வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
கூகுள் நிறுவனத்தினை தாய் நிறுவனமான ஆல்பாபட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார். அமெரிக்காவை சேர்ந்த, 'கூகுள்' நிறுவனம், தேடுதல் இணையதளம் தொடர்பான சேவையில், உலகளவில் முன்னணியில் உள்ளது. தேடுபொறி, சர்வர் தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை, கூகுள் அளித்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் இந்த 'கூகுள்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக, தமிழகத்தின், சென்னையைச் சேர்ந்த, சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2425849 இந்நிலையில் கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்களான லாரி பேஜ், மற்றும் செர்ஜி பிரைன் இருவ…
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
யாழ் சர்வதேச வர்த்தக சந்தை 2020 – ஜனவரி 24 ஆம் திகதி ஆரம்பம் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை 2020 எதிர்வரும் ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சி ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. யாழ் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி 11 ஆவது முறையாக நடைபெறவுள்ளது. இம்முறை கண்காட்சியில் 75 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கே.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ் சர்வதேச வர்த்தக சந்தை 2020 தொடர்பாக நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அ…
-
- 0 replies
- 274 views
-
-
பிரான்ஸ், பிரேஸில் உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக புதிய வரி! பிரான்ஸ், பிரேஸில் மற்றும் ஆர்ஜென்டீனா ஆகிய நாடுகளுக்கு எதிராக புதிய வரியை விதிப்பதற்கு அமெரிக்கா தீர்மானம் எடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் இவ்வாறு புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. 2.4 பில்லியன் பெறுமதியான பிரான்ஸ் தயாரிப்புகளுக்கும் பிரேஸில் மற்றும் ஆர்ஜென்டீனா ஆகிய தென் அமெரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் போன்ற பொருட்களுக்கும் இவ்வாறு புதிய வரி விதிக்கப்படவுள்ளது. இதன் காரணமாக பிரான்ஸின் சீஸ், கைப்பை, பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள் மற்றும் வைன் போன்ற பொருட்களுக்கு 100 வீத வரி அறவிடப்படவுள்ளது. http://athavannews.com/பிரான்ஸ்-பிரேஸில்-உள்ளி/
-
- 0 replies
- 395 views
-
-
ரஷ்யாவில் இருந்து சீனாவுக்கு குழாய் மூலம் எரிவாயு வினியோகிக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான இந்த திட்டத்தில் 8100 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவுக்கு இரு நாடுகள் இடையே குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 38000 கன மீட்டர் அளவுக்கு இயற்கை எரிவாயு 2024 ஆம் ஆண்டு வரை வினியோகம் செய்யப்பட இருக்கிறது. ரஷ்யாவின் கேஸ்பிரோம் நிறுவனம் இதனை செயல்படுத்துகிறது. காணொலி முறையில் நடைபெற்ற இந்த திட்டத்திற்கான தொடக்க விழாவில் சீன அதிபர், ஜி ஜின்பிங், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர். எரிசக்தி துறையில் இருநாடுளுக்கு இடையிலான உறவு இனி புதிய உயரத்திற்கு ச…
-
- 2 replies
- 397 views
-
-
ஆபரணம் விற்பது என்பது சாதாரணத் தொழில்முறை என்றால், ஆபரணம் விற்பதில் இருக்கும் பிரச்னையைத் தீர்ப்பதே திவ்யா தேர்ந்தெடுத்த ஸ்டார்ட்அப் தொழில்முறை. சர் வில்லியம் கோல்டிங் இப்படி குறிப் பிட்டிருக்கிறார்... 'பெண்கள் தங்களை ஆணுக்கு நிகரானவர்கள் என்று தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால் அவர்கள் ஆண்களை விட மேலானவர்கள்!' உண்மைதான்... இன்று பெண்கள் யாருடைய உதவியும் இல்லாமலேயே, சமூகத்தோடு போராடி எட்டிக்கொண்டிருக்கிற உச்சங்கள் அதை நிரூபிக்கும்படியே இருக்கின்றன. அப்படி உலக அளவில் பெண்கள் வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருக்கும் இன்னொரு துறை ஸ்டார்ட்அப்! ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் என்பவர் யார்? ஸ்டார்ட்அப் தொழில்முனைவ…
-
- 0 replies
- 811 views
-
-
அரசாங்கம் மக்களுக்கு வழங்கியுள்ள வரிச்சலுகை எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டதல்ல என சுற்றுலா, விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். அரசாங்கம் தற்போது மக்களுக்கு வழங்கியுள்ள வரி குறைப்பு மற்றும் வரி விலக்கு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தேர்தலுக்கு முன்பு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் போதும் நாட்டு மக்களுக்கும் குறிப்பாக வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பாரிய வரி சுமை தொடர்பிலும் குறிப்பிட்டிருந்தார். தாம் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாகவே வரிச் சலுகை வழங்குவதாக அவர் அப்போது உறுதிய…
-
- 0 replies
- 367 views
-
-
மெர்சிடஸ்-பென்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ஜெர்மனியின் டைம்லர் , 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய போவதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் அந்த நிறுவனத்தில் சுமார் 3 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இந்நிலையில், 2022ம் ஆண்டு இறுதிக்குள் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மூலம் ஆகும் செலவில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தவும், எதிர்காலத்துக்கு உகந்த நவீன கார்களை உருவாக்க முதலீடு செய்யவும் டைம்லர் முடிவெடுத்துள்ளது. இதை கருத்தில் கொண்டு ஊழியர்கள் 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. முன்கூட்டியே ஓய்வு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ஆட் குறைப்பு செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. https://www.polimernews.com/dne…
-
- 1 reply
- 479 views
-
-
வடக்கிற்கான பல்துறை நுழைவாயிலான யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி இலங்கையில் மிகவும் அபிமானம் பெற்ற வர்த்தகநாமங்கள் மற்றும் சேவைகள் பலவற்றை ஒன்றாக சேர்த்து வழங்கவுள்ளது. விற்பனைக்கும், கண்காட்சிக்கும் வைக்கப்படவுள்ள பல்வேறு வகைப்பட்ட உற்பத்திகள் இலங்கையில் இன்னமும் முழுமையான வாய்ப்புக்களை அடையப்பெறாமல் காணப்படும் பாரிய சந்தைகளில் ஒன்றில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் காலடியெடுத்து வைப்பதற்கு வாய்ப்பளிக்கவுள்ளது. 11 ஆவது தடவையாகவும் இடம்பெறவுள்ள யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி நிகழ்வானது 2020 ஜனவரி 24 முதல் 26 வரை யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் (யாழ் கோட்டைக்கு அருகாமையில்) இடம்பெறவுள்ளது. “வடக்கிற்கான நுழைவாயில்“ என அறியப்படுகின்ற இந்நிகழ்வானத…
-
- 0 replies
- 398 views
-
-
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் சுமார் 71 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை, மைக்ரோசாப்ட்டுக்கு அளிக்கும் முடிவை எதிர்த்து அமேசான் நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பென்டகனை டிஜிட்டல் நவீன மயமாக்கும் நடவடிக்கை தொடர்பான ஒப்பந்தத்துக்கு அமேசானும், மைக்ரோசாப்ட்டும் விண்ணப்பித்திருந்தன. அந்த ஒப்பந்தம் அமேசானுக்கு கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், திடீரென மைக்ரோசாப்ட்டுக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் அமேசான் வழக்குத் தொடுத்துள்ளது. https://www.polimernews.com/dnews/89917/பென்டகன்-முடிவுக்கு-எதிராகஅமெரிக்க-நீதிமன்றத்தில்அமேசான்-நிறுவனம்-வழக்கு
-
- 0 replies
- 261 views
-
-
சீனாவுடனான பொருளாதார வழித்தட திட்டத்தால், பாகிஸ்தானின் பொருளாதாரம் நீண்டகாலத்துக்கு பெரும் பாதிப்பை சந்திக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பலுசிஸ்தானின் குவாடர் துறைமுகம் வரை சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு அமெரிக்கா ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டின் தெற்காசிய விவகாரத்துறை துணை செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் (Alice Wells) பொருளாதார வழித்தடத்தால் சீனாவுக்குதான் அதிக லாபம் என்றார். இந்தத் திட்டத்தால் பாகிஸ்தான் பொருளாதாரம் நீண்ட கால பாதிப்பை சந்திக்கும் என்று கூறிய அவர், ஆனால் அமெரிக்க தனியார் நிறுவனங்களின் முதலீடு பாகிஸ்தானுக்கு நன்மையே த…
-
- 0 replies
- 270 views
-
-
நெகிழி அல்லது பிளாஸ்டிக் (Plastic) என்பது ஒரு பொருள் ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுகி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும். "வார்க்கத் தக்க ஒரு பொருள்" என்னும் பொருள் தரும் "பிளாஸ்டிகோஸ்" என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது. மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்துதல்: ஒருமுறை பயன்படுத்தியபின் தூக்கி எறியப்படும் பொருள்களைத் தயாரிப்பது தீமையே தருகிறது என்பது சுற்றுச் சூழல் வல்லுநர்களின் கருத்தாகும். எனவே இலை, சணல், காகிதப் பை, கண்ணாடி அடைப்பான், துணிப்பை போன்றவைகளை நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக்கின் தீமைகள் பசு, நாய், கால்நடைகள், வனவிலங்குகள் போன்றவை உணவுடன் (வீணாகும் உணவு) பிளாஸ்டி…
-
- 22 replies
- 5.1k views
-
-
விமான தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஏர்பஸ் நிறுவனம், துபாய் ஏர்ஷோ விமான கண்காட்சியில், 30 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆர்டரை பெற்றுள்ளது. புகழ்பெற்ற துபாய் ஏர்ஷோ துபாயில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இதில், உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனங்களான போயிங், ஏர்பஸ் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த எமிரேட்ஸ் விமான நிறுவனம், 50 ஏ350 ரக விமானங்களை 16 பில்லியன் டாலர்களுக்கு ஆர்டர் செய்துள்ளது. இதேபோல, ஏர் அரேபியா நிறுவனம் 120 ஏ320நியோ ரக விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. இதன் மூலம் போட்டியில் போயிங்கைவிட ஏர்பஸ் முந்தியுள்ளது. அதேசமயம், வரும் வியாழக்கிழமை வரை துபாய் ஏர்ஷோ நடைபெற உள்ள நிலையில், புதிய ஆர்டர்களை பெறமுடியும் என போயிங் உள்ளிட்…
-
- 0 replies
- 353 views
-
-
கடனில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள் : ஒவ்வொரு குடிமகன் மீதும் 23 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளதாக சர்வதேச நிதியம் அறிக்கை வெளியீடு உலகத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் 23 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் இருப்பதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.உலக நாடுகள் வாங்கும் கடனின் அளவு ஒவ்வொரு ஆண்டும் பன்மடங்கு அதிகரிப்பதாக சர்வதேச நிதியம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உலகின் 770 கோடி மக்கள் தொகையில், ஒவ்வொருவர் மீதும் 23 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு வரையிலான உலக நாடுகளின் மொத்த கடன் 255 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.இந்திய ரூபாய் மதிப்பில் இது 18 ஆயிரத்து 360 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதில் 2019-ம் ஆண்டின் …
-
- 0 replies
- 308 views
-
-
'2024-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே இந்தியாவின் முதன்மை இலக்கு' - பிரதமர் மோடியும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மீண்டும் மீண்டும் சொல்லும் வார்த்தைகள் இவை. விரிவான கட்டுரைக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2rJM70x ஒரு டிரில்லியன் என்றால் ஒரு லட்சம் கோடி. அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு என்ன என்பதையும் 5 டிரில்லியன் டாலருக்கு எத்தனை பூஜ்யம் என்பதையும் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். "நடப்பு 2019-20-ம் நிதி ஆண்டில் 7 சதவிகித அளவுக்கு மட்டுமே ஜி.டி.பி வளர்ச்சி உயர வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். என்றாலும், இந்த ஆண்டில் நமது பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதமாக உயரும் என்று சொல்லியிருக்கிறார் நிர்மலா …
-
- 0 replies
- 493 views
-
-
சிங்கிள்ஸ்-டேவிற்கான சிறப்பு விற்பனையில், 9 மணி நேரத்தில் 22 பில்லியன்களுக்கு வர்த்தகம் செய்து, சீனாவின் அலிபாபா நிறுவனம் சாதனை படைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்-11-ம் தேதியை, சீனாவின் பிரபல ஆன்லைன் - வணிக நிறுவனமான அலிபாபா சிங்கிள்ஸ்-டேவாக பின்பற்றி வருகிறது. இதனை முன்னிட்டு தொடர்ந்து 10-வது ஆண்டாக, அந்நிறுவனம் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இதையடுத்து 68 விநாடிகளில் 1 பில்லியனை தொட்ட அலிபாபாவின் வர்த்தகம், 9 மணி நேர முடிவில் இந்திய மதிப்பில் 1 லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது இதன் காரணமாக, கடந்த ஆண்டை காட்டிலும் 20 முதல் 25 சதவிகிதம் அலிபாபாவின் வர்த்தகம் சிங்கிள்ஸ் டேவில் வர்த்தகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://ww…
-
- 0 replies
- 352 views
-
-
தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹுண்டாய் கார் நிறுவனம், ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் காரை வடிவமைத்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலை எரிபொருளாகக் கொண்டு இயக்கப்படும் கார்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகின்றன. இதற்கு மாற்றாக, தற்போது மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, உலகளவில் பிரபலமடைந்து வருகின்றன. இந்த நிலையில், தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹுண்டாய் கார் நிறுவனம் ஹைட்ரஜனால் இயங்கும் காரை வடிவமைத்துள்ளது. மின்சார பேட்டரிகளை விட ஹைட்ரஜன் செல் வாகனங்களுக்கு அதிக திறனைத் தருகின்றன. மேலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாக வகையிலும் உள்ளது. அதிக தூரம் பயணிக்கக்கூடிய, பேருந்து, சரக்கு வாகனங்கள், போன்றவற்றிற்கும் இத…
-
- 0 replies
- 489 views
-
-
அமேரிக்கா 2020 For married individuals filing jointly: ஒன்றாக வாழும் இருவர்களின் வருமான வரி பிரிவுகள் 10%: Up to $19,750 12%: Income between $19,750 to $80,250 22%: Income between $80,250 to $171,050 24%: Income between $171,050 to $326,600 32%: Income between $326,600 to $414,700 35%: Income between $414,700 to $622,050 37%: Income over $622,050 For unmarried individuals: தனியாக வாழும் நபர் 10%: Up to $9,875 12%: Income between $9,875 to $40,125 22%: Income between $40,125 to $85,525 24%: Income between $85,525 to $163,300 32% Income between $163,300 to…
-
- 5 replies
- 858 views
-
-
அமெரிக்காவில் டிரோன்களை பயன்படுத்தி, மருந்து பார்சல்கள் வீட்டுக்கே சென்று டெலிவரி செய்யப்படுகின்றன. கடிதம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைந்தும், பாதுகாப்பாகவும் அனுப்பி வைக்க கொரியர் உள்ளிட்ட பார்சல் சேவைகள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில், நோயாளிகளுக்கான மருந்து மாத்திரைகளை மருந்தகத்திலிருந்து வாங்கி டெலிவரி செய்ய டிரோன்கள் எனப்படும் குட்டி விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. United Parcel Service என்ற நிறுவனம் இந்த சேவையை தொடங்கி நடத்தி வருகிறது. மருந்து சீட்டுகளில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை வாங்கி வரும்படி நிறுவனத்துக்கு தகவல் கொடுத்ததும், நிறுவனம் டிரோன்களை அனுப்பி சிறிய அளவிலான அட்டைப்பெட்டிகளில் மருந்துகளை வாங…
-
- 0 replies
- 220 views
-
-
சீனாவை பின்புலமாக கொண்டிருந்த ஆசிய மண்டல பொருளாதார கூட்டு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்துள்ளது. இந்தியர்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆசியான் கூட்டமைப்பில் உள்ள 10 நாடுகளுடன், இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 6 நாடுகளும் பங்கேற்கும் ஆசிய மண்டல பொருளாதார கூட்டு மாநாடு பாங்காக்கில் நடைபெற்றது. அதில் 16 நாடுகளும் இணைந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தின. இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மலிவான விவசாய உற்பத்திப் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் இந்திய சந்தையில் குவிந்து, உள்நாட்டு…
-
- 1 reply
- 562 views
-
-
இந்தியா என்ற பன்முகங்களை கொண்ட நாட்டில் பொருளாதார வளர்ச்சி என்பது சீராக எல்லா மாநிலங்களிலும் இல்லை. சில மாநிலங்கள், குறிப்பாக தென் மாநிலங்கள் தமது சனத்தொகை வளர்ச்சியை ஓரளவிற்கு வெற்றிகரமாக கட்டுப்படுத்தியும் பலவேறு முன்னேற்றகரமான திட்டங்களையும் அறிமுகப்படுத்தி நகருகின்றது. பொருளாதார பின்தங்கிய மாநிலங்களில் இருந்து மக்களும் தென் மாநிலங்களுக்கு நகருகிறார்கள். மத்திய அரசும், பொருளாதார ரீதியில் முன்னேறிய மாநிலங்களில் இருந்து பணத்தை எடுத்து சனத்தொகையில் பெரிதாகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்களுக்கு கொடுத்து வருகின்றது. சமீபத்தில் லண்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியுள்ளார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டில் தொழில்…
-
- 5 replies
- 862 views
-
-
முதலீடுகள் செய்வதற்கும், எளிதாக தொழில்புரிவதற்கும் இந்தியாவுக்கு வாருங்கள் என தாய்லாந்தில் தொழில்துறையினருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு ஆதித்ய பிர்லா தொழில்குழுமத்தின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். இந்தியாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை சுட்டிக்காட்டி பேசிய அவர், முதலீடுகள் செய்வதற்கும் எளிதாக தொழில்புரிவதற்கும் உலகிலேயே மிகவும் சிறந்த இடம் இந்தியா எனக் குறிப்பிட்டார். எளிதாக தொழில்செய்வதற்கான சூழல், வாழ்க்கைத் தரம், உள்கட்டமைப்பு, உற்பத்தித் திறன், காப்புரிமைகள், வனங்களின் பரப்பு என பல விஷயங்கள் வளர்ந்திருப்பதாகவும், அரசு அதிகாரிகளின் தலையீடு, வரிகள், வரி விகிதங்கள், ஊழல் போன்றவை குறைந்திருப்…
-
- 3 replies
- 336 views
-
-
ஊழியருடன் உறவு, பணியிலிருந்து நீக்கப்பட்ட மெக் டொனால்ட் அதிகாரி மெக் டொனால்ட் நிறுவனம் அதன் தலைமை செயல் அதிகாரியான ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக்கை பணி நீக்கம் செய்துள்ளது. அவர் ஊழியர் ஒருவருடன் உறவில் இருந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES நிறுவன கட்டுபாடுகளை ஸ்டீவ் மீறிவிட்டதாக மெக் டொனால்ட் நிறுவனம் கூறி உள்ளது. ஸ்டீவும் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டுள்ளார். குழுமம் எடுத்த முடிவுக்குக் கட்டுப்படுகிறேன் எனக் கூறி உள்ளார். 52 வயதான ஸ்டீவ் விவகாரத்தானவர். 1993 முதல் மெக் டொனால்ட் குழுமத்தில் பணியாற்றுகிறார். https://www.bbc.com/tamil/global-50284904
-
- 3 replies
- 422 views
-
-
சௌதி அரசின் அரம்கோ நிறுவனம், ரியாத் பங்குச்சந்தையில் தனது நிறுவனத்தின் பங்குகளை பட்டியலிடப்போவதை உறுதி செய்துள்ளது. தனது நிறுவனத்தின் 1% அல்லது 2% பங்குகளை சௌதி வெளியில் விடலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சௌதி அரம்கோவின் மதிப்பு 1.2 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. `வரலாற்று சிறப்பு மிக்க நகர்வு` வெளிநாட்டு பங்குச்சந்தைகளில் நிறுவனத்தின் பங்குகளை பட்டியலிடுவது குறித்து தற்போது எந்த திட்டமும் இல்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பல காலங்களாக பங்குச்சந்தையில் நுழைவது குறித்து நடந்த பேச்சுவார்த்தைகளில், வெளிநாட்டு பங்குச்சந்தைகள் குறித்து பேசப்பட்டபோதிலும், தற்போது இந்த திட்டம் ஒதுக்கி வைக்கப…
-
- 0 replies
- 239 views
-
-
அமெரிக்காவின் முன்னனி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, சீனாவில் அமைக்கப்பட்டு வரும் பிரமாண்ட ஆலையின் முதல் பிரிவில் சோதனை முறையிலான உற்பத்தியை தொடங்கியுள்ளது. ஷாங்காய் நகரில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் டெஸ்லா வாகன உற்பத்தி ஆலை 3 பிரிவுகளாக கட்டப்பட்டு வருகிறது. மிக பிரமாண்டமாக கட்டப்படும் ஆலையின் முழு பணிகளும் 2021ம் ஆண்டு இறுதியில் நிறைவடையும் என கூறப்படுகிறது. இதில் முதல் பிரிவில் திட்டமிட்டதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக சோதனை முறையில் வாகன உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. வாகன உதிரி பாகங்கள், பெயிண்ட உள்ளிட்ட அனைத்தும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள 3 பிரிவுகளிலும் பணிகள் முடிந்து, வாகன தயாரிப்பு முழுவீச்சில் தொடங்கும்பட்சத்த…
-
- 0 replies
- 266 views
-
-
நம் கைகளிலுள்ள பணம் தொடர்பில் அறிவோமா? அனுதினன் சுதந்திரநாதன் இவ்வுலகில் பணமானது பல்வேறு வகை பெயர்களுடன் பல்வேறு பரிணாமங்களில் பலமில்லியன் பேர்களின் கைகளில் கொட்டிக் கிடக்கிறது. அவற்றில் எவை எல்லாம் பரிமாற்றத்துக்கு உகந்தவை ? எவை எல்லாம் சட்டச் சிக்கல் நிறைந்தவை? என்பது தொடர்பில் சிறிதாவது நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான், நம் கைகளில் உள்ள பணம் கறை படிந்ததா? இல்லையா? என்பதை உணர்ந்து செயற்பட முடியும். இன்றைய நிலையில், நாம் பணத்தைக் கொண்டு எதனை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலைக்கு வந்துவிட்டோம். அந்தளவு தூரத்துக்கு மக்களின் பணத்தேவையும் பணம் மீதான மதிப்பும் அதிகரித்து விட்டது என்றே சொல்ல வேண்டும். சாதாரணமாக பணமானது சேவை வழங்கல், உற்பத…
-
- 0 replies
- 278 views
-