விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
கேப்டனாக கோஹ்லிக்கு ஆதரவு அதிகரிப்பு: தோனி பதவி பறிபோகுமா டிசம்பர் 14, 2014. புதுடில்லி: அடிலெய்டு டெஸ்டில் துணிச்சலாக போராடிய இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு ஆதரவு பெருகுகிறது. டெஸ்ட் போட்டிகளில் இவரையே முழுநேர கேப்டனாக நியமிக்க வேண்டுமென ஆஸ்திரேலியாவின் இயான் சாப்பல் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அனுபவ தோனி காயத்தால் அவதிப்பட்டதால், அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இளம் விராத் கோஹ்லி தலைமையில் இந்தியா களமிறங்கியது. இதில், வெற்றி நழுவினாலும் கடைசி வரை போராடியது. இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார் கோஹ்லி. இது, இவரது துணிச்சலான செயல்பாட்டுக்கு உதாரணமாக அமைந்தது. அறிமுக …
-
- 0 replies
- 743 views
-
-
சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவுக்கு 4வது இடம்: ஜெர்மனி சாம்பியன் டிசம்பர் 14, 2014. புவனேஸ்வர்: சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியாவுக்கு நான்காவது இடம் கிடைத்தது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. பைனலில் அசத்திய ஜெர்மனி அணி 10வது முறையாக கோப்பை வென்றது. நேற்று நடந்த பைனலில் பாகிஸ்தானை தோற்கடித்தது. ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், ஆண்களுக்கான 35வது சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்தது. நேற்று நடந்த பைனலில், ஜெர்மனி, பாகிஸ்தான் அணிகள் மோதின. ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் ஜெர்மனியின் வெஸ்லே கிறிஸ்டோபர் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய ஜெர்மனிக்கு 58வது நிமிடத்தில் புளோரியன் ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய பா…
-
- 0 replies
- 348 views
-
-
ரெட் புல் அணியின் 60 இற்கும் அதிகமான கிண்ணங்கள் திருடப்பட்டன போர்மியூலா வன் காரோட்டப் பந்தயங்களின் வெற்றிரகமான அணிகளில் ஒன்றான ரெட் புல் அணி போட்டிகளில் வென்ற பல்வேறு சம்பியன் கிண்ணங்கள், கேடயங்கள் திருடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் டில் புரூக் நகரிலுள்ள ரெட்புல் நிறுவனத்தின் தொழிற்சாலையொன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் இப்பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழிற்சாலையில் வாயிலுக்கூடாக வாகனமொன்றில் வந்த 6 பேர் கொண்ட குழுவினர் இப்பொருட்களை திருடடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 60 இற்கும் அதிகமான கிண்ணங்களும் கேடயங்களும் இவ்வாறு திருடப்பட்டுள்ளன. பல வருட கால…
-
- 0 replies
- 514 views
-
-
சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இந்தியாவுடனான போட்டியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ரசிகர்கள் மற்றும் மீடியாக்களை நோக்கி ஆபாசமாக கத்தினர். இதுதொடர்பாக விசாரணை நடத்த சர்வதேச ஆக்கி கூட்டமைப்பு உத்தரவிட்டுள்ளது. 8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 2–வது அரை இறுதிப்போட்டியில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணியினரும் ஆக்ரோஷமான தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தனர். இருப்பினும், இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3–4 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது. இதனையடுத்து வெற்றியை கொண்டாடிய பாகிஸ்தான் வீரர்கள் மகிழ்ச்சியில் நடனம் ஆடின…
-
- 1 reply
- 484 views
-
-
டோனி நேரம் முடிந்தது-இயான் சாப்பல் சிட்னி: ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடிலெய்டில் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்று, தோற்றது. இருப்பினும், தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்ற விராத் ஹோக்லி, இரண்டு இன்னிங்ஸ்லும் சதம் அடித்து, அசத்தினார். இந்நிலையி்ல், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சாப்பல் ஒரு பேட்டியில் கூறுகையில், '.டெஸ்ட் போட்டிகளுக்கு டோனி தலைமையேற்கும் நேரம் முடிவுக்கு வந்துள்ளதாகவே நான் கருதுகிறேன். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு விராத் ஹோக்லி தலைமையேற்று நடத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்,' என்று கூறி ள்ளார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1137886
-
- 0 replies
- 472 views
-
-
'மூவேந்தர்களின்' இறுதிப் போட்டி எதிர்வரும் 16ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள தொடரின் 7ஆவது போட்டியானது இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார மற்றும் திலகரட்ண டில்ஷான் ஆகியோர் இலங்கை மண்ணில் விளையாடப் போகும் கடைசி ஒருநாள் போட்டியாகும். இப்போட்டி இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியப் போட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. உலகக் கிண்ணத் தொடர் அடுத்தவருடம் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளன. இதனால் உலகக் கிண்ணத் தொடருடன் மஹேல, சங்கா, டில்ஷான் ஆகிய மூவரும் ஒருநாள் தொடரிலிருந்து விடைபெறவுள்ளனர். இதற்கு முன்னர் நியூஸிலாந்து…
-
- 2 replies
- 595 views
-
-
உலகக் கிண்ணத்தின் அனுபவ வீரர்களாக மஹேல, அப்ரிடி – ஐ.சி.சி. தெரிவிப்பு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி முதல் மார்ச் 29ஆம் திகதி வரை அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. இந்த உலகக் கிண்ண தொடரில் விளையாடும் மிகுந்த அனுபவம் வாய்ந்த வீரர்களாக இலங்கை கிரிக்கெட் அணியின் மஹேல ஜயவர்தன மற்றும் பாகிஸ்தானின் சஹீட் அப்ரிடி ஆகிய இருவரும் 5ஆவது முறையாக உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) தெரிவித்துள்ளது. இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரான ஜயவர்தனவும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவரான அப்ரிடியும் இந்த உலகக் கிண்ணத்…
-
- 0 replies
- 495 views
-
-
கண்டி எனது குடும்பத்தின் ஒரு அங்கம்: ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி : தாய் மண்ணில் சங்காவின் இறுதி வார்த்தைகள் நான் பிறந்த மண்ணில் விளையாடுவது இதுவே இறுதித் தருணமாகும். கண்டி எனது குடும்பத்தின் ஒரு அங்கம். இன்று கண்டியில் உள்ள அனைவரும் இங்கு வந்துள்ளனர். எனக்கு ஆதரவு வழங்கிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என குமார் சங்கக்கார தெரிவித்தார். இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் 6 ஆவது போட்டி இன்று கண்டி பல்லேகலயில் இடம்பெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி 90 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியதோடு 4-2 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் உலகின்…
-
- 2 replies
- 576 views
-
-
கனடியர்கள் மத்தியில் பிரபலமான Ice Dancing என்ற விளையாட்டில் தமிழ் யுவதியான பிரியா ரமேஷ் அண்மைக் காலத்தில் தனி முத்திரை பதித்து வருகின்றார். தனது Ice Dancing துணையான Brandon Lebelleஉடன் கனடா ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார் பிரியா ரமேஷ். தாயகத்தில் இளவாலையை பூர்வீகமாக கொண்ட பிரியா ரமேஷ் திரு.திருமதி.ரமேஷ்-சிவாஜினி தம்பதியினரின் புதல்வியாவார். தேசிய ரீதியில் தொலைக்காட்சியில் இனிவரும் காலங்களில் பிரியா ரமேஷ் தனி முத்திரை பதித்து.வளர்ச்சி பெறுவார் என கூறப்படுகின்றது. அத்துடன் ஒலிம்பிக் போட்டியில் ஈடுபடுவதை குறிக்கோளாக கொண்டுள்ள பிரியா ரமேஷ் கனடாவிற்காக பதக்கம் பெற்று கனடாவிற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்க எமது வாழ்த்துக்கள், - See more at: http://www.canadamirro…
-
- 15 replies
- 1.7k views
-
-
40 முறை ரஞ்சி சாம்பியனான மும்பையை வீழ்த்தி காஷ்மீர் அணி படைத்தது வரலாறு மும்பையில் நடைபெற்ற ஏ பிரிவு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் 40 ஆண்டுகள் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி ஜம்மு-காஷ்மீர் அணியிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது. மும்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்த தோல்வி அதிர்ச்சியாக பார்க்கப்பட்டாலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்த்தில் இந்த வெற்றி பெரிதாகப் பார்க்கப்படுகிறது. காஷ்மீரில் ஏற்பட்ட வரலாறு காணாத காட்டு வெள்ளத்தில் அங்குள்ள மைதானம் பயிற்சி செய்ய முடியாத நிலைக்குச் சென்றிருந்தாலும் போதிய வசதியின்மையுடன் கூடவே ஜம்மு அணி வலுவான மும்பையை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்ஸில் மும்பை 236 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய ஜம்மு-காஷ்மீர் அணி …
-
- 0 replies
- 464 views
-
-
காத்திருக்கும் பலோன் டிஓ விருதுகள் திங்கட்கிழமை, 08 டிசெம்பர் 2014 விளையாட்டு மைதானத்தில் தமது அணியின் வெற்றிக்காக போராடிய கிறிஸ்ரியானோ ரொனால்டொ, லியனல் மேசி ஆகிய இருவரும் சிறந்த பலோன் டிஓ விருதுக்கு கடும் போட்டி வீரருக்கான போட்டியிலும் முட்டி மோதுகின்றனர். இவர்களுக்குப் போட்டியாக ஜேர்மனியின் கோல்கீப்பர் மனுவல் நெயூரும் களத்தில் உள்ளார். சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த பயிற்சியாளர்களைத் தெரிவு செய்து விருது வழங்கிவருகிறது பீபா. 1956ஆம் ஆண்டு பலோன் டிஓ விருது அறிமுகப்படுத்தப்பட்டபோது இங்கிலாந்து வீரர் ஸ்டான்லி மத்தியூஸ் தெரிவு செய்யப்பட்டார். 12ஆம் திகதி விருது பெற்றவர்களின் பெயர் அறிவிக்கப்படும். சிறந்த வீரருக்கான பலோன் டிஓ விருதுக்காக சிறப்பாக செயற்பட 23 …
-
- 0 replies
- 553 views
-
-
சங்ககாரவும் ஓய்வும் திங்கட்கிழமை, 08 டிசெம்பர் 2014 சர்வதேச இருபதுக்கிருபது போட்டிகளில் இருந்து குமார் சங்ககார, ஏற்கெனவே ஓய்வு பெற்றுள்ள நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண ஒருநாள் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார். ஆனாலும் சிரேஸ்ட வீரரான மஹேல ஜெயவர்த்தன, ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாலும் தற்போது சங்ககாரவும் ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டால் இலங்கை அணியை அது பலவீனப்படுத்தி விடும் என்ற காரணத்தினால் அவர் தொடர்ந்தும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஏதுவாக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தேர்வாளர்களும…
-
- 0 replies
- 366 views
-
-
இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கட் தொடருக்கான இலங்கை கிரிக்கட் குழாமில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கௌஷால் சில்வா, திமுத் கருணாரட்ன, சகலதுறை ஆட்டக்காரர் டில்ருவன் பெரேரா, விக்கட் காப்பாளர் ப்ரசன்ன ஜயவர்தன ஆகியோர் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கட் தொடர் இம் மாதம் 26ஆம் திகதி க்றைஸ் ட்சேர்ச் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடரை முன்னிட்டு 16 வீரர்கள் அடங்கிய டெஸ்ட் கிரிக்கட் குழாமை இலங்கை கிரிக்கட் தெரிவாளர்கள் பெயரிட்டுள்ளனர். அந்தக் குழாமில் அஞ்சலோ மெத்…
-
- 0 replies
- 256 views
-
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10-வது சதம்: முன்னணி வீரர்களுடன் இணைந்த டேவிட் வார்னர் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இன்று வார்னர் தனது 10-வது டெஸ்ட் சதத்தை எடுத்தார். 33-வது டெஸ்ட் போட்டியில் 10-வது சதம் கண்ட 4-வது ஆஸ்திரேலிய வீரராக உள்ளார் வார்னர். டான் பிராட்மேன், நீல் ஹார்வி, ஆர்தர் மாரிஸ் ஆகிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்குப் பிறகு தற்போது 33 டெஸ்ட் போட்டிகளில் வார்னர் 10 டெஸ்ட் சதங்களை எடுத்து சாதனை புரிந்துள்ளார். 33 டெஸ்ட் போட்டிகளில் பிராட்மேன் 18 சதங்களையும் 7 அரைசதங்களையும் எடுத்திருந்தார். நீல் ஹார்வி 12 சதங்களையும், 11 அரைசதங்களையும், ஆர்தர் மாரிஸ் 10 சதங்களையும் 8 அரைசதங்களையும் எடுக்க, வார்னர் 10 சதங்களையும் 13 அரைசதங்களையும் எடுத்து அந்த உயர்மட்ட பட்டியலில் இ…
-
- 2 replies
- 611 views
-
-
சேனநாயக்கவிற்கு பந்து வீச ஐ.சி.சி. அனுமதி இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் சச்சித்திர சேனநாயக்கவிற்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீசுவதற்கு ஐ.சி.சி. அனுமதியளித்துள்ளது. சச்சித்திர சேனநாயக்கவின் பந்துவீச்சுப் பணி தொடர்பில் கடந்த ஜூலை மாதம் அதிருப்தியேற்பட்டதையடுத்து சோதனைக்குட்படுத்தப்பட்டார். இந்நிலையில் கடந்த மாதம் சென்னையில் சேனநாயக்க மீள்பரிசோதனை க்குட்படுத்தப்பட்டார். இதன்போது பந்துவீச்சுப் பணி விதிமுறைகளுக்குட்பட்டிருந்ததையடுத்து அவருக்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித்தடை நீக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/articles/2014/12/09/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%A…
-
- 0 replies
- 324 views
-
-
தரவரிசையில் 2-ஆம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவுக்கு 6-ஆம் இட இந்தியா சவால் அளிக்குமா? பிலிப் ஹியூஸ் அகால மரணத்திற்குப் பிறகு கனத்த இதயத்துடன் ஆஸ்திரேலியா நாளை அடிலெய்டில் கிளார்க் தலைமையில் களமிறங்குகிறது. மாறாக உற்சாகமான கோலியின் தலைமையில் புதிய திருப்பம் காண இந்தியா எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. இந்திய அணியில் புவனேஷ் குமார் ஆடமுடியாது போயுள்ளது ஒரு பின்னடைவே. ஆனாலும் நாளை காலைதான் கூற முடியும் என்று கூறியுள்ளார் கோலி. புவனேஷ் குமார் சிக்கனமாக வீசுவதோடு, தொடக்கத்தில் விக்கெட்டுகளைக் கைப்பற்றும் திறமையை சமீபமாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நிரூபித்துள்ளார். மேலும், பின்னால் பேட்டிங்கில் களமிறங்கி அருமையான திறமையை வெளிப்படுத்தி ஒரு முழுமையான டெஸ்ட் ஆல்ரவுண்டராக மாற…
-
- 1 reply
- 342 views
-
-
தினம், தினம் நரக வேதனை: ஸ்ரீசாந்த் புலம்பல் டிசம்பர் 07, 2014. ‘‘கிரிக்கெட் சூதாட்ட புகாரின் பேரில் எனது கிரிக்கெட் வாழ்க்கையை ஐந்து நிமிடத்தில் பி.சி.சி.ஐ., முடித்து விட்டது’’ என, புலம்பியுள்ளார் ஸ்ரீசாந்த். ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் அணிக்காக பங்கேற்றார் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், 31. இவர் ‘பிக்சிங்’ செய்தது அம்பலமாக, டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் உள்ளார். இவருக்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வாழ்நாள் தடை விதித்தது. அதேநேரம், சூதாட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் தனியாக விசாரிக்கிறது. தோனி, ரெய்னா உள்ளிட்ட 13 பேர் மீது புகார் உள்ளதாக தெரிகிறது. தவிர, சென்னை அணி உரிமையாளர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தானின் ரா…
-
- 1 reply
- 612 views
-
-
ஸ்போர்ட்ஸ் ஃபெர்ஸ்ட் மொபிடெல் பிளட்டினம் விருது விழாவில் கெபிடல் மகாராஜா ஓர்கனைசேஷன், ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து நடத்திய முதலாவது ஸ்போர்ட்ஸ் ஃபெர்ஸ்ட் மொபிடெல் பிளட்டினம் விருது விழாவில் மூன்று பிரதான விருதுகளும் வாழ்நாள் விருதும் கிரிக்கெட் விளையாட்டுத்துறை சார்ந்தவர்களுக்கு வழ ங்கப்பட்டது. வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீரர், ஜனரஞ்சக வீரர் ஆகிய இரண்டு விருதுகளை இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் வென்றெடுத்தார். வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருது இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தப்பத்தவுக்கு கிடைத்தது. வாழ்நாள் விருது எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்…
-
- 1 reply
- 662 views
-
-
பாதியில் முடிந்த தோனியின் கனவு டிசம்பர் 07, 2014. நிதிப்பற்றாக்குறை காரணமாக தோனியின் ‘மகி ரேசிங்’ அணிக்கு மூடுவிழா நடத்தப்பட உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, 33. இவர், ஒரு ‘பைக்’ பிரியர். பல்வேறு ரக பைக்குகளை வாங்கி குவித்துள்ளார். இந்த ஆர்வம் காரணமாக கடந்த 2012ல் ‘எம்.எஸ்.டி., ரேசிங் டீம் இந்தியா’ என்ற பெயரில் ஒரு ‘பைக்’ அணி வாங்கினார். சூப்பர்ஸ்போர்ட் உலக சாம்பியன்ஷிப் பந்தயங்களில், இந்த அணி பங்கேற்றது. முதல் சாம்பியன்: 2013ல் ‘மகி ரேசிங் டீம்’ என்று பெயர் மாற்றப்பட்டு, கெனான் சோபோக்லு, பேபியன் போரட் என, புதிய வீரர்களுடன் களம் கண்டது. பங்கேற்ற 13 சுற்றில் 6ல் வெல்ல, அணிக்கான சாம்பியன் பட்டம் கைப்பற்றியது. கடைசி போட்டி: இந்த ஆண்டு நடந்த இரண்டாவ…
-
- 0 replies
- 525 views
-
-
மேலும் ஒரு பாகிஸ்தான் பந்து வீச்சாளர் பந்து வீச ஐசிசி தடை! துபாய்: சயீத் அஜ்மலைத் தொடர்ந்து மேலும் ஒரு பாகிஸ்தான் பந்து வீச்சாளர் பந்து வீசுவதற்கு ஐசிசி தடை விதித்துள்ளது. இந்த முறை ஆல் ரவுண்டர் முகம்மது ஹபீஸ் சிக்கியுள்ளார். அவரது பந்து வீச்சு சந்தேகத்திற்கிடமானதாக இருப்பதால் அவரதை் தடை செய்வதாக ஐசிசி அறிவித்துள்ளது. உலகக் கோப்பை் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் மேலும் ஒரு முக்கிய வீரருக்கு ஐசிசி தடை விதித்திருப்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. மேலும் ஒரு பாகிஸ்தான் பந்து வீச்சாளர் பந்து வீச ஐசிசி தடை! இதுகுறித்து ஐசிசி வெளியி்ட்டுள்ள அறிக்கையில், தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி பாகிஸ்தான் வீரர் முகம்மது ஹபீஸ் பந்து வீச…
-
- 0 replies
- 472 views
-
-
இடது கை வீரர் பிலிப் ஹியூஸ், பவுன்சரில் அடிபட்டு மயக்கமடைந்தார். | படம்: ஏ.எஃப்.பி. மயங்கிய நிலையில் மைதானத்திலிருந்து ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் செல்லபப்டும் பிலிப் ஹியூஸ். சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஸி. உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆடிய பில் ஹியூஸ், பவுன்சர் ஒன்று தாக்கியதில் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். அவர் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று ஆஸ்திரேலிய செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் பின்னால் இடம்பெறலாம் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் தெற்கு ஆஸ்திரேலியா அணிக்காக 63 ரன்களில் ஆடி வந்த பில் ஹியூஸ், நியூசவுத் வேல்ஸ் பவுலர் ஷான் அபோட் வீசிய பயங்கர பவுன்சர், இடது காதையொட்டி…
-
- 33 replies
- 2.5k views
-
-
பில் ஹியூக்ஸ் காயமடைந்து சரிந்து விழுந்த பிட்சுக்கு ஓய்வு! சிட்னி: ஆஸ்திரேலியா வீரர் பிலிப் ஹியூக்ஸ், பவுன்சர் பந்து தாக்கி படுகாயமடைந்து கீழே விழுந்த பிட்ச்சுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இனிமேல் அந்த பிட்ச் பயன்படுத்தப்பட மாட்டாது என்று சிட்னி கிரிக்கெட் மைதான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சிட்னி மைதானத்தின் 7வது பிட்ச் இது. 22 யார்டு நீளமுள்ள அந்த பிட்ச்சில்தான் தலையில் பந்து பட்டு படுகாயமடைந்த நிலையில் கீழே விழுந்தார் ஹியூக்ஸ் என்பதால் அந்த பிட்ச்சை இனிமேல் பயன்படுத்துவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பில் ஹியூக்ஸ் காயமடைந்து சரிந்து விழுந்த பிட்சுக்கு ஓய்வு! சிட்னி மைதானத்தில் மொத்தம் 10 பிட்ச்சுகள் உள்ளன. அதில் 7வது பிட்ச்சில்தான் ஹியூக்ஸ் படுகாயமடைந்து …
-
- 0 replies
- 381 views
-
-
சச்சினின் சாதனையை முறியடிப்பாரா சங்கா? சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக அரைச்சதம் எடுத்த சச்சினின் சாதனையை சங்கக்காரா நெருங்கிவிட்டார். இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக இருக்கும் சங்கக்காரா களமிறங்கிய அனைத்து போட்டிகளிலும் தன் அசத்தல் திறமையை காட்டி வருகிறார். பல சாதனைகளையும் குவித்து வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் 13000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டிய சங்கக்காரா அடுத்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சினின் அதிக அரைச்சதம் என்ற சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார். 452 இன்னிங்ஸில் விளையாடியுள்ள சச்சின் 96 அரைச்சதம் அடித்துள்ளார். ஆனால் 386 இன்னிங்ஸ் விளையாடியுள்ள சங்கக்காரா இப்போழுதே 89 அரைச்சதம் கடந்து விட்டார். சச்ச…
-
- 0 replies
- 657 views
-
-
இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இரு சாதனைகளை படைத்த சங்கா இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் குமார் சங்கக்காரா இரண்டு சாதனைகளை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிராக நேற்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 242 ஓட்டஙகளைபெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 236 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுகளால் டக்வேர்த் லூயிஸ் முறையில் வெற்றிபெற்றது. இப் போட்டியில் சங்கக்கார 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இப்போட்டியில் துடுப்பெடுத்தாடிய சங்கக்கார 13 ஓட்டங்களை எடுத்திருந்த போது ஒருநாள் போட்டியில் 13 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 4 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். 37 வயதான சங்கக்கரா இதுவரை 386 ஒருநாள் போட்டி…
-
- 5 replies
- 1.9k views
-
-
விழிப்புலனற்றோர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் அரையிறுதியில் இலங்கை விழிப்புலனற்றோர் தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் விழிப்புலனற்றோர் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளின் அரை யிறுதி ஆட்டத்தில் விளையாடுவதற்கு இலங்கை விழிப்புலனற்றோர் அணி தகுதிபெற்றுள்ளது. தென் ஆபிரிக்க விழிப்புலனற்றோர் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்களால் வெற்றிபெற்றதை அடுத்து இலங்கை விழிப்பலன்றோர் அணி உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் விளையாட தகுதிபெற்றது. இரண்டு தினங்களுக்கு முன்னர் இங்கிலாந்து விழிப்புலனற்றோர் அணியை 90 ஓட்டங்களால் இலங்கை விழிப்புலனற்றோர் அணி வெற்றிகொண்டிருந்தது. அப் போட்டியில் இலங்கை விழிப்புலனற்றோர் அணி சார்பாக சந்த…
-
- 0 replies
- 458 views
-