3 months 2 weeks ago
முப்பத்தியிரண்டு ஆண்டுகளின் பின் கிடைத்த விடுதலையை, சிறை வாசத்தை இன்னொரு சிறப்பு முகாமில் கழித்து தன் வாழ்நாள் இறுதி ஆசை நிறைவேறாமலே இந்த உலகை அயல் மண்ணில், உறவுகளற்ற நிலையில் வாழ்ந்து முடித்துவிட்டார் சாந்தன். தமக்கு விடுதலை கிடைக்காதா, உறவுகளை பார்க்க மாட்டோமாஎனும் ஏக்கத்தோடு காத்து இருப்பவர்களையாவது தங்கள் சொந்த மண்ணில் சொந்த உறவுகளோடு இருக்கும் சொற்ப காலத்தையாவது கழிக்க தமிழக அரசியல்வாதிகள், உறவுகள் முன்வரவேண்டும்.
3 months 2 weeks ago
இப்படி இன்னமும் ஆட்கள் இருக்கிறார்களா? ஓ, தமிழரசுக் கட்சியைச் சொல்கிறீர்களா? உண்மைதான். தீபாவளிக்கும், பொங்கலுக்கும் புதுவருடத்திற்கும் தீர்வு வரப்போவதாகச் சொல்லும் ஆட்கள் தானே??
ஏனோ யாழ்ப்பாணத்தில் நடந்த ஹரிகரன் இசைநிகழ்ச்சியும், சிட்னியில் நடக்கவிருக்கும் அனிருத்தின் இசைநிகழ்ச்சியும் மனதில் வந்து தொலைக்கிறது.
காங்கிரஸ் உதவியுடன் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் தீம்காவே இக்கொலையை நடத்தியதாக நான் உணர்கிறேன். ரஜீவ் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று புலிகளையும், ஒன்றரை இலட்சம் தமிழர்களையும் அழித்த காங்கிரஸ் , இறுதியாக தமிழ்நாட்டுச் சிறையில் இருந்த சாந்தனையும் கொன்றுவிட்டது.
3 months 2 weeks ago
கலிபோர்னியாவில் இருக்கிற யாழ் உறவுகள் அவதானமாக இருங்கோ .இங்கு டொரோண்டோவில் தலைகீழாக ஒரு நாளைக்கு+ 13 மறு நாள் -3 இனி ஒரு வாரத்துக்கு + 8 +9 +11 +7 +7 ...+5
3 months 2 weeks ago
வணக்கம் ரசோ..(தமிழ் பெயர் மாதிரி இல்லையே ) கவி வரிகளோடு வந்திருக்கிறீர்கள் தொடர்ந்து இணைந்து இருங்கள்.
3 months 2 weeks ago
எனது வீடு நியூயோர்க்.இப்போது சன்பிரான்ஸ்சிஸ்கோ கலிபோர்ணியாவில் மகளின் வீட்டில்.
2023 வருடம் பிறக்கும் போது இப்போது பனி கொட்டும் இடத்தில் நின்று ரொம்பவும் அவதிப்பட்டோம்.
அன்றைய பிரயாணம் பற்றி 25 ஆவது அகவையில் எழுதியது.
3 months 2 weeks ago
புலிகளை மக்கள் இன்னமும் மனதில் வைத்திருக்கிறார்கள் என்பதும், ரஜீவ் தனது பாவங்களுக்கான தண்டனையினைப் பெற்றுக்கொண்டார் என்பதும் தான் அந்தச் செய்தி.
3 months 2 weeks ago
என்னுடன் ஒரே வகுப்பில்.
3 months 2 weeks ago
நான் நினைத்தேன்
மிகுதியையும்
ஒரே பிள்ளைகள்
ஒரே கணவன்/மனைவி
என்று தொடருதாக்கும் என.
உங்களுக்கு கவிதைகள் எழுத வரும் போல.
கவிதைக்கென்று தனியாக தலைப்பு உள்ளது.
உங்கள் கவிதைகளை அங்கே கொட்டலாம்.
3 months 2 weeks ago
உங்கள் வேண்டுகோளை முன்னிறுத்தி கருத்துக்கள் எழுதுவதை மட்டுறுத்தி உள்ளேன். எனக்குஇங்கு யாருடனும் கோபமோ மனஸ்தாபமோ இல்லை. சில வேளைகளில் சில தனிப்படட கருத்துக்கள் எம்மையும் எழுத தூண்டுவதால் எழுதுவதுண்டு. எப்படி இருந்தாலும் இனியும் நேரம் கிடைக்கும்போது தேவையான பதிவுகளை இடுவேன். நன்றி வணக்கம்.
3 months 2 weeks ago
வணக்கம் ரசோ.
நம்ம நாட்டில்த் தான் இருக்கிறீர்கள்.
நல்லது. தொடர்ந்தும் எழுதுங்கள்.
3 months 2 weeks ago
நானும் இதைத் தான் எண்ணினேன்.
எனது எண்ணம் தனியே முதலீடு அல்ல.
முதலீட்டுடன் சமாந்தரமாக அரசியலையையும் கொண்டு போகணும்.
தனியே முதலீட்டைப் போட்டு நாட்டை எழுப்பிவிட்டால்கதை கந்தல்.
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
நன்றி nunavilan.
நன்றி suvy.
3 months 2 weeks ago
நன்றி suvy.
விடுமுறை நாட்கள் வேறு ஆகத்தான் இருக்கும், நீங்கள் நினைப்பது போலவே. இது என்னுடைய அனுபவம் என்று மட்டும் இல்லை. இங்கு சுற்றி இருக்கும் எல்லோரையும் பார்த்த பின்னர் மனதில் தோன்றியது.
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
இந்தியாவின் நலன்களும், எமது இலட்சியமும் வேறுவேறானவை, நாம் இந்தியாவின் கைக்கூலிகள் அல்ல - பிரபாகரன்
1984 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியிலேயே தமக்கென்று ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவேண்டும் என்று பிரபாகரன் சிந்திக்கத் தொடங்கினார். சர்வகட்சிக் குழு கூட்டத்தை ஜெயவர்த்தன கூட்டியிருப்பது தனது இராணுவ இயந்திரத்தைப் பலப்படுத்தி தமிழரின் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வொன்றைக் காண்பதற்கே என்று இந்தியா உணர்ந்துகொண்டபோது, 1984 பங்குனியில் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்குவது என்று அது முடிவெடுத்தது. இச்செய்தி கேட்டு மகிழ்வடைந்த புலிகளின் சில போராளிகள் இதனை பிரபாகரனுக்கு அறியத் தந்தார்கள். இதனைக் கவனமாகச் செவிமடுத்த பின்னர் பிரபாகரன் பின்வருமாறு கூறினார், "நாம் வெளியாரிடமிருந்து உடனடியாக ஆயுதங்களை வாங்கத் தொடங்க வேண்டும்".
பிரபாகரனின் கூற்றைக் கேட்டு அச்சரியமடைந்த போராளிகள், "இந்தியா ஆயுதம் தருவதாகக் கூறுகையில் நாம் வெளியாரிடமிருந்து ஆயுதங்களை வாங்கவேண்டிய தேவை என்ன?" என்று வினவினார்கள்.
அதற்குப் பதிலளித்த பிரபாகரன், "இந்தியா எமக்கு ஆயுதங்களைத் தருவதே நம்மைத் தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கத்தான். தனது நோக்கங்களை அடைந்துகொள்வதற்காகவே அது எமக்கு ஆயுதங்களைத் தருகிறது. நாம் இந்தியாவின் கூலிப்படைகளாக இருக்க முடியாது. எமது கால்களில் நாம் நிற்கவேண்டுமானால் எமக்கென்று ஆயுதங்களை வெளியாரிடமிருந்து கொள்வனவு செய்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறினார்.
பின்னைய நாட்களில் போராளிகளுடனான கலந்துரையாடல்களில் தனது கருத்தினை மீளவும் முன்வைத்தார் பிரபாகரன். தமது இலட்சியத்திற்கும் இந்தியாவின் நலன்களுக்கும் இடையே இருக்கும் பாரிய பிணக்கினை அவர் விளங்கப்படுத்தினார். "எமது இலட்சியம் இலங்கைக்குள் தமிழருக்கென்று சுதந்திரமான தனிநாடொன்றினை உருவாக்குவதே" என்று கூறிய அவர், "இந்தியா இதனை ஒருபோதும் ஆதரிக்காது" என்று கூறினார். "இந்தியாவுக்குத் தேவைப்படுவதெல்லாம் இலங்கையை தனது செல்வாக்கு வட்டத்திற்குள் வைத்திருப்பது மட்டும்தான். சிறிமா ஆட்சியில் தற்போது இருந்திருப்பின், தமிழ்ப் போராளிகளுக்கு ஆயுதங்களையோ, பயிற்சிகளையோ தருவதை இந்தியா ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்காது" என்றும் அவர் கூறினார். "இப்போதே ஜெயார் தனது அமெரிக்கச் சார்பு நிலைப்பாட்டிலிருந்து விலகி, அணிசேராக் கொள்கையினைக் கடைப்பிடித்து, இந்தியாவை இப்பிராந்தியத்தின் வல்லரசாக ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறுவாராகில், இந்தியா தமிழ் மக்களின் அவலங்களை ஏறெடுத்தும் பார்க்கப்போவதில்லை" என்றும் அவர் கூறினார்.
"இந்தியாவின் நலன்கள் குறித்து ஜெயாரை அக்கறைகொள்ளவைக்க, தமிழ்ப்போராளிகளூடாக அழுத்தம் கொடுக்க இந்தியா முனைகிறது. இந்த அழுத்தத்தினைக் கொடுப்பதற்குத் தேவையான ஆயுதங்களை மட்டுமே இந்தியா எமக்கு வழங்கவிருக்கிறது. ஆனால், தமிழர் தாயகத்திலிருந்து இராணுவத்தை முற்றாக அகற்றத் தேவையான எந்த ஆயுதங்களையும் இந்தியா ஒருபோதும் எமக்குத் தரப்போவதில்லை. இந்தியா எமக்குத் தரவிரும்பும் ஆயுதங்களை நாம் ஏற்றுக்கொள்வோம், ஆனால், இராணுவத்தை எமது தாயகத்திலிருந்து அகற்றத் தேவையான ஆயுதங்களை நாம் வெளியாரிடமிருந்து பெற்றுக்கொள்வோம்" என்று பிரபாகரன் கூறினார்.
இந்தியாவால் போராளிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் போதுமானவையாக இருக்கவில்லை. எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகக் குறைவான் ஆயுதங்களையே இந்தியா வழங்கியது. அவற்றில் பெரும்பாலானவை மிகப் பழமையானவையாகக் காணப்பட்டன. தனது போரும் சமாதானமும் எனும் புத்தகத்தில் எழுதும்போது அன்டன் பாலசிங்கம் பின்வருமாறு குறிப்பிடுகிறார், "வழங்கப்பட்ட ஆயுதங்கள் குறித்து பிரபாகரன் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருந்தார். வழங்கப்பட்ட ஆயுதங்களில் இருந்த ரைபிள்கள், இயந்திரத் துப்பாக்கிகள், 60 மி.மீ மோட்டார்கள் என்பன மிகவும் பழமையானவை, பாவனைக்கு உதவாதவை. எமக்குத் தேவையான நவீன, திறனுள்ள ஆயுதங்களைத் தருவதை இந்திய அதிகாரிகள் விரும்பவில்லை என்பதை நாம் நன்கு உணர்ந்துகொண்டோம். தமிழ்ப் போராளிகளின் ஆயுத வல்லமை மட்டுப்படுத்தப்பட்டு இருக்கவேண்டும், அவர்களின் போர்வல்லமை ஒரு அளவிற்கு மேல் விருத்தியடையக் கூடாது என்பதற்காக மிகவும் திட்டமிட்ட வகையிலேயே பழமையான ஆயுதங்களை இந்தியா எமக்கு வழங்கியது. நவீன ஆயுதங்களைப் பாவிக்கும், திறனுள்ள போர்ப்படையினைக் கட்டியெழுப்ப விரும்பும் பிரபாகரனுக்கு இந்தியா கொடுத்த ஆயுதங்கள் எவ்விதத்திலும் போதுமானவையாகவோ தரமுள்ளவையாகவோ இருக்கவில்லை" என்று கூறுகிறார்.
தனது அமைப்பிற்குத் தேவையான நவீன ஆயுதங்களை உலகச் சந்தையில் இருந்து கொள்வனவு செய்ய பிரபாகரன் விரும்பினார். ஆனால், அதற்கு அதிகளவு பணம் தேவைப்பட்டது. எம்.ஜி.ஆர் அதற்கான பணத்தினை வழங்கியிருந்தார். அப்பணத்தைக் கொண்டு நவீன ரக ஆயுதங்களை லெபனனின் சட்டவிரோத ஆயுதச் சந்தையிலிருந்து பிரபாகரன் கொள்வனவு செய்தார். இவ்வாறான ஆயுதக் கொள்வனிற்காக இரகசிய ஆயுதக் கொள்வனவு அமைப்பொன்றை உருவாக்கிய பிரபாகரன் அதற்குப் பொறுப்பாக கே.பி என்றழைக்கப்பட்டும் குமரன் பத்மனாதனை நியமித்தார். அவர் இன்றுவரை அப்பணியில் செயற்பட்டு வருகிறார் (2005 இன்படி).
உலகின் அனைத்துச் சட்டவிரோத ஆயுதச் சந்தைகளுக்கும் பயணம் செய்த கே.பி, மலிவான சந்தையென்று தான் கண்டறிந்த லெபனின் ஆயுதச் சந்தையிலிருந்து புலிகளுக்கான ஆயுதங்களை வாங்குவதென்று முடிவெடுத்தார். அவ்வயுதங்கள் மலிவானவை மட்டுமல்லாமல், திறனுள்ளவையாகவும் காணப்பட்டன. இதனையடுத்து கே,பி இன் பெயர், அவரது புனைபெயர்கள், அவரின் மறைவிடங்கள் போன்ற பல விடயங்கள உலகின் பல புலநாய்வு அமைப்புக்களின் கோப்புக்களுக்கு வந்து சேரத் தொடங்கின. அவரிடம் ஒரு இலங்கைக் கடவுச் சீட்டும், இரு இந்தியக் கடவுச் சீட்டுக்களும் காணப்பட்டன. புலிகளுக்கான ஆயுதக் கொள்வனவிற்காக பல கறுப்புச் சந்தைகளுக்கும் அடிக்கடி பயணித்தவர் என்கிற வகையில் கே.பி யின் பெயர் பலவிடங்களில் பிரபலமாகிப் போனது.
புலிகளுக்காக கே.பி முதன் முதலாக கொள்வனவு செய்த ஆயுதக் கொள்கலனில் ஏ.கே - 47 ரக ரைபிள்கள், ஆர்.பி.ஜி க்கள், ஸ்னைப்பர் ரைபிள்கள், வெடிபொருட்கள், இரவு பார்வைக் கருவிகள், தாங்கியெதிர்ப்பு ஆயுதங்கள், நவீன தொலைத் தொடபு உபகரணங்கள் மற்றும் பெருமளவு துப்பாக்கி ரவைகள் போன்றவை இருந்தன. வெளிநாட்டுக் கப்பல் ஒன்றின் மூலம் இவ்வாயுதங்கள் சென்னை துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டன. அக்கொள்கலனை வெளியே எடுத்துவிட புலிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தன. அதுவரை புலிகளுக்கு உதவி வந்த சென்னைச் சுங்க அதிகாரிகள் இம்முறை உதவி செய்ய மறுத்தனர். இதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் உமா மகேஸ்வரனுக்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு கொள்கலன் ஆயுதங்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தமையினால், இக்கொள்கலனை வெளியே விடுவது குறித்து அதிகாரிகள் அஞ்சினர். இறுதியாக, எம்.ஜி.ஆர் இன் தலையீட்டினையடுத்து புலிகளின் கொள்கலன் வெளியே வந்தது. இச்சம்பவம் குறித்த விபரங்களை இனிவரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.
ஆர்.பி.ஜி உந்துகணையுடன் புலிகளின் போராளி ஒருவர்
நான் முன்னர் குறிப்பிட்டது போல, பிரபாகரன் தமிழ்க் கடவுளான முருகன் மீது அதிக பற்று வைத்திருப்பவர். தனது அமைப்பிற்கென்று கொண்டுவரப்பட்ட கொள்கலன் சென்னை சுங்க அதிகாரிகளால் பிரச்சினைகளின்றி விடுவிக்கப்படுமிடத்து பழனி முருகன் ஆலயத்திற்கு வந்து வழிபடுவதாக அவர் வேண்டியிருந்தார். அவ்வாறே, கொள்கலன் புலிகளின் மறைவிடத்தை அடைந்ததும், தான் வேண்டிக்கொண்டவாறு பழனிக்குச் சென்று தனது வேண்டுலை நிறைவேற்றிக்கொண்டார். அந்நாள் முழுதும் உண்ணா நோன்பிருந்து, முருகனை வேண்டிக்கொண்டதுடன், தனது கொள்கலனை வெளியே எடுத்துத் தந்தமைக்காக நன்றியும் கூறினார். மறவாது எம்.ஜி.ஆர் இற்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
பழனி முருகன் ஆலயம்
மூத்த போராளியொருவர் என்னுடன் பேசும்போது, புலிகளின் கொள்கலன் மடக்கப்பட்டபோது எம்.ஜி.ஆர், சுங்க ஆணையாளர் மற்றும் பொலீஸ் டி.ஐ.ஜி ஆகியோருடன் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டார். இதனையடுத்து சுங்க அதிகாரிகள் அக்கொள்கலனை விடுவித்தது மட்டுமன்றி, பொலீஸ் பாதுகாப்புடன் அதனை புலிகளின் இரகசிய மறைவிடத்திற்கு இரவோடு இரவாக எடுத்துச் சென்று இறக்கியதாகவும் கூறினார். கொள்கலன் இருந்த ஆயுதங்கள் முழுவதையும் புலிகளின் மறைவிடத்தில் சேமிக்க முடியவில்லை. மேலதிக ஆயுதங்களை பாலசிங்கத்தின் வீட்டிற்கு எடுத்துச் சென்று மறைத்து வைத்தார்கள். தனது சுதந்திர வேட்கை எனும் புத்தகத்தில் எழுதும் அடேல், "ஒரு கட்டத்தில் நாம் வசித்து வந்த வீட்டின் ஒரு அறை முழுவதும் ஏ.கே - 47 ரைபிள்களும் ஆர்.பி.ஜி க்களும் குவிந்து காணப்பட்டன" என்று குறிப்பிடுகிறார். பின்னர் விரைவாக அவ்வாயுதங்கள் அனைத்தும் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் புலிகளுக்கு இருந்த ஆயுத மறைவிடங்களுக்கு மாற்றப்பட்டன. இதற்கு மேலதிகமாக கற்பாறைகளை உடைக்கப் பயன்படும் வெடிபொருளான ஜெலட்டினை பெருமளவில் தமிழ்நாட்டிலிருந்து புலிகள் கொள்வனவு செய்தனர்.
இயக்கத்திற்குள் கொண்டுவரப்பட்ட பெருமளவு நவீன ஆயுதங்களைக் கொண்டு தனது அமைப்பை மறுசீரமைப்புச் செய்தார் பிரபாகரன். தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கை ஐந்து வலயங்களாக வகுத்து அவை ஒவ்வொன்றிற்கு ஒரு தளபதியை அவர் நியமித்தார். அதன்படி யாழ்க்குடாநாட்டிற்குப் பண்டிதரும், வன்னிக்கு மாத்தையாவும், மன்னாருக்கு விக்டரும், திருகோணமலைக்குச் சந்தோசமும் நியமிக்கப்பட்டனர். ஐந்தாவது வலயமாக மட்டு அம்பாறை விளங்கியது.
3 months 2 weeks ago
விடுமுறை நாட்களிலுமா .....அவை வித்தியாசமாக இருந்திருக்குமே......! 😁
உங்களின் முதற் படைப்பு சூப்பர்......!
3 months 2 weeks ago
வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!
3 months 2 weeks ago
வணக்கம், ரசோ. வாருங்கள்.
3 months 2 weeks ago
Checked
Mon, 06/17/2024 - 07:18
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed