Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. தங்கள் குடும்பங்களை பிரிகின்றனர் பல போராளிகள். “மூத்தவள் என்னோடு நிற்கட்டும் இளையவளைக் கூட்டிக்கொண்டு நீ அவன்ட கட்டுப்பாட்டுக்குள்ள போ முடிஞ்சால் பிறகு வந்து சந்திக்கிறன்” சில போராளிகள் இவ்வாறு தான் தமக்கானவர்களை வழியனுப்பினர். சில இணைகள் தம்முடன் வாருங்கள் என்று அழைக்க மனமற்று அழுகின்றார்கள். அவர்களும் வீர உச்சங்களின் இணைகள் அல்லவா? அதனால் கலங்கிய விழிகளோடு ஒரு பிள்ளையை என்றாலும் காத்துவிட வேண்டும் என்று எதிரியின் கட்டுப்பாட்டு நிலைகளை நோக்கி நகர்கின்றனர். சில இணைகள் தம்முடையவர்களை விட்டுப் போக முடியாது அழுது குளறிக்கொண்டிருக்கிறார்கள். இறுதிவரை உறுதியோடு களமாடிய வேங்கைகள் வர மறுக்கின்றனர். குழந்தைகள் கையைப் பிடித்து இழுக்கின்றனர். “அப்பா வாங்கோ / அம்மா வாங்கோ “ என்று கத்துகின்றனர் கதறுகின்றனர். உங்கள விட்டிட்டு போகமாட்டம் என்று அழுகின்றனர். இருந்தும் அக்குழந்தைகளின் முகங்களை, அவர்களின் அழுகையினை அவர்களின் பிரிவை விட தாய் மண்ணை எதிரியிடம் விட்டு வர முடியாது தவித்த போராளிகள் அவர்களை விட்டு வந்து கொண்டிருக்கும் எதிரியை நோக்கிச் செல்கிறார்கள். குழந்தைகளை கட்டிப்பிடித்து முத்தமிட்டு தன் இணையிடம் கொடுத்துவிட்டு திரும்பிப்பார்க்காது துப்பாக்கிகளை இறுகப்பற்றியபடி எதிரியை நோக்கி போகின்றார்கள். அதுவரை கண்முன்னே சாவும் பட்டினியும் எம்மரவை உலுக்கி எடுத்தது. இருந்தாலும் களமாடிய வேங்கைகள் உயிருடன் என்றோ ஒருநாள் மீள்வார்கள் என்று நம்பி உறவுகள் காத்திருப்பார்கள் பலர் மீண்டு வருவார்கள். சிலர் மீளமாட்டார்கள். அவர்கள் எமக்காக காவியமாகி இருப்பார்கள். இப்போது அவ்வாறில்லை. இது பயங்கர மணித்துளி. சுற்றிவர முட்கம்பி வேலிகளைப்போல கந்தகக்குண்டுகளால் நிரப்பப்படும் குறுகிய பிரதேசத்தில் தம் இணையை இனி காண்போமா இல்லையா என்ற உத்தரவாதம் எதுவும் இல்லாத பொழுதில் அவர்கள் தம் இணைகளைப் பிரிந்தார்கள். மனதுக்குள் துடித்தாலும் கொண்ட இலட்சியத்தின் உறுதி அவர்களின் துப்பாக்கிகளை இறுகிப்பற்ற வைக்கிறது. இது ஒரு புறம் இருக்க சிலர் இணையாகவே கரத்தில் ஏந்திய துப்பாக்கிகளை இறுகப்பற்றிக் கொள்கின்றனர். குறுக்கும்மறுக்கும் வரும் ரவைப் பின்னல்களுக்குள் அவர்கள் இருவரும் இணையாகவே எதிரியை எதிர்கொள்கின்றனர். சிலர் குழந்தைகளை உறவுகளிடம் கையளித்துவிட்டு உறுதியோடு நிற்கிறார்கள். இன்னொரு புறம், அம்மா பிள்ளையை பிடித்து இழுக்கிறாள். அப்பா கெஞ்சுகிறார் “எங்களுடன் வா “என்று. பிள்ளை வர மறுக்கிறது. தங்கை அண்ணனை, தம்பி அக்காவை, அண்ணன் தங்கையை, அக்கா தம்பியை என்று கெஞ்சுகிறார்கள். “ஆமியட்ட போவம் வா சரணடைந்தால் உயிருக்கு உத்தரவாதம் தருவதாக அறிவிக்கிறாங்கள் தானே வாடா ” என்று வற்புறுத்துகிறார்கள். பற்றி இருந்த கையினை விலக்கியபடி நீங்கள் போங்கோ நான் வரேல்ல. என்னால வர முடியாதும்மா என்னை நினைச்சுக் கொண்டிருக்காமல் உடம்பை கவனமா பாருங்கோ நான் போறன் என்று நெஞ்சில் இருந்த கோள்சரை இறுக்கிக் கொள்கிறார்கள் பல போராளிகள். அவர்கள் நிச்சயமாக ஒன்றை அறிவார்கள். இது எமது விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்போகும் இறுதிமணித்துளிகள் இவை. உயிர்களுக்கு எப்போதும் உத்தரவாதம் இல்லை. இருந்தாலும் எதிரியிடம் மண்டியிட்டு அடிமையாக சாவதை விட வரும் எதிரியில் ஒருவனையாவது வீழ்த்திவிட்டு பெருமையாக சாகலாம் என்ற உறுதி அவர்களுக்குள் இருந்தது. அதனால் தான் அவர்களால் தம் உயிரான உறவுகளைப் பிரிய முடிந்தது. திரும்பித் திரும்பிப் பார்த்தபடி எதிரியின் பிரதேசத்துக்குள் நாங்கள் நகர்ந்து கொண்டிருக்க அவர்கள் எம் தாயகத்தை வன்பறித்து வந்து கொண்டிருக்கும் எதிரியன் கதை முடிக்க நகர்ந்து கொண்டிருந்தார்கள். திடீர் திடீர் என்று பெரும் வெடியோசைகள் தனித்தனியாக பாரிய சத்தமாக கேட்கின்றன. என் நினைவுக்குத் தெரிந்தவரை அவை பெரும்பாலும் எங்கள் வேங்கைகள் கட்டியிருந்த வெடியங்கிகளின் வெடிப்போசைகளாகவே இருக்கக்கூடும். நாங்கள் அடிமைகளாக எதிரியினை நோக்கி…. அவர்களோ உறுதிமிக்கவர்களாக எதிரியை நோக்கி… வெடியோசைகள் கேட்டவண்ணமே இருக்கின்றன. முள்ளிவாய்க்கால் நினைவுகளுக்கு முடிவில்லை. நினைவுடன்: இ.இ. கவிமகன் 18.05.2025
  3. அன்புடன் குமுதினி அக்கா…! எப்பிடி நீ சுகமா இருக்கிறியா என்று எழுதிடத்தான் என் விரல்கள் துடிக்கிறது. ஆனால் நீ உன் நண்பிகளோடு இணைந்து தமிழீழ தேசத்துக்காக உன்னை விதையாக்கிவிட்டாய் என்ற தூய்மையான திமிர் எழுந்து என்னை “நினைவுக்கல்லுக்குள் நீ நலமாக உறங்குகிறாயா? என்று தான் கேட்க சொல்கிறது. நீ எப்படி நிம்மதியாக உறங்குவாய்? அந்த நிம்மதியை நாங்கள் உனக்குத் தரவில்லையே. உன் நிம்மதியாக உறக்கத்துக்கு கூட சந்தர்ப்பத்தை தராது எங்கள் தேசத்தை எதிரியிடம் கைவிட்டு விட்டோமே. குமுதினி அக்கா என்று தான் உனை நான் அழைப்பேன். என் பெரியப்பாவிற்கு நீ மூன்றாவதாக பிறந்தவள். சிறு வயதில் இருந்து நீ அமைதியின் உருவம். உன்னை நேசித்தவர்களுக்கு அது நன்றாகவே தெரியும். அக்கா அக்கா என்று உங்களோடு திரிந்த காலங்கள் நெஞ்சுக்குள் வந்து வருத்தத்தை தருகிறது. கரவை மண்ணில் கூடி இருந்து களித்த ஒவ்வொரு வினாடிகளும் நெஞ்சுக்கள் நின்று வருத்தத்தை தருகிறது. நீ ஊட்டி விட்ட சோற்று பருக்கைகள் என் குருதியின் அணுக்களில் நின்று கொண்டு உன்னை தேடுகிறது. அக்கா 1994 ஆம் வருடம் நீ என்னையும் எங்களையும் விட்டு தேசக்கடமைக்காக பயணித்துவிட்டாய். உன் சித்தப்பாக்கள் தூக்கிய ஆதே ஆயுதங்களை உன் தோழில் சுமக்க துணிந்து சென்று விட்டாய். நானோ உனைத் தேடி அழுவதை தவிர வழியற்றுப்போய்விட்டேன். எங்கே நீ என்று யாருக்கும் தெரியவில்லை. உன் விடுதலைப்பணி அடிப்படைப்பயிற்சிகளை முடித்துக்கொண்டு மாலதி படையணியில் தொடர்கிறதாக ஒருநாள் என் தந்தை வந்து கூறிய போது, “அக்காவை நாங்கள் பார்க்க ஏலாதா அப்பா” என்ற வினாவை கேட்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அப்பா மறுத்துவிட்டார். அதற்கு சந்தர்ப்பம் இல்லை என்றார். நீ சிறப்பு பயிற்சி ஒன்றில் நிற்பதால் சந்திக்க முடியாது என்றார். நான் ஏமாற்றத்தோடு அப்பாவை பார்த்த பின் பெரியப்பாவை பார்த்தேன். அவர் விழிகள் கலங்கி இருந்தது. காலங்கள் மெல்ல அல்ல வேகமாகவே கரைந்து போனது. ஊரில் இருந்து நாம் மல்லாவிக்கு வன்பறிப்பாளர்களால் இடம்பெயரவைக்கப்பட்ட போது நீயும் வன்னிக்கு நகர்ந்திருப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால் நியமாக நீ எங்கே என்பது யாருக்கும் தெரியாது. நீ படையணியோடு. நாங்கள் படகேறி எங்கள் குடும்பங்களோடு. வன்னிக்கு வந்தும் காலங்கள் ஓடின. என் தந்தை தன் தேசப்பணியோடு. நீ உன் பணியோடு. என் சித்தப்பாவும் நானும் பெரியப்பாவும் பெரியம்மாவும் உன்னைத் தேடித்தேடி அலைந்து கொண்டிருந்தோம். “கருப்பட்டமுறிப்பு” மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் ஒலுமடு தாண்டி வரும் ஒரு சிறு கிராமம். அங்கு தான் நீ உன் படையணியோடு நிற்பதாக உன் படையணி போராளியாக இருந்த எங்கள் உறவுக்காற சகோதரி கூறிய அடுத்த பொழுது உன்னைத்தேடி சித்தப்பாவின் ஈருருளி நகர்ந்தது. முன்னால் இருந்து “கெதியா சித்தப்பா கெதியா “ என்று விரட்டிக்கொண்டிருந்தேன் நான். ஒரு நிமிசம் கூட மணித்தியாலங்களைப்போல நகர்ந்தது. அந்த கிரவல் கூட ஒழுங்காக போடப்படாத காட்டு வீதியில் எங்கள் பயணம் உன்னைத் தேடித் தொடர்ந்தது. உன் முகாம் வந்து சேர்ந்தோம். காவல் கொட்டிலில் நின்ற உன் தோழியிடம் “தளிர் அக்காவின் தம்பி நான் அக்காவ பார்க்க வேணும்.” சித்தப்பாவ கதைக்க விடாமல் நானே கேட்டேன். தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை தோழில் கொழுவிய அந்த அக்கா என் கையை பிடித்துக் கொண்டு என் பெயரைக்கேட்டா. “இப்ப எதுக்கு என்ட பெயர் அக்காவ வரச்சொல்லுங்கோ நான் பார்க்க வேணும்.” என்று அதிகாரமா சொன்னேன். அவாவுக்கு சிரிப்பு வந்திருக்க வேணும் என்று நினைக்கிறேன். கையில பிடிச்சு மெதுவா கிள்ளிப்போட்டு என்ன மிரட்டுறாய் என்று பொய் கோவத்தோடு உள்ளே சென்றா. காத்திருப்புக் கொட்டிலில் உனக்காக காத்திருக்கத் தொடங்கினோம். நீ வருவாய் வருவாய் என்று அந்த அக்கா போன திசையில் பார்த்துக்கொண்டிருந்தேன். மீண்டு வந்த அந்த அக்கா “தளிர் இங்க இல்ல ஆள் ஒரு பயிற்சிக்காக வேற இடத்துக்கு போயிட்டா நீங்கள் சந்திக்க முடியாது” என்று சொல்லி எங்களை திருப்பி அனுப்பிவிட்டா. நாட்கள் வருடத்தை தின்று தீர்த்தது. யாழ்ப்பாணத்துக்கான பாதை திறக்கவென்று “வெற்றிநிச்சயம் (ஜெயசிக்குறு )” என்று பெயர் வைத்து வவுனியாவில் இருந்து கிளம்பிய இராணுவ நடவடிக்கை பேரலையாக எழுந்து ஆர்ப்பரித்தது. அப்போது எங்கள் படையணிகளின் தாண்டிக்குளத்தில், புளியங்குளத்தில் கனகராயன்குளத்தில் என தொடரான முறியடிப்பு நடவடிக்கைகளில் காலுடைந்து நொண்டியபடி நகர்ந்து கொண்டிருந்தது ஜெயசிக்குறு எனும் அரக்கன். A9 வீதியை குறுக்கறுத்து வன்னியை துண்டாடியபடி யாழ்ப்பாணத்துக்கான பாதையை திறப்பதுவே அந்த அரக்கனின் நோக்கம். அதை முறியடித்து சிறீலங்காவின் படையகத்துக்கு பெரும் அதிர்வை கொடுத்துக்கொண்டிருந்தன விடுதலைப்புலிகளின் அணிகள். அந்த நேரத்தில் தான் “மன்னகுளம்” பகுதியில் வைத்து ஒரு பெரும் திணறடிப்பை செய்தன தலைவன் படையணிகள். அதில் உன் படையணியும் பெரும் சாதனைகளை நிகழ்த்தியது. அதில் நீயும் ஒருத்தியானாய். மகனாருக்கு நிகரானவர்கள் என்று உன் போன்ற மகளாரும் நொண்டிய அரக்கனுக்கு செவியில் உரத்து உரைத்த சண்டை அது. உன் துப்பாக்கியின் ஒவ்வொரு ரவைகளும் தமிழீழ வரலாற்றை எழுதின. நாங்களோ எங்கோ தூரக் கேட்கும் தொடர் வெடிச்சத்தங்களில் பயந்து போய் கிடந்தோம். உனக்கோ இருட்டுக்கும் பயம் இல்லை. கொல்ல வந்த பகைக்கும் பயம் இல்லை. வெடித்த வெடிகளுக்கும் பயம் இல்லை. அதனால் தான் மழையென பொழிந்த வெடிக்குள்ளும் உன் கரங்கள் உறுதியாக எதிர்த்து நின்றன. அக்கா நீ அன்று நிகழ்த்தியது சாதனையல்ல என் வாழ்வுக்கான தியாகம். நான் வாழ வேண்டும் என்று நீ உன்னை ஈந்த ஈகம் அது. நீ உன்னை எனக்காக தியாகித்தாய். நானோ பள்ளியுடையில் பரபரத்துக்கொண்டிருந்தேன். அக்கா நீ வீரச்சாவாம். தகவல் அப்பா ஊடாக வீட்டுக்கு வந்து சேர்ந்தது. முத்தையன்கட்டில் பெரியப்பாவும் பெரியம்மாவும் அக்காவும் இருந்தார்கள். நாங்கள் மல்லாவியில். பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்தோம். உன் திருவுருவப்படம் தான் எனக்காக காத்திருந்தது. நீ உன் வித்துடலைக் கூட நான் பார்க்க கூடாது என்று நினைத்துவிட்டாய் போல. உயிருடன் உன்னைப் பார்க்காத இந்த தம்பி உயிரற்று வீழ்ந்துவிட்ட உன் வித்துடலையுமா பார்க்க கூடாது அக்கா? அழுத விழிகளைத் துடைத்துக் கொண்டிருந்த என்னை ஒரு கரம் பற்றியது. கருப்பட்டமுறிப்பில் நீ நின்ற முகாமில் காவல் காத்த அதே அக்கா. தம்பி அன்று நீங்கள் வரும் போது அக்கா உள்ள தான் நின்றவா. ஆனால் நீ தன்னை பார்த்தவுடன் “ வா வீட்ட போவம் “ என்று கேட்டால் தன்னால பதில் சொல்ல முடியாது. அவன் அழுவான் என்னை கண்டால் அழுவான் என்று திரும்பத்திரும்ப சொல்லி அழுததாக கூறினா. அதுமட்டுமல்ல உன்னை மறைந்திருந்து பார்த்தா என்றும் கூறினா. அக்கா, உன்னை பார்க்கத்தானே ஓடி வந்தனான். எனக்கு அக்கா தங்கை யாரும் இல்லை. சிறு வயது முதல் பெரியப்பாவின் அல்லது பெரியம்மாவின் பிள்ளைகளான நீங்கள் தானே சகோதரங்கள். உங்களைத்தானே நேசித்தபடி வளர்ந்தேன். இப்படி இருக்க ஏன் உன்னை பார்க்க வந்த என்னை பார்க்காமல் தவிர்த்தாய்? அப்படி நான் என்ன கேட்டுவிடப்போகிறேன் என்னோடு வீட்டுக்கு வா என்று தானே. அதற்கு நீ இல்ல அக்கா இப்ப வரமாட்டன் பிறகு வாறன் என்று ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் தானே. கேட்டுக்கேட்டு அழ நெஞ்சம் தவித்தது. ஆனால் ஒரு முறையேனும் உன் திருமுகத்தை காண வந்த அன்புத்தம்பியை பார்க்காமல் தவிர்த்து விட்டு நிரந்தரமாக போய்விட்ட உன்னோடு கதைக்க கூடாது என்று அந்த சின்ன வயசு கவிக்கு கோவம் வந்தது அக்கா. அக்கா, உன் தம்பி இப்போது வளர்ந்து ஒரு மகனின் அப்பா ஆகிவிட்டேன். உன் அக்காவுக்கு 3 பிள்ளைகள். நாங்கள் அனைவரும் நலம். என்ன ஒரே கவலை. உன்னைப்போலவே உன் அப்பா, சித்தப்பாக்கள் அத்தை என்று அனைவரும் என்னை விட்டு உன்னோடு வந்துவிட்டார்கள். நீ கண்ட தமிழீழ கனவும் நனவாகாமல் போய் மீண்டும் தான் அந்நிய தேசத்து அகதியாக்கப்பட்டுவிட்டேன். தனித்து நிற்கும் வெளிநாட்டு வாழ்க்கை ரம்ப கசக்கிறது. உங்களோடு மண் வீடு கட்டி விளையாடிய சின்ன வயசு திரும்பி வராதா என்று மனம் ஏங்குகிறது. அக்கா, இறுதியாக முள்ளிவாய்க்காலில் அடிமையாக எதிரியின் கால்களைக்கு மிதிபட்டு நாம் ஏற்றப்பட்ட பேரூந்து ஊர்ந்து வந்து கொண்டிருந்த போது காற்றுப் போன நிலையில் நீ உறங்கும் முள்ளியவளை துயிலும் இல்லத்தின் முன் நின்றுவிட்டது. அப்போது தான் உன்னை தேடினேன். அக்கா நீ உறங்கிக் கொண்டிருந்த அந்த புனித பூமி புனிதமற்ற புத்தனின் பேரர்களினால் மிதிக்கப்பட்டுக் கொண்டிருந்த கோலத்தை பார்க்க முடியாது தலையை திருப்பிக்கொண்டேன். உன்னை இனி பார்க்க முடியாது என்று தெரிந்தும் ஏக்கத்தோடு உன் இருப்பிடத்தை பார்த்துக்கொண்டு வந்த அந்த நொடி இன்றும் நினைவிருக்கிறது அக்கா. நிம்மதியற்ற உன் ஆத்மாவுக்கு என்னால் என்ன சொல்லி விட முடியும்? நீங்கள் கண்ட கனவை தொலைத்து விட்டோம். இருந்தாலும் உன் மீதும் உண் தோழர்கள் மீதும் உள்ள நேசத்தை. உறுதி குலைந்து விடாமல் இறுதி வரை பயணிப்பேன் என்பதை மட்டுமே சொல்ல முடியும். தேடும் விழிகளோடு அன்புத் தம்பி அன்புடன் : இ.இ.கவிமகன் நாள் 20.11.2025
  4. 2006 மார்கழி 4 ஆம் நாள், நீயும் நானும் சந்தித்த முதல் நாள். நீ உயரமானவன் என்பதால் அந்த கல்லூரியின் பின்வரிசையையே ஆக்கிரமிப்பாய். முதன்நாளிலும் அப்படித்தான். மெல்லிய நீல கோடு போட்ட சேட் என்று நினைக்கிறேன். உன் புன்னகையை ஒரு தடவை பார்த்துவிட்டு முன்னாலே புரொஜெக்டரின் ஊடக வெளிவந்து வெண்ணிற திரையில் ஒளிர்ந்து கொண்டிருந்த கற்றலுக்கான எழுத்துக்களை பார்த்தேன். முதல் நாள் எந்த அறிமுகமும் இல்லை. மணிவண்ணன் உன் பெயர் என்பதை மட்டுமே அறிந்தேன். நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தது. எம் கல்லூரி நாட்கள் இனிமையாக கழிந்தது. நீ கல்வியில் ஒரு படி மேலே இருந்தாய். உன் சிந்தனை முழுவதும், உன் இலக்கு முழுவதும் ஒரே ஒரு விடயத்தில் தான் குவிந்து நின்றது. அந்த பாடத்திட்டத்தின் ஒவ்வொரு நிலைகளையும் சிறப்பாக கற்றுத் தேற வேண்டும். அந்த நோக்கத்தில் மட்டுமே உன் ஒவ்வொரு வினாடிகளையும் நீ செதுக்கிக் கொண்டாய். கேணல் சார்ள்ஸ் அண்ணாவின் வீரச்சாவு நிகழ்வில் நீ வரி உடையுடன் வருவதை கண்ட எம்மில் பலருக்கு அதிர்ச்சி. நீ ஒரு போராளியா என்ற அங்கலாய்ப்பு. அதுவரைக்கும் நீ ஒரு போராளி என்பதை எம்மில் ஒரிருவரைத் தவிர மற்றவர்கள் அறிந்திருக்கவில்லை. அன்று எல்லோருக்கும் தெரிந்தது நீ காக்கும் உன்னை பற்றிய இரகசியத்தின் தன்மை. படையப்புலனாய்வின் பணிகளை விரிவாக்கும் செயற்றிட்டம் ஒன்றுக்காக நீ கற்க வந்திருந்தாய். வெளிமாவட்டத்தில் தங்கி இருக்கும் இரகசிய போராளிகளுக்கான தொடர்பாடல்களை ஏற்படுத்துவது தொடர்பாக ஒரு மென்பொருளை உருவாக்க நீ முனைந்தாய். இரகசிய போராளிகள் பற்றிய இரகசிய விபரக்கோவைகளை பாதுகாக்கும் மென்பொருளையும் உருவாக்க முனைந்தாய். நிச்சயமாக அவை மட்டுமல்ல அதை விட நிறைய மென்பொருள்களை உருவாக்கி இருக்க வாய்பிருந்திருக்கும். இருப்பினும் அவற்றின் முழு விபரங்களை நான் அறிந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட 1.5 வருடங்கள் ஒன்றாக இருந்தோம். அந்த உயர் தொழில்நுட்பக்கற்கை முடிந்து அவரவர் பணிகளுக்கு திரும்ப முந்திய பொழுதொன்றில் உன் உயிரொன்றையும் எமக்கு அறிமுகப்படுத்திவிட்டு நீ உன் பணிக்குத் திரும்பிவிட்டாய். காலம் நகர்ந்து தொலைந்தது. 2008 ஐப்பசித்திங்கள் நாங்கள் கிளிநொச்சியில் இருந்து நகர்ந்து விசுவமடுவில் எமது கல்லூரியை அமைத்தோம். நீ படையகப்புலனாய்வின் படையணியில் ஒருவனாகி விட்டாய். நிர்வாக வேலைகள் குறைந்து களமுனை உன்னை அழைத்துக்கொண்டது. உன் கரங்கள் நீ விரும்பிய ஆயுதத்தை வெளிப்படையாக பற்றிக்கொண்டது. நாங்கள் நடைப்பிணங்களாக நடந்து கொண்டிருக்க நீ உன் அணியோடு எதிரியை மறித்து முறியடிப்புச்சமரை செய்து கொண்டிருந்தாய். சுதந்திரபுரத்தில் என் வீட்டுக்கு திடீர் ஒன்று ஒருநாள் வந்தாய். அது உன் உயிரின் சந்திப்புக்கான நாளென்று நான் நினைக்கிறேன். ஏதேதோ எல்லாம் கதைத்துக்கொண்டிருந்தாய். பாணும் சம்பலும் சாப்பிட்டாய். “அம்மா இது தான் உங்கட கையால சாப்பிடுற கடைசிச்சாப்பாடோ தெரியாது” சொல்லிவிட்டு அம்மாவிடம் முறையான திட்டையும் வாங்கியபடி சென்று விட்டாய். உன்னை அதன் பின் சந்தித்தது நீ காயப்பட்டு சில நாட்கள் மருத்துவ ஓய்வுக்காக வந்து இரட்டைவாய்க்காலில் நின்ற போது. இருவரும் நீண்ட நாட்களின் பின் கிணற்றடியில் ஒன்றாக குளித்தோம். பழைய கதைகள் கதைத்தோம். சிரித்தோம் கவலைப்பட்டோம். மீண்டும் பிரிந்துவிட்டோம். நீ களமுனை நோக்கி நான் கடற்கரையில் இருந்த என் தறப்பாள் கொட்டகை நோக்கி. திடீர் என்று ஒரு நாள். எங்கள் நண்பன் சசி வந்தான். நீ ஒரு அணியை வழிநடாத்தியபடி எதிரியின் எல்லை தாண்டி உள்நுழைய முற்பட்ட போது சிங்கள வல்லாதிக்கப்படைகளின் சினைப்பர் அணியால் தாக்கப்பட்டதாய் கூறினான். நீ உள்நுழைந்தது பாதை ஏற்படுத்திய உடனே உள்நுழைய காத்திருந்த தன் அணியை பின்நகருமாறு கட்டளை வந்ததால் தான் மீண்டு விட்டதாகவும் கூறினான். அவன் கண்கள் கலங்கின. பழகிய நாட்கள் நெஞ்சுக்குள் குருதியோட்டத்தை அதிகரிக்க வைத்து இதயத்துடிப்பு அதிகரித்தது. உன்னை எப்படியாவது இறுதியாகப் பார்த்துவிட துடித்து இருவரும் இரட்டைவாய்க்கால் துயிலுமில்லம் ஓடி வந்தோம். ஆனால் உன்னை காணமுடியவில்லை. அவர்கள் விதைத்துவிட்டார்கள். உறவினர்கள் யாரும் இல்லை. ஆனால் அதை தாண்டி நண்பர்கள் நாங்கள் அருகில் இருந்தோம். உனக்காக அழ உன்னை நேசித்தவர்கள் இருந்தோம். எமக்காக உயிர் ஈந்த உயிர் தோழனே உன்னை ஒருமுறையாவது பார்த்துவிட மாட்டோமா என்று ஏக்கத்தோடு வந்தவருக்கு நீ வேறு நண்பர்களினால் விதைக்கப்பட்டுவிட்டாய் என் செய்தி மட்டுமே கிடைத்தது. உன் விதைகுழியின் மேல் விழியில் இருந்த வழிந்த நீரை படையலாக்க மட்டுமே எங்களால் முடிந்தது. நீ படைக்கத் துடித்த தமிழீழத்துக்காக நீ விதையாகிவிட நாமோ உன் கனவுகளை முள்ளிவாய்க்காலில் புதைத்துவிட்டு ஏதிலியாகிவிட்டோம். நண்பனே…! சேர்ந்திருந்த நாட்கள் கொஞ்சம் எனிலும் நினைவுகள் ஏராளமடா. அருகில் இருந்தும் உன் திருமுகத்தை பார்க்க முடியாத வேதனையோடு உன் விதைகுழியில் ஒரு பிடி மண்ணைப் போட்டு இறுதி வழியனுப்பலை செய்ய முடியாத துயரத்தோடு… இ.இ.கவிமகன் நாள்: 22.11.2025
  5. நீ எங்களின் நீலக் கடலில் சாதித்தவன். உன்னை அறிமுகம் இல்லாத கடற்புலிகள் மிகக் குறைவென்றே நான் நம்புகிறேன். ஏனெனில் அப்படித்தான் உன் பணி இருக்கும். நிர்வாக போராளியாக இருந்த நீ படிப்படியாக ஒரு பொறுப்பாளனாக உயர்ந்ததை யாரும் மறக்க மாட்டோம். 1996 மல்லாவி மண்ணுக்கு நானும் நீயும், எனது குடும்பமும் உனது குடும்பமும் இடம்பெயர்ந்து வந்தோம். உனது தம்பி ( சித்தியின் மகன்) எனது நெருங்கிய தோழனாகிய போது தான் நீ எனக்கு அறிமுகமாகினாய். அப்போதெல்லாம் அகிலன் அண்ணா என்று தான் உனை அழைப்பேன். நீங்கள் இரட்டைக் குழந்தைகள். ஒரே வயிற்றில் பிறந்த மற்றவன் நிமலன். உங்கள் இருவரையும் இனங்கண்டு கொள்வது என்பது மிக மிக கடினமான ஒன்று. அடிக்கடி உன்னை நிமலன் அண்ணா என்றும் அவனை அகிலன் அண்ணா என்றும் மாறி அழைத்திருக்கிறேன். உன் தம்பி தான் “டேய் மண்டு அது நிமலன் அண்ணா இல்ல அகிலன் அண்ணா “ என்பான். எப்படியோ நீங்கள் இருவருமே என் அண்ணன்களாகிப் போன நாட்களில் மல்லாவியில் உன் குடும்பமும் என் குடும்பமாகியதை நீ நன்றாகவே அறிவாய். நான் நினைக்கிறேன் 1999 என்று. திடீர் என்று நீ காணாமல் போனாய். காரணம் உடனடியாகவே எமக்கு நன்றாகவே தெரிந்தது. நிமலன் அண்ணாவை தனிய விட்டு எப்படி உன்னால் போக முடிந்தது? உன் அக்கா அழுது குழறினா. ஏற்கனவே ஒரு தம்பியையும் தன் கணவனையும் போராட்டத்துக்காக அனுப்பிவிட்டுத் தினமும் கடவுளிடம் மன்றாடிக்கொண்டிருக்கும் உன் அக்காவை விட்டு எப்படி போக முடிந்தது? உன் அம்மா பற்றி யோசித்தாயா? அப்பாவின் இறப்புக்கு பின் உங்கள் அனைவரையும் எவ்வளவு போராட்டத்தோடு வளர்த்து வந்தா? உன் குட்டி மருமகள்? இது எதுவுமே உனக்கு அன்று தோன்றவில்லையா அகிலன் அண்ணா?. ஓ… இது தான் தேசம் மீதான காதலா? உன்னோடு கூடப்பிறந்தவன் மீதான பாசத்தை விட அம்மா அக்கா என்று குருதியில் ஒன்றாகிய உறவுகளின் மீதான அன்பை விட தேசம் மீதான காதல் அதிகம் என்பது இது தானா? நீ உன் காலத்தின் கட்டளையை நிறைவேற்ற நீல வரியுடுக்கத் துணிந்து சென்றுவிட்டாய். உறவுகளோடு நாங்களும் நீ எம்மோடு அருகில் இல்லாத வெறுமையை நினைத்து கஸ்டப்பட்டோம். நீண்ட நாட்களுக்குப் பின் நானும் நிமலன் அண்ணாவும் உனைக் காணவென்று கைவேலிப்பகுதியில் இருந்த உன் முகாமுக்கு வந்திருந்தோம். நீ அங்கில்லை மாத்தளன் முகாம் ஒன்றுக்கு சென்றுவிட்டதாக கூறினார்கள். சந்திக்க முடியாத ஏமாற்றத்தோடு திரும்பி வந்து கொண்டிருந்தோம். அந்த காட்டுப்பாதைக்குள் ஈருருளி எம்மை சுமந்து கொண்டு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியை நோக்கி சென்று கொண்டிருக்க உன் பொறுப்பாளர் வந்தார். நீ என்று நினைத்து நிமலன் அண்ணைக்கு சில விடயங்களைச் சொல்ல தொடங்கினார். நிமலன் அண்ணையோ “ அண்ண நான் செஞ்சேரன் இல்லை செஞ்சேரனின் தம்பி நிமலன்” என்றான். “ டேய் உங்களோட பெரிய பிரச்சனையடா… என்று புன்னகைத்தார். நாங்களும் புன்னகைத்தபடி நகர்ந்துவிட்டோம். மருதங்கேணி மண் தமிழீழத்துக்காக தந்த செஞ்சேரா, திடீர் என்று ஒருநாள் விடுமுறையில் வந்தாய். அந்த குறுகிய விடுமுறை நாட்கள் எம் எல்லோருக்கும் சந்தோசமான நாட்கள். ஒட்டங்குளம் , பேராறு , வவுனிக்குளம் அது இது என்று மல்லாவியின் அழகிய இடம் அனைத்திலும் நின்று நிழல்படம் எடுத்து மகிழ்ந்த அந்த நாட்கள் அத்தனையும் பசுமையானவை. பெரும்பாலும் நாங்கள் நால்வரும் தான் சுற்றித்திரிந்தோம். படிக்க மறந்தோம். உன்னோடு மகிழ்ந்திருக்கவே விரும்பினோம். நாட்கள் கடந்து நீ மறுபடியும் முகாம் திரும்ப வெளிக்கிட்ட போது மனமின்றியே விடைபெற்றோம். 2001 ஐப்பசி மாதம் 21 அன்று உன் அண்ணா தேசத்துக்காக ஆகுதியாகிப்போக மல்லாவி மண் துடித்தது. நீயும் சோர்ந்து போய் இருந்தாய். அதே நேரம் உன் அக்காவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தான். அவனே உன் அண்ணாவாகி போய்விட்டான். அண்ணனின் பெயரையே அக்கா தன் குழந்தைக்கு வைத்தா. உயிரோடும் உதிரத்தோடும் ஒன்றாகிய தன் சகோதரனை தினமும் தன் மகனின் முகத்தில் பார்க்கத் தொடங்கினா. தேசப்பணிக்காக நீ மீண்டும் நிமிர்ந்தெழுந்து சென்றுவிட்டாய். அடிக்கடி சந்திப்பது குறைந்து போனது. உன் பணி அதிகமாக கடல் மீது இருப்பதாக அறிந்தோம். செஞ்சேரா, எம் தேசம் பெரும் வெற்றிகளைப் பெற்று யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதிகள் எம் கைகளில் வந்த போது, நீயும் உன் தோழர்களும் மருதங்கேணியை அண்டிய பகுதிகளிலே பணியாற்றினீர்கள். சமாதானம் (2002 ) என்ற பொல்லாத உயிர்கொல்லி எம் மீது திணிக்கப்பட்ட போது அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும். ஆனால் அதிகமாக நின்று கதைக்க உனக்கு நேரம் இருக்காது நீ ஓடிக்கொண்டே இருப்பாய். ஒரு நாள் உனை சந்திக்க வந்திருந்த என்னோடு பேசிக்கொண்டிருந்தாய். அப்போது கிபிர் வருவதற்கான எச்சரிக்கை வந்ததோ என்னவோ அவசரமாக என்னை அனுப்பி விட்டு உன் படகையும் அதற்கான எரிபொருளையும் பாதுகாப்பாக வைத்திருந்த இடத்துக்கு ஓடினாய். ஏனெனில் உன்னை விட உன் உயிரை விட அவற்றின் மீதே உனக்கு அதிகமான நேசம். அவற்றை காத்திட வேண்டும் என்ற துடிப்பு அதனால் நீ ஓடினாய். 2006.08.11 ஆம் நாள் மீண்டும் மருதங்கேணி விட்டு இடம்பெயர வேண்டிய சூழல். அங்கிருந்து நகர்ந்து வள்ளிபுனம் பகுதியில் அம்மாவும் அக்காவும் இருந்தார்கள். 2007 மார்கழித் திங்கள் அக்காவுக்கு குழந்தை பிறக்க இருந்தது. வரப்போகும் குழந்தையை எதிர்பார்த்து பெரும் மகிழ்வு. மருத்துவமனையில் அக்கா பிரவசத்துக்காக அனுமதிக்கப்பட்ட அதே நேரம், பருத்தித்துறை கடற்பகுதியில் உன் படகிற்கும் சிங்கள கடற்படையினருக்கும் இடையில் கடும் மோதல் உருவெடுத்தது. நீ உன் அணியினரோடு கடுமையான சண்டையிட்டாய். உனக்கு உதவிக்காக எமது சண்டைப்படகுகள் விரைந்தன. எதிரியின் டோராக்களை ஓட ஓட அடித்துத் துரத்தின. ஆனாலும் உன் படகு எதிரியின் குண்டடிபட்டு இயங்கு நிலையில் இல்லை. தாக்குதலை தாங்கிக்க முடியாது ஓடிய சிங்களத்தின் சண்டைப்படகுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மீண்டும் முழு வேகத்துடன் எம் படகுகள் மீது பாய்ந்தன. அந்த பாச்சலில் நீ எம்மை விட்டு பிரிந்து விட்டாய் என்ற செய்தி எங்கள் செவிகளுக்குள் ஆறாத துயரத்தோடு வந்து சேர்ந்தது. அக்காவை பார்க்க வீட்டுக்குச் சென்ற எனக்கு உன் அதிர்ச்சி செய்தியே கிடைத்தது. உன் நண்பர்கள் வந்தார்கள். சம்பவத்தை கூறினார்கள். வீடு அதிர்ந்து போனது. ஐயோ ஐயோ என்ற குரல்கள் வானெழுந்தன. அருகில் இருந்த உறவுகள் வீட்டில் கூடினார்கள். மஞ்சள் சிகப்பு கொடிகள் உன் வீடெங்கும் நிறைந்து கிடந்தன. தகரக்கொட்டகை போடப்பட்டு புலிக்கொடியின் முன்னே நீ திருவுருவப்படமாக இருந்தாய். பூக்கள் உன் மேல் மாலைகளாகவும் இதழ்களாகவும் கிடந்தன. நெஞ்சு வெடிக்கும் சோகம் எங்கள் எல்லோருக்கும் நிறைந்து கிடந்தது. அகிலன் அண்ணா. டேய் செஞ்சேரா, எப்படிடா உன் பிரிவை இந்த குடும்பம் தாங்க போகிறது? அக்காவுக்கு எப்படிடா நாங்கள் உன் வீரச்சாவை சொல்வது? அம்மா எத்தனை இழப்புக்களை தாங்குவா? உன் சகோதரனை எப்படிடா நாங்கள் தேற்றுவது? பதில் இல்லாத வினாக்கள் வந்து நினைவுகளை உலுப்பியது. நீ விரும்பி இருந்தால் உன் அணியோடு கடலில் குதித்து நீந்திக் கரை சேர்ந்திருக்கலாம். ஆனால் நீங்கள் நேசித்த உங்கள் படகினை விட்டு வர மாட்டம் என்று எதற்காக பிடிவாதமாக நின்றீர்கள். ஓ…நான் ஏற்கனவே கேட்டதைப்போல இது தான் தமிழீழ தேசம் மீதான உங்கள் காதல் அல்லவா. நீ சென்று விட்டாய். இப்போது உன் அக்கா மடியில் மகன் ஒருவன் செஞ்சேரனாக வந்து பிறந்துவிட்டான். அவன் முகத்தில் இனி வரும் காலம் எல்லாம் அக்கா உன்னைக் காண்பாள். உன் மருமக்கள் இருவரின் முகத்திலும் அம்மா உன்னையும் அண்ணாவையும் வாழ்நாள் முழுவதும் காண்பா. நாங்களும் உங்கள் நினைவோடே அவர்களை காண்போம்… உன் அக்காவின் இணையும் இறுதி நாளில் முல்லைத்தீவில் வைத்து வலிந்து காணாமலாக்கப்பட்டுவிட்டார். அவரின் இருப்பையும் நாம் யாரும் அறிய முடியவில்லை. அண்ணா உன்னை இறுதியாக கண்ட அன்று எனக்காக நீ ஒரு பரிசு தந்தாய். அதில் தேசத்தின் அண்ணன் நீல வரியோடு நிற்கும் படமும் மறுபுறம் கடற்புலிகளின் இலட்சனையும் பிரதிபண்ணப்பட்டிருந்தது. அதை என் உந்துருளியின் சாவியில் அதை நான் கொழுவி வைத்திருந்தேன். 2009 மே 16 ஆம் நாள் இரவு வரை அதை நான் தவற விடவில்லை. கவனமாக பாதுகாத்தேன். ஆனால் எதிரியின் காலடிக்குள் அடிமையாக சென்ற அந்த பொல்லாத நாளில் உன் பரிசையும் என் அப்பாவின் தகட்டோடும் எழுத்துக்களோடும் சேர்த்து நாங்கள் தங்கி இருந்த பதுங்ககழிக்குள் போட்டு தாட்டுவிட்டேன். அதுவும் உன்னைப் போலவே அமைதியாக உறங்கும். ஆழ்கடலின் அலைகளுக்குள் நீ அமைதியாகி விட்ட பொழுது இன்றும் நெஞ்சுக்குள் வந்து நெருடிக்கொண்டிருக்கிறது. செஞ்சேரன் அண்ணனுக்காக, இ.இ.கவிமகன். நாள் :24.11.2025
  6. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026 அதிகபட்ச புள்ளிகள் 208 முதல் சுற்றிலும் சுப்பர் 8 சுற்றிலும் போட்டியில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும் வெற்றி (Win) - 2 தோல்வி (Loss)- 0 முடிவில்லை (No Result) - 1 சமநிலை (Tie) - 1 குறிப்பு: Super Over உள்ளதால் போட்டிகள் சமநிலையில் முடிய வாய்ப்பில்லை வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் முடிவில்லை அல்லது சமநிலை* (மேலுள்ள குறிப்பைப் பார்க்கவும்) என்று குறிப்பிடவேண்டும். அணிகளை சுருக்கிய வடிவில் தந்தால் வசதியாக இருக்கும். அணிகள்: A1 இந்தியா IND A2 பாகிஸ்தான் PAK A3 ஐக்கிய அமெரிக்கா USA A4 நெதர்லாந்து NED A5 நமீபியா NAM B1 அவுஸ்திரேலியா AUS B2 சிறிலங்கா SL B3 அயர்லாந்து IRE B4 ஸிம்பாப்வே ZIM B5 ஓமான் OMA C1 இங்கிலாந்து ENG C2 மேற்கிந்தியத் தீவுகள் WI C3 பங்களாதேஷ் BAN C4 நேபாளம் NEP C5 இத்தாலி ITA D1 நியூஸிலாந்து NZ D2 தென்னாபிரிக்கா SA D3 ஆப்கானிஸ்தான் AFG D4 கனடா CAN D5 ஐக்கிய அமீரகம் UAE முதல் சுற்றில் பங்கு பற்றும் 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 5 அணிகள் விளையாடுகின்றன. ஒவ்வொரு குழுவிலும் தரநிலைகளில் முதலாவதாகவும் இரண்டாவதாகவும் வரும் இரு அணிகளும் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறவுள்ளன. சுப்பர் 8 சுற்று போட்டிகளுக்குத் தேர்வாகும் அணிகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் சுற்றில் முதலாவதாக வரும் இரு அணிகளும், இரண்டாவதாக வரும் இரு அணிகளும் இடம்பெறுகின்றன. அரையிறுதித் போட்டிகளில் குழு 1 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும், குழு 2 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும் பின்வருமாறு மோதும். சுப்பர் 8 குழு 1 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் சுப்பர் 8 குழு 2 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் அரையிறுதிப் போட்டிகளில் வெல்லும் அணிகள் 08 மார்ச் அன்று இறுதிப் போட்டியில் அஹமதாபாத்தில் அல்லது கொழும்பு (RPS) இல் நடைபெறும் இறுதிப் போட்டியில் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் வெற்றிக் கிண்ணத்திற்காக மோதும். போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி வெள்ளி 06 பெப் 2026 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும். யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்
  7. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026 வணக்கம், T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த வருடம் இந்தியாவிலும் சிறிலங்காவிலும் நடைபெற உள்ளது. போட்டிகள் 07 பெப் 2026 அன்று முதல் சுற்று குழு நிலைகளில் ஆரம்பித்து 08 மார்ச் 2026 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது. முதல் சுற்று: முதல் சுற்றில் பங்கு பற்றும் 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 5 அணிகள் விளையாடுகின்றன. அவை தரநிலைப்படி கீழே தரப்பட்டுள்ளன: குழு A: A1 இந்தியா IND A2 பாகிஸ்தான் PAK A3 ஐக்கிய அமெரிக்கா USA A4 நெதர்லாந்து NED A5 நமீபியா NAM குழு B: B1 அவுஸ்திரேலியா AUS B2 சிறிலங்கா SL B3 அயர்லாந்து IRE B4 ஸிம்பாப்வே ZIM B5 ஓமான் OMA குழு C : C1 இங்கிலாந்து ENG C2 மேற்கிந்தியத் தீவுகள் WI C3 பங்களாதேஷ் BAN C4 நேபாளம் NEP C5 இத்தாலி ITA குழு D : D1 நியூஸிலாந்து NZ D2 தென்னாபிரிக்கா SA D3 ஆப்கானிஸ்தான் AFG D4 கனடா CAN D5 ஐக்கிய அமீரகம் UAE முதல் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் 07 பெப் முதல் 20 பெப் வரை நடைபெறவுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தரநிலைகளில் முதலாவதாகவும் இரண்டாவதாகவும் வரும் இரு அணிகளும் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறவுள்ளன. சுப்பர் 8 சுற்று: சுப்பர் 8 சுற்று போட்டிகளுக்குத் தேர்வாகும் அணிகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் சுற்றில் முதலாவதாக வரும் இரு அணிகளும், இரண்டாவதாக வரும் இரு அணிகளும் இடம்பெறுகின்றன. அவை கீழே உள்ளவாறு பிரிக்கப்படும். குழு 1: X1 இந்தியா X2 அவுஸ்திரேலியா X3 மேற்கிந்தியத் தீவுகள் X4 தென்னாபிரிக்கா குழு 2: Y1 இங்கிலாந்து Y2 நியூஸிலாந்து Y3 பாகிஸ்தான் Y4 சிறிலங்கா சுப்பர் 8 சுற்றில் மேலுள்ள அணிகளில் சில தெரிவாகாத பட்சத்தில் அவற்றின் இடத்தை (X1..X4, Y1...Y4) முதல் இரு இடத்திற்கு வரும் பிற அணிகளில் ஒன்று எடுத்துக்கொள்ளும். உதாரணமாக குழு C இல் சுப்பர் 8 க்கு பங்களாதேஷ் தெரிவாகியும் மேற்கிந்தியத் தீவுகள் தெரிவாகாமலும் இருந்தால் X3 இடத்தை பங்களாதேஷ் எடுத்துக்கொள்ளும். சுப்பர் 8 சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் 21 பெப் முதல் 01 மார்ச் வரை நடைபெறவுள்ளன. நொக்கவுட் போட்டிகள் அரையிறுதிப் போட்டிகள்: அரையிறுதித் போட்டிகளில் குழு 1 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும், குழு 2 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும் பின்வருமாறு மோதும். சுப்பர் 8 குழு 1 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் சுப்பர் 8 குழு 2 முதல் இடம் எதிர் சுப்பர் 8 குழு 2 இரண்டாவது இடம் முதலாவது அரையிறுதிப் போட்டி 04 மார்ச் அன்று ஏடென் கார்டன்ஸில் அல்லது கொழும்பு (RPS) இலும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி 05 மார்ச் அன்று வாங்கெடேயிலும் நடைபெறவுள்ளன. * பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானால் பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டி கொழும்பில் நடைபெறும். இல்லையேல் கொல்கத்தா ஏடென் கார்டன்ஸில் நடைபெறும். இறுதிப் போட்டி: அரையிறுதிப் போட்டிகளில் வெல்லும் அணிகள் 08 மார்ச் அன்று அஹமதாபாத்தில் அல்லது கொழும்பு (RPS) இல் மோதவுள்ளன. * பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் இறுதிப் போட்டி கொழும்பில் நடைபெறும். இல்லையேல் அஹமதாபாத்தில் நடைபெறும். கேள்விக்கொத்து பின்னர் வெளியிடப்படும்.
  8. எங்கட சனத்துக்கு என்ன வழிகளில் எல்லாம் சாவுகள் வருகுது. மருத்துவ நண்பர் சலித்து கொள்கிறார். என்னாச்சு டொக்டர்? நேற்று இரவு 40 சனத்துக்கு மேல சாகிற நிலையில் கொண்டு வந்தாங்கள். அவ்வளவு பேரும் கண்டங்கருவளலை பாம்பு கடிச்ச கேஸ். ஒரே இரவில ஒரே நேரத்தில இவ்வளவு சனமும் பாம்புக்கடியால சாக கிடக்குதுகள். அந்த விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவர் நடந்த சம்பவத்தை கூறத்தொடங்கினார். தர்மபுரம் சந்தியில இருந்து கல்மடு போற பாதையில இருக்கிற இடங்கள் எல்லாம் சனம் இருக்குதுகள். எது மேட்டு நிலம் எது தாழ் நிலம் என்று எதையும் சிந்திக்க முடியாத நிலமை. எங்கையாவது தங்கிட வேண்டும் என்ற நினைப்பு மட்டும் தான் மக்களுக்கு இருந்தது. சனம் தறப்பாளை போட்டு இருக்குதுகள். திடீர் என்று மழை பெய்ததும் தாழ்நிலப்பகுதி எல்லாம் தண்ணி ஏறீட்டுது. அதோட பாம்புகளும் ஏறீட்டுது. யாரும் பாம்புகள் வந்தத பெரிசா பார்க்கல்ல எங்கையாவது தங்கினா சரி என்று சனம் நினைச்சுது. சனத்தின் படுக்கைக்கு கீழையும் உடுப்புகளுக்கையும் இந்த கண்டங்கருவளளை பாம்பு சுருண்டு கிடந்திட்டு தீண்டி இருக்குது. முதலில் பலருக்கு பாம்புக் கடி என்றது கூட தெரியவில்லை ஏனென்றா இந்த வகை பாம்புகள் கடித்தால் கடி அடையாளங்கள் கூட தெரியாது. அவர் கூறிவிட்டு வெற்று நிலத்தை வெறித்து பார்க்கிறார். குரலை சீர்படுத்திக் கொண்டு மீண்டும் தொடர்கிறார். இங்கே பாம்பு தீண்டுவது சாதாரணமாக இருந்தாலும் இப்பிடி பெரும் தொகையாக ஒரே நேரத்தில் தீண்டியது இல்லை. நினைக்க விசரா கிடக்கு தம்பி. ஒரு புறம் இயற்கை சீற்றம் மறுபுறம் கொடிய விலங்குகள் இன்னொருபுறம் சிங்கள வெறியனின் கொலைவெறித்தாண்டவம் சனம் எப்பிடி தாங்குறது? அவர் மௌனித்து போகிறார். மச்சான் இயற்கை கூட எங்கள வாழ விடாதா? நண்பன் கேட்கிறான். பதில் கூற முடியாது விக்கித்து நின்ற என்னை மீண்டும் மருத்துவரின் குரல் அசைக்கிறது. எங்கட சனம் கிளிநொச்சிய விட்டு நகர்ந்து கொண்டிருக்குது இங்க இருக்கிறது இனி பயங்கரம் இப்ப கிளிநொச்சி ஒரு சூனிய பிரதேசம் மாதிரி எந்தநேரமும் தாக்குதல் நடக்கலாம். தெரிந்தும் பாம்புக்கடியால அங்க இருந்து சனத்த இங்க கொண்டு வந்தனாங்கள். அவர்கள காப்பாத்தியே ஆகவேணும். மருந்துகள் இல்லை எந்த மருந்து பொருட்களையும் சிங்கள அரசு எமக்கு அனுப்புவதில்லை. இந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் வன்னியை விட்டு சென்ற பின் எமக்கு முன்பிருந்ததை விட அதிகமான மருந்து பொருட் சிக்கல்கள் வந்து கொண்டிருக்கிறது. ஒரு பாம்புக்கடி நோயாளிக்கு குறைந்தது 25 க்கு மேற்பட்ட விசமுறிவு மருந்தை நாம் கொடுக்க வேண்டி வரும் இந்த நிலையில் எம்மிடம் இருக்கும் இருப்பு குறைவாக இருந்தாலும் எம்மக்களை காப்பாற்ற வேண்டி தேவை இருக்கிறது. அதனால எந்த இடரையும் சந்திக்க மருத்துவப்பிரிவும் எம் போராளிகளும் தயாராக உள்ளோம். ஏன் டொக்டர் பாம்பு கடிச்சா அங்க வைச்சு ட்ரீட் பண்ண முடியாதா? முடியும் ஆனால் அதற்கு Medical Ventilator எங்களால கொண்டு போக முடியவில்ல அதனால தான் ஆக்கள இங்க கொண்டு வந்தம். அவர் கூறிய வென்டிலேட்டர் என்ற செயற்கை சுவாசக்கருவி பற்றி எதுவும் விளங்காமல் திருப்ப வினவிய போது, பாம்புக்கடி பற்றி சிறு விளக்கமே தந்தார். இந்த வகை பாம்புகள் கடித்தால் உடனடியாக நரம்பு மண்டலத்தை தாக்கும். அதிலும் சுவாசநரம்பியல் தொகுதியை முற்றமுழுதாக செயலிழக்க செய்யும். இதனால் மூச்சுத்திணறலை உருவாக்கி சுவாசப்பிரச்சனையை கொண்டுவரும் அதனால் தான் சாவுகள் நடக்கும். இதற்கு உடனடி மருத்துவம் செயற்கை முறை சுவாசம் கொடுக்கப்பட வேணும் அத்தோடு உடனடியாக ASV குடுக்க வேணும் அதாவது Anti Snake Venom (விசமுறிவு மருந்து.) இது அடிப்படை பாம்புக்கடி மருத்துவ சிகிச்சை. அதோட செயற்கை சுவாசம் குடுக்க வேண்டும். அதற்காக நாம் Ambu bag முறையில் செயற்கை சுவாசத்தை கொடுத்தோம் ஆனால் தமிழீழ மருத்துவப்பிரிவில் ஏற்பட்ட வளர்ச்சிகள் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடுகள் என்பன எமக்கு பட்டறிவைத் தந்தன. Ventilator போன்ற கருவிகளை பயன்படுத்த தொடங்கினோம் அதனூடாகவே செயற்கை சுவாசமுறமையை இலகு படுத்தினோம். இப்போதும் இந்த பாம்புக்கடி நோயாளர்களுக்கு செயற்கை சுவசம் கொடுக்க வேண்டிய தேவை எழுந்தது. ஆனால் இப்போது "வென்டிலேட்டர்" கருவியை இங்கிருந்து கழற்றி உடனே நகர்த்திக் கொண்டு செல்ல முடியாத சூழல் அதனால் இவர்களை செயற்கை சுவாசம் கொடுப்பதாற்காக அங்கிருந்து இங்கே கொண்டுவந்திருக்கிறோம். அவர் கூறிய போது என்ன டொக் சொல்லுறீங்கள் இந்த சூனியபிரதேசத்துக்கா? எம் மக்கள் எவ்வகை துன்பங்களை எல்லாம் சந்திக்கிறார்கள். என்பது புரிந்தது. அத்தோடு இந்த மருத்துவ போராளிகளும் மக்களுக்காக எத்தகைய துன்பங்களை சுமக்கின்றனர் மனம் ஒரு முறை நினைத்தாலும் டொக்டர் ஆக்களுக்கு பிரச்சனை ஒன்றுமில்லையா? ஒரே ஒரு பிள்ளை உடனடியாகவே இறந்திட்டுது. சின்ன பிள்ள இருக்கிறதுக்கு கூட இடமில்லாமல் மதகு ஒன்றுக்குள் இருந்திருக்குது. திடீர் என்று தண்ணி ஏறினதும் மதகுக்கு மேல படுத்திருக்குது பெட்சீட்டோட பாம்பு கிடந்தது தெரியாமல் இழுத்து போர்த்துக் கொண்டு கிடந்த போது பாம்பு கடிச்சிருக்கு பிள்ளைய தப்ப வைக்க முடியவில்லை. மற்ற ஆக்கள காப்பாத்திடுவம் என்று நம்புறன். அவர் எத்தனை காயங்களை கண்டிருப்பார்? எத்தனை மக்களை சந்தித்திருப்பார் ? ஆனாலும் மனது ஒரு நிலைப்பட முடியவில்லை. இயற்கையும் எம்மீது சாவினை திணிப்பது கண்டு நொந்திட வழியற்று நிற்கிறார். செல்களினால் சிதறிப்போகும் உறவகளின் குருதியை கண்ட போதும் தயங்காத அவர் இப்போது விழி கலங்கி நிற்கிறார். என்ன செய்ய என்று தெரியாத நாமும் மக்களின் துன்பங்களை எண்ணி அழுவதை தவிர வேறு எதுவும் இல்லை. இது 2008 ஆம் வருடத்தின் மாரி காலம் நடந்த சம்பவம். தாயகம் இன்று மழைநீரால் மூடப்பட்டுக்கிடக்கும் நிலை கண்டு இது நினைவில் எழுந்து ஆடியது. நன்றி தணிகை அண்ணா இ.இ.கவிமகன் நாள்: 06.12.2025
  9. 11) 10.10.1987 - கோட்டைப் படுகொலை - யாழ் 12) 11.10.1987 - பள்ளி அதிபர் தாமோதரம்பிள்ளை படுகொலை - பெரியபுலம் 13) 11.10.1987 - காங்கேசன்துறை தேடுதல் வேட்டை - வீடு 14) 11.10.1987 - புதுக்காட்டு சந்தி படுகொலை - சந்தி 15) 12.10.1987 - மல்லாகம் படுகொலை - கிராமம் 16) 12.10.1987 கொல்லங்கலட்டி படுகொலை - கிராமம் 17) 12.10.1987 - சுன்னாகம் படுகொலை - கிராமம் 18) 12.10.1987 - பிரம்படி படுகொலை - கிராமம் 19) 12.10.1987 - பொற்பதி படுகொலை (கவச வாகனங்களை ஏற்றிப் படுகொலை) 20) 19.10.1987 - யாழ் சுற்றிவளைப்பு & படுகொலை - குடியிருப்புப் பகுதி 21) 19.10.1987 - கொட்டடி, ஆனைக்கோட்டை, கொக்குவில் இராசப்பாதை, உரும்பிராய், கோப்பாய், வசாவிளான் உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய படுகொலை 22) 20.10.1987 - மன்னார் தேடுதல் வேட்டைப் படுகொலை - குடியிருப்புப் பகுதி 23) 20.10.1987 - கேரதீவு இறங்குதுறை தேடுதல் வேட்டைப் படுகொலை - குடியிருப்புப் பகுதி 24) 20.10.1987 - சுண்டுக்குளி தேடுதல் வேட்டைப் படுகொலை - குடியிருப்புப் பகுதி 25) 20.10.1987 - உரும்பிராய் தேடுதல் வேட்டைப் படுகொலை - குடியிருப்புப் பகுதி 26) 21.10.1987 - யாழ் மருத்துவர்கள் படுகொலை - மருத்துவமனை 27) 21.10.1987 - யாழ் மருத்துவமனைப் படுகொலை - மருத்துவமனை 28) 22.10.1987 - சுண்டுக்குளி தேடுதல் வேட்டை - குடியிருப்புப் பகுதி 29) 22.10.1987 - யாழ் மருத்துவமனை ஊழியர்கள் படுகொலை 30) 22.10.1987 - அராலி தேடுதல் வேட்டைப் படுகொலை 31) 22.10.1987 - சுண்டுக்குளி படுகொலை 32) 22.10.1987 - அராலித்துறை படுகொலை 33) 24.10.1987 - யாழ் மத்திய கல்லூரி மாணவர் லக்ஸ்மணன் படுகொலை 34) 24.10.1987 - கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலை 35) 25.10.1987 - கொக்குவில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீது பீரங்கித்தாக்குதல் 36) 25.10.1987 - சேரதீவு படுகொலை 37) 25.10.1987 - சந்தை மீது உலங்கு வானூர்தித் தாக்குதல் 38) 25.10.1987 - இந்துக்கல்லூரி அகதி முகாம் படுகொலை 39) 26.10.1987 - சூறாவத்தை படுகொலை 40) 26.10.1987 - அளவெட்டி படுகொலை 41) 26.10.1987 - புத்தூர் படுகொலை 42)26.10.1987 - அளவெட்டி படுகொலை 43) 26.10.1987 - புத்தூர் படுகொலை 44) 27.10.1987 - சாவகச்சேரி சந்தை, கந்தசட்டி கோயில் படுகொலை 45) 04.11.1987 | - களபூமி, வீமன்காமம், கோண்டாவில் படுகொலை 46) 05.11.1987 - மூளாய் மருத்துவமனை படுகொலை 47) 07.11.1987 - உரும்பிராய் தேடுதல் வேட்டைப்படுகொலை 48) 07.11.1987 - உரும்பிராய் படுகொலை 49) 09.11.1987 - மானிப்பாய் படுகொலை 50) 10.11.1987 - அச்சுவேலி தேடுதல் வேட்டைப் படுகொலை 51) 10.11.1987 - கோப்பாய் தேடுதல் வேட்டைப் படுகொலை 52) 10.11.1987 - அராலி தேடுதல் வேட்டைப் படுகொலை 53) 11.11.1987 - நெடுங்கேணி தேடுதல் வேட்டைப்படுகொலை 54) 12.11.1987 - இணுவில் தேடுதல் வேட்டைப்படுகொலை 55) 12.11.1987 - சுன்னாகம் தேடுதல் வேட்டைப்படுகொலை 56) 16.11.1987 - கோப்பாய் தேடுதல் வேட்டைப் படுகொலை 57) 19.11.1987 - குழந்தைகள் சுவரில் அடித்து படுகொலை 58) 20.11.1987 - அச்செழு படுகொலை 59) 21.11.1987 - ஆனைக்கோட்டைச் சந்தி பதுங்குகுழி படுகொலை 60) 30.11.1987 - மூதூர் எழுவர் படுகொலை 61) 02.12.1987 - மட்டக்களப்பு படுகொலை 62) 27.12.1987 - மட்டக்களப்பு எறிகணைவீச்சு 63) 02.12.1987 - தம்பாப்பிள்ளைசிவம் படுகொலை 64) 02.12.1987 - ஏழாலை இளைஞர்கள் படுகொலை 65) 03.12.1987 - மட்டக்களப்பு பேரூந்து படுகொலை 66) 20.12.1987 - ஊரெழு தேடுதல் வேட்டைப் படுகொலை 67) 27.12.1987 - சாவகச்சேரி பொதுச்சந்தை படுகொலை 68) 28.12.1987 - முல்லைத்தீவு நகர் படுகொலை 69) 30.12.1987 - காத்தான்குடி படகு பயணிகள் படுகொலை 70) 04.01.1988 - புதுக்குடியிருப்பு தேடுதல் வேட்டை 71) 13.01.1988 - வட்டுக்கோட்டை காவல் முகாம் படுகொலை முகாம் 72) 19.01.1988 - பாண் வியாபாரி தங்கராசா படுகொலை 73) 21.01.1988 - தாண்டியடி படுகொலை 74) 26.01.1988 - கிண்ணியடி படுகொலை 75) 02.02.1988 - வட்டக்கச்சி பதுங்குகுழி படுகொலை 76) 03.02.1988 - வட்டக்கச்சி து.கிருஷ்ணப்பிள்ளை படுகொலை 77) 08.02.1988 - தம்பிலுவில் அரசியல் பிரமுகர் நடேசன் படுகொலை 78) 08.02.1988 - ஏறாவூர் வானூர்தித் தாக்குதல் 79) 08.02.1988 - திருக்கோவிலில் குண்டு வெடித்து 9 வயது சிறுவன் சிறுவன் விஜேந்திரன் இறப்பு 80) 13.02.1988 - நாட்டுப்பற்றாளர் சிவா படுகொலை 81) 16.02.1988 - பம்பலப்பிட்டி விநாயகர் ஆலயப்படுகொலை 82) 19.02.1988 - வட அளவெட்டி அமைதிப்படை முகாம் படுகொலை 83) 04.03.1988 - கோணமலை விமானத் தாக்குதல் 84) 06.03.1988 - மட்டக்களப்பு பொதுமக்கள் படுகொலை 85) 11.03.1988 - திருமலை பேருந்து படுகொலை (வவுனியா வழியில்) 86) 11.03.1988 - முத்தையன்கட்டு படுகொலை 87) 15.03.1988 - தம்பலகாமம் எல்லை பேருந்து பயணிகள் படுகொலை 88) 15.03.1988 - ஸ்கந்தபுரம் தமிழர் படுகொலை 89) 15.03.1988 - கோட்டைக்கல்லாற்றில் பேராதனை வைத்தியபீட மாணவன் கொலை 90) 15.03.1988 - வடக்கந்தை தமிழர் படுகொலை 91) 16.03.1988 - ஸ்கந்தபுரம் துப்பாக்கிச்சூடு 92) 16.03.1988 - மட்டு தமிழ் இளைஞர் படுகொலை 93) 16.03.1988 - வந்தாறுமூலையில் இளையோர் படுகொலை 94) 22.03.1988 - ஹொரவபொத்தானை பேரூந்து பயணிகள் படுகொலை 95) 22.03.1988 - பம்பைமடு தேடுதல் வேட்டை படுகொலை 96) 05.04.1988 - இந்துக் கல்லூரி மாணவன் கொலை 97) 21.04.1988 - பண்ணாகம் தேடுதல் வேட்டை 98) 28.04.1988 - வட்டக்கச்சி கணபதிப்பிள்ளை படுகொலை 99) 10.05.1988 - கெப்பிட்டிகொலாவ தாய் - சேய் படுகொலை 100) 12.05.1988 - கிளிநொச்சியில் விவசாய ஆராய்ச்சி நிலைய ஊழியர் கொலை 101) 13.05.1988 - மணலாறு தமிழர்கள் படுகொலை 102) 13.05.1988 - விசாரணை முகாமில் மகாவித்தியாலய மாணவன் படுகொலை 103) 13.05.1988 - நாசிவன்தீவு சரிபுதீன் மொகமட் சபீர் படுகொலை 104) 14.05.1988 - திருகோணமலை பெண் திரைப்படத் தயாரிப்பாளர் கொலை (ஒட்டுக்குழு + IPKF) 105) 16.05.1988 - கிராம சேவையாளர் கடத்தல் (வெற்றிலைக்கேணி சேவையகம்) 106) 17.05.1988 - மல்லாவி விவசாயி படுகொலை 107) 19.05.1988 - மதவாச்சிபாரவூர்திக்கு தீ வைப்பு 108) 27.05.1988 - பிரசைகள் குழுத்தலைவர் படுகொலை (ஆரையம்பதி வீதி) 109) 01.06.1988 - உரும்பிராய் நாட்டுப்பற்றாளர் பாக்கியம் அக்கா படுகொலை (ஒட்டுக்குழு + IPKF) 110) 01.06.1988 - நல்லூர் நாட்டுப்பற்றாளர் க.நடராசா படுகொலை (ஒட்டுக்குழு + IPKF) 111) 11.06.1988 - கிரான்குளம் பொதுமகன் படுகொலை 112) 01.07.1988 - பாவற்குளம் பொதுமகன் படுகொலை 113) 06.06.1988 - அருட்திரு. சந்திரா பெர்னாண்டோ படுகொலை 114) 03.07.1988 - நெடுங்கேணி தாய், மகள் வல்லுறவுப் படுகொலை 115) 08.07.1988 - நவஜீவனம் தேடுதல் வேட்டைப் படுகொலை 116) 09.07.1988 - இராமநாதபுரம் தேடுதல் வெட்டிப்படுகொலை 117) 12.07.1988 - சில்லாலை நீர்ப்பாசன இலாகா அலுவலப் படுகொலை 118) 13.07.1988 - ஆரையம்பதி விசாரணை முகாம் இளைஞர் படுகொலை 119) 13.07.1988 - இன்பருட்டியில் சிற்றூர்தி மீதான தாக்குதல் 120) 15.07.1988 - பரந்தன் சந்தி தேடுதல் வேட்டை 121) 15.07.1988 - தமிழ்ப்பொதுமகன் படுகொலை (தள்ளாடி முகாம்) 122) 18.07.1988 - பரந்தன் தமிழ்ப்பொதுமகன் படுகொலை 123) 18.07.1988 - கம்பர்மலை இளைஞர் கைது - படுகொலை 124) 04.08.1988 - பரந்தன் குடியிருப்புப் பகுதி படுகொலை 125) 15.08.1988 - யாழ் நாட்டுப்பற்றாளர் இரங்கநாதன் படுகொலை 126) 16.08.1988 - திருகோணமலை வீதி துப்பாக்கிச்சூடு 127) 18.08.1988 - பேராதனை பல்கலை., பொறியியல் பீடம் மீதான தாக்குதல் 128) 24.08.1988 - நாட்டுப்பற்றாளர் துரைராசா படுகொலை (உரும்பிராய்) 129) 31.08.1988 - முல்லைத்தீவு மருத்துவமனை ஊழியர் சுட்டுக்கொலை 130) 05.09.1988 -மட்டக்களப்பு விசாரணை முகாம் படுகொலை 131) 08.09.1988 - நுணா தேடுதல் வேட்டைப் படுகொலை 132) 11.09.1988 - ஈச்சமோட்டை பொறியியலாளர் படுகொலை (நல்லூர் நாவலர் மண்டபம்) 133) 17.09.1988 - நல்லூர் வீதி தேடுதல் வேட்டை படுகொலை 134) 23.09.1988 - செல்வக்குமார் படுகொலை (யாழ் வீதி) 135) 25.09.1988 - பட்டிருப்பு பொதுமக்கள் படுகொலை 136) 29.09.1988 - யாழ்ப்பாணம் இராமலிங்கம் வீதி இளைஞர் படுகொலை 137) 02.10.1988 - சிறுப்பிட்டி மாணவன் நந்தன் சுட்டுக்கொலை 138) 04.10.1988 - கெருடாவில் தந்தை, மகன் படுகொலை 139) 04.10.1988 - சாளம்பைக்குளம் படுகொலை 140) 04.10.1988 - யாழ் மத்திய பேருந்து நிலைய படுகொலை 141) 04.10.1988 - பூநகரி மரத்தடி படுகொலை 142) 05.10.1988 - மின்சாரம் பாய்ச்சிக்கொல்லப்பட்ட துரையம்மா (விசாரணை சித்ரவதை) 143) 05.10.1988 - இடைக்காடு தமிழர்கள் படுகொலை 144) 06.10.1988 - மயிலங்காடு பொன்னம்பலம் சுட்டுக்கொலை 145) 06.10.1988 - மட்டக்களப்பு உபதபாலதிபர் சுட்டுக்கொலை (காங்கேயன் ஓடை) 146) 09.10.1988 - இராணுவ முகாமில் மட்டக்களப்பு மாணவன் படுகொலை 147) 11.10.1988 - திருமலை வீதி தேடுதல் வேட்டை 148) 11.10.1988 - ஈரற் பெரியகுளம் பேருந்து படுகொலை 148) 11.10.1988 - கட்டைபறிச்சான் படுகொலை 148) 13.10.1988 - ரவி சுட்டுப்படுகொலை 149) 13.10.1988 - தெல்லிப்பழை வீதி படுகொலை 150) 13.10.1988 - இணுவில் வீதி படுகொலை 151) 14.10.1988 - யாழ் கதிர்காமநாதன் படுகொலை 152) 14.10.1988 - பொன்னையா சிறிதரன் படுகொலை 153) 17.10.1988 - மங்களஓயா படுகொலை 154) 18.10.1988 - குளிர்பான நிலையம் மானிப்பாய் சற்குணராசா படுகொலை 155) 21.10.1988 - செல்வராசா விசாரணைப் படுகொலை 156) 21.10.1988 - தமிழீழ மக்கள் மன்றத்தலைவர் சிவானந்தசுந்தரம் படுகொலை (வெலிங்டன் சந்தி) 157) 22.10.1988 - ஊர்காவற்றுறை புதுமணத் தம்பதியர் கொலை (பொன்னாச்சி கடைச்சந்தி) 158) 22.10.1988 - கிற்றார் கலைஞர் கி.செல்லையா படுகொலை (இசைக்கூடம்) 159) 22.10.1988 - பொன்னாச்சி இளம்தம்பதியார் படுகொலை (கடைச்சந்தி) 160) 25.10.1988 - விஞ்ஞான ஆசிரியர் படுகொலை (யாழ் மருத்துவமனை வீதி) 161) 25.10.1988 - சுகாதார அத்தியட்சகர் பணிமனை படுகொலை 162) 25.10.1988 - மல்லாகம் வர்த்தகர்சங்கத் தலைவர் படுகொலை 163) 25.10.1988 - வவுனியா சுகாதார பணிமனை படுகொலை 164) 25.10.1988 - சங்கானை ஆசிரியர் படுகொலை 165) 25.10.1988 - மல்லாகம் வர்த்தக சங்கத் தலைவர் சிவதாசபிள்ளை படுகொலை 166) 26.10.1988 - கரடிக்குழி படுகொலை 167) 26.10.1988 - மறிச்சுக்கட்டி படுகொலை 168) 31.10.1988 - நெடுங்கேணி படுகொலை 169) 31.10.1988 - யாஸ் பரியோவான் கல்லூரி மாணவர் சுட்டுக்கொலை 170) 31.10.1988 - நுணாவில் தேடுதல் வேட்டை 171) 31.10.1988 - மகாவித்தியாலய மாணவர்கள் படுகொலை 172) 02.11.1988 - நாட்டுப்பற்றாளர் வெள்ளையன் படுகொலை 173) 02.11.1988 - கனகராயன்குளம் படுகொலை 174) 02.11.1988 - சகோதரர்கள் உயிருடன் எரித்துக்கொலை 175) 02.11.1988 - பண்டத்தரிப்பு தேடுதல் வேட்டைப்படுகொலை 176) 03.11.1988 - சரசாலை நாட்டுப்பற்றாளர் சுந்தரம் படுகொலை 177) 04.11.1988 - புங்குடுதீவு கடற்றொழிலாளர்கள் படுகொலை 178) 04.11.1988 - பச்சனூர் படுகொலை 179) 04.11.1988 - இணுவில் நாட்டுப்பற்றாளர் தனபாலசிங்கம் படுகொலை 180) 04.11.1988 - புங்குடுதீவு படுகொலை 181) 05.11.1988 - சாவகச்சேரி வர்த்தகர் சங்கத் தலைவர் செல்வராசா படுகொலை 182) 06.11.1988 - ஆனையிறவு குடியிருப்புப் பகுதி படுகொலை 183) 07.11.1988 - மூதூர் 55ஆம் கட்டைபகுதி படுகொலை 184) 07.11.1988 - மூதூர் நாட்டுப்பற்றாளர் ரகு படுகொலை 185) 08.11.1988 - அளவெட்டி நாட்டுப்பற்றாளர் பிரேம்குமார் படுகொலை 186) 08.11.1988 - சாவகச்சேரிதமிழ் மாணவன் படுகொலை 187) 08.11.1988 - பண்டத்தரிப்பு பிரசைகள் குழுவினர் படுகொலை 188) 09.11.1988 - வடமராட்சி அட்டூழியம் 189) 11.11.1988 - மன்னார் உயர்வகுப்பு மாணவன் படுகொலை 190) 11.11.1988 - ஆசிரியர் பாலகிருஷ்ண படுகொலை 191) 12.11.1988 - பொருளியல் ஆசிரியர் கிருஷ்ணானந்தன் படுகொலை 192) 12.11.1988 - சரசாலை தமிழ் இளைஞர் படுகொலை 193) 13.11.1988 - மகேந்திரநாதன் படுகொலை 194) 13.11.1988 -தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் படுகொலை (மாம்பழம் சந்தி - அரியாலை) 195) 13.11.1988 - ஊரிக்காடு தேடுதல் வேட்டைப் படுகொலை 196) 13.11.1988 - திருநெல்வேலி நாட்டுப்பற்றாளர் வைகுந்தவாசன் படுகொலை 197) 14.11.1988 - முல்லைத்தீவு நாட்டுப்பற்றாளர்கள் சங்கர்-கிளியன் கொலை 198) 16.11.1988 - சங்கத்தானை நாட்டுப்பற்றாளர் குணாளன் படுகொலை 199) 16.11.1988 - இருதயக்கல்லூரி தேடுதல் வேட்டை 200) 17.11.1988 - பொத்துவில் படுகொலை 201) 17.11.1988 - முல்லைத்தீவு குடியிருப்புப் படுகொலை 202) 19.11.1988 - மகாவித்தியாலய மாணவன் படுகொலை 203) 21.11.1988 - கோணாவில் நாட்டுப்பற்றாளர் சங்கரன் படுகொலை 204) 22.11.1988 வவுனியா நாட்டுப்பற்றாளர் பூலோகசிங்கம் படுகொலை 205) 22.11.1988 - பாவற்குளம் 4 ஆம் படிவம் படுகொலை 206) 22.11.1988 - கல்முனை படுகொலை 207) 23.11.1988 - யாழ் செயலக கணக்காளர் படுகொலை 208) 23.11.1988 - திருகோணமலை தேடுதல் நடவடிக்கை 209) 25.11.1988 - கடற்றொழிலாளி படுகொலை 210) 26.11.1988 - வட்டக்கச்சி கட்சன் வீதி படுகொலை 211) 27.11.1988 - வட்டகச்சி கண்ணிவெடி படுகொலை 212) 27.11.1988 - யாழ் பேராலய இளைஞர் படுகொலை 213) 28.11.1988 - நாவற்குழி நாட்டுப்பற்றாளர் மனோகரி படுகொலை 214) 28.11.1988 - நாவற்குழி தேடுதல் வேட்டை படுகொலை 215) 29.11.1988 - இணுவில் மருத்துவமனையில் நோயாளி இளம்பெண் படுகொலை 216) 30.11.1988 - மூதூர் தமிழர்கள் படுகொலை 217) 01.12.1988 - புத்தூர் புத்தெழில் ஆசிரியர் திருஞானம் படுகொ (தேசவிரோதிகள் + IPKF)லை 218) 03.12.1988 - கருகம்பனை சிவதாசன் நிர்மலன் படுகொலை 219) 03.12.1988 - பற்றிக்சுவீதி தமிழர் படுகொலை 220) 04.12.1988 - ஆசிரியர் கருணானந்தசிவம் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF) 221) 05.12.1988 - வவுனிக்குளம் படுகொலை 222) 07.12.1988 - காணிக்கை மாதா கோயில் படுகொலை 223) 08.12.1988 - யாழ் சிற்றூர்தி சங்கத்தலைவர் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF) 224) 09.12.1988 - காங்கேசன்துறை மாணவன் படுகொலை 225) 12.12.1988 - திருகோணமலை எறிகணைத்தாக்குதல் 226) 15.12.1988 - ஊரெழு தேவதாசன் படுகொலை (கோப்பாய் முகாம், தேசவிரோதிகள் + IPKF) 227) 17.12.1988 - அக்கரைப்பற்று படுகொலை 228) 17.12.1988 - ஆலையடிவேம்பு படுகொலை 229) 19.12.1988 - சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவர்கள் படுகொலை 230) 19.12.1988 - ஆனைக்கோட்டை படுகொலை 231) 19.12.1988 - அளவெட்டி நாட்டுப்பற்றாளர்கள் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF) 232) 19.12.1988 - மன்னார் இளைஞர்கள் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF) 233) 21.12.1988 - அப்புத்தளை மலையகம் தமிழிளைஞர்கள் படுகொலை 234) 23.12.1988 - மானிப்பாய் ஜெயதாசன் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF) 235) 27.12.1988 - மட்டக்களப்பு அட்டூழியம் 236) 02.01.1989 - ஒட்டிசுட்டான் துப்பாக்கிச்சூடு 237) 07.01.1989 - கண்டாவளை தேடுதல் வேட்டை 238) 08.01.1989 - இராமநாதபுரம் பழைய கண்டி வீதி கண்ணிவெடி வெடிப்பு 239) 09.01.1989 - அக்கரைப்பற்று பேரூந்து நிலைய காவல் சோதனை படுகொலை 240) 13.01.1989 - பண்டத்தரிப்பு தேடுதல் வேட்டை படுகொலை 241) 17.01.1989 - காத்தார் சின்னக்குளம் படுகொலை 242) 20.01.1989 - மன்னார் காவல் நிலைய படுகொலை 243) 26.01.1989 - இந்துக் கல்லூரி படுகொலை 244) 28.01.1989 - அரியாலை பொதுமக்கள் படுகொலை 245) 29.01.1989 - அளம்பில் தேடுதல் வேட்டை 246) 30.01.1989 - ஆறுகால்மடம் தொழில் நுட்பக்கல்லூரி மாணவர் படுகொலை 247) 31.01.1989 - கரவெட்டி இராணுவ முற்றுகை படுகொலை 248) 03.02.1989 - மிருசுவில் சிவரஞ்சன் சுட்டுக்கொலை 249) 08.02.1989 - பிறவுண்வீதி இளைஞர் படுகொலை (கிழக்கு கொக்குவில்) 250) 10.02.1989 - பேசாலை படுகொலை 251)15.02.1989 - மாவிட்டபுரம் மின்சாரம் பாய்ச்சிக் கொல்லப்பட்ட இளைஞர் 252) 15.02.1989 - முள்ளியவளை செல்வரட்ணம் சுதர்சன் படுகொலை 253) 15.02.1989 - உடுப்பிட்டி முகாமில் யாழ் சகோதரிகள் சுட்டுக்கொலை 254) 16.02.1989 - மொறக்கொட்டாஞ்சேனை படுகொலை (டெலோ + IPKF) 255) 22.02.1989 - நெல்லியடி மருத்துவமனைக் காவலாளி படுகொலை 256) 23.02.1989 - துன்னாலை எறிகணைத் தாக்குதல் 257) 23.02.1989 - திக்கம் மக்கள் படுகொலை 258) 01.03.1989 - புத்தூர் தேடுதல் வேட்டை படுகொலை 259) 14.03.1989 - பளை தேடுதல் வேட்டைப் படுகொலை 260) 16.03.1989 - மட்டுவில் தேடுதல் வேட்டை 261) 19.03.1989 - மணற்காட்டு தமிழ் இளைஞர்கள் படுகொலை 262) 11.04.1989 - காட்டுமுறி தமிழ்ப்பொதுமகன் படுகொலை 263) 14.04.1989 - கரம்பன் மேற்கு பக்தி கிராமம் கிராமசேவகர் படுகொலை 264) 25.04.1989 - கட்டுவன்புலம் பள்ளி மாணவன் படுகொலை 265) 01.05.1989 - நாட்டுப்பற்றாளர்கள் சிறி.முறிசெல்வம் & செ.பாலேந்திரன் படுகொலை (வவுனியா சிறை) 266) 02.05.1989 - பருத்தித்துறை தேடுதல் வேட்டை 267) 03.05.1989 - மல்லாகம் செல்லையா நிர்மலன் படுகொலை 268) 03.05.1989 - புங்குடுதீவு முருகேசு குகதாஸ் படுகொலை 269) 14.05.1989 - மிருசுவில் பேருந்து மீது தாக்குதல் 270) 14.05.1989 - மணலாறு உணவு விடுதி படுகொலை 271) 14.05.1989 - யாழ் மருத்துவமனையில், தமிழிளைஞரை சடலமாக ஒப்படைத்தது 272) 16.05.1989 - தரவத்தை விவசாயப் பெண் கூலித்தொழிலாளர் கடத்தல் 273) 16.05.1989 - பால்நிலைய அதிபர் படுகொலை 274) 16.05.1989 - புத்தூர் வாதரவத்தை படுகொலை 275) 17.05.1989 - மல்லாவி பெண் படுகொலை 276) 17.05.1989 - அத்தியாயர் கல்லூரி மாணவன் படுகொலை 277) 17.05.1989 - புன்னாலைக்கட்டுவன் படுகொலை 278) 18.05.1989 - புத்தூர் தேடுதல் வேட்டை படுகொலை 279) 19.05.1989 - உரும்பிராய் தமிழ்ப்பொதுமகன் படுகொலை 280) 20.05.1989 - சுதுமலை படுகொலை 281) 20.05.1989 - நிலாவெளி கோயில் படுகொலை (ஈபிஆர்எல்எஃப் ஒட்டுக்குழு + IPKF) 282) 23.05.1989 - கிளிநொச்சி பிரசைகள் குழுப்பிரமுகர் கொலை (கனகபுரம் - ஈபிஆர்எல்எஃப் ஒட்டுக்குழு + IPKF) 283) 28.05.1989 - வந்தாறுமூலை இளைஞர்கள் படுகொலை (ஈபிஆர்எல்எஃப் ஒட்டுக்குழு + IPKF) 284) 28.05.1989 - தமிழ்ப்பொதுமகன் சுட்டுக்கொலை (சாவச்சேரி) 285) 28.05.1989 - வண்ணார்பண்ணை இருதமிழர் சுட்டுக்கொலை (நாகர்கோவில்) 286) 01.06.1989 - நாவாந்துறை தேடுதல் வேட்டைப் படுகொலை 287) 01.06.1989 - திருநெல்வேலி தேடுதல் வேட்டைப் படுகொலை 288) 01.06.1989 - மாணிக்கம் யோகேந்திரன் படுகொலை 289) 01.06.1989 - ஏழாலை தேடுதல் வேட்டைப் படுகொலை 290) 01.06.1989 - வைத்தீஸ்வரா கல்லூரி மாணவர் ஆனந்தராசா படுகொலை 291) 04.06.1989 - கட்டுடைச்சந்தி வணிகர் கணபதிப்பிள்ளை படுகொலை 292) 04.06.1989 - பிராம்பத்தை கோடீஸ்வரி பத்மநாதன் படுகொலை 293) 04.06.1989 - தபால்பெட்டிச்சந்தியில் அரியாலை தமிழ்ப்பொதுமகன் படுகொலை 294) 05.06.1989 - வரணி எறிகுண்டுத் தாக்குதல் 295) 05.06.1989 - கண்டிக்காடு படுகொலை 296) 17.06.1989 - சங்கத்தானை தேடுதல் வேட்டை 297) 19.06.1989 - கோப்பாய் சண் படுகொலை 298)19.06.1989 - புதுக்குடியிருப்பு பேபி படுகொலை 299)20.06.1989 - கந்தர்மடம் சண்முகம் உதயவர்மன் படுகொலை 300) 20.06.1989 - மாவிட்டபுரம் கந்தையா குஞ்சுக்கிளி படுகொலை 301) 20.06.1989 - முருகுசசிக்குமார் படுகொலை 302) 20.06.1989 - யாழ் வைத்தியசாலையில் முகமாலை நாகேந்திரராசா படுகொலை 303) 24.06.1989 - நாகர்கோவில் தேடுதல் வேட்டை 304) 24.06.1989 - கந்தரோடை கணேசகுமார் படுகொலை 305) 24.06.1989 - தாண்டிக்குளம் பெரியதம்பி படுகொலை 306) 24.06.1989 - வேப்பங்குளம் மோகன்ராஜ் படுகொலை 307) 24.06.1989 - வல்லிபுரம் முருகேசு படுகொலை 308) 24.06.1989 - நெடுந்தீவு ஏரம்புநடராசா படுகொலை 309) 26.06.1989 - அத்தாய் மகேந்திரராசா படுகொலை 310) 28.06.1989 - அல்வாய் மாலிசந்தி தேடுதல் வேட்டைப் படுகொலை 311) 28.06.1989 - நந்தாவில் அம்மன்கோவிலடி படுகொலை 312) 28.06.1989 - பண்டத்தரிப்பில் இளைஞர் சடலம் மீட்பு 313) 28.06.1989 - அளவெட்டி தேடுதல் வேட்டைப் படுகொலை 314) 28.06.1989 - மிருசுவில் தேடுதல் வேட்டைப் படுகொலை ஆசைப்பிள்ளை ஏற்றம் 315) 28.06.1989 - செல்வம் அக்கா சித்ரவதை படுகொலை (ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு + IPKF) 316) 28.06.1989 - புலோலிகந்த முருகேசனார் சிலை தமிழ்ப்பெண் சுட்டுப்படுகொலை 317) 29.06.1989 - அளம்பில் துப்பாக்கிச்சூடு 318) 29.06.1989 - நீர்வேலி பெண்கள் வன்படுகொலை 319) 03.07.1989 - ஓமந்தை எறிகணைத் தாக்குதல் 320) 03.07.1989 - கிளிநொச்சி துப்பாக்கிச்சூடு 321) 18.07.1989 - திருகோணமலை தேடுதல் வேட்டை 322) 19.07.1989 - பாரதிபுரம் தேடுதல் வேட்டை படுகொலை 323) 24.07.1989 - உயரப்புலம் தமிழிளைஞர் சுட்டுப்படுகொலை 324) 26.07.1989 - அல்வாய் ஆசிரியர் சின்னத்தம்பி படுகொலை 325) 26.07.1989 - தெல்லிப்பளை ரவீந்திரன் படுகொலை 326) 26.07.1989 - ஓராம்கட்டை இராணுவ நடவடிக்கை 327) 02.08.1989 - தீருவில் தேடுதல் வேட்டைப் படுகொலை 328) 02.08.1989 - அரியாலை இளைஞர் கைது 329) 02.08.1989 - வல்வெட்டித்துறை படுகொலை (மருத்துவமனை, சமூக நிலையம், கோயில், குடியிருப்புப் பகுதி) 330) 02.08.1989 - வல்வை 15 பெண்கள் பாலியல் வன்படுகொலை 331) 04.08.1989 - கீரிமலை தேடுதல் வேட்டைப் படுகொலை 332) 07.08.1989 - புன்னாலைக்கட்டுவன் தேடுதல் படுகொலை 333) 07.08.1989 - புன்னாலைக்கட்டுவன் எறிகணைத்தாக்குதல் 334) 10.08.1989 - கோண்டாவில் இளைஞர் சடலமாக மீட்பு 335) 14.08.1989 - பருத்தித்துறை வியாபாரி எரித்துப்படுகொலை 336) 14.08.1989 - மூலை நடன ஆசிரியர் படுகொலை 337) 14.08.1989 - யாக்கரை எறிகணைவீச்சு படுகொலை 338) 17.08.1989 - நெடுங்கேணி தமிழ்க்குழந்தைகள் படுகொலை 339) 17.08.1989 - கன்னியர்மட மாணவியர் வன்படுகொலை (எழுதுமட்டுவாள்) 340) 17.08.1989 - உடுப்பிட்டி இமையணனை படுகொலை (கரவெட்டி வதிரிச்சந்தி) 341) 18.08.1989 - ஐயன்குளம் படுகொலை 342) 18.08.1989 - நுணா சிறுவன் சுட்டுக்கொலை 343) 21.08.1989 - வடமராட்சி தேடுதல் வேட்டைப் படுகொலை (திக்கம், அல்வாய் பகுதிகளில்) 344) 21.08.1989 - மாணவன் அருளானந்தம் சுதாகரன் கொலை 345) 21.08.1989 - கந்தளாய் படுகொலை 346) 23.08.1989 - மன்னார் தேடுதல் வேட்டைப் படுகொலை 347) 23.08.1989 - மாவிட்டபுரம் வியாபாரி படுகொலை 348) 25.08.1989- ஆவரங்கால் இந்திரன் சுட்டுப்படுகொலை 349) 27.08.1989 - பேசாலை எறிகணைத்தாக்குதல் 350) 31.08.1989 - ஆவிரங்கால் விவசாயி சுட்டுக்கொலை 351) 02.09.1989 - ஆண்டான்வளவு தேடுதல் வேட்டை 352) 02.09.1989 - ஆண்டான் வளவுப் பகுதியில் தமிழ்ப்பொதுமகன் படுகொலை 353) 08.09.1989 - பருத்தித்துறை பொதுமக்கள் படுகொலை 354) 17.09.1989 - கிளிநொச்சி முகாம் படுகொலை 355) 18.09.1989 - புற்றளை தேடுதல் வேட்டைப் படுகொலை 356) 22.09.1989 - நமசிவாயம் தெய்வேந்திரன் படுகொலை 357) 23.09.1989 - இயக்கச்சி நாட்டுப்பற்றாளர் தர்மகுலேந்திரன் படுகொலை 358) 25.09.1989 - பண்டத்தரிப்பு தேடுதல் வேட்டைப் படுகொலை 359) 26.10.1989 - கரடிக்குழி தேடுதல் வேட்டைப் படுகொலை 360) 26.10.1989 - மறிச்சுக்கட்டி தேடுதல் வேட்டை 361) 29.10.1989 - யாழ் நாட்டுப்பற்றாளர் ரவீந்திரன் படுகொலை 362) 17.11.1989 - மானிப்பாய் செல்லத்தம்பி படுகொலை 363) 26.11.1989 - கிளாலி நாட்டுப்பற்றாளர் பவுண் படுகொலை 364) 10.12.1989 - மன்னார் பெண் குழந்தை படுகொலை 365) 28.12.1989 - யாழ் நாட்டுப்பற்றாளர் பாலா படுகொலை 366) 12.01.1990 - கோண்டாவில் நாட்டுப்பற்றாளர் சின்னத்துரை படுகொலை (இப்பட்டியல் The North-East Secretariat on Human Rights (NESOHR), Voice உலகத்தமிழர்கள் உரிமைகள் குரல் அமைப்பு, Tamil Nation, ஆகியவை வெளியிட்ட ஆவணங்கள் & நூல்களில் இருந்து பெறப்பட்டவையாகும்.இந்திய ஆக்கிரமிப்புப் படைகள் ஈழத்தில் நடத்திய படுகொலைகளின் பட்டியல். 11) 10.10.1987 - கோட்டைப் படுகொலை - யாழ் 12) 11.10.1987 - பள்ளி அதிபர் தாமோதரம்பிள்ளை படுகொலை - பெரியபுலம் 13) 11.10.1987 - காங்கேசன்துறை தேடுதல் வேட்டை - வீடு 14) 11.10.1987 - புதுக்காட்டு சந்தி படுகொலை - சந்தி 15) 12.10.1987 - மல்லாகம் படுகொலை - கிராமம் 16) 12.10.1987 கொல்லங்கலட்டி படுகொலை - கிராமம் 17) 12.10.1987 - சுன்னாகம் படுகொலை - கிராமம் 18) 12.10.1987 - பிரம்படி படுகொலை - கிராமம் 19) 12.10.1987 - பொற்பதி படுகொலை (கவச வாகனங்களை ஏற்றிப் படுகொலை) 20) 19.10.1987 - யாழ் சுற்றிவளைப்பு & படுகொலை - குடியிருப்புப் பகுதி 21) 19.10.1987 - கொட்டடி, ஆனைக்கோட்டை, கொக்குவில் இராசப்பாதை, உரும்பிராய், கோப்பாய், வசாவிளான் உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய படுகொலை 22) 20.10.1987 - மன்னார் தேடுதல் வேட்டைப் படுகொலை - குடியிருப்புப் பகுதி 23) 20.10.1987 - கேரதீவு இறங்குதுறை தேடுதல் வேட்டைப் படுகொலை - குடியிருப்புப் பகுதி 24) 20.10.1987 - சுண்டுக்குளி தேடுதல் வேட்டைப் படுகொலை - குடியிருப்புப் பகுதி 25) 20.10.1987 - உரும்பிராய் தேடுதல் வேட்டைப் படுகொலை - குடியிருப்புப் பகுதி 26) 21.10.1987 - யாழ் மருத்துவர்கள் படுகொலை - மருத்துவமனை 27) 21.10.1987 - யாழ் மருத்துவமனைப் படுகொலை - மருத்துவமனை 28) 22.10.1987 - சுண்டுக்குளி தேடுதல் வேட்டை - குடியிருப்புப் பகுதி 29) 22.10.1987 - யாழ் மருத்துவமனை ஊழியர்கள் படுகொலை 30) 22.10.1987 - அராலி தேடுதல் வேட்டைப் படுகொலை 31) 22.10.1987 - சுண்டுக்குளி படுகொலை 32) 22.10.1987 - அராலித்துறை படுகொலை 33) 24.10.1987 - யாழ் மத்திய கல்லூரி மாணவர் லக்ஸ்மணன் படுகொலை 34) 24.10.1987 - கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலை 35) 25.10.1987 - கொக்குவில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீது பீரங்கித்தாக்குதல் 36) 25.10.1987 - சேரதீவு படுகொலை 37) 25.10.1987 - சந்தை மீது உலங்கு வானூர்தித் தாக்குதல் 38) 25.10.1987 - இந்துக்கல்லூரி அகதி முகாம் படுகொலை 39) 26.10.1987 - சூறாவத்தை படுகொலை 40) 26.10.1987 - அளவெட்டி படுகொலை 41) 26.10.1987 - புத்தூர் படுகொலை 42)26.10.1987 - அளவெட்டி படுகொலை 43) 26.10.1987 - புத்தூர் படுகொலை 44) 27.10.1987 - சாவகச்சேரி சந்தை, கந்தசட்டி கோயில் படுகொலை 45) 04.11.1987 | - களபூமி, வீமன்காமம், கோண்டாவில் படுகொலை 46) 05.11.1987 - மூளாய் மருத்துவமனை படுகொலை 47) 07.11.1987 - உரும்பிராய் தேடுதல் வேட்டைப்படுகொலை 48) 07.11.1987 - உரும்பிராய் படுகொலை 49) 09.11.1987 - மானிப்பாய் படுகொலை 50) 10.11.1987 - அச்சுவேலி தேடுதல் வேட்டைப் படுகொலை 51) 10.11.1987 - கோப்பாய் தேடுதல் வேட்டைப் படுகொலை 52) 10.11.1987 - அராலி தேடுதல் வேட்டைப் படுகொலை 53) 11.11.1987 - நெடுங்கேணி தேடுதல் வேட்டைப்படுகொலை 54) 12.11.1987 - இணுவில் தேடுதல் வேட்டைப்படுகொலை 55) 12.11.1987 - சுன்னாகம் தேடுதல் வேட்டைப்படுகொலை 56) 16.11.1987 - கோப்பாய் தேடுதல் வேட்டைப் படுகொலை 57) 19.11.1987 - குழந்தைகள் சுவரில் அடித்து படுகொலை 58) 20.11.1987 - அச்செழு படுகொலை 59) 21.11.1987 - ஆனைக்கோட்டைச் சந்தி பதுங்குகுழி படுகொலை 60) 30.11.1987 - மூதூர் எழுவர் படுகொலை 61) 02.12.1987 - மட்டக்களப்பு படுகொலை 62) 27.12.1987 - மட்டக்களப்பு எறிகணைவீச்சு 63) 02.12.1987 - தம்பாப்பிள்ளைசிவம் படுகொலை 64) 02.12.1987 - ஏழாலை இளைஞர்கள் படுகொலை 65) 03.12.1987 - மட்டக்களப்பு பேரூந்து படுகொலை 66) 20.12.1987 - ஊரெழு தேடுதல் வேட்டைப் படுகொலை 67) 27.12.1987 - சாவகச்சேரி பொதுச்சந்தை படுகொலை 68) 28.12.1987 - முல்லைத்தீவு நகர் படுகொலை 69) 30.12.1987 - காத்தான்குடி படகு பயணிகள் படுகொலை 70) 04.01.1988 - புதுக்குடியிருப்பு தேடுதல் வேட்டை 71) 13.01.1988 - வட்டுக்கோட்டை காவல் முகாம் படுகொலை முகாம் 72) 19.01.1988 - பாண் வியாபாரி தங்கராசா படுகொலை 73) 21.01.1988 - தாண்டியடி படுகொலை 74) 26.01.1988 - கிண்ணியடி படுகொலை 75) 02.02.1988 - வட்டக்கச்சி பதுங்குகுழி படுகொலை 76) 03.02.1988 - வட்டக்கச்சி து.கிருஷ்ணப்பிள்ளை படுகொலை 77) 08.02.1988 - தம்பிலுவில் அரசியல் பிரமுகர் நடேசன் படுகொலை 78) 08.02.1988 - ஏறாவூர் வானூர்தித் தாக்குதல் 79) 08.02.1988 - திருக்கோவிலில் குண்டு வெடித்து 9 வயது சிறுவன் சிறுவன் விஜேந்திரன் இறப்பு 80) 13.02.1988 - நாட்டுப்பற்றாளர் சிவா படுகொலை 81) 16.02.1988 - பம்பலப்பிட்டி விநாயகர் ஆலயப்படுகொலை 82) 19.02.1988 - வட அளவெட்டி அமைதிப்படை முகாம் படுகொலை 83) 04.03.1988 - கோணமலை விமானத் தாக்குதல் 84) 06.03.1988 - மட்டக்களப்பு பொதுமக்கள் படுகொலை 85) 11.03.1988 - திருமலை பேருந்து படுகொலை (வவுனியா வழியில்) 86) 11.03.1988 - முத்தையன்கட்டு படுகொலை 87) 15.03.1988 - தம்பலகாமம் எல்லை பேருந்து பயணிகள் படுகொலை 88) 15.03.1988 - ஸ்கந்தபுரம் தமிழர் படுகொலை 89) 15.03.1988 - கோட்டைக்கல்லாற்றில் பேராதனை வைத்தியபீட மாணவன் கொலை 90) 15.03.1988 - வடக்கந்தை தமிழர் படுகொலை 91) 16.03.1988 - ஸ்கந்தபுரம் துப்பாக்கிச்சூடு 92) 16.03.1988 - மட்டு தமிழ் இளைஞர் படுகொலை 93) 16.03.1988 - வந்தாறுமூலையில் இளையோர் படுகொலை 94) 22.03.1988 - ஹொரவபொத்தானை பேரூந்து பயணிகள் படுகொலை 95) 22.03.1988 - பம்பைமடு தேடுதல் வேட்டை படுகொலை 96) 05.04.1988 - இந்துக் கல்லூரி மாணவன் கொலை 97) 21.04.1988 - பண்ணாகம் தேடுதல் வேட்டை 98) 28.04.1988 - வட்டக்கச்சி கணபதிப்பிள்ளை படுகொலை 99) 10.05.1988 - கெப்பிட்டிகொலாவ தாய் - சேய் படுகொலை 100) 12.05.1988 - கிளிநொச்சியில் விவசாய ஆராய்ச்சி நிலைய ஊழியர் கொலை 101) 13.05.1988 - மணலாறு தமிழர்கள் படுகொலை 102) 13.05.1988 - விசாரணை முகாமில் மகாவித்தியாலய மாணவன் படுகொலை 103) 13.05.1988 - நாசிவன்தீவு சரிபுதீன் மொகமட் சபீர் படுகொலை 104) 14.05.1988 - திருகோணமலை பெண் திரைப்படத் தயாரிப்பாளர் கொலை (ஒட்டுக்குழு + IPKF) 105) 16.05.1988 - கிராம சேவையாளர் கடத்தல் (வெற்றிலைக்கேணி சேவையகம்) 106) 17.05.1988 - மல்லாவி விவசாயி படுகொலை 107) 19.05.1988 - மதவாச்சிபாரவூர்திக்கு தீ வைப்பு 108) 27.05.1988 - பிரசைகள் குழுத்தலைவர் படுகொலை (ஆரையம்பதி வீதி) 109) 01.06.1988 - உரும்பிராய் நாட்டுப்பற்றாளர் பாக்கியம் அக்கா படுகொலை (ஒட்டுக்குழு + IPKF) 110) 01.06.1988 - நல்லூர் நாட்டுப்பற்றாளர் க.நடராசா படுகொலை (ஒட்டுக்குழு + IPKF) 111) 11.06.1988 - கிரான்குளம் பொதுமகன் படுகொலை 112) 01.07.1988 - பாவற்குளம் பொதுமகன் படுகொலை 113) 06.06.1988 - அருட்திரு. சந்திரா பெர்னாண்டோ படுகொலை 114) 03.07.1988 - நெடுங்கேணி தாய், மகள் வல்லுறவுப் படுகொலை 115) 08.07.1988 - நவஜீவனம் தேடுதல் வேட்டைப் படுகொலை 116) 09.07.1988 - இராமநாதபுரம் தேடுதல் வெட்டிப்படுகொலை 117) 12.07.1988 - சில்லாலை நீர்ப்பாசன இலாகா அலுவலப் படுகொலை 118) 13.07.1988 - ஆரையம்பதி விசாரணை முகாம் இளைஞர் படுகொலை 119) 13.07.1988 - இன்பருட்டியில் சிற்றூர்தி மீதான தாக்குதல் 120) 15.07.1988 - பரந்தன் சந்தி தேடுதல் வேட்டை 121) 15.07.1988 - தமிழ்ப்பொதுமகன் படுகொலை (தள்ளாடி முகாம்) 122) 18.07.1988 - பரந்தன் தமிழ்ப்பொதுமகன் படுகொலை 123) 18.07.1988 - கம்பர்மலை இளைஞர் கைது - படுகொலை 124) 04.08.1988 - பரந்தன் குடியிருப்புப் பகுதி படுகொலை 125) 15.08.1988 - யாழ் நாட்டுப்பற்றாளர் இரங்கநாதன் படுகொலை 126) 16.08.1988 - திருகோணமலை வீதி துப்பாக்கிச்சூடு 127) 18.08.1988 - பேராதனை பல்கலை., பொறியியல் பீடம் மீதான தாக்குதல் 128) 24.08.1988 - நாட்டுப்பற்றாளர் துரைராசா படுகொலை (உரும்பிராய்) 129) 31.08.1988 - முல்லைத்தீவு மருத்துவமனை ஊழியர் சுட்டுக்கொலை 130) 05.09.1988 -மட்டக்களப்பு விசாரணை முகாம் படுகொலை 131) 08.09.1988 - நுணா தேடுதல் வேட்டைப் படுகொலை 132) 11.09.1988 - ஈச்சமோட்டை பொறியியலாளர் படுகொலை (நல்லூர் நாவலர் மண்டபம்) 133) 17.09.1988 - நல்லூர் வீதி தேடுதல் வேட்டை படுகொலை 134) 23.09.1988 - செல்வக்குமார் படுகொலை (யாழ் வீதி) 135) 25.09.1988 - பட்டிருப்பு பொதுமக்கள் படுகொலை 136) 29.09.1988 - யாழ்ப்பாணம் இராமலிங்கம் வீதி இளைஞர் படுகொலை 137) 02.10.1988 - சிறுப்பிட்டி மாணவன் நந்தன் சுட்டுக்கொலை 138) 04.10.1988 - கெருடாவில் தந்தை, மகன் படுகொலை 139) 04.10.1988 - சாளம்பைக்குளம் படுகொலை 140) 04.10.1988 - யாழ் மத்திய பேருந்து நிலைய படுகொலை 141) 04.10.1988 - பூநகரி மரத்தடி படுகொலை 142) 05.10.1988 - மின்சாரம் பாய்ச்சிக்கொல்லப்பட்ட துரையம்மா (விசாரணை சித்ரவதை) 143) 05.10.1988 - இடைக்காடு தமிழர்கள் படுகொலை 144) 06.10.1988 - மயிலங்காடு பொன்னம்பலம் சுட்டுக்கொலை 145) 06.10.1988 - மட்டக்களப்பு உபதபாலதிபர் சுட்டுக்கொலை (காங்கேயன் ஓடை) 146) 09.10.1988 - இராணுவ முகாமில் மட்டக்களப்பு மாணவன் படுகொலை 147) 11.10.1988 - திருமலை வீதி தேடுதல் வேட்டை 148) 11.10.1988 - ஈரற் பெரியகுளம் பேருந்து படுகொலை 148) 11.10.1988 - கட்டைபறிச்சான் படுகொலை 148) 13.10.1988 - ரவி சுட்டுப்படுகொலை 149) 13.10.1988 - தெல்லிப்பழை வீதி படுகொலை 150) 13.10.1988 - இணுவில் வீதி படுகொலை 151) 14.10.1988 - யாழ் கதிர்காமநாதன் படுகொலை 152) 14.10.1988 - பொன்னையா சிறிதரன் படுகொலை 153) 17.10.1988 - மங்களஓயா படுகொலை 154) 18.10.1988 - குளிர்பான நிலையம் மானிப்பாய் சற்குணராசா படுகொலை 155) 21.10.1988 - செல்வராசா விசாரணைப் படுகொலை 156) 21.10.1988 - தமிழீழ மக்கள் மன்றத்தலைவர் சிவானந்தசுந்தரம் படுகொலை (வெலிங்டன் சந்தி) 157) 22.10.1988 - ஊர்காவற்றுறை புதுமணத் தம்பதியர் கொலை (பொன்னாச்சி கடைச்சந்தி) 158) 22.10.1988 - கிற்றார் கலைஞர் கி.செல்லையா படுகொலை (இசைக்கூடம்) 159) 22.10.1988 - பொன்னாச்சி இளம்தம்பதியார் படுகொலை (கடைச்சந்தி) 160) 25.10.1988 - விஞ்ஞான ஆசிரியர் படுகொலை (யாழ் மருத்துவமனை வீதி) 161) 25.10.1988 - சுகாதார அத்தியட்சகர் பணிமனை படுகொலை 162) 25.10.1988 - மல்லாகம் வர்த்தகர்சங்கத் தலைவர் படுகொலை 163) 25.10.1988 - வவுனியா சுகாதார பணிமனை படுகொலை 164) 25.10.1988 - சங்கானை ஆசிரியர் படுகொலை 165) 25.10.1988 - மல்லாகம் வர்த்தக சங்கத் தலைவர் சிவதாசபிள்ளை படுகொலை 166) 26.10.1988 - கரடிக்குழி படுகொலை 167) 26.10.1988 - மறிச்சுக்கட்டி படுகொலை 168) 31.10.1988 - நெடுங்கேணி படுகொலை 169) 31.10.1988 - யாஸ் பரியோவான் கல்லூரி மாணவர் சுட்டுக்கொலை 170) 31.10.1988 - நுணாவில் தேடுதல் வேட்டை 171) 31.10.1988 - மகாவித்தியாலய மாணவர்கள் படுகொலை 172) 02.11.1988 - நாட்டுப்பற்றாளர் வெள்ளையன் படுகொலை 173) 02.11.1988 - கனகராயன்குளம் படுகொலை 174) 02.11.1988 - சகோதரர்கள் உயிருடன் எரித்துக்கொலை 175) 02.11.1988 - பண்டத்தரிப்பு தேடுதல் வேட்டைப்படுகொலை 176) 03.11.1988 - சரசாலை நாட்டுப்பற்றாளர் சுந்தரம் படுகொலை 177) 04.11.1988 - புங்குடுதீவு கடற்றொழிலாளர்கள் படுகொலை 178) 04.11.1988 - பச்சனூர் படுகொலை 179) 04.11.1988 - இணுவில் நாட்டுப்பற்றாளர் தனபாலசிங்கம் படுகொலை 180) 04.11.1988 - புங்குடுதீவு படுகொலை 181) 05.11.1988 - சாவகச்சேரி வர்த்தகர் சங்கத் தலைவர் செல்வராசா படுகொலை 182) 06.11.1988 - ஆனையிறவு குடியிருப்புப் பகுதி படுகொலை 183) 07.11.1988 - மூதூர் 55ஆம் கட்டைபகுதி படுகொலை 184) 07.11.1988 - மூதூர் நாட்டுப்பற்றாளர் ரகு படுகொலை 185) 08.11.1988 - அளவெட்டி நாட்டுப்பற்றாளர் பிரேம்குமார் படுகொலை 186) 08.11.1988 - சாவகச்சேரிதமிழ் மாணவன் படுகொலை 187) 08.11.1988 - பண்டத்தரிப்பு பிரசைகள் குழுவினர் படுகொலை 188) 09.11.1988 - வடமராட்சி அட்டூழியம் 189) 11.11.1988 - மன்னார் உயர்வகுப்பு மாணவன் படுகொலை 190) 11.11.1988 - ஆசிரியர் பாலகிருஷ்ண படுகொலை 191) 12.11.1988 - பொருளியல் ஆசிரியர் கிருஷ்ணானந்தன் படுகொலை 192) 12.11.1988 - சரசாலை தமிழ் இளைஞர் படுகொலை 193) 13.11.1988 - மகேந்திரநாதன் படுகொலை 194) 13.11.1988 -தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் படுகொலை (மாம்பழம் சந்தி - அரியாலை) 195) 13.11.1988 - ஊரிக்காடு தேடுதல் வேட்டைப் படுகொலை 196) 13.11.1988 - திருநெல்வேலி நாட்டுப்பற்றாளர் வைகுந்தவாசன் படுகொலை 197) 14.11.1988 - முல்லைத்தீவு நாட்டுப்பற்றாளர்கள் சங்கர்-கிளியன் கொலை 198) 16.11.1988 - சங்கத்தானை நாட்டுப்பற்றாளர் குணாளன் படுகொலை 199) 16.11.1988 - இருதயக்கல்லூரி தேடுதல் வேட்டை 200) 17.11.1988 - பொத்துவில் படுகொலை 201) 17.11.1988 - முல்லைத்தீவு குடியிருப்புப் படுகொலை 202) 19.11.1988 - மகாவித்தியாலய மாணவன் படுகொலை 203) 21.11.1988 - கோணாவில் நாட்டுப்பற்றாளர் சங்கரன் படுகொலை 204) 22.11.1988 வவுனியா நாட்டுப்பற்றாளர் பூலோகசிங்கம் படுகொலை 205) 22.11.1988 - பாவற்குளம் 4 ஆம் படிவம் படுகொலை 206) 22.11.1988 - கல்முனை படுகொலை 207) 23.11.1988 - யாழ் செயலக கணக்காளர் படுகொலை 208) 23.11.1988 - திருகோணமலை தேடுதல் நடவடிக்கை 209) 25.11.1988 - கடற்றொழிலாளி படுகொலை 210) 26.11.1988 - வட்டக்கச்சி கட்சன் வீதி படுகொலை 211) 27.11.1988 - வட்டகச்சி கண்ணிவெடி படுகொலை 212) 27.11.1988 - யாழ் பேராலய இளைஞர் படுகொலை 213) 28.11.1988 - நாவற்குழி நாட்டுப்பற்றாளர் மனோகரி படுகொலை 214) 28.11.1988 - நாவற்குழி தேடுதல் வேட்டை படுகொலை 215) 29.11.1988 - இணுவில் மருத்துவமனையில் நோயாளி இளம்பெண் படுகொலை 216) 30.11.1988 - மூதூர் தமிழர்கள் படுகொலை 217) 01.12.1988 - புத்தூர் புத்தெழில் ஆசிரியர் திருஞானம் படுகொ (தேசவிரோதிகள் + IPKF)லை 218) 03.12.1988 - கருகம்பனை சிவதாசன் நிர்மலன் படுகொலை 219) 03.12.1988 - பற்றிக்சுவீதி தமிழர் படுகொலை 220) 04.12.1988 - ஆசிரியர் கருணானந்தசிவம் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF) 221) 05.12.1988 - வவுனிக்குளம் படுகொலை 222) 07.12.1988 - காணிக்கை மாதா கோயில் படுகொலை 223) 08.12.1988 - யாழ் சிற்றூர்தி சங்கத்தலைவர் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF) 224) 09.12.1988 - காங்கேசன்துறை மாணவன் படுகொலை 225) 12.12.1988 - திருகோணமலை எறிகணைத்தாக்குதல் 226) 15.12.1988 - ஊரெழு தேவதாசன் படுகொலை (கோப்பாய் முகாம், தேசவிரோதிகள் + IPKF) 227) 17.12.1988 - அக்கரைப்பற்று படுகொலை 228) 17.12.1988 - ஆலையடிவேம்பு படுகொலை 229) 19.12.1988 - சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவர்கள் படுகொலை 230) 19.12.1988 - ஆனைக்கோட்டை படுகொலை 231) 19.12.1988 - அளவெட்டி நாட்டுப்பற்றாளர்கள் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF) 232) 19.12.1988 - மன்னார் இளைஞர்கள் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF) 233) 21.12.1988 - அப்புத்தளை மலையகம் தமிழிளைஞர்கள் படுகொலை 234) 23.12.1988 - மானிப்பாய் ஜெயதாசன் படுகொலை (தேசவிரோதிகள் + IPKF) 235) 27.12.1988 - மட்டக்களப்பு அட்டூழியம் 236) 02.01.1989 - ஒட்டிசுட்டான் துப்பாக்கிச்சூடு 237) 07.01.1989 - கண்டாவளை தேடுதல் வேட்டை 238) 08.01.1989 - இராமநாதபுரம் பழைய கண்டி வீதி கண்ணிவெடி வெடிப்பு 239) 09.01.1989 - அக்கரைப்பற்று பேரூந்து நிலைய காவல் சோதனை படுகொலை 240) 13.01.1989 - பண்டத்தரிப்பு தேடுதல் வேட்டை படுகொலை 241) 17.01.1989 - காத்தார் சின்னக்குளம் படுகொலை 242) 20.01.1989 - மன்னார் காவல் நிலைய படுகொலை 243) 26.01.1989 - இந்துக் கல்லூரி படுகொலை 244) 28.01.1989 - அரியாலை பொதுமக்கள் படுகொலை 245) 29.01.1989 - அளம்பில் தேடுதல் வேட்டை 246) 30.01.1989 - ஆறுகால்மடம் தொழில் நுட்பக்கல்லூரி மாணவர் படுகொலை 247) 31.01.1989 - கரவெட்டி இராணுவ முற்றுகை படுகொலை 248) 03.02.1989 - மிருசுவில் சிவரஞ்சன் சுட்டுக்கொலை 249) 08.02.1989 - பிறவுண்வீதி இளைஞர் படுகொலை (கிழக்கு கொக்குவில்) 250) 10.02.1989 - பேசாலை படுகொலை 251)15.02.1989 - மாவிட்டபுரம் மின்சாரம் பாய்ச்சிக் கொல்லப்பட்ட இளைஞர் 252) 15.02.1989 - முள்ளியவளை செல்வரட்ணம் சுதர்சன் படுகொலை 253) 15.02.1989 - உடுப்பிட்டி முகாமில் யாழ் சகோதரிகள் சுட்டுக்கொலை 254) 16.02.1989 - மொறக்கொட்டாஞ்சேனை படுகொலை (டெலோ + IPKF) 255) 22.02.1989 - நெல்லியடி மருத்துவமனைக் காவலாளி படுகொலை 256) 23.02.1989 - துன்னாலை எறிகணைத் தாக்குதல் 257) 23.02.1989 - திக்கம் மக்கள் படுகொலை 258) 01.03.1989 - புத்தூர் தேடுதல் வேட்டை படுகொலை 259) 14.03.1989 - பளை தேடுதல் வேட்டைப் படுகொலை 260) 16.03.1989 - மட்டுவில் தேடுதல் வேட்டை 261) 19.03.1989 - மணற்காட்டு தமிழ் இளைஞர்கள் படுகொலை 262) 11.04.1989 - காட்டுமுறி தமிழ்ப்பொதுமகன் படுகொலை 263) 14.04.1989 - கரம்பன் மேற்கு பக்தி கிராமம் கிராமசேவகர் படுகொலை 264) 25.04.1989 - கட்டுவன்புலம் பள்ளி மாணவன் படுகொலை 265) 01.05.1989 - நாட்டுப்பற்றாளர்கள் சிறி.முறிசெல்வம் & செ.பாலேந்திரன் படுகொலை (வவுனியா சிறை) 266) 02.05.1989 - பருத்தித்துறை தேடுதல் வேட்டை 267) 03.05.1989 - மல்லாகம் செல்லையா நிர்மலன் படுகொலை 268) 03.05.1989 - புங்குடுதீவு முருகேசு குகதாஸ் படுகொலை 269) 14.05.1989 - மிருசுவில் பேருந்து மீது தாக்குதல் 270) 14.05.1989 - மணலாறு உணவு விடுதி படுகொலை 271) 14.05.1989 - யாழ் மருத்துவமனையில், தமிழிளைஞரை சடலமாக ஒப்படைத்தது 272) 16.05.1989 - தரவத்தை விவசாயப் பெண் கூலித்தொழிலாளர் கடத்தல் 273) 16.05.1989 - பால்நிலைய அதிபர் படுகொலை 274) 16.05.1989 - புத்தூர் வாதரவத்தை படுகொலை 275) 17.05.1989 - மல்லாவி பெண் படுகொலை 276) 17.05.1989 - அத்தியாயர் கல்லூரி மாணவன் படுகொலை 277) 17.05.1989 - புன்னாலைக்கட்டுவன் படுகொலை 278) 18.05.1989 - புத்தூர் தேடுதல் வேட்டை படுகொலை 279) 19.05.1989 - உரும்பிராய் தமிழ்ப்பொதுமகன் படுகொலை 280) 20.05.1989 - சுதுமலை படுகொலை 281) 20.05.1989 - நிலாவெளி கோயில் படுகொலை (ஈபிஆர்எல்எஃப் ஒட்டுக்குழு + IPKF) 282) 23.05.1989 - கிளிநொச்சி பிரசைகள் குழுப்பிரமுகர் கொலை (கனகபுரம் - ஈபிஆர்எல்எஃப் ஒட்டுக்குழு + IPKF) 283) 28.05.1989 - வந்தாறுமூலை இளைஞர்கள் படுகொலை (ஈபிஆர்எல்எஃப் ஒட்டுக்குழு + IPKF) 284) 28.05.1989 - தமிழ்ப்பொதுமகன் சுட்டுக்கொலை (சாவச்சேரி) 285) 28.05.1989 - வண்ணார்பண்ணை இருதமிழர் சுட்டுக்கொலை (நாகர்கோவில்) 286) 01.06.1989 - நாவாந்துறை தேடுதல் வேட்டைப் படுகொலை 287) 01.06.1989 - திருநெல்வேலி தேடுதல் வேட்டைப் படுகொலை 288) 01.06.1989 - மாணிக்கம் யோகேந்திரன் படுகொலை 289) 01.06.1989 - ஏழாலை தேடுதல் வேட்டைப் படுகொலை 290) 01.06.1989 - வைத்தீஸ்வரா கல்லூரி மாணவர் ஆனந்தராசா படுகொலை 291) 04.06.1989 - கட்டுடைச்சந்தி வணிகர் கணபதிப்பிள்ளை படுகொலை 292) 04.06.1989 - பிராம்பத்தை கோடீஸ்வரி பத்மநாதன் படுகொலை 293) 04.06.1989 - தபால்பெட்டிச்சந்தியில் அரியாலை தமிழ்ப்பொதுமகன் படுகொலை 294) 05.06.1989 - வரணி எறிகுண்டுத் தாக்குதல் 295) 05.06.1989 - கண்டிக்காடு படுகொலை 296) 17.06.1989 - சங்கத்தானை தேடுதல் வேட்டை 297) 19.06.1989 - கோப்பாய் சண் படுகொலை 298)19.06.1989 - புதுக்குடியிருப்பு பேபி படுகொலை 299)20.06.1989 - கந்தர்மடம் சண்முகம் உதயவர்மன் படுகொலை 300) 20.06.1989 - மாவிட்டபுரம் கந்தையா குஞ்சுக்கிளி படுகொலை 301) 20.06.1989 - முருகுசசிக்குமார் படுகொலை 302) 20.06.1989 - யாழ் வைத்தியசாலையில் முகமாலை நாகேந்திரராசா படுகொலை 303) 24.06.1989 - நாகர்கோவில் தேடுதல் வேட்டை 304) 24.06.1989 - கந்தரோடை கணேசகுமார் படுகொலை 305) 24.06.1989 - தாண்டிக்குளம் பெரியதம்பி படுகொலை 306) 24.06.1989 - வேப்பங்குளம் மோகன்ராஜ் படுகொலை 307) 24.06.1989 - வல்லிபுரம் முருகேசு படுகொலை 308) 24.06.1989 - நெடுந்தீவு ஏரம்புநடராசா படுகொலை 309) 26.06.1989 - அத்தாய் மகேந்திரராசா படுகொலை 310) 28.06.1989 - அல்வாய் மாலிசந்தி தேடுதல் வேட்டைப் படுகொலை 311) 28.06.1989 - நந்தாவில் அம்மன்கோவிலடி படுகொலை 312) 28.06.1989 - பண்டத்தரிப்பில் இளைஞர் சடலம் மீட்பு 313) 28.06.1989 - அளவெட்டி தேடுதல் வேட்டைப் படுகொலை 314) 28.06.1989 - மிருசுவில் தேடுதல் வேட்டைப் படுகொலை ஆசைப்பிள்ளை ஏற்றம் 315) 28.06.1989 - செல்வம் அக்கா சித்ரவதை படுகொலை (ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு + IPKF) 316) 28.06.1989 - புலோலிகந்த முருகேசனார் சிலை தமிழ்ப்பெண் சுட்டுப்படுகொலை 317) 29.06.1989 - அளம்பில் துப்பாக்கிச்சூடு 318) 29.06.1989 - நீர்வேலி பெண்கள் வன்படுகொலை 319) 03.07.1989 - ஓமந்தை எறிகணைத் தாக்குதல் 320) 03.07.1989 - கிளிநொச்சி துப்பாக்கிச்சூடு 321) 18.07.1989 - திருகோணமலை தேடுதல் வேட்டை 322) 19.07.1989 - பாரதிபுரம் தேடுதல் வேட்டை படுகொலை 323) 24.07.1989 - உயரப்புலம் தமிழிளைஞர் சுட்டுப்படுகொலை 324) 26.07.1989 - அல்வாய் ஆசிரியர் சின்னத்தம்பி படுகொலை 325) 26.07.1989 - தெல்லிப்பளை ரவீந்திரன் படுகொலை 326) 26.07.1989 - ஓராம்கட்டை இராணுவ நடவடிக்கை 327) 02.08.1989 - தீருவில் தேடுதல் வேட்டைப் படுகொலை 328) 02.08.1989 - அரியாலை இளைஞர் கைது 329) 02.08.1989 - வல்வெட்டித்துறை படுகொலை (மருத்துவமனை, சமூக நிலையம், கோயில், குடியிருப்புப் பகுதி) 330) 02.08.1989 - வல்வை 15 பெண்கள் பாலியல் வன்படுகொலை 331) 04.08.1989 - கீரிமலை தேடுதல் வேட்டைப் படுகொலை 332) 07.08.1989 - புன்னாலைக்கட்டுவன் தேடுதல் படுகொலை 333) 07.08.1989 - புன்னாலைக்கட்டுவன் எறிகணைத்தாக்குதல் 334) 10.08.1989 - கோண்டாவில் இளைஞர் சடலமாக மீட்பு 335) 14.08.1989 - பருத்தித்துறை வியாபாரி எரித்துப்படுகொலை 336) 14.08.1989 - மூலை நடன ஆசிரியர் படுகொலை 337) 14.08.1989 - யாக்கரை எறிகணைவீச்சு படுகொலை 338) 17.08.1989 - நெடுங்கேணி தமிழ்க்குழந்தைகள் படுகொலை 339) 17.08.1989 - கன்னியர்மட மாணவியர் வன்படுகொலை (எழுதுமட்டுவாள்) 340) 17.08.1989 - உடுப்பிட்டி இமையணனை படுகொலை (கரவெட்டி வதிரிச்சந்தி) 341) 18.08.1989 - ஐயன்குளம் படுகொலை 342) 18.08.1989 - நுணா சிறுவன் சுட்டுக்கொலை 343) 21.08.1989 - வடமராட்சி தேடுதல் வேட்டைப் படுகொலை (திக்கம், அல்வாய் பகுதிகளில்) 344) 21.08.1989 - மாணவன் அருளானந்தம் சுதாகரன் கொலை 345) 21.08.1989 - கந்தளாய் படுகொலை 346) 23.08.1989 - மன்னார் தேடுதல் வேட்டைப் படுகொலை 347) 23.08.1989 - மாவிட்டபுரம் வியாபாரி படுகொலை 348) 25.08.1989- ஆவரங்கால் இந்திரன் சுட்டுப்படுகொலை 349) 27.08.1989 - பேசாலை எறிகணைத்தாக்குதல் 350) 31.08.1989 - ஆவிரங்கால் விவசாயி சுட்டுக்கொலை 351) 02.09.1989 - ஆண்டான்வளவு தேடுதல் வேட்டை 352) 02.09.1989 - ஆண்டான் வளவுப் பகுதியில் தமிழ்ப்பொதுமகன் படுகொலை 353) 08.09.1989 - பருத்தித்துறை பொதுமக்கள் படுகொலை 354) 17.09.1989 - கிளிநொச்சி முகாம் படுகொலை 355) 18.09.1989 - புற்றளை தேடுதல் வேட்டைப் படுகொலை 356) 22.09.1989 - நமசிவாயம் தெய்வேந்திரன் படுகொலை 357) 23.09.1989 - இயக்கச்சி நாட்டுப்பற்றாளர் தர்மகுலேந்திரன் படுகொலை 358) 25.09.1989 - பண்டத்தரிப்பு தேடுதல் வேட்டைப் படுகொலை 359) 26.10.1989 - கரடிக்குழி தேடுதல் வேட்டைப் படுகொலை 360) 26.10.1989 - மறிச்சுக்கட்டி தேடுதல் வேட்டை 361) 29.10.1989 - யாழ் நாட்டுப்பற்றாளர் ரவீந்திரன் படுகொலை 362) 17.11.1989 - மானிப்பாய் செல்லத்தம்பி படுகொலை 363) 26.11.1989 - கிளாலி நாட்டுப்பற்றாளர் பவுண் படுகொலை 364) 10.12.1989 - மன்னார் பெண் குழந்தை படுகொலை 365) 28.12.1989 - யாழ் நாட்டுப்பற்றாளர் பாலா படுகொலை 366) 12.01.1990 - கோண்டாவில் நாட்டுப்பற்றாளர் சின்னத்துரை படுகொலை (இப்பட்டியல் The North-East Secretariat on Human Rights (NESOHR), Voice உலகத்தமிழர்கள் உரிமைகள் குரல் அமைப்பு, Tamil Nation, ஆகியவை வெளியிட்ட ஆவணங்கள் & நூல்களில் இருந்து பெறப்பட்டவையாகும்.** களத்தில்
  10. 01.11.1990 மணலாறு முந்திரிகைக்குளத்தில் அமைக்கப்பட்ட சிறிலங்காப்படைமுகாம் தாக்கியழிக்கப்பட்ட வரலாற்று... தமிழீழத்தின்.இதயபூமியான மணலாற்றில் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பிலிருந்து தமிழர்களை விரட்டிவிட்டு அதாவது வடக்குகிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்காக தமிழர்களின் தொடர் நிலப்பரப்பினைச் சிதைப்பதிற்கான நோக்கத்திற்காகவும் சிங்களபௌத்த பேரினவாதத்தின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை அதாவது சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்காகவும் அச்சிங்கள மக்களைப் பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்ட பல மினிமுகாம்களில் மணலாறு முந்திரிகைக்குள மினிமுகாமும் ஒன்றாகும். இம்மினிமுகாமில் நூற்றிற்க்கும் மேற்பட்ட சிங்கள இராணுவத்தினர் இருந்தனர். 1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இப்பகுதியில் பெருமளவான சிங்களமக்களை குடியேற்றுவதற்கான முயற்சிகளில் இம்முகாம் படையினர் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இத்தகவல்களை மணலாற்று வேவு அணிகள் அப்போது மணலாறு மாவட்டத் தளபதியாக இருந்த லெப்.கேணல் அன்பு அவர்களிடம் கொடுத்தனர். வேவுத்தரவுகளை தீவிரமாக ஆராய்ந்த தளபதி அன்பு அவர்களும் தளபதி மேஐர். வீமன் அவர்களும் நிலமையின் விபரீதத்தை உணர்ந்து இம்முகாமை தாக்கி அழிக்கவேண்டும். எனமுடிவெடுத்து தலைவர் அவர்களிடம் இத்தகவல்கள் அனைத்தையும் தெரிவித்தனர். தலைவர் அவர்கள் அனைத்துத் தகவல்களையும் கேட்டறிந்தார். அதன் சாதகபாதக நிலைகளையும் எவ்வாறு தாக்குதல் நடாத்தவேண்டும் எனவும் அத்தாக்குதலின்போது சிங்களப் பொதுமக்களுக்குச் சிறுசேதமும் ஏற்படக்கூடாதென உறுதியாக தலைவர் அவர்கள் தளபதிக்கு கூறினார். இம்முகாம் கட்டாயம் அழிக்கப்படவேண்டும் எனக் கூறியதோடு அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி தளபதிகளை வழியனுப்பிவைத்தார். தலைவர் அவர்கள் கொடுத்த ஆலோசனைகளுக்கமைவாகவும் தலைவர் அவர்களின் சிந்தனைக்கேற்ப கடும்பயிற்சி இலகுவான சண்டை என்றதன் அடிப்படையில் வேவுநடவடிக்கைகளில் பெறப்பட்ட தகவல்களுக்கேற்ப தாக்குதலுக்கான பயிற்சிகள் தொடங்கப்பட்டன. தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போராளிகளுக்கு மேஐர் செங்கோல் அவர்கள் தலைமையிலான போராளிகளால் முறையே நிசாம் வெட்டை மற்றும் ஜீவன் ஆகிய முகாம்களில் பயிற்சிகள் நடைபெற்றன. பயிற்சிகள் முடிவடைந்து தாக்குதற் திட்டம் தளபதி அன்பு அவர்களால் விளங்கப்படுத்தப்பட்டதுடன் தலைவர் அவர்களால் கொடுக்கப்பட்ட அறிவுரைகளையும் அன்பு அவர்கள் தெளிவாகக் கூறினார். தாக்குதலுக்கான இருநூறுபேர் கொண்ட அணிகள் தாயர்படுத்தப்பட்டன. இவ்வணிகள் கொக்குத்தொடுவாயிலிருந்து படகுகளில் சென்று கொக்கிளாய் கடல்நீரேரியைக்கடந்து தரையிறங்கி அங்கிருந்து நடந்துசென்று 01.11.1990 அன்று அதிகாலை ஒரு மணிவரை முந்திரிகைக்குள முகாமருகில் காத்திருந்து. அதிகாலை ஒருமணியளவில் மணலாறு முந்திரிகைக்குளத்தில் அமைக்கப்பட்ட சிங்களப்படையின் முகாம் மீது ஒரு வெற்றிகர அதிரடித்தாக்குதலைத் தொடுத்து வெற்றிகொண்டனர். குறிப்பிட்ட சிலநிமிடத்தில் முகாம் புலிகளின் பூரணகட்டுப்பாட்டிற்க்குள் வந்தது. தொடர்ந்து அந்தமுகாமை தக்கவைத்திருந்த போராளிகள் படைமுகாமை முற்றுமுழுதாக அழித்தொழித்துவிட்டு கைப்பற்றிய ஆயுதங்களுடன் தளம் திரும்பினார்கள். இதன் பின்னும் இதனை அண்டியபகுதிகளில் பல்வேறு தாக்குதல்கள் விடுதலைப்புலிகளால் படையினர் மீதுமேற்கொள்ளப்பட்டதால் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது. இவ்வாறுதான் எம் தாயக பகுதி மீதான சிங்களத்தின் ஆக்கிரமிப்பு ஆசைகள் முறியடிக்கப்பட்டு வந்தன. இவ்வெற்றிகர அதிரடித் தாக்குதல்களுக்கான வேவுத்தகவல்களை மேஐர் .ரம்போ கப்டன்.விமல்ராஜ் தலைமையிலான போராளிகளால் சொல்லமுடியாத அர்ப்பணிப்புக்களுடன் சிறுகச்சிறுகச் சேகரித்துக்கொடுத்தனர். படைமுகாமின் தாக்ககுதல்களை களத்தில் நின்று மேஐர்.சங்கர் அவர்கள் வழிநடாத்த களமருத்துவத்தை கப்டன் இளங்கோ அவர்கள் தலைமையிலான போராளிகள் செவ்வனவே செய்தனர். இவ் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கினைத்து முல்லை மணலாறு மாவட்டத் தளபதி அன்பு அவர்கள் வழி நடத்தினார். (1991ம் ஆண்டு முற்பகுதியின் பின்னர் தான் இயக்கத்தின் வளர்ச்சியும் அதன் நிர்வாக கட்டமைப்புக்காகவுமாக ஒருமாவட்டத்தில் சிறப்புத்தளபதி, தளபதி, துணைத்தளபதி எனும் கட்டமைப்பு பரிணாம வளர்ச்சி அடைந்தது.) இவ்வெற்றிகரத் தாக்குதலை களத்தில் நின்று வழிநடாத்திய.. மேஐர் .சங்கர்.அவர்களுடன் 2ம் லெப்ரினன்.மதுவன். வீரவேங்கை .முசோலினி . ஆகியோர் வீரச்சாவடைந்தனர். நீண்டகாலமாக 2ம் லெப்.மதுவனைப் பார்க்காத பெற்றோர் மதுவனைப் பார்பதற்காக மணலாற்று முகாமிற்க்குவந்திருந்தனர். ஆனால் அவ்வெற்றிச்சமரில் வீரச்சாவடைந்த மகனின் வித்துடலுடனே மதுவனின் பெற்றோர் வீடுதிரும்பினர். இப்படியான பல்வேறு அர்பணிப்புக்கள் தியாகங்கள் நிறைந்த போராட்டமாக தமிழீழவிடுதலைப் போராட்டம் திகழ்கிறது. கிட்டத்தட்ட முப்பதான்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இச்சம்பவமானது அன்று இக்களமுனையில் நின்றவர்களால் மறக்கமுடியாத பெரும் சோக நிகழ்வாக இன்றும் அப்போராளிகளால் நினைவுகூரப்படுகிறது. அக்களமுனையில் நின்று இன்று புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் உள்ளத்திலிருந்து...... களத்தில்
  11. பூவொன்று புயலானது! ❤️💛 பலாலி கிழக்கை பூர்வீக இடமாக கொண்ட கந்தசாமி-சின்னத்தங்கச்சி இணையரிற்கு இளைய மகளாக பிறந்தவள் தான் விஜயராணி. குடும்பத்திலே அவளுக்கு 3சகோதரர்களும் 1சகோதரியுமாக, அவளது குடும்பம் பலாலியிலே மிகவும் செளிப்புடன் வாழ்க்கையை வாழ்ந்துவந்தனர். விஜயராணி தனது ஆரம்பக்கல்வியை பலாலி வடக்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையிலே கற்றாள்,பின்னர் 1990.ஆனி.15 > பலாலி இடப்பெயர்வு காரணமாக தனது கல்வியை கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலயத்திலும் (தற்போது மத்திய கல்லூரியாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது) பின்னர் அச்சுவேலி- பத்தைமேனியில் வசித்த காலத்தில்- இடைநிலைக்கல்வியை அச்சுவேலி புனித தெரேசாள் மகளீர் கல்லூரியிலுமாக கற்றிருந்தாள். சிறுவயதிலிருந்தே மிகவும் துடிப்பானவளாக, பயமறியாதவளாக தன்னை வளர்த்துக்கொண்டவள், குறிப்பாக அன்றைய கால கட்டத்தில் வீதியால் செல்லும் சிங்களப் படைகளுடன் வாய்ச்சண்டை போடுவாள். எங்கட மண்ணில உவங்களுக்கு இங்க என்ன வேலை என்று அவள் அடிக்கடி தனக்குள் முனுமுனுத்துக்கொள்வாள். 2002 காலப்பகுதியிலே தாயின் இழப்பு அவளையும் அவளது குடும்பத்தையும் மிகவும் பாதித்திருந்தது. அந்த இழப்பிலிருந்து மீள்வதற்கு விஜயராணி மிகவும் கஷ்டப்பட்டாள், ஏனெனில் அச்சுவேலி வைத்தியசாலையில் அவளது மடியிலே தாயின் உயிர்பிரிந்தது அவளை மிகவும் வாட்டியிருந்தது! 2001/2002 போர்நிறுத்த ஒப்பந்தத்தின் நிமிர்த்தம் > விடுதலை பு*லிகளின் அரசியல் பிரிவினர் யாழ்குடாநாட்டுக்கு வருகை தந்திருந்த காலம் அச்சுவேலியிலே ஆண்,பெண் அரசியல் பிரிவு போராளிகள் தமது பணிகளை பக்கத்து பக்கத்து வீடுகளிலிருந்து மேற்கொண்டனர். பெண் போராளிகளுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட விஜயராணி அவர்களுடன் மிகவும் பாசத்தோடு பழகலானாள், பின் அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து உணவு உபசரிப்பு வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தாள். தானும் அவர்களை போன்று தேசத்துக்கான தனது கடமையை செய்யவென எண்ணி 2003ம் ஆண்டின் பிற்பகுதியிலே பெண்போராளிகளின் உதவியுடன் வன்னிநோக்கி தனது தேசத்துக்கான பயணத்தை ஆரம்பித்தாள். 3மாத அடிப்படை பயிற்சியை பெற்றுக்கொண்டவள் பயிற்சிப்பாசறையிலே மிகவும் திறம்பட செயற்பட்டு தன்னை புடம்போட்டுக்கொண்டாள். இயக்கம் அவளுக்கு இட்ட பெயர் 'கணேசினி'. கணேசினியை 2ம் லெப். மாலதி படையணி உள்வாங்கிக்கொணடது. அன்றிலிருந்து அவள் சக தோழிகளுடன் மிகவும் பாசத்துக்குரியவளானாள். சிறிது காலத்தின் பின்னர் லெப்.கேணல் குட்டிசிறீ மோட்டார் படையணி கணேசினியை உள்வாங்கியது! கணேசினி வன்னிக்கு சென்று இயக்கத்திலே சேர்ந்திருந்தமையால் அவளது தந்தையும் மூத்த சகோதரனும் மற்றும் சகோதரியும் வன்னிக்கு இடம்பெயர்ந்தனர். இளைய சகோதரன் இவளுக்கு பின்னர் தன்னையும் போராட்டத்தோடு இணைத்துக்கொண்டார். வன்னியிலே தனது சகோதரியின் திருமண நிகழ்வுக்கு வருகை தந்தவள், காதிலே தோடும் போடச் சம்மதிக்கவில்லை, கழுத்திலே ஓர் சிறிய செயினை எல்லோரது வற்புறுத்தலால் போட்டுக்கொண்டாள். அவளவு தூரம் இயக்க மரபை மிகவும் இறுக்கமாக்கிக்கொண்டாள். 2006.ஆகஸ்ட்.11 போர் மீள வடபோர் முனையிலே ஆரம்பமானது. முகமாலை, மன்னார் என களமுனைகள் மாறி மாறி மிகவும் உறுதியுடன் போரிட்டாள். வாகனங்கள் ஓடவும் திறமைாக கற்றுத்தேர்ந்திருந்தாள். படிப்படியாக தனது திறமையினூடாக தன்னை வளர்த்துக்கொண்டவள் பின்னர் லெப்.கேணல் குட்டிசிறீ மோட்டார் படையணியின் ஓர் பகுதி தாக்குதலணி பொறுப்பாளராக உயரும் அளவுக்கு தன்னை மாற்றியிருந்தாள். இறுதிக்கட்ட போர் உக்கிரமடைந்து மன்னார் களமுனை வழியாக சிங்கள இராணுவம் படிப்படியாக முன்னேறி கிளிநொச்சி வழியாக பரந்தனை ஊடறுத்து முல்லைத்தீவு நோக்கிய போர்ச்சூழல் உச்சம் பெற்ற காலப்பகுதியில் 2009 தை/ மாசி மாதமளவில் அவளது தந்தையும் மூத்த சகோதரனும் அவளை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தபோது அவர்கள் கேட்டுக்கொண்டது நீ என்ன செய்யப்போகிறாய் என்று? அவள் கூறிய பதில்- நீங்கள் பாதுகாப்பாக சனங்களோடு போங்கோ, என்னை எதிர்பார்க்க வேண்டாம், இயக்கம் என்ன முடிவு எடுக்குதோ அதே முடிவு தான் தானும் என கூறிய பின் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டாள். அந்த சந்திப்பு தான் அவர்கள் அவளை இறுதியாக கண்டது. பின்னர் 10.03.2009 அன்று நடந்த சமரிலே கணேசினி தன்னை ஈழ மண்ணின் விடுதலைக்காக பல்லாயிரம் மாவீரர்கள் வரிசையிலே தன்னையும் இணைத்துக்கொண்டாள்! 15ம் திகதியளவிலே தான் வீரச்சாவு செய்தி கிடைத்ததாக சக பெண்போராளிகள் வாயிலாக பின்னர் அறியக்கிடைத்தது. மாவீரர் கண்ட கனவு நிச்சயம் ஓர் மெய்ப்படும் என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கை! குறிப்பு: கணேசினி அவர்களது வீரச்சாவுக்கு பின்னர் இயக்கம் அவளுக்கு வழங்கிய தரநிலை பற்றி யாரேனும் அறிந்திருப்பின் இங்கே குறிப்பிடவும். நன்றி. 27.11.2025
  12. எனது மாமாவின் மகன் , மைத்துனன் , என்னைவிட இரண்டு வயது தான் அதிகம் ,ஆறடி உயரம் , சிறுவயதிலிருந்தே மிகுந்த ஆளுமையானவர் , விளையாட்டு கிரிக்கெட் முதல் கொண்டு கல்வி வரை மட்டுமல்லாது தமையனோடும் எங்களோடு போடும் குத்து சணடை தொடக்கம் விளையாட்டு வரை எப்போதும் அவர் இருந்தால் அது எங்களுக்குச் சிறிய திருவிழாதான். என் மாமா மாவட்ட நீதிபதியாக கடமையாற்றியவர் முதலில் மட்டக்களப்பு , சாவகச்சேரி பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றியவர் . அதனால் ராகவனும் மட்டக்களப்பு , முதல் சாவகச்சேரி இந்து கல்லூரியிலும் , யாழ் இந்து கல்லூரியிலும் கல்வி பயின்றவர் . சிறுவனாக இருக்கும் போதே மிக உயர்ந்த சிந்தனை கொண்டு இருந்தவர் , ஒரு விமான ஓட்டியாக படிப்பேன் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். யாழப்பாணத்தில் மிக அரிதானவர்கள் தான் டாக்டர் , என்ஜெனியரை தாண்டி பறக்கிற உயர்ந்த சிந்தனைகளை கொண்டவர்கள் . யாழ் இந்து கல்லுரியில் 8 பாடங்களிலும் " D" எடுத்தவர்கள் இவன் மட்டும் முக்கியமானவனல்ல இவனது உற்ற நண்பர்களும் தான் , இன்னும் அவர்கள் இவனை இறுதி வழியனுப்ப வந்து அழுது கொண்டு இருந்தது இன்னும் மறக்கமுடியாது . வல்வை வைத்தீஸ்வரன் சிவன் கோயில் தான் எங்களுக்கு குல தெய்வம் , ஸ்கூல் லீவு விட்டு ஊருக்கு வந்தால் கோயில் பந்தம் பிடிப்பது முதல் அந்த சுற்று வட்ட வீடுகள் எல்லாம் நாங்கள் கால் பதித்த இடம் தான் . நாங்களும் வீட்டில் விக்கிரங்கள் வைத்திருக்கின்றோம் , எங்கட வீட்டுக்கு அவர்கள் வந்தால் என் முருகன் சாமிக்கு கொடி ஏற்றி 10 நாளில் தேர் , பூங்காவனம் தீர்த்தம் எல்லாம் வைப்போம் நான் தான் ஐயர் , அவர்கள் வீட்டுக்கு நாங்கள் போனால் பிள்ளையார் சாமிக்கு கொடி ஏற்றி திருவிழா நடத்தி 10ம் நாள் தீர்ததமாடுவோம் . அவர் தான் ஐயர் . உண்மையான கோயில விட இங்க பக்தியும் , ஒழுக்கமும் உண்மையாக இருக்கும் . அவனோட கதையை நான் சுருக்கமாக சொல்லோணுமென்றால் , நானும் அவனும் கடைசியாக சந்தித்தது கோண்டாவிலில் 1990 களில் தமிழீழ விடுதலை புலிகள் மாணவர் அமைப்பு (SOLT ) பொறுப்பாளர்களுக்கான போது கூட்டம் நடைபெற்றது . நான் வடமராட்ச்சியில் இருந்தும் , அவர் வலிகாமத்திலிருந்தும் சென்றிருந்தோம் , அது போர் முனைக்கு எங்களை தயார் படுத்துவதாக இருந்தாலும் , அவர்கள் இறுதி இலக்கு ஒன்றுதான் . டேய் " நாங்க சந்தித்ததை வீட்டில சொல்லாதே என்றான் " அதற்கு பிறகு அவன் கதைத்தது அப்பவும் இப்பவும் சரியாக விளங்கவேயில்லை . பின்னாளில் அதை சொல்லுவதற்கு தைரியமும் வரவில்லை . அவர் ஒரு தனித்துவமான ஆளுமை. அந்த வயதில், அந்த காலத்தில், அத்தகைய உயர்ந்த சிந்தனையும் தைரியமும் கொண்டவரை நான் வேறு யாரிடமும் காணவில்லை. இன்றும் — ஒருபோதாவது ராகவன் திரும்பி வருவானோ என எங்கள் பிள்ளைகளிள் கூட தேடல் உண்டாகி விடுகிறது. இது நடந்து கொண்டிருப்பது 1990 காலம் .. இலங்கை சட்ட அரசாங்கத்தில் மிகவும் முக்கியமான , பொறுப்பான பதவிகளில் நீதித்துறை முக்கியமானது , யாழ் மாவட்ட நீதிபதிக்கு யப்பானிலிருந்து புதிய கார்களை இறக்குமதி செய்து அரசாங்கம் வழங்கியிருந்தது , அவரது 16 வயதில் கொழும்பிலிருந்து தானே ஒட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார் . சில நாட்களிலேயே விடுதலை புலிகள் பாசறையில் சேர்ந்தார். மாமாவின் பதவி காரணமாக இந்த விஷயம் எங்களில் யாருடனும் முறையாக பகிரப்படவுமில்லை. . கிட்டத்தட்ட ஆறு மாதங்களே. ஒருநாள் சில போராளிகள் என் வீட்டின் வாசலில் மறைந்த வீரரின் உடலுடன் வந்தனர். "சந்திரபாபு வீடு இதுதானா?" என்று கேட்டபோது நான் பதட்டத்தால் "இல்லை, இங்கே அப்படி ஒருவரில்லை" என்றேன். மனம் கேற்கவில்லை , மேலே சென்று உடலை பார்த்தேன். அது எங்கள் ராகவன் தான். கோட்டை சமரில் வீரமரணம் அடைந்திருந்தார். ஆம் கோட்டை சமரில் அவர் வீர்மரணமடைந்துவிட்டார். அடுத்த கணங்கள் எவ்வாறு போனது என்று விபரிக்கமுடியாது . 35 ஆண்டுகள் கடந்தாலும் இன்னும் அவன் விடுமுறைக்கு வந்து ஆழ்மனதில் சில வேளை விளையாடுவான் . இன்னும் அந்த வீரன் அவரது குரல் இன்றும் என் உள்ளத்தில் ஒலிக்கிறது. திரும்பிப் போக முடியாத காலத்துக்கு எதிரே. குற்றஉணர்வுடன் வாழ்கின்றோம் Navajeevan Anantharaj
  13. சமாதான காலத்தின் பின் முகமாலை முன்னரங்கில் வீரச்சா வேந்திய இராமநாதபுரத்தை சேர்ந்த முஸ்லிம் மாவீரரின் வித்துடல் கிளிநொச்சி துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது. இதேபோல ஆழஊடுருவும் படையினரின் தாக்குதலில் வீரச்சாவெய்ந்திய மட்டக்களப்பைச் சேர்ந்த முஸ்லிம் மாவீரரின் வித்துடலும் இதே கிளிநொச்சி துயிலும் இல்லத்தில் புதைக்கப்பட்டது. மகன் கட்டளைத் தளபதியாக முதன்மைச்சுடரேற்றிய அதே மேடையில் இரு மாவீரர்களின் (பிரிகேடியர் தீபன் லெப்.கேணல் கில்மன்) இந்த தந்தையாக இறுதி யுத்ததின் பின்னர் வேலாயுதபிள்ளை அவர்கள் நின்று பிரதான சுடரை ஏற்றிய வரலாறும் இதே துயிலுமில்லத்தில் நிகழ்ந்து. சிங்களப் பெண்மணியின் வாரிசுகளின் வித்துடல் முழங்காவில் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்ட வரலாறும் உண்டு. 1990 ஏப்ரலில் ஏறாவூர் புன்னைக்குடா வீதியைச் சேர்ந்த றியாஸ் என்பவர் மாவீரர் ஆனார். இவரின் வித்துடல் முஸ்லிம் மையவாடியிலேயே விதைக்கப்பட்டது இந்திய ராணுவ காலத்தில் போராட்டத்தில் இணைந்து கொண்ட ஆளுமை மிக்க இந்த மாவீரரின் வித்துடலுக்கு 21 துப்பாக்கி வேட்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இந்த நிகழ்வில் அரசியல் துறைப் பொறுப்பாளர் கரிகாலன் உரையாற்றினார். முஸ்ஸிம் மாவீரரான உஸ்மான் -கிழக்கு என்பவரது வித்துடல் விதைப்பு யாழ் -முஸ்ஸிம் மையவாடியில் மார்க்க முறைப்படி நடைபெற்றது. இங்கேயே கப்டன் பாரூக்கின் (கனீபா- அக்கரைப்பற்று) வித்துடலும் விதைக்கப்பட்டது. மன்னார் மாவட்ட தளபதியாக விளங்கிய லெப் கேணல் விக்ரர் மற்றும் நாயுடு ஆகிய மாவீரர்களின் வித்துடல்கள் ஆட்காட்டிவெளியில் பொதுமக்களின் சவக்காலையிலேயே விதைக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் தவறுதலான வெடி விபத்தில் வீரச்சாவடைந்த ஆரையம்பதியைச் சேர்ந்த மாவீரர் ஒருவரின் சிதைக்கு கிட்டு கொள்ளி வைத்தார். தாவடியில் விமானத் தாக்குதலில் வீரச்சாவடைந்த நாவலப்பிட்டியைச் சேர்ந்த லூக்காஸ் என்ற மாவீரருக்கு இன்னொரு போராளியே கொள்ளி வைத்தார். தம்மை வெளிப்படுத்த முடியாத காலத்தில் வீரச்சாவேந்திய லெப். செல்லக்கிளியம்மானின் வித்துடல் இரகசியமான ஓரிடத்தில் விதைக்கப்பட்டது. இதேபோல இந்திய இராணுவத்தின் காலத்தில் சிலரை எரிக்காமல் விதைக்க வேண்டியேற்பட்டது. பின்னர் துயிலும் இல்லங்களை அமைக்க ஏற்பாடு செய்வது என்ற முடிவுக்கு வந்த பின்னர் ஒரு மேடையில் வித்துடல்கள் வைத்து எரிக்கப்பட்டது. அக் காணொலியை கண்டபின்னரே எரிப்பதனை விட விதைப்பதுதான் பொருத்தமானது என்ற முடிவுக்கு வந்தார் தலைவர் . இது சகல சமயத்தவருக்கும் பொதுவானது என்று முடிவாயிற்று. மூத்தபோராளி பசீர்/காக்காவிடம் பெற்ற தவகலை அவரது மகன் கீதன் எழுத்தாக்கம் செய்து வெளியிட்டார்
  14. பிரத்தியேக: உக்ரைனின் வெளிநாட்டுப் படையணி திறம்பட அகற்றப்படும், தன்னார்வலர்கள் எச்சரிக்கை மணி ஒலிக்கின்றனர் ஆசாமி தெராஜிமா, ஜாரெட் கோயெட்டே நவம்பர் 21, 2025 மாலை 5:28·8 நிமிடம் படித்தது நவம்பர் 27, 2023 அன்று வெளியிடப்பட்ட புகைப்படத்தில், சர்வதேச படையணியின் 4வது பட்டாலியனின் பயிற்சி வெளியிடப்படாத இடத்தில் உள்ளது. (உக்ரைனின் பாதுகாப்புக்கான சர்வதேச படையணி / Facebook) போர் இந்தக் கட்டுரையைக் கேளுங்கள் 10 நிமிடம் இந்த ஆடியோ AI உதவியுடன் உருவாக்கப்பட்டது. வெளிநாட்டு தன்னார்வலர்களை அதன் அணிகளில் இணைத்துள்ள முக்கிய கட்டமைப்புகளில் ஒன்றான தரைப்படைகளின் கீழ் உள்ள சர்வதேச படையணியை திறம்பட அகற்ற உக்ரைன் திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், படைவீரர்கள் அந்த பிரிவின் கடின உழைப்பால் வென்ற அடையாளத்தை இழந்து, அறிமுகமில்லாத கட்டமைப்புகளில் சிதறடிக்கப்படுவார்கள் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள். "எங்கள் மிகப்பெரிய கவலை என்னவென்றால், நாங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவோம், அலகுகள் பிரிக்கப்படுவோம், மேலும் இந்த வேலையைச் செய்வதற்கு எங்களை வைக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கும் இடத்திற்கு நாங்கள் அடிப்படையில் அனுப்பப்படுவோம்," என்று ஒன்றரை ஆண்டுகளாக லெஜியனுடன் போராடிய ஒரு சிப்பாய் பெயர் தெரியாத நிலையில் கெய்வ் இன்டிபென்டன்ட் பத்திரிகையிடம் கூறினார். "இது (சுமார் ஆயிரம் வீரர்கள்) வெவ்வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டு, அவர்களின் கட்டளையின் கீழ் வருகிறது, மேலும் அந்த வகையான மாற்றத்தால் தவறுகள் வரும். இப்போது நம்மிடம் உள்ள கட்டமைப்பை மட்டும் வைத்திருப்பதன் மூலம் தடுக்கப்பட்டிருக்கக்கூடிய தவறுகள்," என்று அவர் மேலும் கூறினார். லெஜியன் கீழ்ப்படிந்த தரைப்படைகள், வெளியீட்டு நேரத்தில் எதிர்பார்க்கப்படும் கட்டமைப்பு மாற்றம் குறித்த காரணங்கள் அல்லது கூடுதல் விவரங்களைக் கோரும் கியேவ் இன்டிபென்டன்ட்டின் கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை. இந்தத் திட்டம் பாதுகாப்பு அமைச்சகத்தின் இராணுவ உளவுத்துறையின் (HUR) கீழ் உள்ள மற்ற சர்வதேச லெஜியனைப் பாதிக்காது. பிப்ரவரி 2022 இல் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் வேண்டுகோளின் பேரில் நிறுவப்பட்ட லெஜியன் , உக்ரேனிய இராணுவத்துடன் இணைந்து வெளிநாட்டினரைப் போராட அனுமதித்தது, மேலும் போர் முழுவதும் போர்க்களத்திலும் அரசியல் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய திட்டத்தில், லெஜியனின் மூன்று போர் பட்டாலியன்கள் தனித்தனியாக ஒரு தாக்குதல் படைப்பிரிவு அல்லது படைப்பிரிவுக்கு மாற்றப்படும் என்று, இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒரு அதிகாரி பெயர் தெரியாத நிலையில் கெய்வ் இன்டிபென்டன்ட் பத்திரிகையிடம் தெரிவித்தார். நேர்காணல் செய்யப்பட்ட பல லெஜியோனேயர்களுடன் சேர்ந்து, லெஜியனை அதன் தற்போதைய வடிவத்தில் பாதுகாக்கும் முயற்சியில் தாங்கள் பேசுவதாகவும், எந்த மாற்றமும் தேவையில்லை என்று வாதிடுவதாகவும் அந்த அதிகாரி கூறினார். படைவீரர்கள் மாற்றப்படும் தாக்குதல் படைப்பிரிவு அல்லது படைப்பிரிவு தரைப்படைகளின் கட்டளையின் கீழ் இருக்குமா அல்லது புதிதாக உருவாக்கப்பட்ட தாக்குதல் படைகளின் கட்டளையின் கீழ் இருக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரி கூறினார். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த இடமாற்றம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் படைவீரர்களின் சுயாதீன குடையின் கீழ் இந்த பிரிவுகள் இருக்காது என்று அதிகாரி கூறினார். ஜூலை 16, 2024 அன்று வெளியிடப்பட்ட புகைப்படத்தில், வெளியிடப்படாத இடத்தில் சர்வதேச படையணியின் பயிற்சி. (உக்ரைனின் பாதுகாப்புக்கான சர்வதேச படையணி / பேஸ்புக்) அக்டோபர் மாதம் டிக்டோக்கில் செயல்பாட்டு பாதுகாப்பை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு , தவறான அல்லது அதிக நம்பிக்கையான போர்க்கள மதிப்பீடுகளுடன் வீடியோக்களை வெளியிட்டதற்காக உக்ரேனிய பத்திரிகையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களால் விமர்சிக்கப்பட்ட கர்னல் வாலண்டைன் மான்கோ, புதிதாக உருவாக்கப்பட்ட தாக்குதல் படைகளுக்குத் தலைமை தாங்குகிறார், இதற்கு லெஜியன் பட்டாலியன்கள் அடிபணியக்கூடும். குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் அவரது நியமனம் அப்படியே உள்ளது, இதை மான்கோ மறுத்துள்ளார். உறுப்பினராகுங்கள் – விளம்பரமில்லாமல் பாருங்கள். இருப்பினும், நவம்பர் 16 அன்று ஒரு பேஸ்புக் பதிவில் , தரைப்படைகள் வெளிநாட்டு தன்னார்வலர்களுடன் பணிபுரியும் முறை மாறி வருவதாகக் கூறியது, இது "சிறந்த ஒருங்கிணைப்பு, உக்ரேனிய வீரர்களுடன் சம வாய்ப்புகள் மற்றும் மனித வளங்களை அதிக பகுத்தறிவு பயன்பாடு" ஆகியவற்றை வழங்குகிறது. "புதிய மாதிரியின் முக்கிய கொள்கை என்னவென்றால், அவர்களின் அனுபவம், உந்துதல் மற்றும் தொழில்முறை திறன்களை அவர்கள் மிகவும் தேவைப்படும் பிரிவுகளில் மிகவும் திறம்பட பயன்படுத்துவதாகும்" என்று அந்த இடுகை கூறியது. இந்த இடமாற்றம் லெஜியனின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பட்டாலியன்களைச் சேர்ந்த சுமார் 1,000 வீரர்களைப் பற்றியது, மேலும் நான்காவது பயிற்சி பட்டாலியன் புதிய வெளிநாட்டு தன்னார்வலர்களை போருக்குத் தயார்படுத்துவதற்கான பயிற்சி மையமாக மாறும் என்று அதிகாரி கூறினார். "குறைந்த பட்சம் சிறிது காலத்திற்கு, அலகுகளின் செயல்திறன் பெரும்பாலும் குறையும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் சர்வதேச லெஜியன் பிராண்டின் இழப்பு காரணமாக அலகுகளை வெளிநாட்டு தன்னார்வலர்களால் நிரப்புவது கடினமாக இருக்கும்." வெளிநாட்டினருடன் எவ்வாறு பணியாற்றுவது என்பது அனுபவத்துடன் வருகிறது என்று "சாண்டா" என்ற அழைப்பு அடையாளத்தைப் பயன்படுத்தும் 2வது பட்டாலியனின் முன்னாள் தளபதி கர்னல் ருஸ்லான் மைரோஷ்னிசென்கோ கூறினார். திட்டமிடப்பட்ட மாற்றத்தை "அபத்தமானது" என்று அழைத்த மைரோஷ்னிசென்கோ, கடினமாக வென்ற நம்பிக்கை ஆபத்தில் உள்ளது, குறிப்பாக "இறப்பதற்கான அதிக நிகழ்தகவு" இருந்தபோதிலும் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி போராட எழுந்து நின்ற வெளிநாட்டினருக்கு என்று கூறினார். "அனைத்து அன்றாட விவகாரங்களும் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன," என்று மைரோஷ்னிசென்கோ கியேவ் இன்டிபென்டன்ட் பத்திரிகையிடம் கூறினார். "நீங்கள் நம்பிக்கையை இழந்தால், நீங்கள் சிப்பாயை இழக்கிறீர்கள். பின்னர் அவர் ஒப்பந்தத்தை மீறுவார்." கெய்வ் இன்டிபென்டன்ட்டிடம் பேசிய அதிகாரி, ஒரு பெரிய வெளிநாட்டினர் குழுவை நிர்வகிப்பது, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பாளர்களை ஒருங்கிணைப்பது, வீரர்கள் பணிகளுக்கு முன் முழுமையாக விளக்கப்படுவதை உறுதிசெய்வது போன்ற சவால்களுக்கு லெஜியன் ஏற்கனவே தழுவிக்கொண்டுள்ளது என்றார். ஒவ்வொரு லெஜியன் பட்டாலியனை எதிர்கொள்ளும் உக்ரேனிய தாக்குதல் பிரிவுகளும், இந்த நடைமுறைகளை புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிகாரி கூறினார். லெஜியன் இப்போது லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த தன்னார்வலர்களின் பெரும் பங்கைக் கொண்டுள்ளது, அவர்களில் பலர் ஸ்பானிஷ் மட்டுமே பேசுகிறார்கள். "குறைந்த பட்சம் சிறிது காலத்திற்கு, அலகுகளின் செயல்திறன் பெரும்பாலும் குறையும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் சர்வதேச லெஜியன் பிராண்டின் இழப்பு காரணமாக அலகுகளை வெளிநாட்டு தன்னார்வலர்களால் நிரப்புவது கடினமாக இருக்கும்" என்று அந்த அதிகாரி கூறினார். வெளிநாட்டு தன்னார்வலர்கள் பல்வேறு அளவிலான இராணுவ அனுபவத்தையும் போருக்குத் தயாராக இருப்பதையும் கொண்டிருப்பதால், படைவீரர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும் உக்ரேனிய தாக்குதல் பிரிவுகளுக்கு, கற்பனை செய்யப்பட்ட மாற்றம் ஒரு கணிக்க முடியாத காரணியைச் சேர்க்கும். "துரதிர்ஷ்டவசமாக, நேர்மறையான அனுபவத்தை விட, பிரச்சனைகள் மிகவும் எளிதாக யூனிட்டிலிருந்து யூனிட்டுக்கு பரவும் என்று நான் நினைக்கிறேன்," என்று அந்த அதிகாரி கூறினார். https://kyivindependent.com/exclusive-ukraine-plans-to-effectively-dismantle-international-legion-sources-say/
  15. யாழ்கள அமெரிக்க உறவுகளே! அமெரிக்க பணமுறியின் Yield அதிகரிப்பதற்கான காரணமாக அமெரிக்க பணமுறியில் நாடுகள் ஆர்வமிழந்து வருவதாக கூறுகிறார்கள், அதனால் அமெரிக்க கடனை வாங்குவதில் தயக்கம் காட்டுகிறார்கள் என கூறப்படுகிறது இதனை பற்றிய உங்கள் கருத்து. ஜப்பான் தனது உள்நாட்டு பொருளாதார நோக்கிற்காக அமெரிக்க இருப்பினை குறைக்கிறது ( பொருளாதார தூண்டல்), அமெரிக்க நாணயம் கடந்த காலங்களில் பொருளாதார ஆயுதமாக்கப்பட்டதால் சில பெரிய தென் கோள வர்த்தக நாடுகள் தமது இருப்பு தொடர்பில் அவதானமாக இருப்பதற்காக இருப்புக்களை குறைக்கின்றதாக கூறப்படுகின்றது. இது அமெரிக்க ஏகாதிபத்திய உலக ஒழுங்கின் (Rule based) முடிவின் அறிகுறியா?
  16. விடுதலைப் பு*லிகள் ஒருதலைப் பட்சமாக போர் நிறுத்தம் செய்திருந்த காலப்பகுதியது என நினைக்கின்றேன் எனது மாமா வேலை நிமித்தம் மன்னார் பெருநிலப் பரப்பில் ஒரு முக்கிய பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார் விடுதலை பு*லிகளின் கட்டுப் பாட்டுப் பகுதியில் இருந்த எங்களது வீட்டிற்கு மாமா அவ்வப்போது வந்து போவார்.. தாய் மாமன் மாரை யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும் அப்படித்தான் நானும் என் குட்டி மாமா மீது அதீத நேசம்... அன்று ஒரு நாள் மாலை மங்கும் நேரம் எங்கள் வீட்டில் மாமா தேனீர் அருந்திக் கொண்டிருந்தார். மாமாவோடு போராளிகள் அல்லாத இரண்டு அண்ணா மார்களும் இருந்தனர் அவர்களும் எமக்கு பரிட்சயமானவர்களே ... மாமா அவ்வப்போது வீட்டிற்கு வரும்போது இவர்களும் கூட வருவார்கள்.. அன்றுதான் நான் மாமாவை உயிருடன் பார்கப்போகும் இறுதி நாள் என்பதை அறியாமல் மாமாவுக்கு அருகில் இருந்து தேனீர் அருந்திக் கொண்டிருந்தேன். தன் தம்பிக்கு தான் கொடுக்கும் இறுதித் தேனீர் அதுவென அறியாமல் எனது அம்மா... தம்பி கவனம் ஆ*மி ஒரே ஆக்களிட்ட உன்னத்தான் கேக்கிறானாம் போய் வாறது கவனம் என்றார் மாமாவிடம் இருந்து பதிலில்லை ஒரு கேலியான சிரிப்பு.. ஆ*மி என்னை என்ன செய்து விட முடியும் என்பது போல இருந்தது அந்த சிரிப்பு.. அம்மாவின் எச்சரிக்கைக்கான பதில் அருகில் இருந்த போ*ராளி அல்லாத அந்த அண்ணாவிடம் இருந்து வந்தது... அக்கா நாங்கள் செத்தால் தான் கலையரசன் சாகுவான் நீங்கள் ஒண்ணும் யோசிக்காதையுங்கோ..... படு பாதகர்கள் மாமாவையும் இப்படித்தான் நம்ப வைத்திருப்பார்கள் போல... தேனீர் அருந்தி முடித்ததும் அவசர அவசரமாக புறப்பட்டுச்சென்றார்கள். சரியாக மூன்றாவது நாள் எமது காதோரம் வந்த செய்தி எம்மை அதிர்சியடைச் செய்தது .. துயரத்தின் எல்லைக்கே சென்று வந்தேன். வாழ்க்கைப் பட்டான் கண்டல் பகுதியில் கலையரசன் வீர*ச் சாவாம்.. மாமா யாரை நம்பி பயணித்தாரோ அவர்களே அவரின் நடமாட்டம் பற்றி தகவல் வழங்கியதாக மாமாவின் போ*ராளி நண்பர்கள் மூலம் அறிந்து கொண்ட போது இன்னும் வலித்தது... இப்படி எத்தனை ஆயிரம் துரோகங்கள் எத்தனை ஆயிரம் சாவுகள்... என் குட்டி மாமா மட்டுமல்ல எம் இனமே துரோகத்தால் தான் ........ என் மாமா கலையரன் அண்ணா வல்லவன் நண்பன் நிலவன் நண்பன் யாழ்வேந்தன் அறிவு அண்ணா சுதா அண்ணா ரகுராம் அண்ணா நீலவண்ணன் அண்ணா சோ அண்ணா இவர்களோடு எம் இனத்தின் விடியலுக்காய் வித்தாகிப் போன ஆயிரமாயிரம் வேங்கைகளுக்கும் என் வீர வணக்கங்கள். Moris Fernando - Muththooran (Muththooran)
  17. Today
  18. இறுதி வரை உறுதியாக நின்றாய். பிரிகேடியர் தமிழ்செல்வன் அண்ணாவின் இறுதி வணக்க நிகழ்வு தான் உனக்கும் எனக்குமான இறுதி சந்திப்பு. தமிழ்செல்வன் அண்ணாவின் விதை குழியருகில் செல்ல நீண்ட நேர காத்திருப்பு. அத்தனை நேரமும் அவருக்கும் உனக்கும் இடையிலான சம்பாசனைகளை எனக்குள் விதைத்துக்கொண்டு வந்தாய். விதைகுழியருகில் வந்துவிட்டோம். நீ முன்னால் நான் உன் பின்னால். கையில் ஏந்திய மண்ணினை வித்துடலின் மேல் மெதுவாக தூவினோம். கையை நெஞ்சில் வைத்து மரியாதை செய்தாய். விழிகள் அருவியாக கரைந்தன. பாதங்களை உறுதியோடு முன்னால் வைத்து நகர்ந்தோம். அப்போது “ மச்சான் விரைவில எனக்கும் இப்பிடி மண் போடுவாய் என்று நினைக்கிறன். எதுக்கும் புலிகளின்குரலைக் கேளு ஈழநாதத்தை தினமும் பாரு“ என்று கூறினாய். அது உன்னைப் போன்ற விடுதலைப் போராளிகள் வாழ்வில் சாதாரணமான கதை. நண்பனே நீ எனக்கு கூறிய அந்த வார்த்தைகளை பொதுமகனான நானும் சாதாரணமாகவே கடந்து போனேன். ஆனால், அன்றொருநாள் உன் செய்தி வானேறி தொலைத்தொடர்பினூடாக வந்து புலிகளின்குரல் வானொலியினூடு எங்கள் செவிகளுக்கு வந்து சேர்ந்தது. பிரபா வீரச்சாவாம். அருந்தவத்தார்ர பெடியன் பிரபா வீரச்சாவாம். விழிகள் பனித்தன. உன் குரல் இன்னும் இன்னும் செவிகளுக்குள் ரீங்காரம் இசைத்தபடியே இருக்கிறதடா. நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வல்லாதிக்க சக்திகளால் இடம்பெயரவைத்த பொல்லாத பொழுதுகளை கடக்க முடியாது தவித்த 1996 ஆம் ஆண்டின் சித்திரைத் திங்களின் ஒரு நாளில் ஏதியிலாக உன் ஊர் முற்றத்தில் வந்து இறங்கிய என்னை அரவணைத்தது உன்னைப் போன்ற உறவுகள் தான். யோகபுரம் தாய் எம்மை கல்விக்காக அரவணைத்த போது முதன்முதலாக உன்னைக் கண்டேன். நிரந்தரமாக கற்கும் மாணவன் நீ. நானோ இடம்பெயர்ந்து வந்தவன். அதனால் என்னை அருகில் இருக்க விடுவார்களா என்ற ஏக்கத்தோடு வந்தவனை கையை பிடித்து பக்கத்தில் இருத்திய அந்த பொழுதில் ஆரம்பித்தது நண்பா உனக்கும் எனக்குமான உறவு. அன்றில் இருந்து 2007 கார்திகைத்திங்கள் 7 ஆம் நாள்வரை சந்தோசமாக தான் இருந்தோம். தேசத்துரோகிகள் செய்த காட்டிக்கொடுப்பெனும் கொடூரத்தினால் நீ உன்னை நீயே தற்கொடையாக்கிய செய்தி வந்த போது அழுவதை தவிர வேறென்ன இருக்கும் நண்பா…? அருந்தவத்தார்ர பெடியா வீரவணக்கமடா.. விழியில் நீருடன் உன் கூட்டாளி இ.இ.கவிமகன்
  19. நண்பா உன்னுடைய கனவுகள் மிக நீண்டது…பயணத்தின் பாதையில் உன்னை தவற விட்டு விட்டோம்…. உன்னைப் பற்றி அதிகம் எழுத வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் இந்த முகநூல் அதற்கு உகந்ததல்ல… அது ஒரு காலம்…ஸ்கந்தபுரம் தொடக்கம் பூநகரி கௌதாரி முனை வரை பயணமும் பாதையும் எங்களுடைய யாழ்ப்பாணத்து கடமைகளை கதைகளை சொல்லும்…கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் விமானத்தை விட நாங்கள் வேகமாக யாழ்ப்பாணத்துக்கு சென்ற நாட்கள் பல… ஒருமுறை உனக்கும் பிரதீப் மாஸ்டருக்கும் சின்னதாக சண்டை.. எங்களுடைய முகாமுக்கு வந்து யாரிடமாவது பாதை இருக்கிறதா என்று நீ காத்திருந்த அந்த நினைவுகள் இன்றும் என் நினைவில்…உன்னுடைய தேசக்கடமை உன் உயிரை விட மேல் என்பது உன்னுடைய ஒவ்வொரு செயல்பாடுகளும் எங்களுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தது… பூநகரி வாடி அடியில் இருந்த எங்களுடைய உணவுச் சாலை…விமான தாக்குதலுக்குள் அகப்பட்டுவிட்டது…அன்று அதிர்ஷ்டவசமாக நீ தப்பி விட்டாய்…காயமடைந்தவர்களை வைத்தியசாலை அனுப்பிவிட்டு நீ வந்து நீ கூறிய வார்த்தைகள்…என்னுடைய சாவு யாழ்ப்பாணத்தில் தான் அதுவரை எனக்கு சாவில்லை…உன்னுடைய துணிவு தான் உன்னை குறுகிய காலத்தில் உன்னை எல்லோர் மத்தியிலும் உயர்த்திப் பார்த்தது… எங்களை எல்லோரும் படிக்காத பல்கலைக்கழக மாணவர்களாகத்தான் பார்த்தார்கள் ஆனால் எங்களுக்கும் படிப்புக்கும் சம்பந்தமில்லை…உன்னை பார்த்து பலர் கேட்பார்கள் பார்க்க மருத்துவத் துறை மாணவன் போல் இருக்கிறாய் என்று…நீ தலையை ஆட்டிக் கொண்டு சிரிக்கும் அந்த சிரிப்பு எப்பொழுதுமே மிக அழகானது… இப்பொழுது பசுமையோடு ஓடிக் கொண்டிருக்கிறேன் நண்பா ஓய்வுகளை தொலைத்து…ஓய்வு கிடைக்கும் பொழுது உன்னுடைய தேசத்திற்கான கடமைகளையும் பயணத்தையும் வரலாறாக எழுதுவேன்…நேற்றைய தினம் நீ மண்ணை முத்தமிட்ட நாள் உன்னுடைய ஆன்மா இளைப்பாறட்டும் நண்பா அமைதியாக…பிரார்த்தித்துக் கொள்கிறேன் சக நண்பனாக… விதைப்பது நமது கடமை… தரன் ஸ்ரீ💐 வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம்
  20. ஜேர்மனி அதிபர்தான் இரஸ்சிய மத்திய வங்கியின் பணத்தினை உக்கிரேனுக்கு வழங்க வேண்டும் எனும் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார் என கூறப்படுகிறது.
  21. “அந்தச் சிரிப்பும் கடைசி வார்த்தைகளும்...” 2006 ஆம் ஆண்டு மே மாதமளவில் அவனை கடைசியாக சந்தித்திருந்தேன். உடலாலும் மனதாலும் சோர்ந்திருந்தான். அதற்கு ஒரு மாதம் முன்பு வீதியால் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்திருந்தான். ஓட வழியின்றி இரண்டு மூன்று மதில்களால் ஏறி பாய்ந்தவனால், அதிக குருதிப்பெருக்கத்தால் ஒரு கட்டத்தில் இயலவில்லை. அருகில் தெரிந்த வீடொன்றின் மலசலகூடமொன்றில் சென்று படுத்துவிட்டான் - இல்லை மயங்கிவிட்டான். சிறிது நேரத்தில் அங்கு வந்த வீட்டின் அம்மா, இவனை அடையாளம் கண்டு கொண்டுள்ளார். உடனடியாக சறமொன்றினால் காயத்தை கட்டிவிட்டு தனக்கு தெரிந்த மருத்துவபீட மாணவன் ஒருவருக்கு தெரியப்படுத்தியுள்ளார். உடனேயெ சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அவனுக்குரிய அவசர மருத்துவ உதவிகளை செய்துவிட்டு பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச்சென்று மேலதிக சிகிச்சை வழங்கினர். அதன்பின் அவனுக்கு பல்கலைகழக நூலகமும் சிற்றுண்டிச்சாலையுமே வீடாகிற்று. நான் மீண்டும் சந்தித்த போது, அவனில் இருந்த பழைய உறுதியும் தீவிரமும் மங்கியிருந்தது. தன் இறுதிக்காலம் நெருங்கிவிட்டதென்றே எண்ணியிருப்பான் போல. ஆனால் எனக்கு அது கடைசி சந்திப்பென்று புரியவில்லை. பழைய அதே புன்னகையுடன் 'இப்பவும் அந்தப்பிள்ளைய பார்க்கிறனியா? படிடா, நல்லா இருக்கனும்' என்றான். அவனது புகைப்படம் பார்க்கும்பொழுதெல்லாம் அந்தச்சிரிப்பும் கடைசிவசனங்களும் எனக்குள் வந்து தொலைக்கும். 'நான் இறந்தபின் என்னோட பள்ளிக்கூடத்தில ஒரு போட்டோ கூட வைக்கமாட்டிங்க என்னடா?' இந்த ஒரு வார்த்தைக்கு பின் என்னால் அவனுடன் பேசமுடியவில்லை. பல்கலைக்கழகத்தை விட்டு வெளியே வந்த பின்னும் அவன் அதே இடத்தில் இருந்தபடி வேலியால் பார்த்துக்கொண்டே இருந்தான். மாணவர் ஒன்றியத் தலைவராக — சுனாமி அனர்த்த மீட்பு உட்பட பல தளங்களில் தன் நேர்த்தியான தலைமைத்துவத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டியவன். நாம் சுனாமி பற்றிய செய்தியை அறிந்த வேளையில், அவன் ஏற்கனவே பல சடலங்களை மீட்டதுடன், அல்லல்பட்ட பலரை ஆலயங்களிலும் பொதுமண்டபங்களிலும் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தான். அது ஒன்றே அவனது அர்ப்பணிப்பிற்கு சான்றாகும். 17 வயதில், அந்த நேரத்தில் எமக்கு மோட்டார் சைக்கிள் — அதுவும் கிளட்ச் மொடல் — என்றால் தொட்டுப் பார்த்ததில்லை. ஒரு நாள் வேலை அலுவலாகச் செல்லும் பொழுது, “மோட்டார் சைக்கிள் ஓடுவியா?” என்றான். “அய்யோ, தெரியாது,” என்றேன். சட்டென்று கரைக்கெடுத்தவன், “இந்த பிடி... ஓடு,” என்றான். “அடேய், ஸ்டார்ட் அடிக்கமாட்டன்டா! எங்கயாச்சும் மதிலுக்க விட்டிரப்போறன்,” என்றேன். “நீ நினைக்கிற மாதிரி இதெல்லாம் பெரிய விஷயமில்லடா... இந்தா,” என்று சொல்லிக் கொண்டு வெறும் ஐந்து நிமிடங்களில் கற்றுத்தந்து, அன்றைய நாள் முழுதும் என்னையே ஓடவைத்தான். 2008 ஆம் ஆண்டு தை 21 இல் நான் சந்தித்த அந்த இடத்திற்கு சற்று அருகில் தான் சுடப்பட்டு இறந்திருந்தான். கடந்த மூன்று நாட்களாக அவனது நினைவுகள் மீண்டும் வந்து உறுத்திக்கொண்டே இருக்கின்றன. ஆம் அவனின் அந்த இரத்தக்கறை படிந்த சறத்திற்கு வயது 19. எல்லாளன் என்ற குணேந்திரன் - நயினாதீவிலிருந்து வைத்தியர் கனவுடன் வந்து தன் கனவினை அகலமாக்கிய மாறாப்புன்னகை
  22. 01-11-2008 அன்று பகல் 2.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்கு செல்ல முற்பட்டபோது , கூட இருந்த ஒருவரால் காட்டி கொடுக்கப்பட்டு அரியாலை பகுதியில் இராணுவம் சுற்றிவலைத்தபோது நடைபெற்ற நேரடி தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்டார். இதே சம்பவத்தில் கப்டன் உத்தமன் எதிரியிடம் அகப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக குப்பி கடித்து வீரச்சாவை தழுவிக்கொண்டார். https://www.facebook.com/amal.raj.108
  23. எழுத்தாளர்: புரட்சி தமிழன் இவர்களை பலருக்கு தெரியாது. அவர்களுடைய வீட்டினருக்கு கூட போராளியென்பது தெரியாது, அருகில் இருந்தவர்களுக்கு கூட போராளி என்பது தெரியாது. ஏனைய படையணி போராளிகளுக்கு கூட தெரியாது. பிரிகேடியர் கடாபியின் நேரடி ஆயுதபயிற்சியில் மிக குறுகிய காலத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற அணி. எந்த ஒரு ஆயுத்தையோ அல்லது ஒரு இயந்திரத்தையோ இலகுவாக கையாளகூடிய அனைத்து துறை சார் அறிவையும் பெற்றவர்களாக இருந்தார்கள். வளமான தமிழீழத்தை கட்டமைக்கும் நோக்கில் நெறிப்படுத்தபட்டார்கள். பலர் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பட்டபடிப்பை மேற்கொள்ள அனுப்பபட்டனர்.சிலர் இராணுவ கட்டமைப்புக்குள்ளேயே பல்வேறு வேலைகளுக்காக அனுப்பபட்டனர். சிலர் மரணமடைந்த பின்னர்தான் போராளியாக இருந்திருக்கிறான் என்பது பலருக்கு தெரியும். சிலர் இராணுவ கட்டுபாட்டுக்குள்ளேயே வேலை செய்தனர். இந்த அணியின் ஒரு 30% வீதமானோர் உயிரோடுள்ளனர். தப்பி வந்தவர்கள் அல்ல கட்டளைகளுக்காக காத்திருந்தவர்களாக . இன்று அவர்கள் போராளியாக இருந்தார்கள் என்பது தெரியாமல் சமூக ஓட்டத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்வு முறை என்றும் போராளிகளுக்கான ஒரு அடையாளம் . .
  24. என் பெயர் சரோஜினி நாகநந்தன். நான் கொழும்பு கொட்டாஞ்சேனையில் வசிக்கிறேன். என் மகன் – ராஜீவ் நாகநந்தன் – 17 செப்டம்பர் 2008 அன்று கடத்தப்பட்ட 11 ஆண் குழந்தைகளில் ஒருவராக இருக்கிறார். 1987 மார்ச் 30 அன்று பிறந்த என் மகன், கொழும்பிலுள்ள ஒரு சர்வதேச பாடசாலையில் படித்தார். அவர் மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவு கொண்டிருந்தார். காணாமல் போன நாளின் மறுநாள் இங்கிலாந்து பயணிக்க திட்டமிட்டிருந்தார். அன்று இரவு, நண்பர்களுக்காக நாங்கள் பிரியாவிடை விருந்து வைத்திருந்தோம். அதன் பின்னர் தலைமுடி வெட்டவும், மற்றொரு நண்பரை சந்திக்கவும் என் மகனும் அவரது நண்பர்கள் நான்கு பேரும் காரில் புறப்பட்டார்கள். அவர்கள் சென்ற காரை கடற்படை ஆயுததாரிகள் தடுத்து நிறுத்தி கடத்திச் சென்றனர். சிறிது நேரத்தில் ராஜீவ் என்னை அழைத்து நடந்ததைப் பகிர்ந்தார். நான் திரும்ப அழைத்தபோது, அவரது தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 14, 2008 — எதிர்பாராத ஒரு அழைப்பு ராஜீவ் எங்களை மீண்டும் தொடர்பு கொண்டார். சம்பத் முனசிங்க என்ற கடற்படை வீரர் தம்மை பிடித்து ஹெட்டியாராச்சி என்பவரிடம் ஒப்படைத்ததாகச் சொன்னார். அவர்கள் முதலில் வெலிசராவில் வைத்திருந்து பின்னர் திருகோணமலையின் Gunsite கடற்படை வதை முகாமுக்கு மாற்றப்பட்டதாக கூறினார். 2009 மே 21 — என் மகனின் கடைசி குரல் அன்று ராஜீவ் என்னை இறுதி தடவையாக அழைத்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு மனம் நெகிழ்ந்த நபரிடமிருந்து தொலைபேசியை வாங்கி பேசினார். அவரது குரல் நடுங்கியது… அங்கு நடக்கும் பயங்கரமான நிகழ்வுகளை பற்றி கூறினார். “அம்மா… 18–20 வயதுடைய இளைஞர்களை இங்கு கொண்டு வந்து சு*ட்*டு*க் கொ*லை செய்கிறார்கள்…” கழிவறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இரத்தக்கறைகள் மற்றும் பெருமளவு இரத்தத்தை கண்டதாகச் சொன்னார். தனக்கும் அந்த விதி ஏற்படும் என அச்சத்தில் இருந்தார். நான் அவனை உற்சாகப்படுத்தி: “ஜயப்பனை வணங்கு… கடவுள் உன்னை காப்பாற்றுவார்,” எனச் சொன்னேன். அப்போதே, அவன் சாப்பாடு வந்து முடிச்சிருந்த பேப்பரில் ஐயப்பனின் படம் இருந்ததாகவும், அதை தன்னிடம் வைத்திருப்பதாகவும் சொன்னான். அதன் பின்… 16 ஆண்டுகள் கழிந்தும் ஒன்னு கூட தகவல் இல்லை. இன்று வரை, ராஜீவ் 2009 மே 21க்குப் பிறகு கொ*லை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. https://www.facebook.com/namathuyalpanam
  25. எழுத்தாளர்: தமிழ்ப்பொடியன் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் பருத்தித்துறையில் உள்ள பிரபலமான ஆண்கள் பாடசாலையான ஹாட்லிக்கல்லூரியின் நூலகம் 1984ஆம் ஆண்டு எரிக்கப்பட்டது உங்களுக்கு தெரியுமா? 1984 ஆம் ஆண்டு செப்ரம்பர் 2 ஆம் திகதி. "பருத்தித்துறை படுகொலை" 18 பேர் சிறிலங்கா பொலிசாரால் பட்டப்பகலில் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். அத்தோடு ஹாட்லிக்கல்லூரியின் நூலகத்தை எரித்தார்கள். சுமார் 7000 புத்தகங்களை எரித்து சாம்பல் ஆக்கினார்கள். நூலகத்தை எரிப்பதற்கு ஹாட்லிக்கல்லூரியின் ஆய்வுகூடத்தில் இருந்த இரசாயண திரவங்களை(acids) பாவித்தார்கள். ஆய்வுகூடத்தையும் உடைத்து எறிந்தார்கள். யாழ்நூலகம் எரிக்கப்பட்டது 1981. மூண்டு ஆண்டுகள் கழித்து திரும்பவும் ஒரு பெரிய நூலகத்தை 1983 இல் சிறிலங்கா பேரினவாதம் கொழுத்தி வேடிக்கை பார்த்து எக்காளமிட்டு சிரித்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.