Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சேர்ந்து மூச்சு விடுவோம்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சேர்ந்து மூச்சு விடுவோம்...

p26qo4.jpg

'ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து இங்கு வந்து அதிகாரம் செலுத்தும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நீங்கள் துப்பாக்கி தூக்க வேண்டியதில்லை; வெடிகுண்டு வீசவேண்டியதில்லை; ஒன்றை மட்டும் செய்யுங்கள்..! முப்பது கோடி இந்தியரும் ஒரே நேரத்தில் வெள்ளையரை நோக்கி மூச்சு விடுங்கள். அது புயலாக மாறி அவர்களைக் கொண்டுபோய் சீதளச் சீமையில் சேர்த்துவிடும். ஆனால், என் சகோதரர்களே, நீங்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சேர்ந்து மூச்சுவிடுவீர்களா?'என்றுஅர்த்தம் செறிந்த கேள்வியை அன்று கேட்டார் வ.உ.சிதம்பரம். இந்தக் கேள்விக்குத்தான் அவருக்கு இருபதாண்டு சிறைவாசம்.

இந்தியர்கள் சேர்ந்து மூச்சுவிடுவது இருக்கட்டும். இதுவரை தமிழர் தலைவர்

வ.உ.சி. விரும்பியபடி எந்தப் பிரச்னையிலாவது தமிழர்கள் சேர்ந்து மூச்சு விட்ட வரலாறு உண்டா? மொழிப் பிரச்னையிலி ருந்து ஈழப் பிரச்னைவரை நாம் என்றும் ஒன்றாக மூச்சுவிட்டதில்லை. நம் தலைவர்களாக நம் விதிவசத் தாலும் வினைப்பயனாலும் வந்துதித்த மனிதர்களின் தனிப்பட்ட பகைமையும், ஆசாபாசங்களும் தமிழினத்தை ஒருபோதும் ஒன்றிணையவிடவில்லை.

ஈழம் பற்றி எரிகிறது. தமிழினம் திட்டமிட்டுப் பூண்டோடு அழிக்கப்படுகிறது. கிளிநொச்சி குரு«க்ஷத்திர மாகிவிட்டது. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சொந்த மண்ணில் அகதிகளாய் உயிருக்கு அபயம் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். நாம் இங்கு திசைக் கொரு பக்கம் திரும்பிப் பிரபாகரனைப் பற்றிப் பட்டிமன்றம் நடத்திக்கொண்டு இருக்கிறோம். 'மின் வெட்டு, விலைவாசி போன்ற பிரச்னைகளி லிருந்து தமிழ் மக்களின் கவனம் ஈழத் தமிழரின் பக்கம் திரும்பிவிடுமோ' என்ற கவலை ஜெயலலிதாவுக்கு. முதல்வர் கூட்டிய சர்வகட்சிக் கூட்டத்தில் பங்கேற்றால் புரட்சித் தலைவியின் கோபத்துக்கு ஆளாக நேருமோ என்ற ஆதங்கம் வைகோவுக்கு. மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் தரும் தீர்மானத்தை ஆதரிக்க மறுத்தால் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் போது நட்டாற்றில் நிற்கவேண்டிய நிலை வருமோ என்ற கலக்கம் காங்கிரஸ§க்கு. இனியும் ஈழப் பிரச்னையில் மௌனப் பார்வையாளராக இருந்தால் 'தமிழினத் தலைவர்' என்ற தகுதியை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் கலைஞருக்கு.

இதில் எப்படி ஒன்றாய் மூச்சுவிட முடியும்?

ஈழப் பிரச்னைக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு பக்கத்தைப் பார்ப்பவர் மறுபக்கத்தைப் பார்ப்பதில்லை. பிரபாகரனின் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டோடு வெறுப்பவர்கள், ஈழத் தமிழரின் கண்ணீரைத் துடைக்கக் கரம் நீட்ட மறுக்கின்றனர். பிரபாகரனை, 'உலகம் இதுவரை கண்டிராத மாவீரன்' என்று உரத்த குரலில் முழங்குபவர்கள், ஈழத் தமிழர் பிரச்னையில் அரசியல் தீர்வு எட்டப்படாமல் எண்ணற்ற மக்கள் கதியற்றுக் கிடப்பதற்குக் காரணமே பிரபாகரனின் பாசிஸ மனோபாவம்தான் என்ற உண்மையை உணர மறுக்கின்றனர்; அல்லது அந்த உண்மையை மறைக்கின்றனர்.

p27md1.jpg

இந்திய விடுதலைப்போரில் வன்முறையை நாடிய புரட்சியாளர்கள் பகத்சிங், ராஜகுரு, சந்திரசேகர ஆசாத் போன்றோர் பொது எதிரியாகிய ஆதிக்க ஆங்கிலே யர்களை அழிக்க முனைந்தனரேயன்றி, சகோதரப் போராளிகளைச் சாய்க்கவில்லை. ஆனால், பிரபாகரனின் விடுதலைப்புலிகள் சொந்த சகோதரர்களையே சுட்டுத் தள்ளிய கருத்து சர்வாதிகாரி கள். இந்திராகாந்தியும் ராஜீவ்காந்தியும் பின்புலமாக இல்லாமல் போயிருந்தால் விடுதலைப்புலிகளுக்கு ஊசியளவு உதவியைக்கூட எம்.ஜி.ஆரால் வழங்கியிருக்க முடியாது. தமிழகமே பிரபாகரனை இனவுணர்ச்சியால் கொண்டாடியபோது, ராஜீவ்காந்தியைப் படுகொலை செய்து, தன் தலையில் தானே தீ வைத்துக்கொண்டார். பிரபாகரன் தன் வாழ்வில் இழைத்த இமாலயத் தவறு இது.

'மனித வெடிகுண்டு' என்ற புதிய பயங்கரவாத ஆயுதத்தைப் புரட்சி நடவடிக்கைகளில் ஒன்றாக உலகுக்கு அறிமுகப்படுத்திய பிரபாகரனைத் தமிழினத்தின் 'வாராது போல் வந்த மாமணி'யாய் வரவேற்க நெடு மாறனும் வைகோவும் எடுக்கும் எந்த முயற்சியும் இந்த மண்ணில் என்றும் எடுபடாது. இங்குள்ள காங்கிரஸ்காரர்கள் பிரபாகரனைப் பற்றிய பிரமையில் ஈழத் தமிழர்தம் இன்னலைத் தீர்க்கும் கடமையிலிருந்து விலகி நிற்க லாகாது. இந்திராகாந்தியைக் கொன்றவர்கள் சீக்கியர்கள் என்பதற்காக சீக்கிய இனத்தையே ஒட்டுமொத்தமாக யாரும் பழிக்கவில்லை. சீக்கியர் மன்மோகன் சிங்கை இந்தியாவின் பிரதமராக்கி மகிழ்ந்தார் சோனியாகாந்தி. சீக்கியர்களுக்கு ஒரு நியாயம், தமிழர்களுக்கு ஒரு நியாயம் சோனியாகாந்தியிடம் இருக்கமுடியாது. பிரதமர் மன்மோகன் சிங்கும் சோனியாகாந்தியும் ஈழப்பிரச்னையில் வேகமாகச் செயல்படவேண்டிய நேரம் இது.

ராஜபக்ஷேவின் நோக்கம் விடுதலைப்புலிகளை அழிப்பது மட்டுமல்ல. போர் என்ற போர்வையில் முடிந்தவரை தமிழர் அனைவரையும் மரணத்தின் மடியில் சாய்ப்பதுதான் அவருடைய அந்தரங்க நோக்கம். அந்த நோக்கத்துக்கு மன்மோகன் சிங் அரசு மறைமுகமாகத் துணைபோனது மன்னிக்க முடியாத தவறு.

'மத்திய அரசு ஈழத் தமிழர்களின் பிரச்னையில் சுமுகமான அரசியல் தீர்வைக் காணும் நோக்கில் இலங்கை அரசை நிர்ப்பந்திக்கவேண்டும்' என்ற தீர்மானம் இலங்கை இறையாண்மையைப் பாதிக்கும் நடவடிக்கை என்று சிலர் சொல்வது சொத்தை வாதம். எங்கோ இருக்கும் அமெரிக்கா ஈராக்கைத் தாக்கியபோதும், ஈரானைத் தாக்கும் முயற்சியில் ஈடுபடும்போதும் அந்த நாடுகளின் இறையாண்மைக்கு ஆபத்து நேர்ந்ததாய் உலகநாடுகள் ஒன்று திரண்டு ஏன் எதிர்க்கவில்லை? அமெரிக்கர்களைக் காப்பாற்றவா ஆப்கானிஸ்தானத்திலும் ஈராக்கிலும் புஷ் படை நடத்தினார்?

இந்தியா இலங்கை மீது படைநடத்த வேண்டுமென்று இங்கு யாரும் சொல்லவில்லை. ஆனால், சிங்கள அரசுக்கு ஆயுதங்கள் வழங்குவதும் ராணுவப்பயிற்சி அளிப்பதும் தமிழினத்துக்கு எதிரான துரோகச் செயல் என்கிறோம். உள்நாட்டுப் போரில் இந்தியா தலையிடக்கூடாதென்றால், இலங்கை அரசுக்கு 'ராடார்' வழங்கியதும், இந்திய மண்ணில் சிங்களர்களுக்குப் பயிற்சியளித்ததும், ஈழநிலத்தில் இந்தியப் பொறியாளர்கள் மூலம் போர் விமான நுணுக்கங்களைக் கற்றுத் தந்ததும் அங்குள்ள அரசுக்கு ஆதரவான தலையீடு இல்லையா? தனிநபர் பயங்கரவாதத்தைவிட அரசு பயங்கரவாதம் மிக மோசமானது. ராஜபக்ஷே அரசு மனிதகுல நாகரிகத்துக்கு எதிராக அப்பாவித் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. புலிகளை அழித்துவிட்டால் பயங்கரவாதம் ஒழியும் என்பவர்கள், ராஜபக்ஷே தன் முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டால் தமிழினம் இலங்கையில் இரண்டாம் தர இனமாகவும் அடிமைச் சமூகமாகவும் வாழ்விழந்து போகும் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்!

விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து ஈழத்தமிழர்கள் விடுபடவேண்டும். அதே நேரத்தில் சிங்களர்களுக்கு இணையாக சகல உரிமைகளையும் தமிழர் பெற வேண்டும். அது சாத்தியம் இல்லையெனில் தமிழீழம் காண இந்தியா துணை நிற்கவேண்டும். வங்கதேசம் பிறக்க இந்திராகாந்தியின் தலைமையில் இந்தியா உதவியதுதானே வரலாறு! மார்ஷல் டிட்டோ ஒருங்கிணைத்த யுகோஸ்லேவியா இன்று எத்தனை துண்டுகளாகச் சிதறிப்போனது! காலம் தன் போக்கில் தீர்ப்பை எழுதட்டும். அதுவரை காத்திராமல் நாம் நம் சகோதரர்களின் விழிநீர் துடைத்து எல்லா வகையிலும் சேர்ந்து முன் நிற்போம்!

விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து ஈழத்தமிழர்கள் விடுபடவேண்டும்.

என்ன விகடன் ஆசிரியர் குழப்புகிறார்:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.