உலக நடப்பு

செங்கடல் பகுதியில் கப்பல் மீது ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் - மூவர் பலி

3 weeks 2 days ago

செங்கடல் பகுதியில் கப்பல் மீது ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் - மூவர் பலி

Published By: RAJEEBAN

10 JUL, 2025 | 09:31 AM

image

செங்கடல் பகுதியில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்  கப்பலொன்றின் மீது மேற்கொண்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

லைபீரிய கொடியுடன் 25 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த கிரேக்கத்தை சேர்ந்த எட்டேர்னிட்டி சி என்ற சரக்கு கப்பல் மீது சிறிய படகுகளில் இருந்து  ஆர்பிஜி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செவ்வாய்கிழமை முழுவதும் இந்த தாக்குதல் இடம்பெற்றது அதன் பின்னரே மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகின என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலை நோக்கி சென்றுகொண்டிருந்த கப்பலையே தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ள ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் பலரை கைதுசெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் பலரை கைதுசெய்துள்ளனர் என தெரிவித்துள்ள யேமனில் உள்ள அமெரிக்க தூதரகம் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தங்களின் 21 பிரஜைகளை கைதுசெய்துள்ளனர் என பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ரஸ்ய பிரஜையொருவருக்கு காலில் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ஒரே வாரத்தில் இரண்டு வர்த்தக கப்பல்களை தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/219630

இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த ஐநா அறிக்கையாளருக்கு எதிராக தடைகள் - அமெரிக்கா அறிவிப்பு

3 weeks 2 days ago

இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த ஐநா அறிக்கையாளருக்கு எதிராக தடைகள் - அமெரிக்கா அறிவிப்பு

Published By: RAJEEBAN

10 JUL, 2025 | 11:35 AM

image

காசாமீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த ஐக்கியநாடுகள் அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிசிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

அமெரிக்கர்கள் இஸ்ரேலியர்களிற்கு எதிராக ஐசிசி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளிற்கு ஆதரவளிக்கும் விதத்தில் செயற்பட்டமைக்காக பிரான்செஸ்காவிற்கு எதிராக தடைகளை விதிப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ  ரூபியோ தெரிவித்துள்ளார்.

ஐநா அறிக்கையாளராக செயற்படுவதற்கு பிரான்செஸ்கா பொருத்தமற்றவர் என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தங்களது வான்பரப்பினை பயன்படுத்துவதற்கு ஏன் என இத்தாலி கிரேக்கம் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெளிவுபடுத்தவேண்டும் என ஐநாவின் பாலஸ்தீனத்திற்கான விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார்

ஐசிசி தேடும் பெஞ்சமின் நெட்டன்யபாகுவிற்கு தங்கள் வான்பரப்பை பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பாக பயணிப்பதற்கும் இத்தாலி பிரான்ஸ் கிரேக்கம் ஆகிய நாடுகள் அனுமளியளித்தது ஏன் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அவர் நெட்டன்யாகுவை கைதுசெய்யவேண்டிய கடப்பாட்டை இந்த நாடுகள் கொண்டுள்ளன என தெரிவித்திருந்தார்.சர்வதேச சட்ட ஒழுங்கை மீறும் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும் அதனை பலவீனப்படுத்தும்அவர்களுக்கும் அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை பிரான்ஸ் கிரேக்க இத்தாலி மக்கள் அறிந்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/219647

அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுப்போம்! – பிரேசில் ஜனாதிபதி

3 weeks 2 days ago

Trump-Lula-New.jpg?resize=750%2C375&ssl=

அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுப்போம்! – பிரேசில் ஜனாதிபதி.

அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா ( Lula da Silva) தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரேசிலில் இருந்து வரும் பொருட்களுக்கு 50% வரி விதிக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா, தங்களது இறையாண்மை நிலையை வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பிரேசிலில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு 50 சதவிகித வரி விதிக்கப்படும் என்று நேற்று அறிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில் ஜனாதிபதி  லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது”

‘பிரேசில் ஒரு இறையாண்மை நாடு. நாங்கள் வெளியில் இருந்து வரும் எந்தவொரு கட்டுப்பாடு அல்லது அழுத்தத்தையும் ஏற்கமாட்டோம்.

பிரேசில் டிஜிட்டல் வலைதளங்களில் வரும் வெறுப்பு பேச்சு, இனவெறி, சிறுவர்கள் துஷ்பிரயோகம், மோசடிகள், மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்களை ஏற்காது.

பிரேசிலில் பேச்சுரிமை என்பது எந்தவொரு வன்முறையையும் ஊக்குவிக்காது. பிரேசிலில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும், இங்கே இயங்குவதற்கு பிரேசில் சட்டத்தை பின்பற்ற வேண்டும்.

பிரேசில் உடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை கூற்றுகள் தவறானவை. கடந்த 15 ஆண்டுகளில், பிரேசில் உடனான அமெரிக்காவின் வணிக உபரி 410 பில்லியன் டொலர்கள் என்று அமெரிக்காவின் தரவுகள் காட்டுகின்றன.

அமெரிக்கா எங்கள் மீது புதிய வரிகளை விதித்தால், பிரேசில் அதற்கான பதிலடியை பிரேசிலின் பொருளாதார பரஸ்பர சட்டம் மூலம் கொடுக்கும்.

பிரேசில் இறையாண்மை,பரஸ்பர மரியாதை, மற்றும் உலகளாவிய உறவுகளில் மக்களின் நலன்களைப் பாதுகாப்பது ஆகியவற்றை மதிக்கிறது’ இவ்வாறு  பதிவிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1438672

சர்வதேச நீதிமன்றத்தினால் தேடப்படும் பெஞ்சமின் நெட்டன்யாகு விமானப்பயணத்திற்காக தங்கள் வான்பரப்பை பயன்படுத்துவதற்கு பிரான்ஸ் இத்தாலி கிரேக்கம் அனுமதித்தது ஏன்? ஐநா அதிகாரி கேள்வி

3 weeks 2 days ago

09 JUL, 2025 | 02:48 PM

image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தங்களது வான்பரப்பினை பயன்படுத்துவதற்கு ஏன் என இத்தாலி கிரேக்கம் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெளிவுபடுத்தவேண்டும் என ஐநாவின் பாலஸ்தீனத்திற்கான விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐசிசி தேடும் பெஞ்சமின் நெட்டன்யபாகுவிற்கு தங்கள் வான்பரப்பை பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பாக பயணிப்பதற்கும் இத்தாலி பிரான்ஸ் கிரேக்கம் ஆகிய நாடுகள் அனுமளியளித்தது ஏன் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அவர் நெட்டன்யாகுவை கைதுசெய்யவேண்டிய கடப்பாட்டை இந்த நாடுகள் கொண்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்ட ஒழுங்கை மீறும் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும், அதனை பலவீனப்படுத்தும்,அவர்களுக்கும் அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை பிரான்ஸ் கிரேக்க இத்தாலி மக்கள் அறிந்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினை அங்கீகரிக்கும் ரோம் பிரகடனத்தில் அமெரிக்கா கைச்சாத்திடாதது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/219580

பிரான்ஸின் மார்சேயில் பாரிய காட்டுத் தீ; 100 பேர் காயம்

3 weeks 2 days ago

Published By: DIGITAL DESK 3

09 JUL, 2025 | 12:42 PM

image

பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மார்சேயில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி ஒன்பது தீயணைப்பு வீரர்கள், 22 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 110 பேர் காயமடைந்துள்ளனர் என பிரான்ஸ் உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

மார்சேய் பகுதியை சென்று பார்வையிட்ட உள்நாட்டு அமைச்சர் புருனோ ரீடெய்லியூ அங்கு அவர் உள்ளூர் அதிகாரிகளைச் சந்தித்தார். தற்போது தீயை அணைக்கும் பணியில் 800 தீயணைப்பு வீரர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

"கடற்படை தீயணைப்பு வீரர்கள் கையில் குழாய்களுடன் கொரில்லாப் போரை நடத்தி வருகின்றனர்" என மார்சேயின் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையை மேற்கோள் காட்டி  நகர மேயர் பெனாய்ட் பயான் தெரிவித்துள்ளார்.

தங்கள் வீடுகளை விட்டு 400 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 

தீப் பரவல் நிமிடத்திற்கு 1.2 கிலோ மீற்றர் (0.7 மைல்) வேகத்தில் பரவியுள்ளது. காற்று, அடர்ந்த தாவரங்கள் மற்றும் செங்குத்தான சரிவுகளால் தீ வேகமாக பரவி வருவதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், தீயணைப்பு வீரர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"காயமடைந்தவர்கள் மற்றும் அனைத்து குடியிருப்பாளர்கள் மீது எங்கள் சிந்தனைகள் உள்ளன" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை நண்பகல் முதல் பல மணி நேரம் மூடப்பட்டிருந்த மார்சேய் புரோவென்ஸ் விமான நிலையம் அந்நாட்டு நேரப்படி இரவு 21:30 மணிக்கு (GMT 19:30) பகுதியளவு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதேபோன்றதொரு சம்பவம் இதற்கு முன்னர் நிகழ்ந்தது இல்லை என விமான நிலையத்தின் தலைவர் ஜூலியன் காஃபினியர் தெரிவித்துள்ளார்.

மார்சேய்க்கு வடக்கே பென்னஸ்-மிராபியூ அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ, சுமார் 700 ஹெக்டயர் (7 சதுர கி.மீ) பரப்பளவுக்கு பரவியதாகக் கூறப்படுகிறது.

அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீப்பிடித்ததால் இந்த காட்டுத்  தீ விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

WhatsApp_Image_2025-07-09_at_9.50.15_AM_

Bouches-du-Rhône பகுதியில் மே மாதம்  19 ஆம் திகதி முதல் ஒரு சொட்டு மழை கூட பதிவாகவில்லை.

இதேவேளை, பிரான்சில் திங்களன்று நார்போன் அருகே மற்றுமொரு காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அங்கு மணிக்கு 60 கிலோ மீற்றர் (40 மைல்) வேகத்தில் காற்று வீசியுள்ளதால் சுமார் 2,000 ஹெக்டயர் நிலப்பரப்பளவு எரிந்து நாசமாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகிழக்கு ஸ்பெயினின் கட்டலோனியா பகுதி உட்பட ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் காட்டுத்தீ பதிவாகியுள்ளது. கிழக்கு பகுதி தாரகோனாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால்  செவ்வாயன்று 18,000 க்கும் மேற்பட்ட மக்கள் தமது வதிவிடங்களுக்குள் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இரவு முழுவதும் பலத்த காற்று வீசியதால் தீ அணைப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3,000 ஹெக்டயர் நிலப்பரப்பளவுக்கு தீ பரவியுள்ளது.

ஜூன் மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் அதிகரித்தமையினால் ஸ்பெயினின் பல பகுதிகளுக்கு காட்டுத்தீ தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தன.

கிரேக்கத்தில் நாடு முழுவதும் திங்களன்று  சுமார் 41 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் ஏழு காட்டுத் தீ  திங்கள் மாலை வரை செயல்பாட்டில் இருந்தன என்று தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு மற்றும் தென் ஐரோப்பாவின் பெரும்பகுதி கோடை கால  ஆரம்பத்தில் கடும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டது, தீ விபத்துக்களினால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

WhatsApp_Image_2025-07-09_at_9.50.16_AM.

https://www.virakesari.lk/article/219549

பெண்களிற்கு எதிரான ஒடுக்குமுறை - தலிபான் தலைவர்களிற்கு சர்வதேச நீதிமன்றம் பிடியாணை

3 weeks 2 days ago

09 JUL, 2025 | 10:33 AM

image

பெண்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தியமைக்காக தலிபான் தலைவர்களிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

தலிபானின் இரண்டு முக்கிய தலைவர்களிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

2021ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து  தலிபானின் உயர் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சதா மற்றும் தலைமை நீதிபதி அப்துல் ஹக்கீம் ஹக்கானி ஆகியோர் பெண்கள் மற்றும் சிறுமிகளை நடத்திய விதத்தின் மூலம் மனித குலத்திற்கு எதிரான  குற்றத்தில் ஈடுபட்டனர் என நம்புவதற்கான நியாயமான காரணங்கள் உள்ளன சர்வதேச  குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் அவர்கள் பெண்கள் சிறுமிகளிற்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் கல்வி கற்பதற்கு தடைவிதித்துள்ளனர், பெண்கள் பல தொழில்களில் ஈடுபடுவதற்கு தடைவிதித்துள்ளனர் என ஐசிசி தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/219541

காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தை; ட்ரம்ப் – நெதன்யாகு இடையே நடைபெற்ற சந்திப்பு!

3 weeks 2 days ago

New-Project-112.jpg?resize=750%2C375&ssl

காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தை; ட்ரம்ப் – நெதன்யாகு இடையே நடைபெற்ற சந்திப்பு!

காசாவில் நடந்து வரும் போர் குறித்து விவாதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் செவ்வாய்க்கிழமை (08) மாலை இரண்டாவது முறையாக சந்தித்தனர்.

60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொள்ள வேண்டிய ஒரே ஒரு நிபந்தனை மீதமுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகத்தின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப் கூறியதை அடுத்து இந்த சந்திப்பு நடந்தது.

செவ்வாயன்று 5:00 EST (21:00 GMT) மணிக்குப் பிறகு நெதன்யாகு வெள்ளை மாளிகைக்கு நுழைந்து ட்ரம்புடன் சந்திப்பினை மேற்கொண்டார்.

இந்தச் சந்திப்புக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவல்லை.

இந்த சந்திப்புக்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை நெதன்யாகு, துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸை சந்தித்தார்.

ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்திற்குப் பின்னர், நெதன்யாகு அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் மூன்றாவது அரசுப் பயணமாக இது அமைந்துள்ளது.

இரு தலைவர்களின் சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது.

GvYwXDFXUAASyrr?format=jpg&name=large

இந்த சந்திப்பிற்குப் பின்னர் பிரதமர் நெதன்யாகு, காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை முடிந்ததாக நம்பவில்லை என்றும், ஆனால் பேச்சுவார்த்தையாளர்கள் ஒரு போர் நிறுத்தத்திற்காக நிச்சயமாக செயல்பட்டு வரும் நிலையில், எங்கள் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்றார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் காசாவில் உயிருடன் இருக்கும் 10 பணயக்கைதிகளின் விடுதலையும், இறந்த ஒன்பது பேரின் உடல்களும் அடங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, இஸ்ரேலிய பிரதமருக்கும் ட்ரம்பிற்குகம் இடையிலான சந்திப்பிற்கு முன்பு, ஒரு கட்டார் தூதுக்குழு வெள்ளை மாளிகைக்கு வந்து அதிகாரிகளுடன் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாக பேச்சுவார்த்தைகள் பற்றி அறிந்த ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான அண்மைய சுற்று பேச்சுவார்த்தைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இஸ்ரேலிய புள்ளிவிவரங்களின்படி 2023 ஒக்டோபர் 7 அன்று போர் தொடங்கியதிலிருந்து ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கி சுமார் 1,200 பேரைக் கொன்று 251 பணயக்கைதிகளைக் கைப்பற்றியுள்ளது.

இஸ்ரேலின் பழிவாங்கும் தாக்குதலில் காசாவில் குறைந்தது 57,500 பேர் கொல்லப்பட்டதாக அந்தப் பிரதேசத்தின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1438558

பாகிஸ்தானுடனான இராணுவ உறவுகள் குறித்து சீனாவின் தெளிவூட்டல்!

3 weeks 3 days ago

New-Project-105.jpg?resize=750%2C375&ssl

பாகிஸ்தானுடனான இராணுவ உறவுகள் குறித்து சீனாவின் தெளிவூட்டல்!

சீனா பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருப்பதாகவும், பாதுகாப்புத் துறையில் அந்நாட்டுடன் ஒத்துழைப்பதாகவும் பெய்ஜிங் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் திங்களன்று (07) கூறினார்.

ஆனால் இந்த ஆண்டு மே மாதம் ஆப்ரேஷன் சிந்தூர் போது இஸ்லாமாபாத்திற்கு அதன் பங்கு மற்றும் உதவி குறித்த நேரடி கேள்விக்கு பதிலளிக்க அவர் விரும்பவில்லை.

ஒரு ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர்,

சீனாவும் பாகிஸ்தானும் நெருங்கிய அண்டை நாடுகள், பாரம்பரிய நட்பை கொண்டுள்ளன.

பாதுகாப்பு ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான இயல்பான ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும்.

மேலும் அந்த விடயத்தில் எந்த மூன்றாம் தரப்பினரையும் சீனா குறிவைக்கவில்லை என்றார்.

இந்திய இராணுவத்தின் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர் சிங், பல்வேறு ஆயுத அமைப்புகளை சோதிக்க மோதலை பிரதானமாக பயன்படுத்தி சீனா பாகிஸ்தானுக்கு தீவிர இராணுவ ஆதரவை வழங்கியதாக பரிந்துரைத்ததைத் தொடர்ந்து சீனாவின் மேற்படி பதில் வந்தது.

https://athavannews.com/2025/1438489

சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் தொடர்வதில் சிக்கல்!

3 weeks 4 days ago

chinaaa.jpg?resize=689%2C375&ssl=1

சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் தொடர்வதில் சிக்கல்!

சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் (Xi Jinping) தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) அண்மைக்காலமாக பொது வெளிகளில் தோன்றுவதைத் தவிர்த்து வருகின்றார்.  சீனாவில் ஜனாதிபதியாக  இருக்கும் நபர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றால் அதிகார மாற்றம் ஏற்படும் என்பது கடந்த கால வரலாறு.

இதனால் அவர்  விரைவில் ஜனாதிபதி  பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது நடக்கும் பட்சத்தில் சீனாவின் புதிய ஜனாதிபதியாக  யார் வருவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சீனாவில் ஒற்றை கட்சி ஆட்சி முறை உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி தான் பிரதானமாக உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவரே சீனாவின் ஜனாதிபதி ஆவார். மேலும் சீன ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். அந்தவகையில் சீன ஜனாதிபதியாக ஜி ஜின்பிங்  2012, 2018, 2023 என தொடர்ச்சியாக 3 தடவைகள் ஜனாதிபதியாக செயற்பட்டு வருகின்றார்.  அவரது பதவிக்காலம் 2028 ம் ஆண்டு வரை உள்ளது.

எவ்வாறு இருப்பினும் கடந்த மே மாதம் இறுதி முதல் 2 வாரம் வரை ஸி ஜின்பிங் திடீரென்று மாயமானார். இதனால் தற்போது சீனாவில் ஜி ஜின்பிங் ஜனாதிபதி பதவிக்கு முடிவுரை எழுதப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி ஒருவேளை ஜி ஜின்பிங் ஜனாதிபதி  பதவியில் இருந்து விலகும் பட்சத்தில் அந்த பதவிக்கு 2 பேரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளன. அதில் முதல் இடத்தில் இருப்பவர் தான் மத்திய ராணுவ கமிஷன் துணை தலைவரான ஜெனரல் ஜாங் யூக்ஸியா. இவர் ஜி ஜின்பிங்கின் தீவிர ஆதரவாளராக இருந்தார். ஜி ஜின்பிங் முதல் முதலாக ஜனாதிபதியாக இவர் பெரும் பங்கு வகித்தார்.

இதனால் தான் ஜாங் யூக்ஸியாவிற்கு முக்கிய பொறுப்பை வழங்கினார். மேலும் ஜி ஜின்பிங் நாட்டில் இல்லாதபோது ஜாங் யூக்ஸியா கட்டுப்பாட்டில் தான் சீனா செயல்படும். தற்போதும் அவர் கட்டுப்பாட்டில் தான் சீனா இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

மறுபுறம் இந்த பட்டியலில்  2வது இடத்தில் உள்ளவர் தொழில்நுட்ப வல்லுநர் வாங் யாங். இவர் ஜி ஜின்பிங்கின் செல்லப்பிள்ளை என்று சொல்லப்படுகிறது.  வாங் யாங்கை ஜனாதிபதி  பதவியில் வைத்து கொண்டு மறைமுக ஜனாதிபதி  செயல்பட ஜி ஜின்பிங் முடிவு செய்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான வேலைகளில் அவர் இறங்கி உள்ளதாகக் கூறப்படுகின்றமை குறிப்பித்தக்கது.

இந்நிலையில் சீன அரசியல் விவகாரம் தற்போது உலகளவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றமை குறிப்பிடத் தக்கது.

https://athavannews.com/2025/1438407

அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !

3 weeks 4 days ago

f47b690e8aad4574602c21fc8749757cf9ce5476

அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !

அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக ட்ரம்பின் முயற்சியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார்.

அவர், ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.

இதேவேளை வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது ட்ரம்பிற்கு ஒரு நியமனக் கடிதத்தையும் பெஞ்சமின் நெதன்யாகு வழங்கினார்.

‘நோபல் பரிசுக் குழுவிற்கு தான் அனுப்பிய கடிதத்தை உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன் எனவும் அமைதிப் பரிசுக்கு உங்களை பரிந்துரைப்பது மிகவும் தகுதியானது எனவும் கூறி அந்த கடிதத்தை அவரிடம் வழங்கியுள்ளார்.

https://athavannews.com/2025/1438413

காசா மக்களை பலவந்தமாக முகாமொன்றிற்குள் இடமாற்றுவதற்கு இஸ்ரேல் திட்டம் - மனித குலத்திற்கு எதிரான குற்றம் என கடும் கண்டனங்கள்

3 weeks 4 days ago

Published By: RAJEEBAN

08 JUL, 2025 | 11:11 AM

image

guardian

காசாவில் உள்ள அனைத்து பாலஸ்தீனியர்களையும் ரஃபாவின் இடிபாடுகளில் உள்ள ஒரு முகாமில் தள்ளுவதற்கான திட்டங்களை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் வகுத்துள்ளார்.

இந்த  மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவதற்கான திட்டம் என சட்டநிபுணர்களும் கல்விமான்களும் வர்ணித்துள்ளனர்.

ரஃபா நகரின் இடிபாடுகளில் ஒரு முகாமை நிறுவுவதற்குத் தயாராகுமாறு இஸ்ரேல் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேல் காட்ஸ் கூறியதாக இஸ்ரேலின் ஹரெட்ஸ் செய்தித்தாள்  செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் "மனிதாபிமான நகரம்" என்று வர்ணித்துள்ளார்

பாலஸ்தீனியர்கள் உள்ளே நுழைவதற்கு முன்பு "பாதுகாப்பு சோதனை"க்கு உட்படுத்தப்படுவார்கள் உள்ளே நுழைந்தவுடன் வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இஸ்ரேலிய பத்திரிகையாளர்களுக்கான ஒரு மாநாட்டில்இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர்  காட்ஸ் கூறினார்.

இஸ்ரேலிய படைகள் தளத்தின் சுற்றளவைக் கட்டுப்படுத்தி ஆரம்பத்தில் 600000 பாலஸ்தீனியர்களை அந்தப் பகுதிக்குள் "நகர்த்தும்" - பெரும்பாலும் அல்-மவாசி பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள்.

இறுதியில் காசாவின் முழு மக்களும் அங்கு தங்க வைக்கப்படுவார்கள் மேலும் இஸ்ரேல் "குடியேற்றத் திட்டத்தை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது அது நடக்கும்" என்று என ஹரெட்ஸ் செய்தித்தாள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

gaza_march_2025_18888.jpg

இந்த ஆண்டின் தொடக்கத்தில் டொனால்ட் டிரம்ப் அதிக எண்ணிக்கையிலான பாலஸ்தீனியர்கள் காசாவை விட்டு வெளியேறி அந்தப் பகுதியை "சுத்தப்படுத்த" வேண்டும் என்று பரிந்துரைத்ததிலிருந்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட இஸ்ரேலிய அரசியல்வாதிகள் கட்டாய நாடுகடத்தலை உற்சாகமாக ஊக்குவித்து வருகின்றனர் பெரும்பாலும் இது ஒரு அமெரிக்க திட்டமாக முன்வைக்கின்றனர்.

காட்ஸின் திட்டம் சர்வதேச சட்டத்தை மீறுவதாக இஸ்ரேலின் முன்னணி மனித உரிமை வழக்கறிஞர்களில் ஒருவரான மைக்கேல் ஸ்ஃபார்ட்தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்திற்கான ஒரு செயல்பாட்டுத் திட்டத்தை வகுத்தார்." என்று ஸ்ஃபார்ட் தெரிவித்துள்ளார்.. "இது காசா பகுதிக்கு வெளியே நாடுகடத்தப்படுவதற்கான தயாரிப்பில் தெற்கு முனைக்கு மக்கள்தொகை பரிமாற்றத்தைப் பற்றியதுஎன்று ஸ்ஃபார்ட் தெரிவித்துள்ளார்

ஒருவரை அவர்களின் தாயகத்திலிருந்து விரட்டுவது ஒரு போர்க்குற்றமாகும் ஒரு போரின் பின்னணியில். அவர் திட்டமிட்டது போல அது மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டால் அது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக மாறும்" என்று ஸ்ஃபார்ட் மேலும் தெரிவித்துள்ளார்."

https://www.virakesari.lk/article/219461

ரஷ்ய ஜனாதிபதி புட்டினால் பதவி நீக்கப்பட்ட ரஷ்ய அமைச்சர் உயிரை மாய்த்தார்

3 weeks 4 days ago

Published By: VISHNU

07 JUL, 2025 | 08:54 PM

image

3 வருடத்திற்கு மேலாக ரஷியா- உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. தற்போது இரு நாடுகளும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் விமான போக்குவரத்தை மிகவும் நேர்த்தியாக கையாள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தக்கூடும் என ரஷியாவின் ஏராளமான விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திங்கட்கிழமை (07) போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து ரோமன் ஸ்டாரோவாய்ட்டை நீக்கினார்.

அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சில மணி நேரத்தில், ரோமன் ஸ்டாரோவாய்ட் காருக்குள் பிணமாக கிடந்துள்ளார். தற்போது தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.

இருப்பினும், புடின் எந்த காரணத்திற்காக அவரை போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார் என்பது இன்னும் தெரியவில்லை என்று வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

கடந்த வருடம் மே மாதம்தான் போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். அதற்கு முன்னதாக சுமார் ஐந்து வருடம் குர்ஸ்க் பிரந்தியத்தின் ஆளுநராகச் செயல்பட்டு வந்தார். தற்போது அன்ட்ரெய் நிகிடின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நவ்கோரோட் பிராந்தியத்தின் முன்னாள் ஆளுநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/219434

பிரிக்ஸ் அமைப்புடன் இணைந்து செயற்படும் நாடுகளிற்கு எதிராக மேலும் பத்துவீத வரி - டிரம்ப்

3 weeks 4 days ago

07 JUL, 2025 | 11:03 AM

image

பிரிக்ஸ் நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு கூடுதலாக 10 வரி விதிக்கப்படும் என்று  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப்  இது குறித்து மேலதிகமாக எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை.

பிரிக்ஸ் அமைப்பின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் எந்தவொரு நாட்டிற்கும் கூடுதலாக 10 வீத வரி விதிக்கப்படும். இந்தக் கொள்கைக்கு எந்த விதிவிலக்கும் இருக்காது" என்று டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை மாலை ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்துள்ளார். 

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உச்சிமாநாட்டிற்காகபிரிக்ஸ் கூட்டமைப்பு கூடியிருக்கும் நிலையில் டிரம்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

https://www.virakesari.lk/article/219370

உலகில் முதல் நாடாக ஆப்கனில் தாலிபன் அரசுக்கு ரஷ்யா அங்கீகாரம் - இந்தியா என்ன செய்யப் போகிறது?

3 weeks 5 days ago

ரஷ்யா, ஆப்கானிஸ்தான், தாலிபான், சீனா, இந்தியா, வெளியுறவு கொள்கை, பாகிஸ்தான்

பட மூலாதாரம்,RUSSIAN FOREIGN MINISTRY/HANDOUT/ANADOLU VIA GETTY IMAGES

படக்குறிப்பு, ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ராவ் மற்றும் ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக செயல்படும் அமிர் கான் முட்டாகி

கட்டுரை தகவல்

  • அபே குமார் சிங்

  • பிபிசி செய்தியாளர்

  • 6 ஜூலை 2025

    புதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர்

ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசை அங்கீகரித்த முதல் நாடாகியுள்ளது ரஷ்யா

தாலிபன் காபூலைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்த பிறகான நான்கு வருடங்களில் இது அவர்களது மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் நகர்வு, இதுவரை தாலிபன் அரசை அங்கீகரிக்காமல் இருந்து வரும் மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என நம்புவதாக ஆப்கானிஸ்தானின் பொறுப்பு வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாகி தெரிவித்தார்.

ரஷ்யாவின் முடிவை துணிச்சலான முடிவு என அவர் விவரித்தார்.

இந்த முடிவால், "எரிசக்தி, போக்குவரத்து, விவசாயம் மற்றும் கட்டமைப்பு" ஆகியவற்றில் ஆதாயம் இருப்பதாக கருதுவதாகவும். பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலால் ஏற்படும் அபாயங்களை எதிர்கொள்ள ஆப்கானிஸ்தானுக்கு உதவும் எனவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த முடிவு பலரால் விமர்சிக்கப்பட்டுள்ளது.

"இதைப் போன்ற நடவடிக்கை ஆப்கானிஸ்தானின் மக்களை மட்டுமல்லாது, மொத்த உலகின் பாதுகாப்பை அபாயத்திற்கு உள்ளாக்குகிறது," என ஆப்கானிஸ்தான் முன்னாள் எம்.பி. ஃபௌசியா கூஃபி தெரிவித்தார்.

அதே நேரம், 'இது சர்வாதிகார ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் ஒரு அரசை அங்கீகரிக்கிறது. இந்த ஆட்சி பெண்களுக்கு எதிரானது மட்டுமல்லாது தொடர்ந்து பொது உரிமைகளை நீக்கிவருகிறது,' என ஆப்கான் வுமென் பொலிடிக்கல் பார்டிசிபேசன் நெட்வொர்க் தெரிவித்துள்ளது.

பெண்கள் உரிமைகளை மதிப்பதாக தாலிபன் அரசு முன்னர் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த உரிமைகள் ஆப்கான் பண்பாடு மற்றும் இஸ்லாமிய சட்டத்தைப் பற்றிய அவர்களது சொந்த விளக்கத்தை பொறுத்தது.

கடந்த 2021ஆம் ஆண்டு முதல், ஆப்கானிஸ்தானில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பள்ளிக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளதுடன், பெண்கள் பெரும்பாலான பணிகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுவதில்லை.

கூடுதலாக பெண்கள் தனியாக தொலைதூரம் பயணம் மேற்கொள்ள கட்டுப்பாடுகள் உள்ளன; அவர்கள் ஒரு ஆண் உறவினர் இல்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை.

ரஷ்யா, ஆப்கானிஸ்தான், தாலிபான், சீனா, இந்தியா, வெளியுறவு கொள்கை, பாகிஸ்தான்

பட மூலாதாரம்,SEFA KARACAN/ANADOLU VIA GETTY IMAGES

படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்ட பின்னர், மாஸ்கோவில் இருக்கும் ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் தாலிபன் இடைக்கால அரசின் கொடி பறந்தது. (ஜூலை 4, 2025)

இப்போதுவரை சர்வதேச அரங்கில் தாலிபன் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை சர்வதேச அளவில் உருவாகியிருக்கும் ஒத்த கருத்தில் ரஷ்யாவின் இந்த நடவடிக்கை ஒரு பிரிவை ஏற்படுத்தியிருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

தாலிபனுக்கு முறைப்படியான அங்கீகாரம் அளிக்காமல், குறுகிய அளவிலான பேச்சுவார்த்தைகள் நடத்துவதன் மூலம் ஒருவருக்கு தேவையானவற்றை செய்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை இதுவரை இருந்தது. ஆனால் நேரடி அங்கீகாரம் அளித்ததன் மூலம் ரஷ்யா இந்த சிந்தனைக்கு சவால் விடுத்துள்ளது.

வாஷிங்டனை சேர்ந்த சிந்தனைக்குழுவான வில்சன் மையத்தைச் சேர்ந்த தெற்காசிய நிபுணர் மைக்கேல் கூகல்மேன், "ஆப்கானிஸ்தானில் இருக்கும் தாலிபன் அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா இருக்கிறது. சீனா அடுத்ததாக இருக்கலாம். இப்போது வரை நாடுகள் தங்களது சொந்த நலனுக்காக தாலிபனுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம், ஆனால் ஒரு அதிகாரப்பூர்வ உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பது சர்வதேச ஒருமித்த கருத்தாக இருந்தது. ஆனால் தற்போது இந்த கருத்து தற்போது உடைந்து வருவதாக தெரிகிறது." என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ரஷ்யாவின் முடிவை சீனா வரவேற்றுள்ளது. "ஆப்கானிஸ்தான் எங்களது அண்டை நாடு மற்றும் பாரம்பரிய நட்பு நாடு. ஆப்கானிஸ்தான் சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படக்கூடாது என்பதை சீனா எப்போதும் நம்பி வந்திருக்கிறது," என சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு இருக்கும் ராஜதந்திர சவால்

ரஷ்யா, ஆப்கானிஸ்தான், தாலிபான், சீனா, இந்தியா, வெளியுறவு கொள்கை, பாகிஸ்தான்

பட மூலாதாரம்,WAKIL KOHSAR/AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, 2021 முதல் ஆப்கானிஸ்தானில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பெண்கள் பல வேலைகளை செய்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

ரஷ்யாவின் இந்த முடிவை புரிந்துகொள்ள நாம் முதலில் ரஷ்யா மற்றும் சீனா இடையேயான தொடர்பை பார்க்கவேண்டும் என்கிறார் சர்வதேச உறவுகள் விவகார நிபுணர் ஸ்வஸ்தி ராவ்.

"சீனா ஏற்கனவே தாலிபனுடன் நேரடித் தொடர்பில் உள்ளது. அதற்கு அங்கு பல முதலீடுகள் உள்ளன. இப்போது முறையான அங்கீகாரம் அளித்த முதல் நாடாக ரஷ்யா உள்ளது. இது ஒரு உத்தி மாற்றம் ஆகும்." என அவர் தெரிவித்தார்.

1979ஆம் ஆண்டில், ரஷ்யா ராணுவ ரீதியாக ஆப்கானிஸ்தானில் தலையிட்டு, பல பத்தாண்டுகள் அந்த நாட்டை உள்நாட்டு போர் மற்றும் நிலையற்றதன்மையில் சிக்கவைத்தது.

ஆனால் மூஜாஹிதீன் போராட்டக்காரர்களுடன் சோவியத் யூனியன் தொடர்ந்து போரிட வேண்டியிருந்தது. அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் செளதி அரேபியா போன்ற நாடுகள் இந்த போராட்டக்காரர்களுக்கு பெரிய அளவில் பொருளாதார மற்றும் ராணுவ உதவி அளித்தன.

ஆனால் 1980-களின் பிற்பகுதியில் அமெரிக்கா அளித்த ஸ்டிங்கர் ஏவுகணைகள் காரணமாக சோவியத்தின் வான் ஆற்றல் பலவீனமடைந்து, ராணுவத்தை திரும்பப் பெறுவது கோர்பசேவின் தலைமையில் 1988ஆம் ஆண்டு தொடங்கியது.

2021ஆம் ஆண்டு அமெரிக்கா வெளியேறிய பின்னர், தாலிபன் ஆட்சியை மீண்டும் பிடித்தது. இந்த முறை சர்வதேச சூழல் மாறிவிட்டது. இப்போது ரஷ்யா தாலிபனை தனது 'பயங்கரவாத பட்டியலில்' இருந்து நீக்கிவிட்டது. இருநாடுகளிடையேயான வர்த்தக மற்றும் ராஜாங்க உறவுகளைத் தீவிரப்படுத்தியது.

"ஐஎஸ் கோரசனை (சன்னி முஸ்லிம் கடும்போக்கு பிரிவு ) கட்டுப்பாட்டுக்குள் வைக்க ரஷ்யா பல்வேறு வகையான அழுத்தங்களை அளிக்கிறது, ஆனால் தாலிபனுடன் நேரடியாக பேசுவதும் அவசியம். இதில் பயங்கரவாத எதிர்ப்புக் கோணமும் உள்ளது." என்கிறார் ஸ்வஸ்தி ராவ்.

"காவ்கசஸில் (கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவை உள்ளடக்கிய பகுதியை குறிக்கும் சொல்) ரஷ்யாவின் செல்வாக்கு குறைந்துள்ளது. இரானும் பலவீனமாக உள்ளதுடன், சிரிய தளமும் அபாயத்தில் உள்ளது. இது போன்ற சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் ரஷ்யாவுக்கு ஒரு வலுவான தளமாக மாறலாம்."

யுக்ரேன் போர் காரணமாக ரஷ்யாவின் சர்வதேச அந்தஸ்து வலுவிழந்திருப்பதால், சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா புதிய தளங்களை பார்ப்பதாக அவர் நம்புகிறார்.

இதில் "யுக்ரேன் போருக்குப் பின் ரஷ்யா, சீனாவை விட சிறிய பங்காளியாகிவிட்டதால் ரஷ்யாவுக்கு சீனாவின் ஆதரவும் கிடைக்கும்," என்கிறார் அவர்.

ரஷ்யா, ஆப்கானிஸ்தான், தாலிபான், சீனா, இந்தியா, வெளியுறவு கொள்கை, பாகிஸ்தான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தாலிபன் தான் அந்த சமூகத்தின் இயல்பான அமைப்பு என்கிறார் அனுராதா சினாய்

ஜேஎன்யுவின் ஸ்கூல் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்டடிஸின் முன்னாள் தலைவரும் ஓய்வு பெற்ற பேராசிரியருமானவர் அனுராதா சினாய், "தாலிபன் தான் அந்த சமூகத்தின் இயல்பான அமைப்பு" என்கிறார்.

மேலும் பேசிய அவர், "ரஷ்யா போன்ற நாடுகள் ஏன் அங்கீகாரம் அளிக்கின்றனர்? தாலிபன்தான் அந்த சமூகத்தின் இயல்பான அமைப்பு என அவர்களுக்கு தெரியும். உங்களால் அவர்களை வெளியிலிருந்து மாற்றமுடியாது. அது உள்ளேயிருந்து ஒரு விவாதம் அல்லது இயக்கம் ஏற்பட்டால்தான் மாறமுடியும்." என்றார் அவர்

மேலும் அவர், "இதனால்தான் தாலிபனுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அவரகளது உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிடாமல் இருக்கவும் ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் விரும்புகின்றன. இதுதான் அவர்களது கொள்கை" எனத் தெரிவித்தார்.

தாலிபனுடனான ரஷ்யாவின் நட்பு, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவில் ஏற்பட வாய்ப்புள்ள நிலையற்றதன்மையிலிருந்து ரஷ்யா தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள ஒரு வழி என அவர் நம்புகிறார். அதே போல் எதிர்காலத்தில் ஆப்கானிஸ்தானுக்கு குறுக்கே குழாய் அமைப்பது அல்லது வேறு ஏதேனும் பிராந்திய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், அதில் தாங்கள் பங்கேற்பதை உறுதி செய்ய ரஷ்யர்கள் விரும்புகின்றனர் எனவும் அவர் தெரிவிக்கிறார்.

இந்தியா தாலிபானுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கவில்லை. இதுவே இந்தியாவின் பாரம்பரிய கொள்கையாக இருந்துள்ளது என விவரிக்கிறார் ஸ்வஸ்தி ராவ்.

"இதுவே உலகம் முழுவதும் இந்தியாவின் பாணியாக எப்போதும் இருந்திருக்கிறது. எனவே அது எப்படி திடீரென தாலிபனுக்கு ராஜ்ஜிய அங்கீகாரத்தை வழங்கும்? அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தனது உறவைவும் பராமரிக்க விரும்புவதால் இந்தியா இதைச் செய்யாது," என அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் இந்த முன்னெச்சரிக்கையின் பின், மேற்கத்திய நாடுகளுடன் அதற்கு இருக்கும் விரிவான வர்த்தக மற்றும் ராஜாங்க நலன்கள் உள்ளன.

"அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் அதன் உறவுகளை பராமரிக்க விரும்புவதால், இந்தியா சற்று தயங்குகிறது." என்கிறார் அனுராதா சினாய்.

இந்தியா அதிகாரப்பூர்வமாக தாலிபனை அங்கீகரிக்காவிட்டாலும், ஆப்கானிஸ்தானுடன் 'அங்கீகாரம் இல்லாமல் தொடர்பு கொள்வது' என்ற கொள்கையை கடைப்பிடித்து வருகிறது.

இந்த ஆண்டு மே மாதத்தில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானின் பொறுப்பு வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகியுடன் தொலைபேசியில் பேசினார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் தாலிபன் வெளியுறவு அமைச்சருடன் பேசி அது தொடர்பாக வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டதது இது முதல்முறை. அந்த தொலைபேசி அழைப்பின் போது, பஹல்காம் தாக்குதலுக்கு முட்டாகி கண்டனம் தெரிவித்ததை எஸ் ஜெய்சங்கர் பாராட்டினார்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின், இரு நாடுகளும் ஒரு அறிக்கையை வெளியிட்டன. " இந்தப் பேச்சுவார்த்தையில், ஆப்கான் மக்களுடனான எங்களது பாரம்பரிய நட்பு மற்றும் அவர்களுடைய வளர்ச்சிக்கு தேவைகளுக்கு எங்களுடைய தொடர்ச்சியான ஆதரவு ஆகியவை குறிப்பிடப்பட்டன. இந்த ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்து செல்வதற்கான வழிகள் மற்றும் ஆதாரங்கள் விவாதிக்கப்பட்டன."

அதே நேரம், "ஆப்கானிஸ்தான் குடியரசின் வெளியுறவு அமைச்சர் மெளலவி அமிர் கான் முட்டாகி மற்றும் இந்திய குடியரசின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. இருதரப்பு உறவுகள், வர்த்தகம் மற்றும் ராஜாங்க உறவுகள் ஆகியவற்றின் மீது இந்த உரையாடல் கவனம் செலுத்தியது," என ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் அளித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசு உருவாக்கப்படவேண்டும் என இந்தியா வலியுறுத்தி வந்திருக்கிறது.

இந்தியா மற்றும் தாலிபன் இடையே தொடர்புகள் அண்மை மாதங்களில் அதிகரித்துள்ளது. ஜனவரியில் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, அமிர் கான் முட்டாகியை துபையில் சந்தித்தார்.

"அங்கீகாரம் இல்லாமல் தொடர்பு வைத்துக்கொள்வது என்ற கொள்கையை எதிர்காலத்திலும் இந்தியா தொடர்ந்து பின்பற்றலாம். ஆம் இந்த தொடர்புகள் ஆழமாவதை அது நிச்சயம் உறுதிசெய்யும்." என்று இந்த முன்னேற்றத்தைப் பற்றி குறிப்பிடுகிறார் ஸ்வஸ்தி ராவ்.

ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு ஏன் முக்கியமானது?

2021ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் தாலிபன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியபோது, அது ராஜாங்க மற்றும் உத்தி ரீதியாக இந்தியாவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்பட்டது

இந்தியா, ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்த பல பில்லியன் டாலர்கள் அனைத்தும் வீணாகிவிடும் என தோன்றியது.

சாலைகள், எரிசக்தி, அணைகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட ஆப்கானிஸ்தானில் 500க்கும் மேற்பட்ட திட்டங்களில் இந்தியா கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.

இந்தியா, ஆப்கான் ராணுவ அதிகாரிகளுக்கு ராணுவ பயிற்சி அளித்தது, ஆயிரக்கணகான மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளித்ததுடன், அங்கு ஒரு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டியது.

ஆனால், "இந்தியா கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டு சேவை அதிகாரி ஒருவர் மூலமாக தாலிபன்களுடனான தொடர்ப்பில் இருக்கிறது." என ஆப்கானிஸ்தானுக்கான இந்திய முன்னாள் தூதர் ஜெயந்த் பிரசாத் கடந்த ஆண்டு ஜனவரியில் பிபிசி செய்தியாளர் செளதிக் பிஸ்வாஸிடம் தெரிவித்திருந்தார்.

"ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்கு அதன் மூலோபாய ஆழம் தேவை. இந்தியா பல வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளது, ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் இந்தியாவால் கட்டப்பட்டது. இந்தியாவின் இணை இணைப்புத் திட்டங்கள் பாகிஸ்தானை தவிர்த்துவிட்டுத்தான் முன்னோக்கி செல்லமுடியும் என்பதால் இந்தச் சூழ்நிலை முக்கியமானது," என விளக்குகிறார் ஸ்வஸ்தி ராவ்.

பல விவகாரங்களில் குறிப்பாக தெரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) விஷயத்தில் பாகிஸ்தானுடன் தாலிபன் ஒத்துப்போவதில்லை என்று கூறியவர், "இந்த பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள இந்தியா முயற்சித்து வந்திருக்கிறது." என்றும் தெரிவித்தார்.

"ஆப்கானிஸ்தானுடன் இந்தியாவுக்கு எப்போதுமே நலன் சார்ந்த முரண் இருந்ததில்லை. பல வளர்ச்சி திட்டங்களில் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவியுள்ளது." என்று தெரிவிக்கிறார் அனுராதா சினாய்.

அவரின் கூற்றுப்படி, "தாலிபன் அரசும் ஒப்பீடு அளவில் இந்தியாவுடன் மென்மையாக இருந்திருக்கிறது. ஆப்கான் குடிமக்கள் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவிற்கு வருகின்றனர். இதுவும் இரண்டு நாடுகளிலும் ஒரு நேர்மறையான தோற்றத்தைப் பராமரிக்கிறது."

இதைப் போன்ற ஒரு சூழலில், ராஜாங்கம், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் என மூன்று கோணங்களிலும் ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு முக்கியமானது என நிபுணர்கள் நம்புகின்றனர்.

இப்போது என்ன?

ரஷ்யா, ஆப்கானிஸ்தான், தாலிபான், சீனா, இந்தியா, வெளியுறவு கொள்கை, பாகிஸ்தான்

பட மூலாதாரம்,MONEY SHARMA/AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை இந்தியாவின் யுக்தி மிகவும் யோசனையுடனும், மெதுவாகவும் நகரும் என நிபுணர்கள் நம்புகின்றனர்

ரஷ்யா தாலிபனை அங்கீகரித்து, சீனாவும் ஏற்கனவே தாலிபனுடன் ஆழமான வணிக மற்றும் அரசியல் உறவுகளை கட்டமைத்து வரும் சூழ்நிலையில் இந்தியாவுக்கு இரண்டு வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர். ஒன்று அங்கீகரிக்காமல் தொடர்பு கொள்ளும் கொள்கையை மேலும் சிறிது காலம் தொடரவேண்டும், அல்லது முறையான அங்கீகாரம் வழங்குவதை நோக்கி மெதுவாக நகரவேண்டும்.

ஸ்வஸ்தி ராவ் இதைப்பற்றி கூறுகையில், "முழுமையான தூதரக அங்கீகாரம் அளிக்கும் நாளில் இந்தியா தன்னையே ஒரு பெட்டியில் பூட்டிக்கொள்ளும்" எனத் தெரிவித்தார்.

அவரின் கூற்றுப்படி, அனைத்து வாய்ப்புகளையும் திறந்து வைத்திருப்பதுதான் இந்தியாவின் கொள்கையாக இருக்கும்.

"சமநிலைப்படுத்துவதுதான் இந்தியா எடுக்கக்கூடிய அடுத்த புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும். அதாவது சீனாவும், பாகிஸ்தானும் அங்கு முழு ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பதற்காக இந்தியா தாலிபனுடன் தனது தொடர்பை அதிகரிக்கும், ஆனால் அது உடனடியாக அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்காது," என்கிறார் ஸ்வஸ்தி ராவ்.

"இந்தியா தனது உத்தியை சார்பற்றதாக வைத்திருக்கவேண்டும். பாகிஸ்தான் இதைச் செய்தால் இந்தியா இதை செய்யவேண்டும் என்பதாகவோ, ஐரோப்பா அழுத்தம் தருவதால் இந்தியா இதைச் செய்யவேண்டும் என்பதாகவோ இருக்கக் கூடாது." என்கிறார் அனுராதா சினாய்.

இந்தியா தாலிபனுடன் பேச்சுவார்த்தையை படிப்படியாக அதிகரிக்கவேண்டும் என்பதுடன் அங்கு உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சியில் இந்தியா பெரிய பங்காற்றவேண்டும் என்றால் ஒருநாள் அது அங்கீகாரம் அளிக்கவேண்டியிருக்கும் என அவர் நம்புகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c36x48rzd8no

குழந்தைகளை பிரசவிக்கும் பாடசாலை மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க திட்டம்!

3 weeks 5 days ago

s-l400.jpg?resize=400%2C267&ssl=1

குழந்தைகளை பிரசவிக்கும் பாடசாலை மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க திட்டம்!

ரஷ்யாவின் சில பகுதிகளில், பாடசாலை மாணவியர்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும் வளர்ப்பதற்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் உதவித்தொகை வழங்கி அந்நாட்டு அரசு ஊக்குவிக்கிறது.

பொருளாதாரம், கலாசார மாற்றம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் பல்வேறு நாடுகளிலும் குழந்தைபேறு குறைந்துவருகிறது.

உலக மக்கள் தொகையில் முதலில் இருந்த சீனா மட்டுமின்றி ஜப்பன், தென்கொரியா, ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி போன்ற நாடுகளிலும் பிறப்பு விகிதம் ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது.

ரஷ்யா — உக்ரைன் போரும், மக்கள் தொகை விகிதத்தை குறைத்துள்ளது.

போரால், படித்த ரஷ்யர்களில் லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

இந்நிலையிலேயே பல்வேறு வரி விலக்குகள், உதவித்தொகை போன்றவற்றை வழங்கி, மக்கள் தொகையை அதிகரிக்க ரஷ்யா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1438224

ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடித்தனர் என்பது உண்மையா? ஒரு வரலாற்று ஆய்வு

3 weeks 5 days ago

ரைட் சகோதரர்கள், சாண்டோஸ் டுமோன்ட்

பட மூலாதாரம்,BBC/GETTY IMAGES

படக்குறிப்பு, ரைட் சகோதரர்கள், சாண்டோஸ் டுமோன்ட் மற்றும் 14-பிஸ் விமானத்தின் புகைப்படம்.

கட்டுரை தகவல்

  • கமிலா வெராஸ் ப்ளும்ப்

  • பிபிசி நியூஸ் பிரேசில்

  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

விமானத்தைக் கண்டுபிடித்தவர் யார் என்பது மிகவும் எளிமையான கேள்வியாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அதற்கான பதிலைக் கண்டறிவது அத்தனை எளிதல்ல.

விமானத்தை கண்டுபிடித்தது உண்மையில் யார் என்கிற கேள்வி நூறு ஆண்டுகளாக நீடித்து வரும் ஒரு பழைய சர்ச்சையின் வேர்.

சைக்கிள் மெக்கானிக்குகளாகவும் சுயமாகக் கற்றுக்கொண்ட பொறியாளர்களாகவும் இருந்த ஆர்வில் மற்றும் வில்பர் ரைட் ஆகியோரை விமானப் பயணத்தின் உண்மையான 'தந்தையர்' எனப் பல அமெரிக்கர்கள் கருதுகின்றனர். 1903 ஆம் ஆண்டில் முதன்முதலில் விமானத்தை இயக்கியவர்கள் ரைட் சகோதரர்கள்.

ஆனால் முதலில் விமானத்தை இயக்கியவர்கள் என்பதற்கான உண்மையான பெருமை, ஆல்பர்டோ சாண்டோஸ் டுமாண்டுக்குச் செல்ல வேண்டும் என்று பல பிரேசிலியர்கள் கூறுகிறார்கள்.

ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த சாண்டோஸ், 1906 இல் பாரிஸில் முதல் விமானப் பயணத்தை மேற்கொண்டார். இது சர்வதேச விமானக் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது. அப்படியானால் எது உண்மை?

சாண்டோஸ் டுமாண்ட்

பட மூலாதாரம்,NATIONAL LIBRARY OF FRANCE

படக்குறிப்பு, சாண்டோஸ் டுமாண்ட் தனது 14-பிஸ் விமானத்தில் பாரிஸில் பறந்தார்.

சாண்டோஸ் டுமாண்ட்: மக்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட முதல் விமானப் பயணம்

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பறக்க வேண்டும் என்ற மனிதனின் கனவை நனவாக்கும் வகையில் ஒரு இயந்திரத்தை உருவாக்க பலரும் தீவிரமாக முயற்சி செய்தனர்.

அந்தக் காலகட்டத்தில், விமானங்களை உருவாக்குவதற்கு நம்பிக்கையளிக்கும் நகரமாக பாரிஸ் மாறியது. அங்கு நல்ல பொறியியல் கல்லூரிகள் இருந்தன. உலோகவியல், இயந்திரங்கள், இயற்பியல் மற்றும் வேதியியல் தொடர்பான ஆராய்ச்சிக்குப் பணமும் எளிதாகக் கிடைத்தது.

"அந்த நேரத்தில், அது விரைவில் நடந்தேறக்கூடிய ஒன்றாகத் தான் தெரிந்தது," என்று பிரெஞ்சு வரலாற்றாசிரியரான பேராசிரியர் ஜீன்-பியர் பிளே கூறுகிறார்.

அதேபோல், முதல் விமானமாக எதைக் கருதுவது என்பதை விமான நிபுணர்கள் முடிவு செய்தனர்.

எந்த வெளிப்புற உதவியும் இல்லாமல் (கவண் போன்ற சாதனங்கள் இல்லாமல்) விமானம் பறக்க வேண்டும் என்றும், மக்கள் அதை தங்கள் கண்களால் நேரில் பார்த்து பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் நிபந்தனை விதித்தனர்.

1906 நவம்பர் 12 அன்று, சாண்டோஸ் டுமாண்ட் இவை அனைத்தையும் செய்தார். பாரிஸில் ஒரு கூட்டத்தின் முன்னிலையில் தனது 14-பிஸ் விமானத்தை 220 மீட்டர் தூரம் பறக்கவிட்டார்.

அடுத்த ஆண்டு, அவர் 'டெமோயிசெல்லே' என்ற மற்றொரு புதிய விமானத்தை வடிவமைத்தார். இது தான் உலகின் முதல் இலகுரக மற்றும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்ட விமானம்.

டெமோயிசெல்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, உலகில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் விமானம் டெமோயிசெல்.

ஆதாரங்களை மாற்றுதல்

ஆனால் 1908 ஆம் ஆண்டில், அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக, முதன்முதலில் தாங்கள் விமானத்தில் பறந்ததாக ரைட் சகோதரர்கள் கூறினர்.

இதைக் கேட்டு பிரான்ஸ் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த நேரத்தில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பறக்கும் கிளப்புகளுக்கு இடையே கடிதங்கள் மூலம் தொடர்ந்து தொடர்பு இருந்து வந்தது.

தரையிலிருந்து நீண்ட தூரம் பறக்கக்கூடிய முதல் விமானத்தை உருவாக்க ஒரு போட்டி நடந்து கொண்டிருந்தது என்பதை அனைவரும் அறிந்திருந்தனர். ஆனால் பல ஆண்டுகளாக ஐரோப்பாவில் ரைட் சகோதரர்களைப் பற்றிய எந்த செய்தியும் கிடைக்கவில்லை.

அந்த நேரத்தில், தங்களது காப்புரிமை ஏற்றுக்கொள்ளப்படுவதற்காகக் காத்திருந்ததாகவும், தங்கள் யோசனையை யாராவது திருடிவிடுவார்கள் என்று பயந்ததாகவும் ரைட் சகோதரர்கள் கூறினர்.

ஆனால் உண்மையில், 1903-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் அவர்களது ஃப்ளையர் பறப்பதை ஐந்து பேர் மட்டுமே பார்த்தார்கள்.

ஒரு தந்தி செய்தி, சில புகைப்படங்கள் மற்றும் ஆர்வில் ரைட்டின் நாட்குறிப்பு போன்ற மிகக் குறைந்த ஆதாரங்கள் மட்டுமே அதனைக் குறிப்பிட்டுள்ளன.

ஆர்வில் தனது நாட்குறிப்பில் அந்த நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 40 கிலோமீட்டர் இருந்தது என்று எழுதியுள்ளார்.

அதாவது, அந்த அளவுக்கு காற்று இருந்ததால், விமானத்தால் என்ஜின் இல்லாமல்கூட பறக்க முடிந்திருக்கலாம் என்று பிரேசிலின் வானியல் அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குநரான ஹென்ரிக் லின்ஸ் டி பாரோஸ் போன்ற சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

அதாவது, இயந்திரம் இல்லாமல் கூட தானாகவே விமானம் பறக்கக்கூடிய அளவுக்கு காற்று பலமாக வீசியது.

இருப்பினும், ரைட் சகோதரர்களின் ஆதரவாளர்கள் இதை ஏற்கவில்லை.

14-பிஸ் பாரிஸில் பறப்பதற்கு முன்பே, ரைட் சகோதரர்கள் 1904-05 ஆம் ஆண்டில் விமானத்தின் சிறந்த மாதிரிகளை உருவாக்கிவிட்டதாக அவர்கள் வாதிடுகிறார்கள்.

ரைட் சகோதரர்களின் ஃப்ளையர்

பட மூலாதாரம்,LIBRARY OF CONGRESS

படக்குறிப்பு, ரைட் சகோதரர்களின் ஃப்ளையர் முதன்முதலில் 1903 இல் பறக்க முயன்றது.

"அன்று காலை (டிசம்பர் 17, 1903) ரைட் சகோதரர்கள், முதல் முறையாக மிகவும் சிறப்பாக பறந்தனர். அதன் மூலம், பிரச்னையைத் தீர்த்துவிட்டதாக அவர்களே உறுதியாக நம்பினர்" என்று கூறுகிறார் ஸ்மித்சோனியனின் தேசிய வான் மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்தில் பணியாற்றியவரும், ரைட் சகோதரர்களைப் பற்றி பல புத்தகங்களை எழுதியவருமான வரலாற்றாசிரியர் டாம் க்ரூச்.

"அவர்கள் இன்னும் சில மேம்பாடுகளைச் செய்ய வேண்டியிருந்தது, ஆனாலும் அவர்களது விமானம் கட்டமைக்கப்பட்டு ஏற்கெனவே பறந்து விட்டது," என்றும் அவர் கூறுகிறார்.

1908ஆம் ஆண்டு, ரைட் சகோதரர்கள் தாங்கள் தான் முதலில் விமானத்தில் பறந்தவர்கள் என்பதை நிரூபிக்க ஒரு பிரசாரத்தைத் தொடங்கும் வரை, இவை அனைத்தும் ரகசியமாகச் செய்யப்பட்டதாகத் தோன்றியது.

ரைட் சகோதரர்கள் ஐரோப்பாவுக்குச் சென்று, பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் 200க்கும் மேற்பட்ட மாதிரி பயணங்களை நிகழ்த்தினர். அதில் ஒரு முறை அவர்கள் 124 கிலோமீட்டர் வரை பயணம் செய்தனர்.

"அந்த நேரத்தில், ஐரோப்பாவின் அரச குடும்பங்கள் வில்பருடன் விமானத்தில் அமர விரும்பினர். இது ஒரு பெரிய கௌரவமாகக் கருதப்பட்டது," என்று பேராசிரியர் பிளே விளக்குகிறார்.

அதே நேரத்தில், விமானங்கள் குறித்த பிரெஞ்சு ஆரம்பகால நிபுணரான ஃபெர்டினாண்ட் ஃபர்பர் போன்றவர்களும் ரைட் சகோதரர்கள் தான் முதன்மையானவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டனர்.

இவ்வளவு நல்ல கட்டுப்பாட்டைக் கொண்ட ஒரு விமானத்தை ஒரே நாளில் உருவாக்கிவிட முடியாது என்று அவர்கள் கூறினர்.

ரைட் சகோதரர்களின் விமானப் பயணம் பற்றிய செய்தி

பட மூலாதாரம்,LIBRARY OF CONGRESS

படக்குறிப்பு, ரைட் சகோதரர்களின் விமானப் பயணம் பற்றிய செய்தி பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்தது.

கவண் பயன்பாடு பற்றி எழுந்த விவாதம்

ஐரோப்பாவில் காட்டப்பட்ட ரைட் சகோதரர்களின் ஃப்ளையர் விமானம் சக்கரங்கள் இல்லாமல் இருந்தது.

அதனால், அது பறக்க ஒரு கவணின் (catapult) உதவி தேவைப்பட்டது (இது விமானம் பறக்க உதவுகிறது). இது ஒரு பெரிய விவாதத்துக்குரிய விஷயமாக மாறியது.

விமானத்தின் இயந்திரம் போதுமான சக்தி வாய்ந்ததாக இல்லை என்றும், கவண் இருந்ததால் மட்டுமே அது பறக்க முடிந்தது என்றும் விமர்சகர்கள் கூறினர். சிலர், எந்த வகையான தரையிலிருந்தும் விமானம் புறப்படக்கூடிய வகையில் ரைட் சகோதரர்கள் கவணைப் பொருத்தியதாகக் கூறுகின்றனர்.

சாண்டோஸ் டுமாண்ட், ரைட் சகோதரர்கள் மட்டுமின்றி வேறு சிலரும் தாங்களே முதன் முதலில் விமானப் பயணம் மேற்கொண்டதாக கூறியுள்ளனர் என்பது தான் இந்தக் கதையின் முக்கியத் திருப்பம்.

அமெரிக்காவில் வசிக்கும் ஜெர்மானியர் குஸ்டாவ் வெய்ஸ்கோப்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அமெரிக்காவில் வசிக்கும் ஜெர்மானியர் குஸ்டாவ் வெய்ஸ்கோப், விமானப் பயணத்தின் ஆரம்பகால முன்னோடியாகவும் இருந்தார்.

அமெரிக்காவில் வாழ்ந்த ஜெர்மனியைச் சேர்ந்த குஸ்டாவ் வெய்ஸ்கோப் என்பவர் 1901ம் ஆண்டிலேயே விமானப் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

நியூசிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் பியர்ஸும் மார்ச் 1903 இல் விமானம் ஒன்றை ஓட்டியதாக நம்பப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவின் ஹோவிக் நகருக்கு அருகில், ஜான் குட்மேன் மற்றும் அவரது குடும்பத்தினர் 1871ஆம் ஆண்டு ஒரு கிளைடர் மூலம் மனிதர்களை ஏற்றிச் சென்று, உலகின் முதல் விமானப் பயணத்தை முயற்சி செய்ததாகக் கூறப்படும் சில சான்றுகளும் உள்ளன. அதுவும் எந்த இயந்திர சக்தியும் இல்லாமல், வெறும் கிளைடரிலேயே சென்றதாகக் கூறப்படுகிறது. இன்றும் கூட, அந்த கிளைடரின் நினைவாக ஒரு நினைவுச்சின்னம் உள்ளது.

அதனால்தான் விமானத்தைக் கண்டுபிடித்தவர் யார் என்பதைப் பற்றிய விவாதம் பயனற்றது என்று பல விமான வல்லுநர்கள் நம்புகிறார்கள்.

"யாரோ ஒருவர் ஒரு நாள் எழுந்து, ஒரு அமைப்பை வரைந்து, 'இது பறக்கும் விமானம்!' என்று சொன்னதால் அது நடக்கவில்லை" என்று ஜேன்'ஸ் ஆல் தி வேர்ல்ட்ஸ் ஏர்கிராஃப்ட்டின் ஆசிரியராக 25 ஆண்டுகள் பணியாற்றிய பால் ஜாக்சன் கூறுகிறார்.

"டஜன்கணக்கானவர்களின் கூட்டு உழைப்பால் மட்டுமல்ல, மாறாக நூற்றுக்கணக்கானவர்களின் ஒருங்கிணைந்த உழைப்பால் அது சாத்தியமானது," என்றும் அவர் கூறுகிறார்.

அங்கீகாரத்தின் கதை

சாண்டோஸ் டுமோண்ட், வெய்ஸ்கோப் மற்றும் பல ஆரம்பகால விமானங்களை இயக்கிய விமானிகளுக்கு தகுதியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பால் ஜாக்சன் கருதுகிறார்.

"இறுதியில், மதிப்புமிக்க வழக்கறிஞர்களைக் கொண்டவர்கள் தான் பெயர் பெற்றவர்களாக மாறுகிறார்கள்" என்று பால் ஜாக்சன் கூறுகிறார்.

"சோகமான விஷயம் என்னவென்றால், 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்த்தப்பட்ட பெரும்பாலான கண்டுபிடிப்புகளைப் பார்த்தால், அவற்றுக்கான பெருமை பெரும்பாலும் தவறான நபர்களுக்கே வழங்கப்பட்டது," என்கிறார் பால் ஜாக்சன்.

தொலைபேசியைக் கண்டுபிடித்த பெருமைக்குரிய ஸ்காட்டிஷ் விஞ்ஞானி அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லின் உதாரணத்தை அவர் தருகிறார். இருப்பினும், அது இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.

உண்மையில், பெல் காப்புரிமை பெற்றிருந்தாலும், உண்மையான கண்டுபிடிப்பு இத்தாலியர் அன்டோனியோ மேயுச்சி (Antonio Meucci) என்பவரால் செய்யப்பட்டதாக அமெரிக்க நாடாளுமன்றம் 2002ஆம் ஆண்டு ஒப்புக்கொண்டது. இத்தாலியைச் சேர்ந்த அவர், வறுமையில் வாடியதாகவும், கிரஹாம் பெல்லுடன் ஒரே பட்டறையில் பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது.

விமானி க்ளென் ஹாமண்ட் கர்டிஸ்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரைட் சகோதரர்களால் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு விமானி க்ளென் ஹாமண்ட் கர்டிஸ்.

அமெரிக்க விமான வரலாற்றில் முக்கியமான முன்னோடியாகக் கருதப்படும் க்ளென் ஹாமண்ட் கர்ட்டிஸின் உறவினர் தான் மார்சியா கம்மிங்ஸ் என்பவர். 1909ஆம் ஆண்டு, தங்கள் காப்புரிமையை மீறியதாகக் கூறி கர்ட்டிஸ் மீது ரைட் சகோதரர்கள் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

இன்று, ரைட் சகோதரர்களின் கதையின் உண்மைத்தன்மையை ஆராயும் ஒரு வலைப்பதிவை நடத்துகிறார் மார்சியா கம்மிங்ஸ். கர்ட்டிஸ் போன்றவர்களை வரலாற்றிலிருந்து அழிக்க ரைட் சகோதரர்கள் வேண்டுமென்றே முயன்றதாக அவர் நம்புகிறார்.

மறுபுறம், ஆர்வில் மற்றும் வில்பரின் கொள்ளுப் பேத்தி அமண்டா ரைட் லேன், அவர்களின் பணியைப் பாதுகாப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

அவர் இந்தக் குற்றச்சாட்டை நம்பவில்லை.

"ஆர்விலை எனக்குத் தெரியும். அவர் யாரையும் வேண்டுமென்றே குறிவைத்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை," என்று அமண்டா கூறுகிறார்.

"ஆம், ஆனால் தானும் வில்பரும் செய்ததைப் பற்றிய உண்மையை பாதுகாப்பதை அவர் உறுதி செய்தார்," என்கிறார் அமண்டா ரைட் லேன்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cyvj6d6y26zo

அமெரிக்காவின் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் எலான் மஸ்கின் புதிய கட்சி!

3 weeks 6 days ago

New-Project-72.jpg?resize=600%2C300&ssl=

அமெரிக்காவின் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் எலான் மஸ்கின் புதிய கட்சி!

உலகின் முன்னணி கோடீஸ்வரர் எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார்.

ஜனநாயக மற்றும் குடியரசு எனும் இருகட்சி முறைகளுக்கு சவால் விடுக்கும் வகையில் ‘America Party’ எனும் பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்ததாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

தேசிய அளவில் பரவலான வேட்பாளர்களை நிறுத்துவதற்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில முக்கிய இடங்களில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்சி, 2 அல்லது 3 செனட் இடங்கள் மற்றும் 8 முதல் 10 ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவை மாவட்டங்களில் மாத்திரமே கவனம் செலுத்தும் என அவர் கூறியுள்ளார்.

கட்சியின் நிர்வாகம், வேட்பாளர்கள், நிதி விபரங்கள் உள்ளிட்டவை இன்னும் வெளியிடப்படவில்லை எனவும், 2026 ஆம் ஆண்டு தேர்தல்களை இலக்குவைத்து இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புடனான கருத்து வேறுபாட்டையடுத்து அவர் புதிய கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1438211

இந்தியா மீது அமெரிக்கா 500% வரியா? ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை தடுக்க புதிய முயற்சி

4 weeks ago

ரஷ்யா - யுக்ரேன், அமெரிக்கா, இந்தியா, சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 விழுக்காடு வரி விதிப்பது குறித்து அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக விவாதம் நீடிக்கிறது.

குடியரசுக் கட்சித் தலைவரும் செனட் அவை உறுப்பினருமான லிண்ட்ஸே கிரஹாம் கடந்த ஏப்ரலில் இதுதொடர்புடைய மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார்.

இது நமது நலன்களை பாதிக்கக் கூடும் என்றும் செனட் உறுப்பினர் கிரஹாமுடன் தொடர்ந்து பேசிவருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தற்போது தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செய்திச் சேனல் ஏபிசி நியூஸிடம் பேசிய செனட் உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாம், "எந்த நாடாவது ரஷ்யாவிடம் பொருட்கள் வாங்கிக்கொண்டு, அதே நேரம் யுக்ரேனுக்கு உதவி செய்யாமல் இருந்தால், அந்த நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு 500% வரி விதிக்க வேண்டும், இந்தியாவும், சீனாவும் புதினின் 70 விழுக்காடு எண்ணெயை வாங்குகின்றன, அதுவே அவர் தொடர்ந்து போர் புரிய உதவுகிறது. எனது மசோதாவுக்கு இதுவரை 84 எம்.பி.களின் ஆதரவு கிடைத்துள்ளது, எனக் கூறினார்.

"இந்தியா, சீனா மற்றும் பிற நாடுகள் புதினின் யுத்த கொள்கையை ஆதரிப்பதை நிறுத்தி, அவர் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை உறுதி செய்யும் வகையில் இந்த நாடுகள் மீது வரி விதிக்க தேவையான அதிகாரத்தை இந்த மசோதா அதிபருக்கு வழங்கும்," என்றும் லிண்ட்ஸே கிரஹாம் கூறினார்.

ரஷ்யா - யுக்ரேன், அமெரிக்கா, இந்தியா, சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என பைடன் நிர்வாகமும் விரும்பியது

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து, மேற்கு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதித்தன. இந்த தடைகள் இன்றும் நடைமுறையில் உள்ளன. இந்தியா ரஷ்யாவுடனான வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என மேற்குலக நாடுகள் விரும்பின, ஆனால் போரின் போது ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகம் புதிய உச்சத்திற்கு சென்றது.

ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் முதன்மையான மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு இந்தியா இறக்குமதி செய்த கச்சா எண்ணெய்யில் ரஷ்யாவின் பங்கு இரண்டு விழுக்காடுக்கு கீழ் இருந்தது, இப்போது கிட்டத்தட்ட 40 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள ரஷ்ய தடைகள் சட்ட மசோதா 2025 (The Russia Sanctions Act, 2025) அமல்படுத்தப்பட்டால், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள் அல்லது யுரேனியம் வாங்கும் நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 500 விழுக்காடு வரி விதிக்கப்படும்.

இது இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வில் இந்தியா உலகில் மூன்றாவது பெரிய நாடாக உள்ளது. இந்தியா தினமும் வெளிநாடுகளிலிருந்து சுமார் 51 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இது சுத்திகரிப்பு நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசலாக மாற்றப்படுகிறது.

ரஷ்யா - யுக்ரேன், அமெரிக்கா, இந்தியா, சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அமெரிக்க செனட் உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாம்

மசோதாவில் என்ன இருக்கிறது?

ரஷ்ய தடைகள் சட்டம் 2025 (The Russia Sanctions Act, 2025) என்பது அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள ஒரு மசோதா. யுக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பு மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யாவின் மறுப்பு ஆகியவற்றுக்கு பதிலடி தரும் விதமாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கும் நாடுகள் மீது பெரிய அளவிலான தடைகளை விதிப்பது இந்த மசோதாவின் நோக்கம்.

இது அமெரிக்க செனட்டில், செனட் உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாமால் ஏப்ரல் 2025ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தற்போது அமெரிக்க செனட் அவையின் பரிசீலனையில் உள்ளது. இது அமலுக்கு வர அவையில் பெரும்பான்மையும் பின்னர் அதிபரின் ஒப்புதலும் தேவைப்படுகிறது.

இந்த மசோதாவை முன்மொழியும்படி அதிபர் டிரம்ப் தன்னிடம் கேட்டுக்கொண்டதாக கிரஹாம் சொல்கிறார்.

"டிரம்பிடம் தற்போது இல்லாத ஒரு ஆயுதத்தை தர விரும்புகிறோம். ஜூலை மாதத்திற்கு பிறகு நாங்கள் அந்த மசோதாவை நிறைவேற்றுவோம். அதிபர் அதில் கையெழுத்திடுவார். இந்த சட்டத்தில் விலக்கு அளிப்பதற்கான அம்சமும் உள்ளது. அதை அமல்படுத்துவது அதிபரின் கையில் இருக்கும்," என்கிறார் அவர்.

தங்களுடைய நோக்கம் புதினை பேச்சுவார்த்தைக்கு முன்வர கட்டாயப்படுத்துவதுதான் என்கிறார் கிரஹாம்.

ரஷ்யா - யுக்ரேன், அமெரிக்கா, இந்தியா, சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சீனாவுக்கு அடுத்து ரஷ்ய கச்சா எண்ணெயை அதிகம் வாங்கும் நாடு இந்தியா

இந்தியா மீதான தாக்கம் என்னவாக இருக்கும்?

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 500 விழுக்காடு வரி விதிக்கும் மசோதா குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரிடம் கேட்கப்பட்டபோது, "செனட் உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாமின் மசோதா பற்றி பேசும்போது, எங்களுடைய நலன்களை பாதிக்கக்கூடிய ஏதேனும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்தால் அது எங்களுக்கும் முக்கியமானது. நாங்கள் தொடர்ந்து செனட் உறுப்பினர் கிரஹாமுடன் தொடர்பில் உள்ளோம். எங்களது தூதரகம் மற்றும் தூதரும் அவருடன் தொடர்பில் உள்ளனர்.

"எரிசக்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான எங்களது கவலைகளை அவர்களிடம் தெளிவாக கூறியுள்ளோம். இந்த விஷயம் எங்கள் முன்வந்தால் நாங்கள் அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம்."

2022ஆம் ஆண்டுக்கு பின்னர் ரஷ்ய எண்ணெயை வாங்கும் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. 2025 மே மாதத்தில் இந்தியா தினமும் சுமார் 19.6 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்தது, இது கடந்த பத்து மாதங்களில் மிகவும் அதிக அளவாகும்.

இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் தினமும் 20 முதல் 22 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதாக சர்வதேச வர்த்தக ஆய்வு நிறுவனமான கெப்ளரின் முதல்கட்ட தரவுகள் காட்டுகின்றன.

இது இரண்டு ஆண்டுகளில் மிக அதிக அளவாகும். அத்தோடு, இராக், செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத்திலிருந்து வாங்கப்படும் மொத்த அளவைவிட அதிகமாகும்.

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல், இதை ரஷ்யாவுக்கு அழுத்தம் தர அமெரிக்கா பயன்படுத்தும் உத்தியாக பார்க்கிறார்.

"சில நாட்களுக்கு முன் டிரம்ப் குறித்து புதின் நேர்மறை கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். இரண்டு நாடுகளின் வெளியுறவுத் துறைகளும் பேசிக் கொண்டிருப்பதாகவும், சில பொருளாதார ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே திரைமறைவில் இருக்கும் நிலை இப்போது தோன்றுவது போல் அவ்வளவு மோசமாக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் இன்னமும் பல "இருந்தால்" மற்றும் "ஆனால்" இருக்கின்றன. எனவே, பிரச்னைக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்போம் என ஜெய்சங்கர் சொல்வது சரியானதுதான் என நினைக்கிறேன்," என்கிறார் கன்வல் சிபல்.

எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சிக்கான மையம் சிந்தனைக்குழுவின் தரவுகள்படி, தடைகள் தளர்த்தப்பட்ட பிறகு மே 2025 வரை, ரஷ்ய நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தில் உள்ளது.

2022 டிசம்பர் 5ஆம் தேதி முதல் 2025 மே மாதம் வரை, ரஷ்யாவின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சீனா 47 விழுக்காட்டையும், இந்தியா 38 விழுக்காட்டையும் வாங்கின.

ரஷ்யா - யுக்ரேன், அமெரிக்கா, இந்தியா, சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தடைகள் இருந்தாலும் ரஷ்யாவின் பொருளாதாரம் வளர்ந்துகொண்டிருப்பதாக புதின் சொல்கிறார்

மேற்குலகின் தடைகளும், ரஷ்யாவின் பதிலடியும்

யுக்ரேன் போர் தொடங்கிய பின்னர், மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது தடைகளை விதிக்கத் தொடங்கின, அவை காலப்போக்கில் மேலும் கடுமையாயின. இந்த தடைகள் ரஷ்யாவின் நிதி, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை பாதிக்கின்றன.

யுக்ரேனில் சமாதானம் செய்துகொள்ள தங்களது தடைகள் அதிபர் விளாடிமிர் புதினை கட்டாயப்படுத்தும் என நம்புவதாக மேற்கத்திய நாடுகள் சொல்கின்றன. ஆனால் தர்க்க ரீதியான நியாயங்கள் மட்டுமே ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்தும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் மீது கூடுதல் தடைகளை விதித்தால் அதனால் ஐரோப்பாதான் அதிகமாக நஷ்டங்களை சந்திக்கும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஜூன் மாதம் கடைசி வாரத்தில் தெரிவித்திருந்தார். 2024-ல் ரஷ்யாவின் பொருளாதாரம் 4.3% அளவு வளர்ச்சியடையும் என்றும் ஆனால் அதே நேரம் யூரோ மண்டலம் பொருளாதாரம் வெறும் 0.9% அளவுதான் வளர்ச்சியடையும் என அவர் தெரிவித்தார்.

இது இந்தியாவுக்கு சவாலான நேரம். இந்தியாவுக்கு மலிவான எரிசக்தி தேவை, அதே நேரம் மேற்குலகின் தடைகளையும் உதாசீனம் செய்துவிட முடியாது. இதைப் போன்ற ஒரு சூழலில் இதுவரை எச்சரிக்கையும், சமநிலையும் கொண்ட ஒரு அணுகுமுறையையே இந்தியா பின்பற்றி வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2d0nrpy159o

அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு - 24 பேர் பலி

4 weeks ago

அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு - 24 பேர் பலி

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

டெக்சாஸில் நேற்றைய தினம் பெய்த பலத்த மழை காரணமாக, இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ள நிலையில் 20 சிறுவர்கள் உட்பட மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி ௌியிட்டுள்ளன.

https://adaderanatamil.lk/news/cmcpqloa300rvqp4k1c89mks1

"காசாவில் பசிக்கு உணவு தேடி மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிக்கு வந்தவர்கள் மீது எனது சகாக்கள் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதை பார்த்தேன்" முன்னாள் பாதுகாப்பு ஊழியர் பிபிசிக்கு தகவல்

4 weeks ago

Published By: RAJEEBAN

04 JUL, 2025 | 01:46 PM

image

காசாவில் மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும்  பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டதை தான் பார்த்ததாக முன்னாள் பாதுகாப்பு ஒப்பந்தக்காரர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்

இஸ்ரேல் அமெரிக்க ஆதரவுடன்   மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன என அவர் தெரிவித்துள்ளார். 

ஒரு சந்தர்ப்பத்தில் பெண்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அடங்கிய குழு ஒன்று அந்த இடத்தை விட்டு மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்ததால் ஒரு காவலர் இயந்திர துப்பாக்கியால் கண்காணிப்பு கோபுரத்திலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். 

பாலஸ்தீனியர் ஒருவர் நிலத்தில் விழுந்தார் அசையாமல் தரையில் விழுந்தார். பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு ஒப்பந்ததாரர் 'அடடா நீங்கள் ஒன்றைப் பெற்றுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்' என்று கூறினார். பின்னர் அவர்கள் அதைப் பற்றி சிரித்தனர் என அவர் தெரிவித்துள்ளார். 

gaza__june_1_2025.jpg

தனக்கு தகவல் வழங்கிய நபர் காசாவில் மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் நான்கு இடங்களில் பணியாற்றியவர். மனிதாபிமான பொருட்கள் விநியோகிக்கப்படும் பகுதிகளில் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் காணப்படுகின்றது, கட்டுப்பாடு எதுவும் இல்லை என தெரிவித்தார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

ஒப்பந்தக்காரர்களிற்கு அவர்கள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்து தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவிலலை என பிபிசிக்கு தெரிவித்துள்ள அந்த நபர் அச்சுறுத்தலான நிலைமை காணப்பட்டால் முதலில் சுடுங்கள் பின்னர் கேள்வி கேளுங்கள் என குழுத்தலைவர் ஒருவர் தனது குழுவிடம் தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் காசாவில் பணிபுரிகின்றோம், இங்கு விதிமுறைகள் இல்லை, நீங்கள் என்னவேண்டுமென்றாலும் செய்யலாம் என்பது போன்ற தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனியர்கள் அந்த இடத்திலிருந்து விலகி சென்றாலோ, ஆபத்தான நோக்கத்தை வெளிப்படுத்தாவிட்டாலும் நாங்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டோம், எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்தோம், நாங்கள் தவறிழைத்துள்ளோம், அலட்சியமாக இருந்துள்ளோம் என அந்த நபர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு தளத்திலும் அந்தப் பகுதியில் நடக்கும் நடவடிக்கைகளை சிசிடிவி மூலம் கண்காணித்து வருவதாகவும் அங்கு யாரும் காயமடையவில்லை அல்லது சுடப்படவில்லை என மனிதாபிமான பொருட்களை விநியோகிக்கும் காசா மனிதாபிமான பவுண்டேசன் தெரிவிப்பது  "முற்றிலும் நிர்வாணப் பொய்" என அந்த நபர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

குழுத் தலைவர்கள் "காசா மக்களை ஜொம்பிகூட்டங்கள்" என்று குறிப்பிட்டனர். இந்த மக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதை மறைமுகமாகக் கூறினர்" என்று கூறினார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

பாலஸ்தீனியர்கள் பலமுறை கடுமையாக காயமடைந்ததாகத் தோன்றிய பல சந்தர்ப்பங்களை தான் கண்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

நபர் ஒருவர் பெப்பர் ஸ்பிரே தாக்குதலிற்குள்ளானார். ஸ்டன் கையெறி குண்டின் உலோகப் பகுதியால் பெண் ஒருவர் தாக்கப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார். 

"இந்த உலோகத் துண்டு அவரது தலையில் நேரடியாகத் தாக்கியது அவர் அசையாமல் தரையில் விழுந்தார்" அவள் இறந்துவிட்டாளா? என்று எனக்குத் தெரியவில்லை. அவள் மயக்கமடைந்து முற்றிலும் முற்றிலும் எழ முடியாத நிலையில் காணப்பட்டாள் என அந்த நபர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/219168

Checked
Sat, 08/02/2025 - 08:39
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe