Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சேனநாயக்கவிற்கு பந்து வீச ஐ.சி.சி. அனுமதி இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் சச்சித்திர சேனநாயக்கவிற்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீசுவதற்கு ஐ.சி.சி. அனுமதியளித்துள்ளது. சச்சித்திர சேனநாயக்கவின் பந்துவீச்சுப் பணி தொடர்பில் கடந்த ஜூலை மாதம் அதிருப்தியேற்பட்டதையடுத்து சோதனைக்குட்படுத்தப்பட்டார். இந்நிலையில் கடந்த மாதம் சென்னையில் சேனநாயக்க மீள்பரிசோதனை க்குட்படுத்தப்பட்டார். இதன்போது பந்துவீச்சுப் பணி விதிமுறைகளுக்குட்பட்டிருந்ததையடுத்து அவருக்கு விதிக்கப்பட்டிருந்த போட்டித்தடை நீக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/articles/2014/12/09/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%A…

  2. டெஸ்ட் கிரிக்கெட்டில் 10-வது சதம்: முன்னணி வீரர்களுடன் இணைந்த டேவிட் வார்னர் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இன்று வார்னர் தனது 10-வது டெஸ்ட் சதத்தை எடுத்தார். 33-வது டெஸ்ட் போட்டியில் 10-வது சதம் கண்ட 4-வது ஆஸ்திரேலிய வீரராக உள்ளார் வார்னர். டான் பிராட்மேன், நீல் ஹார்வி, ஆர்தர் மாரிஸ் ஆகிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்குப் பிறகு தற்போது 33 டெஸ்ட் போட்டிகளில் வார்னர் 10 டெஸ்ட் சதங்களை எடுத்து சாதனை புரிந்துள்ளார். 33 டெஸ்ட் போட்டிகளில் பிராட்மேன் 18 சதங்களையும் 7 அரைசதங்களையும் எடுத்திருந்தார். நீல் ஹார்வி 12 சதங்களையும், 11 அரைசதங்களையும், ஆர்தர் மாரிஸ் 10 சதங்களையும் 8 அரைசதங்களையும் எடுக்க, வார்னர் 10 சதங்களையும் 13 அரைசதங்களையும் எடுத்து அந்த உயர்மட்ட பட்டியலில் இ…

  3. தரவரிசையில் 2-ஆம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவுக்கு 6-ஆம் இட இந்தியா சவால் அளிக்குமா? பிலிப் ஹியூஸ் அகால மரணத்திற்குப் பிறகு கனத்த இதயத்துடன் ஆஸ்திரேலியா நாளை அடிலெய்டில் கிளார்க் தலைமையில் களமிறங்குகிறது. மாறாக உற்சாகமான கோலியின் தலைமையில் புதிய திருப்பம் காண இந்தியா எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. இந்திய அணியில் புவனேஷ் குமார் ஆடமுடியாது போயுள்ளது ஒரு பின்னடைவே. ஆனாலும் நாளை காலைதான் கூற முடியும் என்று கூறியுள்ளார் கோலி. புவனேஷ் குமார் சிக்கனமாக வீசுவதோடு, தொடக்கத்தில் விக்கெட்டுகளைக் கைப்பற்றும் திறமையை சமீபமாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நிரூபித்துள்ளார். மேலும், பின்னால் பேட்டிங்கில் களமிறங்கி அருமையான திறமையை வெளிப்படுத்தி ஒரு முழுமையான டெஸ்ட் ஆல்ரவுண்டராக மாற…

  4. தினம், தினம் நரக வேதனை: ஸ்ரீசாந்த் புலம்பல் டிசம்பர் 07, 2014. ‘‘கிரிக்கெட் சூதாட்ட புகாரின் பேரில் எனது கிரிக்கெட் வாழ்க்கையை ஐந்து நிமிடத்தில் பி.சி.சி.ஐ., முடித்து விட்டது’’ என, புலம்பியுள்ளார் ஸ்ரீசாந்த். ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் அணிக்காக பங்கேற்றார் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், 31. இவர் ‘பிக்சிங்’ செய்தது அம்பலமாக, டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் உள்ளார். இவருக்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வாழ்நாள் தடை விதித்தது. அதேநேரம், சூதாட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் தனியாக விசாரிக்கிறது. தோனி, ரெய்னா உள்ளிட்ட 13 பேர் மீது புகார் உள்ளதாக தெரிகிறது. தவிர, சென்னை அணி உரிமையாளர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தானின் ரா…

