விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
எல்லை கடந்து இலங்கை ஆதரவு: காஷ்மீர் சிறுமிகளுக்கு ‘ரக்பி’ பயிற்சி அளிக்கிறார் முன்னாள் அதிபர் மகன் சென்னையில் காஷ்மீர் சிறுமிகள் ரக்பி பயிற்சி எடுத்த காட்சி : கோப்புப் படம் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே காஷ்மீர் சிறுமி ரக்பி அணிக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மகிந்திரா ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே சிறந்த ரக்பி வீரர். இவர் தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக இருந்து வருகிறார். இலங்கை ஆடவர் ரக்பி அணியின் முன்னாள் கேப்டனாகவும் நமல் ராஜபக்சே இருந்துள்ளார். இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தின் ரக்பி மகளிர் அணிக்கு தேவை…
-
- 1 reply
- 337 views
-
-
புதிரா? சவாலா? ஏ.பி.டிவில்லியர்ஸைக் கண்டு அலறும் ஆஸி. ஊடகங்கள் 2வது டெஸ்ட்டில் ஆஸி. பவுலர் கமின்சை விளாசும் டிவில்லியர்ஸ். - படம். | ராய்ட்டர்ஸ். ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நடப்புத் தொடரில் பவுலர்களுக்கு பெரும் சவாலாகத் திகழ்ந்து வருகிறார், மேலும் ஏபிடிவில்லியர்ஸுக்கு என்று ஒரு செல்வாக்கும் உள்ளது, அவரது சிறந்த இன்னிங்ஸ்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏபி.டிவில்லியர்ஸை மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா எப்படி அடக்கி ஆளும் என்ற கவலை ஆஸ்திரேலிய கேப்டனை விட ஆஸி.ஊடகங்களுக்கு அதிகம் ஏற்பட்டுள்ளது. ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ்.காம்.ஏயு என்ற ஆஸ்திர…
-
- 0 replies
- 219 views
-
-
வீரர்களின் உடலில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி உலகக்கோப்பைக்கு தயாராகும் இலங்கை அணி 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு தயார் செய்யும் வகையில்இ கிரிக்கெட் வீரர்களின் உடலில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி அவர்களின் திறன்இ உடல்தகுதிஇ காயம் ஏற்படாமல் தடுத்துல் போன்ற பணிகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஸ்பெயினின் பார்சிலோனா கால்பந்து அணியில் வீரர்களுக்காக செய்யப்பட்ட இந்த அதிநவீன முறை இப்போது இலங்கை வீரர்களுக்காக செய்யப்பட்டுள்ளது இதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் 75 ஆயிரம் அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த ஜிபிஎஸ் கருவி இலங்கை வீரர்களின் முதுகுப்பகுதியில் பொ…
-
- 2 replies
- 604 views
-
-
ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் அந்தஸ்தை பெற்றது நேபாளம் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நேபாளம் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை பெற்றுள்ளது. #ICC உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் டாப்-7 இடம் பிடிக்கும் அணிகள் வரும் 2022 வரை ஒருநாள் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்தை பெறும். இதில் வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகளுடன் சேர்த்து சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறிய ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் வரும் 2022 வரை ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கு…
-
- 1 reply
- 436 views
-
-
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று நாளை தொடக்கம் அ-அ+ வெஸ்ட் இண்டீஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நாளை தொடங்குகிறது. ஹராரே: வெஸ்ட் இண்டீஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நாளை தொடங்குகிறது. 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2019) மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது…
-
- 11 replies
- 1.2k views
-
-
பவர்பிளேவில் அசத்துவது அதிர்ஷ்டம்: மனம் திறக்கிறார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் வாஷிங்டன் சுந்தர் - THE HINDU பவர்பிளேவில் விக்கெட்கள் எடுக்கும் திறனை தான் கொண்டிருப்பது அதிர்ஷ்டவசமானது என தெரிவித்துள்ளார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர். இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி 20 தொடரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் பவர் பிளேவில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். 18 வயதான வாஷிங்டன் சுந்தர், ம…
-
- 0 replies
- 239 views
-
-
சாம்பியன்ஸ் லீக்- மெஸ்சியின் அபார ஆட்டத்தால் செல்சியை வீழ்த்தியது பார்சிலோனா சாம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மெஸ்சியின் அபார ஆட்டத்தால் செல்சியை வீழ்த்தி பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. #UCL #Barcelona #Chelsea சாம்பியன்ஸ் லீக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் ஒரு போட்டியில் பார்சிலோனா - செல்சியா அணிகள் மோதின. இரண்டு லெக்காக நடைபெறும் இந்த சுற்றின் முதல் ஆட்டம் கடந்த மாதம் 21-ந்தேதி செல்சிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா 1 கோல்கள் அடித்தனர். இதனால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. 2-வது லீக் நேற்று நள்ளிர…
-
- 1 reply
- 551 views
-
-
இலங்கை - இங்கிலாந்து தொடர் எதிர்வரும் ஒக்டோபரில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 வகையான கிரிக்கெட் போட்டிகளைக்கொண்ட தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இங்கிலாந்து அணி இலங்கைக்கு வருகைதரவுள்ளது. இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் 5 ஒருநாள் போட்டிகளும் 3 டெஸ்ட் போட்டிகளும் ஒரேயொரு இருபதுக்கு - 20 போட்டியும் இடம்பெறவுள்ளது. போட்ட…
-
- 0 replies
- 277 views
-
-
என் உடல், என் மனம், என் கிரிக்கெட்; எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: விராட் கோலி மும்பை விளம்பரதாரர் நிகழ்ச்சியில் விராட் கோலி. - படம். | விஜய் பேட். கிரிக்கெட் ஆட்டத்தில் பணிச்சுமை குறித்து பல நாட்டு வீரர்களும் தங்கள் கவலைகளை வெளியிட்டு வரும் நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலியும் பணிச்சுமை கொஞ்சம் அவரது உடலையும் பதம்பார்த்து வருகிறது, எனவே எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். மும்பையில் விளம்பர நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அவர் கூறும்போது, “உடல் ரீதியாக கொஞ்சம் காயங்கள் இருந்தன. அதனை தற்போது கடந்து வந்திருக்கிறேன். பணிச்சுமை என்னுடன் கொஞ்சம் ஒத்துப் போகாமல் கொஞ்…
-
- 0 replies
- 394 views
-
-
வெளியேற்றப்பட்டது மன்செஸ்டர் யுனைட்டெட் ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் வெளியேற்றப்பட்டது. தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று காலை இடம்பெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றின் இரண்டாவது சுற்றுப் போட்டியில், ஸ்பானிய லா லிகா கழகமான செவில்லாவிடம் தோற்றதைத் தொடர்ந்தே சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து மன்செஸ்டர் யுனைட்டெட் வெளியேற்றப்பட்டுள்ளது. செவில்லாவின் மைதானத்தில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய முதலாவது சுற்றுப் போட்டியில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாமல் 0-0 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலைய…
-
- 0 replies
- 379 views
-
-
பவுலர்கள் என்னை ‘ஒர்க் அவுட்’ செய்யத் தொடங்கி விட்டனர்: ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கவலை பௌலர்கள் ஒர்க் அவுட் செய்கின்றனரா? ஸ்மித் கவலை. - படம். | ஏ.எஃப்.பி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் சதமெடுக்கவில்லை. மாறாக தென் ஆப்பிரிக்காவின் மார்க்ரம், டிவில்லியர்ஸ் சதம் எடுத்துள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் 900 தாண்டிய புள்ளிகளுடன் டான் பிராட்மேனை நெருங்கும் தருணத்தில் இருந்தாலும் தென் ஆப்பிரிக்காவில் இடது கை ஸ்பின்னர்களிடம் வீழ்ந்து வருகிறார், மஹராஜிடம் இருமுறை, டீன் எல்கரிடம் ஒருமுறை தவிர ரபாடாவிடம் ஒருமு…
-
- 0 replies
- 190 views
-
-
ஐ.எஸ்.எல். கால்பந்து - கோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னையின் எப்.சி. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியின் 2-வது லெக் போட்டியில் சென்னையின் எப்.சி., கோவா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #HeroISL #FCGoa #ChennaiyinFC சென்னை: 10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்கள் பிடித்ததன் அடிப்படையில் அரையிறுதிக்கு பெங்களூரு, சென்னை, கோவா மற்றும் புனே அணிகள் தேர்வு பெற்றன. இதற…
-
- 1 reply
- 529 views
-
-
கண்ணை மறைக்கும் ஆத்திரம்: ரபாடாவின் சாதனையும் வேதனையும் சாதனையாளார் ரபாடாவின் அடக்க முடியாத உணர்வு. எதிரில் ஸ்மித். - படம். | ராய்ட்டர்ஸ். போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வாயை அடைக்கும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்காவின் சாதனையாளர் கேகியோ ரபாடா என்றால் மிகையாகாது. 11 விக்கெட்டுகளைச் சாய்த்தார். கேப்டன் ஸ்மித்தே முதல் இன்னிங்சில் ரபாடா வீசிய ஒரு ஸ்பெல்லை ‘ரியல்லி வெரி டிஃபிகல்ட் (உள்ளபடியே மிகக்கடினமானது) என்று வர்ணித்தார், எதிரணியின் கேப்டன்களில் பலர் இப்படி மனம் திறந்து இன்னொரு அணியின் வேகப்பந்து வீச்சாளரைப் பாராட்டுவது அரிது. 28 டெஸ்ட் போட்டிகளி…
-
- 2 replies
- 736 views
-
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 900 புள்ளிகளைக் கடந்த ரபாடா முதலிடம், அஸ்வின் 2 இடங்கள் முன்னேற்றம் கேகிஸோ ரபாடாவைப் பாராட்டும் தெ.ஆ. வீரர்கள். - படம். | ஏ.பி. ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் 900 புள்ளிகளைக் கடந்த தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா முதலிடம் பிடித்தார். இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 இடங்கள் முன்னேறி 4-ம் இடத்தில் இருக்கிறார். போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 150 ரன்களுக்கு 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதில் முக்கிய பங்காற்றியதால் ஆட்ட நாயகன் விருது பெற்றார் ரபாடா. 900 புள்ளிகளைக் கடந்த 23-வது…
-
- 0 replies
- 257 views
-
-
‘கோலியிடம் என்னைத் திருமணம் செய்து கொள்ளக் கேட்டேன், அவர் தன் பேட்டைப் பரிசாகக் கொடுத்தார்’ டேனியல் வியாட். இங்கிலாந்து வீராங்கனை. - படம். | கெட்டி இமேஜஸ். கடந்த நவம்பரில் மகளிர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20-யில் 56 பந்துகளில் சதம் எடுத்து டி20-யில் முதல் சதமெடுத்த இங்கிலாந்து வீராங்கனை என்று பெயரெடுத்த டேனி வியாட் தான் கோலி பரிசாகக் கொடுத்த பேட்டைப் பயன்படுத்துவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 2017 நவம்பர் 21-ம் தேதி நடைபெற்ற மகளிர் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 19 ஓவர்களில் 181/6 என்று வெற…
-
- 1 reply
- 476 views
- 1 follower
-
-
‘மன்னித்துவிடு மை ஜூனியர்’: அவுட் ஆக்கிய வீரரை ஆவேசமாக ’வழியனுப்பி’யதற்கு இளம் வீரரிடம் அஃப்ரீடி உருக்கம் சாஹித் அப்ரிடி ஆவேசமாக ஓய்வு அறையை நோக்கி கையை காண்பித்த காட்சி - படம் உதவி: ட்விட்டர் கராச்சி நகரில் நடந்த பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டியில் இளம் வீரரை வெளியேற்றி ஆவேசமாக பேசிவிட்டு, பின் அவரிடம் மனம்திறந்து மூத்த வீரர் ஷாஹித் அப்ரிடி மன்னிப்பு கோரியது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் ஷாஹித் அப்பிரிடி கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால், தொடர்ந்து உள்நாட்டு போட்டிகளிலும், கிரிக்கெட் லீக…
-
- 0 replies
- 304 views
-
-
இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் லிவர்பூலை 2-1 என வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட் மார்கஸ் ரஷ்போர்டின் சிறப்பான ஆட்டத்தால் லிபர்பூல் அணியை 2-1 என வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட். #EPL #MUFC #LFC இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் முன்னணி அணிகளான மான்செஸ்டர் யுனைடெட் - லிவர்பூல் அணிகள் மோதின. சுமார் 75 ஆயிர்கள் கூடியிருந்த ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் மான்செஸ்டர் யுனைடெட் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் லூகாக்கு கொடுத்த பாஸை கோலாக மாற்றினார் மார்கஸ் ரஷ்போர்ட். …
-
- 1 reply
- 355 views
-
-
வென்றது யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் அணி பிரியலக்சன், செல்ரன், டர்வினின் துடுப்பாட்டத்தால் சென். ஜோன்ஸ் (ஜொனியன்ஸ்) பழைய மாணவர் அணியை வீழ்த்தி, யாழ்ப்பாணம் மத்தி (சென்றலைட்ஸ்) பழைய மாணவர் அணி இலகு வெற்றியொன்றைப் பதிவு செய்தது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியினதும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினதும் பழைய மாணவர் அணிகளுக்கிடையிலான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியானது, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் பழைய மாணவர் அணி, 45 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 255 ஓட்டங்களைப் பெற்றது. …
-
- 0 replies
- 392 views
-
-
யாழில்.புறா பந்தயத்தில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசளிப்பு உலகின் மிகப் பழமையான விளையாட்டுக்களில் ஒன்றான புறாக்கள் இடையிலான பந்தயம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. பபுகயா (பந்தயப் புறாக்கள் கழகம் – யாழ்ப்பாணம் ரேஸிங் பீஜின்ஸ் கிளப் ஜெவ்னா) வின் ஏற்பாட்டில் குறித்த பந்தய போட்டி நடைபெற்றது. முதல் முறையாக 125 கிலோ மீற்றர் தூரத்துக்கான பந்தயம் மார்ச் முதல் வாரத்தில் இடம்பெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். நகரில் உள்ள விடுதியில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தின் பிரபல மருத்துவ நிபுணரும் நீண்ட காலமாகப் புறா ஆர்வலராக இருந…
-
- 0 replies
- 662 views
-
-
பாண்டியாவின் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறோம்: தினேஷ் கார்த்திக், ராகுல் நட்புக் கலாய்ப்பு கே.எல்.ராகுல், பாண்டியா - நன்றி. | பிசிசிஐ ட்விட்டர் பக்கம் எப்போதும் தன் மீதே அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே சில வேலைகளைச் செய்பவர் ஹர்திக் பாண்டியா என்ற பெயர் இந்திய கிரிக்கெட் அணியின் ஓய்வறையில் அவருக்கு உண்டு. அவர் தன் சுய முக்கியத்துவத்தை மிகவும் வலியுறுத்துபவர், கவன ஈர்ப்பு ஆசாமி என்றேல்லாம் பாண்டியாவை ஓய்வறையில் வீரர்கள் சிலர் நட்புக் கலாய்ப்புச் செய்வதும் உண்டு. இந்நிலையில் இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடருக்கான இந்திய அணியில் முக்க…
-
- 0 replies
- 288 views
-
-
‘கடித்துக் குதறும் நாயாக வார்னரை வளர்க்கின்றனர்; ஸ்மித், லீமேனுக்கும் தடை விதிக்க வேண்டும்’ : இயன் சாப்பல் கடும் சாடல் இயன் சாப்பல், வார்னர். - கோப்புப் படங்கள். வார்னர்-டிகாக் விவகாரத்தில் வார்னரை இவ்வாறு நடக்க ஊக்குவிப்பவர்கள் பயிற்சியாளர் டேரன் லீ மேனும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்த்தும்தான் எனவே இவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று இயன் சாப்பல் கடுமையாக சாடியுள்ளார். அசிங்கமாக நடந்து கொள்ளும் வார்னருக்கு கேப்டன் ஸ்மித், கோச் லீ மேன் மற்றும் விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் ஆகியோர் வக்காலத்து வாங்கிவரும் நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சாப்பல் இந்தப் போக்கைக் கடும…
-
- 2 replies
- 890 views
-
-
நியூஸி. பவுலிங்கை சிதறடித்த ஜானி பேர்ஸ்டோ: காட்டடி சதத்தில் தொடரை வென்றது இங்கிலாந்து 58 பந்துகளில் சதம் கண்ட பேர்ஸ்டோ. - படம். | ஏ.எஃப்.பி. கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 5-வது, இறுதி ஒருநாள் போட்டியில் பேர்ஸ்டோவின் காட்டடி சதம் மற்றும் அபார பந்து வீச்சில் இங்கிலாந்து அணி நியூஸிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒருநாள் தொடரை 3-2 என்று கைப்பற்றியது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 223 ரன்களுக்கு மடிய, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 32.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்குக் 229 ரன்கள் எடுத்து தொடரைக் கைப்பற்றியது. ராஸ் டெய்லர் அணியில் காயம் காரணமாக இடம்பெறாதது நியூசிலாந…
-
- 1 reply
- 368 views
-
-
யாழ். இந்து 37 ஓட்டங்களுடன் களத்தில் இந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும் மாபெரும் துடுப்பாட்டப்போட்டி யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி 165 ஓட்டங்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது. தற்போது யாழ். இந்துக் கல்லூரி விக்கெட் எதுவும் இழக்காத நிலையில் 37 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடிவருவதாகத் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/74794.html இந்து மைந்தர்களின் சமரில் ஆதிக்கம…
-
- 2 replies
- 707 views
-
-
ஐ.பி.எல் தொடருக்காக டெஸ்ட் போட்டிகள் புறக்கணிக்கப்படுகின்றனவா? #IPL `நேர்த்தியான கிரிக்கெட் போட்டிகளை ரசிக்க வேண்டுமெனில், டெஸ்ட் கிரிக்கெட்டைப் பாருங்கள்' என்றுதான் பலரும் சொல்வர். `அத்தகைய கிரிக்கெட் போட்டிகளின் எதிர்காலம் என்னவாகும்?' என்ற கேள்வியும் வெகுநாள்களாகவே விவாதிக்கப்பட்டுவருகிறது. இப்போது அந்தச் சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. ஐந்து நாள்கள் போட்டி என்பது, ரசிகர்களுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்துகிறது. டெஸ்ட் போட்டிகள் பெரும்பாலானோர் தங்கள் பணிகளில் இருக்கும் நேரத்தில் நடைபெறுவதால் அவற்றை காண்பதற்கான நேரம் கிடைக்கவில்லை எனப் பலரும் காரணம் சொன்னாலும், ஐந்து நாள்கள் முடிவுக்காகக் காத்திருக்கும் பொறுமையை நாம் இழந்துவிட்டோம் என்றே சொல்ல …
-
- 0 replies
- 369 views
-
-
கோலியை தேர்வு செய்ய எதிர்த்த தோனி; பலிகடாவான தமிழக வீரர் பத்ரிநாத்: அம்பலப்படுத்தினார் வெங்சர்க்கர் கோப்புப் படம் விராட் கோலி அணியில் இடம்பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2008-ம் ஆண்டு தமிழக வீரர் பத்ரிநாத் சுப்பிரமணியன் தேர்வு செய்யப்படவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமான திலிப் வெங்சர்க்கர் அம்பலப்படுத்தியுள்ளார். அணிக்குள் விராட் கோலியைத் தேர்வு செய்ய அப்போது கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனியும், பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கர், கடந்த 2006-ம் ஆண்டில் …
-
- 0 replies
- 335 views
-