புதிய பதிவுகள்2

வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு

1 month 2 weeks ago
இந்த காபன் 14 இனை அளவிடும் இயந்திரம் (Accelerator Mass Spectrometer) இலங்கையில் இருப்பதாக நான் அறியவில்லை. இருப்பதானால் கொழும்பு பல்கலையில் இருக்க வேண்டும். ஆனால், மிகவும் விலையுயர்ந்த, பராமரிப்பு தேவையான இயந்திரம். எனவே இன்னும் இல்லை என நம்புகிறேன். இந்தியாவில் சில உயர் நிலை ஆய்வு நிறுவனங்களில் இந்த இயந்திரங்கள் இருக்கின்றன. அவற்றை தொல்லியல் மாதிரிகளை பரிசோதிக்க மட்டும் பாவிக்க முடியும். அண்மைக் கால உடல்களை காபன் 14 காலம் கணிக்க, சட்ட மருத்துவ (forensic) அனுபவம் உள்ள அமெரிக்க அல்லது ஐரோப்பிய ஆய்வகங்களுக்குத் தான் அனுப்ப வேண்டும். புளோரிடாவில் இருக்கும் Beta Analytics என்ற நிறுவனம் இதைச் செய்ய வேண்டிய உணர் திறன் மிக்க இயந்திரத்தை வைத்திருக்கிறது (இங்கே தான் திருக்கேதீஸ்வர அகழ்வு எச்சங்கள் அனுப்பப் பட்டன). இந்தக் காலக் கணிப்பை செய்வதற்கு முன்னர் (அல்லது சம காலத்தில்) இலங்கையில் செய்யக் கூடிய சில சட்ட மருத்துவ பரிசோதனை முறைகளை முன்னிறுத்த வேண்டுமென்பது என் அபிப்பிராயம். எச்சங்களின் பௌதீக பரிசோதனைகள் மூலம் தோட்டாக்கள், தாக்குதல், வெட்டுக்கள் என்பவற்றை ஒரு முறையான forensic pathologist மூலம் ஆராய வேண்டும். அத்தோடு ஒவ்வொரு உடலில் இருந்தும் டி.என்.ஏ யை எடுத்துப் பாதுகாக்க வேண்டும். காணாமல் போனவர்களின் பெற்றோர், சகோதரர், பிள்ளைகளின் டி.என்.ஏ மாதிரிகளோடு இவற்றை ஒப்பிடலாம். இந்த டி.என்.ஏ பரிசோதனை செய்யும் வசதி கொழும்பில் இருக்கிறது.

வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு

1 month 2 weeks ago
நல்ல தகவல் ஜஸ்டின். தற்போழுது கண்டெடுக்கப்படும் செம்மணி போன்ற மனித தடயங்களை, அதன் காலப்பகுதி, மரணம் நடந்த மூலக்காரணம் என்ன என்பதை கண்டறிய எந்த மருத்துவ விஞ்ஞான வகையில் அணுகலாம்? இலங்கையில் இருந்து புளோரிடா கொண்டு செல்வத்திற்கான காரணம் என்ன? இலங்கையில் அந்த தொழில் நூட்பம் இல்லையா? தெரிந்து கொள்ளலாமா?

மண்டை தீவு செம்பாட்டுத்தோட்ட தோமையார் தேவாலய மனித புதைகுழி; டக்ளஸ் தேவானந்தாவை விசாரியுங்கள் - சிறீதரன் வலியுறுத்தல்

1 month 2 weeks ago
17 JUN, 2025 | 08:25 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மண்டைதீவு செம்பாட்டுத்தோட்டம் தோமையார் தேவாலயப்பகுதியில் உள்ள மனிதப் புதைகுழி தொடர்பில் ஈ.பி.டி.பி.யின் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் இராணுவ ஒட்டுக் குழுத் தலைவருமாக இருந்தவரான டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற அமர்வின் போது மண்டைதீவு செம்பாட்டுத் தோட்டம், புனித தோமையார் ஆலயத்தின் அருகாமை, திருக்கேதீஸ்வரம், முல்லைத்தீவு குமுழுமுனை, கொக்குத்தொடுவாய் யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழிகள் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்சன நாணயக்காரவின் கவனத்திற்கு கொண்டு வந்து கேள்வி எழுப்புகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, மண்டைதீவு செம்பாட்டுத்தோட்டம் தோமையார் தேவாலயப்பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியில், 1990களில் வேலணை, மண்கும்பான், அல்லைப்பிட்டி, மண்டைதீவுப் பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட சிறுவர்களும் இளைஞர்களுமே புதைக்கப்பட்டார்கள் என வடக்கு மற்றும் கிழக்கு மனித உரிமை அமைப்புகள் குறிப்பிடுகின்றன. 3ஆம் வட்டாரம், மண்டைதீவைச் சேர்ந்த சூசைதாஸ் யேசுரட்ணம் தர்மராணி என்ற தாயார், தனது இரு பிள்ளைகள் உட்பட்ட 84 பேர் மண்டைதீவில் காணாமலாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நீதியைப் பெற்றுத்தருமாறும் 2025.04.30 ஆம் திகதி ஜனாதிபதிக்கு ஒரு கடிதத்தை அனுப்பி, அதன் பிரதியை எனக்கும் கிடைக்கச் செய்துள்ளார். இப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களுடன் வெளிவந்த அறிக்கைகள் உள்ளன. மண்கும்பான், அல்லைப்பிட்டி, மண்டைதீவுப் பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட சிறுவர்களும், இளைஞர்களுமே படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள். இவர்களை இராணுவத்தினர் அழைத்து சென்ற போது பெற்றோர், உறவினர்கள் அப்போது தீவுப்பகுதியில் இராணுவ ஒட்டுக்குழுவின் தலைவராகவிருந்த டக்ளஸ் தேவானந்தாவிடம் ஓடிச்சென்று அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மன்றாடியபோது இராணுவத்தினர் விசாரித்து விட்டு விடுவிப்பார்கள் என டக்ளஸ் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் எவரும் விடுவிக்கப்படாது படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள். எனவே மண்டைதீவு செம்பாட்டுத்தோட்டம் தோமையார் தேவாலயப்பகுதியில் உள்ள மனிதப் புதைகுழி தொடர்பில் ஈ.பி.டி.பி.யின் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் இராணுவ ஒட்டுக் குழுத் தலைவருமாக இருந்தவரான டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/217728

வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு

1 month 2 weeks ago
கார்பன் வயது கணிப்பைப் பற்றி ஏன் பேசுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. மேலதிக தகவலுக்காக கீழே இருக்கும் கட்டுரையை வாசிக்கலாம். University of Chicago NewsCarbon-14 dating, explainedFirst developed in the late 1940s at UChicago, carbon dating can determine the age of organic materials as old as 60,000 years. ஆனால் சுருக்கமாக இது தான் காபன் திகதி கணித்தல்: 1. காபன் 14 (C14) என்கிற மூலக்கூறு கதிரியக்கத்தை வெளியிடும். எனவே, ஒரு மாதிரியில் இருக்கும் காபன் 14 இன் அளவை கதிரியக்கத்தை அளக்கும் கருவிகள் கொண்டு அளக்கலாம். 2. ஒரு உயிர் சுவாசிக்காமல் விட்ட கணத்தில், அதனுள் காபன் 14 புதிதாகச் சேர்வதும் நின்று விடும். 3. இறந்த அந்த உயிரியின் உடலில் அது வரை சேர்ந்த காபன் 14 மெதுவாக அழிய ஆரம்பிக்கும் (decay). இந்த அழிவு எவ்வளவு மெதுவாக நிகழும்? காபன் 14 இனைப் பொறுத்த வரை அதன் அரைவாசி அழிவடைய ~5,700 ஆண்டுகள் எடுக்கும். இதனை காபன் 14 இன் அரை வாழ்வுக் காலம் (half-life) என்பார்கள். 4. இவ்வளவு மெதுவாக அழிவடையும் காபன் 14 இனை வைத்துக் கொண்டு மிக அண்மையில் (1990 என்று வைத்துக் கொண்டாலும்) இறந்த உடல் எச்சங்களின் வயதைக் கணிப்பது மிகவும் கடினமானது. எனவே, சாதாரணமாக காபன் 14 வயது கணித்தல் சில நூறு ஆண்டுகள் முதல் 50,000 ஆண்டுகள் வரையான வயதைக் கணிப்பதற்கே பயன்படுகிறது. ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டும், காபன் 14 இனை வித்தியாசமாகப் பயன்படுத்தி 1980 இல் இறந்த உடல்களின் வயதைக் கணிக்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதைப் பற்றிய சுவாரசியமான கட்டுரை கீழே இருக்கிறது. https://www.science.org/doi/10.1126/science.321.5895.1434 ஆனால், இந்த முறை இலங்கையில் இருந்து எடுக்கப் படும் உடல்களில் பயன்படுத்தக் கூடியதா என்பது இன்னும் தெரியாது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11 ஆவது புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் கடமைகளை பெறுப்பேற்றார்

1 month 2 weeks ago
Published By: VISHNU 17 JUN, 2025 | 06:27 PM கிழக்கு பல்கலைக்கழத்தின் 11 வது உபவேந்தரா நியமிக்கப்பட்ட முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் செவ்வாய்க்கிழமை (17) தனது கடமைகளை பெறுப்பேற்றுக் கொண்டார். குறித்த பல்கலைக்களத்தின் 11 வது உபவேந்தரை தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சை பல்கலைக்கழகத்தின் பேரவையினால் கடந்த இரண்டு மாத்திற்கு முன்னர் பல்கலைகழகத்தில் இடம்பெற்றது. இதில் 8 பேர் களமிறங்கிய நிலையில் முதல் நிலையில் முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன், உட்பட 3 பேர் தெரிவு செய்யப்பட்டு பல்கலைகழக மானிய ஆணைக் குழுவிற்கு அனுப்பிய அந்த பெயர் பட்டியலை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர்; இதனடிப்படையில் முதல் நிலையிலுள்ளதையடுத்து முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபனை ஜனாதிபதி கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11 வது உபவேந்தராக நியமித்து அதற்கான கடிதத்தினை செவ்வாய்க்கிழமை (17) அனுப்பிவைத்துள்ளார். இதனையடுத்து புதிய உபவேந்தர் செவ்வாய்க்கிழமை (17) பகல் 12.00 மணியளவில் தமது கடமையை உத்தியோக பூர்வமாக பெறுப்பேற்றுக் கொண்டார். https://www.virakesari.lk/article/217755

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

1 month 2 weeks ago
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; அகழ்வாய்வுகள் முழுமையாக இடம்பெறுவதுடன், வெளிப்படைத் தன்மைஅவசியம் - ரவிகரன் எம்.பி Published By: VISHNU 17 JUN, 2025 | 06:06 PM யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் முழுமையாக மேற்கொள்ளப்படுவதுடன், அகழ்வாய்வுகளில் வெளிப்படைத்தன்மை அவசியமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை இறுதிக்கட்டயுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் மற்றும், யுத்தக்குற்றங்களுக்கு இதுவரை உரியவகையில் பொறுப்புக்கூறப்படவில்லை என்பதை இதன்போது சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், அந்தவிடயத்தில் கடந்த அரசாங்கங்களைப்போலவே இந்த அரசாங்கமும் செயற்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றில் செவ்வாய்க்கிழமை (17) உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மயான புதைகுழி அகழ்வுப் பணிகள் உரிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென இவ்வுயரிய சபையிலே வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். குறித்த செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 19 முழுமையான மனித எலும்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தப் புதைகுழியினை எதிர்வரும் 20ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக 45 நாட்களுக்கு அகழ்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான உத்தரவு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தப் புதைகுழியினை அகழ்வு செய்து உரியவகையில் விசாரணைகளை மேற்கொண்டு உண்மை நிலைமைகள் கண்டறியப்படவேண்டுமெனவும், இந்த விட யத்தில் அரசாங்கமானது உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன். இந்தப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூடுகளை வைத்துப் பார்க்கும்போது சிறுவர்கள், பெண்கள் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது. இதனைவிட அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக் கூடுகளில் ஆடைகள் அணிந்திருந்தமைக்கான சான்றிதழ்கள் இல்லை என்றும் கூறப்படுகின்றது. எனவே, இந்த சடலங்கள் நிர்வாணமாக புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. திட்டமிட்ட வகையில் படுகொலைகள் செய்யப்பட்ட பின்னர் சடலங்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்றே கருதவேண்டியுள்ளது. மேலும் செம்மணிப் பகுதியில் புதைகுழிகள் உள்ள விடயம் கடந்த 1999ஆம்ஆண்டு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட 6 இராணுவ வீரர்களுக்கு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருந்தது. இதில் பிரதான சந்தேகநபரான இராணுவ லயன்ஸ் கோப்ரல் சோமரத்ன நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் 600பேர்வரையில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளதாக தகவலை வெளிப்படுத்தியிருந்தார். இந்த விவகாரமானது அன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. செம்மணியில் அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, செம்மணி புதைகுழி தோண்டும் நடவடிக்கை அன்று இடம்பெற்றிருந்தது. லயன்ஸ் கோப்ரல் சோமரத்ன அடையாளம் காட்டிய சிலபகுதிகள் அந்தவேளையில் அகழப்பட்டன. அதில் 25 எலும்புக் கூடுகள் வரையில் மீட்கப்பட்டிருந்தன. அதன்பின்னர் இந்த நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டது. தற்போது செம்மணி பகுதியில் அகழ்வு இடம்பெற்றதையடுத்து மீண்டும் புதைகுழியொன்று அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. கடந்த மூன்று தசாப்த காலமாக வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற கொடூர யுத்தம் காரணமாக இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருந்தனர். இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர், ஆயிரக்கணக்கானவர்கள் காணாமலாக்கப்பட்டனர், ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்திருந்தனர், தொண்ணூறாயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர், ஒன்பதாயிரம் சிறுவர்கள் அனாதரவாக்கப்பட்டனர். இவ்வாறு பேரிழப்புகளை தமிழ்மக்கள் சந்தித்திருந்தனர். யுத்தகாலத்தில் இராணுவத்தரப்பினரால் பலவேறு பகுதிகளில் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டிருந்தன. யுத்தம் முடிவடைந்து தற்போது 16வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பல இடங்களில் புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் இதுவரை 13 இடங்களில் புதைகுழிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதில் பலஇடங்களில் புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் 2013ஆம் ஆண்டு புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இந்தப் புதைகுழி அவ்வப்போது அகழப்பட்டதுடன் 2018ஆம் ஆண்டுவரை இந்தப்பணிகள் இடம்பெற்றிருந்தன. இங்குமீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாநிலத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருந்தன. ஆனால், மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் மன்னர் காலத்தைச் சேர்ந்தவை என்று கூறப் பட்டிருந்தது. இதன் உண்மைதன்மை என்ன என்பது தொடர்பில் ஆராய்வதற்கு பின்னர் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதேபோன்று மன்னார் நகரிலுள்ள ச.தொ.ச கட்டடத்துக்கு அருகில் 2018ஆம் ஆண்டு அகழ்வுப்பணி இடம்பெற்றபோது அங்கும்மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பகுதிகளிலும் அகழ்வுப்பணி இடம்பெற்றதுடன் இந்தவிவகாரம் தற்போதும் நீதிமன்றத்தில் உள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய்பகுதியில் அகழ்வுப்பணி இடம்பெற்றபோது 2023ஆம் ஆண்டு ஜூன்மாதம் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு இடங்களிலும் அகழ்வுப் பணிகள் இடம்பெறுகின்ற போது மனிதப் புதைகுழிகள் தென்படுகின்றமை வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் வழமையானவிடயமாக மாறிவிட்டது. யுத்தகாலத்தில் கொன்று குவிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஆங்காங்கே புதைக்கப்பட்டிருந்தனர். அந்த புதைகுழிகளே தற்போது வெளிப்பட்டுவருகின்றன. செம்மணிப் பகுதியில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள புதைகுழி தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும். அகழ்வுப்பணிகள் உரியவகையில் மேற்கொள்ளப்பட்டு எந்தக்காலப்பகுதியில் இந்தப் படுகொலைகள் இடம்பெற்றன, இதற்கு பொறுப்பானவர்கள் யார் என்ற விடயங்கள் கண்டறியப்படவேண்டும். இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக் கணக்கான மக்கள் காணாமல்போகச் செய்யப்பட்டுள்ளனர். படையினரிடம் சரணடைந்தவர்கள், படையினர்களிடம் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள், படையினரால் கைது செய்யப்பட்டவர்கள், படைத்தரப்பினரால் கடத்தப்பபட்டவர்கள் எனப் பலரும் காணாமல் போகச்செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்னநடந்தது என்றவிடயம் இதுவரை மர்மமாகவே உள்ளது. இவ்வாறு காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்களா என்ற சந்தேகம் பாதிக்கப்பட்ட மக்கள்மத்தியில் காணப்படுகின்றது. இதேபோன்றே இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருந்தனர். முள்ளிவாய்க்கால் பகுதியில் திறந்த நிலப்பரப்பில் இவர்கள்மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு வந்தபோது தாக்குதல்களில் பெருமளவானோர் பலியாகியிருந்தனர். இவ்வாறு பலியானவர்கள் அந்தந்த இடங்களிலேயே புதைக்கப்பட்டிருந்தனர். செம்மணியில் இளைஞர், யுவதிகள் கொன்று புதைக்கப்பட்டமை, கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் இறுதியிலேயே தெரியவந்தது. ஆனாலும், அந்த புதைகுழிகள் தொடர்பில் அன்றைய காலப்பகுதியில் உரியவிசாரணைகள் நடத்தப்பட்டிருக்கவில்லை. அந்தப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப் பட்டிருக்கவில்லை. அதன் பின்னணியில் செயற்பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அன்று கிருஷாந்தி குமாரசாமியின் கொலைவழக்கின் பிரதான சந்தேக நபரான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன தகவலை வெளிப்படுத்தி யிருக்காவிடின் செம்மணி புதைகுழி விவகாரம் வெளிவந்திருக்கமாட்டாது. இந்தப் புதைகுழி விவகாரம் தொடர்பில் தகவல்கள் வெளிப் படுத்தப்பட்ட போதும் உரியவகையில் புதைகுழிகள் அகழப்படாமையினால்தான் தற்போது செம்மணியில் மீண்டும் புதைகுழி அடையாளம் காணப்பட்டிருக்கிறது. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் பல்வேறு இடங்களில் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அந்தப் புதைகுழிகள் தொடர்பில் உரியவிசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். தற்போது செம்மணியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள புதைகுழியில் பெருமளவானோர் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியில் 19எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் சிறுவர்கள், பெண்கள் ஆகியோரின் எலும்புக்கூடுகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, இந்த புதைகுழி அகழ்வுக்கான சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இதற்கான சகல ஒத்துழைப்புகளையும் அரசாங்கம் வழங்க வேண்டும். அகழ்வுச்செயற்பாட்டை நிறுத்தாது இதனை முழுமைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும், யுத்தக்குற்றங்கள் தொடர்பில் இன்னமும் உரியவகையில் பொறுப்புக்கூறப்படவில்லை. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அந்த விடயத்தில் கடந்த அரசாங்கங்களைப் போன்றே செயற்பட்டு வருகின்றது. இந்த புதைகுழி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன் - என்றார். https://www.virakesari.lk/article/217753

யாழில் திட்டமிட்ட எரிபொருள் தட்டுப்பாடு ஏன்?

1 month 2 weeks ago
எங்கு, எப்போ, என்னென்ன… தட்டுப்பாடுகள் வரும் என, பல மாதங்கள் முன்பே துல்லியமாக கணிக்கும்… யாழ்ப்பாணிகளின் மூளைக்கு, இந்த உலகில் எவனும் கிட்ட நெருங்க முடியாது. 😂 🤣

யாழில் திட்டமிட்ட எரிபொருள் தட்டுப்பாடு ஏன்?

1 month 2 weeks ago
எரிபொருள் குறித்து அதிரடி அறிவிப்பு! எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஈரான் - இஸ்ரேல் பகுதிகளில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளை அவதானிக்க கூடியதாக உள்ளதாவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த 2 மாதங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, பொதுமக்கள் போலிச் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக்கொண்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmc0dgyf80007qp4ktbq7jcua

வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு

1 month 2 weeks ago
காட்டெருமையின் எலும்பையும், கடவாய் பல்லையும் புத்தரின் விலா எலும்பு, தெத்த பல்லு என்று சொல்லி சரித்திரம் எழுதவும், படுகொலை செய்யப்பட்ட தமிழனின் உடல் எச்சத்தை போர்த்துகீசு என்று சொல்லி மறைத்து ஆடுவதும் சிங்களவருக்கு கைவந்த கலை.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் - அரசாங்கம் அனுமதி

1 month 2 weeks ago
ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும் - முள்ளிவாய்க்காலிற்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும் - சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் கடிதம் Published By: RAJEEBAN 17 JUN, 2025 | 08:15 PM ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்கர் துர்க்(Volker Türk) தனது இலங்கை விஜயத்தின் போது உள்நாட்டு யுத்த மீறல்களுடன் தொடர்புபட்ட செம்மணி மனித புதைகுழி போன்றவற்றையும் ஜேவிபி கிளர்ச்சி காலத்தைய மனித புதைகுழிகளையும் பார்வையிடவேண்டும் என சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. முள்ளிவாய்க்காலிற்கு விஜயம் மேற்கொள்ளுங்கள், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் மனித உரிமைகளுடன் தொடர்புபட்ட சர்வதேசத்தவர்கள் அனைவரும் முள்ளிவாய்க்காலிற்கு சென்று யுத்தத்தின் இறுதி அட்டுழியங்களை பார்வையிடவேண்டும் அதன் மூலம் அரசாங்கம் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ளவேண்டும், அதற்கு தீர்வு காணவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம் என்ற செய்தியை பாதிக்கப்பட்டவர்களிற்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் தெரிவிக்கவேண்டும் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்கர் துர்க்கிற்கு(Volker Türk) எழுதியுள்ள கடிதத்தில் சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் உள்ள பலவந்தமாக காணாமலாக்கப்படுதலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தியுங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும், என பகிரங்கமாக வேண்டுகோள் விடுங்கள் எனவும் சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தலைமையிலான இலங்கையின் ஓரளவு புதிய அரசாங்கம் தேர்தலிற்கு முன்னர் புதிய வாக்குறுதிகளை வழங்கிய போதும் ஆனால் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் உறுதிப்பாட்டை சிறிதளவு கூட வெளிப்படுத்தவில்லை என சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்கர் துர்க்கிற்கு(Volker Türk) அவரது இலங்கை விஜயம் குறித்து எழுதியுள்ள கடிதத்தில் சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் இதனை தெரிவித்துள்ளன. முன்னைய அரசாங்கங்களின் கொள்கைகளையே இதுவரை அனுரகுமாரதிசநாயக்க அரசாங்கம் பின்பற்றி வருவதாக சர்வதேச அரசசார்ப்பற்ற அமைப்புகள்தமது கடிதத்தில் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/217758

இஸ்ரேல் vs இரான் ராணுவ பலம் குறித்த ஓர் ஒப்பீடு - யாருடைய ராணுவம் பலம் மிக்கது?

1 month 2 weeks ago
அளவில் சிறிய இஸ்ரேல், பெரிய நாடான இரானுடன் மோதுவது எப்படி சாத்தியமாகிறது? - அதிநவீன போர் தளவாடங்கள் கிடைப்பது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேலிடம் F-35 போன்ற அமெரிக்கத் தயாரிப்பு ஜெட் விமானங்கள் உள்ளன, ஆனால் இரானில் அதன் இலக்குகளை அடைய அவை போதுமானதா? கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனாதன் பீல் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரானுடனான இஸ்ரேலின் மோதலை பார்க்கும்போது, அது பொருந்தாத ஒன்றாக தோன்றலாம், அதாவது 90 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட ஒரு நாடு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 8.8 கோடி மக்கள்தொகையைக் கொண்ட ஒரு பெரிய நாட்டுடன் மோதுகிறது. ஆனால், இஸ்ரேலின் வலிமையான மற்றும் அதிநவீன, அமெரிக்காவால் மட்டுமே வழங்கப்படும் பெரிய ஆயுதக்கிடங்குடன் கூடிய ராணுவப் படைகள் காரணமாக, அந்நாட்டால் தன்னைவிட பெரிய எதிரியை விட மேலோங்கி இருக்க முடிகிறது. மத்திய கிழக்கில் தற்போது நடைபெற்று வரும் போரில் இருநாடுகளுக்கிடையேயான ஒப்பீடுகள் குறித்து பிபிசி இங்கே ஆராய்கிறது. இரான் இதுவரை சாதித்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES டெஹ்ரானின் வான்வெளியை தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துவிட்டதாக, இஸ்ரேல் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. இரானின் சில பழைய போர் விமானங்கள் புறப்பட்டதற்கான அறிகுறிகளே இல்லை எனும் நிலையில், இஸ்ரேலின் கூற்று முற்றிலும் முரணானதாக உள்ளது. இஸ்ரேலிடம் உள்ள அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட போர் விமானங்கள், குறுகிய தொலைவிலிருந்து, சுட்டு வீழ்த்தப்படும் என்ற கவலை பெரிதளவில் இல்லாத, துல்லியமாக தாக்கவல்ல குண்டுகளை வீசும் திறன் படைத்ததாக உள்ளன. கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் இரானின் எஸ்300 ஏவுகணை கட்டமைப்பை தொலைதூர ஆயுதங்கள் மூலம் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது. இதில், இரான் வான் பாதுகாப்பு அமைப்பால் ஏற்படும் பெருமளவு அச்சுறுத்தல்கள் அழிக்கப்பட்டன. சமீப நாட்களாக இஸ்ரேலிய வான் படை, தரையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ரேடார்கள் மற்றும் லாஞ்சர்களை (launchers) குறிவைத்து வருகிறது. தாக்குதல் தொடங்குவதற்கு முன்பாகவே, இரானின் பதில் தாக்குதல்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு தயாராகும் வகையில், இரானுக்குள் உளவுப் பிரிவினர் அனுப்பப்பட்டனர். இரானின் மீதமுள்ள வான் பாதுகாப்பு அமைப்பை குறிவைப்பதற்காக, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் முகவர்கள் அந்நாட்டுக்குள் டிரோன்களை கடத்திவந்து பயன்படுத்தினர். இரானின் உயர்மட்ட படைத் தளபதிகளும் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதன் மூலமும் இரானின் பதில் தாக்குதல்கள் மட்டுப்படுத்தப்பட்டன. இரானால் இப்போதும் மீண்டும் தாக்க முடியுமா? பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, மத்திய கிழக்கில் மிகப்பெரிய ஏவுகணை கையிருப்பு இரானிடம் இருப்பதாக அமெரிக்கா கூறியது. இஸ்ரேல் தன் தாக்குதல்களை தொடங்குவதற்கு முன்பாகவே, மத்திய கிழக்கின் "மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணை" என அமெரிக்கா விவரிக்கும் ஏவுகணை அமைப்பு இரானிடம் இருந்தது. அதன் எண்ணிக்கை 2,000 முதல் 3000க்கு இடைப்பட்டதாக இருக்கும். அந்த ஏவுகணை அமைப்புகள் சிலவும் அவற்றை தயாரிக்கக்கூடிய ஆலைகளும் இஸ்ரேலால் ஏற்கெனவே தாக்கப்பட்டன. இரானின் தரைவழியே தாக்கி அழிக்கக்கூடிய, மூன்றில் ஒருபங்கு லாஞ்சர்களை தாங்கள் அழித்ததாக, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. இருப்பினும், டெஹ்ரானால் இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீச முடிந்தது, அவற்றில் சில இஸ்ரேலின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பையும் ஊடுருவி தாக்கியது. தற்போது இரானின் தரைவழியிலான லாஞ்சர்களுள் மூன்றில் ஒருபங்கை அழித்தவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. ஆனால், இரானின் ஏவுகணை அமைப்புகள் குறைக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அழிக்கப்படவில்லை. இது, இஸ்ரேலுக்கு மிகப்பெரும் நேரடியான அச்சுறுத்தலாக உள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களையும் தாண்டி, இரானிடம் இன்னும் பல குறுகிய தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உள்ளன. பாதுகாப்பு தொடர்பான சிந்தனை மையமான ருசி (Rusi) அமைப்பின் ஜஸ்டின் ப்ராங்க் கூறுகையில், டெஹ்ரானை விட தாங்கள் வான் பாதுகாப்பு அமைப்பில் ஆதிக்கம் செலுத்துவதாக இஸ்ரேல் கூறினாலும், அதை இன்னும் அந்நாடு அடையவில்லை. மேலும், இரானிடமிருந்து வரும் குறுகிய தூர ஏவுகணைகளால் இன்னும் அச்சுறுத்தல் உள்ளது. இரானுக்கு நட்பு நாடுகள் உள்ளதா? அவை என்ன செய்ய முடியும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரான் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு, திங்களன்று டெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய குடியரசு இரான் செய்தி நெட்வொர்க் அமைப்பால் பயன்படுத்தப்படும் ஒரு கட்டிடத்தை இஸ்ரேல் தாக்கியது. ராணுவ ஆலோசனைகள், ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பம் ரீதியாக, காஸாவில் ஹமாஸ் மீதும் லெபனானில் ஹெஸ்பொலா மீதும் இரான் பல ஆண்டுகளாக கவனம் செலுத்தியுள்ளது. ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக இஸ்ரேலிய நடவடிக்கையால், தன் எல்லைகளிலிருந்து இஸ்ரேலை அச்சுறுத்துவதற்கான அந்த அமைப்புகளின் திறன் பெருமளவில் குறைந்துள்ளது. காஸாவில் ஹமாஸ் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது, அதேபோன்று ஹெஸ்பொலாவின் பலம், தனக்கு நிதியுதவி வழங்கும் ஒரு நாட்டின் (இரான்) மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற முடியாத அளவுக்கு குறைந்துள்ளது. ஏமனில் மிக தொலைவில் ஹூத்திகள் இருந்தபோதிலும், அவர்களால் அவ்வப்போது இஸ்ரேலின் மீது ஏவுகணைகளை வீச முடிந்தது. இந்தாண்டு தொடக்கத்தில் ஹூத்தி அமைப்பு, அமெரிக்காவின் குண்டுவீச்சிலிருந்து தப்பித்து, சில அமெரிக்க ரீப்பர் டிரோன்களை, குறுகிய தூர தரை மற்றும் கடல் வாயிலாக தாக்கக்கூடிய ஏவுகணைகள் மூலமாக சுட்டு வீழ்த்தியது. மற்ற நாடுகள் இதில் என்ன செய்ய முடியும்? இந்த பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகளின் நலன்களை தாக்கும் திறன் இரானுக்கு உள்ளது. இராக்கில் இரானால் ஆதரிக்கப்படும் ஆயுதக் குழுக்கள், அப்பிராந்தியத்தில் மேற்கத்திய ராணுவ தளங்களை இலக்கு வைத்துள்ளன. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மோசமான சூழல்களுக்கு தயாராகி வருகிறது. பாக்தாத்தில் அமெரிக்க ராணுவ துருப்புகளுடன் 100 பிரிட்டன் துருப்புகள் உள்ளன. அவர்களின் பாதுகாப்பு கருதியே, பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் சைப்ரஸுக்கு கூடுதலாக ஆர்ஏஎஃப் டைஃபூன் விமானங்களை அனுப்புவதற்கு சமீபத்தில் உத்தரவிட்டார். பஹ்ரைனில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவத்தின் கடற்படையினரும் கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த போர் எந்தளவுக்கு செல்கிறதோ, அந்தளவுக்கு அப்பிராந்தியத்தில் உள்ள மேற்கத்திய படைகளுக்கு ஆபத்து அதிகரிக்கும். ஆனால், ஹோர்முஸ் நீரிணையில் (Straight of Hormuz) உள்ள உலகின் முக்கியமான கப்பல் போக்குவரத்து பாதையை தடுப்பதற்கான அல்லது செயலிழக்கச் செய்வதற்கான திறன் இரானிடம் உள்ளது. இந்த மோதலை விரிவாக்குவது இரானுக்கு விவேகமான யோசனையாக இருக்காது, ஆனால் அந்த முடிவை தேர்ந்தெடுத்தால் அந்நாட்டால் அதை செய்ய முடியும். இஸ்ரேலால் அதன் இலக்கை அடைய முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES தற்போதைய சூழலில் இஸ்ரேலின் கை ஓங்கியுள்ளது, ஆனால் இந்த ராணுவ நடவடிக்கையை தொடர்வது, அமெரிக்க ஆதரவை சார்ந்தே பெரிதும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிடமிருந்து இஸ்ரேல் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பில் ராணுவ உதவியை பெறுகிறது. அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட ஜெட் விமானங்களிலிருந்து ஏவப்படும் ஆயுதங்கள் பலவும் அமெரிக்காவிலிருந்தே இஸ்ரேலுக்கு வந்துள்ளன. இஸ்ரேலின் அயர்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்புக்கும் கூட இடைமறிக்கும் ஏவுகணைகள் சிலவும் அமெரிக்காவில் தான் தயாரிக்கப்பட்டவை. இரானின் நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ள அணுசக்தி கட்டமைப்புகளை தாக்குவதற்காக இஸ்ரேல் பயன்படுத்தும் 'பதுங்குகுழிகளை தாக்கவல்ல வெடிகுண்டுகள்' பெரும்பாலும் அமெரிக்காவில் இருந்து பெறப்பட்டவை. அவற்றை பயன்படுத்துவதற்கு ஆதரவாக உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரானின் அதி உயர் தலைவர் அலி காமனேயியை கொல்வதற்கான இஸ்ரேலின் திட்டங்களை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோன்று, இரானின் ஃபோர்டோவில் உள்ள நிலத்தடி அணுசக்தி வளாகத்துக்குள் ஊடுருவத் தேவைப்படும் ஒரே ஆயுதமான 13,600 கிலோ பெரியளவிலான வெடிகுண்டை (Massive Ordnance Penetrator) இஸ்ரேல் அணுக அமெரிக்கா அனுமதிக்கவில்லை, இதையும் அமெரிக்க B2 மூலோபாய குண்டுவீச்சு விமானங்களால் (US B2 strategic bombers) மட்டுமே வழங்க முடியும். அமெரிக்க ராணுவ ஆதரவு தொடர்ந்தாலும் இஸ்ரேலுக்கு சில வரம்புகள் இருக்கும். இஸ்ரேலின் விமானப் படையின் பலம், இரானின் அணுசக்தி திட்டத்தை பின்னுக்குத் தள்ளக்கூடும், ஆனால் அது அதை அழிக்காது. இரானிய ஆட்சியைக் கவிழ்க்கும் இஸ்ரேலின் நம்பிக்கை மிகவும் சாத்தியமற்றதாகத் தெரிகிறது. விமானத் தாக்குதல்கள் பயத்தையும் குழப்பத்தையும் சேதங்களையும் உருவாக்கக்கூடும். ஆனால், 2011ம் ஆண்டில் லிபியாவைப் பற்றியோ அல்லது காஸா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலையோ நினைத்துப் பாருங்கள், அவை அரிதாகவே தெளிவான வெற்றியை அளிக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx23ednw7j1o

வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு

1 month 2 weeks ago
அவை சிங்களவர்களுடைய எலும்புகள் என்ற உல்டா கதை மிக விரைவில் வெளிவரும்.

வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு

1 month 2 weeks ago
இலங்கை அரசாங்க தரப்பு, புளோரிடா அனுப்பி கார்பன் டேட்டிங் செய்யும் பின்னணியை நாங்கள் சற்று அவதானிப்பது அவசியம் என்று நினைக்கிறன். ஏற்கனவே சிங்களத் தரப்பால் அமெரிக்காவுக்கு அனுப்பி கார்பன் டேட்டிங் செய்யப்பட்ட யாழ் மனித புதைகுழி தடயங்கள் போர்த்துக்கீசர் காலத்து மனித எலும்புகள் என்று உல்டா கதையை சிங்கள மக்களிடையே செய்தி பரப்பப்படுகிறது. சிங்களம் தன்னை காப்பாற்றிக்கொள்ள எதையும் செய்யும் என்பது நாம் அறிந்தது தானே.

கேரளா, ஆந்திரா போல தமிழ்நாட்டிலும் கள்ளுக்கடை திறப்பதில் என்ன பிரச்னை? மது விலக்கின் வரலாறு

1 month 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கேரள மாநிலம் கொச்சியில் கள்ளுக்கடை (கோப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 17 ஜூன் 2025, 02:43 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஒரு பக்கம் மதுவிலக்குக் கோரிக்கையை சிலர் முன்வைத்துவரும் நிலையில், கள் இறக்க அனுமதிக்க கோரும் போராட்டங்களும் அவ்வப்போது நடந்துவருகின்றன. கள் இறக்கி விற்பனை செய்வது விவசாயிகளுக்கு உதவும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. இந்தப் போராட்டத்தின் பின்னணி என்ன? கேரளா, ஆந்திராவைப் போல தமிழ்நாட்டிலும் கள்ளுக்கடைகளை திறப்பதில் என்ன பிரச்னை? அரசு கூறும் சிக்கல் என்ன? தமிழ்நாட்டில் கள் விற்க தடை தமிழ்நாட்டில் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டுமெனக் கோரி, தூத்துக்குடி மாவட்டத்தில் கள் இறக்கும் போராட்டத்தை நடத்தியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு கள் பாதுகாப்பு இயக்கம் நீண்ட காலமாக கள் இறக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கள்ளை இறக்கி, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மதுபானங்களைப் பொறுத்தவரை, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் எனப்படும் டாஸ்மாக் மூலம் மொத்தமாக வாங்கி, தன்னுடைய கடைகள் மூலமாக விற்பனை செய்துவருகிறது. இது தவிர, தனியான உரிமங்கள் மூலம் தங்கும் விடுதிகள், தனியார் பார்களிலும் மதுபானங்களை விற்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், அங்கும் கள், சாராயம் போன்றவற்றை விற்க முடியாது. டாஸ்மாக் கடைகளிலும் உணவகங்களிலும் பார்களிலும் இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மதுபானங்களையும் வெளிநாட்டு மதுபானங்களையும் மட்டுமே விற்பனை செய்ய முடியும். கள், சாராயம் போன்ற பானங்களை விற்க முடியாது. ஆனால், வெளிநாட்டு மதுபானங்களை விற்க அனுமதியளிக்கும் நிலையில், கள், சாராயம் போன்ற பானங்களையும் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்துவருகிறது. பட மூலாதாரம்,SEEMAN4TN_OFFICIAL/INSTAGRAM கள்ளுக்கு ஏன் அனுமதி இல்லை? ஆர்டிஐ கேள்விக்கு அரசு பதில் தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள்ளை இறக்கி, விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு 'கள் பாதுகாப்பு இயக்கம்' என்ற அமைப்பு நீண்ட காலமாக இயங்கிவருகிறது. "2005ல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கள்ளுக்கு ஏன் அனுமதியில்லை எனக் கேட்டோம். அதற்குப் பதிலளிக்கும் போது, பனை மரத்தில் இறக்கும் கள்ளில் போதை குறைவு என்பதால் குளோரல் ஹைட்ரேட் கலக்கிக் கொடுப்பார்கள். ஒவ்வொரு பனை மரத்திலிருந்தும் கள்ளை உற்பத்தி செய்ய முடியும் என்பதால், ஒவ்வொரு மரத்தையும் கண்காணிக்க முடியாது. இதனால் 1987ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் கள் இறக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது என்றார்கள். இதற்குப் பிறகுதான் போராட ஆரம்பித்தோம். தமிழ்நாட்டில் மட்டும்தான் கள் இறக்க முடியவில்லை. புதுச்சேரி, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கள் விற்கிறார்கள். அங்கெல்லாம் கலப்படம் நடக்காது, இங்கே மட்டும்தான் நடக்குமா?" எனக் கேள்வி எழுப்புகிறார், தமிழ்நாடு கள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி. தங்களைப் பொறுத்தவரை, கள் ஒரு போதை ஏற்படுத்தும் பானமல்ல என்றும் அது உணவின் ஒரு பகுதி என்றும் குறிப்பிடும் அவர், தமிழ்நாடு அரசு தனது மதுக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டுமென்கிறார். "பனை மரத்திலிருந்தும் தென்னை மரத்திலிருந்தும் கள் இறக்குவதில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது. அது போதை ஏற்படுத்தும் பானமே அல்ல" என்கிறார். பட மூலாதாரம்,NALLASAMY 'கலாசார சீரழிவு ஏற்படும்' ஆனால், கள்ளை ஒரு உணவைப் போல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கடுமையாக எதிர்க்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான து. ரவிக்குமார். "கள் என்பது அடிப்படையில் மது. அது உணவு அல்ல. கஞ்சாவை மூலிகை என்று சொல்வதைப் போலத்தான், கள்ளை உணவு என்று சொல்வதும். மதுபானங்களின் விலை அதிகம் என்பதால், எல்லோராலும் நிறைய வாங்கிக் குடிக்க முடியாது. ஆனால், கள்ளின் விலை குறைவாக இருக்கும் என்பதால் இன்னும் நிறையப் பேர் குடிக்க ஆரம்பிப்பார்கள். இப்போது குடிப்பதைப் போல அதிக மடங்கு குடிப்பார்கள். குடி நோயாளிகளின் எண்ணிக்கை 3-4 மடங்கு அதிகரிக்கும்" என்கிறார் து. ரவிக்குமார். கள்ளுக் கடைகள் அமையும் இடங்களும் பிரச்னைக்குரியவை என்கிறார் அவர். "யார் வாடிக்கையாளரோ, அவர்களுக்கு அருகில்தான் இந்தக் கடைகளை அமைக்க நினைப்பார்கள். இயல்பாகவே அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில்தான் இந்தக் கடைகளை அமைப்பார்கள். அது அந்த அடித்தட்டு மக்களை மிகப் பெரிய கலாசாரச் சீரழிவுக்கு இட்டுச் செல்லும்" என்கிறார் அவர். ஒவ்வொரு மரத்திலிருந்தும் பெரிய அளவில் கள் இறக்க முடியாது என்பதால் அது கலப்படத்துக்குத்தான் வழிவகுக்கும் என்கிறார் ரவிக்குமார். "கள்ளுக் கடைகளைத் திறந்தால், அத்தனை கடைகளுக்கும் தேவைப்படும் அளவுக்கெல்லாம் கள் கிடைக்காது. அத்தனை மரங்களில் ஏறவும் ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். ஆகவே, அதில் கலப்படம்தான் நடக்கும். கள்ளைப் போன்ற பானத்தை உருவாக்குவதற்காக கலக்கப்படும் ரசாயனங்கள் மிகத் தீங்கானவை. போலியான கள்ளை அருந்தியதால் கேரளாவில் பாதிப்புகள் ஏற்பட்டடதாக அவ்வப்போது செய்திகளில் வரத்தான் செய்கின்றன. 20 லிட்டர் கள்ளை வடித்தால், 200 லிட்டர் கள்ளை விற்பனை செய்வார்கள். ஆகவே கள்ளை இறக்க வேண்டும் எனச் சொல்வதே சட்ட விரோதம்" என்கிறார் ரவிக்குமார். பட மூலாதாரம்,WRITERRAVIKUMAR/X படக்குறிப்பு,ஒவ்வொரு மரத்திலிருந்தும் பெரிய அளவில் கள் இறக்க முடியாது என்பதால் அது கலப்படத்துக்குத்தான் வழிவகுக்கும் என்கிறார் ரவிக்குமார் கேரளா, ஆந்திராவில் நிலைமை என்ன? 70களின் இறுதியிலும் 80களிலும் கள்ளும் சாராயமும் அடித்தட்டு மக்களை கடுமையாக பாதிக்கிறது என்பதால்தான் கள்ளுக் கடைகளும் சாராயக் கடைகளும் மூடப்பட்டன என்கிறார் அவர். தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள மாநிலங்களில் கேரளாவிலும் ஆந்திராவிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கள்ளுக்கடைகள் உள்ளன. கேரள அரசின் 2023-24 மதுக் கொள்கையில், கள்ளை கள்ளுக் கடைகளில் மட்டுமல்லாமல் பிராண்ட் செய்து, ஹோட்டல்கள், பார்களிலும் விற்க நினைப்பதாக குறிப்பிட்டது. ஆனால், அங்கு கள் இறக்க பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கேரளா கள் இறக்கும் தொழிலாளர்கள் நல நிதியில் 2014ல் 30,000 பேர் பதிவு செய்திருந்த நிலையில், 2023ல் இந்த எண்ணிக்கை 15,000ஆக குறைந்தது. ஆந்திர மாநில அரசின் 2022-27 ஆண்டுகளுக்கான கள் கொள்கையின்படி, அம்மாநிலத்தில் 4,138 கள்ளுக்கடைகள் இயங்கிவருகின்றன. நல்லுசாமியைப் பொறுத்தவரை வெளிநாட்டு மதுபான வகைகளின் விற்பனையை நிறுத்திவிட்டு கள் விற்பனையை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்கிறார். "தமிழ்நாட்டில் விஸ்கி, பிராந்தி போன்ற வெளிநாட்டு மது வகைகளை விற்க தடை விதிக்கப்படுவதோடு, கள் விற்க அனுமதிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி டிசம்பர் மாதத்தில் கள் விடுதலை - மதுவிலக்கு மாநாடு ஒன்றை நடத்தப் போகிறோம். அந்த மாநாட்டுக்கு பிஹார் முதலமைச்சர் நிதீஷ் குமாரை அழைக்கப்போகிறோம்" என்கிறார் நல்லுசாமி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பனை மரத்திலிருந்து இறக்கப்படும் கள்ளை உணவின் ஓர் அங்கமாக பார்க்க வேண்டும் என, கள் பாதுகாப்பு இயக்கம் கூறுகிறது தமிழ்நாட்டில் மது விலக்கின் வரலாறு தமிழ்நாட்டில் மதுவிலக்கு 1937ல் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தில் ராஜாஜி ஆட்சியில் இருந்தபோது 1937ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போரை ஒட்டி, ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி விலகிய பிறகு மதுவிலக்கு மெல்லமெல்ல தளர்ச்சியடைந்தது. 1947ல் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதலமைச்சராகப் பதவி வகித்த போது, வடஆற்காடு, சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் மதுவிலக்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டது. பிறகு 1948ல் அக்டோபர் 2ஆம் தேதி சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை ஆங்காங்கே எழுந்துவந்தது. இது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க பஞ்சாபைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதியான டேக் சந்த் என்பவர் தலமையில் ஒரு குழுவை 1963ல் அமைத்தது மத்திய அரசு. இந்தக் குழு 1964ல் தனது அறிக்கையை அளித்தது. அதில் மதுவிலக்கு தொடர்பான பல கடுமையான பரிந்துரைகள் அளிக்கப்பட்டிருந்தன. இந்த அறிக்கையை மாநிலங்கள் ஏற்கவில்லை. மதுவிலக்கினால் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதையும் அவை சுட்டிக்காட்டின. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த நிலையில், மதுவிலக்கை அமல்படுத்த முன்வரும் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பில் பாதியை தாங்கள் தருவதாக மத்திய அரசு கூறியது. ஆனால், மாநிலங்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு, ஏற்கெனவே மதுவிலக்கை அமல்படுத்தி வரும் தங்கள் மாநிலத்துக்கும் நிதியுதவி அளிக்க வேண்டும் எனக் கோரியது. ஆனால், மத்திய அரசின் நிதியுதிவி என்பது, புதிதாக மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்குத்தானே தவிர, ஏற்கெனவே அமல்படுத்திய மாநிலங்களுக்கு அல்ல எனக் கூறியது. இதையடுத்து, மாநில நிதி நிலையைக் காரணம் காட்டி 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் மதுவிலக்கை ஒத்திவைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்த நினைத்த தமிழ்நாடு அரசு 1973ல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கள்ளுக்கடைகளையும் மூடுவதாக அறிவித்தது. பிறகு, 1974ல் இருந்த அனைத்துச் சாராயக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. மீண்டும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES 1977ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு மதுவிலக்கைத் தளர்த்துவதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தது. முடிவில், 1981ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி முதல் மதுவிலக்குத் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, கள்ளுக்கடை, சாராயக் கடை, வெளிநாட்டு மதுபானங்களை விற்கும் கடைகள் திறக்கப்பட்டன. இதற்குப் பிறகு, 1987ல் கள், சாராயக் கடைகளை மூடுவதாக அரசு அறிவித்தது. ஆனால், இந்தியாவிலேயே தயாராகும் வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனை தொடர்ந்தது. 1989ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, 1990 முதல் மலிவு விலை மதுவை அறிமுகப்படுத்தியது. இதைத் தயாரித்து விற்பனை செய்ய டாஸ்கோ நிறுவனம் தொடங்கப்பட்டது. 1991ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு, மலிவு விலை மது விற்பனையைத் தடை செய்தது. ஆனால், இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மது பானங்களின் விற்பனை தொடர்ந்தது. 2003ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் மதுபான விற்பனையை டாஸ்மாக் சில்லரை விற்பனைக் கடைகள் மூலம் நேரடியாக விற்பனை செய்ய ஆரம்பித்தது தமிழ்நாடு அரசு. அதிர்வலையை ஏற்படுத்திய சசி பெருமாள் மரணம் பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு,சசிபெருமாளின் மரணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் மதுவிலக்குக்கு ஆதரவான கோரிக்கைகள் வலுவடைந்தன. சசி பெருமாள் என்பவர் இதற்காகத் தீவிரப் போராட்டங்களை நடத்திவந்தார். இந்நிலையில், 2015ஆம் ஆண்டில், ஒரு சிறுவனுக்கு அவனுடைய உறவினர் ஒருவர் மது ஊற்றிக் கொடுத்து, அவன் அதைக் குடிப்பதை வீடியோ எடுத்தார். அது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அப்போதைய தி.மு.க. தலைவரான மு. கருணாநிதி, தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து பல கட்சிகள், மதுவிலக்கு குறித்து தங்கள் நிலைப்பாட்டை வெளியிட ஆரம்பித்தன. இந்நிலையில், 2015ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை என்ற இடத்தில் இருந்த மதுபானக் கடையை மூட வேண்டும் என போராட்டம் நடந்துவந்தது. அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட சசி பெருமாள் அருகில் இருந்த செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தத் திட்டமிட்டார். இதையடுத்து அவரும் அந்த ஊரின் ஊராட்சி தலைவருமான ஜெயசீலனும் செல்போன் டவர் மீது ஏறினர். பாதிக்கு மேல் ஜெயசீலனால் ஏற முடியாத நிலையில், சசி பெருமாள் உச்சிக்குச் சென்றுவிட்டார். சுமார் ஐந்து மணி நேரம் செல்போன் டவர் உச்சியில் இருந்து போராடிய சசி பெருமாள், அங்கேயே மயங்கினார். அவரை தீயணைப்பு படையினர் கீழே இறக்கிவந்தபோது, அவரது உடலில் உயிர் இல்லை. காமராசர் திறந்த அணையில் இருந்து மது ஆலைக்கு தண்ணீர் தர எதிர்ப்பு - கேரளாவில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு மது, சிகரெட் மட்டுமல்ல, இந்த பழக்கங்களும் உங்கள் கல்லீரலை பாதிக்கலாம் என்று தெரியுமா? தாய் மட்டுமல்ல, தந்தை மது குடித்தாலும் கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் - எச்சரிக்கும் புதிய ஆய்வு மரணத்தை ஏற்படுத்தும் கள்ளச் சாராயத்தைக் கண்டுபிடிப்பது எப்படி? சசிபெருமாளின் மரணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் தாக்குதலுக்கு இலக்காயின. அன்றைய ஆளும் கட்சி தவிர்த்த அனைத்துக் கட்சிகளுமே பூரண மதுவிலக்குக்காக கோரிக்கை விடுத்தன. இதற்கு அடுத்த வந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆளும் அ.தி.மு.கவே வெற்றிபெற்ற நிலையில், மதுவிலக்கு கோரிக்கையை அரசியல் கட்சிகள் படிப்படியாக கைவிட ஆரம்பித்தன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyqjn553rwo

"கர்நாடகாவில் தக் லைஃப் தற்போது வெளியாகாது" - கன்னட மொழி குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மறுத்த கமல் ஹாசன்

1 month 2 weeks ago
கமல்ஹாசனை மன்னிப்புக் கேட்க வேண்டுமெனக் கூறுவது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் வேலையல்ல - உச்ச நீதிமன்றம் காட்டம் Published By: DIGITAL DESK 3 17 JUN, 2025 | 04:51 PM நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல. உயர்நீதிமன்றம் எப்படி, அப்படிக் கூறலாம்? கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வி எழுப்பி உள்ளது. தக் லைஃப் படத்திற்கு தடை கிடையாது.. "குண்டர்கள்" படத்தை தடுப்பதை அனுமதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக சரமாரி கேள்விகளை எழுப்பிய கர்நாடக உயர் நீதிமன்றம், கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது. யாராக இருந்தாலும், கமல்ஹாசனாக இருந்தாலும் கூட, நீங்க கமலா இருங்க.. யாரா வேணா இருங்க... மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நீங்கள் பெரிய நடிகராக இருந்து கொண்டு அப்படி பேசி இருக்க கூடாது. இந்த நாட்டின் பிரிவினை மொழிவாரி அடிப்படையில்தான் நடந்தது. ஒரு பொது நபர் இதுபோன்ற அறிக்கையை வெளியிட முடியாது. இதன் காரணமாக அமைதியின்மை, நல்லிணக்கமின்மை ஏற்பட்டுள்ளது. கர்நாடக மக்கள் மன்னிப்பு கேட்க மட்டுமே சொன்னார்கள். இப்போது நீங்கள் மன்னிப்பு கேட்காமல் இங்கு பாதுகாப்பு தேடி வருகிறீர்கள். நீங்கள் என்ன அடிப்படையில் அப்படி பேசினீர்கள், நீங்கள் ஒரு வரலாற்று ஆசிரியரா, மொழியியல் நிபுணரா? என்ன அடிப்படையில் பேசினீர்கள்? நீங்கள் மன்னிப்பு கேட்டிருந்தால் போதுமானதாக இருந்திருக்கும். மணிரத்னம் படம் என்பதால் படத்தின் முக்கியத்துவம் உங்களுக்குத் தெரியும், ஆனால் நீங்கள் மன்னிப்பு அறிக்கை (மன்னிப்பு) வெளியிட முடியாது என்று கூறுகிறீர்கள். நீங்களே உருவாக்கிய பிரச்சனைக்கு அரசாங்கத்தின் ஆதரவை எப்படி கேட்கிறீர்கள். நீங்கள் பேசிவிட்டு அதற்கு அரசு பாதுகாப்பு தர வேண்டுமா? மொழி என்பது மக்களுடன் இணைந்த ஒரு உணர்வு. நீங்கள் ஒரு சாதாரண மனிதர் அல்ல, நீங்கள் ஒரு பொது நபர். சமூக ஊடகங்களில் எழுதுபவர்கள் கூட விசாரிக்கப்படுகிறார்கள். நீங்கள் பெரிய நபர். நீங்கள் பெரிய தவறுதலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்போது கர்நாடகாவில் படத்தை ஓட்ட வேண்டும் என்கிறீர்கள். பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்பது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் அளவுக்கு இருக்கக் கூடாது. நீங்கள் மன்னிப்பு கேட்கலாம், மன்னிப்பு கேட்டால் இங்கே வரும் வசூல் மூலம் சம்பாதிக்கலாம். நீங்கள் பேசியதை, திரும்பப் பெறலாம். அந்த பேச்சில் இப்போதும் உறுதியாக நிற்கிறீர்களா? இது தமிழ் மற்றும் கன்னட அறிக்கை சண்டை கிடையாது. நீங்கள் பேசியதால் வந்த பிரச்சனை. வாய் தவறி ஏதேனும் நடக்கலாம். ஆனால் தெரிந்த பேசிய விஷயங்கள் அப்படி இல்லை. நீங்கள் பேசிய வார்த்தையைத் திரும்பப் பெற முடியாது, ஆனால் மன்னிப்பு கேட்கலாம். உடைந்த முட்டையை மீண்டும் சேர்க்க முடியாது என்று நீதிபதிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னதாக கர்நாடக உயர் நீதிமன்ற வழக்கில் படத்திற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் அதற்கு எதிராக கமல்ஹாசன் மேல்முறையீடு செய்து இருந்தார். இதை எதிர்த்து கமல்ஹாசன் மேல்முறையீடு செய்திருந்த நிலையில்தான் கர்நாடகாவில் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என்று 'தக் லைஃப்' வழக்கில் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது உயர்நீதிமன்றத்தின் வேலை அல்ல. உயர்நீதிமன்றம் எப்படி, அப்படிக் கூறலாம்? கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வி எழுப்பி உள்ளது. தக் லைஃப் படத்திற்கு தடை கிடையாது.. "குண்டர்கள்" படத்தை தடுப்பதை அனுமதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/217732

பிரித்தானிய புலானாய்வு அமைப்பான “MI6” ஐ வழி நடத்த முதல் முறையாக பெண் நியமனம்

1 month 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 17 JUN, 2025 | 12:22 PM “MI6” எனப்படும் பிரித்தானியாவின் வெளிநாட்டு புலானாய்வு அமைப்பை முதல் முறையாக பெண்ணொருவரால் வழிநடத்தப்படும் என அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். அதன்படி, 1999 ஆம் ஆண்டு முதல் MI6 புலானாய்வு அமைப்பில் பணியாற்றிவரும் புலானாய்வு அதிகாரியான பிளேஸ் மெட்ரூவெலி தலைவராக நியமனமிக்கப்பட்டுள்ளார். MI6 புலானாய்வு அமைப்பின் தற்போதைய தலைவர் சர் ரிச்சர்ட் மூரிடமிருந்து 18 ஆவது தலைவராக பதவியை பொறுப்பேற்கவுள்ளார். 47 வயதுடைய பிளேஸ் மெட்ரூவெலி தற்போது MI6 புலானாய்வு அமைப்பின் Q பிரிவின் பணிப்பாளர் நாயகமாக உள்ளார். தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுப்பிடிப்புகளுக்கும் பொறுப்பாகவுள்ளார். MI6 மற்றும் MI5 ஆகிய உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் எதிர் - புலனாய்வு அமைப்புகளில் பணிப்பாளராகவும் இருந்துள்ளார். பிளேஸ் மெட்ரூவெலி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் பட்டம் பெற்றுள்ளார். தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பாலான பகுதிகளை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் பணியாற்றினார். மெட்ரூவெலி தலைவராக நியமிக்கப்பட்டள்ளமை தொடர்பில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், “MI6 புலானாய்வு அமைப்பின் தலைவராக பிளேஸ் மெட்ரூவெலி நியமிக்கப்பட்டுள்ளமை வரலாற்று சிறப்பு மிக்க ஒரு விடயமாகும். நமது உளவுத்துறை சேவைகளின் பணி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தமது நீர்நிலைகளுக்குள் தங்கள் உளவு கப்பல்களை அனுப்பும் ஆக்கிரமிப்பாளர்களாலும், நமது பொது சேவைகளை சீர்குலைக்க முயலும் அதிநவீன சைபர் - சதித்திட்ட ஹேக்கர்களாலும் பிரித்தானியா முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு அச்சுறுதல்களை எதிர்கொள்கின்றது எனத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செயிண்ட் மைக்கேல் மற்றும் செயிண்ட் ஜோர்ஜ் ஆணை (Order of St Michael and St George) எனப்படும் பிரித்தானிய ஆணையை தனது சேவைக்கான அங்கீகாரமாக பெற்ற மெட்ரெவெலி, “எனது சேவையை வழிநடத்தும்படி கோரப்பட்டதில் நான் பெருமைப்படுகிறேன். பிரித்தானிய மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதிலும், வெளிநாடுகளில் பிரித்தானிய நலன்களை மேம்படுத்துவதிலும் MI6 - MI5 மற்றும் GCHQ உடன் - முக்கிய பங்கு வகிக்கிறது. MI6 இன் துணிச்சலான அதிகாரிகள் மற்றும் முகவர்கள் மற்றும் எங்கள் பல சர்வதேச கூட்டாளர்களுடன் இணைந்து அந்தப் பணியைத் தொடர நான் எதிர்பாக்கிறேன்.”எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217693

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

1 month 2 weeks ago
இஸ்ரேலின் ஹைஃபா நகரை இரான் குறி வைப்பது ஏன்? இந்தியாவுக்கும் அதற்கும் என்ன தொடர்பு? பட மூலாதாரம்,AHMAD GHARABLI/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஹைஃபா நகர் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு பிந்தைய படம் (ஜூன் 16,2025) 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரான் மற்றும் இஸ்ரேல் இடையே தொடர் தாக்குதல் தொடர்கிறது. இரானின் அணு ஆயுத திட்டத்தை குறிவைத்து இஸ்ரேல் பல வான்வழி தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. பதிலடியாக, இரானும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது, அவற்றில் சில இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை தாண்டி குடியிருப்புப் பகுதிகளை அடைந்தன. இரான் சுகாதாரத்துறை கூற்றின்படி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் வெள்ளிக்கிழமைக்குப் பிறகு அந்நாட்டில் 224 பேர் உயிரிழந்துள்ளனர். மறுபக்கம் இஸ்ரேலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 24ஐ எட்டியுள்ளது. இரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் டெல் அவிவ், ஹைஃபா மற்றும் பிற நகரங்களை சேர்ந்தவர்கள் என இஸ்ரேல் சொல்கிறது. இரான் தாக்குதலில் இஸ்ரேலின் இரண்டு முக்கிய நகரங்களான டெல் அவிவ் மற்றும் ஹைஃபா ஆகியவை இலக்காயின. ஹைஃபா என்பது இஸ்ரேலின் வடக்கு துறைமுக நகரம். இங்கு ஒரு பெரிய துறைமுகமும், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் உள்ளன. முன்னதாக, டெல் அவிவ், ஹைஃபா மற்றும் பிற இஸ்ரேல் நகரங்கள் பல இரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களால் தாக்கப்பட்டதாக இரானின் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. இது போன்ற ஒரு சூழ்நிலையில், இஸ்ரேலின் ஹைஃபா நகரை குறிவைப்பதற்கான காரணங்கள் மற்றும் இந்த நகரத்திற்கு இந்தியாவுடன் இருக்கும் தொடர்பு குறித்தும் தெரிந்துகொள்ள முயற்சிக்கலாம். ஹைஃபா நகரம் இஸ்ரேலுக்கு ஏன் முக்கியமானது? இஸ்ரேல் விவகாரங்களில் நிபுணரான மூத்த பத்திரிகையாளர் ஹரேந்திர மிஸ்ரா, தற்போது ஜெருசலேமில் உள்ளார். பிபிசி செய்தியாளர் அபய் குமார் சிங்குடன் பேசுகையில், இஸ்ரேலுக்கு ஹைஃபா நகரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறுகிறார். "ஹைஃபா இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரமாகும். இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் அமைந்த இந்த நகரம், மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமல்லாமல், பொருளாதாரக் கண்ணோட்டத்திலும் மிகவும் முக்கியமானது." என்றார் அவர். உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த நகரில் அதிகம் இருப்பதாக கூறும் அவர், "மைக்ரோசாஃப்டாக இருக்கட்டும், கூகுளாக இருக்கட்டும், இன்டெல்லாக இருக்கட்டும், அனைத்து ஹை-டெக் நிறுவனங்களும் தங்களது அலுவலகங்களை ஹைஃபாவில் வைத்திருக்கின்றன," என்கிறார். இஸ்ரேலின் மிகப்பெரிய கச்சா சுத்திகரிப்பு மையம் ஹைஃபா நகரில் இருக்கிறது, இது அதன் பொருளாதார முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கிறது. ஹைஃபாவில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது இரானின் தாக்குதல் நடத்தியிருப்பது உறுதி செய்யப்ப்பட்டது திங்கட்கிழமை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து புகை எழுவது போன்று காணப்பட்ட ஒரு காணொளி அதனை உறுதிசெய்தது. இந்த வீடியோவில், இஸ்ரேலின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ள பகுதியிலிருந்து புகை எழுவது தெரிகிறது. இந்த வீடியோ இரானின் தாக்குதல்களுக்குப் பின்னர் எடுக்கப்பட்டது. பட மூலாதாரம்,AHMAD GHARABLI/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஹைஃபா நகரில் இரான் ஏவுகணை தாக்கிய இடத்தில் இஸ்ரேலின் அவசர கால மற்றும் பாதுகாப்பு சேவை தொழிலாளர்கள் பிபிசி, வீடியோவின் பல முக்கிய பிரேம்களைப் பயன்படுத்தி ரிவர்ஸ் இமேஜ் சர்ச் எனப்படும் ஆய்வை மேற்கொண்டு, அவற்றை செய்தி முகமை படங்களுடன் பொருத்தி, சுத்திகரிப்பு ஆலை தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது. பின்னர், வீடியோவிலும் செய்தி முகமை படங்களிலும் காணப்பட்ட முக்கிய அம்சங்களை கூகுள் எர்த் மற்றும் அப்பகுதியின் பழைய காட்சிகளுடன் ஒப்பிட்டது. இஸ்ரேலிய ஊடக செய்திகளின்படி, சுத்திகரிப்பு ஆலை இரவில் இரானிய ஏவுகணைகளால் குறி வைக்கப்பட்டதாகவும், இதனால் விநியோக குழாய்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் சுத்திகரிப்பு ஆலையை இயக்கும் பசன் குழுமம்,தெரிவித்துள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், மற்ற பகுதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் பசன் குழுமம் கூறியது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தவிர, ஹைஃபாவில் இஸ்ரேலின் துறைமுகமும் அமைந்திருப்பது இந்நகரத்தை பலவகையிலும் முக்கியமானதாக்குகிறது. ஹரேந்திர மிஸ்ரா கூறுகையில், "ஹைஃபா துறைமுகம் மிகவும் முக்கியமானது. அங்கு ஏராளமான சரக்குகள் வந்து செல்கின்றன. வரலாற்று கோணத்தில் பார்த்தால், இஸ்ரேலின் முதல் வெளியுலகத் தொடர்பு இந்நகரத்திலிருந்தே தொடங்கியது" என்றார். 2023 ஆம் ஆண்டு, ஹைஃபாவில் ஒரு துறைமுகத்தை அதானி குழுமம் கையகப்படுத்தியது. இதில் 70 சதவீத பங்கு அதானி குழுமத்திடமும், 30 சதவீத பங்கு இஸ்ரேலின் கடோட் குழுமத்திடமும் உள்ளது. நகரத்தின் மக்கள் தொகை குறித்து விளக்கும் ஹரேந்திர மிஸ்ரா, சுமார் நான்கு லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்நகரம் ஒரு முன்மாதிரியாகக் கருதப்படுவதாகக் கூறுகிறார். "இங்கு கணிசமான அரபு மக்கள் உள்ளனர், இதில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் அடங்குவர். பஹாய் சமூகத்திற்கு ஒரு மத வழிபாட்டு இடமும் உள்ளது. டெல்லியில் உள்ள லோட்டஸ் டெம்பிள் போன்று, இங்கு பஹாய் தோட்டம் உள்ளது." என்கிறார் அவர். யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமான பஹாய் உலக மையமும் ஹைஃபாவில் அமைந்துள்ளது. பட மூலாதாரம்,AHMAD GHARABLI/AFP VIA GETTY IMAGES டெல் அவிவ், ஹைஃபா மட்டுமே இரானின் இலக்குகளாக உள்ளன? ஹைஃபாவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இரான், அதை இலக்காக்கியிருக்கலாமா? இது குறித்து ஹரேந்திர மிஸ்ரா பேசுகையில், "மிக அதிக மூலோபாய மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை இரான் குறிவைப்பதாக நம்புகிறேன். பல மதங்களுக்கு புனித தலமாக இருப்பதால் ஜெருசலேம் இதுவரை தாக்கப்படவில்லை." என்றார். இரானின் ஏவுகணைகள் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளில் விழுந்துள்ளதாக அவர் சொல்கிறார். " இதுவரை பெரும்பாலான ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் சொல்கிறது, ஆனால் 10-12 ஏவுகணைகள் குடியிருப்பு பகுதிகளில் விழுந்து, கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன." என்று அவர் கூறுகிறார். ஹைஃபா மற்றும் டெல் அவிவ் போன்ற நகரங்கள் மக்கள் தொகை அதிக அடர்த்தி கொண்டவை என்பதுடன், இஸ்ரேல் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் கருதப்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். "ஜெருசலேம் மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நகரமாக இருந்தாலும், அங்கு இஸ்லாமிய தலங்கள் அதிகம் இருப்பதால், ஒருவேளை இரான் இதுவரை அதை குறிவைக்காமல் இருக்கலாம்." என்பது அவரது கூற்று. பட மூலாதாரம்,UNIVERSAL IMAGES GROUP VIA GETTY IMAGES ஹைஃபாவுடன் இந்தியாவுக்கு என்ன தொடர்பு? இந்தியாவுக்கும் ஹைஃபாவுக்கும் இடையிலான உறவு 1918-ஆம் ஆண்டின் ஒரு வரலாற்று கதையுடன் ஆழமாகப் பிணைந்துள்ளது. முதலாம் உலகப் போரின் போது, பிரிட்டிஷ் பேரரசின் சார்பில் போரிட்ட இந்திய குதிரைப்படை வீரர்கள், துருக்கி, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி ஆகியவற்றின் கூட்டுப்படைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து ஹைஃபா நகரத்தை விடுவித்தனர். இந்த வரலாறு இஸ்ரேலில் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஹரேந்திர மிஸ்ரா கூறுகிறார். "ஹைஃபாவின் பள்ளிகளில் இந்த வரலாறு கற்பிக்கப்படுகிறது. 'ஹைஃபாவின் நாயகன்' யார் என்று குழந்தைகளிடம் கேட்டால், அவர்கள் மேஜர் தள்பத் சிங் என சொல்வார்கள்." என்று அவர் தெரிவித்தார். இந்தப் போரில், ஜோத்பூர் லான்சர்ஸின் தளபதியான மேஜர் தள்பத் சிங் ஷெகாவத் கொல்லப்பட்டார். அவருக்கு பின்னர் மிலிட்டரி கிராஸ் விருது வழங்கப்பட்டது. பிரிட்டனுக்காக போரிட்ட 44 இந்திய வீரர்கள் இந்தப் போரில் உயிரிழந்தனர். இது குதிரைப்படை முக்கிய பங்காற்றிய கடைசி யுத்தமாக வரலாற்றில் பார்க்கப்படுகிறது. ஹரேந்திர மிஸ்ரா கூறுகையில், "இந்திய தூதரகமும் ஹைஃபா நகராட்சியும் ஒவ்வொரு ஆண்டும் ஹைஃபா தினத்தை இணைந்து கொண்டாடுகின்றன. பிரதமர் நரேந்திர மோதி இங்கு வருகை தந்தபோது, அவர் அங்கு சென்று இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்." என்றார். இந்திய தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள தீன் மூர்த்தி சௌக்கின் பெயர், தீன் மூர்த்தி ஹைஃபா சௌக் என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இதற்கான விழாவில் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கலந்து கொண்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c79qwvqqn0eo
Checked
Sat, 08/02/2025 - 14:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed