விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
கேப்டன் தோனி உள்ளிட்ட வீரர்களுக்கு பாதி மொட்டையடித்து வங்கதேசத்தில் விளம்பரம்! டாக்கா : இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அரை மொட்டையடித்து விட்டது போல, வங்கதேச பத்திரிகை சார்பில் விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. முதன் முறையாக வங்கதேசம் அணி இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்நிலையில் இந்திய அணி சந்தித்த இந்த தோல்வியை குறிக்கும் வகையில் ‘புரோதோம் ஆலோ’ என்ற வங்கதேசத்தை சேர்ந்த வாரப்பத்திரிகை, இந்திய வீரர்களை அவமானப்படுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த பத்திரிகை வைத்துள்ள பேனரில், இந்த…
-
- 0 replies
- 346 views
-
-
தென்னாபிரிக்காவை வீழ்த்தி பங்களாதேஷ் அசத்தல் வெற்றி! நடைபெற்றுவரும் உலகக் கிண்ணத் தொடரின் 5ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணி தென்னாபிரிக்காவை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது. அந்தவகையில் பங்களாதேஷ் அணி 21 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவுசெய்தது. லண்டன், ஹெனிங்ரன் ஒவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வுசெய்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, அனைத்து வீரர்களின் பங்களிப்புடன் சவாலான ஓட்டத்தை குவித்துள்ளது. அந்தவகையில், அவ்வணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 330 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பாக, ரஹிம் அதிர…
-
- 0 replies
- 604 views
-
-
ஜன.27ல் யு-19 உலககோப்பை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் வரும் ஜனவரி மாதம் 27ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை வங்கதேசத்தில் நடைபெறுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. மொத்தம் 16 அணிகள் கலந்துகொள்கிறது. இவை நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஸ்காட்லாந்து, நமீபியா அணிகளும், பி பிரிவில் பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், கனடா ஆகிய அணிகளும் சி பிரிவில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே, பிஜி அணிகளும் டி பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. 19 நாட்கள் நடைபெறும் தொடரின் முதல் ஆட்டத்தில் 27ம் தேதி நடப்பு சாம்பியன் தென்…
-
- 0 replies
- 605 views
-
-
நியூசிலாந்து குழாத்தில் இணைக்கப்பட்ட வில் சமர்வில் By A.Pradhap - அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான குழாத்தில் ட்ரெண்ட் போல்ட்டுக்கு பதிலாக சுழல் பந்துவீச்சாளர் வில் சமர்வில் நியூசிலாந்து குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். சுற்றுலா நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான குழாத்தில் இரண்டு அணிகளும் சுழல் பந்துவீச்சாளர்களை உள்ளடக்குவதற்கு எதிர்பார்த்து வருகின்றன. இதில், அவுஸ்திரேலிய அணியில் மிச்சல் ஸ்வெப்சன் …
-
- 0 replies
- 383 views
-
-
20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து சிம்பாப்வே அணியை ஐ.சி.சி. நீக்கியது [07 - July - 2008] சிம்பாப்வே பிரச்சினை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. இங்கிலாந்தில் நடக்கும் 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து விலக சிம்பாப்வே ஒப்புக்கொண்டது. அதேசமயம், ஐ.சி.சி. உறுப்பினர் அந்தஸ்தில் தொடர்ந்துமிருக்கும். ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சிம்பாப்வேயில் நிலவும் அரசியல் பிரச்சினை காரணமாக, அந்த நாட்டுடன் கிரிக்கெட் உறவை இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் துண்டித்தன. சமீபத்தில் சர்ச்சைக்குரிய மறுதேர்தலில் ரொபர்ட் முகாபே மீண்டும் சிம்பாப்வே ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். முகாபே அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் இங்கிலாந்து அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் 20…
-
- 0 replies
- 731 views
-
-
நான் எப்போதுமே விரைவுகதியில் பீல்ட் செய்பவனல்ல: விராட் கோலி விராட் கோலி. | படம்: பிடிஐ. தான் எப்போதும் களத்தடுப்பில் விரைவு கதியில் இயங்கும் பீல்டர் அல்ல என்று கூறிய விராட் கோலி 2012 ஐபிஎல் தொடருக்குப் பிறகு உடற்தகுதி குறித்த தனது பார்வையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது என்று கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற விளம்பராதாரர் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி கூறியதாவது: 2012-ம் ஆண்டு ஐபிஎல் வரை நான் உடற்தகுதி குறித்து கவனம் கொள்ளாமலேயே இருந்தேன். உடற்தகுதியின் சில நுட்பமான விவரங்களுக்குள் நான் சென்றதில்லை. அதாவது காலை முதல் இரவு வரை என்ன சாப்பிட வேண்டும், எவ்வளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும், எவ்வளவு நேரம் பயிற்சி செ…
-
- 0 replies
- 319 views
-
-
அளவில் பெரிய துடுப்புகளை தடை செய்யவும்’-ரிக்கி பொன்டிங் டேவிட் வோர்னர் போன்ற கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் அளவுக்கு அதிகம் பெரிதான துடுப்புகள் (பட்கள்) தடைசெய்யப்பட வேண்டும் என அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித் தலைவர் ரிக்கி பொன்டிங் தெரிவித்தார். உயிர்பாதுகாப்பு மற்றும் துடுப்புக்கும் பந்துக்கும் இடையில் நிலவும் சமச்சீரற்ற தன்மை ஆகியன தொடர்பில் வெளியாகும் கருத்துக்களை அடுத்தே ரிக்கி பொன்டிங் இதனைத் தெரிவித்துள்ளார். குறைபாரம் கொண்ட ஆனால் அளவில் பெரிதான துடுப்புகள் டெஸ்ட் போட்டியில் சீரமைக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அளவில் பெரிதான துடுப்புகள் மட்…
-
- 0 replies
- 403 views
-
-
ஐ.பி.எல். 2020 லீக் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் நவம்பர் 10 வரை ஒத்திவைக்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக்கை (ஐ.பி.எல்) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்துவதற்கு இந்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இறுதி அனுமதி விரைவில் வரும் என்று ஐ.பி.எல். நிர்வாக சபைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இப் போட்டிகள் இது செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும் என ஐ.பி.எல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்திருந்தார். எனினும் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 2 ஆம் திகதி (நேற்று) நடைபெறும் ஐ.பி.எல் ஆட்சி மன்றக் குழுவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இன்று ஐ.பி.…
-
- 0 replies
- 545 views
-
-
'பாம்பின் தலைக்கு இலக்கு வைப்பு' அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தை இலக்கு வைத்துள்ளதாக, தென்னாபிரிக்க அணியின் தலைமை வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் குறிப்பிட்டுள்ளார். "பாம்பின் தலையை நீங்கள் வெட்டினால், உடம்பின் ஏனைய பகுதிகளும் வீழ்ந்துவிடும். கடந்த காலங்களில், அதை நாங்கள் செய்திருக்கிறோம். அணித்தலைவரை இலக்கு வைக்க நாங்கள் முயன்றிருக்கிறோம், ஏனெனில், அங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தினால், ஏனையோரையும் அது பாதிக்கும்" என்று, டேல் ஸ்டெய்ன் குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஸ்டெய்ன், "அ…
-
- 0 replies
- 437 views
-
-
2021 பிரெஞ்சு ஓபன் : முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் கிரெஜிகோவா 2021 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் செக் குடியரசு வீராங்கனை பார்போரா கிரெஜிகோவா, ரஷியாவின் அனஸ்தேசியா பவ்லியுசென்கோவாவை வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். ரோலண்ட் கரோஸில் அரங்கேறிய இந்த ஆட்டத்தின் இறுதியில் 25 வயதான கிரெஜிகோவா 6-1, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் பவ்லியுசென்கோவாவை தோற்கடித்தார். 40 ஆண்டுகளுக்கு பிறகு பிரெஞ்சு ஓபனை வென்ற முதல் செக் குடியரசு வீராங்கனை என்ற பெருமையை கிரெஜிகோவா இதன்மூலம் பெற்றுள்ளார். இதற்கு முன்பு 1981 இல் செக் குடியரசின் ஹனா மாண்ட்லிகோவா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். https://www.virakesari.lk/article…
-
- 0 replies
- 327 views
-
-
50 ஓவர் போட்டியில் 320 ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர்: அணியின் ஸ்கோர் 556 பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் 50 ஓவர் போட்டியில் 320 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளார். பாகிஸ்தானில் பாஸல் மெஹ்மூத் இண்டர்-கிளப் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஷாஹீத் அலாம் பக்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றொரு அணியுடன் மோதியது. இதில் ஷாஹீத் அலாம் பக்ஸ் கிரிக்கெட் கிளப் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் பிலால் இர்ஷாத் தொடக்க வீரராக களம் இறங்கினார். இவர் அதிரடியாக விளையாடி சிக்ஸ், பவுண்டரிகளா…
-
- 0 replies
- 417 views
-
-
ஹத்துருசிங்க இலங்கை அணிக்கல்ல, 2019 வரை பங்களாதேஷ் அணிக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரரும், பங்களாதேஷ் அணியின் பிரதான பயிற்சிவிப்பாளராக தற்போது கடமையாற்றி வருகின்றவருமான சந்திக ஹத்துருசிங்க, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள் வரை பங்களாதேஷ் அணியின் பிரதான பயிற்றுனராக கடமையாற்றவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். இம்மாத இறுதியில் அவுஸ்திரேலிய அணி, பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்நிலையில் குறித்த தொடரில் பங்கேற்கவுள்ள 20 இளம் வீரர்களைக் கொண்ட பங்களாதேஷ் அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் தற்போது டாக்காவில் நடைபெற்றுவருகின்றது. இதில், நேற்றுமுன்தினம் நடைபெற்…
-
- 0 replies
- 333 views
-
-
கரீபியன் பிரிமீயர் லீக்: கிறிஸ் கெய்ல் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கரீபியன் பிரிமீயர் லீக் டி20 தொடரில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சார்பில் கரிபீயன் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான சீசனில் லீக் போட்டிகள் முடிவில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ், ஜமைக்கா தல்லாவாஸ், கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் முதல் நான்கு இட…
-
- 0 replies
- 306 views
-
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்சர்கள்: கிறிஸ் கெய்லின் தனித்துவ சாதனை கெய்ல். - கோப்புப் படம்.| ஜி.பி.சம்பத் குமார் டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்களுக்கும் மேல் குவித்து சாதனை புரிந்துள்ள மே.இ.தீவுகளின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்சர்களை அடித்து சாதனை புரிந்த முதல் வீரரானார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரே டி20 போட்டியில் சனிக்கிழமையன்று செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் 21 ரன்களில் வீழ்த்தியது மே.இ.தீவுகள். அதில் கெய்ல் 21 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார், இதில் 3 நான்குகள், 4 ஆறுகள் அடங்கும். அப்போது டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 100 சிக்சர்கள் அடித்துச் சாதனை புரிந்த முதல் வீரர் ஆ…
-
- 0 replies
- 446 views
-
-
துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் செய்தமையும் தோல்விக்குக் காரணம் சங்கக்கார வெளிப்படை 0 SHARES ShareTweet பாகிஸ்தானுக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணி அடைந்த தோல்விக்கு துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் செய்தமையும் முக்கிய காரணம் என்று குறிப்பிட்டார் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் சங்கக்கார. இலங்கை அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து இலக்குகளை இழந்ததை அடுத்து ஐந்தாவது வீரராக களமிறங்கும் சந்திமல் மூன்றாவது வீரராகக் களமிறக்கப்பட்டார். மூன்றாவது வீரராகக் களமிறங்கும் குசல் மென்டிஸ் ஐந்தாவது வீரராகக் களமிறக்கப்பட்டார். ஆனால் இவர்கள் இருவருமே பெரிய…
-
- 0 replies
- 398 views
-
-
2020-க்குப் பிறகு ஐ.பி.எல். தொடரின்போது சர்வதேச போட்டிகளில் கிடையாது: பிசிசிஐ முயற்சி ஐ.பி.எல். தொடரின்போது வெளிநாட்டு அணிகளுக்கு இடையிலான இருநாட்டு சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தால் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐ.பி.எல்.) தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 20 ஓவர்கள் கொண்ட இந்த லீக்கிற்கு உலகளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஐ.பி.எல். கடந்த 10 வருடங்களாக ரசிகர்களின் பேராதரவோடு வீறுநடை போட்டு சென்று கொண்டிருக்கிறது. அடுத்த வருடம் 11 சீசன் நடைபெற இருக்கிறது. ஐ.பி.எல். …
-
- 0 replies
- 266 views
-
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 900 புள்ளிகளைக் கடந்த ரபாடா முதலிடம், அஸ்வின் 2 இடங்கள் முன்னேற்றம் கேகிஸோ ரபாடாவைப் பாராட்டும் தெ.ஆ. வீரர்கள். - படம். | ஏ.பி. ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் 900 புள்ளிகளைக் கடந்த தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா முதலிடம் பிடித்தார். இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 இடங்கள் முன்னேறி 4-ம் இடத்தில் இருக்கிறார். போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 150 ரன்களுக்கு 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதில் முக்கிய பங்காற்றியதால் ஆட்ட நாயகன் விருது பெற்றார் ரபாடா. 900 புள்ளிகளைக் கடந்த 23-வது…
-
- 0 replies
- 257 views
-
-
கீர்த்திகன் கூடைப்பந்து தொடரில் சம்பியன்களாக ஏஞ்சல், இந்துக் கல்லூரி அணிகள் ஐந்தாவது தடவையாக நேற்று (05) நடைபெற்று முடிந்திருக்கும் கீர்த்திகன் நினைவுக்கிண்ண கூடைப்பந்துத் தொடரில், ஆண்கள் பிரிவு சம்பியன்களாக மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலையும், பெண்கள் பிரிவு சம்பியன்களாக கொக்குவில் இந்துக் கல்லூரியும் நாமம் சூடியிருக்கின்றன. வருடந்தோறும் கொக்குவில் இந்துக் கல்லூரியினர் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் இந்த கீர்த்திகன் நினைவுக் கிண்ண கூடைப்பந்து தொடரின் ஐந்தாவது பருவகாலத்திற்கான இறுதிப் போட்டிகள் கொக்குவில் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்து அரங்கில் இடம்பெற்றிருந்தன. 20 வயதின் கீழ்ப்பட்ட ஆண…
-
- 0 replies
- 445 views
-
-
இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பாதிப்பில்லை * பி.சி.சி.ஐ., உறுதி அக்டோபர் 09, 2014. புதுடில்லி: ‘‘இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் தொடருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. போட்டிகள் திட்டமிட்டபடி தொடர்ந்து நடக்கும்,’’ என, பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் தெரிவித்தார். ஐந்து ஒருநாள், மூன்று டெஸ்ட், ஒரு ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, இந்தியா வந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. இதனிடையே, புதிய சம்பள ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொச்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்க, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முதலில் மறுத்தனர். பிறகு ஒரு வழியாக கொச்சியில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி,போட்டியில் வெற்றி பெற்று 1–0 என, தொடரில் முன்னிலையில் உள்ளது. இருப்பினும…
-
- 0 replies
- 378 views
-
-
இந்தக் காரியத்தை செய்த ஜடேஜாவை முகத்தில் குத்த வேண்டும் போல் தோன்றியது: ரோகித் சர்மா வெளியிட்ட ரகசியம் ரவிந்திர ஜடேஜா, ரோகித் சர்மா : கோப்புப்படம் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த போது, ஜடேஜா செய்த காரியத்தைப் பார்த்து அவரை அடிக்க வேண்டும், முகத்தில் குத்த வேண்டும் போல் தோன்றியது என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இந்திய பேட்ஸ்மேன்களில் மிகவும் மென்மையானவர், களத்தில் அமைதியானவர், வெற்றியோ, தோல்வியோ அதையும் முகத்தில் காட்டிக்கொள்ளாதவர் என்ற பெயர் எடுத்தவர் ரோகித் சர்மா. அவரின் பேட்டிங்கில் ஆக்ரோஷமும், ஆவேசமும் இருக்…
-
- 0 replies
- 582 views
-
-
குறைந்தது 5 ஆண்டுகளுக்கு இந்திய அணி ஆதிக்கம் செலுத்துவதை விரும்புகிறேன்: விராட் கோலி உலகின் தலைசிறந்த அணியாக திகழ இந்திய கிரிக்கெட் அணியிடத்தில் திறமை இருக்கிறது என்று இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் மன்த்லிக்காக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "குறைந்தது 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் உலகில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று நான் வலுவாக விரும்புகிறேன். நம்மிடம் திறமை நிறைய இருக்கிறது. இந்தத் திறமையை ஒருங்கிணைத்து எப்படி சிறப்பாக மேலாண்மை செய்வது என்பதைப் பொறுத்து இந்திய அணி ஆதிக்கம் செய்வது அமையும். நான் அணி வீரர்களிடத்தில் வலுவான பிணைப்பையும் நட்புறுதியையும் ஏற்படுத்த விரும்புகிறேன். ஆண்டில் 250 முதல் …
-
- 0 replies
- 317 views
-
-
ஆப்கானிஸ்தான்- ஹாங்காங் மீது சந்தேகம்: மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டனவா கத்துக்குட்டிகள்? அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான 2வது தகுதி சுற்றில் விளையாட, ஹாங்காங் அணி தகுதி பெற்றுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கடைசி ஓவரில் 16 ரன்கள் அடித்து ஹாங்காங் அணி வெற்றி பெற்றதுதான் மேட்ச் பிக்சிங்காக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, 161 ரன்கள் அடித்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஹாங்காங் அணிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. 5 விக்கெட்டுகள் கையில் இருந்த நிலையில், ஹாங்காங் வீரர் பாபர் ஹயாத் 4 பந்துகளில் 15 ரன்களை அடித்து விட்டார்…
-
- 0 replies
- 276 views
-
-
சுனில் கவாஸ்கரை ஒப்பிட்டு என்னை இம்ரான் கடிந்து கொண்டார்: ரமீஸ் ராஜாவின் அனுபவப் பகிர்வு டிசம்பர் 13, 1981. பெங்களூரில் இங்கிலாந்துக்கு எதிராக 172 ரன்களை குவித்த சுனில் கவாஸ்கர் இயன் போத்தம் பந்தை விளாசும் காட்சி. | கோப்புப் படம். இம்ரான் கான் எப்போதும் சுனில் கவாஸ்கர் ஆட்டத்தை பெரிதும் மதிப்பவர் என்று கூறிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா, சுவையான அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார். ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போ இணையதளத்தில் இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: 1981 என்று நினைக்கிறேன், விவ் ரிச்சர்ட்ஸ் தனது உச்சகட்ட பேட்டிங் நிலையில் இருந்த காலம். உலகில் அனைத்து பந்துவீச்சாளர்களையும் தனது பெரிய சிக்சர்களால் மைதானம் நெடுக சிதற அடித்துக் கொண்டிருந்தார் வி…
-
- 0 replies
- 206 views
-
-
உலக கால்பந்து தரவரிசை: அர்ஜென்டினா முதலிடம்! உலக கால்பந்து தரவரிசையில் அர்ஜென்டினா அணி தொடர்ந்து முதலிடம் இருந்து வருகிறது. உலக அணிகளின் கால்பந்து தர வரிசைப் பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி அர்ஜென்டினா அணி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 2வது இடத்தில் பிரேசிலும், இத்தாலி அணி 3-வது இடத்திலும், ஸ்பெயின் அணி 4-வது இடமும், ஜெர்மனி அணிக்கு 5வது இடமும், செக் குடியரசு அணி 6-வது இடத்திலும், பிரான்ஸ் அணி 7-வது இடமும், போர்ச்சுக்கல் அணி 8-வது இடமும், ஆலந்து அணி 9-வது இடமும், குரோஷியா அணி 10-வது இடத்திலும் உள்ளன. கிரீஸ், இங்கிலாந்து, ருமேனியா, ஸ்காட்லாந்து, மெக்சொகோ, துருக்கி, கொலம்பியா, பல்கேரியா ஆகிய அணிக…
-
- 0 replies
- 813 views
-
-
இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இலங்கையிலும் இடம்பெறலாம் ! இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டித் தொடரை ஐக்கிய அரபு எமிரேட்ஸிலோ அல்லது இலங்கையிலோ நடத்த இரு நாட்டு கிரிக்கெட் சபையும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி நடக்குமா, நடக்காதா என்று பல கேள்விகள் எழுந்து வரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து இருநாட…
-
- 0 replies
- 544 views
-