3 months 1 week ago
கரையைக் கடந்த பிறகும் புயலாகவே நீடிக்கும் 'மோன்தா' - 8 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை பட மூலாதாரம்,IMD படக்குறிப்பு,ஆந்திராவில் கரையைக் கடந்த பின்னரும் புயலாகவே நீடிக்கும் 'மோன்தா' (இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் இருந்து) 29 அக்டோபர் 2025, 01:53 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆந்திராவில் கரையைக் கடந்த பிறகும் புயலாகவே நீடிக்கும் 'மோன்தா' அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மோன்தா புயல் வடக்கு, வட மேற்கு திசையில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் கடந்த ஆறு மணி நேரங்களில் நகர்ந்துள்ளது. ஆந்திராவில் நர்சாபூரிலிருந்து வடமேற்கு திசையில் 80 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து மேற்கில் 100 கி.மீ தொலைவிலும் புயல் நிலைக் கொண்டுள்ளது. இது அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கு அடுத்த ஆறு மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, மோன்தா புயல் ஆந்திராவில் மச்சிலிப்பட்டினம் மற்றும் காக்கிநாடா இடையே நர்சபூர் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 11:30 மணி முதல் அதிகாலை 12:30 மணி வரை கரையைக் கடந்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. எட்டு மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பிஹார் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் புதுவையின் ஏனாம் பகுதியிலும், தெற்கு ஒடிசாவிலும் இன்று அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும், ஆங்காங்கே அதி கனமழை பெய்யக்கூடும். அதே போன்று வடக்கு ஒடிசாவிலும் ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவிலும், சத்தீஸ்கரிலும் இன்று அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், ஆங்காங்கே கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படும் - மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்கரையோரம் காற்று மணிக்கு 75 முதல் 85 கி.மீ வேகத்திலும் இடையிடையே 95 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். காற்றின் வேகம் இன்று முற்பகல் நேரத்தில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ வேகமாக குறையும். தமிழக, புதுவை கரையோரங்களில் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இன்று மாலையில் காற்றின் வேகம் மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ ஆக குறையும். இதனால் இந்தப் பகுதிகளில் கடல் மிகுந்த சீற்றத்துடன் இருக்க அதிக வாய்ப்புள்ளது என்றும் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடலில் ஆந்திர, தமிழக, புதுவை கரையோர பகுதிகளில் மீனவர்கள் இன்று கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான சேவை பாதிப்பு மோன்தா புயல் காரணமாக, விஜயவாடாவில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. விஜயவாடா, விசாகப்பட்டினம் மற்றும் ராஜமுந்திரிக்கு செல்லும் பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் விமான சேவைக்கான வலைத்தளத்தைப் பார்க்க வேண்டும் என்றும் இண்டிகோ அறிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cddr3rm9gn1o
3 months 1 week ago
நீங்கள் சொல்வதும் சரி தான் வாத்தி அண்ணா......................
3 months 1 week ago
நீங்கள் எல்லோரும், நான் உட்பட உந்தக்கேள்வி கேட்பீர்கள் என்று தெரிந்துதான் அவரது ஊடகப்பிரிவு முந்திக்கொண்டது உங்களுக்கு முதல். அவர், தங்கம் வாங்கவோ கடத்தவோ முயன்றது உண்மை. ஆனாலும் அவரிடம் விசாரணை நடத்தப்படவேண்டும். நடத்துவார்களா?
3 months 1 week ago
இந்த செய்தியை சிறியர் எங்கோ இணைத்து வாசித்தேன். ஆனால், சிறியரின் வீரகேசரி இணைப்பில் செய்தி விபரம் காணப்படவில்லை. யாரோ இந்த சூரன் இது என்ன பயணமோ என நினைத்தேன். சூரத்தனமான வேலைதான் பார்த்து உள்ளார். சைக்கிளில் பாக்கு நீரிணையை எப்படி கடந்தார் என அறிய ஆவல்.
3 months 1 week ago
தலை! நீ கலக்கு தலை! 😎
3 months 1 week ago
நண்டுக்குணம் படைத்த இனம், நாசமாகிப் போகும் வரலாற்றில்... அறிந்திரு தமிழா.
3 months 1 week ago
அறிந்திராத கடற்கரும்புலிகள்: 2006 இல் கடற்கரும்புலிகளானோரில்: தலைநகர் திருமலை கடற்பரப்பில்: மேஜர் நிலாவேந்தி மன்னார் கடலில் 11.02.2006: லெப். கேணல் புரட்சிநிலவன் மற்றும் இரு நாட்டுப்பற்றாளர்கள் மட்டு மாங்கேணி கடற்கரையில் வைத்து தேசவிரோதிகளால் 24.08.2006: கப்டன் இயல்வளவன், கப்டன் இசையரசன் பொத்துவில் கடற்பரப்பில் 17.09.2006: லெப்.கேணல் அந்தணன் (தமிழ்மாறன்), லெப்.கேணல் கலைச்செல்வன் (சபீன்), லெப்.கேணல் விதுசன் (வெள்ளை), மேஜர் தமிழ்த்தென்றல், கப்டன் சமர்மறவன் இவர்களுடன் கடற்புலிகள் சிலரும் அதே விசைப்படகில் காவியமாகினர். புல்மோட்டை கடற்பரப்பில் 24.09.2006: மேஜர் மைந்தனா, கப்டன் கதிர்மதி தமிழீழ கடற்பரப்பில் 15.10.2006: லெப். கேணல் வளவன், 2ம் லெப். அன்புக்கொடி பருத்தித்துறை - வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 09.11.2006: லெப். கேணல் தாரணி, கப்டன் சாந்தினி, மேஜர் லவனிதா, லெப். அகவாணன் காலி தட்சின துறைமுகம் 18/10/2006 :லெப். கேணல் அரவிந்தா, மேஜர் தமிழ்வேந்தன், மேஜர் அறிவுக்குமரன், மேஜர் கடலவன், மேஜர் முகிலன், மேஜர் வன்னிமன்னன், கப்டன் இசையின்பன், கப்டன் கண்ணாளன் தலைநகரின் ஆழ்கடலில் 10.11.2006 : லெப். கேணல் தில்லைச்செல்வி/தனு, லெப். இன்மகன் சிலாபம் கடற்பரப்பு 27.11.2006: கப்டன் தாய்மொழியான் மற்றும் லெப். கேணல் வள்ளுவன், மேஜர் தர்மேந்திரா, மேஜர் நிமலன், மேஜர் வனிதா, கப்டன் அறிவழகன், லெப். ஆதவன், கப்டன் குழலினி, மேஜர் கானத்தி, மேஜர் இளையரசன்,கப்டன் சோழமைந்தன், மேஜர் மோகனா, மேஜர் பரணி ஆகியோர் 2006 இல் வீரகாவியமாகினர். 2007 இல் கடற்கரும்புலிகளானோரில் லெப். கேணல் கார்குழலி - பருத்தித்துறை கடற்பரப்பில் - மேஜர் சுகந்தன், மேஜர் தீக்கதிர் (இவரின் பெயரில் ஒரு மிராஜ் (IBM) ஓடினது), கப்டன் முறையமுதன், லெப். மணிக்கொடி, லெப். எழுகடல் - கொழும்புத் துறைமுகத்தில் மேஜர் அருமைச்சேரன், மேஜர் பாசமலர் - புல்மோட்டை கடற்பரப்பில் மேஜர் குணாளன் - பன்னாட்டுக் கடற்பரப்பில் கப்டன் றெஜி - கற்பிட்டிக் கடற்பரப்பில் லெப். கேணல் தமிழவன் - புல்மோட்டை கடற்பரப்பில் லெப். கேணல் வித்தியா - நிலாவெளி கடற்பரப்பில் மேஜர் கலைமாறன் (புகழரசன் கடற்கரும்புலிகள் அணி பொறுப்பாளர்) - பன்னாட்டுக் கடற்பரப்பில் கப்டன் காந்தரூபன் - பன்னாட்டுக் கடற்பரப்பில் லெப். இன்னமுதன் - முல்லை கடற்பரப்பில் பயிற்சியின் போது 2008இல் கடற்கரும்புலியானோரில்: திருமலை துறைமுகத்தில் "பழிவாங்கல்-2" நடவடிக்கையின் போது 10.05.2008: நீரடி நீச்சல் கரும்புலிகளான லெப் கேணல் செம்பியவளவன், மேஜர் அற்புதன் 2009 இல் கடற்கரும்புலிகளானோரில் லெப். கேணல் நிதி, கப்டன் வினோதன் - சுண்டிக்குளம் கடற்கரப்பில் - 19/01/2009 லெப். கேணல் மதியழகன் (மற்றும் எத்தனை என்று தெரியாது) - சுண்டிக்குளம் கடற்பரப்பு - 20/02/2009 சத்தியமாய் இவற்றை நன்னிச் சோழன் பல்வேறு இடங்களிலிருந்து "கேட்டு அறிந்து படித்து" சேகரித்தார் என்பதை தலைவரின் மெய்க்காவலராய் இருந்த புளிகளுக்கு அறியத்தருகிறேன். - கோப்ரல் காகிதப்புலி
3 months 1 week ago
அறிந்திராத கடற்கரும்புலிகள்: 2006 இல் கடற்கரும்புலிகளானோரில்: தலைநகர் திருமலை கடற்பரப்பில்: மேஜர் நிலாவேந்தி மன்னார் கடலில் 11.02.2006: லெப். கேணல் புரட்சிநிலவன் மற்றும் இரு நாட்டுப்பற்றாளர்கள் மட்டு மாங்கேணி கடற்கரையில் வைத்து தேசவிரோதிகளால் 24.08.2006: கப்டன் இயல்வளவன், கப்டன் இசையரசன் பொத்துவில் கடற்பரப்பில் 17.09.2006: லெப்.கேணல் அந்தணன் (தமிழ்மாறன்), லெப்.கேணல் கலைச்செல்வன் (சபீன்), லெப்.கேணல் விதுசன் (வெள்ளை), மேஜர் தமிழ்த்தென்றல், கப்டன் சமர்மறவன் இவர்களுடன் கடற்புலிகள் சிலரும் அதே விசைப்படகில் காவியமாகினர். புல்மோட்டை கடற்பரப்பில் 24.09.2006: மேஜர் மைந்தனா, கப்டன் கதிர்மதி தமிழீழ கடற்பரப்பில் 15.10.2006: லெப். கேணல் வளவன், 2ம் லெப். அன்புக்கொடி பருத்தித்துறை - வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 09.11.2006: லெப். கேணல் தாரணி, கப்டன் சாந்தினி, மேஜர் லவனிதா, லெப். அகவாணன் காலி தட்சின துறைமுகம் 18/10/2006 :லெப். கேணல் அரவிந்தா, மேஜர் தமிழ்வேந்தன், மேஜர் அறிவுக்குமரன், மேஜர் கடலவன், மேஜர் முகிலன், மேஜர் வன்னிமன்னன், கப்டன் இசையின்பன், கப்டன் கண்ணாளன் தலைநகரின் ஆழ்கடலில் 10.11.2006 : லெப். கேணல் தில்லைச்செல்வி/தனு, லெப். இன்மகன் சிலாபம் கடற்பரப்பு 27.11.2006: கப்டன் தாய்மொழியான் மற்றும் லெப். கேணல் வள்ளுவன், மேஜர் தர்மேந்திரா, மேஜர் நிமலன், மேஜர் வனிதா, கப்டன் அறிவழகன், லெப். ஆதவன், கப்டன் குழலினி, மேஜர் கானத்தி, மேஜர் இளையரசன்,கப்டன் சோழமைந்தன், மேஜர் மோகனா, மேஜர் பரணி ஆகியோர் 2006 இல் வீரகாவியமாகினர். 2007 இல் கடற்கரும்புலிகளானோரில் லெப். கேணல் கார்குழலி - பருத்தித்துறை கடற்பரப்பில் - மேஜர் சுகந்தன், மேஜர் தீக்கதிர் (இவரின் பெயரில் ஒரு மிராஜ் (IBM) ஓடினது), கப்டன் முறையமுதன், லெப். மணிக்கொடி, லெப். எழுகடல் - கொழும்புத் துறைமுகத்தில் மேஜர் அருமைச்சேரன், மேஜர் பாசமலர் - புல்மோட்டை கடற்பரப்பில் மேஜர் குணாளன் - பன்னாட்டுக் கடற்பரப்பில் கப்டன் றெஜி - கற்பிட்டிக் கடற்பரப்பில் லெப். கேணல் தமிழவன் - புல்மோட்டை கடற்பரப்பில் லெப். கேணல் வித்தியா - நிலாவெளி கடற்பரப்பில் மேஜர் கலைமாறன் (புகழரசன் கடற்கரும்புலிகள் அணி பொறுப்பாளர்) - பன்னாட்டுக் கடற்பரப்பில் கப்டன் காந்தரூபன் - பன்னாட்டுக் கடற்பரப்பில் லெப். இன்னமுதன் - முல்லை கடற்பரப்பில் பயிற்சியின் போது 2009 இல் கடற்கரும்புலிகளானோரில் லெப். கேணல் நிதி, கப்டன் வினோதன் - சுண்டிக்குளம் கடற்கரப்பில் - 19/01/2009 லெப். கேணல் மதியழகன் (மற்றும் எத்தனை என்று தெரியாது) - சுண்டிக்குளம் கடற்பரப்பு - 20/02/2009 சத்தியமாய் இவற்றை நன்னிச் சோழன் பல்வேறு இடங்களிலிருந்து "கேட்டு அறிந்து படித்து" சேகரித்தார் என்பதை தலைவரின் மெய்க்காவலராய் இருந்த புளிகளுக்கு அறியத்தருகிறேன். - கோப்ரல் காகிதப்புலி
3 months 1 week ago
அதை அறிய முடியாதுங்க...காத்தான்குடி ஒரு இரும்பு மதில் வலையம் ...யாரு எளிதில் நுழையமுடியாது
3 months 1 week ago
3 months 1 week ago
எதிர்காலத்தில் இந்தியாவில் பெண்கள் உலக கிரிக்கெட் போட்டியினை நடத்துவார்களா? இந்தியாவும் அவுஸ்ரேலியாவும் அரையிறுதியில் மோதுவதால் இந்த சம்பவம் நடைபெற்றிருக்குமா?
3 months 1 week ago
ஹிஸ்புல்லா 2 கோடிக்கு தங்கம் வாங்க முயற்சித்தார் என்றால் அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு? அவர் அரசியல்திவிர என்ன வேலை அல்லது தொழில் செய்கிறார். அவரது மாதவருமானம் எவ்வளவு?
3 months 1 week ago
ஆமாம். மிதாலியின் வாழ்க்கை பற்றிய படம். படம்: சாபாஷ் மிது. தாப்சி பன்னு நடிச்சிருப்பா.
3 months 1 week ago
இது போன்ற திரிகளில் என் தம்பி மினக்கெட மாட்டாரே இன்று என்ன செய்கிறார் என்று பார்க்கவந்தால் கதை தண்ணியில போகுது....🤣
3 months 1 week ago
மகளிர் கிரிக்கெட் இன்றுவரை ஒரு விளையாட்டுக்கு கூடப் பார்க்கவில்லை பையன்😂 அப்ப எந்த அணியைப் போடுவதாம் ? 😅 A யிலிருந்து சொல்லிப்பார்த்தேன் திரும்பத் திரும்ப அதே வந்தது அதனால் ஆபிரிக்காவைத் தெரிவு செய்தென். நம்புங்கள் என்று சொன்னால் நம்பவா போறீங்க😂 இறுதிப் போட்டி அரையிறுதி போட்டியிலேயே வந்துடுத்தே....😊 ஆனாலும் நான் இந்தியாவை இறுதி போட்டிக்குத் தெரிவு செய்யவில்லை இலங்கையைத் தெரிவு செய்தென் அவுசுடன்..
3 months 1 week ago
ஒரு திரைப்படம் ஒன்று அந்த இந்திய வீரரை பற்றியதாக வந்திருந்தது என கருதுகிறேன் (அல்லது வேறு யாராவதாகவும் இருக்கலாம்).
3 months 1 week ago
இதுவா விடயம், ஆனால் இந்தியா முண்ணனியில் இல்லையா? அதனை தானோ என்னவோ பையன் பின்னால பாருங்கோ! பின்னால பாருங்கோ! என கூறுகிறார், அவர் இந்தியா வெல்லும் என்பதில் உறுதியாக இருக்கிறார், அந்தளவு உறுதியாக இந்தியணிகூட இருக்காது🤣.
3 months 1 week ago
இந்த நிறுவனம் ஒரு பப்ளிக் லிஸ்ட் நிறுவனம் அல்ல, சில பப்ளிக் லிஸ்ட் நிறுவனங்களின் தலைமை அதிகாரி தனக்கான போனஸாக மேலதிகமாக பங்குகளை வெளியிட்டு (மேலும் பங்குகளின் விலையினை சரிவடைய செய்த), அதற்கான அனுமதியினை திட்ட குழுவிடம் பெற்று நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுப்பார்கள், அந்த சிறிய நிறுவனங்கள் பெரும்பாலும் சுரங்க நடவடிக்கையினை ஆரம்பிக்காத நிலையிலேயே இதனை செய்வார்கள், அது போன்ற நிகழ்வு நடைபெறும் போது முதலீட்டாளர்களிடையேயான வெறுப்பு இணைய்த்தின் மூலமாக அறிந்துள்ளேன். பி டி வை எனும் நிறுவனம் பொய்யான செய்தி ஒன்றினை வெளியிட்டு அதன் தலைம அதிகாரி தனது பங்குகளை விற்று தப்பிய சம்பவத்தில் நான் அகப்பட்டு கொண்டேன், வாங்கிய 4 சத பங்கு பின்னர் 0.04 சதத்திற்கு விற்றேன்.
3 months 1 week ago
இந்த சூழ்நிலையில் 77% தாமாகவே Voluntary Liquidation செய்கிறார்கள் என இணைய தரவு கூறுகிறது, மிகுதி 23 % மட்டுமே Receiver Liquidation, அதில் இந்த தம்பதியினரும் அடக்கம். இவர்களுக்கு இந்த நடைமுறை தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பு குறைவாக இருக்கிறது, எதற்காக இறுதி வரை காத்திருந்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்கள்? ஆனால் Voluntary liquidation செய்தாலும் இவர்களது நிதி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கும். அதற்கான தண்டனையும் வழங்கப்பட்டிருக்கும், இவர்களது தவறு உறுதிப்படுத்தப்பட்டால் தண்டனையில் இருந்து தப்ப முடியாது, பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என.
3 months 1 week ago
அட பாவி சுக்ராச்சாரியாரே.. நீவீர் தான் இதற்கெல்லாம் காரணமோ.. அசுரர்களை தண்டிக்க வெளிக்கிட்டு அப்பாவி குடி காதலர்களை ஏன் தண்டிக்க சாபம் இட்டீர்?
Checked
Sat, 02/07/2026 - 05:03
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed