விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
செஞ்சுரி அடி, முத்தம் கொடு... தப்பே இல்லை.. கோஹ்லிக்கு கொட்டு வைத்த கபில்! டெல்லி: விராத் கோஹ்லி ஒரு சதம் போட்டு விட்டு, பெவிலியனில் இருக்கும் தனது காதலிக்கு முத்தம் கொடுத்தால் அதில் தவறே இல்லை. மாறாக ரன்னே எடுக்காமல் பறக்கும் முத்தம் கொடுத்தால் அது எனக்கு கவலை தரும் என்று கபில்தேவ் அதிரடியாக கூறியுள்ளார். இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த கேப்டன் என்ற பெருமை கபில்தேவுக்கு உண்டு. அதன் பின்னர் டோணி ஒருமுறை பெற்றுத் தந்தார். இந்த நிலையில் அடுத்த உலகக் கோப்பை வந்து விட்டது. பிப்ரவரி 15ம் தேதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானைச் சந்திக்கவுள்ளது இந்தியா. இந்த நிலையில், இந்திய அணி குறித்து மனம் திறந்து சில கருத்துக்களை தனது பாணியில் அதிரடியாக கூறியுள்ளார் கப…
-
- 0 replies
- 550 views
-
-
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை வெளியீடு சர்வதேச கிரிக்கெட் சபையானது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தர வரிசையை வெளியிட்டு ள்ளது. அதனடிப்படையில் ஒரு நாள் அணிகளுக்கான தரவரிசையில் அவு ஸ்திரேலிய அணி 120 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்திய அணி (114 புள்ளிகள்) 2ஆவது இடத்தி லும் தென் ஆபிரிக்கா (113 புள்ளிகள்) 3ஆவது இடத்திலும் இலங்கை (109 புள்ளிகள்) 4ஆவது இடத்திலும் இங்கிலாந்து (104 புள்ளிகள்) 5ஆவது இடத்திலும் நியூஸிலாந்து (101 புள்ளிகள்) 6ஆவது இட த்திலும் பாகிஸ்தான் (96 புள்ளிகள்) 7ஆவது இடத்திலும் மேற்கிந்திய தீவுகள் (94 புள்ளிகள்) 8ஆவது இடத்திலும் பங்களாதேஷ்…
-
- 0 replies
- 324 views
-
-
கார்ட்னி வால்ஷ் கூறும் 11 சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறந்த பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மென்கள் என்று பட்டியல் வெளியிடும் தற்போதைய புதிய மோஸ்தரின் படி மே.இ.தீவுகள் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கார்ட்னி வால்ஷ் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 11 சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் பவுலர்களை அவர் குறிப்பிடவில்லை. அனைவரும் ஓய்வுபெற்ற வீச்சாளர்களே. இந்தப் பட்டியலை அவர் தரநிலைப்படுத்தி 1, 2 என்று குறிப்பிடவில்லை. மாறாக 11 வேகப்பந்து வீச்சாளர்களைப் பட்டியலிட்டு அவர்களைப் பற்றிய தனது மதிப்பீட்டையும் பதிவு செய்துள்ளார் கார்ட்னி வால்ஷ். கர்ட்லி ஆம்புரோஸ்: ஜொயெல் கார்னருக்கு சிறந்த மாற்று …
-
- 0 replies
- 399 views
-
-
சாதனை வெற்றியாளர்களைத் தந்த அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் ஒவ்வொரு ஆண்டினதும் முதலாவது டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் ஆக இடம்பெறும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் சுற்றுப் போட்டிகள் நேற்று முன்தினம் மெல்பேர்னில் முடிவுக்கு வந்தன. இந்த சுற்றுப்போட்டிகள் ஆரம்பிக்கு முன்னரேயே ஆடவர் ஒற்றையர் மற்றும் மகளிர் ஒற்றையர் பட்டங்களை வெல்ல யாருக்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன என்று கணிக்கப்பட்டு முதல் நிலை seed வழங்கப்பட்டனரோ, அந்த இருவரே தங்கள் சாதனைப் பட்டங்களை வசப்படுத்திக்கொண்டனர் என்பது விசேடமானது. அவுஸ்திரேலிய பகிரங்க ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ஐந்தாவது தடவை தன் வசப்படுத்திய நோவாக் ஜோக்கோவிக், பகிரங்க டென்னிஸ் விளையாட்டு ஆரம்பிக்கப்பட்ட பிறகு அதிக தடவை அவுஸ்திரேலிய பட்டத்தை வென்…
-
- 0 replies
- 360 views
-
-
மங்கிய நட்சத்திரங்கள் தேசிய அணியில் விளையாடுவதே விளையாட்டு வீரனின் கனவு. உலகக்கிண்ணம் ஒலிம்பிக் ஆகியவற்றில் விளையாடுவது அவர்களின் இலட்சியம். உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கிரிக்கெட் ரசிகர்களின் கோலாகலத் திருவிழா பெப்ரவரி 14ஆம் திகதி ஆரம்பமாகிறது. காதலர் தினமான பெப்ரவரி 14ஆம் திகதி, கிரிக்கெட் மீது பெருங்காதல் கொண்டவர்களின் நாளாகவும் அமையப்போகிறது. தேசிய அணியில் இடம்பிடித்த வீரர்கள் உலகக் கிண்ணப்போட்டியில் விளையாடுவதற்காக தமது திறமைகளை மேலும் வலுவூட்ட பிரயத்தனப்பட்டனர். உலகக்கிண்ண அணியில் இடம் கிடைக்குமென காத்திருந்த வீரர்கள் பலரின் ஆசையில் மண் விழுந்தது. சந்தர்ப்பம் கிடைத்தால் திறமைகளை வெளிப்படுத்தக் காத்திருந்தவர்களுக…
-
- 0 replies
- 327 views
-
-
ஸ்பெஷலாக எதையாவது செய்யுங்கள் டோணி.. "சி.எஸ்.கே". கோச் பிளம்மிங் வேண்டுகோள்! துபாய்: இந்திய அணியை காப்பாற்ற கேப்டன் டோணி ஸ்பெஷலாக எதையாவது செய்தாக வேண்டும் என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஐசிசி வெப்சைட்டில் பிளமிங் எழுதியிருப்பதாவது: சென்னை சூப்பர் கிங்ஸ்சில் நானும் ஒரு உறுப்பினர் என்றவகையில், டோணியை எனக்கு நெருக்கமாக நன்கு தெரியும். டோணி இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்று நம்புகிறேன். ஸ்பெஷலாக எதையாவது செய்யுங்கள் டோணி.. டோணி இனிமேல்தான் தனது திறமையை காண்பிக்க வேண்டும் என்ற நிலை இல்லை. கடந்த உலக கோப்பை இறுதி போட்டியில், சிக்சர் அடித்து வெற்றி பெற்று பேட்டை தூக்கியபோதே அவரது திறமையை உலகம் பார்த்துவிட்டது. ஆனா…
-
- 0 replies
- 930 views
-
-
இறுதி போட்டியில் களமிறங்கும் சென்றலைட்ஸ் vs ஜொலி ஸ்டார்ஸ் விக்ரம் - இராஜன் - கங்கு ஞாபகார்த்தமாக கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையம், வருடாந்தம் நடத்தும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் போட்டியொன்றில் பி.வதூஸனனின் துல்லியமான பந்துவீச்சால் வெற்றிபெற்ற சென்றலைட்ஸ் அணி, இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. 30 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இந்த சுற்றுப்போட்டியின் போட்டிகள், கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற ஆட்டத்தில் சென்றலைட்ஸ் அணியை எதிர்த்து கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி, 27 ஓவர்களில் 78 ஓட்டங்களை மாத்திர…
-
- 1 reply
- 408 views
-
-
சர்வதேசத் தடகள சம்மேளனத்தின் அடுத்த தலைவர் யார்? 2 பிப்ரவரி 2015 சர்வதேசத் தடகள சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கான மோதல் வலுத்து வருவது போலத் தெரிகிறது. தலைவர் பதவிக்கு போட்டியிடும் செபாஸ்டின் கோ(இடது) மற்றும் செர்கெய் புப்காஉலகளவில் விளையட்டுத்துறையில் மிகவும் மதிப்பும் மரியாதையும் கொண்ட இந்த அமைப்பின் தலைவராக தற்போது செனிகல் நாட்டைச் சேர்ந்த லெமீன் டியாக் இருக்கிறார். அவரது பதவிக் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முடிவடையவுள்ள நிலையில், ஒலிம்பிக் பிரபலங்களான பிரிட்டனின் சபாஸ்டின் கோவும், உக்ரைனின் செர்ஜேய் புப்காவும் சர்வதேசத் தடகள சம்மேளனத் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இருவரும் அந்த சம்மேளனத்தின் துணைத் தலைவர்களாக இருக்கின்றனர். செபாஸ்டின் கோ …
-
- 0 replies
- 296 views
-
-
2002 லார்ட்ஸ் வெற்றி: அணி வீரர்கள் அனைவரும் சட்டையைக் கழற்ற வலியுறுத்திய கங்குலி 2002-ஆம் ஆண்டு லார்ட்ஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய மகிழ்ச்சியில் பெவிலியனில் கேப்டன் கங்குலி சட்டையைக் கழற்றி சுழற்றினார். அப்போது, அணி வீரர்கள் அனைவரும் சட்டையைக் கழற்றி அவர் செய்தது போல் செய்ய வேண்டும் என்று கேப்டன் கங்குலி விரும்பியதாகவும் அதனை சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட் ஆகியோர் செய்ய விரும்பவில்லை என்று இந்திய அணி மேலாளர் ராஜிவ் சுக்லா கூறியுள்ளார். நாட்வெஸ்ட் டிராபி முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 325/5 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய இந்திய அணி விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்து வந்தது. அப்போது இந்திய அணி வெற்றி …
-
- 0 replies
- 711 views
-
-
தரவரிசையில் முதலிடம் என்ற தகுதியுடன் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த உலகக்கோப்பை சாம்பியன் இந்தியாவைக்காட்டிலும் 6 புள்ளிகளும், தென் ஆப்பிரிக்காவைக் காட்டிலும் 7 புள்ளிகளும் ஆஸ்திரேலியா அதிகம் பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் பொறுப்புடன் விளையாடி 95 ரன்களையும் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஆஸி. ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் பேட்டிங் தரவரிசையில் 19 இடங்கள் தாவி தரவரிசையில் 17-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய பேட்ஸ்மென்களில் விராட் கோலி, ஷிகர் தவன் ஆகியோர் ஒரு இடம் பின்னடைவு கண்டு முறையே 3…
-
- 0 replies
- 328 views
-
-
நடத்தையில் உதாரணமாகத் திகழ்பவர் தோனி: ஆகாஷ் சோப்ரா புகழாரம் இன்றைய கிரிக்கெட் களத்தில் வீரர்களிடையே மோதல்கள் ஏற்பட்டு வரும் சூழலில் ஒழுக்கம் மற்றும் நடத்தையில் உதாரணமாகத் திகழ்பவர் தோனி என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா புகழாரம் சூட்டியுள்ளார். நியூஸ்24 கிரிக்கெட் சந்திப்பில் சோப்ரா இவ்வாறு கூறியுள்ளார். “களத்தில் தோனி அமைதியாக இருக்கிறார். ஆட்டம் மட்டுமே பேச வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். கிரிக்கெட் ஆடுகளத்தில் அவரது நடத்தை பெரிய பாராட்டுக்குரியது. இன்றைய கிரிக்கெட் ஆடுகளம் வீரர்களிடையே வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகளும் நிரம்பியுள்ளது. இதில் ஒரு வார்த்தையைக் கூட பிரயோகிக்காது களத்தில் செயல்படுகிறார் தோனி. ஒழுக்கமான கிரிக்கெட் வீரர் எ…
-
- 0 replies
- 658 views
-
-
பொதுமக்கள் பார்வைக்காக சென்னையில் 'உலகக் கோப்பை' ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் வரும் 14-ம் தேதி தொடங்கவுள்ள உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக, சென்னையில் உலகக்கோப்பை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. எம்.ஆர்.எஃப். நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. நேற்று மெரினா பீச், பெசன்ட் நகர் பீச், ஃபோரம் மால், எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் ஆகிய இடங்களில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதில், ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை எழுதும் வகையில் ஒரு பேனரும் வைக்கப்பட்டிருந்தது. இந்த உலகக் கோப்பையை, நடிகர்கள் ஸ்ரீகாந்த், நிதின் சத்யா, வைபவ், அசோக் பவர்ஸ்டார் ஸ்ரீநிவாசன், ராகுல் நம்பியார், ஆதி, விஜய் வசந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பார்வையிட்டு, தங்க…
-
- 0 replies
- 339 views
-
-
கூட்டாக திறமையை வெளிப்படுத்தினால் சவாலளிக்கலாம்: மைக்கேல் திசர அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெற உள்ள உலகக் கிண்ணத் தொட ரில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் கூட்டாக சேர்ந்து திறமையை வெளிப்படுத்துவார்களாயின் எதிரணி வீரர்களுக்கு சக்த்திவாய்ந்த அணியாக திகழலாம் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மைக்கேல் திசர நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்க உள்ள இலங்கை அணி தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட் டம் தொடர்பில் அண்மைக்காலமாக சந்தேகங்கள் நிலவி வந்தன. உலகக் கிண்ணத் தொடரில் டில்சானுடன் சேர்ந்து யார் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனா…
-
- 0 replies
- 369 views
-
-
ஆசிய கால்பந்து: மகுடம் சூடிக்கொண்ட அவுஸ்திரேலியா ஆசிய நாடுகளின் கால்பந்தாட்ட மன்னர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் ஆசியக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நேற்று அவுஸ்திரேலியாவில் முடிவுக்கு வந்தன. 1956இல் ஆசியக் கால்பந்து சம்மேளனம் ஆரம்பித்த ஆசியக்கிண்ணக் கால்பந்துத் தொடர், இம்முறை தான் முதல் தடவையாக அவுஸ்திரேலியாவில் நடைபெற்றது. ஜனவரி 9 முதல் நடைபெற்று வந்த 16ஆவது ஆசியக்கிண்ணம், முதல் தடவையாக அவுஸ்திரேலியாவின் கைகளில் போய்ச் சேர்ந்துள்ளது. ஆசியக் கிண்ணத்தை வெல்கின்ற 8ஆவது நாடு என்னும் பெருமையும் அவுஸ்திரேலியாவுக்குக் கிடைத்துள்ளது. இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால், ஓஷியானிய வலயத்திலிருந்து அவுஸ்திரேலியா 2006-2007ஆம் ஆண்டுகளில் தான் ஆசிய நாடுகளோடு …
-
- 0 replies
- 382 views
-
-
இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறாதது ஆச்சரியமளிக்கவில்லை: ஜார்ஜ் பெய்லி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டியை கூட வெல்ல முடியாமல் இந்திய அணி வெளியேறியது. இது தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்று ஆஸி. ஒருநாள் அணி கேப்டன் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். ஆனாலும், உலகக்கோப்பையில் இந்திய வாய்ப்புகள் இதனால் கெட்டுப்போய் விடவில்லை என்று கூறிய பெய்லி, “ஆம். இந்திய வாய்ப்புகள் மங்கி விடவில்லை. இந்திய அணி டெஸ்ட் தொடர் மீது நீண்ட நாட்கள் கவனம் செலுத்தியிருக்கலாம், தயாரிப்புகள் அடிப்படையில் டெஸ்ட் தொடருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம், ஆனால் இங்கிலாந்து அணி இந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்காக மட்டுமே தன்னைத் தயார் படுத்திக்கொண்டது. உலகக்கோப்பைக்…
-
- 2 replies
- 520 views
-
-
கிரிக்கெட் ‘கிட் பேக்’-ஐ பூட்டி வைக்க வேண்டும்: ஓய்வு தேவை என்ற தொனியில் தோனி கூறியது உலகக்கோப்பைக்கு முன்பு கிடைக்கும் இடைவெளி நாட்களை முழு ஓய்வுக்குப் பயன்படுத்துவதே அணியின் மேம்பாட்டுக்குச் சிறந்தது என்று கேப்டன் தோனி கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான வாழ்வா-சாவா போட்டியில் தோற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறிய இந்திய அணிக்கு இப்போது தேவை உலகக்கோப்பைக்கு முன்பு சிறிது ஓய்வு என்று தோனி தெரிவித்துள்ளார். "இந்தத் தொடர் மிகவும் நீண்ட தொடராகிவிட்டது. இந்த 6 முதல் 10 நாட்களான இடைவெளி அணிக்கு உதவிகரமாக அமையும் என்று கருதுகிறேன். கிரிக்கேட் ‘கிட் பேக்’-ஐ பூட்டி வைக்க வேண்டியதுதான். கண்ணில் படாத இடத்தில் அதனை வைத்து விட வேண்டும். கிரிக்கெட்டிலிருந்து…
-
- 0 replies
- 557 views
-
-
யாழ்.மத்திய கல்லூரி 8 விக்கெட்டுகளால் வெற்றி இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில், 19 வயதுப்பிரிவு அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட இரண்டு நாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஆட்டமொன்றில் யாழ். மத்திய கல்லூரி வெற்றிபெற்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற இந்தப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை எதிர்த்து கொட்டஹேன ஆனந்தா மகா வித்தியாலயம் மோதியது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் ஆடிய ஆனந்தா மகா வித்தியாலயம் 48.4 ஓவர்களின் சகல விக்கெட்களையும் இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பஷன் ஜெயகலன 23 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் யாழ். மத்திய கல்லூரி சார்பா…
-
- 4 replies
- 530 views
-
-
நியூசி., அசத்தல் வெற்றி: வீழ்ந்தது பாக்., ஜனவரி 31, 2015. வெலிங்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ராஸ் டெய்லர், எலைட் அரை சதம் விளாச நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் பங்கேற்று வருகிறது. வெலிங்டனில் நடந்த முதல் போட்டியில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பிரண்டன் மெக்கலம் ‘பவுலிங்’ தேர்வு செய்தார். அப்ரிதி அரை சதம்: பாகிஸ்தான் அணிக்கு ஹபீஸ் (0), யூனிஸ் கான் (9) ஏமாற்றினர். ஷெகாதத் 15 ரன்களில் திரும்பினார். கேப்டன் மிஸ்பா அரை (58) சதம் கடந்தார். கோரி ஆண்டர்சன் பந்துவீச்சில் சோகைல் (23), சர்பராஸ் அகமத் (5) வெளியேறினார். அதிரடியாக விளையா…
-
- 1 reply
- 406 views
-
-
டெஸ்டிலிருந்து டுவைன் பிராவோ ஓய்வு ஜனவரி 31, 2015. புதுடில்லி: வெஸ்ட் இண்டீஸ் அணியின் டுவைன் பிராவோ டெஸ்ட் போட்டியிலிருந்து திடீரென ஒய்வை அறிவித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ, 31. ‘ஆல்–ரவுண்டரான’ இவர் 40 டெஸ்ட் (2200 ரன்கள்) , 164 ஒரு நாள் (2968), 53 ‘டுவென்டி–20’ (936) போட்டிகளில் விளையாடி உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு (டபிள்யு.ஐ.சி.பி.,), வீரர்கள் சங்கத்துடன் ஏற்பட்ட புதிய சம்பள ஒப்பந்தத்தை வீரர்கள் ஏற்க மறுத்தனர். இதனால், கடந்த ஆண்டு இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை பாதியில் ரத்து செய்து திரும்பியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்த டுவைன் பிராவோ, போலார்டுக்கு உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், டெஸ்ட்…
-
- 1 reply
- 432 views
-
-
337 ரன்கள் குவித்தார் இந்திய டெஸ்ட் தொடக்க வீரர் கே.எல்.ராகுல்; கர்நாடகா 719 ரன்கள் பெங்களூருவில் நடைபெறும் உ.பி. அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய டெஸ்ட் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 337 ரன்களைக் குவித்து சாதனை புரிந்துள்ளார். இதன் மூலம் ரஞ்சி டிராபியில் முச்சதம் அடித்த முதல் கர்நாடகா வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் கே.எல்.ராகுல். சமீபத்தில் இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது 2-வது டெஸ்ட் போட்டியிலேயே அருமையான சதம் ஒன்றை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 667 நிமிடங்கள் ஆடிய ராகுல் 448 பந்துகளில் 47 பவுண்டரி 4 சிக்சர்கள் சகிதம் 337 ரன்கள் குவித்து 2ஆம் நாளான இன்று ஆட்டமிழந்தார். கர்நாடகா அணி 719 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் இழந்து…
-
- 0 replies
- 496 views
-
-
பெப்ரவரியில் ஏலம் ஐ.பி.எல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பெங்களூரில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் யுவராஜ் சிங், கெவின் பீற்றர்ஸன் மற்றும் தினேஸ் கார்த்திக் ஆகியோர் அதிக விலையில் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். எனினும் இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். போட்டிகளில் யுவராஜ் சிங்கை றோயல் சலஞ்சர்ஸ் அணியும் கெவின் பீட்டர்ஸன், தினேஸ் கார்த்திக், உள்ளிட்ட 14 வீரர்களை டெல்லி அணியும் நீக்கியுள்ளது. இந்நிலையில் பெப்ரவரியில் நடைபெறவுள்ள ஏலத்தில் எத்தனை வீரர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்பது தெரிவிக்கப்படவில்லை. http://www.virakesari.lk/articles/2015/01/30/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8…
-
- 4 replies
- 757 views
-
-
ரொனால்டோவை தண்டியுங்கள்: நெய்மர் எதிரணி வீரரை அறைந்தும், உதைத்தும் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என பிரேசில் வீரர் நெய்மர் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்பெயினில் தற்போது லா லிகா கால்பந்துத் தொடர் நடந்து வருகிறது. இதில் பார்சிலோனா அணி சார்பில் நெய்மரும், ரியல் மாட்ரிட் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் ரியல் மாட்ரிட் கொர்டோபா ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ரியல் மாட்ரிட் அணி 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆனால் போட்டியின் நடுவே ரொனால்டோ நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. கொர்டபோ அணியின் தடுப்பாட்டக்காரர் எடிமர் பிராகாவை ஒரு கட்டத்தில் தி…
-
- 0 replies
- 393 views
-
-
ஆடம் கில்கிறிஸ்ட்டின் விக்கெட் கீப்பிங் சாதனையை முறியடித்த சங்கக்காரா ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 474 வீரர்களை அவுட் செய்து உலக சாதனை நிகழ்த்தினார் சங்கக்காரா. இதன் மூலம் ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையை முறியடித்தார். இன்று வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்ற 7-வது ஒருநாள் போட்டியில் சங்கக்காரா 2 கேட்ச்களை பிடித்ததன் மூலம் 474 விக்கெட்டுகள் விழக் காரணமானவர் என்ற வகையில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் (472) சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார். அதோடு மட்டுமல்லாமல் தனது அற்புதமான பேட்டிங் ஃபார்மை தொடர்ந்த சங்கக்காரா இன்று 105 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 113 ரன்களை எடுத்து தனது 21-வது ஒருநாள் சதத்தை எடுத்தார். சனத் ஜெயசூரியா 28 ஒருநாள் சதங்கள…
-
- 2 replies
- 419 views
-
-
ஒருநாள் போட்டிகளில் அதிக 'டக்' அவுட்கள்: கிறிஸ் கெய்லுக்கு 4-வது இடம் செஞ்சூரியனில் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது. இதில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் முதல் பந்திலேயே அவுட் ஆனார். தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட் செய்து ஹஷின் ஆம்லா (133 ரன்கள், 105 பந்துகள் 11 பவுண்டரி 6 சிக்சர்) மற்றும் ரூசோ (132 ரன்கள், 98 பந்துகள், 9 பவுண்டரி 8 சிக்சர்கள்), ஆகியோரின் அதிரடியில் நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 361 ரன்கள் விளாசியது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணி 37.4 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வி தழுவி தொடரை 1-4 என்று இழந்த்து. ஆம்லா தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். இலக்கைத்…
-
- 0 replies
- 645 views
-
-
அடுத்த டி20 உலகக் கோப்பை: இந்தியாவில் 2016 மார்ச் 11-ல் தொடக்கம் 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகள் மார்ச் 11-ல் தொடங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று துபாயில் ஐசிசி வாரியக்கூட்டத்தில் தேதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதே போல் 2017-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இங்கிலாந்தில் ஜூன் 1 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறும். 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளும் இங்கிலாந்தில் மே 30-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 2017-ஆம் ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை இங்கிலாந்தில் ஆகஸ்ட் 4-27 ஆகிய தேதிகளூக்கிடையே நடைபெறுகிறது. அதேபோல் 2018-ஆம் ஆண்டு மகளிர் உலக டி20 கோப்பை கிரிக்கெட் போட்டிக…
-
- 0 replies
- 392 views
-