புதிய பதிவுகள்2

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

6 hours 10 minutes ago
60, 70 களில் புங்குடுதீவில் ஒரே snow அடிக்கும். அதனால்தான் அந்த ஊரவர்கள் பின்னர் பாரிஸ், இலண்டன், கனடா என வந்து காலூன்றியதை இலகுவாக்கியது. நீங்கள் வேற… விண்டர் டைம் வெய்யில் காயலாம் எண்டு இலங்கை போய்…ஊருக்கே போக முடியாமல்…வெல்லம்பிட்டியவில் வெள்ள நிவாரண அதிகாரியாக காலத்தை கடத்தி விட்டு நாடு திரும்பி உள்ளேன்😂 பலர் மாவீரர். இது யதார்த்தம் அல்ல. மையவாதம். இதைதான் இந்த திரியில் பலர் மறைமுகமாவும் கக்கி உள்ளார்கள். இந்த மையத்தை அடக்கும் வரை உய்ய வழியே இல்லை. அருச்சுனா போன்ற பொய்மான்களின் பின்னால் ஓடி கொண்டே இருக்க வேண்டியதுதான்.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

6 hours 13 minutes ago
மலையக தமிழ் மக்களை வடக்கு கிழக்கில் குடியேற்றுவதற்கான பிரதான காரணமாகவும், பெரு விருப்பமாகவும் நாங்கள் சொல்லும் காரணம் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் மிகவும் சரிந்து இருக்கும் சனத்தொகையையும், தமிழ் மக்களின் சனப் பரம்பலையும் அதிகரிக்கலாம் என்பதே. அதன் மூலம் எங்களின் நிலத்தையும், இருப்பையும், அரசியல் பலத்தையும் தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதே இதன் பின்னால் இருக்கும் நோக்கம். இவ்வாறு குடியேற்றப்படும் மலையக தமிழ் மக்களின் நிலை என்னவாகும் என்றே நான் முன்னர் குறிப்பிட்டிருந்தேன். மலையக மக்கள் இதை விரும்புகின்றார்களா என்ற இன்னொரு பிரதான கேள்வியும் இருக்கின்றது. இந்த மக்கள் குடியேற்றப்படும் அல்லது குடியேறும் இடங்களில் அங்கு ஏற்கனவே இருக்கும் சமூகங்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதே நிஜம். மூன்று தலைமுறைகளாக அவர்கள் புதிய ஒரு இடத்தில் இருந்தாலும், அங்கு அவர்கள் சமனான மனிதர்களாக பார்க்கப்படுவதில்லை. பறை என்னும் இசை பற்றி சமீப காலங்களில் நிறையவே உரையாடப்படுகின்றன. தமிழர்களின் ஆதி இசைகளில் இதுவும் ஒன்று என்கின்றோம். கொண்டாடப்பட வேண்டும் என்கின்றோம். பறையும், இசையும், அந்த மனிதர்கள் பற்றியும் சினிமாக்கள், கதைகள் கூட வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் கடந்த 50 வருடங்களாக, போராட்ட காலம் உட்பட, இந்த பறை வாசிப்பவர்கள் கோவிலுக்கு வெளியே அதே இடத்திலேயே நின்று வாசிக்கின்றார்கள் என்று நாம் சொல்லத் தவறுகின்றோம். கோவில்களில் ஒரு தவில் அல்லது நாதஸ்வரக் கலைஞக்கும், ஒரு பறையை வாசிப்பவருக்கும் கொடுக்கப்பட்டு இருக்கும் வேறுபாடுகளை நாம் காணத் தவறுகின்றோம். இந்த வேறுபாடுகளின் பின்னால் இருப்பது சமூகக் காரணிகளே. அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், நிற்கும் தோரணை, பார்க்கும் பார்வை இப்படி எல்லாமே வேறுபட்டவை. குடியேற்றப்பட்டால் இதுவே தான் மலையக தமிழ் மக்களுக்கும் ஆகும். ஆங்கிலேயர்கள் அவர்களின் தேவைக்காக இலங்கை, மலேசியா, பிஜி, கரீபியன், பர்மா என்று உலகெங்கும் தொழிலார்களாக இந்த மக்களை குடியேற்றினார்கள். பின்னர் கைவிட்டார்கள். இவர்கள் குடியேறிய எந்த தேசத்தில் வளமாக இருக்கின்றார்கள். இலங்கையில் தான் மிகவும் மோசமான ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் உண்மையே. பிஜியில் அரச அதிகாரம் கிடைத்தது, இந்த மக்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த ஒரே காரணத்தால். அதுவும் பிஜியின் மற்றைய சமூகத்தால் ஒரு இராணுவப் புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டது. மற்றபடி அங்கும் இந்த மக்கள் ஒரு வளமான வாழ்வை வாழவில்லை. ஆங்கிலேயர்கள் தங்களின் நோக்கத்துக்காக பெரும் சுயநலத்துடன் இந்த மக்களை குடியேற்றியது போலவே, நாங்களும் இந்த மக்களை இன்று மீண்டும் குடியேற்ற நினைக்கின்றோம் அல்லவா. மலையக மக்களுக்கு முதலில் தேவையானது அவர்கள் வாழும் இடத்திலேயே சொந்த வீடும், அதனுடன் சேர்ந்த சிறிய நிலமும். அவர்கள் வளமாவதுஅங்கிருந்தே ஆரம்பிக்கும். அடுத்ததாக உயர் கல்வி அல்லது முறையான தொழில் பயிற்சிகள். மலையக, கொழும்பு, வட கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் இந்த திசையில் நகர்வது தான் மலையக மக்களுக்கு நிரந்தரமான, கௌரவமான ஒரு வாழ்வைப் பெற்றுக்கொடுக்கும். அந்த நாட்களில் ஊரில் பீட்டர் அம்மா என்று நாங்கள் கூப்பிடும் ஒருவர் ஒரு சின்னக்கடை வைத்திருந்தார். பாண் பணிஸ் போன்றன விற்பார். வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி வீதியில், வல்வெட்டித்துறைச் சந்திக்கு அருகாமையில், பெட்ரோல் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் அவரின் கடை இருந்தது. எனக்கு அவர் அடிக்கடி பணிஸ் கொடுப்பார். அது நான் அவருக்கு செய்யும் வேலைக்கு கிடைக்கும் கூலி, வேறு சில வேளைகளில் அது ஒரு பண்டமாற்று. கதையாகவே எழுதலாம். என்னையே ஒரு பணிஸை எடு என்று சொல்லிவிடுவார். எல்லா பணிஸும் ஒரே மாதிரியாகவே இருக்கும். அதைப் போலவே தான் இந்த தமிழ் அரசியல்வாதிகள், எல்லோரும் ஒன்றே. 'பணிஸ் அரசியல்வாதிகள்..........'................

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

6 hours 32 minutes ago
ஆரும் பப்பா மரத்தில் ஏற்றி விட்டால், கண்ணை மூடிக் கொண்டு ஏறும் ஆள்தான்… செலென்ஸ்கி. இப்ப… நாரி முறிய, கீழே விழுந்து கிடக்கிறார். 😂

நிகழ்நிலை முறைமையிலான நிதி மோசடி அதிகரிப்பு; சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை அணுகுவதைத் தவிர்க்கவும் - இலங்கை கணினி அவசர தயார்நிலை

7 hours 18 minutes ago
நிகழ்நிலை முறைமையிலான நிதி மோசடி அதிகரிப்பு ; சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை அணுகுவதைத் தவிர்க்கவும் - இலங்கை கணினி அவசர தயார்நிலை 15 Dec, 2025 | 05:35 PM (இராஜதுரை ஹஷான்) பண்டிகைக் காலம் மற்றும் அனர்த்த நிலைமைக்கு மத்தியில் நிகழ்நிலை முறைமை ஊடாக நிதி மோசடிகள் அதிகரித்துள்ளன. சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை அணுகுவதைத் தவிர்க்கவும், தனிப்பட்ட தகவல்களைப் பகிரும்போது பாதுகாப்பாக இருக்கவும், தெரியாத நபர்கள் அல்லது சரிபார்க்கப்படாத வலைத்தளங்களை அணுகும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களை (OTP) ஒருபோதும் வெளியிட வேண்டாம் என்று இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. கடந்த சில வாரங்களாக சமூக ஊடக தளங்கள் வழியாக நிகழ்நிலை மோசடி மற்றும் பணமோசடி முயற்சிகள் அதிகரித்து வருவதால், இலங்கை கணினி அவசரகால தயார்நிலை குழு பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறது. எதிர்வரும் பண்டிகைக் காலத்தையும் தற்போதைய பேரழிவு சூழ்நிலையையும் பயன்படுத்திக் கொண்டு சைபர் குற்றவாளிகள் பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது. அரசாங்க நிறுவனங்கள், அரசாங்கத் துறைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என்று பொய்யாகக் காட்டிக் கொள்ளும் மோசடி செய்பவர்கள் குறித்து கணிசமான எண்ணிக்கையிலான புகார்கள் கிடைத்துள்ளன. சந்தேகமில்லாத வகையில் மக்களை தவறாக வழிநடத்துவதற்காக, மோசடி நபர்கள் போலியான விளம்பரங்களை நிதி வெகுமதிகள் மற்றும் பரிசுகளை வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்களில் தகவல்களைப் பதிவிடுகிறார்கள். நாட்டின் பல பகுதிகளை சேதப்படுத்திய சூறாவளி மற்றும் கனமழையைத் தொடர்ந்து, நிவாரணம் மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அரச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பெயர்களை சைபர் குற்றவாளிகள் மோசடியாக ஆள்மாறாட்டம் செய்து வருகின்றனர். அவர்கள் மோசடியான இணைப்புகளை இடுகையிடுவதையும், இந்த இணைப்புகள் மூலம் பொதுமக்களை பணத்தை நன்கொடையாக வழங்க ஊக்குவிப்பதையும் கவனித்துள்ளனர். இதன் விளைவாக, மோசடி செய்பவர்கள் சில தனிநபர்களின் வங்கிக் கணக்குகளுக்குள் அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற்று அந்தக் கணக்குகளைக் கட்டுப்பாட்டில் எடுத்த வழக்குகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்த அனைத்து பணத்தையும் இழந்த வழக்குகளும் உள்ளன. சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை அணுகுவதைத் தவிர்க்கவும், தனிப்பட்ட தகவல்களைப் பகிரும்போது பாதுகாப்பாக இருக்கவும், தெரியாத நபர்கள் அல்லது சரிபார்க்கப்படாத வலைத்தளங்களை அணுகும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களை (OTP) ஒருபோதும் வெளியிட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அரசு நிறுவனங்களும் நிறுவப்பட்ட அமைப்புகளும் எந்தவொரு கோரிக்கையும் இல்லாமல் சமூக ஊடகப் பதிவுகள் அல்லது ஆன்லைன் இணைப்புகள் மூலம் பொதுமக்களிடமிருந்து முக்கியமான தகவல்களைப் பெறுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தக் காலகட்டத்தில் நிதி திரட்டும் கோரிக்கை அல்லது நிதி உறுதிமொழி அடங்கிய எந்தவொரு சமூக ஊடகச் செய்திகளையும் கூர்ந்து கவனித்து, அவற்றின் நம்பகத்தன்மையை சரிபார்க்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது. விழிப்புடன் இருங்கள். உங்கள் டிஜிட்டல் அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். https://www.virakesari.lk/article/233440

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

7 hours 24 minutes ago
மன்னிக்கவும் அண்ணா... உங்களுடைய இந்த கருத்து பண்பற்ற ஒன்றாக எனக்குப் படவில்லை . நனைகிற ஆடு... குளிர் காய்கிற ஓநாய் ... உண்மையில் மலையகத்து மக்களின் யதார்த்த லயத்து வாழ்க்கை நிலை, இற்றை திகதி வரைக்கும் எஸ்டேட்ட தோரை, கங்காணி, ஆராச்சி (கிராம சேவகர்) இப்படி வரிசையாக அந்த அப்பாவி மக்களை மனிதர்களாக கூட மதிக்காமல் நடத்தும் நடப்பு உங்களுக்கு தெரியுமா? இன்று அனைத்தையும் இழந்து நிட்கும் அந்த மக்களை பற்றி பேசுகிற ஒரு தலைப்பில் நீங்கள் ஓநாய் வேட்டையில் புளங்காகிதம் அடைகிறீர்கள். சுமந்திரனை கழுவி ஊத்த மலையக மக்களின் கண்ணீர் வேண்டாமே. 🤲

19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்

7 hours 25 minutes ago
19இன் கீழ் ஆசிய கிண்ணம்: செத்மிக்கவின் அபார பந்துவீச்சின் உதவியுடன் நேபாளத்தை இலகுவாக வெற்றிகொண்டது இலங்கை 13 Dec, 2025 | 03:19 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பி குழுவில் இடம்பெறும் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் நேபாளத்தை 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிகொண்டது. துபாய் தி செவன்ஸ் மைதானத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டி 44 ஓவர்களுக்குள் நிறைவடைந்தது. கண்டி திரித்துவ கல்லூரியின் வேகப்பந்துவீச்சாளர் செத்மிக்க செனவிரட்ன 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து இலங்கையின் வெற்றியை இலகுபடுத்தினார். அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட நேபாள அணி 25.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. சிப்ரின் ஷ்ரேஸ்தா (18), சஹில் பட்டேல் (12), நிராஜ் குமார் யாதவ் (10) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். நேபாள இன்னிங்ஸில் இலங்கை கொடுத்த 19 உதிரிகளே அதிகப்பட்ச எண்ணிக்கையாக இருந்தது. பந்துவீச்சில் செத்மிக்க செனவிரட்ன 25 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். ரசித் நிம்சார, விக்னேஸ்வரன் ஆகாஷ், துல்னித் சிகேரா, சாமிக்க ஹீனட்டிகல ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். 83 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 14.5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 84 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. திமன்னத மஹாவித்தான 39 ஓட்டங்களுடனும் காவிஜ கமகே 24 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். விரான் சமுதித்த 10 ஓட்டங்களைப் பெற்றார். ஆட்டநாயகன்: செத்மிக்க செனவிரட்ன. https://www.virakesari.lk/article/233277

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்

7 hours 31 minutes ago
ஐபிஎல் மினி ஏலத்தில் 'டிமாண்ட்' அதிகம் உள்ள 5 வீரர்கள் இவர்களா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கேமரூன் கிரீன் கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல் தொடருக்கான (2026) மினி ஏலம் நாளை (டிசம்பர் 16) நடக்கிறது. அபு தாபியில் நடக்கும் இந்த ஏலத்துக்கான பட்டியலில் 359 வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இதில் 244 இந்திய வீரர்கள் மற்றும் 115 வெளிநாட்டு வீரர்கள். அணிகளைப் பொறுத்தவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அதிகபட்சமாக 13 காலியிடங்கள் இருக்கின்றன. அதேபோல் அந்த அணிதான் அதிகபட்ச தொகையோடு (ரூ 64.3 கோடி) ஏலத்துக்குள் நுழையப்போகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் 9 இடங்கள் மீதமிருக்கின்றன. அவர்களுக்கு 43.4 கோடி ரூபாய் மீதமிருக்கிறது. மும்பை இந்தியன்ஸுக்கோ 2.75 கோடி ரூபாய் மட்டுமே மீதமிருக்கிறது. இந்நிலையில், இந்த ஏலத்தில் அதிக அணிகளின் கவனத்தை ஈர்க்கப்போகும், அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தப்போகும் ஐந்து வீரர்கள் யார்? முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வித்யுத் சிவராமகிருஷ்ணன், வர்ணனையாளர் நானி, பத்திரிகையாளரும் வர்ணனையாளருமான பகவதி பிரசாத் மூவரும் பிபிசி தமிழுக்கு அவர்களின் கருத்துகளைத் தெரிவித்தார்கள். அவர்கள் பட்டியலில் பொதுவாக இருந்த 5 வீரர்களின் பட்டியல் இது. அதற்காக அவர்கள் கொடுத்த காரணங்கள் என்ன? 1. கேமரூன் கிரீன் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கேமரூன் கிரீன் இந்த ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது கேமரூன் கிரீன். எந்த இடத்திலும் களமிறங்கக்கூடிய அதிரடி பேட்டர், வேகப்பந்துவீச்சாளர் மற்றும் நல்ல ஃபீல்டர் என்பதால் அவரை வாங்க எந்த அணியுமே ஆசைப்படும். தனது மேலாளர் செய்த தவறால் ஏலத்தில் தான் பேட்டராக பதிவு செய்யப்பட்டுவிட்டதாகக் கூறிய கிரீன், தான் பந்துவீசத் தயாராக இருப்பதாகக் கூறினார். அதேசமயம், "கிரீன் பேட்டராகப் பதிவு செய்யப்பட்டிருப்பது அவர் பெரிய தொகைக்குப் போவதற்கு உதவும். ஏனெனில், அவர் பெயர் முதல் செட்டிலேயே இடம்பெற்றிருக்கிறது. அதனால், கொல்கத்தா, சென்னை போன்ற அணிகள் தங்களின் தொகையை செலவு செய்வதற்கு முன்பே இவர் பெயர் வந்துவிடும் என்பதால், நிச்சயம் இரு அணிகளுக்கும் இடையே ஏலத்தின்போது இவரை வாங்க கடும் போட்டி இருக்கும்" என்கிறார் பகவதி பிரசாத். இந்த அணிகள் போக சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆகிய அணிகள் ஓரளவு கிரீனுக்காக முயற்சி செய்யலாம். ஆனால், சென்னை, கொல்கத்தா போல் இவர்களால் அந்த ஒற்றை வீரர் மீது பெரும் முதலீடு செய்யமுடியாது என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸுக்கு வேறு சில தேவைகள் இருப்பதாகவும் சொல்லும் நானி, கொல்கத்தாவை நிறைய செலவளிக்க வைப்பதற்காக சென்னை இவரை வாங்க ஏலம் கூறலாம் என்கிறார். ஆண்ட்ரே ரஸல் போன்ற ஒரு வீரரின் இடத்தை நிரப்பவேண்டும் என்ற கட்டாயம் கொல்கத்தாவுக்கு இருப்பதால், அவர்கள் கிரீனை வாங்கவேண்டும் என்று காத்திருப்பார்கள் என்கிறார் அவர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,லியாம் லிவிங்ஸ்டன் 2. லியாம் லிவிங்ஸ்டன் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மற்றொரு வெளிநாட்டு வீரர் லியாம் லிவிங்ஸ்டன். கடந்த மெகா ஏலத்தில் அவரை பெங்களூரு வாங்கியிருந்தது. ஆனால், பின்னர் அவரை ரிலீஸ் செய்துவிட்டார்கள். அதனால் பல அணிகளும் தற்போது இவரை வாங்க நினைப்பார்கள். "ஒரு நல்ல மிடில் ஆர்டர் அதிரடி பேட்டர், லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின் இரண்டுமே வீசக்கூடியவர் என்பதால் இவருக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டிருக்கிறது" என்கிறார் வித்யுத். சென்னை, கொல்கத்தா,ஹைதராபாத், டெல்லி போன்ற அணிகள் இவரைக் குறிவைக்கலாம். தங்கள் நம்பர் 4 இடத்தை பலப்படுத்தவேண்டும் என்று நினைத்தால் குஜராத் டைட்டன்ஸும் இவரை வாங்க நினைக்கலாம். ஃபினிஷராகப் பயன்படுத்த முடியும் என்பதால் எல்லா அணிகளுமே லிவிங்ஸ்டனை வாங்க நினைப்பார்கள் என்பது வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. "அவர் இதுவரை ஐபிஎல் அரங்கில் பெரிய தாக்கம் ஏற்படுத்தவில்லை. ஆனால், மிகச் சிறந்த திறமைசாலி. ஆட்டத்தை மாற்றக்கூடிய வல்லமை பெற்றவர்'' என்கிறார் நானி. 3. வெங்கடேஷ் ஐயர் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வெங்கடேஷ் ஐயர் மெகா ஏலத்தில் 23.75 கோடி ரூபாய்க்கு வாங்கிய வெங்கடேஷ் ஐயரை, இப்போது ரிலீஸ் செய்திருக்கிறது கொல்கத்தா. "அவரால் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் என எங்குமே விளையாட முடியும். எந்த இடத்திலும் விளையாடக்கூடிய ஒரு இந்திய வீரரை எல்லா அணிகளுக்குமே பிடிக்கும். என்ன, அவர்கள் அவரை எப்படிப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தே ஏலத்தில் அவருக்காக போட்டியிடுவார்கள்" என்று கூறினார் பகவதி பிரசாத். "கடந்த முறைபோல் அல்லாமல் அவர் 8-10 கோடி ரூபாய்க்குள் ஏலம் போனால் நல்லது" என்கிறார் நானி. "போன முறை அந்தப் பெரிய தொகையே அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. இம்முறை குறைவான தொகைக்கு ஏலம் போவது, அவரது செயல்பாட்டுக்கு நல்லது" என்று அவர் கூறினார். இவருக்கும் சென்னை vs கொல்கத்தா இடையே போட்டி நிலவலாம். அதேசமயம், லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு போன்ற அணிகளுமே இவரை வாங்க முயற்சி செய்யலாம் என்கிறார்கள் நிபுணர்கள். 4. மதீஷா பதிரனா பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மதீஷா பதிரனா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நீண்ட காலம் பயணிப்பார் என கருதப்பட்டவரை அந்த அணி வெளியே விட்டது ஆச்சர்யமாகக் கருதப்பட்டது. கடந்த மெகா ஏலத்துக்கு முன்னதாக அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்திருந்தது. "பதிரனா தற்போது அவரது பௌலிங் ஆக்‌ஷனை மாற்றியதால் அவரது செயல்பாட்டில் சரிவு ஏற்பட்டுவிட்டது. அதனால் முன்பு ஏற்படுத்திய தாக்கத்தை அவரால் ஏற்படுத்த முடியவில்லை" என்று கூறினார் பகவதி பிரசாத். இருந்தாலும் 'எக்ஸ் ஃபேக்டர்' என்று கருதப்படும் ஒரு வீரரை வாங்க நிச்சயம் அணிகள் ஆர்வம் காட்டுவார்கள் என்றும் அவர் கூறினார். கிட்டத்தட்ட எல்லா அணிகளுக்குமே வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரின் தேவை இருக்கிறது என்பதால் பதிரானாவுக்கு கொஞ்சம் போட்டி இருக்கலாம் என்றும் அவர் கூறினார். 5. ஜேசன் ஹோல்டர் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜேசன் ஹோல்டர் "இம்முறை ஹோல்டர் சிறந்த ஃபார்மில் இருப்பதால், முன்பை விட அவருக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கலாம்" என்கிறார் பகவதி பிரசாத். எப்போதுமே வெளிநாட்டு ஆல்ரவுண்டர்களுக்கான தேவை ஐபிஎல் ஏலத்தில் அதிகமாக இருக்கும். ஹோல்டர் இதுவரை பல அணிகளுக்கு விளையாடியிருந்தாலும், பெரிய தாக்கம் ஏற்படுத்தியதில்லை. ஆனால், இம்முறை அவரது ஃபார்ம், அவர் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும் என்கிறார் அவர். "முன்பெல்லாம் இல்லாததுபோல் ஹோல்டர் தற்போது பேட்டிங், பௌலிங் இரண்டிலும் முன்னேற்றம் கண்டுள்ளார். நன்கு பௌன்சர்களையும், யார்க்கர்களையும் பயன்படுத்துகிறார். நன்கு சிக்ஸர்களும் அடிக்கத் தொடங்கியிருக்கிறார்" என்று நானியும் சொல்கிறார். கிட்டத்தட்ட எல்லா அணிகளுமே அவருக்கு போட்டியிடக்கூடும் என்கிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clydx2q9q0do

19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்

7 hours 37 minutes ago
19இன் கீழ் ஆசிய கிண்ணம்: ஐக்கிய அரபு இராச்சியத்தை நையப்புடைத்தார் சூரியவன்ஷி; இந்தியா 234 ஓட்டங்களால் வெற்றி Published By: Vishnu 12 Dec, 2025 | 07:13 PM (நெவில் அன்தனி) துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற ஏ குழுவுக்கான 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஆசிய கிண்ண ஆரம்பப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய பந்துவீச்சாளர்களை வைபவ் சூரியவன்ஷி நையப்புடைக்க, இந்தியா 234 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. 15ஆவது பிறந்த தினத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வைபவ் சூரியவன்ஷி 95 பந்துகளில் 9 பவுண்டறிகள், 14 சிக்ஸ்கள் உட்பட 171 ஓட்டங்களை விளாசி 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கான அதிகூடிய தனிநபர் எண்ணிக்கைக்குரிய சாதனையை நிலைநாட்டினார். எவ்வாறாயினும்,, இங்கிலாந்துக்கு எதிராக டோன்டன் விளையாட்டரங்கில் 2002இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் அம்பாட்டி ராயுடு ஆட்டம் இழக்காமல் குவித்த 177 ஓட்டங்களே இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கான அதிகூடிய தனிநபர் எண்ணிக்கைக்குரிய சாதனையாக தொடர்ந்தும் இருக்கின்றது. வைபவ் சூரியவன்ஷி குவித்த அபார சதம், ஆரோன் ஜோர்ஜ், விஹான் மல்ஹோத்ரா ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள் ஆகியவற்றின் உதவியுடன் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 433 ஓட்டங்களைக் குவித்தது. 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். கோலாலம்பூரில் கத்தாருக்கு எதிராக பங்களாதேஷ் 7 விக்கெட்களை இழந்து பெற்ற 363 ஓட்டங்களே 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணத்தில் இதற்கு முன்னர் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக இருந்தது. இன்றைய போட்டியில் சூரியவன்ஷியை விட ஆரோன் ஜோர்ஜ், விஹான் மல்ஹோத்ரா ஆகிய இருவரும் தலா 69 ஓட்டங்களையும் வேதாந்த் த்ரிவேதி 38 ஓட்டங்களையும் அபிக்யான் குண்டு 32 ஓட்டங்களையும் பெற்றனர். இதனிடையே வைபவப் சூரியவன்ஷி, ஆரோன் ஜோர்ஜ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 212 ஓட்டங்ளைப் பகிர்ந்தனர். அத்துடன் விஹான் மல்ஹோத்ரா, வேதாந்த் த்ரிவேதி ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பந்துவீச்சில் யுக் ஷர்மா 75 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் உதிஷ் சூரி 77 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. ஐக்கிய அரபு இராச்சியம் 14ஆவது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 53 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வியை எதிர்நோக்கியது. ஆனால், ப்ரித்வி மது, உதிஷ் சூரி ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்தை கௌரவமான நிலையில் இட்டனர். அவர்களது இணைப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்திய இளையோர் அணி கடுமையாக முயற்சித்தது. இறுதியில் 9ஆவது பந்துவீச்சாளராகப் பயன்படுத்தப்பட்ட விஹான் மல்ஹோத்ரா ப்ரித்வி மதுவை ஆட்டம் இழக்கச் செய்து இணைப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். தொடர்ந்து உதிஷ் சூரி, சாலே ஆமின் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து 50ஆவது ஓவர் வரை இந்தியாவை வெற்றிக்காக காக்க வைத்தனர். உதிஷ் சூரி 78 ஓட்டங்களுடனும் சாலே ஆமிக் 20 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் தீப்பேஷ் தேவெந்த்ரன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: வைபவ் சூரியவன்ஷி https://www.virakesari.lk/article/233215

காஸா முனையில் இஸ்ரேல் தாக்குதல் : ஹமாஸ் முக்கிய தளபதி உயிரிழப்பு

7 hours 54 minutes ago
காஸா முனையில் இஸ்ரேல் தாக்குதல் : ஹமாஸ் முக்கிய தளபதி உயிரிழப்பு Published By: Digital Desk 3 14 Dec, 2025 | 11:30 AM இஸ்ரேலிய இராணுவம் சனிக்கிழமை காஸா நகரில் கார் ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தளபதியான ரயிட் சயத் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஸா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காஸா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், இராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டது. 2 ஆண்டுகள் நடந்த போரில் காஸாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், காஸா முனையில் இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. காஸா சிட்டியில் சென்ற காரை குறிவைத்து ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் முக்கிய தளபதி ரயிட் சயத் கொல்லப்பட்டார். மேலும், ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த மேலும் 4 பேர் உயிரிழந்தனர். கொல்லப்பட்ட ஹமாஸ் தளபதி ரயிட் சயத் 2023 அக்டோபர் 7ம் திகதி நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/233309

ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம்

8 hours 26 minutes ago
ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் வகைத்தொகை இன்றி தமிழர்களை இனப்படுகொலை செய்து முடக்கிவிட்டது. அவ்வாறு முடக்கியதன் மூலம் இனப்படுகொலை என்ற எதிரியையும் அது சம்பாதித்து விட்டது. அதனை எவ்வாறு தமிழர் தரப்பு தமக்கு நலன் பெயர்க்கக்கூடிய வகையில் அறுவடை செய்வது என்பது தமிழ் மக்களின் வல்லமை சார்ந்தும், தகவமை சார்ந்தும் நிர்ணயம் பெறும். இது இவ்வாறு இருக்கையில் ஈழத்தமிழர் மீது சிங்கள அரசு நடாத்தும் போதைப்பொருள் யுத்தம் பற்றி ஆய்வது அவசியமானது. தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை முடக்கியதனூடாக கட்டமைக்கப்பட்ட தமிழின படுகொலைக்கான கதவுகள் அகல திறக்கப்பட்டு விட்டது. ஆயுதமுனையில் இனப்படுகொலை அரசு என்பது பல முகங்களைக் கொண்ட அதிகார நிறுவனம். இந்த நிறுவனம் சட்டம் நீதி நிர்வாகம் ஆயுதப்படை என்ற கட்டமைப்புகள் மாத்திரமன்றி ஊடகங்கள், வங்கிகள், திணைக்களங்கள் என பல்வகை நிறுவனங்களை கொண்டு இயங்கும் ஒரு செயலாற்றல் மிக்க தாய் நிறுவனம். அந்தத் தாய் நிறுவனம் தனது கிளை நிறுவனங்களை தன்னுடைய விருப்புக்கு ஏற்றவாறு வளைத்தும், நிமித்தியும் தமிழினப் படுகொலையை வெற்றிகரமாகச் செய்வதற்கான அனைத்து வழிவகைகளையும் செய்யும். தற்போது சிங்கள பௌத்த அரசு என்கின்ற செயல் பூர்வமான அந்த நிறுவனம் ஆயுதமுனையில் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையும் விட ஆயுதமற்று திட்டமிட்ட ரீதியில் தமிழினத்தின் பண்பாட்டையும், அதன் பண்பாட்டு விழுமியங்களையும், உள்ளார்ந்த சமூகத் திறனுக்கு மூளை சாலைகளையும், செயல் திறன்மிக்க அவ்வினத்தின் முன்னுதாரணமான முற்போக்கு சிந்தனை மூளையை அரித்து அழிப்பதுதான் தமிழினத்தை இல்லாத ஒழிப்பதற்கான இறுதிக்கட்ட மூலோபாயமாக கொண்டுள்ளது. அமையும் அத்தகைய மூலபாயத்தைதான் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் இலங்கை பௌத்த சிங்கள பேரினவாத அரசு கையாள்கிறது. ஊழல் ஒழிப்பு என ஆரம்பித்து இப்போது போதைப்பொருள் ஒழிப்பு என அனுர அரசாங்கம் தனது பாதையை திருப்பி உள்ளது. அதே நேரத்தில் தம்மை இடதுசாரிகள் எனக் கூறிக்கொண்டு வலதுசாரிகளாக செயல்படுகிறது மட்டுமல்ல பௌத்த மகா சங்கத்திடமும் சரணடைந்துள்ளது. சாமானிய தமிழ் மகன் ஏளனம் செய்து இலங்கையில் இனவாதம் வேண்டாம், இனி ஒருபோதும் இன வாரத்துக்கு இடமில்லை என்றெல்லாம் இதே ஜேவிபினர் முழக்க முட்டனர். இப்போது தமிழர் தாயகத்தில் புத்தர் சிலைகளை நிர்மாணிப்பதில் முழு வேகத்துடன் செயல்படுகிறது. முக்கிய அமைச்சர்கள் இது பௌத்த நாடு இது புத்தரின் பூமி என்கிறார்கள். இந்தியாவில் பிறந்த புத்தருக்கு இலங்கை தீவு எப்படி கிடைத்திருக்கும்? என சாமானிய தமிழ் மகன் ஏளனம் செய்து கேள்வி கேட்கும் நிலை அநுர அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஊழல் ஒழிப்பு என ஆரம்பித்து பெருமெடுப்பிலாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் "எண்ணெச் செலவுதான் பிள்ளை வளர்ச்சி இல்லை" என்ற தமிழ் பழமொழியைத்தான் நினைவூட்டுகிறது. ஊழல் ஒழிப்பு என கிளம்பி அது தடம் புரண்ட நிலையில் இப்போது "போதைவஸ்து ஒழிப்பு என புறப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய இவர்களின் செயல் நடவடிக்கை மாற்றத்திற்கான காரணங்கள் என்ன என்பதை பற்றி ஆராய்வது அவசியமானது. முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது தமிழ் மக்களுடைய ஆயுத போராட்டத்தின் ஆயுத பலத்தை மாத்திரமே முடிவுக்கு கொண்டு வந்தது. ஆயினும் ஆயுதப் போராட்டம் தந்த வலிகளில் இருந்து எழுந்து பலமான ஒரு ஜனநாயக முறைமை தழுவிய அரசியல் போராட்டத்தை தமிழ் மக்கள் நடத்தக்கூடாது என்பதற்காகவே தமிழர் தாயகத்தில் போதைப்பொருள் பாவனை அரசினுடைய அனுசரணையுடன் முப்படைகளும் தமது முகவர்கள் மூலம் ஊக்கிவித்தனர். அவ்வாறு போதைப்பொருள் பாவனை வட - கிழக்கில் அதிகரித்து ஈழத் தமிழர்களின் அடுத்த தலைமுறையினர் குறிப்பாக பாடசாலை மட்டத்திலான இளம் தலைமுறையினது மூளைகளை அழிக்கவும், அவர்களை முடக்கவும், அடிமையாக்குவதற்காகவே போதைவஸ்து விநியோகம் அரச ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டது. போதைப்பொருள் பாவனை ஊக்குவிப்பு “எதிரிக்கு மூட்டியது தீ எதிரியை சுடுவதிலும் விட உன்னையே அதிகம் சூடும்“ என்ற சீன பழமொழிக்கு இணங்க சிங்கள அரசால் தமிழர் தாயகத்தில் விஸ்தரிக்கப்பட்ட போதைவஸ்து விநியோகம் ஒரு கூட்டு விளைவை ஏற்படுத்தியது. அது வட-கிழக்கை தாண்டி தென்னிலங்கை நோக்கி மிக வேகமாக பரவத் தொடங்கியது. அரச முகவர்களால் உருவாக்கப்பட்ட போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை, கடத்தல் என்பன சிங்கள தேசத்தில் மிக வேகமாக அதிகரித்து சிங்கள தேசத்தின் இளைய தலைமுறையை சீரழிக்க தொடங்கியது. இந்தப் பின்னணியில் சிங்கள தேசத்தை பாதுகாப்பதற்கு அதற்கு வழங்கலாக இருக்கக்கூடிய வடக்கின் போதைப்பொருள் கடத்தல் மற்றும் இத்தனை விற்பனையாளர்களை கட்டுப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதன் நிமித்தமே வட பகுதியில் போதைப் பொருள் விற்பனையாளர்களும், கடத்தல் காரர்களும் கைது செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு இலங்கை அரசை தள்ளியுள்ளது. யுத்தம் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த 16 ஆண்டுகளும் வடபகுதியில் இளைஞர்களை போதைப்பொருளுக்கு அடிமையாகவும், சமூக சீர்கேடுகளின் மூலகர்த்தாக்களாவும் மாற்றுவதன் மூலம் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்திற்கான விடுதலைப் போராட்டத்தை இளைஞர்கள் நினைத்தும் பார்க்கக்கூடாது. இதற்காக அவர்களால் உருவாக்கப்பட்ட போதைப்பொருள் பாவனை ஊக்குவிப்பு தென் இலங்கையை தாக்குகின்ற போது அதனை தடுக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த அடிப்படையில்தான் கஞ்சா ஒழிப்பு என்ற பெயரில் வடகிழக்கில் பலர் கைது செய்யப்படுகிறார்கள். இவ்வாறு கைது செய்யப்படுவது என்பது தென்னிலங்கை நோக்கிய கஞ்சா வியாபாரிகள் மாத்திரமே கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் தமிழர் தாயகத்தின் கஞ்சா வியாபாரிகள் யாரும் இங்கே முடக்கப்படவுமில்லை கைது செய்யப்படவுமில்லை என்பதிலிருந்து இலங்கை அரசனுடைய போதைப்பொருள் ஊக்குவிப்பை உணர முடியும். Tamilwinஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் - தமிழ்...ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் வகைத்தொகை இன்றி தமிழர்களை இனப்படுகொலை செய்து மு...
Checked
Mon, 12/15/2025 - 22:48
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed