Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. கடற்புலிகளின் கனவகை ஆயுதப் பிரிவு தரைப்பணிச் சீருடையில் மாலதி நினைவெழுச்சி நாளில், 2002 (படிம எழுத்து அழிப்பான் செயலி ஏதேனும் ஒன்றிம் மூலம் அந்த நீர்வரிக்குறியை அழித்துவிட்டு படிமத்தை பயன்படுத்தவும்.) வானூர்தி எதிர்ப்புக் காண்புகள் பூட்டப்பட்ட DShK 40mm கைக்குண்டு செலுத்தியுடன் ZPU-2: 20mm GIAT: கடற்புலிகளின் கனவகை ஆயுதப் பிரிவு | ZPU-2 கடற்புலிகளின் கனவகை ஆயுதப் பிரிவு | DShK கடற்புலிகளின் கனவகை ஆயுதப் பிரிவு | PKMS "வேவ் ரைடர் வகுப்பைச் சேர்ந்த "உதயச்செல்வி" என்ற கலப்பெயரைக் கொண்ட சண்டைவண்டி"
  2. 1985 'புலிகளின் வான்காப்பு' 'புலிகளின் வான்காப்பு'
  3. சூன் 7, 1985 பரந்தனிற்கு கிட்டவாக இருந்த ஓர் பயிற்சி முகாமில் எம் 16 துமுக்கியையும் எம் 90 கைக்குண்டு செலுத்தியையும் எவ்வாறு பாவிப்பது என்று பயிற்சி கொடுக்கிறார் ஓர் பயிற்சியாளர்.
  4. ஒக்டோபர் 1985 பழ. நெடுமாறன் ஐயா கமுக்கமாக தமிழீழம் வந்த போது 'சிறுத்தையை தூக்கி வைத்திருப்பவர் விக்டர் அவர்கள் ஆவார்' வலது முதலாமவர் பொட்டு அம்மான்
  5. பயிற்சிக் காலத்தில் 1985 தமிழ்நாட்டில்
  6. 1985
  7. இந்தியாவிலிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்களின் விரிப்பு: மூலம் & கிட்டிப்பு: http://agaliniyan.blogspot.com/2015/08/blog-post_5.html "■ 1 வது மற்றும் 2 வது பயிற்சி முகாம் - உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்தியா ராணுவத்தால் லெப் கேணல் பொன்னம்மான் அண்ணா தலைமையில் நடந்தது. ■ 3 வது பயிற்சி முகாம் - கொளத்தூரில் மாத்தையா மற்றும் புலேந்தி அம்மன் தலைமையில் நடந்தது. ■ 4 வது பயிற்சி முகாம் - திண்டுக்கல்லில் புலேந்தி அம்மான் மற்றும் மாத்தையா தலைமையில் நடந்தது. பயிற்சி கொடுத்தவர் மேஜர் செல்வராசா மாஸ்டர். ■ 5 வது பயிற்சி முகாம் - மதுரையில் லெப் கேணல் இராதா அண்ணாவால் பயிற்சி வழங்கப்பட்டது. (இராதா அண்ணா முதலாவது பயிற்சி முகாமில் இந்தியா இராணுவத்திடம் பயிற்சி பெற்றவர்) ■ 6 வது பயிற்சி முகாம் - கொளத்தூரில் லுகாஸ் அம்மானால் (இவர் நடேசன் அண்ணாவின் தம்பி) வழங்கப்பட்டது. இவரும் முதலாவது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்தவர். இந்த பயிற்சி முகாமிற்கு இரண்டாவது பொறுப்பு மேனன் அண்ணா. ■ 7 வது பயிற்சி முகாம் - திண்டுக்கல்லில் பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது இந்தப் பெண்கள் பயிற்சி முகாமிற்கு பாதிக்காலங்கள் வரை மேஜர் செல்வராசா மாஸ்டரும். மீதிக் காலங்கள் வரை மேஜர் பாரதி அண்ணாவும் பயிற்சி வழங்கினார். இந்த பயிற்சி முகாமில் இரண்டாவது பொறுப்பாளராக இந்திரன் மாஸ்டர் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. (இந்திரன் மாஸ்டர் 4 வது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்தவர்) ■ 8 வது பயிற்சி முகாம் எண்ணின் அடிப்படையில் ஆரம்பிக்கப்படவில்லை!!! ■ 9 வது பயிற்சி முகாம் - மதுரையில் அற்ரி (Atri) அண்ணாவால் பயிற்சி வழங்கப்பட்டது. அற்ரி அண்ணா 5 வது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்தவர். தற்போது உயிருடன் உள்ளார். ■ 10 வது பயிற்சி முகாம் - கொளத்தூரில் கப்டன் ரோய் அண்ணாவால் பயிற்சி வழங்கப்பட்டது. இவர் மூன்றாவது பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்தவர். கப்டன் ரோய் அண்ணா தமிழீழத்தில் இருந்த வேளை பலாலியில் காயமடைந்து தமிழகத்திற்கு சிகிச்சைக்காக வந்த வேளை வீரமரணமடைந்த அவரது உடலை இவர் பயிற்சி கொடுத்த முகாமான 10 வது பயிற்சி முகாமிலேயே அடக்கம் செய்யப்பட்டது. 9 வது 10 வது பயிற்சி முகாம் தமிழகத்தில் நடைபெற்று வந்த காலத்தில் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழத்தில் அரியாலை மற்றும் சாவகச்சேரி போன்ற இடங்களில் கேணல் கிட்டண்ணா அவர்களால் புதிய போராளிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது.. அந்த வேளைகளில் வன்னியிலும் பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட பயிற்சி முகாம்களில் 3, 6, 10 போன்ற பயிற்சி முகாம்கள் கொளத்தூர் மணி அண்ணாவின் தோட்டக் காணிகள் ஆகும்... " ---------------------- 3வது பயிற்சி முகாம் அமைக்க முன்னர் அதற்கான இடத்தை தெரிவு செய்ய போராளிகள் திராவிடக் கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளராக இருந்த திரு. கு. இராமகிருஸ்ணன் அவர்களிடத்தில் சென்றனர். அவரும் கோவையிலிருந்த தனது தோட்டத்தை இவர்களுக்கு பயிற்சிக்காக அளிக்க முன்வந்தார். உடனே போராளிகளும் சென்று அவருடைய தோட்டத்தை உண்ணோட்டமிட்டனர். அவருடைய தோட்டம் ஊர்ப்பகுதியை ஒட்டியிருந்ததால் அதில் பயிற்சி எடுப்பதற்கான சூழலின்மை காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசியத் தலைவர் அவர்கள் காடுகளை ஒட்டியிருக்கும் பரப்புகள் கிடக்குமாயின் அவை பயிற்சிக்கு உரியதாக இருக்குமென்று தெரிவித்ததைத் தொடர்ந்து திராவிடக் கழகத்தினர் திரு கொளத்தூர் மணி அவர்களின் காணியைக் காட்டினர். அக்காணி 20 எக்கர் பரப்பளவு உடையதாகும். புலிவீரர்களும் அங்குசென்று அவரின் காணியை உண்ணோட்டமிட்டனர். அவருடைய காணி பயிற்சித் தளமமைக்க பொருத்தமாக இருந்தமையால் போராளிகள் அதனைத் தேர்ந்தெடுத்தனர். இக்காணியானது சேலம் மாவட்டத்திலுள்ள கொளத்தூர் என்ற இடத்திலுள்ள கும்பாரப்பட்டி என்ற ஊரில் உள்ளது. புலிகள் இங்கிருந்து பயிற்சி முடித்து வெளியேறிய பின்னர் இவ்வூர் மக்கள் தம் ஊரின் பெயரை "புலியூர்" என்று மாற்றினர். அன்றிலிருந்து இன்றுவரை இவ்வூரின் பெயர் புலியூர் என்பதாகும். பின்னர் பயிற்சி முகாம் அமைக்கும் பணிகள் தொடங்கின. பயிற்சிக்காக வந்த பின்னரே தான் புலிகள் இதனை அமைக்கத் தொடங்கினர். 6 மாத காலமாக புலிகள் பயிற்சித் தளம் அமைக்கும் பணியினை மேற்கொண்டனராம். அதன் பின்னர் 8 மாதங்கள் வரை முதலாவது பாட்டத்தின் (batch) பயிற்சி நடந்துள்ளது. இங்கு மூன்று பாட்டங்களாக (3, 6, 10) போராளிகள் பயிற்சி முடித்து வெளியேறினர். முதன்மைத் தளத்திற்கு வெளியே அரைக் கிலோமீட்டர் தள்ளித்தான் புதிதாக கிணறு வெட்டி அங்கிருந்து நீர் இறைப்பி பொருத்தித்தான் பயிற்சி இடத்திற்கு நீர் எடுத்தனர். பயிற்சித் தளத்திற்கு மின் இணைப்புகள் எல்லாம் வழங்கப்பட்டது. இங்கிருந்த தமிழீழ விடுதலை வீரர்களுக்கு வேண்டிய உணவினை இப்பயிற்சித் தளத்தினைச் சுற்றியிருந்த ஊர்களைச் சேர்ந்த மக்கள் வழங்கினர். அவர்கள் தம் அறுவடையிலிருந்து குறிப்பிட்ட பகுதியை இவர்களுக்காக தனியே ஒதுக்கி வழங்கினர். குறிப்பாக குருவரெட்டியூர் என்ற ஊரைச் சேர்ந்த அமரர் பிரகலாதன் என்பவர் முன்னின்று வழங்கினார். இவர் திராவிடக் கழகம் என்ற அமைப்பச் சேர்ந்தவர் ஆவார். இதுவொரு அரசியல் அமைப்பு ஆகும். மூன்றாவது பாட்டத்தின் பயிற்சி நிறைவு நாளின் போது தேசியத் தலைவர் அவர்கள் வருகை புரிந்து தன் கையால் இவருக்கு கோழியிறைச்சிக் கறியும் உரொட்டியும் சுட்டு வழங்கினார் என்று அமரர் பிரகலாதன் அவர்களே தெரிவித்தாராம். தகவல்கள் யாவும் இந்நிகழ்படத்திலிருந்து எடுக்கப்பட்டன: https://eelam.tv/watch/க-ளத-த-ர-ல-வ-த-க-கப-பட-ட-ம-வ-ரர-கள-வரல-ற-kolaththur-maveerar-history_VhSlnOTfGxGJA27.html
  8. இந்தியப் பயிற்சிக் காலத்தில் 1985 ???? சிவப்பு வரைகவி: கட்டளையாளர் | கறுப்பு வரைகவி: அதிகாரி சாதாரண போராளி:
  9. 1985 இந்தியப் பயிற்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் ???? 'தலைவர் மாமாவிற்கு அருகில் நிற்பவர் பொன்னம்மான் ஆவார்'
  10. இந்தியப் பயிற்சிக் காலத்தில் 1985 ?????
  11. இந்தியப் பயிற்சிக் காலத்தில்தான், ஆனால் இடப்பெயர் தெரியவில்லை ?????????
  12. பயிற்சி தொடங்கப்பட்டது: ஓகஸ்ட் 18, 1985 சிறுமலை, திண்டுக்கல் மகளீர் முதலாவது பிரிவு - 60 போராளிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் மகளீர் படையணியின் முதலாவது பயிற்சிப் பாசறை: http://www.aruchuna.com/categories.php?cat_id=68 தொடக்க கால பெண் போராளிகள்
  13. பயிற்சியில் புலிகள் 1984/1985
  14. தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ். காரைநகர் கடற்கரையில் வைத்து எரியூட்டி அழிக்கப்பட்ட கடல் வானூர்தி புலிகளால் அழிக்கப்பட்ட இரண்டாவது வானூர்தி! 15.06.1984
  15. கப்டன் லாலா எ ரஞ்சன் உடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் (காலம் அறியில்லை : 07/1984>) 'M1 குறுதுமுக்கி(Carbine) உடன் அன்னார் நின்று படத்திற்கு பொதிக்கிறார்'
  16. 1983 - 1983/1984 பயிற்சிப் படிமங்கள் 'நடு: லெப். செல்லக்கிளி அம்மான்' 'லெப். கேணல் பொன்னம்மான்'
  17. 1983 - 1983/1984 இக்கால கட்டத்தில் தலைவர், கட்டளையாளர்கள் மற்றும் போராளிகள் ஆகியோரால் அணியப்பட்ட சீருடை 'இதே காலகட்டத்திய போராளிகளுடன் தமிழீழத் தேசியத் தலைவர்' 'மட்டு. மாவட்டத்தின் முதலாவது கட்டளையாளர் லெப். பரமதேவா தவிபு தலைவருடன்' இக்கால கட்டத்திய கூடுதல் படிமங்களுக்கு
  18. தவிபு இன் முதலாவது தாக்குதல் கட்டளையாளர் லெப். சீலன்/ஆசீர் 'சீலன் அவர்களின் கடைசித் திருமுகம் | 15 யூலை 1983'
  19. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அலுவல்சாரில்லா (Unofficial) முதலாவது சீருடையில் கரந்தடிக் கால புலிவீரர்கள் உடையார்கட்டு பயிற்சி முகாம், முல்லைத்தீவு 1982/10 - 1983/07 1983ம் ஆண்டு காலப்பகுதியில் தவிபு இன் மொத்த எண்ணிக்கையே 29 பேர் தான் (ஆதாரம்: மாவீரர் நாள் உரை 1989). Remington Model 121 Fieldmaster 'தலைவர் மாமாவும் லெப். செல்லக்கிளி அம்மானும்' 'G3' 'லெப் சீலனும் லெப் செல்லக்கிளி அம்மானும்' 'வீரவேங்கை ஆனந்த்'
  20. 1982/07 - 1983/07 இதுதான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதலாவது அலுவல்சார் (official) சீருடையான சத்தார் வரிச் சீருடை ஆகும். இதை புலிகளின் மூத்த உறுப்பினர்கள் மட்டுமே அணிந்திருந்தனர். "தமிழீழம் என்பது ஏட்டினில் இல்லை, எழுச்சியிலே வர வேண்டும்! - மக்கள் புரட்சியிலே வர வேண்டும்!" 'லெப் சீலன் மற்றும் லெப் கேணல் புலேந்தி அம்மானுடன்'
  21. முதல் மாவீரர் லெப். சங்கர் எ சுரேஸ் (27.11.1982) அவர்களின் வித்துடல்
  22. 27 அக்டோபர் 1982 யாழில் அமைந்திருந்த ஓர் சிறிலங்கா காவல்துறையின் காவல் நிலையம் மீது லெப். சீலன் தலைமையிலான புலிவீரர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்தனர். ஏனையோர் தப்பியோடினர். புலிவீரர்கள் தரப்பில் 3 போராளிகள் காயமடைந்தனர். இத்தாக்குதலின் போது 01 ஜி3 துமுக்கி, 01 ரிப்பீட்டர் துமுக்கி, 01 M1 குறுதுமுக்கி (.30), 01 ஸ்ரெர்லிங் துணை இயந்திரச் சுடுகலன் மற்றும் .38 விதம் உள்ளிட்ட 02 தொடித்தெறி (Revolver) ஆகியன புலிகளால் பாவிக்கப்பட்டிருந்தனவாம். அக்காலகட்டத்தில் இவையே புலிகளிடமிருந்த மொத்த படைக்கலன்களும் கூட. இவற்றினுள் ஸ்ரெர்லிங் சுடுகலனானது லெப். செல்லக்கிளி அவர்களால் பஸ்தியாம்பிள்ளைக் குழுவிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதலில் தான் முதன் முறையாக புலிகள் ஏராளமான படைக்கலன்களைக் கைப்பற்றினர். லெப். சீலன் எ ஆசீர் தலைமையில் நடந்த இந்த தாக்குதலில் திரு. ரகு எ குண்டன், அமரர் ராமு, லெப். கேணல் புலேந்திரன், பின்னாளைய வஞ்சகன் மாத்தையா, அமரர் அருணா, லெப். சங்கர், லெப். கேணல் சந்தோசம், கப்டன் ரஞ்சன் எ லாலா, திரு. பசீர் எ காக்கா ஆகியோர் பங்கேற்றனர். கைப்பற்றப்பட்ட படைக்கலன்கள்: 19 ரிப்பீட்டர் துமுக்கிகள் 09 .303 துமுக்கிகள் 02 ஸ்ரெர்லிங் துணை இயந்திரச் சுடுகலன்கள் 02 துமுக்கிகள் 01 தொடித்தெறி பெருந்தொகை கணைகள் ஆதாரம்: விடுதலைப் புலிகள் போராட்ட வரலாறு & விடியலை நோக்கி முடியாத போராட்டங்கள் & மாவீரர் நாள் உரை 1989
  23. காங்கேசன்துறை வீதி, நெல்லியடி, யாழ்ப்பாணம் சூலை 2, 1982 "தமிழ் மானம் என்பது பேச்சினில் இல்லை, மூச்சினிலே வர வேண்டும்! செயல் வீச்சினிலே வர வேண்டும்!" சிறிலங்கா காவலர்கள் வந்த ஜீப் (தமிழ்: பொநோவகம்) மீதான புலிகளின் தாக்குதலில் 4 காவலர்கள் கொல்லப்பட்டதோடு 3 காவலர்கள் காயமடைந்தனர். இத்தாக்குதலை லெப். சங்கர் அவர்கள் வழிநடாத்தினர். இந்நிகழ்வில் மாத்தையா (பின்னாளைய வஞ்சகன்), அமரர் அருணா, திரு. ரகு(குண்டன்), லெப். கேணல் சந்தோசம், திரு. பசீர் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர். கைப்பற்றப்பட்ட படைக்கலன்கள்: 01 கைச்சுடுகலன் 01 .303 துமுக்கி ஆதாரம்: விடுதலைப் புலிகள் போராட்ட வரலாறு & மாவீரர் நாள் உரை 1989
  24. தமிழீழ விடுதலைப்புலிகளால் குண்டுவைத்து அழிக்கப்பட்ட அப்போதைய சிறிலங்காவின் தேசிய வானிழுனையான (airline) எயார் சிலோனிடமிருந்த ஒரேயொரு வானிழுனையான அவ்ரோ 7 செப்டெம்பர் 1978 தமிழீழ விடுதலைப் போரிலே தமிழீழ விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்ட முதலாவது வான்கலம் இதுவாகும். இந்நாளில்தான் சிறிலங்கா புதிய அரசியல் யாப்பை அறிமுகப்படுத்தியது என்பது நினைவுகூரத்தக்கது. படிமப்புரவு: நியூசுலைன், சூலை 16, 1979 படிமப்புரவு: தினபதி, 8 செப். 1978 படிமப்புரவு: தினபதி, 8 செப். 1978
  25. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் சிங்களவரால் காலங்காலமாக தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் கரந்தடிப் போர்முறைக் கால (1990 மார்ச் வரை) நிழற்படங்கள்(Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) என அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். -------------------------------- "காகங்களே! காகங்களே! காட்டுக்குப் போவீங்களா? காட்டுப் போயெங்கள் காவல் தெய்வங்களை கண்டு கதைப்பீர்களா? - இதை காதில் உரைப்பீர்களா?" -------------------------------- "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரிதவறுகள் வரவேற்கப்படுகின்றன" இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.