புதிய பதிவுகள்2
எரிசக்தி திட்ட ஆரம்ப செலவை திருப்பிச் செலுத்துமாறு அதானி நிறுவனம் கோரிக்கை!
எரிசக்தி திட்ட ஆரம்ப செலவை திருப்பிச் செலுத்துமாறு அதானி நிறுவனம் கோரிக்கை! அதானி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை கைவிட்ட அரசாங்கம், இப்போது அந்த நிறுவனத்தால் ஆரம்பத்தில் செலவழிக்கப்பட்ட சில மில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீவு நாட்டுடனான இரண்டு முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டங்களிலிருந்து விலகுவதாக இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் இலங்கை அரசாங்கத்திற்கு முன்னதாகத் தெரிவித்திருந்தது. தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கீழ், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலையைக் குறைக்க இலங்கை முயன்றதை அடுத்து, நிறுவனம் அந்த முடிவை எடுத்தது. அதானியுடன் இந்தத் திட்டத்தை மேற்கொண்ட கடந்த அரசாங்கத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட செலவை NPP அரசாங்கம் ஏற்கவில்லை. வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் மற்றும் பூனேரி நகரங்களில் 442 மில்லியன் டொலர்களை முதலீடு செய்து, காற்றாலை மின் நிலையத் திட்டத்தை இந்த நிறுவனம் நிர்மாணிக்கவிருந்தது. இந்தத் திட்டம் 2025 ஆம் ஆண்டுக்குள் தேசிய மின் கட்டமைப்பில் குறைந்தது 350 மெகாவாட் மின்சாரத்தைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆண்டு மே மாதம், நிறுவன அதிகாரிகள், இலங்கையில் நிலையான எரிசக்தி ஆணையத்துடன் (SEA) இணைந்து ஆராய்ச்சி மற்றும் விசாரணைக்காக ஆரம்பத்தில் செய்த செலவுகளைத் திருப்பிச் செலுத்துமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பினர். இருப்பினும், SEA-க்கு செலுத்தப்பட்ட 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உட்பட அனைத்து செலவுகளையும் உள்ளடக்கிய மதிப்பீடு செய்யப்பட வேண்டிய சரியான தொகையை நிறுவனம் இன்னும் குறிப்பிடவில்லை. திருப்பிச் செலுத்துவது குறித்து மின் மற்றும் எரிசக்தி அமைச்சு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. தற்போதைய நிலை குறித்து கேட்டபோது, இது தொடர்பாக சட்ட ஆலோசனை பெறப்படும் என்று மின்சக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஏதேனும் பணம் செலுத்தப்பட வேண்டியிருந்தால், அது அமைச்சரவை ஒப்புதல் மூலம் மட்டுமே இறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1438289
மெக்சிகோவில் முதலையைத் திருமணம் செய்த மேயர்!
மெக்சிகோவில் முதலையைத் திருமணம் செய்த மேயர்! மெக்ஸிகோ நாட்டின் ஓக்சகா பகுதியில் மழை வேண்டி, மேயருக்கும்,முதலையொன்றுக்கும் பொதுமக்கள் திருமணம் செய்து வைத்த நிகழ்வு உலக அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள்ளது. இந்த நிகழ்வு, ஓக்சகா மாநிலத்திலுள்ள சான் பெட்ரோ ஹுவாமெலுலா என்ற நகரத்தில் நடைபெற்றது. அந்நகரின் மேயராக செயற்பட்டுவரும் டேனியல் குடியெரஸ் பென்யா என்பவரே “பிரின்சஸ் கேர்ல்” என அழைக்கப்படும் ஒரு பெண் முதலையைத் திருமணம் செய்து கொண்டார். அப்பகுதியில் வசிக்கும் Chontal மற்றும் Huave எனப்படும் இரண்டு பழங்குடி சமூகங்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடத்தப்படும் இத்திருமண நிகழ்வானது அப்பகுதி மக்கள் இயற்கை மீது வைத்திருக்கும் நெருங்கிய உறவை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. சுமார் 230 வருடங்களாக அப்பகுதி மக்கள் குறித்த மரபினை பின்பற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சடங்குகள் மழை, விளைநில வளம் மற்றும் மீன்பிடி வளம் பெருக வேண்டி நடத்தப்படும் ஆன்மீக நிகழ்வாகவும் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438336
ஜப்பான் தீவில் ஒரு வாரத்தில் சுமார் 1,600 நிலநடுக்கங்கள்;
ஜப்பான் தீவில் ஒரு வாரத்தில் சுமார் 1,600 நிலநடுக்கங்கள். ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தின் தொலைதூரப் பகுதியான அகுசேகி தீவில் கடந்த இரண்டரை வாரங்களில் சுமார் 1,600 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ச்சியான நில அதிர்வு செயல்பாடு சிறிய தீவு சமூகத்தினரிடையே கடுமையான துயரத்தையும் பரவலான தூக்கமின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (06) இரவு 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், திங்கட்கிழமை நிலவரப்படி அகுசேகி தீவில் பெரிய சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்பதை உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், ஜூன் 21 ஆம் திகதி தொடங்கிய தொடர்ச்சியான நிலநடுக்கங்கள், மக்களின் நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஜூன் 21 முதல் இந்தப் பகுதி சுமார் 1,582 நில அதிர்வு நிகழ்வுகளால் உலுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Athavan Newsஜப்பான் தீவில் ஒரு வாரத்தில் சுமார் 1,600 நிலநடுக்கங்கள்;ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தின் தொலைதூரப் பகுதியான அகுசேகி தீவில் கடந்த இரண்டரை வாரங்களில் சுமார் 1,600 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகள...
குழந்தைகளை பிரசவிக்கும் பாடசாலை மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க திட்டம்!
நல்ல விடயம்.
ஆப்ரேஷன் சிந்தூர்; ரஃபேல் நற்பெயரை கலங்கப்படுத்த முயற்சிக்கும் சீனா!
ஆப்ரேஷன் சிந்தூர்; ரஃபேல் நற்பெயரை கலங்கப்படுத்த முயற்சிக்கும் சீனா! பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னர், பிரான்சின் முதன்மை ரஃபேல் போர் விமானங்களின் செயல்திறன் குறித்த சந்தேகங்களைப் பரப்ப சீனா தனது தூதரகங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பிரெஞ்சு உளவுத்துறையின்படி, போர் விமானங்களின் விற்பனை மற்றும் நற்பெயரைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த சீனா தனது தூதரகங்களைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. அசோசியேட்டட் பிரஸ் அறிக்கையின்படி, பிரெஞ்சு இராணுவ போர் விமானத்தை வாங்குவதை நாடுகளை நிறுத்த வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ரஃபேல் ஜெட் விமானங்களின் விற்பனை மற்றும் செயல்திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் குற்றச்சாட்டை வழிநடத்த சீன தூதரகங்களில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் பிற ஆயுதங்களின் விற்பனை பிரெஞ்சு பாதுகாப்புத் துறைக்கு ஒரு பெரிய வணிகமாகும். முதன்மை ஜெட் விமானங்களின் விற்பனை பாரிஸுக்கு ஏனைய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்த உதவியுள்ளது. குறிப்பாக ஆசியாவில் சீனா ஆதிக்கம் செலுத்தும் பிராந்திய சக்தியாக மாறி வருகிறது. AP செய்திச் சேவையின் தகவலின்படி, பெயர் வெளியிட விரும்பாத ஒரு பிரெஞ்சு இராணுவ அதிகாரி இந்த தகவல்களை வெளியிட்டார். பிரான்சின் குற்றச்சாட்டு, அதன் முதன்மை ரஃபேல் ஜெட் விமானத்திற்கு எதிரான தவறான தகவல் பிரச்சாரத்தை எதிர்த்துப் போராடுவதாகக் கூறுகிறது. மே மாதத்தில் நான்கு நாள் மோதலின் போது ஐந்து இந்திய விமானப்படை விமானங்களை இஸ்லாமாபாத் சுட்டு வீழ்த்தியதாகக் கூறியதைத் தொடர்ந்து, தவறான தகவல் பிரச்சாரத்தை பாகிஸ்தான் மற்றும் அதன் நெருங்கிய கூட்டாளியான சீனா தூண்டிவிட்டுள்ளன என்று பிரான்ஸ் மேலும் கூறியது. பாகிஸ்தான் என்ன கூறியது? இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ மோதலுக்கு நான்கு நாட்களுக்குப் பின்னர், இஸ்லாமாபாத் ஐந்து இந்திய விமானங்களை வீழ்த்தியதாகக் கூறியது, அதில் மூன்று ரஃபேல் விமானங்களும் அடங்கும். மறுபுறம், இந்தியா இராணுவ இழப்புகளைச் சந்தித்ததாகக் கூறியுள்ளது, ஆனால் ஆப்ரேஷன் சிந்தூரின் போது இழந்த மொத்த விமானங்கள் மற்றும் ஜெட் விமானங்களின் எண்ணிக்கையை வெளியிடவில்லை. பிரெஞ்சு விமானப்படைத் தலைவர் ஜெனரல் ஜெரோம் பெல்லாங்கர், ஒரு ரஃபேல், ஒரு ரஷ்ய தயாரிப்பான சுகோய் மற்றும் ஒரு முந்தைய தலைமுறை பிரெஞ்சு தயாரிப்பான மிராஜ் 2000 ஆகிய மூன்று இந்திய இழப்புகளை மட்டுமே சுட்டிக்காட்டும் ஆதாரங்களைக் கண்டதாகப் பகிர்ந்து கொண்டார். இந்தியா அமைதியாக இருந்தாலும், அது ஒரு ரஃபேலின் முதல் போர் இழப்பாகக் கருதப்படும் என்று பிரெஞ்சு அதிகாரி மேலும் கூறினார். பிரெஞ்சு உளவுத்துறை என்ன சொல்கிறது? பிரெஞ்சு உளவுத்துறையின் கூற்றுப்படி, பாகிஸ்தானின் கூற்று ரஃபேலின் செயல்திறன் குறித்து பிரெஞ்சு போர் விமானங்களை வாங்க விரும்பும் பிற நாடுகளிடமிருந்தும், பிரான்ஸ் அவற்றை விற்ற எட்டு நாடுகளிடமிருந்தும் கேள்விகளை எதிர்கொள்ள வழிவகுத்தது. ரஃபேலுக்கு எதிரான தவறான தகவல் பிரச்சாரத்தின் கூற்றுகளுக்கு மத்தியில், சீன அதிகாரிகள் ரஃபேலை கைவிடுமாறு சாத்தியமான வாடிக்கையாளர்களை வற்புறுத்தியதாக பிரெஞ்சு உளவுத்துறை வெளிப்படுத்தியது. அதன் கூற்றுக்கள் இருந்தபோதிலும், தவறான தகவல் பிரச்சாரத்தை பெய்ஜிங்குடன் நேரடியாக இணைக்க பிரான்சால் முடியவில்லை. எவ்வாறெனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை “அவதூறு” என்று சீனா நிராகரித்துள்ளது. https://athavannews.com/2025/1438283
நான் மறுபிறவியெடுப்பேன் - தலாய்லாமா
நான் 130 வயதுவரை வாழ ஆசைப்படுகிறேன்- தலாய் லாமா பௌத்த மதத்தின் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா,(Dalai Lama) தனது 90வது பிறந்த நாளை நேற்றுக் கொண்டாடினார். கடந்த 1935 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 6 ஆம் திகதி திபெத்தில் உள்ள தக்சேர் கிராமத்தில் பிறந்த தலாய் லாமா, திபெத் மக்களின் ஆன்மீகத் தலைவராக மட்டுமல்லாது திபெத் மக்களின் உரிமைகள், மத சுதந்திரம், மற்றும் உலக அமைதி ஆகியவற்றுக்காக பல ஆண்டுகளாக அமைதிப்பூர்வமாக போராடி வருகிறார். இதற்காக அவர் கடந்த 1989ஆம் ஆண்டு நோபல் அமைதி பரிசு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் தனது பிறந்த நாள் உரையில் ‘நான் 130 வயதுவரை வாழ ஆசைப்படுகிறேன். மறுபிறப்பும் தொடரும். என் மறுபிறப்பை நிர்ணயிப்பது என் விருப்பத்திற்கேற்ப இருக்கவேண்டும். இதில் சீன அரசு எவ்விதத் தலையீடும் செய்யக்கூடாது’ எனக் குறிப்பிட்டிருந்தார். சீன அரசு, தலாய் லாமாவின் மறுபிறப்பை சட்டபூர்வமாக தாங்களே நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றது. ஆனால் தலாய் லாமா, “Gaden Phodrang Trust” ‘ மூலம் தமது மறுபிறப்பை தீர்மானிக்கப்படும் என முன்னதாகவே அறிவித்திருந்தார். இந்த நிலையில், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர்இ தலாய் லாமாவுக்கு ‘பாரத் ரத்னா’ விருது வழங்கக்கோரி முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 80க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438329
நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம்
ஒரு காலத்தில் உலகமயமான திறந்த பொருளாதார கொள்கையினை முன்னிறுத்திய அமெரிக்கா தற்போது தனது சுய சார்பு பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலைக்கு சென்றுள்ள காரணம் என்ன என ஜெய்சங்கர் கேள்வியினை கேட்டுள்ளார். திறந்த பொருளாதார கொள்கை அடிப்படையில் மிக சிறப்பான கொள்கை, அதன் மூலம் உலக பொருளாதாரம் வேகமாக வளரும், அதற்காகவே பொருளாதார நிபுணர்களால் பிரட் அன்ட் வூட் தீர்மானத்தின் மூலம் அதனை முன்னிலை படுத்தினார்கள், அப்போது உலக வர்த்தகத்தில் காற்பங்கு கொண்ட அமெரிக்காவினை முதன்மைபடுத்தி அந்த திட்டம் உருவாக்கம் பெற்றிருந்த்தது, ஆனால் அமெரிக்கா அந்த நிலையினை ஒவ்வொரு கட்டத்திலும் தந்து தேவைக்காக மாற்றங்கள் செய்து அதனை முழுக்க ஒரு சுரண்டல் பொருளாதார கொள்கையாக மாற்றி தற்போது அதனையே தூக்கியெறியும் நிலைக்கு வந்துள்ளது. உக்கிரேன் இரஸ்சிய போர் ஆரம்பமான காலகட்டத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அஸ்தமனகாலம் என கூறப்பட்டபோது அதனை ஒரு ஆரோக்கியமான சந்தேகத்துடன் அதற்கெதிரான வாதப்பிரதிவாதங்களான (நம்ப முடியாத நிலையில்) விடயங்கள் தற்போது இலகுவாக கடந்து செல்லும் நிலைக்கு மாற்றங்கள் உணரும்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த புதிய ஒழுங்கு இதுவரைகாலமும் காணப்பட்ட அடிப்படையான விடயங்கள் இனி அவற்றிற்கான தேவைகள் இல்லாமல் போய் விட்டுள்ளது, இனி வரவுள்ள கூட்டு நாடுகளின் (Block countries)ஆதிக்கமுடைய புதிய ஒழுங்கு நோக்கி தமிழினம் தன்னை தயார்படுத்தி கொள்ளவேண்டும். எமது சமுதாயம் ஒரு மெதுவாக தன்னை தயார்படுத்தும் சமூகமாக உள்ளது (Late adopters), பொதுவாக உயர் கல்விநிலை உள்ள சமூகத்தின் பொதுவான இயல்பு இது, சவால்களை எதிர்கொள்ளும் சமூகத்தின் பிரதிநிதிகள் பெருமளவில் போரினால் அழிவடைந்ததால் எமது சமூகம் ஒரு சிக்கலான சமூக பிரச்சினைக்குள் உள்ளதாக உணருகிறேன் (Late adopters ஒரு சமூகத்தில் 34% இருக்க வேண்டிய நிலை, எமது சமூகத்தில் 60% இற்கும் அதிகமாக இருக்கலாம் என கருதுகிறேன்).
இனித்திடும் இனிய தமிழே....!
நீ தரும் தண்டனை எது தெரியுமா ........ ! 😁
வவுனியா வடக்கில் மகாவலி திட்டத்தின் கீழ் புதிதாக 350 ஏக்கர் நிலம் பறிபோகும் அபாயம்
காணி அபகரிப்புகளூடாக நடைபெறும் தமிழர் விரோத செயல்! July 7, 2025 வவுனியா வடக்கு, வெடிவைத்தகல்லு எனும் பகுதியில் மகாவலி திட்டத்தின கீழ் சுமார் 350 ஏக்கர் நிலம் தமிழ் மக்களிடமிருந்து பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மகாவலித் திட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் இனப் பரம்பலை சீர்குலைக்கும் செயற்பாடுகள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தது. அந்த வகையில் வெடிவைத்தகல் கிராம அலுவலர் பிரிவில் கொக்கச்சான்குளம் அபகரிக்கப்பட்டு கலாபோகஸ்வேவ என்னும் பெயரில் புதிய குடியேற்றம் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் உருவாக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பித்தக்கது. அதன் தொடர்ச்சியாக, தற்போது வெடிவைத்தகல்லு கிராம அலுவலர் பிரிவில் உள்ள மற்றொரு கிராமமான திரிவைச்சகுளம் பகுதியில் சுமார் 350 ஏக்கர் நிலம் மகாவலி வலயம் என்ற போர்வையில் உள்வாங்கப்பட்டு துப்புரவு செய்யப்பட்டுள்ளது. குறித்த நிலத்தை தென்பகுதி நிறுவனம் ஒன்றுக்கும், பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். https://www.ilakku.org/காணி-அபகரிப்புகளூடாக-நடை/
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கே . பி .சுந்தராம்பாள் ......... எமிருசிரா இராமா எமி ருசிரா ....... மோகனம் .........! 🙏
உலகில் முதல் நாடாக ஆப்கனில் தாலிபன் அரசுக்கு ரஷ்யா அங்கீகாரம் - இந்தியா என்ன செய்யப் போகிறது?
வட கொரியா மற்றும் ஈரானின் நண்பரின் அடுத்த நண்பன்....
சுண்டிக்குளத்தில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால் அளவீடு செய்யப்பட்டுள்ளது - இ.முரளிதரன்
07 JUL, 2025 | 10:41 AM யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கிராம சேவகர் பிரிவில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார். தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கவிக்கையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்தவர் கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியான கிராம சேவகர் பிரிவில் அமைந்திருக்கின்ற மக்களின் மீன்பிடி நிலங்கள், மக்களுக்குரிய காணிகள் திருகோணமலையில் இருந்து வந்த கடற்படையின் ஒரு குழுவால் மிக இரகசியமாக அளவீடு செய்யப்பட்டுள்ளது. தங்களுடைய சொந்தக்காணிகள் கடற்படையினரால் அளவீடு செய்யப்படுவதை அறிந்த அங்கு இருந்த ஒரு சில மக்கள் கடற்படை இடம் கேள்வி எழுப்பிய போது உங்களுடைய காணி என்றால் அனுமதி பத்திரத்தை காட்டுமாறு தெரிவித்ததாக மக்கள் கூறுகின்றனர். சுண்டிக்குள பகுதியில் காணப்படும் அதிகளவான காணிகள் அரசகாணிகளாக காணப்படுகிறது. அங்கே வசித்த மக்களின் காணிகளுக்கு உறுதி இருக்காது. மக்கள் காலா காலம் அந்த காணியில் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்த காணியை தற்பொழுது சுவீகரிப்பதற்காக கடற்படை முயற்சிக்கின்றது. அந்த பகுதியில் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. வீடுகள், கிணறுகள், அங்கே மக்களால் பராமரிக்கப்பட்ட மரங்களும் இருக்கின்றன. இது தொடர்பாக அப்பகுதி கிராம அலுவலருக்கோ, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கோ தெரியப்படுத்தப்படாமல் அளவீடு முன்னெடுக்கப்பட்டது. ஒரு பிரதேசத்தில் ஒரு காணியை அளவீடு செய்ய வேண்டும் என்று சொன்னால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். மீனவ சங்கம், பிரதேச செயலர், கிராம அலுவலர், காணிக் கிளையினர் ஆகிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமல் மிக இரகசியமாக இந்த காணிகளை அளவீடு செய்துள்ளார்கள். காலப்போக்கில் இந்த பகுதியில் கடல் தொழில் செய்கின்ற மக்கள் கடல் தொழில் செய்ய முடியாத நிலைமை உருவாகப் போகின்றது. சுண்டிக்குள பகுதியில் கடற் படையின் தளங்கள் விஸ்தரிக்கப்பட போகின்றது. மக்களுடைய காணிகள் மக்களுக்கு விடுவிக்கப்பட வேண்டும் இல்லை என்று சொன்னால் மக்களை ஒருங்கிணைத்து இந்த காணிகளை விடுவிப்பதற்கான போராட்டங்களை செய்யப் போவதாக வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/219364
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : மின்சாரம் என் மீது பாய்கின்றதே பெண் : உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே ஆண் : உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே பெண் : உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே ஆண் : நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன் உதடுகள் வேர்க்கும்வரை உண்மையில் நானும் யோக்கியன்தானடி உன்னைப் பார்க்கும்வரை ஆண் : காதல் ஸியே ஓ காதல் ஸியே ஓ காதல் ஸியே காதல் ஸியே பெண் : என்னைவிட இந்த உலகிலே உன்னை மிகமிக விரும்பினேன் ஆண் : உந்தன் அன்பு தரும் சுகத்தினால் இன்னும் உயிருடன் இருக்கிறேன் பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் தீ கூட தின்னத் தின்ன தித்திக்கும் என்று கண்டேன் அன்பே நீ பக்கம் வந்தால் புத்திக்கு ஓய்வு தந்தேன் ஆண் : பெண் என்றால் மென்மை என்று கவிதைகள் சொல்லி வந்தேன் உன்னை நான் பார்த்த பின்தான் கன்னத்தில் போட்டுக்கொண்டேன் ஆண் : காதல் ஸியே ஓ காதல் ஸியே ஓ காதல் ஸியே காதல் ஸியே பெண் : மெல்ல மெல்ல எந்தன் உயிரினை மென்று தின்று இன்று சிரிக்கிறாய் ஆண் : கொள்ளை அடித்தது நீயடி என்னைக் குற்றம் சொல்லித் திரிகிறாய் பெண் : ஆஹாஹா பொல்லாத இம்சை ஒன்றில் புரியாமல் மாட்டிகொண்டேன் இம்சைக்கு இன்னொரு பேர் காதல்தான் என்று கண்டேன் ஆண் : அன்பே நீ அருகே வந்தால் என் உலகம் சுருங்கக் கண்டேன் ஒரு கோப்பை தண்ணீர் காதல் அதில் நீந்தக் கற்றுக்கொண்டேன் ஆண் : காதல் ஸியே ஓ காதல் ஸியே ஓ காதல் ஸியே காதல் ஸியே.......... ! --- மின்சாரம் என் மீது பாய்கின்றதே ---
வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேரங்களில் மாற்றம்
கொழும்பு - காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று முதல் நாளாந்த சேவையில்! Published By: DIGITAL DESK 2 06 JUL, 2025 | 05:26 PM (நமது நிருபர்) கொழும்பு - காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை இன்று(07) முதல் நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து தினமும் காலை 5.45க்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 02 மணிக்கு மீண்டும் கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். இந்த சொகுசு ரயில் சேவை இதற்கு முன்னர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டது. எனினும் தற்போது இந்த புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பமானதன் பின்னர் யாழ்தேவி ரயிலானது கொழும்பு கோட்டையிலிருந்து தினமும் காலை 06.40க்கு புறப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/219333
அரச மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சைப்பெறும் நோயாளிகளுக்காக விசேட உணவு வேலைத்திட்டம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Published By: VISHNU 07 JUL, 2025 | 01:36 AM (செ.சுபதர்ஷனி) அரச மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு தரமான மற்றும் சுவையான உணவை வழங்குவதற்கான சிறப்பு திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நோயாளர்களுக்கான விசேட உணவு வேலைத்திட்டம் தொடர்பாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் அண்மையில் சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதற்கமைய மஹரகம புற்றுநோய் மருத்துவமனையை மையமாகக் கொண்டு இந்த சிறப்புத் திட்டத்திற்கான முன்னோடித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய தேசிய புற்றுநோய் மருத்துவமனையின் பணிப்பாளர், நிர்வாகம் மற்றும் இந்த விடயத்துடன் தொடர்புடைய அதிகாரிகள், இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்களின் கல்வி கலாசாலை, ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் பிறரின் பங்கேற்புடன் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து தெரிவிக்கையில், அரச மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்குவதற்காக சுகாதார அமைச்சகம் ஆண்டுதோறும் பெரும் தொகையான பணத்தை செலவிடுகிறது. எனினும் அந்தப்பணம் நியாயமான முறையில் பயன்படுத்தப்படுகிறதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. மருத்துவமனை வழங்கும் உணவால் நோயாளி திருப்தி அடைகிறாரா ?இல்லையா? என்பதை கூட எவரும் நோயாளியிடம் கேட்பதில்லை. அவ்வாறான நிலையில் தற்போது வைத்தியசாலைகள் இயங்கி வருகின்றன. ஆகையால் அரச மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அவர்களுக்கு உணவளிக்கும் முறை ஆகியவற்றில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். நோயாளர்களுக்கு சுவையான மற்றும் தரமான உணவை வழங்குவது அவசியம். மஹரகம தேசிய புற்றுநோய் மருத்துவமனையில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த முன்னோடித் திட்டம், எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து அரச மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. குழம்பு மற்றும் காய்கறிகள் கொண்ட ஒற்றை தட்டு இந்த திட்டத்தின் முக்கிய அம்சம். மீன், இறைச்சி போன்றவற்றுடன் கூடிய தட்டுக்குப் பதிலாக சோறு, காய்கறிகள், இறைச்சி அல்லது மீன் என பிரிக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட தட்டில் நோயாளிக்கான உணவு வழங்கப்படும். மேலும், எதிர்காலத்தில் அனைத்து அரச மருத்துவமனைகளிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த, மருத்துவமனைகளின் சமையலறைகள் நவீனமயமாக்கப்பட வேண்டும். தற்போதுள்ள எரிவாயு அடுப்புகளுக்குப் பதிலாக நீராவியால் இயங்கும் அடுப்புகள் மற்றும் நவீன தொழில்நுட்ப உபகரணங்களை வழங்குவதும் அவசியம். மருத்துவமனைகளில் உணவு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வழங்குவதற்கான ஏலம் மிகக் குறைந்த விலையை வழங்கும் நபருக்கே வழங்கப்படுகிறது. மேலும் மிகக் குறைந்த விலையை வழங்கும் நபரால் மருத்துவமனைக்கு வழங்கப்படும் மூலப்பொருட்களின் தரம் குறித்து சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக மசாலாப் பொருட்களின் தரத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/219349
ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!
இலங்கையில் Starlink சேவைகள் வெற்றியடையுமா? ச.சேகர் உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான எலொன் மஸ்க் முன்னெடுக்கும் செய்மதி ஊடான இணைச் சேவைகளை வழங்கும் Starlink இலங்கையிலும் கடந்த வாரம் முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சேவை இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ளமை தொடர்பில் கடந்த ஒரு வருடங்களாகவே பரவலாக பேசப்பட்டு வந்த போதிலும், பல்வேறு இழுபறி நிலைகளால், அறிமுகம் தாமதமடைந்து, கடந்த வாரம் முதல் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த இணையச் சேவை இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும், தொழினுட்ப நிபுணர்கள் மத்தியிலும் பெருமளவு வரவேற்பு காணப்படுவதுடன், உள்நாட்டில் ஏற்கனவே இயங்கும் இணையச் சேவை வழங்குனர்களின் சேவைகளுக்கு இந்த Starlink அறிமுகம் சவாலாக அமையும் என எதிர்வுகூரப்படுகிறது. ஆனாலும், இந்த Starlink சேவை எவ்வாறு இயங்குகிறது, அதற்கான கட்டணங்கள் என்பவற்றை எடுத்துக் கொண்டால், ஏற்கனவே இலங்கையில் பாவனையிலுள்ள இணையச் சேவைகள் தொலைத்தொடர்பு கோபுரங்கள் மற்றும் தொலைபேசி கம்பி வடங்களினூடாக கடத்தப்படுகின்றன. இவை தொடர்பில் பாவனையாளர்கள் மத்தியில் பல்வேறு விதமான கருத்துகள் நிலவுகின்றமை மறுப்பதற்கில்லை. விசேடமாக, வாடகைக்கு வீடு தேடுவோர் கூட, புதிய வீடொன்றை பார்க்கச் செல்லும் போது, மின், நீர் போன்ற அடிப்படை வசதிகள் பற்றி கேட்டறிவதுடன், தமது தொலைபேசிகளில் வலையமைப்பு சமிக்ஞைகள் எவ்வாறு உள்ளது என்பது பற்றியும் பரிசோதித்து வீட்டை வாடகைக்கு பெறுகின்றனர். அவ்வாறு மக்களின் வாழ்வில் கையடக்க தொலைபேசி மற்றும் இணையப் பாவனை என்பது மிகவும் இன்றியமையாத அங்கமாக அமைந்துள்ளது. இவ்வாறான சூழலில், இலங்கையில் காணப்பட்ட தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனர்கள் ஒரு காலகட்டத்தில் 5 முதல் 7 ஆக அமைந்திருந்தது. காலப்போக்கில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைகள் மற்றும் புறத்தாக்கங்களினால் இந்த சேவைகள் தற்போது மூன்று பிரதான நிறுவனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சில நிறுவனங்கள் இதர பிரதான நிறுவனங்களுடன் தமது சேவைகளை ஒன்றிணைத்துள்ளன. சில நிறுவனங்கள் தமது சேவைகளை முழுமையாக இடைநிறுத்தியுள்ளன. இவ்வாறான சூழலில், ஏற்கனவே சந்தையில் காணப்படும் தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனர்களும் பல பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், அவற்றின் புதிய முதலீடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. விசேடமாக நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்ததன் பின்னர், இந்நிறுவனங்களின் விரிவாக்க செயற்பாடுகள் பெரும்பாலும் தடைப்பட்டுள்ளன. அல்லது மிகவும் மந்த கதியில் நடைபெறுகின்றன. முன்னணி நிறுவனங்கள் கையகப்படுத்தல் செயற்பாடுகளில் அதிகளவு தொகையை செலவிட நேரிட்டதாலும், தாம் கையகப்படுத்திய வலையமைப்புடன் தமது பிரதான வலையமைப்பை இணைக்கும் செயற்பாடுகளில் அதிகளவு அக்கறை கொண்டுள்ளதாலும், அதன் வலையமைப்பு விரிவாக்கம் அல்லது மேம்பாடு என்பதை அதிகளவு அவதானிக்க முடியவில்லை. 5G வலையமைப்பு சேவையும் சில நகரங்களில் இன்னமும் பரீட்சார்த்த மட்டத்தில் உள்ளதை காண முடிகிறது. இன்னமும் 4G சேவைகள் மாத்திரமே பிரதானமாக வழங்கப்படுகின்றன. கம்பி வட இணையச் சேவைகளில் ஃபைபர் சேவைகள் விஸ்தரிக்கப்பட்ட வண்ணமுள்ளன. இவை ஒப்பீட்டளவில் வேகமான, தங்கியிருக்கக்கூடிய இணைய வசதிகளை வழங்கினாலும், பயணம் செய்கையில் இந்த இணைப்பை தம்முடன் கொண்டு செல்ல முடியாமை பாவனையாளர்களுக்கு பெரும் அசௌகரியமாக அமைந்துள்ளது. அவ்வாறான ஒரு சூழலில் இந்த Starlink அறிமுகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இணையச் சேவை வேகமான வலையமைப்பை கொண்டிருக்கும் என பலராலும் தெரிவிக்கப்பட்டாலும், ஆரம்பத்தில் இந்த சேவைக்கு இணைந்து கொள்வதற்கான கட்டணம் ஒரு இலட்சம் ரூபாய்க்கு அதிகமானதாக அமைந்துள்ளது. குறிப்பாக, இந்த சேவையை உபயோகிப்பதற்கான செய்மதி அலைவரிசையை பெறும் சாதனங்களை நிறுவுவதற்கு இந்தத் தொகை அறவிடப்படுகிறது. அத்துடன், மாதாந்த வாடகைத் தொகை ஆகக் குறைந்தது 12,000 ரூபாய் முதல் ஆரம்பிக்கிறது. ஏற்கனவே சந்தையில் காணப்படும் நிலையான இணையச் சேவைக்கான மாதாந்தக் கட்டணம் சுமார் 1,500 ரூபாய் முதல் அமைந்துள்ளது. எனவே, பின்தங்கிய கிராமப் பகுதிகளில் கூட Starlink இணைய வசதியை மக்கள் பயன்படுத்தலாம். அங்கு சமிக்ஞைகளை பெறுவதில் சிக்கல்கள் இருக்காது எனக் கூறப்பட்டாலும், இந்த இணையச் சேவையை ஒரு இலட்சம் ரூபாய்க்கு அதிகமான தொகையை ஆரம்பத்தில் செலுத்தி, பின்னர் மாதாந்தம் 12,000 ரூபாய்க்கு அதிகமான தொகைக்கு பெற்றுக் கொள்வதற்கு, பின்தங்கிய கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வம் காண்பிப்பார்களா என்பது பெரும் கேள்விக்குறியாக அமைந்துள்ளது. இலங்கை சுற்றுலாத் துறையில் பெரிதும் தங்கியுள்ள நிலையில், கிராமப் பகுதிகளின் அனுபவத்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வத்துடன் சமூகமளிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அல்லது வெளி உலகுடன் அவர்களுக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வசதியை வழங்க இந்த Starlink சேவை உதவியாக அமையலாம். அதற்கும், இந்தளவு தொகையை முதலீடு செய்வதில் சாதாரணமாக குறிப்பிடத்தக்களவு வருமானத்தைப் பெறும் வியாபாரங்கள் அல்லது ஹோட்டல்கள் அக்கறை செலுத்தும். எவ்வாறாயினும், மேலே தெரிவிக்கப்பட்ட 12,000 ரூபாய் மாதாந்த கட்டணம் என்பது இல்லங்களில் பாவனைக்கான குறைந்த தொகையாகும். வர்த்தகங்களுக்காக அறவிடும் கட்டணம் இதனை விட உயர்வானது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் செய்மதிகளினூடாக இந்த இணையச் சேவை இணைக்கப்பட்டுள்ளதால், மேக மூட்டங்கள், மழையுடனான வானிலைகளின் போது இந்தச் சேவையில் தடங்கல்கள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. நகரப் பகுதிகளிலும் இந்த சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும் போது வலையமைப்பு நெரிசல் ஏற்பட்டு இணைப்பின் வேகம் குறைவடையலாம். மேலும், உள்நாட்டில் இந்த சேவையை வழங்குவதற்காக அல்லது இந்த சேவையில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அறிவிப்பதற்கு, மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு உள்நாட்டில் வாடிக்கையாளர் சேவை நிலையம் ஒன்று இதுவரையில் அமைக்கப்படவில்லை. உள்நாட்டில் சேவை விநியோகத்தர் ஒருவரும் நியமிக்கப்படவில்லை. நேரடியாக Starlink இணையத்தளத்தினூடாக இந்த சேவைக்கு விண்ணப்பிக்க வேண்டிய ஒரு நிலை காணப்படுகிறது. இதுவும் இந்தச் சேவைக்கு ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது. சாதாரணமாக இணைய இணைப்பு சேவைகள் வழங்கும் நிறுவனமொன்றுக்கு நாளொன்றில் பல நூற்றுக் கணக்கான அழைப்புகள், கோரிக்கைகள் வாடிக்கையாளர்களிடமிருந்து வருகின்றமை வழமை. இந்த Starlink இணைய சேவையில் மற்றுமொரு பிரதான பின்னடைவாக அதன் பாதுகாப்பு அம்சங்களை குறிப்பிடலாம். செய்மதிகளினூடாக வழங்கப்படும் இந்த சேவை, பல மூன்றாம் தரப்பு தொடர்புகளையும் கொண்டுள்ளது. எனவே, இந்த சேவைகளின் பாதுகாப்பு தன்மை தொடர்பில் நிச்சயமற்ற தன்மை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் மத்திய கிழக்கில் ஏற்பட்ட நெருக்கடி நிலையின் போதும், ஈரானில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டிருந்தாலும், இந்த Starlink செய்மதிச் சேவையை பயன்படுத்தி அந்நாட்டிலிருந்து தகவல்கள் பரிமாறப்பட்டமை தொடர்பான செய்திகளும் வெளியாகியிருந்தன. எனவே, இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் ஒரு நாட்டுக்கு இணையச் சேவை என்பது முக்கியமானதாக அமைந்திருந்தாலும், Starlink போன்ற பல பாதக அம்சங்களைக் கொண்ட இணைப்புகளுக்கு மக்கள் செல்வார்களாக என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளது. https://www.tamilmirror.lk/வணிகம்/இலங்கையில்-Starlink-சேவைகள்-வெற்றியடையுமா/47-360590
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
புதிய வரலாறு படைத்த இந்தியா: ஆகாஷ் தீப் அற்புத பந்துவீச்சில் தடம் புரண்ட இங்கிலாந்து பட மூலாதாரம்,PHOTO BY STU FORSTER/GETTY IMAGES கட்டுரை தகவல் க.போத்திராஜ் பிபிசி தமிழுக்காக 6 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. பிர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியை இந்திய அணி வென்று தொடரை சமன் செய்துள்ளது. இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இரட்டை சதம் (269 ரன்கள்) அடித்திருந்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸிலும் ஷுப்மன் கில் சதமடிக்க (161 ரன்கள்) 427 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் என்கிற இமாலய இலக்கை நிர்ணயித்திருந்தது இந்திய அணி. 25 நிமிடங்களில் திருப்புமுனை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆட்டமிழந்து வெளியேறும் ஹேரி புரூக் 4வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்களுடன் இருந்தது. கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணி வெற்றி பெற 536 ரன்கள் தேவைப்பட்டது, கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன. ஹேரி ப்ரூக் 15 ரன்களுடனும், போப் 24 ரன்களுடன் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஏற்கெனவே ஆகாஷ் தீப், சிராஜ் இருவரும் இங்கிலாந்து பேட்டர்களை தங்களின் ஸ்விங் பந்துவீச்சால் அலறவிட்ட நிலையில் அவர்களின் துல்லியமான லென்த்தில் கணிக்க முடியாத ஸ்விங் பந்துவீ்ச்சு இன்று காலையும் தொடர்ந்தது. ஆட்டம் தொடங்கிய 25 நிமிடங்களுக்குள் ஆகாஷ் தீப் இரு அருமையான பந்துகளால் இரு விக்கெட்டுகளை சாய்த்து இங்கிலாந்து அணியை நெருக்கடிக்குள் தள்ளினார். முதலாவதாக ஆட்டம் தொடங்கி 4வது ஓவரில் ஆலி போப்பிற்கு இன் கட்டரில் பந்துவீசி க்ளீன் போல்டாக்கினார் ஆகாஷ் தீப். ஏற்கெனவே திணறிக்கொண்டிருந்த போப் 25 ரன்னில் பெவிலியன் திரும்பினார். போப் ஆட்டமிழந்த அடுத்த 2 ஓவர்களில் ஹேரி ப்ரூக் விக்கெட்டுக்கு ஆகாஷ் குறிவைத்தார். பேட்டர் ஆடமுடியாத வகையில் இன்ஸ்விங்கில் பந்தை வீசி ஹேரி ப்ரூக்கை நிலைகுலையச் செய்து கால்காப்பில் வாங்கவைத்தார் ஆகாஷ். ப்ரூக் கால்காப்பில் வாங்கியதும் ஆகாஷ் அப்பீல் செய்தவுடனே நடுவர் மறுபேச்சு இன்றி கையை உயர்த்தி அவுட் வழங்கினார். டிஆர்எஸ் முறையீட்டுக்கு வாய்ப்பின்றி துல்லியமான எல்பிடபிள்யு என்பதால், ப்ரூக்கும் முறையீடு செய்யாமல் வெளியேறினார். இந்த இரு விக்கெட்டுகளும், இங்கிலந்து அணி சேஸிங் கனவிலிருந்து சற்று பின்னோக்கி தள்ளச் செய்தது. சேஸ் செய்துவிடலாம் என எண்ணி களமிறங்கிய இங்கிலாந்து பேட்டர்கள் பின்னடைவைச் சந்தித்தனர். 4வது நாள் முடிவில் 64 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து, இன்று காலை ஆட்டம் தொடங்கி, 19 ரன்களைச் சேர்பதற்குள் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஸ்டோக்ஸ், ஸ்மித் நங்கூரம் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜேம் ஸ்மித் இருவரும் 7வது விக்கெட்டுக்கு நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். பந்து தேய்ந்து, மென்மையாக மாறிவிட்டதால், எதிர்பார்த்த ஸ்விங்கும், வேகமும் கிடைக்காததால் பேட்டர்கள் அடித்து ஆடுவதற்கு வசதியாக இருந்ததால், ரன்களை இங்கிலாந்து பேட்டர்கள் வேகமாகச் சேர்த்தனர்.மதிய உணவு இடைவேளைக்குச் செல்லும்போது இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்திருந்தது. ஸ்டோக்ஸை ஆட்டமிழக்கச் செய்ய சுந்தர், ஜடேஜாவை மாறி, மாறி கேப்டன் கில் பயன்படுத்தினார். இதில் ஸ்டோக்ஸ் 18 ரன்னில் இருந்தபோது, ஜடேஜா பந்துவீச்சில் கிடைத்த கேட்சை கில் தவறவிட்டதும் குறிப்பிடத்தக்கது. ஸ்டோக்ஸ் ஆபத்தானவர் எந்த நேரத்திலும் ஆட்டத்தை திருப்பிவிடுவார் என்பதால் இவருக்கு குறிவைத்து கில் செயல்பட்டு பந்துவீச்சை உணவு இடைவேளைக்குப்பின் மாற்றினார். வாஷிங்டன் திருப்புமுனை பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGES படக்குறிப்பு, பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார் உணவு இடைவேளை முடிந்துவந்தபின், மீண்டும் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. ஸ்டோக்ஸ் 33 ரன்கள் சேர்த்திருந்தபோது வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து தோல்வியின் பக்கம் தள்ளப்பட்டு ஆட்டம் இந்திய அணியின் கைகளுக்கு திரும்பியது. 7-வது விக்கெட்டுக்கு ஸ்டோக்ஸ், ஸ்மித் இருவரும் 70 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வோக்ஸ் களமிறங்கி ஸ்மித்துடன் சேர்ந்தார். முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய ஸ்மித் 73 பந்துகளில் அரைசதம் அடித்தபின் வேகமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினார். பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் பவுன்ஸராக வீசப்பட்ட பந்தை தூக்கி அடிக்க வோக்ஸ் முற்பட்டபோது, அது சிராஜிடம் கேட்சானது. வோக்ஸ் 7 ரன்னில் ஆட்டமிழக்கமே ஆட்டம் மொத்தமும் இந்தியாவின் பக்கம் திரும்பியது. இந்திய அணியின் வெற்றிக்கு 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்பட்டது. ஸ்மித், கார்ஸ் களத்தில் இருந்தனர். ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்யும் நோக்கில் ஆகாஷ் மீண்டும் பந்துவீச அழைக்கப்பட்டார். ஆகாஷ் சற்று ஸ்லோவர் பந்தாக ஆப்சைடு விலக்கி வீசினார். இதை கணிக்காத ஸ்மித் தூக்கிஅடிக்கவே, பேக்வார்ட் ஸ்குயரில் நின்றிருந்த சுந்தரிடம் கேட்ச் கொடுத்து 88 ரன்களில் வெளியேறினார். இங்கிலாந்து அணி 8வது விக்கெட்டை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. ஆகாஷ் தீப் தனது டெஸ்ட் வாழ்க்கையில் முதல்முறையாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி திருப்புமுனையாக இருந்தார். பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGE படக்குறிப்பு, ஆட்டமிழந்து வெளியேறும் ஸ்மித் சிராஜின் அற்புதமான கேட்ச் இந்திய அணியின் வெற்றிக்கு 2 விக்கெட் மட்டுமே தேவைப்பட்டது. கார்ஸ், டங் இருவரும் களத்தில் இருந்தனர். பிரசித், ஜடேஜா மாறி, மாறி பந்துவீசியும் இருவரும் சளைக்காமல் ஆடினார். ஒரு கட்டத்தில்பேட்டர்களுக்கு நெருக்கடி தரும்வகையில் ஸ்லிப்பில், மிட்விக்கெட்டில் பீல்டர்களை நெருக்கமாக நிறுத்தி ஜடேஜா பந்துவீசினார். ஜடேஜாவின் வியூகத்துக்கு பலன் கிடைத்து. ஜடேஜாவீசிய பந்தை டங் தட்டிவிட, மிட்விக்கெட்டில் நின்றிருந்த சிராஜ், அற்புதமாக டைவ் செய்து கேட்ச் பிடித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இங்கிலாந்து 9வது விக்கெட்டை இழந்தது. அடுத்ததாக பஷீர் களமிறங்கி, கார்ஸுடன் சேர்ந்தார். கடைசி விக்கெட்டை வீழ்த்த ஆகாஷ் பந்துவீச அழைக்கப்பட்டார். ஆகாஷ் பந்துவீச்சில் சற்று திணறிய கார்ஸ், திடீரென பெரிய ஷாட்டுக்கு முயன்று பந்தை தூக்கி அடித்தார். ஆனால் சிராஜ் பந்தை பிடிக்கும் முயற்சியில் தவறாக கணித்ததால் கேட்சை தவறவிட்டார். வெற்றிக்கான கேட்ச் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட் வீழ்த்திய ஆகாஷ் தீப் ஜடேஜா அடுத்து பந்துவீச அழைக்கப்பட்டார். ஜடேஜா பந்துவீச்சில் பஷீர் கால்காப்பில் வாங்கிய பந்தை கேட்ச்பிடித்தபோது நடுவர் அவுட் வழங்கினார். ஆனால் டிஆர்எஸ் முறையீட்டில் பந்து பேட்டில் படவில்லை, கால்காப்பில் மட்டுமே பட்டது எனத் தெரியவந்ததால் அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டது. அதன்பின்பும், ஜடேஜா, ஆகாஷ் இருவரும் மாறி மாறி பந்துவீசியும் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. இறுதியாக ஆகாஷ் தீப் வீசிய 64வது ஓவரில் அந்த வெற்றி விக்கெட் விழுந்தது. ஆகாஷ் வீசிய பந்தை கார்ஸ் தூக்கிஅடிக்க கேப்டன் கில் கேட்ச் பிடிக்கவே இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது. வெற்றியின் நாயகர்கள் இந்திய அணியின் வெற்றிக்கு ஒவ்வொரு வீரர்களும் பங்களிப்பு செய்துள்ளனர்.முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் அரைசதம், ஷுப்மன் கில் இரட்டை சதம், ஜடேஜா அரைசதம், 2வது இன்னிங்ஸில் ராகுலின் அரைசதம், கில்லின் 2வது சதம், ரிஷப்பந்த் அரைசதம், ஜடேஜாவின் 2வது அரைசதம் என பேட்டிங்கில் முடிந்தவரை பங்களிப்பு செய்தனர். பந்துவீச்சில் பும்ரா இல்லாத நிலையில் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது உண்மையில் பாராட்டுக்குரியது. முதல் இன்னிங்ஸில் சிராஜ் எடுத்த இங்கிலாந்து மண்ணில் முதல் 5 விக்கெட், ஆகாஷ் தீப்பின் 4 விக்கெட். 2வது இன்னிங்ஸில் ஆகாஷ் தீப் எடுத்த முதல் 6 விக்கெட், சிராஜ், வாஷிங்டன் விக்கெட் ஆகியவை வெற்றிக்கு துணையாக இருந்தன. 39 ஆண்டுகளுக்குப்பின் நிகழ்ந்த சாதனை பட மூலாதாரம்,GETTY IMAGES அதிலும் ஆகாஷ் தீப் வெற்றிக்கான திருப்புமுனையை இரு இன்னிங்ஸிலும் வழங்கினார் என்பதை மறுக்க இயலாது. இரு இன்னிங்ஸிலும் சேர்த்து ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஆகாஷ் பெற்றார். 1986ம் ஆண்டு இதே பிர்மிங்ஹாம் மைதானத்தில் சேத்தன் சர்மா 10 விக்கெட்டுகளை வீழ்த்தியபின் ஏறக்குறைய 39 ஆண்டுகளுக்குப்பின் ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளார். அன்று காபா, இன்று பிர்மிங்ஹாம் 2021ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் காபா மைதானத்தில் முதல்முறையாக இந்திய அணி வரலாற்று பெற்றி பெற ஷுப்மன் கில், ரிஷப் பந்த், சிராஜ் ஆகிய 3 பேரும் முக்கிய காரணமாக இருந்தனர். இன்று எட்ஜ்பாஸ்டனில் புதிய சரித்திரத்தை எழுதவும் இந்த 3 வீரர்களின் பங்களிப்பு முக்கியமாக இருந்துள்ளது. இதில் ஆகாஷ் தீப்பின் முதல்முறை 6 விக்கெட், ஒட்டுமொத்த 10 விக்கெட் முக்கியமாக இருந்துள்ளது. இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று 2வது போட்டியிலேயே அந்நிய மண்ணில் கில் வெற்றி தேடித்தந்துள்ளார். இதில் கேப்டன் கில்லின் பேட்டிங் பங்களிப்பு இரு டெஸ்ட் போட்டிகளிலும் மகத்தானது. முதல் போட்டியில் சதம், 2வது டெஸ்டில் இரட்டை சதம், சதம் என 430 ரன்கள் குவித்து முழுமையான உழைப்பை வழங்கினார். அதேபோல ரிஷப் பந்த் முதல் இன்னிங்ஸில் சொதப்பினாலும், 2வது இன்னிங்ஸில் விரைவாக அடித்த அரைசதம், சிராஜ் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து மண்ணில் எடுத்த 6 விக்கெட், 2வது இன்னிங்ஸில் ஒருவிக்கெட் என 7 விக்கெட்டுகளை சாய்த்து மீண்டும் சரித்திரம் படைக்க உதவினர். பிர்மிங்ஹாமில் புதிய வரலாறு பிர்மிங்ஹாமில் இதுவரை 8 டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணி ஒரு போட்டியில் கூட வென்றதில்லை, ஒரு போட்டியில் மட்டுமே டிரா செய்திருந்தது. ஆனால், இந்த போட்டியில் பிர்மிங்ஹாமில் வென்றதன் மூலம் இந்திய அணி முதல்வெற்றியைப் பதிவு செய்து புதிய வரலாறு படைத்தது. நூறாண்டுகளாக பிர்மிங்ஹாமில் கிரிக்கெட் விளையாடியும் முதல் வெற்றிக்காக தவம் கிடந்த நிலையில் நூறாண்டுகளுக்குப்பின் கிடைத்த முதல் வரலாற்று வெற்றி, கொண்டாடப்பட வேண்டிய வெற்றியாகும். இந்த நாள் இந்திய அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க நாளாக அமைந்திருக்கிறது. சீனியர்கள் இல்லாமல் சாதனை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய இளம் அணி சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது இந்திய அணியில் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், பும்ரா இல்லாத நிலையில் இளம் வீரர்கள் வரலாற்று வெற்றி தேடித்தந்துள்ளனர். இந்திய அணியில் இடம் பெற்ற பெரும்பாலான வீரர்கள் 30 வயதுக்குள் இருக்கும் இளம் வீரர்கள், 50 டெஸ்ட் போட்டியில்கூட ஆடாத அனுபவம் குறைந்தவர்கள். இவர்களை வைத்துக்கொண்டு கேப்டன் ஷுப்மன் கில் இங்கிலாந்து மண்ணில் வென்றது உண்மையில் வரலாற்று வெற்றியாகும், கில் கேப்டன்ஷிப் ஏற்று கிடைக்கும் முதல் வெற்றியாகும். இங்கிலாந்துக்கு மரணஅடி பாஸ் பால் உத்தியைக் கையாண்டு விளையாடியது முதல், இங்கிலாந்து அணி டிரா என்றாலே என்ன என்று கேள்வி கேட்கும் விதத்தில் ஆடியது. 23 டெஸ்ட்களில் 15 போட்டிகளை வென்றிருந்தது, ஒரு போட்டியில் மட்டுமே டிரா செய்திருந்தது. ஆனால், பாஸ் பால் ஆட்டத்தை ஆடும் முயற்சியில் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு இளம் இந்திய வீரர்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர். டாஸ் வென்று முதல் டெஸ்டில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெற்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் இந்த டெஸ்டிலும் 2வதுமுறையாக டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், ஸ்டோக்ஸின் முடிவு தவறானது, இந்திய அணி அனைத்து ஆட்டங்களிலும் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சொதப்பாது என்பதை இளம் இந்திய அணி நிரூபித்துள்ளது. சமநிலையில் தொடர் இதன் மூலம் சச்சின்-ஆன்டர்சன் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர். 3வது டெஸ்ட் போட்டி வரும் 10ம் தேதி வரலாற்று சிறப்பு மிகுந்த லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3r9jyxxl99o
போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
நிகிதா புகாருடன் முரண்படும் முதல் தகவல் அறிக்கை - காவலாளி வழக்கில் என்ன நடக்கிறது? கட்டுரை தகவல் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 6 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்தது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவின் பெயரில் மாவட்ட நீதிபதியின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவலாளி அஜித் குமாருக்கு எதிராக நகையை காணவில்லை என மனுதாரர் நிகிதா அளித்த புகாரின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இதில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் இருப்பதாக குற்றம்சாட்டு வைக்கும் அஜித் குமார் தரப்பு வழக்கறிஞர்கள் பல கேள்விகளையும் முன் வைத்துள்ளனர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும், வரும் 8ந்தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் கடந்த 2-ம் தேதி முதல் திருப்புவனம் நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் தங்கியிருந்து நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார். தற்போது வரை யாரெல்லாம் விசாரிக்கப்பட்டுள்ளார்கள்? படக்குறிப்பு, நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் முதல் மூன்று நாட்கள் நடந்த விசாரணையின் போது, ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், கோவில் அலுவலர் பெரியசாமி, அஜித்குமாரை தாக்கியது தொடர்பான வீடியோவை உயர்நீதிமன்றத்தில் வழங்கிய கோயில் பணியாளர் சக்தீஸ்வரன், கோயில் பணியாளர்கள் பிரபு, கார்த்திக் ராஜா, அஜித் குமாரின் தாயார் மாலதி, அவரது சகோதரர் நவீன்குமார், திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன், ஆட்டோ ஓட்டுநர் அய்யனார், அஜித் குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்த மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சதாசிவம், ஏஞ்சல் உள்ளிட்டோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். நான்காவது நாளான வெள்ளிக்கிழமை காலை நீதிபதி ஜான் சுந்தர் லால் சுரேஷ் திருப்புவனம் காவல் நிலையத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். அஜித் குமார் மீதான நிகிதாவின் புகார் மனு, அந்தப் புகாரை பதிவு செய்த ஆவணத்தை ஆய்வு செய்த அவர், சம்பவத்தன்று பணியில் இருந்த போலீஸாரிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். பின்னர், நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகைக்கு வந்த நீதிபதி, சிவகங்கை ஏடிஎஸ்பி சுகுமாறனிடம் விசாரித்தார். தொடர்ந்து, திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், சிறப்பு எஸ்.ஐ. சிவக்குமார், அன்று பணியில் இருந்த போலீஸ்காரர் இளையராஜா ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்தார். இதையடுத்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரத்திடமும் விசாரணை நடத்தினார். முதல் தகவல் அறிக்கையில் என்ன உள்ளது? படக்குறிப்பு,திருப்புவனம் காவல் நிலையம் நிகிதாவின் புகாரின் பேரில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு தகவல்கள் முரண்பட்டதாக உள்ளதாகவும், அறிக்கையின் அடிப்படையில் சட்டத்திற்கு புறம்பாக அஜித் குமார் உட்பட ஐந்து இளைஞர்களை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் அடித்தது தெரியவந்துள்ளதாகக் கூறுகிறார் அஜித்குமாரின் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா. புகார் மனுவில் உள்ள நேரமும் முதல் தகவல் அறிக்கையில் உள்ள நேரமும் வேறு வேறாக உள்ளது என்கிறார் கார்த்திக் ராஜா. இது குறித்து பிபிசி தமிழிடம் பேசியவர், " முதல் தகவல் அறிக்கையில் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நகை காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நிகிதா கொடுத்த புகார் மனுவில் காலை 9 மணிக்கு வீட்டில் இருந்து தானும் (நிகிதா) அம்மா சிவகாமியும் கோவிலுக்குப் புறப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்." 'சடலமாக வருவான் என நினைக்கவில்லை' என்று கதறும் தாயார் - நகை திருட்டு புகார் கொடுத்த பெண் கூறுவது என்ன? பிபிசி கள ஆய்வு "அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது" - திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கில் உயர்நீதிமன்றம் வேதனை சாத்தான்குளம் முதல் திருப்புவனம் வரை - காவல் அத்துமீறல்கள் ஏற்படுத்தும் அரசியல் எதிரொலி '44 காயங்கள், மூளையில் ரத்தக் கசிவு, காதுகளில் உலர்ந்த ரத்தம்' - மரணத்திற்கு காரணம் என்ன? முதல் தகவல் அறிக்கையில் குளறுபடிகளா? படக்குறிப்பு, அஜித்குமாரின் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா. நிகிதா 27ம் தேதி இரவு அளித்த பேட்டியில். காவலாளி சீருடையில் இருந்த அஜித் குமார் , தனது தாய்க்கு சக்கர நாற்காலியை எடுத்து வந்து கொடுத்தற்காக ரூ.500 கொடுக்க வேண்டும் என வாக்குவாதம் செய்ததாகவும், கோவிலில் இருந்து வீடு திரும்பிய பின்னர் காரில் இருந்த நகை காணாமல் போனதை அறிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் நிகிதா அளித்த புகார் மனுவில் உயிரிழந்த அஜித்குமார் 500 ரூபாய் கேட்டதாக குறிப்பிடப்படவில்லை என்கிறார் கார்த்திக் ராஜா. தொடர்ந்து பேசிய அவர். "நிகிதா 27ஆம் தேதி காலை 11 மணிக்கு கோவிலுக்கு வந்து சென்றுள்ளார். நகை காணாமல் போனதாக 3 மணிக்கு திருப்புவனம் காவல் நிலையத்தில் வாய் மொழியாக முதலில் புகார் அளித்துள்ளார். பிறகு இரவு 7 மணிக்கு வழக்கறிஞர் ஒருவர் உதவியுடன் புகார் மனு அளித்துள்ளார்." "எனவே முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு குளறுபடிகள் மற்றும் முரண்பட்ட தகவல்கள் உள்ளன. நீதிமன்றத்தில் அஜித் குமார் கொல்லப்பட்டதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகு திருப்புவனம் காவல்துறையினரால் தாமதமாக அவசரகதியில் தயாரிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையாக இதனை நான் பார்க்கிறேன்." என்று கூறினார். இந்த வழக்கில் நிகிதாவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார். "உயிரிழந்த அஜித் குமார் மீது இதுவரை எந்த காவல் நிலையத்திலும் குற்ற பின்னணி இல்லை, ஆனால் புகார் அளித்த நிகிதா மீது பல்வேறு மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. அஜித்குமார் மரணத்தில் தற்போது போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை மாற்றி எதிரியாக நிகிதாவை சேர்க்க வேண்டும்" என்றார். சட்டத்திற்குப் புறம்பாக விசாரித்துள்ளனரா? பட மூலாதாரம்,HENRI TIPHAGNE படக்குறிப்பு, மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் நிகிதா புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை இந்த வழக்கிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிபிசி தமிழிடம் பேசிய மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர். "நகை காணவில்லை என்பது தொடர்பாக 27 ஆம் தேதி 3 மணிக்கு நிகிதா புகார் அளித்ததாகவும் அது தொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் சிஎஸ்ஆர் போடப்பட்டுள்ளது என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டது." "முதல் கட்ட விசாரணை தொடங்கிய திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் திருக்கோயில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அஜித் குமாரை விசாரணைக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்ததன் அடிப்படையில் அஜித் குமார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்றிருக்கிறார்." "காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த அஜித் குமார் காணாமல் போன நகை தொடர்பாக தனக்கு ஒன்றும் தெரியாது தான் எடுக்கவில்லை என தொடர்ந்து சொல்லி வந்த நிலையில், நிகிதா இரவு 7 மணி அளவில் திருப்புவனம் காவல் நிலையத்தின் முன்பு நின்று கொண்டு ஊடகங்களுக்கு காரில் வைத்திருந்த நகையைக் காணவில்லை, நகையை காவலாளி அஜித் குமார் திருடியதாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்." என்று தெரிவித்தார் நன்றாக விசாரித்து நகையை மீட்குமாறு கூறிய டிஎஸ்பி பட மூலாதாரம்,NIKITHA படக்குறிப்பு, நிகிதா திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் காவல் நிலையத்திற்கு வெளியே அமர்ந்திருந்த மானாமதுரை டி.எஸ்.பி சிறப்பு தனிப்படை போலீசாரை அழைத்து அஜித் குமாரை விசாரிக்குமாறு ஒப்படைத்துள்ளார். ஒப்படைக்கப்பட்ட அஜித் குமாரை காவல் நிலையத்தில் இருந்து தனிப்படை காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். சிறப்பு தனிப்படை சார்பு ஆய்வாளர் பிரதாப் விடுப்பில் இருந்தால் தனிப்படை தலைமைக் காவலர் மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரத்தை அழைத்து அஜித் குமார் தொடர்பாக தகவல்களை அளித்ததாக அஜித் குமார் இறப்பு தொடர்பாக தனிப்படை தலைமைக் காவலர் கண்ணன் அளித்துள்ள புகாரின் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.எஸ்.பி அஜித் குமாரை விசாரிக்க அனுமதி அளித்தன் அடிப்படையில் அஜித்குமாரை 27ஆம் தேதி இரவு கடுமையாக தாக்கியுள்ளனர் என்கிறார் ஹென்றி திபென் அஜித் குமார் நகையை தான் திருடவில்லை எனச் சொல்வதாக தலைமை காவலர் மீண்டும் டிஎஸ்பியை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். அதற்கு டி.எஸ்.பி சண்முகசுந்தரம் அஜித் குமாரை "நன்றாக விசாரித்து நகையை மீட்குமாறு கூறியுள்ளார்". தொடர்ந்து பேசிய அவர், "டி.எஸ்.பி உத்தரவின் பெயரில் சம்மன் அளிக்காமல் அருண்குமார், அஜித் குமார் மற்றும் அவரின் தம்பி நவீன் குமாரையும் விசாரணைக்கு அழைத்து வந்து கடுமையாக போலீசார் தாக்கியுள்ளனர். அதன் பின்னர் 28ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் நிகிதா கொடுத்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது." "அப்படியெனில் சட்டத்திற்கு புறம்பாக வழக்குப்பதிவு செய்யப்படாமல் மூன்று இளைஞர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்து இரவு முழுவதும் கடுமையாக தாக்கியது முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே நிகிதாவின் முதல் தகவல் அறிக்கை இந்த வழக்கிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது." என்றார். "காவல் அதிகாரிகளை ஏன் இன்னும் வழக்கில் சேர்க்கவில்லை?" ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை ஏன் இன்னும் வழக்கில் சேர்க்கவில்லை என கேள்வி எழுப்புகிறார் ஹென்றி திபென். "அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்து செல்ல போலீசாருக்கு உத்தரவிட்ட திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரம் ஆகிய இருவரையும் இதுவரை ஏன் வழக்கில் சேர்த்து அவர்களை கைது செய்யவில்லை என்ற கேள்வி நிகிதாவின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் எழுகிறது" என அவர் விவரித்தார். உடற்கூராய்வுக்கு அனுப்ப ஏற்பட்ட காலதாமதம் குறித்தும் கேள்வி எழுப்புகிறார் ஹென்றி திபென். "28 ஆம் தேதி மாலை அஜித்குமார் உயிரிழந்ததாக காவல் ஆய்வாளர் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்த நிலையில் 29ஆம் தேதி மாலை வரை உடற்கூராய்வுக்கு அனுப்பாமல் காலதாமதம் செய்ததற்கு என்ன காரணம் என்று பல்வேறு கேள்விகள் எழுகிறது" என்றார். "2011 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு மோசடி வழக்குகள் உள்ள நிகிதாவை ஏன் காவல்துறை இதுவரை அழைத்து விசாரிக்கவில்லை" என்ற கேள்வி எழுவதாக கூறுகிறார் மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c939xwd2z69o
செம்மணி மனிதப் புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் ?
செம்மணி மனிதப் புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் ? adminJuly 7, 2025 செம்மணி மனித புதைகுழிக்கு அருகில், உள்ள பகுதிகளில் மேல் தெரியும் வகையிலும் மனித எலும்பு கூட்டு சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் , மனித புதைகுழிகளுக்குள் வெள்ள நீர் புகாத வகையில் மண் மேடு அமைக்கும் பணிகள் நேற்றைய தினம் முன்னெடுப்பட்டது. அதன் போது, புதைகுழிக்கு அருகில் உள்ள பகுதியை துப்பரவு செய்து மண் அகழ்ந்து புதைகுழிக்கு அருகில் மண் மேடு அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட வேளை அப்பகுதிகளில் மனித எலும்பு கூட்டு சிதிலங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் , மண் அகலும் பணிகள் நிறுத்தப்பட்டு , அவ்விடத்தில் புதைகுழி அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேவேளை செய்மதி படங்களின் அடிப்படையில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித புதைகுழிகளுக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனும் சந்தேகத்தில் , யாழ்.பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வு பணிகளில் மண்டையோடு ஒன்றும் , ஆடையை ஒத்த துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. செம்மணி மனித புதைகுழி அகழ்வில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வரையில் 47 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , 44 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. https://globaltamilnews.net/2025/217643/
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed