Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்அன்பு

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by யாழ்அன்பு

  1. வைதேகிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  2. ‎15.02.2009 அன்று சிறிலங்கா வான்படைத் தலைமையகம் மற்றும் கட்டுநாயக்க வானூர்தித் த...ளம் என்பற்றை தாக்கியழிப்பதற்காகச் சென்று வீரகாவியமாகிய வான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோரின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காக தம்மை வெடியாக்கி வீரவரலாறாகிப் போன இந்த வீரவேங்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.
  3. தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை) யாழ் மாவட்டம் 10.03.1950 - 15.02.2009 ... தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களிலும் போராளிகளிலும் நன் மதிப்பு பெற்றிருந்தவர் . 15.02.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சவடைந்தார்
  4. பனை, தெங்கு தோப்பாய் அணிவகுத்திருக்க கனிமரங்கள் நிரை கட்டி நிற்கும் பிரதேசம் யாழ்.குடாநாட்டின் தென்மராட்சிப் பிரதேசம். இப்பிரதேசத்தில் ஆனையிறவும், நாவற்குழியும் என கடல் நீரேரியும் சதுப்பு நிலங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளனாக மேஜர் கேடில்ஸ் விளங்கினார். பதினெட்டு வயதிலேயே இப்பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கண்டாவளையில் மகாலிங்கம் இணையரின் மகனான கேடில்சிற்கு பெற்றோர் இட்ட பெயர் திலீபன். இயல்பாய் சுறுசுறுப்பும், துருதுருவென இருந்த கேடில்ஸ் புலமைப் பரிசில் தேர்வில் சித்தியடைந்து யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார். பாடசாலை நாட்களில் கல்வியில் மாத்திரமின்றி விளையாட்டுத் துறையிலும் ஒளிர்ந்தார். தடைகள விளையாட்டுகளில் பல சாதனைகளைப் படைத்தார். க.பொ.த. உயர்தரம் வரை கல்வி பயின்ற கேடில்ஸ் சிறீலங்கா படையினரின் கொடுமைகள் கண்டு உள்ளங் கொதித்து, தாயக விடுதலையை இலட்சியமாக வரித்து விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார். 1980களின் நடுப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட கேடில்சின் எதையும் இலகுவில் விளங்கிக் கொள்ளும் ஆற்றலையும், நிர்வாகத்திறனையும், ஆளுமையையும் இனங்கண்ட மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள், அவரைத் தென்மராட்சிப் பகுதிக்கான பொறுப்பாளராக நியமித்தார். நாவற்குழியிலிருந்தும் ஆனையிறவிலிருந்தும் சிறீலங்கா படைகள் புறப்படுகின்ற வேளைகளிலெல்லாம் எண்ணிச் சில தோழரோடு எண்ணற்ற சிங்களப்படையை எளிதாய் விரட்டியடிப்பார். தென்மராட்சிப் பகுதிக்கு மாத்திரமன்றி சிங்கள படைகள் யாழ். குடநாட்டில் எப்பகுதியில் முன்னேறினாலும் அங்கு கிட்டண்ணாவோடு இந்த இளைய பொறுப்பாளனும் தனது குழுவினரோடு நிற்பார். களமுனைகளில் தேர்ந்த தாக்குதல் தலைவனாக விளங்கினார். அது மாத்திரமன்றி தென்மராட்சிப் பகுதியில் மக்கள் மத்தியில் இருந்து செவ்வனே அரசியல் கடமைகளை ஆற்றினார். தேர்ந்த போராளிகளை போராட்டத்திற்கு தென்மராட்சியிலிருந்து எடுத்துத் தந்தார். மக்களோடு மக்களாக நின்று மக்களின் பிள்ளையாகக் கடமையாற்றிய கேடில்ஸ் மக்களின் பிரச்சினைகளைப் நிறைவு செய்வதில் முன்னின்று உழைத்தார். தென்மராட்சி வாழ் மக்களின் நல்வாழ்விற்காக தும்புத் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்தார். எமது தாயகம் தன்னிறைவுள்ள, பொருண்மிய மேம்பாடுள்ள நாடாக மலர வேண்டும் என்ற தலைவரின் கனவை நனவாக்க அல்லும் பகலும் பாடுபட்டார். நெருக்கடியான சூழ்நிலைகளிலும் கடமை தவறாத நிதானம் பிசகாது தாயகப்பணியாற்றியவர் கேடில்ஸ். இன்றும் இவர் பெயரோடு விளங்கும் கேடில்ஸ் தும்புத் தொழில் நிறுவனம் தமிழீழ கயிற்றுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் முன்னின்று செயற்படுகிறது. தாயகத்தின் விடுதலையை நேசித்த இந்த இளைய பொறுப்பாளன் எதிர்காலத்தில் தேர்ந்த பொறுப்பாளனாக சிறந்த தளபதியாக வருவானென விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகள் இவனை ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் காத்திருந்த நேரத்தில் நாவற்குழி முகாம் தகர்ப்பிற்குத் திட்டமிடப்பட்டது. தனது பகுதியில் வருகின்ற முகாமாகையால் கண் துஞ்சாது மெய்வருத்தம் பாராது முகாம் தகர்ப்பிற்கான ஏற்பாடுகளில் முன்னின்று செயற்பட்டார். குறித்த படைமுகாம் மீதான தாக்குதலுக்கு வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி ஒன்று வெடிக்க வைத்த பின்னரேயே தாக்குதல் அணிகள் உட்புகுந்து முகாமைக் கைப்பற்றுவதெனத் திட்டம் தீட்டப்பட்டது. படைமுகாமின் வாயில் உள்ள படையினர் ஐயம் கொள்ளக்கூடாது என்பதற்காக படையினருக்கு குடிநீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் தண்ணீர் தாங்கி ஊர்தி (பவுசர்) போன்றதொரு ஊர்தி வெடிமருந்து நிரப்பப்பட்டது. எனினும் இறுதி நேரத்தில் தண்ணீர் தாங்கியிலிருந்து நீர் ஒழுகியது. இதனை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வேளை தண்ணீர் தாங்கி ஊர்தி வெடித்துச் சிதறியது. இதன்போது மேஜர் கேடில்சுடன் மூத்த தளபதி லெப்.கேணல் பொன்னம்மான், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு, லெப்.சித்தார்த்தன் உட்பட ஆறு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். www.Tamilkathir.com
  5. இப்போது ராகு(ல்) காலம் - பிற்பாடு (என் காலம் )- எம கண்டம் - சொல்வது ராபர்ட் (ப்ரியங்கா) காந்தி !! (இந்த தேசத்தின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்கள் .முன் வரிசையில் …….) இந்திய மக்கள் கொடுத்து வைத்தவர்கள். “வாராது வந்த மாமணி போல்” இன்னுமொரு காந்தி - தீவிர அரசியலுக்கு வந்து விட்டார் ! இம்முறை - ராபர்ட் ப்ரியங்கா காந்தி. (ராபர்ட் வாத்ராவின் பெயரை தவறாகப் போட்டு விட்டேன் என்று நினைக்கிறீர்களா ? – கணவரை முன்நிறுத்தி மனைவி இருந்தால், கணவனின் குடும்பப்பெயர் வரும். மனைவியை முன்நிறுத்தி கணவன் இருந்தால் - மனைவியின் குடும்பப்பெயர் தானே வர வேண்டும் ?) (இது தான் ஒரிஜினல் காஸ்டியூம் ) உத்திரப் பிரதேச தேர்தலுக்கு பிரச்சாரத்திற்காக முதலில் ராகுல் காந்தி வந்தார். பின்னர் அவருக்கு உதவ ப்ரியங்கா காந்தி வந்தார். இப்போது அவர் பின்னால் ராபர்ட்(ப்ரியங்கா)காந்தி வந்திருக்கிறார். (கூடவே காந்தி(?) குடும்பத்தின் குட்டி வாரிசு - அவர்களது பெண் “ராய்ஹன்”உடன் வர) உ.பி.