விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
பத்திரிகையாளரை தாக்கிய மெக்சிகோ கால்பந்து அணியின் பயிற்சியாளர் நீக்கம் ! பத்திரிகையாளர் ஒருவரை தாக்கியதால் மெக்சிகோ கால்பந்து அணியின் பயிற்சியாளர் மிகுவேல் ஹெரைரா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் நடந்த 'கான்காப்' தங்க கோப்பை கால்பந்து தொடரில் மெக்சிகோ அணி, இறுதி ஆட்டத்தில் ஜமைக்கா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில் கோப்பையை வென்ற 24 மணி நேரத்துக்குள், மெக்சிகோ அணியின் பயிற்சியாளர் மிகுவேல் ஹெரைரா, தொலைக்காட்சி நிருபர் ஒருவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த திங்கட்கிழமை பிலடெல்பியா விமான நிலையத்தில் வைத்து, அஸ்டெகா தொலைக்காட்சியின் நிருபரான கிறிஸ்டியன் மார்ட்டினோலியின் முகத்தில் மிகுவேல் குத்தியுள்ளார்…
-
- 0 replies
- 214 views
-
-
டீன் எல்கர் பொறுப்பான துடுப்பாட்டம்: இந்தியாவை வீழ்த்தி தென்னாபிரிக்கா இரண்டாவது டெஸ்டில் வெற்றி! இந்தியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 1-1 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றுள்ளது. ஜோகனஸ்பர்க்கில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 202 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல். ராகுல் 50 ஓட்டங்களையும் அஸ்வின் 46 ஓ…
-
- 0 replies
- 214 views
-
-
நெருங்கிவரும் 2019 உலகக் கிண்ணத்தில் திசரவிடம் நம்பிக்கை கொள்ளும் இலங்கை 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு வலுவான அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இலங்கை, திசர பெரேரா மீது அதிக ஈடுபாடு காட்ட ஆரம்பித்துள்ளது. கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்திருக்கும் அந்த போட்டிக்கு இன்னும் 18 மாதங்களே எஞ்சியிருக்கும் நிலையில், சகலதுறை வீரரான அவர் போட்டிகளை வெற்றிபெறச் செய்பவராக வருவார் என்ற நம்பிக்கை தற்பொழுது அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பரில் திசர பெரேராவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான அணித் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டபோது அது குறைந்த அளவிலோ அல்லது அதிக அளவிலோ தவறாக இருந்தது. அப்போது அணியில் அவரது இடம் பற்றி கேள்வி எழுந்…
-
- 0 replies
- 214 views
-
-
400 கி.மீற்றர் பயணித்து செரெண்டிப் கழகத்தை வெற்றிபெறச் செய்து யாழ். திரும்பிய அபிஷான் 05 Jan, 2026 | 01:09 PM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணத்திலிருந்து 400 கிலோ மீற்றர் பயணித்து கொழும்பு வருகை தந்து சனிக்கிழமை (03) இரவு நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் ஏ குழுப் போட்டியில் பங்குபற்றி கடைசிக் கட்டத்தில் கோல் போட்டு மாவனெல்லை செரெண்டிப் கழகத்துக்கு இறுக்கமான வெற்றியை (1 - 0) ஈட்டிக்கொடுத்த விஜயகுமார் அபிஷான், வெற்றிக்களிப்புடன் போட்டி முடிவடைந்த சிறிது நேரத்தில் மீண்டும் யாழ். திரும்பினார். அபிஷானுடன் அவரது மூத்த சகோதரர், அணித் தலைவர் விஜயகுமார் விக்னேஷும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வருகை தந்து போட்டி முடிந்தவுடன் யாழ். திரும்பினார். இந்த சகோதரர்கள் இருவரும் அற்புதமான கால்பந்…
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா முதல்நாள் முடிவில் 229 ரன் குவிப்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் எல்கர் சதத்தால் தென்னாப்பிரிக்கா அணி முதல்நாள் ஆட்டம் முடிவில் 229 ரன்கள் குவித்துள்ளது. ட்யூனிடின்: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 மற்றும் 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது. நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ட்யூனிடின் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப…
-
- 0 replies
- 214 views
-
-
ஆஸி. வீரர் கிறிஸ் ரொஜர்ஸும் ஓய்வுபெறவுள்ளார் 2015-08-19 10:43:28 அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் கிறிஸ் ரொஜர்ஸ் இன்று ஆரம்பாகும் ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளார். இம் மாதம் 31ஆம் திகதி 32 வயதை அடையும் கிறிஸ் ரொஜர்ஸ் தான் ஓய்வு பெறப் போவதை சில தினங்களுக்கு முன்னர் லண்டன் ஹோட்டலில் வைத்து உறுதி செய்தார். நடந்து முடிந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம், 3 அரைச் சதங்களைப் பெற்றபோதிலும் ஓய்வு பெறுவதில் கிறிஸ் ரொஜர்ஸ் உறுதியாக உள்ளார். ஒருவேளை 32 வயதை எட்டவுள்ளதால் அவர் ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளார் போலும். அவுஸ்திரேலியாவின் எதிர்கால அணியில் அடம் வோஜஸ் இடம்பெறவேண்டும் என க்றிஸ் ரொஜர்ஸ் த…
-
- 0 replies
- 214 views
-
-
டயலொக் கிரிக்கெட் விருது ஒக்டோபர் 19: உங்களின் விருப்பமான வீரர் யார்? உடனே வாக்களியுங்கள் இலங்கை வீரர்களுக்கான வருடாந்த விருதுகள் இம்முறை ‘டயலொக் இலங்கை கிரிக்கெட் விருதுகள் 2015’ என அழைக்கப்படவுள்ளதோடு, இம்முறை பிராமாண்டமான முறையில் நடாத்தப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மாபெரும் விருது விழா எதிர்வரும் ஒக்டோபர் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளதோடு இதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையில் இதற்கான ஊடகச் சந்திப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்றிருந்தது. இதில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சிதத் வெத்தமுனி, செயலாளர் பிரகாஷ் ஷாப்டர், பிரதம செயற்பாட்டு அதிகாரி ஆஷ்லி டீ சில்வா, இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ், டயலொக் நிறுவனத்…
-
- 0 replies
- 214 views
-
-
இங்கிலாந்தின் சுழல்பந்துவீச்சு ஆலோசகராக பாகிஸ்தானின் சக்லெய்ன் முஷ்தாக் நியமனம் பாகிஸ்தானுக்கு எதிராக தனது சொந்த மண்ணில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரின்போது இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் சுழல்பந்துவீச்சு ஆலோசகராக சக்லெய் முஷ்தாக் நியமிக்கப்படவுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து பயணமாகின்றது. பாகிஸ்தானுக்கு எதிராக ஓல்ட் ட்ரஃபோர்டில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரை குறுகிய காலத்திற்கு இங்கிலாந்தின் சுழல்பந்துவீச்சு ஆலோசகராக சக்லெய்ன் பணியாற்றவுள்ளார். பாகிஸ்தான் தொலைக்காட்சி நிறுவனத்துடன் 2017வரை சிறப…
-
- 0 replies
- 213 views
-
-
பாகிஸ்தானுக்கு ஆடினால் காலைத்தான் வாரிவிடுவார்கள்: ஆஸி.க்குச் சென்ற ஸ்பின் லெஜண்ட் அப்துல் காதிர் மகன் பாகிஸ்தான் முன்னாள் லெக் ஸ்பின்னர் அப்துல் காதிர் மகன் உஸ்மான் காதிர். - படம். | சிறப்பு ஏற்பாடு. பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தில் உள்ள ‘அரசியல், ஊழல்’ காரணமாக முன்னாள் லெக் ஸ்பின் ‘லெஜண்ட்’ அப்துல் காதிர் மகன் உஸ்மான் காதிர் ஆஸ்திரேலியாவுக்கு ஆடப்போவதாகத் தெரிவித்துள்ளார். 24 வயது உஸ்மான் காதிரும் தந்தை வழியில் தயாரான ஒரு லெக் ஸ்பின்னர்தான். தனது இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளக் கணக்கில் ஆஸி.ஜெர்சி போன்ற ஒன்றை அணிந்திருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 2020-ல் நட…
-
- 0 replies
- 213 views
-
-
Published By: VISHNU 26 JUN, 2024 | 07:15 PM சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி அணிகளைத் தீர்மானிப்பதற்கு டக்வேர்த் லூயிஸ் முறைமையை உருவாக்கியவர்களில் ஒருவரான ப்ராங்க் டக்வேர்த்தின் மறைவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையில் 2014வரை புள்ளியியல் ஆலோசகராக பணியாற்றிய டக்வேர்த் தனது 84ஆவது வயதில் கடந்த வெள்ளியன்று காலமானார். டக்வேர்த்தின் சேவையை பாராட்டிய கிரிக்கெட் செயற்பாடுகளுக்கான ஐசிசி பொது முகாமையாளர் வசிம் கான், அன்னாரது மறைவையொட்டி தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 213 views
- 1 follower
-
-
மக்களை தலைகுனியச் செய்துவிட்டேன்: கிரிக்கெட் வீரர் பான்கிராப்ட் உருக்கம் பான்கிராப்ட். - AFP பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் நான் பொய் சொன்னதற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன். சம்பவம் நடந்தபோது பயத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆஸ்திரேலிய மக்களை தலைகுனியச் செய்துவிட்டேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேமரூன் பான்கிராப்ட் தெரிவித்தார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பான்கிராப்டுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 9 மாத தடை விதித்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை பான் கிராப்ட் தென் ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பினார். இதுதொடர்பாக பெர்த் நகரில் செய்தியாளர்களிடம…
-
- 0 replies
- 213 views
-
-
கறுப்பினத்தவரை அவமதித்தனர் : 'இனவெறி' கால்பந்து ரசிகர்களுக்கு 5 ஆண்டுகள் தடை ! கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், பாரீஸ் செயின்ட் ஜெர்மயின் அணியுடன் லண்டனை சேர்ந்த செல்சி அணி மோதியது. முதல் லெக் ஆட்டம் பாரிஸ் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கான செல்சி அணியின் ரசிகர்கள் பாரிசுக்கு படையெடுத்தனர். போட்டியை காண பாரிஸ் நகர மெட்ரோ ரயிலில் ஆரவாரத்துடன் சென்ற செல்சி ரசிகர்கள், சூலைமான் சில்லா என்ற கறுப்பினத்தவரை ரயிலில் ஏற விடாமல் தடுத்து அவமதித்தனர். ரயிலில் ஏற முயற்சித்த அவரை, கீழே தள்ளி விட்டு அவமானப்படுத்தினர். ஏராளமான ரயில் பயணிகள் முன் இந்த சம்பவம் நடந்தது. மேலும் அந்த ரசிகர்கள், "நாங்…
-
- 0 replies
- 212 views
-
-
இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வசிம் அக்ரம் பயிற்சி 2016-12-02 10:11:49 கிரிக்கெட் உலகின் 'சுல்தான் ஒப் சுவிங்' என்றழைக்கப்படும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான வசிம் அக்ரம் இலங்கை கிரிக்கெட்டுக்கு பந்துவீச்சு பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக இலங்கை கிரிக்கெட் சபையுடன் இணைந்துள்ளார். உள்ளூர் பயிற்றுநர்கள் சிலருடன் வசீம் அக்ரம் (படப்பிடிப்பு: எஸ். எம். சுரேந்திரன்) வசிம் அக்ரம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து கொண்டமையை அறிவிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமையகத்தில் ஸ்ரீலங்கா …
-
- 0 replies
- 212 views
-
-
ஓய்வுபெறுவது குறித்துச் சிந்திக்கிறேன்: ஜோன்சன் கிரிக்கெட் வாழ்வில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஜோன்சன், ஒவ்வொரு போட்டியுமே தனது இறுதி டெஸ்ட் போட்டியாக அமையுமென்ற எண்ணம் காணப்படுவதாக ஒத்துக் கொண்டுள்ளார். 34 வயதான மிற்சல் ஜோன்சன், இங்கிலாந்தில் இடம்பெற்ற ஆஷஸ் தொடருடன் ஓய்வுபெறுவது பற்றிச் சிந்தித்திருந்ததை ஏற்றுக் கொண்டிருந்தார். குறிப்பாக, மைக்கல் கிளார்க், பிரட் ஹடின், ஷேன் வொற்சன், றயன் ஹரிஸ், கிறிஸ் றொஜர்ஸ் ஆகியோர் ஓய்வுபெற்ற நிலையில், அந்த எண்ணம் அதிகரித்ததாகத் தெரிவித்திருந்தார். எனினும், தொடர்ந்தும் விளையாடிவரும் ஜோன்சன், நியூசிலாந்துக்கெதிராக பிறிஸ்பேணில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி…
-
- 0 replies
- 212 views
-
-
ஜூலன் கோஸ்வாமி: முடிவுக்கு வருகிறது இரு தசாப்த கிரிக்கெட் வாழ்க்கை - இந்திய 'வேகப் பெண்' சாதித்தது என்ன? வந்தனா பிபிசி 23 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவில் கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்படும் ஈடன் கார்டன் மைதானம், 1997ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் பந்தை நாலாபுறமும் அடித்து நொறுக்கினார். இந்தியாவின் மேற்கு வங்கத்தில் ஒரு சிறிய கிராமத்தில் வளர்ந்த ஜூலன் கோஸ்வாமி என்ற 15 வயத…
-
- 0 replies
- 212 views
-
-
எங்களுடன் ஒரு டெஸ்ட்டில் விளையாடுவதே நேர விரயம் என்று இங்கிலாந்து நினைத்தது; வென்று காட்டினோம்: சனத் ஜெயசூரியா 1996 உலகக்கோப்பையை வென்று இலங்கை அணி தங்களை எதிர்கொண்டு ஆட்கொள்ள வேண்டிய சக்தியாக உலக அணிகளுக்குச் சவால் விடுத்துக் கொண்டிருந்த தருணம். ரணதுங்கா கேப்டன்சியில் பிரமாதமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த காலம். மேலும், இலங்கை அணியைக் கண்டாலே அனைவருக்கும் ஒரு பயம் கலந்த எரிச்சலும், தேவையற்ற ஏளனமும் இருந்த காலக்கட்டம். ஜெயசூரியா, ரொமேஷ் கலுவிதரன, அரவிந்த டிசில்வா ஆகியோர் எதிரணியை கதிகலங்கச் செய்து கொண்டிருந்தனர், பந்து வீச்சில் முரளிதரன் ஒரு பேரச்சுறுத்தலாகத் திகழ்ந்த காலம். அப்போது உலகக்கோப்பையை வென்று 2 ஆண்டுகள் ஆனபின்பு கூ…
-
- 0 replies
- 212 views
-
-
நாட்வெஸ்ட் தொடருக்கு வரவேற்பு இல்லை... ஐ.பி.எல். பாணியில் இங்கிலாந்தில் டி20 தொடர் ! ஐ.பி.எல். போல இங்கிலாந்தில் 8 நகரங்களை மையமாக வைத்து புதிய டி 20 கிரிக்கெட் தொடரை உருவாக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் போல வேறு எந்த டி20 தொடரும் உலகம் முழுவதும் பிரபலமாகவில்லை. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஷ் தொடர், தற்போது இங்கிலாந்தில் நடந்து வரும் நாட்வெஸ்ட் டி20 தொடரையெல்லாம் விட, ஐ.பி.எல். தொடருக்குதான் வரவேற்பு அதிகம். எனவே ஐ.பி.எல். தொடரை போல நகரங்களை மையமாக கொண்டு ஒரு டி20 தொடரை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. லார்ட்ஸ், ஓவல், பிரிம்மிங்ஹாம், லீட்ஸ், நாட்டிங்ஹாம…
-
- 0 replies
- 212 views
-
-
கவுண்டி அணியில் விளையாடும் விராட் கோலி: இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மிரட்ட, மெருகேற்றுகிறார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி : கோப்புப் படம் - படம்: ஏபி இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில், கவுண்டி அணியில் பங்கேற்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விளையாட உள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்துக்கு வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய அணி பயணம் மேற்கொள்கிறது. 2 மாத பயணமாக அங்கு செல்லும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அங்குள்ள காலநிலை ஆடுகளத்தின் தன்மை, வேகப்பந்துவீச்சு அனைத்தையும் எதிர்கொள்ளும் வகை…
-
- 2 replies
- 212 views
-
-
பாகிஸ்தான் செல்லும் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிக்கு அதியுயர் பாதுகாப்பு பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ள பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிக்கு அதியுயர் பாதுகாப்பு வழங்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதியளித்துள்ளது. பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியினர் இம் மாதம் 28ஆம் திகதி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விஜயம் செய்யவுள்ளனர். இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது 2009இல் இடம்பெற்ற பயங்கரவாத துப்பாக்கிப் பிரயோகத்திற்குப் பின்னர் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி ஒன்று பாகிஸ்தானுக்கு செல்வது இதுவே முதல் தடவையாகும். பங்களாதேஷ், பாகிஸ்தான் மகளிர் அணிகள் இரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இரண்டு இருபத…
-
- 1 reply
- 210 views
-
-
ஒ.நா.ச போட்டிகளில் இவ்வருடத்தில் 101 சதங்கள் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், இவ்வருடத்தில் மாத்திரம் 101 சதங்கள் குவிக்கப்பட்டுள்ளன. நேற்று இடம்பெற்ற போட்டிகளில் இரண்டு சதங்கள் குவிக்கப்பட்ட நிலையிலேயே, 101 சதங்கள் என்ற மைல்கல் எட்டப்பட்டுள்ளது. பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியில் முஷ்பிக்கூர் ரஹீம் பெற்ற சதமே 100ஆவது சதமாகவும், இலங்கைக்கெதிராக மார்லன் சாமுவேல்ஸ் பெற்ற சதம், 101ஆவது சதமாகவும் அமைந்திருந்தது. வருடமொன்றில் 100 சதங்கள் எட்டப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதோடு, இரண்டாமிடத்தில் காணப்படும் 2014ஆம் ஆண்டை விட, 22 சதங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இதில், 2014ஆம் ஆண்டில் 121 ஒருநாள் சர்வதேசப் போட்டிக…
-
- 0 replies
- 210 views
-
-
கேப்டன் பதவியை நிரந்தரமாக இழக்கிறார் தோனி? தென்ஆப்ரிக்க அணியின் இந்திய சுற்றுப்பயணத்தின் போது, இந்திய ஒருநாள் போட்டிக்கான அணிக்கும் விராட் கோலியை கேப்டனாக நியமிக்க பி.சி.சி.ஐ ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்ற பிறகு, துணை கேப்டனாக இருந்த விராட் கோலி இந்திய அணியின் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில், இலங்கை மண்ணில் 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி, டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் தென்ஆப்ரிக்க அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அந்த அணியின் இந்திய சுற்றுப்பயணத்தின்போது, இந்திய அணியின் ஒருநாள் அணிக்கும் விராட் கோலியே நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
-
- 0 replies
- 210 views
-
-
விராட் கோலி, டி வில்லியர்ஸ், கேன் வில்லியம்சன் யுக்திகளை காப்பி அடித்தேன் - ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட விராட் கோலி, டி வில்லியர்ஸ், கேன் வில்லியம்சின் யுக்திகளை காப்பி அடித்தேன் என ஸ்மித் கூறியுள்ளார். #Smith #SAvAUS ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக இருக்கும் ஸ்டீவன் ஸ்மித் டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 61 போட்டிகளில் 111 இன்னிங்சில் பேட்டிங் செய்து 6057 ரன்கள் குவித்துள்ளார். தலா 23 சதம், அரைசதங்களை பதிவு செய்துள்ள இவர், 63.75 சராசரி வைத்துள்ளார். இப்போதைய காலக்கட்டத்தில் அவரது சராசரியை யாரும் தொட முடியவில்லை. …
-
- 0 replies
- 210 views
-
-
பார்சிலோனா கேப்டனாக ஆன்ட்ரஸ் இனியஸ்டா தேர்வு பார்சிலோனா அணியின் கேப்டனாக ஆன்டரஸ் இனியஸ்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பார்சிலோனா அணி வீரர்கள் அனைவரும் வாக்களித்து புதிய கேப்டனை தேர்வு செய்தனர். பார்சிலோனா அணியின் கேப்டனாக இருந்த சேவி, அந்த அணியில் இருந்து விலகி துபாயை சேர்ந்த அல்சாத் அணியில் அண்மையில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து பார்சிலோனா அணியின் புதிய கேப்டனை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பு நேற்று நடந்தது. இதில் மற்றொரு நடுக்கள வீரர் ஆன்ட்ரஸ் இனியஸ்டா, புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். லயனல் மெஸ்சி இரண்டாவது கேப்டனாக செயல்பட தேர்வாகியுள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக ஆன்ட்ரஸ் இனியஸ்டா விளையாடி வருகிறார். தற்போது உலகிலுள்ள சிறந்த மி…
-
- 0 replies
- 210 views
-
-
சிறைத்தண்டனை காரணமாக பார்சிலோனாவை விட்டு வெளியேற மெஸ்சி திட்டம்? மெஸ்சி குற்றமற்றவர் தொடர்ந்து பார்சிலோனா அவர் அணிக்கு விளையாட வேண்டும் ஸ்பானீஷ் லீக்கை விட்டு வெளியேறி விட கூடாது என லா லீகாத் தலைவர் ஜேவியர் டெபாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக நீண்டகாலம் விளையாடி வருகிறார். அண்மையில் சுமார் 60 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக பார்சிலோனா நீதிமன்றம் மெஸ்சிக்கும் அவரின் தந்தைக்கும் 21 மாத சிறைத்தண்டனையும் தலா ரூ15 கோடி அபராதமும் விதித்தது. எனினும் ஸ்பெயின் சட்டப்படி 2 ஆண்டுகளுக்கு குறைவாக சிறைத்தண்டனைக்குள்ளானால், சிறைக்கு செல்ல வேண்டிய நிலை இல்லை. அபராதத்தை செலுத்…
-
- 0 replies
- 210 views
-
-
ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் போலிங்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு கோப்புபடம்: டோவ் போலிங்கர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், இடதுகை வேகப்பந்துவீச்சாளருமான டக்கி போலிங்கர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். 36 வயதான போலிங்கர் கடந்த 2009ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமானார். இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள போலிங்கர் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு வெலிங்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்…
-
- 0 replies
- 209 views
-