Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஜெனீவாவுக்குப் போதல்: - நிலாந்தன் தமிழ் மக்கள் காசிக்கு போவதுண்டு. கதிர்காமத்திற்கு போவதுண்டு, மடுவிற்கு போவதுண்டு. அவையெல்லாம் புன்ணியம் தேடிப் போகும் மத யாத்திரைகள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஈழத் தழிழர்களுடைய வாழ்க்கையில் இணைந்திருக்கும் ஓரு புதிய அம்சம் 'ஜெனீவாவுக்கு போதல்.' இது நீதி தேடிப் போகும்ஓர் அரசியல் யாத்திரை. ஜெனீவாவிற்கு தாயகத்திலிருந்தும் ஆட்கள் போகிறார்கள். டயாஸ்பொறாவிலிருந்தும் போகிறார்கள். அரசியல் வாதிகள் போகிறார்கள் செயற்பாட்டாளர்கள், சட்ட நிபுணர்கள், வழக்கறிஞர்கள் போகிறார்கள்ஊடகவியலாளர்கள் போகிறார்கள் என். ஜி. ஓ. அலுவலர்கள் போகிறார்கள். இவர்;களோடு சில சமயங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்தும் சி…

    • 1 reply
    • 373 views
  2.  பிரெக்ஸிட் வாக்கெடுப்பு: பிரித்தானியா வெளியேறுமா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ தீர்மானிக்கும் சக்தியாக, மக்கள் எப்போதும் இருப்பதில்லை. ஆனால், அவர்கள் தீர்மானமான சக்தியாகும்போது, பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் மாயத்தை நிகழ்த்துவார்கள். ஐனநாயகம் என்ற அழகிய முகமூடி, தேர்தல் என்ற கவசத்தினூடு முழுமையாக மறைத்திருக்கின்றபோதும், அக்கவசத்தையை ஆயுதமாக்கி மக்கள் நிகழ்த்தும் மாயம், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை அல்ல, மக்கள் மீதான நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாயுள்ளது. நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்துவிடும் என்ற பாடல் வரிகள், அண்மைய பிரித்தானிய நிலைவரங்களை விளக்கப் பொருத்தமானவை. பிர…

  3. ஜெனீவாத் திருவிழாவும் காவடிகளும் புருஜோத்தமன் தங்கமயில் ஜெனீவாத் திருவிழாவின் இன்னொரு முக்கிய நாள் இன்று. அதாவது, ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடரில், இன்று (ஜூன் 29, 2016) மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார். அத்தோடு, இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார். கோயில் திருவிழாக்கள் வருடத்துக்கு ஒருமுறை மாத்திரமே நடைபெறுவது வழக்கம். ஆனால், ஜெனீவாத் திருவிழா வருடத்துக்கு இரண்டு, மூன்று முறை நடைபெறுகின்றது. தற்போது நடைபெற்றுக் கொண்டி…

  4. 1986ம் ஆண்டு இன்றைக்கு 30 ஆண்டுகளுக்கு முன் - அது பனிப்போர் காலம் - முதலாளிய சனநாயகம் என்று மேற்குலகமும் சோசலிசம் என்று சோவித் யூனியன் தலைமையில் கிழக்குலகமும் பொருதிக கொண்டிருந்த காலம். தம் இறைமைக்காக போராடியவர்கள் பலரும் சோசலிசவாதிகள் என அடையாளம் காணப்பட்டதும் இரு பகுதியில் ஒருவரின் ஆதரவைப் பெற்றே விடுதலைப் போராட்ட களங்கள் நகர்ந்த காலம் அது. இவ்விரு பகுதியினரையும் கடந்து அணிசேராக் கொள்ளை கொண்ட கூட்டமைப்பை நகர்த்த தொடர்ந்தும் முனைப்புக்கள் அதிகரித்திருந்த காலமும் கூட. இச்சிந்தனைக்கு வடிவம் கொடுத்தவர்கள் யூகோசெலவாக்கியாவின் டிட்டோ, இந்தியாவின் நேரு, இந்தோனேசியாவின் சுகாணோ ஈகிப்தின் நாசர் ஆகியோர் இவ்வாறான காலப்பகுதியில் தான் ஈழவிடுதலைப்போரும் வீச…

  5. BREXIT: இலங்கையும் தமிழர்களும் இதில் எங்கே? தெய்வீகன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கான வாக்கெடுப்பைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் அதிர்வுகள், இப்போதைக்கு ஐக்கிய இராச்சியத்தில் மாத்திரம் கணிசமானளவு சலசலப்புக்களை ஏற்படுத்திய வண்ணமுள்ளன. அரசியல் ரீதியான இன்னும் பல வெடிப்புக்களை எதிர்வரும் மாதங்களில் முகங்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஐக்கிய இராச்சிய அரசாங்கம், தனது நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது. ஒருபுறம், ஸ்கொட்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகியவை, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியமை தமது நாட்டு மக்கள் தேர்தலில் வழங்கிய ஆணைக்கு எதிரான முடிவு என்றும் இம்மாதிரியான …

  6. தமிழ் மக்களை யார் யாரெல்லாம் அரசியல் நீக்கம் செய்து வருகிறார்கள்? நிலாந்தன் கடந்த வாரம் யாழ் மறைக் கல்வி நிலையத்தில் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இச் சந்திப்பில் சிவில் சமூகப் பிரதிநிதிகளும், மதகுருமார்களும் பங்கு பற்றியிருந்தார்கள். நிலைமாறு கால கட்ட நீதியை தமிழ் நோக்கு நிலையிலிருந்து விளங்கிக் கொள்வதும் இது விடயத்தில் சிவில் இயக்கங்களை எப்படிப் பங்காளியாக்கலாம் என்பது பற்றிச் சிந்திப்பதற்குமான இச்சந்திப்பில் ஒரு கிறிஸ்தவ மதகுரு பின்வரும் தொனிப்படக் கருத்துத் தெரிவித்தார்.... 'நீங்கள் பெரிய பெரிய சொற்களைப் பயன்படுத்துகிறீர்கள், பெரிய பெரிய அரசியல் கோட்பாடுகளைப் பற்றிக் கூறுகிறீர்கள். ஆன…

  7. நொண்டிக் குதிரைகள் அழகன் கனகராஜ் மலையகத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலான இடங்களில் 'சுமைதாங்கிக் கல்' இருக்கும். நகர்புறங்களுக்குச் சென்று வாங்கும் பொருட்களை மூடையாய்க் கட்டி, தலையில் சுமந்து வருகின்றவர்கள், அந்தச் சுமைதாங்கியின் மேல் மூடையை வைத்துவிட்டு இளைப்பாறியதன் பின்னர், அவ்விடத்திலிருந்து வீட்டை நோக்கி நடப்பர். எனினும், நிறைமாதமாய் இருக்கின்ற கர்ப்பிணிப் பெண் திடீரென இறந்துவிட்டால், அப்பெண்ணின் நினைவாகவே சுமைதாங்கிக் கல், ஊர் எல்லையிலுள்ள ஒரு முச்சந்தியில் அமைக்கப்பட்டதாக முன்னோர்கள் கூறியது இன்னுமே ஞாபகத்தில் இருக்கின்றது. அந்தச் சுமைதாங்கிக் கல், பெரும்பாலும் ஊர் (தோட்டத்தின்) எல்லையிலேயே இர…

  8. ஜரோப்பிய ஒன்றியத்தில் இணைவதா? பிரிவதா? என்பதை முடிவெடுக்க இங்கிலாந்தில் நேற்று நடந்த பொது வாக்கெடுப்பின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. கடும் மழையிலும் 72 வீத மக்கள் வாக்களித்திருக்கின்றனர். இதில் 52 வீதத்தினர் பிரிவுக்கும் 48 வீதத்தினர் இணைவுக்கும் வாக்களித்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து ஆளும்கட்சிப் பிரதமரின் தலைமையை நோக்கி எழுந்த அவரது கட்சிக்காரரின் அழுத்தம் காரணமாகப் பிரதமர் டேவிட் கமரூன் இராஜினாமா செய்திருக்கிறார். லேபர் கட்சித் தலைவருக்கும் நெருக்கடி கொடுக்கும் வேலை அக்கட்சிக்குள் இருக்கும் வலதுசாரிகளால் தொடக்கி விடப்பட்டிருக்கிறது. 1 அரசியல் அதிகாரத்தின் தோல்வி இங்கிலாந்தின் மூன்று பெரும் கட்ச…

  9. மாமன்னர் மகிந்தர் மீது (நிதி துஸ்பிரயோகம் உட்பட ) எந்த குற்றச்சாட்டும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன சொல்லியிருக்கிறார். மன்னரது சுற்றத்தாருக்கு மட்டும் தான் வழக்கு இருக்கிறதாம். மன்னர் நல்லவராம், கூடின கூட்டம்தான் சரியில்லை என்கிறவகையில் சொல்லியிருப்பது, சிறிலங்கா அமைச்சரவையின் பேச்சாளர். மாற்றம் என்று சொல்லப்பட்டதன் முக்கிய பங்காளி. ஏற்கனவே மகிந்தர் மீது போர்க்குற்ற விசாரணை இல்லை, அவரை சர்வதேச விசாரணைகளில் இருந்து பாதுகாத்துவிட்டேன், இனியும் பாதுகாப்பேன் என்று அதிமேதகு மைத்திரி அடிக்கடி சொல்லிவருகிறார். சிங்கள குடியேற்றங்கள், மகிந்தர் செய்த வேகத்திலேயே தொடர்ந்து நடக்கிறது. விகாரைகள் மகிந்தர் காலத்தை விட வேகமாக முளைக்கிறது. இராணுவ குடியி…

    • 0 replies
    • 651 views
  10. பேச்சாளர்களின் பட்டியலில் கலாநிதி தயான் ஜெயதிலகவின் பெயர் காணப்பட்ட போது, இதற்கான அனுமதியை வழங்குவதற்கு மங்கள மறுத்தார். இக்கருத்தரங்கானது அதிபர் செயலகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டது என்பதைக் கூட மங்கள தனது கவனத்திற் கொள்ளவில்லை. இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. கருத்தரங்கு ஒன்றை நடத்துவதற்கு லக்ஸ்மன் கதிர்காமர் நிறுவகத்தின் மண்டபம் ஒன்றை தந்துதவுமாறு சில வாரங்களுக்கு முன்னர் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது. மைத்திரிபால சிறிசேன அந்தக் கருத்தரங்கின் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் இக்கர…

  11. துர்நாற்றமடிக்கும் உலக அரசியற்களம் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா 'முட்டாள்தனமென்பது, அரசியலில் குறைபாடு அன்று' என, மாவீரன் நெப்போலியன் கூறிய கூற்று ஒன்று காணப்படுகிறது. உலகில் ஆட்சி புரிந்தோரில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினரை எடுத்துப் பார்த்தால், நெப்போலியனின் கூற்றுச் சரியெனப்படும். ஆனால், அண்மைக்காலத்தில் எழுந்திருக்கின்ற புதியவகை நிலைமை என்னவெனில், 'கடும்போக்குவாதமென்பது, அரசியலில் மிகப்பெரிய அனுகூலமாகும்' என்பது தான். உலகத்தின் பல பகுதிகளிலும், கடும்போக்குவாதக் கொள்கைகளுக்கு ஆதரவும் பின்தொடர்வோரும் அதிகரித்த வண்ணம் இருக்கும் நிலைமையைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்தக் கடும்போக்குவாதங்கள், முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவருவதற…

  12. நல்லாட்சி சவாரியில் டக்ளஸும் தொண்டமானும் புருஜோத்தமன் தங்கமயில் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை, எதிர்வரும் நாட்களில் மேலும் விரிவுபடுத்தப்படலாம் என்று பேச்சு நிலவுகின்றது. இதன்போது, முன்னாள் அமைச்சர்களான, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானும் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில், சிறுபான்மைக் கட்சிகள், பெரும்பாலும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்த போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்த சிறுபான்மைக் கட்சிகளில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் (ஈ.பி.டி.பி), இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும…

  13. கொழும்பிலுள்ள வெளிநாட்டுத்தூதுவர்கள் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்வதும், அங்கு சந்திப்புகளை நிகழ்த்துவதும் வழக்கமானதொரு விடயமாக இருந்தாலும், கடந்த வாரம் சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தை வழக்கமானதொன்றாக எடுத்துக்கொள்ள முடியாது. சீனத் தூதுவர் யி ஷியான்லியாங், சீனத் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் லி செங்லின் உள்ளிட்ட தமது அதிகாரிகளுடன், கடந்த 14ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார். அவர் அங்கு மூன்று முக்கிய தரப்பினரைச் சந்தித்துப் பேசினார். வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட குரே, யா்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன். சீனத் தூதுவர் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு மே…

  14. வன்னியில் - மல்லாவியில் சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றின்போது, வளவாளர் ஒருவர் கேட்டார், ''நிலைமாறு கால கட்ட நீதி என்றால் என்ன? அதைப் பற்றி யாராவது இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?' என்று. அதற்கு ஓர் இளம்பெண் சொன்னார், ''ஏதோ ஒரு பத்திரிகைச் செய்தியில் ஒரு முறை வாசித்ததாக ஒரு சிறு ஞாபகம்' என்று... இது தான் நிலைமை. தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு நிலைமாறு கால கட்ட நீதி என்றால் என்னவென்றே தெரியாது. தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேருக்கு இது பற்றி விளக்கம் உண்டோ தெரியவில்லை. தமிழ் புத்திஜீவிகளில் சிறு தொகுதியினருக்கும், என்.ஜி.ஓக்களில் சில பகுதியினருக்கும் அதுவொரு காசு காய்க்கும் மரம். இதில் மிகச் சிறிய அளவிலா…

    • 0 replies
    • 356 views
  15. அண்மையில் அவுஸ்திரேலியாவிற்கு யாழ் சிவில் சமூக செயற்பாட்டாளர் குருபரன் வருகை தந்தபோது அவருடைய கலந்துரையாடலில் பங்குகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது. குருபரன் ஏற்கனவே சமூகவலை தளங்கள் ஊடாக பெரும்பாலானவர்களுக்கு அறிமுகமானவராக இருந்தபோதும், நேரடியாக அவரது கருத்துக்களை அறிந்துகொள்வது மிகவும் பயனுள்ளது. இப்பத்தி அவரது கருத்துக்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளபோதும் இன்னும் சில முன்னேற்றகரமான சிந்தனைகளை கொண்ட சாதாரண குடியானவர்களின் கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. கீழ்வரும் மூன்று விடயங்கள் ஊடாக, முக்கிய கருத்துக்களை வாசகர்களுக்கு கொண்டுவருதல் பொருத்தமானது. சமகால நிலவரங்களை பற்றியது நல்லாட்சி அரசு வந்தபின்னர், சர்வதேச நாடுகளை பொறுத்தவரை புதிய மென்போக்க…

    • 0 replies
    • 416 views
  16. போர்க் குற்ற விசாரணையை மேற்கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டால் சிறிலங்காவில் இராணுவச் சதி ஒன்று ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என்பது அமெரிக்காவிற்கு நன்கு தெரியும். இந்தியாவும் இதையொத்த எண்ணப்பாட்டையே கொண்டுள்ளது. இவ்வாறு சிலோன் ருடே ஆங்கில நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பாக, சிறிலங்காவிற்கான சீனத் தூதுவர் ஜி ஷியான்லியாங் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சிறிலங்காவின் உள்விவகாரங்களில் வெளிச்சக்திகள் தலையீடு செய்வதை சீனா எதிர்ப்பதாக தூதுவர் ஜி ஷியான்லியா…

  17. ஜக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் புதிய அரசாங்கம் எல்லாவற்றையும் செய்யப் போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. அதனை ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெளிவுபடுத்தியிருந்தார். உள்நாட்டு விசாரணைதான் இடம்பெறும், அதில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றார். ஆனால், ரணில் எவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இதனை குறிப்பிட்டிருக்கிறார்? இலங்கையின் முக்கிய இராணுவ அதிகாரிகளுடனான சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார். புதிய அரசாங்கம் சர்வதேசத்துடன் இணைந்து செல்வதென்று முடிவெடுத்த போது தெற்கில் எழுந்த முதல் கேள்வி விடுதலைப் புலிகளை தோற்கடித்த இராணுவத்தை காட்டிக் கொடுக்கவா போகின்றீர்கள் என்பதே! இன்றைய நிலையில் இ…

    • 0 replies
    • 1k views
  18. மாவட்ட அபிவிருத்தி தலைவர் பதவி வட கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படும் என பகல் கனவு கண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆப்பு வைத்தார்கள் மைத்திரியும் ரணிலும்... தற்போது யாழ், கிளிநொச்சி,வன்னி மாவட்டத்தை பொறுத்தமட்டில் முதலமைச்சர் தமிழர் விஐயகலா தமிழர் அங்கயன் தமிழன் பறவாய் இல்லை. மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தமட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் மூன்று அதில் இரண்டு பேர் பிரதி அமைச்சர்கள் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் முஸ்லிம் ஊருக்கு ஒரு எம்.பி, ஓட்டமாவடிக்கு அமிரலி, ஏறாவூருக்கு மௌலானா, காத்தான்குடிக்கு ஹிஸ்புல்லா, இவர்களுடன் மாவட்ட இணைத்தலைவராக முதலமைச்சர் ஹாபிர் நஸீர் நான்கு பேர் இஸ்லாமியர்கள் 75 வீதம…

    • 0 replies
    • 681 views
  19. அமெரிக்காவே ஜப்பானிலிருந்து வெளியேறு தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ 'தன் கையே தனக்குதவி' என்பது பழமொழி. இதன் நிகழ்நிலை உதாரணங்கள் பலவற்றைக் கண்டிருக்கிறோம். உதவி என்ற பெயரில் உவத்திரவம் செய்வது உலக அரசியல் அரங்கில் நிறைய உண்டு. உதவிகள் பல்வேறு பெயர்களில் நடந்தேறி முடிவில் புதிய ஆதிக்க வடிவங்களாக நிலைபெறுகின்றன. பாதுகாப்பின் பெயரால் அழைத்தவர்களாலேயே, பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாமற் போன அவலம் இங்கும் நடந்தது. அந்நிய உதவியைக் கூவி அழைப்பவர்கள் மனங்கொள்ள வேண்டிய விடயமிது. ஜப்பானில் உள்ள அமெரிக்கப் படைகளை வெளியேறக் கோரிக் கடந்த சில வாரங்களாக ஜப்பானியர்கள் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஊடகங்கள் அவற்றைக் கவனிக்கவில்லை. குறி…

  20. சிறிலங்காவின் இன்றைய ஆட்சியை எல்லோரும் நல்லாட்சி என்றே அழைக்கிறார்கள். ஐநா மனித உரிமை ஆணையாளர் உற்பட அனைத்துலக இராஜ தந்திரிகளும் அவ்வாறே அழைக்கிறார்கள். ஆளுபவர்களும் அப்படியே தம்மை சொல்லிகொள்ளுகின்றனர். தமிழர்களும் அப்படியே அழைக்க பழகிவிட்டனர். நல்லாட்சி என்று அழைப்பதில் ஆளும் தரப்பிற்கும், அனைத்துலக தரப்பிற்கும் நன்மை இருக்கிறது, அதற்கான தேவையும் இருக்கிறது. ஆனால் தமிழர்களுக்கு என்ன இருக்கிறது? நல்லாட்சி என்பது வெறுமனே வரைவிலக்கணத்திற்கு ஊடாக அடையாளப்படுத்தப்படுகிற ஒன்றல்ல. மாறாக அது ஆட்சியின் நடைமுறைக்கூடாக, அதன் தன்மை, பண்புகளை மதிப்பீடு செய்வதன் ஊடாக அடையாளப்படுத்தப்படுகிற ஒன்று ஆனால் சிறிலங்காவை நல்லாட்சி என்று அழைப்பது மேற்சொன்ன மதிப்பீடுகளுக்கு ஊடாக வெளித…

    • 0 replies
    • 796 views
  21.  யாரை நோக்கியது மைத்திரியின் நல்லிணக்க உரையாடல்? முரண்பாடுகளின் அனைத்து வடிவ இடர்பாடுகளையும் அழிவினையும் சந்தித்து நிற்கின்ற நாடொன்றின் முன்னோக்கிய பயணம், நீதி பரிபாலனம், பரஸ்பர நம்பிக்கை உள்ளிட்டவற்றினூடு கட்டமைக்கப்படும் நல்லிணக்கத்தினூடே சாத்தியமாகும். சுதந்திர இலங்கைக்கான பேச்சுக்கள் ஆரம்பித்த காலத்தில் தோற்றம் பெற்ற அரசியல் பிரச்சினைகளும் அது ஏற்படுத்திவிட்ட இனமுரண்பாடுகளும், இலங்கையை இன - மத- பிராந்திய ரீதியாகப் பிளவுபடுத்தி விட்டிருக்கிறது. அதுவே, பெரும் ஆயுத மோதல்கள் தோன்றுவதற்கும் காரணமாகியது. ஆயுத மோதல்களின் பெரும் அழிவுகளை எதிர்கொண்டு அல்லாடுகின்ற நாடொன்றின் முன்னோக்கிய பயணம் தொடர்பில், பாதிக்கப்பட்டவர்களும…

  22.  சி.வியும் சிங்கள மொழியும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் மாணவர்களிடம் மிக முக்கியமானதொரு வேண்டுகோளை விடுத்துள்ளார். தாம் செய்ததைப் போல், சிங்கள மொழியைக் கற்காதிருக்க வேண்டாம் என அவர் கேட்டுள்ளார். யாழ். கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை கலைமகள் திருவுருவச் சிலை திறப்பு விழா, கடந்த வாரம் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். 'இலங்கை வாழ் மக்களிடையே, ஐயமும் சந்தேகமும் மனக் கிலேசமும் அவநம்பிக்கையும் ஆத்திரமும்;, இதுகாறும் ஏற்படக் காரணம் தவறான புரிதலாகும். இரு மொழி பேசும் மக்களிடையே புரிந்துணர்வு ஏற்பட வேண்டுமானால், ஒருவர் மொழியை ஒருவர் கற…

  23. புள்ளடிக்குக் காத்திருக்கும் கங்காரு ப.தெய்வீகன் ஸ்திரமற்ற அரசியல்சூழல் என்பது, இன்றைய திகதியில் நாடுகளுக்கு இடையிலான தொற்றுநோய் என்று கூறலாம். எங்குமே, அரசியல் நிம்மதியென்பது பற்றாக்குறையாகவே காணப்படுகிறது. இன்றிருக்கும் அரசாங்கம், நாளை நிலைக்கும் என்ற உறுதியில்லை. இன்று ஆளும் ஜனாதிபதியோ, பிரதமரோ, நாளை காலையில் பதவியிலிருப்பர் என்று உத்தரவாதம் இல்லை. 'ஆட்டுவிப்பார் யாரொருவர் ஆடாதோரா கண்ணா'என்பதுபோல, அரசியல் என்பது இப்போதெல்லாம் முழுமையாகவே திரைமறைவிலிருந்து ஆட்டுவிக்கும் வஞ்சக நாடாகமாகிவிட்டது. இந்த ஈடாட்டத்தின் ஓர் அங்கமாக, அவுஸ்திரேலியா, கடந்த மூன்று வருடங்களாக அரசியல் ஸ்திரமற்ற நிலையில் அகப்பட்டு அல்லாடிக் கொண்டிருக்கிறது. அந்த ஈடாட…

  24. மனித உரிமைகள் கூட்டத் தொடர் தொடங்கவிருக்கும் ஒரு பின்னணியில் யாழ்ப்பாணத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சில கடந்த வாரம் வரை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. நல்லிணக்கம், நிலைமாறுகாலகட்ட நீதி போன்ற தலைப்புக்களின் கீழ் அவசர அவசரமாக கருத்தரங்குகளும் வகுப்புக்களும் நடாத்தப்பட்டன. இக்கருத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டு வந்த விதம் வேகம் அவற்றின் செறிவு என்பனவற்றைத் தொகுத்துப் பார்த்தால் ஏதோ ஒரு கால எல்லை குறிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட நிதியை எப்படி விரைவாகச் செலவழிக்கலாம். அதற்கு எப்படிக் கணக்குக் காட்டலாம் என்ற அவசரமே தெரிந்தது. அது தான் உண்மை என்று ஐ.என்.ஜி.ஓ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிலைமாறு கால கட்ட நீதி குறித்து சாதாரண சனங்களுக்கு விழிப்பூட்டுமாறு ஐ.நா. ஒரு தொ…

    • 0 replies
    • 489 views
  25. இனப்படுகொலைக்கான நீதியில்தான் ஈழத் தமிழரின் இருப்பு! (UNHRC இன் 32 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மனித உரிமைப் பேரவையின் 32ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் முக்கிய இடத்தை வகிக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத்தில் இலங்கை தொடர்பில் பேரவையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது பிரேரணையின் முக்கிய விடயமாக கருதப்பட்டது. இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டு முக்கால் வருடத்தின் பின்னர் மனித உரிமைப் பேரவை இன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.