  5. பாதியில் முடிந்த தோனியின் கனவு டிசம்பர் 07, 2014. நிதிப்பற்றாக்குறை காரணமாக தோனியின் ‘மகி ரேசிங்’ அணிக்கு மூடுவிழா நடத்தப்பட உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, 33. இவர், ஒரு ‘பைக்’ பிரியர். பல்வேறு ரக பைக்குகளை வாங்கி குவித்துள்ளார். இந்த ஆர்வம் காரணமாக கடந்த 2012ல் ‘எம்.எஸ்.டி., ரேசிங் டீம் இந்தியா’ என்ற பெயரில் ஒரு ‘பைக்’ அணி வாங்கினார். சூப்பர்ஸ்போர்ட் உலக சாம்பியன்ஷிப் பந்தயங்களில், இந்த அணி பங்கேற்றது. முதல் சாம்பியன்: 2013ல் ‘மகி ரேசிங் டீம்’ என்று பெயர் மாற்றப்பட்டு, கெனான் சோபோக்லு, பேபியன் போரட் என, புதிய வீரர்களுடன் களம் கண்டது. பங்கேற்ற 13 சுற்றில் 6ல் வெல்ல, அணிக்கான சாம்பியன் பட்டம் கைப்பற்றியது. கடைசி போட்டி: இந்த ஆண்டு நடந்த இரண்டாவ…

  6. மேலும் ஒரு பாகிஸ்தான் பந்து வீச்சாளர் பந்து வீச ஐசிசி தடை! துபாய்: சயீத் அஜ்மலைத் தொடர்ந்து மேலும் ஒரு பாகிஸ்தான் பந்து வீச்சாளர் பந்து வீசுவதற்கு ஐசிசி தடை விதித்துள்ளது. இந்த முறை ஆல் ரவுண்டர் முகம்மது ஹபீஸ் சிக்கியுள்ளார். அவரது பந்து வீச்சு சந்தேகத்திற்கிடமானதாக இருப்பதால் அவரதை் தடை செய்வதாக ஐசிசி அறிவித்துள்ளது. உலகக் கோப்பை் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் மேலும் ஒரு முக்கிய வீரருக்கு ஐசிசி தடை விதித்திருப்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. மேலும் ஒரு பாகிஸ்தான் பந்து வீச்சாளர் பந்து வீச ஐசிசி தடை! இதுகுறித்து ஐசிசி வெளியி்ட்டுள்ள அறிக்கையில், தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி பாகிஸ்தான் வீரர் முகம்மது ஹபீஸ் பந்து வீச…

  7. ஸ்போர்ட்ஸ் ஃபெர்ஸ்ட் மொபிடெல் பிளட்டினம் விருது விழாவில் கெபிடல் மகா­ராஜா ஓர்­க­னை­சேஷன், ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் ஆகிய நிறு­வ­னங்கள் ஒன்­றி­ணைந்து நடத்­திய முத­லா­வது ஸ்போர்ட்ஸ் ஃபெர்ஸ்ட் மொபிடெல் பிளட்­டினம் விருது விழாவில் மூன்று பிர­தான விரு­து­களும் வாழ்நாள் விருதும் கிரிக்கெட் விளை­யாட்­டுத்­துறை சார்ந்­த­வர்­க­ளுக்கு வழ ங்­கப்­பட்­டது. வரு­டத்தின் அதி­சி­றந்த கிரிக்கெட் வீரர், ஜன­ரஞ்­சக வீரர் ஆகிய இரண்டு விரு­து­களை இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் வென்­றெ­டுத்தார். வரு­டத்தின் அதி­சி­றந்த கிரிக்கெட் வீராங்­கனை விருது இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்­தப்­பத்­த­வுக்கு கிடைத்­தது. வாழ்நாள் விருது எவ்­வித சந்­தே­கத்­திற்கும் இட­மின்…

  8. பில் ஹியூக்ஸ் காயமடைந்து சரிந்து விழுந்த பிட்சுக்கு ஓய்வு! சிட்னி: ஆஸ்திரேலியா வீரர் பிலிப் ஹியூக்ஸ், பவுன்சர் பந்து தாக்கி படுகாயமடைந்து கீழே விழுந்த பிட்ச்சுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இனிமேல் அந்த பிட்ச் பயன்படுத்தப்பட மாட்டாது என்று சிட்னி கிரிக்கெட் மைதான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சிட்னி மைதானத்தின் 7வது பிட்ச் இது. 22 யார்டு நீளமுள்ள அந்த பிட்ச்சில்தான் தலையில் பந்து பட்டு படுகாயமடைந்த நிலையில் கீழே விழுந்தார் ஹியூக்ஸ் என்பதால் அந்த பிட்ச்சை இனிமேல் பயன்படுத்துவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பில் ஹியூக்ஸ் காயமடைந்து சரிந்து விழுந்த பிட்சுக்கு ஓய்வு! சிட்னி மைதானத்தில் மொத்தம் 10 பிட்ச்சுகள் உள்ளன. அதில் 7வது பிட்ச்சில்தான் ஹியூக்ஸ் படுகாயமடைந்து …

  9. சச்சினின் சாதனையை முறியடிப்பாரா சங்கா? சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக அரைச்சதம் எடுத்த சச்சினின் சாதனையை சங்கக்காரா நெருங்கிவிட்டார். இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக இருக்கும் சங்கக்காரா களமிறங்கிய அனைத்து போட்டிகளிலும் தன் அசத்தல் திறமையை காட்டி வருகிறார். பல சாதனைகளையும் குவித்து வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் 13000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டிய சங்கக்காரா அடுத்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சினின் அதிக அரைச்சதம் என்ற சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார். 452 இன்னிங்ஸில் விளையாடியுள்ள சச்சின் 96 அரைச்சதம் அடித்துள்ளார். ஆனால் 386 இன்னிங்ஸ் விளையாடியுள்ள சங்கக்காரா இப்போழுதே 89 அரைச்சதம் கடந்து விட்டார். சச்ச…

  10. விழிப்புலனற்றோர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் அரையிறுதியில் இலங்கை விழிப்புலனற்றோர் தென் ஆபி­ரிக்­காவில் நடை­பெற்­று­வரும் விழிப்­பு­ல­னற்றோர் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்­டி­களின் அரை யிறுதி ஆட்­டத்தில் விளை­யா­டு­வ­தற்கு இலங்கை விழிப்­பு­ல­னற்றோர் அணி தகு­தி­பெற்­றுள்­ளது. தென் ஆபி­ரிக்க விழிப்­பு­ல­னற்றோர் அணிக்கு எதி­ரான போட்­டியில் 8 விக்­கெட்­களால் வெற்­றி­பெற்­றதை அடுத்து இலங்கை விழிப்­ப­லன்றோர் அணி உலகக் கிண்ண இறுதி ஆட்­டத்தில் விளை­யாட தகு­தி­பெற்­றது. இரண்டு தினங்­க­ளுக்கு முன்னர் இங்­கி­லாந்து விழிப்­பு­ல­னற்றோர் அணியை 90 ஓட்­டங்­களால் இலங்கை விழிப்­பு­ல­னற்றோர் அணி வெற்­றி­கொண்­டி­ருந்­தது. அப் போட்­டியில் இலங்கை விழிப்­பு­ல­னற்றோர் அணி சார்­பாக சந்­த…

  11. பவுன்சர்களை சுதந்திரமாக வீசிய இந்திய, ஆஸ்திரேலிய பவுலர்கள் பிலிப் ஹியூஸ் பவுன்சர் தாக்கி அகால மரணமடைந்ததையடுத்து ஆஸ்திரேலிய நாடே துக்கம் அனுஷ்டித்து வருகிறது. இந்நிலையில் பயிற்சி ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும், வலைப்பயிற்சியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களும் பவுன்சர்களை சரமாரியாகவே வீசினர். அடிலெய்டில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் முதல் நாள் ஆட்டத்தில் மொகமது ஷமி, வருண் ஆரோன், உமேஷ் யாதவ் சுதந்திரமாக பவுன்சர்களை கிரிக்கெட் ஆஸ்திரேலியா பேட்ஸ்மென்களுக்கு எதிராக வீசினர். பிலிப் ஹியூஸ் மரணம் என்பதையெல்லாம் பின்னுக்குத் தள்ளியதோடு, பவுன்சர்கள் வீசுவதில் எங்களுக்கு எந்த வித தயக்கமும் இல்லை என்பது போல் வீசினர். கிரிக்கெட் ஆஸ்திரேலியா வீரர் செப் காட்ச்…

  12. இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இரு சாதனைகளை படைத்த சங்கா இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் குமார் சங்கக்காரா இரண்டு சாதனைகளை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிராக நேற்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 242 ஓட்டஙகளைபெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 236 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுகளால் டக்வேர்த் லூயிஸ் முறையில் வெற்றிபெற்றது. இப் போட்டியில் சங்கக்கார 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இப்போட்டியில் துடுப்பெடுத்தாடிய சங்கக்கார 13 ஓட்டங்களை எடுத்திருந்த போது ஒருநாள் போட்டியில் 13 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 4 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். 37 வயதான சங்கக்கரா இதுவரை 386 ஒருநாள் போட்டி…

  13. கிரிக்கெட்டின் செல்வாக்கை கடந்து இலங்கையில் கால்பந்து துறையை முன்னிலைப்படுத்த எதிர்பார்ப்பு : பீபா தலைவர் பிளட்டர் இலங்கை கால்பந்தாட்ட அபிவிருத்தியில் எனக்கு அதிருப்தி காணப்படுகின்ற போதிலும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 75 வருட பூர்த்தி விழா உட்பட மற்றைய வைபவங்களில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன் எனத் தெரிவித்துள்ள சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்கள் சம்மேளனத்தின் தலைவர் ஜோசப் செப் பிளட்டர், இலங்கையில் கிரிக்கெட்டின் செல்வாக்கை கடந்து கால்பந்து துறையை முன்னிலைப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார். கடந்த முதலாம் திகதி பிரத்தியேக விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்திருந்த சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்கள் சம்மேளனத் தலைவர…

  14. அமைதியாக தூங்கு தம்பி.. நானும் ஒரு நாள் வருவேன்.. மைக்கல் கிளார்க் உருக்கம்! மாக்ஸ்வில்லி, நியூ செளத்வேல்ஸ், ஆஸ்திரேலியா: மறைந்த கிரிக்கெட் வீரர் பில் ஹியூக்ஸுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் உருக்கமான இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க மிகுந்த சிரமத்துடன் தனது இரங்கல் செய்தியை வாசித்த கிளார்க்கின் நிலை மிகவும் சோகமாக இருந்தது. ஹியூக்ஸ் மரணமடைந்தது முதலே கிளார்க் சோகமாக காணப்பட்டார். தனது தம்பி போலவே ஹியூக்ஸுடன் நெருக்கமாக பழகி வந்தவர் கிளார்க். இதனால் ஹியூக்ஸின் மரணம், கிளார்க்கை உலுக்கி விட்டது. அமைதியாக தூங்கு தம்பி.. நானும் ஒரு நாள் வருவேன்.. மைக்கல் கிளார்க் உருக்கம்! இந்த நிலையில் ஹியூக்ஸ் இறுதிச்…

  15. யாழில் உதைபந்தாட்ட பயிற்சி மைதானம் திறந்து வைப்பு சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஜேர்மன் அரசின் உதவியுடன் சர்வதேச தரத்திலான உதைபந்தாட்ட பயிற்சி மைதானம் ஒன்று இன்று யாழ். அரியாலைப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜோசப் ஷெப் பிளாட்டர் பிற்பகல் 1.50 மணியளவில் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், வடக்கு மாகாண முதலமைச்சர்,வடக்கு மாகாண கல்வி அமைச்சர், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர்,வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=289643…

  16. ஸிம்பாப்வேயை 5 - 0 என்ற கணக்கில் துவம்சம் செய்த பங்களாதேஷ் தனது சொந்த நாட்டில் நடை­பெற்ற ஐந்து போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஸிம்­பாப்­வேயை 5 - 0 என பங்­க­ளாதேஷ் வெள்­ளை­ய­டிப்பு செய்­தது. மிர்பூரில் நேற்று நடை­பெற்ற கடைசிப் போட்­டியில் 5 விக்­கெட்­களால் வெற்­றி­பெற்­றதன் மூலம் தொடரில் முழு­மை­யான வெற்­றியை பங்­க­ளாதேஷ் பதிவு செய்­து­கொண்­டது. குறைந்த மொத்த எண்­ணிக்­கை­களைக் கொண்ட இப்போட்­டியில் சிர­மத்­திற்கு மத்­தி­யி­லேயே பங்­க­ளாதேஷ் வெற்­றி­பெற்­றது. பங்­க­ளாதேஷ் பந்­து­வீச்­சாளர் தைஜுல் இஸ்லாம் தனது கன்னி முயற்­சியில் ஹட் - ட்ரிக் முறையில் விக்­கெட்­களைக் கைப்­பற்­றி­யமை இப்போட்­டியில் விசேட அம்­ச­மாகும். 27ஆவது ஓவரின் கடைச…

  17. ஒவ்வொரு சனிக்கிழமையும் 50,000 பவுன்சர்கள்: பிலிப் ஹியூஸ் மரணத்தை முன்னிட்டு ஜெஃப் லாசன் பிலிப் ஹியூஸ் தலையை பவுன்சர் தாக்கிய அன்று மைதானத்தில் இருந்தவர் ஜெஃப் லாசன். இவர் எதிரணியான நியூசவுத் வேல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிலிப் ஹியூஸ் துயரத்தை அடுத்து கிரிக்கெட் ஆட்டத்தில் சில தினங்களுக்கு ஆக்ரோஷம் இருக்காது என்றும் மீண்டும் ஆக்ரோஷ வழிக்கு கிரிக்கெட் திரும்பிவிடும், ஆனாலும் சில நாட்களுக்கு பழைய ஆக்ரோஷம் கிரிக்கெட் அரங்கில் இருக்காது என்று கூறியுள்ளார். நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் ஒரு தின ஆட்டம் பிலிப் ஹியூஸ் மரணத்தினால் நிறுத்தப்பட்டது. மறுநாள் ஒரு பவுன்சர் கூட வீசப்படவில்லை. இத…

  18. தோனியை விலகச் சொல்ல மாட்டேன்: சீனிவாசன் திட்டவட்டம் தோனியை நான் ஏன் விலகச் சொல்ல வேண்டும் என்று ஐசிசி தலைவர் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவி வகித்து வரும் தோனியை நான் ஏன் ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். ஐபில் ஸ்பாட் பிக்சிங் குறித்த முத்கல் கமிட்டி அறிக்கை மீதான விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் சீனிவாசன், தோனி ஆகியோரது ‘முரண்பட்ட இரட்டை நலன்கள்’ குறித்து கேள்வி எழுப்பியது. மேலும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பாக முடிவுகளை எடுப்பவர் யார்? நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும், சீனிவாசன் குடும்பத்தினருக்கு இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் உள்ள பங்…

  19. அறிமுக போட்டியிலேயே ஹாட்ரிக்: வங்கதேச பந்துவீச்சாளர் உலக சாதனை வங்கதேச அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் தைஜுல் இஸ்லாம் தனது முதல் ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் எடுத்து உலகசாதனை நிகழ்த்தியுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டாக்காவில் நடைபெறும் 5-வது ஒருநாள் போட்டியில் அறிமுக வீர்ராகக் களமிறங்கிய தைஜுல் இஸ்லாம் ஹாட்ரிக் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய முதல் வீரரானார் தைஜுல் இஸ்லாம். 22 வயதாகும் தைஜுல் இஸ்லாம் இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 7 ஓவர்கள் வீசி 2 மைடன்களுடன் 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் ஜிம்பாப்வே அணி 30 ஓவர்களில் 12…

  20. பாக்.கிற்கு எதிரான டெஸ்ட்: 1135 பந்தில் ஒன்று கூட பவுன்சர் கிடையாது- நியூஸி வீரர்களின் 'மனித நேயம்' சார்ஜா: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து வீச்சால் மரணமடைந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு பவுன்சர் கூட வீசாமல் அஞ்சலி செலுத்தியுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. நியூசிலாந்து-பாகிஸ்தான் நடுவேயான மூன்றாவது டெஸ்ட் சார்ஜாவில் நடந்து கொண்டிருந்த நிலையில்தான் பிலிப் ஹியூக்ஸ் மரணமடைந்தார். இதையடுத்து இரு நாட்டு வீரர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். நியூசிலாந்து பயிற்சியாளர் அறிவுரையின்படி பாகிஸ்தானின் 2வது இன்னிங்சில் பவுன்சரே வீசாமல் ஹியூக்ஸ்சுக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்தனர். பாக்.கிற்கு எதிரான டெஸ்ட்: 1135 பந்தில் …

  21. இன்று 50 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார் அர்ஜூன ரணதுங்க 2014-12-01 09:39:47 இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க இன்று தனது 50 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் முதலாவது டெஸ்ட் போட்டியில் 18 வயது பாடசாலை மாணவனாக இருந்த அர்ஜூன ரணதுங்கவும் பங்குபற்றினார். இங்கிலாந்துடனான அப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் அர்ஜூன அரைச்சதம் (54) குவித்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் சார்பில் 93 டெஸ்ட் போட்டிகளில் 5105 ஓட்டங்களையும் 269 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 7456 ஓட்டங்களையும் குவித்த அர்ஜூன டெஸ்ட் போட்டிகளில் 16 விக்கெட்களையும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 79 விக்கெட்களையும் வீழ்த்தினார். 1996 ஆம் ஆண்டு உலக கிண்ணப் போட…

  22. சங்கா, மஹேலவுக்கு மெத்தியூஸ் புகழாரம் குமார் சங்கக்கார மற்றும் ஜெயவர்தன போன்ற மூத்த வீரர்களிடமிருந்து இளம் வீரர்கள் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டுமென இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதன் முதல் இரு போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெற்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் 2 ஆவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் இலங்கை அணித்தலைவர் மெத்தியூஸ் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், இந்திய தொடரின் போது நாங்கள் முழு நம்பிக்கை இழந்தவர்களாகவே இருந்தோம். தற்போது கிடைத்திருக்கும் …

  23. ‘பல்டி’ அடிக்க தடையா நவம்பர் 30, 2014. மும்பை: கால்பந்து போட்டிகள் கோல் அடித்தால் வீரர்கள் தலைகீழாக ‘பல்டி’ அடித்து கொண்டாடும் ‘சோமர்சால்ட்’ முறைக்கு, தடை விதிப்பது குறித்து ‘பிபா’ யோசித்து வருகிறது. உலக கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்த வீரர்களில் முதலிடத்தில் (16) இருப்பவர் ஜெர்மனி வீரர் குளோஸ், 36. இவர் கோல் அடித்தவுடன் அப்படியே தலை கீழாக ‘பல்டி’ அடித்து கொண்டாடுவார். இதை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. தற்போது நடக்கும் ஐ.எஸ்.எல்., தொடரின் முதல் போட்டியில் கோல்கட்டா, மும்பை அணிகள் மோதின. இதில், தொடரின் முதல் கோல் அடித்தார் கோல்கட்டா வீரர் பிக்ரு. இதை விட, பிக்ரு ‘சோமர்சால்ட்’ முறையில், ‘டைவ்’ அடித்தது தான் மைதானத்தில் இருந்த ஒட்டு மொத்த …

  24. ஹியூக்ஸ் இறந்த 2வது நாளில் தலையில் பந்துபட்டு இஸ்ரேல் அம்பயர் ஹிலல் மரணம் ஜெருசலம்: இஸ்ரேலில் நடந்த கிரிக்கெட் போட்டியில் அம்பயராக இருந்த ஹிலல் ஆஸ்கர் தலையில் பந்து பட்டு மரணம் அடைந்துள்ளார். இஸ்ரேல் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹிலல் ஆஸ்கர்(55). இஸ்ரேலில் உள்ள துறைமுக நகரமான அஷ்தோதில் தேசிய லீக் சீசனின் இறுதிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் ஹிலல் அம்பயராக இருந்தார். அப்போது பேட்ஸ்மேன் ஒருவர் அடித்த பந்து வேகமாக வந்து ஹிலலின் தலையில் பட்டது. இதில் கீழே விழுந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஹியூக்ஸ் இறந்த 2வது நாளில் தலையில் பந்துபட்டு இஸ்ரேல் அம்பயர் ஹிலல் மரணம் ஆனால் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவரின் மறைவ…

  25. 'சச்சின் ஆன்மா சாந்தியடைய வேண்டும்..' என செய்தி வெளியிட்ட ஆங்கில செய்தித்தாள்! ரசிகர்கள் ஆத்திரம் சென்னை: பவுன்சர் பந்து தாக்கி உயிரிழந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் குறித்த டிவிட்டுகளை செய்தியாக்கிய தேசிய ஆங்கில நாளிதழ் ஒன்று, பிலிப் ஹியூக்ஸ்சுக்கு பதிலாக சச்சின் டெண்டுல்கர் ஆத்மா சாந்தியடையட்டும் என்று பிரிண்ட் செய்து ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக் கொண்டுள்ளது. பவுன்சர் பந்தால் தலையில் படுகாயத்துடன் போராடி வந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை டிவிட்டர் மூலம் தெரிவித்திருந்தனர். 'சச்சின் ஆன்மா சாந்தியடைய வேண்டும்..' என செய்தி வெளியிட்ட ஆங்கில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.