புதிய பதிவுகள்2

"சமாதானம்"

1 day 20 hours ago
"சமாதானம்" "விட்ட பிழைகளுக்கு மன்னிப்புக் கேட்டு சட்டம் எல்லோருக்கும் பொதுவாக மாற்றி போட்ட தடைகளை நீதியாய் நீக்கி நட்ட ஈடுகளை வெளிப்படையாகச் சொல்லி கட்டி எழுப்பு அமைதியான சமூகத்தை!" "இருஇனம் வாழும் ஒரு நாட்டில் இணக்கம் கண்டு இதயம் பரிமாறி இழிவு படுத்துவதை உணர்ந்து நிறுத்தி இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு இனியாவது மன்னிப்புக்கேள் ஒற்றுமை பிறக்கும்!" "இரண்டாயிரம் ஆண்டுகளாய் வாழும் இனத்தை இந்த நாட்டின் பூர்வீக குடிகளை இதயமற்று நசுக்குவதை உடனே நிறுத்தி இருளாக்கி விடும் அடங்காமையை துறந்து இருகையாலும் அணைத்தால் மலர்வது சமாதானமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]

ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!

1 day 20 hours ago
இங்கு கலிபோர்னியாவில் இரண்டில் ஒரு திருமணம் விவாகரத்தில் முடிகின்றது என்று சொல்கின்றனர். அதை விட விவாகரத்து என்று சட்டப்படி போகாமலேயே 'ஒரு பெற்றோர்' தலைமையில் இருக்கும் குடும்பங்களும் மிக அதிகம். இவை இரண்டும் சேர்ந்தால், அது இங்குள்ள ஒரு பால் பெற்றோர்களை விட பல மடங்குகள் அதிகம். இதை வைத்துப் பார்த்தால், இரு பால் திருமணத்தால் குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான, முழு உலகமும் அறிந்து கொள்ளக் கூடிய சூழல் அமைகின்றது என்று எப்படிச் சொல்ல முடியும்? கோவில் கட்டுவதற்கு என்று ஆகம விதிகள் இருக்கின்றன. அன்றிலிருந்தே இருக்கின்றன. கோவில் என்றால் என்ன, ஏன் கோவில் வேண்டும் என்றும் எழுதப்பட்டு இருக்கின்றன. இந்த என்றோ எழுதப்பட்ட விதிகளை மீறி யாரோ சிலர் அவர்களின் சுய விருப்பத்தில் ஒன்றைக் கட்டி, ஒரு கடவுளை உருவாக்கி வழிபடுகின்றனர் என்று வைப்போம். அதை அவர்கள் தங்கள் கோவில் என்றும் சொல்கின்றனர். 'நீங்கள் உங்கள் சுய விருப்பில் செய்வதற்கு இங்கு தடையில்லை, ஆனால் இதை நீங்கள் கோவில் என்று சொல்லக் கூடாது, கோவில் என்றால் விதிகள் வேறு, வழிகள் வேறு. வேணும் என்றால் உங்களின் இடத்தை 'கும்பிடும் இடம்' என்று சொல்லிக் கொள்ளுங்கள்' என்று மற்றயோர் சொல்வது சரியா?

தமிழ்ப் பொதுவேட்பாளரால் சமஷ்டிக்குப் பாதிப்பில்லை! - விக்னேஸ்வரன் விளக்கம்

1 day 21 hours ago
சமஷ்டி நோக்கி பயணிக்கவே பொதுவேட்பாளர்; தமிழர்களின் நலன்களை விற்கவேண்டாமென சுமந்திரனிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை! 15 JUN, 2024 | 10:33 AM நமது நிருபர் எமது நிலையை இன்னும் ஸ்திரப்படுத்தி எம்மை சமஷ்டியை நோக்கி எடுத்துச் செல்ல வல்லதே தமிழ் பொது வேட்பாளர் என்ற பதவிநிலை என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கேள்வி பதில் நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவரிடத்தில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்த வேண்டும் என்று நீங்கள் கூறிவருவது ஏன்? அதனால் ஏற்படும் நன்மைகள் யாவை? ஏன் அதைச் சிலர் எதிர்க்கின்றார்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அவ்வினாவிற்கு அவர் அளித்துள்ள பதிலில், தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை முன்நிறுத்த வேண்டும் என்று ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் 2011 அளவில் இருந்து கூறி வந்தவர் ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்கள். அக்கோரிக்கை அப்பொழுது தமிழ் மக்களால் ஆழமாகச் சிந்திக்கப்படவில்லை. நண்பர் சிவாஜிலிங்கம் அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் நின்றிருந்தாலும் தமிழ் மக்களின் ஒரு பிரதிநிதியாக தமிழ் மக்களால் அரங்கேற்றப்படவில்லை. ஆனால் 2009இன் பின்னரான வடகிழக்கு அரசியற் களம், மத்திய அரசாங்கம் வடகிழக்கு தமிழ் மக்கள் விடயத்தில் நடந்து கொண்டுவந்த விதம், நாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டுவரப்பட்ட விதம், முதலமைச்சராக நான் பெற்றுக்கொண்ட அனுபவம், இவையாவும் என்னைச் சிந்திக்க வைத்தன. உதாரணத்திற்கு 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் அவரின் அழைப்பின் பேரில் சுமந்திரன் அவர்களும் முதலமைச்சராக அப்போதிருந்த நானும் சந்தித்தோம். எமது மாகாணசபை சார்பான நடைமுறைக் கோரிக்கைகள் யாவை என்று அவர் கேட்டிருந்தார். நாம் அவற்றை எழுத்தில் இட்டு அவரிடம் கையளித்தோம். சுமார் பத்து பன்னிரண்டு விடயங்களைக் கோரியிருந்தோம். எல்லாவற்றையும் பரிசீலித்துப் பார்த்து எமக்கு அவற்றை நாம் கோரியவாறு நல்குவதாக அவரும் அவரின் செயலாளரான லலித்வீரதுங்கவிடம் பொறுப்பெடுத்தனர். நாமும் மகிழ்வுடன் விடைபெற்றுக் கொண்டோம். ஆனால் நாம் கோரிய எதுவும் வழங்கப்படவில்லை. உதாரணத்திற்கு அப்போதிருந்த சிங்கள இராணுவ ஆளுநரை மாற்றி ஒரு தமிழ்ப் பேசும் சிவில் சமூக பிரமுகரை அந்த இடத்திற்கு நியமிக்கும்படி கோரியிருந்தோம். அப்போதிருந்தவரின் காலம் ஜூலை மாதம் வரை நீடிக்கும் என்றும் அதன் பின்னர் எமது கோரிக்கை கட்டாயமாக நிறைவேற்றப்படும் என்றும் கூறியிருந்தார். நாம் ஜூலை வரை காத்திருந்தோம். திரும்பவும் அதே இராணுவ அலுவலரை ஜனாதிபதி மஹிந்த ஆளுநராக நியமித்தார். இவ்வாறு எமது கோரிக்கைகளுக்கு நேர்மாறாகவே மத்திய அரசாங்கம் நடந்து வந்து கொண்டிருப்பதை அவதானித்தேன். இந்நாட்டில் ஒரு இனவழியாட்சி நடைபெற்று வருவதை நான் அவதானித்தேன். இந்நிலையில், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னிறுத்தும், மற்றும் வெளிக் கொண்டுவரும் ஒரு களமாக தமிழ் பொது வேட்பாளர் நிலையை நாம் மாற்றலாம். முக்கியமாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமது மக்கள் தீர்ப்பை சர்வதேச வழி நடத்தல் ஊடாகப்பெற எத்தனிக்கின்றார்கள் என்ற கருத்தை ஊரறிய நாடறிய உலகறிய பறை சாற்ற தமிழ் பொது வேட்பாளர் உதவி புரிவார். வடகிழக்கு தமிழ் மக்களின் மனோநிலை என்ன என்பதை வெளிக் கொண்டு வர மக்கள் தீர்ப்பானது உதவும். அதனை சர்வதேசம் நடத்த வேண்டும் என்ற கருத்தை வெளிக் கொண்டுவர தமிழ் பொது வேட்பாளர் உதவுவார். அவருக்குத் தமிழ் மக்கள் பெருவாரியாக வாக்களிப்பதன் மூலம் ஜனாதிபதித் தேர்தலை எம்சார்பில் திசை மாற்றலாம். சிங்கள வேட்பாளர்கள் எவ்வெந்தக் கருத்துக்களை மக்கள் முன்வைத்தாலும் தமிழ் மக்களின் கருத்துக்கள், அபிலாசைகள், குறிக்கோள்கள், எதிர்பார்ப்புக்கள் இவை தான் என்ற கொள்கை விளக்க அறிவிப்பை உலகறியச் செய்யலாம். எமது கொள்கை விளக்க உரைகள் தமிழ் மக்கள் பரந்து வாழும் நாடுகளில் எல்லாம் ஒளி, ஒலி மூலமாக எதிரொலிக்கும். வடகிழக்கினுள் சிறைபட்டிருக்கும் எமது சிந்தனைகள் உலகெங்கிலும் சிதறடித்துப் பறக்க தமிழ் பொது வேட்பாளர் உதவி புரிவார். தமிழ் பொது வேட்பாளர் தேர்தலில் வெல்ல போட்டியில் கலந்து கொள்ளப் போவதில்லை. போட்டி முடிவு அவருக்கு முக்கியமல்ல. போட்டியில் கலந்து கொண்டு மக்களை ஒன்றிணைப்பதே அவரின் கடமையாகும். இன்னாரை ஒரு பொது வேட்பாளராகத் தமிழர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்ற உண்மையே சிங்கள வேட்பாளர்கள் தமிழர்களுக்கு எது எதனைத் தருவார்கள் என்ற அவர்களின் உள்ளக் கிடக்கைகளை வெளிக் கொண்டு வர உதவும். அவற்றை வைத்துப் பேரம்பேச நாம் முனையக்கூடாது. அவர்களின் இரட்டை வேடம் வெளிக்கொண்டுவரப்படலாம். ஆனால் பொதுவேட்பாளரின் பங்கு யாவர்க்கும் எமது நிலைப்பாட்டையும் எதிர்பார்ப்புக்களையும் இந்தத் தேர்தலைத் தளமாக வைத்துத் தெரியப்படுத்துதலேயாகும். எமக்கு பிரிவினையோ சமஷ்டி கிடைக்கும் வரையில் அல்லது எமது பிரதேசங்கள் பிறிதொரு நாட்டின் ஆட்சிக்குக் கீழ் வரும் வரையில் என்றும் இருக்கும். அப்படி வந்தாலும் நாம் அங்கும் சமஷ்டியையே கேட்போம். பொது வேட்பாளரை நிறுத்துவதால் எமது சமஷ்டி கோரிக்கை அடிபட்டுப் போகும் என்பது சுமந்திரனின் சட்டத்தரணி மூளையில் உதித்திருக்கும் ஒரு கற்பனைப்பிராந்தி. உண்மையில் எமது நிலையை இன்னும் ஸ்திரப்படுத்தி எம்மை சமஷ்டியை நோக்கி எடுத்துச் செல்ல வல்லதே தமிழ் பொது வேட்பாளர் என்ற பதவிநிலை. வட கிழக்கு மக்களின் மக்கள் தீர்ப்பைப் பெற சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும் என்று கோருவது எவ்வாறு சமஷ்டியை கோரிக்கையை வலுவற்றதாக்கும்? நாம் சமஷ்டியைக் கோரி தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தவில்லையே! நாம் எமது குறைகளை, நிலைகளை, நிர்ப்பந்தங்களை அகில உலகிற்கும் எடுத்துரைக்க உள்ளோம். “சமஷ்டியை தா” என்று தமிழ் பொது வேட்பாளர் கேட்கப் போவதாக யார் சுமந்திரனுக்குக் கூறினார்களோ நான் அறியேன். அடுத்து அவர் அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகளே இதனை முன்னெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆலோசனைகளை மட்டும் வழங்கலாம் என்றுள்ளார். ஒரு சமூகத்தின் சமூக சேவையாளர்கள் , செயற்பாட்டாளர்கள் அரசியல்வாதிகளுக்கு வாக்குகள் வழங்கும் மக்களிடையே இருந்து வருகின்றவர்கள். அவர்கள் அன்னியர்கள் அல்ல. சுமந்திரன் மனதிலே ஒரு தப்பபிப்பிராயம் குடிகொண்டுள்ளது. ஒருவர் எப்பாடுபட்டாவது பாராளுமன்ற உறுப்பினராக வந்தால் அதன் பின் மக்களுக்குப் பேச இடமில்லை என்று நினைக்கின்றார். சுமந்திர அக்கருத்துப்படி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வென்றுவிட்டால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு தான் தோன்றித்தனமாய் நடந்து கொள்ளலாம் என்பதேயாகும். இன்று மக்களும் தமிழ் அரசியல்த் தலைவர்களும் சேர்ந்தே பொது தமிழ் வேட்பாளரை முன்நிறுத்த முன் வந்துள்ளார்கள். அதில் எந்தத் தவறும் இல்லை. மத்திய அரசில் பதவி வகிக்கும் ஒருவருக்கு ஒத்திசைக்க எண்ணி தமது மக்களைப் புறக்கணிக்க முன்வருவோரை தமிழ்ச் சமூகம் மன்னிக்காது. மக்கள் சார்பில் இந்த செயற்பாட்டில் ஈடுபடுவதாக இருந்தால் சுமந்திரன் எம்முடன் சேர்ந்து பயணிக்கட்டும். இல்லையேல் ஒதுங்கியிருக்கட்டும். சிங்கள வேட்பாளர்கள் நலன் கருதி தமிழ் மக்களின் நலன்களை விற்காது இருக்குமாறு அன்புடன் அவரைக் கேட்டுக் கொள்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/186108

தெற்காசியாவில் சிறந்த கல்வி முறையை இந்நாட்டில் உருவாக்க வேண்டும்

1 day 21 hours ago
June 15, 2024 10:21 am எதிர்காலத்திற்கு ஏற்ற, தெற்காசியாவின் சிறந்த கல்வி முறையை இந்நாட்டில் உருவாக்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பபட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சிலாபம், கிரிமெட்டியான பௌத்த மகளிர் தேசிய பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் மூன்று மாடிக் கட்டடத்தின் முதற்கட்டக் கட்டடத்தை இன்று (14) பிற்பகல் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இக்கட்டான பொருளாதாரச் சூழலிலும் அரசாங்கம் கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்து வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, கல்வியே நாட்டின் பலம் என்றும் வலியுறுத்தினார். கிரிமெட்டியான பௌத்த மகளிர் தேசிய பாடசாலைக்குச் இன்று பிற்பகல் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மாணவிகளால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது. பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள பௌத்த விகாரைக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி, பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து புதிய கட்டடத்தை மாணவர்களிடம் கையளித்தார். புதிய வகுப்பறைகளை பார்வையிடச் சென்ற ஜனாதிபதி மாணவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார். க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த கல்லூரி மாணவர்களுக்கான பரிசில்களும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது. இந்தப் புதிய கட்டடத்தின் முதற்கட்டப் பணிக்காக ரூ.450 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதி அரசாங்கத்தினாலும் பெற்றோராலும் வழங்கப்பட்டுள்ளது. இக்கட்டடத்தின் நிர்மாணிப் பணிகளை முடித்துத் தருமாறு மாணவிகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு கட்டங்களாக கட்டட நிர்மாணப் பணிகளை நிறைவு செய்யவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நாட்டை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியதுடன், கோஷங்களை எழுப்பி காலத்தைக் கடத்தும் காலம் இதுவல்ல என்றும் வலியுறுத்தினார். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு புதிய பாதையில் செல்ல வேண்டும் எனவும், அதற்குத் தேவையான பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் விரைவான அபிவிருத்தியை ஏற்படுத்த அரசாங்கம் முன்வைக்கும் வேலைத்திட்டத்துடன் அனைவரும் கைகோர்க்க வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மாதம்பை பொருளாதார வலயத்தை மீள ஆரம்பித்து பிரதேசத்தை சுற்றுலா, பொருளாதார மற்றும் தகவல் தொழில்நுட்ப நகரமாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மேலும் இங்குக் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது, கடினமான பொருளாதார சூழ்நிலையிலும், நாட்டின் பிள்ளைகளுக்கு நவீன கல்வியை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. கடந்த கால கல்வி முறைகள் பற்றி தற்போது பேசுவதில் அர்த்தமில்லை. எதிர்காலத்தைப் பார்த்து, தெற்காசியாவில் சிறந்த கல்வி முறையை இந்நாட்டில் உருவாக்க வேண்டும். நமது நாட்டின் பலம் கல்விதான். நம் நாட்டில் எப்பொழுதும் சிறந்த கல்வி முறை உள்ளது. கடந்த காலங்களில் கல்விக்காக இயன்றளவு நிதி ஒதுக்கீடுகளை வழங்கினோம். நான் வங்குரோத்தடைந்த நாட்டையே பொறுப்பேற்றேன். அப்போது அரசியல் கட்சிகள் பிளவுபட்டிருந்தன. எனவே, எங்களில் ஒரு குழு ஒன்று சேர்ந்து அரசாங்கத்தை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு வந்தோம். இப்போது நாம் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். தற்போது நாம் படிப்படியாக பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து முன்னேறி வருகிறோம். சர்வதேச நாணய நிதியம் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, அடுத்த தவணைக்கான பணத்தை வெற்றிகரமாகப் பெற்றுள்ளோம். அத்துடன் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக கடன் வழங்கிய நாடுகளின் குழு அடுத்த வாரம் கூடவுள்ளது. அந்தக் கூட்டத்திற்குப் பிறகு, நாம் வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட முடியும். இரண்டு வருடங்கள் முடிவதற்குள் இந்த நிலையை அடைந்ததையிட்டு நான் பெருமைப்படுகிறேன். அதனால் நாம் திருப்தியடைய முடியாது. சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இரண்டு ஆண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டத்தை 5% ஆகக் குறைக்க வேண்டும், வருமானத்தையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும். அதற்கான வேலைத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் சென்றால்தான் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். கல்வியில் புதிய தொழில்நுட்பத்தை உள்ளீர்ப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். நாட்டை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும். கோஷங்களை எழுப்பி காலம் கடத்த இப்போது நேரமில்லை. அந்த யுகத்திற்கு நாம் திரும்பிச் செல்ல முடியாது. மாதம்பை பொருளாதார வலயத்தை மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளோம். அத்துடன் பிங்கிரிய பிரதேசத்தில் வர்த்தக வலயம் மற்றும் முதலீட்டு வலயத்தை ஆரம்பிப்பதற்காக ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இரணவிலவில் சுற்றுலா வலயமொன்றை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது சுற்றுலாப் பொருளாதாரமும், சந்தைப் பொருளாதாரமும் உருவாகும். தகவல் தொழில்நுட்பக் கல்வியைப் பெற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் மாதம்பையில் தகவல் தொழில்நுட்ப நகரமொன்றை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் கிராமங்களில் நவீன விவசாயம் அறிமுகப்படுத்தப்படுவதோடு, இளையோருக்கு அதற்கு அவசியமான பயிற்சி பெற்றுக் கொடுக்கப்படும். அதேபோல் மீன்பிடித்துறை வளர்ச்சியை மையப்படுத்தி இப்பகுதியில் புதிய பொருளாதாரத்தைக் கட்டமைக்க வேண்டும். 1977 ஆம் ஆண்டு கம்பஹாவிற்கு புதிய பொருளாதாரத்தை வழங்கினோம். இப்போது இப்பகுதியிலும் அதற்குரிய திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்க்கிறோம். அதனால் சிலாபம் – குளியாபிட்டிய வரையான பகுதியில் பெரும் அபிவிருத்தி ஏற்படும். நாட்டை அபிவிருத்தி செய்ய, நாம் புதிய பாதையில் செல்ல வேண்டும். பொருளாதார மாற்றத்தின் ஊடாக, நாட்டில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கிலேயே பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தை சமர்பித்திருக்கிறோம். அதனால் அரசியல் சாராமல் அதற்கு சகலரும் ஆதரவளிக்க வேண்டும். வழக்கமான அரசியலை இந்த நேரத்தில் செய்ய முடியாது. எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், இந்நாட்டு பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக இந்தக் கொள்கைகளை செயல்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, தொழில்நுட்பப் பாடத்துக்கான ஆய்வகத்தை பெற்றுகொடுப்பதற்கான அமைச்சரவை அனுமதி அடுத்த வாரத்திற்குள் கிடைக்குமென இப்பாடசாலை அதிபருக்கு உறுதியளித்தேன். தொழில்நுட்ப ஆய்வகங்களை எவ்வாறு பெறுவது என்பது குறித்த கேள்வி உள்ளது. இருப்பினும், நாத்தாண்டிய தம்மிசர வித்தியாலயத்தில் அதற்கான நடைமுறைப் பரீட்சைகளை மேற்கொள்ள முடியும். அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அதற்காக ஆசிரியர்களை நியமிக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். முழு மாகாணத்தினதும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நாம் எதிர்பார்க்கிறோம். 300 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலையில் இன்றளவில் 3000 மாணவர்கள் உள்ளனர். கல்வியற் கல்லூரிகள், தேசிய கல்வி நிறுவனம் என்பவற்றை தோற்றுவித்த தற்போதைய ஜனாதிபதி, கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் நாட்டின் கல்விக்காக அளப்பரிய சேவை ஆற்றியுள்ளார். புதிய கல்வி முறையில் கீழ் எந்தவொரு மாணவரையும் சாதாரண தரம் தேர்ச்சி பெறாதவர்கள் என்று அறிவிக்காமல், மாணவர்களின் எதிர்காலத்துக்கு தேவையான அறிவைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கிறோம். கரும்பலகைக்கு மாறாக டிஜிட்டல் திரைகளை வழங்குவது நவீன கல்வி முறையாக அமையாது. அதற்கு அப்பாலான வேலைத்திட்டம் எம்மிடத்தில் உள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துடன் கல்வியை பலப்படுத்துவோம். அதற்காக ஆசியிரியர்களை பயிற்றுவிக்கத் தற்போதே ஆரம்பித்திருக்கிறோம். தேசிய பாடசாலைகள் மற்றும் சர்வதேச பாடசாலைகளிலும் இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்விக்கான தனியானதொரு பல்கலைக்கழகமும் ஆரம்பிக்கப்படும். அதனால் கல்வியை சர்வதேச மயப்படுத்த முடியும். உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த, புத்தளத்தின் ஒரேயொரு பௌத்த பாடசாலையான பாலிகா தேசிய கல்லூரிக்கு பற்றாக்குறையாக காணப்பட்ட கட்டடத்தை நிர்மாணித்துக் தந்தமைக்காக நன்றி தெரிவிக்கிறேன். மக்கள் பிரதிநிதி என்ற வகையில் இந்த பாடசாலைக்கு உதவ முடிந்துள்ளது. நாடு நெருக்கடி நிலையை எதிர்கொண்டபோது அதிலிருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தப்பியோடவில்லை. அவநம்பிக்கையுடன் இருந்த மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார். அதற்காக புத்தளம் மக்கள் சார்பில் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறோம். அன்று கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட தீர்மானங்கள் இன்றும் நாட்டின் கல்வியை பலப்படுத்த சாதகமான காரணமாக மாறியுள்ளது. அதனால் தற்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் தொடர்ச்சியாகக் கொண்டுச் செல்லப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. அந்த வேலைத்திட்டத்தை கைவிட்டால் மீண்டும் நெருக்கடிக்குள் சிக்கிக்கொள்ள நேரிடும். https://tamil.adaderana.lk/news.php?nid=188801

யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்

1 day 21 hours ago
இந்த‌ ஜ‌ரோப்பா க‌ப்புக்கு தெரிவான‌ ஜேர்ம‌ன் வீர‌ர் திற‌மையான‌ வீர‌ர்க‌ள் ப‌ழைய‌ வீர‌ர்க‌ளை வீட்டுக்கு அனுப்பியாச்சு.....................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024

1 day 21 hours ago
ம‌ழையால் விளையாட்டு ந‌டை பெற‌ வில்லை....................இங்லாந்த் விளையாட்டும் ம‌ழையால் கை விட‌ ப‌ட்டால் ஸ்கொட்லாந் சூப்ப‌ர் 8க்கு போய் விடும்.......................

எழுத்தாளர் அருந்ததி ராய் மீது யு.ஏ.பி.ஏ வழக்கு - டெல்லி துணைநிலை ஆளுநர் ஒப்புதல் - பின்னணி என்ன?

1 day 21 hours ago
அருந்ததி ராய் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு! 15 JUN, 2024 | 12:30 PM டெல்லியில் கடந்த 2010-ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாடு ஒன்றில், ‘அமைதியைச் சீர்குலைக்கும் வகையில்’ பேசியதாக, அருந்ததி ராய் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2010-இல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியதற்காக எழுத்தாளா் அருந்ததி ராய், முன்னாள் பேராசிரியா் ஷேக் செளகத் ஹுசைன் ஆகியோா் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (யுஏபிஏ) விசாரணையைத் தொடங்க துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். டெல்லியில் உள்ள எல்டிஜி அரங்கத்தில் கடந்த 2010, அக். 21-இல் ‘ஆசாதி-தி ஒன்லி வே’ என்ற பெயரில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அருந்ததி ராய், காஷ்மீா் மத்திய பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் ஷேக் செளகத் ஹுசைன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்தியாவிலிருந்து காஷ்மீரை பிரிப்பதை மையமாகக் கொண்டு இந்தக் கூட்டத்தில் விவாதங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது தொடா்பாக காஷ்மீரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சுஷில் பண்டிட், டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்ய 2010, நவ.27-இல் உத்தரவிட்ட நீதிமன்றம், அந்த மனுவை ரத்து செய்தது. இதையடுத்து அந்தக் கூட்டம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அருந்ததி ராய், ஷேக் செளகத் ஹுசைன் ஆகியோரை யுஏபிஏ சட்டித்தின்கீழ் விசாரிக்க துணைநிலை ஆளுநா் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா். முன்னதாக, இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் அவா்களுக்கு எதிராக விசாரணையை நடத்த துணைநிலை ஆளுநா் கடந்த ஆண்டு அக்டோபரில் ஒப்புதல் தெரிவித்திருந்தாா். https://www.virakesari.lk/article/186128

குட்டிக் கதைகள்.

1 day 21 hours ago
🤣........... அமெரிக்காவால் வழங்கப்படும் H1-B விசாவிற்கு இது சரியாக பொருந்துகின்றது. இது அமெரிக்காவால் சில வேலைகளுக்காக அதில் சிறப்பு தேர்ச்சி உள்ள வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக வேலை விசா. மூன்று வருடங்கங்களுக்கு வழங்கப்படும், பின்னர் இன்னும் ஒரு மூன்று வருடங்களுக்கு நீட்டிக் கொள்ளலாம். எந்த வேலைக்காக வழங்கப்பட்டதோ அந்த வேலையை மட்டுமே செய்யலாம் என்பது இதில் உள்ள நிபந்தனை. ஆனால் எங்கேயாவது, எதையாவது படித்து விட்டு இந்த விசாவில் வந்த மிக அதிகமானோர் கணினி துறையில் வேலை செய்தனர். அமெரிக்க அரசும் இதை கண்டும் காணாமல் விட்டுவிட்டது. பின்னர் ட்ரம்ப் அதிபரானார்.......... படிப்பிற்கும், தேர்ச்சிக்கும், தொழிலுக்கும் சம்பந்தம் இல்லாதவர்களின் விசாக்கள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டன. ஆகப் பகிடி என்னவென்றால், இந்தியா போய் திரும்பி வந்து கொண்டிருந்த சிலரை அதிகாரிகள் இங்கு விமான நிலையத்தில் வைத்து வேலைக்கான நேர்முகத் தேர்வில் கேட்கும் சில டெக்னிகல் கேள்விகளைக் கேட்டது தான்........🤣.

ஒரு மில்லியன் அமெரிக்கா டொலருடன் 3 பேர் கைது!

1 day 21 hours ago
June 14, 2024 01:10 pm கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் மூன்று பேர் நேற்று (13) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நாணயத்தாள் மற்றும் அதனை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கான ஆவணங்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நேற்று இரவு 8.00 மணியளவில் உந்துருளியில் பயணித்த இருவரை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக வைத்து பொலிஸார் சோதனையிட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த அமெரிக்க நாணயத்தாளை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுப்பட்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் தடயப்பொருட்கள் அனைத்தும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://tamil.adaderana.lk/news.php?nid=188767 அமெரிக்க டொலரின் ஆகக்கூடிய பெறுமதி 100டொடலர் தானே?! இதென்ன புதுப்புரளியா இருக்கு!

ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!

1 day 21 hours ago
கவர்ச்சிகரமான "தியரி"! முகட்டைப் பார்த்து யோசித்தால் அல்லது காலையில் ரொய்லெற்றில் இருக்கும் வேளைகளில் இது போன்ற தியரிகள் சிலருக்கு (எனக்கல்ல!) உதிக்கலாம்😂 ஆனால், இப்படியான தியரிகளை உண்மை போல பொது இடங்களில் பரப்ப முதல், இதைப் பற்றி ஆய்வுகள் நடந்திருக்கின்றனவா என்று தேடிப் பார்க்க வேண்டும். ஆய்ந்திருக்கிறார்களா? ஆம், 34 ஆய்வுகள், அந்த 34 ஆய்வுகளை systematic review இனால் மீள ஆராயும் போது கிடைக்கும் பதில்: ஓர் பால் பெற்றோரின் பிள்ளைகள் சில விடயங்களில் எதிர்ப்பாலின பெற்றோரின் பிள்ளைகளை விட சிறப்பாக இருக்கிறார்கள். மற்ற படி மன நிலைகளில் எதிர்ப்பாலின பெற்றோரின் பிள்ளைகளை விட வேறுபாடுகள் இல்லை. இதன் சாதாரண மொழி இணைப்புக் கீழே: https://www.forbes.com/sites/roberthart/2023/03/06/kids-raised-by-same-sex-parents-fare-same-as-or-better-than-kids-of-straight-couples-research-finds/ இனி என்ன சொல்லப் போகிறீர்கள்? "liberal intelligentsia ஷதி தான் இந்த ஆய்வு" என்று புது தியரியோடு வருவீர்களா😎?

தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் பலி : மன்னார் முருங்கன் பூவரசங்குளம் பகுதியில் சம்பவம்

1 day 21 hours ago
தாத்தா செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி பேத்தி பலி! தாத்தா செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி 8 வயதுடைய பேத்தி உயிரிழந்த சம்பவம் நேற்று (13) இரவு 7 மணியளவில் மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் உள்ள விவசாயியான ஒருவர் தனது வயலில் உழவு இயந்திரத்தின் ஊடாக உழுது கொண்டிருந்தார். இதன் போது உழவு இயந்திரத்தின் மக்காட் பகுதியில் அமர்ந்து கொண்டிருந்த அவரது 8 வயதுடைய பேத்தி திடீரென கீழே விழுந்த நிலையில் உழவு இயந்திரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமியின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். -மன்னார் நிருபர் லெம்பட்- https://tamil.adaderana.lk/news.php?nid=188762

போர் நிறுத்தத்திற்கு தயார் : உக்ரேனுக்கு நிபந்தனைகளை விதித்த புடின்!

1 day 21 hours ago
போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதின் நிபந்தனை - யுக்ரேன் என்ன சொல்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளார். முதலில், யுக்ரேன் தனது படைகளை டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரீஷியா ஆகியவற்றிலிருந்து திரும்பப் பெற வேண்டும். இரண்டாவதாக, யுக்ரேன் நேட்டோவில் சேரக் கூடாது. 90 நாடுகளின் பிரதிநிதிகள் சனிக்கிழமை சுவிட்சர்லாந்தில் சந்திக்கவிருக்கும் நேரத்தில், யுக்ரேனுடன் போர் நிறுத்தம் செய்வதற்கான புதினின் நிபந்தனைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. யுக்ரேன் அமைதிக்கான பாதை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. இதற்கு ரஷ்யாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இருப்பினும், யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இதில் பங்கேற்க உள்ளார். படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பட மூலாதாரம்,GETTY IMAGES புதினின் நிபந்தனைகள் என்ன? ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் தலைவர்களுடனான சந்திப்பில், "யுக்ரேன் தனது படைகளை டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரீஷியா ஆகியவற்றிலிருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தவுடன், ரஷ்ய ராணுவம் அங்கிருந்து பின்வாங்கத் தொடங்கும்," என்று புதின் கூறினார். இந்தப் பகுதிகளில் இருந்து யுக்ரேன் தனது படைகளை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று புதின் வலியுறுத்தினார். இருப்பினும், இங்கு ரஷ்ய ராணுவத்தின் ஆக்கிரமிப்பு ஓரளவு மட்டுமே உள்ளது என்பதும் உண்மை. நேட்டோவில் இணையும் திட்டத்தை யுக்ரேன் முழுமையாகக் கைவிட வேண்டும் என்றும் புதின் தெரிவித்துள்ளார். “யுக்ரேன் அதன் நடுநிலை, அணிசேரா மற்றும் அணுசக்தி இல்லாத நிலையை மீண்டும் பெற வேண்டும். ரஷ்ய மொழி பேசுபவர்களின் உரிமைகளை யுக்ரேன் பாதுகாக்க வேண்டும். நாசிசத்தைக் கைவிட்டு ராணுவமயமாக்கலில் இருந்து பின்வாங்க வேண்டும்,” என்று புதின் கூறியுள்ளார். யுக்ரேன் அதன் எல்லைகள் (நிலம்) தொடர்பான புதிய யதார்த்த உண்மைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். இந்த நிபந்தனைகளைக் குறிப்பிட்டு, ரஷ்யா-யுக்ரேன் போருக்கான அமைதி ஒப்பந்தம் சர்வதேச உடன்படிக்கைகளில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் புதின் கூறினார். மேலும், ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்து தடைகளையும் நீக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். எல்லாம் சரியாக நடந்தால், யுக்ரேன் ராணுவம் வெளியேற பாதுகாப்பான வழியை வழங்குவதாக ரஷ்ய அதிபர் உறுதியளித்தார். புதினின் விதிமுறைகள் எவ்வளவு நம்பகமானவை? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (கோப்பு படம்) யுக்ரேன் ஏற்பாடு செய்துள்ள அமைதி மாநாட்டிற்கு ஒருநாள் முன்னதாகவே போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நிபந்தனைகளை புதின் முன்வைத்துள்ளார். இந்த அமைதி மாநாடு சுவிட்சர்லாந்தின் பெர்கன்ஸ்டாக்கில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த அமைதி மாநாட்டில் 92 நாடுகள் மற்றும் 8 அமைப்புகளைச் சேர்ந்த 100 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், ரஷ்ய பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை. சீனா, பிரேசில் மற்றும் சௌதி அரேபியாவின் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்க மறுத்துவிட்டனர். இந்த மாநாட்டில் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடைபெறும். இதன் முடிவில் யுக்ரேனிய அமைதி உடன்படிக்கையின் மூன்று முக்கிய விவகாரங்களுடன் இணைக்கப்பட்ட ஒரு அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உணவுப் பாதுகாப்பு, அணுக் கதிர்வீச்சு பாதுகாப்பு, மனிதாபிமானப் பிரச்னைகளுடன் இந்த மூன்று விவகாரங்களும் தொடர்புடையதாக இருக்கும். குழந்தைகள் உட்பட சிறைப்படுத்தப்பட்ட அனைத்து யுக்ரேனியர்கள் மற்றும் யுக்ரேனிய கைதிகளின் விடுதலையும் இதில் அடங்கும். மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் மத்தியஸ்தர்கள் மூலம் ரஷ்யாவுக்கு தெரிவிக்கப்படும். மாநாட்டின் திட்டத்தின் படி, இந்த மத்தியஸ்தர்கள் பின்னர் ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையே மத்தியஸ்தம் செய்வார்கள். இதற்கு முன்னரும் இதுபோன்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. உதாரணமாக, யுக்ரேனில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் வகையில் 'கிரெய்ன் காரிடார்' (Grain corridor) உருவாக்கப்பட்டது. எவ்வாறாயினும், போரை நிறுத்துவது தொடர்பான புதினின் அறிக்கை அமைதி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா இல்லையா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. யுக்ரேன் அதிபர் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, புதினின் போர்நிறுத்த முன்மொழிவு ஒரு இறுதி எச்சரிக்கை போலத் தெரிகிறது என்றும், இதை நம்ப முடியாது என்றும் கூறியுள்ளார். போர்நிறுத்தம் தொடர்பான அவரது நிபந்தனைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும் புதின் ராணுவத் தாக்குதலை நிறுத்த மாட்டார் என்று ஜெலென்ஸ்கி கூறினார். புதினின் இந்தச் செய்திகள், ஹிட்லர் கூறிய செய்திகள் போல உள்ளன என்று அவர் கூறினார். " 'செக்கோஸ்லோவாக்கியாவின் ஒரு பகுதியை எனக்குக் கொடுங்கள், நான் போரை முடித்துக் கொள்கிறேன்' என்று ஹிட்லர் கூறினார். அது முழுப் பொய். அதற்குப் பிறகு போலந்தின் ஒரு பகுதியை ஹிட்லர் கேட்டார். ஆனால் அதற்குப் பிறகும் கூட, ஐரோப்பா முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் ஹிட்லர்," எனக் கூறினார் ஜெலென்ஸ்கி. யுக்ரேன் மற்றும் நேட்டோ நாடுகளின் நிலைப்பாடு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் (கோப்பு படம்) இதற்கு முன்பும் புதின் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்டுள்ளார் என்பதுதான் உண்மை. புதினின் சமீபத்திய அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை. யுக்ரேன் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையிலும் அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, புதினின் அறிவிப்பு வெளிவந்துள்ள தருவாவையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அமைச்சகத்தின் கூற்றுப்படி, "சுவிட்சர்லாந்தில் அமைதி உச்சிமாநாட்டிற்கு முன்பு இதுபோன்ற சமிக்ஞைகளை வழங்குவதற்குப் பின்னால் புதினுக்கு ஒரே ஒரு குறிக்கோள் உள்ளது. இந்த உச்சிமாநாட்டில் தலைவர்களையும் உலகெங்கிலும் உள்ள நாடுகளையும் பங்கேற்பதைத் தடுப்பது. உச்சிமாநாட்டிற்கு ஒரு நாள் முன்னதாக புதினின் அறிக்கைகள் வந்திருப்பது ரஷ்யா உண்மையான அமைதி நடவடிக்கைக்கு அஞ்சுகிறது என்பதைக் காட்டுகிறது." யுக்ரேன் அதிபரின் அலுவலகத்தின் தலைமை ஆலோசகர் மிகைல் பொடோல்யோக், ரஷ்ய அதிபர் முன்வைத்த நிபந்தனைகளை 'வழக்கமானவை' என்று விவரித்தார். "அந்த நிபந்தனைகளின் உள்ளடக்கம், சர்வதேசச் சட்டத்தை மீறக்கூடியதாகவும், நிலைமையின் யதார்த்தத்தை மதிப்பிடுவதற்கு ரஷ்ய தலைமையின் இயலாமையை காட்டுவதாகவும் உள்ளது," என்று மிகைல் கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க். மேற்கத்திய நாடுகளின் விமர்சனம் யுக்ரேனின் மேற்கத்திய நட்பு நாடுகள் புதினின் இந்தத் திட்டத்தை விமர்சித்துள்ளன. நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறுகையில், "யுக்ரேன் மண்ணில் இருந்து யுக்ரேன் தனது படைகளை திரும்பப் பெறத் தேவையில்லை, ஆனால் ரஷ்யா தனது படைகளை யுக்ரேன் மண்ணில் இருந்து திரும்பப் பெற வேண்டும்," என்றார். அவர் புதினின் கோரிக்கைகளை 'அமைதி முன்மொழிவு' என்பதற்கு பதிலாக, 'அதிக ஆக்ரோஷம் மற்றும் அதிக ஆக்கிரமிப்புக்கான முன்மொழிவு' என்று குறிப்பிட்டார். "ரஷ்யாவின் இலக்கு யுக்ரேனைக் கட்டுப்படுத்துவதே என்பதை இது காட்டுகிறது. இந்தப் போரின் தொடக்கத்தில் இருந்தே இது ரஷ்யாவின் இலக்காகும். இது சர்வதேசச் சட்டத்தை கடுமையாக மீறுவதாகும். அதனால்தான் நேட்டோ நாடுகள் யுக்ரேனை ஆதரிக்க வேண்டும்," என்றார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், போரை நிறுத்துமாறு யுக்ரேனிடம் கேட்க முடியாத நிலையில் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் ஆஸ்டின் பேசுகையில், "அமைதியை அடைய யுக்ரேன் என்ன செய்ய வேண்டும் என்று புதின் கூற முடியாது. புதின் விரும்பினால் இன்றே போரை முடித்துக் கொள்ளலாம்," என்றார். https://www.bbc.com/tamil/articles/c2ll2vkd9w9o

ஓய்வை அறிவித்தார் டிரென்ட் போல்ட்

1 day 21 hours ago
T20 போட்டிக்கு மத்தியில் விசேட அறிப்பை வௌியிட்ட பிரபல வீரர்! இதுவே தனது இறுதி இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி என நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட், அறிவித்துள்ளார். தற்போது 34 வயதாகும் போல்ட், உகாண்டாவுக்கு எதிரான போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார். "இது எனது கடைசி டி20 உலகக் கிண்ண போட்டி..." என்று போல்ட் கூறினார். இதன்படி, திங்கட்கிழமை பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான போட்டி அவரது கடைசி இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியாகும். இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைய நியூசிலாந்து அணி தவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=188820

பௌத்த வினாவல் - ஹென்றி ஸ்டீல் ஆல்காட்

1 day 21 hours ago
ஆல்காட் இலங்கையில் கட்டிய 36 கல்லூரிகளும் விழலுக்கு இறைத்த நீர் போலாயின.......அங்கு ஆள்பவர்களும் சரி பிக்குகளும் சரி 149, 150, 151 வகையறாக்களுக்குள்தான் வருகின்றனர்...... ! 😢

யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்

1 day 21 hours ago
பையா அவசரப்பட்டு சொல்லிப்போட்டு பிறகு இருந்து புலம்பக் கூடாது........இன்னும் கொஞ்ச விளையாட்டைப் பார்த்து விட்டு சொல்லலாம் என்ன .......! 😁

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் யாழ் விஜயம்!

1 day 21 hours ago
எதிர்க்கட்சித் தலைவரின் யாழ் விஜயம்! விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சஜித் இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்களை அடிப்படையாக கொண்டு தாம் யாழ் மக்களுக்கு பொருட்களை வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மாறாக சிறிலங்காவின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பூர்த்தி செய்யும் வகையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் வைத்தியசாலைகளுக்கும் தமது கட்சி அத்தியாவசிய பொருட்களை வழங்குவது தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் பின்னணியிலேயே, யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார். இலங்கை தேர்தல் சிறிலங்காவின் அரசியலமைப்பில் இரண்டு வகையான அடிப்படை உரிமைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை அரசியல் மற்றும் குடிசார் உரிமைகளாக பெயரிடப்பட்டுள்ளன. இவை மாற்றியமைக்கப்பட வேண்டும். பொருளாதார, சமூக, சமய, கல்வி, கலாச்சாரம் உள்ளிட்ட மேலும் பல அடிப்படை உரிமைகளாக பெயரிடப்பட வேண்டும். இந்த நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியும். இந்த பின்னணியில், நான் வீணாக பாடசாலைகளுக்கும் வைத்தியசாலைகளுக்கும் உதவிகளை வழங்கவில்லை. கல்வி மற்றும் மருத்துவம் எனும் மக்களின் அடிப்படை உரிமைகளை பூர்த்தி செய்யும் வகையில் நான் குறித்த பொருட்களை வழங்கி வருகிறேன். தேர்தல்களை அடிப்படையாக கொண்டு நான் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை. கடந்த 2021 ஆம் ஆண்டு நான் பொருட்களை மக்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தேன். அந்த ஆண்டு இலங்கையில் எந்தவொரு தேர்தலும் நடைபெறவில்லை. அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நான் கொண்டுள்ளேன். இன-மத வேறுபாடுகள் அவை வெறும் பலகைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. நான் இங்கு தொழிற்சாலைகளை திறந்து வைப்பேன். வேலைவாய்ப்புக்களுடன் இந்த தொழிற்சாலைகள் திறந்து கொடுக்கப்படும். தொழிற்சாலைகளின் பெயர் பலகைகளை மாத்திரம் நான் திறந்து வைக்க மாட்டேன். அத்துடன், 13 ஆவது திருத்தம் நேற்று அல்லது இன்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டதல்ல. பல வருடங்களாக இந்த திருத்தம் தொடர்பில் பேசப்படுகிறது. எமது சட்டபுத்தகங்கத்தில் இந்த திருத்தம் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் குறித்த திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏன் இவ்வளவு சிக்கல்? இலங்கையில் உள்ள மக்களுக்கிடையில் காணப்படும் இன-மத வேறுபாடுகளே இதற்கு காரணம். இந்த நிலை மாற வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மதங்களையும் இனங்களையும் தாண்டி, இலங்கையர்களாக நாம் முன்னோக்கி பயணிக்க வேண்டும். மாறாக புதிய சட்டங்களையும் அறிமுகப்படுத்துவதன் மூலமும் அரசியலமைப்பின் திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் நாட்டில் எந்தவொரு மாற்றத்தையும் செய்ய முடியாது. எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது. https://ibctamil.com/article/sajith-visit-jaffna-presidential-election-srilanka-1718275721?itm_source=article

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்

1 day 21 hours ago
ஏன் தமிழர் சார்பாக ஒருவரை போட்டியிட வைக்க வேண்டும் என எண்ணுகிறீர்கள்? வெற்றியடைய முடியாது என்று 100க்கு 10000000000%!உறுதி செய்யப்பட்ட ஒரு விடயத்திற்கு ஏற்கனவே அரசியலில் உள்ளவர்கள் போட்டியிடக்கூடாது என்று கூறுவதை, ஒரு MP பதவிக்கான போட்டியில் அல்லது ஒரு உள்ளூராட்சித் தேர்தலில் கூறுவார்களா? 😁

13ஆவது திருத்தத்துக்கு எதிராக ஏன் போர்க்கொடி..! சஜித் கேள்வி

1 day 21 hours ago
தேர்தல் கால பிரச்சாரமாக 13ஆவது திருத்தத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் - நாமல் 15 JUN, 2024 | 06:29 PM (இராஜதுரை ஹஷான்) தேர்தல் கால பிரசாரமாக அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை பயன்படுத்துவதை அரசியல் தரப்பினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஜனநாயக ரீதியில் அரசியல் உரிமையை வழங்கினார் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் இன்று சனிக்கிழமை (15) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வடக்குக்கு சென்று 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாக வாக்குறுதி வழங்குகிறார்கள். முழு நாட்டுக்கும் இடையூறாக இருந்த விடுதலைப்புலிகள் அமைப்பை இல்லாதொழித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை துரிதமாக அபிவிருத்தி செய்தார். அரசியலமைப்பின் பிரகாரம், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டது. தமிழர்கள் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் எமது ஆட்சியில் தான் அபிவிருத்தியடைந்தது. தேர்தல் கால பிரசாரமாக அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை பயன்படுத்துவதை அரசியல் தரப்பினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும். 13ஆவது திருத்தம் பற்றி அனைவரும் பேசுகிறார்கள். ஆனால் காலவரையறையின்றி, பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் பற்றி எவரும் பேசுவதில்லை. மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதால் தமிழர்களின் அரசியல் உரிமை பறிக்கப்பட்டுள்ளது என்பதை தமிழ் அரசியல் தலைமைகள் அறியவில்லையா? மாகாண சபைத் தேர்தலை நடத்தவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தால் கட்சி என்ற ரீதியில் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார். https://www.virakesari.lk/article/186153

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024

1 day 21 hours ago
🤣.... நமக்கு மூஞ்சை, முகம் எது போனாலும் பரவாயில்லை, ஆனால் பக்கத்து வீட்டுக்காரனுக்கு முழுவியலம் கெட்டுப் போக வேண்டும் என்பது ஒரு வழக்கம்......யார் வென்றாலும் வெல்லட்டும், ஆனால் 'அவன்' மட்டும் வெல்லக் கூடாது......🤣 இன்றும் மெல்லிதாக நினைவில் வந்து போகும் ஒரு நிகழ்வு. 92ம் ஆண்டென்று நினைக்கின்றேன். இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான உதைபந்தாட்டப் போட்டி. யாழ் பல்கலைக்கழக அணியை பலத்த கஷ்டங்களிற்கு மத்தியிலும் போட்டியில் பங்குபற்ற தென் பகுதிக்கு அழைத்து வந்திருந்தனர். பேராதெனிய அணியில் ஒரேயொரு சிங்கள மாணவன், மற்றவர்கள் எல்லோரும் தமிழர்கள். அணியின் தலைவர் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர். அணியின் பயிற்சியாளார் தமிழர். அவரது பெயர் ராமன் என்று ஞாபகம். இலங்கை அணி மற்றும் கொழும்பில் Renown அணிக்கு விளையாடியவர். இந்த இரண்டு அணிகளிலும் விளையாடிய சிலர் ஒரே பாடசாலை வகுப்புகளில், ஒரே ஊர்களில், ஒரே வருடங்களில் படித்த நண்பர்கள். எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்தும் இருந்தது. பேராதெனிய மாணவர்கள் மிகவும் கவனம் எடுத்து யாழ் பல்கலை மாணவர்களை பார்த்துக் கொண்டனர். போட்டியில் இரண்டு அணிகளுமே நன்றாக விளையாடினார்கள். அரை இறுதிக்கு இரண்டு அணிகளும் தெரிவாகியதாக ஞாபகம். இங்கே தான் பழைய பழக்கம் தலை தூக்கியது. 'நாங்க வெல்லாட்டியும் பரவாயில்லை, ஆனால் அவங்க வெல்லக் கூடாது.......' என்று ஆரம்பித்து, இரண்டு அணிகளுமே இறுதி ஆட்டத்திற்கு போகவில்லை.......😔
Checked
Mon, 06/17/2024 - 10:19
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed