உலக நடப்பு

புதிய அரசியல் கட்சி : சாதிப்பாரா மஸ்க்?

1 week ago

25 JUL, 2025 | 06:44 PM

image

ஆர்.சேதுராமன்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பராக விளங்கிய, உலகின் முதல்நிலை கோடீஸ்வரர் இலோன் மஸ்க், 'அமெரிக்கா கட்சி' எனும் புதிய அரசியல் கட்சியை ஸ்தாபிக்கப்போவதாக அறிவித்துள்ளார். அந்நாட்டு அரசியலில் மஸ்க்கின்  கட்சி எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது தொடர்பாக விவாதங்கள் எழுந்துள்ளன.

'டெஸ்லா' மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனம், 'ஸ்பேஸ் எக்ஸ்' எனும் ரொக்கெட் தயாரிப்பு மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் 'எக்ஸ்' சமூக வலைதள நிறுவனங்களின் அதிபரான இலோன் மஸ்க், உலகின் முதல்நிலை கோடீஸ்வரராக விளங்குகிறார். அவரின் செல்வ மதிப்பு 400 பில்லியன் டொலர்களுக்கும்  அதிகம் என  மதிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பின் பிரசாரத்துக்காக 277 மில்லியன் டொலர்களை இலோன் மஸ்க் செலவிட்டார்.

அரச வினைத்திறன் திணைக்களத்தின் தலைவராக இலோன் மஸ்க் பதவியேற்ற பின்னர் வெளிநாடுகளுக்கான நிதியுதவிகளை குறைத்தல், அரச நிறுவனங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்தல் உட்பட கடுமையான திட்டங்களை மஸ்க் அறிமுகப்படுத்தினார்.

வெளிநாடுகளுக்கு உதவுவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட அமெரிக்க முகவர் நிறுவனமான 'யூ.எஸ்.எயிட்' நிறுவனத்தையே மஸ்க்கின் ஆலோசனையைடுத்து, ஜனாதிபதி ட்ரம்ப் இழுத்து மூடினார்.

மஸ்க்கின் நடவடிக்கைகளுக்கு  எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அவரின் டெஸ்லா வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன.

அதேவேளை, தனது சிக்கன நடவடிக்கைகள் மூலம் அரசின் செலவுகளை குறைத்த போதிலும், ட்ரம்பின் வரி, செலவின சட்டமூலம் காரணமாக பெருந்தொகை நிதி வீணாகிறது என குற்றம் சுமத்திய மஸ்க், கடந்த மே மாதம் அவர் அரச வினைத்திறன் திணைக்களத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

'ஒரு பெரிய அழகிய சட்டமூலம்' என ஜனாதிபதி ட்ரம்பினால் வர்ணிக்கப்பட்ட மேற்படி சட்டமூலத்துக்கு குடியரசுக் கட்சி காங்கிரஸ் (பாராளுமன்ற) உறுப்பினர்கள் ஆதரவளித்தால் 3 ஆவது அமெரிக்கா கட்சியை ஸ்தாபிக்கப்போவதாக மஸ்க் அறிவித்திருந்தார். அச்சட்டமூலம் ஜூலை 4 ஆம் திகதி காங்கிரஸில் 218 : 214 விகித வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 4 ஆம் திகதி, ஜனாதிபதி ட்ரம்ப் அச்சட்டமூலத்தில் கையெழுத்திட்டார். மறுநாள் 'அமெரிக்கா கட்சியை' (America Party) ஸ்தாபிக்கப்போவதாக இலோன் மஸ்க் அறிவித்தார்.

எனினும், புதிய அரசியல் கட்சியை ஸ்தாபித்து. அதன்  இலக்குகளில் அடைவதில் இலோன் மஸ்க் வெற்றிபெற முடியுமா என்பதில் விவாதங்கள் உள்ளன.

தென் ஆபிரிக்காவில் பிறந்த இலோன் மஸ்க், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது.

தனது 'அமெரிக்கா கட்சி' குறித்த தனது அறிவிப்பையடுத்து, புதிதாக ஸ்தாபிக்கப்படும் கட்சி 2 அல்லது 3 செனட் ஆசனங்களிலும்  8 முதல் 10 பிரதிநிதிகள் சபை ஆசனங்களிலும் கவனம் செலுத்தலாம் என இலோன் மஸ்க் தெரிவித்திருந்தார்.

சர்ச்சைக்குரிய சட்டமூலங்கள் தொடர்பில் தீர்மானகரமான வாக்குகளாக விளங்குவதற்கு இந்த ஆசனங்கள் போதுமானவை என்கிறார் மஸ்க்.

அத்துடன், காங்கிரஸ் தேர்தல்களில் கவனம் செலுத்துவதற்கு தான் முதலில் திட்டமிடுவதாகவும், ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை ஆதரிக்கும் சாத்தியம் நிராகரிக்கப்படக்கூடியதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இடைக்கால தேர்தல்களில் தாக்கம் செலுத்துவது மஸ்கின் திட்டமாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.

இரு கட்சிகள் முறைமை

அமெரிக்காவில் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு கட்சிகளே தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஆனால், அந்நாட்டில் தேசிய ரீதியாகவும், மாநிலங்கள் ரீதியாகவும் பதிவுசெய்யப்பட்ட ஏராளமான கட்சிகள் உள்ளன. 'அமெரிக்கன் கட்சி' (American Party) என்ற பெயரிலும், 1969 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட கட்சியொன்று ஏற்கெனவே உள்ளது. ஆனால், 3 ஆவது கட்சியாக குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்தக்கூடிய கட்சி பலமான எதுவும் இல்லை.

கடந்த பல தசாப்தங்களில், அமெரிக்க கோடீஸ்வரர்கள் பலர் வலுவான 3 ஆவது கட்சியை ஸ்தாபிப்பதற்கு முயன்று வந்தனர். ஆனால், இரு கட்சி ஆதிக்க முறைமையை அவர்களால் அசைக்க முடியவில்லை.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் கடந்த நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய 3 ஆவது கட்சி வேட்பாளர்களாக தியோடர் ரூஸ்வெல்ட், ரொபர்ட் லா பொலெட், ரொஸ் பெரோட் முதலானோர் விளங்குகின்றனர்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தியோடர் ரூஸ்வெல்ட் 1901 முதல் 1909 வரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர்.  அவர் 1912 ஆம் ஆண்டு தேர்தலில் முற்போக்கு கட்சியின் சார்பில் போட்டியிட்டு 27.4 சதவீத வாக்குகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றார்.

1924ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முற்போக்கு கட்சியின் வேட்பாளர் ரொபர்ட் லா பொலெட் 16.6 சதவீத வாக்குகளுடன் 3 ஆம் இடத்தைப் பெற்றார்.

1992ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சுயேச்சையாக போட்டியிட்ட ரொஸ் பெரோட் எனும் கோடீஸ்வரர் 18.9 சதவீத வாக்குகளுடன் 3 ஆம் இடத்தைப் பெற்றார்.

வேர்மன்ட் மாநிலத்தில், செனட்டர் பதவிக்கான தேர்தலில் பேர்னி சான்டர்ஸ் 2006 ஆம் ஆண்டு முதல்  சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றியீட்டி வருகிறார். ஆனால், அவர் சுயேச்சையாக போட்டியிட்டாலும் ஜனநாயகக் கட்சியினரின் ஆதரவு அவருக்கு உள்ளது. செனட் சபைத் தேர்தலில் பேர்னி சான்டர்ஸுக்கு எதிராக ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியதில்லை.

பிரதான கட்சிகளுக்கு சார்பான சட்டங்கள்

அமெரிக்க மாநிலங்களின் சட்டங்கள், இரு பெரிய கட்சிகளுக்கும் சார்பானவை, 3 ஆவது கட்சியொன்று தலைதூக்குவதற்கு அச்சட்டங்கள் சிரமங்களை ஏற்படுத்துகின்றன எனவும் விமர்சனங்கள் உள்ளன.

புதிய அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பது தொடர்பில் அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறான  விதிகளைக் கொண்டுள்ளன.

உதாரணமாக, கலிபோர்னியா மாநிலத்தைப் பொறுத்தவரை, அம்மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் 0.33 சதவீதத்தினரின் அதாவது சுமார் 75,000 பேரின், கையொப்பத்தை சேகரித்தாலேயே புதிய கட்சியொன்று அங்கீகரிக்கப்படும்.

அதன் பின்னர் அங்கீகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு மாநில ரீதியான தேர்தல்களில் குறைந்தபட்சம் 2 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். அல்லது 0.33 சதவீத பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

அமெரிக்காவில் ஒருவர் பெரும் கோடீஸ்வரர் என்பதால் அவர் கட்சி ஆரம்பித்து, தாராளமாக நிதி அளிக்க முடியாது. அதற்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் உள்ளன.

தேசிய ரீதியிலான இலட்சியங்களுடன் அரசியல் கட்சியொன்றை கட்டியெழுப்புவது மேலும் சிரமமானது. அதற்கு அதிக காலமும் தேவைப்படும்.

புதிய கட்சியை ஆரம்பிப்பது தொடர்பாக இலோன் மஸ்க் பேசிவந்த போதிலும், அவர் குடியரசுக் கட்சியினருக்கும் தொடர்ந்து ஆதரவாக உள்ளார். குறிப்பாக, அக்கட்சியில் டொனால்ட் ட்ரம்புக்கு எதிரானவர்களை இலோன் மஸ்க் ஆதரிக்கிறார். ட்ரம்பின் 'பெரிய அழகிய சட்டமூலத்துக்கு' எதிராக வாக்களித்த குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் தோமஸுக்கு உட்கட்சித் தேர்தலில் ஆதரவு வழங்குவதாக மஸ்க் அறிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், இலோன் மஸ்க் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டால் அவரால் சில தாக்கங்களை ஏற்படுத்த முடியும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, குடியரசுக் கட்சியின் ஒரு தரப்பினரை இலோன் மஸ்க் கவரமுடியும். சொற்ப வித்தியாசங்களில் குடியரசு முன்னிலை வகிகக்கூடிய தேர்தல்களில் இலோன் மஸ்க்கின் கட்சி வாக்குகளை உடைக்க முடியும். இது குடியரசுக் கட்சியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அமெரிக்கவரின் குய்னிபியாக் பல்கலைக்கழகம் தேசிய ரீதியில் கடந்த மாதம் நடத்திய கருத்துக் கணிப்பில் 62 சதவீதமான குடியரசுக் கட்சி வாக்காளர்கள் இலோன் மஸ்க்குக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஜனநாயகக் கட்சி வாக்காளர்களிடையே அவருக்கான ஆதரவு வெறும் 3 சதவீதமாகவே இருந்தது.

