Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இருநூறு வருடகால மலையகச் சமூகமும் இலக்கியமும் : ஒரு காலக்கணக்கெடுப்பு – பகுதி 3 January 31, 2024 | Ezhuna மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து கோப்பித் தோட்டங்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் கூலி வேலைக்காக அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 'இந்திய வம்சாவளித் தமிழர்கள்' எனும் பெயரோடு ஆரம்பித்த இரு நூற்றாண்டுப் பயணம் 'மலையகத் தமிழர்' எனும் தேசிய அடையாளமாக இவர்களை முன்னிலைப்படுத்தும் அரசியற் பாதைக்கு வழி செய்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்து அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் வீழ்ச்சிகளும் உண்டு; எழுச்சிகளும் உண்டு. இதனை நினைவுபடுத்துவதாகவும் மீட்டல் செய்வதாகவும் 'மலையகம் 200' நிகழ்வுகள் உலகு தழுவியதாக நடைபெற்றன. இவை மலையக மக்களின் பிரத்தியேக கலை…

  2. "தை மாதம் ஒரு சிறப்பான மாதம்! / Thai is a special month for Tamils!" / பகுதி / Part 02 [In English & Tamil] சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு "புதியீடு" என்று பெயர் இருந்தது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். 'புதியீடு விழா' என்று ஒரு கல் வெட்டுக் குறிப்பதாக அறிந்து உள்ளேன். விவசாயிகள் 'அறுவடையில் ஒரு பங்கை' அரசனுக்கு / கோயிலுக்குக் கொடுக்கும் விழாவாக இருக்கலாம்?. "புதியீடு" என்பது, புதுஇடு என்று பிரிபடும்? புதிய (அறுவடையில்) ஒரு பங்கு என்று கொள்ள முடியும்? உழவர்கள் தை மாதத்தின் முதல் நாளில், அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. இதுதான் பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது என்கிறார்கள். பொங்கல் …

  3. முக்கிய சாராம்சம் முசிறித் துறைமுகம் குறித்த குறிப்புகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் சங்க இலக்கியங்களில் உள்ளன 14ஆம் நூற்றாண்டில், இந்த வர்த்தக துறைமுகம் மர்மமான முறையில் காணாமல் போனது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவில் உள்ள 37 பண்பாடுகளுடன் முசிறியில் கிடைத்த தொன்மங்கள் ஒத்துப் போகின்றன தங்க ஆபரணங்கள், கண்ணாடி மணிகள், சேர மன்னர்கள் கால நாணயங்கள் போன்றவை முசிறி நகரத்தை கண்டு பிடிக்கும் முயற்சியின் போது தொல்லியல் ஆய்வாளர்களுக்கு கிடைத்தன ரோமானிய பேரரசர் அகஸ்டஸ் சீசரிடம் இருந்ததை போன்ற மோதிரம் பட்டணம் அகழாய்வில் கிடைத்துள்ளது முசிறி துறைமுகத்திற்கும், கொச்சி துறைமுகத்திற்கும…

  4. பாண்டியர் ஆட்சியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகரின் மனைவி, மருமகளுக்கு என்ன தண்டனை தெரியுமா? படக்குறிப்பு, அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ காமநாத ஈஸ்வரர் திருக்கோவில் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 11 ஆகஸ்ட் 2024, 03:12 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அரசுகள் உருவான காலத்தில் இருந்தே சிறைச்சாலைகளும் கடும் தண்டனைகளும் இருந்து வருகின்றன. சங்க காலத்திலும் அதற்குப் பின்பும் சிறை தண்டனைகள் எந்தக் காரணங்களுக்காக வழங்கப்பட்டன என்பதை பாடல்களும் கல்வெட்டுகளும் உணர்த்துகின்றன. பல மத இலக்கியங்களிலும், சங்க இலக்கியங்க…

  5. உதயதாரகை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இருந்து வாராந்தம் ஒவ்வொரு வெள்ளி கிழமையிலும் வெளியானது. 1841 இல் இதன் முதல் இதழ் வெளியானது. கிறிஸ்தவ வார இதழாக வெளியான இந்த பத்திரிகை ஈழத்தின் முதலாவது தமிழ் பத்திரிகை யாக காணப்படுகிறது. செய்திகள், கவிதைகள், கட்டுரைகள், இலக்கியம் , அறிவியல், மருத்துவம் என பல்துறை சார்ந்த விடயங்களையும் தாங்கி இந்த இதழ் நீண்ட காலமாக வெளியானது. தமிழிலும் ஆங்கிலத்திலும் இருமொழிப் பத்திரிகையாகவே வெளிவந்தது. தொடக்கத்தில் மாதம் இருமுறை வெளியிடப்பட்ட இது பின்னர் வாரத்துக்கு ஒரு முறை தெல்லிப்பழையில் அச்சிட்டு வெளிவந்தது. இதன் முதல் ஆசிரியர்களாக இருந்தவர்கள் ஹென்றி மார்ட்டின், சேத் பேசன் ஆகிய இரு யாழ்ப்பாணத் தமிழர் ஆவர். To read the newspapers: https://noolaha…

  6. பட மூலாதாரம்,FACELAB/LIVERPOOL JOHN MOORES UNIVERSITY படக்குறிப்பு, கீழடி பகுதியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் முகங்கள் 3டி டிஜிட்டல் முறையில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் கீழடி அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த இரண்டு ஆண்களின் மண்டை ஓடுகளை வைத்து, அவர்களின் முக அமைப்புகளை அறிவியல் ரீதியாக ஆய்வாளர்கள் மறு உருவாக்கம் செய்துள்ளனர். கணினி உதவியுடன் கூடிய 3 டி முறையில், பிரிட்டனின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைகழகம் மறு உருவாக்கம் பணிகளை செய்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைகழகம் அளித்த தரவுகளை வைத்து இந்த முகங்கள் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவர்களின் மண்டை ஓடுகள் பெரும்பாலும் சேதம் இல்லாமல் இருந…

  7. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் மாயகிருஷ்ணன் கண்ணன் பிபிசி தமிழுக்காக 31 ஆகஸ்ட் 2025, 02:34 GMT தற்போதைய அரசுகள் பொது மக்களின் நிலம் தேவைப்பட்டால், அதற்கான இழப்பீட்டைக் கொடுத்து அந்த நிலத்தைப் பெறுகின்றன. பல தருணங்களில் நிலத்திற்கான இழப்பீடு போதுமானதாக இல்லை என அவ்வப்போது போராட்டங்கள் வெடிப்பதும் நடக்கிறது. ஆனால், 900 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த இரண்டாம் ராஜேந்திரன் தமக்குத் தேவையான நிலத்தை, மக்களிடம் பணம் கொடுத்து வாங்கிய நிகழ்வு ஒரு கல்வெட்டில் பதிவாகியுள்ளது. புதுச்சேரிக்கு அருகே உள்ள திருபுவனை வரதராஜ பெருமாள் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுகள் அனைத்தையும் தொகுத்து "…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 20 செப்டெம்பர் 2024, 03:04 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்திய துணைக் கண்டத்தின் தொல்லியல் வரலாற்றில், சிந்து சமவெளி கண்டறியப்பட்டது மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. சிந்து சமவெளி கண்டறியப்பட்டது குறித்த அறிவிப்பு வெளியாகி இன்றோடு நூறு ஆண்டுகளாகின்றன. இதன் முக்கியத்துவம் என்ன? கடந்த 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதியன்று வெளிவந்த The Illustrated London News இதழின் முகப்புப் பக்கத்தில் வெளியாகியிருந்த செய்தி, இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு குறித்த புரிதலையே மாற்…

  9. படக்குறிப்பு,ஆலத்தூர் கல்வெட்டு கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் வணிகத்தில் லாபமே குறிக்கோள் என்றாலும் கூட, அதில் ஈட்டும் செல்வத்தைக் கொண்டு நற்காரியங்கள் பல செய்பவர்கள் உண்டு. அந்த வகையில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்த வணிகர்கள் அல்லது வணிகர்கள் சேர்ந்த குழுக்கள் பல இடங்களில் ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளை உருவாக்கியிருப்பதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. வருமானத்தில் ஒரு பகுதியை அறப்பணிகள் செய்ய தனியே கணக்கு எழுதி, சேமித்து வைக்கும் வழக்கம் அன்றைய தமிழக வணிகர்களிடம் இருந்துள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். சோழர்…

  10. "ஆட்டக்கலை / பரத நாட்டியம்" கி மு 200-100 ஆண்டளவில் பரத முனிவர் வட மொழியில் நாட்டிய சாஸ்திரத்தை தொகுத்தார். நாட்டியம் இவர் காலத்திற்கு முன்னரே இருந்தாலும்,முதலில் பரத முனிவர் தொகுத்ததால் பரத நாட்டியம் என்ற பெயர் இக்கலைக்கு வந்தது என்பர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. பண்டைய காலத்தில், தேவதாசி என அழைக்கப்படும் இளம் மகளிர், ஆலய நர்த்தகி, தமிழகமெங்கும் ஆங்காங்கிருந்த கோயில்களில் ஆடல் தொண்டு செய்தனர். பெரும் பாலும் இவர்களாலே தான் இந்த பரத நாட்டியம் அப்போது செழித்தோங்கியது. என்றாலும் இந்த தேவ தாசிகளின் நாட்டியத்தின் ஆரம்பத்தை அறிய நாம் ஆரியர்களுக்கு முற்பட்ட கி மு 3000 ஆண்டை சேர்ந்த ஹரப்…

  11. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் தற்காலத்தில் அரசுகள் தங்களுக்குள் ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதைப் போலவே, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவும் அரசுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த ஒப்பந்தங்கள் பற்றி கிடைக்கக்கூடிய கல்வெட்டுகள் பல சுவாரஸ்யமான தகவல்களை நமக்குத் தருகின்றன. விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் ஒப்பில்லாமணீஸ்வரர் கோவிலில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டு, இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசுகிறது. கி.பி.1178ஆம் ஆண்டு முதல் கி.பி.1218ஆம் ஆண்டுவரை ஆட்சி செய்தவராகக் கருதப்படும் சோழ அரசரான மூன்றா…

  12. சோழ மன்னனை சிறைபிடித்த கோப்பெருஞ்சிங்கன்: மூன்றாம் வீர வல்லாளரும் காடவராயர்களும் யார்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 23 ஜனவரி 2026, 01:31 GMT 14ஆம் நூற்றாண்டில் டெல்லியிலிருந்து நிகழ்த்தப்பட்ட படையெடுப்பை ஹொய்சாள மன்னரான மூன்றாம் வல்லாளர் எப்படி எதிர்கொண்டார்? சோழ மன்னனை வெற்றிகொண்ட காடவ மன்னர்கள் என்ன செய்தனர்? 14ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தென்னிந்தியாவின் மீது டெல்லியிலிருந்து முகமதியப் படையெடுப்பு நடந்தபோது அதனை ஹொய்சாள மன்னரான மூன்றாம் வல்லாளர் இருவிதங்களில் எதிர்கொண்டார். இந்தக் காலகட்டத்தில் என்ன நடந்தது? காடவராயர்கள் என்ன செய்தனர்? பாண்டிய நாட்டில் வாரிசுரிமைப் போர் தென்னிந்தியாவின…

  13. "ஆருடம் கூறுபவர் யாரோ ? வருடம் தையா? சித்திரையா ?" "கார்த்திகை மழை பொழிந்து ஆர்ப்பரித்து மலை இறங்கி ஊர்வலமாய் வயல் தாண்டி மார்கழியில் குளம் ஆனாள்" "கார்த்திகை தீபம் ஒளிர மார்பினில் அவனை ஏற்றி சேர்ந்து ஒன்றாய் வாழ மார்கழியில் தவம் இருந்தாள்" "தையில் குளநீர் தெளிய தையல் திருமணம் வேண்டி தையில் முன்பனி நீராடி தையல் தன்தவம் முடித்தாள்" "தையோடு மார்கழி சித்திரை தையல் சேர்ந்து கொண்டாட தையில் வழி பிறக்குமென தையல் பொங்கல் பொங்கினாள்" "தை பிறந்தால் வழிபிறக்கும் தைரியமாய் நீ சொல்லுகிறாய் தைத்து புத்தாடை வேறுஅணிகிறாய் தையலே சித்திரைப்பெண்ணே வா" "அருவியில் தவம் முடித்து இருவராய் சேர்த்தது தையே ஊருக்க…

  14. “தை மாதம்: தமிழர் வாழ்வின் பண்பாட்டு இதயம்” தை - தமிழ் நாட்காட்டியின் பத்தாவது மாதம், ஜனவரி நடுப்பகுதி முதல் பிப்ரவரி நடுப்பகுதி வரை நீடிக்கும் - தமிழ் இதயங்களிலும் கலாச்சாரத்திலும் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. இது ஒரு மாதம் என்பதை விட அதற்கும் மேலானது; இது அறுவடை, நன்றியுணர்வு, புத்துணர்வு மற்றும் சமூக, ஆன்மீக புதுப்பித்தலுக்கான பருவமாகவும் திகழ்கிறது. வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து, மார்கழியின் போது (டிசம்பர் நடுப்பகுதி முதல் ஜனவரி நடுப்பகுதி வரை) வெள்ளம் வடிந்து ஆங்காங்கே குளம் போல நீர் தேங்கி இருக்கும். மார்கழி முடிந்து வரும் தை மாதத்தில் நீர் தெளிந்து விடும். தெளிவாக இருக்கும் தை மாத நீர், மக்கள் எண்ணங்களைத் தைத்துக் கொள்ளும் பளிங்கு போல இருக்கிறது. - இத…

  15. ஜவ்வாது மலையில் 103 தங்க காசுகள் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? படக்குறிப்பு, தங்க காசுகள் கட்டுரை தகவல் மாயகிருஷ்ணன் கண்ணன் பிபிசி தமிழுக்காக 5 நவம்பர் 2025 திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள சிவன் கோயிலில் கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டிய போது தங்க புதையல் கிடைத்துள்ளது. திருவண்ணாமலை கலசப்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலையில் அமைந்துள்ளது கோவிலூர் கிராமம். இங்கு பழமையான சிவன் கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவில் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தக் கோவில் வளாகத்தை புனரமைக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வந்த நிலையில், தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் 30-க்கும் மேற்பட்ட தொழ…

  16. எகிப்து பிரமிட் கல்லறைகளில் 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள்! எகிப்து பிரமிட் கல்லறைகளில் தமிழ் – பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. எகிப்தில் உள்ள புகழ்பெற்ற யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான கிங்ஸ் பள்ளத்தாக்கில் உள்ள பாறையில் செதுக்கப்பட்ட கல்லறைகளில் இருந்து தமிழ்-பிராமி, பிராகிருதத்தில் பொறிக்கப்பட்ட 30 கல்வெட்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், இது சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கும் மத்திய கிழக்கு நாடான எகிப்துக்கும் இடையிலான பண்டைய வர்த்தக தொடர்புகளுக்கு மற்றொரு சான்றாக அமைந்துள்ளது. 6 கல்லறைகளில் காணப்படும் கல்வெட்டுகள…

  17. வடமொழிப் பெயர் சர்ச்சை: ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் உண்மையான பெயர் என்ன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் மாயகிருஷ்ணன் கண்ணன் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் ''ராஜராஜன் என்பது தமிழ் பெயரா? ராஜேந்திரன் என்பது தமிழ்ப் பெயரா? எல்லாம் வடமொழி பெயர்களைச் சூட்டிக் கொண்டவர்கள். வட மொழியில் மயங்கி கிடந்தவர்கள்,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சமீபத்தில் பேசியது விவாதப் பொருளாகியிருந்தது. இந்தக் கருத்தை பலர் மறுக்கிறார்கள். வரலாற்று ஆய்வாளர்கள் என்ன சொல்கின்றனர்? சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன், "எந்த அரசன் மீதும் எனக்கு மதிப்புக் கிடையாது. யாரையும் நான் பெரிய சக்தியாக பார்ப்பது கிடைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.