1 month 2 weeks ago
இதை நடைமுறைப்படுத்த பல வீடுகளும் இடிக்கப்பட வேண்டுமே? இம்முறை ஊர் போனபோது ஊரில் வண்ணாங்குளம் என்ற குளத்தில் அரைவாசி இடத்தில் சுற்று மதிலுடன் வீடு எழும்பியுள்ளது. இது ஒரு ஒதுக்குப் புறமான இடமும் அல்ல. பணம் குளம்வரை பாய்ந்துள்ளது.
1 month 2 weeks ago
சீமா ஸ்டாலின் சந்திப்பில் இடம்பெற்ற அரசியல் ஊழல் புரோக்கர் தேவா. நம்ம தம்பி இடும்பன் கார்த்திக் போன்றவர்களை சீமான் கழட்டி விட்டுள்ளார் போலுள்ளது.
1 month 2 weeks ago
Published By: Digital Desk 3 14 Sep, 2025 | 05:11 PM மட்டக்களப்பில் நிதி நிறுவனம் ஒன்றில் நேர்முக பரீட்சைக்கு சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நிதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வெள்ளிக்கிழமை (12) தீர்ப்பளித்தார். மட்டக்களப்பில் இயங்கிவரும் நிதி நிறுவனம் ஒன்றில் உள்ள வெற்றிடத்திற்கு விண்ணப்பித்த பெண் ஒருவரை சம்பவ தினமான கடந்த 2019 செப்டம்பர் 4 நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்ட நிலையில், நிதி நிறுவனத்திற்கு சென்ற பெண்ணை குறித்த நிதி முகாமையாளர் அங்கிருந்து வீடு ஒன்றுக்கு அழைத்து சென்று குறித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து நிதி நிறுவன முகாமையாளரை கைது செய்தனர். இதனையடுத்து குறித்த நிதி முகாமையாளர் எதிராக பொலிஸார் வழக்கு தொடரப்பட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் விசாரணை இடம்பெற்று வந்துள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (12) குறித்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு எடுத்து கொண்ட போது குறித்த முகாமையாளருக்கு எதிராக 3 குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சிகள் மற்றும் தடைய பொருட்கள் மூலம் குற்றவாளியாக இனம் காணப்பட்டார். எனவே குறித்த நபருக்கு ஒரு குற்றசாட்டுக்கு 5 இலட்சம் ரூபா வீதம் 3 குற்றச்சாட்டுகளுக்கும் 15 இலட்சம் ரூபாவை பாதிக்கப்பட்ட பெண்ணுக்க வழங்குமாறும் அந்த பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை 20 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறும் நீதிபதி கட்டளையிட்டு தீர்ப்பளித்தார். https://www.virakesari.lk/article/225077
1 month 2 weeks ago
டிரோன்கள் நவீன போர் சூழலை எவ்வாறு மாற்றுகின்றன என்பது குறித்து விவரிக்கிறது இந்த காணொளி.
1 month 2 weeks ago
நேற்றைய தினம் கனடாவிலும் இரண்டு பிரிவுகளாக இப்படி ஒரு நிகழ்வு நடந்தாக அறிந்து கொண்டேன்.
1 month 2 weeks ago
காணொளி: லண்டனில் ஈலோன் மஸ்க் பேசிய பேரணியில் வன்முறை : நடந்தது என்ன? 55 நிமிடங்களுக்கு முன்னர் சனிக்கிழமை லண்டனில் 'யூனைட் தி கிங்டம்' என்ற பெயரில் தீவிர வலதுசாரி செயற்பாட்டாளர் டாமி ராபின்சன் பேரணி ஒன்றை முன்னெடுத்தார். சுமார் 1.5 லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. சிலர் போலீசார் மீது பாட்டில்கள் மற்றும் பிற பொருட்களை வீசியதாகவும், இதன் காரணமாக 26 போலீசார் காயமடைந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. என்ன நடந்தது? முழு விவரம் காணொளியில்.. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1wgd9w9x11o
1 month 2 weeks ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மனதில் இருக்கும் வருத்தம், துன்பம், மனச்சோர்வு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தம் ஒன்றாக அழுகை உள்ளது. கட்டுரை தகவல் பாமினி முருகன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தினமும் காலை தூக்கத்தில் இருந்து விழிக்கும்போது என்ன நினைப்பீர்கள்? இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமைய வேண்டும் என்றுதானே. ஆனால், அந்த நாள் அழுகையுடன் தொடங்கினால் எப்படி இருக்கும்? மனித வாழ்க்கையில் சிரிப்பு எந்தளவுக்கு முக்கிய பங்கு வகிக்கிறதோ, அதே அளவிற்கு அழுகையும் முக்கிய பங்கு வகிக்கிறதுதானே. மனதில் இருக்கும் வருத்தம், துன்பம், மனச்சோர்வு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தம் ஒன்றாக அழுகை உள்ளது. இது சோகமான நிகழ்வுகள், இழப்பு என பல்வேறு காரணங்களால் வெளிப்படும். சில சமயங்களில் காரணமே இன்றியும் இந்த உணர்வு வெளிப்படும். இன்னும் சொல்லப்போனால் நம் மனதில் இருக்கும் நெருடல்கள், பாரங்கள், குமுறல்களை பல சமயங்களில் கண்ணீர் மூலம் வெளியேற்றுகிறோம். சிரிப்பு நம்மை எந்தளவிற்கு உணர்வுப்பூர்வமாக்குகிறதோ அதே அளவிற்கு அழுகையும் நம்மை உணர்வுப்பூர்வமாக ஆக்குகிறது. இருப்பினும் இத்தகைய ஓர் உணர்வை நாம் ஏன் எதிர்மறையான உணர்வாக பார்க்கிறோம்? அழுவதால் நம் உடலுக்கும், மனதுக்கும் ஏற்படும் நன்மைகள் என்ன? கண்ணீர் வெளிப்படுவதற்கான காரணம்: பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அழுகை ஒரு வகையில் விளித்திரையை மேம்படுத்தி பார்க்கும் திறனை அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது. மனித பிறவிக்கு மட்டுமே தனித்துவமான உணர்வு சார்ந்த திரவமாக கண்ணீர் உற்பத்தி ஆகிறது என தேசிய சுகாதார நிறுவனத்தில் வெளியான (NIH) தி நியூராலஜி ஆஃப் ஹூமன் க்ரையிங் (The neurobiology of human crying) என்ற ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கண் மருத்துவ ஆய்வகத்தில் பணியாற்றிய ஆராய்ச்சியாளர் ஜே.எட்.டிஃபானி, கடந்த 2003ஆம் ஆண்டில் உடல்நலனிலும் நோயிலும் கண்ணீரின் பங்கு (Tears in health and disease) என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டார். "நாம் விழித்திருக்கும் சமயத்தில் கண்ணீர் சுரக்க உதவும் லேக்ரிமல் க்ளாண்ட் தொடர்ச்சியாக கண்ணீரை உற்பத்தி செய்துகொண்டிருக்கும். இது கண்ணின் ஓரங்களிலும், மேல் இமைக்குக் கீழும் இருக்கும். கண்ணை இமைக்கும்போது, கண்ணீரை மெல்லிய பாதுகாப்பு படலமாக கண்ணின் மேல் பரப்புகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். "கண் இமைகளில் உள்ள டார்சல் தகடுகளுக்குள் அமைந்துள்ள மெய்போமியன் சுரப்பிகளில் அழுத்தம் ஏற்படும்போது விளிம்பில் எண்ணெய் போன்ற திரவம் ஏற்படும். இது கண்ணீர் படலத்தின் நிலைத்தன்மைக்கு பங்களிக்கிறது. இதன் மூலம் வெளிப்படும் கண்ணீர் கார்னியா மற்றும் வெண்படலத்தின் செல்லுலார் மேற்பரப்புகளை சீராக்கும். இது விளித்திரையை மேம்படுத்தி நமது பார்க்கும் திறனை அதிகரிக்கிறது" என இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதர்கள் அழுவது ஏன்? மனிதர்கள் அழுவது குறித்து 2 நேரெதிர் கருத்துகளை ஆராய்ச்சியாளர்கள் முன்வைப்பதாக தி நியூராலஜி ஆஃப் ஹூமன் க்ரையிங் ஆய்வறிக்கை மேற்கோள்காட்டுகிறது. ஒன்று துயரத்தால் ஏற்படும் தூண்டுதலால் அழுவது. உதாரணமாக ஒருவர் அதீத சோகமாகவோ, கோபமாகவோ இருக்கும்போது இயற்கையான ஓர் உணர்வாக கண்ணீர் வெளிப்படுகிறது என்பதாகும். மற்றொன்று அழுகை ஒரு ஆறுதல் செயலாக பார்க்கப்படுகிறது. உதாரணமாக ஒருவர் நன்றாக அழுத பின்பு அவர் மிகவும் இலகுவாக உணர்கிறார். மனதின் பாரங்கள் குறைந்து நிதானமாகிறார் என்பது ஆகும். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மனிதர்கள் அழுவதற்கு 2 கருத்துகளை ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கின்றனர். 'இங்கே அழலாம்' பெரும்பாலும் பொதுஇடங்களில் நாம் அழுவதில்லை. தனி அறையிலோ, மறைவான பகுதிகளிலோ, ஆள் இல்லாத தனிமையான இடங்களில்தான் இந்த உணர்வை வெளிப்படுத்தி ஆசுவாசப்படுத்திக்கொள்வோம். ஏனென்றால் இதைவைத்து நம்மை யாரும் மதிப்பிட்டுவிடக்கூடாது என்பதே இதற்கு காரணம். ஆனால் அழுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, சுதந்திரமாக இந்த உணர்வை வெளிப்படுத்த இதற்கென்றே சில மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை சூரத் நகரில் 2017ஆம் ஆண்டு அழுகை கிளப் (Cry Club) ஒன்று தொடங்கப்பட்டது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த கிளப்பின் உறுப்பினர்கள் ஒன்றுகூடி அழுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அழுகை மன அழுத்தத்தை அகற்றி, மன ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்று இவர்கள் நம்புகின்றனர். இது பின் மும்பையிலும் விரிவுப்படுத்தப்பட்டது. சமீபத்தில் கடந்த ஜூன் 15ஆம் தேதி மும்பையில் 'தி க்ரை கிளப்' எனப்படும் ஒருநாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 'உங்களின் உணர்வுகளை அரணவணைத்துக் கொள்ளுங்கள்' என்ற வாசகத்துடன் இருந்தது. இது வழக்கமான பார்டியோ, இசைநிகழ்ச்சியோ அல்ல. முன்பின் தெரியாதவர்கள் கூடி, அழுவதற்கு சுதந்தரமான ஒரு சூழலை கொண்ட இடம். 399 ரூபாய் நுழைவுக்கட்டணம் செலுத்தி உள்ளே சென்று உங்களின் மனக்குமுறல்களை கொட்டலாம். யாரும் உங்களை எடைபோட மாட்டார்கள். டிஷ்யூ பேப்பர், தேநீர் மற்றும் உங்களின் மனநிலைக்கு ஏற்ற இசையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேண்டுமென்றால் சாய்ந்து அழுவதற்கும், யாரையேனும் கட்டியணைத்து புலம்பி அழுவதற்குமான வசதியும் அங்கு இருந்தது. இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கான நோக்கம் குறித்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த Small World என்ற நிறுவனத்திடம் கேட்டோம். இந்த நிகழ்ச்சிக்கான யோசனை எங்கிருந்து வந்தது எனக் கேட்டபோது, ருய்காட்சு (Ruikatsu) என்ற ஜப்பானிய பழக்கத்தில் இருந்து ஈர்க்கப்பட்டதாக கூறுகிறார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சவுரவ். ருய்காட்சு என்பது கண்ணீரை வெளியேற்றும் ஒரு ஜப்பானிய நடைமுறை ஆகும். பட மூலாதாரம், Healthy Crying Club Surat படக்குறிப்பு, சூரத்தில் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அழுகை மன்றம். "மக்கள் தங்கள் உணர்ச்சிகளை சரிசெய்யவோ அல்லது பகுப்பாய்வு செய்யவோ வேண்டிய கட்டாயம் இல்லாமல், எவ்வித ஆலோசனைகளும் இல்லாமல், அவர்கள் எப்படி உணர்கிறார்களோ அதை அப்படியே வெளிப்படுத்த உதவுவதே எங்களின் நோக்கமாக இருந்தது" என்றார் சவுரவ். "அழுவது பலவீனமான அறிகுறி அல்ல என்பதை உணர்த்தவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவில் மக்கள் பெரும்பாலும் தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த பாதுகாப்பான இடங்கள் கிடைப்பதில்லை. இதில் பங்கேற்ற ஒரு விருந்தாளி, என்னை நானே கட்டியணைத்து, எதுவும் சரியாக நடக்காவிட்டாலும் பரவாயில்லை எனத் தேற்றிக்கொள்வது போன்ற உணர்வு ஏற்பட்டதாக விவரித்தார்" என சவுரவ் நம்மிடம் பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிரித்தும், புலம்பியும், அழுதும் தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினர். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது வெளிப்படையாக அழுவது புத்துணர்சி அளித்ததாக ஒருவர் கூறினார். "ஒரு பாதுகாப்பான சூழலில் நாம் புரிந்துகொள்ளப்படுவது போன்ற ஓர் உணர்வு ஏற்படுவது மாதிரியான வாய்ப்பு கிடைப்பது அரிதானது" என பலரும் கருத்து தெரிவித்ததாக சவுரவ் கூறினார். உளவியல் ரீதியாக என்ன பலன்? படக்குறிப்பு, அழும்போது நாம் மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியும் என்கிறார் உளவியல் நிபுணர் அபிலாஷா. "அழும்போது நமது உடலின் நரம்பு மண்டலத்தை சீர்செய்து, நமது உணர்ச்சிகளை மீட்பதுதான் நரம்பியல் அமைப்பின் வேலை. நாம் அழும்போது ஆக்ஸிடோசின், எண்டோர்பின் ஹார்மோன்கள் வெளியேறும். இந்த ஹார்மோன்கள் நம் உடல் மற்றும் மனரீதியான வலிகளை குறைத்து, நம்மை ஆசுவாசப்படுத்தும் ஹார்மோன்கள் என்பதால் இவை வெளியேறியபின் நமக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்" என்கிறார் உளவியல் நிபுணர் அபிலாஷா. மற்றொரு கோணத்தில் பார்க்கும்போது "அழும்போது நாம் மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியும். மற்றவர்கள் அழும்போது நமக்கு அக்கறை, இரக்கம் ஏற்படும். இந்த இரக்க குணம் சமூகத்திற்கே மிகவும் முக்கியமாக உள்ளது." என்கிறார். மேலும் பேசிய அவர், "அழுகை என்ற உணர்ச்சி நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் ஒன்று. உடலளவில் நமக்கு ஏற்படும் காயங்களை சரிசெய்ய மற்றவர்களின் உதவி தேவைப்படும். ஆனால் நமக்கு கஷ்டம் ஏற்படும்போது நம்மை நாமே தேற்றிக்கொள்வதுதான் இந்த அழுகை" என விளக்குகிறார். அடிக்கடி அழுதால் ஆபத்தா? அதேசமயம் அதீத அழுகையும், மனஅழுத்தம், பயம் போன்ற பிரச்னைக்கான அறிகுறியாக பார்க்கப்படலாம் எனவும் எச்சரிக்கிறார். "ஒருவர் அதிகமாக அழுதுகொண்டே இருப்பது க்ரையிங் ஸ்பெல் (Crying Spell) எனப்படுகிறது. இது ஒருவரை பலவீனமடையச் செய்யும். ஒரு கட்டத்தில் ஏன் அழுகிறோம் என்பதே தெரியாமல் அழுகை ஒரு பழக்கமாக மாறிவிடக் கூடும்" எனக் கூறினார். "உணர்ச்சிகள் அடக்கப்படுவது போல தோன்றும்போது, மனதில் பாரம் ஏற்படும்போது அதை குறைப்பதற்கு அழுவது தவறில்லை. ஆனால், சிரிப்பு சிகிச்சை (laughter therapy) போல இதையும் ஒரு பழக்கமாக எடுத்துக்கொள்வது நல்லதல்ல. இதுவே மனஅழுத்தத்திற்கு வழிவகுக்கும்" எனக் கூறுகிறார். ஆண்களுக்கும் பொருந்துமா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அழுவது ஆண்களுக்கான பண்பு இல்லை என நினைப்பது முட்டாள்தனம் என்கிறார் அபிலாஷா பெரும்பாலான ஆண்கள் அழுகை என்ற உணர்வை வெளிப்படுத்தாமல் இருப்பது குறித்து கேட்டபோது "காலம் காலமாக வீரத்திற்கு எதிர்ப்பதமாக அழுகை சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அழுகைக்கும் வீரத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. சங்க கால மன்னர்கள் கூட வலிமையானவர்கள்தான். ஆனால் உணர்ச்சிவசப்பட்டால் அவர்களும் அழுதுள்ளனர். இது அவர்களின் இரக்க குணத்தை தான் காட்டுகிறதே தவிர கோழைத்தனம் கிடையாது" என்கிறார். "இப்போது பெரும்பாலும் அனைவருக்கும் அதிக மனஉளைச்சல் ஏற்படுகிறது. தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு வலி ஏற்படும்போது அதை வெளிப்படுத்தாமலேயே இருந்தால் மாரடைப்பு வரை கொண்டு செல்லும் அபாயமும் உள்ளது" என எச்சரிக்கிறார். மேலும் "ஆண்கள் பலரும் அழக்கூடாது என நினைத்து மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இழப்போ, மனசோர்வோ, தாங்கிக்கொள்ள முடியாத பிரச்னைகளோ ஏற்படும்போது அழுவது தவறில்லை. மனிதர்கள் அனைவருக்கும் அழுகை வேண்டும் என்பதால்தான் நாம் அனைவருக்கும் பாலின வேறுபாடின்றி Tear Duct எனப்படும் கண்ணீர் சுரபி உள்ளது. அழுவது ஆண்களுக்கான பண்பு இல்லை என நினைப்பது முட்டாள்தனம்." எனவும் கூறினார். "அழும்போது நம் கண்களும் புத்துணர்ச்சி பெறுகிறது. உடலில் இருக்கும் தண்ணீர் கண் வழியே வெளியேறும்போது இந்த புத்துணர்ச்சி கிடைக்கிறது. அதனால் தேவைப்படும்போது அழுவது என்பது உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நல்லதே" என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c7v1zvpjndeo
1 month 2 weeks ago
Innings break 6th Match, Group A (N), Dubai (DICS), September 14, 2025, Men's T20 Asia Cup Pakistan(20 ov) 127/9 India Pakistan chose to bat. Current RR: 6.35 • Last 5 ov (RR): 49/3 (9.80) PAK 20.68% • IND 79.32%
1 month 2 weeks ago
பகரவி, பவ்வி - என்ன படிப்பிதாலும், மாணவர்கள் தமக்கு பிடித்தமானதை மட்டுமே எடுப்பார்கள் - கவ்வி 🤣.
1 month 2 weeks ago
அண்ணை, எனக்கொரு டவுட் இருந்தது! இந்த செய்திகளை அறம்புறமா இணைக்கிறன் என்றதால எனக்கு மட்டும் கொஞ்சம் வேகத்தடை போட்டிருக்கினமோ என்று!! (நகைச்சுவைக்காக) தொழிநுட்பக் காரணங்கள் நிறைய இருக்கும், நாங்கள் இப்ப எல்லாம் வேகவேகமா வேணும் என்று விரும்புகிறோம். முதன்முதல் 2006 இல் கொழும்பில் இணையம் பாவிக்க தொடங்கையில் 512 kb/s என்ற வேகம் தான். இப்ப கொஞ்சம் வேகமாக இயங்குவதாக உணர்கிறேன் @மோகன் அண்ணை. மிக்க நன்றி. இணைய வழங்கி நெருக்கடி ஏற்பட்டதோ?!
1 month 2 weeks ago
அட உங்களுக்கும் தானா எனக்கு இப்ப சந்தோசம். எனக்கு மட்டுமல்ல ஊருக்கும் தான்.
1 month 2 weeks ago
Published By: Vishnu 14 Sep, 2025 | 07:12 PM இலங்கை தமிழ் அரசு கட்சியின் (ITAK) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் இன்று (14) இடம்பெற்ற கார் விபத்தில் காயமடைந்துள்ளார். அம்பாறை பகுதியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு, அவர் மட்டக்களப்பிற்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில், அவரது பயண வாகனம் களுவாஞ்சிகுடி பகுதியில் மற்றொரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. https://www.virakesari.lk/article/225082
1 month 2 weeks ago
ஜப்பானின் டோக்கியோவில் இடம்பெறும் 2025 ஆம் ஆண்டுக்கான உலக தடகள செம்பியன்ஷிப் போட்டியில், அமெரிக்காவின் மெலிசா ஜெபர்சன் வூடன், பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 100 மீட்டர் ஓட்டப்போட்யை 10.61 வினாடிகளில் நிறைவு செய்துள்ளார். இதற்கிடையில், ஜமைக்காவின் ஒப்லிக் செவில்லே ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியை 9.77 வினாடிகளில் நிறைவு செய்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmfjr9skw00e9qplpmdrbz4zp
1 month 2 weeks ago
14 Sep, 2025 | 11:27 AM சீனோர் நிறுவனத்தினுடைய (Cey-Nor foundation Ltd) யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையினது தொழிற்பாடுகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. பைபர் (Fiber) மூலப்பொருளைக் கொண்டு அனைத்து வகையான பொருட்களையும் உற்பத்தி மற்றும் பரும்படியாக்கம் செய்து சந்தைப்படுத்தும் செயன்முறையை மேற்கொள்ளும் முகமாக இத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. அதற்கான ஆயத்த வேலைகள் ஆரம்பமாகி முன்னோட்டமாக படகு, மீன் விற்கும் தாங்கி, மீன் குஞ்சு வளர்ப்புத் தொட்டி என்பன உற்பத்தியாக்கப்பட்டுள்ளன. குறித்த நிறுவனம் கடல்தொழில் சார் பொருட்களை உற்பத்தி மற்றும் பரும்படியாக்கும் நோக்கத்துடனேயே இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தபோதும் தற்போது யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலை அதிக கேள்வியுள்ள ஏனைய பைபர் மூலப்பொருள்சார் பொருட்களையும் தயாரிக்கத் தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றமை விசேட அம்சமாகும். குறிப்பாக வடக்கு மாகாணத்தின் கடற்றொழில் சார் உபகரணத் தேவைகளைத் தன்நிறைவோடு வழங்கும் நிலையமாக இது அமையும். இதன்வழி சுமார் 100 - 150 திறன் வேலைவாய்ப்புகள் உருவாகச் சாத்தியமுள்ளது. தற்போதைய நிலையில், சாதாரண கட்டுமரம் அளவிலான தோணி முதல் 30 அடி நீளமான படகுகள் வரை, 1 - 2 மீற்றர் வரையான விட்டம் கொண்ட மீன் வளர்ப்புத் தொட்டிகள், மீன் விற்கும் வண்டிகளில் பொருத்துவதற்கான குளிரூட்டக்கூடிய பெட்டி என்பன இங்கு தயாரிக்க ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி மாலை குறித்த தொழிற்சாலையானது, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரால் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/225040
1 month 2 weeks ago
நீதி அமைச்சின் சிறப்பு குழு இவ்வாரம் ஜெனிவா விஜயம் Published By: Digital Desk 3 14 Sep, 2025 | 11:10 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக நீதி அமைச்சின் சிறப்பு குழு இவ்வாரம் இறுதியில் ஜெனிவாவுக்கு செல்லவுள்ளது. இந்த குழுவில் நீதி அமைச்சர் ஹர்ஷண ராஜகருணா மற்றும் பிரதி அமைச்சர் முனீர் மௌலவி உட்பட நீதி அமைச்சின் அதிகாரிகள் சிலர் உள்ளடங்குவதாக வெளிவிவகார அமைச்சின் முக்கிஸ்தர் ஒருவர் குறிப்பிட்டதுடன், எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை இந்த விஜயம் திட்டமிட்டுள்ள போதிலும், அதற்கு முன்னர் பெரும்பாலும் நீதி அமைச்சின் சிறப்பு குழு ஜெனிவா செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிட்டார். வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான குழு கடந்த திங்கட்கிழமை ஜெனிவா சென்று, இலங்கையின் நிலைப்பாட்டை அறிவித்ததன் பின்னர் நாடு திரும்பியுள்ள நிலையில், நீதி அமைச்சின் சிறப்பு குழு மீண்டும் ஜெனிவா செல்கிறது. இவ்வாறானதொரு நிலையில், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் அறிக்கை ஒரு கலவையான உணர்வைப் பிரதிபலித்திருந்தது. இலங்கை அரசு அண்மையில் அளித்த வாக்குறுதிகளை அவர் அங்கீகரித்தாலும், அவை வெறும் வார்த்தைகளாக நின்றுவிடாமல், உறுதியான நடவடிக்கைகளாக மாற வேண்டும் என அவர் வலியுறுத்தி இருந்தார். கடந்தகால மீறல்கள் மற்றும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு (Impunity) உருவாக்கிய காயங்களை ஆற்றுவதற்கு இலங்கை அரசுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதன் மூலம் நல்லிணக்கத்திற்கான ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க முடியும் என்றும் ஆணையாளர் சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கைக்கு விஜயம் செய்தபோது செம்மணி மனிதப்புதைகுழி, மற்றும் கணவனுக்காகக் காத்திருக்கும் தெற்கைச் சேர்ந்த ஒரு பெண் என பாதிக்கப்பட்ட பலரிடமிருந்து நேரடியாகக் கேட்ட துயரங்களை வெளிப்படுத்தினார். சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்தை நிறுவுவது ஒரு நல்ல முயற்சி எனப் பாராட்டிய ஆணையாளர் வோல்கர் டேர்க், இதில் சிவில் சமூகத்தின் பங்களிப்பு அவசியம் என வலியுறுத்தினார். மேலும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிக்க சுதந்திரமான, பிரத்யேக நீதிப் பொறிமுறையின் அவசியம், பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக இடைநிறுத்தப்பட வேண்டும். அத்துடன், நிகழ்நிலைக்காப்புச் சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச் சட்டம் உள்ளிட்ட மீறல்களுக்கு வழிவகுக்கும் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளிக்கும் வகையில், மேற்கொண்டு வரும் உள்நாட்டு சீர்திருத்த நடவடிக்கைகளை அரசாங்கம் சுட்டிக்காட்டியது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி, அதற்குப் பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றை உருவாக்குதல், இணையவழி பாதுகாப்புச் சட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை குறிப்பிட்டுள்ளது. காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்ற உள்நாட்டுப் பொறிமுறைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனோர் விவகாரங்களை விரைவுபடுத்த மேலதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஐ.நா. உயர்ஸ்தானிகர் ஒரு உறுதியான சர்வதேச அழுத்தத்தை உருவாக்கும் அதே வேளையில், இலங்கை அரசு உள்நாட்டு நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி சர்வதேச சமூகத்தின் தலையீட்டைத் தவிர்க்க முயல்கிறது. இந்த முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையிலேயே நீதி அமைச்சின் சிறப்பு குழு ஜெனிவா செல்கிறது. https://www.virakesari.lk/article/225034
1 month 2 weeks ago
Drinks 6th Match, Group A (N), Dubai (DICS), September 14, 2025, Men's T20 Asia Cup Pakistan (10/20 ov) 49/4 India Pakistan chose to bat. Current RR: 4.90 • Last 5 ov (RR): 15/2 (3.00) Live Forecast: PAK 131
1 month 2 weeks ago
நோய்வாய்ப்பட்டு ஒன்றுக்கும் இரண்டிற்கும் யாருடைய தயைவையோ எதிர்பார்க்கையில் தான் அஞ்ஞான மேகம் விலகி ஞானத்தின் ஒளி கண்களை கூசச்செய்யும் வாழ்வின் பிரம்மாண்டங்களை மட்டுமே துரத்தி ஓடியதில் அர்த்தம் பொதிந்த சின்னஞ்சிறு நொடிப்பொழுதுகளை நம்மையறியாமலேயே புறக்கணித்தது புலப்படும் பாவமன்னிப்பு கேட்பதற்கு வாய்ப்பொன்று வேண்டி மனம் பிரார்த்திக்கும் பாவம்.. பொம்மைக்காய் அழுத என் குழந்தையை அடித்திருக்க வேண்டாம் "கால் வலிக்குதுப்பா" கடைத்தெருவிற்கு கூட்டிச் செல்கையில் பிள்ளை சொன்னபோதெல்லாம் தூக்கிக்கொண்டிருக்கலாம் என் தேவைகளை கேட்டு கேட்டு செய்தவளுக்கு கேட்காமலேயே அன்போடு ஒரு வேளை சமைத்து பரிமாறியிருக்கலாம் ஏதோ ஒரு சண்டையில் வார்த்தைகள் முற்றிய தருணத்தில் கையிலிருந்த தண்ணீர் செம்பை தூக்கிவீசாமல் இருந்திருக்கலாம் காய்ச்சலில் அவள் கிடந்த நாட்களில் இன்னும் கொஞ்சம் அக்கறையோடிருந்திருக்கலாம் பல்லாயிரம் கருத்துமோதல்களில் ஏதாவதொன்றினையாவது அவள் பாதங்களை இதமாய் வருடி மனதார மன்னிப்பு கேட்டு முடித்திருக்கலாம் சர்க்கரை கொதிப்பு மாத்திரைகளை அம்மா நினைவுபடுத்தாமலேயே வாங்கிக்கொடுத்திருக்கலாம் அம்மாவை நினைத்து அப்பா மனதோடு அழுத போதினில் அருகில் அமர்ந்து ஆறுதல் தந்திருக்கலாம்.. அவள் ஊரிலில்லாத நாளில் கஞ்சித்தண்ணீருக்காய் வாசல் வரை வந்த மாட்டின் மீது கல்லெறியாமல் இருந்திருக்கலாம் ரயில்பயணத்தில் முன் பதிவு செய்த கீழ்இருக்கையை என்னோடு பயணித்த முதியவருக்கு விட்டுக்கொடுத்திருக்கலாம். கட்டங்கள் பாதகமென யாரோ சொன்னதை நம்பி உசுரான காதலியை நிராகரிக்காமலிருந்திருக்கலாம்.இதில் யாரோ ஒருவரின் சாபம் தான் இப்படி பாயோடும் நோயோடும் கிடத்திவிட்டதோ? புரண்டு படுக்கும் போதெல்லாம் உறுத்துகிற பாயென இப்படித்தான் ஏதேதோ எண்ணங்கள். ...அலைபாயும் மீண்டும் வாழ்ந்து கடக்க முடியா தருணங்கள் நோயைக் காட்டிலும் வேகமாய்க் கொல்லும் ரோகத்துடனான போராட்டத்தில் அழுத்தும் நினைவுகளோடு போராட தைரியமின்றித்தான் நம்மில் அநேகம் பேர் உறக்கத்திலேயே உயிர்பிரிய வேண்டுமாய் மானசீகமாய் பிரார்த்திக்கிறோமோ? நன்றி முக நூல் சியாமளாரமேஷ்பாபு
1 month 2 weeks ago
வெளிநாட்டு சினிமா பார்த்தால் சுட்டுக் கொலை; வட கொரியாவில் நடப்பது என்ன? பட மூலாதாரம், KCNA via EPA படக்குறிப்பு, கிம் ஜாங் உன் ஆட்சியில் வாழ்க்கை மிகவும் கடினமாகிவிட்டதாகவும், மக்கள் மேலும் பயத்துடனும் வாழ்கின்றனர் என்று அறிக்கை கூறுகிறது. கட்டுரை தகவல் ஜீன் மேக்கன்சி சியோல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வெளிநாட்டுப் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களைப் பார்த்தவர்கள் மற்றும் பகிர்ந்தவர்களுக்கு, வட கொரிய அரசாங்கம் மரண தண்டனையை அளித்திருப்பதாக ஒரு ஐ.நா. அறிக்கை கூறுகிறது. உலகிலிருந்து பெருமளவு தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்த சர்வாதிகார ஆட்சி, அதன் மக்களின் சுதந்திரத்தை மேலும் கட்டுப்படுத்தி அதிக அளவில் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்துகிறது என்றும் ஐநா அறிக்கை கண்டுபிடித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக வட கொரிய அரசு "குடிமக்களின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களின் மீதான" கட்டுப்பாட்டை இறுக்கியுள்ளது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டறிந்துள்ளது. "இன்றைய உலகில் வேறு எந்த மக்களும் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு உட்படவில்லை" என்று அது முடிவு செய்தது. மேலும், தொழில்நுட்ப முன்னேற்றங்களின் உதவியால் கண்காணிப்பு "அதிகமாகப் பரவியுள்ளது" என்றும் அது கூறியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க், இந்த நிலைமை தொடர்ந்தால், வட கொரியர்கள் "அவர்கள் நீண்ட காலமாக அனுபவித்துவரும் அதிக துன்பம், கொடூரமான அடக்குமுறை மற்றும் பயத்திற்கு உட்படுத்தப்படுவார்கள்" என்று கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் வட கொரியாவிலிருந்து தப்பிச் சென்ற 300-க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, மரண தண்டனை அடிக்கடி பயன்படுத்தப்படுவதாகக் கண்டறிந்துள்ளது. மரண தண்டனை விதிக்க அனுமதிக்கும் குறைந்தது ஆறு புதிய சட்டங்கள் 2015-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கிம் ஜாங் உன் வெளிநாடுகளிலிருந்து மக்கள் தகவல்களைப் பெறுவதற்கான வழிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதால், வெளிநாட்டு ஊடக உள்ளடக்கங்களான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவற்றை பார்ப்பது மற்றும் பகிர்வது போன்ற செயல்களுக்காகவும் இப்போது மரண தண்டனை விதிக்கப்படலாம். 2020-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு உள்ளடக்கத்தைப் பரப்பியதற்காக அதிக மரண தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. ஆராய்ச்சியாளர்களிடம் தப்பி வந்தவர்கள் கூறினர். மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தவும், அவர்கள் சட்டத்தை மீறுவதைத் தடுக்கவும், துப்பாக்கிச் சூடு குழுவால் இந்த மரண தண்டனைகள் பகிரங்கமாகத் நிறைவேற்றப்படுகின்றன என்று அவர்கள் விவரித்தனர். 2023-ம் ஆண்டு தப்பிச் வந்த காங் கியூரி, தென் கொரிய உள்ளடக்கத்துடன் பிடிபட்ட தனது மூன்று நண்பர்கள் கொல்லப்பட்டதாக பிபிசியிடம் கூறினார். 23 வயதான ஒரு நண்பருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கு விசாரணையின்போது காங் கியூரி நீதிமன்றத்தில் இருந்தார். "அவர் போதைப்பொருள் குற்றவாளிகளுடன் சேர்த்து விசாரிக்கப்பட்டார். இந்தக் குற்றங்கள் இப்போது ஒரே மாதிரியாகக் கருதப்படுகின்றன" என்று அவர் கூறினார். மேலும், 2020 முதல் மக்கள் அதிக அச்சமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார். 2011-ல் தற்போதைய தலைவர் கிம் ஜாங் உன் பதவிக்கு வந்தபோது, அவர்கள் இனி "வயிற்றைக் கட்டிக்கொள்ள" (அதாவது, போதிய உணவு இல்லாமல்) வேண்டியதில்லை என்று உறுதியளித்திருந்ததால், தங்கள் வாழ்க்கை மேம்படும் என்று நம்பியதாக நேர்காணல் செய்யப்பட்ட தப்பி வந்தவர்கள் கூறினர். பொருளாதாரத்தை வளர்ப்பதாகவும், அதே நேரத்தில் அணு ஆயுதங்களை மேலும் மேம்படுத்துவதன் மூலம் நாட்டைக் காப்பதாகவும் அவர் உறுதியளித்திருந்தார். ஆனால், கிம் 2019-ல் மேற்கு நாடுகளுடனும் அமெரிக்காவுடனும் ராஜதந்திர பேச்சுக்களைத் தவிர்த்து, தனது ஆயுதத் திட்டத்தில் கவனம் செலுத்தியதால், மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் மனித உரிமைகள் "சீர்குலைந்துவிட்டன" என்று அறிக்கை கண்டறிந்தது. நேர்காணல் செய்யப்பட்டவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் தங்களுக்குப் போதிய உணவு இல்லை என்றும், ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு என்பது ஒரு "ஆடம்பரமான" விஷயம் என்றும் கூறினர். கோவிட் பெருந்தொற்று காலத்தில், கடுமையான உணவுப் பற்றாக்குறை இருந்ததாகவும், நாடு முழுவதும் மக்கள் பட்டினியால் இறந்ததாகவும் தப்பி வந்தவர்கள் கூறினர். அதே நேரத்தில், குடும்பங்கள் வர்த்தகம் செய்யும் முறைசாரா சந்தைகளை அரசு முடக்கியது. இதனால், அவர்கள் வாழ்வாதாரத்தைத் தேடுவது கடினமாகியது. மேலும், சீனாவுடனான எல்லையில் கட்டுப்பாடுகளை இறுக்கியதன் மூலமும், எல்லையைக் கடக்க முயற்சி செய்பவர்களைச் சுட்டுத் தள்ள படையினருக்கு உத்தரவிட்டதன் மூலமும் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக மாறியது. 2018-ம் ஆண்டு 17 வயதில் தப்பி ஓடிய ஒரு இளம் பெண், "கிம் ஜாங் உன்-னின் ஆரம்ப நாட்களில், எங்களுக்கு சில நம்பிக்கைகள் இருந்தன, ஆனால் அந்த நம்பிக்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை" என்று கூறினார். "அரசாங்கம் படிப்படியாக மக்கள் சுயமாக வாழ்வாதாரத்தை தேடுவதைத் தடுத்தது. மேலும், வாழ்வது என்பதே ஒரு தினசரி துன்பமாக மாறியது" என்று அவர் ஐ.நா ஆய்வாளர்களிடம் சாட்சியம் அளித்தார். "கடந்த 10 ஆண்டுகளில், அரசாங்கம் மக்களின் மீது கிட்டத்தட்ட முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ளது. பொருளாதார, சமூக அல்லது அரசியல் முடிவுகளை அவர்களால் சொந்தமாக எடுக்க முடியவில்லை" என்று ஐ.நா. அறிக்கை கூறியது. கண்காணிப்புத் தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட மேம்பாடுகள் இதற்கு உதவியுள்ளன என்றும் அறிக்கை கூறியது. "மக்களின் கண்களையும், காதுகளையும் தடுப்பதே" இந்தக் கட்டுப்பாடுகளின் நோக்கம் என்று தப்பி ஓடிய ஒருவர் ஆராய்ச்சியாளர்களிடம் கூறினார். "இது அதிருப்தி அல்லது புகாரின் சிறிய அறிகுறியையும் அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒருவகையான கட்டுப்பாடு " என்று பெயர் குறிப்பிட விரும்பாத அவர்கள் கூறினர். பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, பியாங்யாங்கில் கிம்மின் தந்தை மற்றும் தாத்தாவின் ஓவியத்தின் முன் மக்கள் தலை வணங்கி மரியாதை செலுத்துகின்றனர். (புகைப்படம் செப்டம்பர் 9 அன்று எடுக்கப்பட்டது) அரசாங்கம் ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்ததைவிட இப்போது அதிக அளவில் கட்டாய உழைப்பைப் பயன்படுத்துவதாகவும் அறிக்கை கண்டறிந்தது. ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கட்டுமானம் அல்லது சுரங்கத் திட்டங்கள் போன்ற கடினமான வேலைகளைச் செய்ய "ஷாக் பிரிகேட்ஸ்" என்ற குழுக்களில் சேர்க்கப்படுகிறார்கள். இந்த வேலை, தங்கள் சமூக நிலையை மேம்படுத்தும் என்று தொழிலாளர்கள் நம்புகிறார்கள். ஆனால், வேலை மிகவும் ஆபத்தானது. மரணங்கள் சாதாரணமாக நிகழக்கூடியவை. எனினும், தொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்குப் பதிலாக, அரசாங்கம் மரணத்தை கிம் ஜாங் உன்-னுக்கு செய்த ஒரு தியாகமாகக் கூறி மகிமைப்படுத்துகிறது. சமீபத்திய ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான அனாதைகள் மற்றும் வீதியோர சிறுவர்களைக் கூட அது வேலைக்கு சேர்த்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. 2014-ல் வெளிவந்த ஒரு முக்கியமான ஐ.நா. விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் தொடர்ச்சியாக இந்த 2025-ம் ஆண்டு அறிக்கை வெளியாகியுள்ளது. 2014 அறிக்கையில், வட கொரிய அரசாங்கம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்வதாக முதன்முறையாகக் கண்டறியப்பட்டது. நாட்டின் மோசமான அரசியல் சிறை முகாம்களில் மிகக் கடுமையான மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகக் கண்டறியப்பட்டது. அங்கு மக்கள் வாழ்நாள் முழுவதும் அடைக்கப்பட்டு "காணாமல் போவார்கள்". இந்த 2025-ம் ஆண்டு அறிக்கை, குறைந்தது நான்கு முகாம்கள் இன்னும் செயல்படுகின்றன என்றும், சாதாரண சிறைகளில் உள்ள கைதிகள் இன்னும் சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகின்றனர் என்றும் கண்டறிந்துள்ளது. மோசமான சிகிச்சை, அதிக வேலை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றால் கைதிகள் இறப்பதை நேரில் கண்டதாக பல தப்பி ஓடியவர்கள் கூறினர். இருப்பினும், "காவலர்களின் வன்முறையில் ஒரு சிறிய குறைவு" உட்பட வசதிகளில் "சில குறைந்த அளவு மேம்பாடுகளை" ஐ.நா. கண்டது. பட மூலாதாரம், KCNA via Reuters படக்குறிப்பு, ரஷ்யாவின் புதின், சீனாவின் ஷி மற்றும் வட கொரியாவின் கிம் இந்த மாதத் தொடக்கத்தில் பெய்ஜிங்கில் சந்தித்தனர். நிலைமையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று ஐ.நா. அழைப்பு விடுக்கிறது. எனினும், இது நடப்பதற்கு, ஐ.நா. பாதுகாப்பு சபையால் இது பரிந்துரைக்கப்பட வேண்டும். 2019 முதல், ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களான சீனா மற்றும் ரஷ்யா, வட கொரியா மீது புதிய தடைகளை விதிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை மீண்டும் மீண்டும் தடுத்துள்ளன. கடந்த வாரம், கிம் ஜாங் உன், சீனத் தலைவர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருடன் பெய்ஜிங்கில் நடந்த ஒரு ராணுவ அணிவகுப்பில் பங்கேற்றார். இது, வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டம் மற்றும் அதன் குடிமக்களை நடத்தும் விதத்தை இந்த நாடுகள் அமைதியாக ஏற்றுக்கொண்டதைக் குறிக்கிறது. சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, வட கொரிய அரசாங்கம் தனது அரசியல் சிறை முகாம்களை ஒழிக்க வேண்டும், மரண தண்டனையைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் மற்றும் அதன் குடிமக்களுக்கு மனித உரிமைகள் பற்றி கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஐ.நா. கேட்டுக் கொண்டுள்ளது. "குறிப்பாக வட கொரிய இளைஞர்களிடையே மாற்றத்திற்கான தெளிவான மற்றும் வலுவான விருப்பம் இருப்பதாக எங்கள் அறிக்கை காட்டுகிறது" என்று ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் டர்க் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd07257xkx8o
1 month 2 weeks ago
பரீட்சைகளுக்கான கால அட்டவணை வௌியீடு 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் பரீட்சைகள் தொடர்பான கால அட்டவணையை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது. அதன்படி, 2025 (2026) கல்வி பொது தராதர (சாதாரண தரப்) பரீட்சை 2026-02-17 முதல் 2026-02-26 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர (உயர்தரப்) பரீட்சை 2026-08-10 முதல் 2026-09-05 வரை நடைபெற உள்ளது. அதேநேரம் 2026 ஆம் ஆண்டுக்கான, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2026-08-09 திகதியன்று இடம்பெறவுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026-12-08 முதல் 2026-12-17 வரை நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmfjeof0r00e1qplpt6ooy0xs
1 month 2 weeks ago
14 Sep, 2025 | 05:03 PM மழைகாலத்தில் சீரான வெள்ளநீரோட்டத்தினை ஏற்படுத்துவதனை நோக்காக் கொண்டு நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட வடிகால்கால்கள் ஒழுங்கு முறையில் தூர்வாரப்பட்டு தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை நல்லூர் பிரதேச சபை தொடர்சியாக மேற்கொண்டு வருகின்றது என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் தவிசாளர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக் குட்பட்ட வடிகால்களினை தூர்வாருவதற்கு இடையூறாக வடிகால்களுக்குமேல் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களையும் வீதிகளில் போக்குவரத்து மற்றும் வெள்ள நீராட்டத்திற்கு இடையூறாக காணப்படுகின்ற நிலக்கற்கள், கட்டுமாணங்கள், பூச்செடிகள் என்பவற்றையும் நாளைய தினம் திங்கட்கிழமை முதல் பதினான்கு நாட்களுக்குள் அகற்றுமாறு வேண்டப்படுகின்றீர்கள். நல்லூர் பிரதேச சபையின் இவ் பகீரங்க அறிவித்தலுக்கு ஏற்ப மேற்படி இடையூறுகளை ஏற்படுத்தும் விடயங்களை குடியிருப்பாளர்கள் அகற்றப்படாவிடின் எதிர்வரும் 01 ஆம் திகதியிலிருந்து எவ்வித முன்அறிவித்தலுமின்றி நல்லூர் பிரதேச சபை அவற்றினை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கன் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/225070
Checked
Sun, 11/02/2025 - 23:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed