அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
தனிவழி பயணம் சூடு பிடிக்கும் அரசியல் நாட்டின் அரசியல் சூழலானது தீவிரமான முறையில் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. எந்தக் கணத்தில் அரசியல் ரீதியில் எந்த நகர்வு முன்னெடுக்கப்படும் என்பதை யாராலும் கணிக்க முடியாத அளவுக்கு கட்சிகளின் காய்நகர்த்தல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. 2015 ஆம் ஆண்டு இந்த நாட்டில் யாரும் எதிர்பார்க்காத அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டனவோ அதேபோன்று சில அரசியல் நகர்வுகள் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இரண்டு துருவங்களில் பிரிந்திருக்கின்ற துருவங்கள் கூட ஒன்றாக இணைந்து விடும் சாத்தியங்கள் தென்படுகின்றன. அரசியலில் இவை அனைத்தும் சாத்தியம் என்பது எண்ணக்கரு…
-
- 0 replies
- 457 views
-
-
தேர்தலும் கூட்டணியும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைமையின் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள அதிருப்தியின் விளைவாகவே, மாற்றுத் தலைமை ஒன்று உருவாக வேண்டும் என்ற தேவை தலையெடுத்திருந்தது. அந்த வகையிலேயே தமிழ் மக்கள் பேரவை உதயமாகியது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளையும் பொது அமைப்புக்களையும் உள்ளடக்கிய மாற்று அரசியல் அணியொன்றின் உருவாக்கத்திற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இழுத்தடிக்கப்பட்டு வந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள ஓர் அரசியல் சூழலில், இந்த நடவடிக்கைகள் தமிழ் அரசியல் களத்தில் தளம்பலான ஒரு நிலைமையையே உருவாக்கியிருக்கின்றன. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மட்டுமல்லாமல், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊட…
-
- 0 replies
- 305 views
-
-
உள்ளூராட்சி தேர்தலில் திடீர் திருப்பம் இந்த மழைக்காலத்திலும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. ஆரம்பத்தில் அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு பின்வாங்கிய நிலையில், மாகாண சபைத் தேர்தலோ அன்றேல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலோ இப்போதைக்கு நடைபெறாது என்று மக்கள் கருதியிருந்தனர். இந்நிலையில், நாட்டிலுள்ள எல்லா உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. ஆனால், உள்ளூராட்சி மன்ற எல்லைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், சட்ட ரீதியாக சவாலுக்கு உட்படுத்தப்பட்டமையாலும் எழுத்துப் பிழையாலும் 200 இற்கு மேற்பட்ட சபைகளுக்கு இப்போதைக்கு தேர்தலை நடாத்த முடியாத சூழ்நிலை …
-
- 0 replies
- 331 views
-
-
ட்ரம்பின் ஆசியப் பயணம்: போருக்கு பிச்சையெடுத்தல் பயணங்கள் பலவிதம்; அரசியல் பயணங்கள் அதில் ஒருவிதம். அரசியல் பயணங்களின் நோக்கங்கள் பலவிதம்; அதில் பிச்சைகேட்கும் பயணங்கள் ஒருவிதம். இராஜதந்திரம், அனைத்துக்கும் அதற்குப் பொருத்தமான, அழகான சொல்லாடல்களைக் கொண்டுள்ளது. பிச்சையெடுத்தலை ‘உறவைப் பலப்படுத்தல்’ என்றும் உதவி கேட்டலை ‘தார்மீக உதவி’ என்றும் கட்டளைக்குப் பணிந்து கூட்டுச்சேருதலை ‘மூலோபாயக் கூட்டணி’ என்றும் இன்னும் பலவாறும் அழைப்பதற்கு இராஜதந்திரச் சொல்லாடல்களும் அயலுறவுக் கொள்கைக் கூற்றுகளும் வழியமைக்கின்றன. இருந்தபோதும், நேரடியான மயக்கங்களற்ற மொழியில் இவற்றை விளங்குவது, இச்சொற்களுக்கான உண்மையான பொருளை வ…
-
- 0 replies
- 407 views
-
-
மாவீரர் நாள்: கற்க வேண்டிய பாடங்கள் மாவீரர் நாள் முடிந்து விட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக விசாரணை மிரட்டல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. மாவீரர் நாளுக்கு முன்னதாக அரச தரப்பில் இருந்து அதற்கு எதிரான கருத்துகள் எதுவும் வெளியாகியிருக்கவில்லை. மாவீரர் நாளை அனுஷ்டித்தால், புலிகளை நினைவு கூர்ந்தால், சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னரே எச்சரிக்கைகள் எதுவும் அரச தரப்பிலோ பொலிஸ் தரப்பிலோ வெளியிடப்படவில்லை. ஆனாலும், நிகழ்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர், புலிகளை நினைவு கூர்ந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியிருக்கிறார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன. …
-
- 0 replies
- 366 views
-
-
அரசியல் தலைமைகளின் பார்வையும் மக்களின் வாழ்வாதாரமும் நரேன்- தமிழ் தேசிய இனம் தமது உரிமைக்காக ஒரு நூறாண்டு காலமாக போராடி வருகின்றது. அந்த இனம் ஜனநாயக ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் தமது உரிமைக்காக போராடி இன்று ஆயுதப்போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டு எட்டரை ஆண்டுகள் கடந்த பின்னரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதனை மீளக் கட்டியெழுப்ப முடியாதவர்களாகவும் உள்ளனர். நுண்நிதி நிறுவனங்களிடம் அதிக வட்டியில் கடன் பெறுவதும், ஆங்காங்கே இடம்பெறும் தற்கொலைகளும் மக்களது பொருளாதார பிரச்சனையை கண்முன்னே வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றது. இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் பொருளா…
-
- 0 replies
- 291 views
-
-
விதியை வெல்லும் மதிகள்? மீண்டும் ஒரு குழப்பமான சூழலுக்குள் இலங்கையின் அரசியல் நிலைவரங்கள் சென்று கொண்டிருக்கின்றனவா? என்ற கேள்வி எழுந்துள்ளது. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணிக்கும் மஹிந்த அணிக்குமிடையிலான பிரச்சினை மறுபடியும் தீவிரமாகி உள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான பிரச்சினை, எப்படி நாட்டின் அரசியலில் குழப்பங்களை உண்டாக்க முடியும்? என்று யாரும் கேட்கலாம். தற்போது நடந்து கொண்டிருக்கும் ‘கலப்பாட்சி’ (ஐ.தே.க - சு.க கூட்டாட்சி) யைச் சிதைக்கக் கூடிய வெடிகுண்டாகவே உள்ளது, மஹிந்த அணி அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் அணி. அது தனக்கான சந்தர்ப்பத்தை எதிர்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
மாவீரர் தினத்தை முன்னிறுத்திய தரப்படுத்தலும் கருத்தியலும் மேடைப் பேச்சுகளும் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இம்முறை மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கிப் பெருவாரியாக மக்கள் திரண்டார்கள். வடக்கு - கிழக்கிலுள்ள 30க்கும் அதிகமான மாவீரர் துயிலும் இல்லங்களில், அஞ்சலிச் சுடர் ஏற்றப்பட்டது. கடந்த காலத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை இராணுவம் உருத்தெரியாமல் இடித்து, அழித்த போதும், அந்தச் சிதைவுகளை ஒன்றாக்கி, மாவீரர்களின் அர்ப்பணிப்பை, ஆகுதியின் பெரும் வடிவமாக மக்கள் மாற்றிக் காட்டினார்கள். அலுவலகங்களுக்குள் மட்டும், மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்திய, அரசியல் கட்சியினரும் அமைப்புகளும் கூட, மக்களோடு மக்கள…
-
- 0 replies
- 309 views
-
-
நினைவழிப்புக்கு எதிரான வெளிப்பாடே மாவீரர் நாள் நிகழ்வுகள்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- November 29, 2017 2017 நவம்பர் 27, மாவீரர் தினம், தெளிவான செய்தியை இலங்கை அரசுக்கும் உலகிற்கும் அமைதியாகவும் மௌனமாகவும் உணர்வோடும் எழுச்சியோடும் சொல்லியிருக்கிறது. எங்கள் உணர்வுகள் புதைந்த மாவீரர் துயிலும் இல்லம் என்பது எமக்கு வல்லமையும் நம்பிக்கையும் ஊட்டும் உறுதி நிலம் என்பதை தமிழ் மக்கள் மீண்டும் உணர்த்தியுள்ளனர். புதிய அரசாங்கத்தின் அறிவிக்கப்படாத தடையையும் அனுமதியையும் தாண்டி துயிலும் இல்லங்கள் தோறும் பல்லாயிரக்கணக்காக மக்கள் ஒன்றுதிரண்டு, வடக்கு கிழக்கில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண…
-
- 0 replies
- 382 views
-
-
மைத்திரியின் திரிசங்கு நிலை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான குழுவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவுக்கும் இடையில், ஒற்றுமையை ஏற்படுத்தப் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், அவை வெற்றிபெறும் சாத்தியக்கூறுகள் மிகவும் அரிதாகவே இருக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்ததையடுத்து, அவரது தலைமையை ஏற்றிருந்த பலர், அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர்களாகினர். அதன்பின் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளிலும், இதேபோல் இரு சாராரையும் இணைக்க வேண்டும் என்று சிலர் கூறி வந்தனர். உண்மையிலேயே, அப்போது மஹிந்தவின் ஆதர…
-
- 0 replies
- 382 views
-
-
தமிழர் தாயகத்தில் சிங்கள ஏகாதிபத்தியமும் மறுக்கப்படும் தமிழர் இறையாண்மையும் மருத்துவர் சி. யமுனாநந்தா ஈழத்தமிழர்களின் பாரம்பரிய ஆட்சியானது இலங்கையின் வடக்கே அமைந்திருந்தது. யாழ்ப்பாணத்தினை ஆண்ட கடைசி மன்னன் சங்கிலியனின் செல்வாக்கு கிழக்கே பொத்துவில் வரையும் மேற்கே புத்தளம் வரையும் இருந்தது. கி. பி. 1619இல் போர்த்துக்கேயர் தமிழ் மன்னன் சங்கிலியனை வீழ்த்தி தமிழரின் இறையாண்மையைப் பறித்தனர். இதனால் தமிழரின் இறையாண்மை போர்த்துக்கேயரிடம் வீழ்ச்சி அடைந்தது. கண்டியில் 2ம் இராஜசிங்கனின் தலைமையில் தமிழர்களின் அரசு 1815 வரை ஆட்சி செலுத்தியது. பின் ஆங்கிலேயரால் வெல்லப்பட்டு தமிழர்களின் இறையாண்மை தொலைக்கப்பட்டது. 1948இல் இலங்கைக்கு ஆங்கிலேயர் சுதந்திரம் கொட…
-
- 0 replies
- 684 views
-
-
புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவை மஹிந்த ராஜபக்ச எதிர்ப்பது ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES (இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். இது பிபிசியின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) விளம்பரம் இலங்கை நாடாளுமன்றத்தில் தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் பட்ஜெட்டின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாத…
-
- 0 replies
- 461 views
-
-
பட்டு வேட்டியும் துண்டுத்துணியும் உட்காயம் போல் இருந்து வந்த, நல்லாட்சியாளர்களுக்கிடையிலான முறுகல்கள், வெளியே தெரியத் தொடங்கியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியினர் ஜனாதிபதியை நேரடியாகவே விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். மறுபுறமாக, “அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியினர் ஊழல் மேற்கொண்டால், அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஊழலுக்கு எதிராகச் செயற்படுவதற்குத் எனது பதவி ஒரு தடையாக இருந்தால், அதைத் துறப்பதற்குத் தயார்” என ஜனாதிபதி கூறியிருக்கின்றார். உற்று நோக்கும்போது, இவையெல்லாம் யுத்தமொன்றுக்கு முன்னரான பேரிகைச் சத்தம் போலவே காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. நல்லாட்சியாளர…
-
- 0 replies
- 403 views
-
-
ரொபேட் முகாபேயின் எழுச்சியும் வீழ்ச்சியும் சிம்பாப்வேக்கு விடிவு பிறக்குமா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) வரும், ஆனால் வராது என்ற ஒரு சினிமா நகைச்சுவைப் பாணியில் சிம்பாப்வே அதிபர் முகாபே பதவியை விட்டு விலகுவாரா? இல்லையா? அல்லது தூக்கியெறியப்படுவாரா போன்ற பல கேள்விகளின் மத்தியில் அவர் கடந்த 21.11.2017 அன்று செவ்வாய்க்கிழமை பதவியை இராஜினாமா செய்ததாக பாராளுமன்றத்தின் சபாநாயகர், பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு அவரின் கடிதத்தை வாசித்துக்காட்டினார். பாராளுமன்றத்திற்குள்ளேயே அவரின் கட்சியினர், எதிர்க்கட்சியினர் என சகலரும் மேசைகளில் தட்…
-
- 0 replies
- 414 views
-
-
முகாபே வீழ்த்தப்பட்டமை ஜனநாயகத்துக்காகவா? உலக வரலாற்றின் ஒருபக்கம், சதிகளால் நிரம்பியது. பண்டைய வரலாறெங்கும் அரண்மனைச் சதிகள் நிறைந்திருந்தன. பின்னர், மன்னராட்சிக்கு எதிரான சதிகள் அரங்கேறின. மாறுகின்ற காலத்துக்கேற்ப இராணுவச் சதிகள் நடந்தன. ஜனநாயகம் பிரதான பேசுபொருளாகவும் அரசாட்சியின் இலக்கணமாகவும் மாறிய சூழலில், அரசமைப்புச் சதிகள், நாடாளுமன்றச் சதிகள் எனப் பலவும் நிகழ்ந்தன. இவ்வாறு நடந்த சதிகள், அந்நாடுகளின் விதியைத் தீர்மானித்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலம், ஆட்சிக் கவிழ்ப்புகளின் பிரதான கருவியாக, இராணுவச் சதிகள் மாறின. அவை, வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வடிவங்களைப் பெற்றன. …
-
- 0 replies
- 424 views
-
-
‘வடக்கு – கிழக்கில் கிளர்ச்சி வெடிக்கும்’: இது தேர்தலுக்கான கோசமா….? நரேன்- இலங்கைத் தீவு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே மிதவாத தலைமைகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த தமிழ் தேசிய அரசியல் பல்வேறு முரண்பாடுகளையும், பிளவுகளையும் சந்தித்து இருந்தது. ஜனநாயக ரீதியாக மிதவாத தலைமைகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டங்களையும், உரிமைக்கான குரல்களையும் தென்னிலங்கையின் பௌத்த சிங்கள அடிப்படைவாதிகளும், மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரு பிராதான கட்சிகளும் புரிந்து கொள்ளாமையின் விளைவு இளைஞர்கள் ஆயுதமேந்த நிர்பந்திக்கப்பட்டனர். மிதவாத தமிழ் தலைமைகளும் அதற்கு துணை போயின. தனித் தமிழீழ கோரிக்கையை முன்னுறுத்தியும், உரிமையை வலியுறுத்தியும் பல ஆயுதப் போராட்ட அமைப்புக்கள்…
-
- 0 replies
- 528 views
-
-
மாவீரர் நாளை தமிழ்த் தலைவர்கள் எப்படி அனுஷ்டிக்கப் போகிறார்கள்? 0 மன்னார் ஆட்சி மாற்றத்திற்கு முன்பு நினைவு கூர்தலை மக்கள் பிரதிநிதிகள் அல்லாதவர்களும் மத குருக்கள் அல்லாதவர்களும் செய்வதில் ஆபத்துக்கள் இருந்தன. எனவே மக்கள் பிரதிநிதிகளும் அரசியல்வாதிகளும் முன்மாதிரியாக அஞ்சலி செலுத்தும் போது மக்கள் அவர்களைப் பயமின்றி பின் தொடர்வார்கள் என்று நான் கட்டுரை எழுதி இருக்கிறேன். ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின் அதே மக்கள் பிரதிநிதிகள் நினைவு கூர்தலை ஒழுங்குபடுத்தும் பொழுது ஏன் அவர்கள் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது? ஆட்சி மாற்றத்திற்கு முன்பு வரை அவர்கள் ரிஸ்க் எடுப்பதாக கருதப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்; அதிகரித்து வரும் சிவில் ஜனநாய…
-
- 0 replies
- 410 views
-
-
காரணம் என்ன? ஏலவே 1972ஆம் ஆண்டு குடியரசு யாப்பு கொண்டு வரப்பட்டபோது வட கிழக்கெங்கும் கறுப்புக் கொடியேற்றப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர் நிலையாகவே தொடர்ந்து வந்த சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் வடகிழக்கில் தமிழ் மக்களால் பகிஷ்கரிக்கப்பட்ட நிலையில் இலங்கையின் நான்காவது குடியரசு தினமான 1976 ஆம் ஆண்டு கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் அரசியல் அமைப்புக்கு முரணானது எனக் குற்றம் சாட்டி அரசியல் அமைப்புக்கு முரணான குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற காரணத்தினால் ஆ.அமிர்தலிங்கம், வி.என். நவரத்தினம், க.பொ.இரத்தினம், கே. துரைரத்தினம் ஆகி…
-
- 0 replies
- 428 views
-
-
விழிப்படைத்த தமிழரசுக் கட்சியும் மாற்று தலைமை பற்றிய பேச்சும் 2009ஆம் ஆண்டு தமிழ் மக்களது உரிமைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களது அபிலாசைகள் தேர்தல் நோக்கிய அரசியலில் தங்கியிருக்கின்றது. கடந்த எட்டரை ஆண்டுகளாக அரசியலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களது ஆணை பெற்ற கட்சியாக செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் அண்மைக் காலமாக மாற்றுத் தலைமை, புதிய தலைமை என்கின்ற கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவை சாத்தியமா...?, அதற்கேற்ற நகர்வுகள் மக்கள் நம்பும் படியாக நடக்கின்றதா என்ற கேள்விகள் மீண்டும் மக்கள் மத்தியில் எழத்தொடங்கியிருக் கின்றன. தமிழ்…
-
- 0 replies
- 467 views
-
-
அதிர வைக்கப்போகும் அரசியல் பூகம்பங்கள் வலுவடைகின்றன ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகள் நம்பிக்கையில்லா பிரேரணை.... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் கடந்த மூன்று வருட காலங்களில் அடிக்கடி உச்சரிக்கப்படும் வார்த்தைப் பிரயோகமாக இந்த நம்பிக்கையில்லா பிரேரணை என்ற வார்த்தையே காணப்படுகின்றது. அரசாங்கம் ஒன்று பதவியில் இருக்கும்போது நெருக்கடிகளும் சவால்களும் ஏற்படுவது இயல்பானதுதான். அதில் ஒன்றும் ஆ…
-
- 0 replies
- 554 views
-
-
அரசியலில் சாணக்கியம் எனும் வியூகம் தேவை வர்த்தகமோ, குடும்ப விவகாரமோ, யுத்தகளமோ, விளையாட்டோ, கைத்தொழிலோ, விவசாயமோ எதுவாயினும் அதில் சாதனை புரிய வேண்டுமாயின் மதிநுட்பம் தேவை. இதையே “வீரம் விலை போகாது விவேகம் துணைக்கு வராவிட்டால்” என்பார்கள். இவை போன்றே அரசியலிலும் சாணக்கியம் எனும் வியூகம் அவசியமாகும். 1957 ஆம் ஆண்டு பண்டா – செல்வா ஒப்பந்தம் நிறைவேறாவிட்டாலும் கூட ஒப்பந்தத்தின் அளவுக்கு தந்தை செல்வா கொண்டுவந்திருந்தார். இது அரசியல் வியூகமாகும்.1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவின் பேரின யாப்பு இருந்தும் கூட அந்த யாப்பின் கீழ் நிகழ்ந்த பொதுத்தேர்தலில் 1977 ஆம் ஆண்டு சுயநிர்ணய தனி இறைமைக் கோரிக்கைக்கு வடக்கு,…
-
- 0 replies
- 863 views
-
-
தேவைப்பாட்டை உணர்த்தியிருக்கும் தேசிய கொடி விவகாரம் தேசியக் கொடி என்பது சிங்கள மக்களை மாத்திரமே பிரதிபலிக்கின்றது. அவர்களின் மத கலை கலாசாரங்களை மேலோங்கிய நிலையில் அடையாளப்படுத்துகின்றது என்பது தமிழ் மக்களின் நிலைப்பாடு. பேரினவாத சிந்தனையின் வெளிப்பாடாக அமைந்துள்ள தேசியக் கொடியை ஏற்றுவதில்லை என்ற கொள்கை பல தசாப்தங்களாகவே தமிழ் தேசிய உணர்வுமிக்க அரசியல்வாதிகளினால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது தேசியக் கொடியை ஏற்ற மறுத்தார் என தெரிவித்து, வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரனுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அதேநேரம், அவருடைய அந்த செயற்பாட்டை நியாயப…
-
- 0 replies
- 547 views
-
-
எதிர்பார்ப்பை நசுக்கியதா நல்லாட்சி? இலங்கை வரலாற்றில், சிறுபான்மை மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மறக்க முடியாத, கறை படிந்த வரலாற்றைக் கொண்டவையாகும். ‘வரலாறு திரும்புகிறது’ என்ற சொற்றொடரைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், வரலாற்றின் பொற்காலங்கள் ஒரு போதும் திரும்புவதில்லை. என்றாலும், மோசமான நிகழ்வுகள் அவ்வப்போது திரும்பத்தான் செய்கின்றன. அந்த வகையில், இலங்கையின் சிறுபான்மையினர் மீது மேற்கொள்ளப்படும் பாகுபாடுகளும் தாக்குதல்களும், மீள இடம்பெறுவதில்லை என்று கூறப்படுகின்ற போதிலும், அண்மைக் காலமாக, முஸ்லிம்களை குறிவைக்கும் வன்முறைகள், வேறு கதை சொல்கின்றன. முஸ்லிம் ம…
-
- 1 reply
- 436 views
-
-
பகிரங்க விவாதம் சுமந்திரனுக்கு அனுகூலமா? 'புதிய அரசியலமைப்புத் தொடர்பாகவோ இடைக்கால அறிக்கை பற்றியோ யாராவது விவாதிக்க முன்வரலாம். முதலமைச்சரோ (விக்கினேஸ்வரன்) அல்லது வேறு யாராவது கூட வரலாம். யாரோடும் பகிரங்கமாக விவாதிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்'. 'தமிழ் மக்களுடைய அபிலாைஷகளை எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் விட்டுக் கொடுக்கவில்லை. சமஷ்டியை முன்மொழிந்தவர்கள் சிங்களவர்களே. கண்டிச் சிங்களவர்களே சமஷ்டிக் கோரிக்கையை முதலில் முன்வைத்தவர்கள். இப்பொழுது சமஷ்ட…
-
- 0 replies
- 540 views
-
-
அரசமைப்பு அரசியல் Ahilan Kadirgamar அரசியல் தீர்வு தொடர்பாக, நாடு முழுவதிலும் உள்ள மக்களிடத்தில், பெருமளவுக்கு ஆர்வம் இல்லாமலிருப்பதற்கான காரணம் என்ன? தெற்கிலும் வடக்கிலும் உள்ள பிற்போக்கான சக்திகள், பொதுத் தளத்தில் தமது ஆதிக்கத்தை உயர்த்தியிருப்பதோடு, அரசமைப்புச் சீர்திருத்தச் செயற்பாடுகளை நிராகரிப்பதில் முன்னேற்றம் காண்பது எப்படி? அரசாங்கத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திலும், அரசியல் தூரநோக்குப் போதாமலிருப்பது தான் காரணமென நான் வாதிடுவேன். மக்களுடன் கலந்துரையாடி, அரசியல் தீர்வு தொடர்பாக மக்களைச் சென்றடையாமல், அரசாங்கம் மாற்றப்பட்ட பின்னர் 3 ஆண்டுகள் வீணாக்கப்பட்டிருக்கின்றன. அதனோடு சேர்…
-
- 0 replies
- 740 views
-