விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
மெஸ்சி சாதனை: பார்சிலோனா வெற்றி நவம்பர் 06, 2014. பாரிஸ்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் அசத்திய பார்சிலோனா அணியின் மெஸ்சி அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை சமன் செய்தார். ஐரோப்பாவில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. பாரிசில் நடந்த லீக் போட்டியில் பார்சிலோனா, அஜக்ஸ் அணிகள் மோதின. இதன் முதல் பாதியில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி 36வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இரண்டாவது பாதியிலும் அசத்திய மெஸ்சி (76வது நிமிடம்) மீண்டும் ஒரு கோல் அடித்து அணியை வலுப்படுத்தினார். எதிரணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. முடிவில், பார்சிலோனா அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ‘ரவுண்ட்–16’ சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம், சாம்பியன்ஸ் லீ…
-
- 0 replies
- 485 views
-
-
ஒழுங்காகவே விளையாடாத விராத் கோஹ்லிக்கு ஐசிசி விருது கிடைக்குமா.....? துபாய்: சமீப காலமாக பெரிய அளவில் பிரகாசிக்காமல் உள்ள விராத் கோஹ்லி, ஐசிசியின் இந்த ஆண்டின் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்த பிரிவில் கோஹ்லி தவிர மேலும் மூன்று வீரர்களின் பெயர்களும் உள்ளன. அவர்கள், தென் ஆப்பிரிக்காவின் க்வின்டன் டி காக், அப் டிவில்லியர்ஸ் மற்றும் டேல் ஸ்டெயின் ஆவர். இதற்கான பரிந்துரையை ஐசிசி இன்று அறிவித்தது. ஒரே இந்திய வீரர் ஆடவர் பிரிவில் ஐசிசி அறிவித்துள்ள விருதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் விராத் கோஹ்லி மட்டுமே மகளிர் பிரிவில் மித்தாலி ராஜ் மகளிர் பிரிவில், சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைக்கான பட்டியலி…
-
- 1 reply
- 555 views
-
-
சர்வதேச மக்கள் விருதை வெல்வாரா மெத்தியூஸ் ? இவ் ஆண்டுக்கான எல்.ஜி. சர்வதேச மக்கள் விருதுப் பட்டியலில் இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த ஆண்டுக்கான எல்.ஜி சர்வதேச மக்கள் விருதுப் பட்டியலில் 5 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில் இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், இங்கிலாந்து மகளிர் அணியின் அணித்தலைவர் சார்லோட் எட்வர்ட்ஸ், அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜோண்சன், இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மற்றும் தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படும். இதற்கான வாக்களிப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது. இது இம்மா…
-
- 7 replies
- 795 views
-
-
பழைய பெருச்சாளியை இப்போது ஏன் "பிட்ச்"சுக்கு நடுவே ஓட விடுகிறார் சச்சின்? மும்பை: மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். இந்த முறை எந்த சாதனைக்காகவும் அவர் பரபரப்பைக் கிளப்பவில்லை. மாறாக பெரும் சர்ச்சை மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார். குறிப்பாக கிரேக் சேப்பல் மீது இவர் கூறியுள்ள சரமாரியான புகார்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதெல்லாம் பொய் என்று சேப்பல் கூறியுள்ளார். ஆனால் முன்னாள் வீரர்கள் பலரும் சச்சின் சொன்னது உண்மை. அவர் சொல்வதெல்லாம் உண்மை என்று அடித்துக் கூறி வருகின்றனர். ஆனால் இதையெல்லாம் ஏன் இப்பப் போய் சொல்கிறார் சச்சின் என்பதுதான் புரியவில்லை. சேப்பல் கதை முடிந்து அதற்குப் பிறகு எத்தனையோ சம்பவங்கள் நடந்து விட்ட நிலையில் இப்போது பழைய…
-
- 1 reply
- 946 views
-
-
ஐ.சி.சி. யின் டெஸ்ட் அணித் தலைவராக மெத்தியூஸ் நடப்பாண்டுக்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை ஐ.சி.சி. இன்று அறிவித்துள்ளது. டுபாயில் அமைந்துள்ள ஐ.சி.சி.யின் தலைமையகத்தில் வைத்து ஐ.சி.சி.யின் தலைவரும் இந்திய அணியின் முன்னாள் தலைவருமான அனில் கும்ளே இதனை தெரிவித்தார். அந்தவகையில் டெஸ்ட் அணித் தலைவராக இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ{ம் ஒருநாள் அணித் தலைவராக இந்திய அணித் தலைவர் மகேந்திர சிங் டோனியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அணித் தலைவர் உட்பட குமார் சங்கக்கார, ரங்கன ஹேரத் ஆகிய மூவர் இலங்கை அணி சார்பாக டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளதுடன் ஒருநாள் அணியில் அஜந்த மெண்டிஸ் மாத்திரம் இடம்பெற்றுள்ளார். இதேவேளை, கடந்த 2006 ஆம்ஆண்டு முதல் 7 முறை ஐ.சி.சி.யின் டெஸ்ட் அணியில…
-
- 0 replies
- 435 views
-
-
ஒரு நாள் போட்டிகளுக்கு 'பெஸ்ட்' கேப்டன் டோணிதான்.... ஐசிசி துபாய்: இந்த ஆண்டுக்கான, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த கேப்டனாக டோணியை தேர்வு செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். ஐசிசியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழு ஆண்டுதோறும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த வீரர்களை தேர்வு செய்து அறிவிப்பது வழக்கம். ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் 2014ம் ஆண்டுக்கான சிறந்த வீரர்கள் பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளுக்கான அணி கேப்டனாக டோணியை தேர்வு செய்துள்ளது ஐசிசி. ஒரு நாள் போட்டிகளுக்கு 'பெஸ்ட்' கேப்டன் டோணிதான்.... ஐசிசி ஒருநாள் அணியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முமகது ஷமி, விராட் கோஹ்லி மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோருக்கும் இடம் கி…
-
- 0 replies
- 537 views
-
-
மத்திய அரசின் சாட்டையடி; மாற்றத்துக்கான அறிகுறி! எப்போது அழைத்தாலும் நாட்டுக்காக விளையாடத் தயாராக இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே இனி அரசின் நிதி உதவி வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது மத்திய விளையாட்டு அமைச்சகம். இந்திய டென்னிஸ் வீரர்கள் பயஸ், போபண்ணா, சோம்தேவ் ஆகியோர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாட மறுத்ததன் எதிரொலியாக வெளியிடப் பட்டுள்ள இந்த அறிவிப்பு, விளையாட்டு வீரர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அமைச்சகத்தின் முடிவு மிகச் சரியானது என்பதுதான் நிதர்சனம். இந்தியாவில் உள்ள பெரும்பாலான விளையாட்டு வீரர்களுக்கு ஆரம்ப காலத்தில் அரசின் நிதியுதவி தேவைப்படுகிறது. அந்த நிதியுதவியோடுதான் அடுத்த கட்டத்துக்கே முன்னேறுகிறார்கள். ஆனால் முன்னணி …
-
- 0 replies
- 895 views
-
-
அஷ்வின் தொடர்ந்து ‘நம்பர்–1’ நவம்பர் 04, 2014. துபாய்:ஐ.சி.சி., டெஸ்ட் போட்டிக்கான ‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியாவின் அஷ்வின் ‘நம்பர்–1’ இடத்தில் நீடிக்கிறார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை (ரேங்க்) பட்டியலை ஐ.சி.சி., வெளியிட்டது. இதில் ‘ஆல்–ரவுண்டர்களுக்கான’ பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் (357 புள்ளி) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது, மூன்றாவது இடங்கள் முறையே தென் ஆப்ரிக்காவின் பிலாண்டர்(348), வங்கதேசத்தின் சாகிப் (346) உள்ளனர். யூனிஸ் முன்னேற்றம்: ‘பேட்ஸ்மேன்களுக்கான’ தரவரிசையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டை சதம் அடித்து, தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்த பாகிஸ்தானின் யூனிஸ் கான…
-
- 0 replies
- 843 views
-
-
முரளி நல்லிணக்க கிண்ண கிரிக்கெட் ஆரம்ப விழாவில் 2014-10-31 12:26:55 முரளி நல்லிணக்க கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் மூன்றாவது அத்தியாயத்தை இரக்கத்திற்கான சிந்தனை மன்றத்தின் ஸ்தாபகரும் உலக பந்து வீச்சு சாதனையாளருமான முத்தையா முரளிதரன் நேற்றுமுன்தினம் வைபவரீதியாக ஆரம்பித்துவைத்தார். யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்ற றிச்மண்ட் கல்லூரி அணிக்கும் திருகோணமலை - மட்டக்களப்பு பாடசாலைகள் கூட்டு அணிக்கும் இடையிலான போட்டிக்கான நாணயத்தை சுழற்சியை முத்தையா முரளிதரன் நடத்தி ஆரம்பித்துவைத்தார். முரளி நல்லிணக்க கிண்ண கிரிக்கெட் போட்டிகள் யாழ்ப்பாணம் (2 மைதானங்கள்), கிளிநொச்சி, ஒட்டுசுட்டான் ஆகிய மைதானங்களில் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடைபெறுவதுடன் மா…
-
- 8 replies
- 2.1k views
-
-
டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் 3-வது இடம் சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் நேற்று 3-வது இடத்துக்கு அதிரடியாக முன்னேறியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் பாகிஸ்தான் 3-வது இடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தான் 3-வது இடத்தைப் பிடித்ததால் இங்கி லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய அணிகள் ஓரிடம் பின்தங்கிவிட்டன. இங்கிலாந்து 3-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கும், இலங்கை 4-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கும், இந்தியா 5-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கும் சென்றுவிட்டது. தென்னாப்பிரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தொடரை இழந்தபோதிலும் ஆஸ்திரேலியா 2-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. எனினும் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன…
-
- 0 replies
- 492 views
-
-
இலங்கைப் பாடசாலைகள் துப்பாக்கி சுடும் விளையாட்டுச் சங்கத்தினால் நடாவிய ரீதியில் நடத்தப்பட்ட போட்டித் தொடரில் அகில இலங்கை ரீதியில் 2 ஆம் இடத்தைப்பெற்றுக் கொண்ட யா/ நெல்லியடி மத்திய கல்லூரி மாணவி செல்வி தாயனி ஸ்ரீசிதம்பரலிங்கம் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு மேலதிக பயிற்சிகளைப் பெறுவதற்காக ஜக்கிய அமெரிக்கா செல்வதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேசியரீதியில் தெரிவு செய்யப்பட்ட 6 பேர் கொண்ட பயிற்றுவிப்பாளர்கள் அணியில் இடம்பெறும் ஒரே ஒரு தமிழ் மாணவ வீராக்கனை இவராவார். எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் பங்குபெறவுள்ள தேசிய அணி வீரர்களுக்கான பயிற்றுவிப்பாளராக பணியாற்றுவதற்காக இவருக்கான பயிற்சி…
-
- 0 replies
- 934 views
-
-
எம்பிலிப்பிட்டி மகாவலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் றிட்ஸ்பறி சேர் ஜோன் டார்பர்ட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஆனந்த் 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார். இவர் பரிதியை 37.33 மீற்றர் தூரம் எறிந்து புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியைச் சேர்ந்த எம். எச். எஸ். டி திசோரா 2008இல் நிலைநாட்டிய 29.17 மீற்றர் என்ற சாதனையையே ஆனந்த் முறியடித்துள்ளார். இதேவேளை இப் பாடசாலையைச் சேர்ந்த முரளி அபிராம் 15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதல்…
-
- 0 replies
- 489 views
-
-
யூனிஸ் கான் சாதனை சதம் அக்டோபர் 22, 2014. துபாய்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் சதம் அடித்தார். இதையடுத்து, டெஸ்ட் விளையாடும் அந்தஸ்து பெற்ற அனைத்து அணிகளுக்கும் எதிராகவும் சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனை படைத்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ள ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணிக்கு ஷேசாத் (3), முகமது ஹபீஸ் (0) சொதப்பல் துவக்கம் தந்தனர். பின் இணைந்த அசார் அலி, யூனிஸ் கான் ஜோடி இணைந்து ஆமை வேக ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அசார் அலி டெஸ்ட் அரங்கில் 16வது அரை சதம் கடந்தார். மூன்றாவ…
-
- 14 replies
- 1.2k views
-
-
ஆஸி.தொடருக்கு ஜடேஜாவுக்கு பதில் கரன் சர்மா, லோகேஷ் ராகுலுக்கும் ஆதரவு: திராவிட் ஆலோசனை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் லோகேஷ் ராகுலையும் கரன் சர்மாவையும் சேர்க்க வேண்டும் என்று ராகுல் திராவிட் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கரன் சர்மா ஒரு ரிஸ்ட் ஸ்பின்னர், ஆஸ்திரேலியாவில் இத்தகைய ஸ்பின்னர்களுக்கு விக்கெட் விழ அதிக வாய்ப்புகள் உள்ளன. கொஞ்சம் வேகமாகவும், கூக்ளி வீசவும் முடிந்தால் ஆஸ்திரேலியாவில் சாதிக்கலாம். ஜடேஜா அவரால் முடிந்ததைச் செய்வதில் நன்றாகவே திகழ்ந்தார். விக்கெட் டு விக்கெட் வீசுவார். பின்னால் இறங்கி பயனுள்ள ரன்களை எடுப்பார். ஆனால் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற வேண்டுமெனில் தரமான ரிஸ்ட் ஸ்பின்னர் தேவை. க…
-
- 0 replies
- 507 views
-
-
ஒரே போட்டியில் 5 ‘சேம் சைடு’ கோல் நவம்பர் 03, 2014. உள்ளூர் கால்பந்து போட்டியில் ஐந்து ‘சேம் சைடு’ கோல்கள் அடித்தது வியப்பாக உள்ளது. பொதுவாக கால்பந்து போட்டிகளில் ‘சேம் சைடு’ கோல் அடிப்பவர்களை, சொந்த ரசிகர்கள் கொடூரமான எதிரியாக பார்ப்பர். 1994 உலக கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்காவுக்கு எதிராக இப்படிச் செய்த, கொலம்பிய வீரர் எஸ்கோபர், ரசிகர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சூழலில் இந்தோனேசியாவில் நடந்த பிரிமியர் டிவிசன் கால்பந்து லீக் போட்டியில் அதிகமாக ‘சேம் சைடு’ கோல்கள் அடிக்கப்பட்டன. செமராங், சிலிமேன் அணிகள் மோதிய இப்போட்டியில் வெற்றி பெறும் அணி, அரையிறுதியில் போர்னியோ அணியை சந்திக்க வேண்டும். இந்த அணிக்கு ‘தாதாக்கள்’ ஆதரவு இருப்பத…
-
- 0 replies
- 514 views
-
-
கைவிட்டது மே.இந்தியத்தீவுகள்; கைகொடுத்தது இலங்கை வெள்ளிக்கிழமை, 31 ஒக்டோபர் 2014 மேற்கு இந்தியத்தீவுகள் கிரிக்கெட் சபைக்கும் வீரர்களுக்குமிடையேயான சம்பளப் பிரச்சினை காரணமாக இந்திய கிரிக்கெட் தொடரை கைவிட்டுவிட்டு மேற்கு இந்திய வீரர்கள் நாடு திரும்பிவிட்டனர். இதன் காரணமாக, மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட்டுக்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் இடையே பாரிய விரிசல் விழுந்துள்ளது. மேற்கு இந்திய வீரர்கள், இந்தியாவுக்குச் செல்லும் முன்பே சம்பளப் பிரச்சினை உண்டாகியது. தமது எதிர்ப்பைக் காட்டுவதற்காக முதல் நாள் போட்டியில் கறுப்பு பட்டி அணிந்து விளையாடினார்கள். தொடர் முடியும் வரை எதுவிதமான பிரச்சினையும் ஏற்படாது என இந்தியா எதிர்பார்த்தது. நான்காவது ஒருநாள் போட்டி முடிந்ததும், தொடரை…
-
- 0 replies
- 412 views
-
-
இருபது வருடங்களின் பின் சாதிக்குமா பாகிஸ்தான் அணி? வியாழக்கிழமை, 30 ஒக்டோபர் 2014 1994இல் பாகிஸ்தானில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சலிம் மலிக் தலைமையிலான பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றிருந்தது. அதன் பின்னர், டெஸ்ட் தொடர் ஒன்றில் அவுஸ்திரேலிய அணியை வெல்வது என்பது, பாகிஸ்தான் அணிக்கு வெறும் கனவாகவே இருந்துவந்தது. 1999இல் ஆரம்பித்து 2010 வரையில், அவுஸ்திரேலியாவுடன் விளையாடிய 13 டெஸ்ட் போட்டிகளிலும் தொடர் தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் அணி, 2010 இல் லீட்ஸ் இல் இடம்பெற்ற போட்டியில் 3 விக்கெட்களால் வெற்றிபெற்று தொடர்ச்சியான தோல்விக்கு இடைவெளி விட்டது. அதனை அடுத்து நான்கு வருடங்கள் கழித்து, கடந்த 22ஆம…
-
- 0 replies
- 435 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணிக்கு உளவியல் ஆலோசகர் 2014-10-31 12:18:20 இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது இலங்கை கிரிக்கெட் அணிக்கு விளையாட்டுத்துறை உளவியல் ஆலோசகர் ஒருவரை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. விளையாட்டுத்துறை உளவியல் ஆலோசகரும் இங்கிலாந்தின் முன்னாள் சுழல்பந்துவீச்சாளருமான ஜெரெமி ஸ்னேப் என்பவரை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. 2015 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்பதாக இலங்கை வீரர்களினது ஆற்றல்களை அதிகரிக்கும் நோக்கில் ஜெரெமி ஸ்னேப்பை உளவியல் ஆலோசகராக நியமிப்பதற்கு தீர்மானித்ததாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அஷ்லி டி சில்வா உறுதிபடத் தெரிவித்தார். இதேவேளை, இந்தியா…
-
- 0 replies
- 472 views
-
-
தோனி ஒரு பிரமாதமான கேப்டன்; வலுவான தலைவர்: கில்கிறிஸ்ட் புகழாரம் டெஸ்ட் போட்டிக்கான தலைமை பொறுப்பை தோனியிடமிருந்து விராட் கோலிக்கு மாற்ற வேண்டும் என்ற ஆஸி.முன்னாள் கேப்டன் இயன் சாப்பலின் கருத்தை ஆடம் கில்கிறிஸ்ட் மறுதலித்தார். வுலாங்காங் என்ற ஆஸ்திரேலிய பல்கலைக் கழகம் பெங்களூரில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராகக் கலந்து கொண்ட ஆடம் கில்கிறிஸ்ட் செய்தியாளர்களிடம் கூறும்போது: "நான் நிறைய முறைக் கூறிவிட்டேன். அவர் எப்போது இந்திய கேப்டன் பொறுப்பிற்கு வந்தாரோ அப்போது முதல் நான் இதைத்தான் கூறி வருகிறேன். அவர் ஒரு பிரமாதமான கேப்டன் டி20 உலகக் கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது என்று தோனியின் தலைமையில் …
-
- 0 replies
- 353 views
-
-
1970-களை ஞாபகப்படுத்தியிருக்கும் ஐஎஸ்எல்! ஒன்றல்ல, இரண்டல்ல…35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் மூலம் சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்திலும் மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது கால்பந்து போட்டி. கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற சென்னையின் எப்.சி.-மும்பை சிட்டி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தைப் பார்க்க ஏறக்குறைய 20 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்துக்கு படையெடுத்தனர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவும், போட்டி முடிந்த பிறகும் மைதானத்தின் அருகில் உள்ள சாலைகள் முழுவதுமாக ஸ்தம்பித்தன. போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த போராடியது காவல்துறை. கிரிக்கெட் தவிர வேறு எந்த விளையாட்டுக்கும் இப்படியொரு பெரும் கூட்டம் கூடு…
-
- 0 replies
- 1k views
-
-
இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவது சந்தேகமே: விரக்தியில் யுவராஜ் சிங் இந்திய அணியில் இனி தான் தேர்வு செய்யப்படாமலே போகக்கூடிய வாய்ப்பிருப்பதாக விரக்தியடைந்துள்ள யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 2013-ஆம் ஆண்டில் யுவராஜ் சிங் கடைசியாக இந்தியாவுக்காக விளையாடினார். இந்திய அணியில் தனது வாய்ப்புகள் பற்றி அவர் கூறும்போது, “இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவதே எனது இலக்கு. அணியில் தேர்வு செய்யப்படாத போது ஏமாற்றம் ஏற்படுவது இயற்கை. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் எனது ஆட்டமும் சீராக இல்லை. ஏற்ற இறக்கங்களுடனேயே காணப்பட்டது. மாற்றங்கள் வரலாம். நான் மீண்டும் அணியில் இடம்பெறலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இல்லையெனில் வாழ்க்கை வெறுப்பின் உச்சத்திற்குச் செல்லும். என்னால் …
-
- 0 replies
- 663 views
-
-
மைக்கேல் கிளார்க்கின் விசித்திர களவியூகத்தால் சர்ச்சை அபுதாபியில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் அமைத்த களவியூகம் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் திணறினர். இதனையடுத்து சர்ச்சைக்குரிய சில களவியூகங்களை ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் அமைத்தார். இன்று ஒரு சமயத்தில் மிட்செல் ஜான்சனை அழைத்து நேராக, அதாவது பந்து வீசும் பவுலருக்கு நேராக நிற்க வைத்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில், பேட்ஸ்மென்களுக்கு பவுலரின் கை நன்றாகத் தெரிவதற்காகத்தான் 'சைட் ஸ்க்ரீன்' வைக்கப்பட்டுள்ளது. சைட் ஸ்க்ரீன் நிலை சரியில்லை என்றால் பேட்ஸ்மென் ஓடி வரும் பவுலரையே கூட நிறுத்துவதை ந…
-
- 0 replies
- 687 views
-
-
அபுதாபியில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் பாகிஸ்தான் முதல் நாள் ஆட்ட முடிவில்2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. ஆட்ட முடிவில் யூனிஸ் கான் 111 ரன்களுடனும் அசார் அலி 101 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சாதனை நிகழ்த்திய யூனிஸ் கான் இன்று சதம் கண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 தொடர் சதங்களை எடுத்த 2வது பேட்ஸ்மென் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். யூனிஸ் கானின் 27வது டெஸ்ட் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 1924-25 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து வீரர் ஹெர்பர்ட் சட்கிளிஃப் தொடர்ந்து 3 சதங்கள் எடுத…
-
- 0 replies
- 383 views
-
-
யூனிஸ் கான் - புத்துயிர் தரும் சாதனை நாயகன் யூனிஸ் கான் தனது 14 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், விமர்சனங்கள், சர்ச்சைகள் ஏராளம். தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் தந்தை மற்றும் இரு சகோதரர்களின் மரணம் என நிறைய இழப்புகளைச் சந்தித்தவர். ஆனால் அவை எதுவும் தனது கிரிக்கெட் வாழ்க்கையை பாதிக்காமல் பார்த்துக்கொண்டவர் யூனிஸ் கான். அதுதான் இன்று அவரை பாகிஸ்தானின் தலைசிறந்த டெஸ்ட் வீரராக உருவாக்கியதோடு, உலக டெஸ்ட் அரங்கில் அவருக்கென்று தனியொரு இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. தேர்வாளர்களுக்கு பதிலடி சில நேரங்களில் அவர் சர்ச்சையில் சிக்கியபோது அவரை நீக்கிய பாகிஸ் தான் கிரிக்கெட் வாரியம், பின்னர் அவர் இல்லாமல் பாகிஸ்தான் அணியால் வெற்றி பெற …
-
- 1 reply
- 606 views
-
-
சச்சினை கவுரவிக்கும் தருணங்கள் என் தந்தையை மகிழ்விக்கும்: பிராட்மேன் மகன் நெகிழ்ச்சி டான் பிராட்மேன் அறக்கட்டளை சார்பாக சச்சின் டெண்டுல்கர் கவுரவிக்கப்படுவதையொட்டி, சச்சின் தனது தந்தையை சந்தித்து உரையாடிய தருணத்தை ’டான்’ மகன் ஜான் பிராட்மேன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் வீரரான மறைந்த டான் பிராட்மமேன் அறக்கட்டளை சார்பாக சச்சின் டெண்டுல்கர் கவுரவிக்கப்படுவதையொட்டி சிட்னி சென்றுள்ளார் சச்சின் டெண்டுல்கர். இன்று, சச்சின் மற்றும் ஸ்டீவ் வாஹ் ஆகியோருக்கு இரவு உணவு விருந்து அளிக்கப்படுகிறது. இந்நிலையில் டான் பிராட்மேன் அறக்கட்டளை சார்பாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் டான் பிராட்மேனின் வாரிசான ஜான் பிராட்மேன் 1998-ஆம் ஆண்டு…
-
- 0 replies
- 521 views
-