Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போக்குவரத்து

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by போக்குவரத்து

  1. எமது மாணவர் ஒருவர் அண்மையில் வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெற்று கொண்டார். இதில் விசேசம் என்ன என்றால் அவருக்கு தற்போது வயது எண்பத்து ஆறு 86. முறையான வழிகாட்டல், பயிற்சியுடன், உங்களுக்கு ஆர்வமும் காணப்பட்டால் வாகன அனுமதி பத்திரம் பெறுவதற்கு வயது ஒரு தடையாக அமையாது. வீதி பரீட்சையில் சித்தி பெற்ற பின்னர் வீடியோவில் அவர் தனது நன்றியை தெரிவிக்கிறார். தகவல்: போக்குவரத்து http://www.cardriving.ca
  2. வாகனத்தின் பின் இருக்கையில் உள்ளவர்கள் இருக்கை பட்டி (Seat Belt) அணிய தேவையில்லை என்று பலரும் நினைக்கிறார்கள். அனுபவம் வாய்ந்த சாரதிகளும், நீண்டகாலமாக வாகனத்தில் பயணம் செய்பவர்களும் இவ்வாறு நினைக்கிறார்கள். வாகனத்தின் பின் இருக்கையில் உள்ளவர்கள் இருக்கை பட்டி அணிய தேவையில்லை என்று நினைப்பது சரியானதா? இல்லை, மிக தவறானது. வாகனத்தில் உள்ள அனைவரும் இருக்கை பட்டி அணிய வேண்டும் என்பதே சரியானது. இருக்கை பட்டியின் முக்கியத்துவம் எவை? ஒரு விபத்து ஏற்படும்போது அல்லது வாகனம் விரைவாக நிறுத்தம் செய்யப்படும் போது விபத்தின் அல்லது உடனடி நிறுத்தத்தின் தாக்கம் காரணமாக (Impact) வாகனத்தின் உட்பகுதியுடன் உங்கள் உடல் விரைவாக சென்று எதிர்பாராமல் மோதல் அடைவதை இருக்கை பட்டி தடுக்கிறது. உதாரணமாக, ஓடும் வாகனத்தில் திடீரென விரைவாக பிரேக் பிடிக்கப்படும் போது பின் இருக்கையில் உள்ள நீங்கள் வாகனத்தின் முன் இருக்கையை நோக்கி உதறி எறியப்படக்கூடும். இதன்போது உங்கள் தலை, கை, நெஞ்சுப்பகுதி போன்றவை அடிபட்டு காயம் ஏற்படலாம். ஆனால், இருக்கை பட்டி அணிந்தால் அது உங்கள் உடல் உதறப்பட்டு வாகனத்தின் உட்பகுதிகளுடன் மோதுவதை தடுக்கிறது. இவ்வாறே, இருக்கை பட்டி அணியாவிட்டால் விபத்தின் போது உங்கள் தலை மிக வேகமாக வாகனத்தின் யன்னல் கண்ணாடியுடன் அடிபட்டு மோசமான காயம் ஏற்படலாம். ஆனால், இருக்கை பட்டி அணியும்போது உங்கள் உடல் உதறப்பட்டு வாகனத்தின் பகுதிகளுடன் முட்டி மோதுவது தடுக்கப்படுகிறது. அதிகளவு விபத்துக்களில் வாகனத்தின் கதவு திறபடுகிறது. நீங்கள் இருக்கை பட்டி அணியாவிட்டால் விபத்தின் தாக்கம் காரணமாக தானாக திறபடும் கதவூடாக நீங்கள் தெருவில் தூக்கி எறியப்பட்டு மோசமான காயங்கள் ஏற்படலாம். பல வீதி விபத்துக்களில் பயணிகள் வாகனத்தின் கதவூடாக வீதியில் தூக்கி வீசப்பட்டு உடல் உருண்டு பலத்த காயங்களினால் உடனடியாகவே மரணம் அடைவதை அன்றாடம் செய்திகளில் காண்கிறோம். ஆனால், இருக்கை பட்டி அணியும்போது இருக்கை பட்டி வாகனத்தின் கதவு விபத்தின்போது திறபட்டாலும் நீங்கள் வெளியே உதறி எறியப்படாதவாறு உங்கள் உடலை இருக்கிப்பிடித்து உங்களை காப்பாற்றுகிறது. இருக்கை பட்டி அணிவது காவல்துறையை திருப்திப்படுத்துவதற்காக அல்ல, ஆனால், உங்கள் உயிரை காப்பாற்றுவதற்காக என்பதை நினைவில் வையுங்கள். சரியான முறையில் இருக்கை பட்டி அணிவது உங்கள் உயிரை காப்பாற்றும். நீங்கள் எவ்வளவோ திறமைசாலியான சாரதியாக காணப்படலாம். ஆனால், விபத்திலிருந்து திறமைசாலிகளும் 100% தப்பிக்க முடியாது. உங்கள் வாழ்க்கை, உங்களை நம்பி வாகனத்தில் ஏறுகின்ற பயணிகளின் வாழ்க்கை சோம்பேறித்தனம் காரணமாக அல்லது உதாசீனம் காரணமாக இருக்கை பட்டி அணியாமல் விபத்தில் மோசமாக பாதிக்கப்படுவதற்கு அல்லது உயிரிழப்பு ஏற்படுவதற்கு சந்தர்ப்பத்தை உருவாக்காதீர்கள். ஓடும் வாகனத்தில் உள்ள அனைவரும் இருக்கை பட்டியை முறையாக அணிந்துள்ளதை உறுதி செய்யுங்கள். கீழுள்ள வீடியோக்களை பாருங்கள். இருக்கை பட்டி அணியும் போதும் இருக்கை பட்டி அணியாதபோதும் விபத்து ஏற்பட்டால் எப்படியான விளைவுகள் ஏற்படுகிறது என்பதை காண்பிக்கின்றன: ஆக்கம்: போக்குவரத்து http://www.CarDriving.CA
  3. புதிய அகவையில் பயணிப்பதற்கு வாழ்த்து தெரிவித்த உறவுகள் ஜீவா, இசைக்கலைஞன், நுணாவிலான் ஆகியோருக்கு நன்றி.
  4. புதிய அகவையில் பயணிப்பதற்கு வாழ்த்து தெரிவித்த உறவுகள் புங்கையூரன், நிழலி, குமாரசாமி, அபராஜிதன், புத்தன், தமிழ்சிறி, பகலவன் ஆகியோருக்கு நன்றி.
  5. போக்குவரத்தின் உயிர்நாடியும், நிறுவனர், மற்றும் உரிமையாளர் புதிய அகவையில் பயணிப்பதற்கு வாழ்த்து தெரிவித்த உறவுகள் விசுகு, தப்பிலி, தமிழரசு, நிலாமதி, யாயினி, வாதவூரான், ரதி, இணையவன், துளசி, நந்தன்26, வாத்தியார் ஆகியோருக்கு நன்றி.
  6. போக்குவரத்தின் உயிர்நாடி, நிறுவனர், மற்றும் உரிமையாளர் இன்று புதிய அகவையில் பயணிக்கிறார்.
  7. உங்கள் அனுபவப்பகிர்வுக்கு நன்றி இசைக்கலைஞன். நாம் எமது பக்கத்தில் பிழைகள் ஏற்படாதபடி இயலுமானவரை சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும். எமது சக்தியையும் மீறி ஆபத்துக்கள் ஏற்படும்போது ஒன்றும் செய்யமுடியாது என்பதும் உண்மை.
  8. கடுகதி பாதையில் உங்கள் வாகனம் தீடீரென பழுதடைந்து விட்டால் என்ன செய்வது? (வட அமெரிக்கா) ---------------------------------------- பதற்றம் அடையாதீர்கள். ---------------------------------------- 1. வாகனத்தை வீதி ஓரமாக நகர்த்துங்கள்: Emergency Signalஐ போடுங்கள். விரைவாகவும், பாதுகாப்பாகவும், அவதானத்துடனும் பழுதடைந்த வாகனத்தை வீதி ஓரமாக நகர்த்துங்கள். இயலுமானவரை நேர்மட்டமான பாதையில் நிறுத்துங்கள். நீங்கள் இடதுபக்கமாக வாகனத்தை நகர்த்தவேண்டி ஏற்பட்டால் மற்றைய வாகனங்கள் உங்கள் வாகனத்துடன் மோதமுடியாதபடி போதியளவு இடம் தெருஓரம் உள்ளதை இயலுமானவரை உறுதிப்படுத்துங்கள். 2. நீங்கள் நிற்கின்ற இடத்தை குறித்துக்கொள்ளுங்கள்: உங்கள் வாகனத்திற்கு மிக அண்மையாகவுள்ள பிரதான Exit - வெளியேற்று பாதை எது என்பதை அறிந்துகொள்ளுங்கள். அருகில் கடைகள், விடுதிகள், எரிபொருள் நிரப்பு நிலையம், வீதி குறியீட்டு இலக்கங்கள், வேறு ஏதாவது குறிப்பிட்டு இனம்காட்டக்கூடிய அடையாளங்கள் தென்படின் அவற்றை குறித்துக்கொள்ளுங்கள். 3. வாகனத்தின் பிரச்சனையை கண்டறியுங்கள்: அ. ஏதாவது வித்தியாசமான சத்தங்கள் கேட்பின், வழமையில் இல்லாதபடி வித்தியாசமாக வாகனத்தின் ஏதாவது பகுதி தோன்றினால்/ ஏதாவது பகுதியை வித்தியாசமாக நீங்கள் உணர்ந்தால், அத்துடன் புகை, தீ இவை ஏதாவது தோன்றினால், வாகனத்தின் முன்பக்க மூடியின் கீழாக ஏதாவது தோன்றினால் அவற்றை அறிந்துகொள்ளுங்கள். ஆ. தவிர்க்க முடியாத சூழ்நிலையில், உதாரணமாக தீ காரணமாக வாகனத்தை விட்டு வெளியேறவேண்டி ஏற்பட்டால் உங்களை நோக்கி வரக்கூடிய வாகனங்கள் பற்றி அதி உயர் எச்சரிக்கையாக இருங்கள். அத்துடன் இருள்/இரவு, மற்றும் காலநிலை - மழை, கடுங்குளிர், சுழல்காற்று, சீரற்ற தரை மட்டங்கள் - பள்ளம், இடுக்கு, குழிகள், வழுக்குதல் இவை பற்றியும் எச்சரிக்கையுடன் செயற்படுங்கள். இ. வாகனத்தைவிட்டு வெளியேறும்போது மற்றைய வாகனங்கள் வருகின்ற பக்கமாக வெளியேறாமால் உங்களை நோக்கி வரும் வாகனங்களுக்கு எதிர்ப்புறமாக உள்ள கதவை திறந்து வெளியேறுங்கள். ஈ. ஒருபோதும் உங்கள் வாகனத்திற்கு நேரே முன்னாலோ அல்லது பின்னாலோ நிற்காதீர்கள். நீங்கள் மறைப்பதால் அல்லது உங்களை காணாதபடியால் மற்றைய வாகனங்கள் உங்கள் மீது மோதக்கூடும். உங்களால் வாகனத்தை வீதி ஓரமாக நகர்த்த முடியாவிட்டால்... அ. Emergency Signal, ஆபத்து கால வெளிச்சங்களை உடனடியாக போடுவதற்கு மறவாதீர்கள். ஆ. பிரயத்தனப்பட்டு தெரு ஓரமாக வாகனத்தை நகர்த்த முற்பட்டு விபத்தில் சிக்கி கொள்ளாதீர்கள். இ. உங்களுக்கு வாகனத்தின் பாதுகாப்பு பற்றி குழப்பமாக காணப்பட்டால், அதாவது உங்கள் வாகனத்துடன் பின்னால் வரும் வாகனங்கள் ஏதும் மோதும் எனக்கருதினால் ஒருபோதும் வாகனத்தினுள் இருக்காதீர்கள். மிகவும் அவதானத்துடன், பாதுகாப்பாக வாகனத்தைவிட்டு வெளியேறி தெருவில் இருந்து விலகிச்சென்று பாதுக்காப்பான ஓர் இடத்திற்கு செல்லுங்கள். 4. மற்றைய வாகனங்களின் பார்வையில் உங்கள் வாகனம் தென்படுவதை உறுதி செய்யுங்கள்: Emergency Signalஐ போடுவதோடு, உங்களிடம் ஏதாவது துணிகள், கைக்குட்டை, உடற்போர்வை, ஜாக்கெட் போன்றவை இருந்தால் அவற்றை மற்றைய வாகனங்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் வாகனத்தின் சாளரத்தில், கதவு கைப்பிடியில் அல்லது Anrtennaஇல் கட்டி/செருகி விடுங்கள். 5. தேவையேற்படின் அவசர கால சேவை 911ஐ அழையுங்கள் : வாகனத்தின் பிரயாணிகள் எல்லோரும் தெருவிலிருந்து விலகி பாதுகாப்பான இடத்திற்கு சென்றதும் அவசரகால சேவையை - காவல்துறையை அழையுங்கள். அவர்கள் நீங்கள் என்ன செய்யவேண்டும் என உங்களுக்கு தேவையான மேலதிக அறிவுத்தல்களை வழங்குவார்கள். 6. வாகனத்தை விட்டு வெளியேறுதல் : நீங்கள் வானகத்தை விட்டு வெளியேற எண்ணினால்... அ. சுற்றுப்புறங்கள் பற்றி எச்சரிக்கை அடையுங்கள். ஆ. முக்கியமாக இரவில் பாதுகாப்பிற்காக ஒளி விளக்கை/Flashing Light வாகனத்தினுள் கொண்டு செல்லுங்கள். இ. எவராது தெருவில் செல்லும் வாகனத்தின் சாரதிகள் தாமாக உதவி செய்வதற்கு முன்வந்தால் அவர்களின் பெயர், தொலைபேசி இலக்கம், வீட்டு முகவரி என்பனவற்றை முதலில் கேட்டுத்தெரிந்து குறித்து வைத்த பின்னரே உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். அறிமுகம் பெறாது முன்பின் தெரியாமல் உதவியை பெறுவது ஆபத்தானது. நீங்கள் பிரயாணிகளை விட்டு முன்பின் தெரியாதவர்களுடன் உதவியை பெறுவதற்காக எங்காவது சென்றால் (உதாரணமாக அயலில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு செல்லுதல்) உதவி செய்பவரின் விபரத்தை வாகனத்தின் பிரயாணிகளிடம் கொடுத்து, நீங்கள் ஏன் அவருடன் செல்கின்றீர்கள் என்பதற்கான காரணத்தையும் சொல்லிச் செல்லுங்கள். ஈ. வாகனத்தைவிட்டு வெளியேறும்போது எப்போதும் உங்களை நோக்கி மற்றைய வாகனங்கள் வருகின்ற பக்கமாக அல்லாது எதிர்ப்புறமாக உள்ள கதவு வழியாகவே நீங்கள் வெளியேற வேண்டும். 7. வாகனத்தினுள்ளேயே தங்குதல் : அ. நீங்கள் வாகனத்தினுள்ளேயே வெளி உதவி கிடைக்கும் வரை தங்குவதற்கு தீர்மானித்தால் உங்கள் வாகனத்தின் கண்ணாடி, கதவு ஆகியவறை பூட்டிவிடுங்கள். ஆ. சாரளத்தின் கண்ணாடியையோ அல்லது கதவையோ அறிமுகம் இல்லாதவர்களுக்கு திறக்காதீர்கள். உங்களுக்கு உதவுவதற்கு அவர்கள் வந்தால், உங்களிடம் தொலைபேசி காணப்படாவிட்டால் அவர்களிடம் 911இற்கு அல்லது அவசரகால வீதி உதவி சேவைக்கு (Emergency Road Service) அழைக்குமாறு கேளுங்கள். இ. எவர் மூலமாவது உங்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக 911ஐ அழையுங்கள். உங்கள் வாகனத்தின் Horn ஐ தொடர்ச்சியாக சத்தமாக போடுங்கள். எச்சரிக்கை ஒலியை எழுப்புவதற்காக வாகனத்தின் சாவியில் உள்ள Panic Button ஐயும் சொடுக்கலாம். ஈ. வெப்பத்தை அல்லது குளிரை பெறுவதற்காக வாகனத்தின் இயந்திரத்தை நீங்கள் தொடர்ச்சியாக இயக்காமல் இடையிடையே இயந்திரத்தை நிறுத்துங்கள். வாகனத்தின் இயந்திரம் தொடர்ச்சியாக இயங்கும்போது COவாயு காரணமாக வாகனத்தில் உள்ளவர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படலாம். 8. அவசரகால வீதிச்சேவை பிரிவினருடன் / வாகன திருத்தகத்தில் உரையாடுதல் : அ. உங்கள் அங்கத்துவ அடையாள இலக்கத்தை கொடுங்கள். உதாரணம் - CAA membership no. ஆ. உங்கள் தொலைபேசி இலக்கம், வாகனம் தற்போதுள்ள இடம் இவற்றை கூறுங்கள். இ. வாகனத்தின் பழுது பற்றிய விபரம், பிரச்சனையின் தன்மை என்பனவற்றை சொல்லுங்கள். ஈ. வாகனம் இழுத்துச்செல்லவேண்டிய தேவை ஏற்பட்டால், அதிகளவு பிரயாணிகள் காணப்பட்டால், குழந்தைகள், சிசுக்கள் காணப்பட்டால், மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால், வாகனத்திற்கு விசேடமான எரிபொருள் ஏதாவது தேவைப்பட்டால் இவை பற்றிய விபரங்களை தயங்காது கூறுங்கள். உ. நீங்கள் 911ஐ அழைப்பின் அதுபற்றியும் அறிவியுங்கள் 9. உங்கள் உரிமைகளும் பொறுப்புக்களும் : காப்புறுதி நிறுவனம் அல்லது Emergency Road Service மூலம் எப்படியான உதவிகள் கிடைக்கும், பெறப்படவேண்டும் என்பவை உங்கள் பொறுப்பாகும். ஆபத்து காலங்களில் இவை மூலம் எப்படியான உதவிகள் கிடைக்கும், எவ்வாறான சேவைகள் உங்களுக்கு உள்ளக்கப்பட்டுள்ளன என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளுங்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக காலம், சூழ்நிலைக்கு ஏற்றபடி புத்திசாதூர்யமாக / சமயோசிதமாக நடந்துகொள்ளுங்கள். உங்கள் பொது அறிவை, common senseஐ பயன்படுத்துங்கள். உங்களினதும், வாகனத்தில் உள்ள பிரயாணிகளினதும், தெருவை பயன்படுத்தும் ஏனையோரினதும் பாதுக்காப்பே முக்கியமானது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கின்ற தவறான முடிவுகள் உயிர் ஆபத்தினையும், அழிவையும் ஏற்படுத்தலாம் என்பதை மறவாதீர்கள். ஆக்கம் : போக்குவரத்து http://www.cardriving.ca உசாத்துணை : caasco.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.