Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கிரிக்கெட்டில் தொடரும் படுகாயங்களும், மரணங்களும்! ஜென்டில்மேன் விளையாட்டின் சோகம் சென்னை: பிலிப் ஹியூக்ஸ் தலையில் காயம் பட்டு மரணமடைந்துள்ள நிலையில் கிரிக்கெட்டில் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் அவ்வப்போது நடந்துள்ளதையும் மறுக்க முடியாது. பல நேரங்களில் படுகாயங்களும், சில நேரங்களில் வீரர்களின் உயிரையும் இதுபோன்ற விபத்துகள் பறித்துள்ளன. 1932-33ல் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பெர்ட் ஓல்ட்பீல்ட் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஹரோல்ட் லார்வூட் பவுன்சரால் ஏற்பட்ட காயத்தால் மண்டை ஓடு விரிசலடைந்தது. அந்த காலகட்டத்தில் பாடிலைன் எனப்படும் உடலை நோக்கி ஆக்ரோஷமாக பந்து வீசி தாக்கிக்கொள்ளும் நிலை இருந்தது. நாரி கான்ட்ராக்டர் தப்பினார் 1960ல் மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச…

  2. முதல் டெஸ்ட் போட்டி பற்றி கிரிக்கெட் வாரியங்கள் முடிவெடுக்க வேண்டும்: சுனில் கவாஸ்கர் பிலிப் ஹியூஸ் மரணத்தை அடுத்து இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் மனநிலையில் வீரர்கள் நிச்சயம் இருக்க மாட்டார்கள் என்கிறார் சுனில் கவாஸ்கர். “விளையாடுவது என்பது கடினம். இன்னும் ஒரு வாரம் இருக்கிறது, ஆனாலும் எந்த வீரரும் விளையாடும் எண்ணத்தில் இருக்க மாட்டார்கள். ஒருவருக்கும் விளையாடுவதற்கான மனநிலை இருக்காது. நியூசவுத்வேல்ஸ்-தெற்கு ஆஸ்திரேலியா போட்டி கைவிடப்பட்டது. ஆகவே முதல் டெஸ்ட் போட்டியை ரத்து செய்வதா வேண்டாமா என்பது பற்றி வாரியங்கள் கலந்து முடிவெடுக்க வேண்டும். பிலிப் ஹியூஸ் மரணம் ஆழமான துயரங்களை ஏற்படுத்துகிறது. எந்த ஒரு விளையாட்டு வீரர் பற்றியு…

  3. உலக செஸ்: ஆனந்த் முதல் வெற்றி * மூன்றாவது சுற்றில் பதிலடி நவம்பர் 11, 2014. சோச்சி: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்றாவது சுற்றில், ஆனந்த், ‘நடப்பு சாம்பியன்’ கார்ல்சனை வீழ்த்தினார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, ரஷ்யாவின் சோச்சி நகரில் நடக்கிறது. மொத்தம் 12 சுற்றுக்கள் கொண்ட இப்போட்டியில், ஐந்து முறை (2000, 2007, 2008, 2010, 2012) உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ‘நடப்பு சாம்பியன்’ நார்வேயின் மாக்னஸ் கார்ல்சனை சந்திக்கிறார். முதல் இரு சுற்று முடிவில், ஆனந்த் 0–5–1.5 என்ற புள்ளிக்கணக்கில் ஆனந்த் பின்தங்கி இருந்தார். நேற்று மூன்றாவது சுற்று நடந்தது. துவக்கமே நெருக்கடி: வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், முதல் சுற்றில் விளையா…

  4. மும்மூர்த்திகளுக்கு மகத்தான பிரியாவிடை வழங்க உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்கள் அணிதிரள வேண்டும்: லஹிரு திரிமான்ன 2014-11-27 10:12:00 இலங்கை கிரிக்கெட் விளையாட்டின் 'மும்மூர்த்தி'களான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, திலக்கரட்ன டில்ஷான் ஆகியோர் தங்களது தாய்நாட்டில் விளையாடும் கடைசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்களின்போது இரசிகர்கள் அவர்களுக்கு கௌரவமானதும் மகத்தானதுமான பிரியாவிடை அளிப்பர் என இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர். இங்கிலாந்துக்கு எதிராக இங்க நடைபெறும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் அவர்கள் மூவரும் சொந்த மண்ணில் விளையாடும் கடைசி தொடராக அமையும் எனக் கருதப்படுகின்றது. ஷஷஅவர்கள் மூவரும் இங்கு விளையாடும் கடைசி தொடராக இங்கிலாந்துடா…

  5. யாழ். மாவட்ட செயலக விளையாட்டு பிரிவின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட கால்பந்தாட்ட கழக அணிகளுக்கிடையில் நடத்திய மைலோ கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் நாவாந்துறை சென்.மேரிஷ் அணி சம்பியனாகியது. மைலோ கிண்ண சுற்றுப்போட்டிகள் கடந்த இரண்டு வார காலமாக யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்று வந்தன. சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி, ஞாயிற்றுக்கிழமை (23) அதே மைதானத்தில் இடம்பெற்றது. இறுதிப்போட்டியில் நாவாந்துறை சென்.மேரிஷ் அணியை எதிர்த்து வடமராட்சி நவிண்டில் கலைமதி அணி மோதியது. ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களில் சென்.மேரிஷ் அணியினர் முதல் கோலை போட்டனர். அணியின் அருள்ராசா யூட் முதலாவது கோலை பெற்றுக்கொடுத்தார். முதல் பாதியாட்டம் அந்த ஒரு கோலுடன் முடிவுற்றது. இரண்டாவது…

  6. உலகக்கோப்பை: இந்திய அணியில் இடம்பெற ஹர்பஜன் இலக்கு ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடைபெறும் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவதே இலக்கு என்று ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியை தனது கேப்டன்சி மூலம் இறுதிப் போட்டி வரை அழைத்துவந்த ஹர்பஜன் சிங் கூறியதாவது, “நான் உலகக் கோப்பை போட்டிகளுக்கு திரும்ப இலக்கு நிர்ணயித்துள்ளேன். ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் விளையாடுவது மகிழ்ச்சியான ஒரு தருணம். எந்த ஒரு வீரருக்கும் உலகக் கோப்பை என்பது மிக முக்கியமான ஒன்று, நான் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். தினமும் நான் விழித்தவுடன் நினைப்பதெல்லாம் உலகக் கோப்பைக…

  7. ‘அழகிய’ ஆபத்து நவம்பர் 23, 2014. கால்பந்து களத்தில் பிரபல ‘மாடல்’ கிளாடியா, நடுவராக களமிறங்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், பெண் நடுவர்கள் இல்லை. இருப்பினும், சியான் மேசே–எல்லிஸ், 29, என்பவர், நீண்ட நாட்களாக ‘லைன்’ நடுவராக செயல்பட்டு வருகிறார். ஆண்கள் கால்பந்து போட்டிகளில் முதன் முறையாக நடுவராக களமிறங்கிய பெருமை, ஜெர்மனியின் பிபியானா ஸ்டெயின்ஹாஸ், 35, என்பவருக்கு உண்டு. சமீபத்தில் பேயர்ன் முனிக், மான்சென்கிளாடுபேக் அணிகள் மோதிய போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது. அப்போது கூடுதல் நேரம் வழங்குவதில் நடுவர் பிபியானாவுடன் மோதலில் ஈடுபட்டார் பேயர்ன் அணி மானேஜர் குவார்டியலோ. அப்போது, பெண் தானே என…

  8. பாகிஸ்தான் பவுலர் சயீத் அஜ்மல் பந்துவீச்சு மீது புகார் சந்தேகத்திற்கிடமான முறையில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் வீசுகிறார் என்று ஐசிசி-யிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக நேற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அவரது பந்து வீச்சு மீது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐசிசி விதிமுறைகளின் படி அவர் 21 நாட்களுக்குள் பரிசோதனைக் கூடத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் அவர் தொடர்ந்து பந்து வீசலாம் என்று ஐசிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மைதானத்தில் இருந்த ஆட்ட அதிகாரிகள் அஜ்மல் வீசிய பல பந்துகள் விதிமுறைகளை மீறியதாக உள்ளது என்று கூறியுள்ளனர். இந்த புகார் அறிக்கையை பாகிஸ்தான் அணி…

  9. முறையற்ற பந்துவீச்சின் மீதான நடவடிக்கை ‘சதி’ அல்ல: ஐசிசி பந்துவீச்சாளர்கள், குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தை விட்டெறிவதன் மீதான ஐசிசி நடவடிக்கையில் சதி எதுவும் இல்லை என்று தலைமைச் செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார். 2015 உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறுகிறது. இத்தகைய தருணத்தில் அணிகளின் முன்னணி பவுலர்கள், குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் மீது இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுவதில் ‘சதி’ நடப்பதாக கிரிக்கெட் அரங்கில் சந்தேகங்கள் எழுந்தது. இந்நிலையில் ஐசிசி தலைமைச் செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் கூறும்போது, “விதிமுறைகளை ‘வளைக்கும்’ (சிலேடைக்கு மன்னிக்கவும்) பவுலர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக…

  10. போர்ம்யூலா 1 சம்பியன் ஹமில்டனா? ரொஸ்பேர்கா? அபு தாபி குரோன் ப்றீ பந்தயம் தீர்மானிக்கவுள்ளது இவ் வருடம் போர்ம்யூலா 1 குரோன் ப்றீ சம்­பியன் யார் என்­பதை நாளை­ நடை­பெ­ற­வுள்ள இறுதிக் கட்­ட­மான அபு­தாபி குரோன் ப்றீ காரோட்டப் போட்டி தீர்­மா­னிக்­க­வுள்­ளது. இறுதிக் கட்டப் போட்­டியில் முதல் பத்து இடங்­களைப் பெறும் போட்­டி­யா­ளர்­க­ளுக்கு வழ­மை­யான புள்­ளி­க­ளுக்கு பதி­லாக இரட்­டிப்பு மடங்கு புள்­ளிகள் வழங்­கப்­ப­டு­வதால் தற்­போது 17 புள்­ளிகள் வித்­தி­யா­சத்­துடன் முத­லிரு இடங்­களில் உள்ள லூயிஸ் ஹமில்­ட­னுக்கும் நிக்கோ ரொஸ்­பேர்­குக்கும் இடையில் சம்­பி­ய­னுக்­கான கடும் போட்டி நிலவும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இரு­வரும் மெர்­சிடெஸ் அணி சார்­பாக போட்­டி­யி­டு­கின…

  11. கேட்ச்களை கோட்டைவிட்ட தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது பெர்த்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை, ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்று முன்னிலை வகித்தது. நல்ல பேட்டிங் பிட்சில் தெ.ஆ. கேப்டன் டிவிலியர்ஸ் முதலில் பீல்ட் செய்ய முடிவெடுத்தார். இதனால் ஆஸ்திரேலியா அபாரமாக விளையாடி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 48.1 ஓவர்களில் 268 ரன்களுக்குச் சுருண்டது. பெய்லிக்கு மட்டும் தவறவிடப்பட்ட 4 கேட்ச்கள்: தென் ஆப்பிரிக்கா அணியின் பீல்டிங் இன்று படு மோசமாக இருந்தது. ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் க…

  12. http://www.youtube.com/watch?v=lw2m-iU8gKE காணொளியை, இறுதி வரை பார்க்கவும்.

  13. சர்வதேச போட்டிகளுக்கு விடைகொடுக்கும் சங்கா? இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னால் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரராக வலம் வரும் சங்கக்காரா அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு பிறகு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை ஆங்கில ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது. எனினும் இலங்கை கிரிக்கெட் சபையினால் இந்த தகவல் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் பின்னர் சங்கக்காரா ஓய்வு பெறும் பட்சத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்…

  14. சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையை ரத்து செய்ய வேண்டாம்: இந்தியா சிமெண்ட்ஸ் மன்றாடல் ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமைதாரர் ஒப்பந்த்தத்தை ரத்து செய்ய வேண்டாம் என்று இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்திடம் மன்றாடியுள்ளது. ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான முத்கல் கமிட்டியின் அறிக்கை மீதான எதிர்வினையில் இந்தியா சிமெண்ட்ஸ் கோரிக்கை வைக்கும் போது, “குருநாத் மெய்யப்பன் மீது கூறப்பட்ட விவகாரங்கள் தவிர, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதோ உரிமையாளர்கள் மீதோ, ஊழியர்கள் மீதோ எந்த வித அனுமானங்களும் இல்லை.” என்று கோரியுள்ளது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமைதாரர் என்ற ஒப்பந்தத்தை ரத்து செய்தால் அது ஐபிஎல் கிரிக்கெட்டிற்கே பா…

  15. ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்களின் ‘மெனு கார்டு’ இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் முத்தரப்பு தொடரில் விளையாடுகிறது. முத்தரப்புத் தொடரில் 3-வது அணியாக இங்கிலாந்து பங்கேற் கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவுகள் குறித்த பட்டியலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் அளித் துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அதில் கிரில்டு (பொறித்த) சிக்கன், பட்டர் சிக்கன் போன்ற காரம் அதிகமில்லாத உணவுகளுக்கே இந்திய வீரர்கள் அதிக முன்னுரிமை அளித்திருக்கிறார்கள். போட்டிகளில் இல்லாதபோது ஓட்டல்களில் தங்கியிருக்கும் நேரத்தில் இந்திய வீரர்களின் விருப்ப உணவை தயா…

  16. ஆமாம், அனுஷ்காவை காதலிக்கிறேன்: கோபத்தில் சிலிர்த்த கோலி ஆமாம், நடிகை அனுஷ்கா சர்மாவை காதலிக்கிறேன். ஆனால் இது எங்களுடைய தனிப்பட்ட விஷயம். இந்த விஷயத்தில் மற்றவர்கள் அதிகம் தலையிடாமல் பகுத்தறிவோடு நடந்துகொள்ள வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கோபத்தோடு பேசியுள்ளார். கோலியும், அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவதாக கடந்த 2 ஆண்டுகளாக செய்திகள் வெளியாகி வந்தன. இவர்கள் இருவரும் இணைந்து பொது இடங்களுக்கு சென்ற படங்களும் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட கோலியிடம் அவருடைய காதல் பற்றி கேள்வியெழுப்பப்பட்டபோது கடும் கோபமடைந்த அவர், “ஆமாம் நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். ஆனால் எங்களின் தனிப்பட…

  17. கௌஷாலை ஆரம்ப வீரர் ஸ்தானத்தில் அவதானிக்கவுள்ளோம்: தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரிய சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் திலக்­க­ரட்ன டில்­ஷா­னுடன் ஆரம்ப வீர­ராக யாரை நிலை­யாக நிய­மிப்­பது என்­பதில் தெரி­வா­ளர்கள் தீவி­ர­மாக ஆராய்ந்து வரு­கின்­றனர். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிகள் அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள நிலையில், இந்­தி­யா­வுக்கு எதி­ரான போட்­டியில் திலக்­க­ரட்ன டில்ஷான் மாத்­தி­ரமே ஆரம்ப வீர­ராக தனது அனு­ப­வத்தைக் கொண்டு திற­மையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார். உப்புல் தரங்க, குசல் ஜனித் பெரேரா ஆகியோர் தங்­க­ளுக்கு கிடைத்த வாய்ப்­பு­களை சரி­யாகப் பயன்­ப­டுத்­திக் ­கொள்ளத் தவ­றி­யி­ருந்­தனர். இந்நிலையில் இலங்கை வருகை தந்­துள்ள இங்­கி­லாந்து அணிக்க…

  18. குழந்தைகளுக்கு எந்த வயதில் செஸ் கற்றுக்கொடுப்பது? - செஸ் ‘ராணி’ சூசன் போல்கர் பதில் ஒன்றல்ல, இரண்டல்ல.. நான்கு முறை மகளிர் உலக செஸ்ஸில் சாம்பியன் பட்டம் வென்று முடிசூடா ராணியாகத் திகழ்ந்தவர் ஹங்கேரியைச் சேர்ந்த சூசன் போல்கர். செஸ் நிபுணர், வர்ணனையாளர் என பல்வேறு முகங்களைக் கொண்ட போல்கர், திருமணத்துக்குப் பிறகு அமெரிக்காவில் வசித்து வருகிறார். 11 வயதுக்குட்பட்டோருக்கான புதாபெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தனது 4-வது வயதில் வென்றவர். அதிலிருந்தே அவருடைய புத்திகூர்மையையும், திறமையையும் நாம் அறிந்துகொள்ளலாம். பிரபல செஸ் வீராங்கனை ஜுடித் போல்கரின் சகோதரி. ஆடவர் கோலோச்சிக்கொண்டிருந்த செஸ் விளையாட்டில் ஆளுமை செலுத்திய முதல் பெண் சூசன். 1990-களில் விஸ்வநாதன் ஆனந்துடன் பல போட்டிக…

  19. உலகக்கிண்ணப் போட்டிகள் நெருங்கும் நேரத்தில் இங்கிலாந்து அணி இலங்கையை நொறுக்கித் தள்ளும் என இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டான் கூறியுள்ளார். இங்கிலாந்து அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இந்த தொடர் வரும் 26ம் திகதி தொடங்கவுள்ளது. இதற்கு முன்பாக 21 மற்றும் 23ம் திகதி இரு அணிகளும் பயிற்சி போட்டியில் மோதுகின்றன. இந்நிலையில் இலங்கையில் இங்கிலாந்து அணி தொடரை இழந்து விடாது என கிறிஸ் ஜோர்டான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் எல்லோரும் உலகக்கிண்ணத்தை பற்றி பேசுகின்றனர். ஆனால் இப்போது இருக்கின்ற தருணத்தை சரியாக பயன்படுத்தினால் போதுமானது. இலங்கை சுற்றுப்பயணத்தில் சிறப்பாக செயல்பட்டு உலகக்கிண்ண போட்டிகளுக்கு அடித்தளம் அம…

  20. தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் மீது ரசிகர்கள் நிறவெறி கேலி கான்பெராவில் நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் வரம்பு மீறியுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட இம்ரான் தாஹிர் புகார் எதுவும் அளிக்கவில்லை. தேர்ட் மேன் பவுண்டரி அருகே பீல்டிங் செய்து கொண்டிருந்தார் இம்ரான் தாஹிர். இவருக்கு அடிக்கடி தனது தாடியைச் சொரியும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனைக் கண்ட கான்பெரா ரசிகர்கள், அவரை கடுமையாக கேலி செய்தனர். நிறவெறித்தனம் அதில் ஊடுருவியிருந்ததாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதாவது, அவர் தாடியைச் சொறிவது பற்றி ரசிகர்கள் கேலிக்குரல் எழுப்பிக் கொண்டிருந்த போது திடீரென ஒரு ரசிகர், "உன்னுடைய செல்லப் பிராணியான ஒட்டகத்துக்கு சொறிந்து விட …

  21. மைக்கல் கிளார்க் ஓய்வுபெறவேண்டும் : அலன் போடர் அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கல் கிளார்க் எதிர்வரும் உலகக் கிண்ண போட்டிகளின் பின்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற வேண்டுமென அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் அலன் போடர் வலியுறுத்தியுள்ளார். அவுஸ்திரேலிய அணித் தலைவர் 33 வயதான மைக்கல் கிளார்க் அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டுவரும் நிலையிலேயே அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் அலன் போடர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மைக்கல் கிளார்க் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்று விரும்பினால் 2015 ஆம் ஆண்டு இடம்பெறும் உலகக் கிண்ணத்திற்குப் பின்னர் அவர் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு முழுக்குப் போட வேண்டு…

  22. ரோஹித் சர்மாவின் 264 ரன்கள் சாதனையை முறியடிப்பது கடினம்: பிரையன் லாரா இலங்கைக்கு எதிராக ரோஹித் சர்மா எடுத்த 264 ரன்கள் என்ற ஒருநாள் கிரிக்கெட் உலக சாதனையை முறியடிப்பது கடினம் என்று மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். ஹெரால்ட் சன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் லாரா கூறியது: "மான்செஸ்டர் மைதானத்தில் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் எடுத்த 189 ரன்கள் என்ற சாதனையுடன் கிரிக்கெட்டில் வளர்ந்தவர்கள் நாங்கள். அன்று அவர் பந்து வீச்சை எவ்வாறு ஆதிக்கம் செலுத்தினார் என்பது பற்றி நாங்கள் போதிக்கப்பட்டோம். அப்போது இந்த ஸ்கோர்தான் உலக சாதனை. சில ஆண்டுகளுக்கு முறியடிக்க முடியாமல் நிலைபெற்றது. அப்போதெல்லாம் 200 எடுக்க முடியும் என்றே நான் உணர்ந்தேன். ஆன…

  23. ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர்: சிறப்பான பேட்டை தேடி வாங்கிய தோனி தோனி ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடருக்காக உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகருக்கு சென்று சிறப்பான பேட்களை தேர்வு செய்து வாங்கியுள்ளார் இந்திய அணி கேப்டன் தோனி. கை பெருவிரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்தியாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோனி பங்கேற்கவில்லை. அடுத்ததாக டிசம்பர் 4-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கும் அந்நாட்டு அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் தோனி பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 12-ல் தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் களமிறங்க இருக்கிறார் இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடுவதற்காக பேட்களை வாங்குவதற்காக மீரட் நகருக்கு கடந்த சில…

  24. சகலதுறை கிரிக்கெட் வீரர்களில் ஏஞ்சலோ மெத்யூஸ் முதலிடம் இந்­தி­யா­வுக்கு எதி­ரான ஐந்து போட்­டிகள் கொண்ட தொடரில் சகல துறை­க­ளிலும் பிர­கா­சித்த ஏஞ்­சலோ மெத்யூஸ், சர்­வ­தேச ஒரு நாள் கிரிக்கெட் சக­ல­துறை ஆட்­டக்­கா­ர­ருக்­கான நிரல்­ப­டுத்­தலில் முத­லி­டத்தை அடைந்­துள்ளார். இந்தத் தொடரில் ஒரு சதம், 2 அரைச் சதங்கள் அடங்­க­லாக 339 ஓட்­டங்­களைப் பெற்ற மெத்யூஸ், 4 விக்கெட்­களைக் கைப்­பற்­றி­யி­ருந்தார். இதனையடுத்து சக­ல­துறை ஆட்­டக்­கா­ரர்­க­ளுக்­கான நிரல்­ப­டுத்­தலில் ஏஞ்­சலோ மெத்யூஸ் முதலாம் இடத்­திற்கு முன்­னே­றி­யுள்ளார். நிரல்­ப­டுத்­த­லுக்­கான 420 படி­நிலை புள்­ளி­களை மெத்யூஸ் பெற்­றுள்­ள­துடன் பாகிஸ்­தானின் மொஹமத் ஹஃவீஸ் 411 படி­நிலை புள்­ளி­க­ளுடன் இரண்டாம் இ…

  25. 5 போட்டிகளில் ஆடுவதற்காக இந்தியா வந்தது இலங்கை அணி! மும்பை: இந்தியாவுடன் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் ஆடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. ஏஞ்சலே மாத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி மும்பைக்கு வந்து சேர்ந்தது. விமான நிலையத்திலிருந்து சிறப்புப் பேருந்து மூலம் இலங்கை அணியைச் சேர்ந்த வீரர்களும், நிர்வாகிகளும் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி பாதியிலேயே கிளம்பிப் போய் விட்டதால் நிலைமையைச் சரிக்கட்டவும், விட்ட பணத்தை எடுக்கவும் இலங்கையைக் கூப்பிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். இந்தியாவே கூப்பிட்டு விட்டதே என்பதற்காக எல்லா வேலையையும் போட்டு விட்டு ஓடி வந்துள்ளது இலங்கை. Read more at: http://tamil.oneindia.com/news/sports/sl-te…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.