புதிய பதிவுகள்2

ஹரிஹரன் இசை நிகழ்ச்சி - குழப்பம் - குற்றச்சாட்டு - நொதேர்ண் யுனியின் விளக்கம்

2 months ago
விழுந்தும் மீசையில் மயிர் ஒட்டாத அறிக்கை தான் இது. இவரின் இயலாமை.. தோல்வியை இவரே ஒத்துக்கொண்டதாக அமைகிறது.. அறிக்கை. குறிப்பாக..

சூழ்ச்சிகளை முறியடித்து மாநாட்டை நடத்துக - இரா.சம்பந்தன்

2 months ago
தலைவா விழித்தெழு ,கிளர்ந்தெழு வெற்றி நடை போடு அடுத்த பொஙகலுக்கு முதல் இதற்கு தீர்வு எடுத்து தா .....அது வரை தீர்வு திட்டத்தை நன்றாக படி

இலங்கை இராணுவத்தில் ஏற்படும் திடீர் மாற்றம்

2 months ago
இதன் தாக்கத்தை சிங்களப் படை ஆக்கிரமிப்பு தமிழர் தேசத்திலும் அவதானிக்க முடிக்கிறது. பெரும் பணச் செலவில்.. அமைக்கப்பட்டிருந்த.. சொகுசு விடுதிகளுடன்.. பூங்காக்கள்.. தடாகங்களுடன்... மைதானங்களுடன் அமைக்கப்பட்ட இராணுவ தலைமையகங்கள் எல்லாம் வெறிச்சோடிப் போயுள்ளன. இவங்கள் இவ்வளவு வசதிகளையும் விட்டிட்டு போவாங்களா.. என்று அங்கலாய்த்த மக்கள்.. இந்த வெறிச்சோடிப் போன ஆக்கிரமிப்பு வளாகங்களை அண்டிய காணிகளில் இம்முறை நெல் மற்றும் தமது விவசாய நடவடிக்கைகளை செய்துள்ளமை அவதானிக்கப்படக் கூடியதாக இருக்குது.

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு

2 months ago
ரபா இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையால் பெரும் மனித பேரழிவுக்குள்ளாகப் போகின்றது என்பதை புரிந்தும் கூட, எந்த ஒரு இஸ்லாமிய / முஸ்லிம் நாடுகளும் அவர்களை தற்காலிகமாகவேனும் அகதிகளாக ஏற்க முன்வருகின்றது இல்லை. அருகில் இருக்கும் எகிப்து கூட அவர்களை ஏற்கத் தயாரில்லை. இது தான் இஸ்லாமியர்களின் 'ஒற்றுமை'.

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

2 months ago
தமிழரசு கட்சிக்காக நீதிமன்றில் வாதாடுவேன்! சுமந்திரன் திட்டவட்டம். யாழ்ப்பாணம், திருகோணமலை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு, இடைக்காலக் கட்டாணைகள் வழங்கப்பட்டுள்ள வழக்குகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் நீதிமன்றங்களில் முன்னிலையாகி அந்த வழக்குகளுக்கு எதிராக வாதாடுவேன். என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகவும், கட்சியின் பொதுக் குழுக் கூட்டங்களின் முடிவுகளுக்கு எதிராகவும், கட்சியின் தலைவர்கள் கேட்டுக் கொண்டால் அவர்களுக்காக நீதிமன்றங்களில் முன்னிலையாகி அந்த வழக்குகளுக்கு எதிராக வாதாடுவேன்." வழக்கில் எதிராளி ''இந்த வழக்குகள், கட்டாணைகள் குறித்து இன்று காலையிலேயே கொழும்பில் கேள்விப்பட்டேன். திருகோணமலை வழக்கில் என் பெயரும் எதிராளியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக இப்போது அறிந்துள்ளேன். ஏனைய எதிராளிகளான எமது கட்சியின் சகாக்கள் கேட்டுக்கொண்டால் அவர்களுக்காகவும் இந்த வழக்கில் முன்னிலையாகி கட்சிக்காக வாதாடுவேன்.'' என தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/sumandran-says-i-will-argue-for-itak-in-court-1708003071 இப்படியொரு சுத்து மாத்து மனிதனை என் வாழ்நாளில் முதன் முதலா பார்க்கிறேன் .

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

2 months ago
இந்த குதிரைகளுக்கு கொம்பு தமிழர்களின் நம்பிக்கை. அது இருக்கும் வரை??? அவர்கள் புத்திசாலிகள் ஆட்சியில் இருந்து இவ்வளவு பணம் சேர்த்தால் ஊழல் என்பார்கள். ஆனால் இது அதுக்கு மேல சேர்த்தாலும் எதிர்கட்சி தானே??

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

2 months ago
பீற்றர் இளஞ்செழியன் சுமந்திரனின் ஆள் அல்லவா? அப்ப சுமந்திரனா பின்னால் இருப்பது? சும்மா சும்மா திட்டித் திரியும் பெருமாள் இப்போது எங்கே போனார்?

மாவை சேனாதிராஜாவின் பொறுக்க முடியாத சுயநலம்

2 months ago
நீங்கள் பார்க்காதது போலவே கட்டுரை எழுதியவரும் பார்த்திருக்க மாட்டார். பார்த்திருந்தால் வெறுமனே கட்டுரை எழுதி விட்டுப் பேசாமல் இருந்திருக்க மாட்டார் (அப்படியானால் வெறுமனே இருந்த வாக்குகளை சுமந்திரன் புள்ளடி போட்டார் என்கிறீர்களா? யாருக்கும் புள்ளடி போடாத வாக்குச் சீட்டுகள் செல்லுபடியற்றவையாக அல்லவா இருக்க வேண்டும்?) யாழ் களத்தில் அந்த நேரம் வந்த செய்திகளின் படி நடந்தவை இவை: சசிகலா ரவிராஜ் வென்று வருவதாக மிக முன்னதாகவே யாரோ தொலைபேசியில் உள்ளேயிருந்து சொன்னார்களாம், என்று அவரது மகள் முகநூலில் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். எல்லா வாக்குகளும் எண்ணி முடிந்த பின்னர் அவர் வெல்லவில்லை என்று பெறுபேறு வருகிறது. மரணவீடு போல அவர் அங்கேயே குளறி அழுகிறார். அவர் மருமகன் கலையமுதன் அங்கே வந்த சுமந்திரனை ஏதோ சொல்லிய படி அணுக முற்பட்ட வேளையில் சுமந்திரனின் பாதுகாப்பிற்கு வந்த விசேட அதிரடிப் படையினால் நையப் புடைக்கப் படுகிறார். உடனே, "சுமந்திரன் சசிகலாவின் வாக்குகளை மாற்றி விட்டார்" என்று கதைகளைப் பரப்பி விட்டார்கள். அடுத்த நாள் காலை, சசிகலா மகளின் முகனூல் செய்தியும், யார் வாழ்த்தினார் என்ற தகவலும் காணாமல் போய் விடுகிறது. ஆனால், சுமந்திரன் எதிர் தரப்பினால், பல்வேறு வர்ணங்கள் பூசி அவர் வெற்றி போலியானது என்ற கதைகள் இன்றும் தொடர்கின்றது. "கறுப்பாய் சத்தி எடுத்தவன், காகம் காகமாய் சத்தி எடுத்தான்!" என்று திரிவானது போல!

திரு வின் காதலர் தின பரிசு

2 months ago
வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி Kandiah கருணை தான் கடவுள் என சொன்ன புத்தனையே கடவுளாக்கி அவன் பெயரில் உலகில் எவ்வளவோ அட்டகாசம்... சில்லறை அதிகமானால் சிலை வைப்பார்கள் அம் மனிதர்கள் சொன்ன போதனைகளை சின்னதனமாக நினைப்பார்கள்

மாவை சேனாதிராஜாவின் பொறுக்க முடியாத சுயநலம்

2 months ago
சசிகலாவுக்கு விழுந்த வாக்குகளை தன் பெயருக்கு மாற்றவில்லை. விருப்பு வாக்குகள் இதை அனேகமானேர். போடுவதில்லை அதாவது வெற்றிடமாக விட்டு விடுவார்கள் அப்படி விடப்பட்டவர்களின் விருப்பு வாக்குகளை தன் பெயரில் புள்ளடி. இட்டு விட்டார் இது நான் நேரடியாக பார்த்ததில்லை ஒரு கட்டுரையில் வாசித்தேன். இதனால் சுமந்திரனின். விருப்பு வாக்குகள் கூடிவிட்டது ஆகவே வென்று விட்டார் இந்த வாக்களிப்பு முறையில் திருத்தம் செய்ய வேண்டும் எவருக்கும் இல்லை என்ற பெட்டியும் இணைக்க வேண்டும் விருப்பு வாக்கு போட விரும்பதவர்கள். அதை புள்ளடி இடாலம்

திரு வின் காதலர் தின பரிசு

2 months ago
செவ்வரத்தை பூ கொடுத்திருப்பார்...நன்றி Nuna வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி Suvy வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி யாயினி கொஞ்ச நாளைக்கு முருகனுக்கு லீவு கொடுத்து வள்ளுவரை வம்புக்கு இழுக்கிற பிளான்..

நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?

2 months ago
பெப் 19 நடைபெறவிருந்த மாநாட்டுக்குத் தடை. சிறிதரன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பொதுச்சபைக் கூட்டங்களும் யாப்பின்படி முரணானவை என்று வழக்குப் போடப்பட்டுள்ளது. முன்னாள் பா. உ. பா.அரியநேத்திரன் வாட்ஸப்பில் பகிர்ந்தது.. ——— இன்று தமிழரசுக்கட்சிக்கு எதிராக இரண்டு வழக்குகள் விபரம். 1)இது திருகோணமலை வழக்கு முழுவிபரம்.. இலங்கை தமிழரசி கட்சியின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடாத்த வேண்டாம் என திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று (15) இடைக்கால தடை விதித்து கட்டானையொன்றினை பிறப்பித்துள்ளது. திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இன்றைய தினம் இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 14 நாட்களுக்கு செயற்படும் வகையில் மேற் குறித்த இடைக்கால கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் மனுதாரரின் பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவக்குமாருடன் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் மற்றும் சட்டத்தரணி புரந்தன் ஆகியோர் ஆஜராகினர். கடந்த 21 மற்றும் 27ம் திகதிகளில் நடை பெற்ற பொதுச் சபை கூட்டங்கள் சட்டத்துக்கு முரணானதும், செல்லுபடியற்றது என வாதம் முன்வைக்கப்பட்டது. எனவே குறித்த இரண்டு பொதுச் சபை கூட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகள் சட்டத்திற்கு முரணானதும் செல்லுபடியற்றது எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது. தமிழரசு கட்சியின் அமைப்பு விதி அனுமதிக்கின்ற தொகையை விட அதிகளவான உறுப்பினர்கள் பொதுச் சபை கூட்டங்களில் பங்குபற்றி குறித்த தெரிவுகளின் போது வாக்களித்துள்ளமையினால் குறித்த கூட்டம் சட்டமுரணானது எனவும் இதன் போது நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. குறித்த சமர்ப்பணங்களின் அடிப்படையில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த மாநாட்டிற்கு திருகோணமலையில் மாவட்ட நீதிமன்றம் இரு வாரங்களுக்கு இடைக்காலை தடை உத்தரவு விதித்துள்ளது. இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி திறந்த நீதிமன்றில் அழைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கினை திருகோணமலை சாம்பல்தீவு -கோணேசபுரியைச் சேர்ந்த சந்திரசேகரம் பரா என்பவர் சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவகுமார் ஊடாக இவ் வழக்கினை தாக்கல் செய்ததும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த வழக்கில் மாவை சேனாதிராஜா, சி.ஸ்ரீதரன், எம்.ஏ.சுமந்திரன், சண்முகம் குகதாசன் உட்பட தமிழரசு கட்சியின் ஏழு முக்கியஸ்தர்கள் எதிர் மனுதாரர்களாக பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2)யாழ்பாண நீதிமன்ற வழக்கு! அடுத்து யாழ்பாணம் நீதிமன்றில் வழக்கு இலங்கை தமிழரசுக் கட்சி மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாண நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாவை சேனாதிராஜா, சி.சிறீதரன் எம்.ஏ.சுமந்திரன், குகதாசன், குலநாயகம், யோகேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு உறுப்பினர் பீற்றர் இழஞ்செழியன் சட்டத்தரணி குருபரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையே இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு தடை உத்தரவு வழங்கப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளுக்கும் பின்னணியில் ஒருதரப்பே உள்ளது என்பதுதான் உண்மை.! தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை! இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இடைக்கால தடைவிதித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி வரை தேசிய மாநாட்டை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் முன்னிலையாகியிருந்தார். மேலும் தேசிய மாநாட்டுக்கு தடைகோரி யாழ். நீதிமன்றத்திலும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1369933
Checked
Sat, 04/20/2024 - 14:41
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed