Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. வேடன்;வாகீசன்;முருகப்பெருமான் - நிலாந்தன் சில மாதங்களுக்கு முன் கேரளாவை சேர்ந்த வேடனின் Rap – ரப் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பரவின. இப்பொழுது வாகீசனின் பாடல். வேடன் யாழ்ப்பாணத்து தாய்க்கும் மலையாளத்து தகப்பனுக்கும் பிறந்தவர். வாகீசன் யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்தவர். இருவருமே குறுகியகால இடைவெளிக்குள் தமிழ் சமூகவலைத் தளங்களில் லட்சக்கணக்கானவர்களைக் கவர்ந்திருக்கிறார்கள். வேடன் 2020ல் இருந்து பாடுகிறார். அவர் வாகீசனிடம் இருந்து வேறுபடும் இடங்களில் ஒன்று, அவர் அதிகம் ஒடுக்கப்படும் சமூகங்களின், மக்களின் குரலாக ஒலிப்பதுதான். அவருடைய முதலாவது முயற்சி “குரலவற்றவர்களின் குரல்” என்ற தலைப்பின் கீழ்தான் வெளிவந்தது. அவர் ஈழத் தமிழர்களின் அரசியலில் தொடங்கி சிரியா,பாலஸ்தீன…

  2. தேர்தல்களின் போது மக்கள் ஏன் ஏமாறுகிறார்கள்? எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஜூலை 01 வருகிறது, மற்றொரு தேர்தல். ஆனால், எமக்குத் தெரிந்த காலத்தில் இருந்து, ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாற்றப்பட்டே வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் சில கட்சிகள், முக்கிய சில வாக்குறுதிகளை முன்வைத்து, தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளனவே தவிர, நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆக்கபூர்வமான திட்டமொன்றை முன்வைத்து, எந்தவொரு கட்சியும் ஆட்சியைக் கைப்பற்றியதில்லை. சில சந்தர்ப்பங்களில்,சில கட்சிகள் அளித்த வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்றிய போதிலும், அதன் மூலம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அதாவது, எந்தவொரு கட்சியும் ஆட்சிக்கு வந்த…

  3. எழுக தமிழ்: தமிழ் மக்கள் தற்காப்பு அரசியலை விட்டு வெளிவர வேண்டும் - நிலாந்தன்:- தமிழ் மக்களின் அரசியல் ஒருவித தற்காப்புப் பொறிக்குள் சிக்குண்டிருக்கிறது. இப்பொழுது கொழும்பு அல்லது வெளித்தரப்புக்கள் ஏதாவது ஒரு நகர்வை மேற்கொண்டால் அதற்கு பதில்வினையாற்றும் ஒரு தரப்பாகவே தமிழ்த்தரப்பு காணப்படுகிறது. ஆனால் ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் நிலைமை வேறாகவிருந்தது. தமிழ்த்தரப்பு மேற்கொள்ளும் ஒரு தாக்குதலுக்கு எதிர்த்தரப்பும் வெளித்தரப்புக்களும் பதில்வினையாற்றும் நிலைமை அப்பொழுது காணப்பட்டது. இவ்வாறு தமிழ்த் தரப்பானது பதில்வினையாற்றும் ஒரு தரப்பாக மட்டும் சுருங்கிக் காணப்படுவது என்பது கடந்த ஏழாண்டுகளாக மட்டும்த்தான் …

  4. பிரிட்டனின் திட்டம்.-யூதர்களின் நம்பிக்கை துரோகம். பிரிட்டனின் திட்டம். நிலமெல்லாம். ரத்தம் - பா. ராகவன். பாலஸ்தீன் யாருடையது? யூதர்களுக்கும் அரேபிய முஸ்லிம்களுக்கும் சொந்தமான பூமி அது. நல்லது. பாலஸ்தீனில் யார் பெரும்பான்மையானோர்? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்கள் பெரும்பான்மையானோராகவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிட்டத்தட்ட இரு தரப்பினரும் சம அளவினராகவும், நவீன காலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையானோராகவும் அங்கே இருந்திருக்கிறார்கள். இதனை இந்தத் தொடரின் பல்வேறு அத்தியாயங்களில் இடையிடையே பார்த்திருக்கிறோம். இப்போது மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டியது அவசியமாகிறது. காரணம், இந்தக் குழப்பத்தால்தான் பாலஸ்தீனை எப்படிப் பிரிப்பது என்று பிரிட…

    • 0 replies
    • 1.1k views
  5. இரா­ணு­வ ஆட்சி சாத்தியமா? கூட்டு எதி­ர­ணியின் தலை­வ­ரான தினேஸ் குண­வர்த்­தன நாடா­ளு­மன்­றத் தில் இரா­ணுவம் அதி­கா­ரத்தைக் கைப்­பற் றும் வாய்ப்பு இருப்­ப­தாக விடுத்த எச்­ச­ரிக்­கையை அடுத்து. இரா­ணுவ ஆட்­சிக்­கான வாய்ப்­புகள் இருக்­கி­றதா- இல்­லையா என்­பதே அர­சி­யலில் பெரும் விவா­தத்­துக்­கு­ரிய விட­ய­மாக மாறி­யி­ருக்­கி­றது. தெரிந்தோ தெரி­யா­மலோ, தினேஸ் குண­வர்த்­தன இந்த ஆபத்­தான விட­யத்­துக்குள் கால­டியை எடுத்து வைத்து விட்டார். அதனால் தான், கூட்டு எதி­ர­ணியைச் சேர்ந்த எவரும், அவ­ரது கருத்­துக்கு ஆத­ர­வாக வாய் திறக்­காமல் மெள­ன­மாக இருக்­கி­றார்கள். மஹிந்த ராஜபக் ஷவோ, விமல் வீர­வன்­சவோ, உதய கம்­மன்­பி­லவோ, வாசு­தேவ நாண­யக்­…

  6. மாற்றம் காண வேண்டிய தமிழகத்தின் ‘பொங்குதமிழ்’ - ப. தெய்வீகன் தமிழகத்தில் சல்லிக்கட்டுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையுத்தரவினால் ஏற்பட்டுள்ள மாணவர் பேரெழுச்சி, இந்த ஆண்டின் மிகப்பெரிய செய்திகளுடன் ஊடகங்களை அலற வைத்திருக்கிறது. வெறுமனே அரசியல் செய்திகளாலும் சினிமா பிரமாண்டங்களினாலும் தன் மீதான கவனத்தையும் சுவாரஸ்யத்தையும் பேணிவந்த தமிழகம், முதல் முறையாக மாணவர்களின் பேரெழுச்சி என்ற புரட்சிமொழியின் ஊடாக உலகையே வியந்து பார்க்க வைத்திருக்கிறது. மக்கள் கட்டமைப்பின் பிரதான இயங்கு சக்திகளில் ஒன்றான மாணவர்களின் போராட்டம் என்பது எப்போதும் உணர்வுபூர்வமான ஒரு புள்ளியிலிருந்துதான் தனது கோரிக்கைகளை முன்வைப்பது வழக்கம். …

  7. திருமலை மண்ணில் பன்னாட்டுக் கம்பனிகள் : இதயச்சந்திரன் அண்மைக்காலமாக அரசியல் வெளியில் உரையாடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து, இப்போது எவரும் பேசுவதில்லை. அந்த அறிக்கைக்கு என்ன நடக்கிறது என்பது குறித்து அரசும் அலட்டிக்கொள்வதில்லை. அதனை வரவேற்ற பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா, கொழும்பில் மாநாடு நடாத்துவதில் அக்கறை செலுத்தும் அளவிற்கு, தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறை பற்றி வாய் திறப்பதில்லை. இலங்கையில் மாநாடுகளையும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளையும், வர்த்தக கண்காட்சிகளையும், பாதுகாப்பு கூட்டங்களையும் நடாத்தும் சர்வதேச நாடுகள், சுதந்திரம் பெற்ற காலம் முதல் தமது பூர்வீக நிலத்தையும், தேசிய இன அடையாளங்களையும் இழந்து கொண்டிருக்கும் தம…

  8. துறைமுக நகர்: ராஜபக்‌ஷர்கள் வைத்த தீ புருஜோத்தமன் தங்கமயில் தென் இலங்கையின் பௌத்த சிங்கள அடிப்படைவாத சக்திகள், ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற இக்கட்டான கட்டத்துக்கு வந்திருக்கின்றன. இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாக்கி, நாட்டின் ஆபத்பாண்டவர்கள் ‘ராஜபக்‌ஷர்களே’ என்று முழங்கி, 69 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொடுத்து, அவர்களை மீண்டும் ஆட்சிக் கட்டிலில், இந்தச் சக்திகள் ஏற்றின. ஆனால், அடிப்படைவாத சக்திகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் தவிடுபொடியாக்கி, சீனாவின் செல்லப்பிள்ளைகளாக நடப்பதை, ராஜபக்‌ஷர்கள் தமது தலையாய கடமையாக இன்றைக்கு வரிந்து கொண்டிருக்கிறார்கள். இதனால்தான், ராஜபக்‌ஷர்களுக்கும் தென் இலங்கையின் அடிப்படைவாத சக்திகளுக்கும் இட…

  9. இலங்கையில் நடத்தப்பட்ட சாகும்வரை உண்ணாவிரதங்கள் சாகும் வரை எனக் கூறி, உண்ணாவிரதம் இருந்து, கடந்த வாரம், ஒன்பது நாட்களில் அதனை முடித்துக் கொண்ட முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் கோரிக்கைகள் அந்த உண்ணாவிரதத்தின் காரணமாக நிறைவேறும் என நினைத்தவர்கள் உண்டா? அதேபோல் தமது கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில், அவர் தமது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து, உயிரை விடுவார் என உலகில் எவராவது நினைத்தனரா? இது, சாகும் வரை உண்ணாவிரதம் எனக் கூறப்பட்டாலும் எவரும் அவ்வாறு நினைக்கவில்லை. அவர் ஏதாவது ஒரு வழியில், தமது சாகும் வரை உண்ணாவிரதத்தை சாகா உண்ணாவிரதமாக மாற்றிக் கொள்வார் என்பதைச் சகலரும் அறிந்திருந்தனர். …

  10. ‘முதலில் அவர்கள் கொம்யூனிஷ்டுகளைத் தேடி வந்தார்கள், நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் கொம்யூனிஷ்ட் இல்லை. பின், அவர்கள் சோசலிஷ்டுகளைத் தேடி வந்தார்கள், நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் சோசலிஷ்ட் இல்லை. பின், அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள், நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியில்லை. பின், அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள், நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் யூதனில்லை. பின், அவர்கள் கத்தோலிக்கர்களைத் தேடி வந்தார்கள், நான் எதிர்த்துக் கேட்கவில்லை, ஏனெனில் நான் கத்தோலிக்கனில்லை. பின், அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள், அங்கே எனக்காகப் பேசுவதற்கு யாரும் இருக்கவில்லை.’ நாசிக்களின் படுகொலை…

  11. பயன்படுத்தப்படாத வரப்பிரசாதங்கள் - மொஹமட் பாதுஷா நாடாளுமன்றம் என்பது ஒரு நாட்டின் உயரிய சபையாகும். அந்த நாட்டின் நீதியை நிலைநாட்டும் கட்டமைப்பாக நீதித் துறை இருக்கின்ற வேளையில், அதற்குத் தேவையான சட்டங்களையே உருவாக்குகின்ற சபை என்பதால் நாடாளுமன்றத்துக்கு ஒரு மேலான அந்தஸ்து இருக்கின்றது. இலங்கையைப் பொறுத்தமட்டில் மக்களால் தெரிவு செய்யப்பட்டோரும் நியமன உறுப்பினர்களுமாக மொத்தம் 225 பேர் அந்தச் சபையில் அங்கத்துவம் பெறுகின்றனர். அதில் அங்கம் வகிப்போர், மக்களின் நல்ல தலைவர்களாகவும் ஒழுக்க சீலர்களாகவும் ஆளுமையுள்ளவர்களாகவும் தேசத்துக்குத் துரோகம் செய்யாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் பொதுவாகவே எதிர்பார்ப்பதுண்டு.…

  12. கரும் புள்ளிகள் முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான நல்லுறவில் கரும் புள்ளிகள் விழத் தொடங்கியுள்ளன. ஞானசார தேரர் விவகாரம்தான் இதற்குப் பிரதான காரணமாகும். இது எங்கு போய் முடியும் எனத் தெரியவில்லை. ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தை மஹிந்த ராஜபக்ஷ அணி மிக நன்றாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. முஸ்லிம்களுக்காகப் பரிந்தும், அனுதாபத்துடனும் மஹிந்த தரப்புப் பேசத் தொடங்கியுள்ளது. எதிர்வரும் தேர்தல்களில் இந்த நிலைவரம் ஏதோவொரு விதத்தில் தமக்குச் சாதகமாக அமையும் என்று மஹிந்த தரப்பு நம்புகிறது. முஸ்லிம்களுக்கு எதிராக இன வெறுப்பு நடவடிக்கைகளில் மிகப் பகிரங்கமாக ஞானசார தேரர் ஈடுபட்டார். அப்போது, அதைத் தடுப்பதற்கு பொலிஸார் முன்வரவில்லை. ப…

  13. சம்பந்தரின் அறவழிப் போராட்டம் - நிலாந்தன்:- 15 டிசம்பர் 2013 தமிழர் தாயகப் பகுதிகளில் அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறைகள் இன்னும் இரண்டு மூன்று மாதங்களிற்குள் முடிவுக்குக் கொண்டுவரப்படாவிட்டால் தமிழ் மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவிலான அறவழிப் போராட்டத்தை கூட்டமைப்பு முன்னெடுக்கும் என்று எச்சரித்துள்ளார் சம்பந்தர். ஜப்பானின் சிறப்புத்தூதுவர் யசுசி அகாசி அண்மையில் 23ஆவது தடவையாக இலங்கைக்கு வந்தபோது அவரைச் சந்தித்த சம்பந்தர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். இவ் அறவழிப்போராட்டத்தை வேறு எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் அகாசியிடம் கூறியிருக்கிறார். சம்பந்தரோ அல்லது கூட்டமைப்பின் ஏனைய முக்கியஸ்தர்களோ இப்படிக் கூறுவது இது தான் முதற் தடவையல்ல.…

  14. எது சிறந்தது? இந்தியா ஈழத்தமிழர்களுக்கு பெற்றுக் கொடுத்த காப்புகளா அல்லது சீனாவின் அரசியல் அமைப்பில் சிறுபான்மையினருக்கு கொடுத்திருக்கும் காப்புகளா சிறந்தவை? முக்­கி­ய­மான மூன்று விட­யங்­க­ளினைப் பற்றி இப்­பொ­ழுது விப­ரிக்­கப்­ப­டு­கின்­றது. தமிழ் தேசி­ய­மக்கள் வடக்­கு, கிழக்கு மாகா­ணங்கள் எங்­க­ளது தாயகம் (HOME LAND) என்­பது போல சீனா­விலும் சிறு­பான்மை மக்­களின் தாயகம் என்னும் கொள்­கையை பேணிக் காப்­பாற்­று­கின்­றார்கள். 'The minority people became masters of their homelands and their own destinies" சிறு­பான்மை மக்கள் தங்­க­ளது தாயக பூமிக்கு அவர்­களே எஜ­மானர்கள். தங்­க­ளது தலை­வி­தியை தீர்­மா­னிப்­ப­தற்கு அவர்­க­ளுக்கே உரிமை உண்டு. ஒவ்­வ…

  15. ‘நாடகம் விடும் நேரம்தான் உச்ச காட்சி நடக்குதம்மா’ என்.கே. அஷோக்பரன் மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் பதவியிலிருந்து விலகச்செய்துவிட்டு, எல்லாக் கட்சிகளில் இருந்தும் ஆதரவைப் பெற்று, ஓர் அரசை அமைக்க, ஜனாதிபதி கோட்டா துடித்துக்கொண்டிருப்பதை அறிக்கைகள் சுட்டி நிற்கின்றன. மறுபுறத்தில், “நான் ஒருபோதும் பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை; வேண்டுமானால் என்னைப் பதவி நீக்கவும்” என வௌிப்படையாகவே சவால் விட்டிருக்கிறார் மஹிந்த. ஏற்கெனவே பசில், சமல், நாமல் ஆகிய ராஜபக்‌ஷர்கள், தங்கள் அமைச்சரவைப் பதவிகளிலிருந்து விலகியுள்ள நிலையில், இன்றைய அமைச்சரவையைப் பொறுத்தவரையில் கோட்டாவும் மஹிந்தவும் ஆகிய இரண்டு ராஜபக்‌ஷர்கள் மட்டுமே அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார்கள். இதில் மஹிந்த…

  16. தேவதூத மனநிலை: பொதுப்புத்தியில் மாற்றமின்றி தீர்வு சாத்தியமில்லை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ தற்போதைய நெருக்கடி, இலங்கையின் பொதுப்புத்தி மனநிலையைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. இன்று இலங்கையர்கள் எதிர்நோக்கும் சொல்லொணாத் துயரங்களுக்கான காரணங்களை, பொருளாதாரத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் போட்டுவிட்டு அப்பால் நகர முடியுமா? இதற்கு இலங்கையர்களாகிய நாங்கள், பொறுப்புக்கூற வேண்டியது இல்லையா? இந்த நெருக்கடிக்கு நாமனைவரும் எவ்வாறு பங்களித்திருக்கிறோம்? இப்போதும் இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, நாம் பங்களிக்கின்றோமா? நமது பங்களிப்பு, மக்கள் நலநோக்கில் நெருக்கடியை தீர்ப்பதாக இருக்கிறதா, அல்லது அரசியல்வாதிகளின் இழிசெயல்களுக்கு ஒத்தூதுவதன் மூலமும், அமைதிகாத்து அங…

  17. ஐ.நா. மனித உரிமை அமைப்பின் உறுப்பு நாடுகள் போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கு பரிந்துரைப்பதற்கான நேரமிது – புலம்பெயர் தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர் மனித உரிமை அமைப்பின் உறுப்பு நாடுகள் போர்க் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்ப பரிந்துரைப்பதற்கான தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை அங்கீகரிப்பதற்கான நேரமிது என புலம்பெயர் தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜி பாற்றர்சன் தெரிவித்துள்ளார். மனித உரிமை அமைப்புகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான பொதுவிவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது; இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகர் அறிக்கை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவ…

    • 0 replies
    • 235 views
  18. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலையை புரிந்து கொள்வார்களா….? நரேன்- தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மை வாக்கு பலத்தின் மூலம் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் தமிழ் மக்களது நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் உள ரீதியாகவும், மனிதாபிமானமாகவும் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுடன் மைத்தி – ரணில் கூட்டரசாங்கம் உருவாகியது. இந்த கூட்டராங்கம் தமிழ் மக்களுக்கு ஒரளவு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது. போர் முடிந்த நிலையிலும் கடந்த மஹிந்த அரசாங்கம் வெற்றி வாதத்தில் மிதந்ததுடன் தமிழ் தேசிய இனத்தை அடக்கி ஒடுக்குவதிலேயே…

  19. குர்து மக்கள் : தனி நாடு - மத்திய கிழக்கில் போராடும் ஒரு தேசிய இனத்தின் விறுவிறு வரலாறு! துருக்கியின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 15 முதல் 20 சதவீதத்தினர் குர்து இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். துருக்கி அரசுக்கும், குர்துகளுக்கும் இடையே பல்லாண்டு காலமாக பகை பாராட்டப்பட்டு வருகிறது. துருக்கி, இராக், சிரியா, இரான், ஆர்மேனியா என பல நாடுகளில் உள்ள மலைப்பாங்காந பகுதிகளில் சுமார் 25 முதல் 35 மில்லியன் குர்து இன மக்கள் வாழ்கின்றனர். மத்திய கிழக்கிலேயே நான்காவது பெரிய இனக்குழுவாக இருக்கும் குர்துகளுக்கு, தங்களுக்கென ஒரு நிரந்தர நாடு இல்லாமல் இருப்பது தான் பிரச்சனையின் மையப் பகுதி எனலாம். …

    • 0 replies
    • 417 views
  20. கூட்டமைப்பிலிருந்து வெளியில் வர என்ன காரணம்? -சிவசக்திஆனந்தன்|

  21. மீண்டும் எச்சரிக்கை ஒன்­றி­ணைத்த வகையில் இந்த விடயம் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருப்­ப­தா­கவும் கூற முடி­ய­வில்லை. நாட்டின் அர­சியல் நிலை­மைகள் குறித்தும். நாட்டின் சுபிட்­ச­மான எதிர்­காலம் குறித்தும் அவ்­வப்­போது, அர­சியல் நலன்­களின் அடிப்­ப­டையில் வெளி­யி­டப்­ப­டு­கின்ற எச்­ச­ரிக்­கை­களைப் போல இந்த எச்­ச­ரிக்­கையும் பத்­தோடு பதி­னொன்­றாகக் கரு­தப்­பட்­டி­ருப்­ப­தையே காண முடி­கின்­றது. இந்த எச்­ச­ரிக்­கையை விடுத்­தி­ருப்­ப­வர்­களில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­ண­துங்க ஒருவர். மற்­றவர் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்குப் பொறுப்­பான ஐ.நா.வின் விசேட அறிக்­கை­யாளர் பென் எமர்ஸன் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. பண்…

  22. தொடர்கதையாகும் பாதிப்பு ஒரு கட்­ட­மைப்பின் கீழ் ஒன்­றி­ணைந்த நிலையில் தமிழ் அர­சியல் தலை­வர்கள் செயற்­ப­டாமல் இருப்­பது துர­திர்ஷ்­ட­வ­ச­மா­னது. நீண்ட கால­மாக அர­சியல் உரி­மைகள் மறுக்­கப்­பட்ட ஒரு தேசிய இன­மாகத் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்ற நிலையில், தமிழ் அர­சியல் தலை­வர்கள் இவ்­வாறு ஒன்­றி­ணைந்து செயற்­ப­டாமல் அல்­லது செயற்­பட முடி­யாமல் இருப்­பது அந்த மக்­களை மேலும் மேலும் பாதிப்­ப­டை­யவே செய்­தி­ருக்கின்றது. மேலோட்டப் பார்­வையில் இந் நாட்டில் தமிழ் மக்­க­ளுக்கு அர­சியல் உரி­மைகள் மறுக்­கப்­பட்­ட­தாகத் தெரி­வ­தில்லை. அவர்­களும் ஏனைய பெரும்­பான்மை இனத்­த­வ­ரா­கிய சிங்­கள மக்­களைப் போன்று சுதந்­தி­ர­மா­கத்­தானே வாழ்­கின்­றார்கள். இ…

  23. வடக்கிலும் கிழக்கிலும் தீவிரவாதப் போக்கின் செல்வாக்கு எம்.எஸ்.எம். ஐயூப் / “தற்போதைய தலைமை போய், மாற்றுத் தலைமை உதித்தால், மீண்டும் கூட்டமைப்பின் சார்பில், முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்குச் சாத்தியம் உள்ளது” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியதாக, ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது, “விக்னேஸ்வரனை இனி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்குவதில்லை” என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன் கூறி வருவதைப் போலவே, “இனி, கூட்டமைப்பின் கீழ், தேர்தலில் நிற்கப் போவதில்லை” என விக்னேஸ்வரனும் கூறுகிறார். …

  24. ஐ.அமெரிக்காவின் சிறிசேன தான் ட்ரம்ப் Gopikrishna Kanagalingam / 2019 ஜனவரி 03 வியாழக்கிழமை, மு.ப. 01:24 கடந்தாண்டின் நவம்பர் மாதத்தின் இறுதிப் பகுதியில், இப்பத்தியாளரால், “இலங்கையின் ட்ரம்ப் தான் சிறிசேன” என்ற தலைப்பில் பத்தியொன்று பிரசுரிக்கப்பட்டது. இருவருக்குமிடையிலான ஒற்றுமைகள் குறித்தும் அதிகாரவய ஆட்சி குறித்தும், அதில் அலசப்பட்டது. ஆனால், அப்பத்தி பிரசுரிக்கப்பட்டுச் சில வாரங்கள் ஆகியுள்ள நிலையில், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மேலுமதிகமான குழப்பங்களை ஏற்படுத்தி, குழப்பங்களை விளைவிக்கும் தலைவர்களில் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறார். இச்சூழ்நிலையில், “ஐக்கிய அமெரிக்காவின் சிறிசேன தான் ட்ரம்ப்” என்று இப்போது சொல்லக்கூடியதாக இருக்கிறது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.