Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஓய்வு பெற்றார் இந்தியாவின் ''தங்க மகன்'' அபினவ் பிந்த்ரா ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளிலும் 100 கோடி மக்களைக் கொண்ட நாடு ஒரு தங்கப்பதக்கமாவது வெல்லாதா..? என்ற எதிர்பார்ப்பு அனைவரது கண்களிலும் இருக்கும். சிறிய நாடுகள் கூட இரட்டை இலக்கத்தில் தங்கம் அள்ளும். அப்படிப்பட்ட நாட்களில் ஒருநாள் தனி நபர் பிரிவில் ஒரு இந்தியர் தங்கப்பதக்கம் வென்றார். அதுவும் ஒலிம்பிக் போட்டியில் என்ற செய்தி அனைவரையுமே மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது என்பதில் சந்தேகமே இல்லை! ஆம், அபினவ் பிந்த்ரா எனும் துபாக்கி சுடும் வீரர்தான் இந்தியாவிற்காகத் தங்கம் வெல்லும் முதல் தனிநபர். ரியோ ஒலிம்பிக்கில் நான்காவது இடம் பிடித்த இவர். தற்போது துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இருந்து ஓய்வை …

  2. சம்பியன்ஸ் லீக்: றியல், சிற்றி, லெய்செஸ்டர் வெற்றி ஐரோப்பிய கால்பந்தாட்ட கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின், நேற்றுப் புதன்கிழமை (14) இடம்பெற்ற போட்டிகளில், ஸ்பானியக் கழகமான றியல் மட்ரிட், இங்கிலாந்து கழகங்களான றியல் மட்ரிட், லெய்செஸ்டர் சிற்றி ஆகியன வெற்றி பெற்றுள்ளதோடு, மற்றொரு இங்கிலாந்துக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோல்வியைத் தளுவியது. தற்போதைய சம்பியன்ஸ் லீக் சம்பியன்களான றியல் மட்ரிட், போர்த்துக்கல் கழகமான ஸ்போர்ட்டிங் லிஸ்பன் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இறுதி நிமிடங்களில் பெறப்பட்ட கோல்கள் காரணமாக றியல் மட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. றியல் மட்ரிட் சார்பாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ, அல்வரோ மொரா…

  3. அஷ்வின் VS கோஹ்லி... தொடர்நாயகன் சர்ச்சை! பவுலிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த தொடரில் அசத்தல் ஆட்டம் ஆடியவர் அஷ்வின். ஆனால் அவருக்கு தொடர்நாயகன் விருது இல்லையா? தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் அஷ்வினுக்கு சொந்த மண்ணில் தொடர் நாயகன் விருது கிடைக்கும் என எதிர்பார்த்து ஆர்வத்துடன் வந்தோம். ஆனால் அது மிஸ்ஸிங் என உச் கொட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் அஷ்வின் ரசிகர்கள். வாட்ஸ் ஆப்பில் இந்த விவாதங்கள் தீயாய் பரவுகின்றன . என்ன நடந்தது? இங்கிலாந்து - இந்தியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி தொடங்கியது. முதல் போட்டி ராஜ்காட்டில் நடந்தது, அதன் பின் விசாகப்பட்டினம், மொகாலி, மும்பை ஆகிய இடங்களில் அடுத்தடுத்த போட்ட…

  4. உள்ளுக்குள் நானும் ஒரு இந்தியர்தான்: மைக்கேல் கிளார்க் படம்.| பிடிஐ. இந்திய உணவு தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், உள்ளுக்குள் தானும் ஒரு இந்தியர்தான் என்று தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் ஃபனாடிக் ஸ்போர்ட்ஸ் மியூசியத்தில் தனது ‘மை ஸ்டோரி’ புத்தக அறிமுக நிகழ்ச்சியில் கிளார்க், கங்குலி இருவரும் கலந்து கொண்டனர், அப்போது இருவரும் இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்பு, பகைமை, சர்ச்சைகள் ஆகியவை பற்றி நகைச்சுவையுடனும் ரிலாக்ஸாகவும் பேசினர். பெங்களூரு டெஸ்ட் போட்டி ஸ்மித் டி.ஆர்.எஸ். சர்ச்சைக்குப் பிறகு இருநாட்டு வாரியங்களும் ஆலோசனை நடத்தி கிரிக்கெட்டில் கவ…

  5. சுழல்பந்து வீச்சை ஆதிக்கம் செலுத்தி வந்த இந்தியா தடுமாறுகிறதா? சிவக்குமார் உலகநாதன்பிபிசி தமிழ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை, 2-1 என இந்தியா வென்ற போதிலும், அனுபவம் இல்லாத ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியாதொடரில்ஆதிக்கம் செலுத்த தவறியதா ? அண்மைக் காலமாக இந்திய வீரர்கள் சுழல் பந்துவீச்சில் தடுமாறுகின்றனரா ? படத்தின் காப்புரிமைAP Image captionபூனே, பெங்களூரு போட்டிகளில் இந்திய வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய நேதன் லயன் மற்றும் ஸ்டீவ் ஓ கீஃப் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று செவ்வாய்கிழமை தரம்சாலாவில் முடிவடைந்த நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கண…

  6. கால்பந்து உலகின் எதிர்கால சூப்பர் ஸ்டார்கள் இவர்கள்தான்! கால்பந்து உலகில் மெஸ்சி, ரொனால்டோவுக்கு நிகராக உருவெடுத்து வரும் டாப் 5 இளம் வீரர்களை பற்றிய விவரம். பிளேபாய் நெய்மர் நெய்மர் டா சில்வா, பிரேசிலைச் சேர்ந்த 25 வயது இளம் முன்கள வீரர். பிரேசில் அணிக்காகவும் ஸ்பெயின் நாட்டின் டாப் மோஸ்ட் கிளப் பார்சிலோனா அணிக்காகவும் விளையாடி வரும் நம்பிக்கை நட்சத்திரம். முன்னாள் சூப்பர் ஸ்டாரான ரொனால்டினோ போன்ற பிரேசிலின் மூத்த வீரர்களுடனும் தற்போதைய சூப்பர் ஸ்டாரான மெஸ்சியுடனும் இணைந்து விளையாடி அனுபவம் கற்றவர். எதிரணி வீரர்களை குழப்பும் மந்திர கால்களுக்குச் சொந்தக்காரர். டிரிபிளிங் மூலம் லாவகமாக பந்தைக் கடத்துவதில் கெட்டிக்காரர். எத…

  7. 3 நாடுகள் கிரிக்கெட்: வங்காளதேசத்திடம் நியூசிலாந்து தோல்வி 3 நாடுகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதின. இதில் வங்காளதேசம் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. நியூசிலாந்து, அயர்லாந்து, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி தொடர் அயர்லாந்தில் நடந்தது. இதன் 6-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதின. முதலில் விளையாடிய நியூசிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய வங்காளதேசம் 48.2 …

  8. பலகோடி ரூபாய் பெறுமான குளிர்பான விளம்பர ஒப்பந்தத்தை மறுத்தார் விராட் கோலி பலகோடி ரூபாய் பெறுமான குளிர்பான விளம்பர ஒப்பந்தத்தை விராட் கோலி வேண்டாம் என்று மறுத்துள்ளார். தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் இந்தத் தகவலை உறுதி செய்த போது, காற்றடைக்கப்பட்ட எந்த ஒரு குளிர் பானத்தையும் தான் அருந்துவதில்லை என்ற காரணத்தினால் இந்த வாய்ப்பை மறுத்ததாகத் தெரிவித்தார். கோலி கடைபிடிக்கும் கொள்கைக்கு இது சற்றும் பிசகாமல் உள்ளது. அதாவது தான் எதை மற்றவர்களுக்குக் கூறுகிறோமோ அதை நாம் முதலில் கடைபிடிக்க வேண்டும் என்ற கொள்கைதான் அது. அவரே ஒருமுறை நிருபர் ஒருவரிடம் கூறும்போது, தன்னால்…

  9. 1000 ரன்கள் அடித்து உலக சாதனை நிகழ்த்திய ஆட்டோ ஓட்டுநர் மகனின் இன்றைய பரிதாப நிலை! ஒரே இன்னிங்ஸில் ஆயிரம் ரன்கள் எடுத்து உலக சாதனை நிகழ்த்திய பள்ளிச் சிறுவன் அடுத்த இரண்டு வருடங்களில் கிரிக்கெட்டையே மூட்டைக் கட்டி வைத்துவிட்டான் என்றால் அது எவ்வளவு பெரிய சோகமான செய்தி. பிரணவ் தனவாடே அந்த நிலைமையில்தான் தற்போது உள்ளார். 2016 ஜனவரியில் மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவரான பிரணவ் தனவாடே (15) பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் 1009 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்தார். இதன்மூலம் அவர் 117 ஆண்டுகால சாதனையையும் முறியடித்தார். அபார சாதனை படைத்த பிரணவின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டு…

  10. டி20 வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம்! ரிஷாப் பாண்ட் சாதனை டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷாப் பாண்ட், சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை தொடரில் 32 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார். Photo Courtesy: BCCI சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான உள்ளூர் டி20 தொடர் நாடுமுழுவதும் நடந்து வருகிறது. இந்த தொடரின் வடக்கு மண்டலம் பிரிவில் டெல்லி - ஹிமாச்சலப்பிரதேச அணிகள் மோதிய போட்டி இன்று நடந்தது. அந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஹிமாச்சலப் பிரதேச அணி 143 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. ரிஷாப் பாண்ட் மற்றும் கவுதம் காம்பீர் ஆகியோர் டெல்லி அணியின்…

  11. முதலிடத்தில் ஜேர்மனி; இரண்டாமிடத்தில் பிரேஸில் பிரேஸிலிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றபோதும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தரவரிசையில், நடப்பு சம்பியன்களான ஜேர்மனி முதலிடத்தில் தொடரவுள்ளது. அடுத்த மாதம் 12ஆம் திகதி வெளியிடப்படவுள்ள புதிய இற்றைப்படுத்தலில் முதலிடத்தில் இருக்கவுள்ளதுடன், இரண்டாமிடத்தில் பிரேஸில் காணப்படவுள்ளது. இரண்டு அணிகளும் தமக்கிடையே முதலிடங்களை பரிமாறிய பின்னர் தற்போது கடந்த எட்டு மாதங்களாக மேற்குறித்தவாறு முதலாமிடத்தில் ஜேர்மனியும் இரண்டாமிடத்தில் பிரேஸிலும் காணப்படுகின்றன. இறுதியாக, இவ்விரண்டு அணிகளைத் தவிர்ந்த வேறொரு அணியாக, கடந்தாண்டு மார்ச்சில் ஆர்ஜென்டீனா முதலிடத்திலிர…

  12. அகதி முகாம் முதல் உலகின் 'நம்பர் ஒன்' பௌலர் ஆனது வரை - ரஷீத் கான் போரால் சிதிலமடைந்த நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த ஒரு 19 வயது பௌலர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முன்னணி பேட்ஸ்மேன்களை கலக்கமடையச் செய்வார் என்று சில காலம் முன்பு வரை யாரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள். படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆனால், அவர்தான் டி20 போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் தற்போது உலகிலேயே முதல் இடத்தில் உள்ளார். அவர்தான், சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி இந்திய ரசிகர்களின் அபிமானத்தையும் சம்பாதித்த ரஷீத் கான். வெறும் 44 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வ…

  13. ‘சேவாக் கதையை முடித்ததுபோல், என்னையும் முடித்துவிடாதீர்கள், தோனியுடன் மோதல் இல்லை’: அஸ்வின் பதற்றம் ரவிச்சந்திர அஸ்வின் : கோப்புப்படம் சேவாக் கதையை முடித்தது போல் என் கதையையும் முடித்துவிடாதீர்கள், எம்எஸ் தோனியுடன் எனக்கு எந்தவிதமான மோதலும் இல்லை என்று ரவிச்சந்திர அஸ்வின் விளக்கமளித்துள்ளார். இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இருந்து சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா கழற்றிவிடப்பட்டு இளம் வீரர்கள் சாஹல், குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால், டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே இனிமே அஸ்வின் வாய்ப்பு பெறுவாரா என்ற கேள்வி எழுந்தது. தமிழ்நாடு ப்ரிமியர் லீக் கிரிக்…

  14. உங்கள் நாட்டில் பிட்ச் பற்றி நாங்கள் கேள்வி கேட்க மாட்டோம்; எங்கள் நாட்டில் நீங்களும் கேட்காதீர்கள்: ரவி சாஸ்திரி படம்.|கெட்டி இமேஜஸ். நடப்பு இந்திய அணி பிட்ச்கள், தட்பவெப்பம் பற்றி புகார்களையும், சாக்குபோக்குகளையும் கூறும் அணியல்ல, அதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று இந்திய அணி தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார். செம்ஸ்போர்டில் 3 நாள் பயிற்சி ஆட்டத்துக்கு முன்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: எனது கொள்கை எளிமையானது. உங்கள் நாட்டில் நாங்கள் பிட்ச் பற்றி கேள்விகள் கேட்கமாட்டோம், எங்கள் நாட்டில் நீங்களும் கேட்காதீர்கள் என்பதே. இந்தத் தொடரில் ஒரு விஷயத…

  15. மெத்யூஸ், மலிங்கவிடம் மீண்டும் தலைமைப் பொறுப்புகள் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தலை­வ­ராக ஏஞ்­சலோ மெத்யூஸ் மீண்டும் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். பாகிஸ்­தானின் இலங்­கைக்­கான கிரிக்கெட் விஜயம் முதல் அடுத்த வருடம் இங்­கி­லாந்­துக்­கான இலங்கை கிரிக்கெட் விஜயம் வரை ஏஞ்­சலோ மெத்யூஸ் அணித் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக இலங்கை கிரிக்கெட் நிறு­வனம் அறி­வித்­தது. இதே­வேளை, இலங்­கையின் சர்­வ­தேச இரு­பது 20 கிரிக் கெட் அணித் தலைவர் பதவி மீண்டும் லசித் மாலிங்­க­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் பங்­க­ளா­தேஷில் நடை ­பெற்ற உலக இருபது 20 கிரிக்கெட் போட்­டி­களில் இலங்­கையை சம்­பி­ய­னாக்­கிய …

  16. இந்தியாவுக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றியீட்டியுள்ளது January 31, 2019 இந்தியாவுக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கின்றது. இதில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றிய நிலையில், 4-வது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. நூணயச்சுழறிசியில் வென்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பினை தெரிவு செய்த லையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 30.5 ஓவர்களில் 92 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்…

  17. இங்கிலாந்து வெற்றி : நியூசி., ஏமாற்றம் மான்செஸ்டர்: நியூசிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி-20’ போட்டியில் இங்கிலாந்து அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து சென்ற நியூசிலாந்து அணி ஒரே ஒரு ‘டுவென்டி-20’ போட்டியில் பங்கேற்றது. மான்செஸ்டரில் நடந்த இப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். ஜோ ரூட் அரைசதம்: இங்கிலாந்து அணிக்கு ராய் (23), ஹேல்ஸ் (27) சுமாரான துவக்கம் அளித்தனர். பின் வந்த ஜோ ரூட் அதிரடியாக ரன்கள் சேர்த்தார். பேரிஸ்டோவ் (1), கேப்டன் மார்கன் (4) ஆகியோர் நிலைக்கவில்லை. ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் அதிரடியாக ரன்கள் சேர்த்த ரூட், ‘டுவென்டி-20’ அரங்கில் தனது இரண்டாவது அரைசதத…

  18. இலங்கைக்கெதிரான 2வது இருபதுக்கு 20 – தென்னாபிரிக்கா வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது March 23, 2019 இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியிலும் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி 2-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் தொடரிலும் 5 ஒருநாள் தொடரிலும் 3 இருபதுக்கு 20 தொடரிலும் பங்கேற்று விளையாடிய நிலையில் டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என வெற்றி பெற்றிருந்ததுடன் ஒருநாள் தொடரை 5-0 என தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையில் முதலாவது போட்டியில் சுப்பர் ஓவர் மூலம் தென்னாபரிக்க அணி 14 ஓட்டங்களால் வெற்…

  19. 41 வயது மிஸ்பா உல் ஹக் ஓய்வு பெற இந்தியாதான் வழி காட்டனும்...! தற்போது 41 வயதாகியும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக், ஒரு வழியா ஓய்வு முடிவுக்கு வந்துட்டாரு. ஆனா இந்தியாவுக்கு எதிரா டெஸ்ட் போட்டி நடந்தா அதுல விளையாடிட்டுதுதான் ஓய்வு பெறுவாராம். பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் மிஸ்பா உல்-ஹக், ஏற்கனவே சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.இந்நிலையில் நேற்று அளித்த ஒரு பேட்டியில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். '' நான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பாக சில டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆசைப்படுகிறேன்.இன்னும…

  20. இந்திய கால்பந்து வீரர்கள் செய்ய முடியாததை நிகழ்த்திக் காட்டிய வீராங்கனை! இங்கிலீஸ் பிரீமியர் லீக் அணியான வெஸ்ட் ஹாம் யுனைடெட்டின் மகளிர் அணியில் இடம் பிடித்து இந்திய அணியின் கோல்கீப்பர் அதிதி சவுகான் புதிய சாதனை படைத்துள்ளார். இங்கிலீஸ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இதுவரை ஒரு இந்தியர் கூட விளையாடியது இல்லை. இந்த தொடரில் விளையாடி வரும் வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணி புகழ்பெற்ற கால்பந்து அணியாகும். இதன் மகளிர் அணியில் விளையாட இந்திய அணியின் கோல்கீப்பர் அதிதி சவுகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியை சேர்ந்த அதிதி கடந்த 2013ஆம் ஆண்டு தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற உதவினார். இன்ஷியான் ஆசியப் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றிருந…

  21. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: நியூஸிலாந்து அணியில் ஜேம்ஸ் நீஷம் ஜேம்ஸ் நீஷம் ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய நியூஸிலாந்து அணியோடு ஒப்பிடுகையில், இப்போது ஒரேயொரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. நீல் வாக்னருக்குப் பதிலாக ஜேம்ஸ் நீஷம் சேர்க்கப்பட்டுள்ளார். முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய ஆல்ரவுண்டரான நீஷம், தனது முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் சதமடித்தது குறிப்பிடத்தக்கது. நீஷமின் வருகை பேட்டிங்கிற்கு மட்டுமின்றி வேகப்பந்து வீ…

  22. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கவுரவம் அளிக்கப்படவில்லை: அமித் மிஸ்ரா வேதனை இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா | கோப்புப் படம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டும் 47 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். மொத்தம் 50 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட நிலையில் அஸ்வின் 24, ஜடேஜா 16, அமித் மிஸ்ரா 7 விக்கெட் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர்களின் திறமையை பாராட்டாமல், ஆடுகளத்தின் தன்மை குறித்தே அதிகம் பேசப்படு வதாக சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா வேதனையடைந் துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி: எங்களுக்கு போதிய கவுரவம் அளிக்காமல் ஆடுகளத்தை பற்றியே பேசு கிறார்க…

  23. 2021 தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்த இலங்கை கோரிக்கை By Mohammed Rishad - 14/11/2019 எதிர்வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவை (SAG) இலங்கையில் நடத்துவதற்கான கோரிக்கை விளையாட்டுத்துறை அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் தம்மிக முத்துகல தெரிவித்தார். தெற்காசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் விசேட பொதுக்கூட்டம் கடந்த வாரம் நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்றது. இதன்போது 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவை நடாத்தும் சந்தர்ப்பத்தை இலங்கைக்கு வழங்குமாறும், அதற்காக மாலைத…

  24. செய்தித்துளிகள் $ ஸ்பானிஷ் கால்பந்து லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 6-0 என்ற கோல்கள் கணக்கில் இஸ்பான் யால் அணியை வீழ்த்தியது. இதில் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார். ----------------------------------------- $ ஐபிஎல் டி 20ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகராக சேவாக் நியமிக்கப்பட்டுள்ளார். ----------------------------------------- $ அமெரிக்காவின் ஒகியோ நகரில் நடைபெற்று வரும் கிளீவ்லன்ட் கிளாசிக் ஸ்குவாஸ் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் தோல்வியடைந்தனர். ----------------------------------------- $ இந…

  25. 65 வருடங்களுக்குப் பின்னர் தமிழ் யூனியன் சம்பியன் (நெவில் அன்­தனி) இலங்­கையில் நடத்­தப்­பட்டு வரும் முதல் தர நான்கு நாள் கிரிக்கெட் போட்­டி­களில் தமிழ் யூனியன் கிரிக்கெட் அண்ட் அத்­லெட்டிக் கிளப் (தமிழர் ஒன்­றிய கிரிக்கெட் மற்றும் மெய்­வல்­லுநர் கழகம்) 65 வரு­டங்­களின் பின்னர் சம்­பியன் பட்­டத்தை சூடி­யுள்­ளது. காலி கிரிக்கெட் கழ­கத்­திற்கு எதி­ராக வார இறு­தியில் நடை­பெற்ற தனது கடைசி சுப்பர் டென் லீக் போட்­டியில் 6 விக்­கெட்­களால் வெற்­றி­பெற்­றதன் மூலம் ஏ ஐ ஏ ப்ரீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்­டியில் மொத்­த­மாக 82.785 புள்­ளி­க­ளுடன் சம்­பியன் பட்­டத்தை தன­தாக்­கிக்­கொண்­டது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.