வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
ஜெர்மனியை சேர்ந்த தனியார் நிறுவனம் ஏர் டாக்சியை மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. விமானத்தை போல் இறக்கை, 36 மின்மோட்டார்கள் மற்றும் பேட்டரி உதவியுடன் இயங்கும் வகையில் லிலியம் என்ற நிறுவனம் 5 பேர் அமர்ந்து செல்லக்கூடிய ஏர் டாக்ஸியை உருவாக்கியிருந்தது. ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டதும், நேரே மேலே எழும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏர் டாக்ஸி, மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வானில் பறந்து சோதனை முயற்சியில் வெற்றிப்பெற்றுள்ளது. இதையடுத்து அதே மாடல் ஏர் டாக்ஸியை உருவாக்கி, 2025ம் ஆண்டுக்குள் வணிக ரீதியிலான சேவையை தொடங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை எட்டும் நோக்கிலும், தடையில்லா சான்று பெறவும் …
-
- 0 replies
- 395 views
-
-
மேக்ஸ் ஜெட் ரக விமானங்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் போயிங் நிறுவனம் மேலும் பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பை சந்திக்க நேரிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. போயிங் நிறுவனத்தின் தயாரிப்பான 737 MAX ரக விமானங்களை பல்வேறு விமான போக்குவரத்து நிறுவனங்கள் வாங்கி பயன்படுத்தி வந்த நிலையில், 2 விமானங்கள் விபத்தில் சிக்கி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தின. இதனால் போயிங் நிறுவனத்திற்கு கெட்ட பெயர் ஏற்பட்டதோடு, அதன் விளைவாக பெரும் இழப்பையும் சந்தித்தது. இந்நிலையில், சோதனையின்போதே மேக்ஸ் ரக விமானங்களின் இயக்கத்தில் பிரச்சனைகள் இருந்தது, இரு போயிங் ஊழியர்கள் தகவல் பரிமாற்றத்தின் மூலம் தெரியவந்திருப்பதாக செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக போயிங் நிறுவன பங்குகள் 5.7 சதவீதம் அளவுக்கு ச…
-
- 0 replies
- 461 views
-
-
2024இல் அமெரிக்காவை பின்தள்ளும் இந்திய பொருளாதார வளர்ச்சி 2024ஆம் ஆண்டு உலக அளவில் வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் முதல் 20 நாடுகளின் பட்டியலை சர்வதேச நாணய நிதியம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்காவை பின்தள்ளி, இந்தியா முன்னேறும் என கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் வெளியீட்டில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு உலக அளவில் வளர்ச்சி என்பது குறைவாகவே இருக்கும். பொருளாதாரமும் மந்தமாகவே இருக்கும். இந்த ஆண்டு உலக அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் வளர்ச்சியில் 3 சதவீதம் சரிவு ஏற்படலாம். இது உலகின் 90 சதவீதம் பகுதியை பாதிக்கும். வளர்ச்சி விகித பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் என்றாலும், சர்வதேச பொருளாதார வளர்ச்சியின் சரிவு க…
-
- 0 replies
- 428 views
-
-
பாரீசில் நடைபெறும் சர்வதேச நிதி கண்காணிப்பு கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் விதிக்கப்பட்டுள்ள சாம்பல் நிற பட்டியலில் இருந்து அந்நாடு அடர் சாம்பல் நிறப் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. அடர் நீலம் என்பது பாகிஸ்தானுக்கு நிலைமையில் முன்னேற்றம் காண்பதற்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பாகும். இதனால் பாகிஸ்தானுக்கு உலக வங்கி, ஐ.எம்.எப். ஐரோப்பிய யூனியன் போன்றவை நிதியளிக்க மறுக்கலாம். இதையடுத்து கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்பட்டால் அதற்கு சர்வதேச அளவில் நிதி பெற முடியாத நெருக்கடி உருவாகும். தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தீவிரவாதிகளை கைது செய்யவும் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய நிதி ஆதாரங்களைத் தடு…
-
- 0 replies
- 419 views
-
-
Tuesday, October 15, 2019 - 6:00am இலங்கையில் புதிதாக 5000 தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் பிரான்சின் நிதி நிறுவனமான AFD நிறுவனம் இலங்கை வங்கிக்கு 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நுண் கடன் நிதி உதவியை வழங்கியுள்ளது. இது தொடர்பான உடன்படிக்கை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு தொழில் தொடர்பான அனுபவங்களை வழங்குவதுடன் துறையின் வளர்ச்சிக்கும் முயற்சியாளர்கள் நிதியை பெற்றுக்கொள்வதில் எதிர் நோக்குகின்ற சிரமங்களை தீர்க்கும் வகையில் இந்த முதலீடு மேற்கொள்ளப்படுவதாக இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 255 views
-
-
பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஆபத்து இந்தியாவுக்கு உலக வங்கி எச்சரிக்கை: வங்கதேசம், நேபாளத்தை விட பின்தங்கியதாக அறிக்கை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 6 சதவீதமாக குறைத்து மதிப்பீடு செய்துள்ள உலக வங்கி, இந்திய பொருளாதாரத்துக்கு பெரும் ஆபத்து உள்ளது என எச்சரித்துள்ளது. வங்கதேசம், நேபாளத்தை விடவும் இந்தியா பின்தங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் பலவற்றிலும் பொருளாதார மந்தநிலை காணப்படுகிறது. இந்த பாதிப்பு இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5.8 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்திருந்தது. ஆனால், இந்த வளர்ச்சி உண்மையில் 5 சத…
-
- 1 reply
- 467 views
-
-
2019-ம் ஆண்டு இந்தியாவின் செல்வந்தர்களுக்கு சவாலான காலம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஃபோர்ப்பஸின் 2019 வியாபார அதிபர்களின் மொத்த செல்வத்தில் 8 சதவீதம் குறைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர்கள் வறுமையை குறைக்க உதவிகிறார்கள். அவர்கள் மரியாதை மற்றும் ஊக்கத்திற்கும் தகுதியானவர்கள் என்று கூறியிருந்தார். ஃபோர்பஸ் இந்திய பணக்கார பட்டியல் 2019 ல் தொழிலதிபர் கெளதம் அதானி 8 இடங்கள் தாண்டி 15.7 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் இரண்டாவது பணக்கார இந்தியராக திகழ்ந்தார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது 51.4 பில்லியன் டாலர்களை தக்க வைத்து முதல் பணக்கார இந்தியராக பட்டியலில் உள்ளார். அசோக் லேலண்ட் உர…
-
- 0 replies
- 341 views
-
-
அமெரிக்காவை பின்தள்ளி முன்னேறிய சிங்கப்பூர் ஒரு நாடு பொருளாதார ரீதியில் முன்னேற அதன் ' போட்டித்திறன் ' ஒரு கணிப்பாக பார்க்கப்படுகின்றது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் அமெரிக்க இந்த விடயத்தில் முன்னேறி இருந்தது. தனது தேசிய மொத்த உற்பத்தி திறனில் (GDP) அதிக வீதத்தை தேசிய ஆராய்ச்சியில் செலவிடுகின்றது. ஆனால், இன்னொரு காரணியான போட்டித்திறனில் சிங்கையூர் அமெரிக்காவை பின்தள்ளி முன்னேறி உள்ளது.
-
- 1 reply
- 410 views
-
-
சீனாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வர்த்தகம் இருந்ததாக இன்று நடைபெற்ற சந்திப்பின்போது மோடி தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஜி. ஜின்பிங் - இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் முறைசாரா சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. நேற்று மாலை 5 மணிக்கு அர்ஜுனன் தபசு பகுதிக்கு வந்த சீன ஜனாதிபதியை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் இருவரும் உரையாடியபடி அங்குள்ள சுற்றுலாப் பகுதிகளை பார்த்து ரசித்தனர். கலைநிகழ்ச்சிகளை யும் கண்டுகளித்தனர். பின்னர் இரவு 7.30 மணி அளவில் அங்கேயே சீன ஜனாதிபதி ஜின்பிங்குக்கு இரவு விருந்து விழங்கப்பட்டது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரம…
-
- 1 reply
- 370 views
-
-
"தோமஸ் குக்கின்" அனைத்துக் கிளைகளையும் ஹேய்ஸ் ட்ராவல்ஸ் திறக்கவுள்ளது தோமஸ் குக் நிறுவனத்தின் 555 கிளைகளும் ஹேய்ஸ் ட்ராவல் நிறுவனத்தால் வாங்கப்படவுள்ளன. அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் இருந்து தோமஸ் குக்கின் அனைத்துக் கிளைகளும் ஹேய்ஸ் ட்ராவல் நிறுவனத்தால் வாங்கப்படவுள்ளன. கடந்த மாதம் தோமஸ் குக் நிறுவனம் நிதிநிலைமையால் இயங்கமுடியாமல் மூடப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றிய 2,500 பணியாளர்களும் வேலையை இழந்திருந்தனர். சன்டர்லான்டைத் தளமாகக் கொண்ட ஹேய்ஸ் ட்ராவல் நிறுவனத்தின் நிர்வாகத்தில் அனைத்துக் கிளைகளும் உடனடியாகத் திறக்கப்படும் என்று அதன் தலைவர் ஐரீன் ஹேய்ஸ் (Irene Hays) தெரிவித்துள்ளார். ஏற்கனவே தோமஸ் குக் நிறுவனத்தின் 600 பணியாளர்களுக்கு…
-
- 0 replies
- 328 views
-
-
தீபாவளிக்காக புத்தாடை, செல்போன் உள்ளிட்ட பல வகை நுகர்வோர் பொருட்களை இந்திய மக்கள் வாங்கி குவித்ததில், வெறும் ஆறு நாட்களில்(செப்29-அக்4) ஆன்லைன் சந்தையில் ரூ.19,000 கோடிக்கு பொருள்கள் விற்பனையாகி உள்ளன என ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் கூறுகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் பொருளாதார சரிவு ஏற்பட்ட காரணத்தால் மக்களின் வாங்கும் திறன் குறைந்துவிட்டது என கூறப்பட்ட நிலையில் ரூ.19,000 கோடிக்கு பொருள்களை வாங்க பணம் எங்கிருந்து வந்தது என சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன. இந்தியா பொருளாதார சரிவில் இருந்து மீண்டுவிட்டதா? பண்டிகை காலத்தில் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துவிட்டதா என கேள்விகள் எழுகின்றன. சென்னையை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஆனந்த்…
-
- 1 reply
- 503 views
-
-
'இத்தாலி எடுத்த முடிவு' கணிசமான அளவுக்குச் செலவைக் குறைக்க இரு அவைகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்திருக்கிறது இத்தாலி. இதற்குச் சாதகமாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். படத்தின் காப்புரிமை EPA இத்தாலி கீழ் அவையில் இப்போது 600 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை 400ஆகக் குறைகிறது. அதுபோல செனட்டர்கள் எண்ணிக்கை 315லிருந்து 200ஆகக் குறையும். இதனை தம் தேர்தல் வாக்குறுதியாகக் கூறி இருந்தது ஃபைவ் ஸ்டார் இயக்கம். இது இப்போது ஆளுங்கட்சி கூட்டணியில் முக்கிய அங்கன் வகிக்கிறது. இதன் மூலமாக அடுத்த பத்து ஆண்டுகளில் ஒரு பில்லியன் ஈரோ பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்கிறது அக்கட்சி. ஆனால்,…
-
- 0 replies
- 685 views
-
-
எமர்ஜென்ஸி ஃபண்டு நிதியை, ஒரே நாளில் உருவாக்குவது என்பது கஷ்டமான காரியம். ஆனால், குறிப்பிட்ட ஆண்டுகளில் சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்தால் சேமிக்க முடியும். இன்றைய சூழலில், வேலையிழப்பு பிரச்னைதான் முதன்மையான பேச்சாக இருக்கிறது. ஏனெனில், நம் நாட்டின் பொருளாதார மந்த நிலையால் யாருக்கு எப்போது வேலை போகும் என்றே சொல்ல முடியாத சூழ்நிலை. சம்பளத்தை மட்டுமே நம்பி பல லட்சம் குடும்பங்கள் இங்கே இயங்கிக்கொண்டிருக்கும்போது, திடீர் வேலையிழப்பு அந்தக் குடும்பங்களைத் திக்குமுக்காடச் செய்துவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை. அதுமட்டுமில்லாமல், உடல்நலம் சரியில்லாமல் போவது, விபத்தில் சிக்கி சில மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டிய நிலை ஏற்படுவது போன்ற அவசரச் செலவுகள்…
-
- 0 replies
- 285 views
-
-
கிளர்ந்தெளும் தென்கிழக்காசியாவின் இணையப் பொருளாதாரம் உலகில் அதிகம் ‘இணைக்கப்பட்டவர்கள்’ தென்னாசிய மக்கள் தென்கிழக்காசியாவின் இணையப் பொருளாதாரம் கூகிள் மற்றும் சிங்கப்பூர் முதலீட்டு நிறுவனமான ரெமாசெக் (Temasek), பெய்ன்அண்ட் கோ (Bain & Co) ஆகியவற்றின் அறிக்கையின்படி, இணையம் தென்னாசிய பிராந்தியத்தின் பொருளாதாரத்தை அதி வேகமாக மாற்றி வருகிறது என அறியப்படுகிறது. சிங்கப்பூர், கோலாலம்பூர், பாங்கொக், மனிலா, ஜாகர்த்தா என்று எந்த நகரங்களிலுமுள்ள மெற்றோ ரயில்களை எடுத்தாலும் கைகளில் மொபைல்களைத் துளாவிக்கொண்டிருக்காத மனிதர்களைக் காண்பதரிது. வலையுலகம் அந்தளவுக்கு வாழ்வெங்கும் பரிணமித்திருக்கிறது. தென்னாசியர்களே இன் று உலகத்தில் அதிகம் இணைக்க…
-
- 0 replies
- 307 views
-
-
ஐரோப்பிய பொருட்களுக்கு வரி விதிக்க அமெரிக்காவுக்கு அனுமதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் 7.6 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரி விதிக்க அமெரிக்காவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலக வர்த்தக அமைப்பினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போயிங் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசாங்கம் சட்டவிரோதமான முறையில் மானியம் வழங்கி வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தி வந்தது. அதேபோன்று எயார் பஸ் ஏரோ நொட்டிக்ஸ் நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் மானியம் வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தி வருகின்றது. இதற்கு பதிலடியாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்கா தொடர்ந்தும் எச்சரிக…
-
- 0 replies
- 315 views
-
-
படத்தின் காப்புரிமை C.Umapathi Image caption தேனீர் தயாரிக்கிறார் சுப்ரமணியன். அடுப்பில் கொதிக்கும் பாலில் ஆவி பறக்கிறது. காற்றில் தேனீரின் மனம் கமழ்கிறது. சிறு நகர தேனீர்க் கடைகளுக்கே உரிய முறையில் முந்தைய நாள் தூக்கத்தை முகத்தில் மிச்சம் வைத்துக் கொண்டு ஒரு கூட்டம் தேனீரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. விழுப்புரம் மந்தக்கரையில் இருக்கிறது அந்த தேனீர்க் கடை. மக்கள் கூடுகிற பழைய நகரின் பிரபலமான திடல் அது. தாள லயத்துக்கு ஆடுகிற நடனக் கலைஞரைப் போல தேனீரை ஆற்றிக்கொண்டிருக்கிறார் பெரியவர் சுப்ரமணியன். ராவணன் தேனீர்க் கடைக்கு இதோ புதிதாக ஒரு வாடிக்கையாளர் வருகிறார். "ஐயா உங்களுக்கு குளம்பியா, தேனீரா," கனீரெனக் கேட்கிறார் சுப்ரமணியன். …
-
- 0 replies
- 252 views
-
-
(இராஜதுரை ஹஷான்) நாட்டின் நிதி நிலவரம் தொடர்பில் தன்னுடன் நேரடி விவாதத்திற்கு வருமாறு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார். கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் யாவும் பயனற்றதாகவே காணப்படுகின்றது. தங்களின் அதிகாரத்தையும், ஆட்சி பெருமைகளையும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே பாரிய தேசிய நிதி செலவிடப்பட்டு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த அபிவிருத்திகள் ஏதும் தேசிய வருமானத்தை ஈட்டும் விதமாக அமையவில்லை என்றும் அவர் சுட்டிகாட்டினார். நல்லாட்சி அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள அரச முறை கடன்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மங்கள சமரவீர கடந்த வாரம் வெளியிட்ட ஊடக அறிக்கை தொடர்பில…
-
- 0 replies
- 254 views
-
-
கடந்த பத்தாண்டுகளில் சீனாவின் பொருளாதாரம் மந்தமாகி வருகிறது. ஆனால் சமீபத்தில் வெளிவந்த சீனாவின் பொருளாதாரம் குறித்த சில தரவுகள் அந்நாட்டிற்கு புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் முதலீட்டாளர்களை பதற்றப்படுத்துவது எது? அதற்கு சீனா எவ்வாறு பதிலளித்துள்ளது? 2008ஆம் ஆண்டு உலக பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் வளர்ந்த நாடுகள் அதிலிருந்து விரைவில் மீண்டெழுந்த சமயத்தில், தனியொரு பாதையில் பயணித்த சீனா, உலக பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இயந்திரமாக மாறியது. அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக விளங்கி வரும் சீனா, 1990களில் இருந்தே குறைந்த வேகத்திலே பொருளாதார வளர்ச்சியை கண்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நாட்டின் ப…
-
- 1 reply
- 516 views
-
-
சிறந்த முகாமைத்துவத்தைப் பின்பற்றாத கால மாற்றத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் தம்மை தீர்க்கதரிசனத்துடன் மாற்றிக் கொள்ளத் தவறும் நிறுவனங்கள் எவ்வாறு அடிச்சுவடே தெரியாமல் காணாமல் போக நேரிடும் என்பதற்கு 178 ஆண்டுகள் பழைமையான தோமஸ் குக் நிறுவனத்தின் வீழ்ச்சி ஒரு முன்னுதாரணமாகவுள்ளது. நீண்ட கால வரலாற்றைக் கொண்ட தனது நிறுவனத்தின் பெயருக்குள்ள கௌரவமும் நன்மதிப்பும் தம்மைக் காப்பாற்றும் என அந்த நிறுவனத்தின் முகாமைத்துவத்தினர் கொண்டிருந்த கணிப்பு கடந்த திங்கட்கிழமை கானல் நீரானது. முடக்கப்படுவதிலிருந்து அந்த நிறுவனத்தைக் காப்பாற்ற எந்தவொரு நிதி நிறுவனமோ அரசாங்கமோ முன்வராத நிலையில் திடீரென அந்த நிறுவனம் திவாலாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டமை அதன் பல்லாயிரக்கணக்கான வாடிக…
-
- 1 reply
- 474 views
-
-
அமெரிக்காவில் 60 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன – ட்ரம்ப் சீனாவினால் அமெரிக்காவில் 60 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுசபைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு வளமான எதிர்காலம் அமைய தமது அரசாங்கம் பாடுபடுவதாகவும் தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி அந்த முயற்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை துடைத்தெறியும் வரை கூட்டுப் படைகளுடன் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார். அத்துடன், ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் நீடிக்கும் வரை பொருளாதாரத் தடைகள்…
