Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 23 JAN, 2025 | 11:03 AM பாடசாலை மாணவிகள் மத்தியில் மனநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் பாலித பண்டார சுபசிங்க தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், ஓரினச்சேர்க்கை உறவுகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி பாவனைகள் அதிகரித்தல் உள்ளிட்ட காரணங்களினால் அதிகளவான பாடசாலை மாணவிகள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும்பாலான மாணவிகள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகுதல் மற்றும் உயிரை மாய்த்துக் கொள்ளுதல் போன்ற தவறான வழிகளுக்கு உள்ளாகுகின்றனர். இதனால் பாடசாலை மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகின்றது. ஆண்கள் பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் மகளிர் பாடசாலை…

  2. யாழில். நண்பன் வீட்டுக்கு சென்ற நிலையில்... உயிரிழந்தவர், போதை ஊசியாலையே உயிரிழந்தார்! நண்பன் வீட்டுக்கு சென்ற நிலையில் உயிரிழந்தவர், ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றியமையால் தான் உயிரிழந்தார் என உடல் கூற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கோப்பாய் பகுதியை சேர்ந்த குறித்த நபர் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார். அங்கு கதிரையில் அமர்ந்தவர் சிறிது நேரத்தில் மயங்கி சரிந்து உயிரிழந்தார் என பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்றைய தினம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட உடல் கூற்று பரிசோதனையின் போது , கையில் ஊசி மூலம் போதை பொருளை செலுத…

  3. ஜேர்மனியில், பொருட்களேற்றும் கப்பல் ஒன்றை இயக்கிய பெண் ஒருவர் ஏற்படுத்திய விபத்தால் 1.5 மில்லியன் யூரோ அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் பேஸலிலிருந்து ஜேர்மனியிலுள்ள Karlsruhe என்னுமிடத்துக்கு, சரக்குக் கப்பல் ஒன்று ரைன் நதி வழியாக சென்றுகொண்டிருந்திருக்கிறது. அசாதாரண விபத்து இந்நிலையில் கப்பல் கேப்டனுக்கு பதிலாக துணை கேப்டனாக இருந்த பெண் ஒருவர் அந்த கப்பலை செலுத்திக்கொண்டிருந்திருக்கிறார். அவர் மது போதையில் இருந்ததால், Iffezheim என்னும் பகுதியில், நீர்மின் நிலையத்துக்காக அமைக்கப்பட்டிருந்த அமைப்பில் வேகமாக சென்று கப்பலை மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பல் மோதிய வேகத்தில் நீர்மின் நிலையத்துக்காக தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்படும் தடுப்பு உ…

  4. விமானத்தில் இருக்கும் நாயைக் காப்பாற்றுவதற்காக அந்த விமானத்தையே திசை திருப்பிய விமானியை பிராணிகள் நல ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இஸ்ரேலில் இருந்து கனடாவின் டொரண்டோ நகருக்கு 200 பயணிகளுடன் ஏர் கனடா விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் நிலவிய அதிகபட்ச குளிரால் அந்த விமானத்தில் இருந்த புல்டாக் இனத்தைச் சேர்ந்த 4 வயது நாயான சிம்பாவின் உடல் நடுங்கத் தொடங்கியது. விமானத்தில் இருக்கும் வெப்பமூட்டும் அமைப்பு செயல்படாததால் நாயின் நிலை மோசமானது. இந்த விவகாரம் பைலட்டிற்கு தெரிய வந்தது. உடனடியாக அந்த பைலட் விமானத்தை ஜெர்மனிக்கு திசை திருப்பி அந்த நாயை வேறொரு விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தார். விமானியின் இந்த செய்கையால் விமானம் 1 மணி நேரம் தாமதமானது. இர…

  5. படக்குறிப்பு,பாதிக்கப்பட்ட இளைஞர் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் போலீஸ் அதிகாரிகளின் தாக்குதலில் இளைஞர் ஒருவரின் ஆண் உறுப்பு விதையொன்று அகற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் - மதவாச்சி பகுதியில் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம் - மதவாச்சி பகுதியில் கடந்த 7-ஆம் தேதி வாகனமொன்றில் இரண்டு இளைஞர்கள் பயணித்துள்ளனர். போலீஸார் அந்த வாகனத்தை நிறுத்திய நிலையில், போலீஸாரின் கட்டளை சமிக்ஞையை மீறி வாகனத்தை அந்த ஓட்டுநர் செலுத்தியுள்ள…

  6. மனைவி காரில் இருக்கிறாளா? இல்லை என்பதை கூட பார்க்காமல் சென்று விட்டார். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் பூண்டோம் சாய்மூன் (55) - அம்னுவாய் சாய்மூன் (49) தம்பதி. இவர்கள் இருவரும் விடுமுறையை கழிக்க மஹா சரகம் மாகாணத்திலுள்ள தங்களது சொந்த ஊருக்குப் சென்றுள்ளனர். இருவரும் சந்தோஷமாக சென்றதாகக் கூறுகின்றனர். இந்த நிலையில், அதிகாலை 3 மணியளவில் வாகனத்தை ஓட்டிவந்த கணவர் பூண்டோம் இயற்கை உபாதையை கழிக்க வாகனத்தை ஓராமாக நிறுத்தி உள்ளார். அதே நேரம் மனைவி அம்னுவாயும் இயற்கை உபாதையை கழிக்க காரிலிருந்து இறங்கி உள்ளார். அந்தப் பகுதியில் கழிவறை இல்லை என்பதால் அருகில் இருந்த புதர் பகுதிக்குச் சென்று இருக்கிறார். அவர் திரும்பி வருவதற்குள் இயற்கை உபாதையை கழித்துவிட்டு வந்த பூண்டோம், மறதியாக வ…

  7. அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்தவர் கெல்சி ஹேட்சர். 32 வயதான இவர் 2 கருப்பைகள் கொண்ட பெண்ணாக இருக்கிறார். பிறப்பிலேயே அரிய கருப்பை கொண்ட இவருக்கு காலேப் என்ற கணவரும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கெல்சி ஹேட்சர் மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அதிசயமாக அவரது 2 கருப்பையிலும் தனித்தனி குழந்தைகளை அவர் சுமந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது மருத்துவ வரலாற்றில் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதை கடவுளின் ஆசீர்வாதமாக கெல்சி மற்றும் அவரது கணவர் கருதுகின்றனர். ஒவ்வொரு கருப்பையும்வெவ்வேறு நேரங்களில் சுருங்க கூடும் என்பதால் குழந்தைகள் மணி நேரம், நாட்கள் அல்லது வாரங்கள் இடைவெளியில் பிறக்கலாம் என மருத்துவர்கள் நம்புகிறார்கள். https://thinakkural.lk/a…

  8. எருதாக மாறி நிலத்தை உழுத முதியவரின் விவசாய கடனை அடைத்த அமைச்சர் லத்தூர்: மகாராஷ்டிர மாநிலம் மராத்வாடா பகுதி லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹடோல்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பதாஸ் பவார் (75). இவருக்கு 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், இந்த நிலத்தை உழுது பயிர் செய்வதற்கு தேவையான எருதுகள் அல்லது டிராக்டரை வாங்க அவருக்கு வசதி இல்லை. அவற்றுக்கு ஒரு நாளைக்கு ரூ.2,500 வாடகை கேட்பதால், தானே எருதாக மாறி அம்பதாஸ் பவாரும் அவரது மனைவி முக்தாபாயும் பல ஆண்டுகளாக நிலத்தை ஒரு மரக்கலப்பை மூலம் உழுது விவசாயம் செய்து வருகின்றனர். விவசாய கடனை கூட அடைக்க முடியாமல் மிகவும் வறுமையில் வாடி வருகின்றனர். இந்த வீடியோ கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதை பார்த்த நெட்டிசன்கள் மிகவும் பரிதாபப்பட்டு…

  9. ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டம், புடிமடகா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான சோடபள்ளி யெரய்யா என்ற மீனவர், 200 கிலோ எடையுள்ள கருப்பு மார்லின் மீனால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான சம்பவம், மீனவ சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஜூலை 3, 2025 அன்று, அனகாபள்ளி மாவட்டத்தின் புடிமடகா கிராமத்திலிருந்து 20 கடல் மைல் தொலைவில் நடந்துள்ளது. நடந்தது என்ன? யெரய்யா, அவரது சகோதரர் கொரலய்யா மற்றும் மற்றொரு மீனவருடன், பாரம்பரிய மீன்பிடி படகில் அதிகாலை 2 மணியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். காலை 9 மணியளவில், அவர்களது வலையில் சுமார் 200 கிலோ எடை கொண்ட பிரமாண்டமான கருப்பு மார்லின் மீன் சிக்கியிருக்கிறது. இந்த மீன், அதன்வேகம், வலிமை ம…

  10. மனித உருவ ரோபோவால் வரையப்பட்ட ஆங்கிலேயக் கணிதவியலாளர் ஆலன் டூரிங்கின் உருவப்படம் $1 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி உள்ளது. உலகின் முதல் அல்ட்ரா-ரியலிஸ்டிக் ரோபோவான “ஐ-டா” வரைந்த 2.2-மீட்டர் (7.5-அடி) உயரம் கொண்ட “AI கடவுள்” எனப் பெயர் கொண்ட உருவப்படம் 1 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி உள்ளது. ஐ-டா எனப் பெயரிடப்பட்டுள்ள மனித உருவம் கொண்ட இந்த ரோபோ, ஆங்கிலேயக் கணிதவியலாளர் ஆலன் டூரிங்கின் உருவப்படத்தை வரைந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த ஓவியத்தின் தனித்துவம் குறித்து ரோபோவே அனைவருக்கும் விளக்கி கூறியுள்ளது. Sotheby’s Digital Art Sale இல் இந்த ஓவியம் விற்கப்பட்டுள்ளது. ‘ஐ-டா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த அதிநவீன மனித உருவ ரோபோ ஐடன் மெல்லர் என்பவரால் வடிவமைக…

  11. ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய மதுபானக் கொள்கை அமுல் ! இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் புதிய மதுபானக் கொள்கை அமுலாக உள்ளது. இதுநாள்வரை கடைகள் ஒதுக்கீட்டை அரசு செய்து வந்த நிலையில், அதனை ஒன்லைன் குலுக்கல் முறையில் ஏலம் விட அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிமுறைகள் அமுலாக உள்ள நிலையில், மதுபான கையிருப்பு குறித்து ஹலால்துறை அதிகாரி ராம்லீலா ரவாணி தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 802 மதுபான போத்தல்களின் விற்பனை கணக்கில் வராதது அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. இது குறித்து அந்தக் கடை ஊழியர்க…

  12. கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் மர்மமான முறையில் உயிரிழப்பு! கனடாவில் இருந்து விடுமுறையை கழிக்க யாழ்ப்பாணம் வந்தவர் அவரது வீட்டில் இருந்து நேற்றைய தினம் (24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த பி. மரியதாசன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்தவர், குடும்பத்துடன் கனடாவில் வசித்து வந்த நிலையில், தனது விடுமுறையை கழிக்க அண்மையில், தனியாக யாழ்ப்பாணம் வந்து அவரது வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் அவரது உறவினரொருவர் நேற்றைய தினம் அவரது வீட்டுக்கு சென்ற போது, அவர் வீட்டில் சடலமாக காணப்பட்டுள்ளார். அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன…

  13. ஆசிரியர் கையில் 15,000 ராக்கிகளைக் கட்டிய மாணவிகள்..! பீகாரைச் சேர்ந்த பிரபல ஆசிரியர் ஒருவரின் கையில் 15,000 ராக்கிகளை அவரிடம் படித்த மாணவிகள் கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான் என அழைக்கப்படும் குறித்த ஆசிரியர் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றை அமைத்து குறைந்த கட்டணத்தில் அதிக மாணவர்களை படிக்க வைத்து, போட்டி தேர்வுகளாக பயிற்சி அளித்து வருகிறார். அவரிடம் படித்த பல மாணவர்கள் தற்போது அரசு அதிகாரிகளாக உள்ளனர். இந்நிலையில் வடமாநிலத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் சகோதர-சகோதரிகளுக்கு ராக்கி கயிறு கட்டி அன்பை வெளிப்படுத்தும் ரக்‌ஷா பந்தன் தினத்தன்று, ஆசிரியர் கானிடம் படித்த சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவிகள் அவரை நேரில் சந்தித்து ராக்கி கயிறு கட்டிய…

      • Like
    • 1 reply
    • 131 views
  14. கொத்மலை என்பது நாட்டின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்த, எப்பொழுதும் அழியாத பல நினைவுகளை கொண்ட அழகான வரலாற்று நகரமாகும். வரலாற்று நிகழ்வுகள் நிறைந்த கொத்மலை நகரம் அழகான மலைகளால் சூழப்பட்ட மிக பாதுகாப்பான மற்றும் அழகான பகுதி என்பதுடன் அங்கு மெய்யான கிராமவாசிகள் வசிக்கும் பல வரலாற்று கிராமங்கள் உள்ளன. அவ்வாறான அழகான நகரத்தில் அமைந்துள்ள ரணமுனே பீலி,கொத்மலை மாவெல நகரத்தின் அருகில் உள்ள மதிப்புமிக்க தனித்துவமான இடமாகும். இந்த பீலி, துட்டகெமுனு மன்னனின் ஆட்சிக் காலமான கி மு 137 மற்றும் 161 இல் இருந்த ஒரு பீலியாகும். தற்போது கொத்மலை என்பது ஒரு ஊரின் பெயர் என்றாலும், இலங்கை மன்னர் ஆட்சிக் காலத்தில், கொத்மலை பகுதி ஒரு நாடாக இருந்துள்ளது. அந்த காலத்தில் இந்த ரணமுனே பீலி அமைக்கப்பட…

  15. Published By: VISHNU 17 JUN, 2025 | 01:48 AM நாட்டின் லொட்டரி வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு 16ஆம் திகதி திங்கட்கிழமை வென்று சாதனை படைத்துள்ளது. இது தேசிய லொட்டரி வாரியத்தின் மெகா பவரின் 2210வது சீட்டிழுப்பில் ரூ.474,599,422 சூப்பர் பரிசு தொகையாகும். வெற்றி பெற்ற லொட்டரி சீட்டை கோகரெல்லாவைச் சேர்ந்த விற்பனை முகவரான எச்.ஏ. ஜானகி ஹேமமாலா விற்றுள்ளார். முன்னதாக, தேசிய லொட்டரி வாரியத்தின் மெகா பவர் லொட்டரி, லொட்டரி வரலாற்றில் மிகப்பெரிய பரிசான ரூ.230 மில்லியன் சூப்பர் பரிசை தற்போது வென்று சாதனை படைத்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/217669

  16. காதலர் தினத்தில் 2ஆவது முறையாக திருமணம் செய்துகொள்ளும் கிரிக்கெட் வீரர் ! இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் ஆகியோருக்கு மீண்டும் பிரமாண்ட முறையில் திருமணம் நடக்கவிருப்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். தனது மனைவி நடாஷாவை தான் மீண்டும் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்ட்யாவும், செர்பியாவை சேர்ந்த நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிக் ஆகியோருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரியில் நிச்சயதார்த்தம் நடந்து மே மாதத்திலேயே திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்த நடாஷாவுக்கு 2020ஆம் ஆண்டு ஜூலையில் ஆண் குழந்தை பிறந்தது. திருமணமாகி 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள …

  17. வவுனியா, பூந்தோட்டம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கட்டிலுக்கு அடியிலிருந்து முதலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (02) இரவு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, சம்பவத்தன்று, வீட்டிலிருந்தவர்கள் கட்டிலுக்கு அடியில் முதலை இருப்பதைக் கண்டு கூச்சலிட்டுள்ளனர். சத்தத்தைக் கேட்ட அயல் வீட்டார்கள், வீட்டினுள் சென்று பார்த்த போது கட்டிலுக்கு அடியில் முதலை இருப்பதைக் கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் முதலையைப் பிடித்து வாகனத்தில் கொண்டு சென்று பாதுகாப்பான இடத்தில…

  18. பெண்கள் குளிப்பதை CCTV மற்றும் Drone மூலம் படமெடுக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடையில் உள்ள பொது நீரோடையை மறித்து மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைச்சர் ஒருவரின் ஆதரவில் இடம்பெறும் மீன் வளர்ப்பு திட்டத்தினை இரா. சாணக்கியன் பார்வையிட்டார். மிகவும் வெக்கக் கேடான விடையம் அங்குள்ளவர்கள் Drone கமரா மூலம் அவ் ஊர் மக்கள் குளிப்பதை வீடியோ வேறு எடுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுக்களும் மக்களால் முன்வைக்கப்பட்டது. காணிக்கொள்ளை, மணல் கொள்ளைகளை தொடர்ந்து இவ்வாறான ஈனமான செயல்களிலும் ஆளும் நாடளுமன்ற உறுப்பினர்களின் கட்சியை சேர்ந்த சகாக்கள் ஈடுபடுவது வெளிச்சத்துக்கு வந்த…

  19. மட்டக்களப்பு நகரில் பக்கத்து வீட்டுகாரரின் நாய் கடித்ததில் காயமடைந்த பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட நட்டஈட்டை நாயின் உரிமையாளர் வழங்க வேண்டும் என பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து நாயின் உரிமையாளர் அந்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபாவை செலுத்திய விசித்திரமான சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. இதுபற்றி தெரியவருவதாவது, ஒய்வு நிலை கல்வி ஆசிரியர் ஆலோசகர் வீட்டில் மூன்று நாய்கள் வளர்த்து வருகின்ற நிலையில், பக்கத்து வீட்டில் வசித்துவரும் ஓய்வு பெற்ற முன்னாள் கல்வி அதிகாரியின் உறவினர்களை நாய் அடிக்கடி கடிக்க சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் பக்கத்து வீட்டாருடன் முரண்பாடு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவதினடான நேற்று சனிக்கிழமை (14) நாயின் உரி…

  20. யேர்மன் கார் பாங்கிங் மெசினில் இருந்து யூரோ நாணயங்கங்களை திருடி கோடிஸ்வரரான அரசு ஊழியர். பாங்கிங் மெசினில் இருந்து பணத்தை எடுப்பது தான் அவர் வேலை. அதை பயன்படுத்தி...🤣 இந்தியா இலங்கையில் தேர்தலில் நின்று போட்டியிட வேண்டியவர்.

  21. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாக்பூரில் நடைபெற்ற திருமண மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கட்டுரை தகவல் பாக்யஸ்ரீ ராவத் பிபிசிக்காக 2 ஆகஸ்ட் 2025, 06:04 GMT வட இந்தியாவில் 'கொள்ளைக்கார மணமகள்' சம்பவங்கள் நடப்பதை கேள்விப்பட்டிருப்போம். அதைப்பற்றி பல திரைப்படங்களும் எடுக்கப்பட்டுவிட்டன. அத்தகைய ஒரு நபர் தற்போது நாக்பூர் போலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார். இது வரை எட்டு பேரை திருமணம் செய்துள்ள அவர், அனைவரிடமும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். நாக்பூரில் மூன்று காவல் நிலையங்களிலும், சத்திரபதி சம்பாஜி நகர், மும்பை மற்றும் பவனி காவல்நிலையங்கலிலும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் திருமணம் செய்து கொண்ட எட்டு பேரும் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் …

  22. மன்னாரில்... இரு குடும்பஸ்தர்களின், மரணத்திற்கான.... காரணம் வெளியானது! மன்னாரில் கடந்த திங்கட்கிழமை இரவு காரினுல் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு இளம் குடும்பஸ்தர்களும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாகவே உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 30 ஆம் திகதி இரவு மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி காரில் பயணித்த இரண்டு இளம் குடும்பஸ்தர்களின் பிரேதப் பரிசோதனை யாழ் வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது. இதன் போதே மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய மையினால் ஏற்பட்ட ஒவ்வாமை உயிரிழந்தமைக்கான காரணம் என தெரிய வந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 30 ஆம் திகதி இரவு மன்னாரிலிரு…

  23. சீனாவின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால், தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு கொள்கைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளது. அதன்படி, சீனாவின் ஸ்டேட் கவுன்சில் சமீபத்தில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதில், பிரசவத்திற்கான மானியங்கள் மற்றும் பல குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டி உள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான ஆதரவான சூழலை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. State Council’s 13-point plan திட்டமானது, குழந்தை பராமரிப்பு சேவைகளை விரிவுபடுத்துதல், கல்வி, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு ஆதரவை மேம்படுத்துதல் ம…

  24. உலகின் முதல் சால்மன் மீன் வளர்ப்புக் கப்பலை அறிமுகப்படுத்தும் சீனா! உலகிலேயே முதன்முறையாக, கடலில் சால்மன் மீன்களை வளர்க்கக்கூடிய மாபெரும் வளர்ப்பு கப்பலை( Salmon-farming ship) உருவாக்கி, சீனா புதிய சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளது. பாரம்பரிய நில அடிப்படையிலான மீன்பண்ணை முறைகளை விட்டு விலகி, கடலின் நடுப்பகுதியில் மீன் வளர்ப்பை முன்னெடுக்கும் சீனாவின் இந்த புதிய முயற்சி, உலக நாடுகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. இக் கப்பல் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டு, சுத்தமான மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய சூழலில் சால்மன் மீன்களை வளர்க்கும் திறன் பெற்றதாகும். அத்துடன் இயற்கை மாசுபாடுகள் மற்றும் நோய்கள் போன்றவையை கட்டுப்படுத்தி, உயர்தர மீன் உற்பத்தியை உறுதி செய்யும் வகையில…

  25. 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார் தொடர்ந்து பேசிய அவர், "ருவாண்டா விவகாரத்தில் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும். இன்னும் காங்கோ, செர்பியா, கொசோவோ என நிறைய சொல்லலாம். முக்கியமாக இந்தியா- பாகிஸ்தான் விவகாரம். நான் நான்கு, ஐந்து முறை பெற்றிருக்க வேண்டும். ஆப்ரஹாம் ஒப்பந்தத்துக்காகவும் தந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எனக்கு நோபல் பரிசு தரமாட்டார்கள். அவர்கள் லிபரல்களுக்கு மட்டும்தான் தருவார்கள்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj9vnx4k0ylo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.