விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
கேலி செய்த ரசிகர்களை ‘பைசைக்கிள் கிக்’ கோல் மூலம் திகைக்க வைத்த ரொனால்டோ ரொனால்டோ அடித்த பைசைக்கிள் கிக் ஷாட் கோல். - படம். | ஆல்பர்ட்டோ லிங்ரியா. டியூரினில் நடைபெற்ற யுஏஃபா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரியால் மேட்ரிட் 3-0 என்ற கோல் கணக்கில் யுவண்டஸ் அணியை காலிறுதி முதல் லெக் ஆட்டத்தில் வீழ்த்தியது. இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த பைசைக்கிள் கிக் கோல் ரொனால்டோ ரசிகர்களை எழுச்சியுறச் செய்துள்ளது. ரியால் மேட்ரிட் வீரர் டேனி கார்வஜல் பந்தை லேசாக தூக்கி விட கோல் அருகில் இருந்த ரொனால்டோ கோலுக்கு முதுகைக் காட்டிக் கொண்டிருந்த நிலையில் அப்படியே காற்றில் கால்க…
-
- 2 replies
- 771 views
-
-
பாகிஸ்தானிற்கு உலக அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டும் - சப்ராஸ் அகமத் பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் செய்வது குறித்த தங்கள் எண்ணத்தை உலக கிரிக்கெட் அணிகள் மாற்ற வேண்டும் பாக்கிஸ்தானிற்கு அந்த அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் சப்ராஸ் அகமத் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தானில் இடம்பெற்ற மேற்கிந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு - 20 தொடரை பாக்கிஸ்தான் அணி 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியதை தொடர்ந்தே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் இருப்பதற்கு அணிகள் இனிமேல் காரணங்களை முன்வைக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர், இன்றைய போட்டியை பார்ப்பதற…
-
- 0 replies
- 332 views
-
-
வரலாற்று சிறப்புமிக்க வெற்றியுடன் விடைபெற்றார் மோர்னே மோர்கல் தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளரான மோர்னே மோர்கல் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியுடன் விடைபெற்றார். #SAvAUS #MorneMorkel தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் மோர்னே மோர்கல். 33 வயது 179 நாட்களாகும் இவர், தென்ஆப்பிரிக்கா அணிக்காக கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி இந்தியாவிற்கு எதிரான டர்பன் டெஸ்டில் அறிமுகமானார். அதன்பின் அந்த அணியின் ம…
-
- 0 replies
- 403 views
-
-
முரளிக்காக அர்ஜுனா, அர்ஜுனாவுக்காக கதிர்காமர் பந்தை சேதப்படுத்திய சர்ச்சை இன்று அவுஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு அப்பால் அந்த நாட்டினது கௌரவப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. எனவே, கிரிக்கெட் ஜாம்பவான் சேர் டொன் பிரெட்மன் அளவுக்கு ஒப்பிட்டு புகழப்பட்ட அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் அனுபவ வீரர் டேவிட் வோர்னர் என இரு முன்னணி வீரர்களை இழக்கும் அளவுக்கு இந்த விடயம் சென்றது. 1970களில் கெர்ரி பாக்கர் காலத்துக்கு பின்னர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அதன் மோசமான காலத்திற்கு முகம்கொடுத்துள்ளது. கெர்ரி பாக்கர், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மற்றும் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தையே மீறி உலகக் கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்தியபோது அதில் பங்கேற்ற தனத…
-
- 0 replies
- 413 views
-
-
கோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ; நாளை ஆரம்பம் : அச்சுறுத்தலாக அமையும் காலநிலை கடந்த 1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெற்றுவரும் கொமன்வெல்த் விளையாட்டுப்போட்டி நாளை அவுஸ்திரேலியாவின் கோல்கோஸ்ட் நகரில் ஆரம்பமாகின்றது. இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து இந்த கொமன்வெல்த் விளையாட்டு போட்டி இடம்பெற்று வருகின்றது. இம்முறை பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் (கொமன்வெல்த் விளையாட்டு) 6, 600 வீர வீராங்கனைகள் போட்டியிடவுள்ளனர். இம்முறை நடைபெறவுள்ள போட்டிகளில் ஆண் பெண் இருபாலாருக்கும் சரிசமமான தங்கப்பதக்கங்கள் வழங்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும். ஒலிம்பிக், ஆச…
-
- 2 replies
- 403 views
-
-
’103 பந்துகளில் 7 ரன்கள்... பட்டையைக் கிளப்பிட்டான்ல..!’ இதான் டெஸ்ட் மேட்ச் #NZvENG டி-20, டி-10, ஐஸ் கிரிக்கெட் வரை பார்த்துவிட்ட கிரிக்கெட் ரசிகர்கள், இன்று சர்வதேச 'பாக்ஸ் கிரிக்கெட்' ஆட்டத்தையும் பார்த்திருப்பார்கள். நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் ஆடிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி செஷன் அப்படித்தான் இருந்தது. பேட்டைச் சுற்றி 8 ஃபீல்டர்கள். பந்து பேட்டைத் தொட்டு 'எட்ஜ்' ஆனால் பிடிப்பதற்காக ஒற்றைக்காலில் காத்திருக்கிறார்கள். தூக்கி அடித்தாலும் முடிந்தது. பந்தை விடவும் முடியாது... யார்க்கர்கள் தாக்குகின்றன. உடலாலும் வாங்க முடியாது. எல்.பி ஆக வாய்ப்புண்டு. தோல்வி அருகாமையில் இருப்பதால் நெருக்கடி வேறு. இத்தனையையும் சமாளிப்பது …
-
- 0 replies
- 465 views
-
-
ராணுவ சீருடையில் பத்மபூஷண் விருது பெற்ற மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் மற்றும் வீரர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து உயரிய பத்மபூஷண் விருது பெற்றார். இந்திய அரசால் வழங்கப்படும் மிகப்பெரிய 3-ஆவது நிலை கௌரவமாக பத்மபூஷண் விருது உள்ளது. இதன்மூலம் இந்திய அளவில் பத்மபூஷன் பெறும் 11-ஆவது கிரிக்கெட் வீரர் எனும் பெருமையைப் பெற்றார். இந்த விழாவில் ராணுவ சீருடையில் வந்த மகேந்திர சிங் தோனி, ராணுவ அணிவகுப்பில் சென்று குடியரசுத் தலைவரிடம் இருந்து இவ்விருதை பெற்றார். புதுதில்லி குடியரசுத் தலைவர் மாளிகைய…
-
- 1 reply
- 538 views
-
-
2018 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணம் இலங்கையில்? இந்த ஆண்டு செம்டம்பர் மாதம் இந்தியாவில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி விளையாடுவதில் சிக்கல்கள் உள்ள காரணத்தினால், குறித்த தொடரினை இலங்கையில் நடாத்த ஆசிய கிரிக்கெட் வாரியம் (ACC) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு சிங்கப்பூரில் இடம்பெற்ற ஆசிய கிரிக்கெட் வாரியத்தின் கூட்டத் தொடரின் போது, 2018ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரினை நடாத்தும் நாடாக இந்தியா பெயரிடப்பட்டிருந்தது. எனினும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அயல் நாடுகளிடையே அரசியல் ரீதியாக குளறுபடிகள் நீடிப்பதால் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்து விளையாடுவதில் பிரச்சினைகள் இருக்க…
-
- 0 replies
- 355 views
-
-
உலகக்கோப்பை ஜெயிச்சு 7 வருஷமாச்சு... தோனியின் அந்த சிக்ஸர் இன்னமும் கண்ணுக்குள்ளே..! #OnThisDay #2011CWC 28 ஆண்டு கால உலகக்கோப்பை கனவுக்கும், 121 கோடி மக்களின் ஏக்கத்துக்கும் தீனிபோட்ட நாள், ஏப்ரல் 2, 2011. சச்சின் ஒருமுறையாவது உலகக்கோப்பையைத் தன் கையால் தொடுவாரா? சொந்தமண்ணில் இதுவரை எந்த நாடும் கோப்பையை வென்றதில்லை. இந்திய அணி அந்தச் சாதனையைப் படைக்குமா போன்ற பல கேள்விகளுக்குப் பதில் கிடைத்த நாள் அது. ஆம், இந்திய கிரிக்கெட் அணி, உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்து, இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்திய 10-வது உலகக்கோப்பைத் தொடர், 2011-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி …
-
- 0 replies
- 371 views
-
-
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி அ-அ+ வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. #PAKvWI #KarachiT20I கராச்சி: பாகிஸ்தான் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அங்கு சுமார் 10 ஆண்டுக…
-
- 1 reply
- 389 views
-
-
தாய்நாட்டுக்கு ஆட ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க மறுத்த குசல் பெரேரா பந்தை சேதப்படுத்திய சர்ச்சையால் தடை விதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய உப அணித் தலைவர் டேவிட் வோர்னருக்கு பதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அழைக்கப்பட்ட இலங்கையின் முன்னணி வீரர் குசல் பெரேரா அந்த அழைப்பை நிராகரித்துள்ளார். இதனை அடுத்து சன்ரைசர்ஸ் அணிக்கு இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் ஒப்பந்தமாகியுள்ளார். இலங்கை டெஸ்ட் அணிக்கு திரும்பும் இலக்குடனும் சில காயங்களினைக் கருத்திற் கொண்டதன் காரணமாகவுமே குசல் பெரேரா இந்த ஆண்டு ஐ.பி.எல் அழைப்பை நிராகரித்ததாக அவரது முகாமையாளர் ரவி டி சில்வா உறுதி செய்துள்ளார். இலங்கை அணியின் அடுத்த தொடரான மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தில் பங்கேற்பது…
-
- 0 replies
- 502 views
-
-
சம்பியனானது பரிஸ் ஸா ஜெர்மைன் பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான தொடரான பிரெஞ்சு லீக் கிண்ணத் தொடரில் பரிஸ் ஸா ஜெர்மைன் சம்பியனானது. போர்டெக்ஸ் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற குறித்த போட்டியில், பரிஸ் ஸா ஜெர்மைனின் நட்சத்திர முன்கள வீரரான கிலியான் மப்பே மொனாக்கோவின் கமில் கிலிக்கால் வீழ்த்தப்பட்டார். இதனையடுத்து, காணொளி உதவி மத்தியஸ்தருடன் மூன்று நிமிடங்களளவில் ஆலோசித்த கிளமன்ட் டுர்பின், பரிஸ் ஸா ஜெர்மைனுக்கு பெனால்டி வழங்குவதை உறுதிப்படுத்தினார். இந்நிலையில், குறித்த பெனால்டியை பரிஸ் ஸா ஜெர்மைனின் இன்னொரு நட்சத்திர முன்கள வீரரான எடின்சன் கவானி கோலாக்க, போட்டியின் எட்டாவது நிமிடத்திலேய…
-
- 1 reply
- 701 views
-
-
வடக்கு, கிழக்கில் கால்பந்து நிலைமை எவ்வாறு உள்ளது? இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வீரர்களை உள்வாங்குவதற்கான தேர்வு முகாம்கள் (Trials) இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) ஏற்பாட்டில் இரண்டு மாகாணங்களுக்கும் வெவ்வேறு கட்டங்களாக கடந்த வாரம் நடைபெற்று முடிந்திருக்கின்றன. கடந்த காலங்களில் சர்வதேசப் போட்டிகள் எதிலும் பங்கு கொள்ளாத இலங்கை கால்பந்து அணி, FIFA தரவரிசையில் வரலாற்றில் மிகவும் மோசமான பதிவாக தற்போது 200ஆவது இடத்தில் உள்ளது. இவ்வாறான ஒரு நிலையில், இலங்கையின் கால்பந்து விளையாட்டில் பல முன்னேற்றங்களை மேற்கொள்வதற்கான திட்டங்களை வகுத்து இருக்கின்ற இலங்கை கால்பந்து சம்மேளனம், அதன் முதற்க…
-
- 0 replies
- 347 views
-
-
என் கணவரின் தவறுக்கு நானே காரணம்- வார்னரின் மனைவி உருக்கம்: வெளிவராத புதிய தகவல்கள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், அவரின் மனைவி கேண்டிஸ் வார்னர் - படம்: ஏஎப்ஃபி பந்தை சேதப்படுத்தியதில் சிக்கி 12 மாதங்கள் தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் செயலுக்கு தானே காரணம் என்று அவரின் மனைவி கேன்டிஸ் தெரிவித்துள்ளார். கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில்ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப் ஆகியோர் சிக்கினார்கள். இதில் டேவிட் வார்னர், ஸ்மித்துக்கு 12 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 342 views
-
-
மெஸ்சியின் கடைசி நிமிட கோலால் சாதனையை தக்க வைத்தது பார்சிலோனா லா லிகா கால்பந்து லீக் செவியாவிற்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்சியின் கடைசி நிமிட கோலால் பார்சிலோனா சாதனையை தக்கவைத்தது. #LaLiga #Messi ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து லீக்கில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் செவியா - பார்சிலோனா அணிகள் மோதின. சொந்த மைதானத்தில் செவியா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் பிரான்கோ வாஸ்குயிஸ் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் செவியா 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேர ஆட்டத்தில் 50-வது நிமிடத்தில் லூயிஸ…
-
- 0 replies
- 275 views
-
-
‘பால் டாம்பரிங்’ விவகாரத்தில் கோபம்: ஸ்டீவ் ஸ்மித்தின் கிரிக்கெட் சாதனங்களை வீசி எறிந்த தந்தை ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தை ஆற்றுப்படுத்தும் அவரின் தந்தை பீட்டர் - படம்: ஏஎப்ஃபி பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் சிக்கி 12 மாதங்கள் தடை பெற்ற ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் கிரிக்கெட் உபகரணங்களை, அவரின் தந்தை பழைய பொருட்கள் வைக்கும் அறையில் வீசி எறிந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது, பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோர் சிக்கினார்கள். இந்த குற்றத்துக்கு …
-
- 0 replies
- 309 views
-
-
வாசிம் அக்ரம், ஷேன் வார்னேவை வியக்க வைத்த பாகிஸ்தானின் 2 சிறுவர்கள் ஹசனுக்கு பந்துவீச்சு பயிற்சி அளித்த வாசிம் அக்ரம் - படம் உதவி: ட்விட்டர் பாகிஸ்தானில் உள்ள இரு 6 வயது சிறுவர்கள் தங்களின் பந்துவீச்சால் வாசிம் பாகிஸ்தானில் உள்ள 6 வயது சிறுவர்கள் இருவர் தங்களின் பந்துவீச்சால் வாசிம் அக்ரத்தையும், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னேவையும் கவர்ந்துள்ளனர். இருவரின் பந்துவீச்சைப் பார்த்து வியந்து பாராட்டியுள்ளனர். இந்த இரு சிறுவர்களின் பந்துவீச்சு குறித்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. பாகிஸ்தானின் குவெட்டா நகரைச் சேர்ந்த சிறுவன் அலி மிகால் கான். இவருக்கு மற்றொ…
-
- 0 replies
- 313 views
-
-
ரிவர்ஸ் ஸ்விங் ஒரு கலை, ஏமாற்று வேலை என்பது முட்டாள்தனம்: பாகிஸ்தான் ‘பிதாமகன்’ சர்பிராஸ் நவாஸ் சாடல் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சர்பிராஸ் நவாஸ் : கோப்புப் படம் - படம்: ஏபி கிரிக்கெட்டில் ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீசுவது என்பது ஒரு கலையாகும். பந்தை சேதப்படுத்திதான் அதை வீசுகிறோம், ஏமாற்றுத்தனம் என்று கூறுவது முட்டாள்தனமானது என்பது பாகிஸ்தான் ரிவர்ஸ் ஸ்விங் பிதாமகன் சர்பிராஸ் நவாஸ் சாடியுள்ளார். ரிவர்ஸ் ஸ்விங் சுல்தான்(ராஜா) என்று அழைக்கப்படும் இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் ஆகியோருக்கு ரிவர்ஸ் ஸ்விங் கலையை கற்றுக்கொடுத்தவர் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சர்பிராஸ் நவாஸ் என்…
-
- 0 replies
- 404 views
-
-
நியூஸிலாந்துடன் 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து வீரர் ஜான் பேர்ஸ்டோ அபார ஆட்டம்- 5 விக்கெட்களைச் சாய்த்தார் சவுதி பந்தை பவுண்டரிக்கு விரட்டும் நியூஸிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ - படம்: ராய்ட்டர்ஸ். நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்துள்ளது. ஜான் பேர்ஸ்டோ அபாரமாக ஆடி 97 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இங்கிலாந்து அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது…
-
- 4 replies
- 374 views
-
-
2015 உ.கோப்பை இறுதியில் 150/3-லிருந்து சரிந்தோம், பால் டேம்பரிங்?: நியூஸி.வீரர் கிராண்ட் எலியட் ஐயம் 2015 உ.கோப்பை அரையிறுதியில் சிக்ஸ் அடித்து வென்ற கிராண்ட் எலியட். - படம். | ராய்ட்டர்ஸ். 2015 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா பால் டேம்பரிங் செய்துதான் வெற்றி பெற்றதோ என்று நியூஸிலாந்து அதிரடி வீரர் கிராண்ட் எலியட் சந்தேகம் எழுப்பியுள்ளார். மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலியா நியூஸிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது, அந்த இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி 150/3 என்ற நிலையிலிருந்து 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 39/3 என்ற நிலையிலிருந்து கிராண்ட் எலியட் , ராஸ் டெ…
-
- 0 replies
- 242 views
-
-
சன் கண்டுபிடித்த ஆப்கன் மன்னன்! கடந்த 2017ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்காக ‘ஹைதராபாத் சன் ரைசர்ஸ்’ அணி, நாலு கோடி ரூபாய் கொடுத்து ஊர் பேர் தெரியாத ஒரு பதினெட்டு வயது வீரரை ஏலம் எடுத்தபோது அனைவருமே ஆச்சரியப்பட்டார்கள். போயும் போயும் கத்துக்குட்டி ஆப்கானிஸ்தான் அணியின் சின்னப்பயலையா இவ்வளவு பெரிய தொகைக்கு எடுக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டார்கள். ஆனால், சன் ரைசர்ஸின் கணக்கு என்றுமே தப்பாது. சொல்லி அடித்த கில்லியாக ஐபிஎல்லில் மட்டுமல்ல, சர்வதேச கிரிக்கெட்டிலும் இன்று ஒப்பற்ற சாதனை மன்னன் வேறு யாருமல்ல, ரஷித்கான்தான். ஆப்கானிஸ்தான் அணியின் மாயாஜால வலதுகை சுழல்பந்து மன்னன். ஒரு நாள் மற்றும் டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இன்று நெம்பர் ஒன்…
-
- 0 replies
- 471 views
-
-
பேங்க்ராஃப்ட, ஸ்மித் இருவரும் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்பது ஏன்?! ``நான் தவறு செய்துவிட்டேன். நான் பொய் சொல்லிவிட்டேன். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இழிவைத் தேடித்தந்துவிட்டேன். ஆஸ்திரேலியக் குழந்தைகளும், உலகம் முழுவதும் கிரிக்கெட் பார்க்கும் சிறுவர்களுக்கும் நாங்கள் முன் உதாரணமாக இருந்திருக்க வேண்டியவர்கள். ஆனால், நாங்கள் தவறுசெய்துவிட்டோம். குழந்தைகள், சிறுவர்கள் எங்களை மன்னிக்கவேண்டும்'' என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பேங்க்ராஃப்ட் இருவருமே மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். ஏன் இருவருமே குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்கிறார்கள்? 2006 உலகமே ஒன்றுதிரண்டு பார்த்த உலகக்கோப்பை கால்பந்தின் இறுதிப்ப…
-
- 0 replies
- 629 views
-
-
என் இதயத்தின் ஆழத்திலிருந்து நான் ஸ்மித்துக்காக வருந்துகிறேன்: டுபிளெசிஸ் ஆறுதல் மெசேஜ் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளெசிஸ். - படம். | கெட்டி இமேஜஸ். 12 மாதங்கள் தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு அளிக்கப்பட்ட தண்டனை கொஞ்சம் கடுமையானதுதான் என்று தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுபிளெசிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: ருந்துகிறேன். ஒருவருக்கும் இப்படி நடந்து விடக்கூடாது என்பதே என் கவலை. வரும் நாட்கள் அவருக்கு விவரிக்க முடியாத அளவுக்கு கடினமாக அமையும். அதனால்தான் அவருக்காக குறுஞ்செய்தி அனுப்பி ஆறுதல் தெரிவித்தேன்…
-
- 0 replies
- 226 views
-
-
முதல் முறையல்ல, பந்தை சேதப்படுத்தியதற்காக ஸ்மித், வார்னர் ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டனர்: போட்டி நடுவர் பகீர் தகவல் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் : கோப்புப் படம் - படம்: கெட்டி இமேஜஸ் பந்தை சேதப்படுத்தும் சம்பவத்தில் டேவிட் வார்னரும், ஸ்டீவ் ஸ்மித்தும் ஈடுபடுவது முதல்முறை அல்ல, ஏற்கெனவே உள்நாட்டு போட்டிகளில் இதுபோல் செய்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது என்று போட்டி நடுவர் டேர்ல் ஹார்பர் பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது, பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் கேமரூன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோரு…
-
- 1 reply
- 236 views
-
-
மக்களை தலைகுனியச் செய்துவிட்டேன்: கிரிக்கெட் வீரர் பான்கிராப்ட் உருக்கம் பான்கிராப்ட். - AFP பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் நான் பொய் சொன்னதற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன். சம்பவம் நடந்தபோது பயத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆஸ்திரேலிய மக்களை தலைகுனியச் செய்துவிட்டேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேமரூன் பான்கிராப்ட் தெரிவித்தார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பான்கிராப்டுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 9 மாத தடை விதித்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை பான் கிராப்ட் தென் ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பினார். இதுதொடர்பாக பெர்த் நகரில் செய்தியாளர்களிடம…
-
- 0 replies
- 214 views
-