2 days 8 hours ago
வெற்றியும் பலமும் யார்பக்கம் நிற்கின்றதோ அந்தப்பக்கம் நிற்பதே மதில் மேல் பூனைகளின் வழக்கம்
2 days 8 hours ago
படம் பார்க்கவில்லை. ஆனால் ரானா ஒரு தெலுங்கன்…எனவே படம் பார்க்க கூடாது என ஒரு குரூப் சொல்லி திரிகிறது. எனது கருத்து: இந்தியாவில் இருந்து வரும் எந்த படமும், எமது போராட்டத்தில் இந்தியனின் நரித்தனத்தை காட்டாது. இந்தியன் ஆமி, இலங்கை ஆமியை விட மோசமான பாலியல் வல்லுறவாளர் என காட்டாது. காட்ட அவர்களின் இந்திய பாசம் விடாது. அப்படியே காட்டினாலும் சென்சார் விடாது. இந்தியாவின் கோரமுகத்கை காட்டாத எம்மை பற்றிய எந்த படமும், குறிப்பாக 87-90 காலப்பகுதியில் நடந்த கதைகளம் எனில், அது வெள்ளை அடிப்பு என்ற வகையில்தான் அடங்கும். வழமை போல் எம்மை இன, போர் வெறியராக, பயங்கரவாதிகளாக சித்தரிக்காமல் விட்டார்களே என நிம்மதி வேண்டுமானால் அடையலாம்.
2 days 8 hours ago
உக்ரேன் கருத்து வெற்றிக்காக அமெரிக்காவும் மேற்குலகும் தெய்வம் என்ற குரல்கள் இன்று அமெரிக்காவையும் திட்டி தீர்க்கின்றன.😎
2 days 9 hours ago
இதென்ன பிரமாதாம் பொட்டம்மான் என்ன முடியா என கேட்ட தமிழ் தேசியவாதிதான் இந்த சீமான். அண்மையில் ஒரு காணொளியில் தூசண துரைமுருகன் பச்சை தூசணத்தில் மேடையில் பேசி விட்டு… நான் பிரபாகரன் பிள்ளைடா எங்கிட்ட வச்சுகாதே என்கிறார்… தலைவரை இதைவிட வேறு எந்த அமைப்பும் அவமானபடுத்தியதில்லை.
2 days 9 hours ago
இந்திய ராணுவத்துக்கு வெள்ளை பெயின்ட அடிச்சு படம் எடுத்திருக்கிறாங்கள்... கல்யாணப் பொம்பளைய இந்திய ராணுவம் வன்புணராமல் விட்டுவைத்ததா🙄😒😏 வரலாற்று திரிபுகள் பல....
2 days 9 hours ago
இதிலே பெரியவன் அல்லாஹ்வின் கைவரிசைகள் ஒன்றும் இல்லையா அல்லாகு அக்பர் முழக்கங்கள் கேட்கின்றனவே
2 days 9 hours ago
சேரன் எல்லாம் ஒரு ஆளே இல்லை… மகள் சாதி மாறி திருமணம் செய்த விடயத்தில், இயக்குனர் பாலா என்கிற ரவுடியை கூட்டி கொண்டு போய் அராஜகம் பண்ணியவர்தான் இந்த சேரன். பாலா, சேரன், அமிர் எல்லாரும் சீமானை போல சினிமா குட்டையில் ஒன்றாக ஊறிய மட்டைகள்தான். இவர்கள் அனைவரினதும் பிதாமகன் சட்டை மாற்றுவது போல் பெண்களை மாற்றும், தான் 60 வயது தாண்டிய பின் 18 வயதும் ஆகாத மோனிஷாவோடு சேர்ந்து வாழ்ந்த பாலுமகேந்திரா. பாலுமகேந்திராவின் செத்தவீட்டில் கூட அந்த பெண்ணை இழிவுபடுத்திய கூட்டம். இவர்களுக்கு அறம், நேர்மை, தூய்மை, பொதுவாழ்வு பற்றி கதைக்க எந்த அருகதையும் இல்லை.
2 days 9 hours ago
இந்த பாண்டே ஒரு தீவிர பிஜேபி பிரசாரகர். H. ராஜா ஷர்மா என்று ஒரு பிஜேபிகாரரும் சீமானை ஆதரித்து பேசி இருக்கின்றார்.சீமானுடைய கொடுக்கபட்ட பணி பெட்டியை வாங்கி கொண்டு தமிழ்நாட்டை குழப்பி அடித்து பிஜேபி தேர்தலில் வெல்வதற்கு வழி அமைத்து கொடுப்பதே . ஆனால் பாண்டே சீமான் Ideologically driven செய்கின்றார் என்று சொல்லி கேலி கூத்தாகிவிட்டார் எங்களை சுயமரியாதையுடன் வாழ கற்று தந்த தலைவன் தந்தை பெரியார். தள்ளாத வயதில் முதுமையின் காரணமாக முதுகு முறிந்த போது கூட எங்களை நிமிர வைத்தவனடா எங்கள் அய்யா என்று மேடையில் கத்தி பேசிவிட்டு இப்போது பெரியார் எனக்கு மண் என்பது தான் அவருடைய கொள்கை பாதை
2 days 9 hours ago
தம்பர் வைத்தியசாலையில் அனுமதிப்பு என்கிறன சில எக்ஸ் கணக்குகள்.
2 days 10 hours ago
இந்த படத்தைப் பற்றி நல்ல விமர்சனங்களே வந்து கொண்டிருக்கின்றன. தியேட்டரில் போய்ப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்காது. எப்போதாவது OTTயில் வெளிவரும் போது பார்க்கலாம்.
2 days 10 hours ago
ரசோதரன், உங்களைப் போலத்தான் நானும் எந்த நடிகரின் ரசிகனும் இல்லை. ஒருகாலத்தில் வாத்தியாரை (எம்.ஜி.ஆர்.) ரசித்திருக்கிறேன். இப்போது நல்ல படங்கள் வந்தால் மட்டும் பார்ப்பேன். அதற்கப்பால் நடிகர்கள் மீது எந்தப் பற்றும் இல்லை. நீங்கள் சேரனைப் பற்றிக் குறிப்பிட்டதால், இதைச் சொல்ல வேண்டி இருக்கிறது. சினிமா என்ற தளமே இல்லையென்றால், அவர் கருத்துக்களுக்கு ஒரு வெளிச்சமும் கிடையாது. சேரன், விஜய் அளவுக்கு பிரபலமாக இருந்திருந்தால், அவர் பேசும் மொழியும், நிலையும் வேறாக இருந்திருக்கும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமே இல்லை. ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் குறும்படங்களை ஆர்வமாக உருவாக்கிக் கொண்டிருந்த காலத்தில், பாரிஸில் நடைபெற்ற குறும்பட விழாவுக்கு சேரனுக்கு அழைப்பு சென்றது. தனக்கும் தனது மனேஜருக்கும் பிஸினஸ் கிளாஸ் விமான டிக்கெட், ஸ்டார் ஹொட்டல் தங்குமிடம் வேண்டும் என்றார். அது சாத்தியமில்லை என்று கூறியபோது, தனக்கு மட்டும் அந்த வசதிகள் வேண்டும். மனேஜருக்குப் பரவாயில்லை என்று கொஞ்சம் தளர்வு காட்டினார். ஒருகாலத்தில் தியேட்டரில் டிக்கெட் கிழித்தவர், புகழ் கிடைத்தவுடன் இவ்வளவு எதிர்பார்ப்புகளா? அதே நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்ட ஓவியர் டிராட்ஸ்கி மருது வந்து நிகழ்ச்சியை சிறப்பித்ததோடு, அவருக்குக் கிடைத்த அன்பளிப்பையும் குறும்பட வளர்ச்சிக்காகத் திருப்பி வழங்கிவிட்டு சென்றார். இதை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சேரனின் நிலைப்பாடு எவ்வளவு வெறுமையாக இருக்கிறது என்பது என்னளவிலான தெளிவு. இப்போது விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். கட்சி தொடங்கி தேர்தலில் நிற்பது அவரது உரிமை. அதை ஏளனமாகக் கேள்வி கேட்பதற்கு முன்னால், பாரம்பரியக் கட்சிகள் ஆண்டாண்டுக்காலமாகச் செய்த ஊழல், சட்ட மீறல்கள் பற்றி திறந்தவெளியில் பேச சேரன் தயாராக இல்லை. ‘புதிய கட்சி வந்து என்ன சாதிக்கும்?’ என்று கேட்பது எளிது. அதே நேரத்தில், ‘பழைய கட்சிகள் தொடர்ந்து இதேபோலச் செயல்பட்டால் பரவாயில்லை’ என்று பொருள்படும் வகையில் பேசுவது பொறுப்பற்ற அணுகுமுறை. உண்மையில், நீங்கள் குறிப்பிடாவிட்டால் சேரன் என்ற பெயரே நினைவுக்கு வராத அளவுக்கு அவர் தாக்கம் குறைந்துவிட்டது என்பதே நிஜம். மேற்கு நாடுகளில் நாடுகளில் அரசியல்வாதிகளின் தகுதி, திறன், பின்னணி ஆகியவை ஆராயப்படும். ஆனால் தெற்காசிய அரசியலில் அது அவ்வளவாகப் பார்க்கப்படுவதில்லை. இந்தியாவில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். இன்னும் ஒன்று யேர்மனியில் கட்சிகள் தனித்துத்தான் போட்டியிடுகின்றன. தேர்தல் முடிந்தபின் ஆட்சியமைக்க போதிய பலம் இல்லையென்றால் மட்டும்தான் கூட்டு சேர்வார்கள். தமிழ்நாட்டுத் தேர்தலில் வெல்லுமட்டும் ஏதாவது சொல்வார்கள். சில புத்திசாலிகள் மௌனமாக இருப்பார்கள். வென்றபின் ஆளுயர மாலையோடு போய் நிற்பார்கள். “நீங்கள்தான் வெல்லுவீர்கள் என்று எனக்கு அப்பவே தெரியும் என்பார்கள்” எதுவானாலும் இறுதியில் தீர்மானிப்பது மக்கள்.
2 days 10 hours ago
தரமான அறிவுசார் விளகங்கள் @vasee 🙏. வரப்போகும் பதில்களுக்கு தயாராகவும்😂.
2 days 11 hours ago
Khorramshahr-4 இது ஒரு விமான எதிர்ப்பு ஏவுகணை இல்லை என கூறப்பட்டுள்ளது
2 days 11 hours ago
https://yarl.com/forum3/topic/309629-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-f-35-%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/#findComment-1816788 இந்த திரியில் உள்ள கட்டுரையில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
2 days 11 hours ago
பிற ஊதா கதிரியக்க (IIR + EO) மூலம் வழி நடத்தப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையே Passive System என அழைக்கிறார்கள். ரடாரின் மூலம் வழி நடத்தப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை Active system என அழைக்கிறார்கள், விமானத்திலிருந்து விமானத்திற்கு ஏவப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணை விமானத்திலிருந்து வெளியேறும் ராடர் சிக்னலை உள்வாங்கி செயல்படுவதனை semi active system என அழைக்கிறார்கள். ராடர் வழிநடாத்தப்படாத விமான எதிர்ப்பு ஏவுகணைகளை Passive System என அழைக்கிறார்கள். விமானங்களில் உள்ள பாதுகாப்பு பொறிமுறைகள் ராடர் இயக்கப்படுவதனை இனங்காணக்கூடியதாக காணப்படுவதால் நீண்ட குறுந்தூர ராடரில் இயங்கும் விமான எதிர்ப்பு ஏவுகணை செலுத்திகளை விமானங்கள் இலகுவாக இனங்காணுவதாக கூறுகிறார்கள், அத்துடன் F-35 போன்ற உரு மறைப்பு விமானங்கள் அதிக அதிர்வு கொண்ட ராடரிற்கு புலப்படாது ஆனால் VHF வகை ராடரிற்கு புலப்படும் அதிர்வு அலை அகலமாக இருப்பதால் தாக்குதல் துல்லியமாக இருக்காது என்பதால் இரஸ்ஸிய தரப்பு VHF + UHF + L band(microwave) போன்றவற்றின் மூலம் F-35 போன்ற உருமறைப்பு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வழிநடத்துகிறார்கள். ஈரான் பாவிக்கும் IIR வகை குறுந்தூர (0.7KM - 8KM) விமான எதிர்ப்பு ஏவுகணைகளை விமானம் இனங்காண முன்னரே விமானம் தாக்கப்பட்டுவிடும்.
2 days 11 hours ago
இதே போல் சீமானிற்கு திடீரென முளைத்த மகன் ஒருவர் இருக்கிறார்… அவர் யார் என்பதும், அவர் ஏன் பெற்றாரை விட்டு சீமானோடு வாழ்கிறார் என்பதுமே மர்மாக உள்ளது. அவரின் பெயரிலும் சீமானின் இயற்கையான மகன் மாவீரன் பெயரும் விடுபட்டுள்ளது. திமுக, நாதக இருவரும் ஒரே கள்ள கூட்டம்தான். பிள்ளைகள் பெயரில் கள்ள சொத்தை எழுதி வைப்பவனை விட, பிள்ளையிடம் கொடுத்த கடனை, கடன் என எழுதி வைப்பவன் பரவாயில்லை.
2 days 11 hours ago
இராக் விமனநிலையத்தில் இரகசியமாக தரித்து இருந்த black hawk என்ற உலங்கு வானூர்தியின் வால் பகுதி காக்கப்பட்டு வால் பகுதி அழிக்கபட்டு இருப்பதாக தகவல். இந்த தாக்குதலின் நோக்கம் ஈராக் விமான நிலையத்தின் குறிப்பிட்ட மிகவும் பாதுகாப்பான பகுதியை தாக்கப்பட முடியும் என்று காட்டுவதற்கு. இது அமெரிக்காவின் ஈராக் green zone இல் தப்பி ஓடுவதற்கான , (வியட்நாம் இல் செய்து வைத்து இருந்தது போன்ற) ஓர் ஏற்பாடு என்றும் தகவல். ஒன்றும் உறுதிபடுத்தப்படவில்லை.
2 days 12 hours ago
என்ன அண்ணை மாய்மாலம் போடுறியள்😂. உங்கள் பெயர் செபஸ்டியன் சைமனா என்கிற சீமானா? இல்லைத்தானே? அல்லது சீமான் யாழ் கள உறுப்பினரா? நான் மேலே எழுதியது முழுக்க சீமானை பற்றி. எந்த யாழ்கள உறவையும் பற்றி அல்ல. ஏன் இந்த பொய் பித்தலாட்டம் பெரிய சகோ? புலவர், நீங்கள் என்னிடம் கேட்ட கேள்வி சீமானின் 25 ஏக்கர் காணி பற்றிய ஆதாரம் எங்கே என்பது. நான் பதிந்த கபிலன் பதிவில் அதற்கான பத்திரத்தின் கொப்பி உட்பட்ட ஆதாரம் உள்ளது. கபிலன் கருத்துநிலை இங்கே தேவையில்லாதது. சீமான்+மனைவி 25 ஏக்கர் காணி வாங்கியதை நான் நிறுவி உள்ளேன். அதை அவர்களே அபிடேபிட்டில் போட்டுள்ளார்கள். அதை ஏற்க மனம் இல்லை, பதிவு போட்டவரை பற்றி எழுதுகிறீர்கள்😂.
2 days 12 hours ago
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : ஏ…..ஏஹேஹே…..ஓ…..ஓஹ்ஹோ…. ராராரா ராராரா ராராரா ராரா ராரா ராரா ராரா ரா ஆண் : உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம் ஆண் : பெண்மை என்னும் தென்றல் ஒன்று என்னைத் தொட்டு கொஞ்சும் இன்பம் ஓ….. ஆண் : பெண்மை என்னும் தென்றல் ஒன்று என்னைத் தொட்டு கொஞ்சும் இன்பம் ஓ….. ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஜிலுஜிலு ஹேய் ஆண் : காத்திருந்தாள் ஒரு ராஜாத்தி இரு கண்களில் மை எழுதி கண்டுக் கொண்டாள் என்னை நெஞ்சில் நிறுத்தி அவள் கோடியில் ஓர் அழகி ஆண் : தொட்டுத் தொட்டுக் கட்டுக் கதை இட்டுச் செல்லும் பட்டுக் கண்கள் ஓ….. குளு குளு குளு குளு குளு குளு குளு குளு ஹேய் ராரா ராரா ராரா ராரா ரா ஆண் : உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம் ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஜிகுஜிகுஜிகு ஹேய் ஆண் : நேற்றிரவு நல்ல பால் நிலவு எந்தன் நெஞ்சினில் ஓர் கனவு வந்தவள் யார் ஒரு தேவதையோ அவள் வார்த்தைகள் தேன் மழையோ ஆண் : செல்லக் கன்னம் வெல்லம் என்று மெல்ல மெல்ல கிள்ள கிள்ள ஓஹ் கிளுகிளு கிளுகிளு கிளுகிளு கிளுகிளு ஹேய் …….! ...... உள்ளம் ரெண்டும் ஒன்றையொன்று .....
2 days 12 hours ago
அமெரிக்காவின் எப்-35, எப்-15 விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்: ஈரான் ராணுவம் தகவல் டெஹ்ரான்: ஈரான் வான் பரப்பில் பறந்த அமெரிக்க விமானப் படையின் எப் -35 மற்றும் எப்- 15 இ ரக போர் விமானங்களை நேற்று சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு ஆதாரமாக, போர் விமானங்களின் உடைந்த பாகங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளன. ஆனால் இந்த தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை. அமெரிக்க ராணுவமும் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை உறுதி செய்யவில்லை. அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டபோது ஒரு விமானி பாராாசூட் மூலம் உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது. அந்த விமானியை ஈரான் ராணுவம் பிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதுவும் உறுதி செய்யப்படவில்லை. அமெரிக்க விமானி பிடிபட்டது தொடர்பான புகைப்படமோ, வீடியோவோ வெளியிடப்படவில்லை. கடந்த மார்ச் 19-ம் தேதி அமெரிக்காவின் எப்-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினோம். தற்போது இரண்டாவது எப்-35 ரக போர் விமானத்தையும் சுட்டு வீழ்த்தியுள்ளோம் என்று ஈரான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.hindutamil.in/news/world/iran-military-says-it-shot-down-us-f-35-and-f-15-jets
Checked
Tue, 04/07/2026 - 01:10
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed