உலக நடப்பு

'இதுபடுகொலை" காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் பகுதிகளை நோக்கி சென்றுகொண்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - 35 பேர் பலி

1 week 5 days ago

'இதுபடுகொலை" காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் பகுதிகளை நோக்கி சென்றுகொண்டிருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - 35 பேர் பலி

Published By: RAJEEBAN

20 JUL, 2025 | 12:25 PM

image

காசாவில் உணவுவிநியோகம் இடம்பெறும் இரண்டு பகுதிகளில் காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

அந்த பகுதியி;ல் படுகொலை இடம்பெற்றதாக சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளதுடன் மனிதாபிமான பொருட்கள் வழங்கப்படும் பகுதிகளை நோக்கி சென்றுகொண்டிருந்தவர்கள் மீது - அனேகமாக இளையவர்கள் மீது இஸ்ரேலிய படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ளனர்.

gaza_july20_25.jpg

கான்யூனிசிற்கு கிழக்கே உள்ள உணவு விநியோக மையங்களில் இருந்து இரண்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள டெய்னாவில் கொல்லப்பட்டவர்களில் அதிகளவானவர்கள் இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி பிரயோகம் காரணமாக கொல்லப்பட்டனர் என காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என மருத்துவவட்டாரங்கள் இஸ்ரேலின் ஹெராட்ஸ் செய்தித்தாளிற்கு தெரிவித்துள்ளன.

கொல்லப்பட்டவர்கள் காயமடைந்தவர்களில் அதிகளவானவர்கள் சிறுவர்கள் பதின்மவயதினர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

25 பேரின் உடல்கள் தங்களிற்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள கான் யூனிசின் நாசர் மருத்துவமனை காயமடைந்த பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு குறுகிய நேரத்தில் உயிரிழந்தவர்களும் காயமடைந்தவர்களும் காணப்படுகின்றனர்  என தெரிவித்துள்ள மருத்துவமனையின் இயக்குநர் அடெல் அவ் ஹெளட் உயிரிழப்புகள் அதிகமாகலாம் என தெரிவித்துள்ளார்.

போதியளவு உபகரணங்கள் மருத்துவ பணியாளர்கள் மருந்துகள் இல்லாததால் எங்களால் போதிய சிகிச்சையை வழங்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது குறித்து அறிக்கையொன்றை விடுத்துள்ள இஸ்ரேல் அமெரிக்க காசா மனிதாபிமான பவுண்டேசன் தனது பகுதிகளிற்கு அருகில் துப்பாக்கி சூடு  இடம்பெறவில்லை தன்னுடைய உணவு விநியோக தளங்களில் இருந்து வெகுதொலைவில் துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக தெரிவித்துள்ளது.

gaza_july_20_251.jpg

இதேவேளை தங்களின் எச்சரிக்கையை மீறி சந்தேகநபர்கள் படையினரை நோக்கி வந்தவேளை எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்ததாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் உயிரிழப்புகள் குறித்த விபரங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.

நான் உணவுவிநியோக மையத்தை நோக்கி பலருடன் நடந்துசென்றுகொண்டிருந்தவேளை - அனேகமாக இள வயதினர் -இஸ்ரேலிய படையினர் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்த பின்னர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என மஹ்மூட் மொக்கெய்மார் என்பவர் ஏபிக்கு தெரிவித்துள்ளார்.

இது ஒரு படுகொலை  ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் எங்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ள அவர் நான் ஒருவாறு உயிர் தப்பினேன் ஆனால் மூன்று உடல்களை பார்த்தேன் காயமடைந்திருந்த பலரையும் பார்த்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

டாங்கிகள் மற்றும் ஆளில்லா விமானங்களில் இருந்து தாக்குதல்கள் இடம்பெற்றது அவர்கள் எங்களை சுற்றிவளைத்து துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் உயிரிழந்த பலரை பார்த்தேன் என அவர் ஏபிக்கு தெரிவித்துள்ளார்.'gaza__july20_252.jpg

அந்த பகுதியிலிருந்து தப்பியோடியவேளை உயிரிழந்த நிலையில் பலரை கண்டதாக 55 சனா ல் ஜபேரி தெரிவித்துள்ளார்.'

நாங்கள் உணவு உணவு என சத்திமிட்டோம் ஆனால்அவர்கள் எங்களுடன் பேசாமல் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் எங்கள் மீதுதுப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் நாங்கள் நிலத்தில் வீழ்ந்து கிடந்தோம் டாங்கிகள் ஜீப்புகளில் எங்களை நோக்கி வந்த இஸ்ரேலிய படையினர் அதிலிருந்து இறங்கி துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் என 24 வயது டமெர் அபு அக்பர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/220449

அரசியலில் நுழைவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை - எலான் மஸ்க் தெரிவிப்பு!

1 week 6 days ago

Tesla-Inc-elon-musk-by-Frederic-Legrand-

அரசியலில் நுழைவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை - எலான் மஸ்க் தெரிவிப்பு!

அரசியலில் நுழைவதை தான் ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால், வருங்காலத்தில் ஆபத்துகள் அதிகமாக இருப்பதால் வேறு வழியே இல்லாமல், இந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை உருவானது என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எலான் மஸ்க், எனக்கு அரசியலில் நுழைவது என்பதில் சற்றும் விருப்பமில்லை. நான் ரொக்கெட் தயாரிக்கிறேன், கார்களை, கருவிகளை உருவாக்குகிறேன்.

என் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். அதைத் தவிர வேறு எனக்கு எதிலும் ஆர்வமில்லை. ஆனால், எப்போது, இந்த நாட்டின் அமைப்பு மிக மோசமாக உடைந்து போயிருக்கிறதோ, அப்போது என்னால் அமைதியாக இருக்க முடியாது எனவும்
நாட்டின் எதிர்காலத்துக்கு மோசமான ஆபத்துகள் காத்திருக்கும் என்பதால் வேறு வழியின்றி, அரசியல் கட்சியை தொடங்குவது என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறேன் எனவும் கூறியிருந்தார்.

https://athavannews.com/2025/1439823

வியட்நாமில் சுற்றுலாப் பயணிகள் படகு விபத்துக்குள்ளானதில் இதுவரை 37 பேர் உயிரிழப்பு!

1 week 6 days ago

25719-vietnam-capsizing-rc-1021p-a1d67a.

வியட்நாமில் சுற்றுலாப் பயணிகள் படகு விபத்துக்குள்ளானதில் இதுவரை 37 பேர் உயிரிழப்பு!

வியட்நாமில் சுற்றுலாப்பயணிகள் படகு ஒன்று புயலில் சிக்கி விபத்துக்குள்ளானதில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

53பேருடன் பயணித்துக்கொண்டிருந்த வொன்டர் சீ என்ற படகே இவ்வாறு அனர்தத்திற்குள்ளாகியுள்ளது.

ஹா லாங் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களை காண தினமும் ஆயிரக்கண சுற்றுலா பயணிகள் வருகை தருகின்ற நிலையில் தலைநகர் ஹனோயில் இருந்து 53 சுற்றுலா பயணிகள் நேற்று பிற்பகல் படகு மூலம் ஹா லாங் வளைகுடா பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இதன்போது, தென் சீன கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட புயல்காற்றினால் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, படகில் பயணித்த அனைவரும் கடலில் விழுந்துள்ளனர்.

இதன்போது விரைந்து செயற்பட்ட அந்நாட்டு மீட்பு குழுவினர் கடலில் விழுந்தவர்களில் 11 பேரை உயிருடன் மீட்டுள்ளதாகவும் ஐந்து பேருக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இவ்விபத்தில் 8 குழந்தைகள் உட்பட 37 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் அனேகமானவர்கள் வியட்நாமியர்கள் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, தலைகீழாக கவிழ்ந்த படகிற்குள் சிக்குண்டிருந்த 10 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2025/1439820

ஊடகத்திற்கு செய்திகளை வழங்கி வந்த 11 வயது சிறுமி Lama Nasser இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தார்

1 week 6 days ago

பள்ளிகளுக்கு பதில் தந்தையின் கல்லறைகளுக்கு அருகில்; காசா சிறுமிக்கு ஏற்பட்டுள்ள சோக முடிவு

பள்ளிகளுக்கு பதில் தந்தையின் கல்லறைகளுக்கு அருகில்; காசா சிறுமிக்கு ஏற்பட்டுள்ள சோக முடிவு

காசா மக்களின் யதார்த்த வாழ்வை ஆவணப்படுத்தும் விருப்பத்தில், Palestine Chronicle எனும் ஊடகத்திற்கு செய்திகளை வழங்கி வந்த 11 வயது சிறுமி Lama Nasser இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தார்.

கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் தொடங்கிய இஸ்ரேல் காஸா மோதலில் தற்போதுவரை 58,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். தொடர் மோதலால் காஸாவில் 2.3 மில்லியன் குடியிருப்பாளர்கள் பட்டியின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இந்தப்போரில் காஸாவில் நடக்கும் நிகழ்வுகளை உலகுக்குத் தெரிவித்த பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியாகியிருந்த Watson Institute for International and Public Affairs’ Costs of War project எனும் அறிக்கை, காசா மீதான இஸ்ரேலின் போரில் 232 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது. இந்த எண்ணிக்கை மாதத்திற்கு சராசரியாக 13 பத்திரிகையாளர்கள். அதுமட்டுமின்றி, உலகப் போர்கள், வியட்நாம் போர், யூகோஸ்லாவியாவில் நடந்த போர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் போர் என உலகில் நடந்த எந்தப் போர்களையும் விட காஸாவில் நடக்கும் போரில் அதிகளவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.

இதற்கிடையே, குறிப்பாக தொடர்ச்சியாக பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுவதை அடுத்து, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும், காஸா மக்களும் தாங்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை வீடியோக்களாகப் பதிவேற்ற ஆரம்பித்தனர். இதில் குழந்தைகள் பலரும் இணைந்து கொண்டனர். அப்படி துணிச்சலாக குரல் கொடுத்த குழந்தைகளில் ஒருவர்தான் லாமா நாசர் எனும் 11 வயது குழந்தை. இவர் தனது வீடியோக்களில் தனது நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு காஸாவில் நடக்கும் நிகழ்வுகளை உலகிற்கு தெரிவித்து வந்தார். Palestine Chronicle எனும் ஊடகத்திற்கும் செய்திகளை வழங்கி லாமா நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்திருக்கிறார்.

நகரத்தில் உள்ள ஆறு மாடி கட்டிடத்தின் மீது விழுந்த இஸ்ரேலிய குண்டு, அக்கட்டத்தை மொத்தமாக சிதைத்தது. இந்தத் தாக்குதலில் லாமா, அவரது பெற்றோர், அவரது சகோதர சகோதரிகளும் உயிரிழந்தனர்.

Palestine Chronicle ஊடகத்திற்கு கடைசியாக அவர் அளித்த வீடியோவில், “காசா என்பது குழந்தைப் பருவமும் வேதனையும் ஒன்று சேர்ந்த இடம். அங்கு உள்ள சிறுவர்கள், உலகின் மிகக் கடுமையான சூழ்நிலைகளில் ஒன்றில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் ஆக்கிரமிப்பு காரணமாக குழந்தைகள் கடினமான மற்றும் பேரழிவு தரும் சூழ்நிலைகளை கடந்து செல்கின்றனர்.

காசாவில், குழந்தைகள் பட்டினியால் அவதிப்படுகிறார்கள். சாப்பிட உணவு இல்லை. சாப்பிட உணவு இல்லை. மேலும், அவர்கள் தொற்றுநோய்கள், குறிப்பாக போலியோ பரவலால் அவதிப்படுகிறார்கள்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகள் பள்ளிகளையும் பல்கலைக்கழகங்களையும் அழித்ததால், குழந்தைகள் கல்வி கற்கும் உரிமையை இழந்துள்ளனர். குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் தந்தையின் கல்லறைகளுக்கு அருகில் அமர்ந்திருக்கிறார்கள் அல்லது தங்கள் குடும்பங்களுக்கு தண்ணீர் வேண்டி வரிசையில் நிற்கிறார்கள்.

காசாவின் குழந்தைகள் உலகில் உள்ள எந்தக் குழந்தையையும் போலவே அமைதியாக வாழ விரும்புகிறார்கள். இனப்படுகொலையை நிறுத்துங்கள்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

https://thinakkural.lk/article/319073

காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே 'ஒரு விளையாட்டு போல' காயப்படுத்துகிறார்கள் என்று பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்

1 week 6 days ago

காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே 'ஒரு விளையாட்டு போல' காயப்படுத்துகிறார்கள் என்று பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்

ரிச்சர்ட் கில்சீன்

சனி, ஜூலை 19, 2025 காலை 8:01

IDF வீரர்கள் வேண்டுமென்றே காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே 'ஒரு விளையாட்டு போல' காயப்படுத்துகிறார்கள் என்று பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்

காசாவில் உள்ள ஒரு பிரிட்டிஷ் அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவ ஊழியர்கள் "தெளிவான காய வடிவங்களைக்" காண்கிறார்கள் என்றும், IDF வீரர்கள் வாரத்தின் நாளைப் பொறுத்து காசாவில் உள்ள குழந்தைகளை வெவ்வேறு உடல் பாகங்களில் வேண்டுமென்றே சுட்டுக் கொன்று வருவதாகவும் கூறுகிறார்.

பேராசிரியர் நிக் மேனார்ட் பிபிசி ரேடியோ 4 இடம், தானும் தனது சகாக்களும் உதவி விநியோக தளங்களை - முக்கியமாக டீனேஜ் சிறுவர்களை - குறிவைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான சம்பவங்களை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக அனுபவித்ததாக பிபிசி ரேடியோ 4 இடம் கூறினார். இதேபோன்ற காயங்களுக்கு சிகிச்சை தேவை.

“ஒரு நாளில் அவை அனைத்தும் வயிற்று துப்பாக்கிச் சூட்டு காயங்களாக இருக்கும், மற்றொரு நாளில் அவை அனைத்தும் தலையில் துப்பாக்கிச் சூட்டு காயங்களாக இருக்கும், மற்றொரு நாளில் அவை கை அல்லது காலில் துப்பாக்கிச் சூட்டு காயங்களாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.

“இது கிட்டத்தட்ட ஒரு விளையாட்டு விளையாடுவது போல் உள்ளது, அவர்கள் இன்று தலையில் சுட முடிவு செய்கிறார்கள், நாளை கழுத்தில் சுடுவார்கள், மறுநாள் விதைப்பைகளில் சுடுவார்கள்.”

பேராசிரியர் மேனார்டின் கூற்றுகளை திட்டவட்டமாக நிராகரித்து ஐடிஎஃப் பிபிசிக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

IDF soldiers deliberately wounding children in Gaza ‘like a game’, says British doctor

Thu, July 17, 2025 at 3:35 PM GMT+1

Young Palestinians run to collect aid supplies from the US-Israeli Gaza Humanitarian Foundation in Khan Younis, south Gaza

Young Palestinians run to collect aid supplies from the US-Israeli Gaza Humanitarian Foundation in Khan Younis, south Gaza - REUTERS

*This article contains an image of a malnourished infant which some readers may find distressing

Severe malnutrition is spreading in Gaza and aid distributions supposed to stop famine have instead become a “death trap”, a top British surgeon has said.

Professor Nick Maynard, a Oxford-based gastrointestinal surgeon currently in Gaza, added that snipers were deliberately targeting “certain body parts on different days, such as the head, legs or genitals” near US-Israeli run aid distribution points.

Prof Maynard said “unprecedented levels” of severe malnutrition were directly contributing to preventable deaths among patients receiving surgery.

“The malnutrition I’m seeing here is indescribably bad. It’s much, much worse now than a year ago”.

Zainab Abu Haleeb, five-months-old, receives treatment for malnourishment at Nasser hospital in Khan Younis, southern Gaza

Zainab Abu Haleeb, five-months-old, receives treatment for malnourishment at Nasser hospital in Khan Younis, southern Gaza - REUTERS

He added that colleagues he worked with a year ago were barely recognisable, having lost 20-30 kg due to severe food shortages. Critically, he said injured patients were dying because malnutrition was preventing them from healing properly.

“The repairs that we carry out fall to pieces, patients get terrible infections, and they die. I have never had so many patients die because they can’t get enough food to recover,” he said.

Prof Maynard said the Nasser hospital, in Khan Younis, southern Gaza, where he is currently based, had almost completely run out of intravenous liquid fluids, used to treat severely malnourished children. He added that four infants recently died from malnutrition in the neonatal ward.

“I saw a seven-month-old who looked like a newborn. The expression ‘skin and bones’ doesn’t do it justice,” he said.

A woman slumps over in a donkey cart after she was hit in the head with part of a stun grenade at a aid distribution site run by the Gaza Humanitarian Foundation

A woman slumps over in a donkey cart after she was hit in the head with part of a stun grenade at a aid distribution site run by the Gaza Humanitarian Foundation - AP

Prof Maynard added that snipers appear to be targeting body parts including genitals and legs near the controversial US-Israeli Gaza Humanitarian Foundation’s (GHF) food aid collection points in southern and central Gaza

“The medical teams here have also been seeing a clear pattern of people being shot in certain body parts on different days, such as the head, legs or genitals, which seems to indicate deliberate targeting,” said Prof Maynard.

“These are mainly from the militarised distribution points, where starving civilians are going to try and get food but then report getting targeted by Israeli soldiers or quadcopters.”

Local medics have also reported a pattern of snipers targeting Palestinians in the backside, according to the BBC.

GHF, the Israeli-backed American organisation, limits food distribution to four fixed sites in southern and central Gaza, all guarded by private American security contractors and Israeli soldiers, in a move designed to wrest distribution away from aid groups led by the UN.

Israel and the US have been criticised over near-daily shootings near the distribution sites, which have killed 875 Palestinians seeking food since May, according to the UN human rights office.

British surgeon Prof Nick Maynard said he has "never had so many patients die because they can't get enough food to recover"

British surgeon Prof Nick Maynard said he has “never had so many patients die because they can’t get enough food to recover” - Medical Aid for Palestinians (MAP)

Israeli and international news organisations have talked to IDF reservists and a contractor working for GHF who confirmed that civilians were being fired on.

Prof Maynard called the distribution sites “death traps”, saying he has mostly operated on young teenage boys who were trying to retrieve food for their families.

“A twelve-year-old boy I was operating on died from his injuries on the operating table – he had been shot through the chest,” said Prof Maynard.

“The enforced malnutrition and attacks on civilians we are witnessing will kill many more thousands of people if not stopped,” he said, adding that “getting adequate food and aid into Gaza is essential.”

“The fact the world is letting Israel get away with this is deeply upsetting, something must be done to stop this collective punishment of the population of Gaza.”

Palestinians carry aid supplies from the U.S.-backed Gaza Humanitarian Foundation, in Khan Younis, southern Gaza

Palestinians carry aid supplies from the U.S.-backed Gaza Humanitarian Foundation, in Khan Younis, southern Gaza - REUTERS

Gaza’s more than 2 million Palestinians are living through a catastrophic humanitarian crisis, and the territory is teetering on the edge of famine, according to food security experts.

Unrwa, the UN Relief Works Agency for Palestinian Refugees, recently reported one in 10 children brought to its clinics were malnourished, adding that the condition surged amid severe shortages of nutrition supplies.

Doctors Without Borders/Médecins Sans Frontières (MSF), the medical NGO, said their teams are witnessing the highest levels of acute malnutrition ever recorded in two facilities in Gaza.

Numbers of malnutrition in the Gaza City clinic, north of the enclave, almost quadrupled in less than two months, with cases soaring from more than 290 cases in May to over 980 cases at the beginning of July, said MSF.

“This is the first time we have witnessed such a severe scale of malnutrition cases in Gaza,” said Mohammed Abu Mughaisib, MSF deputy medical coordinator in Gaza.

“The starvation of people in Gaza is intentional, it can end tomorrow if the Israeli authorities allow food in at scale.”

https://ca.news.yahoo.com/idf-soldiers-deliberately-wounding-children-162950060.html?guccounter=1

உக்ரைனின் புதிய பிரதமராக யூலியா நியமனம் !

2 weeks ago

உக்ரைனின் புதிய பிரதமராக யூலியா நியமனம் !

19 JUL, 2025 | 11:25 AM

image

உக்ரைனின் புதிய பிரதமராக அந்நாட்டின் துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.

உக்ரைன் - ரஷ்வுக்கிடையிலான யுத்தம் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நிலையில், உக்ரைனின் பிரதமராக இருந்த டெனிஸ் ஷிம்ஹால் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் டெனிஸ் ஷிம்ஹால் பிரதமராக உக்ரைன் வரலாற்றில் மிக நீண்ட காலம் பணியாற்றியவர் ஆவார்.

இந்நிலையில் உக்ரைனின் 19 ஆவது புதிய பிரதமராக, துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ, உக்ரைனின் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கியவர் என்பதுடன் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கு வழிவகுத்த பேச்சுவார்த்தைகளுக்கும் அவர் தலைமை தாங்கினார்.

https://www.virakesari.lk/article/220371

அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா

2 weeks ago

thediplomat-2020-06-26-1.jpg?resize=300%

அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா.

ரஷ்யா -இந்தியா – சீனா இடையிலான முத்தரப்பு உறவை புதுப்பிக்கும் முன்னெடுப்பை ரஷ்யா எடுத்துள்ளது.

அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர், உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனால்,அமெரிக்காவை சமாளிக்க,  ரஷ்யாவுடன் சீனா நெருக்கம் காட்டி வருகிறது. மேலும் பழைய கசப்புணர்வுகளை மறந்து இந்தியாவுடனும் நட்பு பாராட்டுவதற்கான தருணத்தை சீனா எதிர்பார்த்துள்ளது.

அதற்கேற்ப கடந்த 2002ல் நிறுவப்பட்ட ஆர்.ஐ.சி., எனப்படும் ரஷ்யா- இந்தியா- சீனா முத்தரப்பு மன்றத்திற்கு புத்துயிர் அளிக்க, ரஷ்யா முனைப்பு காட்டி வருகிறது.

இந்த முத்தரப்பு மன்றம் தான் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா நாடுகளின் ‘பிரிக்ஸ்’ அமைப்புக்கு அடித்தளம் அமைத்தது.

கடைசியாக, கடந்த 2017 டிசம்பரில் இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களின் 15வது முத்தரப்பு சந்திப்பு நடந்தது. மூன்று நாடுகளும் சர்வதேச அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான பங்களிப்புகளை அடையாளம் காணவும் ஆர்.ஐ.சி.இ வழிவகுத்தது.

ஆனால் 2019ல் வந்த கொரோனா, லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் மோதல் மற்றும் பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவு ஆகிய பிரச்னைகளால், இந்திய – சீன உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்இ சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருடன் பேச்சு நடத்தினார்.

இதையடுத்து, முடங்கியிருந்த மூன்று நாடுகளின் ஆர்.ஐ.சி., முத்தரப்பு உறவுக்கு புத்துயிர் அளிப்பதற்கான பேச்சுகள் மீண்டும் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை எதிர்ப்பதற்கு இந்தியா, ரஷ்யாவின் உதவி தேவை என்பதால், முத்தரப்பு உறவை புதுப்பிக்கும் முயற்சிக்கு சீனாவும் தற்போது முழு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1439632

பிரித்தானியாவில் வாக்களிக்கும் வயதில் மாற்றம்!

2 weeks ago

voting.webp?resize=750%2C375&ssl=1

பிரித்தானியாவில் வாக்களிக்கும் வயதில் மாற்றம்!

பிரித்தானியாவில்  2029 ஆம் ஆண்டின் பாராளுமன்றத்  தேர்தலுக்கு முன்னதாக வாக்களிக்கும்  வயதை 18லிருந்து 16 ஆகக் குறைக்கவுள்ளதாக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது.

ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில்  பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தலைமையில் தொழிலாளர் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த கட்சி ஜூலை 2024 பாராளுமன்றத்  தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, வாக்களிக்கும் வயது குறைக்கப்படும் என உறுதியளித்தது.

இந்நிலையில், வாக்களிப்பதற்கான  வயது வரம்பை 16 ஆக குறைத்து நாடு முழுதும் அமுல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

அந்தவகையில் 16 வயது பூர்த்தியடைபவர்களின் பெயர் தானாகவே வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வசதியையும் அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Athavan News
No image previewபிரித்தானியாவில் வாக்களிக்கும் வயதில் மாற்றம்!
பிரித்தானியாவில்  2029 ஆம் ஆண்டின் பாராளுமன்றத்  தேர்தலுக்கு முன்னதாக வாக்களிக்கும்  வயதை 18லிருந்து 16 ஆகக் குறைக்கவுள்ளதாக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது. ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில்  பிரத...

புனித நீரூற்றை பாதுகாக்க அதானி குழுமத்திற்கு எதிராகப் போராடும் ஆஸ்திரேலிய பழங்குடிகள்

2 weeks 1 day ago

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மாகாணமான மத்திய குயின்ஸ்லாந்தில் வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடி நிலத்தின் தூசி நிறைந்த பகுதியில், 1,300 நாட்களுக்கும் மேலாக, பாரம்பரிய சடங்கு முறைப்படி நெருப்பு எரிந்து வருகிறது.

படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மாகாணமான மத்திய குயின்ஸ்லாந்து

கட்டுரை தகவல்

  • மோனிகா கார்ன்சி & பிபிசி ஐ புலனாய்வுப் பிரிவு‎

  • 17 ஜூலை 2025

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மாகாணமான மத்திய குயின்ஸ்லாந்தில் வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடி நிலத்தின் தூசி நிறைந்த பகுதியில், 1,300 நாட்களுக்கும் மேலாக, பாரம்பரிய சடங்கு முறைப்படி நெருப்பு எரிந்து வருகிறது.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போராட்டத்தின் தளத்தை இந்தச் சுடர் குறிக்கிறது. உள்ளூர்ப் பழங்குடி சமூகத்தின் ஒரு பகுதிக்கும், நாட்டின் சர்ச்சைக்குரிய சுரங்கத் திட்டங்களில் ஒன்றான கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்கத்திற்கும் இடையிலான நீண்டகால மோதலின் மையமாக இந்தப் போராட்டம் அமைந்துள்ளது.

உள்ளூரில் பிராவஸ் என்ற பெயரில் இயங்கும் இந்தியாவின் அதானி குழுமத்திற்குச் சொந்தமான இந்தச் சுரங்கம் சாலையின் மறுபுறம் தான் அமைந்துள்ளது. இது வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) மக்களின் பாரம்பரிய நிலத்தில் அமைந்துள்ளது.

ஏட்ரியன் பர்ரகுப்பா மற்றும் அவரது மகன் கோடி மெக்காவோய், பிராவஸ் சுரங்க நிறுவனத்திற்கு எதிராக நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். அவர்கள் இதை ஓர் ஆன்மீக நிலைப்பாடாகவும், கலாசாரத்தைப் பாதுகாக்கும் போராட்டமாகவும் கருதுகின்றனர்.

"என் நிலத்தில் ஒரு சுரங்கம் என் நாட்டை அழிக்க முயல்கிறது. அந்த நாடுதான் என் வரலாற்றையும், நான் யார் என்பதையும், என் மூதாதையர்கள் பற்றிய அறிவையும் தெரிந்துகொள்ளும் பாதை" என்று கூறுகிறார் ஏட்ரியன்.

இவர்களுடைய போராட்டத்தின் மையத்தில் தூங்கமபுல்லா நீரூற்றுகள் உள்ளன. இது வானவில் பாம்பு முண்டகுட்டாவால் உருவாக்கப்பட்ட புனித இடம் என்று வாங்கன் மற்றும் ஜகலிங்கோ மக்கள் நம்புகின்றனர். பழங்குடிக் கதைகளில் நீர், நிலம் மற்றும் படைப்புடன் தொடர்புடைய சக்தி வாய்ந்த மூதாதையர் என முண்டகுட்டா கருதப்படுகிறார்.

ஹைட்ரோகார்பன் தடயங்கள்

தூங்கமபுல்லா நீரூற்றுகள், வறண்ட நிலத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரு பெரிய நிலத்தடி நீர் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை கலிலி படுகையின் மேல் அமைந்துள்ளன. உலகின் மிகப்பெரிய பயன்படுத்தப்படாத நிலக்கரி இருப்புகளில் ஒன்றுதான் கலிலி படுகை. இது 247,000 சதுர கி.மீ. பரப்பளவில், 30 பில்லியன் டன்களுக்கு மேல் நிலக்கரியைக் கொண்டுள்ளது.

மெல்போர்னில் உள்ள கிரிஃபித் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆஸ்திரேலியாவின் முன்னணி நீர்ப் புவியியலாளர்களில் ஒருவரான பேராசிரியர் மேத்யூ குர்ரெல் உள்பட சில விஞ்ஞானிகள், இந்த இடம் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் பாதிக்கப்படக் கூடியது என்று கூறுகின்றனர்.

"நாங்கள் சில விஷயங்களை கவனித்தோம். அவ்வப்போது அந்த ஊற்று நீரில் ஹைட்ரோகார்பன்கள் கண்டறியப்பட்டன" என்று பல ஆண்டுகளாக அந்தப் பகுதியை ஆய்வு செய்து வரும் கல்வியாளர் குர்ரெல் கூறுகிறார்.

"சுரங்கம் தொடங்கிய பிறகுதான் ஹைட்ரோகார்பன்கள் அதிகமாகிவிட்டன என்றால், அதற்கான காரணத்தை விளக்க வேண்டும். இது சுரங்க நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக இருந்தால், ஊற்று நீரின் தரம் உடனடியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்பதற்கான எச்சரிக்கை இது."

மேலும், "சுரங்கத்தால் ஏற்படும் தாக்கம், அனுமதி அளிக்கப்பட்டபோது கணிக்கப்பட்டதைவிட அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகளை நாங்கள் காண்கிறோம். இதனால், அந்த அனுமதியை முழுமையாக மறு மதிப்பீடு செய்ய வேண்டும்," என்று அவர் வலியுறுத்துகிறார்.

சுரங்க நடவடிக்கைகள், நிலத்தடி நீரில் முதலில் எதிர்பார்த்ததைவிட அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கான பல புதிய சான்றுகள் தற்போது வெளியாகி வருகின்றன.

நிலத்தடி நீரில் முதலில் எதிர்பார்த்ததை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன

படக்குறிப்பு, நிலத்தடி நீரில் முதலில் எதிர்பார்த்ததைவிட இது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கான பல புதிய சான்றுகள் தற்போது வெளியாகி வருகின்றன.

பேராசிரியர் மேத்யூ குர்ரெல் மற்றும் டாக்டர் ஆங்கஸ் கேம்ப்பெல் இணைந்து எழுதி, 2024இல் மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வு, அதானி/பிராவஸின் நிலத்தடி நீர் மாதிரியாக்கம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.

பிராவஸ் இந்தக் கண்டுபிடிப்புகளை நிராகரித்து, ஆய்வின் ஆசிரியர்களில் சிலர் நிலக்கரிக்கு எதிராகப் பிரசாரம் செய்பவர்கள் என்று குற்றம் சாட்டியது. ஆனால், அந்த ஆய்வின் ஆசிரியர்கள் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

கார்மைக்கேல் சுரங்கம் நிலத்தடி நீரில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த அதானியின் பகுப்பாய்வை, ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் முகமை (CSIRO) 2023இல் மதிப்பாய்வு செய்தது. இந்த மதிப்பாய்வு, நடந்து கொண்டிருக்கும் ஒரு நீதிமன்ற வழக்கில் ஆராயப்படும் ஆதாரங்களின் ஒரு பகுதியாக உள்ளது. அதானி குழுமத்தின் மாதிரிகள், நீரூற்றுகளில் சுரங்கத்தின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு "ஏற்றவை அல்ல" என்று அந்த மதிப்பாய்வு முடிவுகள் கூறுகின்றன.

கடந்த 2023இல், அதானி/பிராவஸின் நிலத்தடி நீர் கண்காணிப்புத் தரவுகளை மதிப்பாய்வு செய்த பிறகு, தூங்கமபுல்லா நீரூற்றுகளில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக, அரசு அவர்களின் நிலத்தடி சுரங்கத் திட்டத்தைத் தடை செய்தது.

இந்தத் தடையை எதிர்த்து அதானி நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. சுற்றுச்சூழல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தரநிலைகளை முழுமையாகப் பின்பற்றியதாகவும் அந்நிறுவனம் வலியுறுத்துகிறது.

"நாங்கள் நிலத்தடி நீர் விதிமுறைகளை மீறவில்லை. தற்போது செய்யும் அல்லது எதிர்காலத்தில் செய்ய அனுமதிக்கப்பட்ட சுரங்க நடவடிக்கைகளால் தூங்கமபுல்லா நீரூற்றுக்கு எந்த ஆபத்தும் இல்லை" என்று பிராவஸ் பிபிசிக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"நீரூற்றுகளின் கலாசார, சுற்றுச்சூழல் மதிப்புகளைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்று குயின்ஸ்லாந்து சுற்றுச்சூழல் அமைச்சர் ஆண்ட்ரூ பவல் பிபிசியிடம் தெரிவித்தார்.

பிளவுபட்ட சமூகம்

அட்ரியன் பர்ரகுப்பா மற்றும் அவரது மகன் கோடி மெக்காவோய்

படக்குறிப்பு, ஏட்ரியன் பர்ரகுப்பா, அவரது மகன் கோடி மெக்காவோய் ஆகியோர் சுரங்கம் தங்கள் புனித நீராதாரத்தை அச்சுறுத்துவதாகக் கூறுகின்றனர்.

கார்மைக்கேல் சுரங்கத்திற்கு ஒப்புதல் அளித்த அரசாங்கத்தின் முடிவு, ஆஸ்திரேலியாவை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக இரு துருவங்களாகப் பிரித்துள்ளது.

ஏட்ரியன் பர்ரகுப்பா மற்றும் அவரது குடும்பத்தினர், இந்தச் சுரங்கம் தூங்கமபுல்லா நீரூற்றுகள் போன்ற புனித நீர் ஆதாரங்களை அச்சுறுத்துவதாகக் கூறுகின்றனர். பழங்குடி ஆஸ்திரேலியர்கள் தங்கள் மூதாதையர் தாயகத்தை "நாடு" என்று அழைக்கின்றனர். ஆனால், இந்தச் சுரங்கம், தங்கள் உரிமைகளையும், கலாசாரத்தையும், நிலத்துடனான தொடர்பையும் புறக்கணிப்பதாக அவர்கள் வாதிடுகின்றனர்.

கடந்த 2007இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட பழங்குடி மக்களின் உரிமைகள் குறித்த ஐ.நா. பிரகடனம், "சுரங்கம் போன்ற நில உரிமைகளைப் பாதிக்கும் திட்டங்களுக்கு முன், சுதந்திரமான, முன்கூட்டிய மற்றும் தகவலறிந்த ஒப்புதலைப் பெற வேண்டும்" என்று கூறுகிறது. இது சட்டப்பூர்வமாகப் பிணைக்கப்படவில்லை என்றாலும், மாநிலங்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான உறவில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான ஒரு கட்டமைப்பாக உள்ளது.

கார்மைக்கேல் சுரங்கம், காலநிலை விவாதத்தில் ஒரு முக்கியப் புள்ளியாக உள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களை நடக்கின்றன. அதே நேரம், உள்ளூர் சுரங்க சமூகங்கள் இதற்கு வலுவான ஆதரவு அளிக்கின்றன. குயின்ஸ்லாந்து அரசு, இந்தத் திட்டம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் போன்ற காரணங்களால் அனுமதி வழங்கியது.

ஆஸ்திரேலியா, உலகின் முன்னணி நிலக்கரி உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ளது. கார்மைக்கேல் சுரங்கம், ஆசிய-பசிபிக் பகுதிக்கு நிலக்கரியை ஏற்றுமதி செய்கிறது. இந்தப் பகுதியில் நிலக்கரிக்கான தேவை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பல பொருளாதாரங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நகர்கின்றன.

சுரங்கத் தொழிலாளர்கள் பலர் வசிக்கும் நகரத்தில் 486 மில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாக பிராவஸ் கூறுகிறது. ஆனால் மோசமான பணிச்சூழல் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பத்திரிகையாளர் கிம் நுயென், கார்மைக்கேல் சுரங்கம் தொடர்பான செய்திகளைப் பல ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார். "பாதுகாப்பற்ற தூசி அளவுகளுக்கு மத்தியில் நீண்டகாலமாக இருக்கிறோம், தரமற்ற உள்கட்டமைப்பில் வேலை செய்ய வற்புறுத்தப்படுகிறோம், எங்களுக்கு உள்ள கவலைகளைக் கூறும்போது, அச்சத்துடனேயே பணியிடச் சூழலை எதிர்கொள்கிறோம்" என்று அவரிடம் பேசிய சுரங்கத் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

கலிலி படுகைக்கு மேலே தூங்மாபுல்லா நீரூற்றுகள் அமைந்துள்ளன.

படக்குறிப்பு, உலகின் மிகப்பெரிய பயன்படுத்தப்படாத நிலக்கரி இருப்புகளில் ஒன்றான கலிலி படுகைக்கு மேலே தூங்மாபுல்லா நீரூற்றுகள் அமைந்துள்ளன.

குயின்ஸ்லாந்தின் சுரங்கப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம், 2019 முதல் 2024 வரை 875 பக்கங்கள் மதிப்புள்ள கடுமையான விபத்து அறிக்கைகளை உறுதிப்படுத்தியது. ஆனால், சுரங்கத்தில் நிகழும் சம்பவங்களின் விகிதம் "தொழில்துறை சராசரிகளுடன் ஒத்துப் போவதாகக்" கூறியது.

"எங்களிடம் பூஜ்ஜிய இறப்பு சாதனை உள்ளது. நாங்கள் உயர்வான தரநிலைகளைப் பராமரிக்கிறோம், அனைத்து சட்டங்களையும் கடைபிடிக்கிறோம். மக்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களைக் குறிப்பிடாமலோ அல்லது நேரிலோ குறைகளை எழுப்ப ஊக்குவிக்கிறோம். அவை உடனடியாகத் தீர்க்கப்படுகின்றன" என்று பிராவஸ் பதிலளித்தது.

மாநில அரசு, பழங்குடி மக்களின் ஒப்புதல் இல்லாமல் சுரங்கத்தை அங்கீகரிப்பதாக அறிவித்த பிறகு, 12 வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) குடும்பங்களில் ஏழு குழுக்கள், சமூக நிதிக்கு ஈடாக அதானியுடன் நில ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

"இது குடும்பங்களைப் பிளவு செய்துவிட்டது. நிலம் அழிக்கப்படுவது பற்றி மிகவும் வேதனையாக உணர்கிறேன். ஆனால், நாங்கள் சுரங்கத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டாலும், அவர்கள் எப்படியும் செயல்படுத்தியிருப்பார்கள். அதிலிருந்து எங்களால் என்ன பெற்றுக்கொள்ள முடிந்ததோ அதை பெற்றுக்கொண்டோம்" என்று வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) குழுவைச் சேர்ந்த ஜாக்கி ப்ரோடெரிக் எனும் பெண் கூறுகிறார்.

சிலர் இந்த நில ஒப்பந்தம் மிக உயர்ந்த விலை கொடுத்து வந்ததாக நம்புகின்றனர். "இந்த நாட்டில் சுரங்கம்தான் கடவுள். ஒரே ஒரு சுரங்கம் ஒரு முழு நாட்டையும் பிரித்துவிட்டது" என்கிறார் கோடி மெக்காவோய்.

"புதைபடிவ எரிபொருள் எதிர்ப்பு இயக்கத்தில் ஏட்ரியன் பர்ரகுப்பாவும் அவரது கூட்டாளிகளும் பல ஆண்டுகளாக எங்கள் நிறுவனத்தை இழிவுபடுத்தவும், குயின்ஸ்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய சட்டத்தின்படி, பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் செயல்பட்டு வரும் எங்கள் கார்மைக்கேல் சுரங்கத்தை நிறுத்தவும் முயன்றனர்" என்று ஓர் அறிக்கையில் பிராவஸ் கூறியது.

நில உரிமை கோரிக்கை

வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடி மக்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடி மக்கள் "தண்ணீரில் இருந்து வருவதாகவும்" அதை அடிப்படை ஆதாரமாகக் கருதுவதாகவும் கூறுகிறார்கள்.

கடந்த 1915இல், குயின்ஸ்லாந்தின் பழங்குடியினர் பாதுகாப்புச் சட்டம், பழங்குடி மக்களை அவர்களின் நிலத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற அனுமதித்தது. வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) மக்கள், 1,000 கி.மீ.க்கும் அதிகமான தொலைவுக்கு அனுப்பப்பட்டனர். குடும்பங்கள் பிரிக்கப்பட்டு, பழங்குடி கலாசாரத்தைப் பின்பற்றுவது தடை செய்யப்பட்டது.

நிலத்துடனான நீடித்த தொடர்பை நிரூபித்தால், பழங்குடி மக்களுக்கு வரையறுக்கப்பட்ட நில உரிமைகளை 1993இல், பூர்வீக உரிமைச் சட்டம் வழங்கியது. இதில் சுரங்கத் திட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தும் உரிமையும் அடங்கும்.

கடந்த 2004இல், வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடி மக்கள் பூர்வீக உரிமைக்கான கோரிக்கையைப் பதிவு செய்தனர். இதன் மூலம், அதானி குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் உரிமை பெற்றனர். அதானி குழுமம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு சலுகைகளை வழங்கியது. ஆனால், 2012 மற்றும் 2014இல் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. எனவே, அதானி குழுமம் பழங்குடி ஒப்புதல் இல்லாமல், பூர்வீக உரிமை தீர்ப்பாயத்தின் மூலம் ஒப்புதல் கோரியது.

கடந்த 2021ஆம் ஆண்டு, 17 வருட நீண்ட கால எதிர்பார்ப்புக்குப் பிறகு, வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) சமூகத்தின் பூர்வீக உரிமை கோரிக்கையை ஒரு நீதிபதி நிராகரித்தார். அந்தத் தீர்ப்பால், அவர்கள் எதிர்கால சுரங்க வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான ஆலோசனைகளில் கலந்துகொள்வதற்கும், சுரங்கத் திட்டங்கள் தங்கள் நிலத்தைப் பாதிக்கும்போது இழப்பீடு பெறுவதற்குமான உரிமையை இழந்தனர். அதற்குக் காரணம், அவர்கள் நிலத்துடன் போதுமான தொடர்பு இருப்பதை சட்டரீதியாக நிரூபிக்கத் தவறியதாகக் கூறப்பட்டது.

"ஒரு நீதிபதி இறுதியில், அந்தப் பகுதியில் பூர்வீக உரிமை இல்லை என்று தீர்மானித்தார். இப்போது, அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய, ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றத்தில் 'சிறப்பு அனுமதி' கோர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது," என்று குயின்ஸ்லாந்து தெற்கு பூர்வீக உரிமை சேவையின் தலைவர் டிம் விஷார்ட் கூறினார்.

"இந்தக் கட்டமைப்பு நியாயமானது என்று நான் நினைக்கவில்லை, ஆனால் தற்போது எங்களிடம் இருப்பது இதுதான்" என்றும் அவர் கூறுகிறார்.

தொடரும் சட்டப் போராட்டம்

அட்ரியனும் அவரது குடும்பத்தினரும் தளர்ந்துவிடவில்லை.

படக்குறிப்பு,திவாலானபோதும், நீதிமன்ற இழப்புகள் மற்றும் சொந்த சமூகத்திலேயே பிளவுகள் ஏற்பட்டபோதும், ஏட்ரியனும் அவரது குடும்பத்தினரும் தளர்ந்துவிடவில்லை.

ஏட்ரியன் பர்ரகுப்பா, குயின்ஸ்லாந்து உச்சநீதிமன்றத்தில் நீதித்துறை மறு ஆய்வு வழக்கைத் தொடர்கிறார். கார்மைக்கேல் சுரங்கம், தூங்கமபுல்லா நீரூற்றுகள் போன்ற புனித தலத்தை அச்சுறுத்துவதன் மூலம் வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) மக்களின் மனித உரிமைகளை மீறுவதாக அவர் வாதிடுகிறார்.

இந்த வழக்கு, குயின்ஸ்லாந்து மனித உரிமைச் சட்டத்தின் பிரிவு 28ஐ அடிப்படையாகக் கொண்டது. இது பழங்குடி மக்களின் கலாசாரத்தைப் பின்பற்றுவதற்கும், நிலம் மற்றும் நீருடனான தொடர்பைப் பேணுவதற்குமான உரிமையைப் பாதுகாக்கிறது.

இதுவொரு முன்னுதாரண வழக்காக இருக்கும் என்று ஏட்ரியன் மற்றும் கோடியின் வழக்கறிஞர் அலிசன் ரோஸ் கூறுகிறார். "கலாசாரத்தையும் நாட்டையும் பாதுகாக்க விரும்பும் பிற பூர்வீக மக்களால் பின்பற்றப்படும் ஒரு முக்கியமான வழக்காக இது அமையும்," என்று அவர் குறிப்பிட்டார்.

இது அரசுக்கு எதிராக ஏட்ரியன் தொடுக்கும் நான்காவது வழக்கு. இதில் (இலவச) வழக்கறிஞர்களைப் பயன்படுத்தி இவர் போராடுகிறார். முன்னதாக, ஒரு நீதிமன்ற வழக்கை எதிர்த்துப் போராடியதில், 680,000 டாலர் செலவானதன் காரணமாக பயங்கர நஷ்டத்தைச் சந்தித்தார்.

ஆனால் திவாலான போதும், நீதிமன்ற இழப்புகளைச் சந்தித்தபோதும், சமூகப் பிளவுகள் இருந்தபோதும், ஏட்ரியனும், அவரது மகன் கோடியும், அவர்களது குடும்பமும் மனம் தளரவில்லை.

"நாங்கள் தண்ணீரில் இருந்து வருகிறோம். தண்ணீர் இல்லாமல், நாம் அனைவரும் இறந்துவிடுவோம். நிலம் இல்லாமல், எங்களுக்கு எதுவுமே இல்லை" என்கிறார் ஏட்ரியன்.

இந்த மனித உரிமை வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்தைக் கோரியுள்ளது அரசு. அதன் தீர்ப்பு இன்னும் வெளிவரவில்லை.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cnvm97q6d5go

காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல் - மூவர் பலி

2 weeks 1 day ago

காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல் - மூவர் பலி

Published By: RAJEEBAN

18 JUL, 2025 | 08:02 AM

image

முன்னாள் பாப்பரசர் பிரான்சிஸ் நாளாந்தம் தொடர்பை பேணிய காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

தேவாலயத்தின் பணியாளர் ஒருவரும் தேவாலயத்தின் வளாகத்தில் உள்ள கரித்தாஸ் கூடாரத்தில் உளவியல் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவரும் அவருடன் இருந்த மற்றுமொரு பெண்ணும் கொல்லப்பட்டுள்ளதாக கரித்தாஸ் இன்டநஷனல்ஸ் தெரிவித்துள்ளது.

250717-gaza-church-attack-mb-1123-5bc231

உயிர்தப்புவதை நோக்கமாக கொண்டு தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கரித்தாஸ் இன்டநஷனலின் செயலாளர் நாயகம் அலிஸ்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.

இவர்களின் மரணம் முற்றுகையின் கீழ் பொதுமக்கள் மருத்துவஉதவியாளர்கள் எதிர்கொண்டுள்ள மோசமான நிலையை மீண்டும் நினைவுபடுத்துகின்றது என தெரிவித்துள்ள அவர் ஏற்பட்ட இழப்புகள் குறித்து நாங்கள் துயரடைகின்றோம் சம்பந்தப்பட்ட தரப்பினரை வாழ்க்கையின் புனிதத்தினையும் அதனை பாதுகாப்பதற்கான தளத்தையும் மதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

பத்துபேர் காயமடைந்துள்ளனர் சிலருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளன எறிகணை சிதறல்களால் காயங்கள் ஏற்பட்டுள்ளன என அல் அஹ்லில் அராபிய மருத்துவமனையின் மருத்துவ பணியாளர்ப்ராஹிம்சகல்லா  கார்டியனிற்கு தெரிவித்துள்ளார்.

250717-gaza-church-mb-1235-abdc2d.webp

தேவாலயம் தாக்கப்பட்டதாக மருத்துவமனைக்கு அறிவிக்கப்பட்டதாக சகல்லா கூறினார். "நான் ஆம்புலன்ஸில் ஏறி நேராக தேவாலயத்திற்குச் சென்றேன்" என்று அவர் மேலும் கூறினார். "இந்த இஸ்ரேலியஇராணுவம் திமிர்பிடித்தது - அது கிறிஸ்தவரா அல்லது முஸ்லிம் என்று வேறுபடுத்திப் பார்ப்பதில்லை அது ஒரு தேவாலயமா மசூதியா வீடா அல்லது ஒரு பள்ளியா என்பது கூட கவலையில்லை. நாங்கள் ஒரு கொடூரமான போரின் நடுவே வாழ்கிறோம்.

21 மாத காலப் போரின் போது குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த தேவாலய வளாகத்தையும் ஷெல் தாக்குதல் சேதப்படுத்தியது. 

தேவாலயத்திற்கு அடுத்துள்ள ஒரு பள்ளியில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த 75 வயது கிறிஸ்தவரான அட்டாலா டெர்சி கூறினார்: “நான் சில நிமிடங்கள் வெளியே இருந்த பிறகு வகுப்பறைக்குத் திரும்பியபோது ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. போர் தொடங்கியதிலிருந்து வெடிப்பின் சத்தம் இவ்வளவு தீவிரமாக இருந்தது இதுவே முதல் முறை

ஏப்ரல் மாதம் இறப்பதற்கு முன்பு முன்னாள்பரிசுத்த பாப்பரசர் அர்ஜென்டினாவைச் சேர்ந்த கேப்ரியல் ரோமனெல்லியை ஒவ்வொரு மாலையும் அழைப்பார். ஹமாஸ் இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் காசாவில் பேரழிவுப் போரை தூண்டிய இரண்டு நாட்களுக்குப் பிறகுஇ அக்டோபர் 9 2023 அன்று அவர் வழக்கத்தைத் தொடங்கினார்.

https://www.virakesari.lk/article/220272

ட்ரம்பின் உடல் நிலை குறித்த வெள்ளை மாளிகையின் அறிவிப்பு!

2 weeks 1 day ago

New-Project-225.jpg?resize=750%2C375&ssl

ட்ரம்பின் உடல் நிலை குறித்த வெள்ளை மாளிகையின் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி ‍டெனால்ட் ட்ரம்புக்கு நாள்பட்ட சிரை நோய்  இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை (17) தெரிவித்துள்ளது.

ட்ரம்பின் கைகளில் ஏற்பட்ட காயம் குறித்த ஊகங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அண்மையில் அவரது கால்களில் வீக்கம் ஏற்பட்ட பின்னர் ட்ரம்ப், விரிவான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.

எனினும், பரிசோதனை எப்போது நடந்தது என்பது தெளிவாகக் கூறப்படவில்லை.

இந்த மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் அவருக்கு நாள்பட்ட சிரை பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

New-Project-226.jpg?resize=600%2C338&ssl

79 வயதான அமெரிக்க ஜனாதிபதி, தனது உடல் நல ஆரோக்கியம் தொடர்பில் அடிக்கடி புகழ்ந்து வருகிறார்.

அதில் ஒன்றாக அவர், தன்னை “இதுவரை வாழ்ந்தவர்களில் மிகவும் ஆரோக்கியமான ஜனாதிபதி” என்றும் விவரித்துள்ளார்.

நாள்பட்ட சிரை நோய் என்பது கால்களில் உள்ள நரம்புகளில் ஏற்படும் ஒரு நிலை, இதில் நரம்புகள் வீங்கி, முறுக்கியும், விரிவாக்கப்பட்டும் காணப்படும்.

இது சிரை அடைப்பான் பலவீனமாக இருப்பதன் காரணமாக இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருப்பதால் ஏற்படுகிறது.

இதன் விளைவாக கால்களில் வலி, வீக்கம், மற்றும் அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

இந் நிலைமை உலகளவில் 20 இல் ஒருவரை பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது.

https://athavannews.com/2025/1439616

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வோம் - கொலம்பிய உச்சிமாநாட்டில் இணக்கம்

2 weeks 1 day ago

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வோம் - இஸ்ரேலிற்கு ஆயுதங்கள் வெடிமருந்துகளை வழங்குவதை தடுக்க முயல்வோம் - கொலம்பிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் இணக்கம்

Published By: RAJEEBAN

17 JUL, 2025 | 11:34 AM

image

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்யப்போவதாக கொலம்பியாவில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலிற்கான ஆயுத விநியோகத்தினை தடுக்கப்போவதாகவும இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் தெரிவித்துள்ளன.

gaza_2025_1158.jpg

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான ஆறு நடவடிக்கைகள் குறித்த இணக்கப்பாட்டுடன் கொலம்பிய மாநாடு முடிவடைந்துள்ளது.

  1. கொலம்பிய மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் ஹேக் குழு என  அழைக்கப்படுகின்றன. இந்த குழுவில் பொலிவியா கொலம்பியா இந்தோனேசியா கியுபா ஈராக் மலேசியா உட்பட பல நாடுகள் இடம்பெற்றுள்ளன.

  2. ஆயுதங்கள் வெடிமருந்துகள் இராணுவ எரிபொருள் தொடர்புடைய இராணுவ உபகரணங்கள் மற்றும் இரட்டை பயன்பாட்டு பொருட்களை இஸ்ரேலுக்கு வழங்குவதையோ அல்லது மாற்றுவதையோ தடுப்பது;

  3. இஸ்ரேலுக்கு மேற்கூறிய பொருட்களை எடுத்துச் செல்ல கப்பல் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ள எந்தவொரு துறைமுகத்திலும் கப்பல்களின் போக்குவரத்துஇ நறுக்குதல் மற்றும் சேவையைத் தடுப்பது;

  4. பங்கேற்கும் நாடுகளில் கொடியிடப்பட்ட கப்பல்களில் அத்தகைய பொருட்களை கொண்டு செல்வதைத் தடுத்தல்;

  5. இஸ்ரேலின் பாலஸ்தீன சட்டவிரோத ஆக்கிரமிப்பை ஆதரிப்பதிலிருந்தும் அதன் சட்டவிரோத இருப்பை நிலைநிறுத்துவதிலிருந்தும் பொது நிறுவனங்கள் மற்றும் நிதிகளைத் தடுக்க அனைத்து பொது ஒப்பந்தங்களையும் அவசரமாக மறுஆய்வு செய்யத் தொடங்குதல்.

Gv_mmUwWkAEBca7.jpg

  1. சர்வதேச சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான இஸ்ரேலிய குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான கடமைகளுக்கு இணங்குதல்; மற்றும் பாலஸ்தீனத்தில் செய்யப்படும் சர்வதேச குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கான தேசிய சட்ட கட்டமைப்புகள் மற்றும் நீதித்துறைகளில் உலகளாவிய அதிகார வரம்பு கட்டளைகளை ஆதரித்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக கொலம்பிய மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/220201

தாயின் பாதையில் தனயன் - அங்கோலாவில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்த பகுதி ஊடாக நடந்தார் இளவரசர் ஹரி

2 weeks 1 day ago

17 JUL, 2025 | 10:58 AM

image

அங்கோலாவில் மிகப்பெருமளவில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள பகுதியில் நடந்து சென்றுள்ள பிரிட்டிஸ் இளவரசர் ஹரி சிறுவர்கள் வெளியில் விளையாடுவதற்கு அச்சப்படும் சூழல் நிலவக்கூடாது என தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்கநாட்டிற்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான விஜயத்தினை ஹரி மேற்கொண்டுள்ளார்.

தனது தாயாரின் பாராம்பரியத்தினை தொடர்ந்தும் முன்னெடுக்கும் அவர் இளவரசி டயனாவின் அடிச்சுவடுகளை பின்பற்றியுள்ளார்.

harry_ango.jpg

தனது தாயார் அங்கோலாவிற்கு விஜயம் மேற்கொண்டு 28 வருடங்களின் பின்னர் அந்த நாட்டிற்கு சென்றுள்ள ஹரி நிலக்கண்ணி வெடி ஆபத்து இன்னமும் நிலவும் குயிடோ குவானாவேல் பகுதிக்கு சென்று அங்கு பொதுமக்களை சந்தித்துள்ளார்.

வெளியில் விளையாடுவதற்கோ பாடசாலைக்கு செல்வதற்கோ சிறுவர்கள் ஒருபோதும் அச்சப்படும் நிலை நிலவக்கூடாது என தெரிவித்துள்ள அவர் மூன்று தசாப்தத்தின் பின்னரும் அங்கோலாவில் போரின் எச்சங்கள் அச்சுறுத்துகின்றன என தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டும் இளவரசர் ஹரி டயான விஜயம் மேற்கொண்ட இந்த பகுதிக்கு சென்றிருந்தார். 

1997 இல் இளவரசி டயனா ஹலோ டிரஸ்டுடன் அங்கோலாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் - கார் விபத்தில் அவர் உயிரிழப்பதற்கு ஏழு மாதங்களிற்கு முன்னர் இந்த விஜயத்தினை அவர் மேற்கொண்டிருந்தார்.

harry_ango1.jpg

இரண்டுதசாப்தகால யுத்தத்தின் பின்னர் அமைதி ஏற்பட்டிருந்தவேளை அங்கோலாவில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்த பகுதிகள் ஊடாக பாதுகாப்பு சாதனங்களுடன் டயான நடந்து செல்லும் படம் அவ்வேளை வெளியாகியிருந்தது.

டயனாவின் பரப்புரை நிலக்கண்ணிவெடிகளை ஒழிக்கும் சர்வதேச உடன்படிக்கை சாத்தியமாவதற்கு காரணமாகயிருந்தது -டயனா உயிரிழந்து இரண்டு மாதங்களின் பின்னர் இது கைகச்சாத்திடப்பட்டது.

https://www.virakesari.lk/article/220194

பிரேசில், சீனா மற்றும் இந்தியா மீது 100% வரி விதிக்கப்படலாம்! -மார்க் ருட்டே எச்சரிக்கை

2 weeks 1 day ago

1730135045-WhatsApp-Image-2024-10-28-at-

பிரேசில், சீனா மற்றும் இந்தியா மீது 100% வரி விதிக்கப்படலாம்! -மார்க் ருட்டே எச்சரிக்கை.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படலாம் என நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யா-உக்ரேன் போரை நிறுத்தும் முயற்சியில், அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அடுத்த 50 நாட்களுக்குள் ரஷ்யா போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதில்லை என்றால், ரஷ்யாவுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நாடுகளுடன் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாடுகளுக்கும் அமெரிக்காவின் secondary sanctions அமுல்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக மார்க் ருட்டே, அமெரிக்க செனட் உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின்  கூறியதாவது:

‘பிரேசில், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்கின்றன. போர்நிறுத்தம் ஏற்படாவிட்டால், இந்த நாடுகள் மீது 100% வரி விதிக்கப்படும். எனவே, ரஷ்ய ஜனாதிபதி புதினை அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் ரஷ்யா சந்திக்கும் பாதிப்பை இந்நாடுகளும் சந்திக்க நேரிடும்‘ எனத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1439560

பிரிட்டனின் இரகசிய ஆவணத்தில் உள்ள விபரங்கள் கசிந்த பின்னர் தலிபானால் கொல்லப்பட்டவர்களின் முகங்கள் - டெலிகிராவ்

2 weeks 2 days ago

Published By: RAJEEBAN

17 JUL, 2025 | 10:40 AM

image

பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சின் இரகசிய ஆவணம் கசிந்ததை தொடர்ந்து தலிபானால் கொல்லப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆப்கானின் முன்னாள் படைவீரர்கள் மற்றும் பொலிஸாரின் பெயர்கள் வெளியாகியுள்ளன என டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது

அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படையினருடன் இணைந்து செயற்பட்டவர்களே கொல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து பிரிட்டனின் டெலிகிராவ் மேலும் தெரிவித்துள்ளதாவது.

wEaaVVIp.jpg

பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கப் படைகளுடன் பணிபுரிந்த ஆப்கானியர்களின் அவல நிலையை எடுத்துக்காட்டும் சுயாதீன வழக்குரைஞர்களால் கொல்லப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆப்கானின் முன்னாள் படைவீரர்கள் மற்றும் பொலிஸாரின்  பெயர்கள் தொகுக்கப்பட்டன.

ஆனால் ஒரு மூத்த நீதிபதி விதித்த நீதிமன்ற உத்தரவு இறந்தவர்கள் முதலில் பாதுகாப்பு அமைச்சக பட்டியலில் இடம்பெற்றார்களா என்பதை தி டெலிகிராஃப் செய்தியாக வெளியிடுவதைத் தடுக்கிறது. அந்த பட்டியல் பிப்ரவரி 2022 இல் தற்செயலாக வெளியிடப்பட்டது.

பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சின் இரகசிய ஆவணம்  2022 இல் தங்கள் வசம் வந்ததாகவும், அன்றிலிருந்து அதில் அடையாளம் காணப்பட்டவர்களை வேட்டையாடி வருவதாகவும் தலிபான் கூறுகிறது.

தலிபானின் சிறப்புப் படைகளின் ஒரு பிரிவு - யார்மோக் 60 என அழைக்கப்படுகிறது - அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை டெலிகிராவினால் செய்தியாக வெளியிட முடியும்.

2021 ஆம் ஆண்டு காபூலின் வீழ்ச்சிக்குப் பிறகு பிரிட்டிஷ் துருப்புக்களுடன் பணிபுரிந்த ஆப்கானியர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் நோக்கில் பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகத்தால் நடத்தப்படும் புகலிடத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களின் விபரங்கள் அடங்கிய ஆவணம் கசிந்துள்ளமையே தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

பட்டியலில் உள்ளவர்களில் எத்தனை பேர் தலிபான்களால் அடையாளம் காணப்பட்டனர், கண்காணிக்கப்பட்டு அதன் விளைவாகக் கொல்லப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தரவு மீறலின் விளைவாக யாராவது கொல்லப்பட்டார்களா என்பதை "உறுதியாகக் கூற முடியவில்லை" என்று  பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் ஜோன்ஹீலி புதன்கிழமை ஒப்புக்கொண்டார்.

பட்டியல் கசிந்த பின்னர் கொல்லப்பட்ட ஆப்கானியர்களில் இளவயதினரும் - நடுத்தர வயதினரும் உள்ளனர்.

இவர்கள் ஆப்கானின் பலபகுதிகளில் - சிலர் குடும்பத்தவர்களுடன் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் ஜூன் 24ம் திகதி பொலிஸ் கொமாண்டோ பிரிவை சேர்ந்த கேர்ணல் டுர்ஜான் ஹெல்மண்டில் மசூதியிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தவேளை  குடும்பத்தவர்கள் பலருடன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

turjan.jpg

இதற்கு ஒரு மாதத்தின் பின்னர் மற்றுமொரு முன்னாள் இராணுவவீரர் கோஸ்ட் மாகாணத்தில் தலிபான்களால் கொல்லப்பட்டார்.

ஜூலை 23ம் திகதி ( 2024)அலிசார் மாகாணத்தில் ஹமிதுல்லா கோஸ்டி தலிபான்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் திருமணமொன்றிற்காக அந்த பகுதிக்கு சென்றிருந்தார்.

kosti.jpg

https://www.virakesari.lk/article/220191

சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; மூவர் உயிரிழப்பு, 34 பேர் காயம்!

2 weeks 2 days ago

சிரியா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; மூவர் உயிரிழப்பு, 34 பேர் காயம்!

war-1-780x470.webp

சிரியாவின் பாதுகாப்பு அமைச்சின் தலைமையகம், ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள ஒரு நிலையம், இராணுவ உள்கட்டமைப்பு தளங்கள் என்பவற்றை குறிவைத்து புதன்கிழமை (16) அதிகாலை இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதலை தொடங்கியது.

இந்த தாக்குதல், அண்மைய ஆண்டுகளில் சிரிய தலைநகர் டமாஸ்கஸின் மையப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய நேரடித் தாக்குதல்களில் ஒன்றாகும்.

இந்த தாக்குதல்களின் விளைவாக மூன்று பேர் உயிரிழந்ததாகவும், 34 பேர் காயமடைந்ததாகவும் சிரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலியப் படைகள் மற்றும் சிரிய ஊடகங்கள் இரண்டும் வெளியிட்ட வீடியோ காட்சிகள், மத்திய டமாஸ்கஸில் உள்ள கட்டிடத்தின் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட தருணத்தைக் காட்டுகின்றன.

3 killed, 34 injured as Israel launches new airstrikes on Syrian capital

ட்ரூஸ் போராளிகள் மற்றும் பிரிவினைவாத குழுக்களுக்கு இடையே பல நாட்களாக கொடிய மோதல்களால் பாதிக்கப்பட்ட தெற்கு சிரிய பிராந்தியமான சுவைடாவிற்கு அரசாங்கப் படைகளை அனுப்புவதற்கான கட்டளை மையமாக டமாஸ்கஸ் தலைமையகம் செயல்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளது.

சிரியாவின் தெற்கில் உள்ள சுவைடா பகுதியில், நாட்டின் சிறுபான்மையினரான ட்ரூஸ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வன்முறை அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

வார இறுதியில் ட்ரூஸ் போராளிகளுக்கும் உள்ளூர் பெடோயின் குழுக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.

இதனால் மோதலை அடக்க சிரிய அரசாங்கம் பாதுகாப்புப் படைகளை அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அப்போதிருந்து அரசாங்க ஆதரவுப் படைகளும் மோதலில் இணைந்துள்ளன.

இது பெரும்பாலும் சுவைடாவில் வசிக்கும் ட்ரூஸ் சமூகத்திற்கு மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முதல் வன்முறையில் கிட்டத்தட்ட 250 பேர் உயிரிழந்துள்ளதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு (SOHR) தெரிவித்துள்ளது.

புதன்கிழமை சுவைடா தேசிய மருத்துவமனை தாக்கப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்குள் உள்ள பெரிய ட்ரூஸ் மக்கள்தொகை மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்ஸ் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அரசியல் ரீதியாக உணர்திறன் வாய்ந்த நிலைப்பாட்டைக் கொண்ட ட்ரூஸ் சமூகங்களின் சுய-அறிவிக்கப்பட்ட பாதுகாவலராக இஸ்ரேல் நீண்ட காலமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

மே மாதத்தில், சுவைதாவில் நடந்த வன்முறைக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் டமாஸ்கஸ் மீது மற்றொரு தாக்குதலை நடத்தியது.

சிரிய ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியுள்ள பகுதியை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதல் மூலமாக சிரியாவின் இறையாண்மை அப்பட்டமாக மீறப்பட்டதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு குற்றம் சாட்டியும் இருந்தது.

ட்ரூஸ் இனத்தவர்கள் இஸ்லாத்தின் ஒரு கிளைப் பிரிவைப் பின்பற்றும் ஒரு அரபு சிறுபான்மைக் குழுவாகும்.

பெரும்பாலான ட்ரூஸ் இனத்தவர்கள் சிரியா, லெபனான் மற்றும் இஸ்ரேலில் வாழ்கின்றனர்.

சிரியாவில் 700,000 ட்ரூஸ் இனத்தவர்களும், லெபனானில் 300,000 பேரும், இஸ்ரேலில் 140,000 பேரும் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

https://akkinikkunchu.com/?p=333131

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

2 weeks 2 days ago

New-Project-211.jpg?resize=750%2C375&ssl

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் கடற்கரையில் புதன்கிழமை (16) 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி தீவு நகரமான சாண்ட் பாயிண்டிலிருந்து தெற்கே சுமார் 87 கி.மீ தொலைவில் அமைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

அலாஸ்கா நேரப்படி புதன்கிழமை பிற்பகல் 12:37 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அலாஸ்காவின் கடற்கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

எனினும், பிற்பகல் பிற்பகல் 2:45 மணிக்கு சுனாமி எச்சரிக்கை முற்றிலும் நீக்கப்பட்டது.

நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் குறித்து தெளிவாகத் தெரியவில்லை.

https://athavannews.com/2025/1439478

கனடாவில் கடத்தப்பட்ட சிறிய விமானம்: முடங்கிய விமான சேவை

2 weeks 3 days ago

alleged-aircraft-hijacking-at-vancouver-

கனடாவில் கடத்தப்பட்ட சிறிய விமானம்: முடங்கிய விமான சேவை.

சிறிய ரக விமானமொன்று கடத்தப்பட்டதாக பொலிஸாருக்குக் கிடைத்த  தகவலையடுத்து  கனடாவின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான வென்கூவர் அனைத்துலக விமான நிலையத்தின் செயல்பாடுகள் நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

வென்கூவர் தீவிலுள்ள விக்டோரியா பகுதியில் செயல்படும் விமான நிலையத்தில்  இருந்து புறப்பட்ட சிறிய செஸ்னா வகை விமானமொன்று, கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், கனடாவின் ராயல் மவுண்டட் பொலிஸாருக்கு நேற்று பிற்பகல் 1.10 மணியளவில் தகவல் வழங்கப்பட்டது.

விமானம் வென்கூவர் அனைத்துலக விமான நிலையம் நோக்கி பறந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. விமானத்தில் சந்தேக நபர் ஒருவர் மட்டுமே இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பிற்பகல் 1.45 மணியளவில் குறித்த விமானம் வென்கூவரில் தரையிறங்கியதும், அதிலிருந்த ஒரே பயணியாகக் காணப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

அரசாங்க ஊடகமான CBC வெளியிட்ட புகைப்படங்களில், தரையிறங்கிய செஸ்னா விமானத்தை பாதுகாப்பு வாகனங்கள் முற்றுகையிட்டதைக் காணலாம். குறித்த விமானம் விக்டோரியாவில் உள்ள ஒரு விமான மன்றத்தின் நிர்வாகத்தில் செயல்பட்டு வந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசம்பவத்தால், வென்கூவர் விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதுடன், 9 உள்நாட்டு விமானங்கள் மாற்றுத் திசைகளுக்கு திருப்பிவிடப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இந்நிலையில் இது தொடர்பான தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் கடத்தல் சம்பவங்கள் மிகவும் அபூர்வமாகவே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் கனடாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

https://athavannews.com/2025/1439372

அவுஸ்திரேலியாவில் மாணவர்கள் மின் சிகரட்டுக்களை புகைப்பது குறைவடைந்துள்ளது - ஆய்வில் தகவல்

2 weeks 3 days ago

அவுஸ்திரேலியாவில் தடைக்குப் பின்னர் பாடசாலை மாணவர்கள் மின் சிகரட்டுக்களை புகைப்பது குறைவடைந்துள்ளது - ஆய்வில் தகவல்

Published By: DIGITAL DESK 3

16 JUL, 2025 | 11:49 AM

image

அவுஸ்திரேலியாவில் பாடசாலை மாணவர்களிடையே மின் சிகரட்டுக்கள் புகைப்பது குறைவடைந்து வருவதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு  காரணம்  ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் நெருப்பின்றி புகை பிடிக்கும்  மின் சிகரட்டுக்கள் (vaping) அரசாங்கம் தடை விதித்து சுமார் வருடங்கள் ஆகின்றது.

கடந்த 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில்  14 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களிடையே 17.5% ஆக இருந்த மின் சிகரட்டு பாவனை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 14.6% ஆகக் குறைவடைந்துள்ளதாக ஆஸ்திரேலியாவின் புற்றுநோய் அமைப்பு நடத்திய ஆய்வில் வெளிவந்துள்ளது.

இந்த ஆய்வில் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மின் சிகரட்டுகளை பயன்படுத்தும் விகிதம் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாகக் குறைவடைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இளம் அவுஸ்திரேலியர்களிடையே மின் சிகரட்டுகள் பாவனை விகிதம் அண்மையகாலமாக தலைகீழாக மாறிவிட்டன. கடந்த ஆண்டில் அதிகாரிகள் 10 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத மின் சிகரட்டுகள் கைப்பற்றியுள்ளது என அவுஸ்திரேலிய சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் தெரிவித்துள்ளார்.

"எங்கள் கல்வி மற்றும் தடுப்பு பிரச்சாரங்கள்  மின் சிகரட்டுகள் மற்றும் புகைபிடிப்பதைத் தடுப்பதற்கு மற்றும் நிறுத்துவதற்கு மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/220113

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: ட்ரம்புக்கு ரஷ்யா பதிலடி

2 weeks 3 days ago

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: ட்ரம்புக்கு ரஷ்யா பதிலடி

July 16, 2025 10:32 am

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: ட்ரம்புக்கு ரஷ்யா பதிலடி

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியப்போவதில்லை என ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது.

உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 50 நாள்கள் கெடு விதித்துள்ளார்.

இதற்கமைய ரஷ்யா போரை நிறுத்தாவிட்டால் அந்நாட்டின் மீது 100 சதவீத கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் இந்தக் மிரட்டலுக்கு ரஷ்யா செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பதிலளித்தார்.

” தங்கள் நாடு யாருடைய அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது.” என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

” அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறிய கருத்துக்கள் மிகவும் தீவிரமானவை. குறிப்பாக, சில கருத்துக்கள் ஜனாதிபதி புடினை தனிப்பட்ட முறையில் குறிப்பிடுவதாக தெரிகிறது. யாருடைய இறுதி எச்சரிக்கைகளையும் நாங்கள் பொருட்படுத்தவில்லை . வாஷிங்டனின் கருத்துக்களை பகுப்பாய்வு செய்ய நாங்கள் நேரம் ஒதுக்குவோம். ஜனாதிபதி புடின் அவசியம் என்று கருதினால் நிச்சயமாக பதிலளிப்பார் ” என்று அவர் குறிப்பிட்டார்.

https://oruvan.com/we-gave-in-to-threats-russia-responds-to-trump/

Checked
Sat, 08/02/2025 - 08:39
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe