விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
41 வயது மிஸ்பா உல் ஹக் ஓய்வு பெற இந்தியாதான் வழி காட்டனும்...! தற்போது 41 வயதாகியும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக், ஒரு வழியா ஓய்வு முடிவுக்கு வந்துட்டாரு. ஆனா இந்தியாவுக்கு எதிரா டெஸ்ட் போட்டி நடந்தா அதுல விளையாடிட்டுதுதான் ஓய்வு பெறுவாராம். பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் மிஸ்பா உல்-ஹக், ஏற்கனவே சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.இந்நிலையில் நேற்று அளித்த ஒரு பேட்டியில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். '' நான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பாக சில டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆசைப்படுகிறேன்.இன்னும…
-
- 0 replies
- 327 views
-
-
இந்திய கால்பந்து வீரர்கள் செய்ய முடியாததை நிகழ்த்திக் காட்டிய வீராங்கனை! இங்கிலீஸ் பிரீமியர் லீக் அணியான வெஸ்ட் ஹாம் யுனைடெட்டின் மகளிர் அணியில் இடம் பிடித்து இந்திய அணியின் கோல்கீப்பர் அதிதி சவுகான் புதிய சாதனை படைத்துள்ளார். இங்கிலீஸ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இதுவரை ஒரு இந்தியர் கூட விளையாடியது இல்லை. இந்த தொடரில் விளையாடி வரும் வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணி புகழ்பெற்ற கால்பந்து அணியாகும். இதன் மகளிர் அணியில் விளையாட இந்திய அணியின் கோல்கீப்பர் அதிதி சவுகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியை சேர்ந்த அதிதி கடந்த 2013ஆம் ஆண்டு தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற உதவினார். இன்ஷியான் ஆசியப் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றிருந…
-
- 0 replies
- 562 views
-
-
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: நியூஸிலாந்து அணியில் ஜேம்ஸ் நீஷம் ஜேம்ஸ் நீஷம் ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய நியூஸிலாந்து அணியோடு ஒப்பிடுகையில், இப்போது ஒரேயொரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. நீல் வாக்னருக்குப் பதிலாக ஜேம்ஸ் நீஷம் சேர்க்கப்பட்டுள்ளார். முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய ஆல்ரவுண்டரான நீஷம், தனது முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் சதமடித்தது குறிப்பிடத்தக்கது. நீஷமின் வருகை பேட்டிங்கிற்கு மட்டுமின்றி வேகப்பந்து வீ…
-
- 0 replies
- 198 views
-
-
சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கவுரவம் அளிக்கப்படவில்லை: அமித் மிஸ்ரா வேதனை இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா | கோப்புப் படம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டும் 47 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். மொத்தம் 50 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட நிலையில் அஸ்வின் 24, ஜடேஜா 16, அமித் மிஸ்ரா 7 விக்கெட் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர்களின் திறமையை பாராட்டாமல், ஆடுகளத்தின் தன்மை குறித்தே அதிகம் பேசப்படு வதாக சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா வேதனையடைந் துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி: எங்களுக்கு போதிய கவுரவம் அளிக்காமல் ஆடுகளத்தை பற்றியே பேசு கிறார்க…
-
- 0 replies
- 719 views
-
-
2021 தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்த இலங்கை கோரிக்கை By Mohammed Rishad - 14/11/2019 எதிர்வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவை (SAG) இலங்கையில் நடத்துவதற்கான கோரிக்கை விளையாட்டுத்துறை அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் தம்மிக முத்துகல தெரிவித்தார். தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் விசேட பொதுக்கூட்டம் கடந்த வாரம் நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்றது. இதன்போது 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவை நடாத்தும் சந்தர்ப்பத்தை இலங்கைக்கு வழங்குமாறும், அதற்காக மாலைத…
-
- 0 replies
- 522 views
-
-
செய்தித்துளிகள் $ ஸ்பானிஷ் கால்பந்து லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 6-0 என்ற கோல்கள் கணக்கில் இஸ்பான் யால் அணியை வீழ்த்தியது. இதில் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார். ----------------------------------------- $ ஐபிஎல் டி 20ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகராக சேவாக் நியமிக்கப்பட்டுள்ளார். ----------------------------------------- $ அமெரிக்காவின் ஒகியோ நகரில் நடைபெற்று வரும் கிளீவ்லன்ட் கிளாசிக் ஸ்குவாஸ் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் தோல்வியடைந்தனர். ----------------------------------------- $ இந…
-
- 0 replies
- 415 views
-
-
65 வருடங்களுக்குப் பின்னர் தமிழ் யூனியன் சம்பியன் (நெவில் அன்தனி) இலங்கையில் நடத்தப்பட்டு வரும் முதல் தர நான்கு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தமிழ் யூனியன் கிரிக்கெட் அண்ட் அத்லெட்டிக் கிளப் (தமிழர் ஒன்றிய கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுநர் கழகம்) 65 வருடங்களின் பின்னர் சம்பியன் பட்டத்தை சூடியுள்ளது. காலி கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக வார இறுதியில் நடைபெற்ற தனது கடைசி சுப்பர் டென் லீக் போட்டியில் 6 விக்கெட்களால் வெற்றிபெற்றதன் மூலம் ஏ ஐ ஏ ப்ரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மொத்தமாக 82.785 புள்ளிகளுடன் சம்பியன் பட்டத்தை தனதாக்கிக்கொண்டது. …
-
- 0 replies
- 466 views
-
-
இந்திய ஒலிம்பிக் அணியின் நல்லெண்ண தூதராக சச்சின் நியமனம் சச்சின் டெண்டுல்கர். | படம்: பிடிஐ. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ண தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலில் நியமிக்கப்பட்டார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இந்த முடிவை முன்னாள் தடகள வீரர் மில்கா சிங், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் உள்ளிட்ட பலரும் எதிர்த்தனர். இந்நிலையில் மேலும் பலரை இந்திய அணியின் நல்லெண்ண தூதர்களாக நியமிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் திட்டமிட்டது. இந்திய அணியின் நல்லெண்ண…
-
- 0 replies
- 293 views
-
-
பகலிரவு டெஸ்ட் போட்டிக்குச் சம்மதித்தது தென்னாபிரிக்கா தென்னாபிரிக்க அணி, அவுஸ்திரேலிய அணிக்கெதிராக பகலிரவு டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடுவதற்குச் சம்மதித்துள்ளது. நீண்ட இழுபறியின் பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன்படி, நவம்பர் 24ஆம் திகதி ஆரம்பித்து, இந்தப் போட்டி அடிலெய்டில் இடம்பெறவுள்ளது. அவுஸ்திரேலியாவின் இந்தப் பருவகாலத்தில், பகலிரவு டெஸ்ட் போட்டிகள் இரண்டில் விளையாடுவதற்கு, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை முன்மொழிந்திருந்தது. அதிலொன்று பாகிஸ்தானுக்கெதிராகவும் மற்றையது தென்னாபிரிக்காவுக்கெதிராகவும் அமையவிருந்தது. எனினும், போதிய பயிற்சிகளின்றி, பகலிரவு டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடுவதற்கு, தென்னாபிரிக்க வீரர்கள் பலர் தயக்கத்தை …
-
- 0 replies
- 300 views
-
-
ஆஸ்திரேலியாவுக்கு ஒயிட்வாஷ் தோல்வி: வரலாறு படைத்த இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகளில் 28 விக்கெட்டுகள் ஒயிட்வாஷ் தொடரின் நாயகன் ரங்கனா ஹெராத். | படம்: ஏ.பி. 33 ஆண்டுகால இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணியை ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே வீழ்த்தியிருந்த இலங்கை அணி இன்று டெஸ்ட் தொடரை 3-0 என்று கைப்பற்றி ஆஸி.க்கு ஒரு ஒயிட்வாஷ் அதிர்ச்சியை அளித்து புதிய வரலாறு படைத்தது. இதன் மூலம் இப்போதைக்கு இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது, ஆனால் இதனைத் தக்கவைக்க போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறும் டெஸ்ட்டிலும் இந்தியா வெல்வது அவசியம். ஆஸ்திரேலியா முதலிடத்திலிருந்து 3-ம் இடத்துக்கு சரிந்தது. 10 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று இல…
-
- 0 replies
- 308 views
-
-
ரியோ பராலிம்பிக்கில் 9 பேர் பங்கேற்பு "எமக்கு இரண்டு பதக்கங்கள் கிடைக்கும்" இம்முறை நடைபெறும் 15ஆவது பராலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்களை வென்றெடுக்க முடியும் என இலங்கை பராலிம்பிக் சபையின் செயலாளர் கேர்ணல் ராஜா குணசேகர வீரகேசரி வார வெளியீட்டு க்குத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவி க்கையில், ''ரியோ டி ஜெனீரோவில் நடைபெறும் பராலிம்பிக் போட்டியில் இலங்கையிலிருந்து 8 வீரர்கள் மற்றும் ஒரு வீராங்கனை அடங்கலாக 9 பேர் பங்குகொள்கின்றனர். இம்முறை இலங்கைக்கு இரண்டு பதக்கங்களை வெற்றி பெற முடியும் என நம்பிக்கைக் கொள்கிறேன். இலங்கை அணிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அனில் பிரசன்ன ஜயலத் மற்றும் தினேஸ் பிரியன்த ஹேரத் ஆகிய இருவரும் பதக்கங்களை வென்று தரக்கூடியவ…
-
- 0 replies
- 477 views
-
-
ஆசிய கிண்ணம் 2016 ; இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம் அறிவிப்பு ஆசிய கிண்ணத்தில் விளையாடவுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாமில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளின் பெயர் விபரம் இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கான ஆசியக் கிண்ணம் 2016 போட்டிகள் தாய்லாந்தில் இம் மாதம் 24 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்நிலையில் 15 பேர் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குழாமிலுள்ள வீராங்கனைகளின் பெயர் விபரம் வருமாறு, ஹசினி பெரேரா ( அணித் தலைவி), பிரஷாதினி வீரக்கொடி ( உப அணித் தலைவி), சாமரி அத்தப்பத்து, சிறிபாலி வீரக்கொடி, சுகந்திகா க…
-
- 0 replies
- 236 views
-
-
9005 பந்துகளில் 9000 ரன்கள்... கங்குலி சாதனை முறியடிப்பு... அதிர ‘டி’ வில்லியர்ஸ்! ஒருநாள் கிரிக்கெட்டில் 9005 பந்துகளில் 9 ஆயிரம் ரன்கள் அடித்து தென்ஆப்ரிக்க வீரர் டி வில்லியர்ஸ் புதிய சாதனை படைத்துள்ளார். கங்குலியின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்ரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென்ஆப்ரிக்க அணி 50 ஓவர்களில் 271 ரன்கள் அடித்தது. தொடர்ந்து பேட் செய்த நியூசிலாந்து அணி 112 ரன்களில் ஆல்அவுட் ஆனது. தென்ஆப்ரிக்க அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்ரிக்க வீரர் டி வில்லியர்ஸ், 80 பந்துகளை சந்தித்து 85 ரன்களை எடுத்தார…
-
- 0 replies
- 298 views
-
-
ஐரோப்பிய லீக் காலிறுதி முதல் லெக்: ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட், மொனாகோ வெற்றி ஐரோப்பிய லீக் கால்பந்து தொடரின் காலிறுதி முதல் லெக்கில் ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட், மொனாகோ அணிகள் வெற்றி பெற்றன. கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 100-வது கோலை பதிவு செய்தார். ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் தொடரில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட், யுவான்டஸ், டார்ட்மண்ட், மொனாகோ, லெய்செஸ்டர் பெயர்ன் முனிச் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. காலிறுதியில் ஒவ்வொரு அணியும் எதிரணியை தங்களது சொந்த மைதானத்தில் ஒரு முறையும், எதிரணி …
-
- 0 replies
- 494 views
-
-
பேட்டிங்கில் தோனியிடமிருந்து சில ஆச்சரியங்களை எதிர்பார்க்கலாம்: ரவி சாஸ்திரி இலங்கைக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டி வெற்றிக்குப் பிறகு.. - படம்.| பிடிஐ. தோனி தனது ஆரம்பகால அதிரடி பேட்டிங்குக்கு எப்போது திரும்புவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் வேளையில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அதற்கான சாத்தியங்களை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் எதிர்பார்க்கலாம் என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தியா டுடே நேர்காணலில் தோனி பற்றிய பலரது சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதமாக ரவி சாஸ்திரி, “தோனி இவ்வாறு ஆடிவரும் போது நாம் எப்படி மாற்றி யோசிக்க முடியும்?” என்று 2019 உலகக்க…
-
- 0 replies
- 324 views
-
-
அணியைத் தெரிவு செய்யும் வாய்ப்பையும் பெற்ற ஹத்துருசிங்க இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்கவை கிரிக்கெட் சுற்றுப் பயணங்களின் போது தெரிவுக்குழு உறுப்பினராக நியமிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அனுமதி வழங்கியது. மூன்று பிரதான விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட பொதுக்கூட்டம் நேற்று (07) எஸ்.எஸ்.சி மைதான கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டுத்துறை சட்டவிதிகளுக்கு அமைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் யாப்பு விதிகளை திருத்தி அமைத்தல், புதிய செயலாளரைத் தெரிவு செய்தல், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான கட்டமைப்…
-
- 0 replies
- 305 views
-
-
டெஸ்ட் விளையாடும் இளம் வீரர்களுக்காக களத்தில் குதித்த சங்கக்கார டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் கொடுக்கும் முறையை அமுல்படுத்த வேண்டும் எனவும், இதனால் இளம் வீரர்கள் T-20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதை தடுக்க முடியும் எனவும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர கிரிக்கெட் வீரருமான குமார் சங்கக்கார தெரிவித்தார். டெஸ்ட் அரங்கில் அதிக ஓட்டங்களைக் குவித்த உலகின் 5ஆவது வீரராக வலம்வருகின்ற சங்கக்கார, கடந்த வருடம் முதல்தரப் போட்டிகளில் ஓய்வு பெற்றாலும், உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்ற T-20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றார்.…
-
- 0 replies
- 328 views
-
-
100 பந்துகள் கிரிக்கெட்: தோனி, கோலி, ரோகித் சர்மா பங்கேற்பு இந்திய அணி : கோப்புப்படம் இங்கிலாந்தில் நடைபெறும் 100 பந்துகள் கிரிக்கெட் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர்களான எம்.எஸ்.தோனி, விராட்கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பங்கேற்க பிசிசிஐ அனுமதி அளிக்கலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில் 100 பந்துகள் கிரிக்கெட் போட்டி 2020-ம் ஆண்டு நடத்தப்பட உள்ளது. 16 ஓவர்கள் வீசப்பட்டு, கடைசி ஓவரில் மட்டும் கூடுதலாக 4 பந்துகள் வீசப்படுவதே 100 பந்துகள் கிரிக்கெட் போட்டியாகும். பொதுவாக இந்திய கிரிக்கெட் வீ…
-
- 0 replies
- 499 views
-
-
கிரிக்கெட் ‘கிட் பேக்’-ஐ பூட்டி வைக்க வேண்டும்: ஓய்வு தேவை என்ற தொனியில் தோனி கூறியது உலகக்கோப்பைக்கு முன்பு கிடைக்கும் இடைவெளி நாட்களை முழு ஓய்வுக்குப் பயன்படுத்துவதே அணியின் மேம்பாட்டுக்குச் சிறந்தது என்று கேப்டன் தோனி கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான வாழ்வா-சாவா போட்டியில் தோற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறிய இந்திய அணிக்கு இப்போது தேவை உலகக்கோப்பைக்கு முன்பு சிறிது ஓய்வு என்று தோனி தெரிவித்துள்ளார். "இந்தத் தொடர் மிகவும் நீண்ட தொடராகிவிட்டது. இந்த 6 முதல் 10 நாட்களான இடைவெளி அணிக்கு உதவிகரமாக அமையும் என்று கருதுகிறேன். கிரிக்கேட் ‘கிட் பேக்’-ஐ பூட்டி வைக்க வேண்டியதுதான். கண்ணில் படாத இடத்தில் அதனை வைத்து விட வேண்டும். கிரிக்கெட்டிலிருந்து…
-
- 0 replies
- 556 views
-
-
தென்ஆப்ரிக்க அணியின் இந்திய சுற்றுப்பயண விபரம் : அக். 22ஆம் தேதி சென்னையில் மோதல் தென்ஆப்ரிக்க அணி செப்டம்பர் முதல் டிசம்பர் வரை 70 நாட்கள் முதல் டிசம்பர் வரை 70 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இங்கு 3 டி20 போட்டி, 5 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுடன் தென்ஆப்ரிக்க அணி விளையாடவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 29ஆம் தேதி இந்தியா வரும் தென்ஆப்ரிக்க அணி டிசம்பர் 7ஆம் தேதிக்கு பின்னரே இந்தியாவில் இருந்து கிளம்புகிறது. முதலில் நடைபெறும் டி20 போட்டிக்கு முன்னதாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் தென்ஆப்ரிக்க அணி விளையாடுகிறது. சென்னையில் அக்டோபர் 22- ஆம் தேதி ஒருநாள் போட்டியில் இந்தியா தென்ஆப்ரிக்க அணிகள் மோதுகின்றன. …
-
- 0 replies
- 383 views
-
-
இரண்டாவது வெற்றியை பதிவுசெய்த பாகிஸ்தான்! தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 49 ஓட்டத்தினால் வெற்றிபெற்று இரண்டாவது வெற்றியை பதிவுசெய்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டி டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்கா மற்றும் சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களை குவித்தது. 309 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்னாபிரிக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் ம…
-
- 0 replies
- 461 views
-
-
2015 உலகக் கோப்பை மே.இ.தீவுகள் அணியிலிருந்து 8 வீரர்கள் மாற்றம்: கெய்ல் இல்லை இலங்கை தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு கெய்ல் இல்லை, சுனில் நரைன் மீண்டும் தேர்வு. | படம்: ஏ.எஃப்.பி. இலங்கையில் நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கான மே.இ.தீவுகளின் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2015 உலகக் கோப்பைக்குச் சென்ற மே.இ.தீவுகள் அணியில் 8 பேர் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அணியில் இல்லை. ஒரே ஆறுதல் சுனில் நரைன் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார். கிறிஸ் கெய்ல் இரண்டு அணிகளிலும் இல்லை. முதுகு அறுவை சிகிச்சை காரணமாக அவர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. டேரன் சமி, லெண்டில் சிம்மன்ஸ், சுலைமான் பென், ஷெல்டன் காட்ரெல், நிகிடா மில்லர், கிமார் ரோச், டிவைன் ஸ்மித் ஆகி…
-
- 0 replies
- 226 views
-
-
தரவரிசையில் சரிந்த கோலி... காரணம் என்ன? இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், ஐசிசி புதிய டெஸ்ட் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் டாப் 10 பேட்ஸ்மேன்களில் ஒரு இந்திய வீரர்கள் கூட இடம்பெறவில்லை என்பது அதிர்ச்சியான செய்தி. ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்த ஸ்மித், வில்லியம்சன், இரட்டை சதமடித்த வார்னர், ராஸ் டெய்லர் ஆகியோர் தரவரிசையில் பெரும் மாற்றம் நிகழ்த்தியிருக்கின்றனர். பேட்டிங் தரவரிசை: தென் ஆப்ரிக்க வீரர் டி வில்லியர்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் முதலிடம் டி வில்லி…
-
- 0 replies
- 317 views
-
-
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது இருபது-20 போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது - 20 தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற முதலாவது இருபது-20 போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. இதையடுத்து 166 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17. 4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களை பெற்று 64 …
-
- 0 replies
- 518 views
-
-
மான்செஸ்டர் சிட்டி பயிற்சியாளராக பெப் கார்டியாலோ பேயர்ன், பார்சிலோனா அணிகளின் முன்னாள் பயிற்சியாளர் பெப் கார்டியாலா பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டியின் பயிற்சியாளராக பொறுப்பேற்கிறார். இதுவரை அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த மனுவேல் பெல்கிரினியின் ஒப்பந்தம் இந்த ஜுன் மாதம் 30ஆம் தேதியுடன் நிறைவுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து உலகின் பணக்கார கால்பந்து அணிகளுல் ஒன்றான மான்செஸ்டர் சிட்டி, கார்டியாலா கைக்கு வருகிறது. இந்த அணிக்காக பெப் கார்டியாலா 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பார்சிலோன அணிக்காக பெப் 4 ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்த போது அந்த அணி 14 கோப்பைகளை வென்றது. இதில் 3 ஸ்பானீஷ் லீக் மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள…
-
- 0 replies
- 411 views
-