தேர்தலில் புகைப்படங்கள் - ப்ரியங்கா, ராபர்ட், ராகுல் காந்தி (இது ச்சும்மா – தேர்தலுக்காக ) ராபர்ட்(ப்ரியங்கா) காந்தியுடன் அவரது குட்டி வாரிசான “ராய்ஹன்” (அடுத்த தலைமுறை பிரதமர் வேட்பாளர் ?) ஏற்கெனவே அரசியலில் குதிக்க காத்திருந்த ராபர்ட், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது அதை வெளிப்படையாகவே கூறி விட்டார். “இப்போது நான் ராகுல் காந்திக்கு உதவ வந்திருக்கிறேன். இது ராகுல் காலம். பிற்பாடு ப்ரியங்கா வருவார் – அப்போது நானும் வருவேன். அப்போது எங்கள் காலமாக இருக்கும் !” “நான் திருமணம் செய்துகொண்டது ஒரு அரசியல் குடும்பத்தோடு -நான் மட்டும் குடும்பப் பொறுப்பிலிருந்து எப்படி விலக முடியும் ? !!” ராபர்ட் அரசியலுக்கு வருவதன் பலன் நேற்றே தெரிந்தது. ராகுலின் அமேதி தொகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் ஊர்வலம் வந்தார் ராபர்ட். அவருடன் ஏகப்பட்ட வண்டிகள் வந்தன. அந்த தொகுதியில் தேர்தல் கண்காணிப்பாளராக தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டிருந்த (கலெக்டர் அந்தஸ்து உள்ள ) பவன் சென் என்கிற அதிகாரி ஊர்வலத்தை நிறுத்தி, வாகனங்களின் எண்ணிக்கை தேர்தல் கமிஷன் விதித்துள்ள வரம்பைத் தாண்டக் கூடாது என்று வலியுறுத்தினார். தேர்தல் விதிமீறல் புகாரையும் பதிவு செய்தார். 4 மணி நேரத்தில் அதன் விளைவை அவர் எதிர்நோக்க நேர்ந்தது. ஆமாம் – அவர் உத்திரப் பிரதேசம், அமேதி தொகுதியிலிருந்து உடனடியாக கோவா மாநிலத்திற்கு தேர்தல் பணிக்காக இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், இது மீடியாவில் உடனடியாக வெளியாகி செய்தி விஸ்வரூபம் எடுத்ததால், தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி தலையிட்டு, அமேதியில் ஓட்டுப்பதிவு முடியும் வரையில் மாற்றலை நிறுத்தி வைத்துள்ளார். (ரத்து செய்யவில்லை !) ஒரு வேளை இந்திய மக்கள் செய்த பாவ/புண்ணியங்களின் விளைவாக, எதிர்காலத்தில் எப்போதாவது ராகுல் காந்தி பிரதமர் பொறுப்பை ஏற்பாரேயானால், இந்த ராபர்ட் தான் உள்துறை அமைச்சர் என்பது உறுதி. எனவே இப்படிப்பட்ட ஒளிமயமான எதிர்காலம் உடைய ராபர்ட்டைப் பற்றி சில விஷயங்களை நம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். இது ராபர்ட் (வதேரா) காந்தியின் வரலாற்றுப் பின்னணி - திருமதி சோனியா காந்தியின் நம்பிக்கையை ராபர்ட் பெற முடிந்ததன் முதல் காரணம் - இவரும் ஒரு அரை இந்தியர் என்பது தான். ராபர்ட் ராஜீந்தர் வாத்ரா என்ற பெயருடைய (உத்திரப் பிரதேசம் -மொராதாபாத்) இந்தியத் தந்தைக்கும், மௌரீன் என்கிற பெயருடைய ஸ்பானிஷ் தாய்க்கும் மகனாகப் பிறந்தவர். ராபர்ட்டின் தாய் ஏற்கெனவே திருமதி சோனியாவின் குடும்ப நண்பர் ! அடுத்து இந்த குடும்பத்தில் நேர்ந்த மர்மமான இறப்புகள் குறித்து கூறியாக வேண்டும் - முதலில் – திருமதி சோனியாவின் மைத்துனர் சஞ்சய் காந்தி - விமான விபத்தில் இறந்தார். -23 ஜூன் 1980 (33 வயதில்) அடுத்து – மாமியார் இந்திரா காந்தி – அவரது சொந்த பாதுகாவலர்களாலேயே சுடப்பட்டு இறந்தார். -31 அக்டோபர் 1984 பின் கணவர் ராஜீவ் காந்தி – ஈழத்தை சேர்ந்த தற்கொலைப்படையைச் சேர்ந்த தணுவால் வெடி விபத்தில் கொல்லப்பட்டார். -21 மே 1991 (aged 46) திருமணத்திற்கு பின்னர் ராபர்ட் வாத்ராவின் சகோதரி – மிச்சில் 2001ஆம் ஆண்டு ஒரு விபத்தில் உயிர் இழந்திருக்கிறார். பின்னர் ராபர்ட் வாத்ராவின் சகோதரர் ரிச்சர்டு வாத்ராவும் 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வசந்த் விஹார் என்கிற குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து, 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 2- ஆம் தேதி ராபர்ட் வாத்ராவின் தந்தை ராஜீந்தர் மர்மமான பின்னணியில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். ஒரே குடும்பத்தில் இவ்வளவு துர்மரணங்கள் - ஆச்சரியமாக இல்லை ? அடுத்த விசேஷம் - விமான நிலையங்களில் அனைவரையும் பரிசோதிக்கும் செக்யூரிடி செக்கப் (frisking) ராபர்ட்டுக்கு கிடையாது. இவர் எந்தவித செக்யூரிடி பரிசோதனைகளும் இன்றி இந்தியாவின் எந்த விமான நிலையத்திற்கு உள்ளே போகவும், வெளியே வரவும் விசேஷ அனுமதி பெற்றவர். மத்திய அரசின் விசேஷ உத்திரவு ஒன்று - ஜனாதிபதி, பிரதம மந்திரி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோருக்கு இணையாக இந்த நபரையும் செக்யூரிடி பரிசோதனையிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது. விமான நிலையத்தில் அதைத் அறிவித்து வைக்கப்பட்டிருக்கும் நோட்டீஸ் போர்டு இதோ - (கடைசி எண் -31 ராபர்ட் வாத்ரா ) நிதி வசதி பின்னணி - திருமணத்திற்கு முன்னர் - சாதாரண ஒரு நகை மற்றும் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி கம்பெனி ஒன்றை மட்டும் வைத்திருந்த இந்த நபர் இன்றைய தினத்தில் மிகப்பெரிய கோடீஸ்வர தொழில் அதிபராகத் திகழ்கிறார். தன் மாமியார் குடும்பத்தின் சொத்துக்களைப் பாதுகாக்கும் பொறுப்பினைத்தவிர - கீழ்க்கண்ட தொழில் முதலீடுகளிலும் அவர் முனைப்புடன் ஈடுபட்டுள்ளார்- இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான DLF Limited – உடன் முதலீடு, ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிடி என்கிற நிறுவனத்தின் மூலமாக, டெல்லி ஹில்டன் கார்டன் இன் என்கிற மிகப்பெரிய ஓட்டலில் பங்குதாரர், ப்ளூ ப்ரீஸ் என்கிற விமானங்களை வாடகைக்கு விடும் நிறுவனம், நார்த் இந்தியா ஐ.டி.பார்க்ஸ் நிறுவனம், ரியல் எர்த் எஸ்டேட்ஸ் என்கிற நிறுவனம், ஸ்கைலைட் ரியல்டி ப்ரைவேட் என்கிற நிறுவனம். நமக்குத் தெரிந்து - வெளிவந்திருப்பது இவ்வளவு தான். இன்னும் வெளிவராத முதலீட்டுத் தகவல்கள் எவ்வளவோ ! தப்பித் தவறி உத்திரப் பிரதேச தேர்தலில் காங்கிரசுக்கு சொல்லிக் கொள்கிற அளவிற்கு சீட்டுக்கள் கிடைத்து விட்டன என்றால் போதும் - மிக வளமையான எதிர்காலத்தை இந்திய மக்கள் இந்த காந்தி குடும்பத்தின் மூலம் எதிர்பார்க்கலாம் ! “மக்களின் தகுதிக்கு ஏற்றார்போல் தான் - அவர்களுக்கு கிடைக்கும் அரசனும் இருப்பான் “ -என்று 2300 ஆண்டுகளுக்கு முன்னரே சாணக்கியன் சொன்னான். நம் தகுதி என்ன, நாம் எதற்கு கொடுத்து வைத்திருக்கிறோம் என்பதை உத்திரப் பிரதேச தேர்தல் தான் வெளிப்படுத்தப் போகிறது !! http://yarlanpu.blogspot.com
  6. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 4-2-2012 அன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று (7-2-2012) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பிணை கோரி மனு செய்யப்பட்டது. பிற்பகல் 4 மணியளவில் பிணையளிக்கப்பட்டது. பிணையாணையைப் பெற்றுக்கொண்டு புழல் சிறைக்குச் செல்வதற்கு முன்னதாக, வன்னிஅரசை வேறொரு வழக்கில் கைது செய்ய காவல்துறை தயாரானது. ஆனால் அதற்குள் சிறை அதிகாரிகளிடம் பிணை ஆணை வழங்கப்பட்டதன்பேரில் வன்னிஅரசு விடுவிக்கப்பட்டார். மாநில நிர்வாகிகள் தகடூர் தமிழ்ச்செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், பார்வேந்தன், மாலதி, கடலூர் மாவட்ட நிர்வாகி தாமரைச்செல்வன், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் ப. பூவிழி, சாமுவேல், தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் விடுதலைச்செல்வன், சாரநாத், இர.செந்தில், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் இளங்கோ, தமிழ்ச்செல்வன், தாஸ் மற்றும் பகுதி விடுதலைச் சிறுத்தைகள் நூற்றுக்கணக்கானோர் சிறை வாயிலில் வன்னிஅரசுக்கு சிறப்பான வரவேற்பளித்தனர். www.pathivu.com
  7. கேணல் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) 1979ல் ஆரம்ப காலப்பகுதி விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிடப் பட்ட காலம் சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் பதினெட்டு வயது நிறைந்த இளைஞன் தன்னை விடுதலைப் போராளியாக மாற்றியதன் மூலம் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். கிட்டுவும், இன்னும் சில தோழர்களும் தலைவரிடமே போரியலை நேரில் கற்றார்கள். கிட்டுவின் துடிப்பும், வேகமும் அங்கிருந்தவர்களிடையே அவரை வேறுபடுத்திக் காட்டியது. எதையும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற வேகமும் எந்த விடயத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றலும் கிட்டுவிற்கு இயல்பாகவே இருந்ததால் தலைவரின் எண்ணங்களை, சிந்தனைகளை, மக்கள் மீது அவர் கொண்டிருந்த எல்லை கடந்த பாசத்தை, தலைவரின் அருகில் இருந்த கிட்டு அறிந்துகொள்கிறார். அளவு கடந்த திறமையுடன் வேகமும் விவேகமும் நிறைந்த அவரது செயற்பாடுகள் அவர் மீதான தனி நம்பிக்கை வளரக் காரணமாகின்றன. தன் மீது தலைவர் வைத்திருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கும் காலம் கனிந்துவரும் வரை கிட்டு காத்திருக்கிறார். 1983 மார்ச் 04 இல் அற்புதன் தலைமையில் உமையாள்புரம் தாக்குதலுக்காக விடுதலைப் புலிகளின் அணி ஒன்று செல்கிறது. அதில் கிட்டுவும் ஒருவர்ää தாக்குதலுக்கான களம் தீர்மானிக்கப்படுகிறது. வீதியில் நிலக் கண்ணிவெடிகளை பொருத்திவிட்டு எதிரியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கண்ணிவெடிகளை கையாளும் போதியளவு செயற்திறன் போராளிகளுக்கு இல்லாத காலம் அது. இராணுவ வாகனங்கள் இலக்காக அண்மிக்கும் நேரத்தில்ää துரதிஸ்ட வசமாக வாகனங்களைக் கண்டு மிரண்டு ஓடி வந்த ஆட்டுக்குட்டியின் கால்கள் பட்டு கண்ணிவெடிகள் வெடிக்க போராளிகள் நிலை குலைந்து போகிறார்கள். துப்பாக்கி ரவைகளைக் கக்கியவாறு இரு இராணுவ கவச வாகனங்கள் போராளிகளை நெருங்கிவரää பின்வாங்கிச் செல்வதைத்தவிர வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால்ää கிட்டு மட்டும் எதிரியை எதிர்கொள்ளும் சாதகமற்ற களநிலையைக் கருத்திற்கொள்ளாது துணிந்து நின்று தான் வைத்திருந்த ஜுத்திறி (பு-3) துப்பாக்கியால் இராணுவ கவசவாக னத்தை நோக்கிச் சுடுகிறார். இலக்குத் தவறவில்லை. சாரதி காயப்பட வாகனம் செயலற்றுப் போகிறது. தலைவரின் நம்பிக்கையை மெய்ப்பித்த மகிழ்ச்சியோடு கிட்டு களம் விட்டு அகன்றார். அவரின் முதல் களமே தனி மனித சாதனையாக ஆரம்பமாகிறது. 1983 ஏப்ரல் 07இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். இதன்பின் சிறீலங்கா அரசால் திணிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடாத்தப்பட்ட தாக்குதலää ஜுலை 23ல் இராணுவ வாகனங்கள் மீது நடாத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொள்கின்றார். இவவாண்டின் இறுதிக் காலத்தில் இந்திய மண்ணில் பயிற்சிக்கெனச் சென்ற இயக்கத்தின் முதற்குழுவின் இரண்டாவது பொறுப்பாளராக கிட்டு நியமிக்கப் படுகின்றார். பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 02இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்துகின்றார். இதேநேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 09இல் எதிரியுடனான மோதலில் வீரச்சாவடைய அவரின் இடத்திற்கு கிட்டு தலைவரால் நியமிக்கப்படுகின்றார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். யாழ். மாவட்டத்தில் கிட்டுவின் வெற்றிகரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. எதிரிப்படை யாழ். மண்ணில் அவனுடைய முகாமுக்குள்ளேயே முடக்கப்படுகிறது. யாழ். கோட்டையை ஆக்கிரமித்திருந்த சிறீலங்கா இராணுவம் கிட்டு என்ற பெயரைக் கேட்டாலே கதிகலங்கிப் போகும் நிலை உருவானது. மக்கள் மத்தியில் கிட்டு என்ற மூன்றெழுத்துப் பெயர் மந்திரமாக உச்சரிக்கப்படுகிறது. யாழ். மண்ணில் எதிரிப்படையை மட்டும் அவர் வெற்றிகொள்ளவில்லை. மாறாக, மக்களின் மனங்களையும் அவர் வெற்றிகொண்டார். மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர் அதிக அக்கறை செலுத்தினார். தொழில் நிலையங்கள், நூலகங்கள், மலிவுவிலைக் கடைகள், பூங்காக்கள் என்பவற்றை நிறுவி மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தினார். இவவாறாகக் கிட்டுவின் சமூகப்பணிகள் விரிவடைய, அவர் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் ஒரு ஒப்பற்ற போராளியாக மக்களால் உணரப்பட்டார். தமிழீழ மக்கள் மனங்களில் மாத்திரமல்ல, எல்லைகடந்து வாழும் தமிழ் உறவுகள் அனைவருமே கிட்டுவின் வீரசாதனைகளை அறிந்து பெருமிதம் அடைந்தார்கள். விடுதலைப் புலிகளால் மன்னாரில் வைத்துச் சிறைப்பிடிக்கப்பட்ட இரு சிங்களச் சிப்பாய்களின் விடுவிப்பு தொடர்பாக 1986 நவம்பர் 10இல் சிங்கள இராணுவத் தளபதியான கேணல் ஆனந்த வீரசேகரா, கப்டன் கொத்தலாவை ஆகியோரை தனது இடத்திற்கு அழைத்துச் சந்தித்ததன் மூலம் கிட்டு என்ற பெயர் சிங்கள மக்கள் மத்தியிலும் பிரபல்யம் அடைந்தது. 1987 மார்ச் இறுதியில் தேசத்துரோகி ஒருவனின் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்த கிட்டு தனது மனஉறுதியால் முன்னைய வேகத்துடனும், திடகாத்திரத்துடனும் விடுதலைப் போருக்கு வலுச்சேர்ப்பவராக வளர்ந்து வந்தார். இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்ற கிட்டு ஒப்பந்தம் முறிவடைந்த நிலையில், இந்திய அரசினால் திணிக்கப்பட்ட போரின் உண்மை நிலைப்பாட்டை வெளிக் கொணர பெரிதும் பாடுபட்டார். இந்திய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களர், கலைஞர்கள், பேராசிரியர்கள் எனப் பலரையும் சந்தித்து, எமது நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைத்தார். எமது தியாக வரலாறுகளை பல வெளியீடுகள் மூலம் இந்திய மக்களின் பார்வைக்குக் கொண்டுவந்தார். இவவாறான நிலையில் கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. சிறைக்குள் இருந்தபடியே அவர் தமிழகத்திலிருந்து வெளிவரும் தேவி இதழுக்கு போராட்டம் தொடர்பான நீண்ட தொடர் கட்டுரையை எழுதினார். சிறையிலிருக்கும் தன்னை விடுவிக்கும்படி கிட்டு நடாத்திய அகிம்சைப் போருக்கு அஞ்சிய இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது. விடுதலை பெற்ற கிட்டு வன்னிக் காட்டில் தலைவரைச் சந்தித்து இந்திய இராணுவத்திற்கு எதிரான போருக்கு இறுதிவரை முகங் கொடுத்தார். இந்திய இராணுவம் மெல்ல மெல்ல தோல்விமுகம் காணும் நிலை உருவானது. அமெரிக்காவிற்கு வியட்நாமும், ரஸ்யாவிற்கு ஆப்கானிஸ்தானும் புகட்டிய பாடத்தை தமிழீழம் இந்தியாவிற்குப் புகட்டியது. இந்நிலையில் இலங்கை அரசு இந்தியாவை நிராகரித்து புலிகளுடன் பேச முன்வந்தது. 1989இல் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டனுக்குப் பயணமானார். கிட்டு லண்டனில் வாழ்ந்த காலத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமிழரிடையே போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டினார். களத்தில், எரிமலை' எனப் பல்வேறு சஞ்சிகைகள் மூலம் ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துச் சென்றார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு,விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகம், எனப் பல்வேறு அமைப்புக்களையும் வெளிநாட்டில் அமைத்துச் செயற்பட்டார். விடுதலை உணர்வையும், தாய் மண்ணின் பற்றுறுதியையும் தாயக மண்ணை விட்டு புலம்பெயர்ந்த மக்கள் மறந்து போகாவண்ணம் தனது செயற்பாட்டை விரிவுபடுத்தினார். எனினும் கிட்டு எங்குதான் வாழ்ந்தாலும் எப்பணியைச் செய்தாலும் அவர் மனம் தமிழீழ மண்ணையே சுற்றிவந்தது. அவர் தலைவரை, தாயகத்தை, தமிழீழ மக்களை ஆழமாக நேசித்தார். தமிழீழத்தில் எப்போது தனது கால் மீண்டும் பதியும் என ஏக்கத்தோடு காத்திருந்தார். கிட்டு எதிர்பார்த்திருந்தது போல தமிழீழத்திற்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. குவேக்கஸ் சமாதானக் குழுவின் யோசனைகளுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் கிட்டுவும் அவரது தோழர்களும் பயணமானார்கள். யாரும் சென்று வரக்கூடிய சர்வதேச கடற்பரப்பில் இந்தியா தனது சதிவலையைப் பின்னியது. இந்தியக் கடற்படை சர்வதேச கடல் எல்லையில் கிட்டுவின் கப்பலை மறித்து வலுக்கட்டாயமாக தனது எல்லைக்குள் இழுத்துச் சென்றது. சமாதான முயற்சிகள் பற்றி இந்திய அரசிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவை பயனற்றுப் போயின. குமரப்பா, புலேந்திரன், திலீபன், ஜொனி என எமது தளபதிகளின் தொடர் இழப்புக்குக் காரணமான இந்தியா தனது பொறிக்குள் மூத்த தளபதி கிட்டுவையும் சிக்கவைத்தது. உயிரிலும் பெரிது தன்மானம் என நினைக்கும் தலைவனின் வழியில் வளர்ந்த கிட்டுவும் ஒன்பது தோழர்களும் அன்று ஆட்சியிலிருந்த இந்திய அரசிடம் பணிந்து போகாது, தமிழீழத்தை, தலைவனை நினைத்தவாறே தீயில் கலந்து கடலில் சங்கமித்துப் போனார்கள். கிட்டுவின் இழப்பு தலைவனின் ஆத்மாவை மாத்திரமல்ல, தமிழினத்தின் ஆத்மாவையே பிழிந்த ஒரு சோக நிகழ்வு. மக்களால் மனதாரப் போற்றப்பட்ட அந்தப்பெரு வீரனை இனி எங்கு காண்போம் எனத் துடித்தனர் மக்கள். பல இழப்புக்களைக் கடந்து வாழக்கற்றுக்கொண்ட மக்களிற்கு கிட்டுவின் இழப்பு ஜீரணிக்கமுடியாத தொன்றாகவே இருந்தது. எனினும் தோல்விகளையும், இழப்புக்களையும் தனக்கான வெற்றியின் பாடமாக்கிக் கொள்ளும் தலைவர், கிட்டுவின் இழப்பிற்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கின்றார். "கிட்டு நீ சாகவில்லை, ஒரு புதிய மூச்சாக பிறந்திருக்கிறாய்" எனக்கூறி தனக்குள் ஒரு வீரசபதம் எடுத்துக்கொள்கிறார். இன்றைய உலகில், தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் எவராலும் நிராகரிக்க முடியாத பெரும் வடிவம் எடுத்ததில் கிட்டுவின் பங்கு இன்றியமையாதது. உலகெங்கும் சிதறிவாழ்ந்த தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, தமிழீழ விடுதலையை நோக்கி அவர்களை அணிதிரட்டுவதில் கிட்டு வெற்றி கண்டார் என்றே சொல்லவேண்டும். அந்தநிலை இன்று இன்னும் விரிவடைந்து மக்கள் -புலிகள் என்ற வேறுபாட்டை இல்லாதொழித்துவிட்டது. சர்வதேச சமூகம் விடுதலைப் போராட்டங்களையும், பயங்கரவாதத்துடன் இணைத்து தனது பிற்போக்குத் தனமான செயலை நியாயப்படுத்திவரும் வேளைகளில் கூட, உலகெங்கும் பரந்துநிற்கும் தமிழ் மக்கள் அந்த நெருக்கடிக்கு முகம் கொடுத்து தொடர்ந்தும் எழுச்சி கொள்கிறார்களென்றால் அது கிட்டுவால் அன்று விதைக்கப்பட்ட விடுதலை குறித்த கருத்துருவாக்கமும் விழிப்புணர்வுமே அடிப்படைக் காரணமாகின்றன. கெரில்லா அமைப்பாக இயங்கிய அந்த நாடகளில், சிறியரக ஆயுதங்களைக்கொண்டு பெரும் சாதனைகளை நிலைநாட்டிய அந்த ஒப்பற்ற வீரனின் பெயரிலே, இன்று தமிழீழ தாயகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கனரக ஆயுதங்களைக் கொண்ட மிகப்பெரிய படையணி தனது சாதனைகளால் உலகத்தை வியக்கவைக்கின்றது. போரியல் நுணுக்கமும் போரிடும் திறனும் கொண்ட கேணல் கிட்டு பீரங்கிப் படையணி எண்ணிலடங்கா சமர்க்களங்களில் ஈட்டிய பெரும் வெற்றிகள் மூலம், தனது சாதனைத் தடங்களை தொடர்ந்தும் பதித்துக்கொண்டிருக்கின்றது. நவீன போரியற்கலையில் தமிழனின் தேசியப்படை முன்னேறிச் செல்வதற்கு கிட்டுவின் கனவும் ஒரு காரணம். ஊடகங்களில் தமிழரின் உண்மையான முகம் வெளியில் தெரியவேண்டும் என்பதில் கிட்டு அதிக அக்கறை காட்டினார். தமிழினத்தின் நியாயப் போராட்டங்களை பயங்கரவாதப்படுத்தி உலகெங்கும் பொய்யுரைக்கும் சிறீலங்கா அரச ஊடகங்களையும் அவற்றைச் சார்ந்துநிற்கும் சர்வதேச ஊடகங்களையும் கடந்து, உண்மையான செய்திகள் உலகெங்கும் தெரிவிக்கப்படவேண்டும் என்பதே அவர் கொண்டிருந்த எண்ணமாகும். இவை இன்று நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. தமிழீழத்திலும் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் தங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் உண்மை முகத் தோற்றத்தை உணரக்கூடிய விதத்தில் தமிழ் ஊடகத்துறை பெற்றிருக்கும் அபரிமிதமான வளர்ச்சிக்கு கிட்டுவின் எண்ணங்களின் தாக்கமும் ஒரு காரணம். சிறுவர் நலன்பேணும் திட்டங்கள், கல்வி, அபிவிருத்தி, பொருண்மிய மேம்பாடு, சமூக மேம்பாடு என மக்கள் நலன்பேணும் திட்டங்களில் அவர் காட்டிய அதீத அக்கறையின் பயனாக இன்னும் எம்மண்ணில் இச்செயற்பாடுகள் பெரும் வளர்ச்சி பெற்ற நிலையில் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு மேலாக, ஒன்றுபட்ட தமிழினத்தின் எழுச்சியை இவர் கனவாகக் கொண்டிருந்தார். எதிரியின் இறுகிய பிடிக்குள்ளும் நிமிர்ந்து நின்று தமிழ் மக்கள் வெளிப்படுத்தும் உணர்வெழுச்சி கிட்டுவின் கனவிற்கு கட்டியம் கூறிநிற்கின்றது. எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் கிட்டு என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழினத்தின் ஆன்மாவில் அழிக்கமுடியாததோர் இடம் அவருக்கு என்றுமுண்டு. எல்லையற்ற திறமைகளாலும் மக்கள் மேல் அவர் வைத்திருந்த உண்மையான பாசத்தினாலும் தமிழினத்தில் நீங்காத நினைவுகளை அவர் பதித்துச் சென்றிருக்கின்றார். இறுதிமூச்சுவரை தமிழினத்தின் தன்மானம் காத்து தமிழினத் தலைவனுக்குப் பெருமையைச் சேர்த்த அந்த ஒப்பற்ற வீரனை எந்நாளும் எவராலும் மறக்கமுடியாது.
  8. நிழலி எந்த மாவீரனையும் விட்டு வைக்க மாட்டீங்க போல.... எல்லோரின் மீதும் சேற்றை வாரி விளாசுரீங்க... வாழ்க வளர்க .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.