறது. இந்நிலையிலேயே இலங்கை அணியினருக்குப் பயிற்சிகளை வழங்க ஜொன்டி ரோட்ஸை ஒப்பந்தம் செய்வதற்காக இலங்கை கிரிக்கெட் சபை கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. http://www.malarum.com/article/tam/2015/05/12/10033/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%…

    • 0 replies
    • 2.2k views
  21. ஆடவர் கிரிக்கெட் லீக் போட்டியில் 8 விக்கெட்களை வீழ்த்திய பெண் இங்கிலாந்தில் நடைபெற்றுரும் ஆண்களுக்கான சென்ட்ரல் லன்காஷயர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஹேவுட் அணியில் விளையாடும் இங்கிலாந்து மகளிர் அணி வீராங்கனை கேட் (கெத்ரின்) லோரா குரொஸ் 47 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களைக் கைப்பற்றி பலத்த பாராட்டைப் பெற்றுள்ளார். அன்ஸ்வேர்த் அணிக்கு எதிரான போட்டியில் இவர் வீழ்த்திய 8 விக்கெட்களின் உதவியுடன் ஹேவூட் அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது. சென்ட்ரல் லன்காஷயர் லீக் கிரிக்கெட்டின் 123 வருட வரலாற்றில் முதலாவது பெண்ணாக விளையாடியவர் என்ற பெருமையை 23 வயதான கேட் பெற்றுக்கொண்டுள்ளார். இவர் பெண்கள் அணியிலும் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.…

  22. இந்தியா – பாகிஸ்தான் தொடர் ஐ.அரபு இராச்சியத்தில் இந்­தியா – -பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் நடை­பெ­ற­வுள்­ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் சகார்­யார்கான், பி.சி.சி.ஐ. தலைவர் ஜக்­மோகன் டால்­மி­யாவை சந்­தித்து பேசினார். இந்த சந்­திப்­புக்கு பின், பி.சி.சி.ஐ. தலைவர் ஜக்­மோகன் டால்­மியா முன்­னி­லையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் சகார்­யார்கான் கூறு­கையில், "எதிர்­வரும் டிசம்பர் மாதம் இந்­தி­யா-–­பா­கிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யே­யான கிரிக்கெட் தொடரை பொது­நாட்டில் வைத்து நடத்த திட்­ட­மிட்­டுள்ளோம். அதன்­படி, ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் இந்த தொடர் நடை­பெ­ற­வுள்­ளது. 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 இரு­பது ஓவர் போட்­டி­கள…

  23. ஜூன் மாதம் இலங்கை வருகிறது பாகிஸ்தான் அணி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கையில் 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு T20 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளதை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உறுதிப்படுத்தியுள்ளது. டெஸ்ட் போட்டிகள் விளையாடுவதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த மைதான ஒழுங்குகளில் மாத்திரம் சிறிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்த டெஸ்ட் போட்டிகள் வேறு மைதானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. ஜூன் மாதம் 17ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டி காலியியும், இரண்டாவது போட்டி கொழும்பு சரவணமுத்து மைதானத்திலும், மூன்றாவது போட்…

  24. சங்கக்கார - மஹேல மோதல்! இங்­கி­லாந்தில் நடை­பெற்­று­வரும் பிராந்­தி யப் போட்­டியில் சசெக்ஸ் பிராந்­திய அணிக் ­காக இலங்கை அணியின் முன்னாள் நட்­சத்­திர வீர­ரான மஹேல ஜய­வர்­தன விளை­யா­ட­வு ள்ளார். அண்­மையில் நடை­பெற்று முடிந்த உலகக் கிண்ணத் தொட­ரோடு சர்­வ­தேச கிரிக்கெட் அரங்­கி­லி­ருந்து ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து இங்­கி­லாந்­தி­லுள்ள உள்ளூர் அணி­யொன்­றான சசெக்ஸ் பிராந்­திய அணியில் விளை­யாட ஒப்­பந்தம் செய்­யப்­ப ட்டார். இதன்­படி அந்த அணிக்­காகக் கள­மி­றங்­க­வுள்ளார். ஏற்­க­னவே இலங்கை அணியின் சக­வீ­ர­ரான குமார் சங்­கக்­கார சரே பிராந்­திய அணி சார்பில் விளை­யாடி வரு­கின்றார். இதனால் சங்­கக்­காரா விளை­யாடும் அணிக்கு எதி­ராக ஜய­வர்­தன விளை­யா­ட­வு…

  25. இங்கிலாந்து பயிற்சியாளர் நீக்கம் லண்டன்: இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பீட்டர் மூர்ஸ் நீக்கப்பட்டு முன்னாள் வீரர் ஸ்டிராஸ், ‘இயக்குனர்’ ஆனார். இந்திய அணி பயிற்சியாளர் டங்கன் பிளட்சர், இருக்கும் போதே ‘இயக்குனர்’ என்ற பெயரில் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார். இந்த வழியில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு இறங்கியது. சமீபத்திய உலக கோப்பை தொடரில் சொதப்பிய இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ‘டிரா’ செய்தது. இதையடுத்து, கடந்த 2007–09க்குப் பின் இரண்டாவது முறையாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட பீட்டர் மூர்ஸ், 52, அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்குப் பதில் ‘தேசிய கிர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.