அதாவது, இலோன் மஸ்க் கட்சி ஆரம்பித்தால் அது, ஜனநாயகக் கட்சியினரைவிட குடியரசுக் கட்சியினருக்குதான் அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இந்நிலையில், ஒரு 3ஆவது கட்சியை ஸ்தாபிப்பது அபத்தமானது என தான் கருதுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளர்.

“குடியரசுக் கட்சியுடன் நாம் பிரமாண்ட வெற்றியீட்டுகிறோம். ஜனநாயகக் கட்சி அதன் இலக்கை தவறவிட்டுள்ளது. ஆனாலும் அது எப்போதும் இரு கட்சி முறைமையாகவே இருக்கும். 3 ஆவது கட்சியை ஸ்தாபிப்பது குழப்பதையே அதிகரிக்கும் என எண்ணுகிறேன்.

“அமெரிக்காவில் 3 ஆவது அரசியல் கட்சி  வெற்றியீட்டியதில்லை என்ற உண்மைக்கு மத்தியிலும் மஸ்க் 3 ஆவது கட்சியை ஸ்தாபிக்க விரும்புகிறார்.  அமெரிக்க முறைமை அவற்றுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பபடவில்லை” என்கிறார் ட்ரம்ப்.

https://www.virakesari.lk/article/220954

பிரிட்டனுடன் கையெழுத்தான வர்த்தகம் ஒப்பந்தம் மூலம் இந்தியா அடையப் போகும் நன்மைகள்

1 week ago

பிரதமர் நரேந்திர மோதி - பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமர்

கட்டுரை தகவல்

  • பிரவீன்

  • பிபிசி செய்தியாளர்

  • 29 நிமிடங்களுக்கு முன்னர்

இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமரும் ஆறு பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் ஜூலை 24ஆம் தேதி கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிரிட்டிஷ் கார்கள் மற்றும் விஸ்கி இந்தியாவில் மலிவாகக் கிடைக்கும். இந்திய உடைகளும் ஆபரணங்களும் பிரிட்டனில் மலிவாகக் கிடைக்கும். இந்தியாவும் பிரிட்டனும் இந்த வர்த்தக ஒப்பந்தத்தால் பயனடையும் என நம்புகின்றன.

ஆனால் இந்த ஒப்பந்தத்தால் யார் அதிக லாபம் அடைவார்கள் என்பதுதான் தற்போது எழுகின்ற கேள்வி.

பிரிட்டன் உடனான வர்த்தக ஒப்பந்தத்தைப் பாராட்டிய பிரதமர் மோதி, இந்த ஒப்பந்தத்தின் உதவியுடன், இந்தியாவின் ஆடைகள், காலணிகள், நகைகள், கடல் உணவுகள் மற்றும் பொறியியல் தொடர்பான பொருட்களை பிரிட்டிஷ் சந்தையில் எளிதாகப் பெற முடியும் என்று கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் காரணமாக, இந்தியர்கள் பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட பொருட்களை அதிக அளவில் பெறுவார்கள் என்றும், மருத்துவ சாதனங்கள் மற்றும் விண்வெளி பாகங்களை மலிவு விலையில் பெற முடியும் என்றும் பிரதமர் மோதி குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், இந்த ஒப்பந்தத்தை பிரிட்டனுக்கு கிடைத்த வெற்றி என்று கூறிய பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர், இதனால் பிரிட்டனில் 2,200க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

அதோடு, பாதுகாப்பு, கல்வி, காலநிலை, தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாட்டு பிரதமர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்தியாவுக்கு என்ன பயன்?

பிரதமர் நரேந்திர மோதி, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிரிட்டன் உடனான வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியா பயனடையும் என்று பிரதமர் மோதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த வாரத் தொடக்கத்தில், மோதி அமைச்சரவை இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் இந்த ஒப்பந்தம் இன்னும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவில்லை. அதே போல் இது நடைமுறைக்கு வருவதற்குக் குறைந்தது ஓர் ஆண்டு ஆகலாம்.

இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய மூன்று ஆண்டுகள் ஆனது.

டெல்லியை சேர்ந்த சிந்தனைக் குழுவான, வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பின்(RIS) இயக்குநர் ஜெனரல் பிஸ்வஜித் தார், பிற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா பிரிட்டனுடன் இந்த ஒப்பந்தத்தில் மிக விரைவாக கையெழுத்திட்டுள்ளது என்று கருதுகிறார்.

ஒப்பந்தத்தை அங்கீகரிக்க மூன்று ஆண்டுகள் ஆனதற்கான காரணத்தை விளக்கிய பிஸ்வஜித் தார், "இந்தியாவில் ஏராளமான சிறு விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளனர். அவர்கள் இந்த வகையான வர்த்தகத்தை சங்கடமானதாக, பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள். இதை விளக்கி அவர்களைச் சமாதானப்படுத்த, அரசுக்கு நிறைய நேரம் எடுக்கும். அதனால்தான் பிற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்ய இந்தியா அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்" என்றார்.

மேலும், "மற்ற பெரிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்ய இந்தியா எடுத்துக் கொண்ட நேரத்துடன் ஒப்பிடும்போது, இந்த வர்த்தக ஒப்பந்தம் மிகக் குறுகிய காலத்தில் செய்யப்பட்டுள்ளது.

பதினெட்டு ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்தியா முயன்று வருகிறது. பெரிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்ய நமக்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது" என்று பிஸ்வஜித் தார் விளக்கினார்.

ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்படும், இவற்றில் துணிகள் மற்றும் காலணிகள் அடங்கும். அதேபோல், இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவு மற்றும் உறைந்த இறால்களுக்கான வரிகளையும் இந்த ஒப்பந்தம் குறைக்கும். இதுதவிர, கார்கள் ஏற்றுமதி மீதான வரிகளும் குறைக்கப்படும்.

இந்த வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவின் மின்சார வாகனங்கள் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களுக்கு பிரிட்டன் சந்தையை அணுகுவதற்கான வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டன் இந்தியாவில் இருந்து சுமார் 11 பில்லியன் பவுண்டுகள் (சுமார் 1,285 பில்லியன் ரூபாய்) மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்கிறது. தற்போது வரி குறைப்பு காரணமாக, பிரிட்டனுக்கான இந்திய ஏற்றுமதி மலிவாகும்.

அதே போல, இந்த வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவில் இருந்து பிரிட்டன் இறக்குமதி செய்வது அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இந்தியா, பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) இரு நாடுகள் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறுகிறார் ஐசிஆர்ஏ (ICRA) லிமிடெட் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் அதிதி நாயர்.

"கடந்த பத்து ஆண்டுகளில் பிரிட்டன் உடனான இந்தியாவின் வர்த்தக உபரி ஓரளவு அதிகரித்துள்ளது. ஜவுளி, உலோகங்கள், விவசாயப் பொருட்கள், மின்சாரம் மற்றும் மின்னணு பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், தோல் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கும்," என்கிறார் அதிதி நாயர்.

அதோடு, "கட்டணக் குறைப்பு காரணமாக இந்திய நுகர்வோர் பயனடைவார்கள். உலோகம், ஆட்டோமொபைல், மருந்துகள், மதுபானங்கள், அழகுசாதனப் பொருட்கள் ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ள இந்தியர்களும் இதன் மூலம் பயனடைவார்கள்" என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிக்குமா?

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், கட்டணக் குறைப்பு, உலோகம், ஆட்டோமொபைல், மருந்துகள், மதுபானங்கள், அழகுசாதனப் பொருட்கள் துறை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்க-வைர நகைகள், துணிகள் மற்றும் தோல் பொருட்களுக்கு பிரிட்டனில் வரி இருக்காது.

"பாஸ்மதி அரிசி, இறால், மசாலாப் பொருட்கள் மற்றும் தேயிலை மீதான இறக்குமதி வரிகளையும் பிரிட்டன் குறைக்கும். இதனால் இந்திய ஏற்றுமதியாளர்களால் பிரிட்டிஷ் சந்தைகளை எளிதாக அணுக முடியும். இந்த வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியா நிறைய நன்மைகளை எதிர்பார்க்கிறது" என்று பிஸ்வஜித் தார் கூறுகிறார்.

"இந்தியாவுடனான ஏற்றுமதியை பிரிட்டன் கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. பொம்மைகள் மற்றும் ஆடைகள் தொடர்பான துறைகளில் இந்தியா பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது."

"இந்தத் துறைகளில் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வேலைவாய்ப்பை அதிகரிக்கும். இதுவே நமது மிகப்பெரிய தேவை. ஏனெனில் வேலைவாய்ப்பு அதிகரிக்காவிட்டால், வருமானம் அதிகரிக்காது" என்று பிஸ்வஜித் தார் விளக்குகிறார்.

இருப்பினும், இந்த ஒப்பந்தத்தால் இந்தியா எவ்வளவு பயனடையும் என்று கூறுவதற்கு சில காலம் தேவைப்படும் என்கிறார் பொருளாதார நிபுணர் ஷரத் கோஹ்லி.

"ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் அதற்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். அங்கு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. அங்குள்ள எதிர்க்கட்சி இதை எதிர்க்கிறது. பிரிட்டனின் பொருளாதார நிலை நன்றாக இல்லை. பொருட்களை வாங்க பணம் இல்லாததால் மக்கள் அங்கு பொருட்களை வாங்குவதில்லை" என்று ஷரத் குறிப்பிடுகிறார்.

சேவைத் துறையில் ஏற்படக்கூடிய மாற்றம் என்ன?

ஐடி துறை, இந்தியப் பிரதமர், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தத்தால் ஐடி துறை பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தால் இரு நாடுகளின் சேவைத் துறையும் பயனடையும் என்று பிரதமர் மோதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

"இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் சேவைத் துறைக்கும், குறிப்பாக தொழில்நுட்பம் மற்றும் நிதித் துறைகளுக்கு பயனளிக்கும். இது வர்த்தகத்தை எளிதாக்குவதோடு, வணிகம் செய்வதற்கான செலவையும் குறைக்கும். இந்த ஒப்பந்தங்கள் இரு நாடுகளிலும் முதலீட்டை அதிகரிக்கும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்" என்று பிரதமர் மோதி கூறியுள்ளார்.

பிரிட்டனின் சேவைத் துறையால், குறிப்பாக ஐடி மற்றும் கல்வித் துறைகளால் இந்தியா பயனடையும் என்கிறார் அதிதி நாயர். இந்தத் துறைகளில் பிரிட்டனின் பங்களிப்புகள், இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் என அவர் நம்புகிறார்.

"இந்திய தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புக் கட்டணங்களில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பிரிட்டனில் உள்ள இந்திய நிறுவனங்களுக்கும் பெரிய நன்மைகள் ஏற்படக்கூடும்," என்று அவர் கூறினார்.

"மூன்று ஆண்டுகளுக்கு சமூகப் பாதுகாப்பு கட்டணங்களில் இருந்து இந்திய தொழிலாளர்களுக்கு விலக்கு அளிப்பது அவர்களின் செலவுகளைக் குறைக்கும். இது அங்கு செல்லும் அல்லது அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு பயனளிக்கும்" என்கிறார் பிஸ்வஜித் தார்.

"பிரிட்டனின் சேவைத் துறை மிகப் பெரியது. சேவைத் துறையில் பணியாற்ற அதிகமான இந்தியர்கள் அங்கு வருவதை பிரிட்டனும் விரும்புகிறது. வர்த்தக ஒப்பந்தம் அங்குள்ள இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும்" என்று அவர் நம்புகிறார்.

பிரிட்டன் பயனடையுமா?

பிரிட்டன், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிரிட்டன் பொருளாதாரம் போராடி வருகிறது

பல ஆண்டுகளுக்குப் பிறகு எட்டப்பட்ட இந்த ஒப்பந்தம், பிரிட்டன் பொருளாதாரத்திற்கு 4.8 பில்லியன் பவுண்டுகள் அதாவது சுமார் ரூ.560 பில்லியன் நன்மை பயக்கும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் நம்புகிறது.

பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, இந்தியா சராசரியாக 15 சதவிதம் வரி விதித்திருந்தது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இது 3 சதவீதமாகக் குறைக்கப்படும்.

வரிக் குறைப்பு காரணமாக, பிரிட்டிஷ் நிறுவனங்கள் இந்தியாவில் வணிகம் செய்ய அதிக வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

முன்னதாக, பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மீது 150 சதவிகிதம் வரி இருந்தது. அது இப்போது 75 சதவிகிதமாகக் குறைக்கப்படும்.

மற்ற வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் விஸ்கியை விற்பனை செய்வதில் பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கு அதிக பயன் கிடைக்கக்கூடும்.

இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் பிரிட்டன் என்ன நன்மையைப் பெறும் என்ற கேள்விக்குப் பதில் அளித்த பிஸ்வஜித் தார், "பொருளாதாரத்தில் இந்தியாவைவிட பிரிட்டன் பின்தங்கியுள்ளது. பிரிட்டன் பொருளாதாரம் முன்னேற வேண்டுமெனில், அது ஒரு பெரிய சந்தையைக் கண்டுபிடிக்க வேண்டும்.

சீனா தவிர, இந்தியா அளவுக்குப் பெரிய சந்தை எதுவும் இல்லை. இதன் மூலம் பிரிட்டன் பல துறைகளில் பயனடையப் போகிறது. அதில் ஒன்று ஆட்டோமொபைல் துறை. அதில் பிரிட்டன் மிகவும் பயனடையும்" எனக் குறிப்பிட்டார்.

வேறு நாடு ஏதேனும் பாதிக்கப்படுமா?

அமெரிக்க அதிபர் டிரம்ப், வர்த்தக ஒப்பந்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, அவர் உலகளாவிய வர்த்தகப் போரைத் தொடங்கி வைத்தார்.

அதன் காரணமாக, இந்தியா, பிரிட்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவாக மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக ஷரத் கோஹ்லி நம்புகிறார்.

"டிரம்ப் தொடங்கிய வர்த்தகப் போரின் விளைவாக, உலகப் பொருளாதாரம் குழப்பத்தில் உள்ளது. அதனால் மற்ற நாடுகள் தங்கள் வர்த்தக ஒப்பந்தங்களை விரைவாக முடிக்கத் தொடங்கியுள்ளன. அமெரிக்கா வழங்கும் அச்சுறுத்தல்களால், தங்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புகளை, மற்ற நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் ஈடு செய்ய முடியும் என்று உலகின் பல நாடுகள் நம்புகின்றன" என்று அவர் கூறினார்.

இந்தியா, பிரிட்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் சீனாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியா, சீனா இடையிலான வர்த்தக உறவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும், ஆனால் பிரிட்டன் உடனான வர்த்தகத்தில் சீனா இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஷரத் கோஹ்லி கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "சீனா, பிரிட்டன் இடையிலான இருதரப்பு வர்த்தகம் இந்தியா, பிரிட்டன் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தைவிட இரு மடங்கு அதிகம். சீனாவில் இருந்து ஏராளமான மலிவு விலைப் பொருட்கள் பிரிட்டனுக்கு செல்கின்றன, அதில் ஆடைகளும் அடங்கும். ஆனால் இந்தியாவில் இருந்து ஆடைகள் மற்றும் காலணி பொருட்கள் பிரிட்டனுக்கு சென்றால், அவற்றுக்கு எந்த வரியும் இருக்காது. எனவே, சீனா கடுமையான சவாலை எதிர்கொள்ளப் போகிறது" என்று விளக்கினார்.

ஆனால், "இது இந்தியா, சீனா இடையிலான வர்த்தகத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. இந்தியா, சீனா இடையிலான வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஒப்பந்தம் நடந்தாலும் நடக்காவிட்டாலும், சீனா உடனான இந்தியாவின் வர்த்தகம் அதிகரித்து வருகிறது" என்று குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3d1dm8e53zo

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கின்றது பிரான்ஸ் - அடுத்தமாதம் அறிவிப்பு

1 week 1 day ago

25 JUL, 2025 | 10:18 AM

image

பாலஸ்தீன தேசத்தை பிரான்ஸ் அங்கீகரிக்கவுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் நியுயோர்க்கில் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் இந்த விடயம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/220895

ரஷ்யாவில் பயணிகள் விமானம் விபத்து! 49 பேர் உயிரிழப்பு!

1 week 1 day ago

world_48624401.jpg?resize=750%2C375&ssl=

ரஷ்யாவில் பயணிகள் விமானம் விபத்து! 49 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம் அருகே திண்டா நகரத்தை நோக்கி சென்ற பயணிகள் விமானத்தில் 5 குழந்தைகள் மற்றும் 6 பணியாளர்கள் உட்பட மொத்தம் 49 பேர் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விமானம் திண்டா விமான நிலையத்தை அண்மித்த போது , அங்காரா ஏர்லைன்ஸ் விமானம் நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் விமானக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதுடன் திடீரென ரேடாரிலிருந்து அந்த விமானம் காணாமல்போனதாக விமான நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழப்பத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து குறித்த விமானம் விபத்துக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டதுடன் அன்டோனோவ் An-24 பயணிகள் விமானத்தில் இருந்த 49 பேரும் உயிரிழந்ததாக அவசரகால அதிகாரிகளை மேற்கோள் காட்டி அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, விமானம் ரேடாரில் இருந்து மறைவதற்கு முன்பு ஒரு துயர சமிக்ஞையை வெளியிடவில்லை அல்லது எந்த தொழில்நுட்ப சிக்கல்களையும் தெரிவிக்கவில்லை என்று அவசரகால அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்தவிமானம் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்புப் பணிகள்  தீவிரமாக இடம்பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1440469

துருக்கியில் காட்டுத் தீ! 10 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு

1 week 1 day ago

edac1200-67f9-11f0-8c3a-352af5639695.jpg

துருக்கியில் காட்டுத் தீ! 10 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு.

துருக்கியின் மத்திய பகுதியில் உள்ள எஸ்கிசெஹிர் மாகாணத்தின் மலைப்பகுதியில் ஏற்பட்ட  காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 14 வீரர்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துருக்கி வனத்துறை அமைச்சர் இப்ராஹிம் யுமக்லி  இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்  “தீ அணைக்கும் பணியின் போது திடீரென காற்றின் திசை மாற்றமடைந்தது. இதனால் மொத்தம் 24 வீரர்கள் தீயில் சிக்கிக்கொண்டனர். அதில் 10 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ளவர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்” எனத்  தெரிவித்தார்.

808x539_cmsv2_46ef897c-4ffe-5c55-9384-b6

தற்போது மத்திய மற்றும் மேற்கு துருக்கியின் ஐந்து பகுதிகளில் காட்டுத் தீ தீவிரமாகப்  பரவி வருகின்றது. அவற்றை கட்டுப்படுத்தும் பணிகளில் வனத்துறையும், தீயணைப்புத் துறையும் முழு அளவில் ஈடுபட்டுள்ளன.

அரசாங்கம், மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்கு தீ பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில பகுதிகளில் மக்கள் பாதுகாப்புக்காக இடம்பெயர்த்தும் வருகின்றனர்.

துருக்கியில் இவ்வாறான காட்டுத் தீயால் ஏற்பட்ட பெரிய உயிரிழப்பு இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டுகளிலும் வறட்சியான காலநிலை, கடும் காற்று, மற்றும் காடுகளில் கருகி விழும் விறகு போன்ற காரணங்களால் தீ பரவல் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1440511

காசாவில் மேலும் 10 பேர் பட்டினியால் மரணம் - உதவிக்காக காத்திருந்த 31 பலஸ்தீனர்கள் பலி

1 week 2 days ago

காசாவில் மேலும் 10 பேர் பட்டினியால் மரணம்

- உதவிக்காக காத்திருந்த 31 பலஸ்தீனர்கள் பலி

sachinthaJuly 24, 2025

6000.jpg?width=465&dpr=2&s=none&crop=non

காசாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் தொடர்புபட்டு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு உதவிக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேலியப் படை நேற்று நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வடக்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களை அதிகரித்திருக்கும் நிலையில், அங்கு குண்டு வீச்சுகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளுக்கு அப்பால் பட்டினியால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

காசாவுக்காக உதவி விநியோகங்களை இஸ்ரேல் முற்றாக கட்டுப்படுத்தி வருவதோடு கடந்த மார்ச் ஆரம்பம் தொடக்கம் அந்தப் பகுதிகளுக்கான உதவிகளை இஸ்ரேல் முற்றாக முடக்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் தொடர்புபட்டு காசா மருத்துவமனைகளில் பத்து பலஸ்தீனர்கள் உயிரிழந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் கடந்த 21 மாதங்களாக நீடிக்கும் காசா போரில் இடம்பெற்ற பட்டினிச் சாவு எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது. இதில் குறைந்தது 80 சிறுவர்கள் உள்ளனர்.

