Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இந்தக் காரியத்தை செய்த ஜடேஜாவை முகத்தில் குத்த வேண்டும் போல் தோன்றியது: ரோகித் சர்மா வெளியிட்ட ரகசியம் ரவிந்திர ஜடேஜா, ரோகித் சர்மா : கோப்புப்படம் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த போது, ஜடேஜா செய்த காரியத்தைப் பார்த்து அவரை அடிக்க வேண்டும், முகத்தில் குத்த வேண்டும் போல் தோன்றியது என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இந்திய பேட்ஸ்மேன்களில் மிகவும் மென்மையானவர், களத்தில் அமைதியானவர், வெற்றியோ, தோல்வியோ அதையும் முகத்தில் காட்டிக்கொள்ளாதவர் என்ற பெயர் எடுத்தவர் ரோகித் சர்மா. அவரின் பேட்டிங்கில் ஆக்ரோஷமும், ஆவேசமும் இருக்…

  2. குறைந்தது 5 ஆண்டுகளுக்கு இந்திய அணி ஆதிக்கம் செலுத்துவதை விரும்புகிறேன்: விராட் கோலி உலகின் தலைசிறந்த அணியாக திகழ இந்திய கிரிக்கெட் அணியிடத்தில் திறமை இருக்கிறது என்று இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் மன்த்லிக்காக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "குறைந்தது 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் உலகில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று நான் வலுவாக விரும்புகிறேன். நம்மிடம் திறமை நிறைய இருக்கிறது. இந்தத் திறமையை ஒருங்கிணைத்து எப்படி சிறப்பாக மேலாண்மை செய்வது என்பதைப் பொறுத்து இந்திய அணி ஆதிக்கம் செய்வது அமையும். நான் அணி வீரர்களிடத்தில் வலுவான பிணைப்பையும் நட்புறுதியையும் ஏற்படுத்த விரும்புகிறேன். ஆண்டில் 250 முதல் …

  3. ஆப்கானிஸ்தான்- ஹாங்காங் மீது சந்தேகம்: மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டனவா கத்துக்குட்டிகள்? அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான 2வது தகுதி சுற்றில் விளையாட, ஹாங்காங் அணி தகுதி பெற்றுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கடைசி ஓவரில் 16 ரன்கள் அடித்து ஹாங்காங் அணி வெற்றி பெற்றதுதான் மேட்ச் பிக்சிங்காக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, 161 ரன்கள் அடித்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஹாங்காங் அணிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. 5 விக்கெட்டுகள் கையில் இருந்த நிலையில், ஹாங்காங் வீரர் பாபர் ஹயாத் 4 பந்துகளில் 15 ரன்களை அடித்து விட்டார்…

  4. சுனில் கவாஸ்கரை ஒப்பிட்டு என்னை இம்ரான் கடிந்து கொண்டார்: ரமீஸ் ராஜாவின் அனுபவப் பகிர்வு டிசம்பர் 13, 1981. பெங்களூரில் இங்கிலாந்துக்கு எதிராக 172 ரன்களை குவித்த சுனில் கவாஸ்கர் இயன் போத்தம் பந்தை விளாசும் காட்சி. | கோப்புப் படம். இம்ரான் கான் எப்போதும் சுனில் கவாஸ்கர் ஆட்டத்தை பெரிதும் மதிப்பவர் என்று கூறிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா, சுவையான அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார். ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போ இணையதளத்தில் இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: 1981 என்று நினைக்கிறேன், விவ் ரிச்சர்ட்ஸ் தனது உச்சகட்ட பேட்டிங் நிலையில் இருந்த காலம். உலகில் அனைத்து பந்துவீச்சாளர்களையும் தனது பெரிய சிக்சர்களால் மைதானம் நெடுக சிதற அடித்துக் கொண்டிருந்தார் வி…

  5. உலக கால்பந்து தரவரிசை: அர்ஜென்டினா முதலிடம்! உலக கால்பந்து தரவரிசையில் அர்ஜென்டினா அணி தொடர்ந்து முதலிடம் இரு‌ந்து வ‌ரு‌கிறது. உலக அணிகளின் கால்பந்து தர வரிசைப் பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி அர்ஜென்டினா அணி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 2வது இட‌‌த்‌தி‌ல் பிரேசிலு‌ம், இத்தாலி அணி 3-வது இட‌த்‌திலு‌ம், ஸ்பெயின் அணி 4-வது இடமும், ஜெர்மனி அணி‌க்கு 5வது இடமு‌ம், செக் குடியரசு அணி 6-வது இட‌த்‌திலு‌ம், பிரான்ஸ் அணி 7-வது இடமும், போர்ச்சுக்கல் அணி 8-வது இடமும், ஆலந்து அணி 9-வது இடமும், குரோஷியா அணி 10-வது இட‌த்‌திலு‌ம் உ‌‌ள்ளன. கிரீஸ், இங்கிலாந்து, ருமேனியா, ஸ்காட்லாந்து, மெக்சொகோ, துருக்கி, கொலம்பியா, பல்கேரியா ஆகிய அணிக…

  6. இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இலங்கையிலும் இடம்பெறலாம் ! இந்­திய – பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான கிரிக்கெட் போட்டித் தொடரை ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸிலோ அல்­லது இலங்­கை­யிலோ நடத்த இரு நாட்டு கிரிக்கெட் சபையும் ஆலோ­சித்து வரு­வ­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இந்­திய – பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான கிரிக்கெட் போட்டி நடக்­குமா, நடக்­காதா என்று பல கேள்­விகள் எழுந்து வரும் நிலையில், இரு­நா­டு­க­ளுக்கும் இடையே கிரிக்கெட் போட்­டியை நடத்­து­வது குறித்து இரு­நாட…

  7. இங்கிலாந்தை வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 4 ஆவது ஒருநாள் போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற தென்ஆப்பிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன் படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 262 ஓட்டங்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் சதம் (109) விளாசினார்.தென்ஆப்பிரிக்கா சார்பில், ரபாடா 4 விக்கெட்டுகளையும், இம்ரான் தாகீர் 3 விக்கெட்டையும் கைப்பற்றினர். வெ…

  8. பாகிஸ்தான் வீரர் இடைநீக்கம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மலை, கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்பதில் இருந்து உடனடியாக இடைநீக்கம் செய்வதாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அதிரடியாக அறிவித்தது. அவரை பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) போட்டியின் போது ஸ்பாட்பிக்சிங் என்ற சூதாட்டத்தில் ஈடுபட வைக்க சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் அணுகி இருக்கிறார். ஆனால் இந்த விஷயத்தை கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவின் கவனத்துக்கு கொண்டு செல்ல உமர் அக்மல் தவறி விட்டார். இதனாலேயே அவர் மீது இத்தகைய நடவடிக்கை பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இடைநீக்கம் காரணமாக நேற்று தொடங்கிய பி.எஸ்.எல். போட்டியில் இருந்து அவர் ஒதுங…

  9. பாகிஸ்தான் அணியின் ஒற்றுமையைக் குலைத்தவர் வக்கார் யூனிஸ்: அப்துல் ரசாக் கடும் சாடல் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக். | படம்: ஏ.எஃப்.பி. அதிரடி ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக், பாகிஸ்தான் அணியின் தற்போதைய மோசமான நிலைக்கு பயிற்சியாளர் வக்கார் யூனிஸே காரணம் என்று கடுமையாக சாடியுள்ளார். வக்கார் யூனிஸ் பிற வீரர்கள், நிர்வாகிகளைக் குறைகூறுவதை விடுத்து தன் பக்கம் உள்ள கோளாறுகளை சரி செய்து கொள்ள வேண்டும் என்று அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். “இதில் ஒன்றும் ரகசியம் இல்லை, நானே பார்த்திருக்கிறேன், மூத்த வீரர்களுக்கு வக்கார் மதிப்பளிக்க மாட்டார், வீரர்கள் அனைவரையும் சமமாக நடத்த மாட்டார். அவர்கள் சிறப்பாக ஆட அவர்களுக்கு உத்தரவாதங்களை வழங…

  10. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெகுஜன கூட்டங்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் தடை விதிப்பை நீடித்ததைத் தொடர்ந்து அங்கு இடம்பெறவிருந்த 'Tour de France' சைக்கிள் ஓட்டப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரேன் திங்களன்று பொது நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடுகளானது 2020 ஜூலை மாதம் நடுப்பகுதி வரை தொடரும் என்று அறிவித்தார். குறித்த சைக்கிள் ஓட்டப் போட்டியானது ஜூன் 27 ஆரம்பமாகி ஜூலை 19 ஆம் திகதி வரை இடம்பெறவிருந்தது. டூர் டி பிரான்ஸ் என்பது ஆண்டுதோறும் பிரான்சில் நடைபெறும் வருடாந்திர ஆண்களின் பல நிலை சைக்கிள் பந்தயமாகும். தொழில்முறை சைக்கிள் ஓட்டுநர்களுக்கான ஒரு பிரெஞ்சு சைக்கிள் பந்தயம் மூன்று வாரங்கள் நீடிக்கும் மற்றும் சுமார…

    • 0 replies
    • 433 views
  11. பாகிஸ்தானின் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு பிஸ்மாஹ் மாறூவ், சானா மிர் தலைவிகளாக நியமனம் மகளிருக்கான மட்டுப்படுத்தப்பட்ட கிரிக் கெட் போட்டிகளுக்கான அணித் தலைமை களைப் பிரித்து வழங்குவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் பாகிஸ்தான் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணித் தலைவியாக தொடர்ந்தும் சானா மிர் செயற்படவுள்ளார். மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளுக்கு மிர்ருக்குப் பதிலாக புதிய அணித் தலைவியாக பிஸ்மாஹ் மாறூவ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் இவ் வருடம் நடைபெற்ற மகளிர் உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் நிறைவில் இருபது 2…

  12. ஐக்கிய அரபு இராச்சியத்தில் பகல் - இரவு டெஸ்ட்: பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் இணக்கம் டெஸ்ட் கிரிக்கெட் விளை­யாடும் நாடு­க­ளுக்கு மத்­தியில் பகல் –இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்­டி­களை நடத்­து­வ­தற்­கான முஸ்­தீ­புகள் இடம்­பெற்று வரும் நிலையில் பாகிஸ்­தானும் மேற்­கிந்­தியத் தீவு­களும் பகல் – இரவு டெஸ்ட் போட்­டியில் விளை­யாட கொள்கை அளவில் இணங்­கி­யுள்­ளன. நடு­நி­லை­யான ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் பகல் - இரவு டெஸ்ட் போட்­டியை இளஞ்­சி­வப்பு பந்­தைக் ­கொண்டு நடத்த இரண்டு நாடு­களும் முன்­வந்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. இந்த யோச­னைக்கு மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்ெகட் சபைஆ…

  13. நானா, ரவி சாஸ்திரியா என்பது முக்கியமல்ல: பயிற்சியாளர் அனில் கும்ப்ளே அனில் கும்ப்ளே. | கோப்புப் படம். கங்குலி தனக்கு மரியாதை அளிக்கவில்லை என்று ரவி சாஸ்திரி தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்திய நிலையில் அணி என்றால் அதில் வீரர்கள்தான் முக்கியம் என்று பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்தார். பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினராக சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி நேர்காணலின் போது இல்லை, இதனையடுத்து ரவி சாஸ்திரி கடும் ஏமாற்றமடைந்தார். இந்நிலையில் அனில் கும்ப்ளே கூறியதாவது: ரவி சாஸ்திரியை முதலில் அழைத்து தலைமைப் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை பகிர்ந்து கொண்டேன். அவர் இந்திய அணியுடன் அபாரமாக பணியாற்றியுள்ளார். ஆகவே நான் அல்…

  14. உலக பேட்மிண்டன் போட்டியில் மேலும் பதக்கம் வெல்வேன் - பி.வி.சிந்து உறுதி ஐதராபாத்: சர்வதேச ஒலிம்பிக் தினத்தையொட்டி உலகம் முழுவதும் உள்ள முன்னணி வீரர், வீராங்கனைகள் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் உலக சாம்பியனும், 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான இந்திய பேட்மிண்டன் வீராங்கனை 24 வயது பி.வி.சிந்து கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:- சர்வதேச பேட்மிண்டன் போட்டி மீண்டும் தொடங்கும் போது போட்டி அட்டவணைக்கு தகுந்தபடி புத்திசாலித்தனமாக திட்டமிட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான மனநிலையை கொண்டு இருப்பார்கள். ஆனாலும் இதுபோன்ற சோதனையான காலக்கட்டத்தில் நேர்மறையான எண…

  15. இந்திய கிரிக்கெட் அணி அடுத்து விளையாடும் டெஸ்ட்-ஒருநாள் தொடர்கள்! இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது மேற்கிந்தியத்தீவுகள் அணி. முதல் போட்டியில் அந்த அணி 1 ரன் வித்தியாசத்தில் வென்றிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆவது போட்டி மழையால் கைவிடப்பட்டதால், மேற்கிந்தியத் தீவுகள் தொடரை வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வருடம் இந்தியாவில் நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய இரு அணிகள் சுற்றுப்பயணம் செய்யவுள்ளன. நியூசிலாந்து தொடர் இந்தியாவுடனான 3 டெஸ்ட் ஆட்டங்கள், 5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்…

  16. அகில இலங்கை பாடசாலைகள் மல்யுத்தப் போட்டி கிழக்கு மாகாணத்துக்கு ஒரு தங்கம், 2 வெள்ளிகள் (நெவில் அன்­தனி) கல்வி அமைச்சின் சுகா­தாரம், உடற்­கல்வி மற்றும் விளை­யாட்­டுத்­துறைப் பிரிவு நடத்தும் அகில இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்டு விழா­வுக்­கான மல்­யுத்தப் போட்­டியில் கிழக்கு மாகா­ணத்­துக்கு ஒரு தங்கப் பதக்­கமும் இரண்டு வெள்ளிப் பதக்­கங்­களும் கிடைத்­துள்­ளன. மல்­யுத்தப் போட்­டிகள் டொரிங்டன் உள்­ளக அரங்கில் கடந்த 2, 3, 4 ஆம் திக­தி ­களில் நடை­பெற்­றன. இறுதிப் போட்­டி களில் நேற்­றைய தினம் நடை­பெற்றன. மல்­யுத்தப் போட்­டி­களில் கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த எஸ். ரூபி­க­ர­னுக்கு தங்கப் பதக்­கமும் என். பிரகாஷ…

  17. சம்பியன் வாய்ப்பைத் தக்கவைத்தார் ஹமில்டன் மெக்ஸிக்கன் கிரான்ட் பிறிக்ஸை வென்ற மெர்சிடிஸ் அணியின் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், தனது நான்காவது போர்மியுலா வண் சம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லுவதற்கான வாய்ப்புகளைத் தக்கவைத்துள்ளார், பந்தயத்தின் ஆரம்பத்தில், ஹமில்டனின் காரின் முன் சக்கரம் இறுகியதால், முதலாவது வளைவில் வெளியே சென்று, அதிர்ச்சியொன்றை எதிர்நோக்கியிருந்தாலும், அதன்பின்னர், எந்தவொரு பிரச்சினைகளையும் எதிர்நோக்காது, தனது வாழ்நாளில், 51ஆவது வெற்றியைப் பெற்றார். பிரேஸில், அபு தாபியில் இடம்பெறவுள்ள பந்தங்களில் மொத்தமாக 50 புள்ளிகளைப் பெறமுடியும் என்ற நிலையில், தனது சக மெர்சிடிஸ் அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான நிக்கோ றொஸ்பேர்க்கை விட 19…

  18. அன்று அழுதனர்... இன்று சிரிக்கின்றனர்... அர்ஜென்டினாவை இப்படித்தான் வென்றது பிரேசில்! கிரிக்கெட்டுக்கு இந்தியா - பாகிஸ்தான் எனில், கால்பந்துக்கு அர்ஜென்டினா - பிரேசில். இவர்கள் மோதல் எப்போதும் சுவாரஸ்யம். பக்கத்து பக்கத்து நாடுகள். பரம விரோதம். இன்று நேற்றல்ல, பீலே - மாரடோனா காலத்தில் இருந்தே. 2014 ல் பிரேசிலில் நடந்த உலக கோப்பை ஃபைனலில், அர்ஜென்டினா - ஜெர்மனி மோதின. அர்ஜென்டினாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே, ஜெர்மனியின் ஜெர்ஸி அணிந்து, மரக்கானா ஸ்டேடியத்தை நிறைத்தனர் பிரேசில் ரசிகர்கள். அப்படி இருக்க பிரேசில் - அர்ஜென்டினா மோதுகிறது, அதுவும் தங்கள் சொந்த மண்ணில் எனும்போது விடுவார்களா பிரேசில் ரசிகர்கள்? எப்போது பிரேசில் - அர…

  19. இந்­திய மகளிர் அணி­யு­ட­னான இரு­பது20 தொடரில் மேற்­கிந்­திய மகளிர் அணி வெற்றி 2016-11-21 11:28:56 இந்­திய மகளிர் அணி­யு­ட­னான சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடரின் இரண்­டா­வது போட்­டியில் மேற்­கிந்­திய மகளிர் அணி 31 ஓட்­டங்­களால் வெற்­றி­யீட்­டி­யது. இந்­தி­யாவின் ஆந்­திர மாநி­லத்­தி­லுள்ள விஜ­ய­வாடா நகரில் நேற்று இப்­போட்டி நடை­பெற்­றது. நாணயச் சுழற்­சியில் இந்­திய மகளிர் அணி வெற்றி பெற்­றது. அதை­ய­டுத்து மேற்­கிந்­திய மகளிர் அணி முதலில் துடுப்­பெ­டுத்­தா­டு­மாறு பணிக்­கப்­பட்­டது. அவ்­வ­ணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீராங்­க­னை­க­ளான ஹெய்லி மெத்திவ்ஸ் 27 ஓட்­டங்­க­ளையும் அணித்­…

  20. இலங்கையில் ஐ.சி.சி சம்பியன் கிண்ணம் : ரசிகர்களுக்கு புகைப்படம் எடுக்க சந்தர்ப்பம் இவ்வாண்டு இடம்பெறவுள்ள ஐ.சி.சி . சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் உத்தியோகபூர்வ கிண்ணம் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. ஐ.சி.சி. சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இங்கிலாந்தில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் குறித்த கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் 8 நாடுகளுக்கும் உத்தியோகபூர்வ கிண்ணம் எடுத்துச்செல்லப்படுகின்றது. அந்தவகையில் நேற்று உத்தியோகபூர்வ கிண்ணம் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சம்பியன் கிண்ணத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் …

  21. நெய்மர் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியில் இணைவார்: டேனி ஆல்வ்ஸ் நம்பிக்கை நெய்மர் பி.எஸ்.ஜி. அணியில் இணைவார் என்று முன்னாள் பார்சிலோனா வீரரும், தற்போதைய பிஎஸ்ஜி வீரரும் ஆன டேனி ஆல்வ்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பார்சிலோனா அணிக்காக விளையாடி வருபவர் பிரேசில் நாட்டின் தலைசிறந்த வீரரான நெய்மர். இவர் பிரான்ஸ் கால்பந்து கிளப் அணியான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்கு செல்ல இருக்கிறார் என்ற தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. பார்சிலோனா அணி தற்போது ப்ரீசீசனில் விளையாடுவதற்காக சீனா சென்றுள்ளது. பார்சிலோனா அணியுடன் நெய்மர் செல்லவில்லை. இது பிஎஸ்ஜி அணியில் இணைவார் என்ற செய்திக்…

  22. கேப்டன் பதவியில் இருந்து டி வில்லியர்ஸ் விலகல்! தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டி வில்லியர்ஸ். கடந்த ஆறு வருடங்களாக தென் ஆப்பிரிக்க ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாகச் செயல்பட்டு வந்தவர், திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகியிருக்கிறார். தற்போது ஓய்வில் இருக்கும் அவர், வருகிற அக்டோபர் மாதம் முதல் மீண்டும் அணிக்கு திரும்புவதாகவும், கேப்டனாக யார் நியமிக்கப்பட்டாலும் அவருடைய தலைமையின் கீழ் சிறப்பாக விளையாடுவேன் என்பதை தனது ட்விட்டர் கணக்கில் வீடியோவாகப் பதிவு செய்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சாம்பினஸ் டிராபி தொடரில் டி வில்லியர்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி மோசமான பின்னடைவைச் சந்தித்தது. தவிர, டி வில்…

  23. ஆசிரியர் தினத்தில் சனத் ஜயசூரியவுக்கு நன்றி தெரிவித்த கோஹ்லி Image courtesy - Kholi's twitter உலக ஆசிரியர்கள் தினம் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. எனினும் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கிரிக்கெட் உலகின் நட்சத்திர வீரர்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி, கௌதம் கம்பீர், விரேந்திர சேவாக் உள்ளிட்ட பலர் தமது ஆசான்களுக்கு பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சியாளர்களுடன் முன்னாள் ஜாம்பவான்கள்தான் ஆசிரியர்கள். அவர்களது ஆட்டத்…

  24. பிரமோதய விக்கிரமசிங்கவின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்குமாறு அணி வீரர்கள் கடிதம் இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரமோதய விக்ரமசிங்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு தினேஷ் சந்திமால், உபுல் தரங்க உட்பட இலங்கையின் நாற்பது முன்னணி வீரர்கள் கையொப்பமிட்டு இலங்கை கிரிக்கெட் சபையிடம் கடிதமொன்றைக் கையளித்துள்ளனர். இலங்கையில் அண்மையில் நடந்த இந்திய அணிக்கு எதிரான அனைத்துப் போட்டிகளிலும் இலங்கை படுதோல்வியடைந்தது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி சேவை ஒன்றின் நேர்காணலில், மேற்படி போட்டிகளின்போது சந்தேகத்துக்கு இடமான சில அசாதாரண நிகழ்வுகளைக் காண முடிந்தது என்று தெரிவித்திருந்தார். போட்டிக்கு முன்ன…

  25. உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஸிம்பாப்வேயில்! 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகளை ஸிம்பாப்வேயில் நடத்துவது என சர்வதேச கிரிக்கெட் சபை முடிவுசெய்துள்ளது. மேலும், இந்தப் போட்டிகள், எதிர்வரும் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் எனவும் அது அறிவித்துள்ளது. இத்தகுதிகாண் போட்டிகளை பங்களாதேஷில் நடத்துவது என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட பங்களாதேஷ் நேரடியாகத் தகுதிபெற்றதால், அதற்கு அடுத்தபடியாக இருந்த ஸிம்பாப்வேயில் தகுதிகாண் போட்டிகளை நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டது. இதையடுத்து, அங்குள்ள மைதானங்கள் குறித்து ஆய்வு நடத்த சர்வதேச கிரிக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.