-
- 0 replies
- 358 views
-
-
-
- 0 replies
- 339 views
-
-
இந்தியா என்ற பன்முகங்களை கொண்ட நாட்டில் பொருளாதார வளர்ச்சி என்பது சீராக எல்லா மாநிலங்களிலும் இல்லை. சில மாநிலங்கள், குறிப்பாக தென் மாநிலங்கள் தமது சனத்தொகை வளர்ச்சியை ஓரளவிற்கு வெற்றிகரமாக கட்டுப்படுத்தியும் பலவேறு முன்னேற்றகரமான திட்டங்களையும் அறிமுகப்படுத்தி நகருகின்றது. பொருளாதார பின்தங்கிய மாநிலங்களில் இருந்து மக்களும் தென் மாநிலங்களுக்கு நகருகிறார்கள். மத்திய அரசும், பொருளாதார ரீதியில் முன்னேறிய மாநிலங்களில் இருந்து பணத்தை எடுத்து சனத்தொகையில் பெரிதாகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்களுக்கு கொடுத்து வருகின்றது. சமீபத்தில் லண்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியுள்ளார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டில் தொழில்…
-
- 5 replies
- 863 views
-
-
சீன பொருட்களுக்கான வரி விதிப்பு ஒத்திவைப்பு! சீன பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பை நல்லெண்ண நடவடிக்கையாக இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். குறித்த டுவிட்டர் பதிவில், ‘சீனாவில் 70-வது தேசிய தினம் ஒக்டோபர் 1ஆம் திகதி கொண்டாட இருப்பதால், கூடுதல் வரி விதிப்பை தள்ளி வைக்க வேண்டும் என சீனாவின் துணை பிரதமர் லியு ஹி, என்னிடம் கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கைக்கு ஏற்ப 25 ஆயிரம் கோடி டொலர் மதிப்புடைய சீன பொருட்களுக்கான கூடுதல் வரி விதிப்பு ஒக்டோபர் 1ஆம் திகதி பதில் ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் அமலுக்கு வரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 360 views
-
-
In outgoing ECB President Mario Draghi’s next-to-last meeting, the central bank, as expected, delivered a 10 basis point cut to the deposit rate that banks pay to park excess reserves with it. The move pushed the rate to minus 0.5%. The European Central Bank delved deep into its tool box on Thursday, cutting its deposit interest rate further into negative territory, launching a new round of monthly bond purchases and taking other steps to stimulate a flagging eurozone economy. பூச்சியத்துக்குள் வலுவாக இருக்கும் வட்டி வீதம் - ஐரோப்பிய மத்திய வங்கி இன்றும் சில நாட்களில் பதவி காலத்தை முடிக்கும் மத்திய வங்கி ஆளுநர், யூரோ வலய நாட்டின் வட்டி வீதத்தை குறைத்…
-
- 1 reply
- 368 views
-
-
லண்டன் பங்குச் சந்தையை... வாங்கும், ஹாங்காங்..! ஹாங்காங் எக்ஸ்சேஞ்ச் அண்ட் கிளியரன்ஸ் லிமிடெட் லண்டன் பங்குச்சந்தையை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தச் செய்து உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொல்லப்போனால் சர்வதேச பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய விஷயமாகப் பேசப்பட்டு வருகிறது. குளோபல் பவர்ஹவுஸ் அதாவது சர்வதேச அளவில் மாபெரும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கும் பொருட்டு ஹாங்காங் எக்ஸ்சேஞ்ச், லண்டன் பங்குச்சந்தையை 39 பில்லியன் டாலருக்கு வாங்க விருப்பும் தெரிவித்துள்ளது. தற்போது ஹாங்காங் சந்தையில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. எங்குத் திரும்பினாலும் மக்கள் போராட்டம், அரசு தலையீடு, பெரும் நிறுவனங்கல் முடக்கம், …
-
- 2 replies
- 726 views
-