காசாவில் மனிதாபிமான நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதாகவும் பட்டினி மற்றும் தாகம் போர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் காசாவில் உள்ள ஐ.நாவின் பலஸ்தீன அகதிகளுக்கான நிறுவனத்தின் பேச்சாளர் அத்னன் அபூ ஹஸ்னா குறிப்பிட்டுள்ளார். காசாவில் ஒரு மில்லியன் சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

‘நானும் எனது குழந்தைகளும் ஒவ்வொரு நாள் இரவும் பட்டினியுடனேயே படுக்கைக்குச் செல்கிறோம்’ என்று காசாவின் சந்தை விற்பனையாளர் ஒருவர் பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். ‘காசாவில் உள்ள அனைவரும் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர்’ என்றும் அபூ அலா என்ற அந்த விற்பனையாளர் குறிப்பிட்டார்.

தெற்கு காசா நகரின் நாசர் வைத்தியசாலையைச் சேர்ந்த கனடா நாட்டு மருத்துவரான டைட்ரே நுனான், உணவுப் பற்றாக்குறை மருத்துவ பணியாளர்களையும் பாதித்திருப்பதாக தெரிவித்துள்ளார். ‘தமது பணி நேரத்தில் எமது தாதியர்கள் நிற்பதற்குக் கூட பலமில்லாமல் உள்ளனர். மனித உயிர்வாழ்வுக்குத் தேவையான மிக அடிப்படையான தரநிலையைக் கூட இங்கு பூர்த்தி செய்ய முடியவில்லை’ என்று அவர் பி.பி.சி. இற்கு குறிப்பிட்டார்.

இதனிடையே காசாவில் பட்டினி நிலையை எச்சரித்தும் அதற்கு எதிராக அரசுகள் நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்தும் 100இற்கு அதிகமான சர்வதேச தொண்டு அமைப்புகள் மற்றும் மனித உரிமை குழுக்கள் கைச்சாத்திட்ட கூட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

எல்லைகளற்ற மருத்துவ அமைப்பு, சிறுவர்களை பாதுகாப்போம் அமைப்பு மற்றும் ஒக்ஸ்பேம் போன்ற நிறுவனங்களும் கையெழுத்திட்ட அமைப்புகளில் அடங்குகின்றன. காசாவில் உடன் போர் நிறுத்தத்தைக் கொண்டுவந்து ஐ.நா தலைமையிலான உதவிகள் செல்வதற்கு அனைத்து எல்லைகளும் திறக்கப்பட வேண்டும் என்று இந்த கூட்டு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காசாவில் ஐ.நா. தலைமையிலான உதவி விநியோகங்களுக்கு மாற்றாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவில் சர்ச்சைக்குரிய முறையில் உதவிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றபோதும் அங்கு நடத்தப்படும் தாக்குதல்களில் உதவிக்குக் காத்திருந்த பலஸ்தீனர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர்.

தெற்கு காசாவில் இருவேறு உதவி விநியோக நிலைகளில் இடம்பெற்ற இஸ்ரேலிய படைகளின்; தாக்குதல்களில் குறைந்தது 31 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 100இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதில் கொல்லப்பட்ட பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்கள் என மருத்துவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏ.பீ, செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் உதவி விநியோக நிலையம் ஒன்றுக்கு அருகே இடம்பெயர்ந்த குடியிருப்பாளர்கள் ஒன்றுகூடும் இடம் ஒன்றின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 113 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 534 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இஸ்ரேலிய தாக்குதல்களால் இடிந்த கட்டடங்களில் மீட்கப்பட்ட 13 சடலங்களும் இருப்பதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சிவில் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் அம்புலன்ஸ் வண்டிகள் மீட்புப் பணியில் ஈடுபடுவதை இஸ்ரேலியப் படை தடுப்பதன் காரணமாக பலரும் இடிபாடுகளில் சிக்கி உதவிகள் கிடைக்காமல் உயிரிழப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

https://www.thinakaran.lk/2025/07/24/world/142011/காசாவில்-மேலும்-10-பேர்-பட்/

மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினியால் பெரும் துன்பத்தில் காசா - உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர்

1 week 2 days ago

மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினியால் பெரும் துன்பத்தில் காசா - உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர்

Published By: Rajeeban

24 Jul, 2025 | 10:54 AM

image

மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினி நிலையால் காசா துன்பத்தில் சிக்குண்டுள்ளது என உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோல் அதனோம் கெப்ரயேசஸ் தெரிவித்துள்ளார்.

காசாவிற்குள் உணவுப்பொருட்கள் செல்வதை தடுக்கும் மனித செயலால் உருவாக்கப்பட்ட பட்டினியால் காசா துன்பத்தில் சிக்குண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

பெரும்பட்டினி நிலை என இதனை அழைப்பதை தவிர வேறு எப்படி இதனை அழைப்பீர்கள் என எனக்கு தெரியாது,ஆனால் இது மனிதனால் உருவாக்கப்பட்டது அது மிகத்தெளிவான விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கான உணவுவிநியோகம் மக்கள் உயிர்வாழ்வதற்கு தேவைப்படுவதை விட குறைவானதாக காணப்படுகின்றது என உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மிகப்பெருமளவு மக்கள் பட்டினியில் சிக்குண்டுள்ளனர்,காசாவின் போர்க்களத்தில் சிக்குண்டுள்ள 2.1 மில்லியன் மக்கள் குண்டுகள் துப்பாக்கிரவைகளிற்கு அப்பால் மற்றுமொரு கொலைகாரனை எதிர்கொள்கின்றனர் அது பட்டினி என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் தற்போது போசாக்கின்மையால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துவரும் நிலையை பார்க்கின்றோம் என  அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களில் 20 வீதமானவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர், சிலர் மிக மோசமாக என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/220785

அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.

1 week 2 days ago

screenshot2362-down-1753335056.jpg

அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.. மோதலுக்கு காரணமான கோவில் - பின்னணி.
பாங்காக்: தாய்லாந்து - கம்போடியா இடையே இன்று திடீரென்று மோதல் ஏற்பட்டது. இருநாட்டு வீரர்களும் எல்லையில் பயங்கரமாக மோதிக்கொண்டனர். பீரங்கி குண்டுகளால் தாக்கி கொண்ட நிலையில் போர் வெடிக்கிறதா? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலுக்கு கோவில் ஒன்று தான் முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தாய்லாந்தும், கம்போடியாவும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் தாய்லநாந்தின் வடகிழக்குபகுதியில் உள்ள சுரீன் மாகாணத்தில் பிரசாத் தா மவுன் தாம் எனும் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலுக்கு கம்போடியா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த கோவில் விஷயத்தில் தாய்லாந்து - கம்போடியா இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருகிறது. இந்நிலையில் தான் எப்போது வேண்டுமானாலும் இருநாடுகள் இடையே மோதல் வெடிக்கலாம் என்ற நிலை உருவானது. இதையடுத்து தாய்லாந்து சார்பில் எல்லையில் எஃப் 16 ரக போர் விமானங்கள் குவித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் திடீரென்று இருநாடுகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கோவில் விவகாரத்தில் இருநாடுகள் இடையே கடும் மோதல் நடந்தது. இருநாட்டை சேர்ந்தவர்களும் மாறிமாறி தாக்கி கொண்டனர். இருநாட்டு வீரர்களும் பீரங்கி குண்டுகளை வீசினர். இதில் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த மோதல் காரணமாக இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இருநாடுகளும் தங்களின் எல்லைகளை மூடி உள்ளனர். மேலும் தூதரக அதிகாரிகளை வெளியேற தாய்லாந்து, கம்போடியா அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

Read more at: https://tamil.oneindia.com/news/international/clash-erupts-between-thailand-and-cambodia-722881.html

விண்வெளியின் விளிம்புக்கே சென்று குதித்து சாதித்தவர் பாராகிளைடிங் செய்த போது மரணம்

1 week 2 days ago

23 ஜூலை 2025

விண்வெளியின் விளிம்பில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் சாகசம் செய்து உலக சாதனை படைத்த இத்தாலியைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் என்பவர் உயிரிழந்தார்.

56 வயதான இவர், கிழக்கு மார்ச்சே பகுதியில் உள்ள போர்டோ சாண்ட் எல்பிடியா என்ற கிராமத்தின் அருகே பாரா-கிளைடிங் செய்து கொண்டிருந்த போது திடீரென விபத்து ஏற்பட்டு, உணவகம் ஒன்றின் நீச்சல் குளத்தில் விழுந்து உயிரிழந்தார்.

இது குறித்து, போர்டோ சாண்ட் எல்பிடியா கிராமத்தின் மேயர் மிஸிமில்லியானோ சியார்பெல்லா, வானில் பறக்கும் போது இவருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றார்.

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கூட விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2012ம் ஆண்டு 1,28,000 அடி உயரத்தில் பூமியின் வளிமண்டலத்தின் மேலடுக்கில் (stratosphere) இருந்து குதித்து, மிக உயரமான ஸ்கை டைவிங் சாதனையை நிகழ்த்தி பிரபலமானார் பாம்கார்ட்னர்.

ஆஸ்திரியாவை சேர்ந்த இவர் மணிக்கு 1,342 கிமீ வேகத்தில் ஸ்கைடைவிங் செய்த ஒலியின் வேகத்தை முந்தி சாதனை புரிந்தவரும் இவர்தான்.

தனது அசாத்திய சாகசங்களால் 'பயமறியா ஃபெலிக்ஸ்' (Fearless Felix) எனப் போற்றப்பட்டார்.

1999ல் ரியோ-டி-ஜெனிரோவில் உள்ள உலகின் உயரம் குறைந்த பேஸ் ஜம்பில் இருந்து 98 அடி உயரத்திற்கு குதித்து சாதனை படைத்துள்ளார்.

அதே ஆண்டில் மலேசியாவின் பெட்ரோனாஸ் டவரில் இருந்து குதித்ததன் மூலம், 'உலகிலேயே பாராசூட்டில் இருந்து மிக உயரமாக குதித்த நபர்' என்ற சாதனையை தன்வசப்படுத்தினார்.

வான்வெளியில் இருந்து குதித்து அசாத்திய சாதனையை நிகழ்த்தியபின் பாம்கார்ட்னர் கூறியதாவது "உலகின் உச்சியில் நிற்கும்போது நீங்கள் மிகவும் அடக்கமாக மாறிவிடுவீர்கள். சாதனைகளை முறியடிக்கவோ, அறிவியல் ஆய்வுகளை தகர்க்கவோ நினைக்க மாட்டீர்கள். உயிரோடு திரும்பினால் போதும் என்றே தோன்றும்" என்றார்.

'இவர் மறைந்தாலும், வலிமை மற்றும் கம்பீரத்தின் மறுஉருவமாக அறியப்படுவார்' எனக்கூறி இவரின் கிராம மக்கள் உருக்கமாக அஞ்சலி செலுத்தினர்.

சமூக வலைதளங்களில் இவரின் பாரா-கிளைடிங் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cp8mgdrp12no

"உணவுக்காக சொர்க்கத்திற்கு செல்ல விரும்பும் குழந்தைகள்" - பரவும் பட்டினிநிலை குறித்து மனிதாபிமான அமைப்புகள் எச்சரிக்கை

1 week 2 days ago

"ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரே கேள்வி மீண்டும் மீண்டும் காசாவில் எதிரொலிக்கின்றது; இன்று எனக்கு உணவு கிடைக்குமா ?; உணவுக்காக சொர்க்கத்திற்கு செல்ல விரும்பும் குழந்தைகள்" - பரவும் பட்டினிநிலை குறித்து மனிதாபிமான அமைப்புகள் எச்சரிக்கை

Published By: RAJEEBAN

23 JUL, 2025 | 12:54 PM

image

காசாவின் பல பகுதிகளிற்கு பட்டினிநிலை பரவ ஆரம்பித்துள்ளது என நூற்றிற்கும் மேற்பட்ட மனிதாபிமான அமைப்புகள் கூட்டாக எச்சரித்துள்ளன.

சேவ் த சில்ரன் எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு உட்பட பல சர்வதேச அமைப்புகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன.

பாலஸ்தீனியர்கள் நம்பிக்கை மற்றும் மனவேதனையின் பிடியில் சிக்குண்டுள்ளனர். அவர்கள் யுத்தநிறுத்தம்  மற்றும் மனிதாபிமான உதவிகளிற்காக காத்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் காலையில்  முன்னரை விட மோசமான நிலையிலேயே கண்விழிக்கின்றனர் என சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் சேவ் த சில்ரன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

gaza_aid_2025_july.jpg

இஸ்ரேலிய அரசாங்கத்தின் முற்றுகை தற்போது காசா மக்களை பட்டினியால் வாட்டிவதைக்கும் நிலையில் மனிதாபிமான பணியாளர்களும் பட்டினிகிடப்பவர்களின் பட்டியலில் இணைந்துகொள்கின்றனர்.

தங்கள் குடும்பத்தவர்களிற்கு உணவை பெறுவதற்கான முயற்சியில் சுடப்படும் ஆபத்தை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

மனிதாபிமான உதவிகள் தற்போது முற்றாக முடிவடைந்துள்ள நிலையில் தங்களின் பணியாளர்கள் வலுவிழப்பதை மனிதாபிமான அமைப்புகள் கண்முன்னால் பார்க்கின்றன.

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள காசா மனிதாபிமான அமைப்பின் மனிதாபிமான பொருட்களை விநியோகிக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்து இரண்டு மாதங்களின் பின்னர் 109 சர்வதேச அமைப்புகள் பரவும் பட்டினி நிலை குறித்து எச்சரிப்பதுடன் உலக நாடுகளை பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றன.

காசாவிற்கான அனைத்து தரைவழிப்பாதையையும் திறவுங்கள்.

உணவு, சுத்தமான நீர், மருந்துகள், எரிபொருள் போன்றவற்றின் விநியோகம்  கொள்கை ரீதியிலான ஐநா பொறிமுறை மூலம் மீள இடம்பெறுவதை உறுதி செய்யுங்கள்.

முற்றுகையை முடிவிற்கு கொண்டுவந்து யுத்த நிறுத்தத்திற்கு இணங்குங்கள்.

ஒவ்வொரு நாள் காலையிலும் ஓரே கேள்வி மீண்டும் மீண்டும் காசாவில் எதிரொலிக்கின்றது - இன்று எனக்கு உணவு கிடைக்குமா? என்பதே அது என்கின்றார் மனிதாபிமான அமைப்பின் பிரதிநிதியொருவர்.

உணவு விநியோகம் இடம்பெறும் பகுதிகளிற்கு அருகில் நாளாந்தம் படுகொலைகள் இடம்பெறுகின்றன. ஜூலை 13ம் திகதி வரை உணவுதேடும்போது 875 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐநா உறுதி செய்துள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இதற்கிடையில் இஸ்ரேலியப் படைகள் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் சோர்வடைந்த பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச்செய்துள்ளன.

gaza_foodddd.jpg

ஜூலை 20 அன்று வெளியிடப்பட்ட மிக சமீபத்திய  இடம்பெயர்வு உத்தரவு பாலஸ்தீனியர்களை காசாவின் மொத்த நிலப்பரப்பில் 12 வீதத்திற்குள் மட்டுப்படுத்துகின்றது. தற்போதைய சூழ்நிலை காசாவில் செயற்படுவதை சாத்தியமற்றதாக்குகின்றது என உலக உணவு திட்டம் தெரிவிக்கின்றது.

போர் தந்திரோபாயமாக பொதுமக்களை பட்டினி போடுவது ஒரு போர்க்குற்றமாகும்

காசாவிற்கு வெளியே களஞ்சியங்களிலும் காசாவிற்குள்ளேயும் பெருமளவு உணவுப்பொருட்கள் குடிநீர் போன்றவை பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளன. மனிதாபிமான அமைப்புகள் அவற்றை விநியோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது தடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் தாமதங்கள் போன்றவை பெரும் குழப்பம், பட்டினி, உயிரிழப்பு போன்றவற்றை உருவாக்கியுள்ளது.

உளவியல் சமூக ஆதரவை வழங்கும் ஒரு உதவி பணியாளர் குழந்தைகள் மீதான பேரழிவு தாக்கத்தைப் பற்றிப் பேசினார்: "குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புவதாகச் சொல்கிறார்கள் ஏனென்றால் குறைந்தபட்சம் சொர்க்கத்திலாவது உணவு இருக்கிறது."

குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களிடையே கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு வரலாறு காணாத அளவில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடுமையான நீர் சார்ந்த வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவி வருகின்றன, சந்தைகள் காலியாக உள்ளன கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. பெரியவர்கள் பசி மற்றும் நீரிழப்பால் தெருக்களில் சரிந்து விழுகின்றனர். காசாவில் சராசரியாக ஒரு நாளைக்கு 28 லாரிகள் மட்டுமே விநியோகிக்கப்படுகின்றன. இது இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு போதுமானதாக இல்லை அவர்களில் பலர் வாரக்கணக்கில் உதவி இல்லாமல் தவிக்கின்றனர்.

gaza_aid_11111111111111111.jpg

ஐ.நா தலைமையிலான மனிதாபிமான அமைப்பு தோல்வியடையவில்லை அது செயற்படுவது தடுக்கப்பட்டுள்ளது - தடுக்கப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/220714

உடனடி தலையீடு இல்லாவிட்டால் காசாவில் இறுதியாக உள்ள ஊடகவியலாளர்கள் உயிரிழப்பார்கள் - ஏஎவ்பி

1 week 2 days ago

"என்னிடம் இனிமேலும் ஊடக பணியில் ஈடுபடுவதற்கான வலு இல்லை, எனது உடல் மெலிந்து விட்டது ; காசாவிலிருந்து ஒரு ஊடகவியலாளர் " - உடனடி தலையீடு இல்லாவிட்டால் காசாவில் இறுதியாக உள்ள ஊடகவியலாளர்கள் உயிரிழப்பார்கள் ஏஎவ்பி

Published By: RAJEEBAN

23 JUL, 2025 | 11:17 AM

image

காசாவில் எஞ்சியுள்ள ஊடகவியலாளர்கள் மரணிக்கும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் என ஏஎவ்பி ஊடகவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உடனடிதலையீடு இல்லாவிட்டால் காசாவில் இறுதியாக உள்ள ஊடகவியலாளர்கள் உயிரிழப்பார்கள்  என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

 யுத்தத்தின் கோரபிடியில் சிக்குண்டுள்ள காசாவிற்கு வெளிநாட்டு பத்திரிகையாளர்கள்  செல்வதற்கு இஸ்ரேல் அனுமதி மறுத்து வரும் நிலையில் ரொய்ட்டர்ஸ் ஏஎவ்பி போன்ற நிறுவனங்கள் காசாவில் உள்ள உள்ளுர் பத்திரிகையாளர்களையே செய்திக்காக நம்பியுள்ளன.

21 மாதமோதலில் 60000 பேர் உயிரிழந்துள்ள காசாவில் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு மற்றும் பட்டினி போன்றவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காசாவில் ஊடகவியலாளர்களின் நிலை குறித்து ஏஎவ்பியின் ஊடகவியலாளர்கள் குழுவொன்று பலவிடயங்களை தெரிவித்துள்ளது.

காசாவில் உள்ள மோசமான நிலை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் அங்குள்ள சுயாதீன செய்தியாளர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல மாதங்களாக அவர்களின் வாழ்க்கை மிக மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருப்பதை நாங்கள் வேறுவழியின்றி பார்த்துக்கொண்டிருந்தோம் என ஏஎவ்பி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

அவர்களிடம் துணிச்சல்,தொழில்முறை அர்ப்பணிப்பு,மீள் எழுச்சி தன்மை இருந்தபோதிலும் அவர்களின் நிலைமை தற்போது தாங்க முடியாததாக மாறியுள்ளது என ஏஎவ்பி தெரிவித்துள்ளது.

என்னிடம் இனிமேலும் ஊடக பணியில் ஈடுபடுவதற்கான வலுஇல்லை,எனது உடல் மெலிந்து விட்டது  என்னால் முடியவில்லை என காசாவில் உள்ள ஏஎவ்பியின் புகைப்படப்பிடிப்பாளர் பசார் சமூக ஊடக செய்தியொன்றை பதிவு செய்துள்ளார்.

பசார் 2010 முதல் ஏஎவ்பிக்காக பணியாற்றிவருகின்றார்,கடந்த பெப்ரவரி முதல் அவர் தனது குடும்பத்தவர்களுடன்  இடிந்த வீட்டில் வசித்து வருகின்றார்.தனது சகோதரர் ஒருவர் பட்டினியால் உயிரிழந்துவிட்டார் என அவர் தெரிவித்தார் என ஊடகவியலாளர்கள் குழு தெரிவித்துள்ளது.

gaza_journalists_2222222222222.jpg

பத்திரிகையாளர்கள் ஏஎவ்பியிடமிருந்து மாத சம்பளம் பெறுகிறார்கள், ஆனால் விலை அதிகரிப்பினால் அவர்கள் போதியளவு உணவுப்பொருட்களை வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.

மற்றொரு ஏஎவ்பி  ஊழியரான அஹ்லம் ஒரு நிகழ்வைச் செய்தி சேகரிக்க அல்லது ஒரு நேர்காணலைச் செய்ய தனது தங்குமிடத்தை விட்டு வெளியேறும் ஒவ்வொரு முறையும் "நான் உயிருடன் திரும்பி வருவேனா என்று எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார். உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறைதான் அவரது மிகப்பெரிய பிரச்சினை என்று அவர் கூறினார்.

1944 ஆம் ஆண்டு  ஏஎவ்பி நிறுவப்பட்டதிலிருந்து "நாங்கள் மோதல்களில் பத்திரிகையாளர்களை இழந்துள்ளோம் சிலர் காயமடைந்துள்ளனர் மற்றவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். ஆனால் எங்களில் யாரும் சக ஊழியர்கள் பசியால் இறப்பதைப் பார்த்ததை நினைவில் கொள்ள முடியாது" என்று .ஏஎவ்பியின் ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அவர்கள் இறப்பதைப் பார்க்க நாங்கள் மறுக்கிறோம்"  என்று ஏஎவ்பியின் ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

2024 இல் காசாவிலிருந்து அதன் ஊடகவியலாளர்கள் வெளியேறியதிலிருந்து ஏஎவ்பி சுயாதீன ஊடகவியலாளர் மூன்று படப்பிடிப்பாளர்கள் ஆறு சுயாதீன வீடியோ படப்பிடிப்பாளர்களுடன் காசாவில் பணிபுரிகின்றது. ஏபி ரொய்ட்டரின் ஊடகவியலாளர்களும் தங்களின் காசா சகாக்களின் நிலை குறித்து கரிசனை வெளியிட்டுள்ளனர்.

காசாவில் உள்ள எங்கள் ஊழியர்களைப் பற்றி நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம் மேலும் அவர்களுக்கு ஆதரவளிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்" என்று அசோசியேட்டட் பிரஸ்ஸின் செய்தித் தொடர்பாளர் லாரன் ஈஸ்டன் கூறினார். "தரையில் என்ன நடக்கிறது என்பது குறித்து உலகிற்குத் தெரியப்படுத்த எங்கள் குழு தொடர்ந்து செய்து வரும் பணி குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்."

https://www.virakesari.lk/article/220700

இஸ்ரேலிய படையினர் எங்கள் பணியாளர்களை ஆடைகளை களைந்து சோதனையிட்டதுடன் கைதுசெய்துள்ளனர் - உலக சுகாதார ஸ்தாபனம்

1 week 3 days ago

22 JUL, 2025 | 01:26 PM

image

இஸ்ரேலிய படையினர் தனது பணியாளர்களை ஆடைகளை களைந்து  சோதனையிட்டதுடன் கைதுசெய்துள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் குற்றம்சாட்டியுள்ளது.

இஸ்ரேல் தனது பண்டகசாலை மீது விமானதாக்குதலை மேற்கொண்டது என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் தனது பணியாளர்களின் வீடுகளையும் இலக்குவைத்தது, இதனால் பெரும் சேதமேற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

பெண்களும் குழந்தைகளும் மோதல் இடம்பெறும் பகுதியை நோக்கி கால்நடையாக வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

டெய்ர் அல்பலாவில் இஸ்ரேல் மேற்கொண்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆண்பணியாளர்கள் அவர்களது குடும்பத்தவர்களை கைதுசெய்து அவர்களிற்கு கைவிலங்கிட்ட இஸ்ரேலிய படையினர் அந்த இடத்தில் வைத்தே அவர்களது ஆடைகளைந்து விசாரணை செய்தனர் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாவது

GwaRFKJW4AAWI4F.jpg

காசாவின் நடுப்பகுதியில் உள்ள டெய்ர் அல் பலாவில்உலக சுகாதார ஸ்தாபன ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீதான தாக்குதல்கள்இ அங்கு தங்கியிருந்தவர்களை தவறாக நடத்துதல் மற்றும் அதன் முக்கிய  பண்டகசாலை அழிக்கப்பட்டதை WHO வன்மையாகக் கண்டிக்கிறது

இஸ்ரேலிய இராணுவத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய வெளியேற்ற உத்தரவுக்குப் பிறகு டெய்ர் அல் பலாவில் அதிகரித்த மோதலை தொடர்ந்து உலக சுகாதார ஸ்தாபன ஊழியர்களின் வீடு  மூன்று முறை தாக்கப்பட்டது. வான்வழித் தாக்குதல்கள் தீ மற்றும் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியதால் குழந்தைகள் உட்பட ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் கடுமையான ஆபத்தில் இருந்தனர் மற்றும் அதிர்ச்சியடைந்தனர்.

இஸ்ரேலிய இராணுவம் வளாகத்திற்குள் நுழைந்து தீவிர மோதல்களுக்கு மத்தியில் பெண்களையும் குழந்தைகளையும் அல்-மவாசி நோக்கி கால்நடையாக வெளியேற கட்டாயப்படுத்தியது.

ஆண் ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கைவிலங்கு போடப்பட்டு ஆடைகளை அவிழ்த்து சம்பவ இடத்திலேயே விசாரித்து துப்பாக்கி முனையில் சோதனை செய்யப்பட்டனர். இரண்டு ஊழியர்கள் மற்றும் இரண்டு குடும்ப உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். மூன்று பேர் பின்னர் விடுவிக்கப்பட்டனர் அதே நேரத்தில் ஒரு ஊழியர் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/220613

காசா விவகாரம்: இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உலக நாடுகள் !

1 week 4 days ago

3509637.jpg?resize=600%2C375&ssl=1

காசா விவகாரம்: இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த உலக நாடுகள் !

காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற முக்கிய நாடுகள் போரை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு  வலியுறுத்தி வருகின்றன.

குறிப்பாக காசாவின் முக்கிய நட்பு நாடுகளாகக் கருதப்படும் ஐக்கிய இராச்சியம்,பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள், இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.

நிலைமை சீராகாவிட்டால் ‘தக்க  நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இந்த நாடுகள் எச்சரித்துள்ளதாகத் தெரிகிறது.

அதேசமயம்  அமெரிக்கா, இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடாக இருந்தாலும், காசாவில் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து வருகின்றார்.

காசா போர் 21 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த மோதலில் 57,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும்,1,700க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பல உலக நாடுகள், இந்த மனிதாபிமான பேரழிவை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தங்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரி வருகின்றன. காசாவில் ஒரு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால், பிராந்தியத்தில் அமைதி திரும்புவது கடினம் என்பதே சர்வதேச சமூகத்தின் பொதுவான கருத்தாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1440098

காசாவில் உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் கூட கொல்லப்படுகின்றனர் - உலக நாடுகள் கடும் கண்டனம் - யுத்தத்தை நிறுத்துமாறு வேண்டுகோள்

1 week 4 days ago

காசாவில் உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் கூட கொல்லப்படுகின்றனர் - உலக நாடுகள் கடும் கண்டனம் - யுத்தத்தை நிறுத்துமாறு வேண்டுகோள்

22 Jul, 2025 | 11:25 AM

image

காசா யுத்தம் தொடர்பில் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ள 25 நாடுகள்  யுத்தத்தை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரிட்டன் ஜப்பான் கனடா அவுஸ்திரேலியா உட்பட 25 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

காசா மக்களின் துயரங்கள் முன்னர் இல்லாத அழவிற்கு தீவிரமடைந்துள்ளன  என தெரிவித்துள்ள அவர்கள்அடிப்படை தேவைகளான உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் உட்பட  பொதுமக்கள் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்படுவதையும்,மிகச்சிறிய அளவில் மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதையும் கண்டித்துள்ளனர்.

மனிதாபிமான உதவி பொருட்களை பெற முயன்ற 800 பொதுமக்கள் கொல்லப்பட்டமை பயங்கரமானது என தெரிவித்துள்ள 25 நாடுகளும் இஸ்ரேலிய அரசாங்கம் மனிதாபிமான உதவியை வழங்குவதற்கு பயன்படுத்தும்முறை ஆபத்தானது இது ஸ்திரமின்மையை உருவாக்குவதுடன் காசா மக்களின் மனிததன்மையை பறிக்கின்றது என தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/220603

பொருளாதார ரீதியில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியானது!

1 week 4 days ago

images-4.jpg?resize=300%2C168&ssl=1

பொருளாதார ரீதியில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியானது!

2025ஆம் ஆண்டின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 20  நாடுகளின் தரவரிசைப்  பட்டியலை Forbes  எனப்படும் பிரபல சஞ்சிகை  வெளியிட்டுள்ளது.

உலகின் சக்திவாய்ந்த நாடுகளுக்கான போட்டி – பொருளாதார வலிமை,மக்கள் தொகை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.

அந்தவகையில்  1 ஆவது இடத்தில் அமெரிக்காவும், 2 ஆவது இடத்தில் சீனாவும், 3 ஆவது இடத்தில் ஜேர்மனியும்  , 4 ஆவது இடத்தில் இந்தியாவும், 5 ஆவது இடத்தில் ஜப்பானும், 6 ஆவது இடத்தில் பிரித்தானியாவும், 7 ஆவது இடத்தில் பிரான்ஸும், 8 ஆவது இடத்தில் இத்தாலியும், 9 ஆவது இடத்தில் கனடாவும், 10 ஆவது இடத்தில் பிரேஸிலும்  உள்ளமை குறிப்பிடத்தக்கது.

list.jpg?resize=600%2C573&ssl=1

https://athavannews.com/2025/1440070

அமெரிக்க விசாவுக்கு மேலதிகமாக 250 டாலர்கள் அறவிட தீர்மானம்.

1 week 4 days ago

டிரம்ப் நிர்வாகத்தின் சமீபத்தில் இயற்றப்பட்ட உள்நாட்டு கொள்கை மசோதாவில் உள்ள ஒரு விதியின்படி, சர்வதேச பார்வையாளர்கள் தற்போதுள்ள விசா விண்ணப்ப செலவுகளுடன் சேர்த்து குறைந்தபட்சம் $250 புதிய "விசா நேர்மை கட்டணம்" செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரும்.

அமெரிக்காவிற்குள் நுழைய குடியேறாத விசாக்களைப் பெற வேண்டிய அனைத்து பார்வையாளர்களுக்கும் இந்தக் கட்டணம் பொருந்தும். இதில் பல ஓய்வு மற்றும் வணிகப் பயணிகள், சர்வதேச மாணவர்கள் மற்றும் பிற தற்காலிக பார்வையாளர்கள் அடங்குவர். 2024 நிதியாண்டில், வெளியுறவுத்துறை புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்கா கிட்டத்தட்ட 11 மில்லியன் குடியேறாத விசாக்களை வழங்கியது.

https://www.cnn.com/2025/07/21/travel/visa-integrity-fee-usa-international-travelers

இது நடைமுறைக்கு வந்தால் மற்றைய நாடுகளும் இதனைப் பின் பற்றலாம்.

ஏற்கனவே இங்கிலாந்து இடைத்தங்கலுக்கு 15-20 டாலர்கள் அறவிடுவதாக சொன்னார்கள்.

உணவுவிநியோகம் இஸ்ரேலால் முடக்கம் - காசாவில் பட்டினியால் நான்கு வயது சிறுமி மரணம்

1 week 4 days ago

Published By: RAJEEBAN

21 JUL, 2025 | 02:26 PM

image

இஸ்ரேல் உணவு விநியோகத்தினை முடக்கியுள்ள நிலையில் காசாவில் பட்டினியால் நான்குவயது சிறுமி உயிரிழந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நான்கு வயது ரஜான் அபு ஜகெர் உயிர்வாழ்வதற்கான தனது போராட்டத்தினை முடித்துக்கொண்டுள்ளாள்.

பட்டினி மற்றும் மந்தபோசாக்கினால் ஏற்பட்ட பாதிப்புகளால் இந்த சிறுமி மத்திய காசாவில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

gaza_child_2025_july.jpg

2023 ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் காசாவில் 76 சிறுவர்கள் மந்தபோசாக்கினால் உயிரிழந்துள்ளனர் என காசாவின் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மார்ச் மாதம் இஸ்ரேல் உணவுவிநியோகத்தை தடை செய்த பின்னரே மந்தபோசாக்கு பட்டினியால் அனேக மரணங்கள் இடம்பெற்றுள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு நாட்களில் உயிரிழந்த சிறுவர்களில் ரசானும் ஒருவர் .மூன்று மாத குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் காசாவில் பட்டினி காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள காசாவின் சுகாதார அமைச்சு இது அந்த பகுதியில் நெருக்கடி நிலை மேலும் மோசமடைவதை  வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ரசானை சிஎன்என் ஒரு மாதத்திற்கு முன்னர் சந்தித்தது, அவ்வேளை அவள் ஏற்கனவே பட்டினியால் பலவீனமானவளாக உடல் மிகவும் மெலிந்தவளாக காணப்பட்டாள்.

சிறுமியின் தாயார் தஹிர் அபு டகெர் பால்மா வேண்டுவதற்கு தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்திருந்தார்.

யுத்தத்திற்கு முன்னர் அவளது உடல்நிலை சிறப்பானதாக காணப்பட்டது, ஆனால் யுத்தம் ஆரம்பித்த பின்னர் மந்தபோசாக்கு காரணமாக அவளின் உடல்நிலை மோசமடைய தொடங்கியது, அவளை வலுப்படுத்துவதற்கு எதுவுமில்லை என தாயார் தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/220540

ஜப்பான் மேற்சபை தேர்தல் - பெரும்பான்மையை இழந்தது ஆளும் கட்சி

1 week 5 days ago

ஜப்பான் மேற்சபை தேர்தல் - பெரும்பான்மையை இழந்தது ஆளும் கட்சி

21 Jul, 2025 | 10:57 AM

image

ஜப்பானின் மேற்சபையில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது அந்த நாட்டு அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் பிரதமர் சிகேரு இசிபா பதவி விலகும் எண்ணம் எதுவுமில்லை என தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் விலைகள் அமெரிக்காவின் வரி அதிகரிப்பு குறித்த அச்சுறுத்தல் போன்றவற்றினால் ஆளும்கட்சி மீது அதிருப்தியில் உள்ள மக்கள் ஞாயிற்றுக்கிழமை மிகவும் கடுமையான போட்டி நிலவிய தேர்தலில் வாக்களித்தனர்.

248 உறுப்பினர்கள் கொண்ட மேற்சபையில் தனது கட்டுப்பாட்டை தக்கவைப்பதற்கு ஆளும் கட்சிக்கு 50 ஆசனங்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த கட்சி 47 ஆசனங்களை மாத்திரம் பெற்றுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான அரசமைப்பு ஜனநாயக கட்சி 22 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.மேற்சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆறுவருடங்கள் .

ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் ஏற்கனவே பெரும்பான்மையை இழந்துள்ள நிலையிலேயே ஆளும் கட்சி மேற்சபையிலும் பெரும்பான்மையை இழந்துள்ளது.

இதேவேளை மிகவும்கடுமையான தேர்தல் முடிவை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வதாக 68 வயது பிரதமர் சிகேரு இசிபா தெரிவித்துள்ளார்.

நீங்கள் தொடர்ந்தும் பிரதமராகவும் கட்சி தலைவராகவும் நீடிப்பீர்களா என்ற கேள்விக்கு ஜப்பான் பிரதமர் ஆம் அது சரியானது என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/220518

லொஸ் ஏஞ்சல்ஸில் நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம்

1 week 5 days ago

Published By: DIGITAL DESK 3

20 JUL, 2025 | 05:24 PM

image

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டா நோக்கி புறப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸின் போயிங் 767-400 ரக பயணிகள் விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானம் புறப்பட்ட பின் அதன் இடதுப்புற இயந்திரத்தில் தீப்பிடித்ததால் அவ்விமானம் மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸிலேயே அவசரமாகத் தரையிறங்கியது.

விமானி அவசரநிலையை அறிவித்ததையடுத்து, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறை, விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்ப வழிகாட்டியது.

தரையிறங்கியதும் தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாண்டு டெல்டா விமானத்தில் இயந்திரம் தீப்பிடிப்பது இது இரண்டாவது முறையாகும்.

https://www.virakesari.lk/article/220484

ஜெய்சங்கரின் சீன பயணம் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கு சொல்லும் சேதி என்ன?

1 week 5 days ago

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜூலை 13 அன்று சீனாவிற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜூலை 13 அன்று சீனாவிற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டார்.

20 ஜூலை 2025, 04:53 GMT

புதுப்பிக்கப்பட்டது 20 ஜூலை 2025, 04:58 GMT

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த வாரம் சீனா சென்றார். அங்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உள்பட உயர்மட்ட அதிகாரிகளையும் ஜெய்சங்கர் சந்தித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், இருநாட்டு உறவுகளை மீண்டும் வலுப்படுத்த முயற்சிக்கும் காலகட்டத்தில் ஜெய்சங்கரின் சீன பயணம் அமைந்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தது குறித்து பெரும் விவாதம் நடைபெற்று வரும் வேளையில், ஜெய்சங்கரின் பயணம் பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.

இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது பாகிஸ்தானை சீனா வெளிப்படையாக ஆதரித்ததோடு மட்டுமல்லாமல் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கியதாக தகவல்கள் வெளியாயின. இந்த சூழலில், இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு ஜெய்சங்கர் சீனா சென்றது எந்தளவுக்கு சரியானது?

சீனாவுடன் நெருக்கமாவதன் மூலம் அமெரிக்காவுடனான உறவில் சமநிலையை பராமரிக்க இந்தியா விரும்புகிறதா? தெற்காசியா மற்றும் மற்ற வளர்ந்து வரும் நாடுகளில் சீனாவின் செல்வாக்கு இந்தியாவை விட பெரிதா?

பிபிசி ஹிந்தியின் 'தி லென்ஸ்' எனும் வாராந்திர நிகழ்ச்சியில் கலெக்டிவ் நியூஸ்ரூமின் இயக்குநர் (இதழியல்) இந்த விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.

ராஜிய விவகாரங்கள் நிபுணர் ஷ்ருதி பாண்ட்லே, சர்வதேச அரசியல் பேராசிரியர் புஷ்ப் அதிகாரி மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தின் கிழக்காசிய ஆய்வுகள் துறையின் துணை பேராசிரியர் முனைவர் ராஜிவ் ரஞ்சன் ஆகியோர் இந்த விவாதத்தில் கலந்துகொண்டனர்.

புதிய அத்தியாயத்தின் தொடக்கமா? அல்லது ஒரு அடையாள பயணமா?

கடந்தாண்டு அக்டோபர் மாதம் ரஷ்யாவின் கஸான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி இருவரும் சந்தித்துக்கொண்டனர். 2020ம் ஆண்டு எழுந்த பதற்றத்துக்குப் பிறகு இருவரும் சந்தித்துக் கொண்டது அதுவே முதல் முறையாகும்.

அதன்பின், சீனாவுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. கடந்த ஜூலை மாதம், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரும் பெய்ஜிங் சென்றனர். அங்கு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

எஸ். ஜெய்சங்கர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தற்போது ஜெய்சங்கர் சீனா சென்ற நிலையில் இருநாட்டு உறவுகளை மீட்டமைப்பதற்கான நடவடிக்கை இது என சிலர் கூறுகின்றனர். அதேசமயம், இது வெறும் அடையாள பயணம் என்றும் சிலர் கூறுகின்றனர்.

இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்கான நேர்மையான முயற்சியாக இந்த பயணத்தை பார்க்க வேண்டும் என ஷ்ருதி பாண்ட்லே நம்புகிறார்.

ஷ்ருதி பாண்ட்லே கூறுகையில், "அமெரிக்க அதிபர் எடுக்கும் முடிவுகளால் உலகம் முழுவதும் ஒரு நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. இப்போது உருவாகி வரும் உறவுகளில் நாடுகடந்த தேசியவாதம் பங்காற்றுகிறது என்பதை இந்தியா புரிந்துகொண்டுள்ளது. முன்பு, பிரச்னைகளை தீர்க்க சில நாடுகள் ஒன்றாக இணைந்துள்ளன. முன்பு, சீனாவை சமாளிப்பது ஒரு பிரச்னையாக இருந்தது. ரஷ்யாவை சமாளிப்பது பெரிய பிரச்னையாக இருந்தது. இப்போது, டிரம்பின் முடிவுகளை சமாளிப்பது பிரச்னையாக உள்ளது. எனவே, ஜெய்சங்கரின் பயணத்தை இந்த பார்வையுடனும் அணுக வேண்டும்." என்றார்.

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே சுமார் 3,000 கி.மீ நீள எல்லை உள்ளது. அப்பகுதியில் ஆறுகள், ஏரிகள் மற்றும் பனி சூழ்ந்த பகுதிகள் இருப்பதால் எல்லைக் கோடு தெளிவாக இல்லை. இதனால். இருநாட்டு படையினருக்கும் அவ்வப்போது மோதல்கள் ஏற்படுகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மற்றும் சீனா மீது இறக்குமதி வரிகளை அறிவித்தார். சீனா அதை வெளிப்படையாக எதிர்த்தது, ஆனால் இந்தியா பேச்சுவார்த்தையை தேர்ந்தெடுத்தது.

இந்தியாவின் முன்னுரிமைகள் என்ன?

சர்வதேச அரசியல் பேராசிரியர் புஷ்ப் அதிகாரி இந்த கேள்விக்கு பதிலளிக்கையில், "எல்லைப் பிரச்னை தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் டொனால்ட் டிரம்ப். அமெரிக்க அதிபரின் கொள்கைகள், இந்தியா-சீனாவை ஒன்றாக இணைத்துள்ளன." என்றார்.

"இரு நாடுகளுக்கு இடையே உள்ள நம்பிக்கை எந்தளவுக்கு செல்லும் என்பதை பார்க்க வேண்டும். அமெரிக்கா இந்தியாவை இருதரப்பு வர்த்தகத்துக்கு அழைத்து, ரஷ்யா மற்றும் சீனா உட்பட பிரிக்ஸ் (BRICS) நாடுகளிடமிருந்து விலகி இருக்குமாறு கூறுவதற்கான சாத்தியம் உள்ளது. டிரம்பின் வார்த்தைகளை இந்தியா ஏற்றுக்கொண்டால், சீனாவுடனான உறவு வெகுதூரம் செல்லாது என நினைக்கிறேன். ஜெய்சங்கரின் முயற்சிகள் சிறப்பானவை, ஆனால் அதன் முடிவு வெகுவிரைவில் ஏற்படாது."

எஸ் ஜெய்சங்கர், ஷி ஜின்பிங்

பட மூலாதாரம்,X/DR S JAISHANKAR

படக்குறிப்பு, கல்வான் மோதலுக்குப் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜெய்சங்கர் முதல் முறையாக சீனாவுக்கு பயணம் செய்தார்.

பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷ்யாவுக்கு இந்தியா சொல்லும் சேதி என்ன?

இந்தியாவின் சர்வதேச அரசியல் குறித்த விவாதத்தையும் இந்த பயணம் எழுப்பியுள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் சீனாவுக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன என, எதிர்க்கட்சியான் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லி பல்கலைக் கழகத்தின் கிழக்காசிய ஆய்வுகள் துறையின் இணை பேராசிரியர் முனைவர் ராஜிவ் ரஞ்சன் கூறுகையில், "வெளியுறவு அமைச்சர் சீனாவுக்கு சென்றிருக்காவிட்டால், இந்தியாவின் விருப்பங்கள் வேறு எங்காவது பாதிக்கப்பட்டிருக்கலாம். எஸ்.சி.ஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிராக வெளியுறவு அமைச்சர் குரல் எழுப்பியிருந்தார். அவர் அங்கு சென்றிருக்காவிட்டால், இத்தகைய கருத்தை எழுப்பியிருக்க முடியாது. இந்தியா அதில் பங்கேற்காமல் இருந்திருந்தால், அந்த தளத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியிருக்கக் கூடும். 2026-ம் ஆண்டில் பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. நீங்கள் (இந்தியா) மறுத்தால், சீன தலைமையும் இந்தியாவுக்கு வருவதற்கு மறுக்கலாம்." என கூறினார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் உச்சகட்டத்தில் இருந்தபோது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருநாட்டுக்கும் இடையே அமைதியை ஏற்பத்தியதாக சமூக ஊடகத்தில் அறிவித்தார். பாகிஸ்தான் அதற்காக டிரம்புக்கு நன்றி தெரிவித்தாலும், மோதல் நிறுத்தத்தில் டிரம்பின் பங்கு இருப்பதாக கூறியதை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும், சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும் என, டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

ஷ்ருதி பாண்ட்லே கூறுகையில், "இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை இருநாட்டு விவகாரம் என, அமெரிக்காவிடம் இந்தியா தொடர்ந்து கூறிவந்தது. அதேபோன்று, சீனாவுடனான உறவையும் இருநாட்டு உறவாக தொடர இந்தியா விரும்பியது. எந்தவொரு மூன்றாவது தரப்பும் இருநாட்டு உறவை பாதிக்க முடியாது என வெளியுறவு அமைச்சர் தெளிவாக கூறினார். இங்கு, மூன்றாவது தரப்பு பாகிஸ்தானுடன் தொடர்புடையது. டிரம்பின் கொள்கைகளால் இந்தியா தன்னுடைய கொள்கைகளை மாற்ற வேண்டியுள்ளது. சீனா மற்றும் அமெரிக்கா இடையே சமநிலையை பேணுவது இந்தியாவின் நலனுக்கானதாகும்." என தெரிவித்தார்.

இந்தியா ஒரு பன்முக உலகம் பற்றிப் பேசுகிறது. இந்த சூழலில், ஜெய்சங்கரின் சீன பயணத்தை மற்ற நாடுகள் எப்படி பார்க்கின்றன?

பேராசிரியர் புஷ்ப் அதிகாரி கூறுகையில், "ரஷ்யா-சீனா-இந்தியா என முத்தரப்பு கூட்டணியை செயல்படுத்த வேண்டும் என விரும்புவதாக ரஷ்யாவிலிருந்து செய்தி வெளியானது. இப்போது இந்தியா இதற்கு ஏதாவது பதில் சொல்ல வேண்டும், ஏனெனில் இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமாக செல்கிறது. தங்கள் கூட்டாளியை தேர்ந்தெடுப்பதில் இப்போது இந்தியா சவாலை எதிர்கொள்ள வேண்டும். இதுகுறித்து அமெரிக்காவிடமிருந்து நிச்சயம் அறிக்கை வரலாம். இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அறிய நாம் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்." என்றார்.

இந்தியா முன்னுள்ள சவால்கள்

நரேந்திர மோதி, ஷி ஜின்பிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடந்த ஆண்டு அக்டோபரில், பிரதமர் நரேந்திர மோதியும் அதிபர் ஷி ஜின்பிங்கும் ரஷ்யாவின் கஸானில் சந்தித்தனர்.

ராஜீய ரீதியில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான உறவுகள் இயல்பானதாக இருப்பதாக தோன்றினாலும், களத்தில் இருநாடுகளுக்கிடையே அடிப்படையான மற்றும் நிரந்தரமான சவால்கள் பல உள்ளன. கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இருநாட்டு உறவில் பதற்றம் அதிகரித்தது, அது தற்போது வரை முழுமையாக தீர்க்கப்படவில்லை.

பாகிஸ்தானுடனான சீனாவின் நெருக்கம் மற்றும் பெல்ட் அண்ட் ரோட் போன்ற திட்டங்கள் இந்தியாவின் பாதுகாப்பு கவலைகளை அதிகரித்துள்ளன. அதேநேரம், அமெரிக்காவுடனான இந்தியாவின் ஒத்துழைப்பு மற்றும் குவாட் (Quad) அமைப்பில் அங்கம் வகிப்பது போன்ற காரணிகள் சீனாவை அசௌகரியமாக்குகின்றன.

இந்தியா-சீனாவின் வர்த்தகத்தில் பெரும் சமநிலையின்மை நிலவுகிறது. இந்தியா சீனாவிடமிருந்து ஏராளமான பொருட்களை இறக்குமதி செய்கிறது, ஆனால் வெகுசில பொருட்களையே சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது.

இந்த சமநிலையின்மை குறித்துப் பேசிய ஷ்ருதி பாண்ட்லே, "இதே விவகாரங்கள் குறித்து வெளியுறவு அமைச்சரும் குரல் எழுப்பியுள்ளார். நீங்கள் பேச்சுவார்த்தையை விரும்புகிறீர்கள், ஆனால் எங்கள் பிரச்னைகளையும் கேளுங்கள் என அவர் பேசியுள்ளார். உண்மையில் சீனாவுடன் எதுவுமே எளிது அல்ல. இந்தியா சீனாவுடன் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தையில் உள்ளது." என தெரிவித்தார்.

தலாய் லாமா இந்தியாவில் இருப்பது குறித்தும் திபெத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்தும் சீனா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், பிரமபுத்திரா ஆற்றின் மீதான சீனாவின் நடவடிக்கைகள் குறித்து இந்தியா மிகவும் கவலைகொண்டுள்ளது.

அப்படியான சூழலில், இருநாட்டு உறவை மேம்படுத்த இந்தியா எதில் கவனம் செலுத்த வேண்டும்?

இந்த கேள்விக்கு பதிலளித்த பேராசிரியர் புஷ்ப் அதிகாரி, "சீனாவுடன் உறவை மேம்படுத்த பல்வேறு சர்வதேச விவகாரங்களில் இந்தியா தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். இந்தியாவும் சீனாவும் இரு வெவ்வேறு நாகரிகங்கள், ஆனால் ஒன்றாக வளரும் நாடுகள். எதிர்காலத்தில் இரு நாடுகளும் தங்கள் உறவுகளை வலுப்படுத்தினால், இரு நாடுகளும் இணைந்து அமெரிக்காவின் அழுத்தத்தைக் குறைக்கலாம். பிராந்திய அளவில் சிறப்பான ஒத்துழைப்பு இருந்தால்தான் எந்த தவறான புரிதலும் ஏற்படாது என்பதுதான் மிக முக்கியமான விஷயம். இது நடந்தால், இரு நாடுகளும் நல்ல நண்பர்களாக முடியும்." என கூறினார்.

பேராசிரியர் ராஜிவ் ரஞ்சன் கூறுகையில், இந்தியாவும் சீனாவும் முதலில் நிலைத்தன்மையில் கவனம் செலுத்தி உறவை வலுப்படுத்த வேண்டும் என்றார்.

அவர் கூறுகையில், "முதலாவதாக, ஒரு உறவில் நிலைத்தன்மை அவசியம். இரண்டாவதாக, நீண்ட காலமாக நிலவும் எல்லைப் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். மூன்றாவதாக, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானையும் கவனிக்க வேண்டும். இந்த மூன்று விஷயங்களுக்கும் இந்தியாவும் சீனாவும் கவனம் செலுத்தினால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு சிறந்த திசையில் நகரும்." என்றார்.

வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் சீனா சென்றது, இருநாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தையை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதற்கான அறிகுறியாக உள்ளது. எனினும், பரஸ்பர நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை இரண்டும் நிரந்தர தீர்வு ஏற்படுவதில் பெரிய சவால்களாக உள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c70xl1rrrjqo

Checked
Sat, 08/02/2025 - 08:39
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe