விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
டி20 போட்டியில் புதிய சாதனை: 4 ஓவர்கள் வீசி ஒரு ரன் மட்டுமே கொடுத்த பாக். வீரர் அபாரம் பிரிட்ஜ்டவுனில் நடந்த கரிபியன் ப்ரிமியர்லீக் போட்டியில் பர்படாஸ் அணிக்காக பந்துவீசிய முகமது இர்பான் - படம்: ஏஎப்பி டி20 போட்டிகளில் குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் எனும் பெருமையை பாகிஸ்தான் வீரர் முகமது இர்பான் பெற்றார். 4 ஓவர்கள் வீசிய முகமது இர்பான் (4-3-1-2) 23 டாட் பந்துகள், 3 மெய்டன் ஓவர், ஒரு ரன் மட்டும் விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகமது இர்பான். பாகிஸ்தானில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் ப்ரிமீயர் …
-
- 0 replies
- 660 views
-
-
”ICC உலக கிண்ணம்” செப்டம்பர் 20 முதல் இலங்கையில் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சம்பியன் கிண்ணத்தை நாடுகளில் காட்சிப்படுத்தும் நடவடிக்கை நாளை முதல் டுபாயில் அமைந்துள்ள ஐ.சீ.சீ தலைமையகத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. போட்டியில் கலந்துக்கொள்ளும் 21 நாடுகளின் 60 நகரங்களில் இந்த கிண்ணம் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இதன்படி எதிர்வரும் 20, 21ஆம் திகதிகளில் கொழும்பிலும் 24 முதல் 27 வரை ஹிக்கடுவை மற்றும் காலியிலும் அந்த கிண்ணம் காட்சிப்படுத்தப்படவுள்ளது. -(3) http://www.samakalam.com/செய்திகள்/icc-உலக-கிண்ணம்-செப்டம்பர்-20/
-
- 0 replies
- 422 views
-
-
செரீனாவின் ‘பிளாக் பாந்தர்’ ஆடைக்குத் தடை: பிரெஞ்ச் ஓபன் நிர்வாகம் உத்தரவு பிரெஞ்சு ஓபனில் பங்கேற்றபோது செரீனா அணிந்திருந்த பிளாக் பாந்தர் ஆடை - படம்: ராய்டர்ஸ் 2019-ம் ஆண்டு நடக்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கவர்ச்சிகரமான பிளாக் பாந்தர் ஆடை அணியக்கூடாது என்று ‘பிரெஞ்சு ஓபன்’ டென்னிஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிகவும் புகழ்பெற்றது பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியாகும். பாரீஸ் நகரில் களிமண் தரையில் நடக்கும் இந்தப் போட்டியில் விளையாடி பட்டம் வெல்வது மிகக் கடினம்.தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர்கள் கூட களிமண் தரையில் விளையாடு…
-
- 1 reply
- 599 views
- 1 follower
-
-
சங்கக்காரவின் வரலாற்று சாதனையை நெருங்கும் கோஹ்லி இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் தனது வாழ்நாள் அதிகூடிய புள்ளிகளுடன் (937) மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் முறையே 97 மற்றும் 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதன் மூலம், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தை பின்தள்ளி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் முதல் போட்டியின் நிறைவில், டெஸ்ட் துடுப்பாட்ட வரி…
-
- 0 replies
- 419 views
-
-
தேசிய வலைப்பந்து அணியில் மேலும் ஒரு தமிழ் வீராங்கனை இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியில் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைச் சேர்ந்த சே.எழில்வேந்தினி தெரிவு செய்யப்பட்டார். ஆசிய மட்ட வலைப்பந்தாட்டத் தொடர் சிங்கப்பூரில் அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான அணித் தெரிவுக்காக கொழும்பில் கடந்த ஒரு மாதகாலமாக வீராங்கனைகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் அணிக்கான 12 வீராங்கனைகளின் தெரிவுப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைச் சேர்ந்த சே.எழில்வேந்தினி …
-
- 0 replies
- 697 views
-
-
பேட்டிங் உத்தியை மாற்றிக் கொள் என்று யாரேனும் கூறினால் என்னிடம் பேசச்சொல்: பிரித்வி ஷாவிடம் கூறிய சச்சின் டெண்டுல்கர் பிரித்வி ஷா, சச்சின். | படம்: பிடிஐ. இந்திய அணிக்கு புதிய தொடக்க வீரராக களம் காணவிருக்கும் பிரித்வி ஷாவின் பேட்டிங்கை ஏற்கெனவே பலரும் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். இந்நிலையில் பிரித்வி ஷா-வின் பேட்டிங் திறமை பற்றி ஏற்கெனவே சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து பேசியுள்ளார். பிரித்வி ஷாவுக்கு 8 வயதாக இருக்கும் போதே, பிர்த்வி ஷா-வின் இயற்கையான உத்தியை எந்த ஒரு பயிற்சியாளரும் மாற்றக்கூடாது என்று தெரிவித்திருப்பது இப்போது சச்சின் டெண்டுல்கர் வாயாலேயே வெளிவந்துள்ளது. …
-
- 0 replies
- 322 views
-
-
வியாஸ்காந்தின் சிறப்பாட்டத்தோடு மாவட்ட கிரிக்கெட் தொடரில் யாழ் மத்திய கல்லூரி வெற்றி யாழ் மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் ஒழுங்கு செய்து நடாத்திய 17 வயதின் கீழ்ப்பட்ட யாழ் மாவட்டத்தின் பாடசாலை அணிகளுக்கு இடையிலான 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி சென். ஜோன்ஸ் கல்லூரியை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த முறையில் செயற்படும் பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்றிருந்தது. …
-
- 0 replies
- 230 views
-
-
UEFA யின் சிறந்த வீரர் விருதிற்கு தெரிவாகியுள்ள வீரர்கள் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஓன்றியமான UEFA யின் 2017/18 ஆம் பருவகாலத்திற்கான சிறந்த கால்பந்து வீரர் விருதிற்கான இறுதிப் பெயர் பட்டியல் திங்கட்கிமை (20) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் லுகா மொட்ரீச், முஹமட் சலாஹ் மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். UEFA யின் சிறந்த வீரர் விருதிற்கான இறுதி மூவரைக் கொண்ட பெயர் பட்டியலானது பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மூலம் வழங்கப்படும் மொத்த வாக்குகளின் அடிப்படையிலே தெரிவு செய்யப்படுகின்றது. அதனடிப்படையில் 80 பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் 55 ஊடகவியலாளர்களால் லுகா மொட்ரீச், முஹமட் சலாஹ் மற்ற…
-
- 0 replies
- 562 views
-
-
"விராட் கோலிதான் உலகின் மிகச்சிறந்த வீரர்" - முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இங்கிலாந்து இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் விளாசியதை தொடர்ந்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான், உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலிதான் என பாராட்டியிருக்கிறார். படத்தின் காப்புரிமைPHILIP BROWN…
-
- 0 replies
- 487 views
-
-
லா லிகா: வென்றது பார்சிலோனா ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற அலாவேஸ் அணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் லா லிகாவின் நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா வென்றது. பார்சிலோனா சார்பாக, லியனல் மெஸ்ஸி இரண்டு கோல்களையும் பிலிப் கோச்சினியோ ஒரு கோலையும் பெற்றனர். http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/லா-லிகா-வென்றது-பார்சிலோனா/44-220511 ஆர்சனலை வென்றது செல்சி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில்,…
-
- 1 reply
- 626 views
-
-
சர்வதேச போட்டிகள் அனைத்திலிருந்தும் ஓய்வு- அறிவித்தார் மிட்ச்செல் ஜோன்சன் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஜோன்சன் சர்வதேச போட்டிகள் அனைத்திலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் ஒரு நாள் மற்றும் ரி20 போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றிருந்த ஜோன்சன் லீக் போட்டிகளில் விளையாடிவந்தார். 2016-17 பிக்பாஸ் லீக்கில் சிறப்பாக விளையாடிய அவர் பேர்த் ஸ்கோர்ச்சர்ஸ் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு காரணமாகயிருந்தார். மேலும் ஜோன் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியிருந்தார். இந்நிலையில் உடல்உபாதைகள் தொடர்வதன் காரணமாக அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். என…
-
- 0 replies
- 485 views
-
-
லியாண்டர் பயஸ் திடீர் விலகல்: டென்னிஸில் மட்டுமல்ல சர்ச்சைகளிலும் நாயகன் வந்தனா,பிபிசி தொலைகாட்சி ஆசிரியர் (இந்திய மொழிகள்) இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சர்வதேச அரங்கில் 17 வயதிலேயே களம் இறங்கிய லியாண்டர் பயஸ், கடந்த 28 ஆண்டுகளாக ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் பல்வேறு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். படத்தின் காப்புரிமைGETT…
-
- 0 replies
- 497 views
-
-
13 வயதில் தேசிய மட்ட கிரிக்கெட்டில் பிரகாசித்த யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி எண்டன் அபிஷேக் இறுதியாக இடம்பெற்ற 13 வயதின் கீழ் பிரிவு இரண்டு பாடசாலைகள் கிரிக்கெட் தொடரில் எந்தவித தோல்வியையும் சந்திக்காத யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி தேசிய மட்ட சம்பியன் பட்டம் வென்று பிரிவு ஒன்றுக்கு தரமுயர்த்தப்பட்டது. குறித்த தொடரில் பந்து வீச்சில் 80 இற்கும் அதிகமான விக்கெட்டுக்களையும், 1200 இற்கும் அதிகமான ஓட்டங்களையும் பெற்ற சென் ஜோன்ஸ் கல்லூரி அணித் தலைவர் எண்டன் அபிஷேக் http://www.thepapare.com/
-
- 0 replies
- 525 views
-
-
ஜகார்த்தா ஆசியப் போட்டிகள் 2018: கோலாகல தொடக்கம் ஆசியப் போட்டி தொடக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற வாணவேடிக்கை. * வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் * வாண வேடிக்கைகள் * நீரஜ் சோப்ரா தலைமையில் இந்தியா அணிவகுப்பு 18-ஆவது ஆசியப் போட்டிகள் 2018 சனிக்கிழமை மாலை ஜகார்த்தாவில் கோலாகலமாகத் தொடங்கியது. முதல் ஆசியப் போட்டிகள் கடந்த 1951-இல் புதுதில்லியில் தொடங்கி நடைபெற்றது. அதன்பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முடிவின்படி 18-ஆவது ஆசியப் போட்டிகள் இந்தோனேஷியாவுக்கு ஒதுக்கப்பட்டன. இதன் வரலாற்றிலேயே முதன்முறையாக இரு நகரங்களில…
-
- 11 replies
- 1.8k views
-
-
யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்டத்திடலில் ஆதிக்கம் செலுத்திய மட்டக்களப்பு சென். மைக்கல்ஸ் கல்லூரி இலங்கை பாடசாலை கூடைப்பந்தாட்ட சங்கம் நடாத்தும் பதினைந்து வயதுக்கு உட்பட்ட பாடசாலை வீரர்களிற்கான கூடைப்பந்தாட்டப் போட்டி இந்த வருடம் வடக்கு கிழக்கு இணைந்த முறையில் முதல் முறையாக யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத் திடலில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த எட்டு பாடசாலைகள் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பாடசாலையும் போட்டி நிரலில் காணப்பட்ட போதும் மொத்தமாக எட்டு அணிகள் மாத்திரம் போட்டியில் பங்குபற்றியிருந்தன. 10.08.2018 அன்று காலை 7 மணியளவில் போட்டிகள் ஆரம்பமாகி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றன. போட்டித் தொடரில் காற…
-
- 0 replies
- 354 views
-
-
அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை நாட்டியதமிழக சிறுமி… தமிழகத்தின் சென்னையை சேர்ந்த மூன்று வயதான சிறுமி சஞ்சனா மூன்றரை மணித்தியாலத்தில் ஆயிரத்து 111 அம்புகளை எய்தி உலக சாதனைக்கு முயன்று மூலம் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். வில்வித்தையில் ஆர்வம் கொண்ட சிறுமி சஞ்சனா தனது 3 வயதிலேயே கின்னஸ் சாதனைக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சென்னை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பிரேம்நாத் என்பவரின் மகளான சஞ்சனா பிரபல கராத்தே வீரரும், வில் வித்தை பயிற்சி அளித்து வருபவருமான ஷிஹான் ஹுசேனியிடம் பயிற்சி பெற்று வருகின்றார். இச் சிறுமி ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதை வாழ்வின் இலட்சியமாக கொண்டுள்ளார். சமீபத்தில் செ…
-
- 1 reply
- 435 views
-
-
பாகிஸ்தான் வீரர் நசீர் ஜம்ஷீடுக்கு 10 ஆண்டுகள் தடை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நசீர் ஜம்ஷீட், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை 10 ஆண்டுகள் போட்டித் தடை விதித்துள்ளது. கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறும் பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) தொடரின், 2016/17 பருவகாலத்தின் போது, நசீர் ஜம்ஷீட் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த தண்டனையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின், ஊழல் எதிர்ப்பு பிரிவு வழங்கியுள்ளது. இதுதொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் ஊழல் தடுப்பு பிரிவு, நசீர் ஜம்ஷீட் …
-
- 0 replies
- 409 views
-
-
-
- 0 replies
- 400 views
-
-
குரோசியாவின் மரியோ மாண்ட்சுகிச் ஓய்வு குரோசியா கால்பந்து அணியின் முன்கள வீரரான மரியோ மாண்ட்சுகிச் ( Mario Mandzukic ) சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ரஸ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் குரோசியா 2-4 எனத் தோல்வியடைந்து கிண்ணத்தினைக் கைப்பற்றும் வாய்ப்பை இழந்திருந்தது. இந்தநிலையில். 11 வருடமாக குரோசியா அணிக்காக விளையாடி வரும் மாண்ட்சுகிச் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். இத்தாலியில் உள்ள யுவான்டஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், குரோசியா அணிக்காக 89 போட்டிகளில் விளையாடி 33 கோல்கள் போட்டுள்ளதுடன் இரண்டு உலகக்கோப்பை மற்றும் மூன்று ஐரோப்பிய சம்பிய…
-
- 0 replies
- 365 views
-
-
உலக சம்பியன் பிரான்ஸ் பிஃபா தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றம் Image Courtesy - Getty Images சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தரவரிசைப் பட்டியலில் பிஃபா உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் ஒன்றரை தசாப்தத்திற்கு பின் முதலிடத்திற்கு முன்னேறியதோடு முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜேர்மனி 12 ஆண்டுகளில் தனது மோசமான தரநிலையை பதிவு செய்துள்ளது. கடந்த ஜுலை மாதம் 15 ஆம் திகதி முடிவடைந்த பிஃபா உலகக் கிண்ண போட்டிக்கு பின் சரியாக ஒரு மாதம் கடந்த நிலையில் பிஃபா உலகத் தரவரிசை இன்று (16) புதுப்பிக்கப்பட்டது. இதில் உலகக் கிண்ணத்தில் சோபித்த அணிகள் அதிரடி முன்னேற்றங்கள் கண்டிருப்பதோடு அந்த தொடரில் ஏமாற்றம் தந்த அணிகள் பின்னடைவை சந்தித்துள்ளன. …
-
- 0 replies
- 322 views
-
-
ரியல் மெட்ரிடை வீழ்த்திய அட்லடிகோ மெட்ரிடுக்கு UEFA சுப்பர் கிண்ணம் Photograph: Lukas Schulze/Uefa via Getty Images கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்றி ரியல் மெட்ரிட் அணி விளையாடிய முதல் போட்டியிலேயே அட்லடிகோ மெட்ரிட் அணியிடம் 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியுற்றதன் மூலம் 2018/19ஆம் பருவகாலத்திற்கான UEFA சுப்பர் கிண்ணத்தை அட்லடிகோ மெட்ரிட் அணி தன்வசப்படுத்தியது. கடந்த பருவகாலத்திற்கான UEFA ஐரோப்பா கிண்ணத்தை கைப்பற்றிய அட்லடிகோ மெட்ரிட் அணிக்கும், கடந்த பருவகாலத்திற்கான UEFA சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றிய ரியல் மெட்ரிட் அணிக்கும் இடையில் சுப்பர் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டி எஸ்டோனியாவில் உள்ள லி குக் அரீனா அரங்கில் இடம்பெற்றது. இந்த…
-
- 0 replies
- 269 views
-
-
'ஒருநாள் இரவில் ஹர்திக் பாண்டியா கபில்தேவ் ஆகிவிட முடியாது'- பொரிந்து தள்ளிய ஹர்பஜன் சிங் ஜாம்பவான் கபில்தேவுடன் ஹர்திக் பாண்டியாவை ஒருபோதும் ஒப்பிடாதீர்கள், ஒருநாள் இரவில் யாரும் கபில்தேவ் ஆகிவிட முடியாது என்று மூத்த வீரர் ஹர்பஜன் சிங் கடுமையாகச் சாடியுள்ளார். இந்திய அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்டியாவின் ஆல் ரவுண்டர் திறமையை வைத்து ரசிகர்கள் கபில்தேவுடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். எதிர்கால இளம் கபில்தேவ் என்று ஹர்திக் பாண்டியா ரசிகர்களால் வர்ணிக்கப்படுகிறார். பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் குறிப்பிடத்தகுந்த அளவு பங்களிப்பைச் செய்ய வேண்டியதும், அணி இக்கட்டான நேரத்தில் சிக்கும் போது தூக்கி நிறு…
-
- 0 replies
- 341 views
-
-
ஸ்பெயின் கால்பந்து வீரர் டேவிட் சில்வா ஓய்வு டேவிட் சில்வா. ஸ்பெயின் கால்பந்து மூத்த வீரர்களில் ஒருவரான டேவிட் சில்வா சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஸ்பெயின் கால்பந்து அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக இருந்தவர் டேவிட் சில்வா. 32 வயதான சில்வா, தற்போது மான்செஸ்டர் சிட்டி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை ஸ்பெயின் அணிக்காக 125 போட்டிகளில் பங்கேற்று 35 கோல்கள் அடித்து சாதனை புரிந்துள்ளார். சமீபத்தில் ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் நாக்அவுட் சுற்றோடு வெளியேற்றம் கண்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் டேவிட் சில்வாவும் ஓய்வு …
-
- 0 replies
- 274 views
-
-
முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் (வயது 77) உடல்நலக்குறைவால் காலமானார். மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அந்நிய மண்ணில் வென்ற பெருமைக்குரியவர் வடேகர். இடது கை பேட்ஸ்மேனான இவர், 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 14 அரை …
-
- 0 replies
- 398 views
-
-
வடக்கு, கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 66 போட்டிகள், பிரமாண்டமான பரிசுத் தொகை இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அங்கீகாரத்துடன் 'IBC தமிழ்' நிறுவனத்தினால் நடாத்தப்படும் வடக்கு ,கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி கடந்த மே மாதம் வெகு விமரிசையாக ஆரம்பாமாகி யாழ்ப்பாணத்தில் நடபெற்று வருகின்றது. ஓகஸ்ட் மாதம் 26ம் திகதி வரை நடைபெறவுள்ள இச்சுற்றுப்போட்டியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து மொத்தமாக 12 அணிகள் கலந்து கொள்கின்றன. …
-
- 0 replies
- 279 views
-