புதிய பதிவுகள்2

கோவை: வனத்துறையிடம் பிடிபடாத 'ரோலக்ஸ்' - நள்ளிரவில் மருத்துவரை தாக்கிவிட்டு தப்பியது எப்படி?

3 weeks 4 days ago
யானைக்கும் மனிதரின் போர் வியூகங்கள் நன்றாகத் தெரிந்திருக்கிறது . .........அறிவில்லாத மனிதர்கள் அதன் வழியில் குறுக்கிட்டு அவலப்படுகின்றனர் . ........! 😀

ஒரு பயணமும் சில கதைகளும்

3 weeks 4 days ago
5. இன்னொரு பாலம் -------------------------------- எளிமையான பல நம்பிக்கைகளின் ஒரு தொகுப்பாகவே எங்களின் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கின்றது. அந்த நம்பிக்கைகளில் பலவற்றை நாங்கள் சாதாரண சூழ்நிலைகளில் கேள்விக்குட்படுத்துவதும் கிடையாது. உதாரணமாக, பொதுவாக பெரும்பாலான மனிதர்களிடம் இருக்கும் கடவுள் இருக்கின்றார் என்ற நம்பிக்கை. இதே போலவே தெய்வம் என்ற மேலான ஒரு சக்தி கிடையவே கிடையாது என்ற நம்பிக்கையும் பல மனிதர்களிடம் பரவலாகவே இருக்கின்றது. மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் என்று நம்பி வாழ்பவர்களும் உண்டு. மனிதர்களும் ஒரு விலங்கே, அங்கே சுயநலம் மட்டுமே உண்டு என்று உறுதியாக எதிர்த் திசையில் நம்புவர்களும் உண்டு. புதுமைப்பித்தனின் 'கடவுளின் பிரதிநிதி' என்னும் கதையில் கடவுள் நம்பிக்கை கொண்ட ஒருவரின் நம்பிக்கை ஒரு தருணத்தில் கேள்விக்கு உட்படுகின்றது. அந்தக் கணத்தில் அவர் அப்படியே உடைந்து சிதறிப் போகின்றார். நாங்கள் நம்பிக் கொண்டிருப்பது பொய்யாக இருக்குமோ என்ற சந்தேகம் எட்டிப் பார்க்க ஆரம்பித்தால், எந்த வாழ்க்கையும் அங்கே உடைந்து தான் போகும். என் வீட்டருகே இரண்டு கோவில்கள் இருக்கின்றன. நாங்கள் இப்பொழுது இருக்கும் வீட்டிற்கு ஒரு 25 வருடங்களின் முன் குடிவந்தோம். இந்தக் கோவில்களும் ஏறக்குறைய அதே காலத்திலேயே இங்கு வந்தன. ஒன்று சுவாமி நாராயணன் கோவில், மற்றையது தமிழ்நாட்டு வகை கோவில். இரண்டுமே இந்த இடத்தில் மிக செழிப்புடன் இருக்கும் குஜராத்தி மக்களாலேயே உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. என் மனைவி ஆரம்பத்திலிருந்தே தமிழ்நாட்டு வகை கோவிலின் முதல் வகுப்பு குடிமகள்களில் ஒருவர். என் அயலவர், அவர் குஜராத்தி இனத்தை சேர்ந்தவர், சுவாமி நாராயணன் கோவிலின் முதல் வகுப்பு குடிமகன்களில் ஒருவர். ஊரில் வளர்ந்த சுழ்நிலையோ அல்லது கண்டதையும் கடியதையும் வாசித்ததாலோ, வளரும் நாட்களில் தெய்வம் என்னும் நம்பிக்கை மீது பெருத்த சந்தேகமே இருந்தது. எங்களில் பலருக்கும் நடந்தது போலவே, மிகப் பெரிய இழப்புகளும் ஏற்பட்டன. இவ்வளவும் கேட்பாரன்றி நடந்த பின், எல்லாவற்றுக்கும் மேலே ஒரு சக்தி இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் மனைவி 'இன்று நீங்கள் கோவிலுக்கு வரவேண்டும்............' என்று சொல்லிக் கூட்டிப் போகும் நாட்களில் போய்க் கொண்டிருக்கின்றேன். குஜராத்தி அயலவரின் மகன் திருமணச் சடங்கு ஒன்று சுவாமி நாராயணன் கோவிலில் நடந்தது. அதற்காக அந்தக் கோவிலுக்கு ஒரு தடவை போயிருக்கின்றேன். அங்கு இருக்கும் கடவுள் கிருஷ்ணரே என்று நினைத்திருந்தேன். சிட்னியில் சுவாமி நாராயணன் கோவில் ஒன்று கட்டப்பட்டிருப்பதாகவும், அதைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். மிகப் பிரமாண்டமான கோவில் என்றார்கள். என் வீட்டருகே 25 வருடங்களாக இருக்கும் சுவாமி நாராயணன் கோவில் ஓரளவு பெரியது. என் வீட்டிலிருந்து ஒரு 25 மைல்கள் தூரத்தில் மிகப் பிரமாண்டமான சுவாமி நாராயணன் கோவில் ஒன்றை குஜராத்தி மக்கள் கட்டியிருக்கின்றார்கள். அதை எல்லோரும் போய்ப் பார்க்கின்றார்கள், வியக்கின்றார்கள். நியூ ஜெர்சி, துபாய் என்று உலகெங்கும் மிகப் பிரமாண்டமான சுவாமி நாராயணன் கோவிலை கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். சிட்னியில் கட்டிக் கொண்டிருப்பது 400 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் செலவில் என்று சொன்னார்கள். சிட்னி நகரிலிருந்து கொஞ்சம் வெளியே ஒரு இடத்தில் கட்டியிருக்கின்றார்கள். முன்பே அந்தக் கோவிலுக்கு போய் வந்தவர்களும், இப்போது தான் முதன்முதலாக போயிருப்பவர்களும் ஒருங்கே ஒரு அதிசயத்தை பார்ப்பது போலவே அந்த இடத்தை பார்த்துக் கொண்டு நின்றார்கள். கோவிலின் முன்பு ஒரு சாது ஒற்றைக் காலில் நிற்கும் பெரிய சிலை ஒன்று இருந்தது. இந்தியப் பிரதமர் மோடி வந்து அதைத் திறந்து வைத்ததாகச் சொன்னார்கள். சிலையின் உயரம் 49 அடிகள் என்று இருந்தது. அந்தச் சிலையில் இருப்பவர் தான் சுவாமி நாராயணன் என்று அழைக்கப்படுகின்றார் என்றும் இருந்தது. அவர் ஏழு வருடங்கள் தொடர்ச்சியாக இப்படியே ஒற்றைக் காலில் தவம் இருந்ததாக அங்கிருக்கும் பல கல்வெட்டுகளில் தகவல்கள் பதிக்கப்பட்டு இருந்தன. இவர் 49 வருடங்கள் மட்டுமே வாழ்ந்த காரணத்தால், 1781 - 1830 ஆண்டுகள், சிலையின் உயரம் 49 அடிகளாக உள்ளது என்ற தகவலும் ஒரு கல்வெட்டில் இருந்தது. சுவாமி நாராயணன் என்றால் கிருஷ்ணர் என்று நான் இதுவரை நினைத்திருந்தது பொய் என்பது ஏமாற்றமாகவே இருந்தது. என்னுடைய அயலவரிடம் சுவாமியின் வரலாற்றை நான் கேட்டிருக்க வேண்டும். அவர் அடிக்கடி என்னிடம் ஏதாவது கேட்பார். ஒரு தடவை அவர் வீட்டிற்குள் பல்லி ஒன்று வந்து விட்டதாகவும், உடனே ஓடி வா என்று கூப்பிட்டார். நான் போகும் போது, அவர் கிட்டத்தட்ட கூரையில் நின்று கொண்டிருந்தார். நான் பல்லியைப் பிடித்து, அவர் வீட்டிற்கும், என் வீட்டிற்கு இடையில் இருக்கும் இன்னொரு வீட்டின் முன் வளவினுள் விட்டுவிட்டேன். இப்படி நான் அவருக்கு ஏராளமான உதவிகள் செய்திருக்கின்றேன். நான் கேட்டிருந்தால், வரலாற்றை மகிழ்ச்சியாக சொல்லியிருப்பார். அன்று நான் பிடித்த பல்லியை நடுக்காணியில் விட்டது அவருக்கு தெரியாது. கோவில் வளாகம் ஒரு பெரும் சரிவில் பல தொகுதிகளாக கட்டப்பட்டிருந்தது. சுவாமியின் 49 அடி சிலை சரிவின் அடிவாரத்தில் ஆரம்பமாக இருந்தது. அதன் பின்னால் ஒன்றன் பின் ஒன்றாக, 400 மில்லியன் ஆஸ்திரேலியா டாலர்களில் செலவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும், கோவிலின் பகுதிகள் இருந்தன. முதல் தொகுதியில் அபிஷேகம் செய்யும் இடம் ஒன்று இருந்தது. சில டாலர்கள் கொடுத்து நாங்களே அபிஷேகம் செய்யலாம் என்றார்கள். எங்களில் ஒருவர் செய்தார். என் மனைவியின் வீட்டார்கள் மிகுந்த தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் என்றாலும், அவர்கள் எந்த அவதார புருஷரையும், பாபாக்களையும், குருக்களையும், சாமியார்களையும் நம்புவதும் இல்லை, பின்பற்றுவதும் இல்லை. அந்த நாராயணனை நினைத்து இந்த நாராயணனுக்கு அபிஷேகம் செய்திருக்கின்றார்கள். அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். அதன் பின்னால் உணவு விடுதி ஒன்று இருந்தது. எங்களில் சிலர் உள்ளே போனார்கள். என்ன பெரிது என்று சொல்லிக் கொண்டே, ஆனால் வெறுங்கைகளுடன் திரும்பி வந்தார்கள். வட இந்திய சைவ உணவாக இருக்க வேண்டும் போல. ஒருவருக்கு ஒருவர் சொல்லாமல் அப்படியே வெளியே வந்துவிட்டார்கள். அதன் பின்னால் ஏறிப் போனால், இந்தப் பிரிவின் இன்றைய குருவின் பெரிய பெரிய படங்களும், அவர் சொல்லும் விடயங்களும் இருந்தன. இது ஒரு குரு வழியாக, தொடராக தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றது. இந்த குரு சமாதி அடைந்தால், இன்னொரு குரு வருவார். குருவிற்கு செய்யும் பணிவிடைகள் இறைவனுக்கே செய்யும் பணிவிடைகள் என்று ஒரு செய்தி இருந்தது. இறைவனுக்கும், எங்களுக்குமிடையே குரு ஒரு பாலமாக இருக்கின்றார் என்று இன்னொரு செய்தி இருந்தது. அங்கிருந்து பார்க்கும் போது சுவாமி நாராயணனின் 49 அடி சிலையின் பின் பக்கம் தெரிந்தது. இவர்கள் எழுதி வைத்திருப்பது போலவே அவர் ஏழு வருடங்கள் ஒற்றைக் காலில் தவமிருந்தார் என்று வைத்துக் கொண்டாலும், இப்படியான பாலங்களை தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்பதற்காகவா அவர் தவமிருந்திருப்பார்? சேலத்தில் நித்தியும், கோயம்புத்தூரில் சத்குருவும், புட்டபர்த்தியில் சாயிபாபாவும், இலங்கையில் பிரேமானந்தாவும், இன்னும் எண்ணற்ற மனிதர்களாப் பிறந்து சாமிகளான பலரும் இதே பாலம் என்ற உருவகத்தை தானே வெவ்வேறு வழிகளில் சொல்லி தங்களை முன்னிறுத்தினார்கள். ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பி வந்த அடுத்த நாள் அயலவரைப் பார்த்தேன். 'சிட்னியில் உங்கள் கோவிலுக்கு போயிருந்தேன்..............' 'ஓ.......... போயிருந்தியா............ அதை மோதிஜி திறந்து வைத்தார்...............மந்திர் எப்படியிருக்கின்றது?' 'ஆ....... மோடி தான் திறந்தது என்று அங்கே சொன்னார்கள். 400 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் செலவு செய்து கட்டியிருக்கின்றார்கள்.' 'அவர்களிடம் பணம் நிறையவே இருக்கின்றது. எங்களில் பலர் தங்கள் வருமானத்தில் 25 வீதத்தை இதற்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்............' தங்களின் நம்பிக்கைகள் பொய்த்துப் போகும் போது மனிதர்கள் உடைந்து போகின்றார்கள் என்றால், கண்மூடித்தனமான நம்பிக்கைகளுடனே வாழும் மக்கள் வாழ்நாள் முழுவதும் ஏமாற்றப்பட்டுக் கொண்டும் இருக்கின்றார்களோ என்றும் தோன்றுகின்றது. (தொடரும்......................)

அநுரவின் அரசாங்கத்திலும் அடக்குமுறை நீடிக்கிறது ; சிவில் சமூக கூட்டமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டு : ஜனநாயக மறுப்புச் செயற்பாடுகளை நிறுத்துமாறும் வலியுறுத்து

3 weeks 4 days ago
21 Sep, 2025 | 11:31 AM (ஆர்.ராம்) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பிரசார காலத்தில் கொடூரமான சட்டங்களை அகற்றுவதாகவும் ஜனநாயக உரிமைகளை விரிவுபடுத்துவதாகவும் வாக்குறுதி அளித்த போதிலும், அவரது அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் பிரஜைகள் அடக்குமுறைக்கு உள்ளாகுவதாக உலகம் முழுவதும் குடிமக்கள் நடவடிக்கைகளையும் சிவில் சமூகத்தையும் பலப்படுத்தும் நோக்கில் செயற்படும் சிவில் சமூக கூட்டமைப்பின் (சிவிக்கஸ்) புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒழிப்பதாகவும், நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தின் முரணான விதிகளை திரும்பப் பெறுவதாகவும், ஒரு சுயாதீனமான வழக்குத்தொடுநர் அமைப்பை நிறுவுவதாகவும் உறுதியளித்து. ஆனால் பதவிக்கு வருந்து ஒரு வருடமாகியுள்ள நிலையில், அடக்குமுறைகள் நீடிப்பதோடு புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்களும் தொடர்கின்றன. வட,கிழக்கில் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தல், கண்காணிப்பு மற்றும் சட்டரீதியான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கின்றனர். அம்பாறையில் காணாமல் போனவர்களுக்கு நீதி கேட்டுப்போராடும் தம்பிராசா செல்வராணி, கிளிநொச்சியில் பெண்கள் உரிமைகள் அமைப்பாளர் வாசுகி வல்லிபுரம் போன்ற மனித உரிமை பாதுகாவலர்கள் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸாரால் விசாரிக்கப்பட்டனர். சிவில் சமூக அமைப்புகள் உளவுத்துறை சேவைகளால், குறிப்பாக நிதி தொடர்பாக, கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன, மேலும் அவை செயற்பட பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து பாதுகாப்பு அனுமதியைப் பெற வேண்டியுள்ளது. இவ்வாறான இராணுவமயமாக்கப்பட்ட மேற்பார்வை 'எதிர்ப்பு குரல்களை அடக்குவதற்கும் அவ்விதமான குரல்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்' என்பதோடு சர்வதேச கடமைகளை நேரடியாக மீறுகின்றன. வட,கிழக்கில் உள்ள பெண்கள் உரிமை அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன, கடுமையான அதிகாரத்தடைகள் அவற்றின் அன்றாட வாழ்வியலை அச்சுறுத்துகின்றன. அமைதியான ஒன்றுகூடலுக்கான அரசியலமைப்பு உத்தரவாதங்கள் இருந்தபோதிலும், பொலிஸார் ஆர்ப்பாட்டங்கள் மீது பலமுறை ஒடுக்குமுறைகளை மேற்கொண்டுள்ளனர். 2022 வெகுஜன போராட்டங்களுடன் தொடர்புடைய மாணவ அமைப்பாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியான நீதித்துறை துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர். 3,000 க்கும் மேற்பட்டோர் இன்னும் தீர்க்கப்படாத வழக்குகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். 2025 மார்சில், கொழும்பில் 27மாணவ செயற்பாட்டாளர்களை பொலிஸார் கைது செய்ததோடு தமிழர் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுத்த சம்பவங்களும் உள்ளன. தமிழர்களுக்கு எதிராக நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம், அரசாங்கத்தின் உறுதிமொழிகளை மீறி நடைமுறையில் உள்ளது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை எதிர்க்கும் ஸ்டிக்கர்கள் தொடர்பாக 22 வயது முஸ்லிம் செயற்பாட்டாளரான மொஹமட் ருஸ்டி இச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், யாழ்ப்பாணத்தில், மாவீரர் நாள் நிகழ்வின் போது, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றியதற்காக இளைஞர் ஒருவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதேபோன்று ஊடகவியலாளர்களில் குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்கள் தாக்குதல்கள் மிரட்டல்களையும் எதிர்கொண்டுள்ளனர். இன்னும் சிலர் கண்காணிப்புக்குள் காணப்படுகின்றனர். இதேவேளை, ஆயுத மோதலின்போது நடந்த பாரிய அட்டூழியங்கள் குறித்து ஐ.நா.வின் ஏராளமான சான்றுகள் காணப்படுகின்றபோதிலும், அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அரசாங்கம் தொடர்ந்து எதிர்க்கிறது. காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் போன்ற நிறுவனங்களை அரசாங்கம் செயற்படுத்துகின்றனது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் அதனை நிராகரித்துள்ளனர். ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் ஆகஸ்ட் மாதம், தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நீதியை வழங்குவதற்கான வரலாற்று வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தற்போதைய அரசாங்கத்தினை வலியுறுத்தியுள்ளார். அது சம்பந்தமான அரசாங்கத்தின் வினைத்திறனான செயற்பாடுகளை அவதானிக்க முடியவில்லை. அரசாங்கம் அரசியல் ரீதியான சீர்திருத்த வாக்குறுதிகளை வெளிப்படுத்தி வருகின்ற போதிலும், இலங்கை அடக்குமுறை கலாசாரத்தில் இருந்து முழுமையாக விடுபடவில்லை. அக்கலாசாரம் ஆழமாக வேரூன்றி உள்ளது என்றுள்ளது. https://www.virakesari.lk/article/225648

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025

3 weeks 4 days ago
ஓமான் அணியை 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி Published By: Vishnu 20 Sep, 2025 | 03:16 AM 2025 ஆசியக் கிண்ண ரி20 போட்டியின் "A" குழுவின் கடைசிய போட்டியான இந்தியா மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாணய சுழட்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 08 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி தமது 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழந்து 167 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது. https://www.virakesari.lk/article/225557

'ரஷ்ய போர் விமானங்களை இடைமறித்த நேட்டோ' - ஐரோப்பாவில் என்ன நடக்கிறது?

3 weeks 4 days ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மிக்-31 போர் விமானங்கள் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் ஜாரோஸ்லாவ் லுகிவ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்ய போர் விமானங்கள் தங்களின் வான் எல்லைக்குள் ஊடுருவியதாகக் கூறும் எஸ்டோனியா, நேட்டோ உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஊடுருவலை "அதிர்ச்சிகரமானது" என எஸ்டோனிய வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது. ரஷ்யாவின் மூன்று மிக்-31 போர் விமானங்கள் எஸ்டோனியா வான் பரப்புக்குள் அனுமதியின்றி நுழைந்து பின்லாந்து வளைகுடா மீது 12 நிமிடங்கள் வரை இருந்ததாக எஸ்டோனியா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேட்டோ படைகள் உடனடியாக எதிர்வினையாற்றி ரஷ்ய விமானங்களை இடைமறித்து திருப்பி அனுப்பியதாகக் கூறும் நேட்டோ செய்தித் தொடர்பாளர், "இது ரஷ்யாவின் அடாவடியான அணுகுமுறை மற்றும் நேட்டோவின் பதிலளிக்கும் திறனுக்கு மற்றுமொரு உதாரணம்." எனத் தெரிவித்துள்ளார். நேட்டோவின் கிழக்கு எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் இத்தாலி, பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் தங்களின் விமானங்களை அனுப்பி வைத்தன. ஆனால் எஸ்டோனிய வான் பரப்புக்குள் அத்துமீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், "போர் விமானங்கள் அனைத்தும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட வழித்தடத்தில் தான் பயணித்தன. சர்வதேச வான்பரப்பில், விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டும் மற்ற நாடுகளின் எல்லைகளை மீறாமலும் தான் இது மேற்கொள்ளப்பட்டது என கண்காணிப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளது. இந்த போர் விமானங்கள் எஸ்டோனியாவுக்குச் சொந்தமான வைண்ட்லூ தீவிலிருந்து 3 கிமீ தொலைவில் சர்வதேச எல்லைக்குட்பட்ட பகுதியில்தான் பறந்தன என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எஸ்டோனிய பிரதமர் கிறிஸ்டன் மிக்கேல் கடந்த வாரம் நேட்டோ உறுப்பினர்களான போலந்து மற்றும் ருமேனியா ஆகிய நாடுகள் தங்களின் வான்பரப்புக்குள் ரஷ்ய டிரோன்கள் அத்துமீறி நுழைந்ததாக கூறியதால் பதற்றம் அதிகரித்தது. இதற்குப் பதிலடியாக, கிழக்குப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்த போர் விமானங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை கிழக்கு நோக்கி நகர்த்தப் போவதாக நேட்டோ தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய எஸ்டோனியா பிரதமர் கிறிஸ்டன் மிக்கேல், நேட்டோவில் பிரிவு 4-ன் கீழ் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்த கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார். "எந்த விதமாக மிரட்டலுக்கும் நேட்டோவின் பதிலடி ஒன்றுபட்டதாகவும் வலுவானதாகவும் இருக்க வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலை பற்றிய விழிப்புணர்வை உறுதி செய்து அடுத்தக்கட்ட கூட்டு நடவடிக்கைகள் பற்றி ஒப்புக்கொள்ள நமது கூட்டாளிகளுடன் ஆலோசிப்பது அவசியம் என நாங்கள் கருதுகிறோம்." என்றார் அவர். "நான் அதை விரும்பவில்லை. இது நடந்தால் பெரிய பிரச்னையாக மாறும்" என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ரஷ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் எஸ்டோனியா, இந்த ஆண்டு தனது வான்வெளியில் ரஷ்யா செய்த ஐந்தாவது அத்துமீறல் இது எனக் குற்றம்சாட்டியுள்ளது. ரஷ்ய விமானங்கள் வடகிழக்கில் இருந்து எஸ்டோனிய வான்வெளிக்குள் நுழைந்தது. முதலில் பின்லாந்து வளைகுடாவுக்கு மேல் பின்லாந்து ஜெட் விமானங்கள் அதை இடைமறித்தன என்றும் பின்னர், எஸ்டோனியாவை தளமாகக் கொண்ட இத்தாலிய எஃப்-35 போர் விமானங்கள் ரஷ்ய விமானங்களைப் பின்தொடந்து சென்று எஸ்டோனியா வான் எல்லைக்கு வெளியே அனுப்பி வைத்தன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்ய ஜெட் விமானங்கள் எந்தவொரு பயணத் திட்டமும் இல்லாமல், டிரான்ஸ்பாண்டர்களை (transponders) அணைத்து, எஸ்டோனிய விமான கட்டுப்பாட்டுடன் வானொலி தொடர்பு இல்லாமல் இருந்தன என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது. ஆனால் இதற்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. "இந்த ஜெட் விமானங்கள் சர்வதேச வான்வெளியில் விதிமுறைகளுக்கு இணங்க திட்டமிடப்பட்ட வழித்தடத்தில் பறந்தன. பிற நாடுகளின் எல்லைகளை மீறவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்றும் அமைச்சகம் கூறியது. எஸ்டோனியாவுக்குச் சொந்தமான வைண்ட்லூ தீவிலிருந்து குறைந்தது 3 கிலோமீட்டர் தொலைவில் பால்டிக் கடல் பகுதியில் தான் அவை பறந்தன என்றும் தெரிவித்தது. 2022ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா, யுக்ரேனில் முழுமையான படையெடுப்பைத் தொடங்கியது. மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்து வருகிறார். சமீபத்தில் அவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அலாஸ்காவில் நடைபெறும் உச்சிமாநாட்டிற்கு அழைத்திருந்தார். ஆனால், புதினின் படைகள் போர் நிறுத்தத்திற்கான அழைப்புகளை நிராகரித்து, வான்வழித் தாக்குதல்களை அதிகரித்துள்ளன. தரை வழியாகவும் மெதுவாக முன்னேற்றம் காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யா யுக்ரேனில் திட்டமிட்டபடி போர் நடத்த முடியவில்லை என்பதை இந்த ஊடுருவல் காட்டுகிறது என்று எஸ்டோனிய பிரதமர் கூறினார். "நேட்டோ நாடுகள் தங்கள் சொந்த நிலப்பரப்புகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும்படி கட்டாயப்படுத்துவதன் மூலம், யுக்ரேன் மீதான கவனத்தையும், உதவியையும் திசை திருப்புவதே ரஷ்யாவின் நோக்கம்," என்றும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அலாஸ்கா உச்சிமாநாட்டில் டிரம்ப் - புதின் கடந்த வாரம், போலந்து ராணுவம் குறைந்தது மூன்று ரஷ்ய டிரோன்களைச் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்தது. போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், மொத்தம் 19 ட்ரோன்கள் போலந்து வான்வெளியில் நுழைந்ததாகக் கூறினார். இந்தச் சம்பவம் வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்று ரஷ்யா கூறியது. போலந்து நிலப்பரப்பில் உள்ள வசதிகளை குறிவைக்கும் "எந்தத் திட்டமும் இல்லை" என்றும் அதன் பாதுகாப்பு அமைச்சகம் விளக்கியது. ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளியான பெலாரஸ், வழிகாட்டும் கருவிகள் செயலிழந்ததால் டிரோன்கள் தவறுதலாக போலந்து வான்வெளிக்குள் நுழைந்தன எனக் கூறியது. பல நாட்களுக்கு பிறகு, "டான்யூப் (நதியில்) நதிக்கரையில் உள்ள யுக்ரேனிய உள்கட்டமைப்புகளின் மீது ரஷ்யா நடத்திய வான் தாக்குதலுக்குப் பின்", ருமேனிய எல்லையை கண்காணித்துக் கொண்டிருந்த இரண்டு எப்ஃ - 16 (F-16) ஜெட் விமானங்கள் ஒரு ரஷ்ய டிரோனைக் கண்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. பின்னர் அந்த டிரோன் ரேடாரிலிருந்து மறைந்ததாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் குறித்து ரஷ்யா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. போலந்து மற்றும் ருமேனியாவில் நடந்த இந்த ரஷ்ய ஊடுருவல்களுக்கு எதிர்வினையாக, நேட்டோ தனது துருப்புகள் மற்றும் போர் விமானங்களை கிழக்கு நோக்கி நகர்த்துவதாக அறிவித்தது. கூட்டணியின் கிழக்குப் பகுதியை வலுப்படுத்தும் முயற்சியில் போலந்து வான்வெளி பாதுகாப்பு பணிகளில் பிரிட்டன் , பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளின் போர் விமானங்கள் ஈடுபட்டுள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpvl0g7nxeyo

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமில்லை – நளிந்த ஜயதிஸ்ஸ

3 weeks 4 days ago
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமில்லை – நளிந்த ஜயதிஸ்ஸ. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்துப் தட்டுப்பாட்டுக்கு நிதிப் பிரச்சினை காரணமில்லை என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அம்பாறை பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார். கொள்முதலில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அத்துடன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள மருந்துகள் வரும் நவம்பர் மாதத்திற்குப் பின்னர் நாட்டில் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், மருந்துப் பதிவின் போது வரம்பற்ற விலைகளை அனுமதிக்க முடியாததால் சில நிறுவனங்கள் விநியோகத்தில் ஈடுபடவில்லை என்றும், தெற்காசிய சந்தை நிலையை அடிப்படையாகக் கொண்டு விலை வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சுமார் 80% – 85% கொள்முதல் பணி ஏற்கனவே நிறைவு பெற்றிருப்பதாகவும், நவம்பர் மாதத்திற்குப் பின்னர் மருந்து விநியோகம் சீராகும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447913

"பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!" ஆவணக் காட்சியகம் திறப்பு

3 weeks 4 days ago
Published By: Vishnu 21 Sep, 2025 | 12:31 AM தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் "பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!" எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் 20ஆம் திகதி சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் 20ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது. தியாக தீபம் திலீபனின் பிரதான தூபி முன்றலில் மலரஞ்சலி செலுத்தப்பட்டு வரலாற்று ஆவணக் காட்சியகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆவண காட்சியகத்தில் தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலை மூத்த போராளி பஷீர் காக்காவால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் சுடரேற்றி மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தியாக தீபம் திலீபனின் வரலாற்று புகைப்படங்கள், பத்திரிகை ஆவணங்கள் என்பன தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். படங்கள் - ஐ. சிவசாந்தன் https://www.virakesari.lk/article/225621

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

3 weeks 4 days ago
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 78 மீனவர்கள் கைது! கடந்த இரண்டு வாரங்களில், சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 78 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் உள்நாட்டு கடற்பகுதியில் நடத்திய சோதனையின் போதே, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த மீனவர்களுடன், 35 டிங்கி படகுகளையும், பல நாள் மீன்பிடி படகு ஒன்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் உள்ளிட்ட முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேகநபர்கள் திருகோணமலையைச் சுற்றியுள்ள கடலோர பகுதிகளிலும், காரைதீவு முதல் நிந்தவூர் வரையிலான கடல் பகுதியிலும், நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447893

கோவை: வனத்துறையிடம் பிடிபடாத 'ரோலக்ஸ்' - நள்ளிரவில் மருத்துவரை தாக்கிவிட்டு தப்பியது எப்படி?

3 weeks 4 days ago
பட மூலாதாரம், TN Forest Department படக்குறிப்பு, ரோலக்ஸ் யானை கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 20 செப்டெம்பர் 2025 கோவை அருகே 4 பேரைக் கொன்றதாகக் கருதப்படும் ரோலக்ஸ் என்ற ஆண் யானையை, 3 கும்கி யானைகளைக் கொண்டும், மயக்க ஊசி செலுத்தியும் பிடிப்பதற்காக எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. ஆனால் கடந்த 7, 8 ஆண்டுகளில் இந்த யானையால் தாக்கப்பட்டு 8 பேருக்கும் மேல் இறந்திருப்பதாகக் கருதப்படுவதால் இதைப் பிடிக்கும் முயற்சியை வனத்துறை தீவிரமாக்கியுள்ளது. யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் முயற்சியின் போது யானை தாக்கியதில் ஆனைமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவன் காயமடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த யானையால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அதைப் பிடிப்பதற்கு தலைமை வனக் காப்பாளர் உத்தரவிட்டுள்ளதால் இந்த முயற்சி தொடருமென்றும் வனத்துறை தெரிவித்துள்ளது. ரோலக்ஸ் யானை என்ற பெயர் வந்தது எப்படி? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வனத்துறையிடம் பெறப்பட்ட தகவல்களில், 2011–2022 இடையிலான 12 ஆண்டுகளில், கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட 85 கிராமங்களில், யானைகள் தாக்கி 147 பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களில் 102 பேர், வனப்பகுதிக்கு வெளியே இறந்துள்ளனர். இதே காலகட்டத்தில், பல்வேறு காரணங்களால் 176 யானைகள் இறந்துள்ளன. அவற்றில் 109 யானைகள், மனித நடவடிக்கைகளால் பலியாகியிருக்கின்றன என்றும் தெரியவந்திருந்தது. சமீபகாலமாக கோவை வனக்கோட்டத்தில் குறிப்பாக கோவை மற்றும் போளுவாம்பட்டி ஆகிய 2 வனச்சரகப் பகுதிகளில் யானை தாக்கி, 4 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவருமே ஒரு குறிப்பிட்ட யானை தாக்கியே இறந்திருப்பதும் வனத்துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் யானையின் நடமாட்டம், இந்த 2 வனக் கோட்டத்துக்குட்பட்ட தொண்டாமுத்துார், நரசிபுரம், தடாகம், தாளியூர், கெம்பனுார், குப்பேபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை வனக்கோட்டத்தில் யானை–மனித மோதல் அதிகம் நடப்பதால் இதற்கென யானை துரத்தும் காவலர்கள் அடங்கிய குழு, காட்டை விட்டு வெளியேறும் யானைகளை தொடர்ச்சியாகக் கண்காணித்து, 'தடம்' எனப்படும் வாட்ஸ்ஆப் குழுக்களில் தகவல் பகிர்ந்து வருகின்றனர். இந்த குழுவினர் இந்த யானையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பட மூலாதாரம், TN Forest Department படக்குறிப்பு, தோட்டப் பகுதியில் ரோலக்ஸ் யானை ஏற்படுத்தியுள்ள சேதம். கடந்த சில மாதங்களில் அட்டுக்கல், ஜவ்வுக்காட்டுப்பகுதி, நரசிபுரம், வைதேகி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் செல்வி, ரத்தினம், மருதாசலம் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகள் அனைத்தும் இந்த யானையால்தான் நிகழ்ந்துள்ளன என்று வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். இதன் வருகையையும், நடவடிக்கைகளையும் பார்த்து சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், இந்த யானைக்கு ரோலக்ஸ் என்று பெயரிட்டுள்ளனர். கமல் நடித்து வெளியான 'விக்ரம்' திரைப்படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து இந்த பெயர் சூட்டப்பட்டிருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த யானை வரும் வீடியோவுடன் ரோலக்ஸ் காட்சிகளில் வரும் பின்னணி இசையையும் கோர்த்து சமூக ஊடகங்களில் பலரும் பரவவிட்டுள்ளனர். அதிலிருந்தே இந்த யானையின் பெயரும் ரோலக்ஸ் என்றே நிலைத்துவிட்டது. இந்த யானையைப் பிடிப்பதற்கு தமிழக அரசின் தலைமை வனப்பாதுகாவலரால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதற்குப் பின் இதைப் பிடிப்பதற்கு, டாப்ஸ்லிப் யானைகள் முகாமிலிருந்து முத்து, நரசிம்மர் ஆகிய 2 யானைகளும், வால்பாறையிலிருந்து கபில்தேவ் என்ற கும்கி யானையும் வரவழைக்கப்பட்டுள்ளன. 'ரோலக்ஸ்' யானையை பிடிப்பதில் என்ன சிக்கல்? கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி இரவில், கெம்பனுார்–தாளியூர் ஆகிய இரு ஊர்களுக்கு இடையில், ரோலக்ஸ் யானையை மயக்கஊசி செலுத்திப் பிடிப்பதற்கு முயற்சி நடந்துள்ளது. யானைகள் மீட்புப் பணிகளில் வனத்துறையுடன் இணைந்து நீண்ட காலமாகப் பணியாற்றிய கால்நடை பராமரிப்புத்துறையின் ஓய்வு பெற்ற உதவி இயக்குநர் கால்நடை மருத்துவர் மனோகரன், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் குழுவினர், ரோலக்ஸ் யானைக்கு மயக்கஊசி செலுத்துவதற்காக, அதற்கான துப்பாக்கிகளுடன் காத்திருந்தனர். ஒரே நேரத்தில் இருவரும் மயக்க ஊசியைச் செலுத்திய போது, யானை அதில் சிக்காமல் தப்பிவிட்டதாக வனத்துறையினர் கூறுகின்றனர். படக்குறிப்பு, கால்நடை மருத்துவர் விஜயராகவன் மயக்க ஊசி செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனத்துறை கால்நடை மருத்துவர் விஜயராகவன் பிபிசி தமிழிடம் பேசியபோது, ''அன்றிரவு மயக்கஊசி செலுத்த (tranquillize) முயற்சி செய்தோம். ஊசிகளைச் செலுத்தியபோது, அது தவறிவிட்டது. இரவு நேரங்களில்தான் அந்த யானை அதிகமாக வெளியில் வருகிறது. இதனால் அதனை பிடிப்பது சற்று கடினமாக இருக்கிறது.'' எனத் தெரிவித்திருந்தார். பகலிலும் யானை வெளியில் வருகிறதா என்பதற்காக தொடர்ந்து முயற்சிகள் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். பகலில் கும்கிகளைக் கொண்டு அந்த யானையைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தால், அதன்பின்னால் பெரும் கூட்டம் கூடிவிடுவதால் அந்த முயற்சியைத் தொடர முடியவில்லை என்று வனத்துறையினர் வருந்துகின்றனர். டிரோன் உதவியுடனும் வனத்துறையினர் ரோலக்ஸ் யானையை தேடி வருகின்றனர். ரோலக்ஸ் யானைக்கு ஒரே நேரத்தில் 2 மயக்க ஊசிகளைச் செலுத்த வேண்டியிருப்பதன் அவசியம் குறித்து, வனத்துறை கால்நடை மருத்துவர்கள் விளக்கினர். அந்த யானை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதுடன், தற்போது இனப்பெருக்கத்துக்குத் தயார் நிலையில் (மஸ்த்) இருப்பதால் அதற்கு 3 விதமான மருந்துகளை இணைத்துக் கொடுக்க வேண்டியுள்ளது என்கின்றனர். ஒரே ஊசியில் அவ்வளவு மருந்தைச் செலுத்த முடியாது என்பதால்தான் இரண்டு ஊசிகளில் ஒரே நேரத்தில் செலுத்த முயற்சிப்பதாகக் கூறினர். படக்குறிப்பு, யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி பெயர் கூற விரும்பாத வனத்துறை கால்நடை மருத்துவர் ஒருவர், ''வீட்டுப் பிராணிகளை மயக்கமுற வைப்பதற்கும், காட்டுவிலங்குகளை மயக்கமுற வைப்பதற்கும் வெவ்வேறு விதமான மருந்துகள், வெவ்வேறு விதமான அளவுகளில் (எம்ஜி) மருந்துகள் செலுத்த வேண்டியிருக்கும். அதேபோன்று இரவு நேரமாக இருந்தால் யானை நின்று கொண்டே துாங்குவதற்கு ஒருவிதமான மருந்தும், பகல் நேரமாக இருந்தால் மயங்கி சாயும் வகையிலுமாக மற்றொரு வகை மருந்தும் பயன்படுத்தப்படும்.'' என்றார். அதுபற்றி மேலும் விளக்கிய அவர், ''சமீபகாலமாக யானைகளைப் பிடிக்கும் எல்லா முயற்சிகளிலும் யானைகள் நின்று கொண்டு துாங்கும் மருந்தே (ஹிப்னாடிசனம்) பயன்படுத்தப்படுகிறது. அதற்கான மருந்தை ஊசிகளில் செலுத்திவிட்டு அருகில் சென்றாலும் அதனால் எதையும் செய்ய இயலாது. காட்டுயானைகள் பெரும்பாலும் இரவில் வெளியில் வருகின்றன. ஆனால் இரவு நேரத்தில் இருளுக்கு மத்தியில் யானைகள் நிற்குமிடத்தை துல்லியமாக அறிந்து ஊசியைச் செலுத்துவது பெரும் கஷ்டம்.'' என்றார். ரோலக்ஸ் யானை பற்றி வனத்துறையினர் கூடுதல் தகவல் படக்குறிப்பு, கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷ் பிபிசி தமிழிடம் பேசிய போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன், ''கடந்த சில மாதங்களில் இந்த யானையால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இரு ஆண்டுகளுக்கு முன் மருதமலை பகுதியிலும் வயதானவர் ஒருவரை தாக்கிக் கொன்றுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 8 முதல் 10 பேர் இந்த யானையால் உயிரிழந்திருக்கலாம் என்று கருதுகிறோம். ஆனால் இந்த யானை ஊருக்குள் ஊடுருவி யாரையும் கொன்றதில்லை. அதன் வழியில் வந்தவர்களைத் தாக்கியுள்ளது.'' என்றார். ரோலக்ஸ் யானையால் கடந்த 2 ஆண்டுகளில் 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்த கோவை வனச்சரக அலுவலர் திருமுருகன், தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவுக்குப் பின் அதைப் பிடிக்கும் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது என்றார். இப்போது 3 கும்கி யானைகளுடன், 3 குழுவினர் கண்காணித்து வருவதால் விரைவில் பிடித்துவிடுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மயக்க ஊசி செலுத்தப்பட்டதா, செலுத்தப்படவில்லையா என்பது குறித்து கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''மயக்க ஊசி செலுத்த முயற்சி நடந்தது. ஆனால் செலுத்த முடியவில்லை. அதற்குள் யாரோ ஒருவர் விளக்கு ஒளியைக் காண்பித்ததால் அது நகர்ந்து வாழைத்தோட்டத்திற்குள் புகுந்துவிட்டது. ட்ரோன் மூலமாகக் கண்காணித்தும் அதைப் பின்தொடர முடியவில்லை.'' என்றார். யானை தாக்கி கால்நடை மருத்துவர் காயம் சனிக்கிழமை அதிகாலை தொண்டாமுத்தூரை அடுத்த பரமேஸ்வரன்பாளையத்தில் தனியார் தோட்டத்திற்குள் காட்டு யானையை பிடிக்கும் பணியின்போது கால்நடை மருத்துவர் விஜயராகவனை யானை தாக்கியுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் விஜயராகவனுக்கு முதுகெலும்பு மற்றும் இடது மோதிர விரலில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனரும் கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலருமான வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg4vj37nz1o

தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்

3 weeks 4 days ago
இவர் தமிழ்நாட்டு மக்களை தான் ஏமாற்றுகின்றார் என்று பார்த்தால் ஈழ தமிழர்களையும் சேர்த்து ஒரு வழி பார்க்க வேண்டும் என்று தான் நிற்கின்றார்.

இனி அமெரிக்காவில் வேலை சாத்தியமற்றதா? - எச்1பி கட்டண உயர்வால் இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு?

3 weeks 4 days ago
இனி அமெரிக்காவில் வேலை சாத்தியமற்றதா? - எச்1பி கட்டண உயர்வால் இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு? பட மூலாதாரம்,Getty Images அமெரிக்காவில் வெளிநாடுகளைச் சேர்ந்த ஊழியர்களை பணிக்கு எடுப்பதற்கான ஹெச்1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக உயர்த்தி, வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 19) அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 'பன்மடங்கு விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்திய மென்பொருள் நிறுவனங்களின் வருவாயில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்' என, தொழில்துறை அமைப்புகள் கூறுகின்றன. 'ஆண்டுதோறும் விசா கட்டணத்தை செலுத்த வேண்டும்' என்ற டிரம்பின் புதிய உத்தரவால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். டிரம்பின் உத்தரவால் இந்திய மென்பொருள் துறைக்கு எந்தெந்த வகைகளில் பாதிப்பு ஏற்படும்? அமெரிக்காவில் பணிபுரிய வரும் வெளிநாட்டவர்களுக்கு ஹெச்1பி விசாவுக்கான கட்டணம் என்பது 1 லட்சம் அமெரிக்க டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 88 லட்ச ரூபாய் என்பதால் தனியார் மென்பொருள் நிறுவனங்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க வர்த்தகத்துறை செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர்களைக் கட்டணமாக வழங்குவதற்கு அனைத்துப் பெரிய நிறுவனங்களும் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்தார். அமெரிக்கர்களுக்கான வேலையில் வெளிநாட்டவரை அழைத்து வருவதை நிறுத்துமாறு கூறிய லுட்னிக், "அமெரிக்காவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து வெளிவரும் பட்டதாரிகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்" எனவும் தெரிவித்தார். "ஹெச்1பி விசா பெறும் விண்ணப்பதாரர்களுக்கு நிதி உதவி செய்யக்கூடிய நிறுவனங்கள், 1 லட்சம் டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். இதன்மூலம் அவர்கள் கொண்டு வரும் ஊழியர்கள், திறமையானவர்கள் என்பதை உறுதி செய்யப்படும்" என, அமெரிக்க அதிபர் மாளிகையின் பணியாளர் செயலாளர் வில் ஷார்ஃப் கூறியுள்ளார். மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசா நடைமுறைகளில் ஒன்றாக ஹெச்1பி விசா உள்ளதாகவும் வில் ஷார்ஃப் தெரிவித்தார். அமெரிக்காவில் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக உள்ள துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களை பணிக்கு எடுக்கும் வகையில் ஹெச்1 பி விசா வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், டிரம்பின் அறிவிப்பின் மூலம் பல்வேறு விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக, தொழில்துறையினர் கூறுகின்றனர். 'குழப்பத்தை ஏற்படுத்திய அறிவிப்பு' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசா நடைமுறைகளில் ஒன்றாக ஹெச்1பி விசா உள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. பிபிசி தமிழிடம் பேசிய இந்திய வர்த்தம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் (FICCI) தமிழ்நாடு தொழில்நுட்ப பிரிவின் தலைவர் ராஜாராம், "ஆண்டுதோறும் சுமார் 70 சதவீத ஹெச்1பி விசாக்களை இந்தியர்கள் பெறுகின்றனர். இதில் அதிக விசாக்களை அமேசான் நிறுவனம் எடுக்கிறது. காக்னிசன்ட், டிசிஎஸ், கூகிள், மைக்ராசாஃப்ட், இன்ஃபோஸிஸ், மெட்டா, ஹெச்சிஎல் ஆகிய நிறுவனங்கள் ஹெச்1பி விசா மூலம் ஆட்களைத் தேர்வு செய்கின்றன" என்கிறார். "ஹெச்1பி விசா என்பது மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும். அதன்பிறகு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும். அந்தவகையில், மொத்தமாக ஆறு ஆண்டுகளுக்கு விசா வழங்கப்படுகிறது." எனக் கூறுகிறார், ராஜாராம். தற்போது ஆண்டுக்கு 100 ஆயிரம் டாலர்களை செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகிறார். எந்ததெந்த வகைகளில் பாதிப்பு? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,'இந்திய மென்பொருள் நிறுவனங்கள், ஆண்டுதோறும் சுமார் 30 ஆயிரம் ஹெச்1 பி விசாக்கள் மூலம் ஆட்களை அனுப்புகின்றன.' "இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு எந்தெந்த வகைகளில் பாதிப்பு ஏற்படும்?" என ராஜாராமிடம் பிபிசி தமிழ் கேட்டது. அவர், "இந்திய மென்பொருள் நிறுவனங்கள், ஆண்டுதோறும் சுமார் 30 ஆயிரம் ஹெச்1 பி விசாக்கள் மூலம் ஆட்களை அனுப்புகின்றன. இந்த ஊழியர்கள் அமெரிக்கா செல்வதால், வாடிக்கையாளரிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்க முடியும்" என்கிறார். "அமெரிக்காவில் இருந்து சுமார் 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள புராஜக்ட்களை இந்திய நிறுவனங்கள் கையாள்வதாக இருந்தால் சுமார் 15 சதவீத ஊழியர்களை ஆன்சைட் பணியாக அமெரிக்காவுக்கு அனுப்புகின்றனர். இனி தனி நபருக்கு 100 ஆயிரம் டாலர்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், நிறுவனங்களின் வளர்ச்சி பாதிக்கும்" எனவும் ராஜாராம் கூறுகிறார். "இதன் காரணமாக, மென்பொருள் நிறுவனங்களின் லாபம் என்பது பல மடங்கு குறைந்துவிடும். இது சவாலானதாக இருக்கும்" எனவும் ராஜாராம் குறிப்பிட்டார். விசா கட்டுப்பாடுகளால் இந்திய நிறுவனங்களின் லாபத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் பங்குச் சந்தையில் வரும் நாட்களில் இதன் பாதிப்பு தெரியவரும் எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். 'அமெரிக்காவுக்கும் சிக்கல்' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,புதிய விசா நடைமுறையின் மூலம் முதல்முறையாக பணிக்குச் செல்கிறவர்கள் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர். "புதிய நடைமுறையால் அமெரிக்க நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். மென்பொருள் துறையில் அமெரிக்கர்களின் சம்பளம் என்பது இந்தியர்களைவிட பத்து மடங்கு அதிகமாக உள்ளது. அதனால் தான் வெளிநாட்டினரை அதிகளவில் பணிக்கு எடுக்கின்றனர்" எனக் கூறுகிறார், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மூத்த விஞ்ஞானியாக (Chief scientist) பணியாற்றி ஓய்வுபெற்ற சுகி வெங்கட். புதிய விசா நடைமுறையின் மூலம் முதல்முறையாக பணிக்குச் செல்கிறவர்கள், குறைவான அனுபவம் உள்ளவர்கள் இனி அமெரிக்காவுக்கு செல்வதற்கான வாய்ப்புகளே இல்லை எனக் கூறுகிறார், ராஜாராம். "குறைவான அனுபவம் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 70 ஆயிரம் டாலர் வரை சம்பளமாக இந்திய நிறுவனங்கள் தருகின்றன. இவர்களுக்கு ஆண்டுக்கு 100 ஆயிரம் டாலர்களை விசா கட்டணமாக செலுத்துவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. சம்பளத்தை விடவும் விசா கட்டணம் அதிகமாக உள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டார். 'தென்னிந்தியாவுக்கு அதிக பாதிப்பு' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2022 அக்டோபர் முதல் செப்டம்பர் 2023 வரையிலான கால கட்டத்தில் ஹெச்1பி விசா பெற்றவர்களில் 72.3 சதவீதம் பேர் இந்தியர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென்னிந்திய மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பைப் பட்டியலிட்ட ராஜாராம், "பெங்களூரு, ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களில் அதிக மென்பொருள் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து சுமார் 30 முதல் 35 சதவீதம் பேர் அமெரிக்கா செல்கின்றனர்" என்கிறார். அமெரிக்காவுக்கு ஹெச்1பி விசா மூலம் செல்லும் இந்தியர்கள் குறித்த தரவுகளை கடந்த பிப்ரவரி 6 அன்று மாநிலங்களவையில் இந்திய அரசு தெரிவித்தது. அதன்படி, 2022 அக்டோபர் முதல் செப்டம்பர் 2023 வரையிலான கால கட்டத்தில் ஹெச்1பி விசா பெற்றவர்களில் 72.3 சதவீதம் இந்தியர்கள். இதனை அமெரிக்க அரசின் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் வழங்கியுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்திய அரசு தெரிவித்தது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்படும் எனக் கூறுகிறார், ராஜாராம். 'பணத்தைக் கட்டும் வாய்ப்புகள் குறைவு' அமெரிக்க அரசின் புதிய அறிவிப்புக்கு முன்னதாக ஹெச்1பி விசா பெற்றவர்களை 21ஆம் தேதி இரவுக்குள் வருமாறு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. "அவ்வாறு அமெரிக்கா செல்லாவிட்டால் விசா ரத்தாவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனைத் தவிர்க்கும் வகையில் ஓரிரு நாட்களில் அமெரிக்கா செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்" எனக் கூறுகிறார் சுகி வெங்கட். "விசா ரத்து செய்யப்பட்டுவிட்டால் மீண்டும் அதனைப் பெறுவதற்கு 100 ஆயிரம் டாலர்களைக் கட்ட வேண்டும். இவ்வளவு பணத்தை யாரும் கட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவு" எனக் கூறும் சுகி வெங்கட், "ஆண்டுதோறும் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் ஏற்கெனவே பணி செய்கிறவர்களை இந்தியா வருமாறு அழைக்கலாம்" எனவும் அவர் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு கொடுக்கும் உற்பத்தி காரணமாக இப்படியொரு முடிவை அமெரிக்க அரசு எடுத்துள்ளதாகக் கூறும் ராஜாராம், "இந்தியாவில் இதுதொடர்பான நிறுவனங்களை அதிகளவில் உருவாக்கலாம். அதற்கான மிகப்பெரிய வாய்ப்பாகவும் இருக்கும்" என்கிறார். "மனிதாபிமான விளைவுகள் ஏற்படலாம்" அமெரிக்காவின் இந்த முடிவு குறித்து இந்திய வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க H1B விசா திட்டத்தில் முன்மொழியப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்பான அறிக்கைகளை இந்திய அரசு பார்த்தது. இந்த நடவடிக்கையின் முழு தாக்கங்களையும் சம்பந்தப்பட்ட அனைவரும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தியா மற்றும் அமெரிக்கா என இருநாடுகளின் தொழில்துறைகளும், புதுமை மற்றும் படைப்பாற்றலில் பங்கு வகிக்கின்றன. சிறந்த பாதையில் ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திறன்சார் தொழிலாளர் பரிமாற்றங்கள் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் தொழில்நுட்ப மேம்பாடு, புதுமை, பொருளாதார வளர்ச்சி, போட்டித்தன்மை மற்றும் செல்வத்தை உருவாக்க மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளன. எனவே பரஸ்பர நன்மைகளை கணக்கில் கொண்டு கொள்கை வகுப்பாளர்கள் சமீபத்திய நடவடிக்கைகளை மதிப்பிடுவார்கள். இந்த நடவடிக்கை குடும்பங்களுக்கு ஏற்படுத்தும் இடையூறு மூலம் மனிதாபிமான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்த இடையூறுகளை அமெரிக்க அதிகாரிகளால் பொருத்தமான முறையில் நிவர்த்தி செய்ய முடியும் என இந்திய அரசு நம்புகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க H1B விசா திட்டத்தில் முன்மொழியப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்பான அறிக்கைகளை அரசாங்கம் கண்டுள்ளது. இந்த நடவடிக்கையின் முழு தாக்கங்களையும் சம்பந்தப்பட்ட அனைவரும் ஆய்வு செய்து வருகின்றனர், இதில் இந்திய தொழில்துறையும் அடங்கும், இது ஏற்கனவே H1B திட்டம் தொடர்பான சில கருத்துக்களை தெளிவுபடுத்தும் ஆரம்ப பகுப்பாய்வை வெளியிட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு BBC News தமிழ்இனி அமெரிக்காவில் வேலை சாத்தியமற்றதா? - H1B கட்டண உயர்வ...அமெரிக்காவில் பணிபுரிய வரும் வெளிநாட்டவர்களுக்கு ஹெச்1 பி விசாவுக்கான கட்டணம் என்பது 1 லட்சம் அமெரிக்க டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. டிரம்பின் உத்தரவால் இந்திய மென்பொருள் துறைக்கு எந்தெந்த வகைகளில் பாத

ஒரு பயணமும் சில கதைகளும்

3 weeks 5 days ago
யசோதரன் எங்களுக்குப் படம் காட்டப்போகின்றார் என பெரிதாக இந்தக் கதையை வாசிக்காமல் சென்று விட்டேன் இப்போது அப்படி என்ன தான் எழுதுகின்றார் என் ஒரு எட்டு எட்டிப் பார்க்கலாம் என்று வந்தால் ..... மிகுதிக் கதை எப்போது வரும் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றேன் கதையும்..... கதையுடன் சேர்ந்து வரும் செய்திகளும்.... சம்பவங்களும்...... நன்றாக இருக்கின்றது என்பதை விட...... மிகுதி இப்போது வரும் என்ற எண்ணமே அதிகமாக இருக்கின்றது தொடருங்கள்
Checked
Thu, 10/16/2025 - 21:28
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed