வணக்கம் நட்புக்களே, நான் புதிதாக இணைந்திருக்கும் ஒருவன்.நீண்டகாலமாக வாசகனாக இருந்திருக்கிறேன். அடிக்கடி பதிவிடும் பலரின் பெயர்கள் ஞாபகம் இருக்கிறது. நேரம் கிடைக்கும் பொழுது வந்து வாசித்து விட்டுச் செல்லும் ஒருவன். நான் என்னைப் பற்றி கூறுவதென்றால் அதிகம் எழுத தெரியுமோ தெரியாது ஆனால் முயற்சிக்கிறேன். கொஞ்சம் கவிதை அல்லது கவிதை போன்று எழுதுவேன். விவாதங்களில் பங்கு பெற்றிருக்கிறேன் என்பதனால் விவாதி ரீதியான கருத்துக்களை முன்வைக்க ஆசைப்படுகிறேன் . நாடகங்கள் நாடகங்கள் எழுதுவது இயக்குவது எனது பொழுதுபோக்கு. ஆனால் நீண்ட காலம் ஈடுபடவில்லை.காரணம் வேலைப்பளு மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள்.அவற்றிலிருந்து நிறைய விடுபட்டு இருப்பதனால் இனி நேரம் கிடைக்கும் என்று எண்ணுகிறேன்.
என்னை உங்களில் ஒருவனாக அரவணைத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உண்டு !