விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
100 சதவீதம் துல்லியமாகாத வரை டி.ஆர்.எஸ்.ஸுக்கு இந்தியா ஆதரவளிக்காது: டோனி நடுவர்களின் தீர்ப்பை மீளாய்வு செய்யும் முறைமையானது (டி.ஆர்.எஸ்.) 100 சதவீதம் துல்லியமானது என இந்தியா நம்பும்வரை அம்முறைக்கு இந்தியா ஆதரவளிக்காது என இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி கூறியுள்ளார். இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டியில் டி.ஆர்.எஸ். முறைமையை பயன்படுத்த வேண்டுமென அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்திய அணி அதற்கு சம்மதிக்கவில்லை. மேல்பேர்னில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் கள நடுவர்களால் சில தவறான தீர்ப்புகள் வழங்கப்பட்டபோது, டி.ஆர்.எஸ். முறைமையை பயன்படுத்துவதற்கு இந்தியா மறுப்பு தெரி…
-
- 0 replies
- 654 views
-
-
ஐ.எஸ்.எல்.லில் நான் விளையாடுவதை அம்மா பார்க்க வேண்டும்: சென்னையின் எப்.சி. வீரர் கணேஷ் ஆசை கணேஷ் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டபோது, சென்னை சார்பில் களமிறங்கிய சென்னையின் எப்.சி. அணியில் தமிழர்கள் யாரும் இல்லையே, கால்பந்துக்கு பெயர் பெற்ற சென்னையில் இருந்து ஒருவர்கூட அணியில் சேர்க்கப்படவில்லையே என சென்னை ரசிகர்களும், கால்பந்து ஆர்வலர்களும் ஆதங்கப்பட்டனர். ஆனால் இந்த முறை சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த டி.கணேஷ் மூலம் அந்த குறை தீர்ந்துள்ளது. மத்திய நடுகள வீரரான கணேஷின் ஆட்டத்தைப் பார்க்க வியாசர்பாடியில் உள்ள அவருடைய பெற்றோர்களும், உறவினர்களும், நண்பர்களும், அவருடன் விளையாடிய சக வீரர்களும், கால்பந்து ரசிகர்களும் காத்துக்கொ…
-
- 0 replies
- 213 views
-
-
பீலேவை தொடர்ந்து ரொனால்டோ இந்தியா வருகை! உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 15 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ள பிரேசில் வீரர் ரொனால்டோ இந்தியா வருகிறார். ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் நவம்பர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள டெல்லி - மும்பை அணிகளுக்கிடையேயான ஆட்டத்தை அவர் நேரில் ரசிக்கிறார். ஆனால் ரொனால்டோ டெல்லியில் நகரில் ஒரே ஒருநாள் மட்டும்தான் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் எனத் தெரிகிறது. அப்போது பிரேசில் மற்றும் ரியல்மாட்ரிட் அணிகளின் முன்னாள் விங்கரும் தற்போதைய டெல்லி அணியின் பயிற்சியாளருமான ராபர்ட்டோ கார்லசை ரொனால்டோ சந்திக்கிறார். பிரேசில் அணிக்காக 1998, 2002, 2006ஆம் ஆண்டு என 3 உலகக் கோப்பை போட்டிகளில் ரொனால்டோ விளையாடியுள்ளார். 1998 உலகக் கோப்பை போட்டியில்அதிக கோல் அடித்த …
-
- 0 replies
- 296 views
-
-
இங்கிலாந்து, பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் மீள் பார்வை இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற தொடரில் பாகிஸ்தானுக்கு தொடர் வெற்றி கிடைத்துள்ளது. இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி தொடரை ஆரம்பித்து இருந்தாலும், பாகிஸ்தான் அணி அந்த ஆதிக்கத்தை உடைத்து தங்கள் ஆதிக்கத்தை காட்டி வெற்றியை பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி பலமான அணியாகவும் தொடரைக் கைப்பற்றும் வாய்பை அதிகம் கொண்ட அணியாகவும் தொடரை ஆரம்பித்தது. அதை செய்தும் காட்டி விட்டது. ஆனால் இங்கிலாந்து அணிக்கு என்ன நடந்தது? மிகுந்த சவாலை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதே போன்று முதற் போட்டியின் வெற்றி வாய்ப்பு போதிய வெளிச்சம் இன்மையால் கை நழுவிப் போ…
-
- 0 replies
- 904 views
-
-
நாளை ஆரம்பிக்கிறது சப்பல்-ஹட்லி தொடர் நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, மூன்று, ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட இறுதி சப்பல்-ஹட்லி தொடரில் விளையாடவுள்ள நிலையில், இத்தொடரின் முதலாவது போட்டி, இலங்கை நேரப்படி காலை 6.30 மணிக்கு ஒக்லாந்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இரண்டு அணிகளிலுமே அதிரடி வீரர்கள் இருக்கின்ற நிலையில, பந்து ஸ்விங் ஆகாமல் விட்டால், நியூசிலாந்திலுள்ள சிறிய மைதானங்களில் இரண்டு அணிகளும் 350 ஓட்டங்களை இலகுவாக தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அணி, தனது விளையாடும் பதினொருவரை ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், காயமடைந்த ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஆரோன் பின்ஞ்க்கு ப…
-
- 0 replies
- 427 views
-
-
'குசால் இன்னமும் தடை செய்யப்படவில்லை' இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் குசால் ஜனித் பெரேரா, இன்னமும் தடைக்குள்ளாக்கப்படவில்லை என, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார். குசால் பெரேரா தடை செய்யப்பட்டுள்ளார் என முன்னர் செய்தி வெளியாகியிருந்த நிலையிலேயே, இந்தத் தகவலை மஹேல ஜெயவர்தன வெளியிட்டுள்ளார். தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்தியமை காரணமாக சர்வதேச கிரிக்கெட் சபையின் விசாரணைகளுக்கு முகங்கொடுத்துவரும் குசால் ஜனித் பெரேரா, டிசெம்பர் 7ஆம் திகதி, இடைக்காலத் தடைக்குள்ளாக்கப்பட்டார். எனினும், ஏனையோரைப் போலன்றி, குசால் பெரேராவின் விசாரணை தொடர்பான முடிவு, இதுவரை வெளிவரவில்லை. …
-
- 0 replies
- 546 views
-
-
டி.ஆர்.எஸ். முறைக்கு உடன்படாமல் நடுவர் தீர்ப்புகளை குறை கூறக்கூடாது: கோலி விராட் கோலி. | படம்: ஏ.பி. எதிர்காலத்தில் நிச்சயம் நடுவர் தீர்ப்பு மேல்முறையீடு (டி.ஆர்.எஸ்.) முறையை பயன்படுத்துவோம் என்று இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இது முந்தைய கேப்டன் தோனி மற்றும் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது (பிடி)வாதத்திலிருந்து நிச்சயம் வேறுபட்டதே. “இது குறித்து இங்கு உட்கார்ந்து கொண்டு நான் எதுவும் கூற முடியாது, ஆனால் டி.ஆர்.எஸ். குறித்து நாங்கள் விவாதித்துள்ளோம். இதில் சில பகுதிகளை விவாதிக்கலாம். குறிப்பாக பந்தின் தடம் காணும் தொழில் நுட்பம் மற்றும் ஹாக் ஐ ஆகியவை குறித்து விவாதித்து முடிவுக்கு வரலாம். …
-
- 0 replies
- 399 views
-
-
ராஞ்சியில் 3-வது டெஸ்ட்: பிட்ச் தயாரிப்பில் அக்கறை காட்டும் தோனி தோனி. | படம்.| பிடிஐ. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ராஞ்சியில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் உள்ளிட்ட தயாரிப்புகளில் முன்னாள் கேப்டன் தோனி அக்கறை காட்டுவதாக ஜார்கண்ட் கிரிக்கெட் சங்க செயலர் தெபாஷிஷ் சக்ரவர்த்தி தெரிவித்தார். தனது சொந்த மாநிலத்தில் இந்த டெஸ்ட் நடைபெறுவதால் அது ஒரு மறக்க முடியாத அனுபவத்தை ரசிகர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதில் தோனி தீவிர ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழுக்கு அவர் தெரிவித்ததாவது: தோனி பிட்ச் நிலவரங்கள் குறித்து எச்சரிக்கையுடன் அக்கறை காட்…
-
- 0 replies
- 509 views
-
-
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவு! ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி, வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. எனினும், இதுவரை நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், 3-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலிய அணி, தொடரைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கின்றது. சிட்னி மைதானத்தில் கடந்த 5ஆம் திகதி, ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 416 ஓட்டங்களை பெற்றிருந்த போது தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. இதன்போது அணியின் அதிகப்பட்ச…
-
- 0 replies
- 378 views
-
-
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: ஆஷ்லே பார்டி மகுடம் சூடினார்! அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டி வெற்றிபெற்று மகுடம் சூட்டியுள்ளார். 44 ஆண்டுகளுக்குப் பின்னர் குறித்த தொடரில் பட்டத்தை வென்ற முதல் அவுஸ்ரேலிய வீராங்கனை என்ற பெயரையும் ஆஷ்லே பார்டி வென்றுள்ளார். மெல்போனில் நடைபெற்றுவரும் ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்துபெற்ற குறித்த தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டி இன்று இடம்பெற்றது. இதில் அமெரிக்க வீராங்கனையான டேனியல் காலின்ஸை எதிர்கொண்ட ஆஷ்லே பார்டி போட்டியின் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். இதனை அடுத்து…
-
- 0 replies
- 302 views
-
-
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கார்ல்சனுக்கு திருப்பிக் கொடுத்த விஸ்வநாதன் ஆனந்த்! சவுதி அரேபியாவில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான நார்வே வீரர் மாக்னெஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளார் விஸ்வநாதன் ஆனந்த். சவுதியின் ரியாத் நகரில் உலக ரேபிட் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் 9-வது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்ஸெனை எதிர்கொண்டார். வெறும் 34 நகர்வுகளில் கார்ல்சனை வீழ்த்தினார். பின்னர் டை பிரேக் (tie-break) முறையில் ரஷ்ய வீரர் விளாடிமிர் ஃபெடோசெவை தோற்கடித்தார். இறுதியில் ஆறு வெற்றிகள், 9 சமன்கள் (draw) என வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றி சாம்பியன் பட்டம்…
-
- 0 replies
- 364 views
-
-
கேன் வில்லியம்சனின் சதம் வீண்- 4 ரன்னில் இங்கிலாந்து த்ரில் வெற்றி இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் கேன் வில்லியம்சன் கடைசி வரை நின்றும், நியூசிலாந்து பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. #NZvENG நியூசிலாந்து - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3-வது போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மோர்கன் (48), பென் ஸ்டோக்ஸ் (39), பட்லர் (29), மொயீன் அலி (23) ஆகியோரின் ஆட்டத்தால் 50 ஓவரில் 234 ரன்கள் எடு…
-
- 0 replies
- 278 views
-
-
இந்திய அணிக்கெதிராக களமிறங்கவுள்ள இங்கிலாந்து அணி அறிவிப்பு இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் இடம்பெற்றுள்ளார். அணித் தலைவர் அலிஸ்டர் குக்குடன் இணைந்து அலெக்ஸ் ஹேல்ஸ் ஆரம்ப ஆட்டக்காரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 25 வயதான அலெக்ஸ் ஹேல்ஸ் இதுவரை 32 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளபோதும் ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இப்போதுதான் பெற்றுள்ளார். முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவட் பிரோட் முழங்கால் ஏற்பட்டுள்ள உபாதையால் ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின் அணியில் இடம் பெற்றுள்ளார…
-
- 0 replies
- 336 views
-
-
முதல் முறை காதிலிருந்து ரத்தம்; 2ஆம் முறை கை ஒடிந்தது: மிட்செல் ஜான்சனின் ஆக்ரோஷம் ஆஷஸ் தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் களமிறங்கிய போது ‘அவர் கையை உடை’ என்றார் மைக்கேல் கிளார்க். ஜான்சன் அதனை ஆண்டர்சனுக்குச் செய்தாரோ இல்லையோ தென் ஆப்பிரிக்காவின் மெக்லாரனுக்குச் செய்து விட்டார். செவ்வாயன்று ஆஸ்திரேலியாவிடம் தென் ஆப்பிரிக்க தோல்வி அடைந்த போட்டியின் போது மிட்செல் ஜான்சன் பவுன்சரில் முன்கையில் அடிபட்டு நூலிழை எலும்பு முறிவினால் மெக்லாரன் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சென்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஜான்சன் பவுன்சர் ஒன்றை வீச அதை எதிர்கொள்ள முடியாது தடுமாறிய மெக்லாரனின் ஹெல்மெட்ட…
-
- 0 replies
- 421 views
-
-
கௌஷாலை ஆரம்ப வீரர் ஸ்தானத்தில் அவதானிக்கவுள்ளோம்: தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரிய சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் திலக்கரட்ன டில்ஷானுடன் ஆரம்ப வீரராக யாரை நிலையாக நியமிப்பது என்பதில் தெரிவாளர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் திலக்கரட்ன டில்ஷான் மாத்திரமே ஆரம்ப வீரராக தனது அனுபவத்தைக் கொண்டு திறமையை வெளிப்படுத்தியிருந்தார். உப்புல் தரங்க, குசல் ஜனித் பெரேரா ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியிருந்தனர். இந்நிலையில் இலங்கை வருகை தந்துள்ள இங்கிலாந்து அணிக்க…
-
- 0 replies
- 455 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…
-
- 0 replies
- 379 views
-
-
தோனியின் மனதில் உள்ளதை அறிய முடியாது: கோலிக்கு கபில் அறிவுரை வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணியை டெஸ்ட் போட்டியில் தலைமையேற்று வழி நடத்தும் விராட் கோலி, தோனியிடமிருந்து கேப்டன்சி பண்புகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். மைதானத்தில் உணர்ச்சிகளை வெளிப்படையாக காண்பிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் கோலி இன்னும் முதிர்ச்சியடைய வேண்டும் என்கிறார் கபில் தேவ். "கோலி கிரிக்கெட் மைதானத்தில் ஆக்ரோஷமாக செயல்படுகிறார், அவரது உணர்ச்சிகள் வெளிப்படையாகத் திரையில் தெரிகிறது. மாறாக தோனியின் மனதில் என்ன உள்ளது என்பது ஒருவருக்கும் தெரியாது. உணர்ச்சிகளை வெளிப்படையாக தோனி காண்பிக்க மாட்டார். முதிர்ச்சி என்பது கிரிக்கெட்டில் மிக மிக முக்கியமான விஷயம். தோனி நிறைய …
-
- 0 replies
- 437 views
-
-
கிரிக்கெட்டில் இப்படியும் சாதனை படைத்த மதுரை மருத்துவ மாணவர்! மதுரை: மருத்துவக்கல்லூரி மாணவர் கிரிக்கெட் மட்டையால் தொடர்ந்து 6 மணிநேரம் 14 நிமிடம் கீழே விழாமல் பந்தை தட்டி புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தி உள்ளார். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் கவுதமநாராயணன். இவர், மதுரை மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கிரிக்கெட் வீரரான இவருக்கு, வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் பல ஆண்டுகளாக இவரது மனதில் இருந்துள்ளது. இதை தொடர்ந்து, பந்து கீழே விழாமல் மட்டையால் தொடர்ந்து தட்டும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அதை நண்பர்கள், உறவினர்கள், கல்லூரி நண்பர்கள், விளையாட்டு பயிற்ச்சியாளர் என எல்லோர் முன்பும் செய்து காட்டினார். இதனால் கவுதமநாராயணனை எல…
-
- 0 replies
- 586 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11.5 மில்லியன் அமெரிக்க டொலர் (2 பில்லியனுக்கும் அதிக தொகை) நிதியுதவியை ஶ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு மீள வழங்க சர்வதேச கிரிக்கெட் பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைமையகம் அமைந்துள்ள துபாயில் இன்று இடம்பெற்ற சிறப்பு சந்திப்பின்போதே, இந்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்ததாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அற…
-
- 0 replies
- 700 views
-
-
மே.இ.தீவுகளை துவம்சம் செய்த வங்கப்புயல் ! மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களினால் அசத்தலாக வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 23 ஆவது போட்டி ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள், மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு டவுன்டனில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை குவித்தது. 322 என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 41.3 ஓவரில் 3 விக்கெட்டுக்களை இழந்து மேற்கிந்…
-
- 0 replies
- 699 views
-
-
ஓய்வுபெற்றார் றிச்சி மக்கோ நியூசிலாந்து றக்பி அணியின் தலைவர் றிச்சி மக்கோ, றக்பி போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். வெலிங்டனில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே, இந்த அறிவிப்பை அவர் விடுத்தார். 34 வயதான றிச்சி மக்கோ, றக்பி போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவார் என்பது எதிர்பார்க்கப்பட்டிருந்தது. 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளின் பின்னர் ஓய்வுபெற விரும்புவதான கருத்தை, அவர் வெளியிட்டிருந்தார். அத்தோடு, 2016ஆம் ஆண்டின் சுப்பர் றக்பி தொடருக்கான கிறசடேர்ஸ் அணியிலும் அவர் இடம்பெற்றிருக்கவில்லை. இந்நிலையிலேயே, தனது ஓய்வை அவர் உறுதிப்படுத்தினார். உலக றக்பி வரலாற்றில், அதிக சர்வதேசப் போட்டிகளில் பங்குப…
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னை எப்படி இருக்குது?... இந்தியா வந்த ரஃபேல் நடால் கேட்ட முதல் கேள்வி இது சர்வதேச டென்னிஸ் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்க இந்தியா வந்த ஸ்பெயின் டென்னிஸ் நட்சத்திரம் ரஃபேல் நடால், பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு ஒருநாள் கவுரவ விளையாட்டு ஆசிரியராக பணிபுரிந்தார். அதற்காக டெல்லியில் உள்ள அந்த பத்திரிகை அலுவலகத்துக்கு சென்ற ரஃபேல் நடால், முதலில் எழுப்பிய கேள்வி ''சென்னையில் இப்போது நிலைமை எப்படியிருக்கிறது என்பதுதான்? '' என்று அந்த பத்திரிகை கூறியுள்ளது. இது குறித்து அந்த பத்திரிகை நடால் கூறியதாக வெளியிட்டுள்ள செய்தியில்,'' சென்னை வெள்ளம் குறித்தும் மக்கள் அடைந்த துயரம் குறித்தும் கேள்விபட்டேன். எனக்கு இது மிகவும் வருத்தத்தை அளித்தது. நாம் வி…
-
- 0 replies
- 792 views
-
-
நாளை ஆரம்பிக்கிறது தென்னாபிரிக்கா-இங்கிலாந்து ஒ.நா.ச.போ தொடர் தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட் தொடரை, 2க்கு 1 என்ற ரீதியில் கைப்பற்றியிருந்த நிலையில், ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடர், இலங்கை நேரப்படி மாலை ஐந்து மணிக்கு நாளை ஆரம்பிக்கவுள்ளது. டெஸ்ட் தொடரின் ஆரம்பத்தில் தடுமாறியிருந்த தென்னாபிரிக்க அணி, இறுதிக் கட்டத்தில் சிறப்பாக விளையாடியிருந்தது மட்டுமல்லாமால், தாம் இறுதியாக பங்கேற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இந்தியாவை வென்றும் இருந்தது. எனவே அவ்வணி இத்தொடரை மறுபுறம் வெல்லக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. மறுபுறத்தில், ஒருநாள் சர்வதேசப் …
-
- 0 replies
- 371 views
-
-
இங்கிலாந்து ஏன் இவ்வளவு சொதப்புகிறது? - சிக்ஸர் ஃபீவர் #WT20 ( மினிதொடர் - 1) ஆசிய கோப்பையில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் என அத்தனை அணியையும் பஞ்சராக்கிவிட்டு சாம்பியனாக கம்பீரமாக திரும்பி இருக்கிறது இந்திய அணி. முதல் முறையாக இந்தியா, உலகக் கோப்பை டி20 போட்டியை நடத்தும் வாய்ப்பு பெற்றுள்ளது. உலகக் கோப்பை சூப்பர் 10 சுற்று இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில், இந்தியா முழுவதும் கிரிக்கெட் ஜூரம் பரவி வருகிறது. இதுவரை நடந்த ஐந்து உலகக் கோப்பையில், ஐந்து முறையும் வெவ்வேறு அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. உலககோப்பையை நடத்திய நாடு சாம்பியன் ஆனது கிடையாது. இதுபோன்ற வரலாற்று புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை எது தெரியுமா? உலகக் கோப்பையை எந்த அணி வெ…
-
- 0 replies
- 386 views
-
-
மாடல் அழகியை துரத்தும் ஹர்திக் பாண்ட்யா இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார் இளம் வீரரான ஹர்திக் பாண்ட்யா. பங்களாதேஷ் அணிக்கு எதிரான உலகக் கிண்ணத் தொடரின் லீக் ஆட்டத்தில் இறுதி ஓவரை பாண்ட்யா அற்புதமாக வீசினார். இதனால் இந்தியா ஒரு ஓட்டத்தால் ‘திரில்’ வெற்றி பெற்றது. நாங்கள் வகுத்த திட்டத்தை ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்படுத்தி இறுதி பந்தை வீசினார் டோனியும் பாண்ட்யாவை பாராட்டினார். அந்த நெருக்கடியான நேரத்திலும் சிரித்த முகத்தோடு எதையும் காட்டிக் கொள்ளாமல் அவர் சிறப்பாக பந்துவீசியதை அனைவரும் பாராட்டினர். இந்நிலையில் கிரிக்கெட் மூலம் பிரபலமாகத் தொடங்கிவிட்டதால், பாண்ட்யா கொ…
-
- 0 replies
- 702 views
-