அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
இந்தியாவை சீண்டும் மஹிந்த அணி முதல் தடவை நிதி மோசடிக் குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷ, இந்தியாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதால், இரண்டாவது தடவையாக சிறைக்குச் சென்றிருக்கிறார். மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில், இடம்பெற்ற நிதி மோசடிகள், முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாமல் ராஜபக் ஷ முதல் முறையாக கைது செய்யப்பட்டிருந்தார். அப்போது அவர் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டார். நாமல் மீது வீண்பழி சுமத்தப்பட்டதாகக் கூறி, அந்தக் கைது நடவடிக்கையை அர சியல் பழிவாங்க…
-
- 0 replies
- 825 views
-
-
உலகை உலுக்கிய அமெரிக்க லஸ்வோகஸ் படுகொலை பயங்கரம் அமெரிக்க சமூகம் பிறழ்கிறதா? ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் (இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) ஐம்பதினாயிரததுக்கு மேற்பட்ட இரசிகர்கள் திரண்டிருந்த மைதானத்தில் பிரபலமான இசைக்குழுவின் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை திடீரென துப்பாக்கி சன்னங்கள பத்து நிமிடஙகள் வரை அடுக்கடுக்காக வெடித்தன. ஐம்பதிற்கு மேற்பட்டோர் அவ்விடத்திலேயே உயிரிழந்தனர், 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இக் கொலை பாதகம் எவ்வாறு நடைபெற்றது, இதற்கு சூத்திரதாரி யார் என்பதை சம்பவம் இடம் பெற்று ஒரு மணித்தியாலத்திற்குள் பொலிஸார் கண்டுபிடி…
-
- 0 replies
- 532 views
-
-
அரசியற் கைதிகளின் விடுதலை – திறப்பு யாருடைய கையில்? நிலாந்தன் அரசியல்க் கைதிகளின் விடுதலை தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் ரெம்பிள் றோட்டில் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையக் காரியாலயத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. அரசியல்க் கைதிகள் தொடர்பாக அதிகம் போராடி வருகின்ற, அதிகம் பேசி வருகின்ற, அதிகளவு சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்ற ஒரு செயற்பாட்டாளரும், அங்கிலிக்கன் மதகுருவுமாகிய பாஃதர் சக்திவேல் மேற்படிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தற்பொழுது தமிழ் அரங்கிலுள்ள பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகளை விடவும் மிகவும் தெளிவாகவும், செறிவாகவும், அறிவு பூர்வமாகவும் அவர் உரையாற்றினார். அரசியற் கைதிகளுக்கு பொது மன்னிப்போ புனர்வ…
-
- 0 replies
- 463 views
-
-
ஏமாற்றப்படுகின்றனறா பாதிக்கப்பட்டோர்? ஐக்கிய நாடுகள் விசேட நிபுணரின் இலங்கை விஜயமும் அர்த்தமுள்ளதாக அமையவேண்டும். தொடர்ச்சியாக இடம்பெறும் மற்று மொரு விஜயமாக இது அமைந்துவி டக்கூடாது என்பதில் கவனத்திற்கொள்ள வேண்டும். பாதிக் கப்பட்ட மக்கள் நீதிக் காக எட்டு வருடங் களுக்கு மேலாக ஏங்கிக்கொண்டி ருக்கின்றனர் என்ப தனை மறந் துவிடக்கூடாது. உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கியநாடுகளின் உண்மை,நீதி, நஷ்டஈடு, மற்றும் மீள் நிகழாமையை ஊக்குவிப்பதற்கான விசேட நிபுணர் பப்லு டீ கிரீப் முதற்கட்ட சந்திப்புக்களாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வருகின்றார்.…
-
- 0 replies
- 482 views
-
-
புதிய அரசமைப்பின் தர்மசங்கடமான பயணம் 0 SHARES ShareTweet புதிய அரசமைப்புக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. கூட்டு எதிரணித் தரப்பினர் புதிய அரசமைப்பு யோசனை களுக்கு எதிராக வெளியிடும் குற்றச்சாட்டுக் களை மறுத்துரைக்கும் விதத்தில் அரச தரப்பினரும் பதிலிறுத்து வருகின்றனர். தற்போது நடைமுறையில்உள்ள அரசமைப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள், அது அறிமுகப்படுத்தப்பட்ட வேளை பெருமளவில் முன…
-
- 0 replies
- 512 views
-
-
வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் இலங்கைத்தமிழர் விவகாரத்தில் இன்று பேசு பொருளாக்கப்பட்டிருக்கும் விடயம் இடைக்கால அறிக்கையாகும். பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இடைக்கால அறிக்கை தொடர்பாக, பல்வேறு விமர்சனங்களும் கருத்துக்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வறிக்கை பற்றி சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள், சாசன நெறியாளர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துகளை கூறிவருகின்றார்கள். இக்கருத்துகளும் விமர்சனங்களும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தருகின்றதா அல்லது சந்தேகங்களையும், அதிருப்திகளையும் உண்டு பண்ணுகிற…
-
- 0 replies
- 666 views
-
-
பாரபட்சம் இந்த நாட்டை முப்பது வருடங்களாக ஆட்டிப்படைத்த பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் காட்டப்படுகின்ற தாமதமும், இழுத்தடிப்பும் ஆட்சியாளர்களின் அரசியல் நேர்மை, அரசியல் நிர்வாக நேர்மை குறித்து பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. அரசியல் கைதிகளின் விவகாரம் மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதே இதற்குக…
-
- 0 replies
- 505 views
-
-
திசைகளின் திருமணம் எந்தப் புள்ளியில் முரண்பாடுகளின் தொடக்கம் ஆரம்பிக்கும் என்று நாம் அனுமானித்திருந்தோமோ, கிட்டத்தட்ட அந்தப் புள்ளியை அடைந்து விட்டோம். இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்த பேச்சுகளின் போது, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்திருப்பதா, பிரிந்திருப்பதா என்பதைத் தீர்மானிப்பதில்தான் இந்தத் தேசம் திணறப் போகிறது என்பதை, அவ்வப்போது இந்தப் பத்தியில் எழுதி வந்திருக்கின்றோம். இப்போது அந்த அனுமானங்கள் நிகழ ஆரம்பித்திருக்கின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வாக, புதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கை ஒன்றை, அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இதன் முக்கிய செயற்பாடாக புதிய அரசமைப்புக்கான இடைக்…
-
- 0 replies
- 425 views
-
-
கரையோர மாவட்டமும் தனி அலகும் தெளிய வேண்டிய மயக்கங்கள் மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருப்பவர்களுக்கும் கூட, சில வேளைகளில் அந்தமொழிகளில் இருக்கின்ற சில சொற்களின் அர்த்தங்கள் விளங்காமல் போவதுண்டு. ஒரே மாதிரியான இரு சொற்கள் மயக்கத்தை ஏற்படுத்துவதுண்டு. அதுபோல, முஸ்லிம் மக்களால் கோரப்படுகின்ற கரையோர மாவட்டம் மற்றும் முஸ்லிம் தனியலகு ஆகியவை தொடர்பிலும் பெருமளவானோர் குழம்பிப் போய் இருக்கின்றனர். இரண்டினதும் ஆழ அகலங்கள் என்ன? அவற்றுக்கிடையான வித்தியாசங்கள் என்ன? என்பது பற்றி, ஒருசில மக்கள் பிரதிநிதிகளும் விளங்காத்தனமாக அறிக்கை விடுவதைக் காண முடிகின்றது. அரசமைப்புச் சபையின் இடைக்கால அறிக்கையின் …
-
- 0 replies
- 360 views
-
-
நீதிமன்றத் தலையீடும் தலையிடிகளும் நீதிமன்றங்கள் என்பவை, நவீன கால மனித வாழ்வில் மிக அத்தியாவசியமானவையாக மாறியிருக்கின்றன. நீதிமன்றங்கள் இல்லாத ஒன்றை நினைத்துப் பார்ப்பதென்பது, சாத்தியமற்ற ஒன்றாகவே அமைந்திருக்கிறது. முன்னைய காலங்களில், நீதிபதிகளை மாத்திரமன்றி, நீதிமன்றத் தீர்ப்புகளையோ அல்லது நீதிமன்றக் கட்டமைப்பையோ விமர்சனத்துக்கு உள்ளாக்குவதென்பது, எண்ணிப் பார்க்க முடியாத ஒன்றாகவே காணப்பட்டது. ஆனாலும், மாறிவரும் சூழலுக்கு மத்தியில், தீர்ப்புகள் பற்றியும் ஒட்டுமொத்தமான நீதிமன்றக் கட்டமைப்புப் பற்றியும், கட்டமைக்கப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இது, நவீன சூழலில், ஆரோக்கியமானதொரு மாற்றமாகவே க…
-
- 0 replies
- 664 views
-
-
பலிக்கடாக்களாகும் அரசியல் கைதிகள் அநுராதபுர சிறைச்சாலையில், மூன்று தமிழ் அரசியல் கைதிகள் நடாத்தி வரும், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், மீண்டும் தீவிர கவனிப்புக்குரிய விவகாரமாக மாறியிருக்கிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில், அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணிகள் விடுவிப்பு விவகாரம் என்பன, அவ்வப்போது சில சம்பவங்கள், போராட்டங்களால் உச்ச கவனிப்புக்குரியதாக மாறுவதும், பின்னர் அது தணிக்கப்படுவதும் அல்லது தணிந்து போவதும் வழக்கமாகியுள்ளன. அந்தவகையில், இப்போது மூன்று வாரங்களாக, தமிழ் அரசியல் கைதிகள் நடத்தி வருகின்ற உண்ணாவிரதப் போராட்டத்தினால…
-
- 1 reply
- 902 views
-
-
தமிழ்த் தலைவர்களின் பொறுப்பு என்ன? ஈழத் தமிழரது போராட்டத்திற்தான் இலங்கைக்கான ஜனநாயகமும் ஏனைய இனங்களுக்கான உரிமைகளும் மையங் கொண்டுள்ளன. ஒடுக்கப்படும்,அநீதி இழைக்கப்படும் ஈழத் தமிழருக்கான ஜனநாயகமின்றி இலங்கைக்கான ஜனநாயகம் பற்றியோ, மனிதஉரிமைகள் பற்றியோ பேச முடியாது. நீண்ட காலமாய் தொடர்ச்சியாக ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநியாயங்களுக்கு எதிராக நீதியைக் காணாமல் இலங்கைக்கான நீதியைப் பற்றிப் பேசமுடியாது. தொன்மையான வரலாற்றையும் செழுமையான பண்பாட்டையும் கொண்ட ஆனால் அளவால் சிறிய ஈழத் தமிழினம் ஒடுக்குமுறைக்கு எதிரான தனது போராட்டத்தில் தன் அளவுக்கும் அதிகமான அளவு தியாகங்களைச் செய்துள்ளதுடன் தன் அளவையும் மீறிய அளவிற்கு அது அழிப்புக்களுக்கும், இழப்புக்களுக்கும…
-
- 0 replies
- 470 views
-
-
திருத்தங்கள் தொடக்கம் அரசமைப்பு வரை ஏமாற்றப்படும் முஸ்லிம்கள் காட்சிப் பிழையாலும் பிழையான காட்சிகளாலும் நிறைந்திருக்கிறது, முஸ்லிம்களின் அரசியல். எல்லாம் சரியாக நடக்கின்றது என்று முஸ்லிம் சமூகம் நம்பிக் கொண்டிருக்கின்றபோது, அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகின்றது. பிழையான காட்சியைக் கூட, சில தருணங்களில் பிழை எனக் காணாமல் இருப்பதும், போலிக் காட்சிகளை நிஜம் என நம்புவதும்தான் முஸ்லிம் மக்கள் சார்ந்த அரசியல் பின்னடைவுக்குக் காரணமாகும். முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவங்களும் அரசியல்வாதிகளும், தமக்குச் சாதமான பெருந்தேசியக் கட்சிகளின் காலடியில் கிடப்பதும், தலைவர்களைக் காப்பாற்றுவதற்காகத் தளபதிகள் சொற்போர் நடாத்துவதும், தளபதிகளை நம்ப…
-
- 0 replies
- 357 views
-
-
கடற்கரை மாசும் எமது மௌனமும் உலகில், மனித குலத்துக்கு மட்டுமன்றி அனைத்து ஜீவராசிகளுக்கும், சமுத்திரங்களின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. அந்த வகையில் நாம், கடற்கரையையும் கடல்சார் வளங்களையும் பராமரிப்பதும் பாதுகாப்பதும், மிக முக்கியமானது. நாற்புறமும் கடலால் சூழப்பட்ட இலங்கை, அழகிய கடற்கரைப் பிரதேசங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள போதிலும், அதிகரித்துச் செல்லும் கடற்கரைச் சூழல் மாசடைதல் காரணமாக, அதன் எழில் படிப்படியாக மறைந்து செல்கிறது. உலகளாவிய ரீதியில், ஒவ்வொரு வருடமும், கடலில் மாத்திரம் 60 சதவீதமான பிளாஸ்டிக் பொருட்களுடன் கூடிய 1,000 தொன்னுக்கும் அதிகமான குப்பைகள் அகற்றப்படுகின்றன. புள்ளிவிவரத்தின்பட…
-
- 0 replies
- 644 views
-
-
ஹக்கீம்,சம்பந்தன் யதார்த்த நிலையை வெளிப்படுத்துகின்றனர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் அண்மையில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்த கருத்துக்கள் இன்றைய சூழ்நிலையில் முக்கியத்துவம் பெறுகின்றன. ‘‘தமிழர்களின் விருப்பத்துக்குக் குறுக்கே முஸ்லிம்கள் நிற்கக் கூடாது. அரசியல்வாதிகள் இணைப் பைத் தடுப்பதிலும் பிரிப்பைக் கேட்பதிலும் தான் தமது காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பராயின், அது அவர்களின் அரசியல் வங்குரோத்தின் உச்சக்கட்டம் என்றே கூற வேண்டும்’’ இவ்வாறு ஹக்கீம…
-
- 1 reply
- 372 views
-
-
குர்திஷ் பொதுசன வாக்கெடுப்பு: தனிநாடு என்ற சூதாட்டம் ஒடுக்குமுறைக்காளாகிய சமூகங்கள் போராடுகின்றபோது, அதன் இறுதி இலக்காகத் தனிநாட்டைக் கொள்வது இயல்பு. இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்த, கொலனியாதிக்க விடுதலைப் போராட்டங்கள், பலநாடுகள் விடுதலையடையவும் புதிய நாடுகள் தோற்றம் பெறவும் உதவின. கெடுபிடிப்போரின் முடிவு, நாடுகள் பிரிக்கப்பட்டு, புதிய நாடுகள் பலவற்றின் தோற்றத்துக்கும் வழிவகுத்தது. புதிய நாடு இவ்வாறுதான் தோற்றம் பெறவேண்டுமென்ற சூத்திரமெதுவும் இல்லை. கடந்த சில தசாப்தங்களாகப் பல்வேறு காரணங்களினால் நாடுகளில் இருந்து, பிரிந்து சென்று, புதிய நாடுகள் தோற்றம் பெற்றிருக்கின்றன. அதேவேளை, சில நியாயமான விடுதலைப் போராட்டங்கள்,…
-
- 0 replies
- 486 views
-
-
அமையப்போகும் அரசியலமைப்பு மக்கள் தீர்ப்பால் அங்கீகரிக்கப்படவேண்டும் என கூறுவது ஏன்? http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-11#page-19
-
- 0 replies
- 343 views
-
-
இலங்கை அரசியலில் சமஷ்டியை ஆதரிக்காதவர்கள் இல்லை கடந்த மூன்று தசாப்த காலத்தில் அரசமைப்பு மாற்றம் பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெற்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அரசின் தன்மையே முக்கியமான விடயமாகவும் சர்ச்சைக்குரிய விடயமாகவும் அரசியல் அரங்கில் பேசுபொருளாகவும் மாறியது. அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தமிழர்கள் தமக்கு, சமஷ்டி முறையே வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளதோடு, சிங்களவர்கள் ஒற்றை ஆட்சி முறையே நாட்டில் இருக்க வேண்டும் எனப் பிடிவாதமாக இருந்துள்ளனர். இனப்பிரச்சினை, சாத்வீக போராட்டங்களில் இருந்து, ஆயுதப் போராட்டமாக மாறி, அதுவும் முடிவுற்று, தற்போது மீண்டும் போராட்டம் அரசியல் களத்தில் நடைபெற்று வருகிறது. …
-
- 0 replies
- 445 views
-
-
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஜனவரியில் வரவிருக்கின்ற நிலையில், அதற்கான ஆயத்தங்களில் அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் இருந்த இழுபறிகளுக்கு முடிவேற்பட்டுள்ளதையடுத்தே தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகியிருக்கின்றது. உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் மாகாணசபைத் தேர்தல்களைப் போலவோ அல்லது பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களைப் போன்று, ஒப்பீட்டளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என கூற முடியாது. இருந்தபோதிலும், உள்ளுராட்சி சபைகளிலும் அரசியல் கட்சிகளே ஆதிக்கம் செலுத்துகின்ற ஒரு போக்கே நாட்டில் நிலவுகின்றது. இதனால், அரசியல் கட்சிகள் தமது இருப்பின் மகிமையையும், தமது அரசியல் இருப்பின் பலத்தையும் பரீட்சித்துக் கொள்வ…
-
- 0 replies
- 443 views
-
-
புதிய அரசியல் யாப்பை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? இடைக்கால அறிக்கையில் சில முன்னேற்றகரமான விடயங்கள் இருக்கின்றன ஆனால் அவை ஒரு முடிவல்ல என்று இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். கடந்த வாரம் தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்திலேயே சம்பந்தன் இதனை தெரிவித்திருக்கின்றார். இதிலிருந்து சம்பந்தன் தலைமையிலான அணியினர் தங்களது வேலையை ஆரம்பித்துவிட்டனர் என்பது தெளிவு. சம்பந்தன் தனதுரையில் பிறிதொரு விடயத்தையும் குறிப்பிட்டிருக்கின்றார் அதாவது, புதிய அரசியலமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், மக்களின் விரும்பத்தினை அறிந்து கொள்ளும் வகையில் பொதுசன வாக்கெடுப்பு விடப்பட…
-
- 0 replies
- 397 views
-
-
கூட்டமைப்புக்கு எதிராக மாற்று அணி தேடும் புதிய தலைவர் யார்? எதிர்வரும் 2018, தேர்தல்களுக்கான ஆண்டாக இருக்கப் போகின்றது. முதலாம் காலாண்டுப் பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களோடு ஆரம்பிக்கும் தேர்தல் பரபரப்பு, மாகாண சபைத் தேர்தல்கள் வரையில் நீடிக்கும் வாய்ப்புண்டு. அந்தக் காலப்பகுதிக்குள், புதிய அரசமைப்பு மீதான, பொது வாக்கெடுப்புக்கான சாத்தியமும் காணப்படுகின்றது. தமது அரசியல் தலைமைத்துவத்தை, வாக்கு அரசியல் மூலமாகத் தேடிக்கொள்ள நினைக்கும் சமூகமொன்றில், தேர்தல்கள் செலுத்தும் தாக்கம் மிகப்பெரியது. அப்படியான கட்டத்தை தென்னிலங்கை 1950களின் ஆரம்பத்திலேயே அடைந்துவிட்டது. அவ்வாறான கட்டத்தை நோக்கியே, தமிழ்த் த…
-
- 0 replies
- 453 views
-
-
மதசார்பற்ற நாடு அவசியமா? இலங்கையின் அரசமைப்பு உருவாக்கத்துக்காகச் செயற்படும் அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவின் இடைக்கால வரைவு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை வெளியிடப்பட்டு, சில வாரங்கள் கடந்துவிட்டாலும், அது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான கலந்துரையாடல்களில், முக்கியமான இரண்டு விடயங்கள் காணப்படுகின்றன. முதலாவது: இலங்கை அரசின் தன்மை குறித்தது. இரண்டாவது: இலங்கையில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட வேண்டிய அல்லது வழங்கப்படக் கூடாத முதலிடம் அல்லது முன்னுரிமை தொடர்பானது. இதில் முதலாவது விடயம், அதிகமான அரசியல் பின்னணிகளைக் கொண்டது. அதிகமான க…
-
- 2 replies
- 743 views
-
-
கூட்டாட்சி சாத்தியமா? 0 SHARES ShareTweet புதிய அரசமைப்பை உருவாக்குவது தொடர்பான இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது கூட்டாட் சியா அல்லது ஒற்றையாட்சியா என்பது தொடர்பில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்று ஒட்டுமொத்த நாட்டு மக்களுமே குழம்பிப் போயுள்ளனர். நாட்டு மக்களுக்குத்தான் இந்த விடயத்தில் விளக்கம் இல்லை என்று பார்த்தால், அதை உருவாக்கியவர்கள்கூட அதாவது முக்கிய அரசியல் புள்ளிகள் மற்றும் இடைக்கால அறிக்கையை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவில் இருந்தவர்கள் என ப…
-
- 0 replies
- 402 views
-
-
புலம்பெயர் சமூகத்திடமிருந்து தாயக மக்கள் எதிர்பார்ப்பது என்ன? புலம்பெயர்ந்திருக்கும் சமூகத்தினரிடமிருந்து தாயக மக்கள் எதிர்பார்ப்பது என்ன? அல்லது அவர்கள் எத்தகைய செயற்றிட்டங்களுக்கு உதவவேண்டும்”? என்று இரண்டு நாட்களுக்கு முன்பு, கேட்டார் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்கின்ற நண்பர் ஒருவர். யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி இது. இன்னும் சொல்லப்போனால், யுத்தத்துக்குப் பிறகு, இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்த பிற்பாடு, எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி இது. இந்த இரண்டு தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பெரும்பான்மையாக வெற்றியடைந்த பிறகு, எழுப்பப்…
-
- 0 replies
- 335 views
-
-
புதிதாக எதுவும் இல்லாத புதிய அரசமைப்பு புதிய அரசமைப்பொன்றைத் தயாரிப்பதற்காக நாடாளுமன்றம், அரசமைப்புச் சபையாக மாற்றப்பட்டதன் பின்னர், அதன் கீழ் நியமிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை, அக்குழுவின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, கடந்த 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த இடைக்கால அறிக்கையில், அரசாங்கத்தின் தன்மை, விவரிக்கப்பட்டுள்ள விதம், ஒரு வகையில் விசித்திரமானது. மற்றொரு வகையில், அதை ஆக்கியவர்கள் நாட்டின் சமூகங்களிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்த ‘படும் பாட்டை’ எடுத்துக் காட்டுகிறது. அரசின் தன்மை அதில் இவ்வாறுதான் விவரிக்கப்பட்டுள்ளது. ‘இலங்கையானது அரசமைப்பினால் வழங்கப்…
-
- 0 replies
- 815 views
-